பஞ்ச பூதமும் அரு சுவையும் அவனே -உண்டு உமிழ்ந்து -வயிறு நிரப்ப வெண்ணெய் உண்டான்-உலகம் கொண்ட பெரு வாயா இன்னும் இருந்தால் உகப்பன் என்று எல்லாம் விழுங்கி போந்தான்
மறு படியும் நரசிம்க அனுபவம்–அபசாரம் பக்தர் மீது பண்ணினால் பொறுக்காதவன்–பிரகலாதன் மேல் கை வைத்ததும் –தொடை எத்தகையது இந்த பயலை பூ போன்ற மெல் அடியில் போட்டு கொள்ள வேண்டுமா –ஆத்திரம் -ரத்தம் குடிக்க வில்லை கிழித்து எரிந்து குடலை மாலையாக போட்டு கொண்டான் –பிரக லாதனுக்கு உறுமி-மடியில் வைத்து கொண்டு உச்சி முகந்து மகிழ்ந்தான் குழந்தையை
வியாசருக்கு சஞ்சயனுக்கு விஸ்வ ரூபம் தெரிந்தது வியாசர் சிஷ்யர் என்பதால் மறையவருக்கு மார்கண்டேயருக்கு மாயை காட்டினான் -பிரளயம் மீண்டும் காட்டி ஆல் இலையில் சயனித்து -கல் கட்டை விரலை வாயில் வைத்து -பிரளய ஜாலம் உறிஞ்ச மார்க்கண்டேயரும் உள்ளே போனாராம்–இது ஒரு விஸ்வ ரூபம்–
நா வாயில் உண்டே நமோ நாரணா வென்று
ஓவாது உரைக்கும் உரை உண்டே -மூவாத
மாக் கதிக் கண் செல்லும் வகை உண்டே என் னொருவர்
தீக் கத்திக் கண் செல்லும் திறம் -9
யம தர்மர் கேட்டார் நாராயணா நாமம் சொல்லாமல் வந்தீர்களே -ஸ்ரீ பாகவத கதை–நரகம் புக முடியாதே சொல்லி இருந்தால் ஒரே சொல் நமோ நாராயணா சொல்லி–
திறம்பாது என் நெஞ்சமே ! செம் கண் மால் கண்டாய்
அறம் பாவம் என்று இரண்டும் ஆவான் -புறந்தான் இம்
மண் தான் மறி கடல் தான் மாருதம் தான் வான் தான்
கண்டாய் கடை கட பிடி -96
தன் நெஞ்சுக்கு சொல்லி கொள்கிறார் குரங்கு பிடி போல்-அவனை–ஹனுமா பெருமாளை கொண்டது போல் கொள்ள வேண்டும் கடைசி வரை கடை கண் பிடி–புண்டரீகாட்ஷன் தாமரை கண்ணனின் திரு அடியைகேட்டியாக பிடித்து கொள்–புந்தியில் புகுந்து தன் பால் ஆதாரம் பெருக வைத்த அழகன்–தன் உச்சியில் வைத்து கொள்வான்
பிடி சேர் களிறு அழித்த பேராளா உன் தன்
அடி சேர்ந்து அருள் பெற்றாள் அன்றே -போடி சேர்
அனல் கங்கை ஏற்றான் அவிர் சடை மெல் பாய்ந்த
புனல் கங்கை என்னும் பேர்ப் பொன் -97
பிர பத்தி சொல்கிறார் இதில்–யானை ஆழ்வான்-பெண் யானை உடன் அபகர்ஷம் சொல்லி-பிடி சேர்-ஆதி மூலமே சொன்னத்தால் திரு நாமம் காத்தது–கங்கை வாசகத்தால் புனிதம்-சங்கரன் தலை மெல் கொண்டான் -கங்காதரன் பெயர் உடன் விளங்குகிறான் –அவனை பிடித்து கொள்ள வேண்டும் என்று முந்திய பாசுரத்துடன் அன்வயம்
பொன் திகழு மேனி புரி சடையம் புண்ணியனும்
நின்று உலகம் தாய நெடுமாலும் என்றும்
இருவரங்கத்தால் திரிவரேலும் ஒருவன்
ஒருவனங்க தென்றும் உளன்-98
பொன்னார் மேனியனே-சடை முடி கொண்டவன் சிவனை –தாவி அலைந்ததால் நெடு மால் என்று பெயர் பெற்றான்–இருவர் அங்கத்தால் திரிந்தாலும் –ஒருவரே துவேஷம் இன்றி நாராயணனே பரன்–கற்பு–அடுத்தவன் உண்டு காண்பதும் கற்புக்கு பங்கம் சிவனுக்கும் ஆத்மா நாராயணன் தான் –
உளன் கண்டாய் நல் நெஞ்சே! உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
வெள்ளத்தின் உள்ளானும் வேம்கடத்து மேயானும்
உள்ளத்தின் உள்ளான் என்று ஓர் -99
இதே போன்ற பாசுரம் பிர பந்தங்களில் மீண்டும் மீண்டும் வரும் –பிரகலாதன் போல் எங்கும் உளன் கண்ணன் என்று ஆழ்ந்த நம்பிக்கை விஷம் நெருப்பில் எங்கும் கண்டான் சத்யம் காண்மின் ஐயா இலங்கையை செற்ற தேவனே தேவன் -சத்ய சொரூபன் சத்யத்தாலே சத்தியத்தை நிரூபிக்க முடியும்–அச்த்யவசயம் உணர்ந்து -நெஞ்சு-கொண்டாடுகிறார்–இருக்கிறான் என்று நம்பினவர் ஏமாந்தது இல்லை –பரம பதத்தில் பால் கடலில் அந்தர்யாமி அர்ச்சை விபவம் எல்லாம் ஒருவனே
ஓர் அடியும் சாட் உதைத்த ஒண் மலர் சேவடியும்
ஈர் அடியும் காணலாம் என் நெஞ்சே !-ஓர் அடியின்
தாயவனை கேசவனை தன் துழாய் மாலை சேர்
மாயவனையே மனத்து வை -100காண முடியும்–காண அதிகாரம் வேண்டும் –மனத்து வை ஆசை ஒன்றே போதும்–சகாடாசுரனை சாடிய திருவடி–ஒன்றுக்கு அடுத்தது தான் ஒப்பு–ஆசைப் பட்டதால் -உலகு அளந்தவனை காணலாம்–தன் துழாய் மாலையும் வளர்ந்ததாம் —
பெரியவாச்சான் பிள்ளைதிருவடிகளே சரணம் ..
பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் ..
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் …
Leave a Reply