ஸ்ரீ கீதா ஸாரமும்‌- ஸ்ரீ பாத்ம புராண கீதா கதைகளும்‌–

ஸ்ரீ கண்ண்ன் கறந்த ஆவின் பால்‌ பாரதத்தில்‌ உளது. வேத உபநிஷதங்களே பசுக்கள்‌. நந்த கோப குமாரனான பரமாத்மாவே பாலைக் கறந்தவர்‌. பார்ததனே கன்று, சித்தி சத்தியள்ள மஹான்௧ளே அதை அருந்துபவர்கள்‌-இதையே பெரியோரருந்தும்‌ பால்‌. என்னே அதன்‌ மஹிமை-பாத்ம புராணத்தில்‌ ஸ்ரீ கீதா மாகாத்ம்யம்‌ வெகு அருமையாக வர்ணிக்கப்பட்டிருக்கிறது.

ஸ்ரீ பாத்ம புராணம்‌ உத்தர கண்டம்‌ நூற்று எழுபத்‌தோறாம்‌ அத்யாயம்‌ முதல்‌ பதினெட்டு அத்யாயங்களால்‌ஓர்‌ ௮த்யாயத்திற்கு ஓர்‌ கதையாக ஸ்ரீ கீதையின்‌ பெருமை வர்‌ணிக்கப்படுகின்றன -இதைக்‌ கேட்பவள்‌ உமையவள்‌. கூறுபவர்‌ பரம சிவனாம்‌.

பாற்கடலில்‌ பன்னசு சயநத்தில்‌ பள்ளி கொண்டிருக்கும்‌ பரந்தாமனை, லஷ்மி பிராட்டியார்‌ “ஐயனே?
உலக இன்பத்தை விட்டு ஸதா தாங்கள்‌ உறங்குவது ஏன் -என்று வினவினாள்‌. தேவி. யான்‌ நித்ரை கொள்ள வில்லை.-ஸகல உபகிஷத்துகளையும்‌ கடைந்தெடுத்த அமிருதத்தை அருந்தி அந்த ஆனந்தத்தில்‌ அமிழ்ந்திருந்தல் பிறர்க்கு உறக்கம் போல்‌ தோன்றுகிறது என்றார்‌ புண்டரீகாக்ஷன்‌–விரூபாஷனும்‌ இதையின்‌ முதல்‌ ஐந்து அதியாயங்கள்‌ எனது ஸத்யோஜாதம்‌ முதலிய ஐந்து முகங்கள்‌–அடுத்த பத்து அத்யாயங்கள்‌ எனது கரங்கள்‌-பதினாறாம் அத்யாயம்‌ என்‌ உதரம்‌. பதினேழாவது பதினெட்டாவது அத்யாயங்கள்‌ இரு கால்கள்‌”” என்றுரைத்தார்‌.

பஜகோவிந்தமெனும்‌ நாலில்‌ ஸ்ரீ சங்கரர்‌ *பகவத் கீதா கிஞ்சிததீதா?’?” கீதையைச்‌ சிறிதாவது கற்றாயா ? ஆனால்‌ எமன்‌ உன்னிடம்‌ அஞ்சுவான்‌ என்‌கிறார்-

கீதா கங்கா ச காயத்ரீ கோலிந்தேதி ஹ்ருதிஸ்திதே i சதுர்‌ ககார ஸம்‌ யுக்‌தே புநர் ஜன்ம ந வித்யதே [| -கீதை, கங்கை, காயத்ரீ, கோவிந்தன்‌ என்ற நான்கு ககாரங்கள்‌ உள்ளத்தில்‌ உள்ளோருக்கு மறு பிறப்பில்லை என வேத வ்யாஸர்‌ கூறுகிறார்‌.

ஆராதநாநாம் ஸர்வேஷாம் விஷ்ணோர் ஆராதநம் பரம்
தஸ்மாத் பரதரம் ப்ரோக்தம் ததீயாராதநம் ந்ரூப
–என்று பாத்ம புராண வசனமுண்டிறே.  ஓ அரசனே விஷ்ணு ஆராதனத்திற் காட்டிலும் விஷ்ணு பக்த ஆராதனமே மேலானது

ஸ்ரீ கீதை மாஹா பாரதத்தில்‌ அமைந்துள்ளது, அது பதினெட்டு பர்வதங்களாக ௮மைக்கப்பட்டிருக்கிறது , பாரதப்‌ போரும்‌ பதினெட்டு நாட்களில்‌ நடந்தன, அதில்‌ மாண்‌ட.து பதினெட்டு ௮ஷோஹிணி — 1- க முதல்‌ 10, ட முசல்‌ 10, ப முதல்‌ 5, ய முதல்‌ 10,எழுத்துக்கள்‌, ஐ என்பது கவிலிருந்து 8வது, அதை முன்னே
வைத்து ய என்ற ஒன்றைப்‌ பின்னால்‌ சேர்த்தால்‌ 18 என்றாகும்‌-கடபயாது எழுத்துக்‌ கணக்கில்‌ பாரதத்திற்கு பதினெட்டு என்று பொருளைத்தரும்‌ – ஜய”என்ற பெயரை பதினெண்‌ புராணமெழுதிய வியாஸாசாரியர்‌ ஓர்‌ காரணம்‌ பற்றியே வைத்துள்ளார்‌-பாரதத்தில்‌ கூறப்‌படுவதெல்லாம்‌ தர்மமே, தர்மமுள்ளவிடத்‌தில்‌ ஜயம்‌ உண்டு என்பதையும்‌ ஜய என்ற சொல்‌ காண்பிக்கின்றது -ஓர்‌ முறை கீதையில்‌ ஸ்நானம்‌ செய்‌தால்‌ ஸம்ஸார மலம்‌ அகலும்‌, என வராஹ புராணம்‌ கூறுகிறது -கீதா கீதா என்று ஓயாமல் கூறி வந்தால்‌ த்யாகீ த்யாகீ என்‌ற சொல்‌ தோன்றும்‌-

https://tamildigitallibrary.in/Articles/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-22063-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%20%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%20%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%20%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%2C%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%20%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%20%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%2C%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%B8%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B9%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%2C%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%20%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81

ஸூசர்மா என்று ஒரு அந்தணன் இருந்தான் -அவன் மஹா பாபி,-பிராமணருக்குமிய ஓர்‌ வைதிக கர்மாவையும்‌ செய்தறியான்‌, கலப்பை கொண்டு பூமியை உழுவான்‌. மது பாநமும்‌ மாம்ஸாஹாரமும்‌ அவனுக்கு மிகப் ப்ரியமானவை-ஒரு நாள்‌ அரவம் தீண்ட ௮வன்‌ இறந்தான்‌, பின்னர்‌ தன்‌
பாபத்திற்‌ கேற்ற நரகங்களை ௮னுபவித்‌து பின்பு அவனியில்‌ ஒரு காளையாகப்‌ பிறந்தான்‌, அதை ஓர்‌ நொண்டி, விலைக்கு வாங்கி அதன்‌ மீறி தனது வேலைகளைக்‌ கவனித்‌து வந்தான் -இங்கனம்‌ ஏழெட்டாண்டுகள்‌ சென்ற பின்‌ ஒரு நாள்‌ ௮வசரமான வேலையின் பொருட்டு நொண்டி மிக கடும்‌ வெய்யிலில்‌ இக் காளையைத்‌ துறத்ததி ஒட்டினான்‌. உணவும்‌ ஜலமமின்றி சுடும்‌ வெய்யிலில்‌ ஓடிய களைப்பால்‌ காளை கீழ விழுந்தது – கண்கள்‌ சுழளமிட பெரு மூச்சு வாங்க வாயில்‌ நுறை தள்ள அது சாகாமலும்‌ பிழைத்தெழுந்திருக்க முடியாமலும்‌ ஸஹிக்க முடியாத துன்பத்தை அனுபவித்ததே தவிர மரிக்கவுமில்லை.-பிழைக்கவுமில்லை, தனது புண்ய.மின்னதென்றறியாக தாஸி ஒருவள்‌ மற்றவரைப்போல்‌ விளையாட்டாக தன்‌ புண்யத்தை அளித்தாள்‌. காளை கஷ்டமின்றி உயிரை விட்டது, யமன்‌ இவளது புண்யத்தை மதித்து மரியாதையுடன்‌ வரவேற்று யாதொரு நரகத்தையும்‌ கண்ணில்‌ காட்டாமல்‌ அவனியில்‌ ஒர்‌ ௮ந்தண குலத்‌தில் பிறக்கச் செய்தார்‌, ஆங்கு அவருக்குத்‌ தக்க வயது வந்தவுடன்‌ முற்‌ பிறவியின்‌ ஞாபகம் வந்தது உடனே தனக்கு உபகாரம்‌ செய்த வேசியின்‌ விட்டுக்குச்‌ சென்று நீ செய்த புண்யம்‌ யாதென வினவினார்‌–அவள்‌ நான்‌ யாதொன்றையுமறியேன்‌, என கிளி ஏதோ ஒன்றைக்‌ கூறும்‌, அது என்‌ மனதை இழுக்கும்‌, அதை அன்புடன்‌ கேட்பது தவிர யானொரு ஸுஹ்ருதமுமறியேன்‌ என்றாள்‌, ஸுசர்மா அக்நியிடஞ்‌ சென்று நீயார்‌? நீ கூறுவது யாது? அதை எங்கு கற்றாய்‌ ? என வினவினார்‌-யான்‌ முற்‌ பிறவியில்‌ ஓர்‌ மஹா வித்வான்‌, கல்லிக்கேற்ற ஒழுக்கமின்றி வித்வான்‌௧ளிடம்‌ பொறாமை கொண்டு அவர்‌கள்‌ குணத்தையும்‌ தோஷமாகக்‌ கூறி வந்தேன்‌. காலகதி அடைந்த பின்‌ பாபத்திற்கேற்ற நரகங்களை யனுபவித்து கிளியாகப்‌ பிறந்தேன்‌. அங்கும்‌ பெற்றோரை யிழந்து வெய்யிலில்‌ வாடி உணவின்றி தவித்தேன்‌, கருணை நிறைந்த முனிவர்கள்‌ என்னை எடுத்து வளர்த்தனர்‌, ஆங்கு முநி குமரார்‌ கூறும்‌ கீதை முதலத்யாயத்தைக்‌ கேட்டுக் கேட்டு யானுமதைக்‌ கூறி வந்தேன்‌, ஓர்‌ வேடன்‌ என்னைப்‌ பிடித்து இவளிடம்‌ விற்று விட்டான்‌. இங்கு யான்‌ கூறி வந்த இம்‌ முதலத்யாய ஸ்ரவண பலத்தால்‌ நீ காளைப்‌ பிறவியை விட்டு உத்தமப்‌ பிராமணனாய்‌. நானும்‌ இவ்‌
வேசியும்‌ இதனால்‌ நற் கதி அடையப்‌ போகிறோமென்று கூறி கிளி உருவை விட்டு திவ்ய உடல்‌ பெற்று விமானத்தின்‌ மீதேறி வானுலகு சென்றது- வேசியும்‌ வேதியனும் அதைப்‌ பாராயணம்‌ செய்து பின்னர்‌ உத்தம கதி யடைந்தனர் –

1-விஷாதயோகம்‌ –47 சுலோகங்கள்‌.(இதில்‌ திருதராஷ்ரன்‌ 1, ஸஞ்ஜயன்‌ 19,5, அர்ஜுன்‌ 2.5,ஸஞ்ஜயன்‌ 4.5, அர்ஜுனன்‌ 18.5, ஸஜ்ஜயன்‌ 1.]
ஆரம்பத்தில்‌ தர்ம சப்தமும்‌ முடிவில்‌ ஜப சப்தமும்‌ காணப்படுவதால்‌ –யதோ தர்மஸ்ததோ ஜய ” என்ற வ்யாஸ ஸித்தாந்தம் கூறப்படுகிறது – அதிகாரிக்கேற்றபடி ப்ரவிருத்தி நிவ்ருத்தி என இருவகை தர்மங்களும் இங்கு கூறப்‌படுகின்றன.-தர்ம ஷேத்ரே குருஷேத்ரே என்று ஆரம்பித்‌தது பாண்‌டவ கெளரவ யுத்தம்‌, இதம்‌ சரீரம்‌ கெளந்தேய ஷேத்ர மித்யபிதீயதே என்று பின்னர்‌ பகவான்‌ கூறுவதால்‌, நமது சரீரத்தில்‌ காம க்ரோதாதிகளுக்கும்‌ சமதமாதிகளுக்கும்‌. நடக்கும்‌ யுத்தம்‌ கூறப்படுகின்றது -ஸ்வ தர்மத்தைச்‌ செய்யும் போது போலியான கருணை புகுந்து அர்ஜுனனையே கலக்கிற்று, பரம புருஷன்‌ ஸ்வ தர்‌மோபதேசம்‌ செய்து அநுஷ்டானத்தை நிலை நாட்டினார் –

தேசிகனியற்றிய கீதார்த்த ஸங்க்ரஹம்‌,

கருமமம்‌ ஞானமுங்‌ கொண்டெழுங்‌ காதலுக்கோ ரிலக்கென்று
அருமறை யுச்சியுளா தரித்‌ சோதுமரும்‌ பிருமம்‌
திருமகளோடு வருந்தரு மாலென்று தானுரைத்தான்‌
தருமருகந்த தனஞ்ஜய னுக்கவன்‌ சாரதியே

கர்மத்தாலும்‌ . ஞாநத்தாலும்‌ உண்டாகும்‌ பக்திக்கு விஷயமானது உபநிஷத்தால்‌ போற்றப்படும்‌ ப்ரஹ்மமேயாம்‌–அந்த ப்ரஹ்மம் லக்ஷ்மீ நாராயணன்‌ என்று பார்த்த சாரதி தார்மிகனான அர்ஜுனனுக்‌குரைத்தார்‌.

உகவை யடைந்த வுறவுடையாருற வற்ற வந்நாள்‌
தகவுடையன்பு கரைபுரளத் தருமத்த ளவில்‌
மிகவுளமஞ் விழுந்தடி சேர்ந்த விஜயனுக்கோர்‌
நகையுட னுண்மை யுரைக்க வமைந்தனர்‌ நாரணரே –

தன்னிடமிருந்த அன்பை விட்டு பகைவருடன்‌ சேர்ந்து வந்த பீஷ்மர்‌ துரோணர்‌ முதலியவர்களைப்‌ பார்த்‌து தர்மா தர்ம மறியாமல்‌ அன்புடன்‌ இரக்கந் தோன்றி கரை கடந்‌தோட, தன்‌ திருவடியில்‌ விழ்ந்து கதரும்‌ அர்ஜுனனுக்கு தத்த வோபதேசஞ் செய்ய பகவானமைந்தார்‌-

2-வது அத்யாயம்‌–பாத்ம கதை,
தென்‌ திக்கில்‌ புரந்தரம் என்றோர்‌ பட்டணமிருந்தது -அங்கு அந்தணர்‌ மரபினிலே தேவ சர்மா என்றோர்‌ வேதியனிருந்தார்‌. அவர்‌ தம்‌ ஜாதிக்கேற்ற தர்மத்தை விடாது ௮னுஷ்டிப்பவர்‌, வேத சாஸ்த்ரங்களின்‌ கரை கண்டவர்‌-பல வேள்விகளைச்‌ செய்தவர்‌, தேவ பூஜை ௮திதி பூஜை தவராதவர்‌, இத்தகைய ஸத் கர்மங்களாலும்‌ அவர்‌ மநதிற்கு சாந்தி தோன்றவில்லை. மனத்தை அடக்கி ஞாநத்தைப்‌ பெற்று மோஷமடைய வேண்டுமென்ப.து அவரவா-ஆதலின் ஞானிகளான தவஸிகளை ஆராதித்து வந்தார்‌, இங்கனம்‌ நெடு நாள் செல்ல அவர்‌ தவத்தால்‌ ஓர்‌ அரிய ஜீவன் முக்தர்‌ அவரருகே வந்தார்‌, அவர்‌ முகத்தில்‌ சாத்தியும்‌ ஆநந்தமும்‌ தாண்டவ மாடின-பேசிக் கொண்டிருக்கும் போது அவரை அறியாமல்‌ அவர்‌ மநம்‌ ஸமாதியிலமரும்‌. சர்மா அவரை வணங்கி நன்கு அதிதி பூஜை செய்தார்‌, தன்‌ மநம்‌ ஓடுங்க ஓர்‌ உபாயங் கூற அவரை வேண்டினார்‌, ௮ந்த யோகி புரமெனும்‌ நகரிலே உள்ள மித்ரவான்‌ எனும்‌ ஆட்டிடயனைக்‌ கேள்‌ எனக் கூறினார்‌, அவரைத்‌ தேடிச் சென்ற சர்மா ஓர்‌ ஆரண்‌யத்தில்‌ தியாநத்தில்‌ அவர்‌ அமர்கந்து இருப்பதைக்‌ கண்டார்‌, அவரைப்‌ பணித்து தன்‌ விருப்பைத் தெரிவித்தார்‌.

அவன்‌ வேதியரே ! கோதவரி தீரத்தில்‌ ப்‌ரதிஷ்டானமெனும்‌ நகரத்திலே துர்தமநன்‌ என்‌றொருவனிருந்தான்‌-அவன்‌ விக்ரம ராஜனலித்த பல தாநங்களைப்‌ பெற்று தன்‌ வயிற்றை வளர்த்து வந்தான்‌, அவன்‌ இறந்த பின்‌ தன்‌ பாபத்‌திக்கேற்ற பல நரகங்களை அனுபவித்து ஓர்‌ வேட குலத்திலே பிறந்தான்‌. தன்னிலும்‌ நீச குலத்துப்‌ பெண்ணான சண்‌டாளியை அவன்‌ மணந்தான்‌. ஜீவனத்திற்கு வகையின்‌றி அவன்‌ அலையும் போது அவன்‌ மனைவி வேசித்‌ தொழிலைக்‌ கைக் கொண்டு பணத்தைச்‌ சம்பாதித்தாள்‌, கொழுத்த ஓர்‌ சண்டாளனைக்‌ காதலனாகக்‌ கொண்டு அவன்‌ மூலமாக ஓர்‌ பெண்ணைப்‌ பெற்றாள்‌, அக் கன்யகை யெளவன பர்வத்தை அடைந்த பின்‌ அப் பஞ்சமன்‌ அவளையும்‌ மணந்தான்‌. முதல்‌ மனைவி இறந்து டாகிநீ எனும்‌ பூதமாகப் பிறந்து முதற்‌ புருஷனனான வேடனைப்‌ பஷித்தாள்‌. சண்டாளியும்‌ வேடனும்‌ யம லோகஞ் சென்‌று பற் பல நரகங்களை அனுபவித்து அவள்‌ ஆடாகவும்‌ வேடன்‌ சிறுத்தையாகவும்‌ பிறந்தனர்‌.. அச் சிறுத்தை ஆட்டைத் துறத்த ஆட்டு மந்தையுடன்‌ யானும்‌ பயந்தோடினேன்‌. இவ்விடத்‌திற்கு வந்த பின்‌ ஆடு ஓட்டத்தை நிறுத்தி என்னைப்‌ புசித்து பசியாறு என்று சிறுத்தைக்கு ஆதித்யம் செய்தது -சிறுத்தையோ ஒரு ப்‌ராணியைக்‌ கொன்று உடலை வளர்ப்பது பாபமன்‌றோ யென தர்மங்கூறிற்று. இதைக் கண்டு வியந்த யான்‌ சிறுத்தையே!இதென்ன ஆச்சரியம்‌ ! நீங்களிருவரும்‌ இங்கு வந்தவுடன்‌ மனிதரைப் போல்‌ பேசுவதும்‌ அதிலும்‌ தர்மம்‌ பேசுவதும்‌ மிக ஆச்சர்யமாக இருக்கிறதே? இதற்கென்ன காரணம்‌ என்ற கேட்டேன்‌, ௮து , யான் ஓன்றுமறியேன்‌. ௮௫கிலுள்ள வாநரத்தைக்‌ கேட்போமென்று கூற மூவருமங்கு சென்று வினவினோம்‌,

குரங்கு -ஐயா இங்கு பிரும்மனால்‌ ப்ரதிஷ்டை செய்‌:யப்பட்ட திரியம்பக லிங்க மொன்றிருக்கிறது. இதை ஸுகர்மா எனும்‌ வேதியன்‌ பூஜித்து அதற்கு. நிவேதனம்‌ ‘ செய்த கந்த மூலங்களைப் புஜித்து ஜீவித்து வந்தான்‌, தற்‌செயலாக அங்கு வந்த ஓர்‌ அதிதி ஸுசர்மாவின்‌ புண்‌ணியத்தைக்‌ கண்டு ஸந்தோஷித்து கீதையின்‌ இராண்டாம் அத்யாயத்தை அங்குள்ள கல்மீது எழுதி அதைப்‌ பாராயணம்‌ செய்யும்படி, கூறி மறைந்தார்‌. அன்று முதல்‌ இவ்விடத்தில்‌ இயற்கையான பகைமை நீங்க எங்கும்‌ சாந்தி பரவியிருக்கிறது என்றது , ஆதலின்‌ நீரும்‌ இதைப்‌ பாராயணம்‌ செய்‌தால்‌ மனச்சாந்தி உண்டாகுமென்று இடையன்‌ கூற வேத சர்மா ௮வரை வணங்கி தம்மிருப்பிடஞ் சென்றார்‌. வழியில்‌ ஒர்‌ ஆலயத்தில் அமர்ந்துள்ள ஓர்‌ ஆத்ம ஞானியை யடுத்து ௮வரிடம்‌ கீதை இரண்டாம் அத்யாயத்தைப்‌ பெற்று முக்தியடைந்தார்-

  1. ஸாங்க்யயோகம்‌ 72 சுலோகங்கள்‌.[ஸஞ்ஜயன்‌ 3, அர்ஜுசன்‌ 6, பகவான்‌ 63.) .

உடலமழிந்‌திடும்‌ உள்ளுயிரொன்றழியா தெனைப் போல்‌
விடுமது பற்று விடாத தடைத்த கிரிசைகளே
கடுக வுனக்குயிர் காட்டு நினைவதனாலுள தாம்‌
விடு மயலென்று விஜயனைத் தேற்றினன்‌ வித்தகனே.–
3-

உடல்‌ அழிவுள்ளது அறிவுள்ள உயிர்‌ என்னைப் போல்‌ என்‌றும்‌ அழியாதது. அவனவனது நித்ய கர்மா விடத்தக்க தல்ல -ஆனால் அதன்‌ பயனில்‌ பற்று வைக்கலாகாது -உனக்கு விரைவில்‌ ஞாநமுண்டாகும்‌, அஞ்ஞானத்தை விடு என கண்ணன்‌ விஜயனுக்குக்‌ கூறினான்‌

3-வது அத்யாயம்‌–பாத்ம கதை,
ஜநஸ்‌தானமெனும்‌ தேசத்திலே கெளசிகரது மரபினில்‌ ஜடன்‌ என்றோர்‌ வேதியனிருந்தான்‌. அவன்‌ தன்‌ பெயருக்‌கேற்றபடி தன்‌ ஜாதிக்சூரிய கல்வியோ ஆசாரமோ இல்லாது வைச்ய விருத்தியான வியாபாரஞ் செய்து வயிறு வளர்த்‌தான்‌. ஓர்‌ ஸமயம்‌ பொருளில்லாமல்‌ போகவே யாகம் செய்த பெரியோர்‌ பொருளைக்‌ கொள்ளை யிட்டு வியாபார நிமித்தம்‌ தூரதேசம் சென்றான்‌.-ஆங்கு தேடிய பொருளைக்‌ கொண்டு மனைவியை மகழ்விக்கத் தன்னிருப்பிடத்துக்குத் திரும்பினான்‌, நடுவழியில்‌ ஸுுர்யாஸ்தாமனமாகி விட்டது-பகலிலேயே இருள் சூழ்ந்த காட்டைக்‌ கடக்க நேரிட்டது -அவன்‌ தன்னை யார்‌ அடிப்பர்‌ என்று அச்சமின்றி சென்‌றான்‌, ஆங்கு ஓர்‌ கொள்ளைக்‌ கூட்டத்தினர்‌ ஈவிறக்கமின்‌றி இவனை நையப் புடைத்துக் கொன்று பொருள்களை எடுத்‌துச்‌ சென்றனர்‌. வந்தபடியே தனம் போயிற்று,

துர் மரணமடைந்த ஜடனோ மிக பயங்கரமான ஓர்‌ பேய்‌ உடலை எடுத்தான்‌, அவனைக்‌ கடுமையான பசியும்‌ தாகமும்‌ பீடிக்க, ஓரிடத்தே நிற்கமுடியாமல்‌ அலைந்து திரிந்து கொண்டிருந்தான்‌. மிக்க தார்மிகனான அவனது புத்திரன்‌- அவர்‌ சென்று நீண்டகாலமானதால்‌ தந்தையை வனம்‌ வனமாகத்‌ தேடிச்‌ சென்றான்‌. ஓர்‌ வனவாஸி கூறியகைக்‌ கேட்டுத்‌ தன்‌ தந்தை கள்வரால்‌ அடித்து கொல்லப்பட்டாரென தீர்மானித்தான்‌, அவருக்கு நற் கதியை யளிக்க காசி சென்று ஈமக் கடன்களைச்‌ செய்யப்‌ புறப்பட்டான்‌. இடைவழியில்‌ ஒர்‌ மரத்தடியே அமர்ந்து நித்ய கருமங்களைச்‌ செய்து முடித்து வழக்கப்படியே கீதையின்‌ மூன்றாமத்யாயத்தைப்‌ பாராயணம்‌ செய்தான்‌. அந்த மரத்கினடியில் தான்‌ ௮வன்‌ தந்தை கொல்லப்பட்டான்‌. ஆங்கு அலைந்து கொண்டிருந்த ஜடப்ரேதத்தின்‌ காதில்‌ இது விழுந்தவுடன்‌ ப்ரேத உடல்‌ அகன்றது.

திவ்ய விமானத்தில்‌ திவ்ய சரீரத்துடன்‌ தோன்றிய ஜடன்‌ மைந்தனை நோக்கி அருமைக்‌ குழந்தாய்‌ -நீ காசி செல்ல வேண்டாம்‌.? எதற்காக நீ செல்கிறாயோ அந்தக் கார்யம்‌ கீதோ பாராயணத்தினாலேயே ஸித்‌தித்து விட்டது என்றான்‌. இதைக்‌ கேட்டு ஆச்சரியமடைந்த புத்ரன்‌ தந்தையை வணங்கி, இப்பொழுது தான்‌ யான்‌ புதல்வனானேன்‌. இதன்றோ புத்ரர்‌ கடமை! கீதையின்‌ மூன்றாம்‌
அத்யாயத்தின்‌ பெருமை இத்தகையதென போதித்து விட்டீர் – யான்‌ இப் புவியில்‌ இனி என்ன செய்ய வேண்டுமென கட்டளை யிடுங்கள்‌ என்றான்‌, ஜடன்‌ தனது மூதாதைகள்‌ தனது பாபத்தால்‌ நரகத்தில்‌ பல யாதனைகளை அனுபவிப்பதைக்‌ கண்டு அவர்களையும்‌ கீதையால்‌ வைகுண்டமனுப்பும்படி கூறி விட்டு வைகுண்டம் சென்றார்‌, ஜட புத்ரன்‌-தன்னூருக்கு வந்து தேவாலயத்தில் அமர்ந்து கீதா பாரயணஞ்‌செய்து அதை அந்த பித்ருக்களுக்குத்‌ தானம்‌ செய்தார்‌.-உடனே விஷ்ணு தூதர்கள்‌ யமனிடஞ்சென்று ஜடனது பித்ருக்களை வைகுண்டமனுப்பும்படி. கூற யம தர்ம ராஜன்‌ ௮ங்கனமே திவ்ய தேஹம் பெற்ற அவர்களுடன்‌ பகவானைத்‌ தர்சிக்கத் தானும்‌ கிளம்பினான்‌, பாற்கடலிலே
பன்னகசாபியாயுள்ள பரமாத்மாவைப்‌ பணிந்து துதித்து-நாத?! தங்களிட்ட கட்டளையை நிறைவேற்றி விட்டேன்‌.எனக்‌ கூறி அவரிடம்‌ விடைபெற்று தம்மிருப்பிடஞ்‌சென்றான்‌-

  1. கர்மயோகம்‌ 45 சுலோகங்கள்‌.[அர்ஜுனன்‌ 3, பகவான்‌ 40]

சங்கம் தவிர்ந்து சகஞ் சதிர் பெற்ற தனஞ்சயனே
பொங்குங் குணங்கள்‌ புணா்ப்பனைத்தும் புக விட்டவற்றுள்
நங்கண்ணுரைத்த கிரிசை யெல்லாமெனவும் நவின்‌றார்‌
எங்குமறிவார்களே யென்று நாதன் இயம்பினனே-
-4-

அறியும்‌ ஸாமர்‌த்யம் வாய்ந்த அர்ஜுனா – பலனில்‌ பற்றை விட்டு முக் குணங்களால்‌ ஏற்பட்ட எல்லா வேலைகளையும்‌ அக் குணங்களிலும்‌ நம்மிடம்‌ விட்டு விட்டு, சாஸ்தர விஹிகமான கர்மங்களைச் செய்‌ என்று பகவான்‌ கூறினார்‌,

4வது அத்யாயம்‌–பாத்ம கதை,
பாகீரதீ கரையிலுள்ள வாராணஸீ நகரிலே. விச்வேச்‌வரது ஆலயத்தே பரதரெனும்‌ ஓர்‌ யோகி வஸித்‌து வந்தார்‌-அவர் எப்போதும்‌ கீதையின்‌ நாலாமத்யாயத்தில்‌ அளவிலா பற்று கொண்டு ஜபிப்பார்‌, அதைத் தவிர வேறொன்‌றிலும்‌ ௮வர்‌ மநம்‌ செல்லாது-ஒரு சமயமவர்‌ தற் செயலாக உத்யாநத்தில்‌ வஸிக்கும்‌ தேவதைகளைத்‌ தர்சிக்கச்‌ சென்றார்‌-ஆங்கு ௮வர்‌ ஒன்றோடொன்‌று பின்னிக் கொண்டு வளர்ந்திருந்த இரு இளந்த மரத்தடியே சிறிது நேரம்‌ படுத்துக்‌ களைப்பாறிச்‌ சென்றார்‌, அது முதல்‌ நாலைந்து நாட்களில்‌ அம்மரங்கள்‌ இலை உலர்ந்து பட்டுப் போயின-ஆனால்‌ ௮வை பரிசுத்தரான ஓர்‌ அந்தணர்‌ விட்டிலே பிறந்து இரு கன்யகைகளாக வளர்ந்தன. ஏழாண்டுகள்‌ சென்ற பின்‌ அவ் வழியாக வந்த அந்த பரத யோகியைக் கண்டு இக் கன்யகைகள்‌ அன்புடன்‌ வரவேற்ற, ஐயா !? உமதருளாலே நாங்கள் மரமாயிருந்த ஜன்மாவை விட்டு இவ் வுடலைப்‌ பெற்றோமெனப்‌ பணிந்தனர்‌,
பரத யோகி நீங்கள்‌ யார்‌? ஏன்‌ மரமானீர்கள்‌ ? எப்‌படி விடுபட்டீர்கள்‌ ? கூறுங்களென்றார்‌. கன்யகைகள்‌–கோதாவரி தீரத்தல்‌ -சிந்ந பாபமென-அறுக்கப்பட்ட பாவம் என -ஓர்‌ தீர்த்தம்‌ இருக்‌கிறது , ஆங்கு ஸத்ய தபஸ்‌ என்றோர்‌ மஹர்ஷி கடும் தவம்‌ செய்தார்‌. வெய்யில்‌ காலத்தில்‌ பஞ்சாக்நி மத்தியிலும் குளிர்‌ காலத்தில்‌ ஜலத்தின்‌ நடுவிலே இருந்தும் கடும் தவம் செய்தார் –
அவரது தபோ மஹிமையால்‌ பழுத்த மரங்கள்‌ வளைந்து அவர் மீது குடை போல்‌ நின்றன, பிராணிகள்‌ இயற்கைப்‌ பகைமையை லிட்டு அன்‌யோன்யமாக வாழ்ந்தன-ஆனால்‌ இந்திரன்‌ ஒருவனே அச்சங்கொண்டு பல விக்னங்களைச் செய்து அவர்‌ தவத்தைக்‌ கலைக்க முயன்றான்‌, அப் ஸரஸ்ஸூக்களான எங்களை அவரிடம்‌ ஏவினான்‌, நாங்கள்‌ திவ்ய உருவமேந்தி அவர்‌ முன் சென்று ஆடிப் பாடி தவத்தைக்‌ கலைக்க முயன்றோம்‌, அவர்‌ சிநம் கொண்டு நீங்கள்‌ கங்கைக் கரையில்‌ இளந்த மரமாக இருங்கள்‌ என்று சபித்தார்‌, உடனே நாங்கள் அவரடி பணிந்து நாங்கள் பராதீநர்கள்‌, யஜமானன்‌ உத்தரவு படி நடந்தோம்‌, ஆதலின்‌ மன்னித்து சாப விமோசநம்‌ செய்தருள வேண்டுமென பிரார்த்தித்தோம்‌-அவர்‌ கருணை கொண்டு பரத யோகியெனும்‌ ஸாது கீதையின் நான்காம் அத்தியாயத்தின்‌ மஹிமையால்‌ உங்கள் சாபத்தை ௮கற்‌றுவர் என்றார்‌-அங்கனமே தங்களருளால்‌ சாபத்திலிருந்து விடுபட்டது மாத்‌ரமல்ல, ஸாதுக்கள்‌ குலத்தில்‌ உயர்ந்த மானிடப்‌ பிறவியையும்‌ முற் பிறப்பின்‌ நினைவையும்‌ பெற்‌றோம்‌, கோரமான ஸம்ஸாரத்திலிருந்தும்‌ விடுபட்டோமென்‌றனர் -பரத யோகி அவர்கள்‌ செய்த பூஜையை ஏற்று தம்‌மிருப்பிடஞ் சென்றார்‌,

ஞாந கர்ம சன்யாஸ்‌ யோகம்‌-42 ஸ்லோகங்கள்‌-[அர்ஜுசன்‌ 1, பகவான்‌ 41 ]
பிறவாமை தந்திடத் தானே பிறக்கும்‌ பெருமைகளும்‌
துறவாக்‌ கிரிசைகள்‌ துர்மதி தன்னால்‌ துலங்குகையும்
இறவா வுயிர் நிலையும் கண்டிடும் உலகின் நிலையும்‌
மறைவாழி மாயவனே யெனக்கின்‌ றறிவித்தான்
–5-

ஜீவனுக்கு மோஷ்மளிக்க பிறப்பில்லாத தான் அவதாரம்‌ செய்ததையும்‌ விடாமல்‌ செய்ய வேண்டிய கர்மாக்‌களையும்‌, ௮தனால்‌ சோன்றும்‌ மநச்‌ சக்தியையும்‌ ஜீவனழியாமையையும்‌, தோன்றிய உலக நிலையையும்‌ மாயா கார்யங்களைச் செய்த மாதவன்‌ கூறினான்‌-

5 வது அத்யாயம்‌–பாத்ம கதை.
மத்ர தேசத்திலே புருகுத்ஸ புரத்திலே பிங்களன்‌ என்றோர்‌ வேதியனிருந்தான்‌. அவன்‌ தனது குல உசிதமான வேத வித்யைகளை விட்டு காந வித்யை கற்று வந்தான்‌-அதில் அவன் ஒப்பற்ற கீர்த்தி பெற்று ராஜ ஸபைகட்குச்‌ சென்றான்‌. பல ராஜாக்களாலும்‌ நன்கு மதிக்கப்பட்டு ஏராளமாக பொருள் தேடினான்‌-கருமத்தால்‌ நீச குலத்தே பிறந்த ஒர்‌ பெண்ணை அழகிற் சிறந்தவளென மணந்தான்-அரசமிடமுள்ள செல்வாக்கால்‌ பல குல ஸ்த்ரீகளைக்‌ கெடுத்தான்‌-அவன்‌ மனைவி அருணை யென்பவள்‌ இவனை விரும்பாது பர புருஷனிடம்‌ ஆசை கொண்டாள்‌. அதைக் கண்ட கணவன்‌ கடிந்து விழுந்து அவளை ஹிம்ஸித்தான்‌. அருணை அவன் குடித்து மெய் மறந்து உறங்கும் போது சோர புருஷனைத்‌ துணை கொண்டு அவனைக் கொன்று பூமியில்‌ புதைத்து விட்‌டாள் –
பிங்களன்‌ யமலோகஞ்சென்று பற்பல நரகங்களை அனுபவித்து ஓர்‌ கழுகாகப்‌ பிறந்தான்‌-அருணை பகந்தரமெனும்‌ நோய் வாய்பட்டு பல நாட்‌ துன்புற்று இறந்தாள்‌, அவளும்‌ பற்பல நராகங்களிலிடர்பட்டு சொல்லொணாத்‌ துன்பங்களை யனுபவித்து காட்டில்‌ ஒர்‌ கிளியாகப்‌ பிறந்தாள்‌, இருவருக்‌கும்‌ பூர்வ ஜன்ம பகைமை மாத்திரமகல வில்லை, கிளியைக்‌ கழுகு மூக்கால்‌ குத்தித்‌ துறத்தி துறத்தி ஹிம்ஸதித்தது -கிளியோ தனக்கு பலமில்லாமையால்‌ பயந்‌தோடி. ஓரிடத்‌தே விழ்ந்தது – அங்கு ஓர்‌ மண்டை. ஓட்டில்‌ நீர்‌ தங்கி நிற்க அதன் மீது கிளி உடல் பட்டது . -அக் கழுகை அங்குள்ளோர்‌ கல்லாலடிக்க அதவும்‌ தத்தித் தத்தி ௮ம் மண்டை ஓட்டருகே விழ்ந்து உயிரை விட்‌டது, யம தூதர்‌ ஏக காலத்தில்‌ இவ் விருவரையும்‌ யமனிடஞ்‌ சேர்த்தனர்‌. யம தர்ம ராஜன்‌ சிறிது ஆழ்ந்து யோசித்து உங்கள்‌ பாபமகன்றது, நீங்கள்‌ இஷ்டமான உலகிற்குச்‌ செல்லலாமென்றார்‌-இதைக் கேட்டு பராமாச்சர்ய மடைந்த இரு பறவைகளும்‌ ஐயா-மஹா பாபிகளான எங்கள்‌ பாபம்‌ எப்படி யகன்றது? என்ன புண்யத்தால்‌ நல்லுலகம்‌ கிட்டிற்று என்று கேட்டனர் -தர்மராஜன்‌, பஷிகளே ! கங்கா தீரத்தில்‌ வடுயெனும்‌’ ஓர்‌ பிரும்ம வித்து இருந்தார்‌. அவர்‌ எப் பொழுதும்‌ மிச பவித்ரமான கீதையின்‌ ஐந்தாம் அத்யாயத்‌தையே ஜெபிப்பார் , அதனால்‌ நிர்மலமான சரீரம்‌ வாய்ந்த௮வர்‌ பிராரப்த கர்மம்‌ ஒழிந்தபின்‌ இவ்வுடலை விட்டு மோஷமடைந்தார்‌. அவரது மண்டை ஓட்டில்‌ தங்கிய ஜலம்‌ இறக்‌கும் போது உங்கள் உடல் மீது பட்டதால்‌ உங்கள்‌ பாபம்‌ பறந்தோடியது . அளவிலா புண்ய முண்டாயிற்று என்றார்‌ |
இதைக்கேட்டு ஆனந்தமடைந்த அவ் விருவரும்‌ திவ்ய தேஹம் பெற்று அருகில் வந்த விமானத்தின் மீதேறி வைகுண்டம்‌ சென்றனர்‌.ஐந்தாம் அத்யாயம்‌ பாராயணம்‌ செய்தவர்‌ மண்டை ஓட்‌டின்‌ ஜலத்திற்கே இத்தகைய பெருமை யெனில்‌ அவ்வத்யாயத்தின்‌ பெருமையைக் கூற எவரே வல்லவர்‌ –

5-கர்ம ஸன்யாஸ யோகம்‌- 29 ஸ்லோகங்கள்‌-(அர்ஜுன்‌ 1, பகவான்‌ 25.]

கண்டெனிதால்‌ கருமம்முயிர்‌ காட்டுங்கடுக தலும்‌
மண்டிய தன்படி யின்‌ மநங்‌ கொள்ளும்‌ வரிசைகளும்‌.
கண்டறியா வுயிரைக் காணலுற்ற நினைவுகளும்‌
வண்டு வரீசனியம்‌ பினன்‌ வாஸவன்‌ மைந்தனுக்கு–6-

பகவத் ஆராதன ரூபமான ததளுபமான நிஷ் காம்ய கர்மாவானது ஞான மார்க்கத்தை விட சீக்ரமாக ஆத்ம தர்சனத்திற்க்கு உபயோகமாகிறதென்றும்‌, அதைச்‌ செய்யும் போது யான்‌
செய்ய வில்லை யென்று எப்படி. நினைப்ப தென்றும்‌ ஆத்ம ஸ்வருபத்தைக் காண எப்படி தியாநம்‌ செய்வதென்றும்‌ துவாரகா நாதன்‌ இந்தர புத்ரனுக் குரைத்தார்‌.

6வது ஆத்யாயம்‌–பாத்மீ கதை.
கோதாவரரி தீரத்திலே ப்‌ரதிஷ்டானமென்றோர்‌ நகரமுண்டு -அங்கு பிப்பலேசன்‌ என்ற பெயரோடு பரமசிவன்‌ விளங்குகிருர்‌, அங்கு ஜாந ச்ருதி என்றோர்‌ வேந்தன்‌ அரசுபுரிந்து வந்தான்‌. அவன்‌ பற் பல வேள்விகளையும்‌ எண்‌ணிறந்த தாநங்களையும்‌ செய்து ஒப்பற்ற கீர்த்‌தி பெற்றான்‌-ஜனங்களால்‌ காதில்‌ கேட்கப் பட்டவனென்ற காரணப் பெயர்‌ அவனுக்கு உண்டாயிற்று, அவனது காட்டில்‌ பஞ்சமோ
ஈதிபாதையோ களவோ கலஹமோ கிடையாது, குடிகளை அவர்‌ தனது மைந்தர் போல கருதினார்‌, அவர்கள்‌ ௮ரசனை தந்தையென மதித்தனர்‌.
இவரது உயர்ந்த குணத்தைக் கண்டு வியந்த விண்ணவர்‌ இவர்‌ வேண்டாமலே அவருக்குப்‌ பேருதவி புரியக்‌ கருதினர்‌. உடனே அழகிய அன்னப் பறவையின்‌ உடல் எடுத்து மாடி மீது உலவும்‌ ஜாந ச்ருதியின்‌ தலை மீது பறந்தனர்‌.பின்னே செல்லும்‌ பறவைகள்‌ முன்‌ செல்பவைகளை நோக்கி
“என்ன வேகமாகச்‌ செல்கீறீர்களே. இக் கடினமான இடத்தில்‌ சேர்ந்தல்லவோ செல்ல வேண்டும்‌ ! முன்னே ஓர்‌ தேஜோ மண்டலம்‌ நிற்பதையும்‌ அதனிடையே _ தார்மிக ஜாந ச்ருதி நிற்பதையும்‌ நீங்கள்‌ காண வில்லையா ??” என்றன. இதைக்‌ கேட்டு அவைகள்‌ (என்ன அஞ்சுகிறீர்கள்‌ ? ரைக்வர் என்னும் பிரும்ம வித்தை விட இவர்‌ உயர்ந்தவரா என்ன ??* என்று பதில் கூறின-இங்கனம்‌ பக்ஷிகள்‌ தன்னைப்‌ போற்றுவதையும்‌ தூற்றுவதையுங் கேட்ட வேந்தன்‌ வியந்து ஸாரதியை யழைத்து ரைக்வர் என்னும் மஹாத்மாவைச்‌ தேடி யழைத்து வா வென கட்டளை யிட்டார்‌. ஸாரதி உடனே புறப்பட்டு பற்பல காடுகளைக் கடந்து காசி, கயை, இமயமலைச்சாரல்‌, கெளடதேசம்‌, துவராவதீ , ஸோமநாதபுரம்‌, அவந்தீபுரி, ஓங்காரம்‌, அச்வமேகம்‌, விஷ்ணு கயா, கொல்ஹாபுரம்‌, பஞ்சநதம்‌, அமலகிரி,
நந்திகேசம்‌, துங்கபத்ரா, ஸ்ரீசைலம்‌, விட்டலபுரம்‌, கோதாவரீ, மதுரா, காலிந்தீ , கோவர்த்தநம்‌, குருக்ஷேத்ரம் முதலிய விடங்களில்‌ அவரைத்‌ தேடி. ஆங்குள்ள நதிகளில்‌ மூழ்கி பகவத்‌ தர்சநம்‌ செய்து விட்டு காச்மீரஞ்‌ சென்றான்‌.
அந் நாடு நீர்வள நிலவளத்துடன்‌ கல்விக் களஞ்சியமா யிருந்தது -அந்நாட்டை ஆண்டுவந்த அரசன்‌ வநத்‌திலே வேட்டையாடும் போது ஓர்‌ ஸ்வயம்பு லிங்கத்தைக்‌ கண்‌டான்‌. அங்கு விதிப்படி ஆலயமமைத்து மாணிக்கத்தால் அவரை அர்ச்சித்தான்‌, அது முதல்‌ மாணிக்கேச்வாரென அவர்‌ அழைக்கப்படுகிறார்‌. அந்த ஆரண்யத்திலே ஓர்‌ வண்‌டிக் கருகே அமர்ந்து சொறி நிறைந்த தன்‌ உடலைச்‌ சொறிந்து கொண்டிருக்கும்‌ ஒருவரைக் கண்டான்‌, ௮வரது உடலொளியைக்‌ கண்டு அவர ரைக்வரென உணர்ந்தாலு மருகிலுள்‌ளோரைக் கேட்டு நிச்சயித்தான்‌, பின்னர்‌ ஸாரதி அவர்‌ திருவடி பணிந்து ஸாதோ! தாங்கள்‌ யார்‌? ஏனிங்கு தனியே அமர்ந்திருக்கிறீர்கள்‌ ? தமக்கென்ன வேண்டும்‌? என்று கேட்டான்‌. ரைக்வர்‌- நாம்‌ பூர்ண காமர்‌, நமக்கொன்றும்‌ தேவை யில்லை- -ஆனால்‌ நமது உள்ளத்‌தி லுள்ளதை யறிந்து பலர்‌ செய்யக்கூடிய தொண்டை ஒருவராக இருந்து செய்‌யும்‌ ஓர்‌ உத்த பரிஜனமே தேவை யென்றார்‌, இதைக்‌ கேட்ட ஸாரதி வேந்தனிடம்‌ விரைந்து சென்று நடந்ததைக்‌ கூறி
மன்னன்‌ எண்ணிறந்த ஆடை ஆபரணங்களையும்‌ ஆயிரக் கணக்கான கோக்களையும்‌ மிக அழகிய இரு குதிரைகள் பூட்டிய ஓர்‌ ரதத்தையும்‌ ரைக்வருக்குக்‌ காணிக்கையாக அளித்துப்‌ பணிந்து நின்றான்‌, இவைகளில்‌ சிறிதும்‌ விருப்‌பில்லாத ரைக்வர்‌ ஏ சூத்ரா-நமது ஸமாசாரத்தை நீ அறியாய் , இவைகளை நீயே எடுத்துக் கொள்‌ ! என்றார்‌. இதைக்‌ கேட்டு பார்த்திவன்‌ தன்னைச்‌ சபித்து விடுவாரோ யென்று பயந்து அவர்‌ திருவடியில்‌ பல முறை பணிந்து ஷமிக்கும்‌படி வேண்டினான்‌. அன்றியும் இத்தகைய காந்தி தமக்கு உண்டாகக்‌ காரண மென்ன வென்று வினவினான்‌. அவர்‌ கீதையின்‌ ஆறாமத்யாயத்தின்‌ பெருமை இது என்றுரைத்தார் -. ஜாந ச்ருதி அவரை ஆசார்யனாக அடுத்து ஆறாம் அத்தியாயத்தை உபதேசம் பெற்று அந்தப் பாராயணத்தால்‌ முக்தி பெற்றான்‌. ரைக்வரும்‌ மாணிகேச்வசர்‌ ஆலயத்தில்‌ ஆறாம் அத்யாய பாராயணம்‌ செய்து கொண்டிருந்தார்‌. ஹம்ஸ வடிவம் கொண்ட அமரரும்‌ தம்‌ பணி தீர்ந்ததென வானாடு சென்றனர்‌-
இக் கதை சாந்தோக்ய உபநிஷத்‌ திலும்‌ பிரும்ம சூத்ரம்‌-அப சூத்ராதிகரணத்திலும் இருக்கிறது –

  1. ஆத்ம ஸம்யம யோகம்‌- 47 ஸ்லோகங்கள்‌.[அர்ஜுன்‌ 5, பகவான்‌ 42.]

யோக முயற்சியும் யோகில் சம நிலை நால் வகையும்
யோகினுபாயமுப யோகு தன்னால் வரும்‌ பேறுகளும்‌
யோகுதனில் தன்‌ திறமுடையோகு தன் முக்கியமும்‌
நாகணை யோகி நவின்றனன் நன்‌ முடி வீரனுக்கே–7-,

யோக முயற்சியும்‌ யோகத்‌தில்‌ நால் வகை சம தர்ஸனமும்‌, மனதை யடக்கும்‌ உபாயமும்‌ யோக பலன்களும்‌ யோகத்தை விட தன்னை உபாஸிக்கும்‌ யோகம்‌ சிறந்தது எனவும் சேஷசாயி க்ரீடிக்கு உபதேசித்தான்‌-

முதல்‌ ஷட்கம்‌ முற்றிற்று –

7 வது அத்யாயம்‌–பாத்ம கதை,
நீர்வளம்‌ நிலவளம்‌ நிறைந்த பாடலீ புத்ரமென்ற நகரத்‌தில்‌ சங்கு கர்ணன்‌ என்றோர்‌ வேதியனிருந்தான்‌, அவனுக்‌குப்‌ பணத்தில்‌ பேராசை தோன்றவே வைச்ய விருத்தியான வியாபாரத்தைக்‌ கைக் கொண்டு பெருஞ்செல்லம்‌ சேர்த்‌தான்‌. வேதியருக்குரிய, தேவ பூஜை பித்ரு பூஜை செய்தறியான் . பொருள்‌ தேடும்‌ நிமித்தம்‌ ௮ரசரையும்‌ இதர உத்‌யோகஸ்தர்களையும்
அழைத்து விருந்தளிப்பான்‌, மூன்று மனைவிகளை மணந்து சிற்றின்பத்தை அனுபவித்தான்‌-ஆசைக்களவேது? தந மதத்தால்‌ நான்காம்‌ மனவியை மணக்‌கத் தன்‌ பரிவாரத்துடன்‌ கிரமாந்தரம் சென்றான்‌. நடு வழியில்‌ ஓர்‌ மரத்தடியே அவன்‌ படுத்‌து உறங்கும்‌ போது கொடிய ஸர்ப்பமவனைத்‌ தீண்டியது , சில நிமிஷங்களுக்குள்‌ கண்‌ இருட்ட காதடைக்க நாவு உலர உயிரைத்‌ துறந்தான்‌-

அவன்‌ உடலை இலைகளால்‌ மூடி புத்ரர்கள்‌ தனது ஊருக்குக்‌ கொண்டு வந்து தீயிலிட்டார்கள்‌, இங்கனம்‌ அபமிருத்யுவால்‌ இறப்பவற் கேற்றபடி, பிரேத உடலை எடுத்‌தான்‌. தக்க காலத்திலே தநயர்கள்‌ விதிப்படி பரலோகத்‌திற்கு உசிதமான சடங்குகளைச்‌ செய்தனர்‌. சங்கு கர்ணன்‌ பாம்பை நினைத்தே இறந்ததற்கேற்க பாம்பாகவே பிறந்‌தான்‌. புத்ரர்கள் யாருக்கும் தெரியாமல்‌ ௮வன்‌ கோடிக்‌ கணக்‌கான தனத்தை எந்தவிடத்தில்‌ புதைத்து வைத்திருந்தானோ அவ்விடத்‌திலேயே தங்கி அதைக் காத்து வந்தான்‌.
ஓரிரவு தான்‌ பாப ஜன்மமெடுத்ததை நினைத்து வருந்தி தன்‌ பிள்ளைகளிடம்‌ கனவில் தோன்றி அப் பொருளை எடுத்துக்‌கொண்டு எனக்கு நல்ல கதியை அளியுங்கள்‌ என்றான்‌. மறுநாட்‌ காலையில்‌ புத்திரர்கள் அனைவரும்‌ ஒன்று கூடி ஒரே மாதிரியாக ஸ்வப்னம்‌ ஆனதைக் கூறி இது வெறுங்கனவல்ல, உண்மையே -தந்‌தையை எப்படி நற்கதி பெறும்படி செய்வது என யோசித்தனர்‌, அதில்‌ ஒருவன்‌ உண்மையாகவே பித்ரு பக்தி கொண்டு ௮வரை எப்படி. கரை எற்றுவது என எண்ணி உள்ளம்‌ உருகினான்‌. ஒருவன்‌ ௮ரவத்தை அடித்துக் கொன்று பொருளை ௮னுபவிக்கலாமென்று கருதினான்‌, மற்றொருவன்‌ தந்தை கதியை எண்ணி எண்ணிக்‌ கதறினான்‌. மத்யம புத்ரன்‌ பொருளாசையால்‌ ஒருவரிடமும்‌ கூறாமல்‌ அன்றிரவே அங்குச் சென்று அவ்விடத்தைத் தோண்ட முயற்சித்தான்‌. அதற்குள்‌ அங்கிருக்க பாம்பு சீறிக் கொண்டு -ஏ மூட நீ யார்‌? ஏனிதைத்‌ தோண்டுகிறாய் என்றது. யான்‌ தங்களது சிவனெனும்‌ குமாரன்‌, ஸ்வர்ணத்தில்‌ உள்ள மோஹத்தால்‌ இதை எடுக்க வந்தேன்‌, என்று அவன்‌ கூற,தந்‌தை அவனை நோக்கி நீ என்‌ புதல்வன்‌ ஆனால்‌ என்னை
இப் பிறவியிலிருந்து விடுவிப்பதன்றோ உனது முதற் கடமை யென்றான்‌. இதைக் கேட்ட சிவன்‌ அருமை தந்தாய்‌ -அங்கனமே செய்கிறேன்‌. அதற்கேற்ற உபாயத்தைக் கூறும்‌ என்றான்‌, தந்தை, புத்ர! தீர்த்தமோ தானமோ தவமோ என்னை இதிலிருந்து விடுவிக்காது , ஸ்ரீ பகவத் கீதையின்‌
ஏழாம் அத்யாயம் ஒன்றே என்னை விடுவிக்கவும்‌ ஜனன மரணம்‌ முதலியவற்றை அகற்றவும் வல்லது . ஆதலால்‌ எனது திதியில்‌ கீதை ஏழாமத்யாயம்‌ பாராயணம்‌ செயப்பவரைப்‌ பிராமணனாக வரித்து அன்னமிடு என்றார்‌, -இதைக்கேட்ட மத்யம புத்ரன் தன் சகோதரர்களிடம் தனக்கும்‌ தந்தைக்‌கும்‌ நடந்ததைக் கூறினான்‌. அனைவரும்‌ அங்கனமே ஸ்ரார்த்தம் செய்ய சங்கு கர்ணன்‌ திவ்ய தேஹம் பெற்று புத்ரர்‌களுக்குத்‌ தனத்தைப்‌ பிரித்துத் தந்தார்‌. புத்ரர்களும்‌ அப்‌ பொருளைக் கொண்டு குளம் வெட்டி கோயில்‌ கட்டி அன்ன தாநம்‌ முதலிய தர்மங்களையே செய்தனர்‌, அன்றியும்‌ ஏழாமத்யாயத்தின்‌ பெருமையை உணர்ந்து அவர்களும்‌ பாராயணம்‌ செய்து நற்கதி பெற்றனர்‌.

7-ஞான விஜ்ஞான யோகம்‌-30-ஸ்லோகங்கள்‌ –
ஆர்த்‌த-திரௌபதி – ஜிக்ஞாஸு : உத்தவர்‌ அர்தார்த்‌தி .- துருவர்‌ -க்ஞானீ-ப்ரஹ்லாதன்

தானின்ற உண்மையைத் தன்‌ தனி மாயை மறைத்தமையும்‌
தானன்றி மாயை தனைத்‌ தவிர்ப்பான்‌ விரகற்றமையும்‌
மேனின்ற பக்தர்கள் நால்வரின்‌ ஞானி தன்‌ மேன்மைகளும்‌
தேனின்ற செங்கழலான்‌ தெளிவித்தனன்‌ பார்த்தனுக்கே–7-

தனது உண்மையான ஸ்‌திதியையும்‌ மாயையால்‌ ௮து மறைக்கப் படுகிறதையும்‌, ௮தை அகற்ற தன்னையே அடைய வேண்டும்‌ என்பதையும்‌. தன்னை வந்தடையும்‌ நால்‌வரில்‌ ஜ்ஞானியே சிறந்தவனென்பதையும்‌ தாமரை போன்‌ற . பாதமுடைய பகவான்‌ பார்த்தானுக்குரைத்தான்‌-

8-வது அத்யாயம்‌–பாத்ம கதை,
தஷிணா பதமெனும்‌ ப்ரதேசத்தில்‌ ஆமர்ததகம்‌ என்‌றோர்‌ பட்டணமிருக்கிறது. அங்கு பாவ சர்மா என்றோர்‌ பிராமணிருந்தான்‌. அவன்‌ பர ஸ்த்ரீகளிடம்‌ மோஹங்‌ கொண்டு மது அருந்தி மாம்ஸம்‌ உண்டு வந்தான்‌-அச் செலவிற்கு, ஸாதுக்களுடைய சொத்தைத் திருடுவான்‌. வேட்டையாடுவான்‌, ஒரு நாள்‌ அவன்‌ கழுத்துவரை பனங்‌ கள்ளைப்‌ பருகி அஜீர்ணத்தினால்‌ இறந்தான்‌. அதனால்‌ அவன்‌ ஓர்‌ வநத்‌திலே பனை மரமாகப்‌ பிறந்து இருந்தான் -அதே ஸமயத்தில்‌ குசீலன்‌ என்றோர்‌ வேதியனிருந்தான்‌.-

அவன் மனைவிக்கு குமதி என்று பெயர்‌, இருவரும்‌ தநத்தில்‌ பேராசை உள்ளவர்கள்‌. அவன்‌ வைதிகனாதலால்‌ எருமை கால புருஷன்‌ குதிரை முதலிய பல பாப தாநங்களை ப்ரதி திநம்‌ வாங்குவான்‌, ௮தில்‌ சிறிதளவு கூட நல்ல காலத்திலும்‌ நற் பாத்தரத்திலும்‌ கொடுக்க மாட்டான்‌.
இங்கனம்‌ பல நாட்கள்‌ சென்ற பின்‌ இருவரும்‌ இறந்தனர்‌. பாபத்திற்கேற்றபடி பிரும்மராஷஸர்களாக பிறந்து பசி தாஹத்துடன்‌ அலைந்து திரிந்து கொண்டிருந்தனர்‌-ஒரு நாள்‌ முன் கூறிய பனை மரத்தினடியே வந்து அடைந்தனர் –
மனைவி கணவனை நோக்கி எத்தனை நாள்‌ இத் துன்பத்தை அனுபவிப்போம்‌ ? இதிலிருந்து விடுபட வழி இல்லையா ?என்றாள்‌, பிரும்ம வித்யோபதேசம்‌, அத்யாத்ம விசாரம்‌,
கர்மவிதி , இவைகளைக்‌ தவிர இந்த ஸங்கடத்திலிருந்து கரை ஏற நமக்கேது வழி என்று கணவன்‌ உரைத்தார்‌. இதைக்‌ கேட்ட மனைவி அந்த ப்ரும்மம்‌ என்பதென்ன ? அக்யாத்‌மம்‌ எது ? கர்ம எது ? என வினவினாள்‌. இந்தக் கேள்விகள்‌ கீதையின்‌ எட்டாவது அத்யாயத்தில்‌ முதல்‌ பகுதியில்‌ அர்‌ஜூனனால் கேட்கப்பட்டவை, இதை அவ்ள்‌ கூறியவுடன்‌அப் பனை மரம்‌ முறிந்து விழுந்தது. அதிலிருந்து பாவ சர்மா திவ்ய தேஹம் பெற்று எழுந்தான்‌,
இந்த பிரும்ம ரஷஸ்‌ தம்பதிகளும்‌ ௮ந்த பாப உடலை விட்டு தேவ சரீரம் பெற்றனர்‌. அருகில் வந்த அழகிய விமாநத்‌தின் மீதமர்ந்‌து தம்பதிகள்‌ வைகுண்டம் சென்று அழியாத சுகமெய்தனர்‌, பாவசர்மா ஏனைய பாபிகளும்‌ நற் கதி அடையட்டு மென்றெண்ணி அங்கு நடந்த கதையையும்‌ எட்டாவதத்யாயத்தின்‌ முதல் பகுதியையும்‌ அங்கு நன்றாக எழுதி வைத்தான்‌. அன்றியும்‌ பூமியில்‌ மிக உயர்ந்த க்ஷேத்ரமான காசி மா நகரம் சென்று ஸ்ரீ மாதவனை ஆராதிக்கக்‌ கருதினான்‌. அங்கனமே பகவானுடைய ஸன்னதியில் அமர்ந்து இந்தக் கீதையின்‌ பகுதியை ஓயாமல்‌ ஜபம்‌ செய்து வந்தான்‌.-இதனிடையில்‌ வைகுண்டத்தில்‌ தூக்கத்தை விட்டெழுந்து பகவான்‌ எதையோ யோசனை செய்து கொண்டிருந்தார்‌, நாராயணனை நோக்கி பிராட்டி நாத! தூக்கத்தை விட்டு. என்ன யோசிக்கிறீர்கள்‌ ‘? என்று கேட்டாள்‌, காசியில்‌ பாவசர்மா என்பவர்‌ பக்தி ரஸம்‌ ததும்ப என்னைக்‌ கீதையின்‌
பாதி ஸ்லோகத்தால்‌ ஆராதிக்கிறான்‌. அதற்கேற்ற பயனளிக்க வேண்டுமே ? எதைத் தருவது? என யோசித்துக்‌ கொண்டிருக்கிறேன்‌ என்று பகவான்‌ உரைத்தார்‌, அவர்‌ உடலை விட்ட பின்‌ பகவான்‌ தன் ௮ரண்மனையில்‌ தன்னருகே அவருக்கு ஸ்தாந மளித்து சாச்வசமான பேராநந்தத்‌தைகத் தந்தார்‌, அத்துடன்‌ ௮வன்‌ செய்த பாபத்தற்காக நரகத்தில்‌ பல யாதனைகளை அனுபவித்து வந்த அவனது பித்ருக்களுக்கும் உக்தம கதி யளித்தார்‌.

  1. அக்ஷர ப்ரம்ம யோகம்‌ 28 சுலோகங்கள்‌.[ அர்ஜுனன்‌ 2 பகவான்‌ 26 )

ஆராத செல்வரு மாருயிர் காணுமரும்‌ பயனும்‌
பேராத தன்‌ கழற் கீழ் அமரும்‌ பெரு வாழ்ச்சிகளும்‌
சோராதுகந்தவர்‌ தூய் மதி கொள்வதுஞ்‌ செய்வனவும்‌
தோரா விசயனுக்குத்‌ திருநாரணன்‌ செப்பினனே.
–8-

போதுமென்ற எண்ணம் தோன்றாத செல்வத்தையும்‌ ஆத்ம ஸ்வருபத்தைத் தார்சிப்பதெனும்‌ பெரும்‌ பயனையும்‌ பகவானது திருவடியை யடைந்து திரும்பாத சிறந்த புருஷார்த்தத்தையும்‌ விடா முயத்சி யுள்ளவர்‌ பெறும்‌ சுத்த அறிவையும்‌ ௮வர்‌ செய்ய வேண்டிய தசையும்‌ தோல்வி யுறாத விஜயனுக்கு நாரணன்‌ கூறினான்‌–

9-வது அத்யாயம்‌–பாத்ம கதை.
நர்மதா நதீ தீரத்தில்‌ மாஹிஷ்மதீ என்றோர்‌ பட்டணமுண்டு, அன்னகரில்‌ சிவத் விஜ மரபினிலே தோன்றிய மாதவன்‌ என்றோர்‌ வேதியரிருந்தார்‌. வேத வேதாந்தங்களின்‌ கரை கண்ட அவர்‌ கல்விக்கேற்ற செயல்‌ உள்ளவர்‌. அவர்‌ ஓர்‌ சமயம்‌ சிறந்த வேள்வி ஒன்றைச்‌ செய்தார்‌-அதில்‌ விதிப்படி, ௮ஜத்தினது வபையை எடுப்பதற்கான காரியத்தைச்‌ செய்யும் போது அது மனிதனைப் போல்‌
சிரித்துக் கொண்டு, ஸ்வல்ப பயனைக்‌ தரும்‌ இவ் வேள்விகளால்‌ என்ன பயன்‌ ? எனது நிலையைப் பாரும்‌ என்றது. இதைக்‌கேட்டு எல்லோரும்‌ ஆச்சர்யமடைந்தனர்‌. மாதவன்‌ ௮தனருகே சென்று அஞ்ஜலி செய்து “ஐயா நீர்‌ யார்‌? ஏன்‌இப் பிறவி பெற்றீர்‌ ”” என்று கேட்டார்‌.

ஆடு கூறிற்று, யான்‌ நிர்மலமான பிராமண குலத்‌திலே பிறந்‌தவன்‌, -நன்றாக வேத அத்யயனம் செய்து பல வேள்விகளைச்‌ செய்தேன்‌. எனக்கு ஸந்ததி இல்லாதிருந்து இறைவனருளால்‌ ஓர்‌ ஆண்‌ குழந்தை பிறந்தது , அது நோய்‌வாய்‌ பட்ட பொமுது அந் நோய்‌ அகல என்‌ மனைவி சண்டி தேவிக்கு ஓர்‌ ஆட்டைப்‌ பலி யிடச் சொன்னாள்‌. நானும்‌ புத்ர வாஞ்சையால்‌ அங்கனம்‌ செய்து விட்டேன்‌. அவ்வாட்‌டின்‌ தாய்‌, அதனால்‌ துக்க மடைந்து சாஸ்த்ர ஸம்மதமில்லாத வழியில்‌ என்‌ மகனைக்‌ கொன்றதால்‌ நீ ஆடாகப் பிறப்பாய்‌ என என்னைச்‌ சபித்தது-
யான்‌ பற்பல பிறவிகளைப்‌ பெற்று பல துன்பங்களை அனுபவித்த முடிவில்‌ இவ்வாடாகக்‌ தோன்றினேன்‌, ஈஸனருளால்‌ ஒவ்‌ வோர்‌ பிறப்பும்‌ எனக்கு நினைவிருக்கறது என்றது – இதைக் கேட்ட ஸதஸ்யர்கள்‌ குதூஹலத்தால்‌ நீ என்னென்ன ஜன்‌மமெடுத்தாய்‌ கூறென வேண்டினர்‌, ஆடு கூறிற்று, ஒரு ஸமயம்‌ யான்‌ குரங்காகப்‌ பிறந்தேன்‌, என்‌னைக்‌ குரங்காட்டி பிடித்து வீடு வீடாக ஆட்டி வைத்தான்‌,-ஒரு நாள்‌ எனது மனைவி மக்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தான்‌. அச் சமயம்‌ என்‌ யஜமானனிட்ட கட்டளைப்‌படி யான்‌ ஆடாதிருந்ததால்‌ ௮வன்‌ கோபங்கொண்டு என்னைத்‌ தடியாலடித்தான்‌. ௮ந்த வலியால்‌ நீரருந்தாமலும்‌ உண்ணாமலும்‌ இறந்தேன்‌, பின்னர்‌ நாயாக பிறந்து வீடு வீடாக ஓடி எச்லைத் தின்று ஜீவித்து வந்தேன் , ஒரு நாள்‌ பசியால் வருந்தி ஒருவருமில்லாத ஓர்‌ வீட்டிற்குள்‌ நுழைந்து உண விருந்த பாத்ரதில்‌ வாயை வைத்தேன்‌. அதற்குள்‌ ௮வ் வீட்டுக்‌ இழவியும்‌ சிறுவர்களுமாக ஓடி வந்து என்னைத்‌ தடியாலடித்தனர்‌. எனது எலும்புகள்‌ முறிந்து ஸந்‌தி பந்‌தங்கள் கலகலக்க ஊளை யிட்டுக் கொண்டே வெளியில்‌ வந்து வீழ்ந்தேன்-

அடிபட்டவிடத்தில்‌ புண்‌ பலமாக. புழுக்கள்‌ தோன்ற இறந்தேன்‌, அதன் பின்‌ குதிரையாகப்‌ பிறந்தேன்‌.ஒருவன்‌ பலமுள்ளவரை என்னிடம்‌ வேலை வாங்கிக் கொண்டு விற்றான்‌, அங்கோர்‌ கிழவி யாத்ரைக்குச் செல்ல என்னை. ஸ்வல்ப விலைக்கு வாங்கினாள்‌, இரண்டு மூன்று பிள்ளைகளை
என்மீது ஏற்றி கிழவியும் ஏறிக் கொண்டு துவாரகைக்குக்‌ கிளம்‌பினாள் -நடு வழியில் சேற்றில்‌ எனது கால்கள்‌ மாட்டிக்‌ கொண்டன. சிறுவர்கள்‌ என்னை வேகமாக எழுந்தொடும்‌படி பலமாக அடித்தார்கள்‌. யான்‌ அடி தாளாமல்‌ சேற்றில்‌ வீழ்ந்து உயிரைத்‌ துறந்தேன்‌, அதன் பின்‌ சாபத்தின் படி ஆடாகப் பிறந்து உன்னிடம்‌ சிக்கனேன்‌.
இதைக் கேட்டு ஆச்சர்யமடைந்த பிராமணன்‌ ௮திருக்‌கட்டும்‌, ஸ்வல்ப பலத்தை அளிக்கும்‌ யாகத்தினால்‌ என்ன பயன்‌ என்றாயே – நித்யமான சுகத்தை அளிக்கும்‌ உபாயம்‌ யாது அதைக் கூறு என்றார்‌, ஆடு ஓர்‌ ஆச்சர்யமான விஷயத்தைக்‌ கூறுகிறேன்‌ கேள்‌ என்று , கதை கூற ஆரம்‌பித்தது .மோகத்தை அளிக்க வல்லதான. குரு ஷேத்திரத்தில் சூர்ய வம்சத்தில்‌ உதித்த சந்த்ர சர்மா என்றோர்‌ ௮ரசன் இருந்தான்‌, அவன்‌ சூர்ய கிரஹண காலத்தில்‌ கால புருஷ தாநம்‌’ செய்யக் கருதி அதற்கேற்றபொருள்களைப்‌ பரப்பி கால புருஷனை ஆவாஹநம் செய்தான்‌. தக்க தஷிணையையும்‌ வைத்து வேத வேதாந்தங்களை அறிந்த அந்த்தணோத்தமரை அதை வாங்குவதற்கு ஸன்னத்தமாயிருக்கும்படி செய்தான்‌.
அரசன்‌ புரோஹிதருடன்‌ ஸ்நாநம்‌ செய்யக் கிளம்பினான்‌–அச் சமயம்‌ கால புருஷன்‌ உறக்கச் சிறித்துக் கொண்டு ஓ. பிராமணா இந்த க்ஷேத்ரத்தில்‌ எவரும்‌ ௮ணு அளவு கூட தாநம்‌ வாங்க மாட்டார்‌, பண ஆசையால்‌ நீர்‌ எப்படி இதை வாங்கத் துணிந்தீர்‌ என்றது, , பிராமணன்‌ இத்தகைய மஹா பாப தாநங்களால்‌ வரும்‌ பாபம்‌ பெருங்கடலை ஒத்ததென்‌பதை அறிவன்‌. அதைத் தாண்ட என்னிடம்‌ ஓர்‌ உபாயம் இருக்கிறது என்று அலஷ்யமாக கூறிக் கொண்டே ஸ்நாநத்‌திற்குச் சென்றான்‌. மன்னன்‌ நீராடி சுத்த வஸ்திரம் அணிந்து விதிப்படி அவ் வேதியருக்குக்‌ கால புருஷ தாநம் செய்‌தான்‌,கால புருஷன்‌ ஹ்ருதயத்திலிருந்து அரசனது பாபங்கள்‌ ஓர்‌ சண்டாள வடிவமெடுத்துக்‌ கிளம்பியது – பர நிந்தை என்பது சண்டாளி ரூபமெடுத்து வந்தது . இருவரும்‌ அவ் வந்‌தணர் அருகே வந்து ௮வர்‌ அங்கத்தில்‌ நுழைய ஆரம்பித்தனர்‌.
உடனே அவர்‌ தன்‌ மநதில் உள்ள பகவத் கீதையின்‌ ஒன்பதாமத்யாயத்தைப்‌ பாராயணம் செய்தார்‌, அவர்‌ உடல்‌ கடலையைப் போல்‌ அசைந்தது, அனைவரும்‌ ஆச்சரியத்துடன்‌ அவருக்கு என்ன நேறுமோ என அஞ்சினர்‌, அவர்‌ ஜபம்‌ செய்த கீதாக்ஷங்களிலிருந்து விஷ்ணு கிங்கரர்கள்‌ கிளம்பி அச் சண்டாள தம்பதியை விறட்டினார்கள்‌, அவர்கள்‌ கண்ணுக்கெட்டாமல்‌ மறைந்த பின்‌ ஆச்சர்யமடைந்த அரசன் அவரை நோக்கி த்விஜோத்தமரே -இந்த பேராபத்‌தில் இருந்து எப்படி விடுபட்டீர்‌-எந்த மந்திரம்‌ ஜபித்தீர்‌?எந்த தேவதையை வேண்டினீர்‌ ? ௮ச் சண்டாள புருஷன்‌ யார்‌? ௮ச் சண்டாளி யார்‌ ? எப்படி. அவர்கள்‌ அடங்கினர்‌ ? என்று கேட்டார்‌, அதற்கு அந்தணன்‌ – அரசே. உமது பாபமெல்லாம்‌ சண்டாளனாகவும்‌ பிற நிந்தை சண்டாளியாகவும்‌ வந்தன, கீதையின்‌ ஒன்பதாமத்யாயத்தை ஸ்மரித்‌தேன்‌. அதனால்‌ இவ் வாபத்து என்னை விட்டகன்றது என்று கூறி கால புருஷ தானத்தில்‌ கிடைத்த அபரிமிதமான பொருளை எடுத்துக் கொண்டு தன்னிருப்பிடம் சென்றார்‌,-என்று ஆடு இக்கதையின்‌ மூலமாக கீதா நவம அத்யாயம்‌ எத்‌தகைய பாபத்தையும்‌ அகற்றி நற் கதியை யளிக்க வல்லது
என்பதை எடுத்துக்‌ காட்டிற்று, அதைக் கேட்ட மாதவனும்‌ ஆடின்‌றியே யாகத்தைப்‌ பூர்த்தி செய்து நவமாத்யாயத்‌தைப்‌ பாராயணம் செய்து அவர்‌ நற் கதி ௮டைந்ததுடன்‌ தனக்கு வழி காட்டிய அவ்வாட்டிற்கும்‌ கீதையால்‌ நற் கதி வருமாறு செய்தார்‌-

  1. ராஜ வித்யா ராஜ குஹ்யம்‌-34 ஸ்லோகங்கள்‌.

தன்மேன்மையும் தன் பிறப்பில்‌ தளராத்‌ தனிமையையும்‌
பன்‌ மேனி நண்ணினன்‌ பால் பிரியா வன்ப ராசைகளும்‌
புன்‌ மேனி விண்ணவர் பால்‌ புரியாததன்‌ பத்தியையும்‌
நன் மேனி நாரணன்‌ தான்‌ நரனுக்கு நவின்றனனே–9-

தனது மேன்மையையும்‌ தனது அவதாரங்களில் குறையாமல்‌ வருகின்ற குணங்களையும்‌, பலவிதமான தனது உடல்களிலும்‌ பிரியாத அன்புள்ள பக்தர்களின்‌ ஆசைகளையும்‌ அல்ப உடலுள்ள தேவர்களிடத்தில்‌ செல்‌லாது தன்னிடம்‌ செய்யும்‌ பக்தியையும்‌ நல்ல அழகுள்ள நாராயணன்‌ நரனுக்கு உபதேசித்தான் –

10-வது அத்யாயம்‌–பாத்ம கதை,
காசீ பட்டணத்தில்‌ தீரதீரன்‌ என்றோர்‌ பிராமணோத்‌தமனிருந்தான்‌. அவன்‌ மிக்க அடக்கமுள்ளவன்‌, புண்யசாலி, நிவிருத்கதி மார்க்கத்தில் ஈடுபட்டவன்‌, சிவபக்த்ன்ஜிதேந்திரியன்‌, எப்போதும்‌ சிவனையே மநதில்‌ தியாநம்‌ செய்வான்‌, உடல் பொருள்‌ ஆவி எல்லாவற்றையும்‌ சிவார்ப்‌பணம்‌ செய்து பற்றில்லாமல்‌ ஒப்புக்கு உலக வியவகாரத்தி லீடுபடுவான்‌, உடலை மறந்து அவன்‌ வெளியில்‌ செல்லும்‌
போது அன்புடன்‌ சிவன்‌ அவனது கையைப்‌ பிடித்துக்‌ கொண்டு போவது வழக்கம்‌, ஒரு ஸமயம்‌ அவர்‌ தியானநிஷ்டையில்‌ அமர்ந்த போது பிரிங்கிரிடி எனும்‌ கணன்‌ பரமனை வணங்கி பகவன்‌ இந்த தீரதீரன்‌ என்ற சாது என்ன விசேஷ புண்யஞ்‌ செய்தான்‌ ? எவருக்கும்‌ கிட்‌டாத தங்கள்‌ கரகமலம்‌ அவருக்கு எப்போதும்‌ சுலபமாகக்‌ கிடைக்கின்றதே ! என்று கேட்டான்‌. அதற்கு மஹா தேவன்‌ கூறினார்‌.-யான்‌ ஒரு ஸமயம்‌ கைலயங்கிரியில்‌ புன்னாக வநத்‌திடையே ஸகல கணங்களும்‌ சூழ வீற்று இருந்தேன் – இனிய மத்த மாருதம்‌ வீசிற்று -பக்தர்கள்‌ பணிந்து துதித்துக் கொண்டிருந்தனர்‌, இதனிடையே ஆகாயத்திலிருந்து ஓர்‌பஷி என்னெதிரே விழ்ந்தது, அதை எல்லோரும்‌ ஆச்‌சரியத்துடன்‌ பார்த்துக் கொண்டிருக்கும் போது அது திடீரென்றெழுந்து மனிதரைப் போல்‌ ஸ்பஷ்டமான வாக்கினால்‌ என்னைத் துதித்தது – யான்‌ அதைப்‌ பார்த்து நீ யார்‌? பார்வைக்கு ஹம்ஸம் போல்‌ காணப்படுகிறாய்‌ -ஆனால்‌ கறுப்‌பாக இருக்கிறாய்‌ ! உண்மையைச்‌ சொல்‌ என்றேன்‌ ! பக்ஷி என்னை வணங்கி தேவ? பிரம்மாவின்‌ வாஹமான யான்‌ மானஸ ஸரஸிலிருந்து பூமிலோகத்தை நாடிக்‌ கிளம்பினேன்‌-இடையே ஸெளராஷ்ட்‌ர நாட்டிற்கருகிலுள்ள தாமரைத்‌ தடாகத்திலிறங்கி தாமரைத்‌ தண்டுகளையும்‌ கிழங்குகளையும் உண்டு வழிக்கும்‌ சிறிது எடுக்‌துக் கொண்டு கிளம்பினேன்‌-அச் சமயம்‌ திடீரென்று புவி மீது விழுந்தேன்‌-சிறிது நேரம் சென்ற பின்‌ மோஹமகன்று நிஜ அறிவு வந்தது ,.
என்னுடல்‌ கறுப்பானதற்கு காரணமும்‌ தெரியவில்லை,.ஏன் நான்‌ விழுந்தேன்‌ ? என்று யோசித்துக் கொண்டிருந்தேன்-அதற்குள்‌ தாமரை மலரிலிருந்து எழுந்‌திரு ஹம்ஸமே நான்‌ காரணம் கூறுகிறேன்‌ *? என்று ஒர்‌ குரல்‌ எழுந்தது -ஆச்சரியமடைந்து அதன் அருகே சென்றேன்‌-ஆங்கு ஐந்து கமலங்களை அவயவமாகக் கொண்டு ஓர்‌ பெண்‌கிளம்பினாள்‌. அவள்‌ தலை மீது ஆகாயத்திலே சங்க சக்ர
கதா பாணிகளாய்‌ பீதாம்பர தாரிகளாய்‌ மஹா விஷ்ணுவைப்‌ போல்‌ அறுபது ஆயிரம்‌ உருவங்கள்‌ காணப்பட்டன.
இதைக் கண்டு பேராச்சர்யமடைந்த யான்‌ நான்‌ ஏன்‌விழுந்தேன்‌ ? என்று முதலில்‌ கேட்டேன்‌, அதற்கு அவள்‌ என்னைக்‌ தாண்டிச்‌ சென்றாய்‌, அந்த பாபத்‌தினால்‌ விழ்ந்து கறுப்பாகவும்‌ ஆனாய்‌ என்றாள்‌. பிறகு விஷ்ணு வடிவம் தாங்கிய இவர்கள்‌ யார்‌ என்று கேட்டேன்‌. இந்த ஸரஸ்ஸின் கரை மீது தவம்‌ செய்த மஹர்ஷிகளிவர்கள்‌. ஒரு நாள்‌ ௮தி ரூப லாவண்யம்‌ வாய்ந்த ஓர்‌ யுவதி இவர்களெதிரே அழகாக வீணா காநம்‌ செய்தாள்‌, இதைக் கேட்டு பரவசர்களாகி அவளருகே ஓடினார்கள்‌. அவளது ஒப்பற்ற உருவம்‌ இவர்களது தவத்தைச்‌ சாந்தியை மறக்கும்படி செய்தது -நான் தான்‌ முதலில்‌ அவளைப்‌ பார்த்தேன்‌. நானே அவளை மணப்பேன்‌, நீ என்‌ மனைவியினருகே வரக் கூடாது என பரஸ்பரம்‌ சண்டை யிட்டுக்‌ கொண்டனர்‌, கோபம்‌ பலத்‌தன, அது எதைத் தான்‌ செய்யாது? அருகில் உள்ள கற்‌களையும்‌ கட்டைகளையும்‌ ஆயுதமாகக்‌ கொண்டனர்‌. ஒருவர்‌ கூட மிகுதி இல்லாமல்‌ அடித்துக் கொண்டு இறந்தனர் -எம லோகஞ்‌ சென்று பிரும்ம ஹத்திக்கேற்ற பற் பல கோர நரகங்களை அனுபவித்து பூமியில்‌ சண்டாளர்களாகப்‌ பிறந்தனர்‌, அந்த ஜாதிக்குரிய தொழிலுடன்‌ வழிப்‌ போக்கர்களை அடித்துப்‌ பணத்தைக்‌ கொள்ளை அடித்தனர் – தற் செயலாக ஒரு சமயம் வனத்திலுள்ள விஷ ஜலத்தை அருந்தி இறந்தனர்‌. மறுபடியும்‌ பல நரகங்களை அனுபவித்துக்‌ கழுதை ஓட்டை பூனை நரி முதலிய பிறவிகளைப்‌ பெற்று கடைசியாக இத் தடாகத்தில்‌ வண்டாகப் பிறந்தனர்‌-உனக்காக வெளியில்‌ யான்‌ வரும் போது எனது வாஸனையை முகர்ந்து விஷ்ணு ஸாரூப்யத்தை அடைந்து வைகுண்டம் செல்கின்றனர்‌ என்றாள்‌-

இதைக் கேட்டு முன்னிலும்‌ பன்மடங்கு ஆச்சரியமடைந்த யான்‌ இவ்வளவு பெருமை வாய்ந்த நீ யார்‌?உனக்கு எதனால்‌ இப் பெருமை? என்று கேட்டேன்‌, “பக்ஷி ராஜனே ! யான்‌ இதற்கு முந்திய மூன்றாவது பிறப்பில்‌ ஸரோஜ வதநா எனும்‌ ஓர்‌ பிராமண கன்யகை, எனது கணவனைத்‌ கெய்வமாகக்‌ கருதி பணி விடை செய்து வந்தேன்‌-இளைமை யானதால்‌ ஓர்‌ கிளியைப்‌ பிடித்‌துக்‌ கூட்டிலடைத்‌து அதற்கு அழகிய சொற்களைக்‌ கற்பித்தேன்‌-இதைக் கண்டு கோபங்கொண்ட என்‌ கணவன்‌ என்னைக்‌ கிளியாகும்படி சபித்தார்‌. கற்பின்‌ சிறப்பால்‌ மஹர்ஷிகள்‌ ஆச்‌ரமத்‌திலேயே கிளியாகப்‌ பிறந்தேன்‌, ஓர்‌ முநி குமரி என்னை அன்புடன்‌ வளர்த்தாள்‌. அவள்‌ தந்‌தை ப்‌ரதி திநம்‌ காலையில்‌ கீதையின்‌
விபூதி யோகம்‌ எனும்‌ பத்தாமத்யாயத்தைப்‌ பாராயணம்‌ செய்வார்‌. அது காதில்‌ விழ இனி ஜாதிக்‌ கேற்றபடி அவர்‌ சொன்னதை அவ்யக்கமாகக்‌ கூறி வந்தேன்‌, அந்த புண்‌யத்தால்‌ பத்மாவதி என்ற அப்ஸரஸாகப்‌ பிறந்து மஹா லக்ஷ்மியின்‌ ௮ந்தரங்ககத் தோழி யானேன்‌-தசமாத்யாயக்த்தைக்‌ கேட்டதனால்‌ இத்தகைய பெரும்‌ பாக்யம்‌ பெற்றேன் –
ஒரு சமயம்‌ விமானத்தின் மீதேறி வந்து இந்த ஸரஸ்ஸிலிறங்கி ஜல கிரீடை செய்தேன்‌. அச் சமயம்‌ துர்வாஸர்‌ அருகே வந்து விட்டார்‌, உடனே அங்குள்ள ஐந்து தாமரை மலர்களைக் கொண்டு என்‌ உடலை மூடிக் கொண்டேன்‌, அவர்‌ கோபங்கொண்டு இப்படியே நூறாண்டு ஜலத்திலிரு என்று சபித்தார்‌-கீதையின்‌ பலத்தினால்‌ எனக்கு வாக்குக்‌ கெடவில்லை. மற்றெவ்வித துன்பமும்‌ உண்டாக வில்லை, என்னைப்‌ ப்ரதக்ஷிணம் செய்யாமல்‌ தாண்டிச்‌ சென்ற உனக்கு இந்த கதி நேர்ந்தது என்று ஸரோஜவதனை தன்‌ சரிதத்தைக்‌ கூறி ஹம்ஸம்‌ முன்‌ போல்‌ வெண்மையாகவும்‌ திவ்ய கதி பெறவும்‌ கீதை தசமாத்யாயத்தை ஓர்‌ முறை பாராயணம்‌ செய்தாள்‌. உடனே ௮து அவனளித்த கமலத்தை என்‌ திருவடியில்‌ ஸமர்பித்து உடலை விட்டது என்று பரமசிவன்‌ கூறியதைக் கேட்டு ஆச்சர்யமடைந்த ப்ருங்கரிடி, நாத! ௮து முற்பிறவியில் யார்-என்ன தவம்‌ செய்தது ? என்று கேட்‌டார்‌.பரமசிவன்‌–பிரும்ம வாஹநமாய்‌. அமர்ந்த அந்த பக்ஷி முற் பிறவியில்‌ ஒர்‌ பிராமண பிரும்மசாரி, தவராமல்‌ குருவிற்குப்‌ பணி விடைசெய்து நியமத்துடன்‌ வேதமோதி வந்தான்‌, ஒரு நாள் இரவு தூக்கத்தில்‌ ௮வன்‌ தன்னை யறியாமல்‌ குருவின்‌ படுக்கையைக்‌ காலால்‌ தொட்டு விட்டான்‌.௮ந்த பாபத்தினால்‌ ௮வன்‌ பறவையாகப் பிறந்தான்‌. எனினும்‌ குருவிற்குச் செய்த பணி விடையால்‌ பிரும்மாவை வஹிக்கும்‌ உத்தம ஹம்ஸமாக ஆனான்‌, அந்த உடலை விட்ட பின்‌ அந்தண குலத்திலே தீரதீரன்‌ என்‌ற பெயருடன்‌ பிறந்தான்‌,பத்மினியால்‌ கூறப்பட்ட கீதை தசமாத்யாயத்தை மறவாமல்‌ இளமை முதல் ஜபித்து வருகிறார்‌, அவருக்கு எப்‌போதும்‌ வாசுதேவன்‌ கண் முன்னே தோன்றிக் கொண்டே இருக்கிறார்‌, தீரதீரன்‌ யாரைக்‌ கண்ணால்‌ பார்க்கிறானோ அவன்‌ செய்த பஞ்சமாபாதகங்களும்‌ பறந்து போம்‌. அத்‌தகைய ஸாது ஸஞ்சரிக்கும் போது காசியை விட்டு அவர்‌ வெளியில்‌ போகாதபடி அவர்‌ கரத்தை யான்‌ எப்போதும்‌ பிடித்துக் கொண்டே அவருடன் போகிறேன் -இதைக்‌ கேட்டவர் கூட உத்தம கதி அடைவர்‌ என கூறினார்‌.

10-விபூதியோகம்‌ 42 ஸ்லோகங்கள்‌.[அர்ஜுநன்‌ 7, பகவான்‌ 95,]

எல்லை யில்லாத தன்‌ சீலமுமின்ன முதக் கடலும்‌
எல்லை யில்லாத விபூதி யெல்லாம் தன தானமையும்‌
எல்லை யில்லாத பத்தி யெழு விக்கத் திரு வருளால்‌
எல்லை யிலீசனியம்பினன்‌ இந்திரன்‌ மைந்தனுக்கே–11-

எல்லையில்லாத தனது சீலத்தையும்‌ அமிருதக்‌ கடல்‌ போன்ற தன்‌ குணங்களையும்‌, எல்லா வஸ்‌துக்களும்‌. தனது விபூதி என்பதையும்‌ விசேஷமாக பக்தி உதிப்பதற்கும்‌ ௮து விருத்தி யாவதற்கும்‌ அநந்தனான பகவான் கருணை கொண்டு இந்த்ர புத்ரனுக்குக்‌ கூறினார்‌-

11-வது அத்யாயம்‌–பாத்ம கதை,
விச்வ ரூபாத்யாயமெனும்‌ இவ் வத்யாயத்தின்‌, பெருமையைக் கூறும்‌ கதைகள்‌ நூற்றுக்கணக்காக இருக்கின்றன.-௮தில்‌ ஒன்றைக்‌ கூறலாம்‌, வட நாட்டிலே ப்‌ரணீதா என்ற. நதிதீரத்தில்‌ மேகங்கரம்‌ என்றோர்‌ நகரமுளது , ௮து ஸதாசாரமுள்ள கோடீச்வர்களுச்கு இருப்பிடம்‌, அங்கு பகவான்‌ சார்ங்கபாணி திரு விக்ரமராகப் ப்ரகாஸிக்கிறார்‌, அவரருகே மேகல மென்றோர்‌ புண்ய தீர்த்தமிருக்கறது . ௮தில்‌ புனலாடி பகவானைத் தர்சிப்பவர்‌ வைகுண்டம் செல்‌வர்‌. அந் நகரில்‌ ஸுநந்தன்‌ என்றோர்‌ பிமாமணனிருந்தார்‌. கல்வி கேள்விகளில்‌ சிறந்தவர்‌ அவர்‌, இந்த்திரியங்களை அடக்கி பகவானிடத்தல்‌ ஸதா மநதைச்‌ செலுத்துவார்‌.-வாஸு தேவனருளால்‌ திவ்விய ஜ்ஞாநம் பெற்று ப்ரஹ்ம ஆனந்தத்தை அனுபவித்து வந்தார்‌, அதற்குக் காரணம்‌ அவர்‌ ஸதா பாராயணஞ் செய்யும்‌ கீதை பதினோறாமத்யாயமே,-அவருக்கு கோதாவரீ யாத்திரை செய்ய வேண்டுமென்று ஆசை தோன்றி கிளம்பினார்‌, ஆங்குள்ள விரஜம்‌ தாரா தர்க்கம்‌ முதலிய எட்டு புண்ய தீர்த்தங்களில்‌ விதிப்படி புனலாடி. பித்ரு தர்ப்பணம்‌ செய்து லக்ஷ்மீ நாசிம்மன்‌ முதலிய தேவர்களைக்‌ தர்சனம்‌ செய்தார்‌, யாத்ரிகர்களுடன்‌ கூட, மஹாலக்ஷ்மி ப்ரத்யக்ஷமாய்‌ அமைந்துள்ள கர ஸ்தாநமெனும்‌ நகரத்துக்கு வந்தார்‌. அங்கே இரவு தங்கி உறங்க ஒரு விட்டிலும்‌ இவர்களுக்கு இடங் கொடுக்க மறுத்தனர்‌,அங்கு தற்செயலாக வந்த நகர பாலகன்‌ விசாலமான ஓர்‌ மடத்தைக்‌ காட்டி அங்கு தங்கும்படி, கூறினான்‌, அங்கனமே அவர்‌ அவ் விடத்தில்‌ இரவைக் கழித்‌து காலையில்‌ எழுந்தார்‌.
தன்னுடன்‌ வந்த ஒருவரையும் காணாது தான மாத்ரம்‌ வீதியில் எரியப் பட்டிருந்ததைக்‌ கண்டு அவர்‌ சிந்திக்க ஆராம்பித்தார்‌. அச் சமயம்‌ நகர பாலகன்‌ அவரிடம்‌ வந்து ஸ்வாமி தாங்கள்‌ தைவப் பிறப்போ? நீர்‌ என்ன மந்த்ரம்‌ வைத்திருக்கிறீர்‌ ? எந்த தேவதையை உபாஸிக்கிறீர்‌ ?இல்லையேல்‌ நீர்‌ பிழைத்திருக்க முடியாது என்றார்‌. இதைக்‌ கேட்டு வியந்த ஸூநந்தர்‌ அதிருக்கட்டும்‌-இங்கு என்ன விசேஷம்‌? என்னுடன்‌ வந்தவரெங்கே ? ஏன்‌ எங்களுக்கு. ஒருவரும்‌ தங்க யிடமளிக்க வில்லை? என்று கேட்டார்‌.

நகரபாலன்‌..-ஐயோ, இங்கு ஓர்‌ ராக்ஷஸன் இருக்‌கிறான்‌,அவன்‌ இரவில்‌ வந்‌து நகர ஜனங்களை விழுங்கி வந்தான்‌. நகர ஜனங்கள்‌ அவனை வணங்கி மடத்தில்‌ வரும்‌ யாத்ரிகர்களை மாத்திரம் சாப்பிட்டு விட்டுத் தங்களை ரஷிக்கும்படி வேண்டினர்‌. அவனதை ஏற்றுக் கொண்டு மடத்தில்‌ தூங்குபவர்களை ப்‌ரதி தினம்‌ உண்பது வழக்கம்‌. நேற்றிரவில்‌ எனது புத்ரனது நண்பனொருவன்‌, இதை அறியாது இந்த மடத்‌தில்‌ தங்க அவனை அழைத்து வர என்‌ புத்ரன்‌ சென்றான்‌,
ராஷஸன்‌ அவ் விருவர்களையும்‌ விழுங்கி விட்டான்‌. இன்று காலை யான்‌ புத்ர சோகத்தால்‌ வருந்தி ௮வ் வரக்கனைத்‌ தேடி,ஐயோ ! எனது ஏக புத்ரனையும் கொன்று விட்டாயே -அவன்‌ பிழைத்து வர ஏதேனும்‌ உபாயமிருந்தால்‌ கூறென்‌றேன்‌. யானறியாமல்‌ யாத்திரிகனென அவனையும்‌ விழிங்கி
விட்டேன்‌, அவனையும்‌ என்னால்‌ கொல்லப்பட்ட ௮னைவரையும்‌ என்னையும்‌ காக்க கீதையின்‌ ஏகாதச அத்யாயத்தைப்‌ பாராயணம்‌ செய்யும்‌ ஒருவரால் தான்‌ முடியும்‌ என்றார்‌,அதற்கென்ன அவ்வளவு சக்தி என்று யான்‌ கேட்க ராக்ஷஸன் ஓர் கழுகு தனது மூக்கினால்‌. எலும்புகளைக்‌ கவ்வி ஆகாய மார்க்கமாகச்‌ சென்றது, அதிலிருந்து ஒரு துண்டு தற் செயலாக ஓர்‌ குளத்தில்‌ விழ அங்கு ஓர்‌ யோகி இது மிக உத்தம புண்ய தீர்த்தமென அதில்‌ மூழ்கி தர்ப்பணம்‌ செய்தார்‌,-அருகிலுள்ளோர்‌ நேற்று வரை இது ஸாதாரண தீர்த்தமல்லவா? இன்று எப்படி இதற்கு இவ்வளவு பெருமை என, ௮வரைக் கேட்டனர்‌. அதற்கு யோகி கீதையின்‌ ஏகாதச அத்யாயத்தைப்‌ பாராயணம் செய்யும்‌ வித்வான்‌ என்ற வேதியன்‌, திருடர்களால்‌ கொல்லப்பட்டார்‌, அவரது எலும்பு துண்டு இங்கே கழுகால்‌ போடப்பட்டது. அதனால் இதற்கு மஹிமை என்றார்‌, ஆதலால்‌ பதினோறாம்‌ அத்தியாயத்தை ஏழு முறை ஜபித்து ஜலத்தை என் மீது ப்‌ரோக்ஷித்ததால்‌ எனது சாபமகலும்‌, நேற்றிரவு மடத்தில்‌ படுத்‌தவரில்‌ ஒருவர்‌ அத் தகையவர்‌ ஆதலின்‌ அவரைச்‌ சாப்பிட முடிய வில்லை. அவரை வெளியில்‌ போட்டு விட்டேன்‌, அவரைக்‌ கொண்டு எனது சாபத்தை அகற்றி உனது புத்ரன்‌ அவனது நண்பன்‌ முதலியவர்களைப்‌ பிழைப்பிப்பாய்‌ என்றான்‌,

இதைக்‌ கேட்ட ஸநந்தர் அவருக்கு யார்‌ என்‌ சாபங்கொடுத்தது ? என்று கேட்டார்‌, நகரபாலன்‌–இவ்‌வூரில்‌ ௮வன்‌ ஓர்‌ ௮ந்தணனாகப்‌ பிறந்து உழுதுண்டு ஜீவித்‌தான்‌, அவன்‌ நிலத்தை உழுது கொண்டிருக்கும் போது அவ்‌வழியே செல்லும்‌ ஒருவனை ஓர்‌ கழுகு குத்திக் கொன்றது -அவனை ரக்ஷிக்கத் தக்க சக்தி இருந்தும்‌, இறந்தவன்‌ ஐயோ என்னை ரக்ஷி! என்று கத்தி அழைத்தும்‌ ௮வ்‌ வேதியனைக்‌ கவனிக்காமல்‌ உழுது வந்தான்‌, வெகு தூரத்திலிருந்து இதைக்‌ கவனித்து வந்த தவசி ஒருவர்‌, அவனைப் பார்த்‌து சரணாகதி என்பவனைக் காக்காமல்‌ சுயநலம்‌ பாராட்டியதால்‌ நீ ராக்ஷசனாவாய் என்று சபித்தார்‌. அவ்‌ வேதியன்‌, அவர்‌ காலில்‌ விழுக்து சாப விமஸனத்திற்கு வழி கேட்டான்‌.தபஸி கீதையின்‌ ஏகாதசாத்யாயத்தைத்‌ தினம் தோறும்‌ பாராயணம்‌ செய்பவர்‌ உன்னை ஜலத்தினால்‌ ப்ரோக்ஷித்தால்‌ உனக்கு நற்கதி உண்டாகும்‌ என்று கூறிச் சென்றார்‌, என்று சொன்னான்‌,
அதைக் கேட்ட ஸுநந்தர்‌ அங்கனமே எழு முறை ஜபித்து தீர்த்தத் தை அவ் வராக்கன் மீது தெளித்தார்‌,உடனே அவனும்‌ அவனால்‌ பக்ஷிக்கப்பட்ட அனைவரும்‌ சங்கு சக்‌ர கதா பாணிகளாகவும்‌ பீதாம்பர தாரிகளாகவும்‌ விஷ்ணுவின்‌ ஸாருப்ய முக்தி யடைந்து விமானத்‌திலமர்ந்து
வைகுண்டம்‌ கிளம்பினர்‌. இதைக்‌ கண்ட. நகரபாலன்‌ தான்‌ செய்த உதவிக்கு நன்றி கூறி விடைகேட்க தன்னிடம்‌ வந்த அரக்கனை நோக்கி , ஐயா இவர்களில்‌ எனது புத்ரன்‌ யார்‌ ?என்று கேட்டார்‌. ௮வர் காண்பிக்க, புத்ரனை நோக்கி அப்பா நம் விட்டிற்குச்‌ செல்வோம் வா என்று அழைத்தார் -புத்ரன் ஸ்ரீ நகரபாலனைப் பார்த்து தந்தையே! ஸம்ஸாரத்தில்‌ யான்‌ எத்தனையோ தந்தையை மைந்தனைப்‌ பார்த்தாய் விட்டது முன்னர்‌ செய்த புண்ணியத்தால்‌ தற் செயலாக ஸம்‌ஸாரம்‌ அகன்று நற்கதி கிடைத்தது ., நீரும்‌ இவ்வுத்தம பிராமணனிடம்‌ உபதேசம் பெற்று நற்கதி அடை என்று கூறி அனைவருடனும்‌ வைகுண்டம் சென்ரார்‌. அங்கனமே,நகர பாலகனும்‌ ஏகாதசாத்யாயத்கால்‌ நற்கதி அடைந்தார்‌.

11-விச்வருப தரிசனம்‌ 55 சுலோகங்கள்‌,[அர்ஜுநன்‌ 37, பகவான்‌ 10, ஸஞ்ஜயன்‌ 8.)

எல்லாந் தனக்‌ குருவாயிலங்கும்‌ வகை தானுரைத்துச்‌
சொல்லாலறிந்தது சோராமற்‌ கண்டிட வேண்டுமென்ற
வில்லாளனுக்கன்று மெய்க் கண்கொடுத் திது வேறுமுண்டோ
நல்லார்கள்‌ காண்பரென்றும்‌ நவின்றான் நங்கள் நாயகனே
–11-

உலகிலுள்ள எல்லா வஸ்‌துக்களும்‌ தனக்கு உரு என்று பகவான்‌ உபதேஸித்ததை, ஒன்றும்‌ விடாமல்‌ தர்‌ஸிக்க வேண்டுமென்று வேண்டிய காண்டீபனுக்கு திவ்ய சஷுஸ்ஸைத் தந்து வேறெவரும்‌ இதைக் காணார்‌, பக்தனே காண்பான்‌ என நமது பகவான்‌ கூறினார்‌-

12-வது அத்யாயம்‌–பாத்ம கதை,
தஷிணா பதமெனும்‌ பிரதேசத்தில்‌ கோல்ஹாபுரம்‌ என்றோர்‌ நகரமிருக்கிறது, ௮து ஸாதுக்களுக்கு விரைவில்‌ ஸகல ஸித்திகளையும்‌ அளிக்க வல்லது, பராசக்திக்கு உயர்ந்த பீடஸ்‌தாநம்‌, அங்கு கோடிக் கணக்கான தீர்த்தங்களும்‌ லிங்கங்களு மிருக்கின்றன-ருத்ர கயா எனும்‌ பிரஸித்தமான இடமும்‌ அங்குதானிருக்கின்றது -ஒரு ராஜ புத்ரன்‌ அந் நகரை அடைந்து மணி குண்டமெனும்‌ தீர்த்‌தத்தில்‌ மூழ்கி மஹா லஷ்மியின்‌ ஸன்னதிக்கு வந்து தர்சநம்‌ செய்து அம்பாளைத்‌ துதித்தான்‌, அன்னையே ! உமக்கு பிராணிகளிடம்‌ அவ்யாஜமான கருணை, உமது அருளைக்‌ கொண்டே பிரும்மா படைக்கிறார்‌, விஷ்ணு காக்கிறார்‌-ருத்ரன்‌ உப ஸம்ஹாரம்‌ செய்கிறார்‌, உமது பெருமையைக்‌ கூற எவரே வவ்லவர்‌? ஸ குணமாகவும்‌ நிர் குணமாகவும் இருக்கிறாய்‌, பக்தர்களுக்குக்‌ கல்ப விருஷமான நீ எனக்கு அருள்‌ செய்வாய்‌ -இதைக்‌ கேட்டு ஸந்தோஷமடைந்து அவன் எதிரில் தோன்றி மகாலஷ்மி, ராஜகுமாரா ! உனக்கு வேண்டிய வராத்தைக்‌ கேள்‌ என்றாள்‌. ராஜ புத்ரன்‌, அன்னையே-எனது தந்தை அச்வமேத மெனும்‌ மஹா யாகத்தைச்‌ செய்தார்‌, அது முடிவதற்குள் நோயால்‌ அவர்‌ இறந்தார் -அவர்‌ உடலைத்‌ தீயிலிடாமல்‌ காய்ந்த எண்ணைக்‌ கொப்பரையிலிட்டு ஜாக்ரதையாக வைத்தேன்‌, ஓராண்டு திக்‌ விஜயம்‌ செய்து வந்த குதிரையையும்‌ யூப மரத்தில்‌ கட்டினேன்‌–இரவில்‌ அக் குதிரையை யாரோ கொண்டு போய்‌ விட்டார்‌.தேடித்‌ தேடி அதைக்‌ காணாமல்‌ ரித்விக்குகளிடம்‌ விடை பெற்று தங்களிடம்‌ வந்தேன்‌, தாங்கள்‌ ௮க்‌ குதிரையைத்‌ தேடித்‌ தந்து வேள்வியையும்‌ நிர் விக்நமாக பூர்த்தி செய்‌விக்க வேண்டும்‌, அப்படி செய்தால்‌ தான்‌ யான்‌ தந்தைக்குஎன்‌ கடமையைச்‌ செய்தவனாவேன்‌ என்றான்‌, லஷ்மி:பிராட்டி எனது வாயிற்‌ படியில்‌ ஸித்த ஸமாதி என்றோர்‌ பிராமணனிருக்கிறான்‌, அவனை அழைத்துப்‌ போய்‌ உனது கார்யத்தை ஸாதித்துக் கொள்‌ என்றாள்‌-

உடனே ராஜபுத்ரன்‌ அவரைத் தேடி வணங்‌கி தாயின்‌ கட்டளையைக்‌ கூறினான்‌. அந்தணர்‌ அவ்வாணையைச்‌ சிரஸா வஹித்து, ஓரிடத்தே அமர்ந்து ஏதோ ஒரு மந்திரத்தை ஜபித்தார்‌. ஸமஸ்த தேவர்களும்‌ பத்தாஞ்ஜலி செய்து கொண்டு அவரருகே வந்து நின்றனர்‌, அவர்களைப்‌ பார்த்து ஸித்த ஸமாதி இவ்வரசனது தந்தையின்‌ அச்வமேதக்‌ குதிரை இந்திரனால்‌ அபஹரிக்கப்‌ பட்டது. விரைவில்‌ ௮தை இங்கு கொண்டு சேருங்கள்‌ என்றார்‌. உடனே தேவர்கள்‌ அக் குதிரையை அவரிடம்‌ ஸமர்ப்பித்‌து வணக்‌கத்துடன்‌ விடை பெறறுச்‌ சென்றனர்‌, இதைக்‌ கண்டு ஆச்சர்ய மடைந்த ராஜ குமாரன்‌ அவரை வணங்கி, முனி : ஸ்ரேஷ்டரே .! உமது தவமே தவம்‌! ஆஹா? என்ன ஸாமார்‌த்யம்‌ ? தேவர்களைப்‌ பலாக்காரமாக இங்கு இழுத்து வந்து எனக்கு ௮ச்வத்தை அளித்தீர்‌, உம்மால்‌ ஆகாத கார்யம்‌ உலகில்‌ ஒன்றுமில்லை, என்‌ தந்‌தை பிருஹத்ரதன்‌ எனும்‌ அரசன்‌, இந்த ௮ச்வமேதக்‌ குதிரை உலகைச்சுற்றி வருவதற்குள்‌ நோய் வாய்‌ பட்டிறந்தான்‌, தயை கூர்ந்து ௮வரையும்‌ எழுப்பி விடும்‌. ௮வர்‌ உடலைக்‌ காப்பாற்றி வைத்திருக்கிறேன்‌ என்றான்‌, -இதைக்‌ கேட்டு முநிவர்‌ சிரித்துக்‌ கொண்டே ராஜ குமாரா ! ஆனால்‌ ௮ரசனது உடலுள்ள விடத்திற்குப்‌ போவோம்‌ வா என்றார்‌, இருவரும்‌ யாக சாலைக்குச் சென்றனர்‌, முநிவர்‌ கையில்‌ சிறிது ஜலத்தை எடுத்து ஜபித்து அவ் வுடல்‌ மீது தெளித்தார்‌, வேந்தன் தூங்கி எழுந்தவனைப் போல்‌ கண்களைக்‌ கசக்கிக் கொண்டே -புத்ர உனது ௮ருகில்‌ மஹா தேஜஸ்வியாய்‌ விளங்கும்‌ இவர்‌. யார்‌? என்று கேட்டான்‌, ராஜகுமாரர்‌ மஹா லஷ்மியினால்‌ அனுப்பப்பட்ட இவ் வுத்தம யோகி தேவர்களை அழைத்துக்‌ குதிரையைக்‌ கொண்டு வந்ததையும்‌ இறந்த அவரை எழுப்பியதையும்‌ கூறினான்-ஆச்சர்யமடைந்த அரசன்‌ அவர்‌ திருவடியை வணங்கி , ஸாதோ உமது சக்தி அபாரமானது .-எதணால்‌ இத்தகைய சக்தி உமக்கு உண்டாயிற்று? என்று கேட்டான்‌.மஹாராஜ! பகவத்‌ கீதையின்‌ பனிரண்டாமத்யாயத்தைச்‌ சோம்பலின்‌றி இடை விடாது யான்‌ ஜபித்து வருகிறேன்‌,௮ந்த புண்யத்தால்‌ இவை மாத்ரமல்ல இன்னும்‌ அதி விசித்தரமான கார்யங்களையும்‌ செய்யக்‌ கூடும்‌ என்றார்‌,பூ பாலன்‌ ௮வரடி பணிந்து தனக்கு அதை உபதேசம்‌ செய்யும்படி வேண்ட அவர்‌ அருள்‌ புரிந்தார்‌. அரசன்‌அதனால்‌ வேள்வியையும்‌ விக்னமின்றி முடித்து ஸத் கதி பெற்றான்‌-

12-பக்தி யோகம்‌. 20 ஸ்லோகங்கள்‌. .[அர்ஜுனன்‌ 1–பகவான்‌ 19 )

தன்‌ கழலிழ்‌ பக்தி தாழாதது மதின்‌ காரண
இன்‌ குணர்‌ சிந்தையு மீதறி யார்க் கவ்‌ வடிமை
தன்‌ கருமங்க ளறியா தவர்க் கிலகு நிலையும்‌
தன்‌ கழலன்பர்க்கு நல்லவன்‌ சாற்றினன்‌ பார்த்தனுக்கு–12-

பகவகத் பக்தி சீக்ரம்‌ பலன்‌ கொடுக்கும்‌,அதைச்‌ செய்ய முடியாதவர்‌ பகவத்‌ விக்ரஹத்தை தியாநம்‌செய்ய வேண்டும்‌. அதுவும்‌ முடியாதவர்‌ பகவத்‌ கைக்கரியம்‌ செய்ய வேண்டும்‌. ௮துவும்‌ முடியாதவர்‌ கர்மாவைச்‌ செய்ய வேண்டும்‌ என பகவான்‌ பார்த்தனுக்கு உரைத்தார் –

இரண்டாம்‌ ஷட்கம்‌ முற்றிற்று,

13-வது அத்யாயம்‌–பாத்ம கதை,
தென்னாட்டிலே துங்கபத்ரா நதீ தீரத்தில்‌ ஹரிஹர புரம்‌ என்றோர்‌ நகரமிருக்கிறது–தர்சந மாத்திரத்தினாலே ஸகல பாபங்களையு மகற்றக்‌ கூடிய ஹரிஹரன்‌ ஆங்கு ஆலயம் கொண்டிருக்கிறார்‌, அங்கே ஹரி தீக்ஷிதர்‌ என்றோர்‌ உத்தம வேதயரிருந்தார்‌-அவர் மிக்க உயர்‌ குணம்‌ வாய்ந்தவர்‌-அவர்‌ மனைவி பெயர்‌ துராசாரா – பெயருக்‌ கேற்றபடி மிகவும்‌ துராசாரம்‌ உள்ளவள்‌. ஒரு நிமிஷங் கூட வீட்டில்‌ தங்க மாட்டாள்‌.-வியபிசாரிணிகளுடன்‌ தான் அவளுக்கு நட்பு,புருஷனும்‌ அவனது பர்துக்களும்‌ பரம சத்ருக்கள்‌,ஒயாமல்‌ மது பாநம்‌ செய்வாள்‌, பல விட புருஷர்களைக்‌ கொண்டு தன்‌ காம வெறியைப்‌ பூர்‌த்தி செய்வாள்‌. கணவனே பந்துக்களோ வாயைத்‌ திறந்தால்‌ போதும்‌ மல்லுக்கு ஆரம்‌பித்து விடுவாள்‌. மாநத்திற்கும்‌ தர்மத்திற்கும்‌ ௮ஞ்சிய தீக்ஷிதர்‌ அதைக்‌ கவனியாமல்‌ அவளில்லாமலே தனது நித்ய நைமித்‌திக கர்மங்களைச்‌ செய்து வந்தார்‌,

வஸந்த ஸமயம்‌ வந்தது , புஷ்பங்கள்‌ மலர்ந்து மாலை யில்‌ எங்கும்‌ மணம்‌ வீசியது -பூர்ண சந்திரன்‌ தனது பூர்ண கலைகளுடன்‌ காமிகளின்‌ உள்ளத்தை மகிழ்வித்தான்‌–துராசாரையின்‌ மநம்‌ விடர்களின்‌ வீட்டை நாடிச்‌ சென்‌றது -கணவன்‌ தூங்கும்‌ வரை அவளால்‌ பொறுக்க முடிய வில்லை. நள்ளிரவில்‌ உத்யாநத்தில்‌ வந்திருக்கும்படி. ஆசை நாயகனுக்கு தூது அனுப்பினாள்‌. தீக்ஷிதரும்‌ கண்ணயர்ந்தார்‌. கதவைச்‌ தாளிட்டுக் கொண்டு துராசாரை உத்யாநம்‌ சென்றாள்‌. அளவு கடந்த மது பாநமும்‌ காம வெறியும்‌ அவளைப்‌ பயித்தியக்காரி, யாக்‌கிற்று. ஆசை நாயகனங்கு வர வில்லை, மரங்களை யெல்லாம்‌ கணவனோ எனக்‌ கட்டித்‌ தழுவினாள்‌. என் மீது கோபமா ? ஏன்‌ மறைந்திருக்கிறீர்‌ ? என வாய் விட்டுக்‌ கதறினாள்‌. இதைக் கேட்டு அங்கு தூங்கிக் கொண்டிருந்த ஓர்‌ புலி விழித்தெழுந்து , அது அவளை அறைந்து நகத்தால்‌ கீறிய போது தான்‌ அவள்‌ நாயகனல்ல புலி ! தன்னை ஆலிங்கனம்‌ செய்ய வில்லை, அறைந்து கொல்கிறது என்று உணர்ந்தாள்‌, ஐயோ. என்னை ஏன்‌ கொல்கிறாய்‌ என்று அலறினாள்‌. புலி அவளைச்‌ சிறிது நேரம்‌ விட்டுத்‌ தனது விருத்தாந்தத்தைக்‌ கூறியது.-மலாபஹா எனும்‌ நதி தீரத்தில்‌ முநி பூர்ணா என்றோர்‌ நகரமிருக்கிறது , அங்கு யான்‌ ஓர்‌ பிராமணனாகப்‌ பிறந்து தகாக பல பாபங்களைச்‌ செய்தேன்‌, பலரை ஏமாற்றி பொருள்‌ தேடினேன்‌. பல பாப தாநங்களை வாங்கினேன் -கிழத்தன்மை வந்து பல்கள்‌ உதிர்ந்தும்‌ பார்வை குறைந்தும்‌ தன் ஆசை மாத்ரம்‌ குறைய வில்லை. கையில்‌ தர்ப்பையை எடுத்‌துக் கொண்டு யாசகம் செய்ய நதீ தீரஞ் சென்றேன்‌-அங்கு என்னை நாய்‌ கடித்தது – இறந்தேன்‌-பாபத்திற்கு ஏற்ப புலியாக பிறந்தேன்‌, இங்குள்ள பஞ்ச லிங்கத்தின்‌ மஹிமையால்‌ எனக்கு முற் பிறவியின்‌ நினைவு வந்தது-ஆதலின்‌ என்‌ வயிறு வளர்க்க ஸாதுக்களை விட்டு பாபிகளையே கொல்கிறேன்‌ என்று கூறி அவளைக்‌ கொன்று தின்றது -அவளை யம கிங்கரார்கள்‌ அழைத்துச் சென்று ரவ்ரவம்‌.முதலிய பற்பல நரகங்களிலே தள்ளினார்கள்‌, பின்னர்‌ அவள்‌ சண்டாளனது வீட்டிலே பிறந்தாள்‌, அங்கும்‌ பூர்வ பாபத்தினால்‌ குஷ்ட ரோகியாகவும்‌ கண்ணோய்‌ உள்ளவளாகவும்‌ பிறந்தாள்‌. அவள்‌ ஊர்‌ ஊராகச் சென்று பிச்சை எடுத்து ஹரிஹர ஷேத்‌ரத்திற்கே வந்தாள்‌, உடல்‌ மெலிந்து உணவின்றி ஓர்‌ மரத்தடியில்‌ விழ்ந்தாள்‌. தற் செயலாக கீதையின்‌ பதிமூன்றாமத்யாயத்தை ஓயாமல்‌ பாராயணம்‌ செய்யும்‌ வாசுதேவன் எனும்‌ ஸாது அதனருகே அமர்ந்து வழக்கப்படி பாராணயஞ் செய்தார்‌. ௮து அவள்‌ காதில்‌ வீழ்ந்து கொண்டிருக்கும் போதே ஆவியைத்‌ துறந்தாள்‌.யம கிங்கரர்‌ ௮ணுகுவதற்குள்‌ விஷ்ணு கிங்கரர்‌, அவளுக்குத் திவ்ய தேஹத்தைக்‌ தந்து விமாநத்தில்‌ ஏற்றி வைகுண்டத்‌திற்கு அழைத்துச்‌ சென்றார்கள்‌,

16-க்ஷேத்ர ஷேத்ரஞ்ஞ விபாக யோகம்‌-34 ஸ்லோகங்கள்‌.

ஊனின் படியும்‌ உயிரின்‌ பிரிவும்‌ உயிர் பெறுவார்‌
ஞாகம்‌ பெறு வகையும்‌ ஞாநமீன்ற உயிர்ப் பயனும்‌,
ஊனினின்‌ றதற்கடியும்‌ உயிர் வேறிடுமுள் விரகும்
தேனின்ற பரதன்‌ தெறிவித்தனன்‌ சிலைப்‌ பார்த்தனுக்கே –14-

உடலின்‌ இயற்கை, அதை விட உயிர்‌ வேறானது ஞானத்தை அடைய விரும்புபவர்‌ கைக் கொள்ள வேண்டிய குணங்கள்‌, அதனாலுண்டாகும்‌ பயன்‌, ஆத்மா தேஹத்துடனிருப்பதற்குக்‌ காரணம்‌ பிறித்தறியும்‌ உபாயம்‌ ஆகியவைகளைப்‌ பத்ம பாதன்‌ காண்டீவனுக்குச்‌ சொன்னான்‌.

14-வது அத்யாயம்‌–பாத்ம கதை,
காச்மீரம் எனும் தேசம்‌ ஸரஸ்வதீ தேவிக்குப்‌ பிறந்த விடு போன்றது , ஆங்குள்ள ஸரஸ்வதி தேவியைப்‌ பூஜித்‌துப்‌ பலர்‌ பிரும்ம லோகஞ் சென்றனர்‌. செளர்ய வர்மா எனும்‌ ௮ரசன்‌ அதை ஆண்டு வந்தான்‌. அவனுக்கு விக்ரம வேதாளன்‌ என்றோர்‌ நண்பனுண்டு. அவன்‌ கலைகளை நன்‌கறிந்த ஸிம்ஹ தேசத் தரசன்‌-இருவர்களும்‌ அடிக்கடி அபூர்வமான வஸ்‌துக்களை நண்பருக்கு அளித்து நட்பை வளர்த்து வந்தனர்‌, ஒரு நாள்‌ செளர்ய வர்மா மிக அழகானதும்‌ சுறு சுறுப்புள்ளதும்‌ யஜமான விச்வாஸ முள்ளதுமான இரு நாய்களை நண்பனுக்கு அனுப்பினான்‌, அதைப் பெற்று: அதற்கீடாக உத்தம கஜத்தை ஸிம்ஹளத்தரசன்‌ வனுக்‌களித்தான்‌. விக்ரம வேதாளன்‌ இன்னாய்களுடன்‌ காட்‌டிற்கு சென்றான்‌, அவனைத்‌ தொடர்ந்து பல ராஜகுமாரர்‌கள்‌ தன்‌ தன்‌ நாய்களுடன்‌ கிளம்பினர்‌, அங்கு பற் பல விளையாட்டுகளை விளையாடி, முதல்‌ முதல்‌ விரைவாக முயல்‌ மாம்ஸத்தைக் கொண்டு வருபவருக்கு இவ்வளவு வெகுமானம்‌ என ஏராளமான பொருளைப்‌ பந்தயமாக வைத்‌து முயல்‌ வேட்டை யாடினார்கள்‌. வேதாளனது நாய்களில்‌ பெண்‌ நாயை அழைத்து ஓர்‌ புதரின்‌ அருகே சென்று ‘மோப்பத்தால்‌ முயல்‌ இருக்கிறதா என கண்டறியச் சொன்‌னான்‌. அறிவுள்ள ௮து முயலிருப்பதாக ஸம்க்ஞை செய்‌தா து , உடனே வேடர்களை விட்டு புதரைக்‌ கிளப்ப ௮ங்கிருந்து முயல்‌ ஒன்று ஓடிற்று, அதைப்‌ பிடித்து வரும்படி வேந்தன்‌ நாயுக்கு உத்தரவிட்டான்‌, ௮து விரைந்து ஓட
முயல்‌ ஓர்‌ சந்தில்‌ புகுந்தது -நாய்‌ மெதுவாக கால்களால்‌ சந்தைப் பெரிதாக்கி உள்ளே நுழைந்து முயலின்‌ கழுத்தைக்‌ கவ்விக்‌ கொண்டு வந்து , அதன்‌ ஸாமர்த்யத்தைக் கண்டு அனைவரும்‌ ஸந்தோஷ ஆரவாரம்‌ செய்தனர்‌, அரசனுக்கே-வெற்றி? வெற்றி என பலர்‌ புகழ்ந்தனர்‌, இந்த கோலா
ஹலத்தைக் கண்டு நாயும்‌ ஸந்தோஷமடைந்து வாயைத்‌ திறந்தது -அதிலிருந்து விழுந்த முயல்‌ கழுத்தில்‌ ரத்தம்‌ பெருக, மெதுவாக இரண்டு முழ தூரம்‌ ஓடி விழுந்தது –
அத வத்ஸர் எனும்‌ மஹரிஷியினுடைய புண்ய ஆச்ரமம்‌,அங்கு துஷ்ட மிருகங்கள் கூட இயற்கையான துர்க் குணத்‌தை விட்டு பகைவரிடம்‌ நண்பர் போல்‌ பழகுகின்றன. புலியும்‌ பசுவும்‌, ஸிம்ஹமும்‌ யானையும்‌, பாம்பும்‌ கீரியும்‌ ஒன்று மேல்‌ ஒன்று விழந்து விளையாடுகின்றன. அங்கு ஸ்வகந்த்‌ரர்‌ எனும்‌ மாணவர்‌ காலைக்‌ கழுவிக் கொண்டிருந்தார்‌. இம் முயல்‌ அந்த ஜலத்தில்‌ விழ்ந்து பெரு மூச்சு விட்டது .
நாயும்‌ ௮தனருகே ஓடி அந்த நீரில்‌ காலை வைத்தது, இரண்‌டும்‌ உடனே தன்‌ தன்‌ உடல்களை விட்டு திவ்யமான தேஹத்‌துடன்‌ விமானத்தின் மீது காணப்பட்டன. இதைக் கண்டு எல்லோரும்‌ பேராச்சர்ய மடை.ந்தனர்‌.,
வேதாள ராஜன்‌, முநி மாணவனை நோக்கி இது என்ன ஆச்சர்யம்‌ ? இவர்கள்‌ யார்‌ எதனால்‌ இவர்களுக்கு இக்கதி என வினவினார்‌. வேந்தே! மஹா ராஷ்ட்‌ர தேசத்திலே ப்ரத்‌யுககமெனும்‌ நகரத்திலே கேசவன்‌ என்றோர்‌ பிராமணன்‌ இருந்தான்‌. ௮வன்‌ கபடமுள்ளவன்‌, சொல்வதொன்று செய்வதொன்று, விலோபநா என்ற அவன்‌ மனைவி வியபசாரிணீ -இதை ஒரு சமயம்‌ கணவன்‌ கண்ணால்‌ கண்டு விட்‌டான்‌, கோபம்‌ அதிகமாக பெண்‌ வதம்‌ என்று கூட கவனியாமல்‌ அவளைக்‌ கொன்று விட்டான்‌.சில காலஞ்‌ சென்ற. பின்‌ இவனுமிறக்க இருவரும்‌ யம புரியில்‌ சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்தனர்‌. கேசவன்‌ முயலாகவும்‌, விலோபநா நாயாகவும்‌ பிறந்தனர்‌, இப் பிறவியிலும்‌ அவர்‌களை வைரம் விடவில்லை, முற்பிறவியில்‌ மனைவியைக்‌ கொன்ற புருஷன்‌ இப்போது அவளால்‌ கொல்லப்பட்டான்‌-
எனது குரு பகவத் கீதையின்‌ பதினான்‌காமத்யாயத்‌தை ஓயாமல்‌ பாராயணம்‌ செய்பவர்‌, அவர்‌ எனக்கும்‌. அதையே இஹலோக பரலோக ஸாதகமானதென உபதேஸித்தார்‌. நானுமதைப்‌ பாராயணம்‌ செய்‌து வருகிறேன்‌-எனது கால்‌ அலம்பிய ஜலம்‌ பட்டவுடன்‌ இவ் விரண்டும்‌ பாபம்‌ அகன்று உத்தம கதியை அடைந்தன-என்று சிடன்‌ கூறினான்‌. அதைக்கேட்டு ௮ரசன்‌ கீதா ப்ரபாவத்தை உணர்ந்து மஹரிஷியிடம்‌ சென்று பதினான்காமத்யாயத்தை உபதேசம் பெற்று ஜபித்து நற்கதி அடைந்தான்‌.

14-குண த்ரய விபாக யோகம்‌-20- ஸ்லோகங்கள்‌.[அர்ஜுனன்‌ 1, பகவான்‌ 26].

முக்குணமே உயிர்‌ முற்றவுங் கட்டிட மூண்டமையும்‌
முக்குணமே அனைத்தும்‌ வினைகொள்ள முயன்‌றமையும்‌
முக்குண மாயை கடத்தலும்‌ முக்தி தந்தளிப்பும்‌
முக்குண மற்ற பிரான்‌ மொழிந்தான்‌ முடியோன்‌ றனுக்கே,–15-

முக்குணமே உடலில்‌ ஜீவனைக்‌ கட்டுகிறது முக்குணமே எல்லா வேலைகளையும்‌ செய்விக்கிறது , முக்‌குணமுள்ள மாயையைக்‌ கடக்கும் வழி, மூன்று வகையான கதியை அளிக்கின்றது என முக் குணத்தைக்‌ கடந்தவன்‌ கிரீடிக்கு உபதேசித்தான்‌.

15-வது அத்யாயம்‌–பாத்ம கதை,
கவ்ட தேசத்தில்‌ க்ருபாண நர ஸிம்ஹன்‌ என்றோர்‌ வேந்தன் இருந்தான்‌, அவன்‌ கத்தி ஒன்றையே ஸஹாயமாகக்‌ கொண்டு பகைவர்‌ அனைவரையும்‌ வென்றான்‌. ஆதலின்‌ கிருபாண (கத்தி) நரஸிம்ஹன்‌ என பெயர்‌ வழங்கிற்று.
அவனாக்ஷியில்‌ பதஞ்ஜலியாகக்‌ தோன்றிய ஸர்ப்பராஜன்‌ வியாகாண ஸூத்ரங்களுக்கு மஹாபாஷ்யம்‌ இயற்றினார்‌.அவ்வரசனுக்கேற்ற ஸேபாதிபதி ஸரப பேருண்டன்‌ என்பவன்‌, சஸ்த்திரத்லும்‌ சாஸ்திரத்திலும்‌ கரை கண்டவன்‌,
ஸேநா பதிக்கு ௮ரசனைப்‌ பரிவாரத்துடன் கொன்று தானே தரணியை ஆள வேண்டுமென்ற ஆசை உண்டாயிற்று, அதற்குத்‌ தக்க ஸமயத்தைக்‌ தேடிக் கொண்டிருந்தான்‌.தைவச் செயலாக, விஷுசீ (வாந்திபேதி) எனும்‌ நோய்‌ கண்டு அவன்‌ இறந்தான்‌. அவன்‌ குதிரை ஏற்றத்தில்‌ மிகஆசை கொண்டவன்‌, இறக்கும் போது குதிரையை நினைத்‌தே இறந்தான்‌. ஆதலின்‌ சிந்து தேசத்திலே மிக்க லஷ்ணம்‌ வாய்ந்த உத்தம குதிரையாகப்‌ பிறந்தான்‌. ௮ரசனிடம்‌ அன்புள்ள ஓர்‌ வியாபாரி ௮தை விலைக்கு வாங்கி வந்து சிம்ம ராஜனுக்களித்தான்‌, அரசன்‌ அதன்‌ மதிப்பிற் கேற்ற விலையும் தந்து தனக்கே இதைக்‌ கொடுக்க வேண்டுமென்ற அன்‌பிற் கேற்ற ஸம்மானம் செய்தான்‌. அன்று முதல்‌ வேந்தன்‌ அதைப்‌ பட்டத்துக்‌ குதிரையாகக்‌ கருதி தக்க அலங்காரம்‌ செய்து போஷித்து வந்தான்‌. ஒரு நாள்‌ ௮தன்மீதேறி’ வேட்டை ஆட வநஞ்சென்றான்‌. மான்‌ கூட்டமொன்று வெகுதூரம்‌ வநத்தில்‌ இழுத்துச்சென்றது. பரிவாரங்கள்‌ பின்னே தங்கி விட்டன அரசன்‌ தாகத்தால்‌ வருந்தி ௮ச்வத்தை இர்‌ ஆலமரத்‌திலே கட்டிவிட்டு அருகிலுள்ள ஓர்‌ இலைமீதேறி எங்கேனும்‌ தீர்த்த மிருக்கிறதோ என்ரு பார்த்தான்‌,
அதற்குள்‌ அவன்மீது விசாலமான ஓர்‌ இலை வீழ்ந்தது -அதைக்‌ கையில்‌ எடுத்தான்‌, அதில்‌ ஓர்‌ பாதி சுலோகம்‌. எழுதப் பட்டிருக்க, அதைப்‌ படித்தான்‌. அருகிலுள்ள அச்வம்‌ உடனே அவனியில்‌ விழ்ந்தது, ஓர்‌ திவ்ய புருஷன்‌ விமாநத்திலேறி வானுலகஞ்‌ செல்லக் கண்டான்‌. அந்த இலையுடன்‌ கீழ இறங்கி குதிரையை எழுப்பிப்‌ பார்த்தான்‌… என்ன பாடுபட்டும்‌ ௮து எழுந்திருக்க வில்லை, பாதசாரியாக அவ் வநத்தினுள்ளே சிறிது தூரஞ்சென்றான்‌. அங்கு ,மஹர்ஷி ஆச்ரமம்‌ காணப்பட்டது. அங்குள்ள மாமூநிவரைப்‌ பணிந்து நடந்த ஆச்சர்யத்தைக் கூறி இதற்கென்ன காரணமென்று கேட்டான்‌. முநிவர்‌ அரசனுக்கு ௮திதி பூஜை செய்து ஆஸநக்திலமர்த்தி ஞாநக் கண்ணால்‌ அதை நன்றாக அறிந்து கூறினார்‌. வேந்தே உம்மைக்‌ கொன்று உமது ராஜ்யத்தை ஆளக்கருதிய உமது சேனாதிபதி விஷுதியால்‌ இறந்து இவ் வச்வமாகப்‌ பிறந்தான்‌. கர்ம வசத்தால்‌ உம்மையே சுமந்தான்‌, உம் மீது விழுந்த இலையின் மீது எனது சிஷ்யன்‌ விளையாட்டாக கீதையின்‌ பதினைந்தாமத்யாயத்தின்‌ ஒர்‌ பகுதியை எழுதினான்‌. அதை நீர்‌ படிக்க. அது அச்வத்தின்‌ காதல்‌ வீழ்ந்தது, உடனே அதன்‌ பாபமனைல்தும்‌ அகன்று வைகுண்டஞ் சென்‌றது . ஓர்‌ பகுதியின்‌ ஸ்ரவணத்தால்‌ குதிரைக்கே உத்தம ௧தி எனில்‌ இவ்‌வத்யாயத்தின்‌ பெருமையை யார்‌ கூற முடியும்‌ ? என்று முனிவர்‌ கூறினார்‌. ௮ரசன்‌ தன்‌ நாட்டிற்கு இம் முநிவரை அழைத்துச் சென்று தன்‌ புதல்வனுக்குப்‌ பட்டஞ்‌ சூட்டி பதனைந்தாமத்யாயத்தை அவரிடம்‌ உபதேசமாகப்‌ பெற்று, நற்கதி ௮டைந்தான்‌.

புருஷோத்தம யோகம்‌ 20 ஸ்லோகங்கள்‌.

மூவெட்டிலும்‌ ௮தான்‌ மோஹமடைந்த உயிர்களிலும்‌
நா வெட்டெழுத்தோடு நல்விடு நண்ணின்‌ நம்பரிலும்‌
மேவெட்டு வன்குண விண்ணோர்களிலும்‌ விஜயனுக்குத்‌
தாவிட்டு உலகளந்தான்‌ தன்னை வேறென்று சாற்றினனே..
–18-
இருபத்து நான்கு வகையான ஷரத்தைக்‌ காட்டிலும்‌ ௮தில்‌ மோஹமடைந்தவரைக்‌ காட்டிலும அஷ்‌டாஷரத்தால்‌ முக்தி பெற்றவரைக்‌ காட்டிலும்‌ எட்டு நற்குண முள்ள நித்ய ஸுரிகளைக் காட்டிலும்‌ புருஷோத்தமன்‌ வேறு என உலகளந்தான்‌ விஜயனுக்கு உபதேசித்தான்‌.

    16-வது அத்யாயம்‌–பாத்ம கதை,
    கூர்ஜரநாட்டிலே சவ்ராஷ்ட்ரம்‌ என்னும் நகரத்தை கட்கபாஹு எனும்‌ அரசன்‌ ஆண்டுவந்தான்‌, அவனுக்கு . அரிமர்த்தனன்‌ என்றோர்‌ பட்டத்து யானை இருந்தது, ௮து ஓரு சமயம்‌ மதங் கொண்டு கட்டுத் தரியிலிருந்து சங்கிலியை அறுத்துக் கொண்டு கட்டுடக் கடங்காமல்‌ கிளம்பிற்று, பல மா வத்தர்கள்‌ அதைப் பிடிக்க முயற்சித்தும்‌ அவர்களைத்‌ துதிக்கையால்‌ வாரி தூர எரிந்து விட்டுக்‌ கிளம்பிற்று, வீதியில்‌ நடமாடுபவர்‌ அனைவரும்‌ பயந்து உள்ளே புகுந்து கதவைத் தாளிட்டுக்‌ கொண்டனர்‌. சிலர்‌ ஜன்னலில்‌ ஒளிந்து வேடிக்‌கை பார்த்துக்‌ கொண்டிருந்தனர்‌. அரசன்‌ இதைக் கேட்டு ஆச்சர்யமடைந்து ராஜ புத்ரர்களுடன்‌ அரண்மனை மாடி மீதிருந்து வீதியில்‌ அந்த யானை செய்யும்‌ அட்டஹாஸத்தைப்‌ பார்த்துக்‌ கொண்டிருந்தான்‌, அது வீலிட்டுக்‌ கத்திக்‌ கொண்டும்‌ அருகிலுள்ள மரங்களையும்‌ தூண்களையும்‌ பிடுங்கி எறிந்து கொண்டும்‌ சென்றது, ௮து இன்னும்‌ என்ன செய்யுமோ என்று ஜனங்கள்‌ நடுங்கினர்‌, அதற்கு எதிராக ஓர்‌ பிராமணன்‌, ஸ்நானம் செய்து சுத்தனாக கீதையின்‌ பதினாறா மத்யாயக்தைப்‌ பாராயணம்‌ செய்து கொண்டு வந்தார் -ஜனங்கள் மேலிருந்தபடியே யோ! உள்ளே வாரும்‌, பதுங்கிக் கொள்ளும்‌, கட்டுக் கடங்காமல்‌ யானை மதம்‌ பிடித்து வருவது உமக்குத் தெரிய வில்லையா ? என்று கூக்‌குறலிட்டனர்‌, பிராமணன்‌ அவர்களைப் பார்தது அவர்கள்‌ செய்த உதவிக்கு ஜாடையாக நன்றி செலுத்தி விட்டு ௮தே வழியாய்‌ தைரியமாகச்‌ சென்றார்‌, இவ்வளவு ௮ட்டஹாஸஞ்‌ செய்த ௮ந்த யானை இவரைக் கண்டவுடன்‌ மிக சாந்தமாக அவரை முட்டி யிட்டுப்‌ பணிந்து எழுந்திருப்பதற்குக்‌ கூட அவராணையை எதிர் பார்த்து நின்றன, அவர்‌ ஸம்க்ஞை
    செய்தவுடன்‌ மாவுத்தர்கள்‌ வழக்கப்படி சங்கிலியால்‌ அதைக்‌ கட்டி கஜ சாலைக்கு அழைத்துச்‌ சென்றனர்‌-அரசனும்‌ மற்றவர்களும்‌ பரம ஆச்சர்ய பரிதர்களாகி அந்த பிராமணனிடம்‌ வந்து வணங்கி ஸாதோ? உம்மிடத்‌தில்‌ என்ன வச்ய மந்த்ரமிருக்கிறது ? என்று கேட்டனர்‌.
    ௮வர்‌ கீதையின்‌ பதினாராமத்யாயத்தில்‌ சில ஸ்லோகங்களை ஸதா பாராயணம்‌ செய்வேன்‌. அந்த பெருமையால்‌ இன்னும்‌ இதை விட உயர்ந்த எத்தனையோ ஸித்திகளைக்‌ கண்டேன்‌ என்றார்‌, இதைக் கேட்ட அரசன்‌ அவரை அரண்மனைக்கு அழைத்து வந்து லஷக் கணக்கான திரவ்யத்‌தைக்‌ கொடுத்து உபசரித்து பதினாராமத்யாயத்தை உபதேசிக்கும் படி செய்தான்‌. பின்னர்‌ பல ஆண்டுகள்‌ சென்ற
    பின் அதே யானைக்கு முன் போல்‌ மதமுண்டாயிற்று. -மாவுத்தன்‌ தன்னால்‌ ஆனவரை அடக்க முயன்றும் பயனில்லாது பயந்து ஓடினான்‌, வேந்தன் தைர்யமாக கீதா பலத்தைக் கொண்டு அஞ்சாமல்‌ அதனருகே சென்றான்‌.உடனே ௮து அடங்கி வணங்கிற்று, ௮ரசன்‌ மதம்பிடிக்த
    யானையையே அடக்கிய கீதை மனதை அடக்காதோ என்று புத்ரனிடம்‌ ராஜ்யத்தைக்‌ கொடுத்து விட்டு ஸதா கீதை பதினாறாமத்யாய பாராயணம் செய்து மோக்ஷ மடைந்தான்‌.

    16-தேவாஸாுர ஸம்பத்‌ விபாக யோகம்‌–24 ஸ்லோகங்கள்‌.
    ஆணை மாறாதவர்‌ தேவர்‌ ௮ல்லா வழக்கோர்‌ ௮சுரர்‌
    கோணை மறாத குணச் செல்வ நீ குறிக்கொள்‌ மறையைப்‌
    பேணிய தத்துவமும்‌ பிணி யற்ற கிரிகைகளும்‌
    காணிதனால்‌ விஜயா வென்று கண்ணனியம்‌பினனே,-
    -17-
    பகவதாக்ஞையை மீறாதவர்‌ தேவர்‌,அதைச் செய்யாமல்‌ விரோதமாகப்‌ பேசுகிறவர்‌ அசுரர்‌-கோணலை விட்டு பகவதாக்ஞையை விடாத குண சம்பத்‌துள்ள விஜயா? இதைச்‌ செய்யலாம்‌, இதைச்‌ செய்யக்‌கூடாது என்பதற்கு வேதமே ப்ரமாணம்‌, அதனால்‌ தத்‌துவமும்‌ நிஷ்காம்ய கர்மாவும்‌ ௮றியத் தக்கதென கண்ணன்‌ உபதேசித்தார்‌.

    17-வது அத்யாயம்‌–பாத்மி கதை,
    முன் கதையில்‌ ஸெளராஷ்ட்‌ர பதியான கட்க பாஹுவின்‌ யானைக்கு மதம் பிடித்தது என்று கூறினோமல்லவா ?-அச் சமயம்‌ ராஜ குமாரனுக்குப்‌ பணிவிடை செய்யும்‌ துச்சாஸனன்‌ என்ற இங்கரன்‌, தன்னுடன்‌ உள்ள பாலர்களிடம்‌ இந்த யானை மீது நான்‌ ஏறி அதை அடக்கி விடுகிறேன் -என்ன பந்தயம்‌ கொடுக்கிறீர்கள்‌ என்று வீரம் பேசி அதனிடம்‌ சென்றான்‌, மற்றவர்‌ வேண்டாம்‌! ?வேண்டாம்‌ கொன்று விடும்‌ என்று கூறிக் கொண்டே இருக்கும்‌போது அதன் பின்‌ ஓடினான்‌. அருலுள்ளோர்‌ அவனை
    பலாத்காரமாக தடுக்கும் போது ஓ கஜமே எனக்கு நீ பணியத் தான்‌ வேண்டும்‌. இல்லையேல்‌ உன்னை அங்குசத்தால்‌ குத்துவேன்‌ என்று கூறிக் கொண்டே ஒடினான்‌. இதைக்‌கேட்டு யானை பின்னால்‌ திரும்பிற்று. எல்லோரும்‌ பயந்து ஓடினார்கள்‌, துச்சாஸனன்‌ இடரி விழுந்தான்‌, யானை அவனைத்‌
    துதிக்கையால்‌ தூக்கிச்‌ தலைகீழாக இறிது நேரம்‌ நிறுத்தி பூமியில்‌ அறைந்தது , அவன்‌ இறந்த பின்பும்‌ கோபத்தால்‌ யானை ௮வன்‌ கை கால்களைத்‌ தனித் தனியாகப்‌ பிய்த்து எறிந்தது . யானையால்‌ இறந்த ௮வன்‌ கர்ம வசத்தால்‌ ஸிம்மலத்வீ பத்தில்‌ ஒர்‌ யானையாகவே பிறந்தான்‌. ஜய தேவன்‌ எனும்‌ அத்தேச அரசன்‌ தன் நண்பனான கட்க பாகுவுக்கு ௮ந்த யானையைப்‌ பரிசாக அளித்தான்‌, அது தனது ஊருக்கே வந்து தமது பந்துக்களைப் பார்த்தவுடன்‌ பூர்வ ஜன்ம நினைவு உண்டாகி தன் செயலை நினைத்து வருந்திக் கொண்டே இருந்ததுஒரு மகா கவி கட்கபாகுவின்‌ ஸபைக்கு வந்து அரசன்‌ சொன்ன ஓர்‌ பகுதியைக் கொண்டு சொல்‌ சுவை நிறைந்தஓர்‌ ஸ்லோகத்தைச்‌ சொன்னார்‌. தன்‌ கருத்துக் கிசைந்த அதைக் கேட்ட அரசன்‌ அளவிலா மகிழ்ச்சி அடைந்து கவிக்கு அந்த யானையையும்‌ நூறு பவுனையும்‌ ஸந்மானம்‌ செய்தான்‌. கவி சிறிது காலம்‌ கெளரவத்திற்காக அதை வீட்டில்‌ வைத்திருந்தார்‌. யானைக்குத்‌ தீனி போட யாரால்‌ முடியும்‌? கவி மாலவதேச மன்னனிடம்‌ ௮தை விற்று விட்‌டார்‌. அங்கு சென்று சில ஆண்டுகள்‌ சென்ற பின்‌ யானைக்கு ஜ்வரம்‌ உண்டாயிற்று, எவ்வளவு சிகித்ஸை செய்தும்‌ நோய்‌ அகல வில்லை, நீரும் அருந்தாமல்‌ உணவும்‌ உட் கொள்ளாமல்‌ ௮து நாளுக்கு நாள்‌ இளைத்து இறக்கும்‌ தருவாயில்‌ இருந்தது -பாகர்கள்‌ ௮ரசனை நேரில்‌ அழைத்து வந்து ௮தைக் காட்டினார்‌கள்‌, ௮ரசன்‌ அதைக்‌ கவலையுடன்‌ பார்‌த்‌துக் கொண்டிருக்‌கும் போது எல்லோரு மாச்சர்யப் படும்படி ௮து மனுஷ்யனைப்‌ போல்‌ பேசிற்று–அரசே எதற்காக கவலைப் படுகிறிர்‌-என்னோய்‌ எந்த சிகித்ஸையாலும்‌ அகலாது, யான்‌ நற் கதி பெற உமக்கு விருப்ப மிருந்கால்‌ கீதை பதினேழாம் அத்யாயம்‌ பாராயணம் செய்யும்‌ ஸாதுவை அழைத்து வாரும்‌ என்றது-௮ரசன்‌ அமைச்யர்களை அனுப்பி நாடு நாடாகத் தேடி அத்‌தகைய பெரியோரை அழைத்து வந்தான்‌. யானையின்‌ சொற்படி அவர்‌ அதைப்‌ பாராயணம்‌ செய்யும் போது, யானை உடலை விட்டு திவ்ய தேஹம் பெற்று விமானத்தின் மீதேறியது . முன்னிலும்‌ பன் மடங்கு ஆச்‌சரியமடைந்த வேந்தன்‌ அவரைப் பார்த்து நீர்‌ யார்‌ ? ஏன்‌ யானை யானீர்‌ ? எப்படி இவ் வுடல்‌ கிடைத்தது என்ற கேட்க, அவர்‌, தான்‌ துச்‌சாஸானனாக இருந்து யானையால்‌ கொல்லப்பட்டு யானையாக பிறந்ததையும்‌, கீதை பதினேழாமத்யாய மஹிமையால்‌ தான்‌ வைகுண்டம்‌ போவதையும்‌ கூறினார்‌. மாலவ தேசாதிபதியும்‌ அன்று முதல்‌ கீதை பதினேழாமத்யாய பாராயணம்‌
    செய்து உத்தமகதி அடைந்தான்‌.

    17-ஸ்ரத்தாத்ரய விபாக யோகம்‌-28 ஸ்லோகங்கள்‌.[அர்ஜுனன்‌ 1, பகவான்‌ -27)

    மறை பொருந்தாதவை வல்லசுரர்க்கு வகுத்‌தமையும்‌
    மறை பொருந்தும் நிலையும்‌. வன் குணப்படி மூவசையும்‌
    மறை நிலை தன்னை வகுக்கும்‌ குறி மூன்றின் மேன்மையையும்‌
    மறை யுமிழ்ந்தா னுரைத்தான்‌ வாஸவன்‌ தன்‌ இறுவனுக்கே,

    வேத விரோதமானவை அசுரர்களுக்கு
    ஏற்பட்டன, வேதோக்த கர்மாக்கள்‌ முக் குணங்களால்‌ வேறு படுகின்றன. வேதோக்கமானததை மூன்று அடையாளங்கள்‌ மற்றதை விட இது வேறென காட்டுகின்றன என்று வேதங்களைக் கூறிய பகவான்‌ இந்திரன்‌ புத்ரனுக்கு உபதேசித்தார்‌,

    18-வது அத்யாயம்‌–பாத்ம கதை.
    இந்த அத்யாயம்‌ ஸமஸ்த சாஸ்தரங்களின்‌ தத்வ சாரம்‌-ஸநகர்‌ முதலிய யோகிகளுக்கு இன்பம் தருவது , இதைப்‌ படிக்க ஆரம்பித்தவுடன்‌ யம கிங்கார்‌ பயந்தோடுவார்‌-நூற்றெட்டு நோய்களை அகற்ற கைகண்ட அருமருந்து -இதைத் தாவிற வேறு ரஹஸ்யமானது கிடையாது –
    பாதகங்களை அகறறவல்ல அமிருதமிது -, மலைகளில்‌ கை லாஸம்‌, தேவர்களில்‌ இந்த்ரன்‌, தீர்த்தங்களில்‌ புஷ்கரம்‌, புஷ்பங்களில்‌ தாமரை, பதிவிருதைகளில்‌ அருந்ததி , யாகத்‌தில்‌ ௮ச்வமமேதம்‌, தானத்தில்‌ பூதாநம்‌ எப்படி சிறந்தததோ அப்படி எல்லா நூல்களிலும்‌ கீதை சிறந்தது -கீதையிலும்‌ பதினெட்டாமத்யாயம்‌ மிக மிக உயர்ந்தது, மேரு மலை மீது அமராவதி எனும்‌ அழகிய பட்டணம்‌ பரமசிவனது லீலையின்பொருட்டு விச்வ கர்மாவால்‌ படைக்கப்பட்டது. பின்‌னர்‌ அது திருலோகாதிபதியான இந்த்ரனுக் களிக்கப்பட்‌டது . வேண்டிய வரத்தை அளிக்கும்‌ சிந்தா மணிகளாலேயே அங்கு அரண்மனை கட்டப்பட்டிருக்கிறது . ஒரு சமயம்‌ இந்த்ரன்‌ இந்த்ராணியுடன்‌ ஸிம்மாசநத்தில்‌ வீற்றிருக்க தேவ கணங்களனைவரும்‌ அங்கு சூழ்ந்து இருந்தனர் -அச் சமயம்‌ விஷ்ணு தூதர்களும்‌ அங்கு வர இந்த்ரன்‌ அவர்‌களை அழைத்து அர்ச்சித்து ஆஸநத்தில்‌ அமர்த்தினான்‌,அவர்களுடன்‌ சசீபதி யோக ஷேமம்‌ விசாரிக்துக் கொண்டு இருக்கும் போது ஆயிரம் கண் கொண்ட மற்றோர்‌ இந்திரன்‌ அங்கு வரக் கண்டான்‌. அவனுடைய தேஜஸ்‌ எல்லோரையும்‌ பிரமிக்கச் செய்தது -அவரைக் கண்டவுடன்‌ விஷ்ணு தூதர்‌ எழுந்து வரவேற்று தேவ கணங்களுடன்‌ இந்த்ரன்‌ சிம்மாசநத்தருகே அழைத்துச்‌ சென்றனர்‌. பழைய இந்த்‌ரன்‌ திடீரென்று ஆஸநத்திலிருக்து பூமியில்‌ விழ, அங்கு ஆஸநத்ததிலே புதிய இந்திரனை உட்கார வைத்து பட்டாபிஷேகம் செய்தனர்‌. இந்த்ரனுக்குரிய ஸகல உபசாரங்களும்‌ அவனுக்கே செய்யப்பட்டன, இந்த்ராணியும்‌ அவர்‌ மடி மீது அமர்ந்தாள் -இதைக் கண்டு பழைய இந்த்ரன்‌ சிந்‌தித்தான்‌, இவன்‌ யார்‌? இப்பதவிக்குரிய நூறு அச்வ மேதங்களை இவன்‌ செய்யவில்லை, தண்ணீர் பந்தல்‌ தடாகம்‌ சாலையில்‌ மரம்‌ வைத்தல்‌ விந்திய மலை மீதுள்ள தேவனைத்‌ தேவியுடன்‌ தர்‌சித்தல்‌ விரஜாநதி ஸ்நாநம்‌ காசி யாத்ரை மாதா புரத்தில்‌ வசிக்கும்‌ ரேணுகா தேவி தர்சநம்‌, காவேரிக்‌ கரையிலுள்ள ரெங்கநாத தர்சநம்‌, துர்பிஷ காலத்தில்‌ அன்ன தானம்‌, வெயில்‌ காலத்தில்‌ தண்ணீர் பந்தல்‌ தேவாலயங்கட்டல்‌, சரணாகதர்களை ரக்ஷித்தல்‌ முதலிய எந்த புண்யத்தையும்‌ இவன் செய்ய வில்லை. எப்படி இவன்‌ விஷ்ணு தூதர்களால்‌ இந்த்ர பதவியில்‌ ௮மர்த்தப்பட்டான்‌ என்று பகவானையே கேட்போம்‌ என்‌று வைகுண்டஞ் சென்றான்‌. அங்கு பகவானைப்‌ பணிந்து போற்றி பகவன்‌ நூறு வேள்விகளைச் செய்து யான்‌ இப்‌ பதவி பெற்றேன் -இப்போது புதிதாக வந்து எனது ஸ்தாநத்தில்‌ அமர்ந்தவன்‌ வேள்விகளைச்‌ செய்ய வில்லை. இதர புண்யங்களையும்‌ செய்ய வில்லை, அவன்‌ எப்படி இந்திரன் ஆனான் என வேண்டினான் -பகவான்‌ பன்னகை புரிந்து கூறினார்‌, இந்த்ரா அவன் செய்த புண்யத்தின்‌ எதிரே யாகங்களோ மற்ற புண்யங்களோ என்ன செய்யும்‌ ? கீதையின்‌ பதினெட்டாமத்யாயத்‌தில்‌ ஐந்து ஸ்லோகங்களை ப்ரதி திநம்‌ ஸ்ரத்தையுடன்‌ பாராயணஞ்செய்து ௮வன்‌ என்னைப்‌ பரவசப்‌ படுத்தி விட்டான்‌.அதற்காக இப்பதவி அளிக்கப்பட்டது , இதைக்‌ கேட்டு கீதையின்‌ மஹிமையை உணர்ந்த இந்த்ரன்‌ பிராமண வேஷம்‌ பூண்டு பூமியில்‌ பதினெட்டாமத்யாய பாராயணம்‌ செய்யும்‌ ஸாதுவைத்‌ சேடினான்‌. கோதாவரி தீரத்தில் காலிகா க்ரமத்தில்‌ அத் தகைய ஓர்‌ பிராமணோத்தமர்‌ கிடைத்தார்‌. அவரைப்‌ பணிந்து உபதேசம் பெற்று ஸ்ரத்‌தையுடன்‌ பூர்ணமாக ப.தினெட்டாமத்யாயத்தைப்‌ பாராயணம்‌ செய்து வந்தான்‌-அந்த புண்யத்தால்‌ பிரும்ம பதவி வரை உள்ள எல்லாம்‌ துச்சம்‌, நஸ்வரம்‌ என்று எண்ணி
    அவைகளை விட்டு மஹா விஷ்ணுவின்‌ ஸாயுஜ்ய பதவியைப்‌ பெற்றார்‌,

    18-மோக்ஷ ஸன்யாஸ யோகம்‌-78 ஸ்லோகங்கள்‌-[அர்ஜுன்‌ 2, பகவான்‌ 71, ஸஞ்ஜயன்‌ 5)

    ஸத்துவ வீடுடை நற் கருமமம் தானுகந்தமையும்‌
    ஸத்துவ முள்ளது தான்‌ குறிக்கொள் வகை செய்தனவும்‌
    ஸத்வ நற் கிரிசைப்‌ பயனும் சரணாகதியும்
    ஸத்துவமே தருவானுரைத்தான்‌ தனிப் பார்த்தனுக்‌கே–19-

    ஸாத்துவிக தியாகக்துடன் செய்யும்‌ சத் கர்மாவால்‌ பகவான்‌ சந்தோஷப்படுகிறார்‌. ஸத்வ குணமுள்ளதையே செய்வதென தீர்மானித்து செய்ய வேண்டும்‌. ஸத்‌வ குணத்தால்‌ கர்மாவைப்‌ பகவதாராதநமாக செய்து சரணாகதி அடைய வேண்டும்‌, என ஸத்வத்தையே அளிக்கும் பகவான்‌ பார்த்தனுக்கு உபதேஸித்தார்‌.

    பல ஸ்ருதி .
    வன் பற்றறுக்கு மருந்தென்று மாயவன்‌ தானுரைத்த
    இன்பக்கடல முதா மென நின்றவிக்‌ கீதை தன்னை
    அன்பர்க்குரைப்‌பவர்‌ கேட்பவரா தரித்து ஓதுமவர்
    துன்பக் கடலில் துளங்குகை நீங்கித் துலங்குவரே –20-

    விஷய வாஸனையை அகற்றும்‌ மருந்து கீதை என பகவானே கூறினான்‌, இன்பக் கடலான பாரதத்தில்‌ கடைந்தெடுத்த அமிருதமிது . இதைப்‌ பக்தருக் குரைப்பவர்‌ அனைவரும்‌ ஸம்ஸாரத்திலிருந்து விடு பட்டு சுகம் பெறுவர்‌-

    தீதற்ற நற் குணப் பாற் கடல்‌ தாமரைச் செம்‌ மலர் மேல்‌
    மாதுற்ற மாயன்‌ மருவிக்‌ கீதையின்‌ வண்‌ பொருளைத்‌
    தோற்ற நான்மறை மெளலியின்‌ ஆசிரியன் குறித்தான்‌
    காதத்று ணிவிடையார்‌ கற்கும் வண்ணம்‌ கருத்துடனே–21-

    திருப்பாற் கடலில்‌ செந் தாமரை மீது அமர்ந்த குற்றமில்லாது நற்குணமமைந்த பிராட்டியுடன்‌ கூடிய மாதவன் சந்தோஷமடைய கீதையின் சிறந்த பொருளைக்‌ குற்றமற்ற வேதாந்த தேசிகன்‌ பக்தர்கள்‌ ஊக்கமாகப்‌ படிக்க சுறுக்கமாக இயற்றினார்‌,


    ஒரு காலத்தில் இந்த பூமியே ஒரு தங்கத் தாமரை வடிவுடன் விளங்கியதால், இதற்குப் பத்ம புராணம் என்று பெயர் வந்தது. வேத வியாசருக்குப் பின் இப்புராணம் மேலும் சுருக்கப்பட்டு ஏழு அத்தியாயங்களையும், 55000 பாடல்களையும் கொண்டு விளங்குகிறது. இக் காண்டங்கள் சிருஷ்டி காண்டம்; பூமி காண்டம் சுவர்க்க காண்டம் பிரம்ம காண்டம்; பாதாள காண்டம் உத்தர காண்டம் கிரியா யோகா முதலியனவாகும்.

    சிவசர்மாவின் கதை

    முன்னொரு காலத்தில் பல முனிவர்கள் ஒன்றுகூடி உரோமஹர்ஷனரிடம் பத்ம புராணத்தைத் தங்களுக்குக் கூறுமாறு வேண்டினர். அந்த வேண்டுகோளுக்கிணங்கி உரோமஹர்ஷனரே சிவசர்மாவின் கதையைச் சொல்ல ஆரம்பித்தார்.

    மிகப் பழங்காலத்தில் துவாரகையில் சிவசர்மா என்ற பிராமணர் வாழ்ந்து வந்தார். வேதங்கள், அதன் அங்கங்கள், சாத்திரங்கள் ஆகியவற்றை நன்கு அறிந்திருந்த சிவசர்மா, மந்திர சக்தியால் பல அற்புதங்களைச் செய்யும் ஆற்றலையும் பெற்றிருந்தார்.

    அவருக்கு யக்ஞசர்மா, வேதசர்மா, தர்மசர்மா, விஷ்ணு சர்மா, சோமசர்மா என்ற ஐந்து புதல்வர்கள் இருந்தனர். தம் பிள்ளைகள் தம்மிடத்தில் எவ்வளவு பணிவும், சொன்னதைச் செய்யும் திட சித்தமும் உடையவர்களாக இருந்தனர் என்பதை அறிய சிவசர்மா விரும்பினார். தம்முடைய அபூர்வ சக்தியால் தம் மனைவியைப் போல மாய மனைவியை உண்டாக்கி அவள் இறந்து போகுமாறு செய்தார். தம் மூத்த மகனாகிய யக்ஞ சர்மாவை அழைத்து, “உன் தாய் இறந்துவிட்டாள். அவள் உடம்பு வீட்டை அசுத்தம் செய்கிறது. கத்தி எடுத்து அவள் உடம்பைப் பல துண்டங்களாக வெட்டித் தூரத்தே எறிந்து விடு’ என்று ஆணையிட்டார். ஒரு சிறிதும் தயக்கம் காட்டாமல் தந்தையின் கட்டளையை யக்ஞசர்மா செய்து முடித்தான். மகனுடைய பணியைக் கண்டு மகிழ்ந்த சிவசர்மா தன் மாயா சக்தியால் மிகவும் அழகு வாய்ந்த பெண்ணை உற்பத்தி செய்து, தன் இரண்டாவது மகனாகிய வேதசர்மாவிடம் அனுப்பினார். மகனை அழைத்து, “இந்த அழகான பெண்ணை மணந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்; அவளைச் சம்மதிக்க வைக்க வேண்டும்” என்று கூறினார். அந்தப் பெண் வேதசர்மாவிடம் வந்து ‘உன் தந்தை மிகவும் வயதானவர், நோயுற்றுள்ளார். அவரைத் திருமணம் செய்துகொள்ள முடியாது. ஆனால் உன்னைத் திருமணம் செய்து கொள்கிறேன்’ என்றாள். வேதசர்மா தான் மணம் செய்து கொள்ளமுடியாது என்று கூறி, எப்படியாவது தன் தந்தையை அவள் மணம் செய்து கொள்ள வேண்டும் என்று வேண்டிக் கொண்டான். உடனே அந்தப் பெண் நான் சொல்வதற்கு நீ கட்டுப்படுவதானால் உன்

    தந்தையைத் திருமணம் செய்து கொள்கிறேன்’ என்றாள். அவள் என்ன விதித்தாலும் அதைச் செய்வதாக வேதசர்மா ஒப்புக்கொண்டான். அப்பெண் “உன் தலையை வெட்டி என் கையில் கொடுக்க வேண்டும். உன் தலை என் கைக்கு வந்தவுடன் உன் தந்தையை மணந்து கொள்கிறேன்’ என்றாள். மறுவார்த்தை பேசாமல் வேதசர்மா . தன் தலையை வெட்டி அவள் கையில் கொடுத்தான்.

    வேதசர்மாவின் வெட்டுண்ட தலையை மூன்றாவது மகனாகிய தர்மசர்மாவிடம் சிவசர்மா கொடுத்தார். அந்தத் தலையை வைத்துக் கொண்டு மிகத் தீவிரமாக தர்ம தேவதையை தியானம் செய்தான், தர்மசர்மா. தர்ம தேவதை நேரில் வந்தவுடன் என் அண்ணனின் உயிரைத் தரவேண்டும் என்று வேண்டிக் கொண்டான். அப்படியே அண்ணன் பிழைத்தவுடன் இருவருமாகச் சென்று தந்தையை வணங்கி நின்றனர். மகிழ்ச்சியடைந்த சிவசர்மா, நான்காவது மகனாகிய விஷ்ணுசர்மாவை அழைத்து, நீ இந்திர லோகம் சென்று இந்திரனிடம் கொஞ்சம் அமிர்தத்தை வாங்கி வா என்றார். விஷ்ணுசர்மா இந்திரலோகம் சென்று அமிர்தத்தைத் தேடுகையில் இவனுடைய எண்ணத்தை மாற்ற முயன்று இந்திரன் மேனகையை அவனிடம் அனுப்பினான். மேனகை அவனை மயக்கி, நாம் இருவரும் மணம் செய்துகொண்டால் மிகச் சிறப்பான இன்பத்தைத் தருவேன்’ என்று கூறினாள். விஷ்ணுசர்மா அதற்கு இசையாமல் போகவே, துர்த்தேவதைகளை அனுப்பி விஷ்ணுசர்மாவைக் கலைக்க முயன்றான்.

    அதற்கும் விஷ்ணுசர்மா மசியவில்லை என்றவுடன், தேவேந்திரன் ஒரு பாத்திரத்தில் அமிர்தத்தைக் கொடுத்தார். விஷ்ணுசர்மாவும் அந்த அமிர்தத்தைக் கொண்டுவந்து சிவசர்மாவிடம் கொடுத்தான். மகிழ்ந்த சிவசர்மா இந்த நான்கு பிள்ளைகளையும் நேரே விஷ்ணுலோகம் போகுமாறு அனுப்பி வைத்தார்.

    எஞ்சியிருக்கும் ஐந்தாவது பிள்ளையான சோமசர்மாவை அழைத்து, “நானும் உன் தாயாரும் தீர்த்தயாத்திரை போகிறோம். அதுவரை இந்த அமிர்தத்தை கவனமாகப் பாதுகாத்து வைத்திரு” என்று கூறிவிட்டு, அமிர்தத்தை அவனிடம் கொடுத்துவிட்டுப் போனார். சிலகாலம் கழித்து சிவசர்மாவும், அவன் மனைவியும் தொழுநோயால் பாதிக்கப்பட்ட உடம்புடன் சோமசர்மாவிடம் வந்து சேர்ந்தனர். அவன் முகம் சுளிக்காமல் அவர்களுக்குப் பணிவிடை செய்தான். சிவசர்மா தேவை இல்லாமல் கோபித்துக் கொண்டு சோமசர்மாவை வாயில் வந்தபடி ஏசினார். அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் சோமசர்மா தொண்டு செய்தான்.

    ஒருநாள் திடீரென்று, உன்னிடம் அமிர்தத்தைக் கொடுத்து வைத்திருந்தேனே, அதைக் கொண்டுவா’ என்றார். மகனுக்குக் கட்டளையிடுவதற்கு முன்பே சிவசர்மா அந்த அமிர்தத்தைக் காணாமல் போகுமாறு செய்தார். இதை அறியாத சோமசர்மா பாத்திரம் காலியாக இருப்பதைப் பார்த்து, தன் பெருஞ் சக்தியால் அந்தப் பாத்திரம் நிறைய அமிர்தத்தை வரவழைத்துத் தந்தையிடம் கொண்டு நீட்டினான். மகனுடைய சக்தியில் மகிழ்ச்சி அடைந்த சிவசர்மா மனைவியை அழைத்துக் கொண்டு நேரே விஷ்ணு லோகம் போய்விட்டார். தனியே விடப்பட்ட சோமசர்மா ஆழ்ந்த தியானத்தில் இருக்கும் பொழுது துர்த்தேவதைகள் அவனைச் சூழ்ந்துகொண்டு அவன் கவனத்தைத் திருப்ப முயன்றன. தேவதைகளைக் கண்டு பயத்தால் இறந்து போனான். அதனால் அடுத்த ஜென்மத்தில் ஹிரண்யன் என்ற அரக்கனுடைய மகனாகப் பிரகலாதன் என்ற பெயருடன் பிறந்தான். மிகுந்த புண்ணியம் செய்திருந்ததால் அரக்கனாகப் பிறந்தும், மிகுந்த விஷ்ணு பக்தனாக விளங்கினான் பிரகலாதன்.

    ————————————————-

    ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

    Leave a Reply


    Discover more from Thiruvonum's Weblog

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading