அருளிச் செயல் அனுபவம்-இங்கும் அங்கும் –அமலனாதிபிரான் —ஸ்ரீ வேளுக்குடி வரதாசார்யர் ஸ்வாமிகள் .

211
திருக் கமல பாதம் வந்து -1-…..ஆடையின் மேல் சென்றதாம் என் சிந்தனையே -2-
நின் பாதமே சரணாக தந்து ஒழிந்தாய் -திருவாய்மொழி-5-7-10-…. …கழல்களையே  சரணாக கொண்ட -5-8-11
வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய் –புகுந்ததற் பின் வணங்கும் என் சிந்தனைக்கு இனியாய் -பெரிய திருமொழி -3-5-1

ஈன்று அணித்தான நாகு தனது கன்றுக்கு வாசனை இல்லாமையாலே முதலிலே
தானே தனது முலையை அதன் வாயில்  கொடுக்கும் –
பின்பு சுவடு அறிந்து  கன்று தானே இது  காற்கடை கொள்ளிலும் மேலே விழும் இறே
இத்தால் சேதனன் அடையும் ஷேமங்கள் எல்லாம் அவன் கிருஷி பலன்-
ஈஸ்வரஸ்ய ஸுஹார்த்தம் -என்னக் கடவது இறே

——————————————————————————-

212-
அடியார்க்கு என்னை ஆட் படுத்த விமலன் -1-
அமரர் தம் கோனார்க்கு ஒழியக் கோவர்தனத்துக்கு செய்தான் -பெரிய திரு மொழி -4-2-3-

தான் சேஷித்வத்தின் எல்லையில் நின்று என்னை சேஷத்வத்தின் எல்லையில் நிறுத்தி அருளினான் –
தனக்கு அடிமைப் பட்டவனை ததீய சேஷத்வத்தில் நிலை நாட்டி அருளினான் –
தனது அபிமானத்தில் ஒதுங்கின இடையர்களை ஸ்ரீ கிருஷ்ணன் அந்ய சேஷமாக்காதபடி நோக்கி
திருமலை ஆழ்வாருக்கு சேஷமாக்கினான் -இப்படி பகவான் செய்யும் சேமத்தை கூறி ஆழ்வார்கள் ஆனந்திக்கிறார்கள் –

—————————————————————————

213
விண்ணவர் கோன் –வேங்கடவன் ..அரங்கத் தம்மான் -1-
ஆடும் கருளக் கொடி  உடையார் –நல்  வேம்கட நாடர் வந்து -நாச்சியார் திருமொழி -10-5-

பரம பதத்தில் நின்றும் கோயில் ஏற வருகைக்கு என்று தங்குகிற தேசம் திருமலை
ஆடும் -பரம பதம் கலவி இருக்கையாய் இருக்க அத்தை விட்டு திருமலையிலே வந்து
முகம் காட்டினார் -ஸ்ரீ வில்லி புத்தூரில்  போலே இருந்தது பயணம் –

———————————————————————————-

214
உலகம் அளந்து நீண் முடி -2
நீண்ட தோள் சென்று அளந்தது -இரண்டாம் திருவந்தாதி -61

ஒரு காலும் எண் மதியம் கடந்து -என்று திருவடிக்கு வளர்த்தி சொல்ல –இருக்க -திரு முடிக்கு அருளியது
ப்ராப்தமான திருவடிகள் என்று தோற்ற நீண்ட தோள் என்கிறார் பூதத் ஆழ்வாரும்-

————————————————————————————–

215-
அன்று நேர்ந்த நிசாசரர் -2
திகைத்த அரக்கர் -திருவாய் மொழி -8-6-2-

ராமோ ராமோ ராம இதி பிரஜாநாம பவன் கத ராமபூதம் ஜகத் பூத் ராமே ராஜ்ஜியம் பரசாசதி – என்றும்
ஸ்த்ரியோ வருத்தா தருண்யா ச ராம்ச யாரததே -என்றும்
அநு கூல பிரதிகூல விபாகமற இவனைக் கண்டவர் மங்களா சாசனம் பண்ணுவர் -அடைவு கெட வாய் புலத்துவார்
காலத்திலேயே சில அரக்கர்கள் இங்கனே எதிர்த்து நசித்துப் போவதே –
சக்கரவர்த்தி திருமகனை வெல்லலாம் என்று நினைத்த மதி கேடரான அரக்கர்கள் –

—————————————————————————————–

216-
நீண் முடியன் -2-
மலர் புரையும் திருவடி -திரு நெடும் தாண்டகம் -5-

திரு விக்ரமனின் திருமுடி விகாசத்தையும்
திருவடி விகாசத்தையும் அனுபவிக்கிறார்கள் –

—————————————————————————————

217
வேங்கட மா மலை …அரவின் அணையான் -3
பைத்த பாம்பணையான் திருவேம்கடம் -திருவாய் மொழி -3-3-10-

அரவின் அணையான் தான் திரு வேம்கடத்தான் என்று ஆழ்வார்கள் அனுபவித்த படி –

————————————————————————————

218
எழில் உந்தி -3-
காமனைப் பயந்த காளை -திருவாய் மொழி -10-2-8-

எழில் உந்தி -என்று இளகிப் பதிக்கை-பிரசவாந்தம ச யௌவனம் -என்கிறபடி அன்றிக்கே இருக்கை-
பிரமனை உண்டாக்கிய பின்பும் ஒளியும் அழகும் மிக்கு -யோ ப்ரஹ்மானாம் விததாதி தம ஹ தேவம – விளங்குகிறான் –
பயந்த என்று பிரசவத்தை சொல்லி
காளை -என்று யௌவனத்தை கூறினார் இறே –

—————————————————————————————–

219
அந்தி போல் நிறத்து -3-
அந்தியம் போதில் அரி உருவாகி -திருப் பல்லாண்டு -6-

அரங்கனுடைய திருப் பரிவட்டத்தின் நிறத்தை -அந்தி சந்த்யை -ப்ராத சந்த்யை –சாயம் சந்த்யை
ஆஸ்ரிதர் அஞ்ஞான அந்தகாரம் கழிக்க வல்ல சம்யக் ஜ்ஞ்ஞான சூர்யோததுக்கு பூர்வ சந்த்யை போலேயும் –
அவர்களுடைய தாப த்ரயங்களைப் போக்க வல்ல பச்சிம சந்த்யை போலேயும் -செவ்வரத்த உடையாடை –
தேவர்களுக்கு பலம் ஷீணமாயும் அசுரர்களுக்கு பலம் வர்த்திக்கும் காலம் -நர சிம்ஹ அவதார காலம் –

——————————————————————————————–

220-
மந்தி  பாய் வட வேங்கடம் -அரங்கத்து அரவின் அணையான் –3
செழும் கொழும் வேம்கடத்துள் குடந்தை -திருச் சந்த விருத்தம் -60-

வடக்கு வாசலாலே வந்து புகுந்து படுக்கையிலே சாய்ந்து அருளினான் –
நிலையார நின்றான் என்று நின்ற அழகில் துவக்கு உண்பார்க்கு திரு மலையிலே நின்று அருளியும் –
கிடந்ததோர் கிடைக்கை -என்று கிடை அழகில் துவக்கு உண்பார்க்கு திருக் குடந்தையிலே கண் வளர்ந்து அருளியும் –
திரு வேம்கடத்தான் திருமலையில் நின்று திருக் குடந்தையிலே சாய்ந்து அருளினான் –

——————————————————————————————-

221
முற்றும் உண்ட கண்டன் -6
நீடு உலகு உண்ட திறங்கிளர்வாய -திருவாய்மொழி -6-6-3
எஞ்சாமல் வயிற்று அடக்கி -பெரிய திருமொழி -2-10-1-

சேஷ பூதனுக்கு கைங்கர்யம் தாரகமாய் இருப்பது போலே
இவற்றின் ரஷணம் இவனுக்கு தாரகமாய் இருக்கும் –
உலகு உண்ட திறங் கிளர்வாய-ரஷகத்வ ப்ரகாசகமான திரு வதரம் -வையம் ஏழும் கண்டாள் பிள்ளை வாயுளே –
வயிற்று அடக்கி-பிரளய ஆபத்தில் உலகத்தை வாயாலே உட் கொண்டு கண்டத்தின் வழியாக திரு வயிற்றிலே வைத்து நோக்கினான் –
நிரபேஷ ரஷகத்வம் -இப்படி ஆழ்வார்கள் அனுபவிக்கிறார்கள் –

———————————————————————————————-

222-
ஆதிப் பிரான் -8
ஆதி மூர்த்தியை -திருவாய் மொழி -5-3-1-

தான் முற் கோலி உபகரிக்குமவன் -பிரகலாதனுடைய விரோதியை முற் பாடனாய் சென்று
போக்கின உபகாரத்தை நினைத்து சொல்லுகிறார் -ஆதிப் பிரான் என்று –
நம்மோட்டை கலவிக்கு அவன் முற் பாடனாகச் செய்தே பிரிவில் ஆற்றாமைக்கு நான் பிற்பாடை யாகவோ –
ஆழ்வாருடைய ஆன்ம ஷேமத்துக்கு அவன் முற்பட்டமை -ஆதி -என்று கூறப் பட்டது –

——————————————————-

223-
கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் -கொண்டல் வண்ணனாய் என் உள்ளம் கவர்ந்தான் -10
ஏனமாய் நிலம் கீண்ட என் அப்பனே கண்ணா -திருவாய்மொழி -5-7-6-

கோவலனாய் வெண்ணெய் உண்டானைப் போலே
கொண்டல் வண்ணனாய் என் உள்ளம் கவர்ந்தான் –
யசோதை பிராட்டி வெண்ணெயில் பண்ணின ஸ்ரத்தையை -என் நெஞ்சிலே பண்ணி அனுபவித்தவன்
வைத்த குறி அழியாது இருக்க வெண்ணெய் குடி போனாப் போலே ஆய்த்து இவர் உடம்பு இருக்க அகவாய் குடி போனபடி –
வெண்ணெய் விழுங்கி வெறும் கலம் ஆக்கினால் போலே -உள்ளம் கவர்ந்து வெறும் உடம்பு ஆக்கினான் –
ஏனமாய -பிரளயம் கொண்ட பூமியை மகா வராகமாய் எடுத்தாய்
ஸ்ரீ கிருஷ்ணனாய் சம்சார பிரளயம் கொண்ட என்னை எடுத்தாய் –
திருப் பாண் ஆழ்வார் திரு உள்ளத்தை மணாளன் அரங்கன் கவர்ந்தான் –
இது தனக்கு திருஷ்டாந்தம் ஸ்ரீ கிருஷ்ண நவநீத சௌர்யம்
ஆழ்வார் சம்சார ஆரணவம் அமுங்கி கிடக்க பகவான் உத்தாரணம் செய்து அருளினான்
இதுக்கு திருஷ்டாந்தம் ஸ்ரீ வராஹ பூமி உத்தாரணம் -என்றது ஆயிற்று –

————————–

313
மதுர மா   வண்டு பாட மா மயில் ஆட -அமலனாதி பிரான் -4
வண்டு பலவிசை பாட மயிலாலு -பெரிய திருமொழி -3-9-3-
மயில் நடமாட வண்டு தான் இசை பாடிடும் -பெரிய திருமொழி -4-2-3-

——————-

314-
கோவலனாய் வெண்ணெய் உண்ட -அமலனாதி பிரான் -10
நெய் பருக நந்தன் பெற்ற -பெரிய திருமொழி -5-5-3-

———————————————————————————————

ஸ்ரீ கோயில்  கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருப் பாண் ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

One Response to “அருளிச் செயல் அனுபவம்-இங்கும் அங்கும் –அமலனாதிபிரான் —ஸ்ரீ வேளுக்குடி வரதாசார்யர் ஸ்வாமிகள் .”

  1. v. s. thirumalai Says:

    ப்ராப்யன் – பகவான், ப்ராப்தா – ஜீவாத்மா சரி. ப்ராப்யன் மற்றும் ப்ராப்தாவுக்கு சரியான தமிழ் அர்த்தம் என்ன?

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading