ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம்- ஸ்லோகம் -21-22-23-24-25-26-27-28-29-30—-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –

ஸ்லோகம் -21-அவதாரிகை –

இதுக்கு கீழ்
ஈஸ்வரன் உடைய ஸ்வரூபத்தால் வந்த உத்கர்ஷத்துக்கும் –
உபய விபூதி யோகத்தால் வந்த ஐஸ்வர்யத்துக்கும் –
குண உத்கர்ஷத்தால் வந்த நீர்மைக்கும் –
தோற்று
ஜிதந்தே -என்னும் ஸ்வேத த்வீப வாசிகளை போலேயும்
நம புரஸ்தா தத ப்ருஷ்ட்ட தஸ்தே -என்ற அர்ஜுனன் போலேயும்
யாருமோர் நிலைமையன் -என்ற ஆழ்வாரைப் போலேயும்
சரண்யன் உடைய பெருமையை அனுசந்திக்கிறார் –

இதுக்கு முன்பு
பிராப்ய ஸ்வரூபம் சொல்லிற்றே
இதில் ப்ராப்தாவின் ஸ்வரூபம் சொல்லுகிறது -என்றுமாம்-

கீழ் சரண்ய ஸ்வரூபம் சொல்லிற்றாய்
மேல் சொல்லப் படுகிற சரணாகதியை -இதில் ப்ரஸ்தாபிக்கிறார் -என்றுமாம் –

நமோ நமோ வாங் மனஸாதி பூமயே
நமோ நமோ வாங் மனசைக பூமயே
நமோ நமோ அநந்த மஹா விபூதயே
நமோ நமோ அநந்த தயைக சிந்தவே—-21-

நமோ நமோ வாங் மனஸாதி பூமயே-
வாங் மனஸாதி பூமயே-நமோ நம-
எத்தனை யேனும் ஜ்ஞாநாதி கரும் ஸ்வ யத்னத்தால்
அறியப் புக்கால் அவர்களுக்கு
வாங் மனஸஸூக்களுக்கு அபூமியாய் இருக்கிற உனக்கு
எதோ வாசோ நிவர்த்தந்தே
யன்நாயம் பகவான் ப்ரஹ்மா ஜாநாதி புருஷோத்தமம் –

நம –
என்று அஹங்காரம் இல்லாத ஸ்வரூபத்தை சொல்லுகிறது –
அநாத்மன் யாத்ம புத்தி –
அஹமபி ந மம -இத்யாரப்ய
இத்யேவ மமமதாம் யோஜயதயதோ நம இதி –
த்வய ஷரஸ்து பவேன் ம்ருத்யுஸ் த்ரய ஷரம் ப்ரஹ்மண பதம் -இத்யாதி

நமஸ் சப்தம் பர்யாயம் ஆகையாலே சரணா கதியை பிரஸ்தாபிக்கிறது ஆகவுமாம்
வீப்சையாலே அந்த ஸ்வ பாவத்துக்குத் தோற்று அருளிச் செய்கிறார் –
சகருத்தே நம த்விச்தே நம இத்யாராப்ய
சஹச்ரக்ருத் வஸதே நம அபரிமிதக்ருத் வஸதே நம இத்யாதி

நமோ நமோ வாங் மனசைக பூமயே
வாங் மனசைக பூமயே -நமோ நம –
நீ காட்டக் காண்பார் உடைய வாங் மனஸ் ஸூக்களுக்கு
நிலமாய் இருக்கிற உனக்கு –
பவந்தி பாவா பூதா நாம் மத்த ஏவ ப்ருத கவிதா -ஸ்ரீ கீதை -10-5- -இத்யாதி

நமோ நமோ அநந்த மஹா விபூதயே –
அநந்த மஹா விபூதயே -நமோ நம —
அபரிச்சேத்ய
உபய மஹா விபூதிகனாய் இருக்கிற உனக்கு
வாங் மனஸ் ஸூக்களுக்கு அபூமியாகைக்கு அடி
அபரிச்சேத்ய மஹா விபூதிமானாய் இருக்கை –

நமோ நமோ அநந்த தயைக சிந்தவே –
அநந்த தயைக சிந்தவே -நமோ நம —
உன்னை வாங் மனஸ் ஸூக்களுக்கு ஏக பூமியாம் படி
பண்ணும் அபரிச்சேத்ய
தயைக்கு ஒரு சிந்துவாய் இருக்கிற உனக்கு –
யதி சகநோஷி கச்ச தவம் -என்று
சர்வ சக்தியை ஓர் இடைச்சி பரிச்சேதிக்கலாம்
படி இறே கிருபையினுடைய நிரவதிகத்வம் –

(தயா -என்றது வாத்சல்யம் -ஸுசீல்யம் -ஸுலப்யம் -இத்யாதிகளுக்கும் உப லக்ஷணம் –
ஏக கிருஷ்ண நமஸ்காரோ முக்தி தீரஸ்ய தேசிக -ஒரு முறை நமஸ்கரித்தாலே முக்தி கிட்டும் –
பராசம்சாயாம் ப்ரதிஞ்ஞாயாம் ப்ரலாபே தர்ஜ நேபிச பயேச விஜயே சைவ பவ்நம் புன்யம் அலங்க்ருதி -என்றபடி
அச்சம் தோற்ற மீண்டும் மீண்டும் நமஸ்காரம் -பாம்பு பாம்பு பாம்பு என்று ஒரே பாம்பை கண்டு சொல்வது போலே
தண்டவத் நிபபாத -தண்டம் விழுந்தால் தானே எழாதே –
கணக்கு எண்ணி சேவிப்பதை விட்டு -பக்தி பாரவசயத்தாலே -மெய் மறந்து விழுவது எழுவதாக
அத்யந்த பக்தி யுக்தானாம் ந சாஸ்திரம் நைவ ச க்ரம–)

—————————————————————-

ஸ்லோகம் -22-அவதாரிகை –

தம்முடைய அதிகாரத்தைச் சொல்லிக் கொண்டு
பிரஸ்துதமான ப்ரபத்தியை ப்ரயோகிக்கிறார்-
கீழ்ச் சொன்ன உபேய அனுகூலமான
உபாயத்தை அனுஷ்டிக்கிறது -என்றுமாம் –
கீழ் -த்வாம் சீல -உல்லன்கித -என்கிற இடத்தில்
துஷ் பிரகிருதிகள் உன் பெருமையை அறியார்கள்
சத் பிரகிருதிகள் அறிவார்கள் -என்றார்
நமோ நம -என்கிற ஸ்லோகத்திலே
ஸ்வரூபத்தைப் பர தந்தரமாக உணர்ந்தவனுக்கே
இவ்விஷயம் ப்ராப்யம் ஆவது
ஸ்வ தந்த்ரனுக்கு பிராப்யம் அன்று -என்கிறது
ஆஸ்ரயிக்கும் இடத்தில்
ஸ்வ சக்தி கொண்டு விஷயம் அன்று
தன்னுடைய ஆகிஞ்சன்யத்தை முன்னிட்டுக் கொண்டு
ஆஸ்ரயிக்கும் விஷயம்-என்கிறார் –

ந தர்ம நிஷ்ட்டோஸ்மி ந சாத்ம வேதீ
ந பக்திமாம் ஸ்தவச சரணாரவிந்தே
அகிஞ்சநோ அநந்ய கதிஸ் சரண்ய
த்வத் பாத மூலம் சரணம் ப்ரபத்யே–22-

ந தர்ம நிஷ்ட்டோஸ்மி –
தார்மிகனாக என்கிறேன் அல்லேன்
தர்மத்தில் நிஷ்ட்டை உடையேன் அல்லேன்
சிலர் -தார்மிகன் -என்று நினைக்கைக்கும்
நானும் -எனக்கு நன்மை யுண்டு -என்று பிரமிக்கைக்கும்
தானே சில ப்ரவர்த்தியா நின்றான் ஆகில்
தானே செய்திடுக -என்று நீ கை விடுகைக்கும்
வேண்டுவது உண்டு இத்தனை –
உன் திருவடிகளை ப்ராபிக்கைக்கு ஹேதுவாக வேண்டும்படியான
ப்ரவ்ருத்தியில் நிஷ்டை இல்லை -என்கை –

ந சாத்ம வேதீ-
ஆத்ம தர்சனம் பண்ணிப் போருமவர்களைப் போலே
சொல்லி நிர்ப்பந்திகிறேன் அல்லேன் –
கர்ம யோகாநுஷ்டாநத்தாலே ஷீண பாபனானவனுக்கு
ஆத்மயாதாத்ம்ய தர்சனமாய் இருக்க
அது இல்லை என்ற போதே தத் சாத்தியமான ஜ்ஞானம் இல்லாமை
அர்த்த சித்தமாய் இருக்க -ஜ்ஞானம் இல்லை -என்கிறது –
பஹூ நாம் ஜன்ம நாமந்தே ஜ்ஞான வான் – என்று
ஜன்மாந்தர சம்ஸ் காரத்தாலே ஜ்ஞானம் பிறக்கலாம் இறே
என்னில் -அதுவும் இல்லை -என்கிறார் –

நபக்திமாம் ஸ்தவச சரணாரவிந்தே
இவ்வாத்மாவுக்கு நாதனாய் இருந்துள்ள
உன்னுடைய நிரதிசய போக்யமான திருவடிகளில்
அனவரத பக்தியை உடையேன் அல்லேன் –
கர்ம ஜ்ஞானங்களை அங்கமாக வுடைத்தான பக்தி
அங்கம் தான் இல்லை -என்ற போதே இதுவும் இல்லை அன்றோ -என்னில்
பூர்வோக்த பிரகாரத்திலே ஜன்மாந்தர சம்ஸ்காரம் உதவி உண்டாகலாம் இறே
குளித்து மூன்று அனலை -திரு மாலை -15
நோற்ற நோன்பு -திருவாய் மொழி -5-7-1-
கறவைகள் பின் சென்று -திருப்பாவை -28-என்று

அகிஞ்சநோ –
என்று அனுதாபம் -என்ன
இவை உண்டாகைக்கு உறுப்பான ஆத்மகுணம் என்ன
அதிகாரி சக்தி வாஞ்சாதிகள்-என்ன
இவற்றை உடையேன் அல்லேன் –

அநந்ய கதிஸ் –
இப்படி நம்மைக் கிட்டுககைக்கு கைம்முதல் இல்லை யாகில்
புறம்பே ரஷகராய் இருப்பார் பக்கலிலே
போனாலோ -என்னில்
புறம்பு ஒரு புகல் இல்லை -என்னுதல் –
உன்னை விட்டு ஒன்றும் ஆற்ற கிற்கின்றிலேன் -திருவாய்மொழி -5-7-1-என்கிறபடியே
உன்னை ஒழியச் செல்லாது -என்னுதல்

சரண்ய
தன் பக்கல் முதல் இல்லாதார்க்கு
சரண வரண அர்ஹன் இறே
நிருபாதிக சரண்யர் ஆகையாலே ருசியே வேண்டுவது
தேவரைப் பெறுகைக்கு ஒரு கைம்முதல் வேண்டா விறே –

த்வத் பாத மூலம் –
தேவர் திருவடிகளை –
மூலம் என்றது சௌலப்யாதி குணங்களையும்
இதர அவயவங்களையும் ஒழிய
திருவடித் தாமரைகளை நினைக்கிறது

சரணம் ப்ரபத்யே
விரோதி நிவ்ருத்தி பூர்வகமான
கைங்கர்ய சித்திக்கு
உபாயமாக அத்யவசிக்கிறேன் –
மாம் ஏகம் சரணம் வ்ரஜ -என்ற தேவரீர் திருவடிகளே மூலம் –
உபாயே கருக ரஷித்ரோ-
அஹிர்புத்ன்ய சம்ஹிதையிலெ இதினுடைய ஸ்வரூபம் சொல்லுகிறது
அஹம் அஸ்ம் அபராதா நாம் ஆலய
ஸ்வ தாஸ்வதரே
யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம்

இந்த ஸ்லோகத்தாலே
அதிகாரி ஸ்வரூபமும்
சரணாகதி பிரயோகமும்
சொல்லிற்று –

(நோற்ற நோன்பிலேன் நுண் அறிவிலேன்
குளித்து மூன்று அனலை ஓம்பும் குறிகொள் அந்தணமை தன்னை ஒளித்திட்டேன் என் கண் இல்லை
நின் காணும் பக்தனும் அல்லேன்
புகல் ஒன்றும் இல்லா அடியேன் உன்னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே
இந்த ஸ்லோகம் -இவற்றை அனுசந்தித்திக் கொண்டே பகவத் சந்நிதிகளில் நாம் சேவிக்க வேண்டும் -)

————————————————————————–

ஸ்லோகம் -23- அவதாரிகை –

அனுகூலங்கள் இல்லை என்று வெறுக்க வேண்டா
உண்டான யோக்யதையையும் அழிக்க வற்றான
நிஷித்த அனுஷ்டானங்கள் இல்லை யாகில்
நன்மைகளை உண்டாக்கிப்
புருஷார்த்தத்தையும் தருகிறோம் -என்று
பகவத் அபிப்ராயமாக
பிரதிகூலங்களாலே பூரணன்-என்கிறார்

ந நிந்திதம் கர்ம ததஸ்தி லோகே
சஹஸ்ரசோ யன்ன மயா வ்யதாயி
ஸோ அஹம் விபாகா வஸ்ரே முகுந்த
க்ரந்தாமி ஸம்ப்ரத்ய கதிஸ் தவாக்ரே —23-

ந நிந்திதம் கர்ம ததஸ்தி லோகே சஹஸ்ரசோ யன்ன மயா வயதாயி
சஹஸ்ரசோ யன்ன மயா வயதாயி –
நிந்திதம் கர்ம
தத் லோகே நாஸ்தி
ஆயிரம் மடங்கு என்னால் பண்ணப் படாதது
யாதொரு நிந்தித்த கர்மம் உண்டு
அதி பாதக மஹா பாதகாதிகள்
அது சாஸ்த்ரத்தில் இல்லை
அனுஷ்டாதாக்கள் பக்கல் இல்லாத நிஷித்தங்களும்
சாஸ்த்ரத்திலே காணலாம் இ றே

ஸோ அஹம் –
நிஷித்தங்களை அனுஷ்டித்து
பிராயச் சித்தங்களிலும் இழியாதே
தப்பச் செய்தோம் என்கிற அனுதாபமும் இன்றிக்கே
இருக்கிற நான்

விபாகா வஸ்ரே –
அவை பக்வமாய்
அனுபவத்தை ஒழியப் போக்கிடம் இல்லாத
அவஸ்தையிலே

முகுந்த
முக்தி பூமி பரத
இத் துர்தசையை ப்ராப்தனானவனுக்கும்
தேவரே உஜ்ஜீவன ஹேது என்னும்
இத்தையே புத்தி பண்ணி
துரா சாரோ அபி சர்வாசீ கருதக் நோ நாஸ்திக –
தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத்
வதார்ஹமபி காகுத்ச்த க்ருபயா பர்யா பாலயத்
தஸ்மாதபி வத்யம் பிரபன்னம் ந ப்ரதி ப்ரயச் சந்தி
அஹிர் புத்ன்ய சம்ஹிதாயாம்
அநேநைவ ப்ரபன்னச்ய பகவந்தம் ஸ நாதனம்
தஸ்யா நுபந்தா பாபமா நஸ் சர்வே நச்யந்தி தத் ஷணாத்
கரு தான்ய நேன சர்வாணி தபாம் சி தபதாம் வர
சர்வே தீர்த்தாஸ் சர்வ யஜ்ஞ்ஞாஸ் சர்வ தாநானி தத் ஷணாத்
க்ருதாந்யே தேன மோஷச்ச தஸ்ய ஹஸ்தே ந சம்சய

அகதி
தேவரீர் உடைய நீர்மையே அன்றியே
என்னுடைய கதி ஸூந்யதையே
ஹேதுவாக

க்ரந்தாமி ஸ்ம்ப்ரததி –
ஸ்ம்ப்ரததி -க்ரந்தாமி-

க்ரந்தாமி -கதறுகிறேன்
தேவரீருக்கு பரிஹரிக்க ஒண்ணாத தசையிலே
தேவர் பக்கல்
குணஹானியை சம்சிக்கும் படி
சாதனா அனுஷ்டானம் பண்ணிப் பலம் பெறாதாரைப் போலே
கூப்பிடா நின்றேன்

தவாக்ரே –
தவ அக்ரே
ஹரீரேஷா ஹி மமாதுலா -என்கிற தேவர் திரு முன்பே

(லோக சப்தம் -சாஸ்த்ரத்திலே -என்றவாறு
காரொளி வண்ணனே கண்ணனே கதறுகின்றேன் யாருளர் களைகண் அம்மா
அரங்க மா நகருளானே -பாசுரம் தழுவிய ஸ்லோகம்
தவ அக்ரே க்ரந்தாமி-ருணம்-என்று திரௌபதி கோவிந்தா கதறலுக்கு உதவவில்லையே என்ற
புண் பட்ட தேவரீர் முன்னே அன்றோ கதறுகின்றேன் -)

———————————————————————-

ஸ்லோகம் -24-அவதாரிகை –

உம்முடைய பூர்வ வ்ருத்தி இதுவாய் இருக்க –
க்ரந்தாமி -என்று நம் குற்றம் போலே கூப்பிடுவது எத்தாலே -என்ன –

சம்சார ஆர்ணவத்திலே அழுந்துகிற எனக்கு
நிர்ஹேதுக கிருபையாலே உன் வாசியை அறிவித்தாய் –
கூசம் செய்யாது கொண்டாய் என்னைக் கூவிக் கொள்ளாய் வந்தந்தந்தோ -திருவாய் மொழி -10-10-2- என்கிற
ப்ராங் ந்யாயத்தாலே உன் திருவடிகளை ப்ராபிக்கைக்கும் அந்த கிருபையே ஹேது என்று
தயைக ரஷ்யத் வத்தாலே கூப்பிடுகிறேன் -என்கிறார் –

எனக்கு தேவரை லபிக்கை பெறாப் பேறு ஆனாப் போலே இறே
தேவருடைய கிருபைக்கும் என்னுடைய லாபம் -என்கிறார் –

நி மஜ்ஜதோ அநந்த பவ அர்ணவ அந்தஸ்
சிராய மே கூலம் இவ அஸி லப்த
த்வயாபி லப்தம் பகவந் நிதா நீம்
அநுத்தமம் பாத்ரம் இதம் தயாயா—24-

நி மஜ்ஜதோ அநந்த பவ அர்ணவ அந்தஸ்
அநந்த பவ அர்ணவ அந்தஸ் நி மஜ்ஜதோ
த்ரிவித பரிச்சேத ரஹித
என்னுடைய சம்சாரத்தைப் பரிச்சேதிக்கிலும்
தேவருடைய பிரபாவத்தை பரிச்சேதிக்க ஒண்ணாது -என்கை –

பவார்ணவ விசேஷணமாய்-கரை காண ஒண்ணாத சம்சார அர்ணவத்திலே
ஆவாரார் துணை என்று அலை நீர்க் கடலுள் அழுந்தும் -திருவாய்மொழி -5-1-9- என்கிறபடியே
அழுந்துகிற எனக்கு -என்னவுமாம் –

சனகாதிகளைப் போலே கண் பற்றிலே இருந்தேனோ –

சிராய-மே
அநாதி காலம் எல்லாம் அழுந்து இருக்கும் எனக்கு –
அழுந்துகை ஒழிய பரிஹாரம் பார்க்க அறியாத எனக்கு

கூலம் இவ அஸி லப்த
உன் பேர் அருளால் இக்கரை ஏறி -பெரியாழ்வார் திருமொழி -5-3-7-என்னும்படி
அழுந்துகிற இடத்தில் கரை கிட்டினால் போலே
லப்தனாகா நின்றாய்

த்வயாபி லப்தம் –
தேவராலும் லபிக்கப் பட்டது –
எனக்கு தேவர் பெறாப் பேறு ஆனாப் போலே இறே
எதிர் சூழல் புக்குத் -திருவாய் மொழி -2-7-6- திரிந்த தேவர்க்கும் இவ் வஸ்து –

பகவந் –
ஜ்ஞானாதி குண பூரணரான
தேவருடைய பேறு என்னும் இடம்
நான் சொல்ல வேண்டுமோ -என்கை

இதா நீம்-
தேவரும் நம்மை அற்று விடும்படியான
துர்தசையிலே

அநுத்தமம் பாத்ரம் –
உத்தமோத்தமான பாத்ரம்

இதம் –
ரஷக அபேஷைக்கு இனி இல்லை
என்னும் இவ் வஸ்து

தயாயா-
ரஷ்ய விஷயம் உண்டாகில் தான்
உண்டாம் தேவர் தயைக்கு –

(அநந்த-விசேஷணம் ஸ்வரூப குண விபூதிகளுக்கும் -எல்லை அற்ற இவை –
பாவார்ணவம் -எல்லை அற்ற -தூராக குழி -கரை காண ஒண்ணாத சம்சார கடலுக்கும் –
ஆவாரார் துணை என்று அலை நீர் கடலுள் அழுந்தும் நாவாய் போல் பிறவிக் கடலுள் நின்று நான் துளங்க –
சேதன லாபம் அவனுக்கே -எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே அருள்கள் செய்ய –
நிர்ஹேதுக கிருபையினால் கைக் கொண்டே தீர வேண்டிய நிலைமை யுண்டே என்று விஞ்ஞாபனம் – -)

———————————————————————————

ஸ்லோகம் -25- அவதாரிகை –

நம் பக்கல் ந்யஸ்த பரராய் இருக்கிற உமக்கு
தத் தஸ்ய சத்ருசம் பவேத் -என்கிறபடியே
கண்டிருக்கை ஸ்வரூபமாய் இருக்க
இங்கனே நிர்பந்திக்கக் கடவீரோ -என்ன

என்னுடைய அனர்த்தத்தை பரிஹரிக்கச் சொல்லுகிறேன் அல்லேன் –
ஆஸ்ரிதர்க்கு விஷயங்களால் வரும் பரிபவம்
ரஷகரான தேவருக்கு தேஜோ ஹாநி -என்று
அத்தைப் பரிஹரிக்கச் சொல்லுகிறேன்
என்கிறார்-

அபூத பூர்வம் மம பாவி கிம் வா
சர்வம் சஹே மே சஹஜம் ஹி துக்கம்
கிந்து த்வதக்ரே சரணாக தா நாம்
பராபவோ நாத ந தே அநுரூப—–25-

அபூத பூர்வம் மம பாவி கிம் வா –
நரக கர்ப்ப வாச ஜனன மரண க்லேசாதிகளே
யாத்ரையாய்ப் போந்த எனக்கு

முன்பு அநு பூதம் அன்றிக்கே
இனி அநு பாவ்யமாய் இருப்பதொரு துக்கம் உண்டோ –
கிம் ஷேபே –

சர்வம் சஹே –
ஆதி வாதிகள் பர பரிபவம் சீதோஷ்ணாதிகள்
தத் விஸ்லேஷ ஜனித்த துக்கம்
இவற்றை இவர் சஹிக்க வல்லராய்ச் சொல்லுகிறார் அல்லர் –

ஆத்மா நித்யன்
காலம் அநாதி
இவற்றைப் பொறுத்து உட்கொதி போலே நசியாதே கிடந்த
ஆச்சர்யத்தைக் கண்டு சொல்லுகிறார் –

மே சஹஜம் ஹி துக்கம் –
அநாதி காலம் கர்மமே நிரூபகமாகப் போந்த எனக்கு –
அதின் பலமான துக்கமும் சஹஜம் அன்றோ –

கிந்து –
பொறுக்க ஒண்ணாதது ஓன்று உண்டு –

த்வதக்ரே –
சர்வ சேஷியாய்
சர்வத்ர சந்நிஹிதரான தேவர் முன்பே

சரணாக தா நாம் பராபவோ –
உன் பக்கல் ந்யச்த பரராய் இருக்கும் அவர்களுக்கு
சப்தாதி விஷய ப்ராவண்யத்தால் வந்த எளிவரவு-
பாவியேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ – திருவாய் மொழி -6-9-9-
கிறி செய்து என்னைப் புறத்து இட்டு இன்னம் கெடுப்பாயோ -திருவாய் மொழி -6-9-8-என்று
விஷய சந்நிதியே தொடங்கி
எளிவரவாய் இறே அநந்ய ப்ரயோஜனர் இருப்பது

பஹூ வசனத்தாலெ சொல்லுகிறது –
ஒருத்தனுடைய எளிவரவு சஜாதீயர்க்காக வந்தது என்கை –
எங்கனம் தேறுவர் உமர் -திருவாய் மொழி -8-1-3-என்கிறபடியே
உனக்குக் கை புகுந்தவர்களும்
உன்னுடைய ரஷணத்தில் அதி சங்கை பண்ணுவார்கள் -என்கை –

நாத –
இது தன்னரசு நாடாகில்
தேவருக்கு வருவது உண்டோ
உடைமை நோவுபடுகிறது உடையவனுக்கு எளிவரவு அன்றோ

ந தே அநுரூப-
தே நா நுரூப
சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி-என்று தேவருக்கு அநு ரூபம் அன்று
அது தனக்கு அசஹ்யம் -என்கை —

————————————————————————–

ஸ்லோகம் -26- அவதாரிகை –

தேவர் உடைய ரஷண அபாவத்தால் வந்த
தேஜோ ஹாநியையும் பாராதே
என்னைக் கைவிடும் அன்றும்
நான் விடப் பார்க்கிறிலேன் -என்று
தம்முடைய அகதிவத்தாலே தம்முடைய
மகா விஸ்வாசத்தை ஆவீஷ்கரிக்கிறார்-

நிராஸ கஸ்ய அபி ந தவ உத்ஸஹே
மஹேஸ ஹாதும் தவ பாத பங்கஜம்
ருஷா நிரஸ்தோ அபி ஸிஸூ ஸ்தநந்தயோ
ந ஜாது மாதுஸ் சரனௌ ஜிஹாஸதி——–26–

நிராஸ கஸ்ய அபி –
ரஷகத்வம் ஸ்வரூபமாய் இருக்கிற தேவர்
நிராஸகராக பிரசங்கம் இல்லை –
இப்படிப் பட்ட தேவர் நிஷ் கருணராய் -நிராஸகரானாலும்-

தவ பாத பங்கஜம் -தாவத் -ஹாதும் -நோத்ஸஹே-
ரஷகமுமாய்
ப்ராப்தமமுமாய்
போக்யமுமான
திருவடிகளை முந்துற முன்னம் விட்டு ஜீவிக்க
ஸ்ரத்தை பண்ணு கிறிலேன்-

கண்டார் இகழ்வனவே காதலன் தான் செய்திடினும்
கொண்டானை அல்லால் அறியாக் குலமகள் போல் -என்று
தேவர் ரஷகர் அன்றியிலே ஒழிந்தாலும்
புறம்பு போக்கில்லை -என்கை –

மஹேஸ –
தமீஸ் வராணாம் பரமம் மகேஸ்வரம் -என்றும்
ஈச்வரஸ் சர்வ பூதா நாம் -என்றும் -சொல்லுகிறபடியே
நிருபாதிக நிர்வாஹகனானவனே-
சம்சாரத்தில் பந்தங்களைப் போலே
கர்மோ பாதிகமாய் புறம்பே போய் உஜஜீவிக்கிறேனோ-

ஸூஹ்ருதம் சர்வ பூதா நாம்
சர்வேஷா மேவ லோகா நாம் பிதா மாதா ஸ மாதவ என்னும்
நிருபாதிகமான பரிவும் சம்பந்தமும் புறம்பே யுண்டாய்
தேவரை விட்டுப் போய் உஜ்ஜீவிக்கவோ –

ருஷா நிரஸ்தோ அபி ஸி ஸூ ஸ்தநந்தயோ –
ஸ்தந்யமே தாரகமான சிசுவானது
ஜனநியாலே குரோதம் அடியாக விடப் பட்டாலும்
ஸ்வ ரஷணத்தில் சக்தி இன்றிக்கே
தத் ஏக ரஷ்யமான தசையைச் சொல்லுகிறது –

இவ் வ்வாத்ம வஸ்து ஈஸ்வர ஏக ரஷ்யமாய்
நித்ய ஸ்தனந்த்யமாய் இறே இருப்பது
அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும்
மற்றவள் தன அருள் நினைந்தே அழும் குழவி –
ஈன்ற தாய் -என்றும் -அரி சினம் -என்றும் விருத்த தர்மம் –
ஏக ஆஸ்ரயத்தில் சம்பவியாது என்கை

பிதாவுக்கு ஹிதார்த்தமாக குரோதம் சம்பவித்தாலும்
மாத்ரு விஷயத்தில் சம்பாவனை இல்லை இறே –

ஜாது-
க்ருதையான போதொடு
ஆதரித்த போதொடு
வாசி அற

ந மாதுஸ் சரனௌ ஜிஹாஸதி –
கையாலே தள்ளுகை அன்றிக்கே
காலாலே தள்ளிலும்
அந்தக் காலைக் கட்டிக் கொள்ளும் அத்தனை ஒழிய
புறம்பு போகப் பாராதாப் போலே-

(தரு துயரம் தடாயேல் உன் சரண் அல்லால் சரண் இல்லை —
அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்றவள் தன்
அருள் நினைந்ததே அழும் குழவி அதுவே போன்று இருந்தேனே -பாசுரம் தழுவிய ஸ்லோகம் -)

—————————————————————————-

ஸ்லோகம் -27-அவதாரிகை –

என்னுடைய அநந்ய கதித்வத்தாலே
விட மாட்டாத அளவேயோ-
தேவர் போக்யதையிலே அழுந்தின
மனஸ்ஸூம் வேறு ஒன்றில்
போக மாட்டாது –
என்கிறார் –

தவாம்ருதஸ் யந்தி நி பாத பங்கஜே
நிவேஸி தாத்மா கத மந்யதிச் சதி
ஸ்திதே அரவிந்தே மகரந்த நிர்ப்பரே
மது வ்ரதோ நே ஷூ ரகம் ஹி வீஷதே–27-

தவாம் ருதஸ் யந்தி நி பாத பங்கஜே –
ப்ராப்தமுமாய்
போக்யமுமான தேவர் திருவடிகளிலே
விஷ்ணோ பதே பரமே மதவ உத்ஸ –
ரசோ வை ஸ –
தேனே மலரும் திருப் பாதம் -என்று
ஸ்ருதி சித்தம் இ றே போக்யதை –

நிவேஸி தாத்மா –
தேவர் உடைய நிர்ஹேதுகமான ப்ரசாதத்தாலே
நிவேசிக்கப் பட்ட மனஸ் ஸானது
அபோக்யமுமாய் அப்ராப்தமுமான ஹேய விஷயங்களிலே
பழகிப் போந்த மனஸ்ஸூ
ஸூரி போக்யமான தேவர் திருவடிகளிலே
அவகாஹிக்கும் போது
தேவர் ப்ரசாதமே வேண்டாவோ –

கத மந்யதிச் சதி –
மய்யா ஸகதம நா -என்கிறபடியே
தேவர் திருவடிகளில் சக்தமான மனஸ்ஸூ தத் வ்யதிரிக்த விஷயங்களில் ஸ்ரத்தை
பண்ணும்படி எங்கனே
உன் வாசியையும் அறிந்து வைத்து
சைதன்ய பிரசார த்வாரமான இது
விஷயாந்தரங்களை விரும்பும்படி எங்கனே –

ஸ்திதே அரவிந்தே மகரந்த நிர்ப்பரே –
ஸூக ஸ்பர்சமாய்
மதுவாலே பூரணமான செந்தாமரை யானது
போக்தாக்களைக் குறித்து
அவசர ப்ரதீஷமாய் இருக்க –

மது வ்ரதோ –
மதுவே ஜீவனமான பதார்த்தம் -என்னுதல்-
மது சம்ருத்தமாய் இருக்கிற இடத்திலே பருகக் கடவோம்
என்கிற சங்கல்பத்தை உடைய பதார்த்தம் -என்னுதல்

நே ஷூ ரகம் ஹி வீஷதே
கிட்டுகையே அரிதாய் -கிட்டினாலும் நாக்கு நனையப் போராதே இருக்கிற
முள்ளிப் பூவிலே சென்று
பணியாது ஒழிகை அன்றிக்கே-கடாஷிப்பதும் செய்யாது –

ஹி
இது உபதேசிக்க வேண்டுமோ தேவருக்கு
சம்ப்ரதிபன்னம் அன்றோ
எங்குப் போய் உய்கேன் உன் இணை யடியே யடையல் அல்லால் –பெருமாள் திருமொழி -5-5-என்று இராதோ-

(அம்ருதஸ்யந்தி நி பாத பங்கஜே-அம்ருதத்தை பெருக்கும் -மோக்ஷத்தை அளிக்கும் –
உன்னுடைய திருவடித் தாமரையில் -உன் தேனே மலரும் திருப் பாதம் –
இஷூரகம் -முள்ளிப் பூவை
நிவேஸி தாத்மா -தேவர் உடைய நிர்ஹேதுகமான ப்ரசாதத்தாலே-நிவேசிக்கப் பட்ட மனஸானது-என்பதே சிறந்த அர்த்தம்
ஸ்தாபிக்கப் பட்ட மனம் உடையவன் -என்ற அர்த்தம் சிறப்புடையது இல்லை )

——————————————————————————-

ஸ்தோத்ரம் -28-அவதாரிகை –

ந தர்ம நிஷ்ட்டோஸ்மி-யிலே தேவர் திருவடிகளை லபிக்கைக்கு அனுகூலங்கள் ஒன்றும் இல்லை -என்றார்
அவ்வளவே அன்று -பிரதிகூலங்களால் பூரணன் -என்றார்
இப்படிப் பட்ட எனக்கும் பேற்றில் வந்தால் தேவர் கிருபையே பயாப்தம் என்றார்
இப்படி ந்யஸ்த பரனான என் பக்கலிலே விரோதி மேலிடுகை தேவர்க்கு தேஜோ ஹாநி -என்றார்
அத்தை பாராதே தேவர் கை விட்ட அன்றும் புறம்பு போக்கில்லை -என்றார்

இனி மேல்
த்வத் பாத மூலம் சரணம் பரபத்யே -என்று பண்ணின பிரபத்தி ஒன்றும் அமையுமோ
விரோதி நிவ்ருத்திக்கும் அபிமத சித்திக்கும் –என்ன

மநோ வாக் காயங்கள் மூன்றாலும் பண்ணின பிரபத்தி எல்லாம் வேண்டுமோ –
பத்தாஞ்சலி புடம் தீநம் யாசந்தம் சரணாகதம் -என்கிற
காயிகமான அஞ்சலி ஒன்றுமே அமையாதோ -என்கிறார் இதில்

த்வத் அங்க்ரிம் உத்திஸ்ய கதா அபி கேநசித்
யதா ததா வா அபி சத்ருக் ருத்தோ அஞ்ஜலி
ததைவ முஷ்ணாத்ய ஸூ பான்யசேஷ தஸ்
ஸூ பானி புஷ்ணாதி ந ஜாது ஹீயதே—28-

த்வத் அங்க்ரிம் –
நிருபாதிக சேஷியான உன்னுடைய நிரதிசய போக்யமுமாய்
சர்வ ஸூலபமுமான திருவடிகளை –

இத்தால் –
பிராப்யமுமாய் –
பிராபகமுமாய் —
ப்ராப்தமுமாய் –
இருக்கிறபடியைச் சொல்லுகிறது

உத்திஸ்ய-
இத்தையே பரம ப்ராப்யமாக நினைத்து
இத்தால் பிரயோஜநாந்தர வ்யாவ்ருத்தி சொல்லுகிறது –

கதா அபி –
இச்சை பிறந்த போது காலம் -என்கை –
இத்தால்
வசந்த க்ரீஷ்மாதி ஸூ கள கிருஷ்ண பாஷா
பூர்வ ஆஹ்ணா பராஹ்னாதி கால நியதியை உடைய
ஜ்யோதிஷ்டோமாதிகளில் இதுக்கு உண்டான வ்யாவ்ருத்தி

வசந்தே வசந்தே ஜ்யோதிஷா யஜேத் –

கேநசித் –
இத்தால்
தரை வர்ணிககத்வ க்ருஹ மேதித்வ
கிருஷ்ண கேசத்வ வேத வேதாங்க வித்யாதிகாரி நியமம் உடைய கர்மங்களில் வ்யாவ்ருத்தி –
ஆகையால் சர்வ அதிகாரம் -என்கை –

ஜாத புத்ர கிருஷ்ண கேசோ அக்னி நாத தீத –

யதா ததா-
பிரகார நியதி இல்லை -என்கிறது
இத்தால் –
சாஸ்த்ரங்களில் பிரகார விசேஷ நியமம் உண்டான
கர்மங்களில் வ்யாவ்ருத்தி

வா அபி –
என்று விகல்ப சமுச்சய ஸூ சகமான அவ்யயங்கள் இரண்டாலும்
ஒன்றிலே நியதமான கர்மங்களில் இதுக்கு உண்டான வ்யாவ்ருத்தி சொல்கிறது

சத்ருக் க்ருத –
என்று யாவ ஜ்ஜீவாதி காரமான
நித்ய கர்ம வ்யாவ்ருத்தி சொல்லுகிறது –

தோ அஞ்ஜலி –
ஜாயாதி சஹகாரி ஸாபேஷமான
அச்வமேதாதி களில் காட்டில்
இதுக்கு உண்டான சூகரத்வம் சொல்லுகிறது
அயஜ்ஞோ வா ஏஷ யோ அபத் நீக –

ததைவ –
தேசாந்த்ரே காலாந்த்ரே தேஹாந்த்ரே
பல பிரதமான கர்மங்களில் வ்யாவ்ருத்தி சொல்லுகிறது –
முஷ்ணாத்ய

அஸூபான்யசேஷதஸ் –
சர்வ பாபங்களும் மறுவல் இடாத படி போகை-
சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி
இத்தால் ஒரு பாபத்துக்கு ஒரு பிராயச்சித்தமான
த்வாதச வார்ஷிக சம்வத்சர சாந்தராயன கருச்ச ராதிகளில் வ்யாவ்ருத்தி

முஷ்ணாதி-
முஷ -ச்தேய –
வஞ்சித்து –முற்றம் தவிர்ந்த -திருவாய்மொழி -8-10-1-
சும்மனாதே கை விட்டோடி -பெரியாழ்வார் திருமொழி -5-4-3-என்று போன பிரகாரம் தெரியாது ஒழிகை –
ஸூ பானி புஷ்ணாதி –
விரோதியைப் போக்கி விடும் அளவு அன்றிக்கே
அபிமதங்களாலே பூர்ணமாக்கும் –
பஹூ வசனத்தாலே-பர பக்தி பரஜ்ஞானம் பரம பக்தி
தேச விசேஷ பிராப்தி பகவல் லாபம் ,ப்ராப்தி பலமான கைங்கர்யம் -இவற்றைச் சொல்லுகிறது
இத்தால் ஸ்வர்க்காதி களான ஒரோ பலங்களிலே நியதமான கர்மங்களில் வ்யாவருத்தி

ந ஜாது ஹீயதே –
இத்தனையும் கொடுத்தாலும் தான் குறையாது இருக்கை –
இத்தால் பல பிரதானத்து அளவிலே ஷீண சக்திகமான கர்மங்களில் வ்யாவ்ருத்தி
அஞ்சலி பரமா முத்ரா ஷிப்ரம் தேவ பிரசாதி நீ
ஸூ ஸூ கம் கர்த்தும் அவ்யயம் –
க்ரியா ரூபமான அஞ்சலி குறையாது இருக்கை யாவது என் -என்னில்
அநந்ய பிரயோஜனராய்க் கொண்டு பண்ணின அஞ்சலி ஆகையாலே
பிரசன்னனான ஈஸ்வரன் எல்லாம் செய்தாலும் ஒன்றும் செய்யாதானாய் இருக்கையாலே

ருணம் ப்ரவ்ருத்தம் இவ மே ஹ்ருதயான் நாப சர்ப்பதி

உன் அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி நீ -பெரிய திருவந்தாதி -58-என்னக் கடவது இ றே-

(அஞ்சலி -அம் ஜலயதி
ந ஜாது ஹீயதே –பலன்களை வர்த்தித்து கொண்டே இருக்கும் –
பலன் கை புகுந்த பின்பும் அஞ்சலி தானே போது போக்காய் இருக்குமே )

——————————————————————————-

ஸ்லோகம் -29-அவதாரிகை –

ஆயாஸாத்மகமான அஞ்சலி தான் வேண்டுமோ
சிந்திப்பே அமையும் -திருவாய் மொழி -9-1-7-என்கிறபடியே
மானசமாக அமையாதோ –
விரோதி பூர்வகமான பரம பதத்தைத் தர -என்கிறார்

இத்தால் –
தீனம் -என்கிற மானச பிரபத்தியைச் சொல்லுகிறது

ந தர்ம நிஷ்ட்டோஸ்மி -என்கிற இது வாசிக ப்ரபத்தியாய்
த்வத் அங்க்ரி உத்திஸ்ய -என்றது காயிக ப்ரபத்தியாய்
இதில் மானசமான பிரபத்தி -என்னவுமாம்

அதவா
த்வத் அங்க்ரிம் –உதீர்ண –என்கிற ஸ்லோக த்வயத்தாலே
பிரபத்தி பலமான பர பக்தியைச் சொல்லுகிறது -என்னவுமாம்

உதீர்ண சம்சார தவ ஆஸூஸூ ஷணிம்
ஷாணோத நிர்வாப்ய பராம் ஸ நிர்வ்ருதிம்
ப்ரயச்சதி தவச் சரணா ருணாம் புஜ
த்வய அநு ராக அம்ருத ஸிந்து ஸீகர–29-

உதீர்ண சம்சார தவ ஆஸூஸூ ஷணிம்-
கிளர்ந்து எரிகிற காட்டுத் தீயை –
சம்சாரத்தை காட்டுத் தீயாகச் சொல்லுகிறது -தாஹ்யமான காட்டில்
அக்னியை அவிக்க ஒண்ணாதாப் போலே
அவித்யாதி களுக்கு இலக்காம் இத்தனை ஒழிய
பரிஹரிக்க ஒண்ணாது -என்கைக்காக
ஆத்மா அதாஹ்யம் -என்கிறது -லௌகிக அக்னியில் இறே –
அசந்நேவ-என்கிறபடியே தக்த படம் போலே ஆக்கும் இறே

ஷாணோத நிர்வாப்ய –
அத ஸோ அபயங்கத-என்கிறபடியே -அப்போதே அவித்து
ததைவ முஷ்ணாதி -ஷனே ந நிர்வாப்ய -என்று சொல்லுகையாலே
அவ்வதிகாரிக்கு பலத்துக்கு விளம்பம் இல்லை என்கிறார்

யதே ஷீகதூல மக்நௌ ப்ரோதம் ப்ரதூயேத -என்கிறபடியே
இவன் பட்ட நோவை இவன் விரோதி வர்க்கத்தோடு போக்கும் ஈஸ்வரன் -என்கை

பராம்ஸ நிர்வ்ருதிம் ப்ரயச்சதி –
ஒரு தேச விசேஷத்திலே
ஆனந்த நிர்ப்பரனாய் இருக்கும்
இருப்புத் தரா நிற்கும்

நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி
மம சாதர்ம்யம் ஆகாதா
ஸ ஸ்வராட் பவதி –என்னும் ஸூகம் இறே

தவச் சரணா ருணாம் புஜத்வய அநு ராக அம்ருத ஸிந்து ஸீகர –
ப்ராப்தனாய் ஸூலபனான உன்னுடைய
நிரதிசய போக்யமான திருவடிகளில்
அனுராகம் ஆகிற அம்ருத சாகரத்திலே ஒரு திவலை
அருண பதத்தாலே பரபாக ரசம் சொல்லுகிறது

அம்புஜ பதத்தாலே
மென்மை குளிர்ச்சி நாற்றங்களால் வந்த ரசம்

த்வயம்
அந்யோந்ய சத்ருசமான சேர்த்தி அழகாலே வந்த சாரஸ்யம்
இத்தால்
அநுராக ஜனகமான திருவடிகள் -என்கை

அநுராக-
திருவடிகளில் அத்யவஸா யாத்மகமான ருசி -என்னுதல்
பிரபத்தி பலமாய் கைங்கர்ய உபகரணமான பக்தி -என்னுதல்
ப்ரீதி காரிதம் இறே கைங்கர்யம்

அம்ருத –
ஸ்மர்த்தவ்ய விஷய ஸாரஸ்யத்தாலே
ஸ்வயம் பிரயோஜனமாய் இருக்கை அன்றியே
பத்யமுமாய் இருக்கை

ஸிந்து ஸீ கர –
அதனில் பெரிய அவா -திருவாய்மொழி -10-10-10-என்கிற
விஷய அநு ரூபமான ப்ரேமம் எல்லாம் வேண்டா
அபிமத ஸித்திக்கு -என்கை-

(பிரபத்தி தான் வேணுமோ -அஞ்சலியை போதாதோ என்றவர் இதில்
அஞ்சலி தான் வேணுமோ சிறிது ஆசை கிடந்தால் போதாதோ என்கிறார் –
பாதாரவிந்த ப்ரீதி விஷய அமுதக் கடலில் ஒரு திவலையே சம்சார காட்டுத் தீயை அணைத்து
முக்தர்கள் உடன் ஓக்க பரம ஆனந்தத்தையும் அளிக்க நல்லதே –
ஆஸூஸூஷணி- என்று அக்னிக்கும் பெயர் -)

———————————————————————-

ஸ்லோகம் -30-அவதாரிகை –

இப்படி விளம்ப ஹேது இல்லாத
ஸித்த உபாயத்தைப் பரிக்ரஹித்தவர் -ஆகையாலே
க்ரம ப்ராப்தி பற்றாதே-த்வரை பிரேரிக்க
கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ -திருவாய் மொழி -6-9-9-என்கிறார்
பிரபத்தி பலமான பர பக்தியாலே
கனை கழல் காண்பது என்று கொல் கண்கள் -திருவாய்மொழி -6-3-10 -என்றும்
காணக் கருதும் என் கண்ணே -திருவாய் மொழி -9-5-1-என்றும்
சொல்லுகிறபடியே
கண்ணாலே காண்பது என்று -என்கிறார் -என்றுமாம் –

விலாஸ விக்ராந்த பர அவர ஆலயம்
நமஸ் யதார்த்தி ஷபணே க்ருத ஷணம்
தனம் மதீயம் தவ பாத பங்கஜம்
கதா நு சாஷாத் கரவாணி சஷூஷா—30-

விலாஸ –
லீலையாக ஆக்கிரமிக்கப் பட்ட உத்க்ருஷ்டரான
தேவதைகள் உடைய இருப்புக்களையும்
மரண தர்மாக்களான மனுஷ்யாதி களுடைய இருப்புக்களையும்
உடைத்தாய் உள்ளத்தை
விமுகர் உடைய தலையிலே அநாயாசேன சென்று இருந்த திருவடிகளுக்கு
ருசியை யுடையார் தலையிலே இருக்கை பணி யுண்டோ –

விக்ராந்த –
அந்ய பரரானார் பக்கலிலேயோ மேல் விழல் ஆவது
அநந்ய ப்ரயோஜனர் பக்கலிலே மேல் விழல் ஆகாதோ

பர அவர ஆலயம் –
வசிஷ்ட சண்டாள விபாகம் இன்றிக்கே
தூளி தானம் பண்ணின திருவடிகள்
அத்தை ஒழியச் செல்லாத எனக்கு அரிதாவதே-
சங்கைஸ் ஸூராணாம்-என்கிற கர்ம பாவந நிஷ்டரும்
தவம் செய்து நான்முகன் பெற்றான் –இரண்டாம் திருவந்தாதி -78-என்கிறபடியே
உபய பாவ நிஷ்டரும்
பெற்ற பேறு எனக்கு அரிதாவதே –

நமஸ் யதார்த்தி ஷபணே க்ருத ஷணம்-
ப்ராசங்கிகமாகப் பிறந்த அபதானம் -முன் நடந்த வ்ருத்தாந்தம் -கிடக்க கிடீர் –
திருவடிகளிலே தலை சாய்த்தார் உடைய ஆர்த்திகளைப் போக்குகையிலே
க்ருத அவசரமாய் உள்ளத்தை
ஆஸ்ரித ரஷணத்திலே அவசர ப்ரதீஷமான காலத்தை எதிர்பார்த்து –
இருக்கிற திருவடிகளைக் காண்கைக்கு –
கதா நு சாஷாத் கரவாணி சஷூஷா -என்று கூப்பிட வேண்டுவதே –

தனம் மதீயம்-
வைத்த மா நிதி -திருவாய் மொழி -6-7-11-என்கிறபடியே
எனக்கு ப்ராப்யமுமாய் பிராபகமுமாய் உள்ளத்தை

தவ பாத பங்கஜம் –
சர்வ ஸூ லபமுமாய் ஆஸ்ரித வத்ஸ்லமுமாய்
நிரதிசய போக்யமுமான திருவடிகளை –

கதா நு சாஷாத் கரவாணி சஷூஷா –
த்ரிவிக்ரமா பதாந தூளி தானத்திலும் காணப் பெறாத நான்
என்று காண இருக்கிறேன்
விஷயங்களிலே மண்டிக் கிடக்கிற சம்சாரிகள் நடுவே இருக்கிற உமக்கு
நம்மை ஒழியச் செல்லாதபடி புகுர நிருத்தினோமாகில்
ஒன்றும் செய்யாதாரைப் போலே கூப்பிடுகிறது என் -என்ன
கண்ணாலே கண்டு விடாய் தீர இருக்கிற எனக்கு
சம்சாரிகளில் காட்டில் ஒரு வ்யாவ்ருத்தி பண்ணித் தர அமையுமோ

சஷூஷா-
ஒரு தேச விசேஷத்திலே
சதா தர்சனம் பண்ணப் பெறாதே
காண விடாய்த்த எனக்கு
கண்ணாலே காண வேணும் .

(இது வரை த்வய பூர்வார்த்தம் அருளிச் செய்து மேலே உத்தரார்த்தம் -கைங்கர்ய பிரார்த்தனை –
இது முதல் அவன் வை லக்ஷண்யத்தை பரக்க-17-ஸ்லோகங்களால் அருளிச் செய்கிறார் –
அதில் முதலில் இதிலும் அடுத்த ஸ்லோகத்திலும் பரம புருஷார்த்தமான திருவடிகளை கண்டு களிப்பது என்றோ என்று அலமருகிறார்
தாவி வையம் கொண்ட தடம் தாமரை கட்கே கோவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ-என்றும்
அன்று தேர் கடாவிய பெருமான் கனை கழல் காண்பது என்று கொலோ கண்களே –என்றும்
சாஷாத்காரம் பெற பதறி அருளிச் செய்கிறார் –
சஷூஷா—திவ்ய சஷூஸ் ஸூக்களை கொடுத்து அருளினாய் அதே போலே பாவியேனுக்கும் அருள வேணும் –
நெஞ்சு என்னும் உட் கண்ணால் காண விரும்புகிறார் –பரமபத பிராப்தியை அபேக்ஷிக்கிறார் என்றுமாம் – )

———————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading