ஸ்ரீ கூரத் ஆழ்வான் -ஸ்ரீ வைகுண்ட ஸ்தவத்தில் அருளியவை முதல் இரண்டு ஸ்லோகங்கள்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவத்தில் அருளியது மூன்றாவது ஸ்லோகம்
அடுத்த நான்கு ஸ்லோகங்கள் பூர்வருடைய முக்தங்கள்-விடுதி ஸ்லோகங்கள்
இறுதி ஸ்லோஹம் ஸ்ரீ மணவாள மா முனிகளின் பூர்வாச்ரம திருப் பேரரான
ஆச்சார்ய பௌத்ரர் என்றே பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஜீயர் நாயனார் அருளிச் செய்தது -நக்ஷத்ர மாலிகா ஸ்லோகம் –
நாதனுக்கு நாலாயிரம் அருளினான் வாழியே -823-நாத முனிகள்
மணக்கால் கிராமம்-லால்குடிக்கு அருகில் –
இடைச்சங்க காலம் –5000-ஆழ்வார்கள் -முதல் சங்கம் -1000-/ கடைச்சங்கம் -2000-வருஷங்களுக்கு முன்
இடைப்பட்ட காலம் இருளான காலம் -3600–நாலாயிரம் நடையாடாமல் –
அனுபவம் முக்கியம் உபதேசம் இரண்டாம் பக்ஷம் ஆழ்வார்களுக்கு –
உபதேசம் பிரதானம் -அனுபவம் இரண்டாம் பக்ஷம் ஆச்சார்யர்களுக்கு
யோகாசனம் -யோகம் ஆத்மாவுக்கு ஆசனம் தேகத்துக்கு -பதஞ்சலியும் ஆதி சேஷன் அம்சம்
வகுள மாலை -தாமம் துவளமோ வகுளமோ -நான்கு கேள்விகளில் இதுவும் ஓன்று –
சேமம் குருகையோ செய்ய திருப் பாற் கடலோ
நாமம் பராங்குசமோ நாரணமோ
தோளும் இரண்டோ நான்கும் உளதோ பெருமாள் உனக்கு –
தாமம் துளவமோ வகுளமோ
ஸ்ரீ வடிவு அழகிய நம்பி திருக் குறுங்குடி நம்பியே அன்றோ இவர் -இது அன்றோ இச் சங்கைகளுக்கு அடி
மகிழ் மாலை மார்பினன் -ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் -உபகார வஸ்து கௌரவம் -சஜாதீயர் –
சபரி கொடுத்ததை பெருமாள் மறுக்க முடியாமல் ஸ்வீகரித்தது ஆச்சார்யர் நியமனம் படி கொடுத்ததாலே தானே –
உறாமை யோடே உற்றேன் ஆகாமைக்கு இந்த பக்தாம்ருதம் வழங்கி அருள தானே –
நாடு திருந்த -பிரபந்தம் தலைக்கட்ட -நச்சுப் பொய்கை ஆகாமைக்கா -ருசி வளர்க்க -காதலை பெருக்க வேண்டுமே
ஆர்த்தி அதிகார பூர்த்தி-தன் குழந்தையை பட்டினி போட்டு தொண்டர்க்கு அமுது உண்ண அருளப் பண்ணி –
துணைக் கேள்வி இன்பம் பயக்க எழில் மாதரும் தானும் -ஸ்ரீ ராமாயணம் -ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாமம் போலே தனிக் கேள்வி இல்லையே
அவனாலே அவனைத் தானே அடைதல் -அருளிச் செயல் சாரம் –
—————————————————————————————–
த்ரை வித்ய வ்ருத்த ஜன மூர்த்த விபூஷணம் யத்
சம்பத்ச சாத்விக ஜனஸ்ய யதேவ நித்யம்
யத் வா சரண்யம் அசரண்ய ஜனஸ்ய புண்யம்
தத் சம்ஸ்ரயேம வகுளா பரணாங்க்ரி யுக்மம் –1-
த்ரை வித்ய வ்ருத்த ஜன மூர்த்த விபூஷணம் யத் –
யாதொரு நம் ஆழ்வார் திருவடி இணையானது
பரம வைதிகர்களுடைய-வேதாந்திகள்-மதுர கவி ஆழ்வார்-நாத யமுன யதிவராதிகள்- போல்வார் –
முடிக்கு அலங்காரமாய் இருக்கின்றதோ –
(ஸ்ரீ சடகோபருடைய சடாரி -ஸ்ரீ ராமானுஜன் சாதியுங்கோள் பிரார்த்தனை-ஆழ்வார் திருநகரில் –
மாறன் அடி பணிந்து உய்ந்தவர் என்பதால் மற்ற இடங்களில் ஸ்ரீ மதுரகவி சாதியுங்கோள் பிரார்த்தனை
ஸ்ரீ முதலியாண்டான் சாதிக்க பிரார்த்தனை -ஸ்ரீ ராமானுஜர் சடாரிக்கு எங்கும் –
திருவேங்கடத்தில் மட்டும் ஸ்ரீ அனந்தாழ்வான் சாதிக்க பிரார்த்தனை )
சம்பத்ச சாத்விக ஜனஸ்ய யதேவ நித்யம் யத்
யாதொரு திருவடி இணையே சர்வ காலமும் சாத்விகர்களுக்கு சகல ஐஸ்வர்யமுமாக இருக்கின்றதோ –
உரு பெரும் செல்வமும் தந்தையும் தாயும் உயர் குருவும் -செந்தமிழ் ஆரணமே என்று –இத்யாதி
யத் வா சரண்யம் அசரண்ய ஜனச்ய –
யாதொரு திருவடி இணையே புகல் ஒன்றில்லாதவர்களுக்குத் தஞ்சமாய் இருக்கின்றதோ –
புண்யம் தத் சம்ஸ்ரயேம வகுளா பரணாங்க்ரி யுக்மம் –
அப்படிப் பட்ட பரம பாவனமான ஸ்ரீ நம் ஆழ்வாரது திருவடி இணையை ஆஸ்ரயிக்கக் கடவோம்
ஸ்ரீ ஆளவந்தார் -மாதா பிதா யுவதய -ஸ்லோகத்தில் சர்வ ஸ்வ மாகத் துதித்து
அவற்றை ப்ரணமாமி மூர்த்தா -என்று தலையால் வணங்குவதாக அருளிச் செய்த படியே முதல் பாதம்
தனத்தாலும் ஏதும் குறைவிலேன் எந்தை சடகோபன் பாதங்கள் யாமுடைய பற்று -என்றதை
நோக்கி இரண்டாவது பாதம் பணித்தது
சர்வ லோக சரண்யனான ஸ்ரீ எம்பெருமானாலும் கை விடப் பட்டவர்களுக்கு
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே தஞ்சம் என்கிறது மூன்றாவது பாதம் –
(நன்மையால் மிக்க நான்மறையாளர்கள் கை விட்ட அதுவே காரணமாக –புன்மையாக கருதுவார்கள் ஆதாலால் –
கைப்பிடித்து அருளினார் )
————————————————————————–
பக்தி பிரபாவ பவத் அத்புத பாவ பந்த
சந்துஷித ப்ரணய சார ரசௌக பூர்ண
வேதார்த்த ரத்ந நிதி அச்யுத திவ்ய தாம
ஜியாத் பராங்குசபயோதி அஸீமபூமா-–2-
பக்தி பிரபாவ பவத் அத்புத பாவ பந்த சந்துஷித ப்ரணய சார ரசௌக பூர்ண –
பக்தியின் கனத்தால் உண்டாகிய
ஆச்சர்யமான அபிப்ராய விசேஷங்களினால் வளர்க்கப் பட்ட
சிறந்த ப்ரணயம் ஆகிற
தீர்த்த பிரவாஹத்தாலே
நவரச சமூஹத்தாலே
நிறைந்ததாயும் –
காதல் -வேட்கை -அன்பு -அவா /-பர பக்தி பர ஞானம் பரம பக்தி -பிரணயம் -அவஸ்தைகள் –
ஞாதும் த்ரஷ்டும் பிரவேஷ்டும் -ஸ்ரீ கீதை /-ஞானம் தர்சனம் பிராப்தி -நாயனார் –
காதல் கடல் புரைய விளைத்த காரமர் மேனி –பேர் அமர் காதல் -பின் நின்ற காதல் -கழிய மிக்கதோர் காதல் -5-3/4/5-
அவா -சூழ்ந்து -பாழ்-பிரகிருதி -அதனில் பெரிய -பர நல் மலர் ஜோதி -சுடர் ஞான இன்பம் மூன்றையும் விஞ்சி
சிருங்கார -வீர- கருணை -அத்புத ஹாஸ்யம் -பாயா நகம் -ரௌத்ரம் – பீபஸ்த -சாந்தி- பக்தி -நவ ரச சமூஹத்தாலே-
பக்திஸ்த ஞான விசேஷம் -பக்தி ரூபா பன்ன ஞானம் / மதி நலம் -ஞானம் முதிர்ந்த பக்தி அருளி
ப்ரபன்னனுக்கு கர்மம் கைங்கர்யத்தில் புகும் / ஞானம் ஆத்ம ஸ்வரூபத்தில் புகும் / பக்தி பிராப்பிய ருசியில் புகும்
காற்றையும் கழியையும் கட்டி அழ கொண்ட பெரும் காதலுக்கு பக்தி வரம்பு இல்லையே
சிருங்கார ரசம் -பிரணய ரோஷம் -என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பீ
அத்புத ரசம் – மாயா வாமனனே – -வியந்து -கண்ணனை கூவுமாறு அறிய மாட்டேன் -பால் என்கோ
பயம் -ஐவர் திசை திசை வலித்து எத்துகின்றனர்
வேதார்த்த ரத்ந நிதி அச்யுத திவ்ய தாம ஜியாத் பராங்குசபயோதி அஸீமபூமா –
வேதப் பொருள் ஆகிற நவ ரத்னங்களுக்கு நிதியாயும்
ஸ்ரீ எம்பெருமானுக்கு திவ்யமான
அளவில்லாத பெருமையை யுடைதாயும் இருக்கிற
ஸ்ரீ நம் ஆழ்வார் ஆகிற கடல் நெடுநாள் வாழ வேணும்-
மனத்துள்ளான் மா கடல் நீருள்ளான் -ஸ்ரீ ஆழ்வார் திரு உள்ளம் –புகுந்து கல்லும் கனை கடலும் புல்லென்று ஒழியும் படி –
வாய்க்கும் குருகை திரு வீதி எச்சில் உண்ட நாய்க்கு பரம பதம் -இந்த பேய்க்கும் இடம் அளித்தால் பழுதோ-ஞானத் தமிழ் கடலே –
இந்த பிரார்த்தனை ஸ்ரீ பொலிந்து நின்ற பிரான் இடம் இல்லை -ஸ்ரீ நம்மாழ்வார் இடம் –
பெருமான் மகுடம் சாய்க்கும் வண்ணம் பாடும் -இன்பம் பயக்க -இத்யாதி-மிதுனத்தில் கேள்வி
பக்தாம்ருதம் -தனியனில்
நமாம் யஹம் திராவிட வேத சாகரம் -என்று
ஸ்ரீ திருவாய்மொழியைக் கடலாகக் கூறினார் முன்னோர்
நதி நாம் சாகரோ கதி -பல நதிகளும் கடலிலே சேருவது போலேயும்
ரத்னங்கள் நிறைந்த கடல் போலேயும்
பக்தின் கனத்தால் தோன்றிய அற்புதமான அபிப்ராய விசேஷங்கள் கொண்டு
பல பல படியாக பேசும் முகத்தாலே
நவ ரசங்களும் பொதிந்து இருப்பார்
சிருங்கார வீர கருண அத்புத ஹாஸ்ய பயாநக ரௌத்ர பீ பத்ஸ பக்தி ரஸங்களாலே பூர்ணர்
உயர்வற உயர் நலம் -வீடுமின் முற்றவும் -பத்துடை அடியவர்க்கு எளியவன் -பிறவித் துயர் அற -பொரு மா நீள் படை –பக்தி ரஸம்
அஞ்சிறைய மட நாராய் -மின்னிடை மடவார் -வேய் மரு தோளிணை -இவற்றில் அத்புத பாவ பந்த சந்துஷித ப்ரணய ரஸம்
நவ ரசங்களுள் ஸ்ருங்கார வீர கருண அத்புத ஹாஸ்ய பயாநக சாந்தி ரௌத்ர பீ பத்ஸ பக்தி ரஸங்களாலே
பிரதானமாகப் பொதிந்து மறைய நின்றும் உள்ள பல திருவாயமொழிகள் உண்டே
மாயா வாமனன் -புகழு நல் ஒருவன் -நல் குரவும் செல்வமும் –அத்புத ரஸம் பொலிந்து இருக்குமே
உண்ணிலாய ஐவரால் -பயாநக ரஸம்
ஊர் எல்லாம் துஞ்சி -வாயும் திரை யுகளும் -ஆடியாடி அகம் கரைந்து இத்யாதிகளில் கருணா ரஸம்
குரவை ஆய்ச்சியாரோடு -வீற்று இருந்து ஏழு உலகம் -வீர ரஸம்
இவ்வாறு ரஸவ்க பரிபூர்ணராய் ஆழ்வார்
த்ரை குண்ய விஷயா வேதம் போல் இல்லாமல்
மாற்றங்கள் ஆய்ந்து கொண்டு மது ஸூத பிரான் அடி மேல் -சார தர்மமான பொருள்களே பொதிந்த ரத்ன நிதி
அஸீம பூமா -ப்ருஹத்வம் —ப்ருஹத்வஞ்ச ஸ்வரூபேண குணைச் ச -ஆகாரத்தாலும் குணத்தாலும் த்விதம்
அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான் அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே -கிருபா குணம் ஒன்றின் பெருமையே போதுமே
கடல் ரத்னாகாரம்
ஸ்ரீ ஆழ்வார் வேதப் பொருள்கள் ஆகிற ரத்னங்களுக்கு பிறப்பிடம்–
கடல் ஸ்ரீ எம்பெருமான் உறைவிடம்
ஸ்ரீ ஆழ்வாரும் -ஒண் சங்கதை வாழ் ஆழியான் ஒருவன் அடியேனுள் உள்ளானே -என்கிறபடி
தம்முள் ஸ்ரீ எம்பெருமானைத் தாங்கி நிற்பவர் –
கடல் அளவு கடந்த பெருமை யுடையது -அது ஆகார வைபுல்யம்
ஸ்ரீ ஆழ்வார் சிறந்த குணங்களால் பெருமை வாய்ந்தவர்
ஆக இப்படிகளாலே கடல் என்னத் தகுந்த ஸ்ரீ ஆழ்வார் வாழ்க-
————————————————————————————————-
ருஷிம் ஜூஷாமஹே கிருஷ்ண த்ருஷ்ணா தத்வமிவ உதிதம்
சஹஸ்ர சாகாம் யோத்ராஷீத் த்ராமிடீம் ப்ரஹ்ம சம்ஹிதாம்–3-ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் -6-ஸ்லோகம்
ருஷிம் ஜூஷாமஹே கிருஷ்ண த்ருஷ்ணா தத்வமிவ உதிதம்
யாவவொரு முனிவர் – ஆயிரம் பாசுரங்களை யுடையதான திராவிட ப்ரஹ்ம சம்ஹிதையை
சாஷாத் கரித்தாரோ-மந்த்ர த்ரஷ்டா ரிஷி
ஸ்ரீ கிருஷ்ண பக்தியே வடிவு எடுத்து அவதரித்தது என்னலாம் படியான
அந்த ஸ்ரீ சடகோப முனிவரை சேவிக்கிறோம்-
தத் குண சாரத்வாத் தத் குண விபதேசாத் -த்யாஜ்ய தேக வ்யாமோஹம் காட்டி அருளினான்
முனி மனன சீலர் /ரிஷி மந்த்ர த்ரஷ்டா -ரகஸ்ய த்ரயம் கண்டு அறிந்து உபதேசம் /கவி கிராந்தி தர்சி -தூரப் பார்வை
சஹஸ்ர சாகாம் யோத்ராஷீத் த்ராமிடீம் ப்ரஹ்ம சம்ஹிதாம்
ஆயிரம் சாகைகள் உள்ள சாம வேதம் போலே ஆயிரம் பாசுரங்கள் கொண்ட ஸ்ரீ திருவாய்மொழி-
யோத்ராஷீத்-யகா அத்ராஷீத் -சாம வேதம் கண்டு அருளிச் செய்தார் அன்றோ
தஸ்ய உதித நாம- உத் கீதா விவரணம் -ஸ்ரீ திருவாய் மொழி -உயர்வற -பிறந்தார் உயர்ந்தே
வேங்கடத்துக்கு உறைவார்க்கு நம என்னலாம் கடமை அது சுமந்தார்கட்கே -திருமந்த்ரார்த்தம்
அகலகில்லேன் -த்வயார்த்தம்
அருள் கொண்டாடும் அடியவர் இன்புற –அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்-சரம ஸ்லோகார்த்தமே ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செயல்
வெண்ணெய் -ஸ்ரீ ஆழ்வார் -இரண்டு இடங்களிலும் -ஸ்ரீ கிருஷ்ணன் அபி நிவேசம்
குரவை ஆய்ச்சியர் -பதிகம் அனுபவம் -யாவர் எனக்கு நிகர் –
யுவ வர்ண க்ரமம்-அத்ரி–ஸ்ரீ தத்தார்யர் ப்ராஹ்மணர் / -ஸ்ரீ ஜமதக்கினி -ஸ்ரீ பரசுராமன் -ப்ராஹ்மண க்ஷத்ரியர் /
ஸ்ரீ ராமன் -ஷத்ரியன் / ஸ்ரீ கண்ணன் ஷத்ரியன் வைசியர் /கலி-நான்காவது யுகமும் நான்காவது வர்ணமும் வேளாளர் –
——————————————————————————————————
யத் கோ சஹஸ்ரம் அபஹந்தி தமாம்சி பும்ஸாம்
நாராயணோ வசதி யத்ர ச சங்க சக்ர
யன் மண்டலம் ஸ்ருதி கதம் பிரணமந்தி விப்ரா
தஸ்மை நமோ வகுள பூஷண பாஸ்கராய—4-
யத் கோ சஹஸ்ரம் அபஹந்தி தமாம்சி பும்ஸாம்
சூர்யனுடைய ஆயிரம் கிரணங்கள் வெளி இருளைப் போக்குவது போலே
யாவர் ஒரு ஸ்ரீ ஆழ்வார் உடைய ஆயிரம் பாசுரங்கள்
பும்ஸாம் -சேதனர்களுடைய -சகல சேதனர்களுடையவும்
அகவிருளைத் தொலைக்கின்றனவோ -கோ -ஒளிக் காற்றை / பாசுரம்
நாராயணோ வசதி யத்ர ச சங்க சக்ர —
சூர்யன் இடத்தில் நாராயணன் சங்கு சக்கரங்களோடு கூடி விளங்குவது போல்
அப்பெருமான் யாவறொரு ஸ்ரீ ஆழ்வார் இடத்தில்
அவ்விதமாகவே உறைகின்றானோ-
ஒண் சங்கதை — அடியேன் உள்ளான் அந்தாமத்து அன்பு செய்து -1-8-
திருவடி தொழும் உத்சவம் எங்கும் -திரு முடி சேவை திரு குருகூரில் மட்டும் விசேஷம் —
ஸ்ரீ பொலிந்து நின்ற பிரான் ஸ்ரீ ஆழ்வார் உச்சியில் –
ஒக்கலை நெஞ்சு தோள் கண் நெற்றி உச்சில் உளானே –1-9 -கிரமமாக
அத்யயன உத்சவத்தில் -திருவடி தொழும் உத்சவம் எங்கும் -ஆழ்வார் திரு நகரியில் மட்டும் திருமுடி சேர்ந்து சேவை உண்டே –
பொலிந்து நின்ற பிரான் -கைத்தல சேவை -ஆழ்வார் திருமுடிக்கு மேலே -திரு முடி சேவை –
ஆசு இல் அருளால் அனைத்து உலகும் காத்து அளிக்கும்
வாச மலராள் மணவாளன் -தேசு பொலி
விண்ணாட்டில் சால விரும்புமே வேறு ஒன்றை
எண்ணாதார் நெஞ்சத்து இருப்பு — ஸ்ரீ ஞான சாரம்-9-
அப்ராக்ருதமான தேச விசேஷத்தில் காட்டில் இவர்கள் ஹிருதயத்தில் இருப்பு தனக்கு அத்யந்த ரசாவஹமாய்
இருக்கையாலே இதிலே அத்யாதரத்தைப் பண்ணும் என்றதாயிற்று
யோ அநந்ய மனஸஸ் ஸூத்தா யேதா சயைக மநோ ரதா தேஷாம் மே
ஹ்ருதயம் விஷ்ணோர் வைகுண்டாத் பரமம் பதம் –என்று தானே அருளிச் செய்தான் இறே –
யன் மண்டலம் ஸ்ருதி கதம் பிரணமந்தி விப்ரா –
வேத ப்ரதிபாத்யமான சூர்ய மண்டலத்தை -விப்ரா-அந்தணர்கள் வணங்குவது போலே
யாவரொரு ஸ்ரீ ஆழ்வார் யுடைய திவ்ய ஸ்தலம்-மண்டலம்-திருக்குருகூர்- சேவிப்பட்ட யுடனே
பரம பாகவதர்கள் கை எடுத்துக் கும்பிடுகிறார்களோ –
தெற்கு திசை வீறு பெற்றதே ஆழ்வார் திருவவதாரத்தாலே
மண்டலம் -ஸ்ரீ நவ திருப்பதி பெருமாள் ஸ்ரீ ஆழ்வாரை சுற்றி –
ஜாமாதா-ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் தானே பத்தாவது க்ரஹம்
இவன் இட்ட வழக்கு தானே –
தஸ்மை நமோ வகுள பூஷண பாஸ்கராய –
அப்படிப்பட்ட
ஸ்ரீ நம் ஆழ்வார் ஆகிற சூர்யனுக்கு வணக்கமாகுக–
ஆதித்ய
ராம திவாகர
அச்யுத பானுக்களுக்குப்
போகாத
யுள்ளிருள் நீங்கி
சோஷியாத பிறவிக் கடல் வற்றி
விகசியாத போதில் கமலம்
அலர்ந்தது
வகுள பூஷண பாஸ்கர உதயத்தாலே –ஆச்சார்ய ஹ்ருதய ஸ்ரீஸூக்தி –
சூர்யன்
த்யேயஸ் சதா சவித்ரு மண்டல மத்திய வர்த்தி
நாராயணஸ் சரசி ஜாசத சந்நிவிஷ்ட
கேயூரவான் மகர குண்டலவான்
கிரீடி ஹாரி
ஹிரண்யமயவபூர்
த்ருத சங்க சக்ர –
திவ்ய ஆபரண திவ்யாயூத பூஷிதனான நாராயணனை தன் பால் கொண்டவன்
ஸ்ரீ ஆழ்வாரும் –
கண்கள் சிவந்து பெரியவாய் வாயும் சிவந்து கனிந்து உள்ளே
வெண் பல் இலகு சுடரிலகு விலகு மகர குண்டலத்தன்
கொண்டல் வண்ணன் சுடர் முடியன் நான்கு தோளன் குனி சார்ங்கன்
ஒண் சங்கதை வாள் ஆழியான் ஒருவன் அடியேனுள் உள்ளானே –
அப்படிப்பட்ட ஸ்ரீ எம்பெருமானைத் தம்மிடத்தே கொண்டவர்-
ஸ்ருதி கதம்-
முச்சந்தியும் சந்த்யா வந்தன பிரகரணத்தில் அந்தணர்கள் வணங்குகின்றார்கள்
சுருதி -காது
ஸ்ரீ திருவழுதி வள நாடு -ஸ்ரீ திருக் குருகூர்
சொல்லக் காதில் விழுந்தவாறே
பாகவதர்கள் அனைவரும் கை கூப்பி வணங்குவார்கள் இறே
ஆக
இவ்வகைகளால் பாஸ்கரன் என்னத் தக்க ஸ்ரீ ஆழ்வாரை வணங்குவோம் -என்றதாயிற்று-
——————————————————————————————–
பத்யுச் ஸ்ரிய பிரசாதேன ப்ராப்த சார்வஜ்ஞ்ய சம்பதம்
ப்ரபன்ன ஜன கூடஸ்தம் ப்ரபத்யே ஸ்ரீ பராங்குசம்—–5-
பத்யுச் ஸ்ரிய பிரசாதேன
ஸ்ரிய பத்யு பிரசாதேன –
திருமால் திருவருளால் –
மயர்வற மதிநலம் அருளினன் யவனவன் –
பெரும் கேழலார் -ஒருங்கே -எங்கும் பக்க நோக்கம் அறியாமல் அன்றோ ஆழ்வார் மேலே –
பெரும் கண் புண்டரீகம் பிறழ வைத்து அருளினார்
பண்டை நாள் -உன் திருவருளும் பங்கயத்தாள் திரு அருளும் பெற்றவர் அன்றோ
ப்ராப்த சார்வஜ்ஞ்ய சம்பதம் –
சர்வஜ்ஞத்வம் ஆகிற சம்பத்தைப் பெற்றவரும்-
அர்ச்சிராதி கதியையும் அன்றோ காட்டி அருளுகிறார்-ஞான பக்தி வைராக்யம் தானே சம்பத்து
ப்ரபன்ன ஜன கூடஸ்தம் –
பிரபன்ன ஜனங்களுக்கு தலைவருமான –
விப்ரர்க்கு கோத்ர சரண ஸூத்ர கூடஸ்தர்
பராசர பாராசர்யா போதாய நாதிகள்-
பிரபன்ன ஜன கூடஸ்தர்-மாதா பிதா இத்யாதி –
பராங்குச பரகால யதிவராதிகள் –ஆச்சார்ய ஹ்ருதய ஸ்ரீ ஸூக்தி
ப்ரபத்யே ஸ்ரீ பராங்குசம் –
ஸ்ரீ நம் ஆழ்வாரைத் தஞ்சமாகப் பற்றுகிறேன் –
————————————————————-
சடகோப முநிம் வந்தே சடாநாம் புத்தி தூஷகம்
அஜ்ஞாநாம் ஜ்ஞான ஜனகம் திந்த்ரிணீ மூல சம்ஸ்ரயம்–6-
சடகோப முநிம் வந்தே –
ஸ்ரீ நம் ஆழ்வாரை வணங்குகின்றேன்
சடாநாம் புத்தி தூஷகம் –
குடில புத்திகளுடைய துர்ப்புத்தியைத் தொலைப்பவரும் –
தீ மனத்தவர்களுடைய தீ மனத்தை கெடுத்து
அஜ்ஞாநாம் ஜ்ஞான ஜனகம் –
அறிவில்லாதவர்களுக்கு நல்லறிவை நல்குமவரும்
அறிவிலிகளுக்கு மருவித் தொழும் மனமே தந்து –
தீ மனம் கெடுத்து மருவித் தொழும் மனம் தந்து உய்யப் புகும் ஆறு உபதேசம்
கரை ஏற்றுமவனுக்கும் நாலு ஆரும் அறிவிப்பார்
திந்த்ரிணீ மூல சம்ஸ்ரயம் –
ஸ்ரீ திருப் புளி யாழ்வார் அடியிலே வீற்று இருப்பவருமான –
இங்குத்தை வாழ்வே தமக்கு நிரூபகமாகக் கொண்ட ஸ்ரீ நம் ஆழ்வாரை தொழுகிறேன் -என்கை-
————————————————————————————————————
வகுளா பரணம் வந்தே ஜகதா பரணம் முநிம்
யச் ஸ்ருதேருத்தரம் பாகம் சக்ரே திராவிட பாஷயா–7-
வகுளா பரணம் வந்தே ஜகதா பரணம் முநிம்
உலகுக்கு எல்லாம் அலங்கார பூதரான – ஸ்ரீ நம் ஆழ்வாரை –
யச் ஸ்ருதேருத்தரம் பாகம் சக்ரே திராவிட பாஷயா –
யாவரொரு ஆழ்வார் வேதத்தின் உத்தர காண்டம் ஆகிய உபநிஷத்தை
தமிழ் மொழியினால் வெளியிட்டு அருளினாரோ
அந்த ஸ்ரீ நம் ஆழ்வாரை வணங்குகின்றேன் –
எய்தற்கு அரிய மறைகளை ஆயிரம் இன் தமிழால் பெய்தற்கு அருளினார் –
ச ப்ரஹ்ம ச சிவா சேந்த்ர –பரம ஸ்வ ராட் –அவனே அவனும் அவனும் அவனும்
சதேவ சோம்ய ஏகமேய அத்விதீயம் – வேர் முதலாய் வித்தாய் -த்ரிவித காரணம் –
——————————————————————————————————–
வகுளா லங்க்ருதம் ஸ்ரீ மத் சடகோப பதத்வயம்
அஸ்மத் குல தனம் போக்யம் அஸ்து மே மூர்த்நி பூஷணம்-8
மகிழ மலர்களினால் அலங்கரிக்கப் பட்டதும்
எமது குலச் செல்வமும்
பரம போக்யமுமான
ஸ்ரீ ஆழ்வார் திருவடி இணையானது
எனது சென்னிக்கு
அலங்காரம் ஆயிடுக-
———————————————————————————-
நமத ஜநச்ய சித்த பித்தி பக்தி சித்ர தூலிகா
பவாஹி வீர்ய பஞ்ஜநே நரேந்திர மந்திர யந்த்ரணா
பிரபன்ன லோககைரவ பிரசன்ன சாரு சந்த்ரிகா
சடாரி ஹஸ்த முத்ரிகா ஹடாத் துநோது மே தம—–9-
நமத ஜநச்ய சித்த பித்தி பக்தி சித்ர தூலிகா-
தம்மை வணங்குமவர்களுடைய
ஹ்ருதயம் ஆகிற
சுவரிலே
பக்தியாகிற சித்திரத்தை எழுதும்
கருவியாகவும் –
காலை மாலை கமல மலர் இட்டு -இத்யாதி உபதேசித்து
பவாஹி வீர்ய பஞ்ஜநே நரேந்திர மந்திர யந்த்ரணா-
சம்சாரம் ஆகிற சர்ப்பத்தின் உடைய/-பாவ + அஹி-சம்சார பாம்பு –
வீர்யத்தைத் தணிக்கும் விஷயத்தில்
விஷ வைத்தியனுடைய-நரேந்திர -விஷ வைத்தியன்-மந்திர பிரயோகச் சிடிகை போன்றதையும்
நரகத்தை நகு நெஞ்சே -மாறன் சொல் நேராகவே விளையும் வீடு –
வழி நின்ற வல் வினை மாள்வித்து அழிவின்று ஆக்கம் தரும்
பிரபன்ன லோககைரவ பிரசன்ன சாரு சந்த்ரிகா –
பிரபன்ன ஜனங்கள் ஆகிற
ஆம்பல் மலர்களை விகசிப்பிக்க வல்ல-கைரவம் -ஆம்பல்
அழகிய நிலாப் போன்றதையும் இருக்கிற –
சடாரி ஹஸ்த முத்ரிகா ஹடாத் துநோது மே தம –
ஸ்ரீ நம் ஆழ்வாருடைய திருக் கைத் தல முத்ரையானது-உபதேச முத்திரை
என்னுடைய அகவிருளை எப்படியாவது தொலைத்து அருள வேணும் —
ஸ்ரீ ஆழ்வாருடைய ஸ்ரீ ஹஸ்த முத்ரையை வர்ணிக்கும் ஸ்லோகம்
சம்சார போகி சந்தஷ்ட ஜீவா ஜீவாது
பக்த ஜனங்களின் பக்தியை ஊட்ட வல்லதாயும்
சம்சார ஸ்ப்ருஹதையை அறுக்க வல்லதாயும்
பிரபன்னர்களைப் பரமானந்த பரவசராக்க வல்லதாயும்–இரா நின்ற ஸ்ரீ ஆழ்வார் உடைய
ஸ்ரீ ஹஸ்த முத்தரை யானது
நம்முடைய அகவிருளை அகற்ற வேணும் -என்றார் ஆயிற்று –
—————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆச்சார்யபௌத்ரர் –ஸ்ரீ ஜீயர் நாயனார் -திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பூர்வாச்சார்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பராசர பட்டர் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ கூரத் ஆழ்வான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply