ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய அவதாரிகை –
மூன்றாம் பாட்டு –
திருப் பீதாம்பரத்தின் அழகு திரு நாபீ கமலத்திலே வீசிற்று –
———–
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய-அவதாரிகை –
மூன்றாம் பாட்டு -மந்தி பாய் –
திருப் பீதாம்பரத்தின் அழகு திரு நாபீ கமலத்திலே வீசிற்று –
முதல் பாட்டில் -ஆதி -பிரான் என்று ஜகத் காரண பூதனாய் -சர்வ ஸ்மாத் பரனாய் இருக்கும் என்று
சொல்லக் கேட்டவர்கள் -ப்ரஹ்ம விஷ்ணு ஸிவாத்மிகாம் -என்று மூவர் ஜகத் காரண பூதர்
என்று பிரசித்தமாய் இருக்க -இவனே ஜகத் காரண பூதன் என்று அறியும்படி என் என்ன –
சாஸ்திர முகத்தாலே நம்முடைய காரணத்வத்தை பிரகாசிப்பித்தோம் ஆகில்
அது கர்மாதீநமான ருஸ்யநுகூலமாக -கமுகின் நிரை போலே -அயதாவாக பிரகாசிக்கும் என்று பார்த்தருளி-
த்ரயோ தேவாஸ் துல்யாஸ் த்ரி தயமித மத்வை தமதிகம் த்ரிகா தஸ்மாத் தத்வம் பரமிதி விதர்க்கான் விகடயன்
விபோர் நாபீ பத்மோ விதி ஸிவ நிதாநம் பகவதஸ்த தன்யத் ப்ரூ பங்கீ பரவதிதி ஸித்தான்யதி ந -என்றும் –
முதலாம் திரு உருவம் மூன்று என்பார் ஒன்றே முதலாகும் மூன்றுக்கும் என்பர்
முதல்வா நிகரில் அலகு கார் உருவா நின்னகத்தன்றே புகரில் இலகு தாமரையின் பூ -என்றும்
சொல்லுகிறபடியே
தன் திரு நாபீ கமலத்திலே -ஜகத் காரண பூதராக பிரசித்தரான ப்ரஹ்ம ருத்ரர்களை சிருஷ்டித்துக் காட்ட
அந்த நாபீ கமலம் அம் முகத்தாலே தன்னுடைய மேன்மையையும் அழகையும் காட்டி
திருப் பீதாம்பரத்திலே துவக்கு உண்கிற என்னுடைய மனஸை தன் பக்கலில் இழுத்துக்
கொள்ளா நின்றது -என்கிறார்
அனுபாவ்யத்தை எல்லை கண்டு மீளுதல்
தம்முடைய ஆதரம் மட்டமாய் மீளுதல் செய்கிறார் அல்லரே
தம்முடைய சாபல்யம் அடியாக இழுப்பு உண்கிறார் இத்தனை இறே-
————-
ஸ்ரீ வேதாந்த தேசிகர் அருளிய முநி வாஹன போகம்-அவதாரிகை –
இப்படி இரண்டு பாட்டாலே
பகவத் சேஷத்வ பர்யவஸாநத்தையும் –
அந்ய சேஷத்வ நிவ்ருதியையும் அனுசந்தித்து -அநந்தரம் –
சேஷ பூதமான சேதன அசேதன வர்க்க
பிரதிபாதகமான த்ருதீய அஷரம் முதலான த்ருதீய காதையாலே –
சேஷத்வ ஞான ஹீனராயும் -விச்சேதம் இல்லாத சேஷத்வ ஞானம் உடையாராயும் -காதா சித்த சேஷத்வ ஞானம்
உள்ளவர்களையும் உள்ள ஜீவர்கள் எல்லாம் தம் தாமுடைய ஞான அநுரூபமாக
பிரதிகூல அநுகூல உபயவித பிரவ்ருதிகளில் நிற்கிற நிலையை உதாஹரித்துக் கொண்டு
பகவத் அனுபவத்தில் தமக்கு இடையிலே பெற்றதொரு ப்ராவண்யத்தை அனுசந்தித்து ப்ரீதர் ஆகிறார் –
———————–
மந்தி பாய் வட வேங்கட மாமலை வானவர்கள்
சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவின் அணையான்
அந்தி போல் நிறத் தாடையும் அதன் மேல் அயனைப் படைத்த தோர் எழில்
உந்தி மேல தன்றோ அடியேன் உள்ளத்து இன்னுயிரே–3–
பதவுரை
மந்தி–குரங்குகளானவை
பாய்-(ஒரு கிளையில் நின்றும் மற்றொரு கிளையில்) பாயப் பெற்ற
வடவேங்கடம் மா மலை–வடதிசையிலுள்ள திருவேங்கடமென்னும் திருமலையிலே
வானவர்கள்-நித்ய ஸூரிகள்
சந்தி செய்ய நின்றான்–பூக்களைக் கொண்டு ஆராதிக்கும்படி நிற்பவனாய்
அரங்கத்து–கோயிலிலே
அரவு இன் அணையான்-திருவனந்தாழ்வானாகிற போக்யமான படுக்கையை யுடையனான அழகிய மணவாளனுடைய
அந்தி போல் நிறத்து ஆடையும்–செவ் வானம் போன்ற நிறத்தையுடைய திருப் பீதாம்பரமும்
அதன் மேல்–அப் பீதாம்பரத்தின் மேலே
அயனை படைத்தது ஓர் எழில் உந்திமேலது அன்றோ–பிரமனைப் படைத்த ஒப்பற்ற அழகை யுடைய திருநாபிக் கமலமும் ஆகிய இவற்றின் மேற்படிந்ததன்றோ
அடியேன் உள்ளத்து இன் உயிரே-என்னுடைய மனஸ்ஸிலே விளங்குகிற இனிதான ஆத்ம ஸ்வரூபம்.
————————————————
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய வியாக்யானம் —
மந்திபாய் –
ஸ்ரீ திருமலையில் பலாக்கள் வேரே பிடித்துத் தலை யளவும் பழுத்துக் கிடக்கையாலே
அங்குத்தை குரங்குகள் ஜாத் உசித சாபலத்தாலே ஒரு பழத்தை புஜிக்கப் புக -மற்றை
மேல் பழத்திலே கண்ணை யோட்டி -இத்தை விட்டு -அதிலே பாய்ந்து தாவா நிற்கும் அத்தனை யாய்த்து –
ஸ்ரீ பெரிய பெருமாளுடைய திவ்ய அவயவங்களிலே தாம் ஆழங்கால் படுகிறாப் போலே யாய்த்து அவைகளும்
கானமும் வானரமும் வேடுமுடை வேங்கடம் இறே
மந்தி பாய் –
ஒன்றை ஒன்றை பற்றி மாலையாக நாலா நிற்கும் –
திருச் சின்ன குரல் கேட்டவாறே பாய்ந்தோடா நிற்கும் -என்றுமாம்
பரம பதமும் திருமலையும் கோயிலும் திரு வயோத்யையும் திருச் சோலையும் ஒரு
போகியாய் இருக்கிறபடி -எங்கும் மாறி மாறி தங்குகை
மந்திபாய் –
பலாக்கள் வேரோடு பனையோடு வாசியறப் பழுத்துக் கிடைக்கையாலே
ஒன்றிலே வாய் வைக்கப் பெறாதே தான் வேண்டினபடியே திரியும்படி யாய்த்து –
வட வேங்கடம் –
தமிழ் தேசத்துக்கு எல்லை நிலம் –
போக்யதை அளவற்று இருக்கை –
உபய விபூதியும் ஒரு மூலையிலே அடங்கும் என்றுமாம் –
வானவர்கள் சந்தி செய்ய நின்றான் –
எத்தனையேனும் தண்ணியார்க்கும் முகம் கொடுத்து நிற்கிற இந் நீர்மையை
அனுசந்தித்து நித்ய ஸூரிகள் வந்து படுகாடு கிடப்பது இங்கே யாய்த்து
மேன்மையை அநுபவிக்கும் அத்தனை இறே -அங்கு –
சீல அநுபவம் பண்ணலாவது -இங்கே இறே
நித்ய ஸூரிகள் திரு மலையிலே நிற்கிற சீலவத்தையிலே ஈடுபட்டு வந்து ஆஸ்ரயிக்க
குருடருக்கு வைத்த அறச் சாலையிலே விழி கண்ணர் புகுரலாமோ என்று -தான் –
ஆனைக்குப் பாடுவாரைப் போலே -மந்திகள் பக்கலிலே திரு உள்ளத்தை வைத்தான் -என்றுமாம் –
அரங்கத்து அரவின் அணையான் –
அங்கு நின்றும் இங்கே சாய்ந்தபடி –
பரம பதத்தின் நின்றும் அடி ஒற்றினான்
திருமலை அளவும் பயணம் உண்டாய் இருந்தது –
அங்கு நின்றும் வடக்குத் திருவாசலாலே கோயிலே சாய்ந்தான் –
ராமாவதாரத்தே பிடித்து அடி ஒற்றினான் –
ராவண வதம் பண்ணித் தெற்கு திரு வாசலாலே வந்து சாய்ந்த வித்தனை -என்றுமாம் –
அரவின் அணையான்
திரிகிறவன் சாய்ந்து அருளினால் உள்ள அழகு
அரவு
நாற்றம் குளிர்த்தி மென்மையும்
அரங்கத்து அரவின் அணையான்
சேஷ்யே புரஸ் தாச்சாலாயாம் -ஸ்ரீ பரத ஆழ்வானை வளைப்பு கிடக்க விட்டுப் போந்து –
கடல் கரையிலே வளைப்புக் கிடந்தால் போலே -சம்சாரிகளைப் பெற்றால் அல்லது போகேன்
என்று வளைப்புக் கிடக்கிறான்
சக்கரவர்த்தி திருமகனைப் போலே முதலில் சரணம் புக்கு முகம் காட்டா விட்டவாறே
சாபமா நய என்று சீறுமவர் அல்லர்
ஆற்றாமையைக் காட்டி சரணம் புக்குக் கிடக்குமவர் இறே இவர்-
அந்தி போல் நிறத்தாடையும்
சந்த்யா ராகம் போலே இருந்துள்ள திருப் பீதாம்பரம்
அரைச் சிவந்த வாடை -பின்னாட்டுகிற படி
அதன் மேல் –
இவ் வழகின் நின்றும் கால் வாங்க மாட்டுகிறிலர்-
அயன் -இத்யாதி –
சதுர தச புவன ஸ்ரஷ்டாவான ப்ரஹ்மாவுக்கு உத்பத்தி ஸ்தானமான திரு நாபீ கமலத்தின்
மேலதன்றோ -சதுர்முகன் ஸ்ருஷ்டி பூர்வ காலத்திலே யாகிலும் இப்போது ப்ரஹ்மாவுக்கு
உத்பத்தி ஸ்தானம் என்று கோள் சொல்லித் தரா நின்றது –
திரு நாபீ கமலம் -எழில் உந்தி இளகிப் பதிக்கை -ப்ரஸவாந்தஞ்ச யௌவனம் -என்கிறபடி
அன்றிக்கே இருக்கை
அடியேன்
பதிம் விஸ்வஸ்ய -யஸ்யாஸ்மி-என்கிற பிரமாணத்தாலே அடியேன் -என்கிறார் அல்லர்
அழகுக்கு தோற்று அடியேன் என்கிறார்
அடியேன் உள்ளத்து இன்னுயிரே
என்னுடைய நல் ஜீவனானது திரு நாபீ கமலத்தது அன்றோ -என்கிறார்
விடாமைக்கு பற்றாசு -மருடியேலும் விடேல் கண்டாய் -என்னுமா போலே –
இப் பாட்டில்
பெரிய பெருமாள் பக்கலில் திருவேம்கடமுடையான் தன்மையும் உண்டு என்கிறார்-
—————————————————
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய-வியாக்யானம் –
மந்தி பாய் வட வேங்கட மாமலை வானவர்கள்-சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவின் அணையான்-
கீழ்ப் பாட்டில் -உலகம் அளந்து அண்டமுற நிவர்ந்த நீண் முடியன் -கடியார் பொழில் அரங்கத்தம்மான் -என்றது –
இந்த லோகங்களை அடைய தன் திருவடிகளாலே அளந்து கொண்டார் பெரிய பெருமாள்
என்றாரே -அங்கனே சொல்லாமோ –
அன்று ஞாலம் அளந்த பிரான் சென்று சேர் திருவேம்கடம் -என்று அன்றோ நம் ஆழ்வார் வார்த்தை –
திருவேம்கடமுடையான் திருவடிகளைக் காண வேண்டும் என்று -வழிபாடு
செய்யும் ஸூரிகளும் எந்நாளோ நாம் மண் அளந்த இணைத் தாமரைகள் காண்பதற்கு -என்று
அன்றோ பிரார்த்தித்தது -ஆகையாலே இந்த பூமியை அடைய திருவடிகளால் ஆக்கிரமித்து
அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் -என்று தன் திருக் கையாலே -உலகம் அளந்த
பொன்னடியைக் காட்டிக் கொடு நிற்கிறமவனுமாய் -தான் ஓங்கி நிற்கின்றான் தண்ணருவி வேங்கடம் –
என்கிறபடியே அண்டமுற நிவர்ந்த நீண் முடியனுமாய் நிற்கின்றான் திருவேங்கடமுடையான் அன்றோ என்ன –
அந்த திருவேங்கடமுடையான் ஆகிறானும் இங்குக் கண் வளர்ந்து அருளுகிற பெரிய பெருமாளே -என்கிறார்-
மந்திபாய் வடவேங்கட மாமலை –
திருப் பீதாம்பரத்தின் அழகை அனுபவிக்கச் செய்தே -திரு நாபீ கமலத்தின் அழகிலே
தாம் இழுப்பு உண்ட சாபலத்துக்கு போலியாய் இருக்கையாலே குரங்குகளை
நிதர்சனமாக சொல்லுகிறார் –
மந்தி பாய் –
திருமலையிலே பலாக்கள் வேரே பிடித்துத் தலை யளவும் பழுத்துக் கிடைக்கையாலே
அங்குத்தை குரங்குகள் ஜாத் உசித சாபல்யத்தாலே ஒரு பழத்தை புஜிக்கப் புகுகிறவை
மற்றைக் கொம்பில் பழத்தில் கண்ணை யோட்ட -இத்தை விட்டு அதிலே தாவப் பாய்ந்து திரியா
நிற்கும் ஆய்த்து -பெரிய பெருமாளுடைய திவ்ய அவயவங்களிலே தாம் ஆழங்கால் படுகிறாப் போலே
கானமும் வானரமும் வேடுமுடை வேங்கடம் இறே
மந்தி பாய் –
ஒன்றை ஓன்று பற்றி நாலா நிற்கும்
திருச் சின்னம் கேட்டவாறே பாய்ந்து ஓடா நிற்கும் என்றுமாம்-
பரம பதமும் திருமலையும் கோயிலும் திரு வயோத்யையும் திருச் சோலையும் ஒரு
போகியாய் இருக்கிறபடி -எங்கும் மாறி மாறி தங்குகை-
வடவேங்கடம் –
திருமலை என்னாதே வடவேங்கடம் -என்கிறது தமிழுக்கு எல்லை நிலம் அதுவாக சொல்லுகையாலே
வேத சப்த உப ப்ரும்ஹண சப்தங்களால் அன்றிக்கே தம்முடைய ஜந்ம அனுரூபமாக
தாம் கவி பாடுகிற சப்தம் நடையாடுகைக்கு எல்லை அதுவாகையாலே சொல்லுகிறார் –
மா மலை –
1-போக்யதையின் மிகுதியைச் சொல்லுகிறது ஆதல் –
2-பரன் சென்று சேர் -என்றும் -முன்னம் அடைமினோ -என்றும் சொல்லுகிறபடியே
சேஷியானவன் தன்னுடைய ரஷகத்வ சித்திக்காகவும்
3-சேஷ பூதரானவர்கள் தங்கள் ஸ்வரூப சித்திக்காகவும் வந்து சேருகையாலே வந்த
ஸ்லாக்யதையை சொல்லுகிறது ஆதல் –
4-ஸூரிகள் பரம பதத்தின் நின்றும் திருவேங்கடமுடையானை அநுபவிக்க வரும் போது
தன் சிகரத்தில் இளைப்பாறி வரலாம்படி யிருக்கிற உயர்த்தியைச் சொல்லுகிறது ஆதல் –
அன்றிக்கே –
5-உபய விபூதியும் ஒரு மூலையிலே அடங்கும் என்றுமாம்-
வானவர்கள் சந்தி செய்ய –
நித்ய ஸூரிகள் -சிந்து பூக் கொண்டு போக ரூபமான சமாராதநத்தைப் பண்ண –
அவன் பரம் பதத்தின் நின்றும் தன் நீர்மை பிரகாசிக்கைக்காக ஆதியான தான் திருமலையிலே வந்தவாறே –
விண்ணவர் கோனான தன்னுடைய மேன்மையை அனுபவித்துக் கொண்டு போந்த ஸூரிகள்
விரையார் பொழில் வேங்கடவனான நீர்மையை அனுபவிக்கைக்காக திருமலையிலே வருவார்கள் –
அந் நீர்மைக்கு அடியான மேன்மையை அனுபவிக்கைக்காக திருமலையில் நின்றும் பரம பதத்து ஏறப் போவர்கள் –
நின்றான் –
இந் நிலையாலே ஒரு உத்தியோகம் உண்டு என்று தோற்றும்படி நின்றான் –
பெருமாள் ருச்யமூக பர்வதத்திலே மஹாராஜர் தொடக்கமான வானர சேனைக்கும் இளைய பெருமாளுக்கும் ஒக்க
முகம் கொடுத்துக் கொண்டு நிற்கிற நிலையும்
வானராணாம் நராணாஞ்ச கதமாஸீத் சமாகம -என்று -திருவடியை பிராட்டி -இங்கித
ஆகாரங்கள் அறியாத குரங்குகளுக்கும் விலஷணமான மனுஷ்யர்களுக்கும் கூட்டுறவு உண்டான படி எங்கனே –
கத மாசீத் சமாகம -தன் கடாஷ பாதமும் ஆபரண பாதமும் உண்டு என்று அறியாதே
நான் சேர விட -பின்பு -தோழன் நீ -என்ன ப்ராப்தமாய் இருக்க -நான் பிரிந்து
இங்கே இருக்கக் கூட்டரவு உண்டான படி என் என்று கேட்க –
ராம ஸூக்ரீவ யோரைக்யம் தேவ்யேவம் சம ஜாயதே -என்று அவர்கள் சேர்ந்த பிரகாரம் அறிந்திலேன் –
அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்கிற இளைய பெருமாளும் அருகே நிற்க அவர் பரிகரமான நான் இன்று வந்து
அந்தபுர பரிகரமாம்படி கூடினார்கள் -என்றான் இறே-
நின்றான் –
நித்ய ஸூரிகள் திரு மலையிலே நிற்கிற சீலவத்தையிலே ஈடுபட்டு வந்து ஆஸ்ரயிக்க
குருடருக்கு வைத்த அறச் சாலையிலே விழி கண்ணர் புகுரலாமோ என்று -தான் –
ஆனைக்குப் பாடுவாரைப் போலே -மந்திகள் பக்கலிலே திரு உள்ளத்தை வைத்தான் -என்றுமாம் –
நின்றான்-
மங்குல் தோய் சென்னி வடவேங்கடத்தானைக் கங்குல் புகுந்தார்கள் காப்பணிவான்
திங்கள் சடையேற வைத்தானும் தாமரை மேலானும் குடியேறத் தாங்குவித்துக் கொண்டு –
என்கிறபடியே ப்ரஹ்ம ருத்ராதிகள் சந்த்யா காலத்திலே வந்து சமாராதனம் பண்ணப்
பெரிய மேன்மையோடே நின்ற நிலையைச் சொல்லுகிறதாகவுமாம் –
நின்றான் –
இந் நிலையிலே ஒரு உத்யோகம் உண்டு என்று தோற்றும்படி நின்றான் –
ஸூரிகள் அந்த உத்தியோகத்தை அடி ஒற்றினவாறே -வடக்குத் திரு வாசலாலே வந்து புகுந்து –
கோயிலிலே படுக்கையிலே சாய்ந்தவனாய் இருந்தான் –
இவன் கிடக்கிறபடியைக் கண்டு -நடந்த கால்கள் நொந்தவோ -என்று வயிறு பிடிக்க வேண்டாதபடி
நின்று இருந்து வெக்கணைக் கிடந்தது என்ன நீர்மை -என்கிறதிலே போர ப்ரீதராய்
இனி சம்சாரக் கிழங்கு எடுத்தால் அல்லது கிளம்பான் என்று மீண்டு போனார்கள்-
ஆஸ்தாந்தே குண ராசிவத் குண பரீவா ஹாத்ம நாம் ஜங்கநாம் சங்க்யா
பௌமநிகேத நேஷ்வபி குடீ குஞ்ஷே ஷூ ரங்கேச்வர
அர்ச்ய சர்வ சஹிஷ்ணு ரர்ச்சக பராதீநா கிலாத்மஸ்திதி
ப்ரீணீ ஷே ஹ்ருதயாளு பிஸ்தவ தத சீலாஜ் ஜடீ பூயதே -ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் -2-–74-
(ஹே ரெங்கேஸ்வர–தே குண ராசிவத் குண பரீவாஹ ஆத்மாநம் –தேவரீருடைய குண சமூகங்களுக்குப் போலே
ஆத்ம குணங்களுக்கு பரிவாக ரூபமான
ஜன்மனாம் சங்க்யா ஆஸ்தாம்–அவதாரங்களும் எண்ணிக்கை யானது கிடக்கட்டும்
ஆஸ்தாம் – அநாதார யுக்தி–எண்ணிறந்த வித்துவான்கள் சேஷ்டிதங்கள் இருந்தாலும்
அர்ச்சாவதாரங்களைப் பார்த்தால் பரத்வ ஸ்தானமே
பவ்ம நிகேத நேஷு அபி குடீ குஞ்சேஷு -இப் பூ மண்டலத்தில் உள்ள ஆலயங்களிலும் க்ருஹங்களிலும் ஆஸ்ரயங்களிலும்
அர்ச்சயஸ் –ஆராதிக்க அரியவராயும்
சர்வ ஸஹிஷ்ணு –எதையும் சகிப்பவராயும்
அர்ச்சக பராதீன அகில ஆத்ம ஸ்திதி–அர்ச்சகர்களுக்கு பரவசப்பட்ட சகல நிலைமைகளையும் உடையராய்
ப்ரீணீஷே –உகந்து அருளா நின்றீர்-
ஹ்ருதயாலுபி தவ ததச் சீலாத் ஐடீ பூயதே–அப்படிப்பட்ட தேவருடைய சீல குணத்தினால்
ச ஹ்ருதயர்–ஆழ்வாராதிகள் – மோஹிக்கிறார்கள்
குணங்களும் அவதாரங்களும் எண்ணிறந்தவையாய் இருந்தும் ஸ்ரீ கோயில்கள் வீடுகள் ஆசிரமங்களில்
அர்ச்சக பராதீனமாக மகிழ்ந்து இருக்கும் ஸுவ்சீல்யம் என்னே-
பின்னானார் வணங்கும் ஜோதி -நம் போல்வாருக்கு அன்றோ
ஸ்ரீ ரெங்கா-நீ உன் கடாக்ஷ வீக்ஷணங்களை வழங்கி யோக நித்திரை பன்னி அருள்கிறாய்-
அர்ச்சாவதார பரமான ஸ்லோகம் -தேவருடைய ஞான சக்த்யாதி கல்யாண குணங்கள் போலே
அவற்றுக்கு பிரகாசகங்களான வ்யூஹ விபவ அவதாரங்களும் அசங்க்யாதங்கள் ஆகையால் பேச முடியாது–
குணங்களைப் போலவே ப்ரவாஹ ரூபமான அவதாரங்களும் எண்ணிறந்தவை அன்றோ –
அது இருக்கட்டும் –
தேவர் பூமியில் உண்டான ஸ்ரீ கோயில்களிலும்
மாளிகைகளும்
ஆஸ்ரமங்களிலும் அஞ்ஞாபிஞ்ஞ வர்ணாஸ்ரம விபாகமற
எல்லாராலும் பாஞ்சராத்ர விதிப்படி ஆராத நீயனாய் –
மத்யே சம்பாவிதங்களான அபராதங்களையும் பொறுத்து
ஆசன போஜன சயனாதிகள் அவர்கள் இட்ட வழக்காய்-அவர்கள் இட்டது கொண்டு திருப்தராகிறது –
அப்படிக்கொத்த அந்யாத்ருசமான தேவர் சில குணத்தால் சஹ்ருதயர் எல்லாம் ஈடுபடும்படி யாய்த்து என்கிறார் –
மத்துறு கடை வெண்ணெய் எத்திறம் என்று ஈடுபடுவபர்கள் இதில் ஈடுபடச் சொல்ல வேணுமோ -என்றபடி –)
அரவின் அனையான் –
புஷ்பஹாச சுகுமாரமான அவ்வடிவுக்கு போறாத படி காடுகளிலும் கரைகளிலும்
திருவடிகளைக் கொண்டு உலாவின விடாய் எல்லாம் தீரும்படி –
சைத்ய மார்த்தவ சௌ ரப்யங்களை உடைய திருவநந்த ஆழ்வான் மேலே கண் வளர்ந்து அருளினான் –
அரங்கத்து அரவின் அணையான் -என்று சீலத்தையும் மேன்மையும் அழகையும் அனுபவிக்கிறார்
அரங்கத்து அரவின் அணையான் –
சேஷ்யே புரஸ் தாச்சாலாயாம் யாவநமே ந ப்ரஸீததி -என்று ஸ்ரீ பரத ஆழ்வானை வளைப்பு
கிடக்க விட்டு போந்து -கடல் கரையிலே வளைப்பு கிடந்தால் போலே
சம்சாரிகளைப் பெற்றால் அல்லது போகேன் என்று வளைப்பு கிடக்கிறான்-
சக்கரவர்த்தி திருமகனைப் போலே முதலில் சரணம் புக்கு முகம் காட்டா விட்டவாறே
சாபமா நய என்று சீறுமவர் அல்லர்
ஆற்றாமையைக் காட்டி சரணம் புக்குக் கிடக்குமவர் இறே இவர்-
அந்தி போல் நிறத்தாடையும்
கீழ்ச் சொன்ன சிவந்த வாடை -ஆபரண கோடியிலேயாய் கழற்றவுமாய் இருக்கும்
இது சஹஜம் என்கைக்கு உடலாக -அந்தி போல் நிறத்தாடையும்-என்கிறார்
சந்த்யா ராக ரஞ்சிதமான மேகம் போலே யாய்த்து திருவரையும் திருப் பீதாம்பரமும் இருக்கிறபடி
திருமேனிமயில் கழுத்து சாயலாயே இறே இருப்பது -அத்தோடு சேர்ந்த திருப் பீதாம்பரம்
சந்த்யா ராக ரஞ்சிதமான காளமேகம் போலே ஆகர்ஷமாய் இறே இருப்பது
அரைச் சிவந்தவாடை -பின்னாட்டுகிறது -என்றுமாம்-
அதன் மேலே –
அவ்வழகுக்கு மேலே
அயனை இத்யாதி –
ஜகத் காரண பூதனான பிரசித்தனான சதுர் முகனை தன் பக்கலிலே உண்டாக்கி
அதடியாக வந்த மேன்மையால் உண்டான அத்வதீயமான அழகை உடைத்தாய்த்து திரு நாபீ கமலம் இருப்பது –
லோகத்தில் உத்பாதகருடைய அழகு பிரசவாந்தமாய் இருக்கும் –
இவனை உண்டாக்கிய பின்பு ஒளியும் அழகும் மிக்கது அத்தனை-
யோ ப்ரஹ்மாணம் விததாதி தம் ஹதேவம் என்கிறபடியே இவனை சிருஷ்டித்த பின் இறே த்யோதமனாய் ஆயிற்று –
ஓர் எழில் உந்தி –
சௌந்தர்யாக்யா சரிதுரசி விச்தீர்ய மத்யா வருத்தா ஸ்தானால்பத்வாத் விஷமகதி ஜாவர்த்த கர்த்தாபநாபி
ப்ராப்ய ப்ராப்த பிரதி மஜகநம் விஸ்ருதா ஹஸ்தி நாத ஸ்ரோதா பேதம் பஜதி பவதபாததே ஸாபதேஸாத் –
என்கிறபடியே -சௌந்தர்யம் ஆகிற பெரிய ஆறு திரு முடி யாகிற மலைத் தலையின் நின்றும்
அகன்ற திருமார்பு ஆகிற தாழ்வரையிலே வந்து குதி கொண்டு -அங்கே பரந்து கீழ் நோக்கி யிழிந்து
சிற்றிடை யாகையாலே அங்கே இட்டளப்பட்டு பின்பு திரு நாபி யாய்ச் சுழி யாறு பட்டது என்னக் கடவது இறே-
அடியேன் உள்ளத்தின் இன்னுயிரே –
அடியேனான என்னுடைய அகவாயில் வர்த்திக்கிற ஹ்ருதயமானது –
உந்தி மேலதன்றோ –
அடியேன் என்று இப்போது இவர் ஸ்வரூப ஞானம் பிறந்து
பதிம் விஸ்வஸ்ய -யஸ் யாஸ்மி -பரவாநஸ்மி -தாஸ பூதாஸ் ஸ்வதஸ் சர்வே ஹ்யாத்மாந பரமாத்மந -என்கிற
பிரமாணங்களாலே -அடியேன் -என்கிறார் அல்லர் –
குணைர்த் தாஸ்ய முபாகதராய்ச் சொல்லுகிறாரும் அன்று -அழகுக்கு தோற்று -அடியேன் -என்கிறார் –
அதிலும் வடிவழகின் சாமாந்யத்தைப் பற்றி சொல்லுகிற வார்த்தையும் அன்று
ஓர் அவயவத்தின் அழகுக்கு தோற்று சொல்லுகிற வார்த்தை
உயிர் -என்கிறது மனஸ்ஸை –
ஊனில் வாழ் உயிர் -என்று கொண்டாடினாப் போலே
வடிவழகு தமக்கு ரசித்து போக்யமாம்படி இருக்கையாலே இன்னுயிர் என்கிறது
சிலரை உண்டாக்குகிறது கிடீர் என்னை அழிக்கிறது-
அந்த திரு நாபி கமலம்
அதிகாரி புருஷர்களான ப்ரஹ்மாதிகளை உண்டாக்கும்
அடியேன் -என்று இருப்பாரை அழிக்கும்
பிள்ளை யழகிய மணவாள அரையர் பெருமாள் திருவடிகளில் புக்கு -நாயந்தே அடியேன்
திருவேங்கடமுடையானை திருவடி தொழுது வர வேணும் என்று நினையா நின்றேன் -என்று விண்ணப்பம் செய்ய –
வாரீர் அமலனாதிபிரானை ஒருகால் இசை சொல்லி காணீர் -என்று திரு உள்ளமாக
பிள்ளையும் ஒரு கால் இசையை விண்ணப்பம் செய்யக் கேட்டருளி –
இனிப் போகிலும் போம் இருக்கிலும் இரும் என்று திரு உள்ளமாயினார் –
முதலில் கண் படுவது திரு நாபீ கமலம் இறே
இப் பாட்டில் -பெரிய பெருமாள் பக்கலிலே திருவேங்கடமுடையான் ஆன தன்மையும் உண்டு என்கிறது-
——————————————————–
ஸ்ரீ வேதாந்த தேசிகர் அருளிய முநி வாஹன போகம்-வியாக்யானம் –
மந்திபாய் வடவேங்கட மாமலை
சபலரான சம்சாரிகளுக்கு நிதர்சனமான வானர வர்க்கம் -நாநா சாகைகளில் உள்ள
ஷூத்ர பலங்களை புஜிப்பதாக -கதாகதம் காமகாமா லபந்தே -என்கிறபடியே -ஒன்றை விட்டு
ஒன்றிலே பாய்ந்து திரிகைக்கு நிலமாய் -கலி யுகத்திலே பகவத் சம்பாவனை உடைத்ததாக
புராண சித்தம் ஆகையாலே ஆழ்வார்கள் அவதரிக்க பெற்ற அகஸ்ய பாஷா தேசத்துக்கு உத்தர அவதியாய் இருக்கிறது
புராண சித்தமாய் -ஈஸ்வரன் தன்னைப் போலே ஸ்வரூப ரூப குண விபூதி ப்ரபாவங்களால்
உண்டான மஹத்வத்தை உடைத்தான திருமலையிலே
வானவர்கள் சந்தி செய்ய நின்றான் –
பரம பதத்தில் கைங்கர்ய சாம்ராஜ்யத்துக்கு அதி க்ருதரான முக்தரும் நித்தியரும் தேச
உசிதமான தேஹங்களைக் கொண்டு உசிதமான கைங்கர்யத்தைப் பண்ணி இவர்கள்
ஆஸ்ரயிக்கைக்கு உத்தேச்யனாய் நின்றான் –
அரங்கத்தரவின் அணையான்
ஏற்றம் உள்ள அளவும் ஏற வேண்டும்படியான திருமலை ஆழ்வாரும் பரம பத ஸ்தாநீயம்
என்னும்படி எளிதாக கிட்டலாம்படியான கோயில் ஆழ்வாருக்கு உள்ளே –
ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழு விலா வடிமை செய்யும் வானவர்களுக்கு
படிமாவாய் நிச்சேஷ ஜகத் ஆதார குருவான தன்னைத் தரிக்கைக்கு ஈடான
ஞான பல ப்ரகர்ஷத்தை உடையனாய் -ஸூரபி ஸூகுமார ஸீதளமான திரு அரவு அணையிலே
கண் வளர்ந்து அருளுகிற பெரிய பெருமாள் உடைய-
அந்தி போல் நிறத்தாடையும்
ஆஸ்ரீதருடைய அஞ்ஞான அந்தகாரத்தை கழிக்க வல்ல சமயக் ஞான ஸூர்யோதததுக்கு
பூர்வ சந்த்யை போலேயும் புகர்த்த நிறத்தை உடைதான -செவ்வரத்த உடை யாடையும் –
இது மேலில் அனுபாவ்யத்தை அவலம்பிக்கைக்கு அனுபூதாம்சத்தை அனுவதித்த படி –
மேல் அநுபாவ்யம் ஏது -என்ன –
அதன் மேல் அயனைப் படைத்த தோர் எழில் உந்தி –
அநுபூதமான திருப் பீதாம்பரத்துக்கு மேலாய் -இதன் நிறத்துக்கு நிகரான சிவந்த
தாமரைப் பூவை உடைத்தாய் -அதின் மேல் வ்யஷ்டி ஸ்ருஷ்டி சமயத்தில் முற்பட
அயோநிஜனான ப்ரஹ்மாவை ஸ்ருஷ்டித்த அத்விதீயமான அழகை உடைத்தான திரு வுந்தி
ப்ரஹ்மாவுடைய ஸ்ருஜ்யத்வம் சொல்ல -கைமுதிக ந்யாயத்தாலே ருத்ர இந்த்ராதிகள்
உடைய ஸ்ருஜ்யத்வம் சொல்லிற்றாம்
இத்தால் ப்ரதிபுத்தர்க்கு ஸ்ரீயபதி ஒழிய சரண்யாந்தரமும் ப்ராப்யாந்தர்மும் இல்லை என்றது ஆயிற்று
இங்கு ப்ரஹ்மாவை சொன்னது முமுஷுக்களை ஸ்ருஷ்டித்த உபகாரத்துக்கு உதாஹரணமுமாகிறது
மேலதன்றோ –
என்றது இந்த திரு வுந்தியையே அனுபாவ்யமாகக் கொண்டன்றோ இருக்கிறது என்னவுமாம்
இதனுடைய அனுபவம் இட்ட வழக்காய் இருக்கிறது என்னவுமாம்
அடியேன் உள்ளத்து இன்னுயிரே –
ஆத்ம தாஸ்யம் ஹரே ஸ்வாம்யம் ஸ்வபாவஞ்ச சதா ஸ்மர -என்கிறபடியே
பரம காருணிக கடாஷத்தாலே ஸ்வபாவ தாஸ்ய ப்ரதிபோதம் உடையேனான என்னுடைய
சத்வோத்தரமான மனசிலே பிரகாசிக்கிற ஸ்வாதுதமமான என் ஆத்ம ஸ்வரூபம்
உள்ளம்-என்று ஹிருதய பிரதேசத்தைச் சொல்லவுமாம் –
இன்னுயிர் என்று பகவத் அனுபவத்துக்கு அநுரூபம் ஆகையாலே இனிதான ப்ராணாதிகளைச் சொல்லவுமாம் –
ஜ்ஞாநீது பரமை காந்தீ பராயத் தாத்ம ஜீவந -மச் சித்தா மத்கத ப்ராணா -இத்யாதிகளை இங்கே அனுசந்திப்பது
——————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply