ஸ்ரீ ஆசார்ய ஹ்ருதயம்‌–ஸ்ரீ திராவிட ப்‌,ரஹ்ம ஸூத்ரம்‌ -8–கு,ண பாதம் (156–186 )- 13- திவ்ய தேஸ -அர்ச்சாவதார விஸேஷ கு,ணாதி கரணம்‌– (159 —186)ஸ்ரீ மணவாள மா முனிகள் -ஸ்ரீ ஆய் ஸ்வாமிகள் வியாக்யானங்கள்–

1) பூர்வ த்‌,விகம்‌ – ஸூரி வைபவம்‌ 1 முதல்‌ 186 வது ஸூத்ரம்‌ வரை (186)
(2) உத்தர த்‌,விகம்‌ – ஸூரி ஸுக்த்தி வைபவம்‌– 187 முதல்‌ 284 முடிய (48)

(1) ப்ரத, மோத்‌, யாயம் -ஸாஸ்த்ர தாத்பர்ய அதிகாரி வைபவம்‌ 1-38 (38)
(2) த்‌,விதீயோத்‌, யாய: – க்‌,ரந்த, கர்த்ரு வைப,வம்‌ 39 – 186 (148)
(3) த்ருத்யோத்‌, யாயம் – க்‌,ரந்தாந்தர தார தம்ய வைப,வம்‌ 187-207 (21)
(4) சதுர்த்தே ரத்‌, யாயம் -கிரந்த, ப்ரதிபாத்‌,ய க்ரம வைப,வம்‌ 208-284 (27)

8–கு,ண பாதம் —156–186 மொத்தம் -31-ஸூரனைகள்
12 சதுர்தவ்த்யாதி, கரணம்‌ 156 –158—மொத்தம்-3–ஸூரனைகள்
13 திவ்ய தேஸ பா-அர்ச்சாவதார விஸேஷ கு,ணாதி கரணம்‌– 159 —186—மொத்தம்–28–ஸூரனைகள்

இப்படி அர்ச்சாவதாரத்தில் எல்லாம் பூர்ணம் ஆகில் எல்லா திருப் பதிகளிலும் எல்லா குணங்களும் ஒக்க பிரகாசிக்குமோ என்னும் ஆ காங்க்ஷையிலே பரத்வாதிகளுக்கு அசாதாரணாமாயும் -சாதாரணாமாயும் இருக்கும் குணங்களில் ஓர் ஒரோ குணம் ஒரோ திருப் பதியிலே பிரதான்யேந பிரகாசிக்கும் படியை – இவ் ஆழ்வார் அனுபவித்த திருப்பதிகள்-(30 ) தோறும் தர்சிப்பிக்கிறார் மேல்–அதில் பிரதமத்தில் பரத்வாதிகளுக்கு அசாதாரானாமான ஒரோ குணம் பிரதான்யேந பிரகாசிக்கும்
திருப்பதிகளை அருளிச் செய்யக் கோலி அகில திவ்ய தேச பிரதானமான கோயிலில் பிரகாசிக்கிற குணத்தை ஆதியிலே அருளிச் செய்கிறார் —அதில்‌ எல்லா ஸ்தலங்களிலும்‌ எல்லா குணங்களும்‌ பரிபூர்ணமே யாகிலும்‌ கோயில்‌ முதலான திவ்ய தேசங்களிலே பரத்வாதிகளுக்கு அஸாதாரணமான ஓரோ குணங்கள்‌ ப்ராதாந்யேந ப்ரகாஸிக்குமென்கிறார்‌-

வன்பெரு வானக முதலுய்ய இனிதாகத்‌ திருக் கண்கள்‌ வளர்கின்ற திருவாளன்‌ திருப்பதி, வடிவுடை, கடலிடம்‌, கட்கிலீ என்னுமவற்றில்‌ இவள்‌ திறத்தென் கொலோ வென்பிக்கிற வ்யூஹ ஸெளஹார்த்த ப்ரதாநம்‌.-சூரணை-159-

அதாவது-வன் பெரு வானகம் முதல் உய்ய –-வன் பெரு வானகம் உய்ய அமரர் உய்ய மண் உய்ய மண் உலகில் மனிசர் உய்ய –பெருமாள் திருமொழி-1-10-என்று முதலில் ப்ரஹ்ம லோகத்தில் எழுந்து அருளி– பின்பு பூ லோகத்தில் எழுந்து அருளிய கட்டளையிலே – நைத்திக பிரளயத்துக்கு இளையாத ப்ரஹ்ம லோகம் முதலாக இவ் அருகு உண்டான உபரிதன லோகங்களும் அங்குள்ள ப்ரஹ்மாதிகளும் பூமியும் இங்குள்ள மனுஷ்யரும் உஜ்ஜீவிக்கும் படியாக —இனிதாகத் திருக் கண்கள் வளர்கின்ற திரு வாளன் திருப்பதி –-திரு வாளன் இனிதாக திருக் கண்கள் வளர்கின்ற திரு அரங்கம் -பெரியாழ்வார் -4-9-10-என்றும் –திருவாளன் திருப்பதி-பெரியாழ்வார் -4-8-10 -என்றும் சொல்லுகிற படி-திரு உள்ளம் உகந்து கண் வளர்ந்து அருளுகிற ஸ்ரீ யபதி உடைய திருப் பதியான கோயிலானது-

வன்பெரு வானகமுய்ய அமரருய்ய மண்ணுய்ய மண்ணுலகில்‌ மனிசருய்ய” (பெருமாள்‌ திருமொழி 1-10) என்று உபய விபூதியும்‌ உஜ்ஜீவிக்கும்படி “திருவாளன்‌ இனிதாகத்‌ திருக்கண்கள்‌ வளர்கின்ற திருவரங்கம்‌” (பெரியாழ்வார்‌ திருமொழி 4-9-10) என்றும்‌ “தென்னாடும்‌ வடநாடும்‌ தொழ நின்ற திருவரங்கம்‌ திருப்பதி” (பெரியாழ்வார்‌ திருமொழி 4-9-11) என்றும்‌ சொல்லுகிற ஸ்ரீய:பதியான ஸர்வேஸ்வரன்‌ திருவுள்ளமுகந்து கண் வளர்ந்தருகிற பெரிய திருப்பதியான கோயிலிலே,

வன் பெரு வானகம் உய்ய அமரர் உய்ய மண் உய்ய மண் உலகில் மனிசர் உய்ய
துன்பம் மிகு துயர் அகல அயர் ஒன்றில்லா சுகம் வளர அக மகிழும் தொண்டர் வாழ
அன்போடு தென் திசை நோக்கி பள்ளி கொள்ளும் அணி அரங்கன் திரு முற்றத்து அடியார் தங்கள்
இன்ப மிகு பெரும் குழுவு கண்டு யானும் இசைந்த உடனே என்று கொலோ விருக்கும் நாளே ?—1-10—நைமித்திக பிரளய ஆபத்துக்கு இளையாத ப்ரஹ்ம லோகம் முதலாக மேலுண்டான லோகங்கள் உய்ய –
அங்குண்டான ப்ரஹ்மாதிகளும் ஜீவிக்க வாய்த்து ப்ரஹ்ம லோகத்தில் ஸ்ரீ கோயில் ஆழ்வார் எழுந்து அருளி இருந்த படி –ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்காக-அங்கு நின்றும் இங்கு ஏற எழுந்து அருளுகையாலே
பூமியும் பூமியில் உண்டான சேதனரும் உஜ்ஜீவிக்க

செரு ஆளும் புள் ஆளன் மண் ஆளன்  செரு செய்யும் நாந்தகம் என்னும்
ஒரு வாளன் மறை யாளன் ஓடாத படை ஆளன் விழுக்கை ஆளன்
இரவாளன் பகலாளன் என்னை ஆளன்  ஏழுலகப் பெரும் புரவாளன்
திருவாளன் இனிதாக திருக் கண்கள் வளர்கின்ற திருவரங்கமே 4-9 -10-ஸ்ரீ பெரிய பிராட்டியாரை திவ்ய மகிஷியாக உடையவன் –கீழ் சொன்ன லோகத்தை எல்லாம் ஆளுவது இருவருமான சேர்த்தியிலே ஆய்த்து-ஸ்ரீ ஷீராப்தி தொடக்கமான ஸ்தலங்களில் எல்லா வற்றிலும் காட்டில் அபிமத சித்திக்கு உடலான தேசம் -என்று திரு உள்ளத்தில் உகப்போடே கூட கண் வளர்ந்து அருளுகிற கோயில் ஸ்ரீ திருவரங்கமே –ஷீராப்தேர் மண்டலாத் பானோர் யோகினாம் ஹ்ர்தயாதபி ரதிம் கதோ ஹரிர் யத்ர தஸ்மாத் ரங்கமிதி  ஸ்ம்ர்தம்-என்னக் கடவது இறே-

பருவரங்கள் அவை பற்றி படை யாலித்து எழுந்தானை
செருவரங்க பொருது அழித்த திருவாளன் திருப்பதி மேல் 
திருவரங்க தமிழ்மாலை விட்டு சித்தன் விரித்தன கொண்டு 

இருவரங்கம் எரித்தானை ஏத்த வல்லார் அடியோமே -4 -8-10 –வீரஸ்ரீ யை உடையவன் திருப்பதி விஷயமாக –தேசிகரான ஸ்ரீ பெருமாளைச் சொன்னது எல்லாம் -உபசர்ஜன (அப்ரதான) கோடியிலேயாய் – அத் தேசமே ஆய்த்து   இத் திருமொழிக்கு விஷயம் 

கைந்நாகத் திடர் கடிந்த கனல் ஆழி படை வுடையான் கருதும் கோயில்
தென்னாடும் வடநாடும் தொழ நின்ற திருவரந்தத் திருப்பதியின் மேல்
மெய்நாவன் மெய்யடியான் விட்டு சித்தன் விரித்த தமிழ் உரைக்க வல்லார்
எஞ்ஞான்றும்   எம்பெருமான் இணை அடிக் கீழ் இணை பிரியாது இருப்பர் தாமே – 4-9 -11-திராவிட பாஷா ப்ரதானமான தென்னாடும் – சம்ஸ்க்ருத பாஷா பிரதானமான வட நாடும் இருந்ததே குடியாக தொழும்படி நின்ற ஸ்ரீ திருவரங்கம் என்கிற திருநாமத்தை உடைத்தான ஸ்ரீ திருப்பதி விஷயமாக-

(பிணி யரங்க வினையகலப் பெரும் காலம் தவம் பேணி
மணி யரங்க நெடு முடியாய் மலர் யயனை வழி பட்டுப்
பணி யரங்கப் பெரும் பாயல் பரஞ்சுடரை யாம் காண
அணி யரங்கம் தந்தானை அறியாதார் அறியாதார்
–ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார்-

கொடியாடு மணிமாட அயோத்தி மூதூர் குடி துறந்து திருவரங்கம் கோயில் கொண்ட நெடியோனே–திருவரங்கக் கலம்பகம் -)

வடிவுடை கடலிடம் கட்கிலி ( காகுத்தா ) என்னும் அவற்றில் –-வடிவுடை வானோர் தலைவனே (பரத்வ அனுபவமும் ) -என்றும் –-கடலிடம் கொண்ட கடல் வண்ணா (வ்யூஹ அனுபவமும் )-என்றும் –-கட்கிலி உன்னைக் காணுமாறு அருளாய் (அந்தர்யாம்ய அனுபவமும்)-என்றும்-காகுத்தா கண்ணனே ( அவதார விபவ அனுபவம் ) -என்றும் சொல்லுகிற படி தோன்றும் பரத்வாதிகளில் வைத்துக் கொண்டு-இவள் திறத்து என் கொலோ என்பிக்கிற வியூஹ சௌஹார்த்த பிரதானம் –இவள் திறத்து என் சிந்தித்தாய் -என்றும் –-என் கொலோ முடிகின்றது இவட்கே -என்றும் – இவளுடை ஆட்டத்தில் தேவரீர் சிந்தித்தது என் ? இவள் கார்யம் என்னாய் முடிய கடவது ?-என்று சொல்லும்படி பண்ணுகிற பாற் கடல் யோக நித்தரை சிந்தை செய்யும் வியூஹ குணமான சௌஹார்த்தத்தை பிரதானமாக உடைத்தாய் இருக்கும் என்கை —இஸ் ஸ்தலத்திலே வியூஹ சௌஹார்த்தமே பிரதான்யேன பிரகாசிக்கும் என்ற படி –

(வடிவுடைக்‌ கடலிடங்‌ கட்கிலீயென்னுமவற்றில்‌) “வடிவுடை வானோர்‌ தலைவனே” (திருவாய்மொழி 7-2-10) என்றும்‌, “கடலிடங்கொண்ட கடல் வண்ணா” (திருவாய்மொழி 7-2-7 என்றும்‌, “கட்கலி உன்னைக்‌ காணுமாறருளாய்‌” (திருவாய்மொழி 7-2-3) என்றும்‌ “காகுத்தா கண்ணனே” (திருவாய்மொழி 7-2-3) என்றும்‌ “திருவரங்கத்தாய்‌” (திருவாய்மொழி 7-2-4) என்றும்‌ பரத்வாதிகள்‌ ஐந்தும்‌ ப்ரகாஸித்ததேயாகிலும்‌ (இவள்‌ திறத்தென்‌ கொலோ என்பிக்கிற) “இவள் திறத்தென்செய்கின்றாய்‌” (திருவாய்மொழி 7-2-1 “இவள் திறத்து என்‌ சிந்தித்தாய்‌’ (திருவாய்மொழி 7-2-4) “என்கொலோ முடிகின்றதிவட்கு” (திருவாய்மொழி 7-2-2) என்று ‘இவள்‌ திறத்து தேவர்‌ செய்தருள நினைத்ததேது? இவள்‌ கார்யமென்னாய்‌ முடியக் கடவது என்று கேட்கையாலே “பாற் கடல்‌ யோக நித்திரை சிந்தை செய்த” (திருவாய்மொழி 2-6-5) என்று ஸர்வருடையவும்‌ ரக்ஷணோபாய சிந்தை பண்ணுகிற வ்யூஹத்தில்‌ ப்ரகாஸிக்கிற ஸெளஹார்த, குணம்‌ ப்ராதாந்யேந ப்ரகாஸிக்குமென்கிறார் –

முடிவிவள் தனக்கு ஒன்று அறிகிலேன்’ என்னும்; ‘மூவுல காளியே!’ என்னும்;
‘கடி கமழ் கொன்றைச் சடையனே!’ என்னும்; ‘நான்முகக் கடவுளே!’ என்னும்;
வடிவுடை வானோர் தலைவனே!’ என்னும்; ‘வண் திரு வரங்கனே!’ என்னும்;
அடி யடையா தாள் போல் இவள் அணுகி அடைந்தனள் முகில்வண்ணன் அடியே.–7-2-10–உன்னோடே ஒத்த வடிவை யுடைய நித்ய ஸூ ரிகளுக்கு நிர்வாஹகன் ஆனவனே-

பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய்! பற்றிலார் பற்ற நின்றானே!
கால சக் கரத்தாய்! கடலிடங் கொண்ட கடல்வண்ணா! கண்ணனே!’ என்னும்;
‘சேல்கொள் தண் புனல்சூழ் திருவரங்கத்தாய்!’ என்னும்’என் தீர்த்தனே!’ என்னும்;
கோல மா மழைக்கண் பனி மல்க இருக்கும்nஎன்னுடையக் கோமளக் கொழுந்தே.–7-2-7—-நீ எங்களை காலம் பார்த்து அன்றோ கிடக்கிறது –ஒரு கடல் கடலிலே சாய்ந்தால் போலே அணித்தாக திருப் பாற் கடலிலே சாய்ந்தில்லையோ-

வட்கிலள் இறையும் ‘மணிவண்ணா!’ என்னும்; வானமே நோக்குமை யாக்கும்
‘உட்குடை அசுரர் உயிரெலாம் உண்ட ஒருவனே!’ என்னும் உள் ளுருகும்;
கட்கிலீ! உன்னைக் காணுமாறு அருளாய் காகுத்தா! கண்ணனே!’ என்னும்;
திட்கொடி மதிள் சூழ் திருவரங்கத்தாய்’ இவள் திறத் தென் செய்திட்டாயே–7-2-3-பாஹ்ய சஷூஸூக்கு அவிஷயமான நீ நான் உன்னைக் காணும் படி கிருபை பண்ணி அருள வேணும்-நசஷூஷா பஸ்யதி –என்கிறது தாம் தாமே காண இழிவாருக்கு –தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வாம் -என்று அவன் தானே காட்டும் அன்று அவ்வருமை இல்லை -சிலருக்கு சதா தர்சனம் பண்ணைக் கொடுத்திலையோ – ‘கட்கிலீ! -கண்ணுக்கு இலீ என்றபடி -இப்படி அரிதான பொருளை நாம் சிலர்க்கு அருளிற்று உண்டோ என்ன-காகுத்தா! –ரூப ஓவ்த்தார்ய குணை பும்ஸாம் என்றும் ரூப சம்ஹ நனம் லஷ்மீம் என்றும் நாகரீகருக்கும் வான வாசிகளுக்கும் காட்டிக் கொடு திரிந்திலையோ-ஒரு கால் செய்தது கொண்டோ என்ன –-கண்ணனே!’ என்னும்;ஆயாந்தம் புண்டரீகாக்ஷம் வீக்ஷ மாணா குருஸ் த்த்ரிய-என்றும் தாஸாம் ஆவிர்பூத் என்றும் இடைச்சிகளுக்கும் அகப்பட காட்டிக் கொடு திரிந்திலையோ

இட்டகால் இட்ட கையளாய் இருக்கும்; எழுந்துலாய் மயங்கும் கை கூப்பும்;
‘கட்டமே காதல்’ என்று மூர்ச்சிக்கும்; ‘கடல்வண்ணா! கடியை காண்’ என்னும்;
‘வட்டவாய் நேமி வலங்கையா!’ என்னும் ‘வந்திடாய்’ என்றென்றே மயங்கும்;
சிட்டனே! செழுநீர்த் திருவரங்கத்தாய்! இவள் திறத் தென் சிந்தித்தாயே ?–7-2-4-சிரமஹரமான கோயிலிலே நில மிதியாலே தண்ணளி மிக்கு இருக்கிற நீர்-இவள் திறத்து -பேச்சுக்கு நிலம் இல்லாத படி நோவு பட்டக் கிடக்கிற இவள் திறத்து-என் சிந்தித்தாயே -நினைத்து இருந்தது என் –ஜீவிப்பிக்க நினைத்தீரோ -முடிக்க நினைத்தீரோ -இப்படிப்பட்ட ஆற்றாமையையும் பேற்றுக்கு உடலாக நினைத்து இருக்கிறிலள் -அவன் நினைவாலே பேறு என்று இருக்கிறாள் –உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் -என்ன கடவது இறே –

கங்குலும் பகலும் கண்துயில் அறியாள் கண்ண நீர் கைகளால் இறைக்கும்;
‘சங்கு சக்கரங்கள்’ என்று கை கூப்பும்; ‘தாமரைக் கண்’ என்றே தளரும்;
‘எங்ஙனே தரிக்கேன் உன்னை விட்டு!’ என்னும்; இரு நிலம் கைதுழா இருக்கும்;
செங்கயல்பாய் நீர்த் திருவரங்கத்தாய்! இவள் திறந்து என் செய்கின்றாயே?–7-2-1-அந்த சத்தவங்களுக்கு ஜலத்தை ஒழிய செல்லாதாப் போலே உம்மை ஒழிய செல்லாத இவள் திறத்து –நிறமும் இழந்து -சஞ்சாரமும் அற்று இறே இவள் கிடக்கிறது –ஏஹி பஸ்ய சரீராணி என்று வடிவைக் காட்டுகிறாள்-திருவரங்கத்தாய்-என் செய்கின்றாயே?-பரமபதத்தில் இருப்பிலோ கேட்க்கிறது-கண்ணுக்கு விஷயமான இடத்தே அன்றோ சாய்ந்து அருளிற்று -இவள் நிறம் பெற்று செருக்கி நடக்கும்படி பண்ணப் பார்த்ததோ -தவிரப் பார்த்ததோ – இவளை அவ் வூர்ப் படியாகப் பார்த்தாயோ இவ் வூர்ப் படியாகப் பார்த்தாயோ –

என் செய்கின் றாய்? என் தாமரைக் கண்ணா! என்னும் கண்ணீர் மல்க இருக்கும்
என் செய்கேன் எறி நீர்த் திருவரங்கத்தாய்! என்னும் வெவ் வுயிர்த் துயிர்த் துருகும்
முன் செய்த வினையே முகப்படாய் என்னும் முகில்வண்ணா! தகுவதோ என்னும்
முன் செய்திவ் வுலகம் உண்டு மிழ்ந் தளந்தாய்! என் கொலோ முடிகின்றது இவட்கே?–7-2-2-இவள் இடையாட்டத்தில் நீ செய்யப் பார்த்த படி என் என்னுதல் இவளுடைய தசை என்னாய் விடக் கடவதோ என்னுதல் -இவள் என்கிறது நீர் ரஷித்த ஜகத்துக்கும் -இவளுக்கும் உண்டான நெடுவாசி அறியீரோ -அநந்ய பரையாய்-அநந்ய கதியாய் -அபலையாய் இருக்கிற இவள் இடையாட்டத்தில் என் செய்து அருள நினைத்து அருளினீர் -என்கிறாள் –

உய்ந்து போந்து என் உலப்பிலாத வெந்தீ வினைகளை நாசம் செய்து உனது
அந்தமில் அடிமை அடைந்தேன் விடுவேனோ
ஐந்து பைந்தலை யாடரவணை மேவிப் பாற் கடல் யோக நித்திரை
சிந்தை செய்த வெந்தாய் உன்னைச் சிந்தை செய்து செய்தே
–2-6-5-திருப் பாற் கடலிலே ஜகத் ரக்ஷண சிந்தாத்மக யோக நித்திரை பண்ணி அருளினை சேதனர் உடைய உஜ்ஜீவன பிரகாரம் ஆதல் –ஆத்மாநம் வாஸூதேவாக்யம் சிந்தையன் மதுஸூதன-என்கிறபடியே தன்னை அனுசந்தித்தல் ஆதல்

இனி கோவிலுக்கு அனந்தரம் சொல்லப் படுவதான திருமலையில் பிரகாசிக்கிற குணத்தை அருளிச் செய்கிறார் —

மண்ணோர் விண்ணோர் வைப்பில்‌ போகின்ற ஏழுலகுக்குயிர் பாசம்‌ வைத்த நிகரில்‌ வாத்ஸல்யம்‌ உஜ்ஜ்வலம்‌.–சூரணை -160-

( வைப்பு -திருமலை -போகின்ற எழு உலகுக்கு உயிர் -அந்தர்யாமி -அதன் குணம் வாத்சல்யம் –
வாத்சல்யத்துக்கு விசேஷணங்கள் -பாசம் வைத்த என்பதும் நிகரில் என்பதும் – ஒழிவில் காலம் -உலகமுண்ட பெருவாயா திருவாய்மொழிகளில் இருந்து அருளிய ஸ்ரீ ஸூக்திகள் வைப்பில் வாத்சல்யம் உஜ்ஜ்வலம் என்று அன்வயம் )

அதாவது-மண்ணோர் விண்ணோர் வைப்பில் –கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு–திருவாய்-1-8-3 -என்றும் –தண்ணருவி வேம்கடமே வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு -நான்முகன்-45–என்றும் – உபய விபூதி உள்ளோர்க்கும் சேமித்து வைத்த நிதி போல் பிராப்யமாய் இருக்கிற திரு மலையில் –

(மண்ணோர்‌ விண்ணோர்‌ வைப்பில்‌) “கண்ணாவான்‌ என்றும்‌ மண்ணோர்‌ விண்ணோர்க்கு”  (திருவாய்மொழி 1-8-3) என்றும்‌, “தண்ணருவி வேங்கடமே வானோர்க்கும்‌ மண்ணோர்க்கும்‌ வைப்பு” (நான்முகன்‌ திருவந்தாதி 45) என்றும்‌ உபய விபூதி யிலுள்ளார்க்கும்‌ ஆபத்‌ தநமாய்‌ நிற்கிற திருமலையில்‌ நிலையிலே-

கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு
தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பனே –1-8-3-சம்சாரிகளோடு நித்ய ஸூ ரிகளோடு வாசி இல்லை –அரை க்ஷணம் தங்கள் கார்யம் நிர்வஹித்துக் கொள்ள மாட்டாமைக்கு-கண்ணாகைக்காக என்னுதல்-கண்ணாம் அவன் என்னுதல்-கண் -என்று நிர்வாஹகன் –-சஷூர் தேவா நாம் உதமர்த்தயா நாம் -என்கிற ஸ்ருதி அர்த்தத்தின் படியே சொல்கிறார்-

புரிந்து மலரிட்டுப் புண்டரீகப் பாதம்
பரிந்து படுகாடு நிற்ப -செரிந்து எங்கும்
தான் ஓங்கி நிற்கின்றான் தண்ணருவி வேங்கடமே
வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு-45-குளிர்ந்த திரு அருவிகளை யுடைய திருமலையே-
திரு நாட்டில் உள்ளாருக்கும் சம்சாரிகளுக்கும் வைப்பு -பரம ப்ராப்யம் –

போகின்ற ஏழு உலகுக்கு உயிர்ப் பாசம் வைத்த நிகரில் வாத்சல்யம் உஜ்ஜ்வலம்-போகின்ற காலங்கள் -போய காலங்கள் போகு காலங்கள் தாய் தந்தை உயிர் ஆகின்றாய்–திருவாய்-2-6-10 -என்றும் –
கண்ணா ஏழு உலகுக்கு உயிராய எம் கார் வண்ணனை–பெரிய திருமொழி-1-9-10- -என்றும் – சொல்லுகிறபடி -சர்வ காலமும் சர்வ ஆத்மாக்களுக்கும் சர்வ வித பந்துமாய்க் கொண்டு – சர்வருக்கும் ஆத்மாவாய் இருக்கிற அந்தர்யாமி உடைய குணமாய் இருப்பதாய் –-என் கண் பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதி—திருவாய்-3-3-4-என்றும் – நிகரில் புகழாய் -திருவாய்-6-10-10- -என்றும் –
மிகவும் தண்ணியனாய் இருக்கிற என் பக்கலிலே சங்கத்தை பண்ணினான் என்றும் – ஒப்பில்லா புகழை உடையவனே என்றும் சொல்லப்பட்ட -வாத்சல்யம் – பரம் சுடர் ஜோதி -என்று வடிவிலே தொடை கொள்ளலாம் படி உஜ்ஜ்வலமாய் இருக்கும் என்கை —

(போகின்றவேழுலகுக்குயிர்‌) “போகின்ற காலங்கள்‌ போய காலங்கள்‌ போகு காலங்கள்‌ தாய்தந்தை உயிராகின்றாய்‌” (திருவாய்மொழி 2-6-10 என்றும்‌, “கண்ணாயேழுலகுக்கு உயிராய எங்கார் வண்ணனை‘ (பெரிய திருமொழி 1-9-10) என்றும்‌ சொல்லுகிறபடியே ஸகல காலமும்‌ ஸர்வாத்மாக்களுக்கும்‌ ஸர்வவித பந்துவுமாய்க்‌ கொண்டு ஸர்வர்க்கும்‌ ஆத்ம பூதனாயிருக்கிற அந்தர்யாமித்வத்தில்‌ ப்ரகாஸிப்பதாய்‌-(பாசம்‌ வைத்த நிகரில்‌ வாத்ஸல்யம்‌ உஜ்ஜ்வலம்‌) ‘ என் கண்‌ பாசம்‌ வைத்த” (திருவாய்மொழி 3-3-4) “நிகரில்‌ புகழாய்‌” (திருவாய்மொழி 6-10-10) என்று அத்யந்தம்‌ தண்ணியனாயிருக்கிற என் பக்கலிலே ஸங்கத்தைப்‌ பண்ணினான்‌ என்னும்‌ ஒப்பிலாத புகழை உடையவனே என்று சொல்லுகிற வாத்ஸல்யம்‌ “வேங்கடத்தெழில்‌ கொள்‌ சோதி” (திருவாய்மொழி 3-3-2 என்றும்‌ “நிலவும்‌ சுடர்‌ சூழொளிமூர்த்தி” (திருவாய்மொழி 6-10-7) என்றும்‌ “”பரஞ்சுடர்ச்சோதி”  (திருவாய்மொழி 3-3-4) என்றும்‌ சொல்லுகிறபடியே உஜ்ஜ்வலமாய்க்‌ கொண்டு பிரகாஸிக்கும் என்கிறார் –

போகின்ற காலங்கள் போய காலங்கள் போக் காலங்கள் தாய் தந்தை உயிரா
கின்றாய்
உன்னை நான் அடைந்தேன் விடுவேனோ
பாகின்ற தொல் புகழ் மூ வுலகுக்கும் நாதனே பரமா தண் வேங்கட
மேகின்றாய் தண் துழாய் விரை நாறு கண்ணியனே –2-6-10—கால த்ரயத்தாலும் தாயும் தமப்பனும் செய்யும் நன்மைகளும்-உயிராகின்றாய் –-ச பித்ராச பரித்யக்த –என்று அவர்கள் விடும் அளவிலும் தான் தனக்குப் பார்க்கும் நன்மைகளையும் செய்யுமவனே-இச் சேதனர் அநாதி காலம் தன விநாசத்தையே சூழ்த்துக் கொள்ள -முகம் தோற்றாத படி நின்று சத்தையை நோக்கி போந்தவன் அல்லையோ –

கண்ணா யேழ் உலகுக்கு உயிராய வெங்கார் வண்ணனை
விண்ணோர் தாம் பரவும் பொழில் வேங்கட வேதியனை
திண்ணார் மாடங்கள் சூழ் திரு மங்கையர் கோன் கலியன்
பண்ணார் பாடல் பத்தும் பயில்வார்க்கு இல்லை பாவங்களே-1-9-10—சகல லோகங்களுக்கும் த்ருஷ்டி  பூதனாய் சத்தா ஹேதுவான பிராணனாய்-அதுக்கு மேலே என்னை அனுபவிக்கைக்காக மேகம் போலே ஸ்ரமஹரமான வடிவை உடையவனாய் ஏழு உலகத்து உள்ளோரோபாதி நித்ய ஸூரிகளும் ஒரு மூலையிலே புகுந்து ஏத்துகிற திருமலையை வாஸஸ் ஸ்தானமாக உடைய வேதைக சமதி கம்யனை யாயிற்று கவி பாடிற்று–நித்ய ஸூரிகள் -பரமபதத்தை விட்டு -திருவேங்கடமுடையானையும் விட்டு -திருமலையையும் விட்டு இங்குள்ள பொழில்களை ஸ்தோத்ரம் பண்ணுகிறார்கள்

ஈசன் வானவர்க்கு என்பன் என்றால் அது
தேசமோ திரு வேங்கடத் தானுக்கு?
நீசனேன் நிறைவு ஒன்றுமிலேன் என்கண்
பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதிக்கே.–3-3-4-
–வானவர்க்கு ஈசன் ஆனவன் என் கண் பாசம் வைத்தான்
அவர்களோடு கலந்து அவர்கள் சத்தைக்காக என்னோடு கலந்து தனக்கு சத்தை உண்டாக்குகைக்காக
தன் விஷயத்தில் பாசம் உண்டாம் படி என்னைப் பண்ணினான் என்றும் சொல்லுவார்-என்னோட்டை கலவியாலே அது உஜ்ஜவலனமாம் படி சங்கத்தாலே கலந்தான் என்னும் இடம் வடிவில் தோற்றி இருக்கை-

அகல கில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா!
நிகரில் புகழாய்! உலக மூன்றுடையாய்? என்னை ஆள்வானே!
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே!
புகல் ஓன் றில்லா அடியேன் உன் னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே.–6-10-10–இப்படி இருக்கிறவள் தானே சிதகு உரைக்கும் அன்றும் அவளுடனே மன்றாடும் குணமிகுதியின் விசேடம் சொல்லுகிறது. என்றது,
‘என்னடியார் அது செய்யார்’ என்று என்னைப் பற்றினார்க்கு அது இல்லை காண் என்கிறது என்றபடி.
‘இல்லை, நான் இப்போது இன்ன குற்றம் செய்யக் கண்டேன்’ என்று காட்டிக் கொடுத்தாலும், ‘ஆனால் என்? தர்மம் அதர்மம் பரலோகம் என்னும் இவற்றை இல்லை என்று செய்கிறார்களோ? தங்களை அறியாதே நிகழும் குற்றங்கட்கு நாம் உளோம் என்றன்றோ செய்கிறது’ என்கை. இவளுடைய உயர்வுக்கு அடி சொல்லும் போது அவனைப் பற்றிச் சொல்லலாம்;-அவனுடைய உயர்வுக்கு ஒன்று தேடிச் சொல்லலாவது இல்லையாதலின், ‘நிகரில்’ என்கிறது. இதுவோ தான் பொருளின் தன்மை இருக்கும்படி.-

ஒழிவு இல் காலம் எல்லாம் உடனாய் மன்னி
வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம்
தெழி குரல் அருவித் திருவேங் கடத்து
எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே.–
3-3-1-அர்ச்சிராதி கதியாலே-ஓரு தேச விசேஷத்திலே விலக்ஷண சரீரத்தைப் பெற்று அனுபவிக்கக் கடவ இவன்-இச் சரீரத்தோடு அனுபவிக்கலாம் படி ஸூ லபனாய் நிற்கிற திருமலையிலே-எழில் கொள் சோதி எந்தை –-துர்லபன் ஆகிலும் விட ஒண்ணாத வடிவு அழகு -அந்த நிலம் மிதியாலே நிறம் பெற்ற அழகு-விரூபன் ஆனாலும் விட ஒண்ணாத பிராப்தி -எந்தை -என்கிறது -ஸுலப்யத்தாலும் அழகாலும் தோற்பித்த படி சொல்லிற்று –-தந்தை தந்தைக்கே-
பரம சேஷி யானவனுக்கு –ப்ராப்ய பிரதானமான திரு மந்திரத்தில் உள்ளது எல்லாம் சொல்லுகிறது இப்பாட்டாலே –

உலகம் உண்ட பெருவாயா! உலப்பில் கீர்த்தி அம்மானே!
நிலவும் சுடர்சூழ் ஒளி மூர்த்தி! நெடியாய்! அடியேன் ஆருயிரே!
திலதம் உலகுக் காய்நின்ற திருவேங் கடத்தெம் பெருமானே!
குல தொல் அடியேன் உன பாதம் கூடுமாறு கூறாயே.–6-10-1—-உள்ளு மண்ணீடாய் புறம்பு ஒளியூட்டி இருக்கை அன்றிக்கே உள்வாயோடு புறவாயோடு வாசி அற ஒளியேயாய் இருக்கிற படி-

ஈசன் வானவர்க்கு என்பன் என்றால் அது
தேசமோ திரு வேங்கடத் தானுக்கு?
நீசனேன் நிறைவு ஒன்றுமிலேன் என்கண்
பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதிக்கே.
–3-3-4-என்னோட்டை கலவியாலே அது உஜ்ஜவலனமாம் படி
சங்கத்தாலே கலந்தான் என்னும் இடம் வடிவில் தோற்றி இருக்கை-

பாசம் வைத்த நிகரில் வாத்சல்யம் -என்கையாலே-ஒழிவில் காலம் எல்லாம் –-உலகம் உண்ட பெரு மாயன்- இரண்டையும் சேர்த்துப் பிடித்து அருளிச் செய்தமை தோற்றுகிறது–

கோவிலுக்கு அனந்தரம் திரு மலையை சொல்லுகை தேட்டமாகில் ,இரண்டு திரு மலையையும் ஒவ்வாதோ ?–தெற்குத் திரு மலை விஷயமான கிளர் ஒளி இளமை-கீழே கிடக்க –-ஒழிவில் காலத்தில் -சொன்ன வடக்குத் திருமலையை அருளிச் செய்வான் என் என்னில் –-பரத்வாதிகளுக்கு அசாதாரணமான குண பிரகாசமான ஸ்தலங்களை அருளிச் செய்கிற பிரகரணமாகையாலே
தெற்கு திரு மலையில் பிரகாசிக்கிற குணம் இதற்குச் சேர்த்தி இல்லாதது கொண்டு –-கிளர் ஒளி இளமை யை -செஞ்சொல் கவியோடு சேர்த்து அருளுவதாக விட்டு வைத்து – இது முதலாக அருளிச் செய்தார் இத்தனை —

இனி -ஒழிவில் காலத்துக்கு -பின்பு திருப்பதி விஷயமான திரு வாய் மொழி –-ஒன்றும் தேவு -ஆகையாலே ,திரு நகரியிலே பிரகாசிக்கிற குணத்தை அருளி செய்கிறார் .–

உபய பிரதான பிரணவமான உறை கோவிலிலே எத் தேவும் என்னும் பரே சத்வம் பொலியும்-சூரணை -161-

(பர ஈசத்துவம் -பரேசத்வம்-பொலியும் என்றது -பொலிந்து நின்ற பிரான் -உத்சவர் திரு நாமம் என்பதால் )

அதாவது-உபய பிரதான பிரணவமான உறை கோவிலிலே — ஒமித்யாத்மானம் யுஞ்ஜீத (ஓம் என்று சொல்லி ஆத்மாவைத் தியானம் செய்யக் கடவன் )-என்றும் – ஒம் காரோ பகவான் விஷ்ணு (ஓம் என்பது பகவானாகிய ஸ்ரீ விஷ்ணு)-என்றும் -சொல்லுகிறபடியே சப்தார்தங்களில் உடைய பிரதான்யத்தாலே ஜீவ ஈஸ்வரர்கள் இருவருக்கும் வாசகமாய் கொண்டு இருவருடையவும் பிரதானம் தோன்றுவிக்கிற பிரணவம் போலே ஆழ்வாருடையவும் -பொலிந்து நின்ற பிரான் உடையவும் ஆக்ஜை இரு புரிந்து நடக்கையாலே – உபயர் உடையவும் பிரதானம் தோற்றுவிக்கும் படி இருப்பதாய் –அவன் மேவி உறை கோவில்-திருவாய்-4-10-2 -என்று பரம பதத்தில் சம்சாரிகள் இழவை நினைத்து உள் வெதுப்போடே இருக்குமா போலே அன்றி – அவர்களுக்கு அணித்தாக வந்து நிற்கப் பெறுகையாலே உள் வெதுப்பு அற்று வர்த்திக்கிற ஸ்தலமான திரு நகரியிலே —

(உபய ப்ரதாந ப்ரணவமான உறை கோயிலில்‌) “ப்‌ரஹ்மணேத்வா மஹஸ ஓமித்யாத்மாநம்‌ யுஞ்ஜீத” என்றும்‌ “ஒங்காரோ பகவாந்‌ விஷ்ணு: என்றும்‌ சொல்லுகிறபடியே ப்ரணவம்‌ ஜீவேஸ்வரர்களிருவர்க்கும்‌ வாசகமாய்க்‌ கொண்டு உபயருடையவும்‌ ப்ராதாநீயம்‌ தோற்ற விருக்கிறாப் போலே பொலிந்து நின்ற பிரானுடையவும்‌ ஆழ்வாருடையவும்‌ திவ்யாஜ்ஞை இருபுரிந்து நடக்கையாலே உபயருடையவும்‌ ப்ராதாந்யம்‌ தோற்றுவதாய்‌ “அவன்‌ மேவி உறைகோயில்‌” (திருவாய்மொழி 4-10-2 என்று ஆழ்வாரை விஷயீ கரிக்கலான தேஸமாகையாலே பரமபதத்தில்‌ உள் வெதுப்புத்‌ தீர்ந்து அவன்‌ வர்த்திக்கிற திருநகரியில்‌ நிற்கிற நிலையிலே-

நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான்
வீடில் சீர்ப் புகழ் ஆதிப்பிரான் அவன் மேவி உறை கோயில்,
மாட மாளிகை சூழ்ந்தழகாய திருக் குருகூரதனைப்
பாடி ஆடிப் பரவச் சென்மின்கள், பல்லுலகீர்!பரந்தே.–4-10-2—இவற்றை உண்டாக்கினவன் ஆஸ்ரயண அர்த்தமாக பொருந்தி வர்த்திக்கிற தேசம்-பரமபதத்தில் கரம்பு அறுக்க வேண்டாமையாலே சந்நிதி மாத்திரமே அமையும்-ரக்ஷக அபேக்ஷை உள்ளத்து இங்கேயேயாகையாலே-பொருந்தி வார்த்தைக்கும் தேசம் என்கை –நல்ல படுக்கையும் போக்யங்களும் உண்டாய் இருக்க தொட்டில் கால் கிடை அல்லது பொருந்தாத தாய் போலே 

எத் தேவும் என்னும் பரே சத்வம் பொலியும் –-எத் தேவும் எவ் உலகங்களும் மற்றும் தன்பால் மறுவில் மூர்த்தியோடு ஒத்து இத்தனையும் நிற்கும் வண்ணம் நிற்கவே திரு குருகூர் அதனுள் குரிய மாணுருவாகிய நீள் குடக் கூத்தன்–திருவாய்-4-10-10- -என்று ஸ்வ வ்யதிரிக்த சமஸ்த வஸ்துகளுக்கும்– ஸ்வ அசாதரண விக்ரகத்தோபாதி தனக்கே பிரகாராம் படி இருக்கிற ஐஸ் வர்யத்தோடு கூட திருக் குருகூரில் சுலபனாய் வந்து நின்றான் என்று சொல்லப்பட்ட-திருக்குருகூர் அதனுள் பரன் –திருவாய்-4-10-3–என்றும் ,-திரு குருகூர் அதனுள் ஈசன் திருவாய்-4-10-4–என்றும்–சுலபனான நிலையில் -பிரகாசிக்கிற பரத்வ லஷணமான ஈஸ்வரத்வம் –-பொலிந்து நின்ற பிரான்-என்கையாலே அவிருத்தம் ஆகா (விளங்கா) நிற்கும் என்கை–

(எத்தேவு மென்னும்‌ பரே ஸத்வம்‌ பொலியும்‌) ‘உறுவதாவதெத்தேவும்‌ எவ்வுலகங்களும்‌ மற்றும்‌ தன்பால்‌ மறுவில்‌ மூர்த்தயோடு (இத்தனையும்‌ நின்ற வண்ணம்‌ நிற்கவே” (திருவாய்மொழி 4-10-10) என்றும்‌, திருக் குருகூரதனுள்‌ பரன்‌” (திருவாய்மொழி 4-10-3) என்றும்‌ “திருக்குருகூரதனுள்‌ ஈசன்‌” (திருவாய்மொழி 4-10-4) என்றும்‌ “பொலிந்து நின்ற பிரான்‌” (திருவாய்மொழி 4-10-5) என்றும்‌ சொல்லுகிறபடியே ஸ்வ வ்யதிரிக்த ஸமஸ்தமும்‌ தனக்கு ஸரீரமாமிடத்தில்‌ அப்ராக்ருத விக்‌ரஹத்தோடொக்கும்படி தான்‌ ஸரீரியா யிருக்கிற பரத்வத்தில்‌ ப்ரகாஸிக்கிற நியந்த்ருத்வ குணம்‌ அபி வ்ருத்‌தமாம் என்கிறார் –

உறுவது ஆவது எத்தேவும் எவ் வுலகங்களும் மற்றும் தன்பால்
மறுவின் மூர்த்தியோடு ஒத்து இத்தனையும் நின்ற வண்ணம் நிற்கவே
செறுவில் செந்நெல் கரும்பொடு ஓங்கு திருக் குருகூரதனுள்
குறிய மாண் உருவாகிய நீள்குடக் கூத்தனுக்கு ஆட்செய்வதே
.–4-10-10—செய்கையில் செந்நெலும் கரும்பும் இசலி வளரா நிற்கிற திரு நகரி-இவ் ஊரில் பதார்த்தங்களில் ஒன்றில் ஓன்று குறைந்து இருப்பது இல்லை –-குறிய மாண் உருவாகிய நீள்குடக் கூத்தனுக்கு ஆட்செய்வதே.– குறிய-ஆஸ்ரிதற்கு கண்ணாலே முகந்து அனுபவிக்கலாம் படி தன்னை தாழ விட்ட படி –-உண்டு என்று இட்ட போதொடு இல்லை என்ற போதொடு வாசி இன்றிக்கே முகம் மலர்ந்து போம் படி இரப்பிலே தகணேறினபடி
குடகு கூத்தாடுகிற போது கண்டாரோபாதி பிற்பாடராய் கேட்டார் வாய் கேட்டார்க்கும் சம காலம் போலே பிரியமாம் படி மநோ ஹரியான சேஷ்டிதத்தை யுடையவனுக்கு –-அந்த சேஷ்டிதங்களே அடிமை கொள்ளும் -நீங்கள் இசையும் அத்தனையே வேண்டுவதுஆள் செய்வதே உறுவது ஆவது -என்று அந்வயம்-

பரந்த தெய்வமும் பல் உலகும் படைத்து அன்று உடனே விழுங்கிக்
கரந்து உமிழ்ந்து கடந்து இடந்தது கண்டும் தெளிய கில்லீர்
சிரங்களால் அமரர் வணங்கும் திருக்குருகூர் அதனுள்
பரன்
திறமன்றிப் பல்லுலகீர்! தெய்வம் மற்றில்லை பேசுமினே.–4-10-3-பரமபதத்திலும் வியாப்தியிலும் காட்டில் திருநகரியில் நின்ற நிலையிலே பரத்வம் மிக்கு இருக்கிற படி-மனுஷ்யத்வே பரத்வத்துக்கும் அவ்வருகே ஓன்று இறே இது-வஸ்துவுக்கு குணாதிக்யத்தாலே யாகில் உத்கர்ஷம்-அது மிக்க இடத்திலே பரத்வம் உறைத்து தோற்றக் கடவது இறே

பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும்
நாயகன் அவனே கபால நன் மோக்கத்துக் கண்டு கொண்மின்
தேச மாமதிள் சூழ்ந்து அழகாய திருக்குருகூர் அதனுள்
ஈசன்
பால் ஓர் அவம் பறைதல் என்னாவது இலிங்கியர்க்கே?–4-10-4–அஜஹத் ஸ்வபாவன் ஆகையால் இஸ் ஸுலப்யத்திலேயும் மேன்மை குறையாது இருக்கிறபடி-ய பரஸ்ஸ மஹேஸ்வர -என்றும் ஈஸதே பகவா நே க –என்றும் பிராமண பிரசித்தனான சர்வேஸ்வரன்-ஈசன் ஈசானன் என்கிற இது மஹா வ்ருக்ஷம் என்னுமா போலே சமாக்கிய மாத்ரமேயாய் அர்த்தம் இன்றிக்கே இருக்கை –

இலிங்கத் திட்ட புராணத்தீரும் சமணரும் சாக்கியரும்
வலிந்து வாது செய்வீர்களும் மற்று நும் தெய்வமுமாகி நின்றான்
மலிந்து செந்நெல் கவரி வீசும் திருக் குருகூர் அதனுள்
பொலிந்து நின்ற பிரான்
கண்டீர் ஒன்றும் பொய்யில்லை போற்றுமினே.–4-10-5-சேதன அசேதன விபாகம் அற பொலிந்து நின்ற பிரானுக்கு அனுகூல வ்ருத்திகளை பண்ணுமாயிற்று-அதனுள்-பொலிந்து நின்ற பிரான்-பரம பதத்தை விட்டு இவ்வருகே தாழ நிற்க நிற்க குணங்கள் மேன்மேல் என விஞ்சி வருகிற படி-சொன்னார் சொன்ன யுக்திகள் எல்லா வற்றுக்கும் அவ்வருகாய் நிற்கை என்னவுமாம்-கண்டீர் ஒன்றும் பொய்யில்லை போற்றுமினே.–-இத் தேவதைகள் பக்கல் உதகர்ஷம் எல்லாம் பொய்யாய் இருக்குமா போலே -இவ்விஷயத்தில் சொல்லுகிற உத்கர்ஷத்துக்கு ஒன்றும் பொய்யில்லை-போற்றுமினே -சடக்கென ஆஸ்ரயிங்கோள் -நீங்கள் அபேக்ஷியாது இருக்க நான் சொல்லுகிறது உங்கள் துர்தசையைப் பற்ற –

இதுக்கு பின் திருப்பதி விஷயமான திருவாய்மொழி -எங்கனயோ -ஆகையாலே – திருக் குருங்குடியில் பிரகாசிக்கிற குணத்தை அநந்தரம் அருளிச் செய்கிறார் —

வைஷ்ணவ வாமநத்தில்‌ நிறைந்த நீலமேனியின்‌ ருசிஜநக விபவ லாவண்யம்‌ பூர்ணம்‌-சூரணை -162-

அதாவது-திருக்குறுங்குடி என்னாதே வைஷ்ணவ வாமநத்திலே என்றது ஸாபிப்ராயம்-அதாவது வாமன அவதாரத்திலே தன்னுடைமை பெறுகுகைக்கு அர்த்தி ஆனாப் போலே – அர்த்தியாய் நின்று ஸ்ரீ பாஷ்ய காரர் பக்கல் வேதாந்தார்தம் கேட்டு சிஷ்யனாய் – நாமும் நம் இராமானுசனை உடையோம் – என்கையாலே ஸ்ரீ வைஷ்ணவ நம்பி என்ற திருநாமமாய்- வாமன அவதார அம்சமாக -புராண சித்தராய் இருக்கிற நம்பி உடைய திருப்தி என்கை —அன்றிக்கே –-அறியக் கற்று வல்லவர் வைட்டணவர்-என்று இத் தேச விஷயமான திருவாய் மொழியை கற்றவர்கள் வைஷ்ணவர் என்கையாலே வைஷ்ணவர்கள் உடையதாய் -வாமன ஷேத்ரமாய் இருக்கும் தேசத்தில் என்னுமாம்-வாமன அவதார பிரசங்கத்துக்கு பிரயோஜனம் -விபவ லாவண்யம் பூர்ணம் -என்கிறதுக்கு உடலாக விபவ அன்வயத்தை உணர்த்துகையும் – குறியவன் குடி குறும்குடி – என்னும் அர்த்தத்தை தெரிவிக்கையும் –

அறிவரிய பிரானை ஆழி அம் கையனையே அலற்றி
நறிய நன்மலர் நாடி நன் குருகூர்ச் சடகோபன் சொன்ன
குறி கொள் ஆயிரத்துளிவை பத்தும் திருக்குறுங்குடி யதன்மேல்
அறியக் கற்று வல்லார் வைட்ணவர் ஆழ்கடல் ஞாலத்துள்ளே.–5-5-11—பரம பதத்திலும் அவதாரங்களிலும் திருக்குறுங்குடி நிலையிலே அழகாலும் சீலத்தாலும் உண்டான ஏற்றம் அறிந்து கற்க வல்லவர்கள் -குணாதிக்யம் இறே வஸ்துவுக்கு ஏற்றம் -வியக்தமாக கற்க வல்லார்கள் என்றுமாம்
மரு பூமியான சம்சாரத்திலே -உகந்து அருளின ஏற்றம் அறியுமவர்கள் நித்ய ஸூரிகளோடு ஒப்பார்கள்-

ஆக இப்படி இருந்துள்ள திருக் குறும்குடியுள் –-நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த நீண்ட பொன் மேனியோடும் நிறைந்து என்னுள்ளே நின்று ஒழிந்தான் -திருவாய்-5-5-7-என்றும் , நீல மேனியும் நான்கு தோளும் என் நெஞ்சம் நிறைந்தனவே -திருவாய்-5-5-6-என்றும் சொல்லுகிறபடியே -இவர் உள்ளத்தில் வேறு ஒன்றுக்கும் இடம் அறும் படி -பிரகாசிக்கிற – காள மேக நிபச்ஸ்யமமான விஹ்ரஹத்தின் உடைய –செல்கின்றது என் நெஞ்சம்–திருவாய்-5-5-1-என்கிறபடி – மேன் மேலும் அனுபவ ருசி ஜனகமாய்
ரூபவான் ஸூபக ஸ்ரீ மான்–ஸூ ந்தர-34-30- -என்றும்-ரூப சம்ஹனனம் லஷ்மீம் ஸுகுமார்யம் ஸூவேஷதாம் தத்ருஸூ விஸ்மிதாகாரா ராமஸ்ய வன வாஸின-ஆரண்ய-1-13-என்றும் – விபவத்தில் பிரகாசிக்குமதாய் சொன்ன –சமுதாய சோபையான -லாவண்யம்- நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த திருவாய்-5-5-7-என்கையாலே பூரணமாய் இருக்கும் என்கை –

(வைஷ்ணவ வாமநத்தில்‌) வைஷ்ணவ வாமனமான திருக்குறுங்குடியில்‌ நிற்கிற நிலையிலே  (நிறைந்த நீலமேனியின்‌) “நீலமேனியும்‌ நான்கு தோளும் என்நெஞ்சம் நிறைந்தனவே”  (திருவாய்மொழி 5-5-6) என்று, இவர்‌ திருவுள்ளத்திலே ப்ரகாஸிக்கும்படியான காளமேக நிபாஸ்யமமான விக்‌,ரஹத்தினுடைய (ருசி ஜநக விபவ லாவண்யம்‌ பூர்ணம்‌ ) “செல்கின்ற தென்‌ நெஞ்சமே” (திருவாய்மொழி 5-5-1 என்று ருசியைப்‌ பிறப்பிப்பதாய்‌ “பும்ஸாம் த்‌ருஷ்டி சித்தாபஹாரிணம்‌‘ (ரா.௮.3-29 , “ரூபவாந்‌ ஸுபக ஸ்ரீமாந்‌ கந்தர்ப இவ மூர்த்திமாந்‌” (ரா. ஸு.34-30) “ஸாக்ஷாந்‌ மந்மத மந்மத,:” (ஸ்ரீபாகவதம்‌ 10-32-2 என்றும்‌ சொல்லுகிறபடியே ஸஜாதீயரையும்‌ மடலெடுக்கும்படி பண்ண வற்றான விபவத்தில்‌ ப்ரகாஸிக்கிற “நிறைந்த சோதி வெள்ளம்‌ சூழ்ந்த நீண்ட பொன் மேனி (திருவாய்மொழி 5-5-7) என்கிற லாவண்யம்‌-நம்பி என்கையாலே பூர்ணம்‌” என்கிறார் 

நிறைந்த வன்பழி நம்குடிக்கு இவள் என்று அன்னை காணக் கொடாள்
சிறந்த கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த நீண்ட பொன் மேனியொடும்
நிறைந்து என்னுள்ளே நின்றொழிந்தான்
நேமி அம் கை உளதே.–5-5-7—அபரிச்சின்னமான தேஜஸ்ஸினுள்ளே உன்நேயமாம் படி யாயிற்று திரு மேனி இருப்பது -இது தேஜஸ்ஸினுள்ளே வடிவு தான் அபரிச்சேதயமான போக்யதையை யுடையதாய் நித்ய ஸ்ப்ருஹா விஷயமாய் இருக்கை –-நிறைந்து என்னுள்ளே நின்றொழிந்தான் நேமி அம் கை உளதே.–-இந்த விக்ரஹத்தோடே நெஞ்சு நிறையும்படி நின்றான் -அவன் நிறைவைக் குறைக்கில் அன்றோ என் பழியைக் குறைப்பது –நேமி அம் கை உளதே.–-அல்லாத அழகுகள் எல்லா வற்றிலும் மிகுதியாய் யாயிற்று கையும் திரு வாழியும் இருப்பது -வெறும் புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டும் படியான திருக் கையிலே திரு வாழி யானால் மீட்கப் போமோ –

மேலும் வன்பழி நங்குடிக்கு இவள் என்று அன்னை காணக் கொடாள்
சோலை சூழ் தண் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
கோல நீள்கொடி மூக்கும் தாமரைக் கண்ணும் கனிவாயும்
நீல மேனியும் நான்கு தோளும் என் நெஞ்சம் நிறைந்தனவே.
–5-5-6–அழகு மிக்க கொடி போலே இருக்கிற மூக்கும் -அழகு கொழுந்து விட்ட தொரு கொடி போலே இருக்கை–அக் கொடி பூத்தால் போலேயாய் – தாமரைப் பூப் போலே இருக்கிற திருக் கண்களும் -அது ஒரு பலத்தை உண்டாக்கினால் போலே கனி போலே இருக்கிற திருவதரமும்-இவற்றுக்கு பரபாகமாய் -தாமரை இலை போலே இருக்கிற திரு மேனியும் –கற்பக தரு பணைத்தால் போலே மநோ ஹரமாய்-அவ் வழகைக் காத்தூட்ட கடவ தோள்களும் –என் நெஞ்சம் நிறைந்தனவே.–ஹித வசனம் கேட்க்கைக்கு நெஞ்சில் இடம் இல்லை

எங்ஙனேயோ அன்னை மீர்காள்! என்னை முனிவது நீர்!
நங்கள் கோலத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
சங்கி னோடும் நேமி யோடும் தாமரைக் கண்களோடும்
செங்கனி வாய் ஒன்றினோடும் செல்கின்றது என்நெஞ்சமே.–5-5-1—ஜாதி வியக்தி தோறும் பரிசமாப்ய வர்த்திக்குமா போலே நெஞ்சு அழகு தோறும் செல்லா நின்றது –-செல்கின்றது -இன்னமும் தறை கண்டது இல்லை –-நாங்களும் அவ்வழகை அனுபவித்து அன்றோ இருக்கிறது என்ன –என் நெஞ்சமே –அவன் தானே காட்டக் கண்டு அனுபவித்த என் நெஞ்சு -உங்கள் வார்த்தை கேட்க்கைக்கு நெஞ்சுடையாரை யன்றோ ஹிதம் சொல்லி மீட்பது –

இப்படி பரத்வாதிகளுக்கு அசாதாரணமான ஓர் ஓர் குணங்கள் பிரதானயேன பிரகாசிக்கும் ஸ்தலங்களை அருளிச் செய்த அநந்தரம் – மற்றும் உண்டான குணங்களில் -ஓர் ஓன்று -பிரதான்யேன பிரகாசிக்கும் ஸ்தலங்களை ஸ்ரீவர மங்கை முதலாக -திரு பேர் நகர் எல்லையாக -திருவாய்மொழி அடைவிலே அருளி செய்கிறார் மேல் —

ருசி விவஸர்க்குப்‌ பாதமே சரணாக்கும்‌ ஒளதார்யம்‌ வானமாமலையிலே கொழுந்து விடும்‌.-சூரணை -163-

(ருசி விவசர் -ருசியினால் பரவசப்பட்டவர்கள் )அதாவது-கீழ் சொன்ன லாவண்யத்தாலே ஒருவரும் நிவர்த்திப்பிக்க ஒண்ணாதபடி பிறந்த ருசியாலே பரவசராய்–அநந்ய கதி யானவர்களுக்கு
ஆறு எனக்கு நின் பாதமே சரணாகத் தந்து ஒழிந்தாய்-
திருவாய்-5-7-10- -என்னும்படி திரு அடிகளையே உபாயமாகக் கொடுக்கும் –-கருளப் புட்கொடி சக்கரப்படை வான நாட -என் கார் முகில் வண்ணா-திருவாய்-5-7-3–என்கிற ஒவ்தார்ய குணம் ஸ்ரீவர மங்கலத்து அவர் கை தொழ உறை வான மா மலை –திருவாய்-5-7-6–என்று ஸ்ரீ வர மங்கையில் எழுந்து அருளி இருக்கிற ஸ்ரீ வானமா மலை பக்கலிலே –
(ஸ்ரீ வர மங்கை–திவ்ய தேச திரு நாமம்-ஸ்ரீ வானமா மலை -அங்கு எழுந்து அருளி இருக்கும் பெருமாள் திரு நாமம் -) வந்து அருளி என் நெஞ்சு இடம் கொண்ட வானவர் கொழுந்தே-திருவாய்-5-7-7- -என்கிறபடி
தானே வந்து இடம் கொண்டு தன்னை உபகரிக்கும் படி கொழுந்து விட்டு வளரும் என்கை–

(ருசி விவஸர்க்கு) இப்படி லாவண்யத்தாலே பிறராலும்‌ நிவர்த்திப்பிக்க வொண்ணாதபடி அந்த ருசியாலே பரவஸரானவர்களுக்கு, (பாதமே சரணாக்கும்‌ ஒளதார்யம்‌) “ஆறெனக்கு நின்‌ பாதமே சரணாகத்‌ தந்தொழிந்தாய்‌’ என்று திருவடிகளை உபாயமாகப்‌ பண்ணித் தந்த ஒளதார்யம்‌ (வானமாமலையிலே கொழுந்து விடும்‌) சிரீவரமங்கலநகரிலே நிற்கிற வானமாமலை பக்கலிலே “வானவர்‌ கொழுந்து” (திருவாய்மொழி 5-7-7) என்கிறபடியே கொழுந்து விட்டு அபிவ்ருத்‌தமாம்‌” என்கிறார்–

ஆறெனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் உனக் கோர் கைம்
மாறு நான் ஒன்றிலேன் என தாவியும் உனதே
சேறு கொள் கரும்பும் பெருஞ் செந்நெலும் மலி தண் சிரீவர மங்கை
நாறு பூந்தண் துழாய் முடியாய்! தெய்வ நாயகனே!–5-7-10—ஆறு -என்று உபாயம் -சரண் என்று உபேயம் -உபாய உபேயங்கள் இரண்டும் உன் திருவடிகளேயாம் படி பண்ணினாய் என்று பிள்ளான் நிர்வஹிக்கும்–இவை இரண்டிலும் உபாயத்தையே சொல்லுகிறது என்று பட்டர் நிர்வஹிப்பர்-எனக்கு உபாயம் உன் திருவடிகளேயாம்படி பண்ணித் தந்தாய் –ஆறு -உபாயம் -உபாக்யார்த்தைக வாசக -என்கையாலே சரண் என்று உபாயம் -எனக்கு என்று -உபாயாந்தர நிஷ்டரைக் காட்டிலும் தமக்கு உள்ள வேறுபாடு சொல்லுகிறார் –நோற்ற நோன்பிலேன் என்று தொடங்கி-உபாயாந்தர சூன்யத்தையை முன்னிட்டு உபாய நிஷ்கர்ஷம் பண்ணுகிற திரு வாய் மொழி யாகையாலே அத்தையே நிகமிக்கிறது அவதாரணத்தாலே ஏக பதத்தை நினைக்கிறது -ஈஸ்வரனை பற்றின ஊற்றத்தாலே உபாயாந்தரங்களை நெகிழ்கை ஒழிய -நாஸ்திக்யத்தாலே விடுமன்று அது விஷயாந்தர ப்ராவண்ய ஹேதுவாம் -ஒளஷத சேவை பண்ணினான் ஒருவன் சர்ப்பத்தின் வாயிலே கை கொடுத்தால் நிர்ப்பாதம் -ஒளஷத ஸ்பர்சம் இல்லாதவன் அத்தைச் செய்தால் மரண ஹேதுவாம் –

கருளப் புட்கொடி சக்கரப் படை வானநாட என் கார் முகில் வண்ணா
பொருள் அல்லாத வென்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய்
தெருள் கொள் நான் மறை வல்லவர் பலர் வாழ் சிரீவர மங்கல நகர்க்கு
அருள் செய்து அங்கு இருந்தாய் அறியேன் ஒரு கைம்மாறே –5-7-3—என் கார் முகில் வண்ணா
ஸ்தல விசேஷம் பாராதே என் பக்கலிலே உதார குணத்தை காட்டி அருளினவனே –என் அளவு பாராதே பிரயோஜன நிரபேஷமாக பண்ணின படி –

ஏனமாய் நிலம் கீண்ட என் அப்பனே! கண்ணா! என்றும் எனை ஆளுடை
வான நாயகனே! மணி மாணிக்கச் சுடரே!
தேனமாம் பொழில் தண் சிரீவர மங்கலத்தவர் கை தொழ உறை
வான மாமலையே! அடியேன் தொழ வந்தருளே.
–5-7-6—தேன் மிக்கு இருந்துள்ள மாம் பொழிலை யுடைத்தாய் சிரமஹரமான சி ரீ வர மங்கல நகரில் உள்ளார் கை தொழும் படி இருக்கிற –வான மாமலையே!-நித்ய ஸூரிகள் அனுபவிக்கும் அபரிச்சேதயமான வடிவு அழகை இவ்வூரில் உள்ளார் அனுபவிக்கலாம் படி கொடுத்துக் கொண்டு இருக்கிறவனே-இவ்விருப்பில் பரமபதத்தில் மேன்மை எல்லாம் இவருக்கு தோன்றா நின்றது என்கை-அடியேன் தொழ வந்தருளே.–-அநந்ய கதியான நானும் அடிமை செய்யும் படி என் முன்னே உலாவி அருள வேணும் -சந்நிஹிதனாய் எழுந்து அருளி இருக்கிற படி கண்டேன் -என் முன்னே உலாவி அருள வேணும் என்கிறார் –

களை கணற்றாரை யுருக்கும்‌ மாதுர்யம்‌ குடமூக்கிலே ப்ரவஹிக்கும்‌.-சூரணை -164-

அதாவது-களைகண் அற்றாரை -இத்யாதி –-களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்றிலேன் –திருவாய்-5-8-8-என்று ரஷகாந்தர பிரதிபத்தி நிவ்ருத்தி பிறந்தாரை-நீராய் அலைந்து கரைந்து உருக்குகின்ற-திருவாய்-5-8-1- -என்று சிதிலராம் படி பண்ணுகிற ஆராவமுதமான மாதுர்யம் – குடமூக்குக் கோயிலாகக் கொண்டு -இரண்டாம் திருவந்தாதி –97-என்ற குடமூக்கு என்னும் கும்பகோணத்தில் மேன்மேலும் ஆராமல் புசிக்கும் படி பெருகா நிற்கும் என்கை —

(களை கணற்றாரை) “நோற்ற நோன்பிலேன்‌ நுண்ணறிவிலேன்‌” (திருவாய்மொழி 5-7-1) என்கிறபடியே தம்முடைய பக்கலிலும்‌ கைம்முதலற்று, “களைவாய்‌ துன்பம்‌ களையாதொழிவாய்‌ களை கண்‌ மற்றிலேன்‌” (திருவாய்மொழி 5-8-8) என்று ரக்ஷகாந்தர ப்ரதிபத்தி நிவ்ருத்தி பிறந்தாரை (உருக்கும்‌ மாதுர்யம்‌) நீராயலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே ஆராவமுதே” (திருவாய்மொழி 5-8-1 என்று சிதிலராக்கும்படியான மாதுர்யம்‌. (குடமூக்கிலே ப்ரவஹிக்கும்‌) குடமூக்கில்‌ கோயிலாக்‌ கொண்டு” (இரண்டாம்‌ திருவந்தாதி 97) என்கிற கும்பகோணத்திலே ப்ரவஹிக்கும்‌ என்கிறார் –

நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன் ஆகிலும் இனி உன்னை விட்டொன்று
ஆற்ற கிற்கின்றிலேன் அரவின் அணை அம்மானே!
சேற்றுத் தாமரை செந்நெலூடு மலர் சிரீவர மங்கலநகர்
வீற்றிருந்த எந்தாய்! உனக்கு மிகை அல்லேன் அங்கே.—5-7-1—நோன்பிலேன் என்னாதே-நோற்ற நோன்பிலேன் -என்கிறது -பல வியாப்தமாம் படி யனுஷ்டித்தமாய் இருபத்தொரு கர்மம் இல்லை என்கிறது -என் ஆற்றாமையால் சில யுண்டானாலும் சக்ரவர்த்தியுடைய புத்ர காமேஷிடி போலே யாதல் -ஸ்ரீ வஸூ தேவருடைய அநந்த விரதம் போலே பல வியாப்தமாய் இருபத்தொரு தர்மம் இல்லை –ந தர்ம நிஷ்டோஸ்மி-என்கிற இடத்தில் தர்மம் இல்லை என்னாதே தர்ம நிஷ்டை இல்லை என்றால் போலே –நுண்ணறிவிலேன்-அறிவிலேன் என்னாதே -நுண்ணறிவிலேன்-என்றது ஸ்வரூப ஞான பூர்வகமாக பர ஸ்வரூபத்தை சாஷாத்கார பர்யந்தமாக அறியும் அறிவை அறிவை யுடையேன் அல்லேன் -கர்மம் இல்லை என்ற போதே -தத் சாத்தியமான ஞானம் இல்லை என்னும் இடம் அர்த்த ஸித்தமாய் இருக்க ஞானம் இல்லை என்றது என் என்னில்-பூர்வ ஜென்மத்தில் கர்மத்தை அனுஷ்ட்டித்து தத் பலமான ஞானம் இந்த ஜென்மத்தில் நைசர்க்கிகமாக பிறக்கலாம் இறே -அத்தாலே சொல்லிற்று -அன்றிக்கே-புராணங்களில் தனித் தனியே கர்ம ஞானங்களே சாதனமாக சொல்லுகையாலே சொல்லிற்று ஆகவுமாம்- பக்தி இல்லை என்னாது ஒழிவான் என் என்னில் -பக்தி யாகிறது ஞான விசேஷம் ஆகையாலே ஞானத்தை சொன்ன போதே அத்தையும் சொல்லிற்று ஆயிற்று 

களைவாய் துன்பம் களையா தொழிவாய் களை கண் மற்றிலேன்
வளைவாய் நேமிப் படையாய்! குடந்தைக் கிடந்தாய்! மாமாயா!
தளரா உடலம் என தாவி சரிந்து போம் போது
இளையா துன தாள் ஒருங்கப் பிடித்துப் போத இசை நீயே.–5-8-8—உன்னைப் பிரிந்து படுகிற துக்கத்தை போக்கிலும் போக்கு -தவிரிலும் தவிரு -வேறு ரக்ஷகரை யுடையேன் அல்லேன் -நீ உன் கார்யம் செய்யிலும் செய் -தவிரிலும் தவிரு என் தலையில் குறை இல்லை –த்வம் ஏவ உபாய பூதோ மே பவ-என்கிற அம்சத்தில் குறை இல்லை –சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி என்கிற உன் கூறு செய்யிலும் செய் -தவிரிலும் தவிரு -துக்க நிவ்ருத்தி உம்ம தான பின்பு கிருஷியும் உம்மை தாக வேண்டாவோ என்ன-துக்கி யாகைக்கு கிருஷி பண்ணின நான் நிவர்த்தகன் ஆகவோ -ஒரு சக்தி கிருத்யத்தை நான் செய்யவோ-

ஆரா அமுதே! அடியேன் உடலம் நின்பால் அன்பாயே
நீராய் அலைந்து கரைய உருக்கு கின்ற நெடுமாலே!
சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்த் திருக்குடந்தை
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே–5-8-1—சேதன அசேதன விபாகம் அற அழிக்க வல்ல உன் பக்கலிலே -அபி வ்ருஷாபரிம்லாநா–உபதப்தோ தகா நத்ய-அன்பாய் -அசித் த்ரவ்யம் அன்றியே -பிரமத்தை இட்டுச் செய்தது என்னலாம் படி இருக்கை -அன்னமயமாய் இருக்கை அன்றிக்கே ப்ரேமமயமாய் இருக்கை -காதல் குருகூர் சடகோபன் இறே-சரீரமானது கட்டுக் குலைந்து-அன்பாய் –அது தான் போய் -நீராய் -அலைந்து கரையும் படி யுருக்கிற்று-உருக்குகின்ற -இத்தலை அழியா நிற்க அத்தலை முதலடி இட்டதில்லையாய் இருக்கை-நெடுமாலே!-சர்வேஸ்வரன் என்னுதல் -போக்யதையின் மிகுதியைச் சொல்லுதல் -வ்யோமோஹ அதிசயத்தை சொல்லுதல் -இப்படி ஸைதில்யத்தை பிறப்பியா நின்று வைத்து எட்டாது இருக்கிறவன் என்னுதல் –தன் போக்யத்தையாலே ஸைதில்யத்தை பிறப்பியா நிற்கை என்னுதல் -தன் வ்யோமோஹ அதிசயத்தை காட்டி ஸைதில்யத்தை பிறப்பியா நிற்கிறவன் என்னுதல்-

எங்கள் பெருமான் இமையோர் தலைமகன் நீ
செங்கண் நெடுமால் திரு மார்பா -பொங்கு
பட மூக்கின் ஆயிர வாய்ப் பாம்பணை மேல் சேர்ந்தாய்
குட மூக்கில் கோயிலாகக் கொண்டு–97-–விஸ்த்ருதமான படங்களையும் பகவத் அனுபவ ஜனித ஹர்ஷத்துக்குப் போக்குவிட ஆயிரம்  வாயையும் மூக்கையும் யுடைய திரு வநந்த ஆழ்வான் மேலே கண் வளர்ந்து அருளுகிறவன் –திருக் குடந்தையைக் கோயிலாகக் கொண்டு -பரமபதம் போலே –
குடமூக்கில்   கோயிலாகக் கொண்டு எங்கள் பெருமான் ஆனான் –

மெலிவிலும் சேமம் கொள்விக்கும் கிருபை தென்னகரிலே நித்யம்-சூரணை -165-

அதாவது-கீழ் சொன்ன நிரதிசய போக்யமான விஷயத்தை சீக்கிரமாக கிட்டு அனுபவிக்கப் பெறாமையாலே –வைகலும் வினையேன் மெலிய -திருவாய்-5-9-1–என்று நாள் தோறும் மெலியும் அளவிலும் – நாமங்களுடைய நம் பெருமான் அடிமேல் சேமம் கொள் தென் குருகூர்ச் சடகோபன்-திருவாய்-5-9-11 -என்று அவனே ரஷகன் என்று அத்யவசித்து இருக்கும் படி பண்ணும்- ( சேமம் -காவல் )
சுழலில் மலி சக்கரப்பெருமானது தொல் அருளே திருவாய்-5-9-9–என்கிற கிருபை-திரு வல்ல வாழ் சேமம் கொள் தென்னகர் மேல் செப்புவார் சிறந்தார் பிறந்தே –திருவாய்-5-9-11-தொல் -தொன்மை- பழைமை ஆகையாலே -நித்தியமாய் இருக்கும் என்கை —

கீழ்ச் சொன்ன மாதுர்யாதிகளைக்‌ கிட்டி அநுபவிக்கப் பெறாமையாலே துக்க ஸீலராய்‌ வைகலும்‌ வினையேன்‌ மெலிய” (திருவாய்மொழி 5-9-1) என்று மெலிவாரையும்‌ “அடிமேல்‌ சேமங்கொள்‌ தென் குருகூர்ச்‌ சடகோபன்‌” (திருவாய்மொழி 5-9-11 என்றும்‌ “தொல்லருள்‌ நல்வினை” (திருவாய்மொழி 5-9-10) என்றும்‌ “சேமங்கொள் தென்னகர்‌’ (திருவாய்மொழி 5-9-11) என்றும்‌ சொல்லுகிறபடியே அவனே ரக்ஷகனென்று அத்‌யவஸிக்கலாம்படி யிருக்கிற க்ருபை தென்னகரான திருவல்லவாழிலே நிற்கிற நிலையிலே தொன்மை பழமையாய்‌ அத்தாலே நித்யமென்கிறார்–-

மானேய் நோக்கு நல்லீர்! வைகலும் வினையேன் மெலிய
வானார் வண் கமுகும் மது மல்லிகை கமழும்
தேனார் சோலைகள் சூழ் திரு வல்லவாழ் உறையும்
கோனாரை அடியேன் அடி கூடுவது என்று கொலோ?–5-9-1—தன்னை விஸ்லேஷிக்கும் படி மஹா பாபத்தை பண்ணின நான் நாள் தோறும் வியஸன பரம்பரையாலே அவசன்னையாய்-ஒரு நாள் மெலிய பொறுக்க மாட்டாத ம்ருது ப்ரக்ருதியானவள் கிடீர் நெடு நாள் நோவு படுகிறாள் –இமா மஸீதா கே சாந்தம் சதபத்ர நிபேஷனாம்-ஸூ கார்ஹாம் -தூக்கிதாம் -த்ருஷ்ட்வா மமாபி வ்யதி தம்மன -என்று ஒரு ராத்திரியில் வியஸனம் திருவடி பொறுக்க மாட்டிற்று இலன் இறே-விலக்ஷண விஷயத்தை பிரிந்தால்-ஜீவிக்கவும் ஒண்ணாது முடியவும் ஒண்ணாது-

நாமங் களாயிர முடைய நம் பெருமானடி மேல்
சேமங் கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்துரைத்த
நாமங்களாயிரத்துள் இவை பத்தும் திருவல்லவாழ்
சேமங்கொள் தென்னகர் மேல் செப்புவார் சிறந்தார் பிறந்தே.–5-9-11—திரு வல்ல வாழ் யாகிற சேமமுடைத்தான தென்னகரிலே கூட்டிச் சொல்லுவார்-தென்னகர் ராஜாவை இட்டு தென்னகர் என்னுதல் -தெற்குத் திக்கில் நகர் என்னுதல்

கழல் வளை பூரிப்ப நாம் கண்டு கை தொழக் கூடுங் கொலோ?
குழல் என யாழும் என்னக் குளிர் சோலை யுள் தேனருந்தி
மழலை வரி வண்டுகள் இசை பாடும் திருவல்லவாழ்
சுழலின் மலி சக்கரப் பெருமானது தொல்லருளே
.–5-9-9—விரோதி நிரசன த்வரையாலே மிகவும் சுழன்று வருகிற திரு வாழி யை கையிலே யுடைய சர்வேஸ்வரனுடைய -சுழல்வது போலே விளங்கா நின்றுள்ள சக்கரம் என்றுமாம் -ஸ்வாபாவிகமான அவன் பிரசாதத்தாலே –

தொல்லருள் நல் வினையால் சொலக் கூடுங்கொல்? தோழிமீர்காள்?
தொல்லருள் மண்ணும் விண்ணும் தொழ நின்ற திருநகரம்
நல்லருள் ஆயிரவர் நலனேந்தும் திருவல்லவாழ்
நல்லருள் நம் பெருமான் நாராயணன் நாமங்களே.–5-9-10—ஸ்வாபாவிக கிருபையால் யுண்டான ஸூ க்ருதத்தாலே அவனைக் கண்டு திரு நாமங்களை சொல்லக் கூட வற்றோ என்னுதல் -ஸ்வாபாவிக கிருபையால் அவனைக் காணப் பெற்று ப்ரீதியாலே யுகந்து கொண்டு திரு நாமத்தை சொல்லக் கூட வற்றோ என்னுதல் –நல்வினை -உகப்பு –தன்னுடைய ஸ்வாபாவிகமான நீர்மையை உபய விபூதியும் அனுபவிக்கும் படி பழையதாக விரும்பி வர்த்திக்கும் தேசம் –நித்ய ஸூரிகளும் சம்சாரிகளுக்கு முகம் கொடுத்து நிற்கிற சீலவத்யையை இங்கே வந்து அனுபவிப்பர்கள்-

வ்யவசாயஜ்ஞர் ரக்ஷண ஸ்தைர்யம் பம்போத்தர தேசஸ்தம்–சூரணை -166-

(வ்யவசாயஜ்ஞர்-ஆர்த்த ரஷணத்தில் அவனுடைய வ்யவசாயத்தை யதாவாக அறிந்து இருக்குமவர்
தேசஸ்தம்-நிலை பெற்று நிற்கும்)-அதாவது-ராமஸ்ய வ்யவஸா யஜ்ஞா லஷ்மணஸ்ய தீ மத நாத்யர்த்தம் ஷூப்யதே தேவீ கங்கேவ ஜலதாகமே –ஸூ ந்தர -16-4–(ஸ்ரீ ராம லஷ்மணர்களுடைய எண்ணங்களை மழைக்கால கங்கையைப் போன்று அதிகமாக கலங்க வில்லை ) -என்று
சொல்லப்பட்ட பிராட்டியைப் போலே-ஏறு சேவகனார்க்கு என்னையும் உளன் என்மின்களே -திருவாய்-6-1-10-–என்று ஆர்த்த ரஷணத்தில் தன்னுடைய வ்யவசாயத்தை யதாவாக அறிந்து இருக்குமவர்களுடைய ரஷணத்தில் –மித்ர பாவேந ஸம்ப்ராப்தம் நத்யஜேயம் கதஞ்சன –யுத்தம் -18-3-
ஏதத் வ்ரதம் மம -யுத்தம் -18-33 -என்கிறபடியே அனுகூலராலும் சலிப்பிக்க ஒண்ணாத படி இருக்கும் அவனுடைய ஸ்தைரிய குணம் – (திரு வண் வண்டூர் புணர்த்த பூம் தண் துழாய் முடி நம் பெருமானைக் கண்டு -6-1-5–ரக்ஷணத்துக்கு அன்றோ தலைமாலை சாத்திக் கொண்டு இருக்கிறான் ) தேறு நீர் பம்பை வடபாலைத் திரு வண் வண்டூர் -திருவாய்-6-1-10-என்று பம்பையாகிற ஆற்றுக்கு வடகரையான திரு வண் வண்டூரிலே நிலை பெற்று நிற்கும் என்கை —

(வ்யவஸாயஜ்ஞர்‌ ரக்ஷணஸ்தைர்யம்‌) “சரணே சரண்‌” (திருவாய்மொழி 5-10-11 என்கிற அத்‌யவஸாயத்தை “ஜ்ஞாந ஸம்பந்ந:’ என்றறிகைக்கீடான ஸர்வஜ்ஞதையை உடையவனுடைய, “ஏறு சேவகனார்‌’ (திருவாய்மொழி 6-1-10) என்று அவர்களுடைய ரக்ஷணத்தில்‌ “மித்ரபாவேந ஸம் ப்ராப்தம்‌ நத்யஜேயம்‌ கதஞ்சந” (ரா.யு18-3, “ஸக்ருதேவ”(ரா.யு18-33) இத்யாதிகளிலே ப்ரகாஸிப்பதாய்‌ அநுகூலராலும்‌ குலைக்க வொண்ணாத படியான ஸ்தைர்யம்‌ (பம்போத்தர தேஸஸ்தம்‌) “தேறு நீர்ப் பம்பை வடபாலைத்‌ திருவண்வண்டுர்‌’ (திருவாய்மொழி 61-10) என்று விரஜைக் கரை யென்னுமா போலே திருப் பம்பை யாற்றுக்கு வடகரையிலே திருவண்வண்டூரிலே ஸுஸ்திரம்‌ என்கிறார் –-

நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்று நாடொறும்
ஏக சிந்தையனாய்க் குருகூர்ச் சடகோபன் மாறன்
ஆக நூற்ற அந்தாதி ஆயிரத்துள் இவையுமொர் பத்தும் வல்லார்
மாக வைகுந்தத்து மகிழ் வெய்துவர் வைகலுமே.–5-10-11—நமக்கு திருவடிகளே உபாயம் என்று –அவதாரணத்தாலே உபாய நைரபேஷ்யம் சொல்லுகிறது -சம்சாரிக ஸ்வ பாவங்கள் மேலிட்டு விபரீதமே பலியா நின்றாலும் இது தவிர வேறு ஒன்றில் கால் தாழாது ஒழிகை -மஹா விச்வாஸம் ஆகிறது 

உணர்த்தல் ஊடல் உணர்ந்து உடன் மேயும் மடவன்னங்காள்!
திணர்த்த வண்டல்கள்மேல் சங்குசேரும் திருவண்வண்டூர்
புணர்த்த பூந்தண் துழாய்முடி நம்பெருமானைக் கண்டு

புணர்த்த கையினராய் அடியேனுக்கும் போற்றுமினே.–6-1-5–தொடுக்கப் பட்டு தர்ச நீயமாய் சிரமஹரமான திருத் துழாயை திரு முடியில் யுடையனாய் அத்தாலே என்னை அநன்யார்ஹை யாக்கினவனைக் கண்டு – நம் பாடு வருகைக்கு உறுப்பாக ஓப்பியா நிற்கும் -நீங்கள் அறிவிக்கும் அத்தனையே குறை -அன்றிக்கே பிரிவை ஒன்றாக நினையாதே வளையம் வைத்து ஒப்பித்து நமக்கு அபவ்யமாய் இருக்கிறவரை -என்றுமாம் –

வேறு கொண்டு உம்மை யான் இரந்தேன்; வெறி வண்டினங்காள்!
தேறு நீர்ப் பம்பை வடபாலைத் திருவண்வண்டூர்
மாறில் போர் அரக்கன் மதிள் நீறு எழச் செற்றுகந்த
ஏறு சேவகனார்க்கு என்னையும் உளள் என்மின்களே.–6-1-10–வட பார்ஸ்வத்திலே –கடலுக்கு தென்பால் இருக்கிற பிராட்டியை போல் யாயிற்று இவள் இருக்கிற இருப்பு-எதிர் இல்லாத போரை ராவணனையும் அவன் அரணாக இட்ட மதிலையும் துகளாகச் செற்று – ருஷிகள் குடியிறுப்பு பெற்றோம் -பிராட்டி உடன் கூடப் பெற்றோம் இலங்கை விபீஷண விஷயமாகப் பெற்றோம் என்று உகந்த-எங்கும் மேற்பட்ட ஆண் பிள்ளை தனத்தை யுடையவர்க்கு –ரஞ்ச நீ யஸ்ய விக்ரமை -என்று எதிரிகள் மேலிட்ட வீரம் ரதசர்யா ஸூ சம்மத -என்று வீரர்கள் கொண்டாடின வீரம் – உம்முடைய ரஷ்ய வர்க்கத்தில் இன்னும் ஒருத்தி நோவு படா நின்றாள் என்னுங்கோள் –

விளம்ப விரோத மழிக்கும்‌ விருத்‌த கடநா ஸாமர்த்‌யம்‌ நன்னகரிலே விஸ்தீர்ணம்‌.–சூரணை -167-

அதாவது-க்ரம பிராப்தி பற்றாமல் படுகிற த்வரைக்கு ஈடாகக் கடுக வந்து முகம் காட்டாமையால்- விளம்பித்து வருகையாலே –-போகு நம்பீ –திருவாய்-6-2-1-என்றும் –-கழகம் ஏறேல் நம்பீ –திருவாய்-6-2-6–என்றும் – பிரணய ரோஷத்தால் வந்த விரோதத்தை-அழித்தாய் வுன் திரு அடியால் -திருவாய்-6-2-9–என்று அழித்துப் பொகட்ட விருத்தங்களை கடிப்பிக்க வல்ல சாமர்த்தியம் –-நல்குரவும் செல்வமும்-திருவாய்-6-3-1- -என்று தொடங்கி –தன்னில் சேராதவற்றைச் சேர்த்துக் கொண்டு நிற்கிற விருத்தி விபூதி யோகத்தை பிரகாசிப்பித்த –திரு விண்ணகர் நன்னகரே-திருவாய்-6-3-2- -என்று நன்னகரான திரு விண்ணகரத்தில்- பல்வகையும் பரந்த-திருவாய்-6-3-1- -என்கிறபடி பரந்து இருக்கும் என்கை –( விஸ்தீர்ணம்-பல்வகையும் பரந்த )

(விளம்ப விரோத மழிக்கும்‌ விருத்‌த கடநா ஸாமர்த்‌யம்‌) இப்படி வ்யவஸிதராயிருக்கச்‌ செய்தேயும்‌ ஈஸ்வரன்‌ முகம்‌ காட்டாமல்‌ விளம்பிக்கையாலே “போகு நம்பீ” (திருவாய்மொழி 6-2-1 என்றும்‌ “கழகமேறேல்‌ நம்பீ” (திருவாய்மொழி 6-2-6) என்றும்‌ இவர்களுக்கு ப்ரணய ரோஷத்தாலே வந்த விரோதத்தை, “அழித்தா யுன்‌ திருவடியால்‌” (திருவாய்மொழி 6-2-9) என்கிறபடியே அழிக்கும் படியான ‘நல் குரவும்‌ செல்வும்‌ நரகும்‌ சுவர்க்கமுமாய்‌” (திருவாய்மொழி 6-3-1 என்று தொடங்கி -தன்னில் தான்‌ சேராத தாரித்‌ர்யம்‌ ஐஸ்வர்யம்‌ என்கிற விருத்‌தங்களைத்‌ தனக்கு விபூதியாமிடத்து இவற்றினுடைய விரோதங்களைத்‌ தன் பக்கலிலே சேர்த்துக்‌ கொள்ளும்படியான அ கடித க டநா ஸாமர்த்‌யம்‌ நன்னகரான திரு விண்ணகரிலே நிற்கிற நிலையிலே “பல்வகையும்‌ பரந்த பெருமான்‌” (திருவாய்மொழி 6-3-1 என்று பரக்கக்‌ காணலாம்‌ –

மின்னிடை மடவார்கள் நின்னருள் சூடுவார் முன்பு நான தஞ்சுவன்
மன்னுடை இலங்கை அரண்காய்ந்த மாயவனே!
உன்னுடைய சுண்டாயம் நானறிவன் இனியது கொண்டு செய்வதென்?
என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பீ!–6-2-1—உயிரை வைத்துப் போ என்பாரைப் போலே -அவன் மாட்டான் என்று அறிந்து மர்மஜ்ஜை யாகையாலே தந்து போ என்கிறாள் -இவர்கள் தொட்டு அளைந்து என்று இறே அவன் ஆதரிக்கிறது -இவளும் அவன் தொட்டு அளைந்ததைக் கொண்டு தரித்து கிடைக்காக தந்து போ என்கிறாள் –நான் தருவேனோ -இவை ஒழிய எனக்குச் செல்லுமோ என்றான் –

குழகி எங்கள் குழமணன் கொண்டு கோயின்மை செய்து கன்மம் ஒன்றில்லை;
பழகி யாம் இருப்போம் பரமே இத் திருவருள்கள்?
அழகியார் இவ் வுலகு மூன்றுக்கும் தேவிமை தகுவார் பலருளர்;
கழகம் ஏறேல், நம்பி! உனக்கும் இளைதே கன்மமே.–6-2-6–எங்கள் திரளில் ஏறாதே கொள் -என்ன -எனக்கு குற்றம் என் என்ன –நம்பி!-சமதம யாதி ஆத்ம குணோபேதர் திரளில் அன்றோ நீர் புகுவது -அவர்கள் அன்றோ உம்மை கிட்ட உரியார்-சிறு பெண்கள் திரளில் புகுகை யீடன்று என்ன -ஆனால் நான் செய்ததுக்கு நிவாரகர் உண்டோ –

உகவையால் நெஞ்ச முள்ளுருகி உன் தாமரைத் தடம்கண் விழிகளின்
அகவலைப் படுப்பான் அழித்தாய் உன் திருவடியால்;
தகவு செய்திலை; எங்கள் சிற்றிலும் யாமடு சிறுசோறும் கண்டு,நின்
முக ஒளி திகழ முறுவல் செய்து நின்றிலையே.–6-2-9—உன் சிற்றில் அழிக்க வேண்டும் பரிகரம் அமையாதோ இதுக்கு -ஜகத் உபஸம்ஹாரம் பண்ணுவது சங்கல்பத்தாலே இறே -சங்கல்பத்தாலே யாதல் -கையாலே யாதல் அழிக்கல் ஆகாதோ-

நல்குரவும் செல்வும் நரகும் சுவர்க்கமுமாய்
வெல்பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய்ப்
பல்வகையும் பரந்த பெருமான்
என்னை ஆள்வானைச்
செல்வம் மல்கு குடித் திருவிண்ணகர்க் கண்டேனே.–6-3-1—அநிஷ்டமான தாரித்யாதிகளோடு இஷ்டமான ஐஸ்வர்யாதிகளோடு -வாசியற -ததீயத் ஆகாரத் வேண-இவருக்கு உத்தேசியமாய் இருக்கும் இறே -இதில் தோஷ அம்சம் அஸஹ்யம் அன்றோ என்னில் -தன்னை தேஹ விசிஷ்டனாக அனுசந்தித்த போது த்யாஜ்யமாம் –சேஷத்வ விசிஷ்டனாக அனுசந்தித்த போது உபாதேயமாகக் கடவது -ராஜ புத்திரனுக்கு பிதாவினுடைய ஓலக்கத்தோடு சிறைக் கூட்டத்தோடு வாசியற பிதாவின் ஐஸ்வர்யம் என்று இருக்கும் இறேபல்வகையும் பரந்த பெருமான் என்னை ஆள்வானைச்-இப்படி விபூதி முகத்தாலே பல படியும் விஸ்ருத்தனானவன் –நாஸ்த்யந்தோ விஸ் தரஸ்ய மே என்று தன் விபூதிக்கு எல்லையில்லை என்று இறே தானும் சொல்லுவது –

கண்ட இன்பம் துன்பம் கலக்கங்களும் தேற்றமுமாய்த்
தண்டமும் தண்மையும் தழலும் நிழலுமாய்க்
கண்டு கோடற்கரிய பெருமான் என்னை ஆள்வானூர்
தெண்திரைப் புனல் சூழ் திருவிண்ணகர் நன்னகரே.–6-3-2-–தெளிந்த திரையை யுடைத்தான ஜலத்தாலே சூழப்பட்ட திரு விண்ணகர் -பரமபதம் உத்தேச்யம் ஆனவாறே -விரஜை உத்தேச்யம் ஆமா போலே -அவ்வூர் உத்தேச்யம் ஆனவாறே அங்கு உள்ள ஜல ஸம்ருத்தியும் உத்தேச்யமாய் இருக்கிறது இறே இவர்க்கு –-நன்னகரே-கலங்கா பெருநகரம் இதற்கு சத்ருசம் அன்று -விடாய்த்த இடத்திலே விடாய் தீரலாம் படி இருக்கிற ஏற்றம் உண்டு இறே இதுக்கு –

௧டித கடக விகடநா பாந்தவம்‌ அவ்வூரிலே த்‌விகுணம்‌.–சூரணை -168-

(கடிதர் -சேர்க்கப்படுபவர் -கடகர்-சேர்ப்பவர் -விகடநா பாந்தவம் -பொருந்தாமையைச் செய்யும் உறவு முறை ) அதாவது-பிரான் இருந்தமை காட்டினீர்–திருவாய்-6-5-5 -என்கிற கடகராலே தன் பக்கல் கடிதர் ஆனார்க்கும் கடகர் ஆனார்க்கும் , இவளை நீர் இனி அன்னைமீர் உமக்கு ஆசையில்லை விடுமினோ-திருவாய்-6-5-1-என்னும்படி-விகடநையை பண்ணுவதான –-தேவ பிரானையே தந்தை தாய் என்று அடைந்த –திருவாய் -6-5-11-என்கிற அவனுடைய பாந்தவம் –அவ்வூர் திரு நாமம் கேட்பது சிந்தையே -திருவாய்-6-5-10–என்று தோழி யானவள் திரு துலை வில்லி மங்கலம் என்று தான் சொல்லும் போது
பெண் பிள்ளை சொன்னார் போல் இனிதாய் இராமையாலே –அவ்வூர் -என்று சொல்லப் பட்ட தேசத்திலே -தேவ பிரானும்-அரவிந்த லோசனுமாய் – நின்று இருந்து உறையும் இரட்டைத் திருப்பதி ஆகையாலே இரட்டித்து இருக்கும் என்கை — விகடநா பாந்தவம் -என்றது -விகடநா கர பாந்தவம் என்றபடி —

(கடிதகடநா பாந்தவம்‌) “தொலை வில்லி மங்கலம்‌ கொண்டு புக்கு இழை கொள்‌ சோதிச்‌ செந்தாமரைக்‌ கண் பிரான்‌ இருந்தமை காட்டினீர்‌’(திருவாய்மொழி 6-5-5) என்று பகவத்‌ விஷயத்திலே கடிப்பித்த கடகரான மாதா பிதாக்களோடும்‌ உமக்காசை யில்லை விடுமினோ” (திருவாய்மொழி 6-5-1, நம்மைக்‌ கை வலிந்து என்ன வார்த்தையும்‌ கேட்குறாள்‌” திருவாய்மொழி 6-5-7 என்று பொருந்தாமையைப்‌ பிறப்பித்த அவனுடைய பாந்தவம்‌ “தேவபிரானையே தந்தை தாய் (திருவாய்மொழி-6-5-11) என்று அவனுடைய பரம பாந்தவம்‌ (அவ்வூரிலே த்‌விகுணம்‌.அவ்வூர் திரு நாமம் (திருவாய்-6-5-10) என்று திருவில்லித்தொலை மங்கலமான அவ்வூரிலே-தேவபிரான் அரவிந்த லோசனன் என்றும் நின்றிருந் துறையும்‌” (திருவாய்மொழி 6-5-10) என்றும் இரட்டைத் திருப்பதி யாகையாலே இரட்டித் திருக்‌க்கும் என்கிறார் –

குழையும் வாண்முகத் தேழையைத் தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு
இழைகொள் சோதிச் செந்தாமரைக்கண் பிரான் இருந்தமை காட்டினீர்
மழை பெய்தால் ஒக்கும் கண்ண நீரினொடன்று தொட்டுமை யாந்திவள்
நுழையுஞ் சிந்தையள் அன்னைமீர்தொழும் அத்திசை உற்று நோக்கியே.–6-5-5—பிரான் -பக்தானாம் என்கிற வடிவு-இருந்தமை காட்டினீர்-கிடையை காட்டுதல் -நின்றமையைக் காட்டுதல் -அன்றிக்கே இருந்தபடியை காட்டினி கோள் -கிடந்தான் ஆகில் –கிடந்ததோர் கிடக்கை -என்பார்கள் -நின்றான் ஆகில் நிலையார நின்றான் -என்பார்கள் -இருந்தான் ஆகில் பிரான் இருந்தமை காட்டினீர் என்பார்கள் -இருந்தபடியே உத்தேசியமாம் இத்தனை-காட்டினீர் -தானே கண்டு மீள மாட்டாதே –நோக்கி இருந்த படி கண்டாயே -முறுவல் இருந்தபடி கண்டாயே -என்று காட்டிக் கொடுத்து கெடுத்தி கோளே-

துவளில்மா மணி மாடமோங்கு தொலைவில்லி மங்கலம்தொழும்
இவளை நீர் இனி அன்னைமீர்! உமக்காசை இல்லை விடுமினோ;
தவள ஒண்சங்கு சக்கரமென்றும் தாமரைத் தடங்கண் என்றும்
குவளை ஒண்மலர்க் கண்கள் நீர்மல்க நின்று நின்று குமுறுமே.–6-5-1–தொழும் இவளை -ஞானா நந்தங்களுக்கு முன்னே நிரூபகம் இறே பாரதந்தர்யம் -தொழுகையே நிரூபகமாய் இருக்கிறவளை –தாஸோஹம் வாஸூ தேவஸ்ய -ப்ராஞ்சலீம் ப்ரஹவமாஸீனம் -ஒன்றை உருகு பதத்தில் பிடித்தால் வலித்தாலும் அப்படியே உருவ நிற்கும் ஆயிற்று–நீர் -இவளுடைய ப்ராவண்யத்தில் சாதனா புத்தி பண்ணுகிற நீங்கள் –இனி -இவளுக்கு இவ் ஊரைக் காட்டின பின்பு-அன்னைமீர்!-ப்ராப்த யவ்வனை யானாலும் -பெற்றோம் என்கிற ப்ராப்தியைக் கொண்டு மீட்கப் போமோ –அவ்வருகு பட்டாலும் நியந்தரு தையைக் கொண்டு மீட்கவோ-உமக்காசை இல்லை விடுமினோ; வகுத்தவன் கைக் கொண்டால் உமக்கு ஆசை இல்லை –ஹிதம் சொல்லுவதை பெற்ற எங்களை விடுங்கோள் –

அன்னைமீர்! அணி மாமயில் சிறு மானிவள் நம்மைக் கை வலிந்து
என்ன வார்த்தையும் கேட்குறாள்
தொலை வில்லி மங்கலம் என்றலால்
முன்னம் நோற்ற விதி கொலோ? முகில் வண்ணன் மாயம் கொலோ?
அவன்சின்னமும் திருநாமமும் இவள் வாயனகள் திருந்தவே.–6-5-7—இவள் பருவம் இது –நமக்கு அவ்வருகே போன ஆச்சர்யம் பாரி கோளே –மைத்ரேய என்னுமா போலே –அழகிய நிறத்தை உடையளாய் -முக்தமான மான் போலே அதி பாலையாய் இருக்கிறவள்-அழகியதாய் சிலாக்யமானமாய் இருக்கிற மயில் போலே இருக்கிற சிறுப் பெண் என்றுமாம்-முக்தையான இவள் நம்மைக் கை விஞ்சி -நம்மில் காட்டிலும் அந்தரங்கை யானாள்-என்ன வார்த்தையும் கேட்குறாள் தொலை வில்லி மங்கலம் என்றலால்-தொலை வில்லி மங்கலம் என்கை ஒழிய ஏதேனும் ஒரு வார்த்தையும் கேட்க்கிறீலள் -என்னுடைய வார்த்தையும் கேட்க்கிறீலள் -உங்களை மறைத்ததும் சொல்லுவது எனக்கு இறே –அவ் வூரை நான் சொல்லிலும் கேட்க்கும் –

சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் தேவ பிரானையே
தந்தை தாய் என்றடைந்த வண்குரு கூரவர் சடகோபன்

முந்தை ஆயிரத்துள் இவை தொலை வில்லி மங்கலத்தைச்சொன்ன
செந்தமிழ் பத்தும் வல்லார் அடிமை செய்வார் திருமாலுக்கே.–6-5-11—மநோ வாக் காயங்கள் மூன்றும் -ஒருபடிப்பட அவன் பக்கலிலே ப்ரவணமாய் இருக்கிற படி –இரங்கி -என்றும் –மணி வண்ணாவோ என்று கூவுமால் -என்றும் –தன் கரங்கள் கூப்பித் தொழும் -என்றும் -மூன்றாலும் இவருக்கு உண்டான இவருக்கு உண்டான பிராவண்ய அதிசயம் இறே இது திருவாய் மொழியிலே சொல்லிற்று-தேவ பிரானையே தந்தை தாய் என்றடைந்த–அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் வைத்து திருத் தொலை வில்லி மங்கலத்திலே ஸூலபனாய் இருந்தவனையே சர்வவித்த பந்துவும் என்று -அப்படியே பற்றுவதும் செய்தவர்-

பின்னை கொல்?நிலமாமகள்கொல்? திருமகள்கொல்? பிறந்திட்டாள்
என்ன மாயங்கொலோ? இவள்நெடு மால்என்றே நின்று கூவுமால்
முன்னி வந்தவன் நின்றிருந் துறையும் தொலை வில்லி மங்கலம்
சென்னியால் வணங்கும் அவ்வூர்த் திருநாமம் கேட்பது சிந்தையே
.–6-5-10-தன்னுடைய வ்யாமோஹத்துக்கு அவன் கிருஷி பண்ணின படி -முற்பாடானாய் வந்து -அவன் நிற்பது இருப்பதாகாக் கொண்டு நித்ய வாசம் பண்ணா நிற்கும் வூர் -பசியன் சோறு தாழ்த்தால்படுமா போலே-சென்னியால் வணங்கும் அவ்வூர்த் திருநாமம் கேட்பது சிந்தையே.–-தன் கரங்கள் கூப்பித் தொழுகையும் பிரார்த்த்யமான படி -இருந்த இடத்தே இருந்து தலையை சாய்க்கும் படி ஆனாள்-இவள் அகவாய் ஓடுகிறது -அவ் வூர் திரு நாமம் கேட்க்கையிலே -திரு நாமத்தை கேட்க வல்லேனே என்று ஆயிற்று இவள் மநோ ரதம்-இவள் வாயால் சொல்லக் கடவ திரு நாமத்தை நாம் சொல்லிக் கெடுக்க கடவோம் அல்லோம் -என்று அவ் வூர் என்கிறாள் –

(இங்கு கடிதர் -ஆழ்வார் -கடகர் -தோழிமார் -தொலை வில்லி மங்கலம் தொழும் இவளை நீர் இனி அன்னைமீர் உமக்கு ஆசையில்லை விடுமினோ -என்று சிந்தையாலும் சொல்லாலும் செய்கையாலும் தேவபிரானையே தந்தை தாய் என்று அடைந்தார் அன்றோ )(பட்டர் -அழகிய மணவாள பெருமாள் -என்றும் சோமாசி ஆண்டான் -எம்பெருமானார் -என்றும் –அனந்தாழ்வான் -திருவேங்கடமுடையான் என்றும் -பராங்குச நாயகி -தொலை வில்லி மங்கலம் -என்றும் – பர கால நாயகி -திருக்கண்ண புரம் என்றும் -சொல்லுவதில் உள்ள இனிமை அத்விதீயம் – திருத்தாயார் அவ்வாறு சொல்ல மாட்டாமையாலே அவ்வூர் என்கிறாள் )

கை முதல் இழந்தார் உண்ணும் நிதியின் ஆபத் சகத்வம் புகுமூரிலே சம்ருத்தம்––சூரணை -169-

கை முதல் இழந்தார்-அதாவது-ஏலக் குழலி இழந்தது சங்கே–திருவாய்-6-6-1 -என்று தொடங்கி –
கற்புடை யாட்டி இழந்தது கட்டே –திருவாய்-6-6-10–என்று பிராப்ய அலாப நிபந்தனமான ஆர்த்தியால் வந்த பாரவச்யத்தாலே – பிராப்ய பிராபக பாசங்கள் எல்லாம் தன்னடையே விட்டு கழிகையாலே -கைமுதல் அற்றவர்கள் –உண்ணும்-அதாவது-உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன்-திருவாய்-6-7-1- -என்று தாரக போஷக போக்யங்கள் எல்லாம் தானேயாக புஜிக்கும்-
நிதியின் ஆபத் சகத்வம்–அதாவது-வைத்த மா நிதியாம் மது ஸூதனை –திருவாய்-6-7-11 -என்று
ஆபத் ரஷகமாக சேமித்து வைத்த மகா நிதி போல் இருக்கிறவனுடைய ஆபத் சஹத்வம் – புகுமூரிலே சம்ருத்தம்–-அதாவது-திண்ணம் என் இள மான் புகுமூர் திருக் கோளூரே-திருவாய்-6-7-1- -என்று
பிராப்ய ருசி பிறந்தார்க்கு பிரவேஷ்டமாய் இருக்கும் திருக் கோளூரிலே –செல்வம் மல்கி யவன் கிடந்த திருக்கோளூர்க்கே– திருவாய்-6-7-4–என்று ரஷ்ய வர்க்கத்தினுடைய ரஷணமே தனக்கு நிரதிசய சம்பத்தாக நினைத்து வந்து கிடைக்கையாலே சம்ருத்தம் என்கை ..(சம்ருத்தம் -நிறைவு)-

(கைம்முதலிழந்தார்‌ உண்ணும்‌ நிதியின்‌ ஆபத்ஸகத்வம்‌) ” ஏலக்குழலி இழந்தது சங்கே (திருவாய்மொழி 6-6-1 என்று இப்பாலுண்டான ப்ராப்யாபாஸ் ப்ராபகாபாஸங்களைக்‌ கைவிட்டவர்களுக்கு, “உண்ணுஞ் சோறு பருகும்‌ நீர்‌ தின்னும்‌ வெற்றிலையும்‌ எல்லாம்‌ கண்ணன்‌” (திருவாய்மொழி 6-7-1 என்று தாரக போஷக போக்யங்கள்‌ தானேயாம்படியான “வைத்தமாநிதி” (திருவாய்மொழி 6-7-1 என்று ஒருகாலும்‌ தொலையாதபடியான நிதியாயிருக்கிறவனுடைய ஆபத் ஸகத்வம்‌ (புகுமூரிலே ஸம்ருத்‌தம்‌) “புகுமூர்‌ திருக்கோளூர்‌ (திருவாய்மொழி 6-7-1 என்று இவர்களுக்கு ப்ரவேஷ்டவ்யமான திருக்கோளூரிலே நிற்கிற நிலையிலே “செல்வம்‌ மல்க” (திருவாய்மொழி 6-7-4,) என்று ஸம்ருத்‌த மாயிருக்கும்‌ என்கிறார்‌–

ஏலக் குழலி இழந்தது சங்கே–திருவாய்-6-6-1 -என்று தொடங்கி – கற்புடை யாட்டி இழந்தது கட்டே –திருவாய்-6-6-10–என்று பிராப்ய அலாப நிபந்தனமான ஆர்த்தியால் வந்த பாரவச்யத்தாலே –திருத் தாயார் இவளுடைய வலயாதிகள் காணக் காண சிதிலமாய் போகிற படியைக் கண்டு -அவற்றைத் தனித் தனியே சொல்லி கூப்பிடுகிறாள் -நகர பத்த நாதிகள் வேவப் புக்காள்-அது விழுந்தது உது விழுந்தது என்னுமா போலே விரஹ அக்னியால் தன் மக்கள் இழந்தவற்றைச் சொல்லுகிறாள்-கீழில் திருவாய் மொழியில் அலாப தசையோபாதி கிடையாது என்றாலும் விட மாட்டாத படி தன்னுடைய மநோ வாக் காயங்கள் இவ்விஷயத்தில் அதி பிரவணமான படி சொல்லிற்று-இதில் அந்த அலாபத்தால் வந்த பாரவஸ்யத்தை சொல்லுகிறது 

உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும்வெற்றிலையு மெல்லாம்
கண்ணன் எம் பெருமான் என்றென்றே கண்கள் நீர்மல்கி

மண்ணினுள் அவன் சீர்வளம் மிக்கவன் ஊர்வினவித்
திண்ணம் என்இளமான் புகுமுர் திருக்கோளூரே.–6-7-1—ஜீவித்து அல்லது தரிக்க ஒண்ணாத சோறு -தாஹித்தால் பானம் பண்ணி யல்லது நிற்க ஒண்ணாத தண்ணீர் -தின்றால் அல்லது புஷ்டனாக விரகு இன்றிக்கே இருக்கும் வெற்றிலையும் -தாரக போஷக போக்யம் ஆனவை எல்லாம் எனக்கு நாதனான கிருஷ்ணன் -வாஸூ தேவஸ் சர்வம் -என்று ஆயிற்று இவள் இருப்பது–திண்ணம் என்இளமான் புகுமுர் திருக்கோளூரே.–என் வயிற்றில் பிறப்பாலும்-இவள் படியாலும் இவள் புகுமூர் திருக் கோளூரே –இது ஸூ நிச்சிதம்-மரு பூமியிலே தண்ணீர் போலே இ றே சம்சாரத்தில் திருக் கோளூர்-

கொல்லை என்பர்கொலோ? குணம்மிக்கனள் என்பர்கொலோ?
சில்லைவாய்ப் பெண்கள் அயற்சேரி உள்ளாரும் எல்லே!
செல்வம் மல்கி அவன் கிடந்த திருக்கோளூர்க்கே
மெல்லிடை நுடங்க இளமான் செல்ல மேவினளே.–6-7-4–இவர்கள் சொல்லிற்று சொல்லுகிறார்கள் என்று அவள் செய்வது செய்தாள் -சம்பத்தானது கரை புரண்டு வரும்படியான தேசம்-அவன் கிடந்த திருக்கோளூர்க்கே-தன் பெருமையைப் பாராதே ஆர்த்த ரக்ஷண அர்த்தமாக வந்து கண் வளர்ந்து அருளுகிற தேசம்-

வைத்தமா நிதியாம் மதுசூ தனையே அலற்றிக்
கொத்தலர் பொழில்சூழ் குருகூர்ச்சட கோபன் சொன்ன
பத்து நூற்றுள் இப்பத்து அவன்சேர்திருக்கோ ளூர்க்கே
சித்தம் வைத்துரைப் பார்திகழ் பொன்னுல காள்வாரே.–6-7-11—உண்டு என்ன உயிர் நிற்க்க கடவதாய் அனாயாச போக்யமாய் இஷ்ட விநியோக அர்ஹமான மஹா நிதி போலேயாய் விரோதி நிரசன ஸ்வ பாவனானவனை சொல்லி ஆர்த்தியாலே கூப்பிட்டு

சென்று சேர்வார்க்கு உசாத் துணை யறுக்கும்‌ ஸெளந்தர்யம்‌ மாநகரிலே கோஷிக்கும்‌.-சூரணை -170-

சென்று சேர்வார்க்கு-அதாவது-தென் திரு பேரையில் சேர்வன் சென்றே- திருவாய்-7-3-8–என்று
க்ரம பிராப்தி பற்றாத பிரேம அதிசயத்தாலே ஹித பரர் வார்த்தை கேளாதே சென்று பிரவேசிப்பது என்னும் படியானவர்களுக்கு –உசாத் துணை அறுக்கும்–அதாவது-என் நெஞ்சினாரும் அங்கே ஒழிந்தார் -உழந்து இனி யாரைக் கொண்டு என் உசாகவோ-திருவாய்-7-3-4- -என்னும் படி
உசாத் துணையான நெஞ்சை அபஹரிக்கும் –சௌந்தர்யம்–அதாவது-செஞ்சுடர் நீள் முடித் தாழ்ந்ததாயும் சங்கோடு சக்கரம் கண்டு உகந்தும் தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்தும் -திருவாய்-7-3-3-என்று சொன்னவனுடைய சௌந்தர்யம் –-மா நகரிலே கோஷிக்கும்--அதாவது-தென் திரு பேரெயில் மா நகரே–திருவாய்-7-3-9- -என்று மகா நகரான தென் திரு பேரையில் –-எழுந்த நல் வேதத்து ஒலி நின்று ஓங்கு -திருவாய்-7-3-4–என்கிறபடியே – அவ் விஷயத்தை அனுபவித்த ஹர்ஷ பிரகர்ஷத்தால் அங்குள்ளோர் பாடுகிற சாம கோஷத்தாலே தெரியும் என்கிறபடி ..

“தென்திருப்பேரையில்‌ சேர்வன்‌ சென்றே” (திருவாய்மொழி 7-3-8) என்று இப்பாலுள்ளவர்களைக்‌ கைவிட்டுச்‌ சென்று ப்ரவேஸிக்குமவர்களுக்கு “என்‌ நெஞ்சினாரும்‌ அங்கே யொழிந்தார்‌ உழந்தினியாரைக்‌ கொண்டென்னுசாகோ” (திருவாய்மொழி 7-3-4) என்றும்‌, “முழங்கு சங்கக்கையன்‌ மாயத்தாழ்ந்தேன்‌” (திருவாய்மொழி 7-3-4 என்றும்‌ உசாத் துணையான நெஞ்சையும்‌ அபஹரிக்கும்படியான “செங்கனிவாயின்‌” (திருவாய்மொழி 7-3-3) இத்யாதியில்‌ சொல்லுகிற ஸெளந்தர்யத்தை “தென்திருப்பேரெயில்‌ மாநகர்‌” (திருவாய்மொழி 7-3-9) என்று மஹாநகரமான திருப்பேரையில்‌ நிற்கிற நிலையிலே “எழுந்த நல்வேதத்தொலி நின்றோங்கு” (திருவாய்மொழி 7-3-4) என்கிறபடியே அவ்வூரில்‌ ஸாமவேத, கோஷந்தானே சொல்லா நின்ற தென்கிறார் –

கண்டதுவே கொண்டு எல்லாரும் கூடிக் கார்க்கடல் வண்ணனோடு என் திறத்துக்
கொண்டலர் தூற்றிற்றது முதலாக் கொண்ட என் காதல் உரைக்கில் தோழீ!
மண் திணி ஞாலமும் ஏழ்கடலும் நீள் வீசும்புங் கழியப் பெரிதால்;
தெண் திரை சூழ்ந்தவன் வீற்றிருந்த தென் திருப் பேரெயில் சேர்வன் சென்றே.–7-3-8—இப்படி காதல் கரை புரண்டதாகில் செய்யப் பார்த்தது என் என்ன-தெண் திரை சூழ்ந்தவன் வீற்றிருந்த-தென் திருப் பேரெயில் சேர்வன் -இக்காதலுக்கு விஷயம் சந்நிஹிதம் இல்லாமையால் வந்த வெக்காயம் தீர சிரமஹரமாய் அவன் குறைவற்று இருக்கிற தேசத்திலே போய்ப் புகக் கடவேன்-சென்றே. சேர்வன் -இனி எதிரே அவன் வரிலும் மீளேன் -அவனைச் சேருகை அன்று உத்தேச்யம் -அங்கே சென்று கிட்டுகை –

இழந்த எம்மாமைத் திறத்துப் போன என் நெஞ்சினாரு மங்கே ஒழிந்தார்
உழந் தினி யாரைக் கொண் டென் உசாகோ!
ஓதக் கடல் ஓலி போல எங்கும்
எழுந்த நல் வேதத்து ஒலி நின்று ஓங்கு தென் திருப் பேரெயில் வீற்றிருந்த
முழங்கு சங்கக் கையன் மாயத்து ஆழ்ந்தேன் அன்னையர்காள்! என்னை என் முனிந்தே.–7-3-4–அவன் இழவாளனாய் நாம் இழவு பரிஹரிக்கை யன்றிக்கே நாம் இழவாளர் ஆவதே -என்று அபிமானித்து போன நெஞ்சை வினைத் தலையிலே படை யறுத்து கொள்வாரை போலே படை யறுத்துக் கொண்டான் -லங்கையை அரண் அழிக்கைக்கு ஸ்ரீ விபீஷணனை பெற்றால் போலே -என்னுடைய ஸ்த்ரீத்வம் ஆகிற அரண் அழிக்கைக்கு உள் ஆள் பெற்றோம் என்று நெஞ்சை படை யறுத்துக் கொண்டான் இலங்கையின் அளவன்றிக்கே ஸ்த்ரீத்வ அபிமானத்துக்கு அவன் அஞ்சி இருப்பது – நெஞ்சினார் -அங்குத்தை ராஜ குலத்தாலே என்னை மறந்தார் -பெற்றாரைக் கொண்டு வ்ருத்த கீர்த்தனம் பண்ணி யாகிலும் தரிக்க வேண்டாவோ என்ன-உழந் தினி யாரைக் கொண் டென் உசாகோ!-உழந்து -வருந்தி -இனி என் நெஞ்சை இழந்த பின்பு –வருந்தினால் தான் வார்த்தை கேட்ப்பார் உண்டோ —எழுந்த நல் வேதத்து ஒலி நின்று ஓங்கு-வேத த்வனி வந்து செவிப்படா நிற்க வேறு போது போக்க போமோ -எங்கும் எழுந்த – சார்வதரிகமாக பரவா நிற்கை -இது நடையாடாதோர் இடம் பெற்றால் இ றே போது போக்கி தரிக்கலாவது –நல் வேதத்து ஒலி -சாம வேத த்வனி –வேதா நாம் சாம வேதோஸ்மிநின்று ஓங்கு -இடைவிடாதே மிக்கு நிற்கை-தென் திருப் பேரெயில் வீற்றிருந்த-முழங்கு சங்கக் கையன் மாயத்து ஆழ்ந்தேன்-வேத த்வனி ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்திலே ப்ரத்வனிக்க -அதில் ப்ரதி த்வனியும் வேத கோஷமுமாய் இரட்டித்து செல்லா நிற்கை -அவனுடைய ஸ்மித வீக்ஷணாதிகளிலே மீள ஒண்ணாத படி அகப்பட்டேன் –

செங்கனி வாயின் திறத்ததாயும் செஞ்சுடர் நீள் முடி தாழ்ந்ததாயும்
சங்கொடு சக்கரம் கண்டு உகந்தும் தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்தும்

திங்களும் நாளும் விழா வறாத தென் திருப் பேரெயில் வீற்றிருந்த
நங்கள் பிரானுக்கு என் நெஞ்சம் தோழீ! நாணும் நிறையும் இழந்ததுவே.–7-3-3—பிரிகிற போது தன் ஆற்றாமையும் வரவ தாழாமையும் தொடக்கமான -தாழ்வு சொல்லுகிற திருவதரத்தில் பழுப்பிலே யாயிற்று நெஞ்சு தோற்றது -அப்போதை தாழ்வுகள் ஒரு மஹா பாரதத்துக்கு போரும் என்கை -தர்ச நீயமாய் உபய விபூதிக்கும் கவித்த முடியை காட்டி யாயிற்று -என்னை எழுதிக் கொண்டது -தன் சேஷித்வத்தின் எல்லையைக் காட்டி யாயிற்று சேஷத்வத்தில் நிறுத்திற்று –சங்கொடு சக்கரம் கண்டு உகந்தும்–ஆயுதமும் ஆபரணமு மாய் இருக்கிற ஆழ்வார்களுடைய சேர்த்தியைக் கண்டு உகந்தும்-
தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்தும்-தன்னோட்டை சம்பந்தம் எல்லாம் தோற்றும் படி நோக்கின கண் அழகிலே அநந்யார்ஹ சேஷமாயும்-

சேர்வன் சென்று என்னுடைத் தோழிமீர்காள்! அன்னையர்காள்!என்னைத் தேற்ற வேண்டா;
நீர்கள் உரைக்கின்றது என்னிதற்கு? நெஞ்சும் நிறைவும் எனக்கு இங்கு இல்லை;
கார் வண்ணன் கார்க்கடல் ஞாலம் உண்ட கண்ண பிரான் வந்து வீற்றிருந்த
ஏர்வள ஒண் கழனிப் பழனத் தென் திருப் பேரெயில் மாநகரே.–7-3-9-–தென் திருப் பேரெயில் ஆகிற மஹா நகரத்திலே சென்று சேர்க்கை தவிரேன் -என்னை தேற்ற வேண்டா —

ப்ரவண சித்தம்‌ பரத்வ விமுகமாக்கும்‌ ஆரந்த வ்ருத்‌தி நீணகரிலே.–சூரணை-171-

ப்ரவண சித்தம்-அதாவது-தீ வினை உள்ளத்தின் சார்வல்ல வாகித் தெளி விசும்பு ஏறல் உற்றால்
திரு வாறன் விளை அதனை மேவி வலம் செய்து கை தொழக் கூடும் கொல் என்னும் என் சிந்தனை–
திருவாய்-7-10-9–என்று –அவித்யாதிகள் பிரத்யக் வஸ்துவான ஆத்மாவில் பற்றற போய் -தெளிவை விளைப்பதான பரம பதத்தை ப்ராபிக்கை வந்து கிட்டினாலும் என் நெஞ்சானது -திரு வாறன் விளை யாகிற இத் தேசத்தைக் கிட்டி – அனுகூல வ்ருத்தி பண்ணிக் கையாலே தொழக் கூடுமோ என்னா நிற்கும் என்று தன் பக்கல் பிரவணரானவர்கள் சித்தத்தை –பரத்வ விமுகமாக்கும்-அதாவது
சிந்தை மற்று ஒன்றின் திறத்து அல்லாத் தன்மை தேவ பிரான் அறியும்-திருவாய்-7-10-10- -என்று
பரம பதத்தின் பேர் சொல்லுகையும் அசஹ்யமாம் படி பரத்வத்தில் விமுகமாகப் பண்ணும் –
ஆநந்த வ்ருத்தி-அதாவது–இன்பம் பயக்க எழில் மாதரும் தானும் இவ் எழ உலகை இன்பம் பயக்க இனிதுடன் வீற்று இருந்து –திருவாய்-7-10-1–என்கிற ஆநந்த வ்ருத்தி –-நீண் நகரிலே–அதாவது
திரு வாறன் விளை என்னும் நீள் நகரம் அதுவே -திருவாய்-7-10-6–என்றும்-திருவான் விளை நீள் நகரத்து உறைகின்ற பிரான் -திருவாய்-7-10-7- என்றும் நீள் நகரான திரு வாறன் விளையில் வ்யக்தம் என்ற படி –

(ப்ரவண சித்தம்‌ பரத்வ விமுகமாக்கும்‌ ஆநந்த வருத்தி) “தீவினை உள்ளத்தின்‌ சார்வல்ல இத்யாதி, “என்றுமென்‌ சிந்தனை” (திருவாய்மொழி 7-10-9) என்று அவித்‌யாதிகள்போய்‌ பரமபத ப்ராப்தியிலே ஒருப்பட்டாலும்‌ த்ரிவித கரணங்களாலும்‌ ஸர்வரும்‌ வந்தாஸ்ரயிக்கும்படியான திருவாறன்‌ விளையிலே புக்கு அடிமை செய்ய வேணும்‌ என்னா நின்றதென்‌ நெஞ்சானது என்று தன் பக்கல்‌ ப்ரவணமான சித்தத்தை “சிந்தை மற்றொன்றின்‌ திறத்ததல்லாத்‌ தன்மை” (திருவாய்மொழி 7-10-10 என்று பேருங்கூட அஸஹ்யமாம்படி பரத்வத்தையும்‌ உபேக்ஷிக்கும்படி பண்ணவற்றான, “இன்பம்‌ பயக்க எழில்மலர்‌ மாதரும்‌ தானும்‌ இவ்வேழுலகை இன்பம்‌ பயக்கவினிதுடன்‌ வீற்றிருந்து” (திருவாய்மொழி 7-10-1 என்கிற ஆநந்த வ்ருத்‌தி நீணகரான திருவாறன் விளையிலே காணலாமென்கிறார் –

தீ வினை உள்ளத்தின் சார்வல்லவாகித் தெளி விசும்பு ஏறலுற்றால்
நாவினுள்ளும் உள்ளத்துள்ளும் அமைந்த தொழிலினுள்ளும் நவின்று
யாவரும் வந்து வணங்கும் பொழில் திரு வாறன் விளையதனை
மேவி வலஞ்செய்து கைதொழக் கூடுங்கொல்?’ என்னுமென் சிந்தனையே
.–7-10-9—அவித்யாதிகள் ஆத்மாவை ஸ்பர்சியாத படி யாய் -மனஸ் ஸூ நிர் தோஷமாய் என்றபடி-தெளி விசும்பு -இங்கு உள்ளார் அங்கு செல்லிலும் தெளிவைப் பிறப்பிக்கும் தேசம் -அவனே வரிலும் சோக மோஹங்களை விளைக்கும் இது -இருள் தரும் மா ஞாலம் இ றே இது -தெளி விசும்பு சுத்த சத்வம் அது –-ஏறலுற்றால்-போக ப்ராப்தமானால் -கிடைப்பதானால் –நாவினுள்ளும் உள்ளத்துள்ளும் அமைந்த தொழிலினுள்ளும் நவின்றுயாவரும் வந்து வணங்கும் பொழில் திரு வாறன் விளையதனை-மநோ வாக் காயங்களாலே நித்ய ஸூ ரிகளும் பயின்று ஆஸ்ரயிக்குமதாய்-நிரதிசய போக்யமான திருவாறன் விளையை -தீ வினை உள்ளத்தின் சார்வு அல்லவாகி -என்ன வேண்டாத நித்ய நிர்தோஷர் படுகாடு கிடக்கிற தேசம் என்கை-மேவி வலஞ்செய்து கைதொழக் கூடுங்கொல்?’ என்னுமென் சிந்தனையே.–கிட்டி அனுகூல வ்ருத்திகளை பண்ண வற்றே என்னா நின்றது என் மனஸ்ஸூ –பாவோ நான்யத்ர கச்சதி -என்று என் வசம் அல்ல என் மனஸ்ஸூ –

தீ வினை உள்ளத்தின் சார்வல்லவாகித் தெளி விசும்பு ஏறலுற்றால்
நாவினுள்ளும் உள்ளத்துள்ளும் அமைந்த தொழிலினுள்ளும் நவின்று
யாவரும் வந்து வணங்கும் பொழில் திரு வாறன் விளையதனை
மேவி வலஞ்செய்து கைதொழக் கூடுங்கொல்?’ என்னுமென் சிந்தனையே
.–7-10-9—மநோ வாக் காயங்களாலே நித்ய ஸூ ரிகளும் பயின்று ஆஸ்ரயிக்குமதாய்-நிரதிசய போக்யமான திருவாறன் விளையை-கிட்டி அனுகூல வ்ருத்திகளை பண்ண வற்றே என்னா நின்றது என் மனஸ்ஸூ –பாவோ நான்யத்ர கச்சதி -என்று என் வசம் அல்ல என் மனஸ்ஸூ –

இன்பம் பயக்க எழில் மலர் மாதருந் தானும் இவ் வேழுலகை
இன்பம் பயக்க இனிதுடன் வீற்றிருந்து ஆள்கின்ற எங்கள் பிரான்
அன்புற் றமர்ந் துறைகின்ற அணி பொழில் சூழ் திரு வாறன்விளை
அன்புற் றமர்ந்து வலஞ்செய்து கைதொழும் நாள்களு மாகுங் கொலோ?
–7-10-1–அன்புற்று-இவர் திருவாய்மொழி கேட்க்கைக்கு நல்ல இடம் என்று ஸ்நே ஹத்தை பண்ணி –அமர்ந்து -வேறு ஒரு பிரயோஜனத்தை கனிசியாதே-தேச வாசம் தானே பிரயோஜனமாக கொண்டு-உறைகின்ற -அவதாரம் போலே அன்றிக்கே நித்ய வாசம் பண்ணுகிற-அணி பொழில் சூழ் திரு வாறன்விளை-தர்ச நீயமான பொழில் சூழ்ந்த தேசத்தை-அன்புற்று -தேன தே தமனுவ்ரதா -என்கிறபடியே அவன் விரும்பும் தேசத்தையே விரும்பும் அத்தனை இறே -அவன் திருவாய் மொழி கேட்க்கைக்கு நல்ல இடம் என்று ஸ்நே ஹித்தால் போலே நாமும் திரு வாய் மொழி கேட்ப்பிக்கைக்கு நல்ல இடம் என்று ஸ்நே ஹத்தை பண்ணி-அமர்ந்து -நாமும் அநந்ய பிரயோஜனராய்–அனுகூல வ்ருத்திகளைப் பண்ணி -மநோ ரத்தத்துக்கு காலமான ஆனதுவே போகத்துக்கும் காலமாக வற்றோ –அபீதா நீம் சகலஸ் ஸ்யாத் –

ஒன்றும் நில்லா கெடும் முற்றவும் தீவினை உள்ளித் தொழுமின் தொண்டீர்!
அன்றங்கு அமர்வென்று உருப்பிணி நங்கை அணி நெடுந் தோள் புணர்ந்தான்
என்றும் எப்போதும் என்நெஞ்சம் துதிப்ப உள்ளே இருக் கின்ற பிரான்
நின்ற அணி திரு வாறன்விளை என்னும் நீணக ரமதுவே.–7-10-6-
–அந்த மணக்கோலத்தோடு என்னுடைய ஹ்ருதயத்தில் இருக்கிற உபகாரகன்-நின்ற அணி திரு வாறன்விளை என்னும் நீணக ரமதுவே.–ஹ்ருதயத்தில் நிற்கிறவன் கண்ணுக்கு விஷயமாம் படி வந்து நிற்கிற தர்ச நீயமான திருவாறன் விளை யாகிற மஹா நகரம் அதுவே -உள்ளித் தொழுமின் தொண்டீர்!-ஒன்றும் நில்லா – முற்றவும் தீவினை கெடும்-

ஸாதரரைப்‌ பரிசழிக்கும்‌ சேஷ்டித ஆஸ்சர்யம்‌ குளத்தே கொடி விடும்‌.–சூரணை -172-

(சாதரரை -அன்பினை யுடையவர்களை கொடி விடும் -மிக்குத் தோன்றும்-திருக் குளந்தை-இப்பொழுது பெரும் குளம் என்ற திருநாமம் இந்த திவ்ய தேசத்துக்கு )

அதாவது-ஆழி வலவனை ஆதரித்து –கூடச் சென்றேன்–திருவாய்-8-2-4- -என்று தன் பக்கல் ஆதாரத்தோடு கூடி இருப்பவரை-பரிசு அழிக்கும்–அதாவது- பல் வளையார் முன் பரிசு அழிந்தேன் -திருவாய்-8-2-4–என்னும்படி-ஸ்த்ரீத்வ பிரகாரமான லஜ்ஜாதியை அழிக்கும்-மாயக் கூத்தன்-திருவாய்-8-2-4-என்கிற சேஷ்டித ஆச்சர்யம் –மாடக் கொடி மதிள் தென் குளந்தை -திருவாய்-8-2-4-என்ற திருக் குளந்தையில் இதற்கு என்று கட்டின மாடக் கொடி முகேன பிரகாசிக்கும் என்கை–

(ஸாதரரைப்‌ பரிசழிக்கும்‌ சேஷ்டிதாஸ்சர்யம்‌] “கூடச் சென்றேன்‌‘ இத்யாதி- ஆதரித்து” கூடச்சென்றேன்‌’ என்று இப்படி ஆதரமுடையாரை ‘பல்வளையார் முன்‌ பரிசழிந்தேன்‌‘ (திருவாய்மொழி 8-2-4) என்று பரிசழிக்கும்படியான மாயக் கூத்தென்கிற சேஷ்டிதாஸ்சர்யம்‌ (குளத்தே கொடிவிடும்‌) தென் குளந்தையிலே “மாடக்‌ கொடி” (திருவாய்மொழி 8-2-4) என்று கொடி யெடுத்து ப்ரகாஸிக்கும்‌ என்கிறார்‌-

கூடச் சென்றேன் இனி என் கொடுக்ககேன் கோல் வளை நெஞ்சத்து தொடக்கம் எல்லாம்
பாடற்று ஒழிய இழந்து வைகல் பல்வளையார் முன்பு பரிசு இழந்தேன்
மாடக் கொடி மதிள் தென் குளந்தை வண் குடபால் நின்ற மாயக் கூத்தன்
ஆடற் பறவை யுயர்த்த வெல் போர் ஆழி வலவனை யாதரித்தே–8-2-4–கூடச் சென்றேன்-சம்ச்லேஷ அர்த்தமாக சென்றேன் -ஸ்வரூபத்தை அழிய மாறி யன்றோ நான் சென்றது-வைகல்-பல்வளையார் முன்பு -என்றும் ஓக்க பலவகைப் பட்ட வளையை யுடைய ஸ்த்ரீகள் முன்பே –அவனையும் என்னையும் குண ஹானி சொல்லக் கடவ ஸ்த்ரீகள் எதிரே-பரிசு இழந்தேன்-பரிசு -பிரகாரம் -என்னுடைய பிரகாரம் -ஸ்த்ரீத்வ பிரகாரம் -அத்தை இழந்தேன் -கழற்றி பூணுமவற்றை அவர்கள் தரித்து இருக்க கழற்ற ஒண்ணாத படி ஆபரணமாய் இருக்கிற லஜ்ஜாதிகளை இழந்தேன் –-மாடக் கொடி மதிள் தென் குளந்தை-மாடங்களையும் கொடியோடு கூடின மதிள்களையும் யுடைத்தாய் -தெற்குத் திக்குக்கு சிலாக்யமான திருக் குளந்தையில்–வெல் போர்-ஆழி வலவனை யாதரித்தே–யுத்தத்தில் வெற்றியோடு அல்லது மீளாத திரு வாழி யை வலவருகே யுடையவனை ஆதரித்து –

ஸ்ரம மனம்‌ சூழும்‌ ஸெளகுமார்ய ப்ரகாசம்‌ ஆய்ச் சேரியிலே.–சூரணை-174-

ஸ்ரம மனம் சூழும்-அதாவது-பணியா அமரர் பணிவும் பண்பும்–திருவாய்-8-3-6–இத்யாதி படி –
பரம பிரேம யுக்தரான நித்ய சூரிகள் பரிசர்யை பண்ண பரம பதத்தில் இருக்கும் அவன் – நிரதிசய சௌகுமாரமான திரு மேனியோடே சம்சாரிகளுடைய துக்கத்தைப் போக்குகைக்காக – தன் வாசி அறியாத இந்த லோகத்தில் வந்து அவதரித்து –அடியார் அல்லல் தவிர்ப்பது –திருவாய்-8-3-7–படி தான் நீண்டு தாவுவது –திருவாய்-8-3-7-ஆகையால் வந்த ஸ்ரமத்தை அனுசந்தித்த மனசானது -வ்யாகுலிதமாய்-பிரமிக்கும்படியான –சௌகுமார்ய பிரகாசம்-அதாவது-ஆழியும் சங்கும் சுமப்பார் தாம்—திருவாய்-8-3-3-என்று பூ யேந்தினாப் போலே இருக்கும் திரு ஆழி திரு சங்கை ஏந்துவதும் மலை சுமந்தார் போல் வன் பாரமாக தோற்றும் படி இருக்கிறவன் சௌகுமார்ய பிரகாசம் –-ஆய்ச் சேரியிலே-
அதாவது-உடைய நங்கையார் பிறந்தகம் ஆகையாலே -ஆழ்வாருக்கு ஆய்ச் சேரியாய் இருப்பதாய் –
உருவார் சக்கரம் சங்கு சுமந்து இங்கு உம்மோடு ஒருபாடு உழல்வான் ஓர் அடியானும் உளன் என்று
வண் பரிசாரத்து இருந்த என் திரு வாழ் மார்பற்கு என் திறம் சொல்லார்
-—திருவாய்-8-3-7–என்ற
திருப் பரிசாரத்தில் காணப் படும் என்கை —

(ஸ்ரம மனம்‌ சூழும்‌ ஸெளகுமார்ய ப்ரகாமம்‌) பணியா வமரர்‌ இத்யாதி. “திரு நீல மணியார்‌ மேனியோடு என்‌ மனம் சூழ வருவாரே (திருவாய்மொழி 8-3-6) என்று அந்த சேஷ்டிதத்தாலுள்ள ஸ்ரமம்‌ இவர்‌ நெஞ்சிலே சூழ வரும்படியான ஸெளகுமார்யம்‌ “ஆழியும்‌ சங்கும்‌ சுமப்பார் தாம்‌” (திருவாய்மொழி 8-3-3) என்று அப்ராக்ருத விக்‌ரஹத்தினுடைய ஸெளகுமார்ய ப்ரகாஸம்‌-

பணியாவமரர் பணிவும் பண்பும் தாமேயாம்
அணியாராழியும் சங்கமுமேந்துமவர் காண்மின்
தணியா வெந்நோய் உலகில் தவிர்ப்பான் திரு நீல
மணியார் மேனியோடு என் மனம் சூழ வருவாரே
–8-3-6–பணியாவமரர் -வேறே சிலரை பணிய சம்பாவனை இல்லாத நித்ய ஸூ ரிகள் -முன்பு அஸேவ்யர் காலிலே குனிந்து ஒரு நாளிலே அனுகூலித்து-அழுக்கு உடம்பு எச்சில் வாய் என்று அனுதபித்து -பின்பு அவன் காலிலே குனிந்தவர்கள் அல்லர் –பணிவும் பண்பும் தாமேயாம்-அவர்கள் பணிவுக்கும் ஞானாதி குணங்களுக்கும் தாமே விஷயமாய் இருக்குமவர்–திரு நீல-மணியார் மேனியோடு -நீல மணி போலே சிரமஹரமாய் ஸூகுமாரமான வடிவோடே -இங்கே வர வேண்டினால் அவ்வடிவைக் கொண்டு வர வேணுமோ
என் மனம்-அந்த ஸூகுமாரமான வடிவோடே சம்சாரத்தில் உலவா நின்றான் என்று அறிந்த என் மனசானது-சூழ வருவாரே--சுழன்று வரும் படி வருகிறவர் –தணியா வெந்நோய் –தவிர்ப்பான் -உலகில் -வருவார் என்றுமாம் –

வருவார் செல்வார் வண் பரிசாரத்து இருந்த என்
திரு வாழ் மார்வற்கு என் திறம் சொல்லார் செய்வதென்
உருவார் சக்கரம் சங்கு சுமந்திங்கும்மோடு
ஒருபாடு உழல்வான் ஓரடியானும் உளன் என்றே-8-3-7-
–அழகு மிக்கு இருந்துள்ள ஆழ்வார்களை சாதரமாக தரித்து என்னுதல் -திரு மேனிக்கு எல்லாம் வேறு ஆபரணம் வேண்டாதே தானே ஆபரணமாக போரும்படியான ஆழ்வார்கள் என்னுதல் -இங்கு -ஒரு நாடாக பரியும் தேசம் இ றே அது -பரிவாரும் இன்றிக்கே இருக்கும் தேசத்திலே-உம்மோடு-ஒருபாடு உழல்வான்-இடைவிடாதே ஒரு பார்ஸ்வத்தை பற்றி திரிவான் -ஒரு பார்ஸவத்துக்கு இளைய பெருமாள் உளர் இறே-ஓரடியானும் உளன் என்றே–அநந்ய பரனாய் இருப்பான் ஒருவன் உளன் என்று -ச மஹாத்மா ஸூ துர்லப-என்று கை வாங்கி இருப்பர் –ஒருவன் உளன் என்று என் திறம் சொல்லார் -செய்வது என் –

ஆளுமாளார் ஆழியும் சங்கும் சுமப்பார் தாம்
வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்றில்லை
தாளும் தோளும் கைகளை யாரத் தொழக் காணேன்
நாளும் நாளும் நாடுவன் அடியேன் ஞாலத்தே–8-3-3—ஆபரணமான திவ்யாயுதங்கள் -அவன் ஸுகுமார்யத்தாலே மலை எடுத்தால் போலே சுமையாய் தோற்றுகிறது இவர்க்கு -எதிரிகளுக்கு அஸ்திரமாய் -அனுபவிப்பார்க்கு ஆபரணமாய் இருக்கிறதை -ஸுகுமார்யத்தை அனுசந்தித்த இவருக்கு மலையாய் இருக்கிறது-தாம் -தம்மைப் பார்த்துக் கொள்ள வேண்டாவோ -எப்போதும் கை கழலா நேமியான் அன்றோ -நிரூபகங்கள் ஆனவை சுமையோ என்ன -அது தானே செய்கிறது –
வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்றில்லை-வாளும் வில்லும் கொண்டு பின்னே செல்லுகைக்கு இளைய பெருமாள் மாத்திரம் ஒருவர் உண்டானாலோ –-ஆளுமாளார் ஆழியும் சங்கும் சுமப்பார் தாம்-வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்றில்லை-என்கிறது பரிவரான நீர் இவற்றுக்கு ஆள் அன்றோ என்று தம்மை ஏவுகைக்காக –

மஹா மதிகள் அச்சம் கெட்டு அமரும் சௌர்யாதிகள் சிற்றாறிலே கொழிக்கும் .–சூரணை -175-

மஹா மதிகள்-அதாவது-சம்ஸ்பருசன்னாசனம் ஸௌரே விதுரஸ்ஸ மஹாமதி -பாரதம் -உத்யோக பர்வம் –– என்கிறபடியே – சௌகுமார்ய அனுசந்தானத்தாலே அவனுக்கு எங்கே என்ன தீங்கு வருகிறதோ என்று – அஸ்தானே பய சங்கை பண்ணும் மஹாமதிகள்– அச்சம் கெட்டு-அதாவது
வார் கடா வருவி யானை –கஞ்சனைத் தகர்த்த சீர் கொள் சிற்றாயன் திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாறு எங்கள் செல் சார்வு-திருவாய்-8-4-1 என்று தங்களுக்கு நிர்பய ஸ்தானமான புகலாக நினைத்து பயம் கெட்டு –(அங்கு அமரர் பேண-அவர் நடுவே வாழ் திரு மாற்கு இங்கு ஓர் பரிவர் இல்லை என்று அஞ்ச –திருவாய் மொழி நூற்று அந்தாதி -73-என்றும்-வாராமல் அச்சம் இனி மால் தன் வலியினையும் சீரார் பரிவருடன் சேர்த்தியையும் – பாரும் என தான் உகந்த மாறன் –திருவாய் மொழி நூற்று அந்தாதி -அமரும்-அதாவது-திரு சிற்றாற்றங்கரையானை –முக்கண் அம்மானை நான் முகனை அமர்ந்தேன்-திருவாய்-8-4-10–என்று ப்ரஹ்ம ருத்ரர்களுடைய சத்தாதிகள் ஸ்வாதீனமாம் படி இவர்களை பிரகாரமாக உடைய பெருமையை உடையவனாய் வைத்து ஸூலபனாய் வந்து நிற்கும் அவனை – அவனுக்கு என் வருகிறதோ -என்று பட்ட மறுகுதல் தீர்ந்து -கிட்டி அனுபவிக்கப் பெற்றேன் என்று ஹ்ருஷ்டராம் படியான —சௌர்யாதிகள்-அதாவது-வார் கடா வருவி-இத்யாதியாலே சொன்ன குவலயாபீட சாணூர முஷ்டிக கம்சாதி நிரசன பிரகடித ஸௌர்யாதிகள்-சிற்றாறிலே கொழிக்கும் –-அதாவது-திருச் செங்குன்றூரிலே திருச் சிற்றாறு என்கிற திருப் பதியில்- திரு ஆற்றுக்குளே மணி முக்தாதிகள் கரையிலே கொழித்து தோற்றுமா போலே பிரகாசிக்கும் என்கை —ஸௌர்யாதிகள் -என்ற இடத்தில்

ஸம்ஸ்ப்ருயந்நாஸநம்‌ சவ்ரே: விதுர: ஸ: மஹாமதி:” (பார. உத்‌). இப்படி ஸர்வஸக்திக்கும்‌ பரியும்படியான மஹாமதிகள்‌ ஸெளகுமார்ய அநுஸந்தாநத்தாலே இவனுக்கு எங்ஙனே என்ன தீங்கு வருகிறதென்று அஞ்சுகிறவிவர்‌ “எங்கள்‌ செல் சார்வே” (திருவாய்மொழி 8-4-1) என்று எங்களைப்‌ போல்வார்க்கு நிர்பயஸ்த்தா மென்று அச்சம்‌ கெட்டு “நான்முகனை அமர்ந்தேனே (திருவாய்மொழி 8-4-10) என்று இவர்‌ அமர்ந்து ஸுஸ்திரராம்படியான “வார்கடாவருவி” (திருவாய்மொழி 8-4-1) என்று தொடங்கி, குவலயாபீட நிரஸநாதி களாலுண்டான (சவ்ர்யாதிகள்‌) சவ்ர்யாதிகள்‌ திருச்செங்குன்றூரிலே திருச்சிற்றாற்றிலே ஆறு என்கிற ஸமாதி யாலே கொழிக்கும்‌-என்கிறார்‌.

வார்கடா வருவி யானை மா மலையின் மருப்பிணைக் குவடிறுத்துருட்டி
ஊர் கொள் திண் பாகனுயிர் செகுத்து அரங்கின் மல்லரைக் கொன்று சூழ் பரண் மேல்
போர் கடா வரசர் புறக்கிட மாடமீ மிசைக் கஞ்சனைத் தகர்த்த
சீர்கொள் சிற்றாயன் திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாறு எங்கள் செல் சார்வே
–8-4-1-புலி நின்ற தூறு போலே பிரதிகூலருக்கு அஞ்ச வேண்டும் வூர்-எங்கள் செல் சார்வே–மஹா ராஜர் -பெரியாழ்வார் -ஸ்ரீ விதுரர் -தாம் -இங்கனம் ஒத்த பரிவர்களுக்கு -நிர்ப்பய ஸ்தானம் என்று புகும் புகல்–கீழ் இவருக்கு ஓடின பயம் நீங்கிற்று என்னுமது இயல் தழைப்பிலே தெரிந்து இருக்கிற படி கண்டதே

அமர்ந்த நாதனை யவரவராகி அவரவர்கருளும் அம்மானை
அமர்ந்த தண் பழனத் திருச் செங்குன்றூரில் திருச் சிற்றறாங்கரையானை
அமர்ந்த சீர் மூவாயிரவர் வேதியர்கள் தம்பதி அவனிதேவர் வாழ்வு
அமர்ந்த மாயோனை முக்கண் அம்மானை நான்முகனை யமர்ந்தேனே–8-4-10-–இத்தேசத்தில் பொருந்தி வர்த்திக்கிற ஆச்சர்யமான அழகை யுடையவனை -ப்ரஹ்மாதிகளுடைய சத்தாதிகளுக்கு நிர்வாஹகன் ஆனவனை -ப்ரஹ்ம ருத்ராதிகளை பலகாலும் சொல்லுகிறது -இவனுடைய சர்வ நிர்வாஹகத்வம் தோற்றுகைக்காகவும்-நிர்வாஹயங்களில் ஒன்றால் நலிவு யுண்டாக்க கூடாது என்கைக்காகவும்
யமர்ந்தேனே-ஸர்வேச்வரத்வத்தை அனுசந்தித்து -கீழ் ஓடின பயம் தீர்ந்து -அவனைக் கிட்டப் பெற்றேன் -என்கிறார் –

சாத்ய ஹ்ருதிஸ்னாயும் சாதனம் ஒருக்கடுக்கும் க்ருதஜ்ஞதா கந்தம் தாயப் பதியிலே–சூரணை -176-

(ஒருக்கடுத்தல் -ஒருங்க அடுத்தல் -ஆழ்வார் திரு உள்ளத்தில் நித்ய வாஸம் போலவே-திவ்ய தேசத்திலும் ஆசை கொண்டு நித்ய வாஸம் என்றவாறு–திருமாலிருஞ்சோலை மலையே என்கிறபடியே உகந்து அருளினை நிலங்கள் எல்லாவற்றிலும் பண்ணும் விருப்பத்தை-இவனுடைய சரீர ஏக தேசத்திலே பண்ணும் -அங்குத்தை வாஸம் சாதனம் -இங்குத்தை வாஸம் சாத்யம்- கல்லும் கனைகடலும் என்கிறபடி இது சித்தித்தால் அவற்றில் ஆதரம் மட்டமாய் இருக்கும் – இளம் கோயில் கை விடேல் என்று இவன் பிரார்த்திக்க வேண்டும்படியாய் இருக்கும் -ஸ்ரீ வசன பூஷணம் )

அதாவது-சாத்யம் கைப் பட்டால் சாதனத்தில் இழிவார் இன்றிக்கே இருக்க –-திருக் கடித் தானமும் என்னுடைச் சிந்தையும் ஒருக்கடுத்து உள்ளே உறையும் பிரான்-திருவாய்-8-6-2- -என்று சாத்தியமான ஆழ்வார் திரு உள்ளத்திலே வாஸம் லபித்தது இருக்கச் செய்தேயும் ,-இத்தைப் பெற்றது அத் தேசத்தில் நிலையாலே அன்றோ என்று சாதனமான திருக் கடித் தானத்தையும் அடுத்து பிடித்து வர்த்திக்கும் படியான க்ருதஜ்ஞாத பரிமளம் — திருக் கடித்தான நகரும் தான தாயப் பதி—திருவாய்-8-6-8-என்று
தனக்கு தாயப் ப்ராப்தமான ஸ்தானமாக நினைத்து இருக்கும் திருக் கடிதானத்தில் என்கை ..
க்ருதஜ்ஞதா கந்தம் -என்றது-கடித்தானம்-என்று மணத்தை உடைத்தான ஸ்தானம் என்கையாலே 

திருக் கடித்தானமும்‌ என்னுடைச்‌ சிந்தையும்‌ ஒருக்கடுத்‌துள்ளே உறையும்‌ பிரான்‌ கண்டீர்‌ (திருவாய்மொழி 8-6-2) என்று ஸாத்‌யமான ஆழ்வாருடைய திருவுள்ளம்‌ தனக்கு இருப்பிடமாக உடையனாயிருக்கச்‌ செய்தேயும்‌ இவ்வா ழ்வார்‌ திருவுள்ளத்தைப்‌ பெறுகைக்கு ஸாதநமான திருக்கடித்தானத்தையும் -அடுத்துப் பிடித்து வர்த்திக்கும்படியான (க்ருதஜ்ஞதா கந்தம்‌ தாயப்பதியிலே) திருக்கடித்தான நகரம்‌ “தனதாயப்பதி” (திருவாய்மொழி 8-6-8) என்று அவனுக்கு தாயப்ராப்தமான திருக்கடித்தானத்திலே என்கிறார்‌. கடித்தானம்‌ வாசப் பொழில்‌ என்றும்‌ சொல்லுகையாலே கந்தமென்கிறது.

திருக் கடித்தானமும் என்னுடைச் சிந்தையும்
ஒருக்கடுத்துள்ளே உறையும் பிரான் கண்டீர்

செருக்கடுத்தன்று திகைத்த வரக்கரை
உருக்கெட வாளி பொழிந்த வொருவனே–8-6-2-ஒருங்கவடுத்து -அதாவது ஓக்க நினைக்கை -திருப்பதியையும் என் ஹிருதயத்தையும் ஓக்க ஆதரித்து –

தான நகர்கள் தலைச் சிறந்து எங்கும்
வானிந்நிலம் கடல் முற்றும் எம் மாயற்கே
ஆனவிடத்தும் என்நெஞ்சம் திருக் கடித்
தான நகரும் தனதாய்ப் பதியே–8-6-8-
–னக்கு தாய ப்ராப்தமான ஸ்த்தானமாக விரும்பி இரா நின்றான் –

அவகாஹித்தாரை அனந்யார்ஹமாக்கும் நாயக லஷணம் வளம் புகழு மூரிலே குட்டமிடும்–சூரணை -176-

அவகாஹித்தாரை-அதாவது-அப்பன் திருவருள் மூழ்கினள்–திருவாய்-8-9-5-என்று தன் பிரசாதத்தாலே மருனனைய அவகாஹித்தாரை –-அனந்யார்ஹமாக்கும்-அதாவது- அருமாயன் பேர் அன்றி பேச்சு இலள்–திருவாய்-8-9-1–என்றும் –திருப் புலியூர் புகழ் அன்றி மற்று –பரவாள் இவள் நின்று இராப் பகல் -திருவாய்-8-9-9-–என்றும் – திரு புலியூர் நின்ற மாயப் பிரான் திரு அருளாம் இவள் நேர் பட்டது -திருவாய்-8-9-10–என்னும் படி அனந்யார்ஹம் ஆக்குமதாய் –நாயக லஷணம்--அதாவது-
கருமாணிக்க மலை மேல் மணித் தடம் தாமரைக் காடுகள் போல் -திருவாய்-8-9-1–என்றும் –
துன்னு சூழ் சுடர் ஞாயிறும் அன்றியும் பல் சுடர்களும் போல்-திருவாய்-8-9-2- -இத்யாதிகளால் சொன்ன
அவயவ சோபை ஆபரண சோபை முதலான நாயக லஷணம் ..-வளம் புகழு மூரிலே குட்டமிடும்--அதாவது-திருப் புலியூர் வளம் புகழும் -திருவாய்-8-9-3-என்று இவர் கொண்டாடும் படியான ஐஸ் வர்யத்தை உடைய திருப் புலியூரிலே பூரணமாம் என்கை ..-குட்டமிடும் -என்றது -குட்ட நாடு -என்னும் அத்தை நினைத்து ..

“அப்பன்‌ திருவருள்‌ மூழ்கினளே” (திருவாய்மொழி 8-9-5) என்று இப்படித்‌ தன்னுடைய க்ருபையிலே மறு நனைய மூழ்கினாரை “அருமாயன்‌ பேரன்றிப்‌ பேச்சிலள்‌” (திருவாய்மொழி 8-9-1) என்றும்‌, “திருப்புலியூர்‌ புகழன்றி மற்று பரவாளிவள்‌’ (திருவாய்மொழி 8-9-9) என்றும்‌ “மாயப்பிரான்‌ திருவருளாம்‌ இவள்‌ நேர்பட்டதே” (திருவாய்மொழி 8-9-10) என்றும்‌ சொல்லுகிறபடியே அநந்யார்ஹராக்கும்‌ அவயவ ஸோபை, ஆபரண ஸோபை, தொடக்கமான நாயக லக்ஷணம்‌; “திருப்புலியூர்‌ வளம்‌ புகழும்‌” (திருவாய்மொழி 8-9-3) என்று இவர்‌ கொண்டாடும்படியான ஐஸ்வர்யத்தை யுடைத்தான திருப்புலியூரிலே; குட்ட நாடு என்கையாலே குட்டமிடும்‌ என்கிறார் –

புனையிழைகள் அணிவும் ஆடையுடையும் புது கணிப்பும்
நினையும் நீர்மையதன்று இவட்கிது நின்று நினைக்கப் புக்கால்
சுனையினுள் தடந்தாமரை மலரும் தண் திருப் புலியூர்
முனைவன் மூவுலகாளி அப்பன் திருவருள் மூழ்கினளே–8-9-5–ஐஸ்வர்யத்தாலும் குறைவறப் பெற்றேன் -என் தன் ப்ரீதியால் சொல்லுகிறாள் -அவனுடைய –திருவருள் மூழ்கினளே––கடல் கொண்ட வஸ்துவை யன்றோ நீங்கள் மீட்கப் பார்க்கிறது-

கருமாணிக்க மலை மேல் மணித் தடந்தாமரைக் காடுகள் போல்
திரு மார்பு வாய் கண் கை உந்தி காலுடை யாடைகள் செய்ய பிரான்
திருமால் எம்மான் செழு நீர் வயல் குட்ட நாட்டுத் திருப் புலியூர்
அருமாயன் பேரன்றிப் பேச்சிலள் அன்னைமீர் இதற்கு என் செய்கேனோ–8-9-1–திருப் புலியூரில் வர்த்திக்கிற பெறுதற்கு அரிய ஆச்சர்ய குண சேஷ்டிதங்களை யுடையவனுடைய -திரு அயோத்யையில் உள்ளார்க்கு சக்கரவர்த்தி திரு மகனை போலே யாயிற்று இவனும் –பேரன்றிப் பேச்சிலள்-பர வ்யூஹ விபவங்களிலே திரு நாமங்களை சொல்லுகிறிலள்-

பரவாள் இவள் நின்று இராப்பகல் பனி நீர் நிறக் கண்ணபிரான்
விரவாரிசை மறை வேதியரொலி வேலையின் நின்று ஒலிப்ப
கரவார் தடந்தொறும்தாமரைக்கயம் தீவிகை நின்றலரும்
புரவார் கழனிகள் சூழ் திருப் புலியூர்ப் புகழ் அன்றி மற்றே–8-9-9—பரவாள் இவள் நின்று இராப்பகல்-இவள் அடைவு கெட பேசா நின்றாள் -இராப்பகல் பேசா நின்றாள் -இதுக்கு வேறு பிரமாணம் தேட வேணுமோ -இவள் யுக்தியே அன்றோ பிரமாணம் –திருப் புலியூர்ப் புகழ் அன்றி மற்றே–வேத கோஷமும் வேதார்த்த விசார யுக்தர் கோஷமும் -அலர்ந்த தாமரை பொய்கைகளாலே அலங்க்ருதமான வயலுமான  திருப் புலியூர் புகழ் அன்றி மற்று பரவாள் இவள் நின்று இராப்பகல்-

அன்றி மற்றோர் உபாயம் என் இவள் அம்தண் துழாய் கமழ்தல்
குன்ற மா மணி மாட மாளிகைக் கோலக் குழாங்கள் மல்கி
தென் திசைத் திலதம் புரை குட்ட நாட்டுத் திருப் புலியூர்
நின்ற மாயப் பிரான் திருவருளாம் இவள் நேர் பட்டதே
–8-9-10—தெற்கில் திக்குக்கு திலகம் போலே இருக்கிற குட்ட நாட்டுத் திருப் புலியூரில் நின்று அருளின ஆச்சர்ய பூதன் -அவனுக்கு இவள் போராள் -என்னும் படி குணாதிக்கண் -இவளுக்கு அவன் போரான் என்று அன்றோ நீங்கள் இருக்கிறது அவனுக்கு இவள் போராள் என்று அன்றோ அவ் வூரார் வார்த்தை –-திருவருளாம்-இவள் நேர் பட்டதே–அவன் பிரசாத்துக்கு சத்ருசமான பாத்ரமானவளாக வேணும் –அன்றி மற்று ஓர் உபாயம் என் -இவள் அம்தண் துழாய் கமழ்தல்

அன்னைமீரிதற் கென் செய்கேன் அணி மேருவின் மீதுலவும்
துன்னு சூழ் சுடர் நாயிறும் அன்றியும் பல் சுடர்களும் போல்
மின்னு நீண் முடி யாரம் பல்கலன் தானுடை யெம்பெருமான்
புன்னை பூம் பொழில் சூழ் திருப் புலியூர் புகழும் இவளே–8-9-2—அழகிதான மேருவின் மேல் சஞ்சரியா நிற்பானுமாய்-காண்கிற அளவன்றிக்கே நெருங்கி சூழ்ந்த தேஜஸ்ஸை யுடைய வி லஷணனான ஆதித்யனும்-அன்றியும் பல் சுடர்களும் போல்-மற்றும் அப்படியே இருக்கிற நக்ஷத்ராதி தேஜோ பதார்த்தங்களும் போலே-

போக்ய பாக த்வரை தெளிந்த சந்தைக்கு முன்னில் மூன்றிலும் ப்ரகடம் —சூரணை -177-

போக்ய பாக த்வரை-அதாவது-பசி கனத்தவன் அன்னம் பக்குவம் ஆவதற்கு முன்னே பதற்றத்தாலே அதுக்கு அணித்தாக வந்து கிடப்பது -இருப்பது-நிற்பது -ஆம் போலே – போக்ய பூதரான ஆழ்வாருக்கு பரம பக்தி ஆகிற பாகம் பிறக்கும் அளவுக்கும் அவனுக்கு உண்டான த்வரை –தெளிந்த சந்தைக்கு முன்னில் மூன்றிலும் ப்ரகடம் — தெளிந்த என் சிந்தை அகம் கழியாதே -திருவாய்-9-2-4–என்கிற சந்தைக்கு முன் சொன்ன புளிக்குடி கிடந்தது வரகுண மங்கை இருந்து வைகுந்தத்துள் நின்று –என்று
கிடப்பது இருப்பது நிற்பதான – திருப் புளிங்குடி–திரு வரகுணமங்கை –திரு வைகுந்தம் -ஆகிற திருப்பதி மூன்றிலும் தெரியும் என்கை -(என்னில் முன்னம் பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான்-திருவாய் -9-6 10—என்று ஆழ்வாரை போக்யமாக கொண்டமை அருளிச் செய்கிறார் )

பசித்த புருஷன்‌ அந்நம்‌ பக்வமாமளவும்‌, நிற்பது, இருப்பது, கிடப்பதாமாபோலே இப்படி அநந்யார்ஹராகையாலே போக்‌யமான ஆழ்வார்க்கு பரமபக்தியாகிற பாகம்‌ பிறக்குமளவும்‌ போக்தாவான ஸர்வவேஸ்வரனுக்குண்டான த்வரை “தெளிந்த என்‌ சந்தை” என்கிற சந்தைக்கு முன்னில்‌ “புளிங்குடிக்கிடந்து வரகுணமங்கையிருந்து வைகுந்தத்துள்‌ நின்று” (திருவாய்மொழி 9-2-4) என்கிற திருப்பதி மூன்றிலும்‌ கிடப்பது இருப்பது நிற்பதாகையாலே ப்ரகடமாய்த்‌ தோற்றுமென்கிறார் –

புளிங்குடிக் கிடந்து வர குணமங்கை இருந்து வைகுந்தத்துள் நின்று
தெளிந்த என் சிந்தை அகம் கழியாதே
என்னை ஆள்வாய் எனக்கு அருளி
நளிர்ந்த சீர் உலகம் மூன்றுடன் வியப்ப நாங்கள் கூத்தாடி நின்று ஆர்ப்பப்
பளிங்கு நீர் முகிலின் பவளம் போல் கனி வாய் சிவப்ப நீ காண வாராயே–9-2-4—திருப் புளிங்குடியிலே -கிடந்ததோர் கிடக்கை -என்னும் அழகைக் காட்டும் -திரு வர குண மங்கையிலே -பிரான் இருந்தமை காட்டினீர் -என்னும் இருப்பில் அழகைக் காட்டியும் -ஸ்ரீ வைகுண்டத்தில் -நிலையார நின்றான் -என்னும் நின்ற அழகைக் காட்டியும் -அன்றோ என்னை புகுர நிறுத்திற்று -இவை எல்லாம் நான் இரக்கவோ செய்தது -அயோக்கியன் என்று அகலாத படி கண்கள் சிவந்திலே என் ஹிருதயம் தெளிந்தவாறே -அத்தைக் கை விடாதே நிரந்தர வாஸம் பண்ணி –

வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று
ஆர்வுற்ற என்னை ஒழிய என்னில் முன்னம்
பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான்

கார் ஒக்கும் காட் கரை அப்பன் கடியனே–9-6-10—நான் பாரித்த அளவும் அன்றிக்கே நான் பாரித்த காலத்துக்கு முன்பே பாரித்து –ஆச்சார்ய விஷயீ காரத்துக்கு பின்பு இ றே இவருடைய பாரிப்பு -/ சம்பந்தத்துக்கு திரஸ்கார ஹேது இல்லாமையால் -அவனுடைய பாரிப்பு சத்தா ப்ரயுக்தம் இறே
தான் என்னை–விபுவாய் ஸ்வதந்த்ரனான தான் -அணு பரிமாணனாய் பரதந்த்ரனான என்னை –
முற்றப் பருகினான்-தன் குண சேஷ்டிதாதிகளைக் காட்டி -என்னை நீராக்கி -நிச்சேஷமாகப் பருகினான் –வஸசா சாந்வயித்வைநம் லோச நாப்யாம் பிபன்நிவ -என்கிறபடியே -இத்தலையை அழித்துப் பரிமாறினான் -என்கிறபடியே –விழுங்குமவன் காணில் -என்று இறே இவர் பாரித்தது-

போகத்தில் தட்டு மாறும் சீலம் காட்கரையிலே கரை அழிக்கும்–சூரணை -178-

போகத்தில் தட்டு மாறும் சீலம்-அதாவது-இப்படி போக்ய பூதரான ஆழ்வாருடன் கலந்து பரிமாறும் இடத்தில் –-ஆள் கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மாயன் -திருவாய்-9-6-7–என்றும் –-ஆர் உயிர் பட்டது எனது உயிர் பட்டது -திருவாய்-9-6-9–என்றும் பேசும்படி அத் தலை இத் தலையாய் சேஷி சேஷ பாவம் மாறாடும் சீல குணம் –காட்கரையிலே கரை அழிக்கும்--அதாவது–திரு காட்கரை மருவிய மாயன் தன் மாயம் நினை தொரு-திருவாய்-9-6-1- -என்று வித்தராய்ப் பேசின திருகாட்கரையிலே கரை அழியப் பெருகும் என்கை — கரை அழிக்கும் என்கிறது -காட்கரை -என்கிற சமாதியாலே ..

இப்படி போக்‌யமான ஆழ்வாரோடே கலந்து பரிமாறுமிடத்து, “ஆட்கொள்வானொத்து என்‌ உயிருண்ட மாயன்‌” (திருவாய்மொழி 9-6-7) என்றும்‌, “ஆருயிர்‌ பட்டது எனதுயிர்‌ பட்டது” (திருவாய்மொழி 9-6-9) என்றும்‌, “தான்‌ என்னை முற்றப்‌ பருகினான்‌” (திருவாய்மொழி 9-6-10) என்றும்‌, அத்தலை யித்தலையாய்‌ ஸேஷ ஸேஷி பாவம்‌ மாறாடும்படியான ஸீலம்‌ திருக்காட்கரையிலே நிற்கிற நிலையிலே, கரை என்ற ஸமாதியாலே இருகரையுமழியப்‌ பெருகும்‌ என்கிறார் –-

காட்கரை ஏத்தும் அதனுள் கண்ணா என்னும்
வேட்கை நோய் கூர நினைந்து கரைந்து உகும்
ஆட் கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மாயனால்
கோட் குறை பட்டது என் ஆர் உயிர் கோள் உண்டே–9-6-7—அடிமை கொள்வாரைப் போலே புகுந்து – என் உயிர் உண்ட மாயனால்-என்னை வெறும் தரை யாக்கின ஆச்சர்ய பூதனாலே -கீழே திருவருள் என்று மறைத்துச் சொன்ன வார்த்தையை வெளியிடுகிறார் -கிட்டின போது தாழ நின்று மின்மினி பரக்க பரிமாறும் ஆச்சர்யம்-

ஆர் உயிர் பட்டது எனது உயிர் பட்டது
பேர் இதழ்த் தாமரைக் கண் கனிவாயது ஓர்
கார் எழில் மேகம் தென் காட் கரை கோயில் கொள்
சீர் எழில் நால் தடம் தோள் தெய்வ வாரிக்கே–9-6-9—நான் பட்ட பாட்டை நித்ய ஸூரிகளில் சிலர் பட்டார் யுண்டோ -பகவத் குணங்களுக்கு அபூமியாய் இருக்கிற சம்சாரத்தில் நான் பட்ட பாடு நித்ய விபூதியில் உள்ளார் பட்டார்களோ –இங்கு எனது உயிர் பட்டது –அங்கே ஆருயிர் பட்டது –என்று அருளிச் செய்வர் எம்பெருமானார் -நவோடையான ஸ்த்ரீக்கு அனுபவத்தில் புதுமையாலே ஆர்த்தி மிக்கு இருக்கும் இறே -என்று நம்பிள்ளைக்கு நஞ்சீயர் அருளிச் செய்வர் –

உருகுமால் நெஞ்சம் உயிரின் பரம் அன்றி
பெருகுமால் வேட்கையும் என் செய்கேன் தொண்டனேன்
தெருவு எல்லாம் காவி கமழ் திருக் காட்கரை
மருவிய மாயன் தன் மாயம் நினைதொறே–9-6-1-
-பரத்வத்தில் காட்டிலும் அவதாரத்தில் காட்டிலும் ஏற்றம் சொல்லுகிறது –பரத்வம் நெடும் கை நீட்டு -அவதாரம் காலாவதியை யுடைத்தது-மாயன் -ஆச்சர்யமான ஸுந்தரியாதிகளை யுடையவன் –-தன் மாயம் -கிட்டின போது தாழ நின்று பரிமாறின படி-நினைதொறே–ஊரை நினை தோறும் / ஸுந்தர்யத்தை நினைதொறும் / ஒரு ஊரும் ஒரு வடிவும் இல்லாதாரைப் போலே தாழ நின்ற சீலத்தை நினைத்த தோறும் /-பஹு பிரகாரத்தாலே அனுபவிப்பிக்க வல்லவன் அவன் -ஒன்றிலே கால தத்வம் உள்ளதனையும் கால் தாழ்ந்து புதியராய் அனுபவிக்க வல்லார் இவர் -அப்பொழுதைக்கு அப் பொழுது என்னாரா வமுதம் -என்றவர் இறே –

வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று
ஆர்வுற்ற என்னை ஒழிய என்னில் முன்னம்
பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான்

கார் ஒக்கும் காட் கரை அப்பன் கடியனே–9-6-10—என்னில் முன்னம்-பாரித்துத்--நான் பாரித்த அளவும் அன்றிக்கே நான் பாரித்த காலத்துக்கு முன்பே பாரித்து –ஆச்சார்ய விஷயீ காரத்துக்கு பின்பு இறே இவருடைய பாரிப்பு -/சம்பந்தத்துக்கு திரஸ்கார ஹேது இல்லாமையால் -அவனுடைய பாரிப்பு சத்தா ப்ரயுக்தம் இறே-தான் என்னை–விபுவாய் ஸ்வதந்த்ரனான தான் -அணு பரிமாணனாய் பரதந்த்ரனான என்னை –முற்றப் பருகினான்-தன் குண சேஷ்டிதாதிகளைக் காட்டி -என்னை நீராக்கி -நிச்சேஷமாகப் பருகினான் -வஸசா சாந்வயித்வைநம் லோச நாப்யாம் பிபன்நிவ -என்கிறபடியே -இத்தலையை அழித்துப் பரிமாறினான் -என்கிறபடியே –விழுங்குமவன் காணில் -என்று இறே இவர் பாரித்தது-

மஹாத்மாக்கள் விரஹம் சஹியாத மார்த்த்வம் வளத்தின் களத்தே கூடு பூரிக்கும் .-சூரணை-179-

(இங்கு திவ்யாத்ம ஸ்வரூப மார்த்வம் -கீழே திவ்ய மங்கள விக்ரஹ மார்த்வம்-வளம் -செல்வம் -அடியாருக்கு செல்வம் -கூடு பூரிக்கும் -நிறைந்து இருக்கும் )

மஹாத்மாக்கள் விரஹம் சஹியாத மார்த்த்வம்-அதாவது-தமரோடு அங்கு உறைவார்க்கு—திருவாய்-9-7-2-என்று-தம் பரிஜனங்களோடே அங்கே நித்ய வாஸம் பண்ணுகிறவர்க்கு என்கிற படி –சக்ருத் த்வதாகார விலோகநாசயா த்ருணீக்ருதா நுத்தம புக்தி முத்திபி மஹாத்மபிர் மாமவலயோக்யதாம் நய க்ஷணே பிதேயத் விரஹோதி துஸ் ஸஹ -ஸ்தோத்ர ரத்னம் -55- -என்கிறபடியே – தம்முடைய விக்ரகத்தை ஒருகால் காண வேணும் என்னும் ஆசையினால்- அநுத்தமான போக மோஷங்களையும் த்ருணீகரித்து இருக்கும் மஹாத்மாகளோட்டை விரஹம் சகியாமை யாகிற மார்த்த்வம்-
வளத்தின் களத்தே கூடு பூரிக்கும்
-அதாவது-மூழிக் களத்து வளத்தினை-பெரிய திருமடல் -129- விளக்கினை -என்றும் பாட பேதம் உண்டு என்பர் இதில் -என்று ஆஸ்ரிதருக்கு சம்பத்தாய் இருக்கும் ஸ்வபாவம் ஆனவன் திரு மூழிக் களத்தில் கூடுகட்டி நிற்கும் என்கை —கூடு பூரிக்கும் என்றது -களம்-என்கிற சமாதியாலே —

“தமரோடங்குறைவார்‌’ (திருவாய்மொழி 9-7-2) “என்றும்‌ “ஸக்ருத்வதாகாரேத்யாதி, க்ஷணேபி தே யத்‌ விரஹோ அதி துஸ்ஸஹ (ஸ்தோத்ர ரத்நம்‌ 55 -என்றும்‌ சொல்லுகிறபடியே தன்னுடைய விக்‌ரஹத்தை ஒருகால்‌ காண வேணுமென்கிற ஆசையாலே போக மோக்ஷங்களையும்‌ த்ருணீகரித்திருக்கிற மஹாத்மாக்களோட்டை விரஹம்‌ தனக்கு அதிதுஸ்ஸஹமாம்படியான அவனுடைய மார்தவம்‌, அதாகிறது நெஞ்சில்‌ மென்மை. மூழிக்களத்து விளக்கினை” (பெரியதிருமடல்‌ 129) என்கிற  திருமூழிக்களத்திலே நிற்கிற நிலையிலே, களம்‌ என்கிற ஸமாதியாலே கூடு பூரிக்கும்‌ என்கிறார் ––

நுமரோடும் பிரியாதே நீரும் நும் சேவலுமாய்
அமர் காதல் குருகினங்காள் அணி மூழிக் களத்து உறையும்
எமராலும் பழிப்புண்டு இங்கு என் தம்மா விழிப்புண்டு
தமரோடு அங்கு உறைவார்கு தக்கிலமே கேளீரே –9-7-2-–தம் பரிஜனங்களோடே அங்கே நித்ய வாஸம் பண்ணுகிற தமக்கு நாங்கள் ஆகோமோ என்று கேளுங்கோள்–தாமும் தமக்கு நல்லாருமாய் இருக்கிற இருப்புக்கு -அடியார்கள் –குழாங்களை –உடன் கூடுவது என்று கொலோ-என்று இருப்பார் ஆகாரோ -என்று கேளுங்கோள் —

ஸக்ருத் த்வதாகார விலோகநாஶயா
த்ருணீ க்ருதாந் உத்தம புக்தி முக்திபி: |
மஹாத்மபிர் மாம் அவலோக்யதாம் நய
க்ஷணே’பி தே யத்விரஹோ’திதுஸ்ஸஹ: ||-
-56–உன்னுடைய பிரிவைத் தாங்க முடியாதவர்களான, எத்தனை இன்பங்களும் மோக்ஷமும் பெற்றிருந்தாலும் உன்னுடைய திருமேனியை ஒரு முறை பார்ப்பதைக் கருதினால், அவற்றைப் புல்லைப் போல மதிப்பவர்களான சிறந்த வைஷ்ணவர்களின் கருணைப் பார்வைக்கு நான் இலக்காகும் தகுதியை எனக்குக் கொடு..

என்னை மனம் கவர்ந்த வீசனை வானவர் தம்
முன்னவனை மூழிக் களத்து விளக்கினை ———-129–திரு மூழிக் களத்திலே மிகவும் விளங்கா நின்று உள்ளவனை-வளத்தினை -என்று பாடமான போது-சம்பத் ஆனவனை -என்றுமாம் –

பிரிந்த துன்பக் கடல் கடத்தும் விஷ்ணு போத ஆந்ரு சம்ச்யம் நாவாயிலே நிழல் எழும் ..-சூரணை -180-

பிரிந்த துன்பக் கடல்-அதாவது-அன்புடையாரை பிரிவுறு நோய் -நாச்சியார் -5-4–என்றும் –துன்பக் கடல் புக்கு –நாச்சியார் -5-4-என்றும் சொல்லுகிறபடியே – எமராலும் பழிப் புண்டு அணி மூழிக் களத்து உறையும் –தம்மால் இழிப்புண்டு இங்கு என்–திருவாய்-9-7-2-என்றும் –தாம் தம்மைக் கொண்டு அகல்தல் தகவன்று என்று உரையீர் -திருவாய்-9-7-9–என்றும் , மிகமேனி மெலிவெய்தி மேகலையும் ஈடழிந்து என் அகமேனி ஒழியாமே-திரு மூழிக் களத்தார்க்கு தகவன்று என்று உரையீர்–திருவாய்-9-7-10- -என்றும்
இப்படி மென்மேலும் அழ விடும்படி தன்னைப் பிரிகையால் வந்த துக்க சாகரத்தை நிஸ்தரிப்பிக்கும் –கடத்தும் விஷ்ணு போத ஆந்ரு சம்ச்யம்-அதாவது-விஷ்ணு போதம் விநா நாந்யத் கிஞ்சிதஸ்தி பராயணம்-ஸ்ரீ விஷ்ணு தர்மம் -என்கிற விஷ்ணு போதமான அவனுடைய-ஆவா அடியான் இவன் என்று அருளாய்–திருவாய்-9-8-7- -என்று அபேஷிக்கலாம் படி இருக்கும் ஆஸ்ரித விஷய கிருபையாகிற ஆந்ருசம்ச்யம் – நாவாயிலே நிழல் எழும்- அதாவது-நாவாய் உறைகின்ற-திருவாய்-9-8-7- -என்று
அவன் நித்ய வாஸம் பண்ணுகிற திரு நாவாயிலே உள்ளு நிற்கிற வஸ்துவின் ஸ்வபாவம் இதுவோ என்று அறியலாம் படி அவ்வூரின் பேராலே நிழல் எழும் என்கை .

நாவாய் போலே இருக்கிற அவன் வர்த்திக்கும் தேசம் ஆகையாலே நாவாய் என்று ஊருக்கு பேராய் இருக்கிறது என்று கருத்து ..– விஷ்ணு போதத்வம் இத்தாலே பிரகாசித்தால் -அதுக்கு உடலான ஆந்ருசம்சயம் தன்னடடையே தோன்றும் இறே..காருண்யே நான்ரு ஸம்ஸயேன–ஸூந்தர -15-49–( கருணையாலும் அடியார்கள் விஷயத்தில் செய்யும் அருளாலும் )- கருணை வேறு அருள் வேறு என்பதற்கு பிரமாணம் -என்று விபஜித்துச் சொல்லி – ப்ரணஷ்டேதி காருண்யம் ஆஸ்ரிதேத் யாந்ருசம்ஸதா –ஸூ ந்தர –15-50–(பெண் காப்பாற்றப்பட வில்லையே என்ற கருணையாலும் நம்மை ஆஸ்ரிதவர்களைக் காப்பாற்ற வில்லையே என்கிற ஆந்ர் சம்ஸ்யத்தாலும் ஸ்ரீ ராமபிரான் வருந்தினார் ) -என்கையாலே .. ஆந்ரு சம்சயம் ஆவது -ஆஸ்ரித விஷய கிருபை- (நாவாய் உறைகின்ற நாரண நம்பீ ஆ ஆ அடியான் இவன் என்று அருளாயே -என்பதால் ஆந்ரு சம்ஸ்யம்-துன்பக்கடல் புக்கு வைகுந்தன் என்பதோர் தோணி பெறாது உழல்கின்றேன் -நாச்சியார் -படியே விஷ்ணு போதம் -விஷ்ணுவாகிற தோணி – ).

(பிரிந்த துன்பவித்யாதி ) “அன்புடையாரைப்‌ பிரிவுறுநோய்‌ துன்பக்‌ கடல்‌ புக்கு” நாச்சியார்‌ திருமொழி 5-4) என்றும்‌, ” யஸ்த்வயா ஸஹ ஸஸ்வர்க்கோ, நிரயோ யஸ்த்வயா விநா” (ரா.௮.30-18) என்கிறபடியே தன்னைப்‌ பிரிகையாகிற துக்க ஸாகரத்திலே அழுந்துமவர்களை “ஸம்ஸாரார்ணவ மக்‌நாநாம்‌ விஷயாக்ராந்த சேதஸாம்‌ விஷ்ணு போதம்‌ விநா நாந்யத்‌ கிஞ்சிதஸ்தி பராயணம்‌” (விஷ்ணு தர்மம்‌ என்கிறபடியே அக்கரைப் படுத்துவதான விஷ்ணு போதத்தினுடைய, “ஆவாவடியான்‌ இவனென்றருளாய்‌” (திருவாய்மொழி 9-8-7) என்கிற ஆந்ருஸம்ஸ்யம்‌ திருநாவாயிலே நிற்கிற நிலையிலே நிழலெழும்‌, “கொந்தார்‌ மலர்ச்‌ சோலைகள்‌ சூழ்‌” (திருவாய்மொழி 9-8-10) என்று சோலையைச்‌ சொல்லுகையாலே நிழலெழும்‌ என்கிறார் –

என்புருகி இனவேல் நெடும் கண்கள் இமை பொருந்தா பல நாளும்
துன்பக் கடல் புக்கு வைகுந்தன் என்பதோர் தோணி பெறாது உழல்கின்றேன்
அன்புடையாரைப் பிரிவுறு நோயது நீயுமறிதி குயிலே
பொன்புரை மேனிக் கருளக் கொடி யுடைப் புண்ணியனை வரக் கூவாய்–5-4-தோல் புரையே போகை அன்றிக்கே -எலும்பானதும் உருகி–அன்புடையாரைப் பிரிவுறு நோயது நீயுமறிதி குயிலே
பிரிவாற்றாமையாலே படுகிற வியசனம் நீ அறியாமை இல்லை இறே –-சேர இருக்கச் செய்தே நீயும் அறிதி என்னும் படி எங்கனே என்னில் சம்ஸ்லேஷம் ஆகில் விஸ்லேஷாந்தமாக அல்லது இராது என்று இருக்குமவள் ஆகையாலே சொல்லுகிறாள் – தனக்குத் துன்பக் கடலை விளைத்தான் இறே அவன்

நுமரோடும் பிரியாதே நீரும் நும் சேவலுமாய்
அமர் காதல் குருகினங்காள் அணி மூழிக் களத்து உறையும்
எமராலும் பழிப்புண்டு இங்கு என் தம்மா விழிப்புண்டு
தமரோடு அங்கு உறைவார்கு தக்கிலமே கேளீரே –9-7-2-காதாசித்க சம்ச்லேஷமே ஹேதுவாக பந்துக்கள் கை விட்டார்கள் –காதாசித்கமாக சம்ச்லேஷித்த அளவிலே தாமும் உபேக்ஷித்தார் –பந்துக்கள் கை விட்டதே ஹேதுவாக கைக்கொள்ள வேணும் -பிற்பட்டார்க்கும் காட்டிக் கொடுக்க வந்து நிற்கிற நிலையாகையாலும் கைக் கொள்ள வேணும் -இரண்டும் என்னளவில் உபேஷா ஹேது வாவதே –இங்கு என்-இவ்விருப்புக்கு என்ன பிரயோஜனம் உண்டு -சரீர சமனந்தரத்திலே ஒரு தேச விசேஷத்தில் பெற வேண்டித்தான் ஆறி இருக்கிறேனோ -என்று தன்னில் விஷணை யாய் -பின்னையும் தன் செல்லாமையாலே அவற்றைக் குறித்து வார்த்தை சொல்லுகிறாள்-

பூந்துழாய் முடியார்க்கு பொன் ஆழிக் கையார்க்கு
ஏந்து நீர் இளங்குருகே திரு மூழிக் களத்தார்க்கு
ஏந்து பூண் முலை பயந்து என் இணை மலர்க் கண் நீர் ததும்ப
தாம் தம்மைக் தம்மைக் கொன்டு அகல்தல் தகவன்று என்று உரையீரே–9-7-9-தாம்-கீழ் சொன்ன அழகையும் சீலத்தையும் யுடைய தாம் –தம்மைக் கொன்டு அகல்தல்-தமக்கு அகல வேண்டினால் -இவ்வடிவைப் பிரிந்தார் பிழையார்-என்று தம்மை வைத்து அன்றோ போவது -தம்மைக் கண்ணாடி புறத்திலே கண்டு அறிவரே-தம்மைப் பிரிந்த தசைக்கு உதவுகைக்கு அன்றோ தம்மைக் கண்டது -இமாம் அவஸ்தாம் ஆபன்னோ நேஹ பச்யாமி ராகவும் –தகவன்று என்று உரையீரே–மென்மையும் பிரணயித்தவமும் போனால் தாயையும் குடி போக வேணுமோ –நிர்த்தயர் செய்யுமத்தை செய்தார் என்று சொல்லுங்கோள் -ஸ்த்ரீவதம் என்றால் அஞ்சாதார் செய்யுமத்தை செய்தார் என்று சொல்லுங்கோள்–என்கிறாள் –

கோவாகிய மாவலியை நிலம் கொண்டாய்
தேவா சுரம் செற்றவனே திருமாலே
நாவாய் உறைகின்ற என் நாரண நம்பீ
ஆவா அடியான் இவன் என்று அருளாயே–9-8-7-—-ரக்ஷகனானவன் தூரஸ்தனாகை யன்றிக்கே ஆஸ்ரித ரக்ஷண அர்த்தமாக திரு நாவாயிலே நித்ய வாஸம் பண்ணுகிறவனே – என் நாரண நம்பீ-அதுக்கு உறுப்பாக -ஆஸ்ரித வத்சலனாய் -அவர்களுக்கு உறுப்பாகப் பெற்றோமே -என்று அத்தாலே பூர்ணனானவனே -ஆஸ்ரித ரக்ஷணத்தை நினைத்து சர்வ அந்தர்யாமி யானவன் என்றுமாம் அநந்ய கதியான இவன் ஐயோ நோவு படுவதே -என்று கிருபை பண்ணி யருள வேணும் –ஸோ அஹம் தே தேவ தேவேச நார்ச்ச நாதவ் ஸ்துதவ்நச சாமர்த்த்யவான் க்ருபா மாத்ர மநோ வ்ருத்தி ப்ரஸீத மே –இவன் நமக்கு அசாதாரணன் என்று சம்பந்தத்தைப் பார்த்து கிருபை பண்ணி அருள வேணும் -என்றுமாம் –

அந்தோ அணுகப் பெறு நாள் என்று எப்போதும்
சிந்தை கலங்கி திருமால் என்று அழைப்பன்
கொந்தார் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்
வந்தே உறைகின்ற எம்மா மணி வண்ணா–9-8-10-
–கொத்து மிக்க மலரை யுடைத்தான சோலைகளாலே சூழப் பட்டு இருந்துள்ள திரு நாவாயிலே -நித்ய வசந்தமான சோலைகளை யுடைத்தாகையாலே -நிரதிசய போக்யமான தேசம் என்கை –வந்தே உறைகின்ற எம்மா மணி வண்ணா–ஒரு தேசத்திலே சென்றே காணக் கடவதான வடிவைக் கொண்டு -ஆஸ்ரித அர்த்தமாக வந்து -நித்ய வாஸம் பண்ணுகிறவனே -அவ்வடிவை எனக்கு கட்டாத வன்று உன் வரவு அஸத் சமம் அன்றோ -என்கை –

ஸரண்ய முகுந்தத்வம்‌ உத்பலாவதகத்திலே ப்ரஸித்‌தம்‌.–சூரணை-181-

(உத்பலாவதகம் –உத்பல -அவத்-அகம் -அவத் -காப்பாற்றுதல் -முமுஷுக்களைக் காப்பாற்றும் இடம் )

சரண்ய முகுந்தத்வம்-அதாவது-சரணமாகும் தனது தாள் அடைந்தார்க்கு எல்லாம் மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் –திருவாய்-9-10-5-என்று கீழ் சொன்ன விசேஷத்தாலே எல்லார்க்கும் சரண வர்ண அர்ஹனாய் இருக்கும் அவனுடைய மோஷ ப்ரதத்வம்-உத்பலாவதகே திவ்யே விமாநே புஷ்கரேஷணம் சௌரி ராஜம்மஹம் வந்தே சதா சர்வாங்க ஸூந்தரம் –என்கிற படியே திருக் கண்ண புரத்தில் – உத்பலாவதகம் என்கிற பேரை உடைத்தான திவ்ய விமாநத்தில் நிற்கிற நிலையில் எல்லாரும் அறியலாம் படி பிரசித்தம் என்கை —முகுந்தத்வம் ஆவது முக்தி பூமி ப்ரதத்வம்
வைகுந்தம் கொடுக்கும் பிரான்
என்கையாலே -ஆய்த்து இவர் இப்படி அருளிச் செய்தது ..
பலம் என்று மாம்சமாய் –உத்பலர் என்று மாம்சல தேகராய் இருக்கை அன்றிக்கே சரீர சோஷணத்தாலே உத்கத மாம்சராய் கொண்டு -உபேஷித தேகராய் இருக்கும் முமுஷுக்களாய் -தேஷாம் மமாவதோ வாஸம் உத்பலாவதகம்விது –என்கிறபடியே அவர்களுக்கு ரஷகன் எழுந்து அருளி நிற்க்கையாலே -உத்பலாவதகம் -என்று அங்குத்தை திவ்ய விமானத்துக்கு பேர் ஆகையாலே -ஆய்த்து –மோஷ ப்ரதத்வம் அந்த ஸ்தலத்திலே பிரசித்தம் என்றது

“சரணமாகும்‌ தனதாளடைந்தார்க் கெல்லாம்‌ மரணமானால்‌ வைகுந்தம்‌ கொடுக்கும் பிரான்‌” (திருவாய்மொழி 9-10-5) என்று இப்படி ஸரண்யனான அவனுடைய மோக்ஷ ப்ரதத்வம்‌ உத்பலாவதகே திவ்யே விமாநே புஷ்கரேக்ஷணம்‌ சவ்ரிராஜமஹம்‌ வந்தே, ஸதா ஸர்வாங்க ஸுந்தரம்‌” (திருக்கண்ணபுரம்‌ ஸ்தலபுராணம்‌?) என்று திருக்கண்ணபுரத்திலே உத்பலாவதக மென்னும்‌ பேரையுடைத்தான திவ்ய விமாநத்தில்‌ நிற்கிற நிலையிலே ப்ரஸித்தம் என்கிறார் –-

சரணமாகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்

அரண் அமைந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரத்
தரணி யாளன் தனது அன்பர்க்கு அன்பாகுமே–9-10-5–ஜென்மத்தாலும் வ்ருத்தத்தாலும் ஞானத்தாலும் குறைய நின்றாரே யாகிலும் -தன் திருவடிகளை உபாயமாகப் பற்றினார்க்கு எல்லாம் ரக்ஷகனாம் -கீழ் மூன்று பாட்டாலும் சொன்ன பக்தி யோகம் அதிக்ருதாதிகாரம்-இதில் சொன்ன பிரபத்தி -சர்வாதிகாரம் -என்கிறது –மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்-தன் பக்கல் ந்யஸ்த பரனானவன்று தொடங்கி -இவனை ஒழிய தனக்கு செல்லாது இருக்கச் செய்தே -இவனுடைய ருசியை வர்த்தித்து -சரீர அவசானத்திலே பரம பதத்தை கொடுத்த மஹா உபகாரகன் -தன் அழகைக் காட்டி அத்தாலே இவற்றுக்கு ருசி பிறக்கும் அளவும் அவசர பிரதீஷனாய் இருக்கும் படியைச் சொல்கிறது – மரணமானால்-தனக்கு அசத்தி இல்லை -இவனுக்கு கர்த்தவ்யம் இல்லை -இவன் ருசியைக் கடாக்ஷித்து இருக்கிற அத்தனை -இப்பாட்டில் –மரணமானால் -என்றத்தைக் கொண்டே கீழ்ச் சொன்ன நிரூபணம் எல்லாம் –

மார்க்க பந்து சைத்யம் மோகனத்தே மடு விடும்–சூரணை-182-

அதாவது-இப்படி மோஷ பிரதனனான தன்னுடைய பிரசாதத்தாலே -மோஷ பூமிக்கு போவார்க்கு –
காள மேகத்தை அன்றி மற்று ஒன்றிலம் கதி–திருவாய்-10-1-1 –என்றும் – ஆப்தன் (ஆத்தன்)- தாமரை அடி இன்றி மற்றிலம் அரணே–திருவாய்-10-1-6-–என்னும் படி ஆப்தனாய் கூடக் கொண்டு போம் மார்க்க பந்து வானவனுடைய-சுரி குழல் கமலக் கண் கனி வாய் காள மேகம்–திருவாய்-10-1-1 -என்றும் – அவனடி நிழல் தடம்–திருவாய்-10-1-2 -என்றும்-மரகத மணித் தடம்—திருவாய்-10-1-8 -என்றும்
சொல்லும் படி இருந்துள்ள சம்சாரிக சகல தாப ஹராமான சைத்யம் (சைத்யம் -குளிர்ச்சி -காளமேகம்-தடம்-என்பதால் ) அம்ருத பிரதான சமயத்திலே அசுரர்களை மோஹித்த இடம் ஆகையாலே மோகன ஷேத்ரமான திரு மோகூரிலே நிறைந்து நிலை பெற்று இருக்கும் என்கை –மடுவிடும் -என்றது மரகத மணித் தடம்-என்கிற சமாதியாலே

இப்படி மோக்ஷ ப்ரதனாமிடத்தில்‌ முக்தி மார்க்கமான அர்ச்‌சிராதி மார்க்கத்துக்குத் துணையான “ ஆத்தன் தாமரையடியன்றி மற்றிலம்‌ அரணே” (திருவாய்மொழி 10-1-6) என்றும் -ஆப்த பந்துவானவனுடைய சுரிகுழல்‌ கமலக்‌ கண்கனிவாய்‌ காளமேகத்தை யன்றி மற்றிலம்‌ கதியே” (திருவாய் -10-1-1-) என்றும்‌,அவனடி நிழல் தடமன்றி யாமே (திருவாய்மொழி 10-1-2) என்றும்‌ ஸாம்ஸாரிகமான தாபத்தை ஆற்றவற்றான ஸைத்யம்‌ மோஹந க்ஷேத்ரமான திருமோகூரிலே, மரகத மணித்தடம்‌” (திருவாய்மொழி 10-1-8) என்கிற ஸமாதியாலே மடுவிடும்‌ என்கிறார் –-

தாள தாமரைத் தட மணி வயல் திரு மோகூர்
நாளும் மேவி நன்கமர்ந்து நின்று அசுரரைத் தகர்க்கும்
தோளும் நான்குடைச்
சுரி குழல் கமலக் கண் கனி வாய்
காளமேகத்தை யன்றி மற்று ஓன்று இலம் கதியே-10-1-1--அசூரரை அழியச் செய்யுமா போலே என் விரோதிகளை துணிக்க வல்ல தோள்களை யுடையவன் –-கஜம் வா வீஷ்ய ஸிம்ஹம் வா வ்யாக்ரம் வா வனமாஸ்ரிதா -நா ஹார யதி சந்த்ராஸம் பாஹு ராமஸ்ய சமஸ்ரிதா-என்னக் கடவது இறே —விடு காதாய் கிடந்தாலும் தோடிட்ட காது என்று தெரியுமா போலே -தோள்களைக் கண்ட போதே விரோதி நிரசன சீலம் என்று தோற்றி இருக்கும் என்கை –சுரி குழல்–இவன் பின்னே வழியே போமிடத்து திருக் குழலை ஒரு கால் பேண நெடு நாள் சம்சாரத்தில் பட்ட கிலேசம் எல்லாம் தீரும் படி யாய்த்து இருப்பது -கேசவ கிலேச நாசன –-கமலக் கண் கனி வாய்-பந்தம் எல்லாம் தோற்றும் படியான நோக்கும் ஸ்மிதமும் இருக்கிற படி –சம்சாரத்திலே பொய்யருடைய நோக்கிலும் ஸ்மிதத்திலும் பட்ட நோவு எல்லாம் ஆறும் படி இறே இருப்பது –கச்சதாம் தூர  மத்வானம் த்ருஷ்ணா மூர்ச்சித சேதஸாம் -பாதேயம் புண்டரீகாக்ஷ நாம சங்கீர்த்தன அம்ருதம் – வழி போம் போது முன்னே ஒரு காளமேகம் வர்ஷித்திக் கொண்டு போக பின்னே போமா போலே ஸ்ரமஹரமாய் இறே இருப்பது –சர்வகந்த -என்கிற விஷயம் ஆகையால் -அவ்வாஸ நாற்றத்தை அனுபவித்திக் கொண்டு போம் அத்தனை -யன்றி மற்று ஓன்று இலம் கதியே--அவனை ஒழிய வேறு கதி உடையோம் அல்லோம் -வேறு ஒருவரை ரக்ஷகமாக உடையோம் அல்லோம் –

இலம் கதி மற்று ஓன்று எம்மைக்கும் ஈன் தண் துழாயின்
அலம் கலம் கண்ணி ஆயிரம் பேருடை யம்மான்
நலம் கொள் நான்மறை வாணர்கள் வாழ் திரு மோகூர்
நலம் கழல் அவனடி நிழல் தடம் அன்றி யாமே–10-1-2—அவனுடைய பாதச் சாயை யாகிற பொய்கையை ஒழிய —யாம் -இலம் கதி மற்று ஓன்று எம்மைக்கும்–அவன்தானே வத்யதாம் என்றாலும் புறம்பு புகலற்று இருக்கிற படி –

கூத்தன் கோவலன் குதற்று வல்லசுரர்கள் கூற்றம்
ஏத்தும் நம் கட்கும் அமரர்க்கும் முனிவர்க்கும் இன்பன்
வாய்த்த தண் பணை வளவயல் சூழ் திரு மோகூர் ஆத்தன்
தாமரை யடி யன்றி மற்று இலம் அரணே
–10-1-6—திரு மோகூரிலே நின்று அருளின-பரம பந்து -தான் தனக்கு அல்லாத மரண சமயத்தில் –அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி -என்னும் பரம ஆப்த தமன் –தன்னை அஞ்சின போது அவன் பக்கலிலே ந்யஸ்த பரனாம் படி யான ஆப்த தமன் – தாமரை யடி யன்றி-அநாப்தன் ஆகிலும் விட ஒண்ணாத படி யாய்த்து -திருவடிகளில் போக்யத்தை –மற்று இலம் அரணே–வேறு சிலரை ரக்ஷகமாக யுடையோம் அல்லோம் -போக்யத்தை இல்லை யாகிலும் -அநாப்தன் ஆகிலும் புறம்பு புகல் இல்லை என்கை –

துயர் கெடும் கடிது அடைந்து வந்து அடியவர் தொழுமின்
உயர் கொள் சோலை ஒண் தட மணி யொளி திரு மோகூர்
பெயர்கள் ஆயிரம் உடைய வல்லரக்கர் புக்கு அழுந்த
தயரதன் பெற்ற மரகத மணித் தடத்தினையே–10-1-8-–சக்கரவர்த்தி பெற்ற நீல மணி போலே இருக்கிற தடாகத்தினை -அடைந்து வந்து அடியவர் தொழுமின்-பதி தரு மருவாபீ வாரிவத் சர்வ போக்யம் -என்கிற படி அனுகூலர்களுக்கு ரக்ஷகமாய் –காகுத்ஸத்த பாதால முகே புதன்ச -என்கிறபடியே உகவாதற்கு நாசகமாய் இறே இருப்பது –மயா த்வம் சம நுஜ்ஜஞாதோ கச்ச லோகான் அநுத்தமான் -என்று பக்ஷியைப் போக விட்டார் இறே –

ஸஸைன்ய புத்ர ஸிஷ்ய ஸாத்‌ய ஸித்‌த பூ ஸுரார்ச்சநத்துக்கு முக நாபி பாதங்களை த்‌வார த்ரயத்தாலே காட்டும்‌ ஸாம்யம்‌ அநந்தஸயநத்திலே வ்யக்தம்‌.–சூரணை -183-

(ச சைந்ய சாத்ய அர்ச்சனத்துக்கு முகத்தையும்- – ச புத்ர -ஸித்த அர்ச்சனத்துக்கு நாபியையும் –
ச சிஷ்ய பூ சுர அர்ச்சனத்துக்கு பாதங்களையும் த்வார த்ரயத்தாலே காட்டும் – சாம்யம் அநந்த சயநத்திலே வ்யக்தம் )

அதாவது-அமரர் கோன் அர்ச்சிகின்று அங்கு அகப் பணி செய்வர் விண்ணோர் -திருவாய்-10-2-6-– என்கிற சேநாசகிதரான சேனை முதலியார் ஆகிற –யத்ர பூர்வே சாத்யா-புருஷ ஸூக்தம் –என்கிற
நித்ய ஸூரிகளின் தலைவரான சாத்யர் உடையவும் —-அமரார் திரிகின்றார் கட்கு ஆதி—திருவாய்-10-2-6- -என்கையாலே புத்ரர்களான ப்ரமாதிகளான சித்தர் உடையவும் – படமுடை அரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண நடமினோ நமர்கள் உள்ளீர்–திருவாய்-10-2-8- -என்று இவர் உபதேசம் கேட்ட சிஷ்யர்களான பூஸூரர் உடையவும் – அர்ச்சனதுக்கு திரு முகமும் திரு நாபியும் திரு அடிகளும் ஆகிய இவற்றை திரு வாசல் மூன்றாலும் தர்சிப்பிக்கிற நித்ய ஸூரிகள் சம்சாரிகள் என்று விசேஷம் பாராத சாம்ய குணம் திரு வநந்த புரத்திலே கண் வளருகிற பிரகாரத்தாலே வ்யக்தமாய் இருக்கும் என்கை —

(ஸஸைந்ய) “அமரர்கோனர்ச்சிக்கின்று அங்ககப்‌ பணி செய்வர்‌ விண்ணோர்‌” (திருவாய்மொழி 10-2-6) என்கிற ஸேநா ஸஹிதரான ஸேநை முதலியாராகிற ஸாத்‌யர்‌, (புத்ர) உலகுயிர்‌ தேவும்‌ மற்றும்‌ படைத்த” (திருவாய்மொழி 10-2-7) என்று சொல்லுகையாலே புத்ரர்களான ப்‌ரஹ்மாதி தேவதைகளாகிற ஸித்‌தர்‌, (ஸிஷ்யர்‌) “நடமினோ நமர்களுள்ளீர்‌ அனந்தபுரநகர்‌ புகுதுமின்றே” (திருவாய்மொழி 10-2-8) என்று இவர்‌ உபதேஸிக்கக்‌ கேட்ட ஸிஷ்யர்களாகிற பூஸுரர்‌ என்கிற இவர்கள்‌ மூவரும்‌ அர்ச்சிக்கைக்கு முக நாபி பாதங்களை திருவாசல்‌ மூன்றாலும்‌ காட்டுகையாலே நித்ய ஸூரிகளோடு நித்ய ஸம்ஸாரிகளோடு வாசியற முகம்‌ கொடுக்கும்‌ ஸாம்யம்‌ திருவனந்தபுரத்தில்‌ கண் வளருகிற கிடை யழகிலே ஸுவ்யக்தமாகக்‌ காணலாமென்கிறார்

அமரராய்த் திரிகின்றார் கட்கு ஆதிசேர் அனந்த புரத்து
அமரர் கோன் அர்ச்சிக்கின்று அங்கு அகப்பணி செய்வர் விண்ணோர்

நமர்களோ சொல்லக் கேண்மின் நாமும் போய் நணுக வேண்டும்
குமரனார் தாதை துன்பம் துடைத்த கோவிந்தனாரே-10-2-6—மனுஷ்யாதிகளில் காட்டில் -சில நாள் ஏற இருக்கிற இத்தைக் கொண்டு தங்களை நித்யர் என்று அபிமானித்து இருக்கிறவர்களுக்கு –திரிகின்றார்கட்கு–மனுஷ்யாதிகளில் காட்டில் பந்தனம் கனத்து இருக்கச் செய்தேயும் நிர்ப்பயராய் திரியா நிற்பார்கள் -மநுஷ்யர்களுடைய விரக்திக்கு அவர்கள் பரிஹரித்த அளவு இறே த்யஜிக்க வேண்டுவது -ப்ரஹ்மாவுக்கு சதுர்த்தசி புவனமும் த்யஜிக்க வேணுமே-ஆதி சேர் அனந்த புரத்து–காரண பூதன் வர்த்திக்கிற தேசத்திலே –ஸ்ரீ சேனாபதி ஆழ்வான் அடிமை செய்யும் இடத்தில் கை நீட்டுவார் நித்ய ஸூரிகள்–

துடைத்த கோவிந்தனாரே உலகு உயிர் தேவு மற்றும்
படைத்த வெம் பரம மூர்த்தி
பாம்பணைப் பள்ளி கொண்டான்
மடைத் தலை வாளை பாயும் வயல் யணி யனந்த புரம்
கடைத்தலை சீய்க்கப் பெற்றால் கடு வினை களையலாமே–10-2-7-லோகத்தையும் தேவ ஜாதியையும் மற்றும் உண்டான ஆத்மாக்களையும் யுண்டாக்கினவன் -இவை அதிப்ரவ்ருத்த மான வன்று சம்ஹரித்து -பின்பு புருஷார்த்த உபயோகியான கரணங்களைக் கொடுத்து ரஷித்த-ஆச்ரித பவ்யனான சர்வேஸ்வரன் –

கடுவினை களையலாகும் காமனைப் பயந்த காளை
இடவகை கொண்ட தென்பர் எழில் அணி அனந்த புரம்
படமுடை யரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண
நடமினோ நமர்கள் உள்ளீர் நாமும் உமக்கு அறியச் சொன்னோம்
–10-2-8—ஸ்வ ஸ்பர்சத்தாலே விஸ்திருத பணனான திருவனந்த ஆழ்வான் மேலே நிரந்தரமாக கண் வளர்ந்து அருளுகிறவனுடைய திருவடிகளைக் காண –பயின்ற-என்று வீசு வில்லிட்டு எழுப்பிலும் எழுப்ப ஒண்ணாத படி இறே படுக்கை வாய்ப்பு இருப்பது-நடமினோ நமர்கள் உள்ளீர்-என்னோடு குடல் துவக்கு உடையார் அடைய நடவுங்கோள்-நாமும் உமக்கு அறியச் சொன்னோம்வரி வாள் அரவின் அணைப் பள்ளி கொள்கின்ற கரியான் கழல் காணக் கருதும் கருத்தே -என்று சபலரான நாம் –ஏகம் துக்கம் ஸூகஞ்ச நவ் -என்னும் படி இருக்கிற உங்களுக்கு நெஞ்சிலே படச் சொன்னோம் –

மோஷ தாநத்திலே பிரணத பாரதந்த்ர்யம் வளம் மிக்க நதியிலே கரை புரளும்–சூரணை -184-

மோஷ தாநத்திலே பிரணத பாரதந்த்ர்யம்-அதாவது-அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே -திருவாய்-10-6-1-என்றும் –விண்ணுலகு தருவானாய் விரைகின்றான் விதி வகையே-திருவாய்-10-6-3- -என்றும் இப்படி சர்வ சமனானவன் ஆஸ்ரிதர்க்கு மோஷ பிரதானம் பண்ணும் அளவில்
அவர்கள் விதித்த படி செய்வானாய் நிற்கிற ஆஸ்ரித பாரதந்த்ர்யம் – வளம் மிக்க வாட்டாற்றான்–திருவாய்-10-6-3- -என்று ரஷ்ய வர்க்கம் குறைவற்ற தேசம் ஆகையாலே அவனுக்கு சம்பத்து மிக்கு இருக்கிற திரு வாட்டாற்றிலே அமர்யாதமாக பிரவகிக்கும் என்கை .. கரை புரளும் என்றது ஆறு என்கிற சமாதியாலே —

“அருள்தருவா னமைகின்றான்‌ அது நமது விதி வகையே’” (திருவாய்மொழி 10-6-1என்றும்‌,  “விண்ணுலகம்‌ தருவானாய்‌ விரைகின்றான்‌ விதிவகையே” திருவாய்மொழி 10-6-3) என்றும்‌, இப்படி ஸர்வ ஸமனானவன்‌ ஆஸ்ரிதர்க்கு மோக்ஷத்தைக்‌ கொடுக்குமிடத்தில்‌ அவர்கள்‌ விதித்தபடியே செய்யக் கடவோமென்கிற ஆஸ்ரித பாரதந்த்ர்யம்‌ “வளம்மிக்க வாட்டாற்றான்‌’ (திருவாய்மொழி 10-6-3) என்று திருவாட்டாற்றிலே நிற்கிற நிலையிலே, ஆறென்கிற ஸமாதியாலே கரை புரளும்‌ என்கிறார் 

அருள் பெறுவார் அடியார் தன் அடியனேற்கு ஆழியான்
அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே
இருள் தரும் மா ஞாலத்துள் இனிப் பிறவி யான் வேண்டேன்
மருள் ஒழி நீ மட நெஞ்சே வாட்டாற்றான் அடி வணங்கே–10-6-1—ஆஸ்ரிதர் எல்லார் பக்கலிலும் பண்ணும் அருளை -என் பக்கலிலே பண்ணுமவனாகச் சமைந்து நின்றான் –அஸ்மா பிஸ் துல்யோ பவது -என்னுமவர்கள் இறே இவர்கள் -ஸ்வதந்த்ரனாகில் தருகிறான் — இனிக் குறை என் என்னில் –
அது நமது விதி வகையே–அது நாம் சொல்லச் செய்வானாக நினைத்து இரா நின்றான் -அது நம்முடைய  பாக்யாதி குணம் இறே -என்றாய்த்து பூர்வர்கள் நிர்வாஹம் -இது பிரகரணத்தோடு சேராது –நாம் விதித்த படியே செய்வானாக நினைத்து இரா நின்றான் -என்று அருளிச் செய்தார் எம்பெருமானார் -தன் பக்கல் குறைவற்று இருந்தாலும் இத் தலையில் இச்சை பார்த்து இருக்கும் இறே –சொல் வகையே என்னாதே- விதி வகையே -என்றது –தானே தருமது வித்யதிக்ரமம் -என்று இருக்கை யாலே-

நண்ணினம் நாராயணனை நாமங்கள் பல சொல்லி
மண்ணுலகில் வளம் மிக்க வாட்டாற்றான் வந்து இன்று
விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் விதி வகையே

எண்ணினவாறு ஆகா இக் கருமங்கள் என் நெஞ்சே –10-6-3—பரம பதத்தில் காட்டில் ஸம்ருத்தி மிக்கு இருந்துள்ள திரு வாட்டாற்றை நிரூபகமாக யுடையவன் —வளம் –சம்பத்து -ரஷ்யம் குறைவற்ற தேசம் ஆகையால் ரக்ஷகனுக்கு சம்பத்து மிக்கு இருக்கும் இங்கு -கைங்கர்யத்துக்கு விச்சேதம் இல்லாமையால் சேஷ பூதனுக்கு சம்பத்து மிக்கு இருக்கும் அங்கு –வந்து –நாம் செல்ல வேண்டும் தேசம் அடங்க தானே வந்து –இன்று -நம் பக்கல் இதுக்கு அடியாக இருப்பது ஓன்று நென்னேற்று இல்லை -இன்று இங்கனே விடியக் கண்டது அத்தனை –விண்ணுலகம் தருவானாய்–பரம பதத்திலே செல்லப் பெறுகை யன்றிக்கே -ஆண்மின்கள் வணக்கம் -என்ற பொதுவும் இன்றிக்கே த்ரிபாத் விபூதியையும் நமக்கே தருவானாய் இரா நின்றான் –விரைகின்றான் –சா பேஷாரான நாம் ஆறி இருக்க -நிரபேஷனானவன்-பதறா நின்றான் –முன்பு இவர் விரைந்த போது ஒரு கார்யார்த்தமாக வைத்தானாய் -அது தலைக் கட்டின வாறே -விசத்ருசமான விபூதி இவருக்குத் தரம் அன்று என்று பதறா நின்றான் –தொடங்கின அப்போதே தலைக் கட்ட வல்ல சர்வ சக்திக்கு பதற வேண்டுகிறது என் என்னில்
விதி வகையே--நாம் விதிக்கத் தருவானாக வேண்டி இரா நின்றான் –

த்யாஜ்ய தேக வியாமோகம் மருள்கள் கடியும் மயல் மிகு பொழிலிலே தலைக்கும்–சூரணை -185-

த்யாஜ்ய தேக வியாமோகம்-அதாவது
முமுஷுக்களுக்கு த்யாஜ்யமான தேகத்திலே –சரம தேகம் ஆகையாலே – மகிஷி யினுடைய உச்சிஷ்டத்தை விரும்பும் ராஜ புத்ரனைப் போலே –வஞ்சக் கள்வனாய் நெஞ்சும் உயிரும் உள் கலந்து–திருவாய்-10-7-1 –என்றும் –மாய வாக்கை இதனுள் புக்கு –திருவாய்-10-7-3–என்கிறபடியே-
இதன் தோஷம் பாராமல் உள் புகுந்து –திரு மால் இரும் சோலை மலையே திருப் பாற் கடலே என் தலையே–திருவாய்-10-7-8–இத்யாதிப் படி உகந்து அருளின நிலங்கள் எல்லா வற்றிலும் பண்ணும் விருப்பத்தை இதில் ஏக தேசத்தில் பண்ணி-மங்க ஒட்டு -உன் மா மாயை -திருவாய்-10-7-10- -என்று கால் கட்டி விடுவிக்க வேண்டும் படி அவனுக்கு உண்டான வியாமோகம்-மருள்கள் கடியும் மணி மலை திருமாலிருஞ்சோலை மலையே -திருவாய்-10-7-7-என்று சர்வருடைய அஞ்ஞானத்தை ஸ்வாசனமாக போக்குவதாய் –மயல் மிகு பொழில் சூழ் மால் இரும் சோலை–திருவாய்–2-10-3 -என்று போக்யதா பிரகர்ஷத்தாலே போக்தாக்களை பிச்சேற்ற வற்றான சோலையை உடைய தெற்கு திருமலையிலே சம்ருதமாய் செல்லும் என்கை .-பொழில் -என்கிற சமாதியாலே ஆய்த்து -தழைக்கும் -என்றது ..

(த்யாஜ்யதே ஹவ்யாமோஹம்‌) ‘ மாய வாக்கை இதனுள்‌ புக்கு” (திருவாய்மொழி 10-7-3) என்று ஆழ்வாருக்கு த்யாஜ்யமான தேஹத்திலே புகுந்து திருமாலிருஞ்‌ சோலை இத்யாதிப்படியே தேஸ விஸேஷத்திலே பண்ணுமாதரத்தையும்‌ இதிலே பண்ணி இவர்‌ “மங்கவொட்டு” (திருவாய்மொழி 10-7-10) என்று கால் கட்டும்படி அவனுக்குண்டான வ்யாமோஹம்‌ (மருள்கள்‌ கடியும்‌ மயல்மிகு பொழிலிலே தழைக்கும்‌) “மருள்கள்‌ கடியும்‌ மணி மலை” (திருவாய்மொழி 10-7-7) என்று ஸர்வருடையவும்‌ அஜ்ஞாநத்தை ஸவாஸநமாகப்‌ போக்குமதாய்‌ ‘ மயல்மிகு பொழில்சூழ்‌ மாலிருஞ்சோலை” (திருவாய்மொழி 2-10-3) என்று போக்த்தாக்கள்‌ அடைவு கெடும்படி பிச்சேற்ற வற்றாயிருக்கிற தெற்குத்‌ திருமலையில்‌ நிற்கிற நிலையிலே; சோலை என்கிற ஸமாதியாலே தழைக்கும்‌ என்கிறார்—

செஞ்சொற் கவிகாள் உயிர் காத்து ஆட்செய்மின் திருமால் இரும் சோலை
வஞ்சக் கள்வன் மா மாயன் மாயக் கவியாய் வந்து என்
நெஞ்சும் உயிரும் உள் கலந்து
நின்றார் அறியா வண்ணம் என்
நெஞ்சும் உயிரும் அவை உண்டு தானே யாகி நிறைந்தானே–10-7-1-களவு காணா நிற்கச் செய்தே மெய் என்னலாம் படி இருக்கை –என் கண்ணன் கள்வம் எனக்குச் செம்மாய் நிற்கும் -என்றார் இறே -களவைக் களவு காணா நிற்கும் –மா மாயன் -இப்படி அறிந்து ஒருவருக்கும் தப்ப ஒண்ணாத படியான ஆச்சர்ய குண சேஷ்டிதங்களை யுடையவன் -நீர் அகப்பட்ட துறை ஏது என்ன –மாயக் கவியாய்--ஆச்சர்ய அவஹமான கவி பாடுவித்துக் கொள்ள -என்ற ஒரு பேரையிட்டுக் கொண்டு யாய்த்து வந்து கிட்டிற்று -தண்ணீர் என்ற ஒரு பேரையிட்டு அபிமத விஷயத்தை கிட்டுவாரைப் போலே -கவி பாடுவித்துக் கொள்ளுகை என்று ஒரு வியாஜ்யம் -கிட்டுக்கையே பிரயோஜனம் -தான் இருந்த இடத்திலே சென்று நாம் இருக்கை இன்றிக்கே -நாம் இருந்த இடத்திலே தான் வந்து கவி பாடுவித்துக் கொள்கை இறே சீலம் ஆவது –வந்து செய்தது என் என்ன –வந்து என்-நெஞ்சும் உயிரும் உள் கலந்து–நெஞ்சு என்று -சரீரத்துக்கு உப லக்ஷணம் –உயிர் என்கிறது ஆத்மாவை -சரீரத்தோடு ஆத்மாவோடு வாசியற புகுத்தி தன் பேறாக அவகாஹியா நின்றான் -முறை அத்தலை இத்தலையாய் என்னை சிரஸா வஹியா நின்றான் –நின்றார் அறியா வண்ணம்-கலவிக்கு தேசிகரான பிராட்டி திருவனந்த ஆழ்வான் முதலானோர்க்கும் அபூமியாம் படி யாய்த்து என்னோடு கலந்து -ஆருயிர் பட்டது எனதுயிர் பட்டது -என்றார் இறே –என்-நெஞ்சும் உயிரும் அவை உண்டு –தேஹாத்ம விவேகம் பண்ண அறியாதே யாய்த்து புஜித்தது–சேதனனையும் அசித்தோபாதி பரதந்தனாக்கி புஜித்தான் –உருவமும் ஆருயிரும் உடனே யுண்டான் -என்கிறபடியே எனக்கு என்ன மாட்டாமைக்கு -அசித்தோபாதி யாய்த்து சேதனனும் –
தானே யாகி -போகத்தில் இழிகிற போது இருவராய் இழிந்து -எதிர்த்தலையைத் தோற்பித்து -போக்தாவும் அபிமானியும் தானே யானான் –நிறைந்தானே–அவாப்த ஸமஸ்த காமன் ஆழ்வாரைப் பெறுவதற்கு முன்பு குறைவாளனாய் -இவரைப் பெற்ற பின்பு -பூர்ணன் ஆனான் –க்ருதக்ருத்யஸ் ததா ராம –இது விறே புரையற்ற சீலமாவது –

என்னை முற்றும் உயிர் உண்டு என் மாய ஆக்கை இதனுள் புக்கு
என்னை முற்றும் தானேயாய் நின்ற மாய அம்மான் சேர்
தென்னன் திருமால் இரும் சோலைத் திசை கூப்பிச் சேர்ந்த யான்
இன்னம் போவேனே கொலோ என் கொல் அம்மான் திருவருளே–10-7-3—இத்தலையை எங்கும் புக்கு அனுபவித்தானாய் விடுகை அவனுக்கு ஏற்றமாம்படியாய் இருக்கிறது –யஸ்ய சா ஜனகாத்மஜா –அப்ரமேயம் ஹி தத் தேஜ–என் மாய ஆக்கை இதனுள் புக்கு–அதி ஷூத்ரமான என் சரீரத்தில் புக்கு தனக்கு உத்தேச்யமான ஆத்மாவளவன்றியே-அழுக்கு உடம்பு -என்று தன்னை கால் காட்டித் தவிர்ப்பித்து கொள்ள வேண்டும் படி த்யாஜ்யமான சரீரத்தையே விரும்பா நின்றான் – இதனுள் புக்கு-இது இது என்று இவர் இறாய்க்க அவன் மேல் விழா நின்றான் என்கை –புகுந்து என்னாதே  புக்கு -என்கிறது அத்தோடு தமக்கு தொற்று அற்று இருக்கிற படி தோற்றுகைக்காக-மங்க வொட்டு-என்று அவன் அனுமதி பார்த்து இருக்கும் இ றே –என்றும் அசித்தோடும் முகம் பழகின இவர் இறாய்க்க -ஹேய பிரதி படனானவன் இ றே மேல் விழா நின்றான் –-என்னை முற்றும் தானேயாய் நின்ற--ஆத்மாவோடு சரீரத்தோடு வசி யறப் புக்கு வியாபித்து தானே அபிமானியாய் நின்றான் -என்னுடைய அஹங்கார மமகாரங்களும் விஷயம் இல்லாத படி நின்றான் –

அருளை ஈ என் அம்மானே என்னும் முக்கண் அம்மானும்
தெருள் கொள் பிரமன் அம்மானும் தேவர்கோனும் தேவரும்
இருள்கள் கடியும் முனிவரும் ஏத்தும் அம்மான் திருமலை
மருள்கள் கடியும் மணி மலை திருமால் இரும் சோலை மலையே–10-7-7-கைங்கர்ய விரோதிகளான அவித்யாதிகளைப் போக்குமதாய்-ஸ்வயம் புருஷார்த்தமான திருமலை -திருமலையை ஒழியவே ப்ராப்யம் யுண்டு என்று இருக்கும் நினைவை போக்குமிடம் என்றுமாம்-

திருமால் இரும் சோலை மலையே திருப் பாற் கடலே என் தலையே
திருமால் வைகுந்தமே தண் திரு வேங்கடமே எனது உடலே
அருமா மாயத்து எனது உயிரே மனமே வாக்கே கருமமே
ஒருமா நொடியும் பிரியான் என் ஊழி முதல்வன் ஒருவனே–10-7-8-தெற்கில் திருமலையையும் திருப் பாற் கடலையும் என் உத்தம அங்கத்தையும் -ஓக்க விரும்பா நின்றான் –பரமபதத்தையும் -வடக்கில் திருமலையையும் -என் சரீரத்தையும் ஓக்க விரும்பா நின்றான் –-ஸ் ரியா சார்த்தம் ஜகத் பத்தி -என்கிறபடியே அம் மிதுனத்துக்குத் தகுதியான தேசம் –இத்தேசங்களிலே பண்ணுகிற விருப்பம் தம் திருமேனியில் பண்ணுகிற விருப்பத்துக்கு சத்ருசம் அல்லாமையாலே தம்முடைய அவயவங்கள் தோறும் புக்கு அனுபவியா நின்றான் –

மங்க ஒட்டு உன் மா மாயை திரு மால் இரும் சோலை மேய
நங்கள் கோனே யானே நீ ஆகி என்னை அளித்தானே
பொங்கு ஐம் புலனும் பொறி ஐந்தும் கருமேந்த்ரியம் ஐம் பூதம்
இங்கு இவ் வுயிர் ஏய் பிரகிருதி மான் ஆங்காரம் மனங்களே–10-7-10—ஒருவராலும் தப்ப ஒண்ணாத படி -நீ பந்தித்த பிரக்ருதியை மங்க இசை –த்யாஜ்யம் என்று அறிந்த பின்பு உம்முடைய சரீரத்தை நீரே உபேக்ஷிக்கும் அத்தனை யன்றோ -நம் இசைவு என் என்ன -சர்வ சக்தியான நீ பிணைத்த பிணையை அசக்தனான நான் -அவிழ்க்கவோ –மம மாயா துரத்யயா –என்றிலையோ–

பயனல்ல செய்து பயனில்லை நெஞ்சே
புயல் மழை வண்ணர் புரிந்துறை கோயில்
மயல் மிகு பொழில் சூழ் மாலிரும் சோலை
அயன்மலை யடைவது அது கருமமே –2-10-3-போக்யதையாலும் இருட்சியாலும் புக்கார் மிகவும் மதி மயங்கும் படியான திருச் சோலை-ப்ராப்ய பூமியிலே கலக்கம் ஆகையால் ப்ராப்ய அந்தர்கதம் இறே

அங்கீகரிக்க அவகாசம் பார்க்கும் ஸ்வாமித்வம் பெரு நகரிலே பேர் பெற்றது -சூரணை -186-

அதாவது-திரு மால் இரும் சோலை மலை என்றேன் என்னத் திரு மால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்-திருவாய்-10-8-1-என்று ஸ்வ அங்கீகாரத்துக்கு உடலான ஸூஹ்ருத லவ லேஸம் இல்லாதவரையும் – மடி மாங்காய் இடும் போலே -என்னூரைச் சொன்னாய் –இத்யாதியான
அஞ்ஞான ஸூஹ்ருதங்களை ஆரோபித்தும் அங்கீகரிக்க இடம் பார்க்கும் அவனுடைய ஸ்வாமித்வம் –
பெருவரை மதிள்கள் சூழ்ந்த பெரு நகர் அரவணை மேல்–
பெரிய திருமொழி-5-9-3–என்று கண் வளர்ந்து அருளுகிற திருப்பேர் நகரில் பிரசித்தம் என்கை-

“திருமாலிருஞ்சோலை மலை என்றேனென்னத்‌ திருமால்‌ வந்து என்‌ நெஞ்சு நிறையப் புகுந்தான்‌”  (திருவாய்மொழி 10-8-1 என்று இவரை விஷயீகரிக்க அவகாஸம்‌ பார்த்து மடிமாங்காயிட்டும்‌ விஷயீகரிக்க வேணு மென்கிற ஸ்வாமித்வம்‌ “பெருநகரரவணை மேல்‌” (பெரியதிருமொழி 5-9-3) என்கிற திருப்பேர்‌ நகரில்‌ கண் வளர்ந்தருளுகிற விடத்தே ப்ரஸித்‌தம்‌ என்கிறார் –

திருமால் இரும் சோலை மலை என்றேன் என்ன
திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்

குரு மா மணி உந்து புனல் பொன்னித் தென் பால்
திருமால் சென்று சேர்விடம் தென் திருப் பேரே-10-8-1—அஹ்ருதயமாகச் சொன்னது தன்னையும் சஹ்ருதயம் ஆக்குவாரும் அருகே உண்டு –வந்து -நம்மை அங்கே அழைத்துக் கார்யம் கொள்ளுகை அன்றிக்கே –நாம் இருந்த இடத்தே வருவதே –சாபேஷன் இருந்த இடத்திலே பூர்ணன் வருவதே -சர்வருக்கும் அபிகம்யனானவனுக்கு நான் அபிகமயனாவதே –ஸோ அப்யகச்சன் மஹா தேஜோ சபரீம் என் நெஞ்சம் -உக்திக்கு அசஹகாரியான என் நெஞ்சம் — நிறையப் புகுந்தான்-விஷயாந்தரங்களுக்கு அவகாசம் இல்லாத படி பாழ் தீரப் புகுந்தான் –

ஒருவனை யுந்திப் பூ மேல் ஓங்குவித் தாகம் தன்னால்
ஒருவனைச் சாபம் நீக்கி உம்பராள் என்று விட்டான்
பெரு வரை மதிள்கள் சூழ்ந்த பெரு நகர ரவணை மேல்
கரு வரை வண்ணன் தன் பேர் கருதி நான் உய்ந்தவாறே –5-9-3–பெரு வரை என்னலாம் படி மதிள்களால் சூழப்பட்டு கலங்கா பெரு நகர் உடன் ஒக்கச் சொல்லலாம் படி உள்ள திருப்பேர் என்னும் பெரு நகரில் திரு அனந்தாழ்வான் மேல் அஞ்சன மலை போல் சாய்ந்து அருளி-

ஆக திருப் பதிகள் தோறும் ,ஒரோ குணம் பிரத்யேன பிரகாசிக்கும் என்னும் இடம் இவர் அனுசந்தித்த திருப்பதிகள் எல்லாவற்றிலும் தர்சிப்பித்தார் ஆய்த்து- 

–——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர்‌ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading