ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம்- ஸ்லோகம் -15-16-17-18-19-20—–ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –

ஸ்லோகம் -15- அவதாரிகை –

நாவேஷ ஸே – யில் –வேதாந்த பிரதமபாத உக்த காரணத்வம் சொல்லுகிறது –
ஸ்வா பாவிக-த்திலே -குண உபசம்ஹார பாதார்த்தம் சொல்லுகிறது
க ஸ்ரீஸ் ஸ்ரீய -வில் த்ரிபாதத்தில் அர்த்தம் சொல்லுகிறது
வேத அபஹார த்தில் -உப ப்ரும்ஹணமான அர்த்தம் சொலுகிறது –
கஸ்யோதர -வில் பிரமாண அனுக்ருஹீத தர்க்க சித்த பரத்வம் சொல்லுகிறது –

இனி -இதில் இப்படி
த்ருட பிரமாண சித்தமாய் இருக்க
ஆசூரீம் யோநிமா பன்னா -ஸ்ரீ கீதை -16-20-என்கிறபடியே ஆசூர பிரகிருதிகள் அவனை இழப்பதே
என்று அவர்கள் இழவுக்கு இன்னா தாகிறார்

அதவா
யாரும் ஓர் நிலைமையன் என அறிவரிய எம்பெருமான் -திருவாய் மொழி -1-3-4-என்று
துஷ் பிரகிருதிகள் கண் படாது ஒழியப் பெறுவதே
இவ் விலஷண விஷயம் -என்றுமாம் –

த்வாம் சீல ரூப சரிதை பரம ப்ரக்ருஷ்ட
சத்த் வேன சாத்த்விக தயா ப்ரபலைச்ச சாஸ்த்ரை
பரக்யா ததைவ பரமார்த்த விதாம் மதைச் ச
ந வ ஆஸூர ப்ரக்ருதய ப்ரபவந்தி போத்தும்-15-

த்வாம்-
சர்வாதிகனாய் -இவ் வாத்மாவுக்கு வகுத்த உன்னை

சீல –
மஹததோ மந்தை -நா வேஷ ஸே -என்கிற ஸ்லோகத்திலே சொல்லுகிற ஸ்வ பாவம்
அதாகிறது -சர்வாதிகனாய் இருந்து வைத்து
பஹூஸ்யாம் -என்கிறபடியே இவற்றின் இழவு பேறு தன்னதாய்
அபிமானியும் தானேயாய் இருக்கை-

ரூப –
க புண்டரீக நயன -என்கிற வடிவு
ஹிரண்மய புருஷோ த்ருஸ்யதே –தஸ்ய யதா கப்யாசம் புண்டரீகம் ஏவம் அஷிணீ –
நீல தோ யத மதயஸ்தா –
ந பூத சங்க சம்ஸ்தானோ தே ஹோ அஸ்ய பரமாத்மன
ந தஸ்ய ப்ராக்ருதா மூர்த்தி மாம் ஸ மஜ்ஜாச்தி சம்பவா -இத்யாதி

சரிதை –
க்ரந்த்வா நிகீர்யா புனருத் கிரதி-என்றும்
வேத அபஹார குரு பாதக என்றும் சொல்லுகிற அதி மானுஷ சேஷ்டிதங்களாலும்

பரம ப்ரக்ருஷ்ட சத்த் வேன –
பரம சத்த்வ சமாஸ்ரய க -என்று ஸூத்த சத்வமயமான விபூதி யோகத்தாலும்
ஷயந்த மஸ்ய ரஜஸ பராகே-
தம்ஸ பரஸ்தாத்
ஸ்வ சத்தா தாரகம் சத்த்வம் மிஸ்ர சத்த்வாத் விலஷணம் -இத்யாதி

சாத்த்விக தயா ப்ரபலைச்ச சாஸ்த்ரை –
வேதத்தில் சாத்விகருக்கு ஹித அனுசானம் பண்ணும் ஜ்ஞான பாகத்தாலும்
அக்னேஸ் சிவச்ய மகாத்மியம் -இத்யாரப்ய
சாதத் விகேஷ்வத கல்பேஷூ மாஹாத்ம்ய மதிகம் ஹரே -என்று
ஸ்ரீ மாத்ச்ய புராணத்திலே சத்வ உத்ரிக்தனான ப்ரஹ்மாவின் வாக்கியம் ஆகையாலே
பிரபலமான சாஸ்த்ரங்களாலும்

பரக்யாத தைவ பரமார்த்த விதாம் மதைச்ச –
பிரக்யாதமான தைவத்தின் உடைய யதார்த்த வித்துக்கள் உடைய மதங்களாலும்
சிருஷ்டி வாக்கியம் -நாராயண அனுவாகம் -ஸூபால உபநிஷத்
அந்தர்யாமி ப்ரஹ்மணாதிகளில் சர்வாதிகனாக பிரசித்தனாய் இருக்கை –

ஏவம் விசிஷ்டம் -நைவாஸூர ப்ரக்ருதய ப்ரபவந்தி போத்தும் –
த்வாம் ஆசூர பிரக்ருதய போத்தும் இவ ந பிரபவந்தி –
ஆசூரீம் யோநிமா பன்னா -இத்யாதி

பிரக்யாததைவ பரமார்த்த வித்துக்கள் -என்கிறது
ஸ ஹோவாச வியாச பாராசர்ய -என்கிற பராசர பகவான்
யாதவை கிஞ்ச மனுரவதத் தத் பேஷஜம் -என்கிற மனு
வேதாசார்யனான வேத வியாசன்’வாஜசனேய பிரசித்தனான யாஜ்ஞ வல்க்யன்
நமஸ் சௌநகாய -என்று வைதிக அக்ரேசர் சொல்லும் ஸ்ரீ சௌநகன்
ஏவம் பூதனான ஆபஸ்தம்பன்
அயோ நிஜனாய் ஸ்ரீ இராமாயண ப்ரவர்த்தகனான வால்மீகி
ஆபோ நாரா இதி ப்ரோக்தா ஆபோ வை நர ஸூ நவ -இதி
வசிஷ்ட புலஸ்திய ருக்மாபம் ஸ்வப்னதீ கம்யம் இதி மனு

ஷேத்ரஜ்ஞ்ஸ் யேச்வர ஜ்ஞாநாத் விஸூத்தி பரமா மதா -இதி யாஜ்ஞ் வல்க்யன்
பூ பிராணி நச் சர்வ ஏவ குஹாச யஸ்ய -இதி ஆபஸ்தம்ப
பவான் நாராயணோ தேவ -இதி வால்மீகி -என்கிற இவர்களை
ஏவம் விசிஷ்டம் -த்வாம் ஆசூர ப்ரக்ருத்ய
க்ரூர கர்மக்களான பேர்கள் சர்வாதிகரான தேவரீரை

போத்தும் இவ ந பிரபவந்தி
அறிக்கைக்கு ஆன சமர்த்தர்கள் அன்று ‘

ஆசூரீம் யோநிமா பன்னா -இத்யாதி-

(வேடன் வேடுவிச்சி குரங்கு இடையன் இடைச்சி -ஒரு நீராக கலந்த சீலம் –
பரக் யாததை வ பரமார்த்த விதாம்–ப்ரக்யாத பதம் தைவத்துக்கு விசேஷணம் என்பர் பெரியவாச்சான் பிள்ளை
தைவ பரமார்த்த நாராயண அநுவாகம்-ஸூபால உபநிஷத் – அந்தர்யாமி ப்ராஹ்மணம் –
இவற்றில் பிரசித்தமான பரம புருஷன் உண்மை நிலையை
கண்டு அறிந்த பரமார்த்த வித்துக்கள் -வியாசர் பராசரர் வால்மீகி மனு யாஜ்ஞ வல்க்யர் ஸுநகர் ஆபஸ் தம்பர்
ஆழ்வார்கள் போன்றவர்களே என்றவாறு )

———————————————————————-

ஸ்லோகம் -16- அவதாரிகை –

மஹாத்மா நஸ்து மாம் -இத்யாதிகளில் சொல்லுகிறபடியே
உன்னைப் பெரும் சத் பிரகிருதிகள் காணப் பெறுவதே -என்றும்
யாரும் ஓர் நிலைமையன் என அறிவு எளிய எம்பெருமான் -என்று
அது தன் பேறு என்றும் இருக்கிறார் –

மஹாத்மா நஸ்து மாம் பார்த தைவீம் ப்ரக்ருதிமாஸ்ரிதா:
பஜந்த்யநந்யமநஸோ ஜ்ஞாத்வா பூதாதிமவ்யயம்-ஸ்ரீ பகவத்கீதை-9-13-

து பார்த-ஆனால் பார்த்தா,
தைவீம் ப்ரக்ருதிம் ஆஸ்ரிதா:-தெய்விக இயல்பைக் கைக் கொண்ட,
மஹாத்மாந:-மகாத்மாக்கள்,
மாம் பூதாதிம் அவ்யயம் ஜ்ஞாத்வா-என்னை எல்லா உயிர்களுக்கும் முதல் என்றும், அழிவற்றவன் என்றும் அறிந்து,
அநந்யமநஸ:-வேறு எதிலும் நாட்டமில்லாத மனதுடன்,
பஜந்தி-வழிபடுகிறார்கள்.
பார்த்தா, மகாத்மாக்கள் தெய்விக இயல்பைக் கைகொண்டு பூத முதலும் கேடற்றவனுமாகிய
என்னை வேறு மனம் இன்றி வழிபடுகிறார்கள்

உல்லங்கித த்ரிவித சீம சமாதி சாயி
சம்பாவனம் தவ பரிப்ரடிம ஸ்வ பாவம்
மாயா பலே ந பவதா அபி நிகூஹ்ய மாநம்
பஸ்யந்தி கேசித் அநிஸம் த்வத் அநன்ய பாவா–16-

உல்லங்கித த்ரிவித சீம சமாதி சாயி சம்பாவனம் தவ பரிப்ரடிம ஸ்வ பாவம் –
த்ரிவித பரிச்சேத ரஹிதமாய்
சமாதிக சம்பாவனையும் கடந்துள்ள
உன்னுடைய ப்ரபுத்வத்தை
விபுத்வாத் தேச பரிச்சேத ரஹித
நித்யத்வாத் கால பரிச்சேத ரஹித
சர்வ பிரகாரித்வேன ப்ருதக் ஸ்திதி யோக்ய அவஸ்த அந்தராபாவத் வஸ்து பரிச்சேத ரஹித –
சத்ருக்வச்த் வந்தாரா பாவத் துலயா ப்ரஸ்தாதி நா வா பரிச்சேத ரஹித இதி வா அத ஏவ சமாதி கத ரித்ர-

மாயா பலே ந –
பகவத் ஸ்வரூபத்தை மறைக்கும் பிரகிருதி பலத்தாலே -என்னுதல்
திவ்ய விக்ரஹத்தை இதர சஜாதீயம் ஆக்கும் ஆச்சர்ய சக்தி யோகத்தாலே -என்னுதல்
பவதா அபி நிகூஹ்ய மாநம் –
ஆத்மானம் மானுஷம் மன்யே
அஹம் வோ பாந்தவோ சாத -என்று
ஆள் பார்த்து உழி தரும் -நான்முகன் திருவந்தாதி -60 -உன்னாலே மறைக்கப் பட்டதே யாகிலும்

பஸ்யந்தி கேசித நிஸம் த்வத நன்ய பாவா
சத் பிரக்ருதிகளாய் இருப்பார் சில மகாத்மாக்கள் சர்வ காலமும் உள்ளபடி காணா நின்றார்கள் –

த்வத நன்ய பாவா –
க்ரியதாம் இதி மாம் வத -என்று
உன்னை ஒழிய வேறு நினைவு-விஷயம் – இல்லாதவர்கள் -என்னுதல்
உன்னை ஒழிய உபாயாந்தரம் அறியாதவர்கள் என்னுதல்
உன்னை ஒழிய வேறு பரதவ புத்தி இல்லாதவர்கள் -என்னுதல்-

(பஸ்யந்தி -சாஸ்திரம் மூலம் பார்க்கிறார்கள் முதலில் -யோகம் மூலம் சாஷாத்காரிக்கிறார்கள்
சரபங்க மகரிஷி -ததிபாண்டாதிகள் விபவத்திலே நேராக கண்டார்கள் அன்றோ )

———————————————————————

ஸ்லோகம் -17- அவதாரிகை –

கீழ் பிரதிபாதித்த சர்வேஸ்வரத்துக்கு
பிரதிசம்பந்தி தயா அபேஷிதமான
ஈசித வ்யஜாதத்தை
ப்ரபஞ்சீ கரிக்கிரார் –

யதண்ட மண்டாந்தர கோ சரஞ்ச யத்
தச உத்தராணி ஆவரணாநி யாநி ஸ
குணா பிரதானம் புருஷ பரம் பதம்
பராத்பரம் ப்ரஹ்ம ச தே விபூ தய—17-

யதண்டம் –
சதுர்தச புவநாத் மகமான அண்டம் ஒன்றாக
அண்டா நாந்து சஹஸ்ராணாம் -இத்யாதிகளில் படியே அண்ட சமூஹம் யாதொன்று

அண்டாந்தர கோ சரஞ்ச யத் –
அண்டாதிப த்ரிலோக ஈஸ்வர திக்பால நரபதி ப்ரமுகமாய் –
ஸ்தாவர ஜங்கமாத் மகமான அண்டாந்தர் வர்த்தி சமூஹம் யாதொன்று

தச உத்தராணி ஆவரணாநி யாநி ஸ –
மேன்மேலும் தச குணிதமான வாரிவஹ்நயா நிலாகாசங்களும்-
பூதாதியும் -மகானும் -கார்ய உந்முகமான பிரகிருதி அம்சமான ஆவரணங்கள் யாவை சில

குணா –
அது சேதனரை பந்திப்பது குணா த்வாரா வாகையாலே -பந்த காரணமான சத்வாதிகள் –

பிரதானம் –
அவிக்ருத பிரகிருதி பிரதேசம்
குணா பிரதானம் -என்று குணா குணிகளைப் பிரித்து பேசுகிறது
குணங்களை ஜகத் காரணமாகச் சொன்ன சாங்க்ய மதம் அவைதிகம் -என்கைக்காக –

புருஷ –
பத்தாத்மா சமஷ்டி
கார்ய காரண உபய அவஸ்த பிரக்ருத்யாஸ்ரய ஷேத்ரஜ்ஞர்
ஷேத்ரஜ்ஞக ஆத்மா புருஷ -என்னக் கடவது இறே-
அண்டாந்தர கோசரம் என்று வ்யஷ்டியைச் சொல்லுகையாலே-இது சமஷ்டி விஷயம்

பரம் பதம் –
கார்ய காரண உபய அவஸ்த
ப்ரக்ருத் யாஸரயாத் ஷேத்திர ஜ்ஞாத் ஆனந்தாத் பரமம் பதம் –
ஹிரண்மயே பரே லோகே இத்ராப்ய
ஜ்யோதிஷாம் ஜ்யோதிஸ் தத் யதாத்மா விதோ விது –
பரமே வ்யோமன்-
ஸோ அஸ்நுதே –
த்ரிபாதஸ் ஸ்யாம்ருதம் திவி –
யத்ர பூர்வே சாத்யா ஸந்தி தேவா –
அத யர்க்கா நல தீப்தம் தத் ஸ்தானம் விஷ்ணோர் மஹாத்மன
ஸ்வ யைவ ப்ரப யா ராஜன் துஷ் ப்ரேஷம் தேவதாநவை
தத்ர கத்வா புநர் நேமம் லோகமா யாந்தி பாரத -இத்யாதி பி -உகதா த்ரிபாத் விபூதி –

பராத்பரம் –
ப்ரஹ்மாதிகளில் பரர் -முக்தர்
அவர்களில் பரர் நித்ய சித்தர்

ப்ரஹ்ம ச –
ஸூ த்த சத்வமாய்
பரஞ்ஜ்யோதிர் மயமாய்
சௌந்தர்ய சௌகுமார்யாதி கல்யாண குணோ பேதமாய்
ப்ருஹத் சப்த வாச்யமான திவ்ய விக்ரஹம்
ச பரச சர்வ சக்தி நாம் ப்ரஹ்மணஸ் சமநந்தரம் மூர்த்தம் ப்ரஹ்ம –
சாந்த அனந்த மஹா விபூதி பரமம் யத் ப்ரஹ்ம ரூபம் ஹரேர் மூர்த்தம் ப்ரஹ்ம ததோ அபி
தத் ப்ரிய தரம் ரூபம் யத த்யத் புதம் -இத்யாதி –

தே விபூ தய –
விபூதி சரீர சப்தங்கள் பர்யாயம் ஆகையாலே
சரீர தயா சேஷங்கள்
விபூதயோ ஹரே ரேதா ஜகத சிருஷ்டி ஹேதவ
யாநி மூர்த்தான்ய மூர்த்தானி யான்ய த்ரான்யத்ர வா க்வசித்
ஸந்தி வை வஸ்து ஜாதானி தாநி சர்வாணி தத் வபு
தத் சர்வம் வை ஹரேஸ்தநு -இத்யாதிபி –
விபூதி சரீர சப்தயோ பர்யா யத்வம் சாஸ்த்ரேஷூ பிரசித்தம்-

(ப்ரஹ்ம சப்தம் -திவ்ய மங்கள விக்ரஹத்தையே குறிக்கும் –
தே விபூதய-இவை எல்லாம் உன்னுடைய விபூதிகள்
உனக்கு ஆதேயங்கள் -நியாம்யங்கள் -சேஷங்கள் என்றவாறு )

——————————————————————————–

-ஸ்லோகம் -18-அவதாரிகை –

கீழ் சரண்யன் உடைய உத்கர்ஷம் சொல்லி
இதில் உபய விபூதி நாதனை நம்மால் கிட்டலாமோ -என்று கூசாதபடி
ஆஸ்ரிதருக்கு இழியும் துறையான
கல்யாண குணங்களிலே பன்னிரண்டு குணங்களை
அருளிச் செய்கிறார்

அதவா
கீழ் சர்வேஸ்வரத்வம் சொல்லிற்றே
இனி சொல்ல பிராப்தமான
சமஸ்த கல்யாண குணாத் மகதையை
அருளிச் செய்கிறார்
என்றுமாம் –

வஸீ வதாந்யோ குணவான் ருஜூஸ் ஸூசிர்
ம்ருதுர் தயாளூர் மது ரஸ் ஸ்திரஸ் ஸம
க்ருதீ க்ருதஜ்ஞஸ் த்வமஸி ஸ்வ பாவதஸ்
சமஸ்த கல்யாண குணாம்ருதோ ததி—18–

1-வஸீ –
கீழ் சொன்ன ஈசிதவ்யதையைத் தன் வசத்திலே நடத்தி
வர்த்திக்கும் -என்கை -இத்தாலும் ஸ்வ தந்த்ரன் பக்கலிலே
குணம் கிடந்தது பெரு விலையனாம் –
என்னும் இடம் சொல்லுகிறது –
சர்வச்ய வஸீ சர்வச்யேசான –
ஜகத் வாசே வர்த்ததேதம்

அதவா
தன்னுடைய திருவடிகளில் ஆனுகூல்யம் உடையார் வசத்தில் தாழ நிற்கும் -என்றுமாம் –
இமௌ ஸ்மமுநி சார்தூல கிங்கரௌசமுபஸ்திதௌ
ஆஜ்ஞாபயா யதேஷ்டம் வை ஸாசனம் கரவாவ கிம் –
ஆஜ்ஞாபய மஹாபாஹோ ப்ரூஹி யத்தே விவஷிதம் –
ஸ்வ யமேவ ஹரிர் வவரே விபர பாதாவநே ஜனம்
அனந்யாதீ நத்வம் -இத்யாதி –
ஆஸ்ரித பர தந்த்ரனாய் இருக்கும் இருப்பு பிறர்க்காக என்றால்
நியாமகர் இல்லாமையாலே ஸ்வ தந்திர கார்யமாய் இருக்கும் –

2-வதாந்ய-
இப்படி ஆஸ்ரித பர தந்த்ரனாய் செய்யும் கார்யம் ஏது என்னில்
தன்னையும் தன் உடைமையையும் அவர்களுக்கு கொடுக்கும்
ஔதார்யத்தைச் சொல்லுகிறது
ப்ரியவாக்தா ந ஸீ லச்சவ தான்ய பரி கீர்த்தித –
ய ஆத்மாதா பலதா
ச சர்வா நர்த்தி நோ த்ருஷ்ட்வா ச மேத்ய ப்ரதி நந்த்ய ச
உதாராஸ் சர்வ ஏவித
ந தே ரூபம்

3-குணவான் –
தன்னையும் தன் உடைமையையும் அவர்களுக்குக் கொடுக்கும் இடத்தில்
அவர்கள் தன்னையும் தங்கள் சிறுமையையும் பார்த்து பிற்காலியாமே
அவர்கள் அளவாகத் தன்னை அமைக்கும் சீலம்
மஹதோ மந்தை –
குண பிரகரணம் ஆகையாலே
குணவான் -என்கிறது குண சாமான்யத்தைச் சொல்லுகிறது அன்று –
குண விசேஷத்தை சொல்லுகிறது

குண்யத இதி குண -என்கிற படியே அனுசந்தாவுக்கு
எப்போதும் ஒக்க விட ஒண்ணாமை யாலே
சீலத்தை குண சப்தத்தாலே சொல்லுகிறது
சால சப்தம் வ்ருஷ சாமான்ய வாசியாய் இருக்கிறது வ்ருஷ விசேஷத்தைக் காட்டுகிறாப் போலே –
அஜாயமான
கோன்வஸ்மின் சாம்ப்ரதம் லோகே குணவான் -என்று தொடங்கி
இஷ்வாகு வம்ச பிரபவ -பபூவ குணவத்தர ச ஹி தேவைருதீர்ண்ஸ்ய -என்கிறபடியே
சீல கார்யம் அவதாரம் -என்கை

4-ருஜூஸ்
இப்படித் தன்னை அமைத்துக் கொண்டு பொருந்தும் போது
அவர்கள் நாநா ருசிகள் ஆகையாலே
மேட்டிலே விரகாலே நீர் எற்றுமா போலே
அவர்கள் செவ்வைக் கேடே செவ்வை யாம்படி செவ்வியனாகை
ஆர்ஜவம் ஆவது -ஆஸ்ரித விஷயத்தில் மநோ வாக் காயங்களால் ஏக ரூபனாகை-
யஜ்ஜாதீயோ யாத்ருசோ யத் ஸ்வ பாவ –தாஜ்ஜாதீய தாத்ருச தத் ஸ்வ பாவ –
ததவை ததாஸ்து கதமோ அயமஹோ ஸ்வ பாவோ யாவான் யதாவித குணோ பஜதே பவந்தம்
தாவாம்ஸ் ததாவித குணஸ் த்தீன வ்ருத்தி
சம்ச்லிஷ்யசி த்வமிஹ தேன சமான தர்மா –

5-ஸூசிர் –
இப்படி உபகரிக்கும் இடத்தில் ஒரு பிரயோஜனத்தைக் கணிசியாதே
வெறும் புறத்தில் உபகரிக்கும் பாவ ஸூத்தியைச் சொல்கிறது –
யோ அர்த்தே ஸூசி ஸ ஹி ஸூ சி –
நித்ய சம்சாரியை ஸ்வ சம்பந்தமே ஹேதுவாக நித்ய சூரிகளோடு ஒரு கோவை யாக்க வல்ல
பாவனத்வத்தைச் சொல்லுகிறது -என்றுமாம் –

பாவனா சர்வ லோகாநாம் த்வமேவ ரகு நந்தன –
பக்தி ரஷ்டவிதா ஹ்யேஷா யஸ்மின் ம்லேச்சே அபி வர்த்ததே
ஸ விப்ரேந்த்ரோ முநிஸ் ஸ்ரீ மான் ஸ யதிச் ஸ ஸ பண்டித
மயா பூஜ்ய சதா சா சௌ மதபக்த ஸ்வ ப ஸோ அபி
தஸ்மை தேயம் ததோ க்ராஹ்யம் ஸ ஸ பூஜ்யோ யதா ஹ்யஹம்

6-ம்ருதுர் –
சம்ஸ்லேஷத்தில் இப்படி இருக்கிறவன் இவர்கள் விஸ்லேஷத்தில் ஆற்ற மாட்டான் -என்கிறது
ஆத்ம குண பிரகரணம் ஆகையாலே மானச தௌர்பலத்தைச் சொல்லுகிறது –
நைவ தம்சான் ந மசகான் –
ந ஜீவேயம் ஷணம் அபி
அவகாஹ் யார்ணவம் ச்வப்ஸ்யே

7-தயாளூர் –
ஆஸ்ரித விஷய துக்கத்தில்
அசஹனாய் இருக்கை
தயை பர துக்க அசஹத்வம்
வ்யசநேஷூ மனுஷ்யாணாம்
இதி சர்வ சாதாரணம் ஆனால் ஆஸ்ரித விஷயத்தில் கிருபை
அவாங் மனஸ் அகோசரம் இறே
ப்ரியோ ஹி ஜ்ஞானி நோ அத்யர்த்தம் -இதி
ஸ்திரீ ப்ரணஷ்டேதி காருண்யாத்-
ஸ தம் நிபதிதம் -இத்யாதி

8-மதுர-
நிர்தயனானாலும் விட ஒண்ணாத சாரச்யத்தைச் சொல்லுகிறது –
நாநா வித ருசிகளான ஜந்துக்களுக்கு அவ்வவர் நிலைகளிலே இனியனாய் இருக்கை –
ரசோ வை ஸ
ஏஷ ஹேவா நந்த யாதி
ரசம் ஹ்யேவாயம் லப்த்வா நந்தி பவதி -இத்யாதய-

9-ஸ்திர-
இப்படி சர்வ ரசிகனாய் இருக்கிறவன் பக்கலிலே அல்ப அனுகூல்யம் பண்ணினார்க்கு
தனக்கு அந்தரங்கரானார் விரோதிகள் ஆனாலும் அவர்களால் அப்ரகம்யனாய் இருக்கை –
ந த்யஜேயம் கதஞ்சன –
அபயம் சர்வ பூதேப்ய
என்னடியார் அது செய்யார்
ஸ்திர –
ஆஸ்ரிதர் உடைய பராதி கூல்யங்களாலும்
அவிக்ருதனாய் இருக்கும் என்றுமாம் —

10-ஸம-
ஆஸ்ரயிக்கும் இடத்தில் ஜ்ஞான வ்ருத்தாதிகளில் குறைந்து இருந்தார்களே யாகிலும்
ஆஸ்ரயணீயத்வே சமனாகை –
ஸ்மோஹம் சர்வ பூதேஷு
ஈடும் எடுப்புமில் ஈசன் –திருவாய் மொழி -1-6-3-
கொள்கை கொளாமை இலாதான் -திருவாய் மொழி -1-6-5-

11-க்ருதீ –
கர்த்தும் உத் யுக்தவான்
இப்படி ஆஸ்ரயித்தால்-அவருடைய கர்த்தவ்ய அம்சம் எல்லாம்
தனக்கே அனுஷ்டேயம் என்று இருக்கும்
ஆதி கர்மணி க்த
ந ஸ்மரத்யப காராணாம் ஸ்தமப்யாத் மவத்தயா
கதஞ்சிதுப காரேண க்ருதே நை கேன துஷ்யதி
உச்யமா நோ அபி பருஷம் நோத்தரம் ப்ரதி பத்யதே
ஆஸ்ரிதர் தன்னை லபித்தால் இழந்தவர்கள் பெற்றாராய் இருக்குமது அன்றிக்கே -தன் பேறாய் இருக்கை –
அபி ஷிச்ய ஸ
தவ சார்த்த ப்ரகல்பதே

12-க்ருதஜ்ஞஸ் –
இப்படித் தான் அவர்களுக்கு எல்லா உபகாரங்களைப் பண்ணினாலும்
அவர்கள் அடியில் பண்ணின அல்ப அனுகூல்யத்தைக் குவாலாக -பெரியதாக -நினைத்து இருக்கும் –
அவர்கள் பண்ணும் அபகாரமும் அறியான் –
அவிஜ்ஞாதா சஹஸ்ராம் ஸூ –
தான் பண்ணின உபகாரமும் அறியான் –
ருணம் ப்ரவ்ருத்த மிவ மே ஹ்ருதயானநாப ஸ்ர்ப்பத்தி -என்று இருக்குமவன் –
சிரஸா யாசத்

த்வமஸி –
ஆஸ்ரயத்தில் நலங்கள் குணம் பெறாத படி இருக்கும் -என்னுதல் –
இக் குணங்களும் தன்னைப் பற்றி நிறம் பெறும்படி ஸ்பருஹணீயமாய் இருக்கும் -என்னுதல் –

ஸ்வ பாவதஸ் –
இக்குணங்கள் ஆவித்யகம் அன்று
ஆவித்யகம் -அவித்யா கல்பிதம் –
ஔபாதிகம் என்னலாகாத படி -நை சர்க்கிகம் -இயற்க்கை யானது -என்னுதல்

சமஸ்த கல்யாண குணாம்ருதோ ததி –
எல்லா குணங்களும் கல்யாணமே
நிரதிசய போக்யங்களுமாய்
அனுபவிக்க இழிந்தார்க்கு கரை காண ஒண்ணாமைக்கு
ஒரு கடல் என்னும் அத்தனை -என்கிறார்
மதிஷாயான்நிவர்த்தந்தே ந கோவிந்த குண ஷயாத்-

(ஸ்வபாவத-என்பதை ஒவ் ஒன்றிலும் அன்வயித்து -சிலவற்றை அருளிச் செய்து
ஸமஸ்த கல்யாண குண அமுதக் கடல் -என்று நிகமிக்கிறார் -)

—————————————————————————

ஸ்லோகம் -19- அவதாரிகை –

இக் குணங்களுக்கு சங்க்யை
இல்லாதோபாதி ஒரோ
குணங்களுக்கு அவதி இல்லை
என்கிறார் –

உபர்யுபர்யப் ஜபு வோ அபி பூருஷான்
பிரகல்ப்ய தே யே சதா மித்ய நுக்ரமாத்
கிரஸ் த்வதே கைக குணாவதீ ப்ஸயா
ஸதா ஸ்திதா நோத் யமதோ அதி ஸேரதே–19-

உபர்யுபர்யப் ஜபு வோ அபி பூருஷான் பிரகல்ப்ய தே யே சதா மித்ய நுக்ரமாத் –
அப்ஜ புவ உபர்யு பரி தே யே ஸதா மித்ய நுக்ரமாத் பூருஷான் பிரகல்ப்ய –
திரு நாபீ கமலத்திலே அவ்யவதானே பிறந்து
அவனோடு ஓதின சதுர் முகனுக்கு மேலே
அவனை மனுஷ்யர் கோடியிலே நிறுத்தி
தே யே சத -க்ரமத்தாலே
மனுஷ்ய கந்தர்வாதி ப்ரஹ்மாந்தமாக –
அநந்த அவதி சித்த்யர்த்தமாக ப்ரஹ்மாக்களை கற்பித்து –
கிரஸ் த்வதே கைக குணாவதீ ப்ஸயா -ஸதா ஸ்திதா –
ஆனந்த குணம் ஒன்றையும் எல்லை காண்கையிலே
இச்சையாலே உத்யோகித்து
சர்வ காலமும் ஸ்திதைகளான வைதிககீர்கள் ஆனவை –
யெகைக-என்கையாலே ஜ்ஞான ஆனந்த அவஹமான யுவத வாதிகளை நினைக்கிறது –

சதா ஸ்திதா கிர -என்று
நித்யத்வ அபௌருஷேயத்வங்களை சொல்லிற்று ஆகவுமாம் –
வேத அஷர ராசி என்னாதே-கீர்கள் -என்கிறது
வேத சப்தேபய ஏவாதௌ -என்கிறபடியாலே
லௌகிக சப்தங்களும் வைதிக சப்தங்கள் ஆகையாலே சொல்லுகிறது
அவை அந்த குணங்களைக் கண்டபடி யென் -என்னில்

நோத் யமதோ அதி ஸேரதே-
உத்தியோக தசையான இது ஒழிய மேல் கால் வாங்கிற்றன வில்லை –
சைஷா நந்தச்ய மீமாம்ஸா பவதி -இத்ராப்ய
ஸ ஏகோ ப்ரஹ்மண ஆனந்த -இதி
யுவா ஸ்யாத்-
ஸ்வரூப ரூப குணங்களுக்கும் உப லஷணம் ஆதல்
யுவத வைத்தால் வந்த தேஜஸ் சை சொல்லுதல்

அத்யாயக இதி ஜ்ஞானம்
ஆசிஷ்ட்ட இதி சக்தி
த்ரடிஷ்ட்ட இதி வீர்யம்
பலிஷ்ட்ட இதி பலம்
தஸ்யேயம் -இதி ஐஸ்வர்யம்
த்ரய்யு யதா தவ யுவத்வ முகைர் குனௌ கை இத்யாதய
உத்யமத –
உத்யோகாத்
நாதி சேரதே
அதிக்ரமண சமர்த்தா ந பவந்தி-

(அப்ஜபுவ உபர்யுபரி / அப்ஜபுவ பூருஷான் ப்ரகல்ப்ய ப்ரஹ்மாக்களை மநுஷ்யர்களாக கல்பித்து -சதம் சதம் நூறு நூறாக –
ஆனந்தவல்லி -சொல்லுமா போலே
சொல்லலாமது ஒழிய -உபர்யுபரி ப்ரகல்ப்ய-என்று கல்பித்தததே மேலும் மேலும் செல்லும் -முடிந்தபடி இல்லை –
தே யே சதம் தே யே சதம் தே யே சதம் -என்று அநு க்ரமம்-ஒன்றின் பின் ஒன்றாக -கிர-வேத வாக்கியம் செல்லும் என்றவாறு –
ஆனந்த வல்லீ தவ குண நிவஹம் யவ்வன ஆனந்த பூர்வம் -நான்மறைகள் தேடி என்றும் காண மாட்டாச் செல்வன் –
ஆழ்வார் போலே உயர்வற உயர்நலம் உடையவன் என்று பேசி விடாமல் ஏதோ பேசத் தொடங்கி பரிபவப் பட்டனவே வேதங்கள் –
அருமையான வேதாந்த விழுப் பொருளை அருளிச் செய்கிறார் இத்தால் -)

————————————————————————–

ஸ்லோகம் -20- அவதாரிகை –

கீழ்ச் சொன்ன குணங்களுக்கு போக்தாவான
ஆஸ்ரிதர் பெருமையை அருளிச் செய்கிறார்
அஸ்மின் நஸய ஸ தத் யோகம் சாஸ்தி -ப்ரஹ்ம சூத்ரம் -1-1-20-
இந்த ஆனந்த சேர்க்கையை ஸ்ருதி -ரசம் ஹ்யேவாயம் லப்த் வா நந்தீ பவதி -ஸ்ருதி -என்று
இவனாலே வந்த பெருமையை உடையவர்கள் அளவு இதுவானால்
அவன் பெருமை பரிச்சேதிக்க ஒண்ணாது என்னும் இடம்
கிம்புநர் நியாய சித்தம் அன்றோ -என்கிறார்-என்றுமாம் –

த்வத் ஆஸ்ரிதா நாம் ஜகத் உத்பப ஸ்திதி
பிரணாச சம்சார விமோசன ஆதய
பவந்தி லீலா வித யஸ்ஸ வைதிகாஸ்
த்வதீய கம்பீர மநோ நுசாரிண–20-

த்வத் ஆஸ்ரிதா நாம் –
ப்ரஹ்ம ருத்ராதி நாம் -ஸ நாகாதி நாம் -ஸ
தேவரை தூர நின்று ஆஸ்ரயிக்கிற ப்ரஹ்மாதிகள்
சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரங்களை உபதேச க்ரமத்தாலே பெற்று-
சம்சார விமோசநத்தையும் பண்ண சக்தரான பின்பு
அநந்ய பிரயோஜனராய் ஆஸ்ரயிக்கும் அவர்கள்
அவற்றைச் செய்யப் பார்த்தால் –
லீலையாகா நின்றது –

முக்தர் தேவரோடு லீலா ரசம் அனுபவிக்கும் போது
சங்கல்ப்பத்தாலே ஜ்ஞாத்யாதிகளை சிருஷ்டித்தே அனுபவிப்பது –
சங்கல்பா தேவ தச்சருதே -ப்ரஹ்ம சூத்ரம் -4-4-8-
ஸ யதி பித்ரு லோக காமோ பவதி
சங்கல்பா தே வாஸ்ய பிதரஸ் ஸ முத்திஷ் டந்தி -சாந்தோக்யம் –
ஜகத் ஸ்ருஷ்ட்யாதி யில் ப்ராப்தி இல்லாமை போக்கி
சக்தி இல்லாமையாலே தவிருகிரார் அல்லர் –

ஆதி சப்தத்தாலே
அநேக சரீர அந்த பிரவேச நியமங்களை நினைக்கிறது –
ஜகத் வியாபார வர்ஜம் ப்ரகரணாத சன்னிஹி தத்வாச்ச -ப்ரஹ்ம சூத்ரம் -4-4-17-
போக மாத்ர சாம்ய லிங்காச்ச -ப்ரஹ்ம சூத்ரம் -4-4-21-

அதவா
ஜகத் உத்பப ஸ்திதி பிரணாச சம்சார விமோசன ஆதய பவந்தி லீலா -த்வத் ஆஸ்ரிநாம் –
முமுஷூ சிஸ் ருஷையா வி றே ஸ்ருஷ்டியாதிகள்-
நிரதிசய போகயதையே ஸ்வரூபமாய் இருக்க
சம்சார விமோசகர் என்கிறது ஆஸ்ரித அர்த்தமாக விறே –
ஆதி சப்தத்தாலே
ததர்த்தமான அநேக அவதாரங்கள் –
திருக் குரவையிலே அநேக விக்ரஹ பரிக்ரகாதிகள் –

வித யஸ்ஸ வைதிகாஸ்-
இதம் குரு இதம் மா கார்ஷீ -என்று ஸ்வ தந்த்ரமான வைதிக விதிகளும்
த்வதீய கம்பீர மநோ நுசாரிண
அநந்ய ப்ரயோஜனராய்
ஆஸ்ரயித்த வர்களுடைய
கம்பீரமான மனஸ்சைப் பின் செல்லா நின்றன –

மனஸ்ஸூக்கு கம்பீரத்வம் ஆவது -ஷூத்ரமான ஐஸ்வர்யாதிகளிலே கால் தாழாதே அநந்ய பிரயோஜனமாகை
ப்ரஹ்ம வாதி நோ வதந்தி
ஸ ஹோவாச வியாச பாராசர்ய
யே தத்ர ப்ராஹ்மாணாஸ் சம்மர்சின -இத்ராப்ய
யதா தே தத்ர வர்த்தே ரன் ததா தத்ர வரத்தே தா –
நினை தொறும் சொல்லும் தொறும் நெஞ்சு இடிந்து உகும் -திருவாய் மொழி -9-6-2- என்று
பகவத் விஷயத்தில் இவ்வளவு அவகாஹி யாதார்க்கு
நிதித்யாசி தவ்ய
விஜ்ஞாய ப்ரஜ்ஞாம் குர்வீத
ஆத்மானம் த்யாயீத -என்று விதிக்கிறது இறே –
த்வதீயமான கம்பீர மனஸ்சை அனுசரியா நின்றன -என்றுமாம் –
ஸ்ருதி ச்ம்ருதிர் மமை வாஜ்ஞா –

(நின்று நின்று பல நாள் உய்க்கும் இவ்வுடல் நீங்கிப் போய் சென்று சென்று ஆகிலும் கண்டு
ஜன்மம் களிப்பான் எண்ணி ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான் –
அடுத்து அடுத்து உபகார பரம்பரைகளை செய்து அருளி -ஒருவராவது அகப்படுவாரோ என்ற நப்பாசையாலே -என்றபடி –
த்ரிபி பிரஜாபதேர் பக்தா சப்தபிச் சங்கரஸ்ய து விம்சத்யா அக்னி இந்திரா ஸூர்யாதே விஷ்ணு பக்த ப்ரஜாயதே )

—————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading