ஸ்ரீ இராமாயண தனி ஸ்லோக வியாக்யானம் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்தது –கச்சதா மாதுல குலம்-அயோத்யா -1-1-/இச்சா மோஹி மஹா பாஹூம் -அயோத்யா -2-22-/

அயோத்யா காண்டம் -1-1-

கச்சதா  மாதுல குலம் பரதேன ததா அநக
சத்ருக்நோ நித்ய சத்ருக்நோ நீத ப்ரீதி புரஸ்க்ருத –அயோத -1-1-

அநக -தோஷம் அற்றவரும்
நித்ய சத்ருக்ந-எப்போதும் எதிரிகளான இந்த்ரியங்களையும் ஜெயித்து இருப்பவரும்
சத்ருக்ந -எதிரிகளை மண் உண்ணப் பண்ண வல்லவர் ஆகையாலே சத்ருனன் என்று பெயரிட்டவருமானவர்
ப்ரீதி புரஸ்க்ருத -அன்பினால் முன் உந்தப்பட்டவராய்
ததா -பரதன் சென்ற அப்போதே
மாதுல குலம் -மாமாவின் வீட்டுக்கு
கச்சதா -போகா நிற்கிற
பரதேன -பரதனால்
நீத -அழைத்துச் செல்லப் பட்டார் –

கச்சதா –
போகா நிற்கிற என்கிற வர்த்தமான நிர்த்தேசத்தாலே போகிற விடத்தில்
தனக்கு ஒரு பிரயோஜனம் உண்டாதல்
இங்கே மாதா பிதாக்களை கேள்வி கொள்ளுதல்
பூர்வஜரான பெருமாளைக் கேள்வி கொள்ளுதல்
இவ்வளவும் அன்றிக்கே அவனை ஒழிய ஜீவிக்க மாட்டாத படியாலே போனான் -என்கை-
மாதுல குலம் –
யுதாஜித் அழைத்தது அவனை யாகையாலே போக்கில் உத்தேச்யதையும் அவனுக்கு .
இவனும் அவன் உத்தேச்யனாய் போனான் என்கை –

பரதேன –
சக்ரவர்த்தியும் துஞ்சி
பெருமாளும் ராஜ்யத்தைப் போகட்டுப் போய்
இளைய பெருமாள் அடிமை செய்ய வேணும் என்று தொடர்ந்து போய்
சத்ருந ஆழ்வானும் -ராமனை அல்லாது அறியாத பரதா -நின்னை அல்லது அறியேன் என்று இருக்கும் தசையிலும்
ராஜ்யத்தை பரிக்கக்-தாங்கக் -கடவன் என்று ஆயிற்று ஸ்ரீ வசிஷ்ட பகவான் திரு நாமம் சாத்திற்று –
பரதன் இதி ராஜ்யஸ்ய  பரணாத்-என்றான் இ றே ஸ்ரீ சதா நீகன்-

ததா -அப்போதே
இருவரும் ராஜ புத்ரர்களாய் நஷத்ர பேதம் உண்டானால் பிரித்து முஹூர்த்தம் இட்டுப் போக ப்ராப்தமாய் இருக்க
அவன் போனதுவே முஹூர்த்தமாகப் போனான் -என்கை –
கச்சதா -என்கிறதிலே அர்த்த சித்தம் அன்றோ –
ததா என்றது என் என்னில்
அங்கு மமதா நிவ்ருத்தியைச் சொல்லிற்று -தனக்கே ஒரு பிரயோஜனம் இன்றி சென்றமை சொல்லி –
இங்கு அதுக்கு ஆச்ரயமான அஹங்கார நிவ்ருத்தியைச் சொல்லுகிறது -தான் ஒருவன் உளன் என்கிற நினைவும் இல்லாமல் –
ஆகையாலே புநருக்தி தோஷம் இல்லை
சேஷத்வ விரோதி இ றே இரண்டும் –

அநக –
பாபம் அற்றவன்
அகம் இல்லாதது இவனுக்கே இ றே
அகம் -உத்தேச்ய விரோதி
இவ்விடத்தில் அகமாவது ராம பக்தி
இத்தைப் பாபம் என்னப் போமோ என்னில்
பாபத்தில் புண்யம் நன்றாய் இருக்க மோஷ விரோதி யாகையாலே புண்யமும்
அஸ்வ இவ ரோமாணி விதூய பாபம் -சாந்தோக்யம் -8-13-1-என்று பாப சப்த வாஸ்யமாய் ஆயிற்று இ றே –
ஆகையால் பரத அநு வ்ருத்தி யாகிற உத்தேச்யத்துக்கு விரோதி யாகையாலே ராம சௌந்தர்யத்தில் கால் தழுவும் அதுவும் பாபமாம் அத்தனை இ றே –
ராமோ பிரமாத மம கார்ஷீ -என்று ராம அநு வ்ருத்திக்கு இடைச் சுவராக சொல்லிற்று இ றே ராம சௌந்தர்யத்தை –
பரத அநு வ்ருத்திக்கு இடைச் சுவர் என்னும் இடம் சொல்ல வேண்டா வி றே

சத்ருக்ந –
பிள்ளைகள் உடைய சந்நி வேசங்களைப் பார்த்து  திரு நாமம் சாத்துகிற ஸ்ரீ வசிஷ்ட பகவான்
பெருமாள் கண்டாரை அழகாலே துவக்க வல்லராகத் தோற்றுகையாலே ராமன் -என்றும்
இளைய பெருமாளுக்கு கைங்கர்யமே நிரூபகமாகத் தோற்றுகையாலே -லஷ்மணன் -என்றும் திரு நாமம் சாத்தினாப் போலே
இவனுடைய சந்நி வேசததைக் காணவே சத்ருக்கள் மண் உண்ணும்படி இருக்கையாலே-சத்ருக்னன் -என்று திரு நாமம் சாத்தினான் –

நித்ய சத்ருக்ந –
பாஹ்ய சத்ருக்களைப் போலே அன்றிக்கே ஆந்திர சத்ருக்களான இந்த்ரியங்களை ஜெயித்து இருக்கும் -என்கை –
அவ் விந்த்ரிய ஜெயத்தின் எல்லை எவ்வளவோ என்னில்
பும்ஸாம் திருஷ்டி சித்த அபஹாரிணம்-அயோத்யா -3-29-என்கிற ராம சௌந்த்ர்யத்திலும் துவக்கு ஒண்ணாது ஒழிகை –
அதாகிறது
பெருமாளைப் பற்றும் போதும் -தன உகப்பாலே யாதல் –
அவருடைய வை லஷ்ண்யத்தாலே ஆதல் அன்றிக்கே
தனக்கு உத்தேச்யனான இவன் உகந்த விஷயம் என்று பற்றுகை –

நீத –
அழைத்துச் செல்லப் பட்டான் –
ராஜாக்கள் போகும் போது உடைவாள் மற்று ஓன்று கொண்டு போமோபாதி
அவன் கொடுபோகப் போனான் –
த்ரவ்யத்துக்கு த்ரவ்யாந்தரங்களோட்டை சம்யோகம் உபய நிஷ்டமாய் இருக்கும் இ றே
அது போல் அன்றிக்கே  ஜாதி குணங்களோ பாதி -கடமும் கடத்வமும் போலே -போனான் –

ப்ரீதி புரஸ்க்ருத –
அன்பினால் முன் தள்ளப் பட்டான் –
ஜ்யேஷ்ட அநு வ்ருத்தி கர்த்தவ்யம் என்று போனான் அல்லன் –
அஹம் சர்வம் கரிஷ்யாமி -அயோத்யா -31-27- என்று போன இளைய பெருமாளைப் போலே போன இடத்தில்
சர்வ சேஷ வ்ருத்தியும் பண்ணலாம் என்று பாரித்துக் கொண்டு ப்ரீதி பிரேரிக்க போனான் –
படை வீட்டில் இருந்தால் பலர் உண்டாகையாலே விழுக்காட்டோ பாதி இ றே சித்திப்பது

நீத -என்கையாலே
சேஷத்வத்தில் அசித் கல்பனாய் இருக்கக் கடவன் -படியாய்க் கிடந்தது உன் பவளவாய் காண்பேனே
அடிமைத்தனத்தில் அசித் சமனாயும் கைங்கர்யம் செய்யும் பொழுது சேதனத்வமும் -பெருமாள் திரு -4-9-
ப்ரீதி புரஸ்க்ருத -என்கையாலே
ஸ்வரூப அநு ரூபமான வ்ருத்தியிலே சைதன்ய பிரயுக்தமான தர்மங்கள் உண்டாய் இருக்கை-
அநக -என்கையாலே
பாவநத்வத்தாலும்
நித்ய சத்ருக்ந-என்கையாலே
போக்யதையாலும்
அவனையே பற்றினான் -என்னவுமாம் –
அநக நித்ய சத்ருக்ந  -என்கிறதுக்கு பிரயோஜனம்  என் என்னில்
ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வான் பெருமாளுக்கு நல்லனான படி
அவனை அல்லது அறியாத ஸ்ரீ பரத ஆழ்வானை அல்லது வேறு ஓன்று அறியாத படியானை -என்று எம்பெருமானார் அருளிச் செய்தார் –
இதுவே பிரயோஜனம் ஆனால் பரதனுக்கு பெருமாள் விட சொன்ன மிகை  எல்லாம் பொறுக்கும் இ றே-

————————————————————————————————————————————————————————————-

இச்சா மோஹி மஹா பாஹூம்  ரகுவீரம் மஹா பலம்
கஜேந  மஹதா யாந்தம் ராமம் ராமம் சத்ரா வ்ருதா நநம –அயோத்யா -2-22-

இச்சா மோஹி -ஆசைப்படுகிறோம் அன்றோ
மஹா பாஹூம்  -நீண்ட திருக் கைகளை யுடையராய்
ரகுவீரம்-ரகு குல ஸ்ரேஷ்டராய்
மஹா பலம் -பெரும் பலத்தை யுடையரான
கஜேந  மஹதா -மஹதா கஜேந -பெரிய யானையின் மேலே
யாந்தம் -எழுந்து அருளுமவராயும்
ராமம் -ஸ்ரீ ராமனை
சத்ரா வ்ருதா நநம –குடையால் வெய்யில் படாதபடி மறைக்கப்   பட்ட திரு முகத்தை யுடையவராயும்
இச்சா மோஹி -ஆசைப்படுகிறோம் அன்றோ –

அவதாரிகை –
சக்ரவர்த்தி தான் பரிணத வயஸ்தன் ஆகையாலும்
எதிரிகளை நோக்கி எடுத்து விடுகைக்கு அசக்தன் ஆகையாலும்
தான் இருக்கிற போதே பெருமாளைத் திருமுடி சூட்டி ராஜ்யத்தோடு பொருந்தும்படி பண்ண வேணும் என்னும் நினைவுடையான் ஆகையாலும்
களித வயஸாம் இஷ்வாகூணாமிதம் ஹி குலவ்ரதம் -ரகுவம்சம் -3-70-என்று சொல்லுகிறபடியே
இந்தக் குலத்தில் பிறந்தார்க்கு பிள்ளைகள் பருவம் நிரம்பினால் அவர்களை முடி சூட்டித்
தாங்கள் உபசாந்தராய்ப் போருவதொரு முறைமை யுண்டாகையாலும்
பெருமாளை திருமுடி சூட்டி ராஜ்ய துரந்தராக பண்ண வேணும் என்று கருதி
அது செய்யும் இடத்தில்
பாண்டரஸ் யாத பத்ரஸ்ய சாயாயாம்   ஜரிதம் மயா-அயோத்யா -2-7-என்று நாம்
பயணத்தின் மேல் பயணமாய்த் திரிகையாலே நாமும் ரஷித்தோமாய்
நாட்டாரும் ரஷிதர் ஆனார்கள்
ரஷணத்தில் அல்பம் குறை யுண்டாமாகில் இப்போது ஒரு பாலன் கையிலே காட்டிக் கொடுத்து எங்களை உபேஷித்தான்
இவன் என்ன ராஜ்ஜியம் பண்ணிற்று என்று நாட்டார் குறை சொல்வார்கள்
அவர்களையும் இசைவித்துக் கொள்ளுவோம் என்று பார்த்து பௌரஜாந பதங்களை திரட்டி
கதக்லேசா பவிஷ்யாமி புத்ரே அஸ்மின் சந்நிவேச்ய வை -அயோத்தி -2-14-என்றும்
சோ அஹம் விஸ்ரமம் இச்சாமி புத்ரம் க்ருத்வா பிரஜா ஹிதே -அயோத்யா -2-10-என்றும்
நெடும் காலம் உண்டு நான் உங்களை ரஷித்துப் போருகிறது
நம்மை இப்போது வார்த்தகம் வந்து கைக் கொண்டது
இனி உங்களுடைய ரஷணம் நம்மால் துஸ் சகமாய்  இருந்தது
ஆனபின்பு ஆத்மா வை புத்ர நாமா அஸி-மந்திர பிரச்னம் -2-11-33-என்கிறபடியே
என்னோடு நிர்விசேஷரான என் பிள்ளையை உங்களுடைய ரஷணத்தில் நியோகித்து இளைப்பாறுவதாக பாரியா நின்றோம்
பவந்தோ மே அனுமன்யந்தாம் -அயோத்யா -2-15-என்று இதற்கு நீங்களும் இசைய வேணும் என்று சொல்ல
அவர்களும் இது கேட்ட ப்ரியத்தாலே
விமா நம் கம்பயன் நிவ -அயோத்யா -2-18-என்று மாளிகை கோப்புக் குலையும் படி பெரிய சம்ப்ரமத்தைப் பண்ணி
ஹர்ஷத்துக்குப் போக்கு விட்டு
அநேக வரஷ சஹஸ்ரோ வ்ருத்தஸ் த்வமஸி பார்த்திவ
ஸ ராமம் யுவராஜாநமபி  ஷிஞ்சஸ்வ பார்த்திவம் -அயோத்யா -2-21- என்று
வ்ருத்தனுமாய் நன்றாக எங்களை ரஷிப்பதும் செய்தாய் –
இவர் பெருமாளைத் திரு அபிஷேகம் பண்ணு என்று இசைந்து
அவன் கேட்ட வார்த்தைக்கு உத்தரம் சொன்னார்களாகை அன்றிக்கே
தங்கள் நினைவுகளையும் வெளியிட்டுப் பெருமாளுடைய ராஜ்ய பரண யோக்யதையும் சொல்லித் தலைக் கட்டுகிறார்கள் –

1-இச்சாம  –
இட்ட மாலையும் கவித்த அபிஷேகமுமாய் எங்கள் கண் முகப்பே தோற்ற வேணும் என்று போற ஸ்ரத்தை பண்ணுகிறோம்
2–இச்சாம –
எங்களுக்கு உள்ளது இச்சை இ றே-
முடி வைக்கும் போது நீயே வேணும் இ றே –
இச்சைக்கு காரணம் எங்கள் ஆசை இ றே –
ஸ்ரேயாம்சி பஹூ விக்நாநி -என்று இப்போது எங்களுக்குக் கிட்டப் புகுகிறதோ
3- இச்சாம –
கிடைப்பது -கிடையாது ஒழிவது –
நல்லது கண்டால் ஆசைப் படக் கடவது இ றே –
4- இச்சாம –
நிரபயமாக எங்களை ரஷித்த உனக்குக் குறையா கிறதோ என்று வாயிட்டுச் சொல்லிற்றிலோம்-
ஆனால் இப்போது தான் சொல்லலாமோ என்னில்
பாவம் விஜ்ஞாய சர்வச-அயோத்யா -2-19-என்று
அவனுடைய நினைவு அறிந்து சொல்லுகிறவர்கள் ஆகையாலே
இப்போது இச்சாம -எண்ணத் தட்டில்லை
இந்த ஆசை சிலர்க்கு உண்டாய்ச் சிலர்க்கு இல்லையாய் இருக்குமோ என்னில்
5-இச்சாம –
நாங்கள் இருந்ததே குடியாக இது தலைக் கட்ட வற்றோ என்று உம்மை இரக்கிறோம்-

உங்கள் நெஞ்சில் கிடந்தது நாம் அறியும் படி என் என்ன –
1-ஹி-அன்றோ –
பிறர் சொல்ல வேண்டி இருந்ததோ -இது எல்லார்க்கும்  ஒக்கும் என்னும் இடம் –
ஜனகோஷோ மஹாந பூத் -என்றும்
விமாநம் கம்பயந்நிவ-அயோத்யா 2-19-என்றும்
நாட்டார் பண்ணின ஆரவாரத்தாலே கோப்புக் குலைந்த உன் மாளிகையிலும் விமானங்களிலும் கண்டு கொள்ளும் இத்தனை அன்றோ –
2-ஹி -அன்றோ –
அகாமயத் மேதி நீ -அயோத்யா -2-48-என்றும்
நீயும் நிர்வாஹகனாய் இருக்க
பூமி தானே ஸ்வயம் வரித்து மாலையிட்ட போதே அறிந்திலையோ –
அகாமயத-காதலித்தாள்
நீ காக்ரஹணம் பண்ணிப் போரச் செய்தேயும் -முறை மசக்கி மாலை இட்டதில்லையோ –
காமுகருக்கு முறை தெரியாது இ றே-
லோக பாலோபமம் நாத மகாமையாதா மேதி நீ –
லோகபாலோபமா -லோக பாலனுக்கு ஒப்பானவன்
விஷ்ணு நா சத்ருசா -பால -1-18-என்று
சர்வேஸ்வரனைப் போலே இருக்கையாலே மேல் விழுந்து ஸ்ரத்தை பண்ணினாள்-
அதற்க்கடி என் என்னில் –
மேதி நீ –
மேதி நியான யாலே
எங்கனே என்றால்
மதுகைடபர்களுடைய வஸா விஸ்ர கந்தத்தாலே உபஹதையாய் இருக்கிற தன்னை
சர்வ கந்த -சாந்தோக்யம் -3-14-2-என்கிற அவனுடைய
சௌகந்த்யத்தாலே வாசிதை யாக்குகைக்காக –
வாசிதம் ஆக்க வேணுமத்தை புறம்பேயும் சொன்னார்கள் இ றே
மதுகைடபதாந வேந்த்ரமேத ப்லவ விஸ்ரா விஷமைவ மேதி நீயம அதி வாச்யயதி  –
ஸ்வ கைர்ய சோபிச் சிரமே நாமுப புஞ்சதே நரேந்த்ரா -என்று
முராரி கவியும் அனர்க்க ராகவம் -1-14-என்று சொன்னான் இ றே
இஸ் சௌகந்த்ய மாத்ரத்துக்காக கர்ப்பூர சந்த நாதிகளைப் போலே உபகரநமாய்-சேஷ கோடியிலேயோ அவதரித்தது என்னில்
நாதம-நாதனை –
ஏதாத்ருச கந்தமே பிடித்து இல்லாதபடி ரஷிப்பானாய்
அசௌகந்த்ய சௌகந்த்யன்கள்
தனக்கே அனுபவிக்க வேண்டும்படி நிருபாதிக சேஷியுமாய்-

மெய்ப்படவே உங்கள் எல்லார்க்கும் இச்சை யுண்டாகில் முடி சூட்டுகிறோம் –
அவர் தாம் நாட்டை அடக்கி ஆளவல்ல சாமர்த்தியம் யுடையவரோ என்னில்
1- மஹா பாஹூம் –
அவர் தோள் பரப்புக்கு  நடக்கிற கழஞ்சு மண்ணும் ஒரு சரக்கோ
2- மஹா பாஹூம் –
சக்தஸ் த்ரைலோக்யம் அப்யேஷ போக்தும் கிந்நு  மஹீமிமாம்-அயோத்யா -2-45-என்று
கோசல ராஜ்யம் அன்றிக்கே  லங்கா ராஜ்யமும் கைக் கொள்ளும்படியான தோளை யுடையவர் –
3- மஹா பாஹூம்
ஆயதாச்ச -என்றும்
ஆஜா நுபாஹூம் –அயோத்யா -17-7-என்றும்
அவருடைய சாமுத்ரிக லஷணம் கண்டால் சிலரைக் கேட்க வேணுமோ –
4- மஹா பாஹூம்
பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்காதும் சோராமே ஆள்கின்ற-நாச்சியார் -11-3- என்று
உபய விபூதியையும் வஹிக்கிற தோள் இ றே –
5- மஹா பாஹூம் –
அத் தோள் தான் வேணுமோ –
பாஹூச்சாயா ம வஷ்டப்தோ யஸ்ய லோகோ மஹாத்மந -சுந்தர -34-31-என்று
அவருடைய தோள் நிழல் தானே அமையாதோ எங்களை ரஷிக்கைக்கு –

ரஷ தர்மேண பலேந சைவ -கிஷ்கிந்தா -1-128- என்றும்
தர்மத பரி ரஷிதா -யுத்த -1-12- என்றும்
சிலரை சிலர் ரஷிக்கும் இடத்தில் தர்ம பலங்கள் இரண்டும் வேணும் இ றே
இவர் பலம் உண்டு என்று தோள் வலியாலே ரஷிக்கும் இத்தனையோ –
தார்மிகராய் ரஷிக்கும் ஆகாரம் இல்லையோ-என்னில்
1-ரகுவீரம் –
தீ நாந்தா நேந ராகவ -அயோத்யா -12-29-என்று
அவ்வாகாரம் பிறந்து படைத்ததன்றோ -இப்போதாகத் தேட வேணுமோ –
2- ரகுவீரம் –
ஆன்ரு சம்சயம்  பரோ தர்மச் த்வத்த ஏவ மயா ஸ்ருத -சுந்தர -38-41-என்று
பிறர்க்கும் கூட உபதேசிக்கும் படியாய் அன்றோ அதிருப்பது –
3- ரகுவீரம் –
தார்மிகத்வம் தன்னில் ரகுகளைக் காட்டில் இவருக்கு உள்ள தன்னேற்றம்
அது எங்கனே என்னில்
ரகுதான் ராஷசன் ஷூதார்த்தனாய்-பசியினால் – ம்ருதனானால் இதனால் வரும் பாபம் உனக்கு உண்டாகாதோ என்ன
மேல் ஒரு பிரதிக்ரியை பண்ண மாட்டாதே இருந்தான் இ றே
இவரோ -அப்யஹம் ஜீவிதம் ஐஹ்யாம் த்வாம் வா சீதே சா லஷ்மணாம்-ஆரண்யம் -10-19-என்று
பிராணன் ஒரு தலையாகவும்
ப்ராணேப்யோ அபி க்ரிய ஸீ-ஆரண்யம் -10-22-என்று பிராட்டி ஒருதலையாகவும் அழிய மாறி ரஷிக்குமவர் இ றே –

இப்படி இவர் ரஷிக்கும் இடத்தில்
வத்யதாம் பத்யதாம் -அயோத்யா -21-12- என்று விலக்குவார் உண்டானால் அவர்கள் வழியே போய் இள நெஞ்சே மீளுவாரோ என்னில்
மஹா பலம் –
ந து பிரதிஜ்ஞாம சம்ஸ்ருத்ய ப்ராஹ்மணேப்யோ  விசேஷத -ஆரண்ய -10-19- என்றும்
ஏதத் வ்ரதம் மம-யுத்த -18-34- என்றும்
ந த்யஜேயம் கதஞ்சந -யுத்த 18-3- என்றும்
அவர்கள் தங்களை கை விட்டும் ஆஸ்ரிதரை ரஷிக்கும் படியான வ்யவசாயம் யுடையவர்
பலம் -என்றது இவ்விடத்தில் மநோ பலத்தை –
நாய மாத்மா பல ஹீநேந லப்ய-முண்ட -3-2-4-என்கிறபடியே
துடங்கின கார்யத்தில் அசஞ்சலராய் இருக்கும் இருப்புக்கு
தைர்யேண ஹிமவாநிவ -பால -1-17-என்னக் கடவது இ றே-

உங்களுக்கு ஏற்ற ராஜ்ய பரணத்துக்கு சக்தராகில் நீங்கள் சொன்ன படி செய்கிறோம் –
இப்போது நான் இருந்த இடத்திலே இருக்க நாட்டுக்கு வேண்டுவது எல்லாம் ஆராய்ந்து நடத்தா நின்றார் ஆகில் அமையாதோ என்ன
உன் பிரயோஜனம் தலைக் காட்டிற்று இ றே
அவ்வளவில் விடலாமோ
எங்களுடைய பிரயோஜனமும் பெற வேண்டாவோ என்கிறார்கள் மேல் –
ஆகில் நீங்கள் சொல்லுகிறது என் என்ன
கஜேந மஹதா யாந்தம் –
நீ இசைந்தமையும் முடி சூட்டினமையும் தோற்ற
சத்ருஜ்ஞயன் கழுத்திலே இட்ட மாலையும் கவித்த முடியுமாய்-எங்கள் கண் முகப்பே தோற்ற வேணும் –
அது செய்யும் இடத்தில் தேரை அலங்கரித்து அதிலே வர அமையாதோ என்ன –
கஜேந-
அங்கன் ஒண்ணாது
மத்த மாதங்க காமிநம்  -அயோத்யா -3-28- என்ற அவருடைய நடைக்குச் சேர்ந்த வாகனமாக வேணும்
அது செய்யும் இடத்தில் ஏதேனும் ஒரு யானை யாக ஒண்ணாதோ என்ன –
கஜேந மஹதா –
சர்வ லஷணோ பேதமாய் பட்டத்துக்கு உரிய யானையாக வேணும் –
மஹதா –
சர்வ சக்தியை வஹிக்க வற்றாக வேணும் இ றே
உங்களுக்கு இப்படி அபீஷ்டமாகில் முடியையும் வைத்து
கஜாதி ரூடராம்படி பண்ணி விடுகிறோம் என்ன
யாந்தம் –
அவ்வளவும் போராது
யானைக் கழுத்திலே ஏறி நெடும் தெருவே நடக்க வேணும் –
அதுவே வேண்டும் போது அடைய இங்கே திரண்டிகோளாகில்
முடி சூட்டி யானைக் கழுத்திலே ஏற்றின அளவே அமையாதோ -என்ன
புதியது உண்பார் தனி உண்பார்களோ-என்கிறார்கள்
யாந்தம் -நனந்துஸ் ஸ பிரஜா பிரஜா -என்று இந்த மஹோத்சவத்தை எங்கள் மித்ராதிகள் உடன்
அங்கே எழுந்து அருளக் காண வேணும் –
யாந்தம் -ஆயாந்தம் –
போகின்றவரை -வருகின்றவரை
முகமும் முறுவலும்
கஸ்தூரி திரு நாமமும்
கருணா கடாஷததோடே
எழுந்து அருள சேவிக்க வேணும் –

இப்படி சேவிக்கிறது தான் யாரை -என்னில்
1-ராமம்
ராமயதீதி ராம -என்கிற வ்யுத்பத்தியாலே சமஸ்த ஜனங்களையும் கல்யாண குணங்களாலே ரஞ்ஜிப்பிக்கிற வரை –
2-ராமம் –என்கிற தாத் வர்த்தத்தின் படியே எல்லாரோடும் கூட விஹரிக்குமவர் ஆகையாலே என்றுமாம்

வெறும் யானைக் கழுத்திலே எழுந்து அருளுகிற மாத்ரம் அமையுமோ -என்ன
சத்ரா வ்ருதா ந நம் –
வெய்யில் படாமல் வெண் கொற்றக் குடை நிழலிலே எழுந்து அருளக் காண வேணும் –
பாண்டரஸ் யாத பத்ரச்ய சாயாயாம் ஜரிதம் மயா -என்று
தசரத சக்ரவர்த்தி முதலான ராஜாக்களாலே இச்சிக்கப் படுமதாய் இருக்கிற
திரு முக மண்டலத்தை சேவிக்க வேணும் என்றுமாம் –

—————————————————————————————————————————————————————————————-

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ சீதா ராம ஜெயம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார்  ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading