சோழங்கநல்லூர் – திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு சிறு கிராமம். ஶ்ரீரங்கத்த்திற்கு வடக்கே கொள்ளிடத்திற்கு எதிர் கரையில் ( திருச்சி – நாமக்கல் ரோட்டில்) சிறுகாம்பூர் என்னும் இடம் உள்ளது. அங்கிருந்து 5 km தொலைவில் இந்த கோவில் உள்ளது. இந்த கிராமத்திற்கும் ஸ்ரீராமானுஜருக்கும் ஒரு தொடர்பு உள்ளது.-இந்த கிராமத்தில் வயற்காட்டில் நடுவில் ஒரு கிருஷ்ணர் கோவில் உள்ளது. இந்த கிருஷ்ணர் தனது ஆஸ்தானத்திலிருந்து இருந்து வெளியே ஒரு அறையில் பாலாலயமாகி 50 ஆண்டுகாலமாக கோவில் திருப்பணி நடக்க காத்துக்கொண்டிருக்கிறார்.சேவிக்க யாரும் வராமல் தினமும் வரும் அர்ச்சகரை மட்டும் கடாக்க்ஷித்து நிற்கிறார். 85 வயது முதியவர் எந்த சம்பளமும் இல்லாமல் எந்த பக்தர்களும் வராமலும் கடந்த 20 ஆண்டுகளாய் ஆராதனம் செய்து வருகிறார். இந்த கோவில் அருகே தண்ணீர் இல்லாமையால் தினமும் தனது வீட்டில் இருந்து பிரசாதமும் வழியில் ஒரு இடத்தில் தீர்த்தம் எடுத்துக் கொண்டு 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிலியநல்லூர் எனும் கிராமத்திலிருந்து (மொத்தம் 14 கிலோமீட்டர் இருவழி) சிரத்தையுடன் ஆராதனம் செய்கிறார். எப்போதாவது பெருமாள் சேவிக்க இவரை குலதெய்வமாக கொண்ட ஒரு குடும்பத்தாரோ ஒரு சில உள்ளூர் மக்களோ வருவர்.
ஶ்ரீரங்கம் கோவிலுக்கு ஒரு கோசாலையை #சோழங்கநல்லூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள 5 கிராமங்களை சேர்த்து பிருந்தாவனம் காடுபோல் இராமானுசர் அமைத்தார் என்பது ஶ்ரீரங்கம் கோயிலொழுகு கூறும் செய்தி. இந்த இடத்தில் ஆநிரைகாத்த பெருமாள் – கண்ணன் பிரதிஷ்டை செய்தார் என்பதும் கோயிலொழுகில் கூறப்பட்டுள்ளது.இப்போதும் அந்த கிருஷ்ணர் சோழிங்கநல்லூரில் ஒரு அறையில் இந்து சமய அறநிலை துறை திருப்பணி அனுமதி உத்தரவை எதிர்பார்த்து 50 ஆண்டுக்கு மேல் சிதிலமடைந்த கோவிலுக்கு வெளியே உள்ளார்.அந்த பசுக்களை கடாக்க்ஷிக்க இராமானுசர் தானே வந்து சில நாட்கள் இங்கே தங்குவார். திருவரங்கன் விக்ரஹத்தை பிரதிக்ஷ்டை செய்து அதற்கு வைகானச நம்பிமாரையும் திருவாராதனம் செய்ய பணித்தார் என்பதும் கோவிலொழுகில் கூறப்பட்டுள்ளது.
இன்றைய நிலை:
1. புன்சிரிப்புடன் கிருஷ்ணர் (ஆநிரைகாத்த்த பெருமாள்) கையில் வெண்ணெய்யுடன் சேவை சாதிக்கிறார்.
2. அருகே நம்மாழ்வார், இராமானுசர் மற்றும் சேனைமுதல்வன் விக்ரஹங்கள் உள்ளன.
3. த்வஜஸ்தம்பம் முன்பும் பலிபீடம் பின்பும் உள்ளதால் தற்போது பாஞ்சராத்ர ஆகம முறையில் கோவில் உள்ளது
4. கோவிலொழுகில் குறிப்பிட்ட அரங்கன் இங்கே இல்லை. கோவிலைத் தெரிந்த எவருக்கும் இங்கு இருந்த அரங்கன் பற்றிய தகவல்கள் இல்லை.
5. கோவிலுக்கு பல ஏக்கர் நிலங்கள் இருந்தும் எந்த வருமானமும் இல்லை.
6. கோவிலுக்கு தண்ணீர் மற்றும் மின்சார வசதிகள் இல்லை. கிணறு தண்ணீர் இல்லாமல் பாழ்பட்டு உள்ளது
கோவில் தொடர்பிற்கு: ஆறுமுகம் Ph: +91 93455193555
தொடருபுக்கு: வெங்கடேசன் Ph: +91 9841348374
கோவில் அர்ச்சகர்: சேதுராமன் Ph: +91 97875 72556
கோவிலுக்கு செல்லும் வழி:
திருச்சியில் நாமக்கல் ரோட்டில் முக்கொம்புக்கு அணைக்கு 2 km முன்னால் சிறுகாம்பூர் உள்ளது.
சிறுகாம்பூர் மெயின் ரோட்டில் வலது புறம் திரும்பி 5 kms உள்ளே சென்றால் சோழங்கநல்லூர் மேல்நிலைப் பள்ளி வரும். அதைத் தாண்டி வலது பக்கத்தில் வரும் சிறு ரோட்டில் திரும்பி மீண்டும் வலது புறம் திரும்பினால் கோவில் தெரியும்.ஶ்ரீரங்கங்கத்தில் இருந்து 20 km மற்றும் திருவெள்ளறை கோவிலிலிருந்து 10 km தொலைவில் உள்ளது.
————————————————————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
Leave a Reply