மையார் கரும் கண்ணி கமல மலர் மேல்
செய்யாள் திரு மார்வினில் சேர் திருமாலே !
வெய்யார் சுடர் ஆழி சுரி சங்கம் ஏந்தும்
கையா ! உன்னைக் காணக் கருதும் என் கண்ணா –9-4-1
ஹிரண்ய வர்ணாம் ஹரிணீம்-
மை தீட்டி கொண்டு
சுமங்கலி லட்சணம்
இயற்கையிலே கரும் கண்ணி
செய்யாள்-
அவள் சேர்ந்த திரு மார்பு கொண்டவனே
பெரும் தேவி பேர் அருளாளன்-மகா தேவி-வேதம் சொல்லும் சொல்
கண்ணே ! உன்னைக் காணக் கருதி என்நெஞ்சம்
என்னே கொண்ட சிந்தையதாய் நின்றி இயம்பும்
விண்ணோர் முனிவர்க்கு என்றும் காண்ப பரியாயை
நண்ணாது ஒழியேன் என்று நான் அழைப்பனே –9-4-2
கண்ணால் பார்க்க படும் கண்ணே -கொஞ்சுகிறார்
எண்ணிக்கை-எண்ணே கொண்ட –
என்று உன்னை காண்பேன்-நாளை -எண்ணி-இதே சிந்தை
அனைவரும் கூட்டமாக நிற்க-
துருவன்-நரி -இந்த பழம் புள்ளிக்கும் -இல்லை – ஹரி அவன்
அழைக்கின்ற அடி நாயேன் நாய் கூழை வாலால்
குழைக் கின்றது போல என்னுள்ளம் குழையும்
மழைக்கு அன்று குன்றம் எடுத்து ஆநிரை காத்தாய் !
பிழைக் கின்றது அருள் என்று பேதுருவேனே–9-4-3
அடியேன் நாயேன்-நாயாகிய அடியேன்
சந்தோசம் ஆசை பட முடியாத கூழை வாள் கொண்ட நாய்- திட பக்தி இல்லாதவன்
அபிமதம் ருசியை தெரிவிக்க வால்
மனசானது நோவு பட நின்றது ஆசை சொல்ல தெரியாமல் இருக்கிறேன்
உறுவது இது என்று உனக்கு ஆள் பட்டு நின் கண்
பெறுவது எது கொல் என்று பேதையேன் நெஞ்சம்
மறுகல் செய்யும் வானவர் தானவர்க்கு என்றும்
அறிவது அரிய அரியாய அம்மானே ! –9-4-4
மலை கூட தூக்கி காப்பாயே
கைங்கர்யம் செய்து பெறுவது என்ன-
சொரூபத்தையும் உணர்ந்து -கைங்கர்யம் செய்வதே சொரூபம்
கைங்கர்யமே சீரியது என்று அறிந்து
ஈஸ்வரன் அநந்ய பிரயோஜனருக்கு வேறு ஒன்றும் கொடுக்க மாட்டான் என்று அறிந்து
இப்படி கேட்பதற்கு
ஹேது என் ?
கிரமத்தில் செய்கிறேன் என்று சம்சாரத்தில் இருப்பே போருக்க முடியாமல்
-முசுகுந்தன்-யோகேஸ்வரன் படுத்து இருக்க -இவனே நாரில் சென்றதும்
கால நேமி-அம்சம் கண்ணன் அறிந்து -ஆச்சார்யர் வார்த்தை சத்யம் –
வரம்-தவ பாத சேவை ஒன்றுமே வேண்டும் -மடியில் வைக்காமல்
பத்ரி காஸ்ரமத்தில் யோகம் பண்ணி அடுத்த ஜன்மாவில் வந்து சேர அருளினான்
அது போல் உன் மனத்தால் என்ன நினைந்து இருகிறாய் என்று பேதையேன் நெஞ்சு மறுகல் செய்யும்
நரசிம்கன்-சொல்வது
பிரகலாதனுக்கு -வானவர் தானவர் இருக்க
தூக்கி மடியில் வைத்து கொள்வார்
பிர பன்னனுக்கு கிட்டுமே
அது யோகேச்வரனுக்கு என்று உணர்ந்தார்
அரியாய அம்மானை அமரர் பிரானை
பெரியானைப் பிரமனை முன் படைத்தானை
வரி வாள் அரவின் அணைப் பள்ளி கொள்கின்ற
கரியான் கழல் காணக் கருதும் கருத்தே –9-4-5
பிரகலாதனை ரட்ஷிதது போல்
தானே கவசமாக இருந்து
அவன் நண்பன் அனைவரையும்-மடியில்
துர் லபன்-சுலபன்
வந்தாய் போல் வாராதே வாராதே போல் வருவான்
ஆழ்வார் பாசுரம் சொல்லி சம்பந்தம் பெற்று என்ன கவலை
கருத்தே !உன்னைக் காணக் கருதி என்னெஞ்சத்து
இருத்தாக இருத்தினேன் தேவர்கட்கு எல்லாம்
விருத்தா ! விளங்கும் சுடர் சோதி உயரத்
தொருத்தா ! உன்னை வுள்ளும் என்னுள்ளம் உகந்தே–9-4-6
கருத்தே லஷியம்
அப்படியே கூப்பிடுகிறார்
ஆசையே சாதனை உன்னை நெஞ்சில் வைத்து
தேவர்களுக்கு விருத்தா முற் பட்ட பரம் ஜோதி
உகந்தே உன்னை நினைக்கும்
உகந்தே யுன்னை உள்ளும் என்னுள்ளத்து அகம் பால்
அகந்தான் அமர்ந்தே இடம் கொண்ட அமலா !
மிகுந்தானவன் மார்வகலம் இரு கூறா
நகந்தாய் ! நரசிங்க மதாய வுருவே !–9-4-7
உன்னை தியானம் செய்வதே உகப்பு
சதா ஆத்மா பிரசாதம்
உருவாகிய ஆறு சமயம் கட்கு எல்லாம்
பொருவாகி நின்றானவன் எல்லாப் பொருட்கும்
அருவாகிய ஆதியை தேவர்கட்கு எல்லாம்
கருவாகிய கண்ணனைக் கண்டு கொண்டேனே –9-4-8
வேறு ஊன்றி பலசமயம்
சர்வ தேவ நமஸ்காரம் கேசவம் பிரதி கச்சதி
வைதிக /அவைதிக சமயம் பல
சாணக்கியம்-பிரகிருதி / யோகம் -/மீமாம்சை -கர்மா –சைவர்
இஷ்ட தெய்வ பலன் கொடுக்கும் பரனும் அவனே அவர் ரூபமாக
சாஷி போல் இருந்து பலன்
அங்க பூஜை போல் -அங்கி-பரமாத்மா -பொதுவாகி நிற்கிறான்
காரண வஸ்து அவன்தானே கருவாகி
கண்டு கொண்டு என் கண்ணினை யாரக் களித்து
பண்டை வினையாயின பற்றோடு அறுத்து
தொண்டர்க்கு அமுது உண்ணச் சொல் மாலைகள் சொன்னேன்
அண்டத்து அமரர் பெருமான் அடியேனே –9-4-9
பார்த்து விட்டேன்-திடமாக ஆழ்வார்
சாஷாத் கார அனுபவம்
கர்ம வினைகள் வாசனை உடன் -போயின
பிராயச்சித்தம் வாசனை போக்காது
யானை குளிப்பாட்டுவது போல்
பாப்பம் பண்ணும் புத்தியும் போகணும்-பாப்பம் மட்டும் போனால் போதாது
கிருஷ்ண பக்தி அருளால் தான் சுத்த சித்தி வரும்
திரு வாய் மொழி-இதை எல்லாம் பண்ணி அமுது போலவும் இருக்கும்
நித்யர் தலைவர்-ஆழ்வார்
அடியான் இவன் என்று எனக்கு ஆர அருள் செய்யும்
நெடியானை நிறை புகழ் அம் சிறை புள்ளின்
கொடியானை குன்றாமல் உலகம் அளந்த
அடியானை அடைந்து அடியேன் உய்ந்தவாறே ! -9-4-10
நான் பெற்ற பேரு அனைவரும் பெற வேண்டும்
உலகம் அளந்த கருட கொடி கொண்டவன் அடைந்த அடியேன்
உய்ந்தது போல் -நமக்கு புருஷ காரமாக நடுவில் நிற்கிறார்
எனக்கு அருள் செய்தே ஆவான்- எனக்கு அடியார் ஆக இருந்தீர்கள் என்றால்
உண்ணும் சோறு கண்ணன் தானே எனக்கு
திரு வாய் மொழி சேவிப்பதே நீ எனக்கு செய்யும் கைங்கர்யம்
நாமும் பேரு பெற வழி காட்டுகிறார்
ஆறா மத யானை அடர்த்தவன் தன்னை
சேறார் வயல் தென் குருகூர் சடகோபன்
நூறே சொன்ன ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்
ஏறே தரும் வானவர் தம் இன் உயிர்க்கே –9-4-11
குவலயா பீடம் அடக்கி
தென் திசை கை கூப்பி தொழ
நூறே -பிரித்து அருளியதை சொல்லி காட்டுகிறார்
மையார் கண் மா மார்பில் மன்னும் திருமாலை
கை ஆழி சங்குடனே காண வெண்ணி –மெய்யான
காதலுடன் கூப்பிட்டு கண்டு உகந்த மாறன் பேர்
ஓத உய்யுமே இன் உயிர் –திரு வாய் மொழி நூற்று அந்தாதி –84
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்
Leave a Reply