ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய அவதாரிகை –
இரண்டாம் பாட்டு –
முதல் பாட்டில் அவன் தொடர்ந்து வந்தபடி சொன்னார்
இப் பாட்டில் தாம் மேல் விழுந்த படி சொல்லுகிறார்-
—-
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய-அவதாரிகை-
இரண்டாம்பாட்டு –
உவந்த -கீழில் பாட்டில்
அரங்கத்தம்மான் திருக்கமலபாதம் வந்து என் கண்ணினுள்ளன
ஒக்கின்றனவே -என்று திருவடிகள் தானே தம்மை விஷயீ கரித்துத் தம் திரு உள்ளத்திலே
பிரகாசித்தபடியைச் சொன்னார்
இப்பாட்டில் -திருவடிகளில் தொடர்ந்த திரு உள்ளம் திருப்
பரியட்டதின் மேல் சேர்ந்தபடி எங்கனே என்னில் –
தான் அறிந்து சேரில் விஷயத்தின் போக்யதைக்குக் குற்றமாம்
ஆகையாலே போக்யதை அளவுபட்டதும் அல்ல
ஆசை தலை மடிந்ததும் அல்ல
கடலோதம் கிளர்ந்தலைக்ப் புக்கால் உள்ளே கிடந்த தொரு துரும்பு கடலை அளவிட்ட வல்லவே
கரை ஏறுவது -ஒரு திரை ஒரு திரையிலே ஏற வீசும் அத்தனை இறே –
———–
ஸ்ரீ வேதாந்த தேசிகர் முநி வாஹன போகம் -அவதாரிகை –
இவன் திருவடிகளில் சிவப்புக்கு நிகரான திருப் பீதாம்பரம் தன் சிந்தைக்கு விஷயம் ஆகிறது என்கிறார் –
—————-
உவந்த உள்ளத்த்னாய் உலகம அளந்து அண்டமுற
நிவர்ந்த நீண் முடியன் அன்று நேர்ந்த நிசாசரரைக்
கவர்ந்த வெங்கணைக் காகுத்தன் கடியார் பொழில் அரங்கத்தம்மான் அரைச்
சிவந்த வாடையின் மேல் சென்றதாம் என சிந்தைனையே —-2-
பதவுரை
உவந்த உள்ளத்தன் ஆய்–மகிழ்ச்சியோடு கூடிய மனத்தை யுடையவனாய்க் கொண்டு
உலகம் அளந்து–மூவுலகங்களையும் அளந்து
அண்டம் உற–அண்ட கடாஹத்தளவுஞ் சென்று முட்டும்படி
நிவந்த–உயர்த்தியை அடைந்த
நீள் முடியன்–பெரிய திருமுடியை யுடையவனாய்
அன்று–முற்காலத்தில்
நேர்ந்த–எதிர்த்து வந்த
நிசரசரரை–ராக்ஷஸர்களை
கவர்ந்த–உயிர் வாங்கின
வெம் கணை–கொடிய அம்புகளை யுடைய
காகுத்தன்–இராம பிரானாய்,
கடி ஆர்–மணம் மிக்க
பொழில்–சோலைகளை யுடைய
அரங்கத்து-ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியிருப்பவனான
அம்மான்-எம்பிரானுடைய
அரை-திருவரையில் (சாத்திய)
சிவந்த ஆடையின் மேல்-பீதாம்பரத்தின் மேல்
என சிந்தனை-என்னுடைய நினைவானது
சென்றது ஆம் பதிந்ததாம்
————————————————————
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய வியாக்யானம் –
உவந்த உள்ளத்தனாய் –
ஆழ்வாரை அகப்படுத்துகையால் வந்த ப்ரீதி -சர்வேஸ்வரனாய் -ஸ்ரீ ய பதியாய் –
அவாப்த சமஸ்த காமனாய் இருக்கிறவன் -அர்த்தியாய் வந்து -தன் திருவடிகளை
தலையிலே வையா நின்றால் -மதீய மூர்த்தாந மலங்கரிஷ்யதி -என்று உகக்க வேண்டி இருக்க –
அவை அறியாது ஒழிய –
பிரஜை பால் குடிக்கக் கண்டு உகக்கும் மாதாவைப் போலே உகந்த திரு உள்ளதை உடையவனாய் –
இவற்றை பிரிந்தால் வ்யசனமும் தன்னதே இறே
வ்யசநேஷூ மனுஷ்யாணாம் ப்ருசம் பவதி -என்கிறபடியே-
உலகம் அளந்து –
வகுத்த திருவடிகள் தலையிலே வந்து இருந்தாலும் உகக்க அறியாத லோகத்தை
கிடீர் தானும் விடாதே அளந்தது –
உகக்க அறியாமைக்கு -வன் மா வையம் இறே
குணாகுணம் நிரூபணம் பண்ணாதே எல்லார் தலையிலும் ஒக்கத் திருவடிகளை வைத்த
படியாலே பக்திமான்களும் பாதகிகளும் ஒக்க வாழ்ந்து போய்த்து-
அண்டமுற நிவர்ந்த நீண் முடியன் –
அண்ட கடாஹத்திலே சென்று சேர்ந்த திரு வபிஷேகத்தை யுடையவன்
அண்ட கடாஹம் வெடித்து அடி பிடிக்க வேண்டும் படி இறே அபேஷிதம் பெற்று வளர்ந்த படி
அண்டமுற –
அண்டம் மோழை எழ
நிவர்ந்த –
நிமிர்ந்த பூ அலர்ந்தாப் போலே
நீண் முடியன் –
உபய விபூதிக்கும் நிர்வாஹகன் என்று தோற்றும்படி இருக்கிற திரு வபிஷேகத்தை யுடையவன் –
ரஷ்ய வர்க்கத்தை நோக்கினால் இறே ரஷகன் முடி தரிப்பது-
அன்று –இத்யாதி
கண்ட காட்சியிலே ஜிதம் என்ன வேண்டும்படி இருக்குமவன் இறே
எதிரிட்ட பையல்களை முடிக்கைக்கு வெவ்விய சரத்தை உடைய சக்கரவர்த்தி திருமகன் –
அன்று –
ரஷகனானவன் ரஷ்யதை நோக்கக் கடவராக வந்து நின்ற அன்று –
நேர்ந்த நிசாசரரை
எதிரிட்ட நிசாசரரை
நேர்ந்த நிசாசரர் -என்கிறது திருப்பல்லாண்டு பாட வேண்டும் அழகைக் கண்டும்
எதிர் அம்பு கோப்பதே என்று
நிசாசரர் -வெளியில் முகம் கண்டு அறியாத பையல்கள்
கவர்ந்த
புறப்படும் போது வினயத்தோடு புறப்பட்டு வேட்டை நாய்கள் ஓடி மேல் விழுமா போலே விழுகை
வெங்கணை
விடும் போது அம்பாய் படும் போது காலாக்நி போலே இருக்கை
தீப்த பாவக சங்காசைத்தரை -என்கிறபடியே பெருமாள் கண் பார்க்கிலும் முடித்து அல்லது நில்லாத வெம்மை
காகுத்தன் –
குடிப் பிறப்பால் தரம் பாராதே விஷயீ கரித்தபடியும் வீரவாதியும்-
கடியார் பொழில் –
திரு உலகு அளந்து அருளின இடமே பிடித்து அடி யொற்றி
ராவண வதம் பண்ணி
தெற்கு வாசலாலே புகுந்து சாய்ந்து அருளினான் –
இன்னமும் வேர்ப்பு அடங்கிற்று இல்லை
திருச் சோலையில் பரிமளம் விடாய்க்கு சிசிரோபசாரமானபடி –
அரங்கத்தம்மான் –
அவதாரத்துக்கு பிற்பாடருக்கும் இழவு தீர கோயிலிலே வந்து கண் வளர்ந்து அருளுகிற படி –
அம்மான்
இங்கே வந்த பிறகு ஈஸ்வரத்வம் நிலை நிற்கை-
அரைச் சிவந்த வாடை –
உடையார்ந்த வாடை
செக்கர் மா முகில்
திரு மேனிக்கு பரபாகமான திருப் பீதாம்பரம்
சிவந்த வாடையின் மேல் சென்றதாம் –
சோற்றின் மேலே எனக்கு மனம் சென்றது -என்னுமா போலே ஆச்சர்யப் படுகிறார் –
என் சிந்தனை –
ஆருடைய கூறை யுடையைக் கண்டு உகக்கக் கடவ நெஞ்சு இதிலே யகப்பட்டது
என் சிந்தனை –
திருவடிகளின் சுவடு அறிந்த பின்பு புறம்பு போக மாட்டாத நெஞ்சு
தீர்த்தமாடா நிற்க துறையிலே பிள்ளையை கெடுத்து திரு வோலக்கத்திலே காண்பாரைப்
போலே திருவடிகளில் நின்றும் திருப் பீதாம்பரத்திலே திரு உள்ளத்தைக் கண்டபடி –
இத்தால் –
திரு உலகு அளந்து அருளினவற்றையும் ராமாவதாரத்தையும் பெரிய பெருமாள் பக்கலிலே
ஒரோ வகைகளிலே காண்கிறார்
———————————————————————
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய-வியாக்யானம் –
உவந்த உள்ளத்தனாய் –
ஆழ்வாரை அகப்படுதுகையால் வந்த ப்ரீதி –
சர்வேஸ்வரனாய் -ஸ்ரீ ய பதியாய் -அவாப்த சமஸ்த காமனாய் -அவாக்ய அநாதர -என்கிறபடியே
பரிபூர்ணனான தான் –
கதாபுநச் சங்க ரதாங்க கல்பக த்வஜார விந்தாங்குச வஜ்ர லாஞ்சநம்
த்ரி விக்ரம தவச் சரணாம் புஜ த்வயம் மதீய மூர்த்தாந மலங்கரிஷ்யதி -என்றும் –
படிக்களவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே தலைக்கணியாய் -என்றும் சிலர் அபேஷியாது இருக்க –
பாதா ருந்துத மேவ பங்கஜா ஜ -என்னும் சௌகுமார்யத்தை யுடைத்தாய் –
பெரிய பிராட்டியார் திருக் கைகளால் வருடவும் பொறாத அந்த திருவடிகளை
காடு மேடுகள் என்று பாராதே -சேதன அசேதன விபாகம் பாராதே பரப்பினால்
இப்படி உபகரிப்பதே -என்று இவர்கள் உகக்க ப்ராப்தமாய் இருக்க
இவர்கள் அறிவு கேடே ஹேதுவாக விலக்காது ஒழியப் பெற்றோமே என்று
இரட்டிக்க புகுந்த திரு உள்ளத்தை உடையனாய் –
க்ருதக்ருத்யஸ் ததா ராமோ விஜ்வர ப்ரமுமோத ஹ -என்று
தம்மோடும் தம்பியாரோடும் உண்டான வாசனையாலே முடியை விலக்குகிறான் என்று
வெறுத்து இருந்த பெருமாள் -இவன் இசைந்து முடியை வைத்த பின்பு உகந்தாப் போலே
இத்தலையில் அத்வேஷமே ஹேதுவாக திருவடிகளை வைக்கப் பெறுகையாலே
மிகவும் ப்ரீதனாய் –
எதிர்த்தலை அறியாது இருக்க தானே உகக்கிற இது வாத்சல்யம் இறே
உறங்குகிற பிரஜையை தாய் கட்டிக் கொண்டு கிடக்கிறது வாத்சல்யம் அன்றோ –
இவற்றை பிரிந்தால் வ்யசனமும் தன்னதே இறே
வ்யசநேஷூ மனுஷ்யாணாம்
உலகம் அளந்து –
வசிஷ்ட சண்டாள விபாகம் -ஸ்த்ரி பும்ஸ விபாகம் -ஜ்ஞான அஜ்ஞ்ஞான விபாகம் –
என்றவற்றைப் பாராதே எல்லார் தலைகளிலும் திருவடிகளை வைத்த படி –
உலகம் அளந்து –
வைத்த திருவடிகள் தலையிலே வந்து இருந்தாலும் உகக்க அறியாத லோகத்தை
கிடீர் தான் விடாதே யளந்தது
உகக்க அறியாமைக்கு வன் மா வையம் இறே
வன்மா வையம் அளந்த எம் வாமனா!நின்
பன் மா மாயப் பல்nபிறவியில் படிகின்ற யான்,
தொன் மா வல்வினைத் தொடர்களை முதல் அரிந்து,
நின் மா தாள் சேர்ந்து நிற்பது எஞ் ஞான்று கொலோ?-3-2-2-
குணாகுணம் நிரூபணம் பண்ணாதே எல்லார் தலையிலும் ஒக்கத் திருவடிகளை வைத்த
படியாலே பக்திமான்களும் பாதகிகளும் ஒக்க வாழ்ந்து போய்த்து-
அண்டமுற நிவர்ந்த நீண் முடியன் –
அண்ட கடாஹத்திலே சென்று சேர்ந்த திரு வபிஷேகத்தை யுடையவன்
அண்ட கடாஹம் வெடித்து அடி பிடிக்க வேண்டும் படி இறே அபேஷிதம் பெற்று வளர்ந்த படி
அண்டமுற –
அண்டம் மோழை எழ
நிவர்ந்த –
நிமிர்ந்த பூ அலர்ந்தாப் போலே
நீண் முடியன் –
முடிக்கு நீட்சி யாவது -உபய விபூதிக்கும் தரித்த முடி என்று தோற்றும்படி யாய் இருக்கை
ஆதி ராஜ்யம் அதிகம் புவநாநா மீசதே பி ஸூ நயந் கில மௌளி -என்னுமா போலே
ரஷ்ய வர்க்கத்தை நோக்கினால் இறே ரஷகன் முடி நல் தரிப்பது-
ஒரு காலும் காமரு சீர் அவுணன் உள்ளத்து எண் மதியும் கடந்து -என்று திருவடிகளுக்கு வளர்த்தி
சொல்லப் ப்ராப்தமாய் இருக்க திருமுடிக்கு வளர்த்தி சொல்லுகிறது -இத் திருவடிகள்
அப்ராப்தமான திருவடிகள் அன்று -ப்ராப்தமான திருவடிகள் என்று தோற்றுகைகாக –
தான் அர்த்தியாய் சென்று -அர்த்தித்வத்தை மாறாதே அவன் கொடுத்த படியாலே உவந்த
உள்ளத்தனாய் –
அவன் தான் அறிய உகக்க ஒண்ணாதே
உலகம் இத்யாதி –
திருக்கையில் நீர் விழுந்த அளவிலே அந் நீரே பற்றாசாகக் கொண்டு வளர்ந்து அளந்து கொண்டான்-
ஆக இப்படி அர்த்தித்வ நிரபேஷமாக லோகத்தை இருந்ததே குடியாக திருவடிகளாலே
விஷயீ கரித்தால் போலே –
உம்முடைய நிகர்ஷம் பாராதே
அரவிந்தப் பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து -என்று நெஞ்சிலே வந்து புகுந்தானே
யாகிலும் -உம்முடைய சித்தமானது ராகாதி தூஷிதமாய் இருக்கையாலே
நாஸ்பதீ -என்கிறபடியே அங்கு கால் பொருந்தி இருக்க மாட்டானே
ஆகையால் அத்தை நீர் போக்கப் பாரீர் என்ன
அன்று நேர்ந்த நிசாசரரை கவர்ந்த வெங்கணை காகுத்தன் –
கண்ட காட்சியிலே ஜிதந்தே என்ன வேண்டி இருக்கிறவன் இறே
எதிர்த்த பையல்களை முடிக்கைக்கு வெவ்விய சரத்தை உடையவன் –
பெருமாளும் -ஸ்ரியா ஸார்த்தம் -என்கிறபடியே பிராட்டியும் நித்ய ஸூரிகளோபாதி
சுற்றம் எல்லாமான இளைய பெருமாளுமாக தண்ட காரண்யத்திலே போய் புக்கு
பரதன் அங்கு வந்து பின்னாட்டுகையாலே அங்கு இருக்க மாட்டாதே ஜன ஸ்தானத்திலே
போய் புக்கு அங்கு வர்த்திக்கிற ரிஷிகள் பாடே சென்று -ஆவாசம் த்வஹ மிச்சாமி ப்ரதிஷ்ட மிஹ காநநே –
என்று உங்கள் சாகாசத்திலே இருக்கப் பாரா நின்றோம் என்று இடம் தர வேணும் என்ன
அவர்களும் அங்கே இருக்க அனுமதி பண்ணி -நன்றாக பர்ண சாலை அமைத்து
வாஸ்து பலிகளும் இட்டு -அங்கே எழுந்து அருளி நிற்க –
அவ் விருப்புக்கு விரோதிகளாய் கர தூஷணாதிகள் எதிர்க்க
அவர்களை நோக்கி அந்த ரிஷிகள் கோத்த ஓர் அம்பு உண்டோ
அவர்கள் ஏஹி பஸ்ய சரீராணி -என்னும்படி உரு மாய்ந்த அந்த ராஷசரை
தம்முடைய திருக் கை திருச் சரங்களால் -உருக்கெட வாளி பொழிந்த சக்கரவர்த்தி திரு மகன்
என்னுடைய ராகாதி தோஷங்களை -விவேக சர ஜாலத்தாலே சமிப்பித்து
அரவத் தமளியினோடும் அரவந்தப் பாவை தன்னோடும்
பேரேன் என்று என் நெஞ்சு நிறையும் படி புகுந்து இருக்கிறவன் -என்கிறார்-
அன்று –
ஜன ஸ்தானத்திலே இருக்கிற வன்று
ரஷகனாவன் ரஷ்யத்தை நோக்கக் கடவதாக வந்து நின்ற அன்று –
நேர்ந்த நிசாசரரை –
அக வாயில் இருட்சியே யன்றிக்கே -சர்ப்பம் உணர்த்தி யற்று ராத்ரியிலே புறப்படுமா போலே
பர ஹிம்சைக்கு ஏகாந்தமான காலத்திலேயே வந்து எதிர்ந்த கர தூஷணாதி ராஷசரை
நேர்ந்த நிராசரர் என்கையாலே விபீஷணாதிகளை வ்யாவர்த்திக்கிறது
அன்று நேர்ந்த நிசாசரர் –
தே தம் சோம மிவோத்யந்தம் த்ருஷ்ட்வா வை தர்ம சாரிண
மங்களாநி பிரயுஜ்ஞாநா ப்ரத்ய க்ருஹ்ணன் த்ருடவ்ரதா -என்றும் –
ராமோ ராமோ ராம இதி ப்ரஜா நாம பவன் கதா
ராம பூதம் ஜகத் பூத் ராமே ராஜ்யம் ப்ரஸா சதி -என்றும்
அநுகூல ப்ரதிகூல விபாகம் அற இவனைக் கண்ட மனுஷ்யர் மங்களா சாசனம் பண்ணுவார்-
அடைவு கெட வாய் புலத்துவார் ஆகிற காலத்திலே -இவர்கள் இங்கனே சிலர் எதிர்த்து
நசித்துப் போவதே என்று வருந்துகிறார் இவர் –
ராமோ ராமோ ராம இதி -பாதம் தலைக் கட்டுகையாலே மீளுகிறது இத்தனை என்று இறே நிர்வஹிப்பது –
இத் த்ரைவியத்துக்கு பொருள் –
ரூப ஔதார்ய குணங்களை வென்ற வடிவழகும் –
அத்தை அநுபவிக்கக் கொடுக்கையும் –
கொடா நின்றால் இறுமாப்பு அற்று இருக்கையும் –
பும்ஸாம் தாருண் யஞ்ச -என்று ஸ்த்ரி பும்ஸ விபாகம் அற ப்ரவணராம் ஆகாரம்
உண்டாய் இருக்கையாலே வீத ராகரைச் சொல்லுகிறது
ப்ராப்த விஷய ப்ராவண்யம் இறே ஜிதேந்த்ரியத்வம் ஆகிறது-
ப்ரஜாநாம் -மாதா பிதாக்கள் அன்று -வசிஷ்டாதிகள் அன்று -ஜனி தர்மாக்காளுக்கு
கதா -லோக யாத்ரைக்கு உறுப்பாம் வார்த்தைகளும் பெருமாளைப் பற்றி அல்லாது இராதே
ராம பூதம் ஜகத் பூத் -ஜகம் அடைய ராமாத்வைதம் ஆய்த்து
ஜகதா தம்யமிதம் சர்வம் என்கிற பொது அல்ல
ராம பூதம் -என்று ராமாத்வைதம் ஆய்த்து -ப்ரஹ்ம அத்வதைத்தை வ்யாவர்த்திக்கிறது
பெருமாள் சுண்டு விரல் கொண்டு லீலா ரசம் அனுபவிக்கிற காலத்திலேயோ -என்னில்
ராமே ராஜ்யம் ப்ரஸாஸ தி -தஹ பச -என்கிற காலத்தில்-
அன்று –
இப்படி எல்லாரும் ஒக்க ப்ரவணர் ஆகிற அன்று –
நேர்ந்த நிசாசரரை
இவ்வடிவழகிலே தோற்று விழாதே -சர சச்த்ரங்களைக் தூவிக் கொண்டு வந்து எதிர்ந்த ராஷசரை
கவர்ந்த –
மாரீச சுபாஹூ த்வத்துக்கு அப்பால் ஓர் இரை பெறாதே கிடக்கிறது ஆகையாலே இரை
பெறாத சர்ப்பம் போலே எதிரிகள் மேல் விழுந்து க்ரசித்த படி-
வெங்கணை
அவன் தன்னைப் போலே யாய்த்து அம்புகளும் -இருப்பது –
தீப்த பாவக சங்காசை சிதை காஞ்சன பூஷணை -என்கிறபடியே தொடுக்கிற போது
அம்பாய் -எதிரிகள் மேலே போய் விழும் போது எரிகிற காலாக்நி போலே யாய்த்து விழுவது-
நத்வாம் இச்சாம் யஹம் த்ரண்டும் ராமேண நிஹதம் சரை -என்று
தயரதன் பெற்ற மரகத மணித் தடத்திலே புக்கு ஸ்ரமம் தீர மாட்டாதே சாவை காண
மாட்டு கிறிலேன் -சரங்கள் ஆண்ட தண் தாமரைக் கண்ணனுக்கு அன்றி என் மனம் தாழ்ந்து
நில்லாதே -என்கிறபடியே
நீயும் நானும் கூடி -இலங்கை பாழாளாக படை பொருதானுக்கு பல்லாண்டு கூறுவாராய்
ஆள் படப் போகாதே -என்றான் இறே விபீஷணன்
வெங்கணை –
வெஞ்சிலை யினின்றும் புறப்படுகிறவை ஆகையாலே வெங்கணை யாய் இருக்கும் இறே
அவன் அனுகூலருக்கு -புனலுருவாய்-பிரதி கூலருக்கு அனலுருவாய் -இருக்குமா போலே
பொன் எழுதின பகழிகளும் தானுமாய் இருக்கையாலே பிரதிகூலருக்கு பயங்கரமாய்த்து இருப்பது -இச் சரங்களும்
ஆக -உவந்த உள்ளத்தனாய் உலகம் அளந்து அண்டமுற நிவர்ந்த நீண் முடியன் -என்று
கோ குணவான் -என்று பிரதம ப்ரஸ்னமாய் -ஆஸ்ரயணீயமான சீல குணத்தை சொன்னாராய்
அன்று நேர்ந்த நிசாசரரை கவர்ந்த வெங்கணை காகுத்தன் -என்று -அநந்தரமாக –
கச்ச வீர்யவான் -என்று சொன்ன விரோதி நிரசனத்துக்கு உறுப்பான வீர குணங்களைச் சொல்லுகிறார் –
ஆக -மாம் -அஹம் -என்கிற இரண்டின் உடைய அர்த்தமும் அனுசந்தித்தாராய் விட்டது –
உலகம் அளந்து -என்று திருவடிகள் விக்ரமித்தபடியை சொல்லி
கவர்ந்த வெங்கணை காகுத்தன் -என்று திருத் தோள்கள் பராக்ரமித்தபடி சொன்னார் –
காகுத்தன் -இந்த இரண்டு குணமும் உபய விபூதி நாதத்வ ப்ரயுக்தம் அன்று –
ககுஸ்த வம்சத்திலே பிறந்து படைத்தான் ஆகையாலே ஔத்பத்திகம் என்றபடி –
ஆக -கர தூஷணாதிகளை -சிலையால் வாளி பொழிந்த படி சொல்லிற்று –
கடியார் பொழில் அரங்கத்தம்மான் –
திரு உலகு அளந்து அருளினதால் வந்த ஸ்ரமமும் -ஜனஸ்தானத்தில் ராஷச வதம்
செய்து அருளின ஸ்ரமமும் ஆறுகைகாக -பரிமள பரிதமான சோலையை உடைத்தாய் –
கோயிலிலே வந்து -அந்த திருவடிகளையும் திருத் தோள்களையும் நீட்டிக் கொண்டு சாய்ந்தான் –
பரிவராய் இருப்பர் -கொடியார் மாடக் கோளூர் அகத்தும் புளிங்குடியும் மடியாது இன்னே
நீ துயில் மேவி மகிழ்ந்தது தான் -அடியார் அல்லல் தவிர்த்த வசைவோ அன்றேல்
இப்படி தான் நீண்டு தாவிய வசைவோ பணியாயே -என்று நீ இங்கு வந்து ஹிரண்ய ராவணாதிகளை
நிரசித்ததால் வந்த ஸ்ரமம் தீரவோ -த்ரை லோகத்தையும் அளந்து கொண்ட ஆயாசத்தால்
வந்த ஸ்ரமம் தீரவோ -பணியாய் -உன் ஸ்வரம் கொண்டு நாங்கள் அறியும்படி சொல்லாய்
என்றார்கள் இறே
பிள்ளாய் -கிடக்கும் போது ஒரு மூலையில் ஒருவரும் அறியாதே கண் வளர்ந்து அருளினால் ஆகாதோ
இன்னமும் அவர்கள் மறு கிளை கிளைத்து அவன் எங்கே என்று தேடிக் கொடு வரிலும்
கொடி கட்டிக் கொண்டு கிடக்க வேணுமோ -என்று வயிறு பிடித்தார் இறே
அது போலும் அல்ல கிடீர் இவன் கண் வளர்ந்து அருளுகிறபடி என்கிறார் இவர்-
கொடிகள் த்ருஷடி கோசரம் ஆனால் இறே அவன் கிடக்கிறபடி அறியல் ஆவது
இது அங்கன் அன்றே -தூராத் கந்தோ வாதி -என்கிறபடியே தூரஸ்தரையும் அழைக்குமது இறே
சர்வ கந்த வஸ்து கண் வளர்ந்து அருளுகையாலே -கடியார் பொழிலாய் இருக்கும் இறே
திருச் சோலையில் பரிமளம் விடாயருக்கு சிசிரோபசாரம் ஆம்படி
அரங்கத்தம்மான்
அவதாரத்துக்கு பிற்பாடார் ஆனாரும் இழவாதபடி இங்கு வந்து கண் வளர்ந்து அருளுகிறது
ப்ராப்தி யாலே இறே –
ஆக -இத்தால் போக்யதை சொல்லிற்று-
அரைச் சிவந்த வாடையின் மேல் –
மேக ஸ்யாமமான திருவரைக்கும் பரபாக ரஸ அவஹமான திருப் பீதாம்பரத்தின் மேல்
சிவந்த வாடையின் மேல் சென்றதாம் –
சோற்றிலே எனக்கு மனம் சென்றது -என்னுமா போலே ஆச்சர்யப் படுகிறார்
என் சிந்தனையே –
ஆருடைய கூறை வுடை கண்டு உகக்கக் கடவ நெஞ்சு இதிலே யகப்பட்டது –
த்ருஷ்டத்திலே லோக கர்ஹிதமாய் -அத்ருஷ்டத்திலே வென் நரகிலே தள்ளவும் கடவதான
உடைகளிலே பிரவணமான என் மனஸ் -த்ருஷ்டத்தில் ஆகர்ஷகமாய் -அத்ருஷ்டத்தில் சதா
பஸ்யந்திக்கு விஷயமான திருப் பீதாம்பரத்திலே விழுந்து நசை பண்ணா நின்றது –
என் சிந்தனை –
திருவடிகளின் சுவடு அறிந்து பின்பு புறம்பு போக மாட்டாத நெஞ்சு
தீர்த்த மாடா நிற்க துறையிலே பிள்ளையைக் கெடுத்து திரு ஒலக்கத்திலே காண்பாரைப் போலே
திருவடிகளில் நின்றும் திருப் பீதாம்பரத்திலே கண்டபடி
மனஸ் -என்னாதே சிந்தனை -என்றது சிந்தா விசேஷத்தை பற்ற-
இத்தால் –
திரு உலகு அளந்து அருளினவற்றையும் ராமாவதாரத்தையும் பெரிய பெருமாள் பக்கலிலே
ஒரோ வகைகளிலே காண்கிறார்-
ஆக -கீழ் -கமலபாதம் வந்து என் கண்ணினுள்ளன -என்று தானே முற்பாடனாய் வந்து
விஷயீ கரித்த படியாலே சாதன பாவம் சொல்லிற்று –
சென்றதாம் -என்று தம் திரு உள்ளம் மேல் விழுந்ததாகச் சொல்லுகையாலே அதிகாரி ஸ்வரூபம் சொல்லுகிறது -இங்கு
கீழ் -நீண் மதிள் அரங்கம் -என்று ரஷகத்வம் சொல்லிற்று –
கடியார் பொழில் அரங்கம் -என்று போக்யதை சொல்லுகிறது -இங்கு
ஆக இப்பாட்டால் -முதல் பாட்டில் -நிமலன் நின்மலன் -என்று அபேஷா நிரபேஷமாக
உபகரிக்கும் சுத்தியை உடையவன் என்றதாய்த்து சொன்ன அர்த்தம் கூடுமோ என்ன
கூடும் என்னும் இடத்துக்கு உதாஹரணம் சொன்னாராய் நின்றது –
—————————————————
ஸ்ரீ வேதாந்த தேசிகர் முநி வாஹன போகம் -வியாக்யானம் –
உவந்த உள்ளத்தனாய் –
மஹா பலியால் அபஹ்ருதமான ராஜ்யத்தை மீட்டுத் தர வேண்டும் என்று இந்த்ராதிகள் இரக்க –
உதாரா சர்வ எவைதே -என்கிறபடி -இவர்கள் பக்கலிலே ப்ரீதமான திரு உள்ளத்தை உடையனாய்
அசுரனே யாகிலும் ப்ரஹ்லாதனோடு உண்டான குடல் துவக்கும் பாவித்து
ஆநுகூல்ய மிஸ்ரனான மஹா பலியை அழியச் செய்ய நினையாதே அவனுடைய ஔதார்யத்துக்கு
அநுகூலமாக தான் இரப்பாளானாக சென்று -அவன் கொடுக்க வாங்கு கையாலே
அவன் அளவிலும் அனுக்ரஹ உக்தனாய் அபேஷா நிரபேஷமாக எல்லார் தலையிலும்
தன் திருவடிகளை வைக்க விலக்காத அளவாலும் சர்வ விஷயத்திலும் உவந்த உள்ளத்தனாய்
உலகம் அளந்து –
அளவு பட்டுக் கொடுத்தோம் என்று இருக்கிற அசுரன் முன்னே எல்லா லோகங்களையும்
தன் திருவடிகளாலே அளவு படுத்தி –
அண்டமுற நிவர்ந்த நீண் முடியன் –
மேலே கவித்த கநக சத்ரம் போலே இருக்கிற ப்ரஹ்மாண்டத்திலே கிட்டும்படி
விஜ்ரும்பித்த பெரிய திரு அபிஷேகத்தை உடையவன் -அவன் தன்னைப் போலே
திரு அபிஷேகத்துக்கும் அவனோடு ஒக்க வளருகைக்கு ஈடான மஹிமாவும் உண்டு
கர்ம வஸ்யதை தோற்றும்படி பிறவி தொடக்கமாக சடையும் குண்டிகையும் சுமந்து திரிகிற
பரிச்சின்நேஸ்வரர் பார்த்து நிற்க இப்படி முடி சூடி நிற்கையாலே உபய விபூதி நிர்வாஹகத்வமும் அபிவ்யக்தமாய் ஆகிறது
இத் த்ரி விக்ரம அபதானம் சொன்ன இத்தாலே ஈஸ்வர சங்கா விஷயமான
இந்த்ராதிகள் இரப்பாளரான படியும் -குறை கொண்டு நான்முகன் -இத்யாதிகளில் படியே ப்ரஹ்மா
திருவடி விளக்கி ஆராதனானபடியும் -ருத்ரன் தீர்த்த பிரசாதம் பெற்றுப் பூதனான படியும் சொல்லிற்று ஆயிற்று
இத்தால் முன் பாட்டில் சொன்ன இஷ்ட ப்ராபகத்வத்தையும் உதாஹரித்ததாய் -இனி –
அநிஷ்ட நிவர்த்தகத்வத்தையும் உதாஹரிக்கிறார் –
அன்று நேர்ந்த நிசாசரரை கவர்ந்த வெங்கணை காகுத்தன் –
தேவர்களுக்கும் ரிஷிகளுக்கும் குடி இருக்க ஒண்ணாத படி த்ரைலோக்ய ஷோபம் பிறந்து –
தேவர்கள் சரணாகதராக ஆன அன்று -சக்கரவர்த்தி திருமகனாய் அவதரித்து தாடகா தாடகேய
விரோத கபந்த கர தூஷணாதிகளை நிராகரித்து இலங்கைக்கு பரிகையான லாவணார்ணவத்தை
பர்வதங்களாலே பண்பு செய்து கொம்பிலே தத்தித் திரியும் குரங்குப் படையைக் கொண்டு
இலங்கையை அடை மதிள் படுத்தின அன்றும்
பெருமாளுடைய பிரபாவம் அறியாதே விளக்கு விட்டில் போலே வந்து எதிர்ந்த பகல் போது
அறியாத கூட யோநிகளை எல்லாம் எனக்கு எனக்கு என்று இரையாக கைக் கொண்ட-
தீப்த பாவக சங்காசங்களான திருச் சரங்களை உடையவனாய்
வெங்கதிரோன் குலத்துக்கோர் விளக்காய் நின்றவன் –
காகுத்தன் –
மாயாவிகளான ராஷசரும் கூட மோஹிக்கும்படி மனுஷ்ய பாவத்தை முன்னிட்டு நின்றவன்
காகுத்தன் –
கடியார் பொழில் அரங்கத்தம்மான்
ஸூ ரிகள் முதலாக ஸ்தாவர ரூபங்களைக் கொண்டு நித்ய ஆமோதராய் நிற்கிற
ஆராமங்களாலே சூழப்பட்ட கோயில் ஆழ்வாருக்குள்ளே பிரஹ்மாதிகள் ஆராதிக்க
சர்வ ஸ்வாமித்வம் தோற்றக் கண் வளர்ந்து அருளுகிற பெரிய பெருமாளுடைய –
அரைச் சிவந்த வாடையின் மேல் –
படிச் சோதி யாடையொடும் பல்கலனாய் நின் பைம் பொற் கடிச் சோதி கலந்ததுவோ
என்னும்படி திகழா நின்ற திரு வரையிலே -மது கைடப ருதிர படலத்தாலே போலே
பாடலமாய் மரகத கிரி மேகலையில் பாலாதபம் பரந்தாப் போலே இருக்கிற திருப் பீதாம்பர விஷயமாக
சென்றதாம் என் சிந்தனையே –
அநாதி காலம் அநு சித விஷயங்களில் ஓடி-அவர்கள் ஆடையிலே கட்டுண்ட என் சிந்தை
இவன் திருவடிகளைப் பற்றி என்னாலும் மீட்க ஒண்ணாதபடி திருப் பீதாம்பரத்திலே சென்று-துவக்குண்டது
என் சிந்தனை சென்றதாம் -என்கையாலே ஆச்சர்யம் தோற்றுகிறது
சென்றது –
நாம் ப்ரேரிக்க போந்த தன்று
விஷய வைலஷண்யத்தாலே ஆக்ருஷ்டமாயிற்று –
———————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply