ஸ்ரீ சதுஸ் ஸ்லோகீ—ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –

ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூநவே
யத் கடாஷைக லஷ்யாணாம் ஸூலப ஸ்ரீ தரஸ் சதா –ஸ்ரீ நாயனார் ஆச்சான் பிள்ளை அருளிச் செய்த தனியன்

ஸ்ரீ யாமுனாசார்யர் குமாரரும், எவர் க்ருபையினால் ஸ்ரீ எம்பெருமானை எளிதில் அடைய முடியுமோ அந்த ஸ்ரீ கிருஷ்ணர் எனும் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளையைத் துதிக்கிறேன்.

(நான்காம் அத்தியாயத்தில்-நான்கு கீதா ஸ்லோகங்கள் -அவதார ரஹஸ்யங்கள் ஆறு அர்த்தங்கள்
2-45-2-48-சதுஸ் ஸ்லோகி -நான்கு ஸம்ஹிதைகள்
கோதா சதுஸ் ஸ்லோகி -ராமானுஜ சதுஸ் ஸ்லோகி-
மண்டோதரி சதுஸ் ஸ்லோகி
பல இருந்தாலும் பிரசித்தமானது ஆளவந்தார் அருளிச் செய்த இந்தப் பிரபந்தமே)

யத் பதாம்போருஹ-த்யான வித்வஸ்தாசேஷ-கல்மஷ
வஸ்துதாம்-உபயாதோ-ஹம் யாமுநேயம் நமாமி தம்.-ஸ்ரீ கீதா பாஷ்யத்தின் தொடக்கத்தில் உள்ள ஸ்வாமி ஸ்ரீ ஆளவந்தார் பற்றிய தனியன்”

ஸ்ரீ ஆளவந்தார் உடைய இரண்டு திருவடிகளை மட்டும் உத்தேசிக்கப் படுகின்றன அல்ல
யதோதாம் போருஹ –ஆறு எழுத்துக்களுக்கு வர்ணக்ரமம் சொன்னால் 14 எழுத்துக்கள் தேறும்
யகார -அகார -தகார -பகார -அகார – ககார -ஆகார -மகார-மாகார ஓகார -ரெப -உகார -ஹகார -அகார
ஸ்ரீ நம் ஆழ்வார் -ஸ்ரீ ஆளவந்தார் -தம்முடைய பஞ்ச ஆச்சார்யர்கள் திருவடிகளை
யஸ்ய பதாம் போரு ஹி -சம்பந்த சாமானே ஷஷ்டி –
மாதா பிதா -வகுளாபிராமம் ஸ்ரீ மத் ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்த்னா
பத -ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளை சொல்லி
அம்போருஹ-தாமரைக்கு வாசகமான -தம்முடைய பஞ்ச ஆச்சார்யர்களையும்
தாவி வையம் கொண்ட தடம் தாமரைகட்கே போலே
ஸ்ரீ பராங்குச தாசர் -பெரிய நம்பி–என்று ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் காட்டி அருளுகிறார்

அவதாரிகை –
நம் தர்சனத்துக்கு பிரதானம்
ரஹஸ்ய த்ரயம் -என்றும்
ஸ்லோக த்வயம் -என்றும்
சதுஸ் ஸ்லோகீ –என்றும்
நம் ஆச்சார்யர்கள் அருளிச் செய்து போருவர்கள் –

இதில் திரு மந்த்ரத்தாலே ஸ்வரூபமும் ஸ்வரூப அனுரூபமான புருஷார்த்தமும் பிரதிபாதிக்கப் படுகையாலே-
அந்த புருஷார்த்தத்துகு உபாய சிந்தை பண்ணுகிறது சதுஸ் ஸ்லோகியாலும் -ஸ்லோக த்வயத்தாலும் –

(ஸ்லோக த்வயம் என்றது ஸ்திதே மனசீ-என்று தொடங்கும் ஸ்ரீ வராஹ சரம ஸ்லோகம்
உபாயத்தை விளக்குவது இந்த ஸ்லோக த்வயமும் சதுஸ் ஸ்லோகியும் என்றவாறு-புருஷகாரத்தையும் புருஷோத்தமனான -ஞானப்பிரானை அல்லால் இல்லது நான் கண்ட நல்லதுவே – )

(சரம ஸ்லோகம் -ஒன்றே கண்ணனுடையது
ஸ்லோக த்ரயம் -ராம சரம ஸ்லோகம்
வாக்ய த்வயம் -ரத்னமான த்வயம்)

இவ் விடத்தில் சதுஸ் ஸ்லோகியால் செய்கிறது என் என்றால் –
ஸ்ரீ நம்பெருமாளுக்கு தேவதாந்தரங்களில் காட்டில் வாசி
மோஷ ப்ரதத்வமும் ஜகத் காரணத்வம் -என்கிற இவை –

(காரணந்து த்யேய-மூல காரணம்-காரணா நாம் த்யாதா காரணந்து த்யேயஸ்
ஸர்வைஸ்வர்ய ஸம்பநஸ் சர்வேஸ்வர-அதர்வ சிர உபநிஷத்.- நாராயண பரப்ரஹ்மம் -தத்வம் நாராயண பர)

ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா
அன்று நான்முகன் தன்னொடு தேவர் உலகோடு உயிர் படைத்தான்
குன்றம் போல் மணி மாட நீடு திருக்குருகூர் அதனுள்
நின்ற ஆதிப் பிரான் நிற்க மற்றைத் தெய்வம் நாடுதிரே)

இவை தான் எத்தாலே வந்தது என்றால்
ஸ்ரீயபதித்தவ -ஸ்ரீ நாராயணத்வங்களாலே வந்த
பரத்வாதி குணங்களாலே -என்கை-(ஆதி -ஸுலப்யம் வாத்சல்யம் ஸ்வாமித்வம் போல்வன)

வேதார்த்தமாய் இருந்துள்ள அர்த்த பஞ்சகத்துக்கு விவரணமான ஸ்ரீ விஷ்ணு புராணத்திற்கு
பர்யாலோசனம் பண்ணி இருந்துள்ள
ஸ்ரீ ஆளவந்தார் ஸ்தோத்ரீ கரித்து
ஸ்ரீ யபதித்தவ நிபந்தனமான சௌலப்யாதி குணங்களை
அனுபவிக்கிறார் -ஸ்ரீ சதுஸ் ஸ்லோகியாலே-

(அர்த்த பஞ்சகம் -மிக்க இறை நிலையும் மெய்யாம் உயிர்நிலையும்
தக்க நெறியும் தடையாகித் தொக்கியலும்
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்
யாழினிசை வேதத்தியல்-ப்ராப்யஸ்ய ப்ரஹ்மணோ ரூபம் ப்ராப்துச் ச ப்ரத்யகாத்மந: ப்ராப்த் யுபாயம் பலம் விரோதி ஸ்வரூபங்கள்-)

இதில் முதல் ஸ்லோகத்தால் –
ஸ்ரீ பிராட்டியினுடைய -ஸ்ரீ நாராயண சம்பந்த நிபந்தனமான பரத்வம் பிரதிபாதிக்கப் படுகிறது –
இரண்டாம் ஸ்லோகத்தாலே-
அந்த பரத்வத்தை அனுபவித்துக் கொண்டு ஸ்ரீ பிராட்டி யுடைய புருஷகாரத்வம் சொல்லப் படுகிறது
மூன்றாம் ஸ்லோகத்தாலே
இப்படிக் கொத்த சௌலப்யாதி குணங்களை உடைய ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு
ஜகத் காரணத்வத்திலும் அந்தர் பாவம் உண்டு -என்னும் இடத்தைச் சொல்லி உபாய கீர்த்தனம் பண்ணப் படுகிறது –
நாலாம் ஸ்லோகத்தாலே
கீழ்ச் சொன்ன உபாய பல ஸ்வரூபம் நிரூபிக்கப் படுகிறது –

———————————————

காந்தஸ் தே புருஷோத்தம பணி பதிஸ் சய்யா ஆசனம் வாஹனம்
வேதாத்மா விஹகேச்வரோ யவ நிகா மாயா ஜகன் மோஹிநீ
ப்ரஹ்மே ஸாதி ஸூ ரவ் ரஜஸ் சத யிதஸ் த்வத் தாஸ தாஸீ கண
ஸ்ரீரித் யேவ ச நாம தே பகவதி ப்ரூம கதம் த்வாம் வயம்–1-

——–

பகவதி-கல்யாண குணங்களால் நிறைந்தவளே
புருஷோத்தம-புருஷோத்தமனான ஸ்ரீ பகவான்
தே காந்தஸ் உனக்கு பிரியமான கணவன்
பணி பதிஸ்-நாகங்களுக்கு அரசனான ஸ்ரீ ஆதிசேஷன்
சய்யா-படுக்கை
வேதாத்மா விஹகேஸ்வரோ–வேதத்தை சரீரமாக உடைய புள்ளரையனான ஸ்ரீ பெரிய திருவடி
ஆசனம் வாஹனம்-ஆசனமாகவும் வாகனமாகவும் இருப்பவன்
ஜகன் மோஹிநீ-உலகத்தை மோஹிக்கச் செய்வதான
மாயா -பிரகிருதி
யவ நிகா-உனக்கு முகத்திரையாய் இருக்கிறது –
ச தயிதஸ்-தங்கள் மனைவிமார்களுடன் கூடிய
ப்ரஹ்மே ஸாதி ஸூரவ் ரஜஸ்-பிரமன் சிவன் முதலிய தேவ சமூகம்
த்வத் தாஸ தாஸீ கண-உன்னுடைய தாச கணமாயும் தாஸீ கணமாயும் இருக்கிறது
தே நாம ச -உன்னுடைய திரு நாமமும்
ஸ்ரீரித் யேவ -ஸ்ரீ என்பதே யாய் இருக்கிறது
த்வாம் வயம்-இப்படிப்பட்ட பெருமைகள் பொருந்திய உன்னை அறிவிலிகளான நாங்கள்
ப்ரூம கதம் –எப்படிச் சொல்லுவோம்

————

காந்தஸ் தே புருஷோத்தம –
ஸ்ரீ பிராட்டியை நிரூபிக்கும் போது ஸ்ரீ எம்பெருமான் உடைய சம்பந்த நிபந்தன நிரூபணம் பண்ண வேணும் –
இவனையும் இவளுடைய சம்பந்தத்தாலே என்றும் நிரூபிக்க வேண்டும்
அது எங்கனே -என்னில்

க ஸ்ரீ ஸ்ரீய–ஸ்தோத்ர ரத்னம் -12-என்றும்
ஸ்ரீ ய ஸ்ரீ யம் பக்த ஜனைக ஜீவிதம் -ஸ்தோத்ர ரத்னம் -45-என்றும் –
திருவுக்கும் திருவாகிய செல்வா தெய்வத்துக்கு அரசே -செயய கண்ணா
ஆமருவி அப்பன் தேவாதி தேவன் –பெரிய திருமொழி -7-7-1- -என்றும்
என் திருமகள் சேர் மார்வனே என்னும் -திருவாய் மொழி -7-2-9-என்றும் சொல்லுகையாலே
ஸ்ரீ பிராட்டியை நிரூபிக்கும் போதும் காந்தஸ் தே புருஷோத்தம -என்னும் படியாய் இறே இருப்பது –

கஶ்ஶ்ரீ: ஶ்ரிய: பரமஸத்வ ஸமாஶ்ரய: க:
க: புண்டரீகநயந: புருஷோத்தம: க: |
கஸ்யாயுதாயுத ஶதைக கலாம்ஶகாம்ஶே
விஶ்வம் விசித்ர சிதசித் ப்ரவிபாக வ்ருத்தம்||ஸ்தோத்ர ரத்னம் -12-

ஸ்ரீ: என்று சொல்லப்படும் ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் செல்வம் யார்? யாரிடத்தில் சுத்த ஸத்வம் உள்ளது?யார் புண்டரீகாக்ஷன்? யார் புருஷோத்தமன் என்று சொல்லப்படுபவன்? யாருடைய ஸங்கல்பத்தின் ஒரு சிறு பகுதி, பலவகைப்பட்ட சேதனர்கள் மற்றும் அசேதனப்பொருள்களாக விரிந்திருக்கும் இவ்வுலகத்தைத் தாங்குகிறது?

அசிந்த்ய திவ்யாத்புத நித்ய யௌவந
ஸ்வபாவ லாவண்யமயாம்ருதோததிம் |
ஶ்ரிய: ஶ்ரியம் பக்த ஜநைக ஜீவிதம்
ஸமர்த்தம் ஆபத்ஸகம் அர்த்தி கல்பகம் ||-ஶ்லோகம் 45 –

எம்பெருமான் நினைவுக்கு அப்பாற்பட்ட, திவ்யமான, ஆச்சர்யமான, நித்யமான, இயற்கையான இளமையை உடையவன்;
அழகுக் கடலாக இருப்பவன்; ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கும் ஸ்ரீயாக (செல்வமாக) இருப்பவன்;
தன்னுடைய அடியார்களின் உயிராக இருப்பவன்; அறிவில் குறைந்தவர்களையும் படிப்படியாக உயர்த்தக்கூடியவன்,
ஆபத்துக் காலத்தில் நண்பனாக இருப்பவன், அவனை விரும்புபவர்களுக்கு கற்பக மரமாக இருப்பவன் –

பர்த்தா தே புருஷோத்தம -என்னாதே-
காந்தஸ் தே புருஷோத்தம -என்பான் என் என்னில் –
துல்ய சீல வயோ வ்ருத்தாம் துல்ய அபி ஜன லக்ஷணாம்
ராகவோ அர்ஹதி வைதேஹீம் தம் சேயம் அஸி தேஷணா –சுந்தர -16-5-என்றும்
பகவன் நாராயண அபிமத அநுரூப ஸ்வரூப ரூப குண விபவ ஐஸ்வர்ய
சீலாத்ய அநவதிக அதிசய அசங்க்யேய கல்யாண குண கணாம் -சரணாகதி கத்யம் -1- என்றும்
ஸ்ரீ வல்லப -சரணாகதி கத்யம் -6- என்றும் –
யத் ப்ரூபங்கா பிரமாணம் ஸ  திர சர ரசநா தாரதம்யே முராரே
வேதாந்தாஸ் தத்வ சிந்தாம் முரபிது ரசி யத் பாத சிஹ்னைச் தரந்தி
போகோ போத்காத கேளீ சுளகித பகவத் வைஸ்வ ருப்ய அநுபாவா
ஸா ந ஸ்ரீ ராஸ் த்ருணீ தாமம்ருத லஹரிதீ லங்கா நீ யைர பாங்கை -ஸ்ரீ குணரத்ன கோசம் -4-என்றும்
உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ -என்றும்
பித்தர் பனி மலர் மேல் பாவைக்கு -திரு நெடும் தாண்டகம் -18-என்றும்
பிரயோகம் பண்ணுகிறார்கள் இறே –

(இந்த உலகில் ஸ்ரீமந் நாராயணனின் படைப்பில் பல ஏற்ற தாழ்வுகள் உள்ளன.
இவற்றுக்குக் காரணமாக உள்ளது இவளது புருவத்தின் அசைவுகளே ஆகும்.
இவள் தனது புருவ அசைவு மூலம் யாரை உயர்த்த வேண்டும் என்று கூறுகிறாளோ,
ஸ்ரீமந் நாராயணன் உடனே அப்படியே செய்து விடுகிறான்.
யார் ஒருவனது திருமார்பில் மஹாலக்ஷ்மியின் திருவடி அடையாளம் உள்ளனவோ
அவனே பரம்பொருள் என்று வேதங்கள் முழங்குகின்றன.
ஆக, அவனது திருமார்பில், இவளது திருவடிகளில் பூசப்ப்ட்ட செம்பஞ்சுக் குழம்பின் அடையாளங்கள் காணப்படும்.
இவளது திருக்கல்யாண குணங்கள் எப்படிப்பட்டது என்றால் –
ஸ்ரீமந் நாராயணன் விச்வரூபமே எடுத்து வந்தாலும் அவளது திருக்கல்யாண குணங்களை அவனால் முழுமையாகக் காண இயலாது.
இப்படிப்பட்ட ஸ்ரீரங்கநாச்சியாரின் கடைக்கண் பார்வையில் கடாக்ஷம் என்பது அமிர்தம் நிறைந்த கடல் போன்று பெருகி உள்ளது.
அப்படிப்பட்ட அவளது அருள் பார்வை என் மீது சற்று விழவேண்டும்.)

ஹரி என்னுதல் –விஷ்ணு -என்னுதல் -செய்யாதே புருஷோத்தம -என்பான் என் என்றால் –
தவாவி மௌ புருஷௌலோகே ஷரஸ் சாஷர ஏவ ச
ஷரஸ் சர்வாணி பூதாநி கூடஸ்தோ அஷர உச்யதே
உத்தம புருஷஸ் த்வன்ய பரமாத்மேத் யுதாஹ்ருத
யோ லோகத்ரய மாவிஸய பிபர்த் யவ்யய ஈஸ்வர
யஸ்மாத் ஷரமதீ தோ அஹ்ம ஷராதபி சோத்தம
அதோ அஸ்மி லோகே வேதே ச ப்ரதின புருஷோத்தம -ஸ்ரீ கீதை -15-16/17/18 –

(உத்தம புருஷஸ் த்வன்ய-(த்வாவிமௌ புருஷௌ லோகே க்ஷரஸ்சாக்ஷர ஏவ ச
க்ஷர: ஸர்வாணி பூதாநி கூடஸ்தோऽக்ஷர உச்யதே–15-16–உலகத்தில் இரண்டு வகைப் புருஷருளர்; அக்ஷர புருஷன், க்ஷர புருஷன் என. க்ஷர புருஷன் என்பது
எல்லா உயிர்களையுங் குறிக்கும்.-கூடஸ்தனே அக்ஷர புருஷன்.
உத்தம: புருஷஸ்த்வந்ய: பரமாத்மேத்யுதாஹ்ருத:
யோ லோகத்ரயமாவிஸ்ய பிபர்த்யவ்யய ஈஸ்வர:-17-இவரில் வேறுபட்டோன் உத்தம புருஷன். அவனே பரமாத்மா எனப்படுவோன்.அவன் மூன்று உலகுகளினுட் புகுந்து அவற்றைத் தரிக்கிறான்; கேடற்ற ஈசுவரன்.
யஸ்மாத்க்ஷரமதீதோऽஹமக்ஷராதபி சோத்தம:
அதோऽஸ்மி லோகே வேதே ச ப்ரதித: புரு÷ஷாத்தம:-18-நான் அழிவு கடந்தோனாதலாலும், அக்ஷர புருஷனைக் காட்டிலும் சிறந்தோனாதலாலும்,
உலகத்தாராலும் வேதங்களாலும் புருஷோத்தமனென்று கூறப்படுகிறேன்.)
க்ஷமஸ்வ புருஷோத்தம(உபசாராபதேஸேந க்ருதாந ஹரஹர் மயா அபசாரா நிமான் ஸர்வான் க்ஷமஸ்வ புருஷோத்தம-புருஷோத்தமனே உபசாரம் என்னும் பெயரால் என்னாலே தினம்தோறும் செய்யப்படும் இவ்வாபசாரங்கள் எல்லாவற்றையும் க்ஷமித்து அருள்வாயாக )

அசித்தானது -ஸ்வரூப அந்யதா பாவ யுக்தமாய் இருக்கும்
சித்தானது -ஸ்வ பாவ அந்யதா பாவ யுக்தமாய் இருக்கும் –
ஆக உபய அந்யதா பாவ ரஹிதன் ஈஸ்வரன் -என்று கொண்டு
தனக்கு விபூதி பூதமான சேதன அசேதன விலஷணன் என்று இட்டு – புருஷோத்தம -என்கிறது அன்றோ -என்கிறார் –

பணி பதிஸ் சய்யா
ஒரு ராஜாவுக்கு அபிமதையாய் இருப்பாள் ஒருத்தி கண்ட போது ரசிப்பது இத்தனை ஒழிய
ஒரு படுக்கையிலே ஏறப் பெறாதே யாய்த்து இருப்பது
அங்கன் அன்றிக்கே
பகவன் நாராயண அபிமத அநுரூப ஸ்வரூப ரூப -என்றும்
உனக்கேற்கும் கோல மலர்ப் பாவை -என்றும்
ராகவோ அர்ஹதி வைதேஹீம் -என்றும்
இப்படி பிரமாணம் உண்டாகையாலே கேவலம் அபிமதையான மாத்ரம் அன்றிக்கே
அனுரூபையுமாய் இருக்கையாலே அவனுக்கான படுக்கை இவளுக்கும் பிராப்தம் -என்கிறார்

பணி பதி -என்கையாலே –
அகாரேணோச்யதே விஷ்ணுச் சர்வ லோக ஈஸ்வரோ ஹரி
உத்த்ருதா விஷ்ணு நா லஷ்மீ ருகாரேணோசயதே சதா
மகாரஸ்து தயோர் தாஸ இதி பிரணவ லஷணம் –(ஸர்வ லோகங்களுக்கும் ஈஸ்வரனும் -ஹரியென்றும் -விஷ்ணு வென்றும் சொல்லப்படுபவனுமான எம்பெருமான் அகாரத்தினால் சொல்லப்படுகிறான் -விஷ்ணுவினால் திரு மார்பில் எப்போதும் தரிக்கப்பட்டு இருப்பவளான லஷ்மீ உகாரத்தினால் சொல்லப்படுகிறான் -அவர்களுக்கு தாஸனான ஜீவன் மகார வாஸ்யன் என்பதே பிரணவத்தின் லக்ஷணம் -)என்றும்
பவாம்ஸ்து சஹ வைதேஹ்யா கிரிசாநுஷூ ரம்ச்யதே
அஹம் சர்வம் கரிஷ்யாமி ஜாக்ரதஸ் ஸ்வ பதஸ்ஸ தே -அயோத்யா -31-25–என்றும்
சொல்லுகிற படியே ஆத்ம வஸ்துவுக்கு ஒரு மிதுன சேஷத்வம் பரம புருஷார்த்தம் ஆகையாலே
இங்கும் வாசூகி தஷக ப்ரப்ருதிகளான அஷ்ட மகா நாகங்களுக்கு- பர்ப்ருடனாய் -தலைவனாய் –
சேஷ பூதருக்கும் தலையாய் இருந்துள்ள திரு வநந்த ஆழ்வான்
இருக்கும் போது உன் திருப் படுக்கை -என்கிறார் –

ஆசனம் வாஹனம் -வேதாத்மா விஹகேஸ்வரோ-
ஸூபர்ணோ அஸி கருத்மான் த்ரிவ்ருத் தே சிரோ காயத்ரம் சஷூஸ் தோம ஆத்மா
சாம தே தநூர் வாமதேவ்யம் ப்ருஹத் ரதந்தரே
பஷௌ யஜ்ஞா யஜ்ஞியம் புச்சம் சந்தாம் ச்யங்காநி
திஷ்ணியா சபா யஜூம்ஷி நாம (தைத்ரிய யஜுர்வேத ஸம்ஹிதை)- என்கிறபடியே
நாக ஜாதிகளுக்கு நாயகனான அனந்தன் திருப் படுக்கை ஆனால் போலே
இங்கும் வேத மயனாய் பறவைகளுக்கு ஆதாரனாய் இருந்துள்ள பெரிய திருவடி
இவளுக்கு ஆசன வாகனங்கள் -என்கிறார்-

அபிமதை யானால் படுக்கையில் அணைக்க ப்ராப்தமாய் இருக்கும்
ஏக ஆசனத்தில் கொண்டு இருக்க யோக்யதை அன்றிக்கே ஆய்த்து இருப்பது-அங்கன் அன்றிக்கே-
வைகுண்டே து பரே லோகே ஸ்ரீ யா ஸார்த்தம் ஜகத்பதி
ஆஸ்தே விஷ்ணுர சிந்த் யாத்மா பக்திர் பாகவதைச் சஹ -என்கிறபடியே-(குண நிஷ்டரும் கைங்கர்ய நிஷ்டரும்)
இவள் அனுகூல ரூபையாய் இருக்கையாலே இவனுக்கான ஆசனமும் வாகனமும் இவளுக்கும் பிராப்தம்
என்று அருளிச் செய்கிறார் –

ஆக -இப்படி கீழ்ச் சொன்ன யுக்திகளாலே பிராட்டிக்கு நித்ய விபூதி சம்பந்தம் சொல்லப் பட்டது –
இனி மேல் ஸ்லோக சேஷத்தாலே லீலா விபூதி யோகம் என்ன
தத் அந்தர் வர்த்திகளாய் இருந்துள்ள ப்ரஹ்ம ருத்ராதி தேவ கணங்கள் உடைய
சேஷத்வம் என்ன இவை சொல்லப் படுகிறது
அது எங்கனே என்றால் –

யவநிகா மாயா ஜகன் மோஹி நீ –
மாயாந்து ப்ரக்ருதிம் வித்யான் மாயி நந்து மகேஸ்வரம்--(ப்ரக்ருதியை ஆச்சர்யமான ஸ்ருஷ்டிக்கு ஹேதுவாய் இருப்பதால் மாயை என்றும் -அந்த மாயையைத் தூண்டுபவனை மஹேஸ்வரன் என்றும் அறியக் கடவன்)ஸ்வேதர -4-10– -என்றும் –
பிரகிருதி மாயை -அத்தை தூண்டுபவன் மகேஸ்வரன் –
இந்த்ரோ மாயாபி புரூரூப ஈயதே -ப்ருஹத் 4-5-19– (பரம ஐஸ்வர்யத்தை உடைத்தாய் இருப்பதால் இந்த்ரன் எனப்படும் பரமாத்மா ப்ரக்ருதியாகிற மாயையினால் பல உருவங்களுடன் ஸஞ்சரிக்கிறான்)இந்த்ரன் பிரகிருதி ஆகிற மாயையினால்
பல உருவங்களுடன் சஞ்சரிக்கிறான்(பரம ஐஸ்வர்யம் உடைய உபய விபூதி நாதனை இங்கு இந்திரன் என்கிறது) -என்றும்
தைவி ஹ்யேஷா குண மயீ மம மாயா துரத்யயா
மாமேவ யே ப்ரபத்யந்தே மாயா மேதாம் தரந்தி தே -கீதை -7-14-(தேவனாகிற என்னாலே நியமிக்கப்பட்டதும் முக்குணங்களை யுடையதுமான இந்த என்னுடைய மாயை தாண்ட அரிதானது -என்னையே எவர்கள் சரணம் அடைகிறார்களோ அவர்கள் இந்த மாயையைத் தாண்டுகிறார்கள் )என்றும் இத்யாதிகளாலே பிரதிபாதிக்கப் பட்டு இருக்கிற பகவன் மாயை அன்றோ உனக்கு யவநிகை -(திரை-பகவத் ஸ்வரூப திரோதான கரீ-சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த பெரும் பாழ்)
ஒரு திரையின் உள்ளிருக்கும் பேரைப் புறம்பில் அவர் காணாத படியாய்
புறம் இருக்கும் பேரை உள்ளிருக்கும் அவர்கள் காணாத படியாய் யாயிற்று இருப்பது
அங்கன் அன்றிக்கே –ஜகன் மோஹிநீ -என்று எம்பெருமானுக்குத் திரோதாயிகையாய் இருக்கை அன்றிக்கே
ஜகத்துக்குத் திரோதாயிகையாய் இருக்கும் -என்கிறார் –

ப்ரஹ்மே ஸாதி ஸூராவ்ரஜஸ் சத யிதஸ் த்வத் தாஸ தாஸீ கண
பூலோகம் தொடங்கி சத்ய லோகம் பர்யந்தமாக மேல் உள்ள லோகங்கள் என்ன
அதல விதல ஸூதல பாதாளோத்தால ரஸாதல போகவதீ பர்யந்தமான கீழ் ஏழு லோகங்கள் என்ன
இவற்றில் காணப் பட்டு உடையராய் இருந்துள்ள தேவ கணங்கள் என்ன
இவர்களுக்கு கொத்து முதலிகளாய் இருந்துள்ள ப்ரஹ்ம ருத்ராதிகள்-என்ன
சரஸ்வதி ருத்ராணீ புலோ மஜாப் ப்ரப்ருதிகளாய் இருந்துள்ள தேவ ஸ்திரீகள் என்ன
அப்ஸரோ கணங்கள் என்ன
இவர்கள் எல்லாரும் ஆண் அடிமையும் பெண் அடிமையுமாய் இருக்கும் -என்கிறார்

இவை எல்லாம் யதார்த்தம் யன்றோ –
ஸ்தோத்ரம் யன்றோ
இது எங்கனே கூடும்படி -என்றால்
ஸ்ரீரித் யேவ ச நாம தே –
ஸ்ரீ என்று அன்றோ உனக்குத் திரு நாமம் –

இத்தாலே இவளுக்கு சர்வ சேஷணீத்வமும் தெரிவிக்கப் பட்டதோ -என்றால்
ஸ்ரீங் சேவாயாம் -என்கிற தாதுவாலே தன்னை ஒழிந்த சேதன அசேதனங்களாலே
ஸ்வரூப ஸ்திதி பிரவ்ருத்தி களுக்காக ஆஸ்ரயிக்கப் படுகிறாள் என்று கொண்டு –ஸ்ரீ -என்கிறது –
அதுக்கு பிரமாணம் –
கந்தத்வாராம் துராதர்ஷாம் நித்ய புஷ்டாம் கரீஷிணிம் ஈஸ்வரீம் சர்வ பூதானாம்-ஸ்ரீ ஸூக்தம் -9- -என்றும்
அஸ்ய ஈசானா ஜகத விஷ்ணு பக்தீம் -ஸ்ரீ நீளா ஸூக்தம் -என்றும் -உண்டாகையாலே-
ஸ்ருணோதி ஸ்ராவயதி –கேட்டு கேட்விப்பிக்கிறாள்
ஸ்ருணாதி -குற்றம் நீக்கி சேர்க்கிறாள்

(கர்த்தரு கர்மணி -இரண்டும் -முதல் வேற்றுமை உருபு எழுவாய் கர்த்தரு -இவள் ஆஸ்ரயிக்கிறாள் -இரண்டாம் வேற்றுமை செயப்படு பொருள் கர்மணி -இவளை ஆஸ்ரயிக்கிறார்கள்-கருவி வேற்றுமை உருபு இவளால் -கரணே -உத்பத்தியும் உண்டு)

பகவதி –
துல்ய சீல வயோ வ்ருத்தாம் துல்ய அபிஜன லஷணாம்-ஸ்ரீ ஸூந்தர –16-5- -என்கிறபடியே
எம்பெருமானொடு ஒக்க ஹேய பிரதி படமாய் இருந்துள்ள கல்யாண குணைகதாநத்வம் சொல்லப் படுகிறது –

மைத்ரேய பகவச் சப்தஸ் சர்வ காரண காரணே
சம்பர்த்தேதி ததா பர்த்தா பகாரோ அர்த்த த்வ்யாந்வித
நேதா கமயிதா ஸ்ரஷ்டா ககாரார்த்தஸ் ததா முனே
ஐஸ்வர் யஸ்ய சமக் ரஸ்ய வீர்யஸ்ய யஸஸச் ஸ்ரீய
ஜ்ஞான வைராக்யயோஸ் சைவ ஷண்ணாம் பக இதீரணா
வஸந்தி தத்ர பூதானி பூதாத்மன் யகிலாத்மனி
ச ச பூதேஷ் வசேஷஷூ வகாரார்த்தஸ் ததோ அவ்யய
ஜ்ஞான சக்தி பல ஐஸ்வர்ய வீர்ய தேஜாம் சயசேஷத
பகவஸ் ஸப்த வாஸ்யானி விநா ஹேயைர் குணாதிபி
ஏவ மேஷ மகா ஸப்தோ மைத்ரேய பகவா நிதி
பரம ப்ரஹ்ம பூதஸ்ய வாசுதேவஸ்ய நான்யக
தத்ர பூஜ்ய பதார்தோக்தி பரி பாஷா சமன்வித
சப்தோஸ்யம் நோபா சாரேணத் வன்யத்ர ஹ்யுபசாரத – ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-5-72–78-

மைத்ரேயரே பகவான் என்கிற சப்தம் சர்வ காரணங்களுக்கும் காரண பூதனான சர்வேஸ்வரன் விஷயத்திலே சொல்லப்படுகிறது -ப்ரக்ருதியை கார்ய தசையை அடையச் செய்பவன் -ஸ்வாமி என்னும் அர்த்தங்களுடன் கூடியது பகாரம் –
முனிவரே அப்படியே ரஷிப்பவன் சம்ஹரிப்பவன் ஸ்ருஷ்டிப்பவன் என்பது ககாரத்தின் அர்த்தம்
சம்பூர்ணமான ஐஸ்வர்யம் வீர்யம் யசஸ் செல்வம் ஞானம் வைராக்யம் இந்த ஆறு குணங்களுக்கும்
பக என்னும் பதம் வாசகமாய் இருக்கிறது –
பூதங்களை சரீரமாகக் கொண்டவனும் எல்லாவற்றுக்கும் ஆத்மாவாய் இருப்பவனுமான அவன் இடத்தில் பூதங்கள் வசிக்கின்றன –
அவனும் எல்லா பூதங்களிலும் வசிக்கிறான் -ஆகையால் அழிவற்றவனான பகவான் வகாரத்துக்கு அர்த்தம் ஆகிறான் –
கீழானவையான முக் குணங்கள் முதலியவற்றுடன் சேராத ஞானம் சக்தி பலம் ஐஸ்வர்யம் வீர்யம் தேஜஸ் -என்னும் எல்லாக் குணங்களும் பகவான் என்னும் சப்தத்தினால் சொல்லப்படுகின்றன –
மைத்ரேயரே இம்மாதிரியாக பகவான் என்னும் இந்த மஹா சப்தம் பர ப்ரஹ்மமான வாஸூ தேவனுக்கே உரித்தானது – வேறு ஒருவரையும் குறிக்காது -பூஜிக்கத்தக்க பொருளைக் குறிப்பது என்னும் பரி பாஷையுடன் கூடிய இந்த சப்தம் அவன் விஷயத்தில் உபசாரிகமாகச் சொல்லப்படுவது இல்லை – மற்ற விஷயங்களில் அமுக்யமாக சொல்லப்படுகிறது -என்று சொல்லப்பட்டது அன்றோ

என்று கொண்டு பிரமாணம் உண்டு ஆகையாலே-ஸ்ரீய பதியை நிர்தேசிக்கும் போது

இதி விவித மஜஸ்ய யஸ்ய ரூபம் ப்ரக்ருதி பாராத்ம மயம் சனாத நஸ்ய
பிரதி சது பகவான் அசேஷ பும்ஸாம் ஹரிர பஜன் மஜராதி காம் ச சித்திம்—ஸ்ரீ விஷ்ணு புராணம்-6-8-64-
பிறப்பற்றவனும் பழமையான எந்த விஷ்ணுவுக்கு பலவிதமான ப்ரக்ருதி என்ன -அத்தைக் காட்டிலும் மேலான திவ்ய ஆத்ம ஸ்வரூபம் என்ன இவை இம்மாதிரியாக சரீரங்களாக இருக்கின்றனவோ அந்த பகவான் ஹரி எல்லா மனிதர்களுக்கும் பிறப்பு மூப்பு முதலியவைகளைப் போக்கடிக்கும் மோக்ஷ சித்தியை அருளுவானாக

மஹத்யா பதி ஸம்ப்ராப்தே ஸ்மர்த்தவ்யோ பகவான் ஹரி -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-8-64-என்றும் பேர் ஆபத்து வந்த காலத்தில் பகவானாக ஹரி நினைக்கத் தக்கவன்

அநி யோஜ்யோ அப்ரமேயச்ச யஸ்து காம சரீர த்ருத்
மோததே பகவான் பூதைர் பால க்ரீடனகைரிவ -சபா பர்வம் 40-78–என்றும்
ஏவப்படாதவனும் அறிய முடியாதவனும் இஷ்டப்பட்ட உருவங்களைத் தரிப்பவனுமான பகவான் சிறுவன் விளையாட்டுக் கருவிகளுடன் விளையாடுவது போலே பூதங்களுடன் விளையாடி சந்தோஷிக்கிறான்(வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன்-இன்புறும் இவ் விளையாட்டுடையானைப் பெற்று ஒன்றும் குறைவிலன்)

பகவன் நாராயண -என்றும் –
இப்படி வ்யவஹரிக்கப் படுவதாய் இறே இருப்பது
அவளை நிர்தேசிக்கும் போது -பகவதீம் ஸ்ரீயம் தேவீம் -என்றும்
ஸ்ரீரித்யேவ ச நாம தே பகவதி -என்னும் படியாய் இருக்கும்

ப்ரூம கதம் த்வாம் வயம்-
கதம் ப்ரூம எப்படி சொல்வோம் –
வயம் -அறிவிலிகளான நாங்கள் -த்வாம் -இப்படிப் பட்ட பெருமைகள் பொருந்திய உன்னை
ஈஸ்வர குணஸ்த்வம் பண்ணும் போது
அநந்தா வை வேதா -என்கிற வேதங்களும் அகப்பட
ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் பிபேதி குதஸ்நேதி
யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா சஹ -என்று கொண்டு
அளவுகோல் முறிந்து மடங்கும் படியாய் இறே இருப்பது -(ஊற்றமுடையாய் பெரியாய் -பன்னலார் பயிலும் பவித்ரன் பரமேஷ்ட்டி)
அவன் தன்னையும் அகப்பட
போகோ போத்காத கேளீ சுளகித பகவத் வைஸ்வ ரூப்யையாய் -( ஸ்ரீ குணரத்ன கோசம் )
பகவானுடைய விஸ்வரூப அனுபவத்தையும் தன்னுடைய போகாரம்பமாகிற விளையாட்டாலே கை அளவாக
ஆக்குபவளான அந்த ஸ்ரீ தேவி –யாய் இருந்துள்ள உன்னை
மந்த மதிகளுக்கு அக்ரேசரராய் இருந்துள்ள நாங்கள் என் சொல்லி வ்யவஹரிப்பது -என்று கொண்டு
பிராட்டியினுடைய பரத்வத்தை பிரதிபாதிக்கிறார் -ஸ்ரீ ஆளவந்தார் -இதில்

——————————————————-

யஸ் யாஸ்தே மஹிமாந மாத்மந இவ த்வத் வல்லபோ அபி பிரபு
நாலம் மாதுமியத்தயா நிரவதிம் நித்யாநுகூலம் ஸ்வத
தாம் த்வாம் தாஸ இதி ப்ரபன்ன இதி ச ஸ்தோஷ்யாம் யஹம் நிர்ப்பயோ
லோகைகேஸ்வரி லோக நாத தயிதே தாந்தே தயாந்தே விதன்–2-

லோகைகேஸ்வரி -லோகத்துக்கு ஒரே ஈஸ்வரியாய் இருப்பவளே
லோக நாத தயிதே-லோகங்களுக்கு எல்லாம் ஸ்வாமியான எம்பெருமானுக்கு பிரிய மஹிஷியாய் இருப்பவளே(பந்தார் விரலி-விபூதியையும் விபூதிமானையும் அணைத்துக் கொண்டு)
தாந்தே-கருணா கல்பவல்லியே
யஸ் யாஸ்தே -எந்த உன்னுடைய
நிரவதிம்-அளவற்றதும்
ஸ்வத நித்யாநுகூலம் –இயற்கையாகவே பகவானுக்கு எப்போதும் அனுகூலமாய் இருப்பதுமான
மஹிமாநம் -பெருமையை
பிரபு த்வத் வல்லபோ அபி -ஈஸ்வரனான உன்னுடைய வல்லவனும்
ஆத்மந இவ -தன்னுடைய பெருமையைப் போலே
இயத்தயா-இவ்வளவு என்று
மாதும் ந அலம் -அளவிட்டு அறிய மாட்டானோ(பெருமைக்கு எல்லை இல்லையே -இல்லாத ஒன்றை அறிந்தான் என்றால் அஞ்ஞானம் தானே)
தாம் த்வாம் -அப்படிப்பட்ட உன்னை
தாஸ இதி -தாசன் என்றும்
ப்ரபன்ன இதி ச -சரண் அடைந்தவன் என்றும்
தே த யாம் விதன் அஹம் -உன்னுடைய கருணையை அறியும் நான்
நிர்ப்பய–பயம் அற்றவனாய்
ஸ்தோஷ்யாம் –ஸ்துதிக்கிறேன்

யஸ் யாஸ்தே மஹிமாந மாதமந இவ த்வத் வல்லபோ அபி பிரபு நாலம் மாதுமியத்தயா
நிரவதிம் நித்யாநுகூலம் ஸ்வத –

யஸ்ய அயுத அம்சாம்சே விஸ்வ சக்திரியம் ஸ்திதா —
பர ப்ரஹ்ம ஸ்வரூபஸ்ய ப்ரணமா மஸ்த மவ்யயம் –ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-5-84-என்றும்
பர ப்ரஹ்ம ஸ்வரூபியான என்னுடைய பல்லாயிரத்தில் ஒரு பாகத்தில் உலகம் ஆகிற சக்தி நிலை நிற்கிறதோ –
குறைவற்றவனான அவனை வணங்குகிறோம்

சமஸ்த கல்யாண குணாத் மகோ அசௌ
ஸ்வ சக்தி லேச உத் த்ருத பூத சர்க்கஸ்
இச்சாக்ருஹீ தாபி மதோருதே ஹஸ்
சம்சாதிதா அசேஷ ஜகத்தி தோ அசௌ –ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-5-84-என்றும்
இந்த ஸ்ரீ பகவான் ஸமஸ்த கல்யாண குணங்களையும் இயற்கையாகவே உடையவன் –
தன்னுடைய சக்தியிலே ஒரு சிறு பகுதியினாலே
தரிக்கப்பட்ட பூதங்களை உடையவன் -இச்சையினாலேயே எடுக்கப்பட்டவையும் இஷ்டமானவையுமான பல தேஹங்களை உடையவன் -இவன் எல்லா ஜகத்துக்கும் நன்மையைச் செய்பவன்

மன சைவ ஜகத் ஸ்ருஷ்டிம் சம்ஹாரஞ்ச கரோதி யா
தச்யாரி பஷ ஷபனே கியாநுத்ய விஸ்தர -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-22-15 என்றும்
எவன் ஒருவன் மனத்தினாலேயே (ஸங்கல்ப லேசத்தாலேயே)உலகத்தின் ஸ்ருஷ்ட்டியையும் சம்ஹாரத்தையும் செய்கிறானோ அவனுக்கு எதிரிகளை நிரசிப்பதில் என்ன பெரு முயற்சி வேண்டும் –

பரா அஸ்ய சக்திர் விவிதைவ வ ஸ்ரூயதே ஸ்வாபாவி கீ ஜ்ஞான பல க்ரியா ச -ஸ்வே -6- -என்றும்
இந்த ஸ்ரீ பரமாத்மாவுக்குப் பல படிப்பட்டதும் மேலானதுமான சக்தியும் இயற்கையான ஞானமும் பலமும் ஸ்ருஷ்டித்தல் முதலிய காரியங்களும் உண்டு என்று அறியப் படுகிறது

ஏகோ ஹ வை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா நே ஸான
நேமே த்யாவா ப்ருதிவீ ..ஸ ஏகாகீ ந ரமேத –மஹா உபநிஷத் -என்றும்
ஸ்ரீ நாராயணன் ஒருவனே இருந்தான் -பிரமனும் இல்லை -சிவனும் இல்லை -ஆகாசமும் பூமியும் இல்லை –அவன் ஒருவனாய் இருந்து ஆனந்தத்தை அடையவில்லை

ஏஷ சர்வ பூதாந்தராத்மா அபஹத பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயணா –ஸூபால உபநிஷத் -7 –என்றும்
சர்வ பூதங்களுக்கும் அந்தர்யாமியாய் இருப்பவனும் தோஷம் அற்றவனும் ஸ்ரீ வைகுண்டத்தில் வசிப்பவனும் தேவனுமான ஸ்ரீ நாராயணன் ஒருவனே

இப்படி பிரமாணங்களால் பிரதி பாதிக்கப் பட்ட பரத்வத்தை உடையவனாய்
உனக்கு வல்லபனான ஸ்ரீ சர்வேஸ்வரனும் அகப்பட
யச் சப்தத்தாலே -அவாங்மனச கோசரமாய் இருக்கிற உன்னுடைய அளவிறந்து இருக்கிற பெருமையை இவ்வளவு என்று நிரூபிக்கும் அளவிலே –
தனக்கும் தன் தன்மை அறிவரியான் -திருவாய் மொழி -8-4-6-என்கிறபடியே
தன் வைபவ நிரூபணம் பண்ண தான் மாட்டாதாப் போலே உன்னுடைய வைபவ நிரூபணம் பண்ணும் போது அசமர்த்தனாய் இருக்கும் –

ஆனால் ஜகத்துக்கு சேஷி த்வித்வம் உண்டோ -என்றால்
நித்ய அனுகூலம் ஸ்வத அஸ்ய ஈசானா ஜகதோ விஷ்ணு பத்னீ -என்கையாலே
ஜகத்தைப் பற்ற இவளுக்கு சேஷிணீத்வமும்
அவனைப் பற்ற சேஷத்வமும் பிரதிபாதிக்கப் படுகையாலே சேஷி த்வித்வம் இல்லை –
ஆனால் இவனைப் பற்ற இவள் சேஷ பூதை யாகையாலே
இவளுடைய வைபவ நிரூபணம் பண்ண ஒண்ணாதே -என்ன ஒண்ணாது –
அது எங்கனே என்றால் –
அபூர்வ நாநா ரஸபாவ நிர்ப்பர ப்ரபத்தயா முக்த விதக்த லீலயா -ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் -44-என்று க்ஷணம் தோறும் புதிதாய் இருக்கும் பல வகை ரசங்களாலும் நெருங்கிச் சேர்ந்து இருப்பதும் அழகியதாயும் சாமர்த்யத்துடுன் கூடியதாய் இருக்கும் விளையாட்டாலே அதி விதக்தமாய் இருந்துள்ள க்ரீடா வைபவத்தாலே-

(அபூர்வ நாநா ரஸ பாவ நிர்பர
ப்ரபுத்தயா முக்த விதக்த லீலயா |
க்ஷண அணுவத் க்ஷிப்த பராதி காலயா
ப்ரஹர்ஷயந்தம் மஹிஷீம் மஹாபுஜம் ||-44-தன்னுடைய அழகான மற்றும் சிறந்ததான லீலைகளால் பிராட்டிக்கு ஆனந்தத்தைக் கொடுப்பவன் எம்பெருமான்;
இப்படிப்பட்ட லீலைகளால் பிராட்டிக்கு ப்ரஹ்மாவின் ஆயுட்காலமும் ஒரு நொடிப்பொழுதில் செல்லும்படி ஒவ்வொரு க்ஷணமும் புதியதாக ரசிக்கும்படியாக இருக்கும்; பிராட்டியைத் தழுவுதற்கு ஏற்ற பெரிய திருக் கைகளை உடையவன்.)

பித்தர் பனிமலர் மேல் பாவைக்கு -ஸ்ரீ திரு நெடும் தாண்டகம் -18- என்கிறபடியே
பிரேம பரவசனாய் இருக்கையாலே சர்வஞ்ஞனாய் இருந்தானே யாகிலும் நிரூபிக்க மாட்டாதே யாய்த்து இருப்பது

தாம் த்வாம் –
கீழே பிரதிபாதிக்கப் பட்ட பரத்வத்தை நிரூபகமாக உடையையாய் இருக்கிற உன்னை -என்றபடி –

தாஸ இதி –
அடியேன் என்று கொண்டு ஆஸ்ரயிக்கிறேன் -என்கிறார்
ஈஸ்வரீம் சர்வ பூதானாம் –ஸ்ரீ ஸூக்தம் -9–என்றும்
அஸ்ய ஈசாநா ஜகத் விஷ்ணு பத்னீ –-நீளா ஸூக்தம் -என்றும் -சொல்லுகையாலே
நமக்கு ஜகத்தைப் பற்ற சேஷிணீத்வம் சாதாரணம் அன்றோ
உமக்கு அவர்களில் காட்டில் விசேஷம் என்ன -என்று ஸ்ரீ பிராட்டி அருளிச் செய்தார் –
அவர்களில் காட்டில் நெடு வாசி உண்டே –
ஸ்வரூப அனுரூபமான சேஷத்வ பூர்வகமாக பிரபன்னன் ஆனேன் -என்கிறார்

ப்ரபன்ன -இதி ச -என்று கொண்டு –
தாசன் பிரபன்னன்த்வயம் உத்தர பூர்வ வாக்யார்த்தம் –

(சேஷத்வ ஞானம் தாஸ்யம் ஸூவ பிரயோஜனம் நிவ்ருத்தி -பரதந்த்ரன் -பிரபன்னன் ஸூவ ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி)

ஸ்தோஷ்யாம் யஹம் நிர்ப்பயோ –
அதினாலே நிர்ப்பயனாய்க் கொண்டு ஸ்தோத்ரம் பண்ணுகிறேன் என்கிறார்
ஸ்தோத்ரம் ஆகிறது இல்லாத ஒன்றைச் சொல்லுகையாய் இருக்கும்(யதார்த்த கதநம் -உள்ளவற்றைச் சொல்லுவது -)-இங்குத்தைக்கு அங்கன் அல்ல –
இதி பிரசாத யாமா ஸூஸ்தி ஸூராஸ் தம தோஷா ஜாம் பூதார்த்த வ்யாஹ்ருதிச் சா ஹி
ந ஸ்துதி பரமேஷ்டிந -ரகுவம்சம் -10-33—
அந்த தேவர்கள் இந்த்ரியங்களால் அறிய முடியாதவனான அந்த எம்பெருமானை இம்மாதிரி உகப்பித்தார்கள் – பரமபதத்தில் வாழ்பவனான அவன் விஷயத்தில் அது உண்மையான விஷயத்தைச் சொல்லுமதே அன்றோ -என்கிறபடியே

உள்ள குணங்களை தான் யதாவத் பிரதிபாதிக்கப் போகாதே யாய்த்து இருப்பது
இவையும் எத்தாலே என்றால் –
லோகைகேஸ்வரி-
ஜகத்தைப் பற்ற இவள் சேஷிணீ யாகையாலே .
இவளுக்கு ஜகத்தைப் பற்ற ஸ்வாமிநீத்வம் எத்தாலே வந்தது என்றால் –
லோக நாத தயிதே –
லோக நாதனாய் இருக்கிற நாராயணனுக்கு திவ்ய மகிஷி யாகையாலே

இங்கன் ஒத்த மேன்மையை உடையோமான நம்மை உம்மால் பரிச்சேதிக்கப் போமோ –
என ஸ்ரீ பிராட்டி திரு உள்ளமாக
அது ஒக்கும்
உம்முடைய மேன்மையை நிரூபித்தோம் ஆகில் அன்றோ நாங்கள் பங்குரதீகளாவது -(அழியும் புத்தி)
உம்முடைய நீர்மையை நிரூபிக்கும் போது மந்தமதிகளாய் இருந்துள்ள அஸ்மதாதிகளுக்கும் ஸ்தோத்ரம் பண்ணுகையிலே யோக்யதை உண்டாம் -என்கிறார் –
பரத்வம் பாட வந்தேன் அல்லேன் -சௌலப்யம் தயை போன்றவற்றை பாட வந்தேன் –

(ஸுலப்யத்துக்கும் எல்லை இல்லை -அடியேனையும் கூடப் பாட வைக்கும் படி -வாக்குக்கு எட்ட வைக்கும்படி எல்லை மிக்க ஸுலப்யம்)

தாந்தே –
விழிச் சொல் இது –
கருணா உஜ்ஜ்வல சம் வர்த்திதையாய் இருக்கிற கற்பகக் கொடியே-(கருணாம்ருத ஸம் வர்த்திதையான கற்பகக் கொடியே-கருணையை ஒளியாகவும் அம்ருதமாகவும் உருவகம்-)

(கருணை என்னும் ஒளியால்-அம்ருதத்தாலே – வளர்த்த கொடி –வானிடைப் புயலை மாலை வரை யிடைப் பிரசமீன்ற
தேனிடைக் கரும்பின் சாற்றைத் திருவினை மருவி வாழார்
மானிடைப் பிறவி யந்தோ மதிக்கிலர் கொள்க தந்தம்
ஊனிடைக் குரம்பை வாழ்க்கைக்கு உறுதியே வேண்டினாரே–ஸ்ரீ திருக் குறும் தாண்டகம்8-எம்பெருமானுடைய போக்யதை லோக விக்ஷணமென்று காட்டுதற்காக அபூர்வமானதொரு கரும்பை சிக்ஷிக்கிறார்;-தண்ணீர் பாய்ச்சப் பெற்று வளர்கின்ற கரும்பினன சாறு போன்றவனென்றால் சிறிதும் த்ருப்தி பிறவாமையாலே ‘வரையிடைப் பிரசமீன்ற தேனிடைக்கரும்பு‘ என்று புதிதாக வொரு வஸ்துவை வளர்ந்த கரும்பு இருக்குமானால்
அதன் சாறு போன்றவ னெம்பெருமான் என்னலாம் என்பது கருத்து.)

தயாம் தே விதன் –
தயை யாவது –
ஸ்வார்த்த நிரபேஷா பர துக்க அசஹிஷ்ணுதா தயா- ஸ்ரீ பாஷ்யம் -(தன் ப்ரயோஜனத்தை எதிர்பாராமல் பிறர் துக்கத்தைக் கண்டு பொறாமலிருக்கை தயையாகிறது )-என்று இறே தயா லஷணம் இருக்கும்படி –
அங்கன் ஒத்து இருந்துள்ள உன்னுடைய தயையை அறியா நின்று கொண்டேன் -என்றபடி –
அங்கன் ஒத்த கிருபை நம் பக்கல் உண்டோ -என்று திரு உள்ளமாக –

(ஸ்தோத்ரம் பண்ண முடியாமை துக்கப்பட்ட ஆளவந்தார் துக்கம் போக்கி -ஸ்தோத்ரம் பண்ணி அவளுக்குப் பெருமை கூடாதே -ஸ்வார்த்த நிரபேஷமும் இதில் இருக்குமே -அடியார் ஸ்தோத்ரம் பண்ணி கைங்கர்யம் செய்வதை ஏற்றுக் கொள்ளவே கருணை தயை இங்கு இருக்குமே)

பாபா நாம் வா சுபா நாம் வா வதார்ஹாணாம் ப்லவங்கம்
கார்யம் கருண மார்யேண ந கச்சின் நா பராத்யதி -யுத்தம் -116-44—
வானர பாபிகளாயினும் -புண்யம் உள்ளவராயினும் -கொல்லத் தக்கவர்களாய் இருந்தாலும்
குணவானாய் இருப்பானால் -அவன் விஷயத்தில் கருணை காட்டப்பட வேண்டும் —
அபராதம் செய்யாதவன் ஒருவனும் இல்லையே –என்று கொண்டு

ஸ்ரீ எம்பெருமான் தேவ கார்யார்தமாக யாதொரு திவ்ய மங்கள விக்ரகத்தைக் கொண்டான்
தத் அனுகூலமாக தேவரீரும் ஸ்ரீ ஜனக ராஜன் திருமகளான ஸ்ரீ சீதையாய்க் கொண்டு அவதரித்து
ராவணனைப் புத்திர மித்ர களத்ராதிகளோடு தரைப்படுதுக்கைக்காகவும்
ஸ்ரீ விபீஷண ஆழ்வானை ஸ்தாபிக்கைக்காகவும்
அசோகவநியிலே இருந்து காட்டை வெட்டி நாடாக்கினாப் போலேயும்
களை பறித்து பயிர் ஆக்கினால் போலேயும்
அசத் நிராச பூர்வகமாக சத் பாலனம் பண்ணுகைக்காக ராவணனைக் கொன்று அருளின அநந்தரமாக தர்ஜன பர்த்ச நாதிகளைப் பண்ணின(கையாலும் வாயாலும் துன்பப்படுத்தும்) ராஷசிகளைக் கொல்லுகையிலே உத்யுக்தனாய் இருந்துள்ள ஸ்ரீ திருவடியைக் குறித்து
உன் பரம கிருபையை ப்ரகடீ கரித்த படியை புத்தி பண்ணிக் கொண்டு
நிர்ப்பயனாய் ஸ்தோத்ரம் பண்ணினேன் –என்கிறார் ஸ்ரீ ஆளவந்தார்

(அழுக்கு உடம்புடன் எச்சில் வாயால் நாம்- ஸ்தோத்ரம் பண்ணுவது ராக்ஷஸிகள் பண்ணிய குற்றங்களுக்கு ஒக்கும்)

————————————————–

ஈஷத் த்வத் கருணா நிரீஷண ஸூதா சந்து ஷணாத் ரஷ்யதே
நஷ்டம் ப்ராக் தத் அலாபதஸ் த்ரி புவனம் சம்ப்ரத் யநந்தோ தயம்
ஸ்ரேயோ ந ஹ்யரவிந்த லோசன மன காந்தா பிரசாதாத் ருததே
சம்ஸ்ருத் யஷர வைஷ்ணவாத் வஸூ ந்ருணாம் சம்பாவ்யதே கர்ஹிசித்--3

தத் அலாபதஸ்–அந்தக் கடாக்ஷம் இல்லாமையால்
ப்ராக் நஷ்டம் -முன் நஸித்துக் கிடந்ததான
த்ரி புவனம்-மூவுலகும்
சம்ப்ரதி–இப்போது
ஈஷத் -சிறிது போது
த்வத் கருணா நிரீஷணஸூதா சந்து ஷணாத் –உன்னுடைய கருணா கடாக்ஷமாகிற அம்ருத வர்ஷத்தினாலே
அநந்தோ தயம்-அளவற்ற பெருமையை உடைத்தாகும் படி
ரஷ்யதே-காப்பாற்றப்படுகிறது
ந்ருணாம்-மானிடர்களுக்கு
சம்ஸ்ருத் யஷர வைஷ்ணவாத் வஸூ-ஐஸ்வர்யம் கைவல்யம் பரம பதம் இவைகளில்
ஸ்ரேயோ -மேன்மையானது
அரவிந்த லோசன மன காந்தா -தாமரைக் கண்ணனின் மனத்துக்கு இனியவளான ஸ்ரீ தேவியின்
பிரசாதாத் ருததே–அருள் இல்லாமல்
ந ஹி சம்பாவ்யதே -ஏற்படாதது அன்றோ

ஈஷத் த்வத் கருணா நிரீஷண ஸூதா சந்து ஷணாத் ரஷ்யதே நஷ்டம் ப்ராக் தத லாபதஸ் த்ரி புவனம் –

ப்ருதிவ் யப்ஸூ ப்ரலீயதே ஆபச் தேஜசி லீயந்தே தேஜோ வாயௌ லீயதே
வாயு ராகாசே லீயதே -ஆகாசம் அவ்யக்தே லீயதே அவயகதம் அஷரே லீயதே
அஷரம் தமசி லீயதே -தம பரே தேவ ஏகீ பவதி –ஸூபால உபநிஷத் -(பூமி ஜலத்தில் ஒடுங்குகிறது -ஜலம் அக்னியில் லயிக்கிறது -அக்னி வாயுவில் லயிக்கிறது -வாயு ஆகாசத்தில் ஒடுங்குகிறது -ஆகாசம் அவ்யக்தத்தில் ஒடுங்குகிறது -அவ்யக்தம் அக்ஷரத்தில் லயிக்கிறது -அக்ஷரம் தமஸ்ஸில் லயிக்கிறது -தமஸ்ஸு பரதெய்வத்திடம் ஒன்றாகிறது)என்றும்

ஏகோ ஹை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா நேசான நேமே த்யாவா ப்ருதிவீ — (–ஸ ஏகாகீ ந ரமேத—நாராயணன் ஒருவனே இருந்தான் -பிரமனும் இல்லை -சிவனும் இல்லை -இந்த ஆகாசமும் பூமியும் இல்லை –அவன் ஒருவனாகவே இருந்து ஆனந்தத்தை அடையவில்லை -)மஹா உபநிஷத்-என்றும்

ஆநீத வாதம் ஸ்வதயா ததேகம் தஸ்மாத் தான்யம் ந பர கிஞ்ச நாஸ -சுருதி-என்றும்-அவாதம்
பஞ்ச பூதங்கள் அற்றதான அந்த பரவஸ்து ஒன்றே ஸ்வதா சப்தத்தினால் சொல்லப்படும் ஸ்ரீ பிராட்டியுடன் இருந்தது – அதைக் காட்டிலும் வேறு பட்டது மற்று வேறு ஒன்றும் இல்லை

தத்தேதம் தர்ஹ் யவ்யாக்ருத மாஸீத் தன் நாம ரூபாப்யாம் வ்யாக்ரியத–ப்ருஹதாரண்யம் -3-4-7- -என்றும் இவ்வுலகம் ஸ்ருஷ்டிக்கு முன்பு- யவ்யாக்ருதம்- நாம ரூபங்கள் அற்றதான ப்ரக்ருதியை சரீரமாக உடைய ப்ரஹ்மமாய் இருந்தது -அது நாம ரூபங்களை உடையதாயிற்று –

ஆஸீதிதம் தமோ பூதம் அப்ரஜ்ஞா தம் அலஷணம் அப்ரதர்க்யம் அவிஜ்ஞேயம் ப்ரஸூப்த மிவ சர்வத -மனு-1-5–என்றும்-இவ்வுலகம் தமஸ்ஸில் ஒடுங்கினதாயும் -ப்ரத்யக்ஷம் இல்லாததாகவும் -அனுமானத்தால் அறிய முடியாததாகவும் –
சப்த ரூபமான தர்க்கத்தாலும் அறிய முடியாததாகவும் -வேறு எதனாலும் அறிய முடியாததாகவும் –எப்புறத்திலும் தூங்குவதைப் போலவும் சேஷ்டை அற்றதாயும் இருந்தது –

ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா 
அன்று நான்முகன் தன்னொடு தேவர் உலகோடு உயிர் படைத்தான்
குன்றம் போல் மணி மாட நீடு திருக்குருகூர் அதனுள்
நின்ற ஆதிப் பிரான் நிற்க மற்றைத் தெய்வம் நாடுதிரே-என்றும் –

ஆக இப்படி சுருதி ஸ்ம்ருதிகள் என்ன ஸ்ரீ ஆழ்வார் பாசுரம் என்ன இவற்றை அடி ஒற்றினவர் பாசுரம் என்ன-இவற்றாலே ஸ்ரீ ஈஸ்வரன் —ததை ஷத பஹூ ஸ்யாம் ப்ரஜாயேயேதி தத்தே ஜோஸ்ருஜதா–என்று-சிருஷ்டிக்கக் கடவதாகப் பார்த்து அருளின போது-அந்தராத்மாவாக இருந்து செயல்படுவதை-

நாராயணாத் ப்ரஹ்மா ஜாயதே நாராயணாத் ருத்ரோ ஜாயதே -என்றும் –

ததைஷத பஹூ ஸ்யாம் ப்ரஜாயேயேதி தத்தே ஜோஸ்ருஜதா -என்றும்

தத் ஸ்ருஷ்ட்வா ததேவ அநுப்ராவிசத் தத நுப்ரவிச்ய
சச்ச த்யச்சா பவத் –சத்யஞ்சாசாந்த்ரு தஞ்சச சத்யமபவத் -என்றும்
வேதாஹா மேதம் புருஷம் மஹாந்தம் ஆதித்ய வர்ணம் தம சஸ்து பாரே
சர்வாணி ரூபாணி விசித்ய தீர நாமானி க்ருத்வா அபி வதன் யதாஸ்தே -(சர்வஞ்ஞரான எந்தப் பரம புருஷன் எல்லாச் சரீரங்களையும் உண்டு பண்ணி பெயர்களைக் கொடுத்து அவைகளை உச்சரித்துக் கொண்டு இருக்கிறாரோ ஸூர்யன் போன்ற வர்ணத்தை உடையவரும் ப்ரக்ருதி மண்டலத்துக்கு அப்பால் இருப்பவரும் -எல்லா விதத்திலும் பெரியவருமான இந்தப்புருஷனை -வேத புருஷனாகிய நான் அறிகிறேன் -)என்றும்

சர்வே நிமேஷா ஜஜ்ஞரே வித்யூத புருஷாததி -(மின்னலைப் போன்ற உருவை யுடைய புருஷனிடம் இருந்து எல்லா நிமிஷங்களும் யுண்டாயின -)என்றும்

அப ஏவ ஸசர்ஜாதௌ தாஸூ வீர்யமவா ஸ்ருஜத்
ததண்ட மபவத்தை மம் சஹாஸ்ராம் ஸூ சமப்ரபம்
தஸ்மின் ஜஜ்ஞே ஸ்வயம் ப்ரஹ்மா சர்வ லோக பிதா மஹ
ததஸ் ஸ்வயம் பூர் பகவா நவ்யக்தே வ்யஞ்ஜ்யன்நிதம்
மகாபூதாதி வருத்தௌஜா ப்ராது ராஸீத் தமோநுத -என்றும் -(பிறகு தன்னிச்சையாலே சரீர பரிக்ரஹம் செய்த பகவான் அவ்யக்தமான பிரகிருதியில் -ஸ்தூல ரூபமான -மஹா பூதங்கள் முதலியவற்றை வெளிப்படுத்திக் கொண்டு தடையற்ற பலத்தை யுடையவனாகவும் பிரக்ருதியைத் தூண்டுபவனாகவும் தோன்றினான் -அந்த பகவான் ஆதியில் தண்ணீரை ஸ்ருஷ்ட்டித்தான் -அதில் தன் சக்தி ரூபமான வீர்யத்தை விதைத்தான் -அந்த வீர்யத்திலிருந்து ஸ்வர்ண மயமானதும் ஸூர்யனைப் போன்ற ஒளியை யுடையதுமான அண்டம் உண்டாயிற்று -ஸர்வ லோகத்திற்கும் பிதா மஹனான பிரமன் அதில் தானாக உண்டானான் –)என்றும்

ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா அன்று
நான் முகன் தன்னோடு தேவர் உலகோடு உயிர் படைத்தான் -திருவாய்மொழி -4-10-1-என்றும்

நான்முகன் நாராயணன் படைத்தான் நான் முகனும் தான் மூலமாய்ச் சங்கரனைத் தான் படைத்தான் — நான்முகன் திருவந்தாதி -1-என்றும்

ததைஷத பஹூஸ்யாம் ப்ரஜாயேயேதி தத் தேஜஸ் ஸ்ருஜத –சாந்தோக்யம் -6-2-3–என்றும்

ச ஏகாகீ ந ரமேத -(–ஏகோ ஹை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா நேசான நேமே த்யாவா ப்ருதிவீ ஸ ஏகாகீ ந ரமேத—நாராயணன் ஒருவனே இருந்தான் -பிரமனும் இல்லை -சிவனும் இல்லை -இந்த ஆகாசமும் பூமியும் இல்லை –அவன் ஒருவனாகவே இருந்து ஆனந்தத்தை அடையவில்லை -)என்றும்

தத் ஸ்ருஷ்ட்வா ததேவ அநு ப்ராவிஸத்-தத் அநு பிரவிஸ்ய சச்ச த்யச்சா பவத் –சத்யஞ்சா நிருத்தஞ்ச சத்யமபவத் –என்றும் சத்யம் விகாரம் இல்லாத சேதனமாயும்-அசத்யம் விகாரம் உள்ள அசேதனமாயும் ஆகிய ப்ரஹ்மம் விகாரம் அற்றதாய் இருந்தது என்றும்

ஆகியும் ஆக்கியும் காக்கும் அவையுள் தனி முதல்-என்றும்

தத்தேதம் தர்ஹ்ய வ்யாக்ருதம் ஆஸீத் தந் நாம ரூபாப்யாம் வியாக்ரியத –ப்ருஹ -3-4-7-என்றும்

வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம் ஆதித்ய வர்ணம் தமஸஸ் து பரஸ்தாத் ஸர்வாணி ரூபாணி விசித்ய தீர நாமாநி க்ருத்வா அபி வதன்ய தாஸ்தே –ஸ்ரீ புருஷ ஸூக்தம் –(ஸர்வஞ்ஞரான எந்தப் பரம புருஷன் எல்லாமே சரீரங்களையும் உண்டு பண்ணி-பெயர்களைக் கொடுத்து -அவர்களை உச்சரித்துக் கொண்டு இருக்கிறாரோ -ஸூர்யன் போன்ற வர்ணத்தை யுடையவரும் ப்ரக்ருதி மண்டலத்துக்கு அப்பால் இருப்பவரும் -எல்லா விதத்திலும் பெரியவருமான இந்தப் புருஷனை வேத புருஷனான நான் அறிகிறேன்)என்றும்

சர்வே நிமேஷா ஜஜ்ஜிரே வித்யுத புருஷா ததி –தைத்ரியம் -8-மின்னலைப் போன்ற அவனிடம் இருந்து எல்லா நிமிஷங்களும் உண்டாயின என்றும்

அப ஏவ சசர்ஜாதவ் தாஸூ வீர்யம் அவாஸ்ருஜத்-ததண்டம் அபவத்தை மம் சஹஸ்ராம்ஸூ ஸமப்ரபம் தஸ்மிந் ஜஜ்ஜே ஸ்வயம் ப்ரஹ்மா சர்வ லோக பிதா மஹா -ததஸ் ஸ்வயம் பூர் பகவாந் அவ்யக்தே வ்யஞ்ஜயந் நிதம் மஹா பூதாதி வ்ருத்தவ்ஜா ப்ராதுர் ஆஸீத் தமோ நுத –மனு -1-6-/8-9-என்று
பிறகு தன் இச்சையாலே சரீர பரிக்ரஹம் செய்த பகவான் அவ்யக்தமான ப்ரக்ருதியில் -ஸ்தூல ரூபமான -மஹா பூதங்கள் முதலியவற்றை வெளிப்படுத்திக் கொண்டு -தடையற்ற பலத்தை உடையனாகவும் ப்ரக்ருதியைத் தூண்டுபவனாகவும் தோன்றினான்
அந்த பகவான் ஆதியில் -தண்ணீரை ஸ்ருஷ்ட்டித்தான் -அதில் தன் சக்தி ரூபமான வீர்யத்தை விதைத்தான் – அந்த வீர்யத்தில் இருந்து ஸ்வர்ண மயமான ஸூர்யனைப் போன்ற தேஜஸ்ஸை யுடைய அண்டம் உண்டாயிற்று – சர்வ லோகத்துக்கும் பிதா மகனான பிரமன் அதில் தானாக உண்டானான்–என்றும்

நான்முகன் தன்னோடு தேவர் உலகோடு உயிர் படைத்தான் -என்றும்
நான்முகன் நாராயணன் படைத்தான் நான்முகனும் தான் முகனாய்ச் சங்கரனைத் தான் படைத்தான் -என்றும்-இவள் கடாக்ஷம் காரணமாகவே படைப்புத் தொழில் நடக்கிறது –

இப்படி பிரதிபாதிக்கப் பட்ட ப்ரஹ்மா முதலான சிருஷ்டியை ஈஸ்வரன் உகக்கும் போது

யத் ப்ரூ பங்கா பிரமாணம் ஸ்திர சர ராசாநா தாரதம்யே முராரே வேதாந்தாஸ் தத்தவ சிந்தாம் முரபி துரசி யத்பாத சிஹ்னைஸ் தரந்தி--ஸ்ரீ குண -2- – -(இந்த உலகில் ஸ்ரீமந் நாராயணனின் படைப்பில் பல ஏற்ற தாழ்வுகள் உள்ளன.
இவற்றுக்குக் காரணமாக உள்ளது இவளது புருவத்தின் அசைவுகளே ஆகும்.
இவள் தனது புருவ அசைவு மூலம் யாரை உயர்த்த வேண்டும் என்று கூறுகிறாளோ,
ஸ்ரீமந் நாராயணன் உடனே அப்படியே செய்து விடுகிறான்.
யார் ஒருவனது திருமார்பில் மஹாலக்ஷ்மியின் திருவடி அடையாளம் உள்ளனவோ
அவனே பரம்பொருள் என்று வேதங்கள் முழங்குகின்றன.
ஆக, அவனது திருமார்பில், இவளது திருவடிகளில் பூசப்ப்ட்ட செம்பஞ்சுக் குழம்பின் அடையாளங்கள் காணப்படும்.
இவளது திருக்கல்யாண குணங்கள் எப்படிப்பட்டது என்றால் –
ஸ்ரீமந் நாராயணன் விச்வரூபமே எடுத்து வந்தாலும் அவளது திருக்கல்யாண குணங்களை அவனால் முழுமையாகக் காண இயலாது.
இப்படிப்பட்ட ஸ்ரீரங்கநாச்சியாரின் கடைக்கண் பார்வையில் கடாக்ஷம் என்பது அமிர்தம் நிறைந்த கடல் போன்று பெருகி உள்ளது.
அப்படிப்பட்ட அவளது அருள் பார்வை என் மீது சற்று விழவேண்டும்.)என்றும்

உல்லாச பல்லவித பாலித சப்த லோகி நிர்வாஹ கோர கித நேம கடாஷ லீலாம் -(உல்லாஸமாகத் தளிர் விடுவதும் ரக்ஷிக்கப்படும் ஏழு உலகங்களுடைய நிர்வாஹத்தினாலே மொட்டு விடுவதுமான அந்தக் கடாக்ஷ லீலையை உடையவளும் திருவரங்கம் பெரிய கோயிலுக்கு ஒரு மங்கள தீபக் கொழுந்து போல் இருப்பவளும் ஸ்ரீ ரெங்கநாதனுடைய திவ்ய மஹிஷியானவளுமான ஸ்ரீ தேவியை ஆஸ்ரயிக்கிறோம்)என்றும்

இன்னமும் ஸ்ரீ பிராட்டிக்கு ஜகத் காரணத்வத்திலே அந்வயம் உண்டோ -என்று ஸ்ரீ நடாதூர் அம்மாள் ஸ்ரீ பிள்ளானை பிரஸ்னம் பண்ண
ஆவது என் இவ்வர்த்தத்தில் சந்தேஹம் உண்டோ
ஆவாப்யாம் கர்மாணி கர்த்தவ்யானி பிரஜாஸ் ச உத்பாதாயி தவ்யா
நம் இருவராலும் கார்யங்கள் செய்யப்பட வேண்டும் -பிரஜைகளும் ஸ்ருஷ்டிக்கப்பட வேண்டும் -என்று அன்றோ இருப்பது-இவள் சஹ தர்ம சாரிணி அன்றோ என்று அருளிச் செய்தார் ஸ்ரீ பிள்ளான் –

அவன் தர்ம காரியம் பெரிய மா வைகுந்தம் கொடுப்பதே -அதற்குப் படைக்க வேண்டுமே

ஆக இப்படி சுருதி ஸ்ம்ருதிகள் என்ன ஸ்ரீ ஆழ்வார் பாசுரம் என்ன இவற்றை அடி ஒற்றினவர் பாசுரம் என்ன-இவற்றாலே ஸ்ரீ ஈஸ்வரன் —ததைஷத பஹூ ஸ்யாம் ப்ரஜாயேயேதி தத்தே ஜோஸ்ருஜதா–என்று-சிருஷ்டிக்கக் கடவதாகப் பார்த்து அருளின போது-

(தத் -அது சங்கல்பித்தது -ப்ரஹ்மத்தை இப்படி அன்றோ வேதம் சொல்லும் -தேஜஸ் சங்கல்பித்தது -ப்ரஹ்மம் அந்தர்யாமியாக இருந்து -என்று கொள்ள வேண்டும் அன்றோ-ப்ரஹ்மம் பரிணாமம் -சரீரமாகக் கொண்ட ப்ரஹ்மம் சங்கல்பித்தது -)

ஈஷத் த்வத் கருணா நிரீஷண ஸூதா சந்துஷணாத் ரஷ்யதே –
அவன் பார்வைக்கு அனுகூலமாய் – கருணா ஜல பரிபூரணமாய் இருந்துள்ள உன்னுடைய கடாஷ விஷேபங்களாலே அன்றோ ஜகத்து ரஷிக்கப் படுகிறது –

நஷ்டம் ப்ராக் தத லாபத –
அம்ருத ஜல வர்ஷங்களாய் இருக்கிற அந்தக் கடாஷம் இன்றியே இருக்கையாலே அன்றோ
அசந்நேவ ஸ பவதி அஸத் ப்ரஹ்மேதி வேத சேத் அஸ்தி ப்ரஹ்மேதி சேத் வேத -சந்த மேநம் ததோ விது –தைத்ரியம் — என்கிறபடியே நாம ரூப விபாக அநர்ஹமாய்க் கொண்டு இருந்தது

சம்ப்ரத் யநந்த உதயம் –
கடும் கோடையிலே நொந்த பயிர் மேகம் ஏறி வர்ஷித்தால் தேறுமா போலே
நீர் பார்த்து அருளுகையாலே இப்போது அநந்த உதயம் ஆய்த்து –
ஆவது என் என்றால் –
மஹீ மஹீதர ஜல நிதி ரூபமான ஜகத் -என்ன-(பூமி மலை தண்ணீர் என்ன)
தத் அந்தர் வர்த்திகளான தேவ திர்யக் மனுஷ்ய ஸ்தாவர ரூபமான சதுர்வித தேக பிரவேசம் பண்ணி இருக்கிற ஆத்ம கோடிகள் என்ன
இவற்றை உடைத்தாய் ஆயிற்று –

ஸ்ரேயா நஹ் யரவிந்த லோசன மன காந்தா பிரசாதாத் ருதே –

ய ஏஷ அந்தராதித்யே ஹிரண்மய புருஷோ த்ருச்யதே ஹிரண்யஸ் மஸ்ருர் ஹரண்ய கேச ஆப்ரணகாத் சர்வ ஏவ ஸ்வர்ண தஸ்ய யதா கப்யாசம் புண்டரீகம் ஏவம் அஷிணீ—சாந்தோக்யம் -1-6-/7-என்று கொண்டு ஈஸ்வரன் உடைய உத்புள்ளமான
தாமரைப் பூப் போலே இருந்துள்ள கண் மலரில் அழகு

மத்யஸ்ய கமல லோசன -(தாமரை போன்ற கண்ணை யுடைய மத்ஸ்ய மூர்த்தி)என்றும்

ததஸ் சமுத் ஷிப்ய தராம் ஸ்வத ம்ஷ்ட்ரயா மகா வராஹ ஸ்புட பத்ம லோசன ரசாதலா துத்பல பத்ர ஸந்நிப ச முத்தி தோ நீல இவாசலோ மஹாந் -என்றும்

ஊன ஷோடச வருஷோ மே ராமோ ராஜீவ லோசன
ந யுத்த யோக்யதா மஸ்ய பஸ்யாமி ஸஹ ராக்ஷஸை –பால –20-2- -(தாமரை போன்ற கண்ணை யுடையனான என்னுடைய ராமன் பதினாறுக்கும் குறைந்த வயதை யுடையவன் -இவனிடம் ராக்ஷஸர்களுடன் யுத்தம் செய்ய யோக்யதையைக் காணவில்லை)என்றும்

ஸ்ரீ கிருஷ்ண கமல லோசன -(தாமரை போன்ற திருக் கண்களையுடைய கிருஷ்ணன்)என்றும்

இப்படி மத்ஸ்ய மனுஷ்யாதி விக்ரஹ பரிக்ரஹம் பண்ணினாலும்
கண்ணை மறைக்கப் போகாதே இறே இருப்பது –
சர்வ அங்கங்களும் மறையும்படியாகக் கவசம் இட்டாலும் கண்ணைக் கவசம் இடுவான் இலன் இறே
ஆக –தாமரைக் கண்ணன் என்கையாலே இவனுக்கு அவாப்த சமஸ்த காமத்வம் சொல்லப் பட்டது –

(கஶ்ஶ்ரீ: ஶ்ரிய: பரமஸத்வ ஸமாஶ்ரய: க:
க: புண்டரீகநயந: புருஷோத்தம: க: |
கஸ்யாயுதாயுத ஶதைக கலாம்ஶகாம்ஶே
விஶ்வம் விசித்ர சிதசித் ப்ரவிபாக வ்ருத்தம்||-ஶ்லோகம் 12 –

ஸ்ரீ: என்று சொல்லப்படும் ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் செல்வம் யார்? யாரிடத்தில் சுத்த ஸத்வம் உள்ளது?-யார் புண்டரீகாக்ஷன்? யார் புருஷோத்தமன் என்று சொல்லப்படுபவன்? யாருடைய ஸங்கல்பத்தின் ஒரு சிறு பகுதி, பலவகைப்பட்ட சேதனர்கள் மற்றும் அசேதனப்பொருள்களாக விரிந்திருக்கும் இவ்வுலகத்தைத் தாங்குகிறது?)

அரவிந்த லோசன மன காந்தா
இங்கன் ஒத்த வைபவத்தை உடையனாய் இருந்துள்ள ஈஸ்வரன் உடைய திரு உள்ளத்திற்கு உகப்பைப் பண்ணுமவளாய் இருக்கும்(காந்தன் -முதல் ஸ்லோகத்தில் இதில் காந்தா -இவளை)
பார்யை -என்னாதே –காந்தை -என்பான் என் என்றால் –
உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ–திருவாய் -10-10-6- -என்றும்
பித்தர் பனி மலர் மேல் பாவைக்கு--திரு நெடும் தாண்டகம் -18 -என்றும்

அஸ்யா தேவ்யா மனஸ் தஸ்மிந் தஸ்ய ச அஸ்யாம் ப்ரதிஷ்டிதம்
தேநேயம் ச ச தர்மாத்மா முஹூர்த்தம் அபி ஜீவதி–ஸூந்தர -15-52–(இந்த ஸீதாதேவியினுடைய மனம் அந்த ராமபிரானிடம் அவருடைய மனம் இந்த தேவியிடம் லயித்திருக்கிறது -அதனாலேயே இவளும் தர்மாத்மாவான வரும் சிறிது காலமாவது ஜீவித்து இருக்கிறார்கள் -) -என்றும்-பிரமாணம் உண்டாகையாலே காந்தா சப்த பிரயோகம் பண்ணுகிறார் –

ப்ரசாதாத்ருதே
இங்கன் ஒத்து இருந்துள்ள இவளுடைய பிரசாதத்தை ஒழிய –

சம்ஸ்ருத் யஷர வைஷ்ணவாத் வஸூ ந்ருணாம் சம்பாவ்யதே கர்ஹிசித் –
சம்ஸ்ருதி யாவது ஐஸ்வர்யம் –அஷரம் ஆவது கைவல்யம்-
வைஷ்ணவாத் ஆகிறது -ந ச புனராவர்த்ததே ந ச புனராவர்த்ததே–சாந்தோக்யம் -8-15-1–என்றும்

தத் விஷ்ணோ பரமம் பதம் சதா பஸ்யந்தி ஸூரயா -திவீவ சஷூராததம் -தத் விப்ராசோ வி பந்த்யவோ ஜாக்ருவாம்சஸ் சமிந்ததே விஷ்ணோர் யத் பரமம் பதம் –ருக்வேதம் -1-2-7- -என்றும்

பிணை கொடுக்கிலும் போக வொட்டார் –பெரிய திரு மொழி-4-5-2–என்றும்
இப்படி ஸ்ருதியோடு ஆழ்வார் பாசுரத்தோடு வாசி அற ப்ரதி பாதிக்கிற பரம பதம் –

ஆக இவ் வழிகளில்
அரவிந்த லோசன மன காந்தை உடைய பிரசாதத்தை ஒழிய
மனுஷ்யரில் வைத்துக் கொண்டு
ஒருவருக்கும் ஸ்ரேயஸ் வாராது என்கிறார் ஆளவந்தார்

————————————————————————————————

(ஸ்ரீ ஸப்தார்த்தம் முதல் மூன்று ஸ்லோகங்கள் -ஆறு வ்யுத்பத்திகளையும் இவற்றால் அருளிச் செய்து மது ப்ரத்யய அர்த்தம் நான்காவது ஸ்லோகத்தால் அருளிச் செய்கிறார்-இவற்றை அருளிச் செய்ததே ஸ்தோத்ரம் இதில்)

சாந்தா நந்த மஹா விபூதி பரமம் யத் ப்ரஹ்ம ரூபம் ஹரே
மூர்த்தம் ப்ரஹ்ம ததோ அபி தத் ப்ரிய தரம் ரூபம் யத் யத்புதம்
யானி யன்யானி யதா ஸூகம் விஹரதோ ரூபாணி சர்வாணி தான்
யாஹூ ஸ்வைரநு ரூப ரூப விபவைர் காடோப கூடாநி தே–4-

சாந்த –ஷடூர்மிகள் அற்றதாய்
ஆநந்த -ஆனந்த மயமாய்
பரமம்–தனக்கு மேலானது அற்றதாய்-மஹா விபூதி-பரந்த உபய விபூதிகளை யுடையவனாய்
ப்ரஹ்ம–பெரியதாய் இருப்பதாலும் -பிறரைப் பெரியதாகச் செய்வதாலும் ப்ரஹ்ம சப்தத்தால் சொல்லப்படுவதாய் இருக்கும்
ஹரே யத் ரூபம் -ஹரியினுடைய யாதொரு ஸ்வரூபம் உண்டோ
ததோ அபி-அதைக் காட்டிலும்
தத் ப்ரியதரம்-அந்த பகவானுக்கு மிகவும் பிரியமாய் இருப்பதும்
மூர்த்தம்-கண்ணால் காணக் கூடியதும்
ப்ரஹ்ம -ப்ரஹ்ம சப்தத்தால் சொல்லப்படுவதும்
யத் யத்புதம்-மிகவும் அத்புதமானதுமான
ரூபம் யத் -யாதொரு ரூபம் உண்டோ
யதா ஸூகம் விஹரதோ –இஷ்டப்படி விளையாடும் எம்பெருமானுக்கு
யன்யானி ரூபாணி யாநி –மற்றும் யாவை சில ரூபங்கள் உண்டோ
தாநி சர்வாணி -அந்த ரூபங்கள் எல்லாம்
தே -உனக்கு
ஸ்வைர் அநுரூப ரூப விபவைர்-அசாதாரணங்களாய் தகுந்தவையாய் இருக்கும் திவ்ய ரூபங்களால்
காடோப கூடாநி ஆஹூ-நன்றாக ஆலிங்கனம் செய்யப்பட்டவை என்று பிரமாணங்கள் சொல்லுகின்றன

(அவிகாராய சுத்தாய நித்யாய பரமாத்மனே | ஸதைகரூப_ ரூபாய விஷ்ணவே ஸர்வஜிஷ்ணவே-ஸதா ஏக ரூப ரூபாய-ஸ்வரூபம் திவ்ய மங்கள விக்ரஹம் சொன்னது போல் இங்கும் முதல் ரூபம் ஸ்வரூபத்தையும் அடுத்த ரூபம் திவ்ய மங்கள விக்ரஹத்தையும் காட்டும் -ஸ்வரூபம் யத்புதம் ரூபம் அத்யத்புதம்-இச்சாக்ருஹீத அபிமத ரூபம் -தமர் உகந்த ரூபம் இத்யாதி)

சாந்தா நந்த மஹா விபூதி பரமம் யத் ப்ரஹ்ம ரூபம் ஹரே –

சாந்தி யாவது என் என்றால்
அசநாயா அபி பிபாஸே ச சோக மோஹௌ ஜரா ம்ருதீ ஷடூர் மிபிர் விஸூத்தா -என்று கொண்டு ஸ்ருதியில் சொல்லப் பட்ட படி–பசி தாகம் சோகம் மோகம் கிழத்தனம் மரணம் என்னும் ஆறும்-ஷடூர்மி ரஹிதமாய் இருக்கும் என்றபடி
இன்னமும் –
அபஷய விநாசாப்யாம் பரிணாம் ருத்தி ஜன்மபி வர்ஜித சக்யதே வக்தும் யஸ் சதாஸ் ஸ்தீதி கேவலம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-11-
குறைவு படுதல்-நாசம் அடைதல் -மாறுபாடு அடைதல் -வளருதல் -பிறத்தல் இவைகள் அற்றவனாயும் எப்போதும் இருக்கிறான் என்று சொல்லப்படுபவனாயும் இருப்பவன் பகவான் என்று கொண்டு பராசர ப்ரஹ்ம ரிஷியால் பிரதிபாதிக்கப் பட்ட படி ஷட் பாவ விகார ரஹிதம் என்கிறது ஆகவுமாம் –

(அஸ்தி, ஜாயதே, வர்த்ததே, விபரிணமதே, அபஷ்யதே, விநஸ்யதே-கருவில் இடம் பெறுதல் (அஸ்தி), பிறந்த பிறகு வளர்ச்சி அடைதல் (ஜாயதே), வளர்தல் (வர்ததே), இளமை, வாலிபம், முதுமை போன்ற மாறுபாடுகளுக்கு உட்படுதல் (விபரிணமதே), மூப்பின் காரணமாக தளர்ச்சி அடைதல் (அபச்சியதே), இறுதியில் மரணமடைதல் (நாசம்) எனும் ஆறு மாற்றங்களுக்கு (ஷட் விகாரம்) உள்ளாவது-அஸ்தி -ஆறில் ஒன்றே -ஆறும் இல்லாமல் அஸ்தி மட்டுமே உள்ள ப்ரஹ்மம்)

ஆனந்த –
ஜ்ஞான ஆனந்த மயம் யஸ்ய ஸ்வரூபம் பரமாத்மன -(எந்த பரமாத்மாவினுடைய ஸ்வரூபம் ஞான ஆனந்தமாய் இருக்கிறதோ)என்கிறபடியே ஆனந்த ரூபமாய் இருக்கும் –
ஆனந்த ரூபமாய் இருக்கை யாவது என் -என்றால் –
தன்னைத் தான் அனுபவிக்கும் போது ஸூகாவஹமாய் இருக்கை – இன்பம் அளிப்பதாய் இருக்கை

(உணர் முழு நலம் -முழு உணர்வும் ஞானமும் நலமும் ஆனந்தமும் உடையவன்-ஸ்வரூப ஆவிர்பாவம் பெற்ற முக்தனுக்கும் அங்கு இவை உண்டே)

மஹா விபூதி –
அங்குலஸ் யாஷ்ட பாகோ அபி ந சோஸ்தி முனி சத்தம
ந ஸந்தி பிராணிநோ யத்ர கர்ம பந்த நிபந்த நா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-7-4-
முனி ஸ்ரேஷ்டரே கர்ம பந்தத்தைக் காரணமாகக் கொண்ட பிராணிகள் இல்லாததான அங்குலத்தில் எட்டில் ஒரு பாகமும் கிடையாது – என்று கொண்டு மஹர்ஷியால் பிரதிபாதிக்கப் படுகையாலே யாதோர் இடத்தில் ஜீவ சமூஹம் உண்டு -அங்கே பரமாத்ம சந்நிதி உண்டாய் இருக்கும்
அது எங்கனே என்னில் -(அசேதனப் பொருள்கள் உள்ள இடங்களிலே தோறும் ஆத்மாவும் அதற்குள்ளும் ப்ரஹ்மமும் இருந்து யாக வேண்டுமே -ப்ரஹ்மாத்மகம் இல்லாத எதுவும் யாரும் இல்லையே)

யஸ்ய ஆத்மா சரீரம் யஸ்ய ப்ருதிவீ சரீரம் –(எவனுக்கு ஆத்மா சரீரமோ –எனக்கு பூமி சரீரமோ)என்று கொண்டு பிரமாணம் உண்டாகையாலே
சரீரத்தை ஒழிந்தது அன்று இறே சரீரி இருப்பது –
ஆக –மஹா விபூதி -என்று திவ்ய ஆத்ம ஸ்வரூபத்தின் உடைய விபுத்வம் பிரதிபாதிக்கப் பட்டது -(ஸ்வரூப வ்யாப்தி -கரந்து எங்கும் பரந்துளன் -ஆத்மா அணு ஸ்வரூபம்)

(பூமாதிகாரணம் -உலகப் பொருள்களை ப்ரஹ்மாத்மகமாகப் பார்க்கிறவன் எத்தைப் பார்த்தாலும் ஆனந்த மயமாகவே இருக்குமே)

பரமம்
பரோ மாஸ் அஸ்யேதி -என்கிறபடியே
இது தன்னுடைய நிருபமத்வம் பிரதிபாதிக்கப் படுகிறது -(இயத்தா ராஹித்யம் இப்படி என்று சொல்ல முடியாதே)
இதுக்கு பிரமாணம் என் -என்றால்
ந தத் சமச் சாப்யாதி கஸ்ஸ த்ருஸ்யதே –ஸ்வே-6–(அந்தப் புருஷனுக்கு சமமாகவும் மேலானனாகவும் ஒருவரும் காணப்படவில்லை)என்றும்
ந சந்தருசே திஷ்டதி ரூபமஸ்ய ந சஷூ ஷா பஸ்யதி கஸ்ஸ நைனம்—தைத்ரியம் -1-10-என்றும்
ஒத்தார் மிக்காரை இலையாய் மாமாயா -திருவாய் மொழி -2-3-2-(ஓத்தாய் எப்பொருளும் உள்ளும் புறமும் வியாபித்து இருக்கச் செய்தேயும் ஓத்தார் மிக்கார் இல்லாத மா மாயன்)என்றும் உண்டாகையாலே
யச் சப்தத்தாலே
ப்ரத் யஸ்தமித பேதம் யத் சத்தா மாத்ர மகோசரம் வசஸா மாத்ம சம்வேத்யம்
தஜ் ஜ்ஞானம் ப்ரஹ்ம சம்ஜ்ஜிதம் –ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-7-53-
ஜாதி முதலிய பேதம் அற்றதும் -விகாரம் அற்றதும்-வாக்குகளுக்கு எட்டாததும் -ஸ்வயம் பிரகாசமும் ஞான ஸ்வரூபமான அது ப்ரஹ்மம் என்று சொல்லப்படுகிறது – என்கிறபடியே
இது தன்னுடைய அவாங் மனஸ் அகோசரத்வம்-பிரதி பாதிக்கப் படுகிறது

ப்ரஹ்ம
ப்ருஹத்வாத் ப்ரும்ஹணத் வாச்ச ப்ரஹ்ம இத்யபி தீ யதே--ஸ்ரீ விஷ்ணு -3-3-22–
பெரியதாய் இருப்பதாலும் பிறரைப் பெரியதாகச் செய்வதாலும் ப்ரஹ்மம் என்று சொல்லப்படுகிறது -என்று சொல்லுகிறபடியே
கீழ் சொன்ன மஹா விபூதி சப்தத்தாலே ஆர்த்தமாக பிரதிபாதிக்கப் பட்ட
திவ்ய ஆத்ம ஸ்வரூப விபுத்வம் ப்ரஹ்ம சப்தத்தாலே சாப்தமாக பிரதி பாதிக்கப் படுகிறது
ஆக –
இப்படி பூர்வ பாதத்தாலே ஷடூர்மி ரஹிதமாய்-தனக்கு ஸூகாவஹமாய் நிருபமமாய் அவாங் மனஸ் அகோசரமாய்
ப்ருஹத்த்வ பிரும்ஹணத்வ குணயோகியாய் இருக்கிற–திவ்ய ஆத்ம ஸ்வரூபம் பிரதி பாதிக்கப் பட்டது –

(பெரும் புறக்கடல் -கப்பல்கள் கடலுக்குள் இருக்க-அலைகள் இல்லாமல் – சாந்தமாக இருக்கும் என்றால் இவன் சாந்தமாக இருக்கச் சொல்ல வேண்டுமோ –ஐந்து விசேஷணங்கள் இங்கு அருளிச் செய்தது ஸ்ருதி-வேதம் அஹம் ஏதம் புருஷம் மஹாந்தம்
அஹம் வேத்மி மஹாத்மாநம் ராமம் ஸத்ய பராக்ரமம் -இவற்றிலும் ஐந்து விசேஷணங்கள் உண்டே-)

இனி உத்தர வாக்யத்தாலே திவ்ய மங்கள விக்ரஹம் பிரதி பாதிக்கப் படுகிறது –
மூர்த்தம் ப்ரஹ்ம ததோ அபி தத் ப்ரியதரம் ரூபம் யத்த் யத்புதம்
கீழ் பிரதி பாதிக்கப் பட்ட அமூர்த்தமான ப்ரஹ்மத்தில் காட்டிலும்
பகவானுக்கு அத்யந்தம் ப்ரீதி ப்ரகர்ஷ ஜனகமாய் -மூர்த்தமாய் -ப்ரஹ்ம சப்த வாச்யமாய் -அத்ய ஆச்சர்யமாய் இருக்கிறது – யாதொரு திவ்ய மங்கள விக்ரஹம் -அது பிரதிபாதிக்கப் படுகிறது – சித்த ஆலம்பனத்துக்கு மூர்த்தி -உருவம் வேண்டும் –அருவமாயும் உருவமாயும் உள்ளவன் -அருவமும் ஒரு உருவம்-வாரா வருவாய் வரும் என் மாயா -வாரா அருவாய் -பிரித்து அரூபமாயும் ஒரு ரூபம் என்பர்

(புகழும் நல் ஒருவன் என்கோ -பொலிவில் சீர் பூமி என்கோ –அனைத்துமாய் இருக்க கண்ணனை கூறுமாறு அறியமாட்டேன் -ஆண் அல்லன் பெண் அல்லன் -அப்படியும் இப்படியும் அருளிச் செய்ய-அனைத்துமே அவனாக இருந்தும் – -விலக்ஷணம் உள்ளவன் –புருஷோத்தமன் என்று அறிய வேண்டுமே -ஸர்வ ஸப்த வாஸ்யன் -அன்றோ)

விக்ராஹோ -என்றும்
அரூபி ஹி ஜனார்த்தன -(ஜனார்த்தனன் ரூபம் அற்றவன் அன்றோ-அரூபமாயும் ஒரு ரூபம் )என்றும் –

ந தே ரூபம் ந சாகாரோ ந ச ஆயுதாநி ந சாஸ்பதம் ததாபி புருஷகாரோ பக்தாநாம் த்வம் ப்ரகாஸஸே–ஜிதந்தே -5- -என்றும்

இப்படி ஈஸ்வரனுக்கு விக்ரஹம் இல்லை என்று கொண்டு பிரமாணங்கள் உண்டாய் இருக்க
திவ்யம் ஸ்வரூபம் என்றும் திவ்ய மங்கள விக்ரஹம் என்றும் எங்கனே -என்று
இப்படிச் சொல்லுவார் வேதாந்த நிஷ்டர் உடைய கோஷ்டியில் பஹிஷ்க்ருதரான பேர் இறே –

ஆவது என் -சோத்யம் பண்ணினால் பரிஹரிக்கும் இத்தனை ஒழிய பரிவாதியா நின்றீர்
இப்படி பிரமாணம் உண்டோ -என்றால் -உண்டு
அது எங்கனே -என்றால் –

ய ஏஷ அந்தராதித்யே ஹிரண்மய புருஷோ த்ருச்யதே ஹிரண்யஸ் மஸ்ருர் ஹரண்ய கேச ஆப்ரணகாத் சர்வ ஏவ ஸ்வர்ண
தஸ்ய யதா கப்யாசம் புண்டரீகம் ஏவம் அஷிணீ—சாந்தோக்யம் -1-6-/7-என்றும் –

சர்வே நிமேஷா ஜஜ்ஞிரே வித்யூத புருஷா தத்தி -என்றும் –

ஆதித்ய வர்ணம் தமஸ பரஸ்தாத் -என்றும்

த்யேயஸ் சதா சவித்ரு மண்டல மத்திய வர்த்தி நாராயணஸ் சரசிஜாச சந்நிவிஷ்ட
கேயூரவான் மகர குண்டலவான் கிரிடி ஹாரீ ஹிரண்மய வபுர் த்ருத சங்க சக்ர--ஸ்ரீ நரஸிம்ஹ புராணம் -(ஸூர்ய மண்டலத்தில் நடுவிலே இருப்பவனும் -கமலாசனத்தில் வீற்று இருப்பவனும் -தோள்வளை மகரகுண்டலம் கிரீடம் ஹாரம் இவைகளை யுடையவன் ஸூவர்ண மயமான சரீரத்தை யுடையவனும் சங்கு சக்கரங்களைத் தரித்தவனுமான நாராயணன் எப்போதும் த்யானிக்கத் தக்கவன் -)என்றும்

கிரீட கௌஸ்துபதரம் மித்ராணாம் அபயப்ரதம் – -(கிரீடத்தையும் கௌஸ்துபத்தையும் தரிப்பவனும் -தன்னை அண்டினவர்களுக்கு அபயம் அளிப்பவனுமான எம்பெருமானை)என்றும்

நீண்ட பொன் மேனியோடும் நிறைந்து என்னுள்ளே நின்று ஒழிந்தான் -திருவாய் மொழி -5-5-7- என்றும் கொண்டு இப்படி பிரமாணம் உண்டு ஆகையாலே உன்னுடைய அபிமதம் சித்தியாது –

யான் யன்யானி யதா ஸூகம் விஹரதோ ரூபாணி சர்வாணி –
அஜாய மாநோ பஹூதா விஜாயதே -என்றும்
பிறப்பில் பல் பிறவிப் பெருமான் -திருவாய் மொழி -2-9-5- என்றும்
இப்படி பிரமாணம் உண்டு ஆகையாலே
ஜனி ஜராதி துரித தூரனாய் இருந்துள்ள சர்வேஸ்வரன் தன்னுடைய சௌலப்யம் என்கிற குணத்தை ஒப்பம் இடுகைக்காக –
பஹூஸ்யாம் ப்ரஜா யேய-என்றும்

ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன
நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய ஹ்யாகாதோ மதுராம் புரிம் –ஸ்ரீ ஹரி வம்சம் -113-62-(பாற்கடலில் பள்ளி கொண்டவனான இந்த ஸ்ரீ மன் நாராயணனே பைந்நாகப்பாயை விட்டு மதுராபுரிக்கு வந்திருக்கிறான் -)–என்றும்

ச ஹி தேவை ருதீர்ணச்ய ராவணச்ய வதார்த்திபி
அர்த்திதோ மானுஷே லோகே ஜஜ்ஞே விஷ்ணுச் சனாதன –அயோத்யா -1-7–என்றும்

சம்பவாமி யுகே யுகே -என்றும்

ஸமஸ்த கல்யாண குணாத் மகோ அசவ் ஸ்வ சக்தி லேஸ உத் த்ருத பூத சர்க்க
இச்சா க்ருஹீத அபிமதொரு தேஹஸ் சம்சாதி தாஸ அசேஷ ஜகத்திதோ அசௌ--ஸ்ரீ விஷ்ணு-6-5-84-(இந்தப் பகவான் சகல கல்யாண குணங்களையும் இயற்கையாகவே யுடையவன் -தன்னுடைய சக்தியில் ஒரு சிறு பகுதியினாலேயே தயாரிக்கப்பட்ட பூதங்களை உடையவன் -இச்சையினாலேயே எடுக்கப் பட்டவையும் இஷ்டமானவையுமான பல தேஹங்களை யுடையவன் -இவன் எல்லா ஜகத்துக்கும் நன்மையைச் செய்பவன் -) -என்றும்

ரஷார்த்தம் சர்வ பூதாநாம் விஷ்ணுத்வம் உபஜக்மிவாந்–உத்தர -85-18-(விஷ்ணுவாய் இருக்கும் தன்மையை அடைந்தான்)

இப்படி பிரமாணம் உண்டாகையாலே
அதிதிக்கு த்வாதச புத்ரனாய்க் கொண்டு அவதரித்த அவதாரத்தோடும்
தயரதன் பெற்ற மரகத மணித்தடம் -திரு வாய் மொழி -10-1-8- என்கிற ராமாவதாரத்தோடும்
மண்ணின் பாரம் நீக்குவதற்கே வடமதுரைப் பிறந்தான் -திருவாய்மொழி -9-1-10-என்கிறபடியே –
தேவ கார்யார்த்தமாக அவதரித்து அருளின
ராம க்ருஷ்ணாத்யவதாரங்களோடும் வாசி அற

தான் யாஹூ ஸ்வைர நுரூப ரூபா விபவைர் காடோப கூடாநி தே –
ராகவத்தே அபவத் சீதா ருக்மிணீ கிருஷ்ண ஜன்மனி
அன்யேஷூ ச அவதாரேஷூ விஷ்ணோ ரேஷா அநபாயி நீ-ஸ்ரீ விஷ்ணு பிராணம் -1-9-144-(இந்தப் பிராட்டி பகவான் ராமனாய் அவதரித்த போது ஸீதையானாள-கிருஷ்ணாவதாரத்தில் ருக்மிணியானாள் -மற்ற அவதாரங்களில் இவள் அவனைவிட்டு அகலகில்லாதவளாய் இருக்கிறாள்) என்கிறபடியே அவ்வோ அவதார விக்ரஹங்களுக்கு அனுரூபமான உன்னுடைய அவ்வோ அவதாரங்களில் உண்டான திவ்ய மங்கள விக்ரஹத்தாலே

ஸ்திதயா பார்ஸ்வதஸ் சாபி வாலவ் யஜன ஹஸ்தயா
உபேதம் சீதயா பூயஸ் சித்ரயா சசினம் யதா – அயோத்யா -16-10
சித்ரா நக்ஷத்ரத்துடன் கூடிய சந்திரனைப் போலே சாமரத்தைக் கையில் கொண்டு அருகில் இருப்பவளான ஸ்ரீ சீதா பிராட்டி உடன் கூடிய ஸ்ரீ ராமனை -என்றும்

(சித்திரை மாதம் -கார்த்திகை நக்ஷத்ரம் -அக்னி தேவதா – நிவ்ருத்தி -27 நாள்கள் முடிந்த பின்பும் அக்னி நக்ஷத்ரம் முடியும் -108 பாதங்களை 30 நாள்களில் தாண்ட வேண்டும் -)

தம் த்ருஷ்ட்வா சத்ரு ஹந்தாரம் மஹர்ஷீணாம் ஸூகாவஹம்
பபூவ ஹ்ருஷ்டா வைதேஹீ பர்த்தாரம் பரிஷஸ்வஜே -ஆரண்யம் -30-40- (சத்ருக்களை அழித்தவனும் -மஹரிஷிகளுக்கு ஸூகத்தை அளித்தவனுமான கணவனைப் பார்த்துக் வைதேஹி ஸந்தோஷம் அடைந்தாள் -பர்த்தாவான ஸ்ரீ ராமனை ஆலிங்கனம் செய்து கொண்டாள்)என்றும்-இப்படி பிரமாணம் உண்டாகையாலே காடமாக ஆலிங்கனம் பண்ணும்படி இறே இருப்பது-

ஆக
இந்த நான்கு ஸ்லோகங்களால்
லஷ்மி விசிஷ்டமான வஸ்துவே உபேயமாகக் கடவது என்றத்தை
அருளிச் செய்கிறார் ஆளவந்தார் –

(உபாயத்தில் கண் வைக்காமல் உபேயமாகவே கொள்ள வேண்டும் -லஷ்மி விசிஷ்டமான வஸ்து -ப்ரஹ்மம் -என்று அருளிச் செய்கிறார் -நாராயணன் ஹரி விஷ்ணு வாஸூ தேவன் என்னாமல் வஸ்து என்றே அருளிச் செய்வதை நோக்க வேண்டும்)

——————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆளவந்தார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading