மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -78-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

நெஞ்சே
விரோதி நிரசன ஸ்வபாவனானவன்
நமக்கு ரஷகனாம் –
ஆன பின்பு அவனையே புகலாக அனுசந்திக்கப் பார்
என்கிறார் –

அவன் சர்வ ரஷகன் ஆகிலும்
நம்முடைய ஜ்ஞான வ்ருத்த ஜன்மங்களில்
கொத்தை பார்க்க வேண்டாவோ -என்ன
வேண்டா -என்கிறார் –

——————————————————————————————

அரணாம் நமக்கு என்றும் ஆழி வலவன்
முரணாள் வலம் சுழிந்த மொய்ம்பன் -சரணாமேல்
ஏது கதி ஏது நிலை ஏது பிறப்பு என்னாதே
ஒது கதி மாயனையே ஓர்த்து———-78-

பதவுரை

ஆழி–திருவாழி யாழ்வானை
வலவன்–வலத் திருக் கையிலுடையவனும்
முரன்–முராஸுரனுடைய
நாள்–ஆயுளையும்
வலம்–வலிமையையும்
சுழித்த–போக்கின
மொய்ம்பன்–மிடுக்கை யுடையவனுமான பெருமான்
சரண் ஆம் ஏல்–ரக்ஷகனாக அமையும் பக்ஷத்தில்
கதி ஏது நிலை எது பிறப்பு எது என்னாதே–(நம்முடைய) ஞானமென்ன!, ஆசார மென்ன! ஜன்ம மென்ன! என்று
(இவற்றின் தாழ்வுகளைப் பார்த்து உபேக்ஷியாமல்
நமக்கு என்றும் அரண் ஆம்–நமக்கு எல்லாக் காலத்திலும் ரக்ஷகனாகவே யிருப்பன், (ஓநெஞ்சமே)
ஓர்த்து–இதை நன்றாக அறிந்து கொண்டு
மாயனையே–ஆச்சரியமான குண சேஷ்டிதங்களை யுடையனான அப்பெருமானையே
கதி–உபாயமாக
ஓது–அநுஸந்தித்துக் கொண்டிரு.

———————————————————————————————

வியாக்யானம் –

அரணாம் நமக்கு என்றும் ஆழி வலவன் –
திரு வாழியை வலவருகே தரித்து உள்ளவன் –
ரஷக அபேஷை உடையரான நாம் -ஆபன்னரான வன்று
சேவை காலத்திலும்
நம் ஆபத்தைப் போக்கும் ரஷகனாம் –
சர்வ சக்தியானவன் நமக்கு ரஷகனாம்

வலவருகே திரு வாழியைப் பிடிக்குமவன் போலே காணும் ரஷகன் ஆனவன் –
தன்னை புரஸ்கரித்து   இறே-சுட்டிக் காட்டி – இறே
மாஸூச -என்றது
இவனுடைய அஹம் புத்தி சோக நிமித்தம்
அவனுடைய அஹம் புத்தி சோக நிவர்த்தகம் –

முரணாள் வலம் சுழிந்த மொய்ம்பன் –
விரோதியைப் போக்க வல்லவன் -என்னும் இடத்தை
உபபாதிக்கிறது –
முராசூரனுடைய ஆயுஸ்சால் வந்த பலத்தை
போக்கின மிடுக்கை யுடையவன் –

சரணாமேல்-
அவன் ரஷகன் ஆம் இடத்தில் –

ஆழி வலவன் –
எப்போதும் கை கழலா நேமியான் -பெரிய திருவந்தாதி -87-

ஏது கதி ஏது நிலை ஏது பிறப்பு என்னாதே -அரணாம் –
எது ஞானம்
எது வ்ருத்தம்
எது ஜன்மம்
என்று இவை ஒன்றும் பாராதே ரஷகனாம் –
நிலை வரம்பில பல பிறப்பாய் ஒளி வரும் முழு நலம் -திருவாய்மொழி -1-3-3-என்னக் கடவது இறே –

அன்றிக்கே
அவன் விரோதி போக்குவானான பின்பு
இனி நீ உன்னுடைய
ஜன்ம வ்ருத்த ஜ்ஞான ஸ்வ பாவங்கள் ஒன்றும் பாராதே
அவனை அனுசந்திக்கப் பார் –
இவை ஒன்றும் பாராதே ஆஸ்ரயநீயனாம்
சமோஹம் வரவா பூதேஷு -கீதை -9-29-
யேபி ஸ்யு பாபயோ நய  –
எத்தனை நலந்தான் இலாத சண்டாள சண்டாளர்கள் ஆகிலும் -திருவாய்மொழி -3-7-9-

ஒது கதி மாயனையே ஓர்த்து –
சரண்யனாய்
ஆச்சர்யமான குண  சேஷ்டிதங்களை
யுடையனாய் யுள்ளவனை
யாராய்ந்து புகலாக ஒது –
கதியாக அவன் திருவடிகளை அனுசந்தித்துச் சொல்லு –

ஒது கதி மாதவனை ஒத்து –
என்ற பாடமாகில்
ஸ்ரீ யபதியையே உபாயமாக புத்தி பண்ணி
அவன் திரு நாமங்களை ஏத்து -என்று
பொருளாகக் கடவது –

——————————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading