ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம்- ஸ்லோகம் -10-11-12-13-14—-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –

ஸ்தோத்ரம் -10-அவதாரிகை –

இப்படி ஸ்தோத்ர ஆஷேப சமாதானத்தைப் பண்ணி
ஈஸ்வரன் உடைய சரண்யதைக்கு உறுப்பான பகவத் பரத்வத்தை
மேல் அஞ்சு ஸ்லோகத்தாலே அருளிச் செய்கிறார் –

இதில் முதல் ஸ்லோகத்தாலே –
சத் ப்ரஹ்மாதி சாமான்ய வாசி சப்தங்களாலே
ஜகத் காரணதயா பிரதிபாதிக்கப் படுகிறான் நாராயணன் என்று
கதி சாமான்ய ந்யாயத்தாலே காரண வாக்ய விஷயமான பரத்வத்தை அருளிச் செய்கிறார் –

ஸ்தோத்ரம் பண்ண உபக்ரமித்தவாறே வாத்சல்ய ஜன்யமான
விசேஷ கடாஷத்தைப் பண்ணினான் என்கிற இது
பிரளய காலத்திலேயே அசித் கல்பரான சேதனரை தயமானவாய்க் கொண்டு
விசேஷ கடாஷத்தைப் பண்ணி உண்டாகி
அந்த ஜந்துக்கள் உடைய ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி ஹேதுவாய்
உபகாரகனான உனக்கு ஸ்ருஷ்டமான ஜந்துக்கள் ஆபிமுக்யம் பண்ண
முகம் கொடுத்தாய் என்கிற இது ஆச்சர்யமோ -என்கிறார் -என்றுமாம் –

நா வேஷசே யதி ததோ புவ நான்ய மூநி
நாலாம் ப்ரபோ பவிது மேவ குத ப்ரவ்ருத்தி
ஏவம் நி சரக்க ஸூ ஹ்ருதி த்வயி சர்வ ஜந்தோ
ஸ்வாமின் ந சித்ர மித மாஸ்ரித வத்ஸ்லத்வம்–10-

நா வேஷசே யதி –
ந அவேஷசே யதி –
நீ கடாஷித்து இரா விடில் –
ததை ஷத பஹூஸ்யாம் பிரஜாயேயேதி -என்று
அசத் கல்பரான சேதனரைக் கடாஷித்து இலையாகில்
அநாதி காலம் பண்ணிப் போந்த அபராதங்களை பாராதே
அவற்றின் உடைய துர்க்கதியைப் பார்த்து
க்ருபா பர தந்த்ரனாய் இறே அப்போதே கடாஷித்தது
அல்லது உன்னைக் கடாஷித்திலையே -என்பார் இல்லையே –

தத-
பிரளயத்துக்கு பின் –
பஹூஸ்யாம் -என்கிற சங்கல்பத்துக்கு பின்பு
புவன சிருஷ்டிக்கு முன்பு உண்டான தூரத்தை சொல்லுகிறது –
புவ நான்ய மூநி நாலாம் -பவிது மேவ
அமூநி புவநானி பவிதுமேவ நாலாம் –
இவ் உலகங்ககள் உண்டாகவே மாட்டாது –
போக மோஷங்களை சாதித்துக் கொள்ளுகைக்கு ஏகாந்தமான
சதுர்தச புவனங்கள் ஆனவை உண்டாகவே மாட்டாது –
வயதிரேக நிர்த்தேசம் அர்த்த ஸ்தைர்யத்துக்காக –
கோ ஹ்யேவான் யாத் க ப்ராண்யாத்
ந ததஸ்தி விநாயத் ஸ்யான்மயா பூதம் சராசரம்-என்னக் கடவது இறே

குத ப்ரவ்ருத்தி –
எக்கார்யம் செய்ய மாட்டாது என்பது சொல்லவும் வேண்டுமோ
உன் சங்கல்பம் ஒழிய உண்டாக மாட்டாத இவை ப்ரவர்த்திப்பது எத்தாலே
சகல உத்பத்தியும் பிரவ்ருத்தி நிவ்ருத்தியும்
உன்னுடைய கடாஷ பலம் அன்றோ –

ப்ரபோ –
ஜகத் காரண்த்வ பிரயுக்தமான ஐஸ்வர்யத்தை பிரகாசிப்பிக்கிறது

ஏவம் நி சரக்க ஸூ ஹ்ருதி த்வயி சர்வ ஜந்தோ – சர்வ ஜந்தோ ரேவம் நி சரக்க ஸூ ஹ்ருதி-
நித்ய விபூதி உண்டாய் இருக்க இவற்றை இழக்கையாலே
ஸ ஏகாகீ ந ரமேத -என்னும்படி தனிமைப் பாடாய்
ப்ரஹ்ம ருத்ராதி ஸ்தாவராந்தமான ஜந்து ஜாதத்துக்கு கரண களேபரங்களை கொடுத்து
குறை தீர்ந்தே என்னும்படி
அகாரண ஸூஹ்ருத்தான உன் பக்கல்

ஸ்வாமின் –
இவற்றை உண்டாக்குகிற இது உன் பேறாக வேண்டிற்று
இவற்றோடு உண்டான குடல் துவக்கு இறே
ஸ்வ முத்திச்ய –உபாதத்தே -என்று இறே அபிஉக்தர் -ஸ்ரீ பட்டர் -வார்த்தை
ஸ்வ வ்யதிரிக்த சகல சேதன அசேதனங்களும் உனக்கு அனன்யார்ஹ சேஷமான ச்வாமித்வத்தை உடையவனே –

ந சித்ர மித மாஸ்ரித வத்ஸ்லத்வம் – இத ஆஸ்ரித வத்சலத்வம் ந சித்ரம் –
சகல வாங் மனஸ் அகோசரமான -த்வத் விஷய ஸ்தோத்ரத்துக்கு
யோக்யனாம் படி என் பக்கல் உண்டான வத்சலத்வம் உனக்கு ஆச்சர்யமோ

கிமத்ர சித்ரம் -இத்யாதி
ஜகத் காரணத் வத்தாலே -சர்வ உத்க்ருஷ்டன் என்றும்
காரணம் து த்யேய-என்கையாலே சர்வ சமாஸ்ரயணீயன் என்றும்
ஏஷ ஹ்யேவா நந்தயாதி -என்கையாலே ப்ராப்யன் என்றும்
ஸ்ருஷ்ட்யாதிகளை தன் பேறாகப் பண்ணுகையாலே சர்வ ஸ்வாமி என்றும்
தாம் ஸ்தோத்ரத்தில் மூளும் படி முகம் காட்டுகையாலே ஆஸ்ரித வத்சலத்வமும் – சொல்லிற்று ஆயிற்று –
(கீழே அப்ஜ நேத்ரே -என்ற சம்போதம் திரு விழி செவிப் பட்டவாறே தாமரைக் கண்களால் கடாக்ஷித்து அருள –
தத் ஐஷத–பஹுஸ் யாம் பிரஜாயேயேதி -ஸ்ருதி படியே இவரும்
அவேஷஸே-ஈஷணம்-ஸ்வாபாகிக ஸூஹ்ருத கடாக்ஷம் -என்றவாறு
வாத்சல்யம் பிரபாவம் அத்புதம் அன்று இயற்க்கை என்றவாறு )

—————————————————————————————

ஸ்லோகம் -11-அவதாரிகை

இத்தால் பரத்வ லஷணம் சொல்லுகிறது
கீழ் கதி சாமான்ய ந்யாயத்தாலே நாராயணனே சர்வ ஸ்மாத் பரன் -என்றது
இதில் விசேஷ வாசியான சிவா சம்ப்வாதி வாக்யங்களாலும்
பிரதி பாதிக்கப் படுகிறான் நாராயணனே -என்று
சர்வ வேதாந்த வ்யாக்யானமாய்
அநந்ய பரனான நாராயண அநுவாக
சித்தமான பகவத் பரத்வத்தை -அருளிச் செய்கிறார் –

ஸ்வா பாவிக அநவதிக அதிசய ஈசித்ருத்வம்
நாராயண த்வயி ந ம்ருஷ்யதி வைதிக க
ப்ரஹ்மா சிவச் சதமக பரம ஸ்வ ராடித்
யேதே அபி யஸ்ய மஹிமார்ணவ விப்ருஷஸதே–11-

ஸ்வாபாவிக –
இத்தால் கர்ம உபாதிகமாய் -அத்தாலே
அநித்யமாய் துக்க மிஸ்ரமான ப்ரஹ்மாதிகள் ஐஸ்வர்யத்தை வ்யாவர்த்திக்கிறது –

அநவதிக அதிசய-
இத்தால் நித்யரையும் முக்தரையும் வ்யாவர்த்திக்கிறது –
ஸ ஸ்வராட் பவதி -என்றும்
சத்ய காமஸ் சத்ய சங்கல்ப -என்றும்
நித்ய முக்த விஷயமான ஐஸ்வர்யங்களும் பாகவதா யத்தமாய்
சாவதிகங்களுமாய் இருக்கையாலே –

ஈசித்ருத்வம்
இந்த அசாதாரண ஸ்வரூப நிர்தேசத்தாலே
நிர் விசேஷ சின்மாத்திர வஸ்து -என்ற புத்த கந்திகளான வேதாந்திகளை வ்யாவர்த்திக்கிறது
நாராயண –
சத் ப்ரஹ்மாதி சாமான்ய வாசி சப்தங்களையும்
விசேஷ வாசியான சிவா சம்ப்வாதி சப்தங்களையும்
நாராயணன் பக்கலிலே வ்யவஸ்தாபிக்கிற
நாராயண அனுவாகம் சொல்லுகிற இவ்வர்த்தத்தில்
பிரமாணம் ப்ரத்ய பிஜ்ஞை பன்னப் படுகிறது –

த்வயி –
சர்வ வேதாந்தங்களிலும்
சர்வாதிகனாக பிரதி பாதிக்கப் படுகிறவனாய்
இவ்வாத்மாவுக்கு வகுத்தவனான உன் பக்கலிலே

ந ம்ருஷ்யதி
உக்தமான ஐஸ்வர்யத்தை பொறாதே ஒழிகிறவன்

வைதிக க –
அப்ராஹ்மண இத்யர்த்தம் –
யோ விஷ்ணும் சத்தம் த்வேஷ்டி
விஷ்ணு பக்தி விஹீ நோ யஸ் சர்வ சாஸ்த்ரார்த்த வேத்யபி
பிராமண்யம் தஸ்ய ந பவேத் தச்யோத் பத்திர் நிரூப்யதாம் இத்யாதி –
ஹிரண்ய கர்ப்பச் சம வர்த்த தாக்ரே பூ தஸ்ய ஜாத பதி ரேக ஆஸீத் –
கிரிந்த்ர த்வதுத்தர
ஏகோ ஹி ருத்ரோ ந த்விதீயாய தஸ்து -இத்யாதிகளிலே
ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு சர்வேஸ்வரத்வம் ஓதா நிற்க
சிவா சம்ப்வாதி சப்தம் நாராயணனை பிரதி பாதிக்கிறது என் என்று
இப் பிரமாணங்களில் அபர்ய வசித்தவன் வைதிகன் அல்லன் என்று ஷேபித்த படி -எங்கனே என்னில் –

ச ப்ரஹ்மா ச சிவச் சேந்திர -இத்யாதிகளில் பரிஹரித்தது என்கிறது உத்தரார்தம்-
ப்ரஹ்ம ருத்ராதிகளோடே சம்ப்ரதிபந்த ஷேத்ரஞ்ஞன் ஆன-நன்கு அறியப் பட்ட ஜீவன் ஆன – இந்த்ரனையும்
பார தந்த்ர்யமே ஸ்வரூபமான முக்தாத்மா ஸ்வரூபத்தையும்
சம்பி வ்யாபஹரிக்கை யாலே -கூடப் படிக்கையாலே –
அவர்கள் உடைய அநீஸ்வரத்வம் சம்ப்ரதிபன்னம் -என்கிறது

யேதே அபி –
இந்த லோகத்திலே ஈஸ்வர தயா பிரசித்தரான இவர்களும்
யஸ்ய-
நாராயண பரா வேதா -என்று சர்வ வேதாந்த பிரசித்தியை -நினைக்கிறது

மஹிமார்ணவ விப்ருஷஸதே-
சர்வேஸ்வர மகிமை யாகிற கடலிலே
ஒரு பிந்து மாதரம் என்று நாராயண அனுவாகம் தானே
பரிஹரியா நின்றது -என்கிறார் –

யஸ்ய தே –
என்று ஸ்ருதி பிரசித்தியையும் தமக்கு அவ்வர்த்தத்தில் உண்டான
சாஷாத் காரத்தையும் அருளிச் செய்கிறார் –

(ஸ்வா பாவிக/ அநவதிக அதிசய/ ஈசித்ருத்வம்-இரண்டு விசேஷணங்கள் இவனுக்கே அசாதாரணம் –
ச ப்ரஹ்மா ச சிவஸ் சேந்த்ரஸ் ஸோஷர -பரமஸ் ஸ்வராட்
முக்தருக்கும் ச ஸ்வராட் பவதி -நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி —
ஸ்வ தந்திரம் இங்கு முக்தர்களுக்கு தங்கள் நினைத்த படி கைங்கர்யம் செய்ய
அநேக சரீரம் பரிக்ரஹம் கொண்டு –அவனை மகிழ்விக்க என்றபடி
எந்த வைதிகன் உன் ஐஸ்வர்யம் சகிக்க மாட்டான் என்றது
ஸ்ரீ மன் நாராயணனுடைய ஜகத் காரணத்வம் சர்வ ஸ்வாமித்வம் போன்ற ஐஸ்வர்யத்தை பெறாதவர்கள்
வேத பாஹ்யர்கள் -என்றதாம் – )

————————————————————————————–

ஸ்லோகம் -12- அவதாரிகை —

இதில் விப்ரதிபத்தி ஷமங்கள் அன்றியிலே
தனித் தனியே பூரணமாய்
வஸ்து சாமர்த்ய அபர நாமங்களான
லிங்கங்களாலே பரத்வத்தை அருளிச் செய்கிறார் –

கஸ்ஸ்ரீ ஸ்ரீய பரம சத்த்வ சமாஸ்ரய க
க  புண்டரீக நயன புருஷோத்தம க
கஸ்யா யுத அயுத சதா ஏக கலா அம்சக அம்சே
விச்வம் விசித்திர சித் அசித் ப்ரவிபாக வ்ருத்தம்—12-

கஸ்ஸ்ரீ ஸ்ரீய –
ஈஸ்வர வ்யதிரிக்த சகல சேதனமும்
தம் தாமுடைய ஸ்வரூப ரூப ஸ்தித்யாதிகளுக்காக
பற்ற வேண்டும்படியான மேன்மை யுடைத்தான பிராட்டியும்
தன்னுடைய ஸ்வரூப ரூப ஸ்தித் யாதிகளுக்காக
பற்ற வேண்டும்படியான மேன்மையை உடையார் உன்னை ஒழிய ஆர் –
கிம் ஷேப -ஆர்த்தமாக இல்லை -என்றபடி –

ஈஸ்வரீம் சர்வ பூதானாம் –
அஸ்ய ஈசானா ஜகதோ விஷ்ணு பத்நீ –
திருவுக்கும் திருவாகிய செல்வா -பெரிய திருமொழி -7-7-1- என்னக் கடவது இறே-

பரம சத்த்வ சமாஸ்ரய க –
பரம -சப்தத்தாலே
ரஜஸ் தமஸ் ஸூக்களையும்
அத்தோடு சமபிவ யாஹ்ருதமான சத்வத்தையும் வ்யாவர்த்திக்கிறது
ஸூத்த சத்வத்துக்கு ஆஸ்ரயமான விக்ரஹாதிகளை உடையவன் ஆர்

மகான் ப்ரபுர்வை புருஷ சத்த்வஸ் யைஷ ப்ரவர்த்தக –
ஆதித்ய வர்ணம் தம்ஸ பரஸ்தாத் –

க புண்டரீக நயன –
ஸுவ அனுபவ ஆனந்த த்ருப்தியாலும்
ஆஸ்ரித அர்த்தமான நீர்மைகளுக்கு பிரகாசமாயும்
சர்வேஸ்வரத்வ ஸூசகமான திருக் கண்களை உடையவன் ஆர் –

தஸ்ய யதா –புண்டரீகம் ஏவம் அஷிணீ –
மஹா வராஹ ஸ்புட பத்ம லோசன –
ஜிதந்தே புண்டரீ காஷ –
தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்ணா -பெரிய திருமொழி -7-7-9-

புருஷோத்தம க –
உன்னை ஒழிய புருஷாணாம் உத்க்ருஷ்ட தமராய் இருக்கிறார் ஆர் –

யஸ்மாத் ஷரமதீ தோஹம்-இத்ராப்ய
அதோ அஸ்மி லோகே வேதே ச பிரதித புருஷோத்தமா -ஸ்ரீ கீதை -15-38-என்று
ஆப்தரான தேவரீரே அருளிச் செய்திலீரோ –

கஸ்யா யுத அயுத சதா ஏக கலா அம்சக அம்சே விச்வம் விசித்திர சித் அசித் ப்ரவிபாக வ்ருத்தம் –
விசித்திர சித் அசித் ப்ரவிபாக வ்ருத்தம் -கஸ்ய அயுத அயுத சதா ஏக கலா அம்சக அம்சே –
சித் அசித் விபாகத்தாலும் வர்த்திக்கிற இந்த ஜகத் விசித்ரமாய்க் கொண்டு
ஆருடைய சங்கல்ப சதா சஹாஸ்ராயுதைக தேசத்தில் வர்த்திக்கிறது –

கர்மத்தால் வந்த சதுர்வித சரீரங்களும்
தத் போக்யாதிகளும்
அம்சம் என்று கலோபாதிகம் –
அல்பார்த்தத்திலே-
பாதோ அஸ்ய விஸ்வா பூதானி –
யஸ்ய அயுத அயுத அம்ஸ அம்சே –
மேரோரிவாணுர் யஸ்யை தத் –
இதம் க்ருத்ஸ்நம் ஏகாம்சேன ஸ்திதோ ஜகத் -இத்யாதி-

(வேதாந்தாஸ் -தத்வ சிந்தாம் முரபிதுரஸி யத் பாத சிஹ்னைஸ் தராந்தி-திருவுக்கும் திருவாகிய செல்வன் –
தஸ்ய யதா கப்யாசம் புண்டரீகம் ஏவம் அக்ஷணீ –பரத்வ லிங்கங்கள் –
க க கஸ்ய கஸ்ய-கேள்விகள்
மேலே -14- த்வத் அந்நிய க -உன்னை தவிர வேறே யார் -என்று எம்பருமானையே நேராக ஸ்பஷ்டமாக –கேட்டு
நீயே பரம்பொருள் என்று விஞ்ஞாபித்த படி )

—————————————————————————————-

ஸ்லோகம் -13-அவதாரிகை –

இதிஹாச புராண
ப்ரக்ரியையாலே ப்ரஹ்ம ருத்ராதிகள் உடைய
ஷேத்ரஜ்ஞத்வத்தையும்
பகவத் பரத்வத்தையும்
அருளிச் செய்கிறார் –

வேத அபஹார குரு பாதக தைத்ய பீடாத்
யாபத் விமோசன மஹிஷ்ட்ட பலப்ரதானை
கோ அந்ய ப்ரஜாப ஸூ பதி பரிபாதி கஸ்ய
பாதோ தகேந ச சிவஸ் ஸ்வ சிரோத்ருதேந–13-

வேத அபஹார –
யோ வை வேதாம்ஸ்ச-என்று ப்ரஹ்மாவுக்கு
வேத சஷூஸ்சைக் கொடுக்க -அது அசுரர்களாலே அபஹ்ருதமாக
ப்ரஹ்மா வேதத்தை இழந்து துக்காந்தர் நிமக்நனான அளவிலே
விரோதிகளை அழியச் செய்து மீட்டுக் கொடுத்த உபகாரத்தைச் சொல்லுகிறது

ததோ ஹ்ருதேஷூ வேதேஷூ ப்ரஹ்மாணம் காசமஅவிசத் –
ததோ வசனமீஸாநம் ப்ராஹ வேதைர் விநாக்ருத
ப்ரஹ்மா வேதா மே பரமம் சஷூ வேதா மே பரமம் தனம்
வேதா மே பரமம் தாம வேதா மே ப்ரஹ்ம சோத்தமம்
மம வேதா ஹ்ருதாஸ் சர்வே தானவாப்யாம் பலாதித்த
அந்த காரா இமே ஜாதா லோகா வேதைர் விவர்ஜிதா
வேதா த்ருதே ஹி கிம் குர்யாம் லோகன் வை ஸ்ரஷ்டுமுத்யத
அஹோ பத மஹத் துக்கம் வேத நாச நஜம் மம
ப்ராப்தம் து நோதி ஹ்ருதயம் மாம் து சோகாமயஸ் த்வயம்

ஜக்ராஹ வேதா ந கிலான் ரஸா தல கதான் ஹரி
ப்ராதாச்ச ப்ரஹ்மனே ராஜன்
ததாஸ் ஸ்வாம் ப்ரக்ருதிம் யயௌ
ததஸ் தயோர் வதே நாஸூ வேதோ பஹரனேந ச-
சோகாப நயனம் சக்ரே ப்ரஹ்மன புருஷோத்தம -இத்யாதி

குரு பாதக –
ருத்ரன் லோக குருவும் பிதாவுமாய் இருக்கிற ப்ரஹ்மாவை துர்மானமே ஹேதுவாக
தலையை அறுத்துப் பாதகியான பாதகத்தையும் போக்கி
தலை அறுப்புண்ட ப்ரஹ்மாவையும் ஜீவிக்கும்படி பண்ணி ரஷித்த படி

ஸ்ரீ மாத்ச்யே-
தேவீம் ப்ரதி ருத்ர -தத கரோத பரீதேன சம்ரக்தனய நேன ச
வாமாங்குட்ட நாகாக் ரேன சின்னம் தஸ்ய சிரோ மயா

ப்ரஹ்மா -யசமாத நபரா தஸ்ய சின்னம் த்வயா மம
தஸ்மாச்சா பசமா விஸ்ட கபாலீ தவம் பவிஷ்யசி
ருத்ர -ப்ரஹ்ம ஹாஸ் ஸ் குலிதோ பூத்வா சரண தீர்த்தானி பூதலே
ததோ அஹம் கதவான் தேவி ஹிமவந்தம் சிலோச்ச்சயம்

தத்ர நாராயணஸ் ஸ்ரீ மான் மயா பிஷாம் பிரயாசித்த
ததச்தேன ஸ்வகம் பார்ச்வம் நகாக்ரேன விதாரிதம்
மஹதீ ஸ்ரவதீ தாரா தஸ்ய ரக்தச்ய நிஸ் ஸ்ருதா
விஷ்ணு பிரசாதாத் ஸூ ஸ்ரோணி
கபாலம் தத் சஹஸ்ரதா ஸ் புடிதம் பஹூதா யாதம் ஸ்வப்ன லப்தம் யதா -இத்யாதி

தைத்ய பீடாத் யாபத் விமோசன –
ஹிரண்ய ராவணாதிகள் என்ன –
த்ரிபுரத்தில் அசுரர்கள் என்ன

ஆதி சப்தத்தாலே
துரவாசஸ் சாபாதிகளை நினைக்கிறது –
இவர்களால் தேவதைகளுக்கு வரும் ஆபத்தைப் போக்கி

மஹிஷ்ட்ட பலப்ரதானை-
ஷேத்ரஜ்ஞத் வேன சம்ப்ரதி பன்னரான அவர்களுக்கு
ஸ்வ சமாராதா நத்தாலே-லோகம் அடங்க
ஈஸ்வரன் என்று கொண்டாடும் படியான பதங்களைக் கொடுத்த படியாலே

யுக கோடி சஹஸ்ராணி விஷ்ணும் ஆராத்ய பத்மபூ
புநஸ் த்ரை லோகய தாத்ருத்வம் ப்ராப்தவாநிதி ஸூ ச்ரும-என்றும்

ப்ரஹ்மா தயஸ் ஸூ ராஸ் சர்வே விஷ்ணும் ஆராத்ய தே புரா
ஸ்வம் ஸ்வம் பதம் அநு ப்ராப்தா கேசவச்ய பிரசாத்த -என்றும்

ஏவமேஷாஸ் ஸூ ராணாம் ச ஸூ ராணாஞ்சாபி சர்வச
பயா பயங்கர கிருஷ்ணஸ் சர்வ லோகேஸ்வரபிரபு -என்றும்

கோ அந்ய ப்ரஜாப ஸூ பதி பரிபாதி –
பிரஜா பஸூ பதிகளைத்
தம்தாமால் வந்த ஆபத்துக்களோடு
பிறரால் வந்த ஆபத்துகளோடு வாசி அற
சாகல்யேன ரஷிக்கிறான் மற்று எவன் –

கஸ்ய பாதோ தகேந ச சிவஸ் ஸ்வ சிரோத்ருதேந-
ஆருடைய திருவடிகளின் நின்றும் விழுந்த ஜலத்தை ஜடையிலே தரிக்கையாலே
அந்த ருத்ரன் சிவனாயிற்று -சுத்தனாயிற்று

அவன் அசுத்தியை விளைத்து கொள்ளவும்
அவனை சுத்தனாக்கும் பரம பாவனன் உன்னை ஒழிய வேறு ஆர் தான் –

த்ரவீபூ தஸ் ததா தரமோ ஹரி பக்த்யா மஹா முனே
க்ருஹீத்வா தர்ம பாநீயம் பதம் நாதஸ்ய துஷ்டயே
ஷாளிதம் பரா பக்த்யா பாத் யார்க்யாதி பிரர்ச்சிதம்
ததம்பு பதிதம் த்ருஷ்ட்வா ததார சிரஸா ஹர
பாவ நாரத்தம் ஜடா மத்யே யோகயோ அஸ்மீத்யவ தாரணாத்
வர்ஷா யுதாந்யத பஹூன் ந முமோச ததா ஹர

சதுர் முகன் கையில் சதுப் புயன் தாளில் சங்கரன் சடையினில் தங்கி
கதிர் முக மணி கொண்டு இழி புனல் கங்கைக் கண்டம் என்னும் கடி நகரே -பெரியாழ்வார் திரு மொழி -4-7-3-

நலம் திகழ சடையான் முடிக் கொன்றை மலரும் நாரணன் பாதத் துழாயும் கலந்து
இழி புனல் -பெரியாழ்வார் திரு மொழி -4-7-2-

(யுக கோடி சஹஸ்ராணி விஷ்ணும் ஆராத்ய பத்ம பூ –புனஸ் த்ரை லோக்ய தாத்ருத்வம் ப்ராப்தவா நிதி சுச்ரும -என்றும்
ப்ரஹ்மாதயஸ் ஸூராஸ் சர்வே விஷ்ணும் ஆராத்ய தே புரா-ஸ்வம் ஸ்வம் பதம் அநு ப்ராப்தா கேசவஸ்ய ப்ரசாதத-என்றும் ஸ்ருதிகள் உண்டே –

மங்கை பாகன் சடையில் வைத்த கங்கை யார் பாதத்து நீர் -வனச மேவு முனிவனுக்கு மைந்தன் ஆனதில்லையோ
செங்கையால் இரந்தவன் கபாலம் ஆர் அகற்றினார் -செய்ய தாளின் மலரான் சிரததில் ஆனதில்லையோ –
வெம் கண் வேழ மூலம் என்ன வந்தது உங்கள் தேவனோ -வீறு வாணன் அமரில் அன்று விறல் அழிந்தது அல்லையோ –
அம் கண் ஞாலம் உண்ட போது வெள்ளி வெற்பு அகன்றதோ – ஆதலால் அரங்கன் அன்றி வேறு தெய்வம் இல்லையே –
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் -)

——————————————————————————-

ஸ்தோத்ரம் -14- அவதாரிகை –

பிரமாண அனுகூலமான தர்க்க ரூப ந்யாயத்தாலே
உக்தமான பரத்வத்தை
நியமிக்கிறவர் –

கஸ்யோ தர ரே ஹர விரிஞ்சி முக ப்ரபஞ்ச
கோ ரஷதீ மமஜ நிஷ்ட ச கஸ்ய நாபே
க்ரந்த்வா நிகீர்ய புனருத் கீரதி தவ தன்ய
க கேன வைஷ பரவாநிதி சக்ய சங்க—14-

கஸ்யோ தர ரே ஹர விரிஞ்சி முக ப்ரபஞ்ச –
ப்ரஹ்ம ருத்ர முகமான சகல பதார்த்தங்களும் மஹா ப்ரளயத்திலே ஆருடைய பக்கலிலே லயித்து இருக்கிறது –

ஸ தேவ சோமயே தமக்ர ஆஸீத் -ஏகமேவ அத்விதீயம் -என்கிறபடியே
த்வி பரார்த்த காலம் நாம ரூபங்களை இழந்து
தம பர் தேவ -ஏகி பவதி -என்கிறபடியே
சர்வேஸ்வரன் பக்கலிலே கிடக்கிற படி –

ப்ரஹ்மாதி ஷூ ப்ரலீநேஷூ நஷ்டே லோகே சராசரே
ஆபூத சம்ப்லவே ப்ராப்நே ப்ரலீநே ப்ரக்ருதௌ மஹான்
ஏகஸ் திஷ்டதி விஸ்வாத்மா ஸ து நாராயண பிரபு -இத்யாதி
சம்ஹாராதிகளிலே கர்மீ பவிக்கும் இடத்தில் ப்ரஹ்மாதிகளோடு பிபீலிகாதிகளோடு வாசி இல்லை -என்கை –

கோ ரஷதீ –
ஹர விரிஞ்சி முகமான பிரபஞ்சத்தை ரஷிக்கிறார் ஆர் –
ந ஹி பாலான சாமர்த்தியம் ருதே சர்வேஸ்வரம் ஹரிம்
ஸ்தி தௌ ஸ்திதம் மகாப்ராஜ்ஞ பவத் யன்யச்ய கஸ்யசித் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-22-21
ந சம்பதாம் சமாஹாரே விபதாம் விநிவர்த்தனே-

அஜ நிஷ்ட ச கஸ்ய நாபே –
மஹா பிரளயத்திலே அவி பக்தமாய்க் கிடக்கும் பிரபஞ்சம் யாருடைய குஷியினின்றும் உத்பன்னம் ஆயிற்று
மஹா பாராதே மார்க்கண்டேய சமாக்யானே
ஸ்ருஜதஸ் தஸ்ய தேவஸ்ய பத்மம் ஸூரிய சமப்ரதம்
நா பேர் வினிஸ் ஸ்ருதம் தஸ்ய தத் ரோத் பன்ன பிதா மஹா

ஸூ பர்ண வைகுண்ட சமவாதே-
யத் தத் பத்ம பூத் பூர்வம் தத்ர ப்ரஹ்மா வ்யாஜாயத
ப்ரஹ்மனாஸ் சாபி சம்பூதஸ் சிவா இதய வதார்ய தாம்
சிவாத் ஸ்கந்தாஸ் சம்பபூவா ஏதத் சிருஷ்டி சதுஷ்டயம் -இத்யாதி
(பஹு முக ஸ்ருஷ்டி -நான்முகன் ஐந்து முக ருத்ரன் ஆறு முக ஸ்கந்தன் )

க்ரந்த்வா –
ப்ரஹ்மாதி ஸ்தாவராந்தகமான எல்லார் தலைகளிலும் திருவடியை வைத்தவன் ஆர்
திருவடியை தலையிலே வைத்தவனோ திருவடியின் கீழே துகை யுண்டவனோ ஈஸ்வரன் -என்கிறார் –
சங்கைஸ் ஸூ ராணாம் –இத்யாஹி

நிகீர்ய புனருத் கீரதி –
இப்படி சர்வ பிரகார ரஷகர் உன்னை ஒழிய மற்று ஆர் –

தவ தன்ய க கேன வைஷ பரவாநிதி சக்ய சங்க –
இதரராலே பரதந்த்ரம் என்றும் சக்ய சங்கமாய் இருக்கிறதோ

சந்திக்தே கலு நியாய ப்ரவர்த்ததே –
வேறே சிலரை சம்சயிக்கைக்கு சம்பாவனை இல்லை -என்கை –

(அஜன் அதிகன் அயன் அதிகன் உலகு அளந்த அரி அதிகன் -கம்பர் )

ஒருவன் ஜனகனாய் -ஒருவன் ஜன்யனாய்
ஒருவன் சேஷியாய் -ஒருவன் சேஷனாய்
ஒருவன் ஸ்ரீ ய பதியாய் ஒருவன் உமாபதியாய்
ஒருவன் புண்டரீ காஷனாய் ஒருவன் விரூ பாஷனாய்
ஒருவன் கருட வாஹனாய் ஒருவன் வ்ருஷப வாகனனாய்
ஒருவன் பாதகியாய் ஒருவன் சோதகனாய்
ஒருவன் புருஷோத்தமனாய் ஒருவன் புருஷனாய்
ஒருவன் சிரஸ் ஸ்தித பாத பங்கஜனாய்-ஒருவன் பாத பாம்ஸூ மாத்ரமாய்
ஒருவன் ஸூரி த்ருஸ்யனாய் -ஒருவன் வேதாள த்ருஸ்யனாய்

இப்படி தம பரகாசங்கள் போலே
ருத்ரனுக்கும் சர்வேஸ்வரனுக்கும் நெடு வாசி உண்டு ஆகையாலே
ருத்ரனுக்கு அஸ்மத் யாதிகளோபதி ஷேத்ரஜ்ஞதையாலே
ஈஸ்வரத்வ சங்கை இல்லை

பிரம்மாவுக்கும் சமான ந்யாயத்தாலே ஈஸ்வரத்வ சங்கை இல்லை –
என்றது ஆயிற்று –

அரன் நாரணன் நாமம் ஆன்விடை புள் ஊர்தி
உரை நூல் மறை உறையும் கோயில் வரை நீர்
கருமம் அழிப்பு அளிப்பு கையது வேல் நேமி
உருவம் எரி கார் மேனி ஒன்று -பொய்கை ஆழ்வார்

(அன்று எல்லாரும் அறியாரோ எம்பெருமான் உண்டு உமிழ்ந்த எச்சில் தேவர் -உதரே-திரு வயிற்றினுள்ளே -ஒவ்பசாரிக பிரயோகம்
அவன் இடமே லயிக்கும் -என்றவாறு -நின்னுளே பிறந்து இறந்து நிற்பவும் திரிபவும் நின்னுளே அடங்குகின்ற -என்றபடி
தன்னுள்ளே என்றபடியே இங்கும் -நாராயணே ப்ரலி யந்தே–லீயதே பரமாத்மநி-ஸ்ருதிகள் போலே –
இமாம் கோ ரஷதி – காக்கும் இயல்வினன் கண்ணபிரான் –
உய்ய உலகு படைக்க வேண்டி உந்தியில் தோற்றினாய் நான் முகனை
க்ராந்த்வா –பாரை உண்டு பார் உமிழ்ந்து பார் அளந்து பாரை யாண்ட பேராளன் –
சர்வாந்தர்யாமி என்றுமாம் –
உனக்கே பரத்வம் பொலிகின்ற படியால் வேறு ஒரு தெய்வம் இடமும் பரத்வ சங்கை உண்டாவதற்கும்
இடம் இல்லையே -என்று சொல்லி நிகமிக்கிறார் )

———————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading