அவதாரிகை –
அனுபாவ்ய வஸ்து லாபத்துக்கு நிரபாய உபாயமான
1-ஆஸ்ரயண காலத்தையும் –
2-ஆஸ்ரயண அதிகாரியையும்
3-ஆஸ்ரயண பிரகாரத்தையும்
4-ஆஸ்ரயணீய வ்யக்தி விசேஷத்தையும்
5-ஆஸ்ரயண பலத்தையும் -சொல்லுகிறது இந்த ஸ்லோக த்வயம் –
ஸ்திதே மனஸி ஸூஸ்வதே சரீரே சதி யோ நர
தாது சாம்யே ஸ்திதே ஸ்மர்த்தா விஸ்வ ரூபஞ்ச மா மஜம்
ததஸ்தம் ம்ரியமாணம் து காஷ்ட பாஷாண சந்நிபம்
அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம் கதிம் –
ஸ்திதே மனஸி-மனம் கலக்கம் இன்றி நிலை நிற்கையில்
ஸூஸ்வதே சரீரே சதி -உடம்பு நோயற்று நன்று இருக்கையில்
தாது சாம்யே ஸ்திதே-சதி -வாதம் பித்தம் ஸ்லேஷ்மம் என்னும் மூன்று தாதுக்களும் ஓரளவாய் இருக்கையில்
யோ நர -எந்த மனிதன்
விஸ்வ ரூபஞ்ச அஜம்-உலகை உடம்பாக உடையவனும் -பிறப்பு முதலான விகாரங்கள் இல்லாதவனுமான
மாம் ஸ்மர்த்தா -என்னை நினைக்கிறானோ
தத் -பிற் காலத்தில்
காஷ்ட பாஷாண சந்நிபம்-கட்டையோடும் கல்லோடும் ஒத்தவனாய் –
ம்ரியமாணம்-மரணம் அடையா நிற்கிற
தம் மத் பக்தம்-அந்த என் பக்தனை
அஹம் ஸ்மராமி -நான் நினைக்கிறேன்
நயாமி பரமாம் கதிம் -உயர்ந்த பதவியை அழைத்துச் செல்கிறேன் –
ஸ்திதே மனஸி ஸூஸ்வதே சரீரே சதி தாது சாம்யே ஸ்திதே-என்று -ஆஸ்ரயண காலத்தை -சொல்லுகிறது
யோ நர -என்று -ஆஸ்ரயண அதிகாரியைச் சொல்லுகிறது
ஸ்மர்த்தா -என்று -ஆஸ்ரயண பிரகாரத்தைச் சொல்லுகிறது –
விஸ்வ ரூபஞ்ச மா மஜம்-என்று -ஆஸ்ரயணீய வ்யக்தி விசேஷத்தைச் சொல்லுகிறது
ததஸ்தம் ம்ரியமாணம் து காஷ்ட பாஷாண சந்நிபம்-
அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம் கதிம் -என்று -ஆஸ்ரயண பலத்தைச் சொல்லுகிறது –
——-
ஸ்திதே மனஸி-மனஸி ஸ்திதே -மனம் நிலை நிற்கையில் –
மனஸ்ஸானது எது –
அதுக்கு அவ ஸ்தானம் ஆவது எது என்னில் –
மனஸ் ஆனது
அநாதி கால பாப வாசனை யாகிற மஹா வாதத்தாலே -புயல் காற்றாலே -ப்ரேரிதமாய்-
தனக்கு ஆவாஸ பூமியான ஹிருதய குகையிலே ஷண காலம் தங்கப் பெறாதே
கண்ட விஷயங்களிலே மண்டி –
திறந்து கிடக்கும் வாசல் தோறும் புகுந்து புறப்படும் நாய் போலே
நினைத்த இடம் எல்லாம் புக்குத் திரியாமல் நிர்விஷயமாகை –
ஆக
இதில் மனஸ் ஸி னுடைய விஷய அதீனமான
அந்ய பரத்தை தவிர்ந்தபடி சொல்லுகிறது-
அநந்தரம்
சரீரா லஸ்ய நிபந்தனமான -வியாதி காரணமாக –
மனஸ் ஸி னுடைய அந்ய பரதா சாந்திக்கு ஹேது சொல்லுகிறது –
ஸூஸ்வதே சரீரே சதி -சரீரே ஸூஸ்வஸதே சதி -சரீரம் நல்ல ஆரோக்யத்துடன் இருக்கையில் -என்று
சரீரம் ஸ்வஸ்தமாய் அழகிதான அளவிலே வ்யாதீநாமாகரமாய் இறே சரீரம் இருப்பது
அந்த வியாதிகளில் ஓன்று தலை எடுத்ததாகில்
தஜ் ஜநிதமான துக்க அநு பாவத்திலே உப ஷீணம் ஆகையாலே
பகவத் விஷயத்துக்கு யோக்யம் ஆக மாட்டாது இறே நெஞ்சு
ஆகையாலே சரீரா லஸ்ய நிவ்ருத்தி மனஸ் ஸ்வாஸ் யத்துக்கு ஹேது —
அந்த சரீரா லஸ்ய நிவ்ருத்திக்கு ஹேது சொல்லுகிறது –
தாது சாமே ஸ்திதே -என்று
தாதுக்கள் ஆவன –
வாத பித்த ஸ்லேஷ்மங்கள் -அந்த தாதுக்களுக்கு சாம்யம் உண்டாகையாவது –
ஒன்றுக்கு ஓன்று ந்யூ நாதிரேகம் அற்று ஒத்திருக்கை –
அந்த தாதுக்களினுடைய ந்யூ நாதி ரேகங்கள் வியாதி ஹேது
மூன்றினுடைய ப்ரகொபம் மரணம் இறே
ஆகையால் அந்த வியாதி ஹேதுக்கள் தன்னில் ஒத்தவாறே
அவற்றினுடைய நிம் நோன்னதத்தாலே வரும் வியாதி உண்டாகாது –
வியாதி உண்டாகாமையாலே சரீரம் ஸ்வஸ்தமாம்
சரீரஸ்வாஸ்த்யத்தாலே மனஸ் ஸ்வாஸ்த்யம் பிறக்கும் –
பின்பு மனஸ்ஸூ ஸ்மரண ஷமமாம் –
ஆக
கீழ் இத்தனையாலும் ஸ்மரணா காந்தமான கால விசேஷத்தைச் சொல்லிற்று –
———
அநந்தரம்-
ஸ்மரணாதி காரியைச் சொல்லுகிறது –
யோ நர -என்று
நர சப்தம் -ம நுஷ்ய வாஸீ
இதிலே தேவதைகளையும் உப லஷிக்கிறது
இத்தால்
பகவத் சமாஸ்ரயணத்துக்குக் கரண பாடவமே அபேஷிதம் என்றதாயிற்று
வஷ்யமாணமான ஸ்மரணத்துக்கு ஜன்ம வ்ருத்தாதிகள் அப்ரயோஜகங்கள் –
ஏதேனும் ஜன்மம் ஆகவுமாம்-
வ்ருத்த மாகவுமாம் —
கரண பாடவமும்
ருசியுமே வேண்டுவது-
ஸ்மர்த்தா-
ஸ்மரணம் ஆவது ஒரு ஜ்ஞான விசேஷம் –
மேல் –
விஸ்வ ரூபம் -என்று சேஷித்வத்தையும்
நயாமி -என்று உபாயத்வத்தையும்
பரமாம் கதிம் -என்று உபேயத்வத்தையும் சொல்லுகையாலே
இம் மூன்றும் இந்த ஸ்மரணத்துக்கு விஷயமாகக் கடவது
ஆக இத்தால் ஆஸ்ரயண பிரகாரம் சொல்லிற்று ஆயிற்று –
———-
அநந்தரம்
ஆஸ்ரயணீய வஸ்துவைச் சொல்லுகிறது -விஸ்வ ரூபம் -என்கிற பதம் –
விஸ்வத்தையும் தனக்கு ரூபமாக உடையவன் விஸ்வ ரூபி யாகிறான்
இவன் விஸ்வ சரீரியாய் இருக்குமாகில்
உபய கதமான தோஷமும் ஸ்பர்சியாதோ-என்னச் சொல்லுகிறது -அஜம்-
ஜனன மரணாதி ஸூந்யம்-
இந்த ஜனனம் சரீர தர்மமான ஷட் பாவ விகாரங்களுக்கும்
ஆத்ம தர்மமான அஜ்ஞான துக்காதி களுக்கும் உப லஷணம்-
ச-
இச் சேதனனுடைய ஹிதாஹித ஜ்ஞான விசேஷத்தையும்
ஜ்ஞான அநு குணமாக கார்யம் தலைக் கட்டுகைக்கு ஈடான சக்தியையும் தயையும் கணிசிக்கிறது –
மாம் –
என்னை என்றபடி
அசாதாரண விக்ரஹத்தை அஸ்ம தாதிகள் கண்ணுக்கு விஷயமாக்கிக் கொண்டு நிற்கிற சௌலப்யத்தையும்
மானமிலாப் பன்றி என்று அத்யந்த நிஹீனமான வராஹ ஜன்மத்திலே
அத்யாபி நிவிஷ்டனாம்படியான சௌசீல்யாதி அதிசயத்தையும் மூதலித்துக் காட்டின படி –
———
அநந்தரம் -தத -இத்யாதி ஸ்லோகத்தாலே –
ஆஸ்ரயித்தவனுக்கு ஈஸ்வரன் உண்டாக்கும் பிரயோஜன விசேஷத்தைச் சொல்லுகிறது
தத -பின்பு என்றபடி –
இத்தால் ஸ்ம்ருதி யினுடைய நைரந்தர்யத்தைக் கழிக்கிறது-
தம் –
ஸ்மர்த்தா -என்கிறபடியே –
என்னையே உபாய உபேயமாக அத்யவசித்த அதிகாரியை –
இவனுக்கு பலம் கொடுப்பது எப்போதோ என்னில் -ம்ரியமாணம் –
மரண உன்முகமான சமயத்திலே
து சப்தம் -சாதகனில் காட்டில் இவ்வதிகாரிக்கு வஷ்யமாணமான விசேஷத்தை த்யோதிப்பிக்கிறது
அந்த விசேஷம் என் என்னில்
காஷ்ட பாஷான சந்நிபம் –
ஜ்ஞான சம்சர்க்க ஸூ ந்யமான காஷ்ட பாஷாணங்களோடு ஒத்து இருக்க அமையும் –
சாஸ்திரம் அந்திம ஸ்ம்ருதி கொண்டு உஜ்ஜீவிக்க வேணும் என்று சொல்லா நிற்க
அந்திம ஸ்ம்ருதி ஒழிய உஜ்ஜீவிப்பிக்கக் கடவன் என்கை சாஸ்திர விருத்தம் அன்றோ என்னில்
அதுவும் அப்படியே –
இந்த அம்சம் என்னது -என்கிறார் -அஹம் ஸ்மராமி -என்று
அபேஷித ஸ்மரணத்துக்குக் கர்த்தா நானே
க்ருஷ்யம்சம் கர்ஷகனுக்கு அன்றோ
ஸ்மார்த்தா –
இவன் ஒரு கால் ஸ்மரித்தான் ஆகில் -அநவரத பாவனை பண்ணக் கடவன்-
நீ இப்படி மேல் விழுந்து நினைக்கைக்கு இவன் பக்கல் தன்னேற்றம் என் என்னில் -மத்பக்தம் –
எனக்கு நல்லவன் அன்றோ
மத் பக்தம் -என்று ப்ரபன்ன அதிகாரியைச் சொல்லுகிறது –
ஆக என் பக்கலிலே அநந்ய பிரயோஜன பக்தியை உடையவன் ஆகையாலே
அவன் காஷ்ட பாஷாண சந்நிபனே யாகிலும் நான் ஸ்மரிப்பன்-
இங்குச் சொல்லுகிற ஸ்மரணம் ஆவது –
இவன் தன கார்யத்தில் கை வாங்கி நம் பக்கலிலே தன சர்வ பாரங்களையும் சந்யசித்தான்
ஆன பின்பு இவன் கார்யம் அடைய நமக்கே பரம்
இவன் இன்னம் ஒரு கால் உத் க்ராந்தி க்லேசம் அனுபவித்தல்
யமன் முகத்திலே விழித்தல் கர்ப்ப குஹையிலே கிடத்தல் செய்யாதே
இவன் நித்ய கைங்கர்யம் பண்ணி நித்ய ஆனந்தியாக வேணும் என்கிற சங்கல்பம் –
நயாமி பரமாம் கதிம் -என்றது –
பரம ப்ராப்ய பிரகாரத்தைச் சொல்லுகிறது –
பரமாம் கதிம் நயாமி –
பரமையான கதியைக் கொண்டு ஸ்வீகரிப்பிக்கக் கடவன்
கதியாவது –
கம்யத் இதி கதி -என்கிற வ்யுத்பத்தியிலே யாய் -ப்ராப்யத்தைச் சொல்லுகிறது
அதில் -பரம கதி யாவது –
அதுக்கு அவ்வருகு இல்லாத ப்ராப்யம் –
அதாவது -பரம புருஷார்த்த லஷண மோஷம் –
நாட்டில் புருஷார்த்தமாக வேண்டுவது –
தர்மார்த்த காம மோஷம் -இவை புருஷார்த்தமாகக் காட்டாமையாலே அத்தை வ்யாவர்த்தித்து –
ஸ்வயம் புருஷார்த்தமாய் -ஸ்வ ரசமாய் -நிரதிசயமான பகவத் கைங்கர்யமான பரம ப்ராப்யத்தைச் சொல்லுகிறது –
நயாமி –
அந்தப் ப்ராப்யத்தைப் ப்ராபிக்கும் இடத்தில்-
ஆதி வாஹிகர்கள் கையிலே காட்டிக் கொடேன் –
அத்த வாளத் தலையாலே முட்டாக்கு இட்டு நானே கொண்டு போகக் கடவேன் –
லங்கா ஜன பதத்தில் இருந்த பிராட்டியைப் புஷ்பத்தின் மேலே தானே எடுத்து வைத்துக் கொண்டு
போனால் போலே காணும் இவ் வாத்மாவைக் கொண்டு போம்படியும் –
—————————————————————————
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ சீதா ராம ஜெயம் .-ஸ்ரீ ருக்மிணி சத்யபாமா சமேத கிருஷ்ணன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூமிப் பிராட்டி சமேத ஸ்ரீ வராஹ நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .-
Leave a Reply