இரண்டாம் திருவந்தாதி-1-20- ஸ்ரீ கிருஷ்ண பிரேமை ஸ்வாமிகள் ..

திரு குருகைப் பிரான் பிள்ளான் அருளி செய்த தனியன்

என் பிறவி தீர இறைஞ்சினேன் இன்னமுதா
அன்பே தகளியாய் அளித்தானை –நன் புகழ் சேர்
சீதத்தார் முத்துக்கள் சேரும் கடல் மல்லைப்
பூதத்தார் பொன்னம் கழல்-

ஐக ரசம்-ஹிருதய ஒற்றுமை- ஏக ரசம்-ஏக கண்டர்கள்- இரண்டு தீபம் மூன்றாவது தரிசனம் -அடுக்கு தீபாரனை -ஞான தீபம்–அத்யாத்மிக தீபம்-கார் இருள் அஞ்ஞானம்  அணையா விளக்கு இவை -தொடர்ச்சி அமைப்பை -அழகை அனுபவிக்க வேண்டும்-இருக்கிறான் முதலில் சொல்ல -வையம் தகளியா -உபநிஷத் போல நிரூபித்தது இந்த பாசுரம்- உலகம் பார்த்து காரணம் கர்த்தா இருக்க வேண்டும் பார்த்தோம்..அதற்க்கு ஞான தீபம் உபநிஷத் வியாசர் சூத்திரம் ஸ்வாமி ஸ்ரீ பாஷ்யம்–அவரை பார்க்க வேண்டுமே -நம்மை படைத்தவர் என்பதால்-பக்தியால் பார்க்கலாம் இருக்கிறார் தெரிந்து கொள்வது ஞானம் அதை அடி படையாக கொண்ட பக்தி கொண்டு பார்க்க வேண்டும்.காம்யார்த்த பக்தி அஞ்ஞானர் பக்தி-லீலா குண சே ஷ்டிதங்கள் கேட்டு கேட்டு பிரேம பக்தி..
அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடு திரியா –நன்புருகி
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான் -1
அன்பே தகளி- உலகம் விட பெரியது —அவா மூன்று தத்வம் விட பெரியது என்கிறாரே ஆழ்வார் –ஞான சுடர் ஆர்வம் -நெய்–பார்க்க துடிக்கும் இன்புருகு சிந்தை -திரி–சம்பந்தம் -தாரக போஷகன் நித்ய போக்யன்-என்ற உணர்வு வேண்டும்..மாடு மேல் கண் வைக்கும் மாட்டு காரன் போல் அவன் நம்மை கண் காணித்து கொண்டு இருக்கிறான்—நம் பெருமாள் என் சுவாமி-நம் ஊர் திரு அரங்கம் என்று போனாரே -பரகாலனின் கனவில் வந்ததும் —அழுதாலும் நம் ஊர் என்றாரே -நம்மையும் பிரிக்காமல்-என் ஊர் என்று சொல்ல வில்லை அவன் சொத்தும் நமக்கு ஏக போகம் என்று தோற்றும் படி —காதலும் கடலாக பெருக நீ செய்ததற்கு கைம்மாறு இல்லை--அது போல் நாம் வேற அவன் வேற என்று பிரிக்காமல் தவம் ஆசி அஹம்ப்ரஹ்மாசி–நித்ய சம்பந்தம் காட்டும் என் சுவாமி -என் பர்தா சகி காதலனை பார்க்கும் ஆவல் போல இருக்க வேண்டும்-மம்தா பிரேமா சங்கத்தா அபிமானம் வேண்டும்..அகில ஜகன் மாதரம் அஸ்மின் மாதரம் அசமத் ஸ்வாமின்-நமக்கே சுவாமி-உலகம் தெரிந்து கொள்ளா விடிலும் ஸ்வாமி நாம் தெரிந்து கொண்டு இருப்பதால் அபிமானம் அதிகம் அநந்ய மமதை -வேண்டும்-திட நிஷ்ட்டை பிரேமம்= பக்தி –அன்பு பழுத்து ஆர்வம் -துடிப்பு -கை கூடா விடில் உருக்கம் அழுகை –அன்பு ஆர்வம் உருக்கம் -பக்தி திவ்யம் ததாமி சஷுஸ் -ப்ரீதி பூர்வகம் துஷ்யந்தே ராமயந்தே –ஞான கண் தருவான் –ஷேமுசி ஞானம் பக்தி ரூபா -நான் =அடியேன்–அவர் கொடுத்த ஞானத்தால் வந்த அன்பு–லாபோ மத் தர்சனம் அபி-அதற்க்கு பக்தி வேண்டுமே -நாம கீர்தனத்தால் பிரேமை வரும்..
ஞானத்தால் நன்கு உணர்ந்து நாரணன் தன் நாமங்கள்
தானத்தால் மற்றவன் பேர் சாற்றினால் –வானத்
தணியமரர் ஆக்கு விக்கும் அஹ்தன்றே நங்கள்
பணியமரர் கோமான் பரிசு –2
சர்வ சரண்யன்-அவன் நம்மை விட மாட்டான் என்கிற ஞானம் போதும் நாம சங்கீர்த்தனம் பண்ண -உணர்ந்து  தெரிந்து சொல்பவனை கை விட மாட்டான் —தெரியாமல் சொல்லிய திரு நாமமே காக்கும்–சர்வோத்தமன் தெரிந்து மதிம பஜாமகே -சாஷாத்காரம் -திவ்ய மங்கள விக்ரகம் காட்டுவான்–தானம் =ஸ்தானம்-திரு நாம சங்கீர்த்தனம் பெரிய ஸ்தானம் –பாகவதர் என்பதே பெரிய -பாகவதர் இருக்கிறார் மந்த்ரி இல்லை-பதவி செற்றது-பெரிய பதவி இது தான்..-ஸ்தானம் ஸ்ரீ வெங்கடேசன் தஞ்சாவூர் சமஸ்தானம் கதை-ஸ்தலச்தார் உத்தம நம்பிகள்-பெருமாள் புறப்பாடும் இவர்கள் வந்ததும் தான் –அருமை தெரிந்து காத்து வருகிறார்கள்-கைங்கர்யம் பண்ண கொடுத்த ஸ்தானம்-எற்றைக்கும் ஏழ்  ஏழ் பிறவிக்கும் இது வேண்டும்..–நித்யர் ஒப்பாக வைத்து விடுவான் திரு நாமம் சொல்பவனுக்கு வைகுண்ட பதி ஸ்வாபம் பரமம் சாம்யம் உபயத்தி –அனைவரும் பரம் ஜோதி-ரூபம் அங்கு..
பரிசு நறுமலரால் பாற் கடலான் பாதம்
புரிவார் புகப் பெறுவார் போலாம் –புரிவார்கள்
தொல்லமரர் கேள்வித் துலம் கொளி சேர் தோற்றத்து
நல்லமரர் கோமான் நகர் –3
பரிசு=பக்தி–நறு மலர்-பாகவதன் கையில் கிடைத்த வாசனை– பாதம் புரிவார் புக பெறுவார் –தொல் அமரர்–சப்த கோசரன்-சாஸ்த்ரத்தில் கொண்டு பார்க்க முடியும் பிரம்மா  ஆதி தேவனுக்கு–ஆனால் திரு நாமம் சொல்பவர் தோற்றத்து கட்டுவான் –அசுரர் பிள்ளை சொன்னதுக்கு தரிசனம் கொடுத்தானே தூணில்–எங்கும் உளன் கண்ணன் என்ற மகனால் அனைவரும் தரிசனம் பெற்றார்கள்
நகர் இழைத்து நித்திலத்து நாள் மலர் கொண்டு ஆங்கே
திகழு மணி வயிரம் சேர்த்து –நிகர் இல்லாப்
பைம் கமலம் ஏந்தி பணிந்தேன் பனி மலராள்
அங்கம் வலம் கொண்டான் அடி –4
ஹிருதயமே கோயில்-நகர் போல் இழைத்து –நவ ரத்னம் -நவ பக்தி–ஹிருதய பீடம் சரவணம் – கீர்த்தனம் –ஆத்ம நிவேதனம் –கண்ணீரே பாத்யம்–பத்ம ரமணாக -கீர்த்தனா வளி–பனி மலராள் அங்கம் -வலம் கொண்டான் அடி–நித்திலம் =பவளம் வயிரம் சேர்த்து மானச பூஜையில்- மாணிக்கம் கட்டு வயிரம் இடை கட்டி ஆணி பொன்னால் செய்த  வண்ண சிறு தொட்டில் போல்–பாசுர தொட்டில் பெரியாழ்வார் திரு மொழி -சொல் எல்லாம் ரத்னம் –சகஸ்ர தல கமலம் சாதிக்கலாமே மானச பூஜையில்–பக்தி இப் படி இருக்க வேணும்
அடி மூன்றில் இவ் வுலகம் அன்று அளந்தாய் போலும்
அடி மூன்று இரந்து அவனி கொண்டாய் –படி நின்ற
நீரோத மேனி நெடுமா!  நின்னடியை
யாரோத வல்லார் அறிந்து ?–5
உலகம் போல் பக்தன் தலை-மகா பலி தலை மேல் வைத்ததுக்கும் உலகம் வைத்ததுக்கும் சாம்யம்–மூன்றாவது அடி எங்கு வைத்தாய்-
அறிந்து ஐந்தை உள் அடக்கி ஆய் மலர் கொண்டு ஆர்வம்
செறிந்த மனத்தராய்ச் செவ்வே –அறிந்தவன் தன்
பேரோதி ஏத்தும் பெரும் தவத்தோர் காண்பரே
காரோத வண்ணன் கழல் –6
தபசு வேணும்-காகிய தபச்துருவன் –100 கோடி தாரக மந்த்ரம் பாடி சுவாமி தியாக ராஜர் வேங்கடாத்ரி சுவாமி /ராமதாசர் -வாசு தேவ பீமம் போன்றோர்-செவ்வே செம்மையான திட பக்தி–பிரகலாதன் போன்றோர் பக்தி-செவ்வி–செறிந்த ஆழ்ந்த பக்தி–கொண்டே அவன் திரு அடி கிட்டும்-சொல்பம் பக்தர் -அஜாமிளன்-பலன் ஓன்று தான்–பார பட்ஷம் இல்லை–பிரகலாதன் போன்ற பக்திக்கு ஆசை பட வேண்டும்
கழல் எடுத்து வாய் மடித்து கண் சுழன்று மாற்றார்
அழல் எடுத்த சிந்தை யராய் அஞ்ச —தழல் எடுத்த
போராழி ஏந்தினான் பொன் மலர்ச் சேவடியை
ஓர் ஆழி நெஞ்சே ! உகந்து –7
திரு விக்கிரம அனுபவம்-கழல் எடுத்த அழகு–கழல்- நூபுரதுடன் கலீர் என்று எடுக்க -அசுரர் வாய் மடுத்து கண் சுழன்று -அழல் எடுத்த சிந்தையராய் அஞ்ச -நமுசி போல்வார்-மாற்றார் –ஆழி நெஞ்சே -ஆழ்ந்த நெஞ்சே தியானம் பண்ணு
உகந்து உன்னை வாங்கி ஒளி நிறம் கொள் கொங்கை
அகம் குளிர உண் என்று அளாவி –உகந்து
முலை உண்பாய் போலே முனிந்து உண்டாய் நீயும்
அலை பண்பால் ஆனமையால் அன்று –8
கிருஷ்ண அனுபவம்–வஞ்சனை செய்ய தாய் உருவாகி வந்த பேய்—கொங்கை அஹம் குளிர உண்ணு-திணிக்க -வஞ்சனை இருப்பார்க்கு இவனும் வஞ்சனை-ஆவி உடன் உறிஞ்சினான் அலை பண்பு -வஞ்சனை-
அன்றது கண்டு அஞ்சாத ஆய்ச்சி உனக்கு இரங்கி
நின்று முலை தந்த இன் நீர்மைக்கு –அன்று
வரன் முறையால் நா அளந்த மா கடல் சூழ் ஞாலம்
பெரு முறையால் எய்துமோ பேர்த்து ?–9
யசோதை பிராட்டி இது கண்டும் அஞ்சாமல்–பிரேமை கனத்து–உலகம் அளந்த பெருமை இதற்க்கு சாம்யம் இல்லை-ஆயன் உலகு அளந்த பெருமாள் இரண்டையுமே அனுபவிகிறார்
பேர்த்தனை மா சகடம் பிள்ளையாய் மண் இரந்து
காத்தனை பல் உயிரும் காவலனே –ஏத்திய
நா வுடையேன் பூ வுடையேன் நின்னுள்ளி நின்றமையால்
கா அடியேன் பட்ட கடை –10
பஞ்ச அனைய மெல் அடியால்–முன்பு திரு அடி கொண்டு யாசகம் பண்ணும் வியாஜ்யத்தால் காத்தாய் காமனை கண்ணனை அலற்றி –உள்ளி தியானம்-அடியேன் பட்ட கடை கா -காப்பாற்று -இழுக்குகள் நீக்கி –
கடை நின்று அமரர் கழல் தொழுது நாளும்
இடை நின்ற இன்பத்தர் ஆவர் –புடை நின்ற
நீரோத மேனி நெடுமாலே ! நின்னடியை
யாரோத வல்லார் ஆவர் ?–11

வாசல் கடையில் -படியாய் கிடந்தது நின் பவள வாய் காண்பேனே -நேச நிலை கதவு-கோவில் வாசலில் நேசம் வேண்டும்-நாய் கூட நம் வாசலில் போ என்றாலும் நேசமாய் கிடக்குமே –அமரர்கள் கிடக்கிறார்கள்–கடைசியில் நின்று–அடியார்க்கு அடியார்-அடியானாக நின்று–எட்டி பார்ப்பான்-முதல் கடாஷம் நம் மேல்–நித்யர் சூரிகள் இடை-நடுவில் சேர்ப்பான்–புடை நின்ற நீர் சமுத்ரம் நான்கு பக்கம் சூழ்ந்து –உன் திரு அடி பெருமை சொல்லி முடிக்க முடியாது
அவை இவர் என்று இல்லை அரவு அனையான் பாதம்
எவர் வணங்கி ஏத்தார் எண்ணில் –பவரும்
செழும் கதிரோன் ஒண் மலரோன் கண் நுதலோன் அன்றே ?
தொழும் தகையார் நாளும் தொடர்ந்து –12
அக்ரூரர் போல் விழுந்து புரள வேண்டும்–வேட்க்க படாமல்- முப்பத்து முக் கோடி தேவரும் சேவிக்க ஆதித்யன் -செழும் கதிரோன்..-பிரம தேவன் ஒண் மலரோன் கண் நுதலோன் சிவன் –நாளும் தொடர்ந்து நித்யம்-பின் சென்று சேவித்து போக -தேவ தேவன்-அனைவரும்-சர்வ சேவியன்–
தொடர் எடுத்த மால் யானை சூழ் கயம் புக்குஅஞ்சி
படர் எடுத்த பைம் கமலம் கொண்டு –அன்று இடர் அடுக்க
ஆழியான் பாதம் பணிந்து அன்றே ? வானவர் கோன்
பாழி தான் எய்திற்று பண்டு –13
சேவித்து பரம பதம் கிட்டும்-விரோதி போக்கி சேர்த்து கொள்வான்–தொடர் எடுத்த -சங்கிலி கட்டி இருந்தாலும்-கயம் =பொய்கை புக்கு -படர் =இதழ் -பிராரப்தம் இருக்கு அனுபவித்து வா என்றுசொல்லாமல் அதையும் கழித்து பரம பதம் கொடுத்தான் -முதலை மட்டும் போக்க வில்லை –
பண்டிப் பெரும் பதியை யாக்கி பழி பாவம்
கொண்டு இங்கு வாழ்வாரைக் கூறாதே –ஏன் திசையும்
பேர்த்த கரம் நான்குடையான் பேர் ஓதிப் பேதைகாள்
தீர்த்த கரராமின் திரிந்து –14
பண்டி =பெரும் வயிறே -திரு ஆராதனம் செய்து கொண்டு–இதையே பெரிய திரு பதியாக ஆக்கி கொண்டு –அந்தர்யாமி ஆயிடுத்தா சாப்பிட்டாச்சா -வைதிக வார்த்தை–திரு அரங்கத்துக்கு ஒரு பிடி -சொல்லி கொண்டாவது போட்டு கொள்ளாமல் உடம்புக்கு நல்லது -பழி பாவம் -இங்கு வாழ்வார் –அங்கு வாழ எண்ணம் இன்றி –வயிறை i உபாசனம் பண்ணி கொண்டு–அவனை ச்தியாமல் கூறாதே -அஷ்ட புஜன் -நான்கு புஜம் கொண்டவன்–தீர்த்தகரர்–பரம பவித்ரம் உடையவர் ஆவோம் –அவனையே பாடி சேவித்து -பாகவதர்கள் திரு அடி தீர்த்தமே  கங்கை போல் பவித்ரம் —நா கொண்டு மானிடம் பாடேன் –துணிவு உடைய நாபுலவன் திரு மழிசை–ஹஸ்த கிரி மேல் ஸ்ரீ இருக்கிறதே வைத்த மா நிதி —
திரிந்தது வெம் சமத்து தேர் கடவி அன்று
பிரிந்தது சீதையை மான் பின் போய் –புரிந்ததுவும்
கண் பள்ளி கொள்ள அழகியதே ! நாகத்தின்
தன்ண் பள்ளி கொள்வான் தனக்கு –15
சேஷ சயனம்-இருக்காமல்-வெம் சமத்து தேர் கடவி திரிந்ததும்–பிராட்டி கூட கூசி பிடிக்கும் மெல் அடியால்-அன்று மானை பிடிக்க போய் பிராட்டி பிரிந்ததும்–மனிசர்க்காய் படாததன பட்டு -கண் பள்ளி -தரையிலே பள்ளி கொண்டு–ரிஷ்ய முக மலையில்–
தனக்கு அடிமை பட்டது தான் அறியானேலும்
மனத்தடைய வைப்பதாம் மாலை –வனத்திடரை
ஏரியாம் வண்ணம் இயற்றும் இது அல்லால்
மாரி யார் பெய்கிற்ப்பார் மற்று ?-16
எம்பெருமானுக்கு அடிமை சொரூப ஞானம் இன்றி–சகா அஹம்-ஞானி ஆத்மா தான் நான் -சோஹம்-தா சேர்த்து தாசோஹம்-நித்ய தாஸ்யன் ஆத்மதாச்யம் ஆட் பட்டவன் அவன் ஸ்வாமி என்கிற ஞானம் வேண்டும் –ஞானம் இன்றி த்யானம் பண்ண பண்ண ஞானம் வந்து விடும்–மழை பொழிய வேண்டியது அவன் பொறுப்பு விதைப்பது நம் பொறுப்பு வளர்த்து கொடுப்பது அவன் பொறுப்பு -லோக யாத்ரை இருவரும் சேர்த்து நடத்தி போக -பக்தி செய்ய வேண்டியது நம் பொறுப்பு -ஞானம் கொடுப்பது அவன் பொறுப்பு -ஏரி வெட்ட வேண்டுவது நம் பொறுப்பு–மழை பொழிய வைப்பது அவன் பொறுப்பு ..–பக்தி இருந்தால் ஞானம் கொடுப்பான்-வைராக்யமும்தானே தேடிவரும்
மற்று யார் இயலாவார்?
வானவர் கோன் மா மலரோன்
சுற்றும் வணங்கும் தொழிலானை –ஒற்றைப்
பிறை இருந்த செம் சடையான் பின் சென்று மாலைக்
குறை இரந்து தான் முடித்தான் கொண்டு –17
காக்கும் சக்தி அவனுக்கு தானே –இந்த்ரன் பிரமன் சிவன் இவர்கள் குறைகளையும் தீர்த்து கொடுக்கும் அவன் ஒருவன் தானே –
கொண்டது உலகம் குறள் உருவாய் கோள் அரியாய்
ஒண் திறலோன் மார்வத்து உகிர்வைத்து –உண்டதுவும்
தான் கடந்த வே ழ் உலகே தாமரைக் கண் மால் ஒரு நாள்
வான்கடந்தான் செய்தவழக்கு –18
மண்ணை கேட்டு உலகம் அனைத்தையும் கொண்டான் -குறள் உருவாய் -பரசு ராமன் கோடரி-இவனோ நகத்தை வைத்து-கீற கூட வேண்டாம் வைத்தால் போதும்- தான் அளந்த உலகத்தை உண்டான் அளந்து சாப்பிட்டான் இரண்டு அடிக்கு அகப் பட்டதை—நம் கண்ணன் அப்படி தான் செய்வான் கோவர்த்தனம் பிடித்ததும் பெரிசு இல்லை கோபிமார்களுக்கு
வழக்கு அன்று கண்டாய் வலி சகடம் செற்றாய்
வழக்கு என்று நீ மதிக்க வேண்டா –குழக் கன்று
தீ விளவின் காய்க்கு எறிந்த தீமை திருமாலே !
பார் விளங்கச் செய்தாய் பழி –19
தூங்காமல் சகடம் உதைத்தாய் கால்நோவாதா யசோதை கேட்க்க -விளாம் பழம் எறிந்தாயே கை வலிக்க வில்லையா –
பழி பாவம் கை அகற்றி பல் காலும் நின்னை
வழி வாழ்வார் வாழ்வாராம் மாதோ –வழுவின்றி
நாரணன் தன் நாமங்கள் நன்கு உணர்ந்து நன்கேத்தும்
காரணங்கள் தாம் உடையார் தாம் –20
திரு நாம சங்கீர்த்தனம் பண்ணினால் பழி பாவம் தானே நீங்கும்–பாகவதர்களுக்கு பிராய சித்தம் வேற இல்லை சித்தம் சுத்தி ஆகும் -வாசனையால் வந்த தோஷம் போகும் -திரு நாம மகிமை–பாவம் பண்ணாத சுத்த சித்தம் வரும்–இதே ஜன்மாவில்-போதரே என்று சொல்லி புந்தியில் புகுந்து தன் பால் ஆதாரம் பெருக வைத்த அழகனூர் அரங்கன் -அவனுடைய கருணை-சத் சங்கம்-ஆச்சர்ய கடாஷம்- திரு மந்த்ரம் -படி படியாக கிட்டும்
————————————————————-
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ கிருஷ்ண பிரேமை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திரு அடிகளே சரணம் ..
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் ..

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading