ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம்- ஸ்லோகம் -6-7-8-9—-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –

ஸ்லோகம் -6- அவதாரிகை –

அறியாதன அறிவித்த அத்தா நீ செய்தன -திருவாய் மொழி -2-3-2- என்று
உபகாரத்தில் ப்ரதமனாய் இருக்கும் இறே-
வைகுந்தனாகப் புகழ் -திருவாய்மொழி -7-9-7-என்கிறபடியே
தன்னுடைய ஸ்துதி ஈஸ்வரனுக்கு அபிமதம் ஆகையாலும்
இது தான் ஆச்சார்யர்களுக்கு ப்ரியம் ஆகையாலும்
ஸ்தோத்ரத்தில் மேல் சொல்லப் புகுகிற உபாய உபேயங்களை
சங்க்ரஹித்துக் கொண்டு
உபக்ரமித்த படியே பகவத் ஸ்தோத்ரத்திலே இழிகிறார் –

யன் மூர்த்நி மே ஸ்ருதி ஸிரஸ்ஸூ ச பாதி
யஸ்மின் அஸ்மன் மநோ ரத பதஸ் சகலஸ் சமேதி
ஸ் தோஷ்யாமி ந குல தனம் குல தைவதம் தத்
பாதார விந்த மரவிந்த விலோச நஸய–6-

மே மூர்த்நி -இத்யாதி
தம்முடைய நிஹிநதா அதிசயத்தையும்
சௌந்தர் யாதிகளிலே தோற்று அத்தாலே வந்த சேஷத்வத்தையும் –
அந்த காரத்தில் தீபம் போலே
தம்முடைய திரு முடியில் வந்த பின்பு
திருவடிகள் மிகவும் விளங்கின படியையும் சொல்லுகிறது –

இத்தால் –
அவனுடைய உபாய பாவத்துக்கு ஏகாந்தமான சௌலப்யாதிகளையும்
இத் தலையில் விஷயீ காரம் தன் பேறாக நினைத்து இருக்கும் என்றும் சொல்லுகிறது –

தலைக்கு அணியாய் -திருவாய் மொழி -9-2-2-என்று
சேஷ பூதர் பிரார்த்திக்கும் அத்தைப் பெற்றேன் -என்கிறார் –

சேஷி யாகையாலே
சர்வ விஷயங்களிலும் அவன் இருக்கும் படி இது –
க்ருதஜ்ஞர் ஆகையாலே பேசுகிறார்

ஸ்ருதி ஸிரஸ்ஸூ ச பாதி –
ஸ்ருதி ஸிரஸ்ஸூக்களிலும் விளங்கா நின்றது

இத்தால்
ப்ராப்யத்வமும்
சர்வாதிகத்வமும்
சர்வ மங்களாகாரத்வமும்
அதி துர்லபத்வமும் சொல்லுகிறது –

சகாரத்தாலே-
வேதாந்தங்களிலும் –
தம் தலையிலும் ஒக்கத் திருவடிகளைத்
தரமிடாதே வைத்த படியாலே
தம் பக்கல் அவனுக்கு உண்டான ஆதராதிசயம் சொல்லுகிறார் –

ச சப்தம்
அவதாரணத்திலே யாய்
தம்முடைய தலையிலே அந்வயித்த சௌலப்யம் திருவடிகளுக்கு ஸ்வரூபம் என்றதாகவுமாம் –
திருப் பாற்கடலே என் தலையே -திருவாய்மொழி -10-7-8- என்னுமா போலே –

யஸ்மின் அஸ்மன் மநோ ரத பதஸ் சகலஸ் சமேதி-
பிதா த்வம் மாதா த்வம் -இத்யாதிகளான என்னுடைய
ஐஹிகாமுஷ்மிக சகல மநோ ரதங்களும் அழகியதாக யாது ஒன்றிலே சேருகிறது –

ஸ்தோஷ்யாமி –
இப்படி பிராப்யமுமாய் விலஷணமுமாய் உபகாரகமுமான
திருவடிகளிலே வாசிகமான அடிமை செய்கிறேன் –

ந குலதனம் –
தனம் ஆவது -ஆபத் ரஷகமுமாய் நித்ய போக்யமுமாய் இருக்குமது

குல தனம் என்கையாலே
அயத்ன சித்தமுமாய்
ஸ்வத பிராப்தமுமாய் இருக்கை –

குல தைவதம்-
இத் தனத்தை தருமதாய்
ஆஸ்ரயணீ யமாய் இருக்குமது –

இத்தால் ஸ்தோத்ர ப்ரதிபாத்யமான
ப்ராப்ய
ப்ராபகங்களைச் சொல்லுகிறது –

தத் பாதார விந்தம் –
உக்த ஸ்வபாவமான திருவடித் தாமரைகளை –

மரவிந்த விலோச நஸய
ஜிதந்தே புண்டரீ காஷ-என்று ருசி ஜனகமுமாய்
தன் கால் பணிந்த என்பால் எம்பிரான் தடம் கண்கள் -திரு விருத்தம் -42- என்று வாத்சலமுமாய்
தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலை மகனை -திரு வாய் மொழி -2-6-3- என்று
ஸூரி போக்யமான திருக் கண்களை உடையவன் உடைய –

இத்தால்
இவருடைய உத்யோகத்தைக் கண்ட ப்ரீதி திருக் கண்களிலே தோற்றுகிறது-என்னுதல்

யன் மூர்த்நிமே ஸ்ருதி ஸிரஸ்ஸூ ச பாதி யஸ்மின்
அஸ்மன் மநோ ரத பதஸ் சகலஸ் சமேதி ந
குலதனம் குல தைவதம் அரவிந்த விலோசநஸய
தத் பாதார விந்தம் ஸ்தோஷ்யாமி -என்று
அந்வயம்

(குல தனம்–உபாயத்வமும் —
குல தைவதம் -உபேயத்வம் —
அடிச்சியாம் தலை மீசை நீ அணியாய் ஆழி யம் கண்ணா உன் கோலப் பாதம் –)

——————————————————————–

ஸ்லோகம் -7- அவதாரிகை –

விதி ஸிவ ஸநகாதிகள் கரை பற்றிலே நின்று
அழுந்துகிற விஷயத்தைப் பரிச்சேதித்துப் புகழ இழிந்தேன் -என்று
தம்மை ஷேபித்து யுத்தத்திலே உத்யுக்தனான அர்ஜுனன்
விஸ்ருஜ்ய ஸஸ்ரம் சாபம் -என்று நிவ்ருத்தனானால் போலே
ஸ்தோத்ரத்தில் நின்றும் நிவ்ருத்தர் ஆகிறார் –

தத்த்வேன யஸ்ய மஹிமார்ணவ ஸீ கரானு
சக்யோ ந மாதுமாபி சர்வபிதா மஹாத்யை
கர்த்தும் ததீய மஹி மஸ்துதி முத்யதாய
மஹ்யம் நமோ அஸ்து கவயே நிரபத்ரபாய–7-

தத்த் வேன –
ஈஸ்வரன் உடைய ஸ்வரூப ரூபாதிகள் இருந்தபடியே –

யஸ்ய –
யதா ரத் நானி ஜலதே -இத்யாதி களாலே
அநந்த குணகனாக பிரசித்தனான வனுடைய

மஹிமார்ணவ ஸீ கரானு-
குணார்ணவத்தின் உடைய ஸீகராணு வானது –
திவலையில் ஸ்பர்ச வேத்யமானது -அத்யல்பமானது –

சக்யோ ந மாதும் –
மாதும் ந சக்ய –
மனஸ்ஸால் பரிச்சேதிக்கவும் சகயம் அன்று –
ஆராலே -என்னும் அபேஷையிலே சொல்லுகிறது –

அபி சர்வபிதா மஹாத்யை –
சர்வ பிதா மஹாத்யை ரபி –
ஈச்வராத் ஜ்ஞானமன்விச்சேத் -என்று ஜ்ஞானாதிகனாகவும்-
சர்வ சம்ஹர்த்தா என்று சொல்லுகிற ருத்ரனாலும் –
அவனை ஒதுவித்தவனுமாய்
ஜகத் ஸ்ரஷ்டாவான ப்ரஹ்மாவாலும்
ஆதி -சப்தத்தாலே ப்ரஹ்ம பாவனையேயான சநகாதிகளையும்
சர்வருக்கும் ஹிதானுசானம் பண்ணுகிற வேதத்தையும் நினைக்கிறது –
மேலே சதா ஸ்துவந்த வேதா -என்றும்
விதி சிவா சன காத்யை -என்றும் -சொல்லுகிற படியாலே

கர்த்தும் ததீய மஹி மஸ்துதி முத்யதாய
ததீய மஹிம ஸ்துதிம் கர்த்தும் உத்யதாய –
அவனுடைய பெருமையை உள்ளளவும் சொல்லி விடுகை அன்றிக்கே
இல்லாததையும் சொல்ல உத்யுக்தனாகை –

மஹ்யம் நமோ அஸ்து –
இப்படி சாஹசிகனாகையாலே
ஸ்துத்ய விஷயத்தை விட்டு
எனக்கு நமஸ்காரம் –

கவயே –
சர்வ வர்ணன் முகராய்

நிரபத்ரபாய –
நிர் லஜ்ஜனாய் இருக்கிறவனுக்கு –
நாம் புகழ்கை இவனுக்கு நிறக் கேடாம் -என்று லஜ்ஜியாது ஒழிகை –

யஸ்ய மஹிமார்ணவ சீகராணு
சர்வ பிதா மஹாத்யை ரபி
தத்த் வேன மாதும் ந சக்ய
ததீய மகிமா ஸ்துதிம் கர்த்தும் உத்யதாய
நிர்பத்ரபாய கவயே மஹ்யம் நமோ அஸ்து -என்று
அந்வயம் – ( மஹ்யம் நமோ அஸ்து –ஸாஹஸ கார்யம் செய்வபர்களுக்கு நமஸ்காரம் என்பர்களே )

—————————————————————-

ஸ்லோகம் -8-அவதாரிகை –

இஷூ ஷயான் நிவரத்தந்தே –
காணும் அளவும் செல்லும் கீர்த்தியாய் -திருவாய்மொழி -5-8-2- என்று
அளவுடையாரும் தாம்தாம் ஜ்ஞான சக்த்யாதிகள் அளவும்
புகழ்ந்தார்கள் அத்தனை –
உமக்கும் அவ்வளவு புகழ்கைக்கு விரோதம் இல்லை –
ஸா ஜிஹ்வா யா ஹரிம் ஸ்தௌதி –வாய் ஸ்துதிக்க வன்றோ கண்டது –
ஸ்தவ்யஸ் ஸ்தவ ப்ரிய-என்கிறபடியே -ஸ்தோத்ரம் நமக்கு பிரியம் அன்றோ -என்று
யுத்தான் நிவ்ருத்தனான அர்ஜுனனை கரிஷ்யே வசனம் தவ -என்னப்
பண்ணினால் போலே ஈஸ்வரன் தானே மூட்ட சமாஹிதர் ஆகிறார்-

யத்வா ஸ்ரமாவதி யதாமதி வாப்ய சக்த
ஸ்தௌம் யேவமேவ கலு தேஅபி சதா ஸ்துவந்த
வேதாஸ் சதுர்முகாஸ் ச மஹார்ணவாந்த
கோ மஜ்ஜதோரணுகுலா சலயோர் விசேஷ –8-

யத்வா-
பூர்வ பஷ நிவ்ருத்தி –
முன்பு அல்லோம் என்ற இடம் அர்த்தம் அன்று -என்கிறார்

ஸ்ரமாவதி யதாமதி வா –
இளைப்பு எல்லையாக வாதல்
ஜ்ஞானம் எல்லையாக வாதல் –
ஜ்ஞான சக்த்யாதிகள் அளவே ஸ்தோத்ரம் பண்ணலாவது -என்கை –

அசக்தஸ் தோபிஸ் தௌமி –
சர்வ பிரகாரத்தாலும் அசக்தனே யாகிலும் ஸ்துதிக்கிறேன்-

யேவமேவ கலு தேஅபி சதா ஸ்துவந்த வேதாஸ் சதுர்முகாஸ் ச
சதா ஸ்துவந்த வேதாஸ் சதுர்முகாஸ் ச யேவமேவ கலு தேஅபி-
த்யாஜ்ய உபாதேயங்களை பிரிக்கைக்கும்
த்யாஜ்யத்தை விட்டு -உபாதேயத்திலே அவகாஹிக்கைக்கும்
அடியான ஜ்ஞான சக்த்யாதிகளால் அதிகரானவர்களும்

சதா ஸ்துவந்த வேதாஸ்-
சர்வ கால சம்யோகத்தை உடைத்தான வேதங்களும்

சதுர்முகாஸ் ச-
த்விபரார்த்த காலாவதிகரான ப்ரஹ்ம ருத்ரர்களும்
அதிகாராவ ஸானத்தளவும் ஸ்துதிக்கிற ஸ்நகாதிகளும் –

யெவமெவ கலு –
ஜ்ஞான சக்த்யாதிகள் அளவே இறே
யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா சஹ –
யன்நாயம் பகவான் ப்ரஹ்மா ஜாநாதி புருஷோத்தமம் –
மா மலரான் வார் சடையான் வல்லரே அல்லரே வாழ்த்து -நான் முகன் திருவந்தாதி -10-
பேசுவார் எவ்வளவு பேசுவார் அவ்வளவே -மூன்றாம் திருவந்தாதி -21
வல்லதோர் வண்ணம் -திருவாய் மொழி -7-8-10-
ந க்ராஹ்ய கே நசித் க்வசித் –
இங்கனே யாகிலும் உமக்கும் அவர்க்கும் நெடு வாசி உண்டே என்னில்
வேதங்களுக்கும் சதுர்முகா திகளுக்கும் வாசி உண்டாய் இருக்கச் செய்தே
அவனை உள்ளபடி பேச மாட்டாமை ஒத்தால் போலே எனக்கும்
அவர்களுக்கும் வாசி உண்டானாலும் உள்ளபடி பேச மாட்டாமையாலே வாசி இல்லை
எது போலே என்னில்

மஹார்ணவாந்த கோ மஜ்ஜதோரணுகுலா சலயோ விசேஷ –
மஹார்ணவாந்தர் மஜ்ஜதோரணுகுலா சலயோ கோவிசேஷ-
சர்ஷப மஹீ தரங்களுக்கு நெடு வாசி -சர்ஷபம் -கடுகு மஹீ தரம் -மலை
இப்படி வைஷம்யம் உண்டானாலும்
பெரும் கடலிலே புக்கு அமிழ்ந்தும் அளவில்
விசேஷம் இல்லை இறே
அது போலே இறே
(வேதம் உரைத்து இமையோர் வணங்கும் செந்தமிழ் பாடுவார் தாம் வணங்கும் தேவர் –
இப்படி தேவர் வைதிகர் வேதங்கள் அல்லும் பகலும்
ஸ்துதிக்குக் கொண்டே இருந்தாலும் தலைக் கட்ட ஒண்ணாதே மீளும் படி –அவரவர் தாம் தாம் அறிந்தவாறு ஏத்தி –
தங்கள் அன்பாரத் தமது சொல் வலத்தால் தலைத் தலைச் சிறந்து பூசிப்ப –
ச்ரமாவதி-களைத்து போகிறவரையில் தண்ணீர் இறைக்கிறேன் போலே ஸ்துதிக்க இழிகிறார்)

———————————————————————————–

ஸ்லோகம் -9 – அவதாரிகை –

ப்ரஹ்மாதிகளில் காட்டில் எனக்கு ஸ்தோத்ரத்தில்
இழிகைக்கு அதிக ஹேது உண்டு என்கிறார் –
பரக்கப் புகழ்கை ஈஸ்வரன் அனுக்ரஹ ஹேது அன்றிக்கே
ஸ்துதி க்ருதமான பரிஸ்ரமம் அனுக்ரஹ ஹேதுவாம் படி
சீலவான் ஆகையாலே மந்த புத்தியான எனக்கு
அந்த ஸ்ரமம் ஸூலபம் ஆகையாலே அவர்களில் காட்டில்
நான் ஸ்தோத்ர அதிகாரி -என்கிறார்

கிஞ்சசைஷ சக்த்யதிச யேன ந தே அனுகம்ப்ய
ஸ்தோதாபி து ஸ்துதி க்ருதேன பரிஸ் ரமேண
தத்ர ஸ்ரமச்து ஸூலபோ மம மந்த புத்தே
இதயத் யமோ அயமுசிதோ மம சாப்ஜ நேத்ர–9-

கிஞ்ச -மேலும் –
கீழ் சொன்ன சாம்யம் ஒழிய
ஸ்தோத்ரத்தில் அவர்களில் காட்டில் எனக்கு அதிகாரம் உண்டு என்கைக்கு
ஒரு ஹேது உண்டு -என்கிறார்

ஏஷ -ஸ்தோதா-துதிக்கும் அடியேன் –
பகவத் ஆபி முக்யத்தாலே சம்சாரிகளில் காட்டில் வ்யாவ்ருத்தனாய்
வாய் படைத்த ப்ரயோஜனம் இது -என்று பகவத் ஸ்தோத்ரத்திலே அதிகரித்தவன் –

சக்த்யதிச யேன ந தே அனுகம்ப்ய –
நம்மை ஸ்தோத்ரம் பண்ண சக்தன் என்று உனக்கு அனுக்ராஹ்யனாகிறேன் அல்லேன் –

தே -உனக்கு
யதோ வாசோ நிவர்த்தந்தே -என்றும்
தத் விப்ராசோ விபந்யவ-என்றும்
வேதங்களும் நித்ய ஸூரிகளும் புகழ்ந்து எல்லை காண மாட்டாத மகிமையை உடைய
உனக்குப் பரக்க ஸ்தோத்ரம் பண்ணுகை தேட்டம் அன்றே -என்னுதல்
சம்சாரிகள் ஆபி முக்கியம் பண்ணுகை தேட்டமான சீலவான் ஆகையாலே
இவன் பண்ணும் ஸ்தோத்ரம் மிகையான உனக்கு -என்னுதல் –

அபி து-ஆனால் –
மற்றப்படி -என்னுதல்
பின்னை எங்கனே -என்று ஸாநு நய பிரஸ்னம் ஆதல் –
ஸ்துதி க்ருதேன பரிஸ் ரமேண-துதிப்பதினால் ஏற்படும் களைப்பினாலேயே
உன்னை ஸ்துதிக்கையிலே அத்ய ஆதாரத்தைப் பண்ணி
அதுக்கு ஈடான சக்தி இல்லாமையாலே
புகழவும் மாட்டாதே படும் இளைப்பாலே இறே நீ இரங்குவது

தத்ர-இப்படி இருக்கும் இடத்தில்
அர்த்தம் இப்படியாய் நின்ற இடத்தில்

ஸ்ரமச்து ஸூலபோ மம –
எனக்கு விசேஷித்த ஸ்ரமமானது குறைவற உண்டு -என்றுமாம்

து -அவதாரணமாய்
எனக்கே குறைவற்ற ஸ்ரமம் உள்ளது -என்றுமாம்

மந்த புத்தே -என்று ஸ்ரம ஹேதுவை சொல்லுகிறது –
அல்ப புத்தி -என்கை –

இதி –
ஆகையால் என்று ஹேதுவை சொல்லுதல்
இப்படி என்னுதல்

யத்யமோ அய
அயம் உதயம்
இந்த முயற்சி
ஸ்தோஷ்யாமி -என்று கொண்டு உண்டான இந்த உத்யமம்

முசிதோ மம –
உசிதோ மம ச –
ச சப்தம் அவதாரணமாய் -எனக்கே உசிதம் என்னுதல்
சமுச்சயமாய் எனக்கும் உசிதம் -என்று கீழ் ஸ்லோகத்தோடு கூட்டுதல் –

அப்ஜ நேத்ர –
செங்கண் மாலே –
அவலோக நதா நேன பூயோ மாம் –
உன் தாமரைக் கண்களால் நோக்காய் –திருவாய் மொழி -9-2-1-என்றும் சொல்லுகிறபடியே
அவிக்நேன ஸ்தோத் ரத்தை தலைக் கட்டும்படி அழகிய திருக் கண்களால்
நோக்கி அருள வேணும் -என்னுதல்

ஸ்தோத்ரத்தில் நிலை நின்ற படியைக் கண்டு
செந்தாமரைக் கண்ணோடு மறப்பற என்னுள்ளே மன்னினான் –திருவாய் மொழி -1-10-10-என்கிறபடியே
ப்ரீதியாலே திருக் கண்கள் குளிர்ந்த படியைச் சொல்லுதல் –

(மம ச -அவதாரணம் -எனக்கே -என்றபடி –கீழ் ஸ்தோத்ரம் உடன் சேர்த்து எனக்கும் -என்றுமாம்
இருக்கு வாய் முனிக் கணங்கள் ஏத்த ஈனும் ஏத்தினேன் -என்றால் போலே )

——————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading