ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம்- அவதாரிகை –ஸ்லோகம் -1-2-3-4-5—ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –

ஸ்வாதயன் நிஹா சர்வேஷாம்
த்ரய்யந் தார்த்தம் ஸூ துர் க்ரஹம்
ஸ்தோத்ர யாமாஸ யோகீந்திர
தம் வந்தே யாமுநாஹ் வயம்-

ஸ்வாதயன்-அனுபவத்திக் கொண்டே –
யன் ப்ரத்யயம் -அனுபவிப்பித்து-
இஹ -இந்த காலத்தில் -இத்தைச் சொல்லும் பொழுது -இதில் –
சர்வேஷாம்-சர்வாதிகாரம் இந்த ஸ்தோத்ரம் -ஸ்ரத்தையே வேண்டுவது
ஸூ துர்க் ரஹம்–த்ரய்யந் தார்த்தம்-அறிவரிய வேதாந்தார்த்தங்களை
ஸ்தோத்ர யாமாஸ-ஸ்தோத்ர ரூபமாக வெளியிட்டு அருளினாரோ
யோகீந்திர-எந்த யோகி ஸ்ரேஷ்டர்–எதிகட்கு இறைவன் யமுனைத் துறைவனான ஆளவந்தார் –

————

நமோ நமோ யாமுநாயா யாமுநாய நமோ நம
நமோ நமோ யாமுநாயா யாமுநாய நமோ நம

நமோ நமோ யாமுநாயா-அஷ்டாக்ஷர மந்த்ரம் போல் இதுவே-

———————————————————

ஸ்ரீமத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூ நவே
யத் கடாஷைக லஷ்யாணாம் ஸூ லாபஸ் ஸ்ரீ தர்ஸ்சதா –

அபயப்ரதா நாமா நமஸ் மதகுரு மஹம் பஜே
யத் கடாஷா தயம் ஜந்துர புநர் ஜன்மதாம் கத

————————————————-

அவதாரிகை –
ஸ்ரீ சர்வேஸ்வரன் ஆழ்வாருக்கு தன்னுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளை
மயர்வற மதிநலம் அருளினான் -என்கிறபடியே
நிர்ஹேதுக கிருபையாலே காட்டிக் கொடுக்க –

கொடுத்த ஜ்ஞானம் பக்தி ரூபா பன்ன ஜ்ஞானம் ஆகையாலே பரபக்தி யுக்தராய்க் கொண்டு
பகவத் குண அனுபவத்தை பண்ணிக் கொண்டு
அதினுடைய விபாக தசையான பரஜ்ஞானம் பிறந்து -அதடியாக பரம பக்தி பிறந்து

அத்தாலே –
ஏஷ சம்ப்ரசாதே அஸ்மா சரீராத் சமுத்தாய பரம்
ஜ்யோதிரூப சம்பாத்திய ஸ்வேன ரூபேணாபி நிஷ்பத்யதே -என்றும்
ததா வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்ஜன பரமம் சாம்யம் உபைதி -என்றும்
தம்மையே ஒக்க அருள் செய்வர் -திருவாய் மொழி -11-8-5- என்றும் சொல்லுகிறபடியே
ஸ்வ ஸ்வரூபத்தைப் பெற்று –

பார்யைக்கு அங்க பூஷணம் போலே
வழு விலா அடிமை செய்ய வேண்டும் –என்றும்
அவா அற்று வீடு பெற்ற -என்றும் சொல்லுகிறபடியே
ப்ராப்தி பலமான கைங்கர்யத்தைப் பெற்ற ஸ்ரீ ஆழ்வார் உடைய
திராவிட உபநிஷத் ரஹஸ்யத்தை ஸ்ரீ பெரிய முதலியார்
ஸ்ரீ ஆழ்வார் உடைய ப்ரசாதத்தாலே லபித்தது

பின்பு ஆச்சார்ய உபதேச க்ரமத்தாலே ஆளவந்தார் அந்த திராவிட உபநிஷத் ரஹச்ய அர்த்தங்களை லபித்தது
அத்தை தாம் அனுபவித்து
அவ் வனுபவத்தால் வந்த ப்ரீதி உள் அடங்காமலே பரீவாஹ அபேஷை பிறக்கையாலும்
சம்சாரிகள் துர்க்கதி கண்டு இவர்கள் இத்தை இழக்க ஒண்ணாது என்னும் கிருபையாலும்
சகல உபநிஷத் ரகஸ்யமாய் –
துர்ஜ்ஞேய மான அர்த்தத்தை சர்வரும் அறியும்படியாக இவர் ஸ்தோத்ரமாக வெளி இடுகிறார் –

பகவத் வ்யதிரிக்த விஷயங்களில் ஸ்தோத்ரம் ஆவது –
ஸ்தோத்ரம் நாம கிமாம நந்தி -என்றும்
அந்யத்ராதத் குணோக்தி -என்றும்
இல்லாதவற்றை ஏறிட்டுச் சொல்லுதல் -உள்ளத்தை அடையச் சொல்லுதலாய் இருக்க –

எதோ வாசோ நிவர்த்தந்தே -என்றும்
அவிஜ்ஞாதம் விஜாநதாம் –என்றும்
பூதார்த்தே கதமா ஸ்துதி -என்றும்
ந சமர்த்தாஸ் ஸூ ராஸ் ஸ்தோதும் -என்றும்
பரிச்சேதித்துப் பேச நிலம் அல்லாத பகவத் விஷயம் ஸ்துதி விஷயமான படி
என் -என்னில்

அங்கனே இருந்த தாகிலும்
ஸ்தவயஸ் ஸ்தவ ப்ரிய -என்று ஸ்துதி பிரியன் ஆகையாலும்
ஏத்த ஏழுலகம் கொண்ட கோலக் கூத்தனை -திருவாய்மொழி -2-2-11- என்றும்
ஏத்த ஏத்த எங்கு எய்தும் -திருவாய்மொழி -4-3-10- என்றும்
ஸ்தோத்ர வ்யவஹாரம் உண்டாய்ப் போருகையாலும்
இது ஒழிய வாசக சப்தம் இல்லாமையாலும்
இவ் விஷயத்திலும் ஸ்தோத்ரம் -என்னலாம்

அதவா –
தர்மார்த்த காம மோஷாக்யா புருஷார்த்தா உதாஹ்ருதா இதம் சதுஷ்டயம் -என்றும்
மன்னும் அறம் பொருள் இன்பம் வீடு -பெரிய திருமடல் -11- என்றும் சொல்லுகிறபடியே
புருஷார்த்தம் நாலாய்-

அவற்றில்
தர்மம் சாதன தயா புருஷார்த்தம் ஆகையாலும்
க்லேச சாத்தியம் ஆகையாலும் –

அர்த்தம்
ஸ்வயம் புருஷார்த்தம் ஆனாலும் அஸ்திரிமாய் க்லேச சாத்தியம் ஆகையாலும் –
புருஷார்தங்களுக்கு சாதனம் ஆகையாலும் –

காமம்
ஸ்வயம் புருஷார்த்தம் ஆனாலும் அல்ப அஸ்த்ரத்வா அநர்த்த அவஹத்வ
பீபத் சாத்திய அநந்த தோஷ துஷ்டம் ஆகையாலும் –

மோஷ சாஸ்த்ரத்திலே
மோஷ விரோதித்வேன நிந்திதமாய் இருக்கையாலும்
ஸ்ரீ ஆளவந்தார் அவற்றை விட்டு மோஷத்திலும் ஆத்ம பிராப்தி
துக்கேன சிரகால சாத்தியம் ஆகையாலும்
பகவத் அனுபவத்தைப் பற்ற அல்பம் ஆகையாலும் -அதையும் விட்டு

பகவத் பிராப்திக்கு உக்த தோஷங்கள் இன்றி இருக்கும் அளவு அன்றிக்கே
நிரஸ்தாதி சயாஹ்லாத ஸூக பாவைக லஷ்ணா -என்கிறபடியே நிரதிசய ஸூக ரூபமாய்
ஏஷ ஹேவா நந்தயாதி -என்றும்
பரமம் சாம்யம் உபைதி -என்றும்
தம்மையே ஒக்க அருள் செய்வர் -பெரிய திருமொழி -11-8-5- என்கிற படியே
ஆஸ்ரிதர் தன்னைப் போலே ஆனந்திப்பிக்கக் கடவனாய்
தஸ்யாஹம் ஸூலப -என்று அத்யந்த சாத்தியமாய்
ப்ராப்த புருஷார்தமுமாய் இருக்கையாலே
இதுவே புருஷார்த்தம் என்று அத்யவசித்து –

அந்த பகவத் பிராப்தி ஆகிறதும்
ப்ரதான ஷேத்ரஜ்ஞபதிர் குணேச -என்றும்
ஜ்ஞாஜ்ஜௌ தவா வஜா வீஸ நீ சௌ-என்றும்
தமீஸ் வராணாம் பரமம் மகேஸ்வரம் -என்றும்
தாசோஹம் வாஸூ தேவஸ்ய -என்றும்
தாச பூதாஸ் ஸ்வதஸ் சர்வே -என்றும்
தாசோஹம் கோஸலேந்த்ரஸய -என்றும்
யஸ் யாத்மா சரீரம் -என்றும்
அந்த ப்ரவிஷ்டச் சாஸ்தா ஜ்நாநாம் சர்வாத்மா -என்றும்
பூ பிராணி நஸ் சர்வ ஏவ குஹா சயசய -என்றும்
தாநி சர்வாணி தத்வபு -என்றும் –
ஜீவ பரர்களுக்கு அனன்யார்ஹ சேஷ சேஷி பாவேன சம்பந்தத்தைச் சொல்லி –

ஏன ஏன ததா கச்சதி -என்றும்
சோஸ்நுதே சர்வான் காமான் சஹ ப்ரஹ்மணா விபச்சிதா -என்றும்
காமயே வைஷ்ணவத்வம் து சர்வ ஜன்ம ஸூ கேவலம் -என்றும்
ஒழிவில் காலம் எல்லாம் -இத்யாதிகளிலே ஸ்வரூப அனுரூபமான போகத்தை சொல்லுகையாலும்
பதி வ்ரதைக்கு பத்தி ஸூஸ்ருஷண்ம் போலே
சேஷ வஸ்துவுக்கு கைங்கர்யம் என்று அத்யவசித்து –

இனி பேஷஜம் பகவத் பிராப்தி -என்று
அவனே பிராப்யம் என்னுமதும் கைங்கர்ய பிரதி சம்பந்தி ஆகையாலே

ஸ்வேன ரூபேனே அபிநிஷ்பத்யதே-என்று ஸ்வ ஸ்வரூபத்தை ப்ராப்யம் என்கிறதும்
கைங்கர்யத்துக்கு ஆஸ்ரயமாகை ஆகையாலே

சோஸ்த்வன பாரமாப்நோதி தத் விஷ்ணோ பரமம் பதம் -என்று
தேச விசேஷத்தை ப்ராப்யம் என்கிறதும் கைங்கர்ய வர்த்தகம் ஆகையாலே

நிஸ்தரந்தி மநீஷின -என்று
சம்சார நிவ்ருத்தியை புருஷார்த்தம் என்கிறதும் கைங்கர்ய விரோதி யாகையாலே –

இவை கைங்கர்ய உபயோகி அல்லாத அன்று
ந ஹி மேஜீவிதே நாரத்த –
மணிமாமை குறைவிலம் -உடம்பினால் குறைவிலம் -உயிரினால் குறைவிலம் -என்கையாலே
அபுருஷார்த்தம்

ததீய சேஷத்வத்தை புருஷார்த்தம் என்கிறதும் பதி வ்ரதைக்கு
பதியினுடைய ஆத்மாம்சத்திலும் குணாம்சத்திலும்
சௌந்தர்ய விசிஷ்டமான தேகாம்சமே ப்ராப்யமாய் –
அத்தாலே பாதி வ்ரதய ஹானி இல்லாதாப் போலே –
இப்படி சகல சாஸ்திர தாத்பர்யமான புருஷார்த்தத்தை நிச்சயித்து

இதுக்கு உபாயம் பக்தி ப்ரபத்திகள்–என்று இரண்டாய்
அதில்
பக்தி யாவது -ப்ரஹ்ம விதாப் நோதி பரம் -என்றும்
ஆத்மாவா அரே த்ரஷ்டவ்யஸ் ஸ்ரோதவ்யோ மந்தவ்யோ நிதித்யாசிதவ்ய -என்றும்
நாயமாத்மா ப்ரவச நேன லப்யோ ந மேதயா ந பஹூ நா ஸருநேன
யமேவைஷ வ்ருணுதே தேன லப்யஸ் தச்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வாம்-என்றும்
பித்யதே ஹ்ருத யக் ரந்திஸ் சித் யந்தே சர்வ சம்சயா
ஷீ யந்தே சாஸ்ய கர்மாணி தஸ்மின் த்ருஷ்டே பராவரே -என்றும்
பக்த்யா த்வ நன்யா சக்ய அஹம் ஏவம் விதோ அர்ஜுன
ஜ்ஞாதும் த்ரஷ்டும் ச தத்வேன ப்ரவேஷ்டும் ச பரந்தப -ஸ்ரீ கீதை -11-54- என்றும்
சமஸ் சர்வேஷூ பூதேஷு மத் பக்திம் லபதே பராம் -ஸ்ரீ கீதை -18-54- என்றும்
வேதன த்யான உபாசன சப்த வாச்யமாய்
பக்தி ரூபா பன்னமாய் தர்சன சமானாகாரமான ஜ்ஞான விசேஷம் பக்தி ஆகிறது –

அக்னி வித்ய அங்கிகையாய் கர்ம ஜ்ஞான சஹ க்ருதையுமாய் ஆகையாலே
அதிக்ருதாதி காரமாய்
விளம்பிய பல பிரதமுமாய்
பிரமாத சம்பாவனையும் உண்டாகையாலே –
அவற்றை விட்டு

இந்த தோஷம் ஒன்றும் இன்றிக்கே
முமுஷூர் வை சரணம் அஹம் ப்ரபத்யே -என்றும்
ந்யாச மாஹூர் மநீஷிணோ ப்ரஹ்மாணம்-என்றும்
ந்யாச இதி ப்ரஹ்மா -என்றும் –
தாஸ்மான் ந்யாச மேஷாம் தபஸா மதிரிக்த மாஹூ-என்றும்
தஸ்மாதபி வத்யம் பிரபன்னம் ந ப்ரதி ப்ரயச்சதி -என்றும் –
ச ப்ராதுஸ் சரனௌ காடம் நிபீட்ய ரகு நந்தன -என்றும்
சக்ருதேவ பிரபன்னாய -என்றும்
சோஹம் த்வாம் சரணமபாரம பிரமேயம் -என்றும்
சர்வாத்மனா யஸ் சரணம் சரண்யம் நாராயணம் லோக குரும் ப்ரபன்ன -என்றும்
மாம் ஏவ எ ப்ரபத்யந்தே -என்றும்
தமேவ சரணம் கச்ச -என்றும்
சர்வ தரமான் பரித்யஜ்ய -என்றும்
தாவதார்த்திச் ததா வாஞ்சா -என்றும் இத்யாதி

ஸ்ருதி ஸ்ம்ருதி சித்தமாய்
ஸூகரமாய்
அத்யவசாயாத்மக ஜ்ஞான விசேஷமான ப்ரபத்தியையே உபாயமாக நிச்சயித்து –

இப்படி ப்ராப்ய ப்ராபகங்களை நிஷ்கர்ஷித்து
இவற்றை ஸ்தோத்ர ரூபத்தாலே
ஸ்ரீ சர்வேஸ்வரனை நோக்கி பிரார்த்திக்றார் -என்னவுமாம் –

ஸ்ரீ பகவத் ஸ்தோத்ரம் பண்ணப் புக்கவர்
ஆசார்ய ஸ்துதியிலே பார்ப்பான் என் -என்னில்
கர்னே ஸ்ப்ருஷ்டே கடிம் சாலயதி -போலே அசங்கதம் -என்னில்
ஸ்ரீ பகவத் விஷயத்தைத் தமக்கு ஸ்துதி விஷயம் ஆக்கிக் கொடுத்த உபகார ஸ்ம்ருதியாலும்
ஸ்தோத்ரம் பண்ணுகைக்கு அடியான ஜ்ஞான வைசத்யார்த்தமாகவும்
அவிக்ன பரி சமாப்த் யர்த்தமாகவும் -பண்ணுகிறார் -ஆகையாலே சங்கதம் –

ஆனால் மானசமாக அமையாதோ -என்னில்
இப்பிரபந்தத்தை அதிகரிப்பார்க்கு உபகாரம் ஆகையாலே வாசிகம் ஆக்கினதும் யுக்தம் –

உபகார ச்ம்ருதியாலே வந்த ஆசார்ய அனுவர்த்தனம் பிரமாண பிரசித்தம் –
ஆசார்ய தேவோ பவ -என்றும்
நம ருஷிப்யோ மந்திர க்ருத்ப்ய -என்றும்
ச ஹி வித்யா தஸ்தம் ஜநயதி தச் ஸ்ரேஷ்டம் ஜன்ம -என்றும்
மந்த்ரே தத் தேவதா யாஞ்ச ததா மந்திர பிரதே குரௌ -என்றும்
ஒரு ரத்னத்தை ஒருவன் கொடுத்தால் அதனுடைய மஹார்க்கத்தை அறியக் கொடுத்தவனை
ஆதரிக்க பிரமாணம் வேண்டுமோ -ஆகையால் இது உபபன்னம் –

ஜ்ஞான வைசத் யார்த்தமாக ஆசார்ய அனுவர்த்தனம் சிஷ்டாசார ப்ராப்தம் –
அபி வந்தா குரு நாதௌ-சிஷ்யதீ பதமி நீர வீன் –இது மீமாம்சகா -என்றும்
யதா கனன் கனித்ரேண-இதி மனு -என்றும்
யஸ்ய பிரசாதாத் வஷ்யாமி நாராயண கதாமிமாம் -இதி வைசம்பாயன -என்றும்
லௌகிகம் வைதிகம் வாபி -இதி மனு -என்றும்

அங்கனே ஆகில்
ஸ்வ ஆசார்யனை விட்டு அவர் குருக்களை பற்றுவான் என் என்னில்
ஆசார்ய ஸ்துதியிலும் ஆசார்ய பிரியம் இறே உத்தேச்யம் –
ஸ்வாஸ்ரயணத்தில் காட்டில் ஸ்ரீ பெரிய முதலியாரை ஆஸ்ரயிக்கும் இடத்தில்
ப்ரீதி மிக்கு இருக்கையாலே அதைப் பேசுகிறார் –

ஸ்ரீ பெரிய முதலியார் ஸ்ரீ ஆழ்வாருக்கு பகவத் ப்ராவண்யம் அடியாக பிறந்த ஜ்ஞாநத்தை
ஸ்ரீ ஆழ்வார் பிரசாதத்தாலெ பெற்று -தம் அளவிலே பர்யவசிக்கை அன்றிக்கே
பின்பு உள்ளார்க்கும் உபகாரமாம் படி
இந்த தர்சன ஸ்தாபகர் ஆனபடியாலும் –
ஸ்ரீ மணக்கால் நம்பி -பெரிய முதலியார் உடைய அர்த்தம் இது
உம்முடைய பேற்றுக்கு எல்லாம் அவருடைய திருவடிகளிலே சம்பந்தமே -என்கையாலும்
அவரை ஆஸ்ரயிக்கிறார்

இதை நினைத்து இறே ஸ்ரீ பட்டர் – ப்ரதமமபி குரும் நாத மீடே -என்றதும் .
வேத காரணமான பிரணவம் வேதாத் யந்தம் களிலே ஆனால் போலே –

இங்கும் ஆதி அந்தம் களிலே ஆசார்ய ஸ்துதி யாய்
நடுவிலே பகவத் ஸ்தோத்ரம் ஆக இருக்கிறது –

முதலிட்டு மூன்று ஸ்லோகத்தாலே
ஸ்ரீ பெரிய முதலியாரை நமஸ்கரிக்கிறார் –

————————————————————————

ஸ்லோகம் -1- அவதாரிகை –

முதல் ஸ்லோகத்தில் ஒருவனைக் கவி பாடப் புக்கால்
அவன் ஐஸ்வர்யத்தைச் சொல்லிக் கவி பாடுமா போலே
ஸ்ரீ வைஷ்ணவனுக்கு ஐஸ்வர்யமான ஜ்ஞான வைராக்யங்கள் உடைய பிரகர்ஷத்தை சொல்லி நமஸ்கரிக்கிறார் –

மனமாசு தீரும் அருவினையும் சாரா
தனமாய தானே கை கூடும் –புனமேய
பூந்துழாயான் அடிக்கே போதொடு நீர் ஏந்தி
தாம் தொழா நிற்பார் தமர் -முதல் திருவந்தாதி -43-என்று
ஸ்ரீ வைஷ்ணவனுக்கு தனம் பக்த்யாதிகள் என்று சொல்லிற்று இறே –

நமோ அசிந்த்ய அத்புத அக்லிஷ்ட ஜ்ஞான வைராக்ய ராசயே
நாதாயா முநயே அகாத பகவத் பக்தி சிந்தவே–1-

நமோ –
அஹம் அபி ந மம பகவத ஏவ அஹம் அஸ்மீத் ஏவம் அமமதாம் யோஜயத்யதோ நம இதி -என்கிறபடியே
எனக்கு உரியேன் அல்லேன் –
பெரிய முதலியாருக்கு சேஷம் -என்கிறார் –

நமோ விஷ்ணவே -என்கிறாப் போலே –
நமோ நாதாயா -என்கிறார் உபகார ஸ்ம்ருதி யாலே –

ஓம் நமோ விஷ்ணவே (ஷடத் அக்ஷரீ )-என்றும்
நம இத்யேவ வாதி ந -என்றும்
நம ரிஷிப்யோ மந்த்ர க்ருத்ப்ய -என்றும்
தேஷாமபி நமோ நம -என்றும் சொல்லக் கடவது இறே –

ஸ்ரீ ஈஸ்வர முனிகள் -ஸ்ரீ ரங்க நாதன் என்று திருநாமம் சாற்றுகையாலே
நாதன் என்று திரு நாமம் ஆகிறது –
எப்படிப் பட்டவர் -என்னும் அபேஷையில் சொல்லுகிறது –

அசிந்த்ய –
இவருடைய ஜ்ஞானாதிகள் இன்னாருடைய ஜ்ஞானாதிகள் போலே இருக்கும் என்று
நினைக்க ஒண்ணாது -என்னுதல்
இவ்வளவு என்று ஜ்ஞானாதி கராலும் -பரிச்சேதிக்க ஒண்ணாது -என்கை

அத்புத –
கீழ் இயத்தா ராஹித்யத்தைச் சொல்லுகையாலே-க்ருஹீதாம்சம் அனுசந்தித்தார்க்கு
ஆச்சர்ய அவஹமாய் இருக்கும் -என்கை –
அமுதூரும் என்றக்கால் -இத்யாதியில் க்ருஹீதாம்சம் இனிதாய் இருக்கும் என்றது இறே –

அக்லிஷ்ட –
வ்யாசாதிகளைப் போலே ஸ்வ யதன சாத்திய தபஸ்ஸாலே வந்தது அன்றிக்கே
ததாமி புத்தி யோகம் தம் -என்றும்
மயர்வற மதி நலம் அருளினான் -என்றும் சொல்லுகிறபடியே
பகவத் பிரசாத லப்தம் ஆகையாலே வருத்தம் அற்று இருக்கை-

ஜ்ஞான –
ஜ்ஞானம் ஆவது -சித் அசித் ஈஸ்வர தத்தவங்களை விஷயமாக உடைத்தாய் இருக்கை –
அதாவது –
ஆத்மா ஈஸ்வரனுக்கு அனன்யார்ஹ சேஷம் என்றும்
அசித் ஸ்வரூபம் த்யாஜ்யம் என்றும் –
ஈஸ்வரன் உபயோர் நியந்தா என்றும் -அறிகை –

ஜ்ஞானம் என்றால் இவ் விசேஷத்தைக் காட்டுகிறது
தத் ஜ்ஞானம் அஜ்ஞானம் அதோ அந்ய துக்தம்-என்றும்
வித்ய அந்ய அசில் பனை புணம் -என்றும்
வ்யதிரிக்த விஷய ஜ்ஞானம் அநர்த்தா வஹம் என்றும் அதி சூத்ரம் என்றும் -சொல்லிற்று இறே –

வைராக்ய –
இவ் விலஷண ஜ்ஞானத்தாலே பகவத் வ்யதிரிக்தங்களில்
நிஸ்ப்ருஹராய் இருக்கை –
வேண்டேன் மனை வாழ்க்கையை -பெரிய திருமொழி -6-1-

ராசயே –
ராசி என்று சமூஹம்
ஜ்ஞான இராசே –வைராக்ய ராசயே –
ஜ்ஞான வைராக்யங்கள் ஒன்றாய் இருக்க ராசயே -என்பான் என் -என்னில் –
ஸ்ரீ பகவத் ஸ்வரூபாதிகள் ஜ்ஞான விஷயங்கள் ஆகையாலே பல –
பிதரம் மாதரம் -என்று த்யாஜ்ய விஷயங்களும் பலவாகையாலே சொல்லலாம் –

லோகத்தில் விலஷணர் உடைய ஜ்ஞான வைராக்யங்கள் எல்லாம் இவருடைய
ஜ்ஞான வைராக்யங்களிலே அந்தர்ப்பூதம் ஆம்படி இருக்கையாலே சொல்லுகிறது -என்றுமாம் –

யத் கிஞ்சித் சாது குர்வந்தி யஸ்தத் வேத யத்ச வேத ச மயைத துக்த இதி –
யத் கிஞ்சித் சாத்வ நுஷ்டிதம் கர்ம யச்ச சர்வ சேதன கதம்
விஜ்ஞானம் ததுபயம் யதி யஜ்ஞான கர்மாந்தர்கதம் ச ரைக்வ -இதி -என்றும்
லோகத்தில் அனுஷ்டிதமான கர்மங்களும் ஞானங்களும் யாவன் ஒருத்தன் உடைய
கர்ம ஞானங்களிலே அந்தர்க்கதமாய் இருக்கும் -அவன் தானே கிடீர் ரைக்வன் -என்று பார்த்து சொல்லுமா போலே

முநயே –
ந விவேதாத்மநோ காத்ரம் -என்றும்
பஸ்யந்நபி ந த்ருஷ்ட்வான் -என்கிறபடியே
தேய வஸ்துவை சர்வதா சாஷாத் கரிக்கை
ஏது செய்தால் மறக்கேன் மனனே -பெரிய திரு மொழி -9-3-3- என்றும்
என் நெஞ்சம் அவன் என்றே கிடக்கும் -திருவாய் மொழி -7-3-6- என்றும்
இவர் கிருஷ்ணனை அனுசந்தித்து இருக்க ராஜாவாலும் சமாதி பங்கம் பண்ணப் போயிற்று இல்லை –
ராம மேவா நுபச்யந்த -என்னுமா போலே –

அகாத பகவத் பக்தி சிந்தவே –
பக்தியாவது ஜ்ஞான விசேஷமாய் இருக்க -பக்தியைப் பிரித்துச் சொல்லிற்று –
அதினுடைய ப்ராசுர்யம் சொல்லுகைக்காகவும் –
ப்ரதான்யம் சொல்லுகை தோற்றுகைக்காகவும் –
பக்தி யாகிறது -சிநேக பூர்வம் அனுத்யானம் பக்தி -என்றும்
ஸ்வாமிநி தாசச்ய சிநேக மயீ ஸ்திதி -என்றும் சொல்லுகிறபடியே-
அனுபவ ஆசை -அனுபவிப்பதில் விருப்பம் –

பகவச் சப்தத்தாலே பரம பதத்தில் இருப்பைச் சொல்கிறது –
வாஸூ தேவோ அஸி பூர்ண – என்று ஷாட் குணிய பூர்ணனாய் இறே இருப்பது

அகாத
அஷோப்ய-கலக்க ஒண்ணாத –
அர்த்தாந்தரம் -பரிச்சேதிக்க ஒண்ணாது இருக்கை –
ஒருவரால் நிலை கொள்ள ஒண்ணாது இருக்கை –

சிந்தவே –
காதல் கடலின் மிகப் பெரிது –திருவாய்மொழி -7-3-6-என்றும்
ஆசை என்னும் கடல் -பெரிய திருமொழி -4-9-3- என்றும்
ஈஸ்வரனுக்கும் நிலை கொள்ள ஒண்ணாதே
தாம் அதில் புக்கு அமிழ்ந்தபடியாய் இருக்கை –

அசிந்த்ய அத்புத அக்லிஷ்ட ஜ்ஞான வைராக்ய ராசயே
முனயே அகாத பகவத் பக்தி சிந்தவே நாதாய நம -என்று அந்வயம் –

(பகவத் பக்தி ரசத்துக்கு -ஆழ்ந்ததோர் கடல் போலே இருப்பாரே -கலக்க முடியாதபடி –
பகவத் பக்திக்கு சமுத்திரம் என்றும்
பகவத் பக்தியாகிற சமுத்திரத்தை தம்மிடம் கொண்டவர் என்றுமாம் )

————————————————————————–

ஸ்லோகம் -2- அவதாரிகை
முதல் ஸ்லோகத்தாலே பரத்வ விஷயமான ஜ்ஞானாதிகள் உடைய பிரகர்ஷம் சொல்லிற்று
இந்த ஸ்லோகத்தாலே அவதார விஷயமான ஜ்ஞானாதிகள் ஆகையாலே
அதினுடைய ப்ரக்ருஷ்ட தரத்வம் சொல்லுகிறது
அன்றிக்கே
கீழ் சொன்ன ஜ்ஞானாதிகள் தம்மளவில் பர்யவசியாதே
என்னளவும் வர வெள்ளம் கோத்தது –
என்னவுமாம் –

தஸ்மை நமோ மது ஜிதங்க்ரி ஸரோஜா தத்தவ
ஜ்ஞான அனுராக மஹிமா அதிசய அந்த ஸீம்நே
நாதாயா நாத முநயே அத்ர பரத்ர சாபி
நித்யம் யதீய சரனௌ சரணம் மதீயம்-2-

மது ஜிதங்க்ரி ஸரோஜா -எம்பெருமானுடைய திருவடித் தாமரைகளைப் பற்றின
தத்தவ ஜ்ஞான–உண்மை உணர்ச்சி என்ன
அனுராக –ஆசை என்ன
மஹிமா அதிசய அந்த ஸீம்நே–இவற்றின் பெரு மேன்மைக்கு எல்லை நிலமாயும்
நாதாயா-எனக்கு நாதராயும் இருக்கிற
தஸ்மை நாத முநயே நமோ–அந்த நாத முனிகளுக்கு நமஸ்காரம்
அத்ர பரத்ர சாபி-இவ்வுலகத்திலும் மேல் உலகத்திலும்
நித்யம் யதீய சரனௌ-எப்போதும் -எந்த ஸ்ரீமந் நாதமுனிகளுடைய திருவடிகள்

தஸ்மை நமோ –
நமஸ் தஸ்மை நமஸ் தஸ்மை -என்றும்
நமோ நமஸ்தே ஆஸ்து சஹஸ்ர க்ருத்வ-என்றும் சொல்லுகிறபடியே –
இன்னம் அவர்க்கு அடியேன் -என்கிறார் –

மது ஜீத் –
அநிருத்தராய்வந்து அவதரித்து
முதல் களையான மதுவை நிரசித்தால் போலே
பகவத் ப்ராப்தி பந்தகங்களைப் போக்குமவன் -என்கை –

அங்க்ரி –
அந்த ஸ்வ பாவத்திலே -குணைர் தாஸ்யம் உபாகத -என்று பெரிய முதலியார் தோற்று இருக்கும் படியையும்
அவருடைய அனன்யார்ஹ சேஷத்வமும் சொல்லுகிறது –

ஸரோஜ –
சம்பந்தம் இல்லா விடிலும் விட ஒண்ணாத போக்யதையைச் சொல்லுகிறது –
விகாசம் செவ்வி குளிர்ச்சி பரிமளம் முதலான வற்றுக்குத் தாமரையை ஒரு படிக்குப் போலியாகச்
சொல்லலாய் இருக்கை –

தத்தவ ஜ்ஞான –
தத்வ ஜ்ஞானம் ஆவது –
அவதார விஷய ஜ்ஞானமும்
ஆஸ்ரித பாரதந்த்ர்ய விஷய ஜ்ஞானமும் –
ஜன்ம கர்ம ஸ மே திவ்யம் ஏவம் யோ வேத்தி தத்த்வத
த்யக்த்வா தேகம் புநர் ஜன்ம நைதி மாமேதி ஸோ அர்ஜுன -ஸ்ரீ கீதை -4-9-என்று
தானே அருளிச் செய்தான் இறே –

தஸ்ய தீரா பரிஜா நந்தி யோநிம் -என்றும்
அஹத்வா ராவணம் சங்க்யே-என்றும்
யத் விநா பரதம் த்வாஞ்ச சத்ருக் நஞ்சாபி மாந்த
பவேன் மம ஸூகம் கிஞ்சித் பஸ்மாசாத் குருதாம் சிகி -என்று அருளிச் செய்தான் இறே சக்கரவர்த்தி திருமகன் –
அப்யஹம் ஜீவிதம் ஜ்ஹ்யாம் -என்றும்
ஆத்மாநாம் நாதி வர்த்தேதா -இத்யாதி

அனுராக-
அனுராகம் ஆவது -இவற்றை எல்லாவற்றையும் அனுபவித்தால் அல்லது நிற்க ஒண்ணாத ப்ரேமம் –

மஹிமா அதிசய அந்த ஸீம்நே –
ஜ்ஞான அநு ராகங்கள் உடைய மஹத்த்வத்தின் முடிவே எல்லையாய் இருக்குமவர்க்கு
மகிமா -மஹத்த்வம் –
மனுஷ்ய ஆனந்தமே தொடங்கி-தே யே சதம் – என்கிற க்ரமத்தாலே
ஈஸ்வர ஆனந்தத்திற்கு எல்லையாய் இருக்கும் இருப்பு போலே
இவருக்கும் தத் விஷய ப்ரேமத்துக்கு எல்லையாய் இருக்கும் இருப்பு –

நாதாயா –
அஸ்மத் நாதாயா –

நாத முநயே –
இத் தர்சனத்துக்கு நாதனே -என்று
மது சூதனை யன்றி மற்று இலேன் -திருவாய்மொழி -2-7-6-என்று இருக்கும்
மகாதமாக்களாலே கொண்டாடப் படுவாராய் ஆயிற்று –
தத்வ ஹிதங்களை திரு வுள்ளத்திலே கூடு பூரிக்குமவர் –
தஸ்மை நம -என்று அந்வயம் –

உபகார ஸம்ருதியாலே அவரை ஆதரித்தீர் ஆகில்
ஐஹிக ஆமுஷ்மிகங்களுக்கு வேண்டாவோ -என்று பகவத் அபிப்ராயமாக அருளிச் செய்கிறார் –
அத்ர பரத்ர சாபி –
சம்சாரத்திலும்
பிராப்யமான நித்ய விபூதியிலும் –

நித்யம் –
நித்ய அக்னி ஹோத்ரம் போல் அன்றிக்கே
அனவரதம் -என்கை –

யதீய சரனௌ –
என்னை இவ் வவஸ்தாபன்னனாக்கிய திருவடிகள் –

சரணம் –
உபாய உபேயங்கள் இரண்டும்

மதீயம் –
பெரிய முதலியார் திருவடிகள் ஆகில் எனக்கு இரண்டுமாய் இருக்கும் -என்கை –
அதாவது -சம்சார தசையிலே பகவானே உபாயம் என்று உபதேசித்து
உபாயாத்யவசாயத்துக்கு அடியான ஸ்வ அனுக்ரஹத்தாலே
பகவத் பிராவணயத்தை விளைத்தும்
பிராப்ய தேசத்தில் சென்றால் நித்ய ஸூரிகள் கோஷ்டியில் பிரவேசிப்பித்தும்
பின்பு நித்ய ஸூரிகளோபாதி உத்தேச்யமாய் இருக்கையாலும் -அப்படிச் சொல்கிறது –

அத்ர பரத்ர சாபி நித்யம் யதீய சரனௌ மதீயம் சரணம்
மது ஜிதங்க்ரி சரோஜ தத்தவ ஜ்ஞான அனுராக மஹிம
அதிசய அந்த சீம்னே நாதாய தஸ்மை
நாத முனயே நம -என்று அந்வயம் –

அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ —
வானவர் நாடு –
ஆச்சார்யர் திருவடிகளே உத்தேச்யம்
சரணம் -உபாயம் உபேயம் இரண்டுமே என்றபடி -)

——————————————————————————-

ஸ்லோகம் -3- அவதாரிகை –

த்ருஷார்த்தனுக்குத் தண்ணீர் குடிக்கப் பர்யாப்தி பிறவாதாப் போலே
பின்னையும் அவர்க்கு அடியேன் -என்கிறார்
ஆஸ்ரிதரை ஒரு காலும் நழுவ விடாத அச்யுத விஷயத்திலே
ஜ்ஞான பக்த்யாதிகள் ஆகையாலே
தம்மளவில் பர்யவசியாதே
பகவத் விஷயத்துக்கு அபூமியான சம்சாரம் எங்கும்
வெள்ளம் இடும்படியான இவர் உடைய
ஜ்ஞான பக்திகள் உடைய
பிரக்ருஷ்டதையைச் சொல்லுகிறது –

பூயோ நமோ அபரிமித அச்யுத பக்தி தத்தவ
ஜ்ஞாநாம் ருதாப்தி பரிவாஹ ஸூ பைர் வசோபி
லோகே அவதீர்ண பரமார்த்த சமக்ர பக்தி
யோகாய நாத முநயே யமிநாம் வராய-3-

அபரிமித அச்யுத பக்தி –அளவில்லாத பகவத் பக்தி என்ன
அபரிமித தத்தவ ஜ்ஞாநம்–அளவில்லாத தத்வ ஞானம் என்ன
அம்ருதாப்தி பரிவாஹ ஸூபைர்–இவை யாகிற அமுதக் கடலின் பரிவாஹம் போன்று பிரசன்ன சீதளங்களான
வசோபி-ஸ்ரீ ஸூக்தி களாலே
லோகே -இவ்வுலகத்தில்
அவதீர்ண பரமார்த்த –அவதாரம் செய்து இருக்கிற பரம புருஷார்த்தமாயும்
சமக்ர பக்தி யோகாய –பரி பூர்ணமாயும் இருக்கிற பக்தி யோகத்தை உடையவராய்
யமிநாம் வராய–யோகிகளின் சிறந்தவரான
நாத முநயே -பூயோ நமோ—நாத முனிகளுக்கு மறுபடியும் நமஸ்காரம்

பூயோ நமோ
புனஸ்ஸ நம
நமோ நமஸ்தே -என்கிறபடியே

அபரிமித –
கிடந்த பாயிலே வெள்ளம் கோத்தால் போலே
இருந்த இடங்களிலே வந்து கிட்டும்படி
எல்லை இறந்து இருக்கை –

அச்யுத –
நியந்த்ருத்வ ஸ்வாமித்வாதி கல்யாண குணங்களாலே குறை வற்று இருக்கை -என்னுதல் –
ஏக ரூபமாய் இருக்கும் -என்னுதல்
என்றும் ஆஸ்ரித அர்த்தமாய் இருக்கும் இருப்பை நழுவ விடாதவன் -என்னுதல் –
ஆர்ந்த புகழ் அச்சுதன் -திருவாய்மொழி -3-5-11- என்றும்
நமன் தமர்க்கு அரு நஞ்சினை அச்சுதன் தன்னை -திருவாய்மொழி -3-6-8-என்கிறபடியே
ஆஸ்ரிதரை தாம்தாம் கையிலும் பிறர் கையிலும் காட்டிக் கொடாதவன் -என்னுதல் –

பக்தி தத்தவ ஜ்ஞாநாம் ருதாப்தி பரிவாஹ ஸூபைர் வசோபி –
பக்தி தத்வ ஜ்ஞானங்கள் ஆகிற
அம்ருதாப்தி யினுடைய பரிவாஹ ரூபமான
ஸூபமான வசஸ் ஸூக்களாலே-
உபாயம் ஈஸ்வரன் ஆகையாலே ஜ்ஞான பக்திகள் போக ரூபமாய்
அபரிச்சின்னமாய் இருக்கும் -என்கை –

பரிவாஹம் ஆவது -அவ்வவ ரஷண அர்த்தமாக
அதிக ஜல நிர்க்க மனஸ் ரோதஸ்ஸூ –
வசஸ் ஸூக்களுக்கு ஸூபத்வம் ஆவது –
அவிஸ் தர்ம சந்திக்தம் -இத்யாதிகளை உடைத்தாய் இருக்கை

லோகே –
பகவத் பக்திக்கு மேட்டு மடையான சம்சாரத்திலே
சைஷா பார்க்கவீ வாருணீ வித்யா பரமே வ்யோமன் ப்ரதிஷ்ட்டிதா -என்று
பரம பதத்தில் பரிமாறக் கடவ பக்தியை
நான் முகனார் பெற்ற நாட்டுளே நற்பாலுக்கு உய்த்தனன் -திருவாய்மொழி -7-5-1-என்கிறபடியே
சம்சாரத்தில் நடையாடும்படி பண்ணினபடி –

அவதீர்ண –
ஈஸ்வராவதாரம் போலே இறே
ஸ்வயம் பிரயோஜனமான பக்த்யவதாரம் –

பரமார்த்த –
பரம பிரயோஜன ரூபமாய் இருக்கை –
சமக்ர –
அதனில் பெரிய அவா -என்னும்படி குறைவற்று இருக்கை –

பக்தி யோகாய –
பக்தியை உடையரான –
உக்தமான பக்தி தத்வ ஜ்ஞானங்கள் இரண்டையும்
பக்தி சப்தத்தாலே சொல்லிற்று

நாத முநயே யமிநாம் வராய –
முடியானே -திருவாய்மொழி -3-8- யில் சொல்லுகிற படியே
அவனை அல்லது அறியாத கரணங்களை உடையராய் இருப்பார்க்குத் தலைவர் ஆனவருக்கு
வாய் அவனை அல்லது வாழ்த்தாது -முதல் திருவந்தாதி -11-என்று
இருக்கும் அவர்களுக்கு வரணீயராய் இருக்குமவர் -என்றுமாம்-

அபரிமித அச்யுத பக்தி தத்வ ஜ்ஞானம்
அம்ருதாப்தி பரிவாஹ ஸூ பைர் வசோபி
லோகே அவதீர்ண பரமார்த்த சமக்ர பக்தி யோகாய
யமிநாம் வராய நாத முனயே பூயோ நம -என்று அந்வயம்-

(வசோபி – ஸ்ரீ -ந்யாய தத்வம் -கிரந்தம் ஸ்ரீ தேசிகன் போன்றார் காட்டி அருளி உள்ளார்கள்
நித்ய கால ஷேப ஸ்ரீ ஸூக்திகளும் உண்டே
பக்தி யோகம் -ஸ்ரீ -குருகை காவல் அப்பனுக்கு பிரசாதித்து அருளிய யோக சாஸ்திரமும் –
ஸ்ரீ -மணக்கால் நம்பி போல்வாருக்கு சாதித்து அருளிய பிரபத்தி சாஸ்திரமும் –
பரமார்த்த -சமக்ர -இரண்டு விசேஷணங்கள்-பரம புருஷார்த்தம் என்றும் -பரி பூர்ணம் -என்றும் –
ஸ்வயம் பிரயோஜனம் என்றதாயிற்று -)

———————————————————————————

ஸ்லோகம் -4- அவதாரிகை –

பெரிய முதலியார் ஜ்ஞானத்துக்கு –
லோக பரிக்ரஹம் மாத்ரம் அன்றிக்கே
வேதவிதக்ரேசர பராசரானுமதியாலே
ப்ராமாணிகத்வம் உண்டு என்று
இவ்வர்த்தத்தின் உடைய ப்ராமாணிகத்வம் சொல்லுகிறது
கிஞ்ச
இவர்க்கும் ஸ்ரீ பராசர பகவானுக்கும் ஸ்வபாவ ஐக்கியம் உண்டு
கிருஷ்ண ப்ராவணயமும்
லோகத்துக்கு பண்ணின ஔதார்யமும்
இருவருக்கும் உண்டு
அத்தாலும் அவரை நமஸ்கரிக்கிறார் –

தத்த்வேன யஸ் சித் அசித் ஈஸ்வர தத் ஸ்வபாவ
போக அபவர்க்க தத் உபாய கதீ உதார
ஸ்ந்தர்ஸ்யன் நிரமிமீத புராண ரத்னம்
தஸ்மை நமோ முநிவராய பராசராய –4-

தத்த்வேன –
ஜ்ஞாதவ் யார்த்தங்களை உள்ள படியே காட்டுகை –
ச ஹோவாச வியாச பாராசர்ய -என்கிற பிரமாண பிரசித்தியை பிரகாசிப்பிக்கிறது –

சித் –
ஆத்மா ஸூ ததோ அஷரஸ் சாந்தோ நிர்க்குண ப்ரக்ருதே பர
ப்ரவ்ருத்த்ய பசயௌ நாஸ்ய சைகஸ் யாகில ஜந்துஷூ -ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-13-71-இத்யாதி –

இதில் நிர்க்குண த்வம் ஆவது –சத்வாதி குண ராஹித்யம் .
ஏக ஸ்யாகில ஜந்துஷூ -தேவ திர்யக் மனுஷ்யாக்ய சர்வ ப்ரானிஷூ ஏகஸ்ய -ஜ்ஞானைக ஆகாரத யாசம இத்யர்த்த -என்றும்
நிர்தோஷம் ஹி சமம் ப்ரஹ்ம -என்றும்
பண்டிதாஸ் சம தர்சின -இதி பகவதைவோக்தம்-

அசித் –
அசம்ஜ்ஞா வத்தான அசேதனம் –
விகார ஜநநீம் அஜ்ஞாம்-இத் யுபநிஷத்
தத்ராபி பராசர –
த்ரிகுணம் தஜ் ஜகத் யோனி அநாதி ப்ரபவாப்யயம் அஷய்யம் -இத்யாதி

ஈஸ்வர
உபயோர் நியந்தாவான ஸ்வாமி –

தத்ராபி பராசர –
பரமாத்மா ச சர்வேஷாம் ஆதார பரமேஸ்வர
விஷ்ணு நாமா ச வேதேஷூ வேதாந்தேஷூ ச கீயதே -என்றும்
பர பராணாம் பரம பரமாத்மாத்ம சம்ஸ்தித
ரூப வரணாதி நிர்தேச விசேஷண விவர்ஜித
சர்வத்ரா சௌ சமஸ்தஞ்ச வசத் யத்ரேதி வை யத
ததஸ் ச வாஸூ தேவாதி வித்வத்பி பரிபட்யதே -இத்யாதி –

தத் ஸ்வபாவ-
தேஷாம் ஸ்வ பாவ தத்ர ஸ ச –
ப்ரதாநஞ்ச புமாம்ச்சைவ சர்வ பூதாத்மா பூதா
விஷ்ணு சக்த்யா மகா புத்தே வருதௌ சம்ச்ரய தரமிநௌ-இத்யாதி

போக –
ப்ரஹ்மாதி பிபீலி காந்தமான பத்த சேதன வர்க்கத்துக்குக்
கர்ம அனுகுணமாக தாரதம்யேன அனுபாவ்யமான சப்தாதிகள் –

அப வர்க்க –
சப்தாதிகள் உடைய அல்ப அஸ்திரத்வாதி தோஷ தர்சனத்தாலே பீதரான சேதனருக்கு
துக்க நிவ்ருத்தி ரூபமானஆத்மபிராப்தியும் -ஸூகைகதமான பகவத் பிராப்தியும் .-

தத்ராபி ஸ –
யோகி நாமம்ருதம் ஸ்தாநம் ஸ்வாத்ம சந்தோஷ காரிணாம் –
ததச்ய த்ரிவித ஸ்யாபி துக்க ஜாதஸ்ய -இத்யாரப்ய –
நிரஸ்தாதிசய ஆஹ்லாத ஸூ காபாவைக லஷ்ணா
பேஷஜம் பகவத் ப்ராப்தி ஏகாந்தாத் யந்திகீ மதா -இத்யாதி –

தத் உபாய கதீ –
போக மோஷங்கள் உடைய சாதன பேதங்களை
நித்ய நைமித்திக காம்ய கர்ம அனுஷ்டானம் போகச்ய-
சாங்கா நுஷ்டித கர்மசாத் யஜ்ஞானயோகாதி ஆத்மப்ராப்தே
ஜ்ஞான கர்மானுக்ருஹீத பக்தி பிரபதிஸ்ஸ பகவத் பிராதே

உதார-
சம்சாரிகள் பக்கல் அர்தித்வம் ஆதல் -பிரயோஜனம் ஆதல் -நினையாதே
இவர்கள் அனர்த்த பரிஹாரமே பிரயோஜனமாக உபகரித்து அல்லது நிற்க மாட்டாத மேகம் போலே உபகரித்தவர் –

ஸ்ந்தர்ஸ்யன் –
சம்சய -விபர்யய -ரஹிதமாக -பிரத்யஷிப்பியா நின்று கொண்டு –

நிரமிமீத –
அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ பொருளை -நான் முகன் திருவந்தாதி -1- என்கிறபடியே
துரவகாஹமான வேதார்த்தத்தை அல்ப க்ரந்தாத்தாலே பண்ணினான் -என்கை –

புராண ரத்னம்-
புராணம் ஆவது -சர்க்கச்ச பிரதி சர்க்கச்ச -இத்யாரப்ய
புராணம் பஞ்ச லஷணம் -என்கிற படியே பஞ்ச லஷனோபேதமான கிரந்த சாதம்
புராபி நவம் புராணம் -என்றுமாம் –
அதாவது -ஸ்வ ரசத்தை என்றும் ஒக்க ஒருவரால் அழிக்க ஒண்ணாது இருக்கை –
ரத்னம் –
அர்த்த பிரகாசகமாய் இருக்கையும் –
சங்க்ரஹமாய் இருக்கையும் –
ஆபத் ரஷகமாய் இருக்கையும் –
இந்தப் புராணாதிகாரிக்கு லோக பரிக்ரஹம் சித்திக்கையும் –

தஸ்மை நமோ – முநிவராய –
தனக்கு வரம் கொடுத்த வசிஷ்ட புலஸ்த்யர்களுக்கு
முத்ரிதா முத்ரித பிரதி முத்ரிதராய்
அத்தாலே அவர்கள் படியை உடையவன் -என்னுதல் –
முநிநாம் வரணீயாய் – என்கிறபடியே -அவர்களுக்கு ஆதரணீயன் -என்னுதல்

பராசராய —
பரராகிரார் -பாஹ்ய குத்ருஷ்டிகள்
அவரை பிரமாண சரங்களாலே ஹிம்சித்து
வைதிக மரியாதையை ஸ்தாபித்தான் -என்னுதல் –
இந்திரிய ஜயத்தாலே ரஜஸ் தமஸ் ஸூக்களை ஜெயித்தான் -என்னுதல்

யா உதார சித் அசித் ஈஸ்வர
தத் ஸ்வ பாவ போக அபவர்க்க தத் உபாய கதீ
தத்த்வேன சந்தர்சயன்
புராண ரத்னம் நிரமிமீத
முநிவராய பராசராய நம -என்று
அந்வயம்

——————————————————————

ஸ்லோகம் -5- அவதாரிகை –

இந்த ஜ்ஞானம் அதிக்ருதாதிகாரமாய்ப் போகாமே சர்வாதிகாரமாம் படி
த்ராவிடமான ப்ரஹ்ம சம்ஹிதையை
மயர்வற மதி நலம் அருளினான் -என்கிற பக்தியாலே வாசிதமாக்கி
மரங்களும் இரங்கும் வகை -திருவாய் மொழி -6-5-9-என்கிற
தம்முடைய ஆகர்ஷகமான ஈரச் சொல்லாலே அருளிச் செய்கையாலும்
பெரிய முதலியாருக்கு இந்த ஜ்ஞானத்துக்கு உத்பாதகம் ஆழ்வார் திருவடிகள் ஆகையாலும்
இவர் திருவடிகளிலே விழுகிறார் –

எத்திறம் -திருவாய்மொழி -1-3-1- என்றும்
நெய்யுண் வார்த்தையுள் அன்னை கோல் கொள்ள -திருவாய்மொழி -5-10-3- என்றும்
எல்லாம் கண்ணன் -திருவாய்மொழி -6-7-1- -என்றும்
பெரிய முதலியாரையும்
ஸ்ரீ பராசர பகவானையும் போலே
கிருஷ்ண குணவித்தராய் இருக்கும் படியையும் நினைத்து
ஆழ்வார் திருவடிகளிலே சரணம் புகுகிறார் –

மாதா பிதா யுவதயஸ் தனயா விபூதி
சர்வம் யதேவ நியமேன மதநவ்யாநாம்
ஆத்யஸ்ய ந குலபதேர் வகுளாபி ராமம்
ஸ்ரீ மத ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா –5-

மாதா –
உத்பத்திக்கு முன்னே வரம் கிடந்தது
பெருகைக்கு வருந்தி
பத்து மாசம் கர்ப்ப தாரணம் பண்ணி
பிரசவ வேதனையை அனுபவித்து
அஸூத்திகளையும் மதியாதே
பால்ய தசையிலே ஆதரித்து
பகவான் ஆனாலும் இவன் புருஷ பாஷணம் பண்ணப் பொறுத்து
அகல இசையாதே
அவன் பிரியத்தையே வேண்டும் –
மாதாவைப் போலே உபகாரகனாய் இருக்கை –

பிதா –
அவள் பாத்ர மாத்ரமாம் என்னும்படி
உத்பாதகனாய்
என்றும் ஒக்க ஹித பரனான பிதாவும்

யுவதயஸ் –
இருவரையும் மறந்து விரும்பும்
யுவதிகளைப் போலே நெஞ்சுக்கு இனியராய் இருக்கை

தனயா –
அவளுடைய யௌவனத்தை அழிய மாறிப் பெற்றவனாய்
பால்யத்தில் ஸூககரனாய்
பக்வ தசையில் ரஷகனாய்
ஆமுஷ்மிகத்தில் நிரய நிஸ்தாரகனான-புத் -என்னும் நரகத்தை -தாண்டுவிப்பவன் –
புத்ரனைப் போல் இருக்கை –

விபூதி –
விபவம் இல்லாத போது இவை எல்லாம் அசத் சமமாய் இருக்கையாலே
இவற்றை நன்றாக்கும் ஐஸ்வர்யம் போலே உத்தேச்யமாய் இருக்கை –

சர்வம் –
அனுக்தமான சர்வ போகங்களுமாய் இருக்கை –

யதேவ –
அவதாரண்த்தாலே -சேலேய் கண்ணியர்-திருவாய் மொழி -5-1-8-
என்று இருக்கும் ஆழ்வார் நினைவு இன்றி இருக்கை –

நியமேன –
என்றும் ஒக்க அவருக்கு பிரியம் என்று போமது ஒழிய
ப்ராமாதிகமாகவும் புறம்பு போவது அன்றிக்கே இருக்கை –

மதநவ்யாநாம் –
வித்யயா ஜந்ம நா வா -என்று ஸூர்யன் வாயு இருவருக்கும் வித்யை ஜந்ம புத்திரன் தன்மை அடைந்த ஹனுமான் –
உபய சந்தான ஜாதருக்கும்

ஆத்யஸ்ய –
வைதிக சந்தானத்துக்கு பிரதம ஆசார்யராய் இருக்கை –

ந குலபதேர் –
ஸ்திரீக்கு பர்த்ரு குலம் போலே
கோத்ர ரிஷிகளும் அவரே என்கை –

வகுளாபி ராமம் –
திரு மகிழ மாலையாலே அலங்க்ருதமாய் உள்ளத்தை –
மகிழ் அலங்காரமான திருவடிகள்
இத்தாலே திருவடிகளில் பரிமளத்தாலே வந்த போக்யதையைச் சொல்லுகிறது –
நல்லடி மேல் அணி நறு துழாயை -திருவாய் மொழி -4-2-2-வ்யாவர்த்திக்கிறது –

ஸ்ரீ மத –
ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யோடே நித்ய சம்யுக்தமாய் இருக்கை –
அப்ர வீச்ச ததா வாக்யம் ஜாதக்ரோதா விபீஷண
அந்தரி ஷகதஸ் ஸ்ரீமான் ப்ராதரம் ராஷஸாதிபம் -யுத்த -16-17-
பரமாபதமா பன்னோ மனஸா சிந்தயத் ஹரிம்
ஸ து நாக வர ஸ்ரீ மான் நாராயண பராயண -ஸ்ரீ விஷ்ணு தர்மம் -69-47-
சர்வ பரியகரஸ் தஸ்ய ராம ஸ்யாபி சரீரத
லஷ்மனோ லஷ்மி சம்பன்னோ பஹி ப்ராண இவாபர -பால -18-28-என்று
பகவத் பிரத்யாசத்தியை ஐஸ்வர்யமாக சொல்லக் கடவது இறே –
என்னுடைய சம்பத்துக்கு அடியான ஐஸ்வர்யத்தை உடையார் -என்றுமாம்

ததங்க்ரி யுகளம் –
அது -என்னும் அத்தனை ஒழிய
பேசி முடிக்க ஒண்ணாது -என்கை –

யுகளம் –
சேர்த்தியால் வந்த அழகை உடைத்தாய் இருக்கை –

ப்ரணமாமி மூர்த்நா –
ஆழ்வார் உடைய திருவடிகளை நினைத்த வாறே
நம -என்று நிற்க மாட்டாதே
அவர் திருவடிகளிலே தலை சேர்க்கிறார் –

கீழ் உபகாரகரை ஆஸ்ரயித்த இத்தால் செய்தது
முமுஷூவுக்கு உபகாரகரே சேஷித்வ பிரதிபத்திக்கு விஷய பூதரும் ஸ்துத்யரும்
என்னும் இடம் சொல்லிற்று ஆயிற்று

ஒருவருக்கு சேஷிகள் இருவராம் படி இருக்கை எங்கனே -என்னில்
ஸ்ருதி சேஷித்வம் யாகத்துக்கும் புரோடாசத்துக்கும் உண்டானால் போலே
ஈஸ்வரன் பிரதான சேஷியாய்
ததீயர் த்வார சேஷிகளாம் இடத்தில் விரோதம் இல்லை

அதவா
நிருபாதி சேஷி அவன்
தத் சம்பந்தம் அடியாக வந்தது ஆகையாலே பாகவத சேஷித்வம் சோபாதிகம் என்றுமாம் –

தமக்கு ஸ்தோத்ர ஆரம்ப ஹேதுவான
ஜ்ஞான பக்த்யாதிகள்
பிதா மஹோபாத்ததனம் -என்கைக்காக-

முதல் மூன்று ஸ்லோகத்தாலே
பெரிய முதலியார் உடைய ஜ்ஞான பக்த் யாதிக்யம் -சொன்னார்
நாலாம் ஸ்லோகத்தாலே -இவ் வர்த்தம் த்ரைவித்ய வ்ருத்தானுமதம் -அதாவது –
வைதிகரும் பெரியோருமான பராசரால் அனுமதிக்கப் பட்டது -என்கிறார் –
ஐஞ்சாம் ஸ்லோகத்தாலே இவருக்கு இந்த ஜ்ஞானம் ஆழ்வாராலே வந்தது -என்கிறார் –

மத் அன்வயாநாம் யதேவ நியமேன
மாதா பிதா யுவதயஸ் தனயா விபூதிஸ் சர்வம்
ஆத்யஸ்ய ந குலபதே வகுளாபி ராமம்
ஸ்ரீ மத் அங்க்ரி யுகளம் மூர்த்நா ப்ரணமாமி -என்று
அந்வயம் –

(ஆத்யஸ்ய ந குலபதே-எங்கள் பிரபன்ன குடித் தலைவர் -விப்ரர்க்கு கோத்ர-சரண -ஸூத்ர கூடஸ்தர்
பராசர பாராசார்ய போதாய நாதிகள்–பிரபன்ன ஜன கூடஸ்தர் -பராங்குச பரகால யதிவராதிகள்-
ஆத்யஸ்ய ந குலபதே–ஸ்ரீ லஷ்மி நாதனை சொல்லி -ஸ்ரீ மத் அங்க்ரி யுகளம்-ஸ்ரீ சடகோபரை சொல்லிற்று என்றுமாம் –
நம்மாழ்வாரை சொல்லுவதே உசிதம் என்பது பூர்வர்கள் திரு உள்ளம் –
மத் அன்வயாநாம்-இவருக்கு முன்பு உள்ளோர்க்கும் பின்பு உள்ளோர்க்கும் -ஸ்ரீ வைஷ்ணவ சந்தானங்களுக்கு அனைவருக்கும்
ஆழ்வார் திருவடிகளே சர்வஸ்வம் -என்றதாயிற்று -வகுளாபி ராமம்–மகிழ் மாலை மார்பினன் -வகுளாபரணர்)

————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading