நல்ல புதல்வர் மனையாள் நவையில் கிளை
இல்லம் நிலம் மாடு இவை அனைத்தும் அல்லல் எனத்
தோற்றி எரி தீயில் சுடுமேல் அவர்க்கு எளிதாம்
ஏற்று அரும் வைகுந்தத்து இருப்பு –19
குணவான்கள் ஆன புத்ரர்கள்-/மனையாள்/ குற்றம் இல்லா பந்துகள்/ விலஷனமான இல்லம் /பாலை கொடுக்கும் பசுக்கள் -இவை எல்லாம் அல்லல்
என்று பட்டு-எரிகிற நெருப்பு போல் சுடும் ஆனால் –சம்சார நசை இன்றி வெறுப்பு கொண்டால்- ஏறுவதற்கு அரிய அடியார் குழாங்கள் உடன் கூடி இருக்கும் இருப்பு மிக சுலபம்
தாப கரமான அவஸ்தை பிறந்தவர்களுக்கு
கொள் என்று கிளர்ந்து எழுந்த பெரும் செல்வம் நெருப்பாகா
தாயே தந்தை –தாரமே கிளை மக்கள் என்றும் நோய் பட்டு ஒழிந்தேன் ஏ வகாரம் ஒவ் ஒருவராலும் பட்ட சிரமம் பெரிய நோய்
கொன்றேன் பல் உயர் ராய் குறிக் கொள் இன்றி –
விராகம் வைராக்கியம் -திரு வேம்கடம் சரணா கதி –நைமிசாரண்யத்தில் தொடக்கம் 11 இடத்தில் பண்ணி இருக்கிறார் அங்கி அங்கம் 17 ஒப்புமை -சுக துக்கம் மாறி மாறி நாயகி நாயகன் பாவம் போன்றவை
அசக்ருத் பிர பத்தி-
கண்ட இடத்தில் புத்தி போக கூடாது
நல்ல பிள்ளைகள்-நின்னையே மக னாய் பெற பெறுவேன் ஏழு பிறப்பும்- சொல்லும் படியான நல்ல பிள்ளை
வேத வியாசர் -சுகர் போல்/௧௬ வயசில் போனார் சுகர்- விட்டு போன பிள்ளையை கூப்பிட்டால் மரம் செடி கோடி தந்தையே என்னை கூப்பிட்டாரா கேட்டதாம் -அனைத்தும் சரீரம்என்ற
எண்ணம் சுகருக்கு -அவருக்கு பிள்ளை பிரிந்த வருத்தம் இருந்ததாம்
மனையாள்-நல்ல இங்கும் கூட்டி கொள்ள வேண்டும்
சக தர்ம சரிதவ ஆன மனைவி மா சக -கச்ச ராம -நான் போக நீ வா என்றாளே சீதை பிராட்டி
ஆச்சார்யர் சிஷ்யர் நிலை கூரத் ஆழ்வான் -ஆத்மா -சரீரம் போல் நினைவின் படி நடக்க வேண்டும் / சொல்லின் படி நடப்பது பர்தா -பார்யா – ஆத்மா -நினைவாகவே நினைக்க வேண்டும்
ஹனுமானுக்கு பரிசு பட்டாபிஷேகம் பொழுது முத்து மாலை- யாருக்கு கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறாயோ அது போல் பண்ண வேண்டும் -கண்ணால் கேட்டதை வாயால் சொன்னான்
மனசு ஒத்து –பாஸ்கரன்-ஒளி போல் இருவரும் சொன்னது பாஸ்கரனே பிரபாயதா -கடல் நடுவில் இருந்தாலும்ச்சந்தானுவர்த்தி பத்னி–
துரும்பை கிள்ளி போட்டு மித்ர பாவம் சொல்லி கொள் –நண்பனா இவன் -காலில் விழ கூட தகுதி இல்லாதவன் -நாகணை மிசை நம்பிரான் சரணே சரண்-
ஸ்ரீ ராமன் காலில் விழுந்தவரையும் கையால் தூக்கி ஆலிங்கனம் கொள்வான் -ராஜ நீதி-எதிர் நாட்டு அரசனுக்கு சிறப்பு என்று அறிந்து –
நவை இல் கிளை-குற்றம் அற்ற -பந்துகள் -பிரதி கூலர் இல்லாமல் –மாமன் மகளே என்று ஆண்டாள் ஆசை படும் படி இருக்கும் பெண் போல்–
பிரகிருதி சம்பந்தம் விரும்புகிறாள் கோகுல தேசத்தில்-
விபீஷணன்-திரி ஜடை போல் -அசோகா வனத்தில் கூட கிடைத்ததே
ஊரிலேன் காணி இல்லை உறவு மற்று ஒருவர் இல்லை
ஆத்மா பந்துகள் சமமான பந்து -நல்ல கோட் பாடு –நல்ல பதத்தால் மனை வாழ்வார் கொண்ட பெண்டிர் மக்களே -அனுகூளர் வேண்டும் ஆழ்வார்
இங்கு அவர்கள் கூட வைராக்கியம் வேணும் என்கிறார்
ஆழ்வாரை விட ஆச்சார்யர் வைராக்கியம் நிஷ்ட்டை
இல்லம்- நல்ல என்பதை கூட்டி கொள்ள வேண்டும் என்று இனி மேலும் சொல்கிறார்
நவையில் கிளை நடுவில் இருந்ததால் -ரீதி பங்கம் -மேல் சொல்லும் இல்லம் மாடு இவற்றிலும் சேர்த்து கொள்ள வேண்டும்
தர்ம கார்யம் நடக்கும் இடம் நல்ல இல்லம் .மாட மாளிகை கூட கோபுரம்
நல்ல நிலம்-உப்பு நிலம் இன்றி-கட்டு களம் போற விளையும்
நல்ல மாடு-கட்ட பிடிக்க ஒட்டாமல் கொண்டி பசு இல்லை -விதேயமாய் -பாலை நிறைய கொடுக்கும்
இவை அனைத்தும் -சுக ரூபமாய் சொன்ன இவை அனைத்தும் -அல்லல்-துக்கம் விளைவிக்கும் என்று தோற்றி
அல்லல்=துக்கம்–காரணம்-துக்கம் அனுபவம் இவர்கள் இவை மூலம் வரும் துக்கம்
ஜொலிக்கும் அக்னி -எரி தீ -தன்னை கண்டால் பாம்பை கண்டால் போல இருக்க வேண்டும்
விரோத மனப் பான்மை வெறுப்பு -மாதா பிதா சர்வம் வகுளாபிராமம் ஆழ்வாரே இவை அத்தனையும் உரு பேரு செல்வமும் -செம் தமிழ் ஆரணமே ராமானுசன்
இதில் வைராக்கியம் வந்து அதில் மனம் வைக்க வேண்டும்..
இந்த அவஸ்தை பிறந்த அதிகாரிக்கு —
சு யத்னத்தால் அடைய முடியாத பிராப்தி -ஸ்ரீ வைகுண்டம்-விட்டே பற்ற வேண்டும்-
விருப்பு உறினும் தொண்டர்க்கு வேண்டும் இதம் அல்லால்
திரு பொலிந்த மார்பன் அருள் செய்யான் –நெருப்பை
விடாதே குழவி விழ வருந்தினாலும்
தடாதே ஒழியுமோ தாய் –20
நல்லதை கொடுக்காமல் –அவனை வேண்டாம் என்று வேறு எதையோ கேட்டாலும் -அவன் தன்னை கொடுக்கிறான்
சூத்திர விஷயம் கேட்டால்-தொண்டர்க்கு-தன் பக்தர்களுக்கு -உஜீவனம் கேட்டால் கொடுப்பான்-உஜீவனதுக்கு -அபேஷிதமான ஹிதம் தவிர
வேறு கொடான்-
குழவி நெருப்பை விடாமல் தொட போனால் விழ -யத்தனம் பட்டால்-விளைவு அறியாத செய் – விளைவு அறிந்த -தாய் பிரஜைக்கு நாசம் என்று அறிந்து
தடுப்பாள்-
அஹிதம் என்று அறியாமல் பக்தர்கள் சாபல்யம் கொண்டு
ஹித பரன் ஈஸ்வரன் –கொடாதே மறுத்து விடும்
கொடாதே பொது கிலேச படுவார் என்னும் படி ஆதாரம் உடன் அபேஷித்தாலும்
தொண்டன்-சேஷத்வம் சாபலம் -இரண்டுக்கும் வாசகம்–சபல புத்தி உள்ளதொண்டன்
வேண்டும் ஹிதம்-மோஷம் போக வேண்டியது மட்டும்
திரு பொலிந்த மார்பன்-பிராட்டியும் பிரியம் மட்டும் பார்க்காமல் ஹிதம் நோக்கி
திகழ்கின்ற திரு மார்பில் திரு மங்கை தன்னோடும்–திகள் கின்ற திரு மாலால் சேர்விடம் வாட்டாற்று -திருவால் வந்த பொலிவை கொண்ட திரு மார்பன்-
திரு பொலிந்த திரு மார்பன் செய்யாள்-அவள் சிகப்பு வீசி சிவந்து இருக்கும் அவள் ஒளி வீசி—கரு மாணிக்கத்து குன்றத்து தாமரை போல் என்றும் கரு மாணிக்கத்து மலை போல் மணி தடம் தாமரை காடு போல் –என்றும்-உள் திருஅடி உள் திரு கையும் சிவந்து இருக்கும்-
அருளுதல்=கொடுத்தல்
மெய்யனாகும் விரும்பி தொழுவார்க்கு எல்லாம் அடியார்க்கு –பொய்யனாகும் புறம்பே தொழுவார்க்கு எல்லாம்
துரி யோதனன் -அர்ஜுனன் -சேனைபெற்று அவனும் கண்ணன் பெற்று இவனும் –கேட்டதை கொடுத்தான் இங்கும் -பக்தர்கள் இடம் இப்படி பண்ண மாட்டான் துரி யோதனன் தொண்டன் இல்லையே அதனால் தான்-அவன் இடம் நம்பிக்கை வைத்து பக்தன் ஆக இருப்பாருக்கு பண்ணுவான் -அக்நி பால பளப்பை பார்த்து விழ பார்க்கும் குழவியை தடுத்து கொள்வது போல்
சுய ஞானம் பிராப்ய ஞானம் பிராபக ஞானம் –மூன்றும் வேண்டும்-
அவனுக்கு அடிமை -அடிமை தனம் செய்வதே புருஷார்த்தம்- திரு அடியே உபாயம் தத்வம் ஹிதம் புருஷார்த்தம்
சாரமான ஞானம் இந்த மூன்றையும் அறிவதே
ஆர பெரும் துயரே செய்திடினும் அன்பர்கள் பால்
வேரிச் சரோருகை கோன் மெய் நலமாம் –நேரில்
பொருத்தற்கு அரிது எனினும் மைந்தன் உடல் புண்ணை
அறுத்தற்கு இசை தாதை அற்று —21
துயரம் கொடுத்தாலும் நம்மை பரி பக்குவம் செய்ய தான் –நன்மை பொருட்டே செய்கிறான்
ஆர பெரும் துயர்-மிக பெரும் துக்கம்
வேரி பரி மளம் மிக்கு இருக்கும் தாமரை சரோரிகை-கோன் ஸ்ரிய பதி
தேரில்-ஆராய்ந்து பார்த்தால்
மெய் நலமாம் -மெய்யான சிநேக கார்யமாம் -அன்பின் பொருட்டு
எதை போல்
பொருதற்கு அரிது என்றாலும் மைந்தன் புண்ணை அறுத்தற்கு இசை தாதை போல
அதி மாத்திர துக்கம்- ஸ்ரிய பதி தன் பக்கல் பக்தி உள்ளவருக்கு -செய்திடினும்-
அன்பு தூண்ட-சிநேக கார்யம் –ஆழ்வார் துயர்/பெரும் துயர்/ஆர பெரும் துயர்
விபவ சேவை ஆசை/ அர்ச்சை சேவை ஆசை/ பாகவதர் சமாகம் ஆசை கிடைக்காமல் பெரும் துயரம்
காசை இழந்த துக்கம் -பொன்னை இழந்த துக்கம் /மணியை இழந்த துக்கம்
பெரும் நிலம் கடந்த நல அடி பொது கிடைக்காமல் துயரம்-தூது விட்டார் அம் சிறைய மட நாராய்-முதல் துக்கம்
இவையும் அவையும் திரு முடி சேவை பொலிந்து நின்ற பிரான்- அடுத்து நம்பியை உம்பர் –என் சொல்லி நான் மறப்பேனோ
நீயும் திரு மாலால் கோட் பட்டாயே -காற்றும் கழியும் கட்டி அழ கொண்ட பெரும் காதலுக்கு பத்திமை நூல் வரம்பு இல்லை—பெரும் துயர் -திரு குரும் குடி நம்பி சேவிக்க முடியாத துயரம்
அடியார் குழாம் களையே உடன் கூடுவது என்று கொலோ –ஆர பெரும் துயர்-
ஆடி ஆடி -வாடி வாடும் இம் வாள் நுதலே -தாய் பாசுரம் இதில் -முன்பு தலைவி பாசுரம் —
பாகவதர் இடம் கேட்க்காமல் நரசிம்கன் இடம் கேட்டது வழயில் பறி கொடுத்தவன் ராஜா வீட்டில் கேட்பது போல் –அதீத வாட்டம் –ஆழ்வாருக்கு ..ஆழ்வாருக்கு ஆர பெரும் துயர்-திரு மாலால் நெஞ்சம் கோள் பட்டாயே -வஞ்சிக்கும் அவனும் ஸ்ரிய பதி தான் –அன்பில் பால் செய்ய பட்டது –எம்மாவீடு திறமும் செப்பம் வீடு துயர் மா வீடு பெரும் துயர் எம்மா வீடு ஆர பெரும் துயர் நின் செம் மா பாத பறப்பு என் தலை மிசையே –துயரே -ஏவகாரம்–சுகம் கிஞ்சித் கூட இன்றி–செய்திடினும்–கர்ம ஆதீனம் தானே துயர்-அவர் தலை மேல் இட -பிராரப்த கர்மா அடியாக பிறந்து -வினைகள் செய்திடினும் சொல்லாமல்-பல பிரதன் அவன் தானே –தன குழவி கிணற்றில் விழ பார்த்து இருக்கும் தாய் போல்-சக்தி இருக்கிறது போக்க -போக்க வில்லை அவன் தப்பு -பிராரப்த கர்மா அசித் தானே பிறப்பு கொடுக்காதே —ஞானம் இல்லையே-அடிப்படையாக கொண்டு இவற்றின் பலத்தை அவன் கொடுக்கிறான்–கடிவாளம் கொண்டு குதிரை தேர் ஒட்டி ஓட்டுவது போல்–பல பிரதன் அவன் தானே-சக்தி உண்டு உரிமையும் உண்டு–கஷ்டம் கொடுத்து வைராக்கியம் பிறக்க -நன்மையின் பால் செய்கிறான்–நிக்ரகிக்க அவளையும் கூட்டு-சேர்த்து இல்லை –திருந்தி மோஷம் வரத்தானே -அனுக்ரகம் அடியாக செய்ததால் அவளும் சேர்ந்து -அன்பர் பால் தான் செய்கிறார் –மெய் நலம்-மெய்யான சிநேகம் என்பதால் செய்கிறார் -தேரில்-ஆராய்ந்து பார்த்தால் தான் தெரியும்-ஹித புத்தியால் செய்கிறார்.
வாளால் அறுத்து -மாளாத காதல் மருத்துவன் பால் போல் —வித்துவ கோட்டு அம்மானே அநந்ய கதித்வம் அருளுகிறார் –
—————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் திரு அடிகளே சரணம் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
April 28, 2015 at 8:31 am |
Thank you. This kind of information are very helpful. However, if it was explained in detail, like velukkudi sir’s speech it will be very helpful