ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -59-அளப்பரும் தன்மை அவ் ஊழி அம் கங்குல் –முந்நீர் ஞாலம் -3-2-

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

இரவு நீடுதற்கு ஆற்றாத தலைவியைப் பற்றிச் செவிலி இரங்குதல் – ஊழி காலம் போல் கங்குல் அளக்க முடியாத படி நீடிய –அம் தண் துழாய்க்கு உளப் பெரும் காதலின் -ஆழ்வாரது பக்தியைக் காட்டிலும் – அதனில் பெரிய அவா-தத்வ த்ரயத்தையும் விஞ்சிய காதலையும் விஞ்சி நீண்ட போனதே
அஞ்சுடர் ஆதித்யனும் உதிக்க மறுக்கிறார்-பெண் பிறந்தார் எய்யும் பெரும் துக்கம் காண மாட்டாமை
என்னுடைய பெண் -செவிலித் தாயார் பாசுரம் -மத் பாபமே நிமித்தம்
-முறுவல் செய்யவாய் தட முலை -பெண்ணின்-வைலக்ஷண்யம் போக்யதை —-மந்தஸ்மிதம் அதரம் -அபரிச்சேத்ய பக்தி –
அவ்வூழி -கல்ப காலம் விட அழகிய -குரூரமான -விபரீத லக்ஷணை யில் தண் அம் வெறுப்பில்
நீண்டு இருப்பதை என் மகள் சொல்கிறாள் என்று செவிலித்தாய் சொல்லும் பாசுரம்
ஓங்கு முந்நீர் வளப்பெறும் நாடன் -மது ஸூதனன் -இங்கும் முந்நீர் பத பிரயோகம்-முந்நீர் ஞாலம் படைத்த என் முகில் வண்ணனே – -திருவாய் மொழி இதன் விவரணம்எந்நாள் நான் இனி வந்து கூடுவேன்-பாவியேன் அலமருகின்றேன் -இங்கு வல் வினையேன்-அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்கின்றேன் -அதனால் நீண்ட இரவு -இங்கு

அவதாரிகை
எட்டா நிலத்திலே ஸ்ரீ வைகுண்டத்திலே ஓலக்கம் கொடுத்து இருக்கை அன்றிக்கே – அவதரித்து இங்கே வந்து -ஸூலபனானான் என்றவாறே – தாம் பெற்றால் போலே இருக்க ஹ்ருஷ்டரானார் –அங்கே இருந்து இழக்கை அன்றிக்கே –(ஸ்ரீ வைகுண்டத்தில் அவன் இருக்க நான் இங்கே இருந்து இழப்பது பொறுக்கலாம் ) இங்கே வந்து கிட்டச் செய்தே – பேரா விட்டவாறே அவசன்னரானார் – அவ்வஸாதம் ஒரு பிராட்டி தசையை விளைவித்து —கலந்து பிரிந்து பிரிவாற்றாத் தலைமகள்- சம்பந்தம் உண்டாய் இருக்க –(ஓங்கு முந்நீர்வளப் பெரு நாடன்-ஸ்வாமி -சம்பந்தம் உண்டே ) போக யோக்யமான காலத்தில் -வந்து உதவக் காணாமையாலே- இருள் பாதகமாகா நின்றது என்று சொல்லா நின்றாள் -என்று அவள் பாசுரத்தை திருத் தாயார்-சொல்லுகிறாளாய்   இருக்கிறது –இரவு நீடுதற்கு ஆறாத தலைவியைப் பற்றி செவிலி இரங்குதல்-

இப்படி சக்தனான ஸர்வேஸ்வரன் விளம்பிக்கையாலே இவருக்குப் பிறந்த ஆர்த்தியைக் கண்ட
ஸூஹ்ருத்துக்கள் நொந்து யுரைத்த பாசுரத்தை இரவு நீடுதலுக்கு ஆற்றாளாய்த் தலை மகள் ஈடுபாடு கண்டு பாங்கி இரங்கின பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு–அவதாரிகை–எட்டா நிலத்திலே ஸ்ரீ வைகுண்டத்திலே ஓலக்கம் கொடுத்து இருக்கை அன்றிக்கே அவதரித்து ஸூலபனானான் -என்றவாறே நாம் பெற்றால் போலே இருக்க ஹ்ருஷ்டரானார் -அங்கே இருந்து இழக்கை யன்றிக்கே–இங்கே வந்து கிட்டச் செய்தே பெறா விட்டவாறே அவசன்னரானார்–அவ்வவஸாதம் ஒரு பிராட்டி தசையை விளைவித்தது கலந்து பிரிந்து பிரிவாற்றாத தலைமகள் ஸம்பந்தம் யுண்டாய் இருக்க போக யோக்யமான இருளிலே வந்து உதவக் காணாமையாலே இருள் பாதகமாக நின்றது என்று சொல்லா நின்றாள் என்று அவள் பாசுரத்தைத் திருத்தாயார் சொல்லுகிறாளாய் இருக்கிறது –

அளப்பரும் தன்மைய ஊழி யங்கங்குல் அந் தண் அம் துழாய்க்கு
உளப் பெரும் காதலின் நீளிய வாயுள ஓங்கு முந்நீர்
வளப் பெரு நாடன்   மது சூதன் என்னும் வல்வினையேன்
தளப் பெரு நீள் முறுவல் செய்ய வாய தட முலையே
-59 –இரவு நீடுதற்கு ஆற்றாத தலைவியைப் பற்றிச் செவிலி இரங்குதல் –

முன்னம் அழகர் எழில் மூழ்கும் குருகையர் கோன்
இன்ன வளவென்ன எனக்கு அரிதாய்த் -தென்ன
கரணக் குறையின் கலக்கத்தை கண்ணன்
ஒருமைப் படுத்தான் ஒழித்து
——22–அழகர் உடைய அழகு முதலானவற்றை அனுபவிக்கப் புக்க இடத்தில் விளாக் கொலை கொண்டு அனுபவிக்க ஒண்ணாது ஒழிய அதுக்கு அடி விஷய பௌஷ்கல்யம்-என்று அறிய மாட்டாமல் கரண சங்கோசம் -என்று அனுசந்தித்து-இஸ் சங்கோசம் அற்று தன்னை அனுபவித்து வாழுகைக்கு உடலாக அவன் பண்ணின சிருஷ்டி அவதாராதிகள் தப்பி
அனர்த்தப் பட்ட நான் இனி கிட்டுகை என்று ஒரு பொருள் உண்டோ என்று சோக பரவசராய்க் கூப்பிட்ட முந்நீர் ஞாலத்தின் அர்த்தத்தை முன்னம் அழகர் எழில் -என்று துடங்கி அருளிச் செய்கிறார் –

அளப்பரும் தன்மை யவ்வூழி யங்கங்குல் – ஊழி ஆகிற ராத்திரி களானவை –அளக்க அரியத்தை- அளந்த திருவடிகளாலும் அளக்கப் போகிறதில்லை –அளக்கல் ஆகில் வந்து தோற்றானோ –அளக்க அரிதாகையை  ஸ்வபாவமாக உடையவன் —ஊழி யங்கங்குல் –ஊழி ஆகிற ஆகாரமே காணும்-நிரூபகமாய் இருக்கிறது –ஆனால் பரிச்சேதிக்க ஒண்ணாத வற்றையும் ஒரு பாசுரம் இட்டு சொல்ல ஒண்ணாதோ -என்ன –அம் தண் அம் துழாய் இத்யாதி –அதனில் பெரிய என் அவா விறே– இதில் (இந்த அவாவைக் காட்டிலும் ) பெரிது என்னும் இத்தனை –பகவத் தத்துவத்தை விளாக்குலை கொண்டது இறே இவர் அவா –  பகவத் ஆனந்தத்தை பரிசேதிக்க-புக்க வேதம் பட்டது படும் இத்தனை –இத்தை பரிச்சேதிக்கப் புக்காலும்  –நேதி நேதி (ந இதி ந இதி )-என்கிறபடியே இதன்று என்னும் இத்தனை போக்கி – இப்படி என்று பாசுரம் இட ஒண்ணாது –அம் தண் துழாய் உண்டு –தோளில் இட்ட மாலை –
அதுக்கு என் உள்ளத்திலே உண்டாய் –சர்வாதிகத்வத்தையும் விளாக்குலை கொண்ட-காதலினும்
பெருத்து இருப்பனவாய் உள்ளது –ஓங்கு முந்நீர் வளப் பெரு நாடன் மது சூதன் என்னும் –1-அவன் எல்லைக்கு புறம்பே இருந்து நோவு படுகிறேனோ-2-அவன் அசக்தியால் நோவு படுகிறேனோ-
கடல் சூழ்ந்து இருப்பதாய் –வளப்பத்தை உடைத்தாய் இருந்துள்ள பெரு நாட்டை உடையவன் –மது சூதனன் –ரஷ்ய வர்க்கத்துக்கு களையான மதுவை நிரசித்தவன் –1-சம்பந்தம் இல்லாமையோ –
2-விரோதி நிரசன சீலன் அல்லாமையாலேயோ –நான் இங்கனம் படுகிறது –வல் வினையேன் –
இவள் வடிவு அழகைப் பார்த்தால் இப்படி கிலேசப்படுக்கைக்கு ஓர் அடி இல்லையே — அத்தலை இத்தலையாய் -அவன் படக் கடவத்தை இவள் படா நின்ற-இதுக்கடி – காண்கிற என் பாபம் இறே –
மத் பாபம் ஏவ –(ந மந்த்ராயா இத்யாதி பரதன் வார்த்தை-இல்லாத குற்றத்தை உண்டு என்று ஏறிட்டுச் சொன்னாலும் இல்லை செய்யாதே ஏற்றான் அன்றோ )

இவள் படுகிற வியசனத்துக்கடி என் பாபமாக-வேணும் என்கைக்கு ஹேது என் என்னில்-தனப் பெரு இத்யாதி –இவள் நோவு படுகைக்கு இவள் வடிவிலே ஏதேனும் குறி உண்டோ -என்கிறாள் –தளப்பு என்றது –தள வென்றாய் –முல்லை-யரும்பு போலே இருப்பதாய் – பெறுதற்கு அரியதாய் –புரவமே சாரு ததீம் -என்கிறபடியே-(பெருமாள் வார்த்தை –கோவைப்பழம் அதரம் -சிரித்த சிரிப்பு மாறாமல் சீதையைத் திருப்பிக் கொடுக்கா விட்டால் உலகைத் தலை கீழாக ஆக்குவேன் )நாயகன் பெற ப்ரார்த்திக்குமதாய் –
நாயகன் புக்க இடம் புக்கு -அவன் நெஞ்சை வடிம்பிடவற்றாய்-இருந்துள்ள முறுவலை உடைய –நீள் முறுவல் -என்றது – நரசிம்ஹத்தினுடைய அட்டகாசத்தை சொன்னது அன்று இறே – ஒரு ஸ்திரீயினுடைய மந்த ஸ்மிதத்தை இறே சொல்லுகிறது –ஆனால் இப்படி பொருளாக வேணும் இறே –
எப்படி எனில் –அதனுடைய போக்யதையை – நீண்மை -என்கிறது –செய்ய வாய் -இத்யாதி –அம் முறுவலுக்கு-பரபாகமான சிவந்த அதரத்தை உடையாள் என்னுதல் –அன்றிக்கே –மேல் தட முலை -என்று முலைகளினுடைய சுற்றுடைமையைச் சொல்லுகிறதாகையாலே- இது செவ்வையைச் சொல்லி நேரே வளர்ந்த முலைகளை உடையாள் என்னுதல் –தட முலையே –விரஹத்தாலே தலை சாவி வெட்டின பின்பு காணும் இவ்வளவு சொல்லலாகிறது- சர்வேஸ்வரன் வைத்த அவகாசம் போராது போலே இரா நின்றது –தளப் பெரும் நீண் முறுவல்   செய்யவாய் தட முலை யானவள் –“அளப்பரும் தன்மை அவ்வூழி யங்கங்குல் அம் தண் அம் துழாய் குளப்பெரும் காதலில் நீளியவாயுள “- என்னும் –அதுக்கு மேலே –
ஓங்கு முந்நீர் வளப் பெரு நாடன் மதுசூதன் என்னும் வல்வினையேன் – என்று அன்வயம் –

தலைமகள் ஆற்றாமை மிக்கு அலறுவதை திருத் தாய் சொல்லுகிற பாசுரம் –காதலுக்கு முடிவு இல்லாதது போலே இரவுக்கும் முடிவு இல்லையே -நீளிய வாயுள-என்னும் -வினை முற்று -என்னும் என்பது இப்பாட்டுக்கு வினை முற்று –அளப்பரும் தன்மைய ஊழி யங்கங்குல்–ஊழி ஆகிற ராத்திரி களானவை -அளக்க அரியத்தை-அளந்த திருவடிகளாலும் அளக்கப் போகிறதில்லை -அளக்கல் ஆகில் வந்து தோற்றானோ -அளக்க அரிதாகையை ஸ்வபாவமாக உடையவன்-பெரியவாச்சான் பிள்ளை
ஓங்கு முந்நீர்-வளப் பெரு நாடன் -கடல் விழுங்காமல் நோக்கி ரஷிப்பவன் மது சூதன் -துஷ்ட நிக்ரஹன்
ஊழி யங்கங்குல்-கங்குலுக்கு அழகாவது கல்பத்தினும் நெடிதாகை – வல்வினையேன்-கங்குலை நீட்டவோ -அவனைக் கூட்டவோ முடியாத பாவியேன் காதலின் நீளிய வாயுள-ஒப்பு பொருளில் இல்லை -காதல் போலே நீண்டது என்ற படி தள-தளவு -முல்லை அரும்பு -என்றபடி-

அளப்பரும் தன்மைய ஊழி யங்கங்குல்-அளவிட வரிதாம் படியான ஸ்வ பாவத்தை யுடைத்தான கல்பங்களில் காட்டில் அழகிய கங்குலானவை–கங்குலுக்கு அழகாவது-கல்பத்திலும் நெடிதாய் இருக்கை-அந் தண் அம் துழாய்க்கு உளப் பெரும் காதலின் நீளிய வாயுள-அழகிய குளிர்ந்த திருத் துழாய்க்கு என்னுள்ளத்திலே வளருகிற காதல் போலே நீளிய வாயுள்ளன–காதலுக்கு முடிவு காணாதவோ பாதி கங்குலுக்கும் முடிவு காண ஒண்ணாது என்கை (கங்குலும் காதலும் முடிவு காண ஓண்ணாமை -)ஓங்கு முந்நீர் வளப் பெரு நாடன்–உயர்ந்த முந்நீரை யுடைத்தாய் வளப்பத்தையும் யுடைத்தான பெரிய நாட்டை யுடையவன் என்கையாலே லோகம் கடல் விழுங்காமல் நோக்குமவன் என்றபடி–மது சூதன்--அந்த லோகத்துக்கு ஆஸூர ப்ரக்ருதிகளால் வந்த நலிவு தீர்த்துக் கொடுக்குமவன்–என்னும்-1-இப்படிக் கங்குலின் நெடுமையையும்-2-ரக்ஷகத்வத்தையும்-3-விரோதி நிவர்த்தகத்வத்தையும் வாய் விட்டுச் சொல்லா நிற்கும்–வல் வினையேன்–கங்குலைக் குறுக்குதல்
அவனைக் காட்டுதல் செய்ய மாட்டாத மஹா பாபத்தை யுடையேனான என்னுடைய —தளப் பெரு நீள் முறுவல் செய்ய வாய தட முலையே-அவன் தன்னை ஓர் ஒன்றிலே எழுதிக் கொள்ள வல்லவான
அவயவ வை லக்ஷண்யத்தை யுடையவள்–தளம் என்று முல்லை–முல்லை யரும்பின அளவான பெருமையையும் நீட்சியையும் யுடைத்தான முறுவலையும் (போக்யதையில் நீட்சி )-இங்கு முறுவல் என்பது தந்த பங்க்தியை–செய்ய வாய்-முறுவலுக்குப் பரபாகமாய் சிவந்த வாய் அழகையும்-தடமுலை
பெரிய முலைகளையும் யுடையவள் என்னும் -என்று கீழோடே அந்வயம்இத்தால் ஸர்வ ரக்ஷகனான ஸர்வேஸ்வரன் விரோதியைப் போக்கி அனுபவிப்பிக்க சக்தனாய் இருக்க விளம்பிக்கையாலே இவ்வாழ்வாருக்கு இருள் தரும் மா ஞாலத்தில் இருப்பு நெடுகித் தோற்றுகையாலே ஆர்த்தி பிறந்தமை சொல்லிற்று ஆயிற்றுதளப் பெரும் இத்யாதியாலே–1-பரிஸூத்தமான இவருடைய அந்தர் விகாஸத்தையும் (வெளுப்பு) (அதரத்துக்கு அந்தர் தந்தபந்தி-செங்கல் பொடிக்கூறை வெண் பல் தவத்தவர்போல் )–2-ராகோத்தரமான வாக் விகாஸத்தையும் (சிகப்பு-பக்தியின் நிறம் )–3-நிரதிசயையான பக்தி அபி விருத்தியையும் காட்டுகிறது (முலை வளர்ந்து கொண்டே இருக்குமே -அவா -காதல் நீண்டு கொண்டே போகுமே )

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு வியாக்யானம்-அளப்பரும் தன்மைய ஊழி யங்கங்குல்— ஊழியான ராத்ரி யானவை
அளக்க அரியத்தை அளந்து கொண்டவன் திருவடிகளாலும் அளக்கப் போகிறது இல்லை-அளக்கலாமாகில் வந்து தோற்றானோ–அளக்க வரிதாகையை ஸ்வ பாவமாக யுடையதான–ஊழி யங்கங்குல்–ஊழி யாகிற ஆகாரமே காணும் நிரூபகமாய் இருக்கிறது-ஆனால் பரிச்சேதிக்க ஒண்ணாத வற்றையும் ஒரு பாசுரம் இட்டுச் சொல்ல ஒண்ணாதோ என்ன–அந் தண் அம் துழாய்க்குஉளப் பெரும் காதலின் நீளிய வாயுள–அதனில் பெரிய என் அவா -10-10-10-
பெரியத்தில் பெரியது என்னும் அத்தனை பகவத் தத்துவத்தையும் விளாக்குலை கொண்டது இறே இவ்வவா பகவத் ஆனந்தத்தைப் பரிச்சேதிக்கப் பார்த்து அவை பட்டது படும் அத்தனை யாயிற்று
இவற்றைப் பரிச்சேதிக்கப் புக்காலும் நேதி நேதி -ப்ரஹதாரண்யம் என்கிறபடியே இது அன்று இது அன்று என்னும் அத்தனை போக்கி இப்படி என்று பாசுரம் இட்டுச் சொல்ல ஒண்ணாது–அம் தண் துழாய் யுண்டு -அவன் தோளில் இட்ட மாலை–அதுக்கு என்னுள்ளத்தில் யுண்டான சர்வாதிகத்வத்தையும்
விளாக்குலை கொள்ள வற்றாது காதலிலும் பெருத்து இருப்பனவாயுள்ளன–ஓங்கு முந்நீர் வளப் பெரு நாடன் மது சூதன் என்னும்–அவன் எல்லைக்குப் புறம்பே இருந்து நோவு படுகிறேனோ-கடல் சூழ்ந்து இருப்பதாய் வளப்பத்தை யுடைத்தாய் இருந்துள்ள பெரு நாட்டை யுடையவன்-ரஷ்ய வர்க்கத்துக்குக் களையான மதுவை நிரசித்தவன்-சம்பந்தம் இல்லாமையே -விரோதி நிரசன சீலன் அல்லாமையோ நான் இங்கனே படுகிறது–வல்வினையேன்–இவன் வடிவு அழகைப் பார்த்தால் இப்படி கிலேசப்படுகைக்கு ஓரடி இல்லை-அத்தலை இத்தலையாய் அவன் படக்கடவதை இவள் படா நின்றாள்
இதுக்கடி இவள் வடிவு அழகில் ஏதேனும் குறை யுண்டோ-மத் பாபம் ஏவ -என்கிறாள்-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்–போக்கினவள் -என்றும் இங்கனே வாய் விட்டுக் கூப்பிடுமதே கார்யமாய் இரா நின்றாள்–வல்வினையேன்-வலியதான வெவ்வினையால் இறே-நான் இவள் அவஸாதத்தைக் காணவும் கேட்கவுமாயிற்று-தன் அழகில் ஈடுபடுத்தி அவனை இங்கனே கூப்பிடப் பண்ண வல்லவள் தான் இப்படிக் கூப்பிடா நின்றாள் என்கிறாள்–தளப் பெரு நீள் முறுவல் செய்ய வாய தட முலையேதளவு என்று முல்லை-அதில் பெருத்த அரும்பு போன்ற தந்த பங்க்தியாய் உத் பவித்த
நீண்ட வெண் மின்னல் போன்ற புன்சிரிப்புள்ளவள்-சிவந்த திருவதரத்தை யுடையவன்-அவனுடைய ஸந்தாபத்தைத் தீர்க்கவும் ஆசா பூர்த்தியைச் செய்யவும் வல்ல முலைகளை யுள்ளவள் என்னும் என்றத்தோடே இதுக்கு அந்வயம் –

ஸ்வாபதேசம் –
ஆழ்வார் ஆற்றாமையைக் கண்டு கால தாமதத்தை வெறுத்துப் பேசும் பாகவதர்கள் –சர்வ சக்தனாய் இருக்கச் செய்தேயும் இருள் தரும் மா ஞாலத்தில் இருப்பு நெடுகத் தோற்றுகையாலே-ஆற்றாமை விஞ்சி அத்தன்மையை வாய் விட்டுக் கூறினமை ஆழ்வாருடைய திரு முக மண்டலமும் சொல் திறமும் பக்தி வளமும் ஈற்றடியில் சொல்லிற்றாம் –

ஸ்வா பதேசம்
இத்தால்-அனுபவ யோக்யமான சம்பந்தமும் ஸ்வரூப ஞானமும் உண்டாய் இருக்க போக யோக்யமான காலமும் போகத்துடன் செல்லப் பெறாமையாலே வந்த ஆற்றாமையை- பார்ஸ்வத்தார் சொல்லுகிறார்கள்–மது சூதனன் -என்கையாலே ஸ்வரூப ஞானம் –

தாத்பர்யம்
சர்வேஸ்வரன் சக்தனாய் இருந்தும்-தமக்கு வந்து உதாவாமையால் ஆற்றாமை மிக்கு வருந்தும் தலை மகளைப் பற்றி செவிலித் தாயார் பேசும் பாசுரத்தை விரஹினி இரவு நீட்சியைச் சொல்லும் பாசுரத்தாலே சொல்கிறாள் கல்பத்துக்கும் ஓர் அளவு உண்டே-1000 சதுர்யுகம் ப்ரஹ்மாவின் பகல் பொழுது சொல்லலாம் -இந்த நீண்ட இரவால் கொடுக்கும் துன்பம் அளவற்றதே -இவளுக்கு திருத்துழாய் மேல் உள்ள அபி நிவேசமே அபரிச்சேதயமாய் இருந்ததே-அதனில் பெரிய அவாவை விடவே இது பெரியதாய் -அத்தை விட நீண்டதாய் பெரியதாய் நீண்டதே முல்லை அரும்பு போல் இவள் அதரம் தடமுலை போன்ற இவளுடைய போக்யதையை அழகை அழித்து-பெரு நாடன் ஸ்வாமி -ரக்ஷகன் -மதுசூதனன் உதவாமல் உள்ளானே -என்று கூப்பிடா நின்றாள் -அவன் வராமல் இவள் துக்கப்படுவதுக்கு எனது வலிய வினைகளே காரணம் என்கிறாள்

3-2-முந்நீர் ஞாலம் பிரவேசம் 

பட்டர் திருக்கோட்டியூரிலே எழுந்தருளியிருக்கச் செய்தே -சீராமப்பிள்ளை,
‘இவர் பரத்துவ அனுபவத்தை ஆசைப்பட்டு, அது ஒரு தேச விசேஷத்திலே போனால் அனுபவிக்குமதாய் நோவுபடுகிறாரல்லர்;
அவதாரங்களில் ஆசைப்பட்டுப் பிற்பாடர் ஆனோம்’ என்று நோவுபடுகிறாரல்லர்;
உகந்தருளின நிலங்களிலே ஆசைப்பட்டார்;
அவற்றிலும் திருமலையிலே அனுபவிக்க இழிந்து –
பின்னர் மேன்மேலென அனுபவிக்குமதொழிய இவர் இழந்து நோவுபடுகைக்குக் காரணம் என்?’ என்று கேட்க,
‘பரத்துவம் வியூகம் விபவங்களோடு அர்ச்சாவதாரத்தோடு வேற்றுமையறத் தர்ம ஐக்கியத்தாலே
விஷயம் எங்கும் பூர்ணமாக இருக்கும்.
குறைந்து தோன்றுகிற இடம் -ப்ரதி பத்தாக்களுடைய பிரதிபத்தி தோஷத்தாலே –
நினைக்கின்ற மக்களுடைய நினைவின் தோஷத்தாலே யாயிருக்கும்.
கடலருகே சென்று நின்றால் தன் கண்களாலே முகக்கலாமளவு இறே காண்பது ;
அப்படியே, அழகருடைய ஸுந்தர்யாதிகளை அனுபவிக்கப்புக்க இடத்தில் விளாக்குலை கொண்டு அனுபவிக்கலாய் இருந்தது இல்லை –
பெருவிடாய்ப்பட்டவன், சேர்ந்த குளிர்ந்த தண்ணீர் சந்நிஹிதமாய் இருக்க –
ஆஸ்யம் பிஹிதமானால் – வியாதியினாலே வாய் மூடப்பட்டால் அதனைக் குடிக்க முடியாது —
துடிக்குமாறு போன்று, விஷயமும் சந்நிஹிதமாயும் விடாயும் மிக்கிருக்கச்செய்தே,
அபரிச்சின்ன விஷய மாகையாலே பரிச்சேதித்து அனுபவிக்கவொண்ணாதொழிய நோவுபடுகிறார்.
ஆயின், ‘பிரகிருதி சம்பந்தத்தை அறுத்துத் தந்தருள வேணும் என்று வேண்டுவான் என்?’ எனின்,
‘இவ்வாறு அனுபவிக்க வொண்ணா தொழிந்தது விஷயத்தினுடைய -தவ்ர் ஜன்யத்தாலே – வைலக்ஷண்யத்தாலே வந்தது’
என்று அறிய மாட்டாது, தம்முடைய கரண சங்கோச நிபந்தனமாக வந்தது என்று அநுசத்தித்து.
‘அவன் தான் முதலிலே இத்தைக் கழித்துத் தன்னை அனுபவிக்கைக்கு உறுப்பாக-
ஜகத் ஸ்ருஷ்டியைப் பண்ணினான் -(முந்நீர் ஞாலம் படைத்த)
ஸ்ருஷ்டமான ஜகத்திலே தான் வந்து அவதரித்தான்; (‘எம் வாமன’ )
அதற்குமேல் அந்தர்யாமி ரூபேண நின்று-(‘எங்கணும் நிறைந்த எந்தாய்’ ) சத்தா திகளை நிர்வஹித்தான்;
அவன் இப்படி உபகார பரம்பரைகளைப் பண்ண ,
நான் அவற்றையெல்லாம் அசத்துக்குச் சமமாக்கிக்கொண்டேன்-(‘ஆக்கையின் வழி உழல்வேன்);
இனி, நான் அவனைக் கிட்டுகை என்று ஒன்று உண்டோ?’ என்று
நிர்மர்யாத வ்யஸன சாகர அந்தர் நிமக்நராய் ‘முடிந்தேனேயன்றோ?’ என்று இவர் சோகிக்க-(எங்கினித் தலைப்பெய்வன்?’),
‘நீர் கரண சங்கோசத்தாலே வந்தது என்று சோகிக்க வேண்டா;
கரண சங்கோசமில்லாதாரும் நம்மை அனுபவிக்குமிடத்தில் இப்படியே காணும் படுவது-(சிந்து பூ மகிழும்’)’ என்று
இவர் இழவினை பரிஹரிக்கக் கோலி ,
‘நீர் நினைத்த வகைகளெல்லாம் பரிமாறுகைக்கு ஈடாக வடக்கில் திருமலையில் நின்றோம்;
அங்கே கிட்டி அனுபவியும்,’ என்று தான் அங்கு நிற்கிற நிலையைக் காட்டிச் சமாதானம் பண்ண, –
ஸமாஹிதராய்த் தலைக்கட்டுகிறார்-(‘நிலை பெற்று என் நெஞ்சம்’).

‘ஆயின், தெற்குத் திருமலையிலே நிற்கிற நிலையை அனுபவிக்க நினைத்துப் பெறாமல் நோவுபட்ட இவரை
வடக்குத் திருமலையில் நிற்கிற நிலையைக் காட்டிச் சமாதானம் செய்தபடி என்?’ என்னில்,
முலை வேண்டி அழுத குழந்தைக்கு முலையைக் கொடுத்துப் பரிஹரிக்கும் இத்தனையேயன்றோ?
(‘தென்னன் உயர்பொருப்பும் தெய்வ வடமலையும் என்னும் இவையே முலையா வடிவமைந்த
அன்ன நடைய அணங்கு’–பெரிய திருமடல்))
‘நன்று; இன்ன முலையைத் தரவேண்டும் என்று அழுதால் அம்முலையையே கொடுத்து ஆற்ற வேண்டாவோ?’ என்னில், வேண்டா;
இவர் தாம் வழி திகைத்து அலமருகையாலே
‘அதுவே வேணும்; அது அன்று இது,’ என்கிற தெளிவில்லை ஆயிற்று இவர்க்கு.
மற்றும், ‘ஒரு பொருள்தானே ஒருபோது தாரகமாய், மற்றைப்போது அதுதானே பாதகமாகக் காணாநின்றோம்;
பசியில்லாத காலத்தில் பாதகமான சோறு தானே அது கழிந்தவாறே தாரகம் ஆகாநின்றதே?
‘இவர்க்கு இன்னது இன்ன போது தாரகமாம்: இன்னது இன்ன போது பாதகமாம்’ என்று தெரியாது;
குணங்களின் ஆவிஷ்காரத்தாலே தரிப்பித்துக்கொண்டு செல்லுகிற ஈஸ்வரனுக்கும்
தரித்த இவருக்கும் தெரியுமத்தனை இதுதான்.
ஆரியர்கள் இழந்த மிலேச்ச பூமியில் உள்ளாருக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கிற நீர்மை அங்கு;
கானமும் வானரமும் வேடுமானவற்றுக்கு முகம் கொடுத்த நீர்மை உண்டே இங்கு.

இப்படி ஸ்வா பாவிகமான சேஷத்வத்துக்கு பிரதிசம்பந்தியான சேஷியினுடைய திவ்ய சவ்ந்தர்யாதிகளை அனுபவிக்கப் ப்ராப்தமாய் இருக்க
அது ஸித்தியாது ஒழிகிறது தத் விரோதியான சரீர சம்பந்தாதிகள் அடியாக என்று அனுசந்தித்து -தந் நிவ்ருத்தியில் அபேக்ஷையாலே
1–அது அவன் தனக்கு விதேயமாம் படியான ஸ்ரஷ்ட்ருத்வத்தையும்
2–ஸ்ருஷ்டமான ஜகத்தை அநந்யார்ஹம் ஆக்கின அபதானத்தையும்
3–ஆஸ்ரித விரோதி நிராசன ஸ்வ பாவத்தையும்
4—ஆஸ்ரித சம்ரக்ஷண அர்த்தமான வ்யாப்தியையும்
5–அனுபவித்து அல்லது நிற்க ஒண்ணாத விலக்ஷண விக்ரஹ யோகத்தையும்
6— ஸமஸ்த சேதனரும் ஸ்வ அதீனராம் படியான பாரம்யத்தையும்
7– வ்யாப்தியிலும் கார்ய காரமான சவ்லப்யத்தையும்
8—அந்த சவ்லப்யம் அடியாக வந்த குண விக்ரஹ உஜ்வல்யத்தையும்
9–ஞான அஞ்ஞான விபாகம் இல்லாத படியான ௭உபகாரகத்வத்தையும்
10—அதுக்கு பிரகாசகமான சகல வேத வேத்யத்வத்தையும் —
அனுசந்தித்துச் சொல்லிக் கூப்பிட்டு -ஸ்வ சந்நிதியாலே ஆர்த்தி சமிப்பித்த ஈஸ்வரனை அபரோக்ஷித்து ப்ரதிஷ்டிதராகிறார்-

முதற்பாட்டில், ‘நீ தந்த கரணங்களைக் கொண்டு அனர்த்தத்தை விளைத்துக்கொண்ட நான் உன்னை வந்து கிட்டுகை என்று ஒன்று உண்டோ? என்றார்;
இரண்டாம் பாட்டில், ‘இப்படிச் சூழ்த்துக் கொண்ட பாவங்களைப் போக்கி, தேவரீரை நான் எப்போது வந்து கிட்டுவேன்?’ என்றார்;
மூன்றாம் பாட்டில், ‘இதற்கு முன்பு உன்னைப் பெறுகைக்குத் தந்த கரண களேபரங்களைக்கொண்டு நான் சூழ்த்துக்கொண்ட
பாவங்கள் ‘நான் போக்கி வர’ என்றால் அது செய்யப்போகாது; இனி, நான் அறியாததாய் நீ அறிந்திருப்பதோர் உபாயத்தை அருளிச்செய்ய வேணும்’ என்றார்;
நான்காம் பாட்டில், ‘உன்னையொழிந்த வ்யதிரிக்தங்களிலே – வேறுபட்ட பொருள்களிலே என்னுடைய தாழ்ச்சியைத் தவிர்த்து,
உன் திருவடிகளிலே வாழ்ச்சியே யாம்படி செய்யவேணும்,’ என்கிறார்;
ஐந்தாம் பாட்டில், ‘அப்படிச் செய்யப் பார்த்திலையாகில், உன்போக்யதையை – இனிமையை எனக்கு எதற்காக அறிவித்தாய்? என்றார்;
ஆறாம் பாட்டில், ‘இல்லாத அன்று உண்டாக்கின அருமையுண்டோ, உண்டாக்கின இதற்கு ஒரு குண தானம் பண்ண ?’ என்றார்;
ஏழாம் பாட்டில், ‘நம் படியறியாதே நாம் அவனை வெறுக்கிறது என்?’ என்றார்;
எட்டாம் பாட்டில், ‘தீரக் கழியச் சாதன அனுஷ்டானம் பண்ணினேனோ , நான் இங்ஙனம் கூப்பிடுகைக்கு?’ என்றார்;
ஒன்பதாம் பாட்டில், ‘அந்த திரைவிக்ரம அபயதானத்துக்கும் தப்பின நான் இனி எங்கே கிட்டப்போகிறேன்?’ என்றார்;
பத்தாம் பாட்டில், அவ்வளவிலே வந்து அவன் முகங்காட்டித் தரிப்பிக்கத் தரித்தார்;
நிகமத்தில் , பலம் சொல்லித் தலைக்கட்டினார்.

முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணனே
அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன்
வெந்நாள் நோய் வீய வினைகளை வேர் அறப் பாய்ந்து
எந்நாள் யான் உன்னை இனி வந்து கூடுவேன்
 –3-2-1-

முந்நீர் –ஆற்றுநீர், ஊற்றுநீர், வர்ஷ ஜலம் -மழைநீர் என்னும் மூன்று நீரையுடையதாதலின் ‘முந்நீர்’ எனப்பட்டது.-இனி, அப ஏவ ச சர்ஜ்ஜாதவ் ‘இறைவன் முதலிலே தண்ணீரையே படைத்தான்,’ என்கிறபடியே,-முற்பட ஜல ஸ்ருஷ்டியைப் பண்ணி – பின்பு இறே அண்ட ஸ்ருஷ்டி தான் பண்ணிற்று , –முந்நீர் -முன்னே படைத்த நீர் -என்னுதல்.ஸ்ருஷ்டிப்பது கர்மங்களை கடாக்ஷித்து ஆகிலும் , யௌகபத்யம் அனுக்ரஹ காரியம்; ஒவ்வொரு கால விசேஷங்களிலே சிறை வெட்டி விடுமாறு போன்று தன் பேரருளாலே உண்டாக்குமத்தனை இறே-அசித் அவிசேஷிதான் பிரளய சீமனி சம்சரத கரண கலேபரைர்க் கடயிதும் தயமான மநா-என்றார் பட்டர்.-சொரூப ஞானம் பிறந்த பின்பு சமுசாரத்திலிருக்கிற இருப்பு, பிராட்டி இலங்கையிலே இருந்தால் போலே-தோற்றா நின்றது காணும் இவர்க்கு; ஆதலின், ‘வெம்நாள்’ என்கிறார்.-இனி, பகவத் விஸ்லேஷத்தோடே இருக்கையாலே, நெருப்பை ஏறட்டினாற் போலே இருக்கிறதாதலின் ‘வெம்நாள்’ என்கிறார். என்னுதல்.

எந்நாள் –எனக்கு இப்போதே பெறவேண்டும்’ என்னும் விருப்பமில்லை;
இன்ன நாள் பெறக்கடவை’ என்று ஒரு நாளிட்டுத்தர அமையும். –இனி வந்து கிட்டுகை என்று ஒரு பொருள் உண்டோ?’ என்று நிராசராகிறார் என்று முன்புள்ள முதலிகள் அருளிச்செய்வர்.
எம்பெருமானார் ‘நிராசர் ஆனால் பின்னை முடிவார் ஒருவர்;
ஒன்பதாம் பாட்டில் – நிராசராக, பத்தாம் பாட்டில் – அவன் வந்து சமாதானம் பண்ணினானாக அமையும்’ என்று அருளிச்செய்வர்.
ஆதலால், இப்பாசுரத்தில் ‘நான் வந்து உன்னைக் கிட்டுவேனாக நீ பார்த்து வைத்த நாளைச் சொல்லாய்,’ என்கிறார் என்றபடியாம்-

—————

வன் மா வையம் அளந்த எம் வாமனா நின்
பன் மா மாயப் பல் பிறவியில் படிகின்ற யான்
தொன் மா வல்வினைத் தொடர்களை முதல் அரிந்து
நின் மா தாள் சேர்ந்து நிற்பது எஞ்ஞான்று கொலோ
 –3-2-2–

‘வடிவிணை இல்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியை’க்கொண்டு காடும் மலையுமான பூமியை அளந்தானாதலின் ‘வன்வையம் அளந்த’ என்கிறார்.-வன்மை என்பது ஈண்டு வையத்துக்கு அடை.-அவன் தானே தன்னைக் கொடு வந்து காட்டின இடத்திலும் நெஞ்சில் நெகிழ்ச்சியின்றியிருந்த சமுசாரிகளுடைய நெஞ்சில் வன்மையைச் சொல்லுகிறார் என்னுதல்.-மஹாபலி தோள் மிடுக்காலே ஒருவர்க்கும் நுழைவதற்கு அரிதான வன்மையை உடைத்தாயிருந்ததாதலின்,‘வன் மா வையம்’ என்கிறார் என்னுதல்.

எம் வாமனா –அபஹ்ருத ராஜ்யத்தை யுடையவனான இந்திரனுக்காக அன்று,
வாமனாவதாரமும் மதர்த்தம் என்றிருக்கிறார்.

படிகின்ற –தரை காணாதே அவகாஹிக்கிற – இவ்வனர்த்தத்திலே வெறுப்பின்றிப் பொருந்தி இருப்பதால் -‘விழுகின்ற’ என்னாது, ‘படிகின்ற’ என்றார். ‘படிகின்ற’ என்ற வர்த்தமான நிர்த்தேசத்தால் , ‘இன்னம் தரை கண்டதில்லை’ என்பது போதரும்.

அந்தநாள் இந்த நாளாகவேண்டும்,’ என்பது போன்று ‘எஞ்ஞான்று கொலோ!’ என்கிறார் என்றபடி.-இனி, இதற்கு ‘இந்நாள் என்று ஓரவதி பெற்றதாகில், இன்று பெற்றதோடொக்கும் என்றும் சொல்லுவார்கள் –

—————

கொல்லா மாக்கோல் கொலை செய்து பாரதப் போர்
யெல்லாச் சேனையும் இரு நிலத்து அவித்த எந்தாய்
பொல்லா வாக்கையின் புணர்வினை யறுக்கலறா
சொல்லாய் யான் உன்னைச் சார்வதோர் சூழ்ச்சியே
 –3-2-3-

என்னை விஷயீ கரிக்கைக்கு என்று வந்து திருவவதாரம் பண்ணி அருளி -கொலைக்குக் கருவியல்லாத குதிரையை நடத்துகிற கோலைக்கொண்டு முடித்துப் பொகட்டான்.-அவித்த – பீஷ்மாதிகள் காட்டுத் தீகிளர்ந்தால் போலே வர, காளமேகம் மழை பெய்வது போன்று அவித்தான்.-‘மழை கொலோ வருகின்றது!’ என்னும்படி யன்றோ அவன் வரவுதான் இருப்பது?இவர் இச்சரீரத்தின் தன்மைகளையெல்லாம் ஒருசேர நினைத்துப் ‘பொல்லா ஆக்கை’ என்கிறார்.-இராவணன் தலைகள் போன்று முளையா நிற்றலின், ‘அறுக்கல் அறா’ என்கிறார்.-ஒரு தேச விசேஷத்திலே நித்ய ஸூ ரிகள் அனுபவிக்கும்
உன்னைக் கிட்டலாதொரு விரகு சொல்ல வேணும்-நான் கிட்டவும் வேணும் -நான் அறியில் இறாய்ப்பேன்-நான் அறியாதபடி சூழ்ச்சி யாகவும் வேணும்- இது இன்ன நாள் என்று சொல்லவும் வேணும் என்கிறார் –

—————-

சூழ்ச்சி ஞானச் சுடர் ஒளியாகி என்றும்
ஏழ்ச்சிக் கேடு இன்றி எங்கணும் நிறைந்த வெந்தாய்
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து நின் தாளிணைக் கீழ்
வாழ்ச்சி யான் சேரும் வகையருளாய் வந்தே 
–3-2-4-

எந்தாய் -ஒருவனைப் பிடிக்க ஊரை வளைப்பாரைப் போலே வியாப்தியும் என்னை உத்தேசித்து என்கை –நீ அன்றிக்கே ஒழிய அமையும் நான் மேல் விழுகைக்கு-வகுத்த திருவடிகளில் அனுபவத்தை – -வாழ்ச்சி -என்கிறார் –யான் சேரும் வகையருளாய் வந்தே –
இதுக்கு முன்பு புதியது உண்டு அறியாத நான் -சேரும் வகை அருள வேணும் –
அது செய்யும் இடத்து முகம் தோற்றாதே அந்தர்யாமித்வத்தால் ஒண்ணாது –
வந்து அவதரித்து உன் குண சேஷ்டிதங்களாலே புறம்பு போகாத படி பண்ணிச் சேர்த்து அருள வேணும் –

—–

வந்தாய் போலே வந்து மென் மனத்தினை நீ
சிந்தாமல் செய்யா யிதுவே யிதுவாகில்
கொந்தார் காயாவின் கொழு மலர்த் திரு நிறத்த
எந்தாய் யானுன்னை எங்கு வந்து அணுகிற்பனே
–3-2-5-

யிதுவே யிதுவாகில்- உதவாது ஒழிகையே ஸ்வ பாவமாகச் செல்லுமாகில்–கொந்தார் காயாவின் கொழு மலர்த் திரு நிறத்த-எந்தாய் –நீ உதவாது போது ஆறி இருக்கலாயோ உன் வடிவு இருக்கிறது -விலக்ஷணமான வடிவு அழகைக் காட்டி என்னை அநந்யார்ஹன் ஆக்கினவனே–உன்னைக் கிட்டுகைக்கு ஒரு கைம்முதல் இல்லாத யான்.- ‘இவ்வடிவின் போக்யதையை யறிந்த யான்’-பிரியில் தரியாதபடி வடிவு படைத்திருக்கிற உன்னை.-எங்கு வந்து அணுகிற்பன் –என்ன சாதன அநுஷ்டானத்தைச் செய்து எங்கே வந்து கிட்டக்கடவேன்?‘நான் உன்னைக் கிட்டுகை என்று ஒரு பொருள் உண்டோ?’-

—————-

கிற்பன் கில்லேன் என்றிலன் முன நாளால்
அற்ப சாரங்கள் அவை சுவைத்து அகன்று ஒழிந்தேன்
பற்பல்லாயிரம் உயிர் செய்த பரமா நின்
நற் பொற் சோதித் தாள் நணுகுவது எஞ்ஞான்றே
 –3-2-6-

என்னைப் பார்த்தால் கிட்டுவதற்கு விரகு இல்லை;-உன்னைப் பார்த்தால் தப்புவதற்கு விரகு இல்லை;ஆன பின்னர், நிரதிசய போக்யமான உன் திருவடிகளைக் கிட்டுவது என்று?’ என்கிறார். என்றது, ‘விதி விலக்குகளுக்குக் கட்டுப்படுதல் இன்றி இதர விஷயப் பிரவணனாய்க் கைகழிந்து போன நான் உன் திருவடிகளைக் கிட்டுவது என்று?’ என்கிறார்

கிற்பன் கில்லேன் என்றிலன்-விஹிதத்ததைச் செய்யாமையும், அவிஹிதத்தைச் செய்கையும்-காலமெல்லாம் எனக்கு இதுவே அன்றே யாத்திரை –அற்ப சாரங்கள் அவை சுவைத்து அகன்றொழிந்தேன் – முள்ளிப்பூவில் ரசம் போலே அல்பமாய், அவைதாம் பலவாய், தன் நாவில் பசை கொடுத்துப் புஜிக்க வேண்டும்படி இருக்கிற விஷயங்கள் தோறும் கால் தாழ்ந்து சர்வ சத்தியான தேவரை ‘ஓடினேன் என்கிறபடியே கைகழியப் போனேன்.-உயிர் செய்கையாவது – ஸ்திதி கமன சயனாதிகளுக்கு – நிற்றல், நடத்தல், படுத்தல் முதலியவைகட்குத் தகுதியாம்படி-யோக்யமாம்படி சரீரத்தோடே-சம்பந்திப்பிக்கை சேர்ப்பித்தல்.–இல்லாத பொருள்களை உண்டாக்கின உனக்கு உள்ள வஸ்துவுக்கு ஒரு குண தானம் பண்ணுகை அரிதோ?-நின் நன்பொன் சோதித்தாள் நணுகுவது எஞ்ஞான்று –உன்னுடைய ப்ராப்தமாய் -அப்ராக்ருதமாய்  நன்றாய் -ஸ்ப்ருஹணீயமான -விரும்பத்தக்கதாய் நிரவதிக தேஜோ ரூபமான திருவடிகளை நான் என்று வந்து கிட்டக் கடவேன்?

———–

எஞ்ஞான்று நாம் இருந்து இருந்து இரங்கி நெஞ்சே
மெய்ஞ்ஞானம் இன்றி வினையியல் பிறப்பு அழுந்தி
எஞ்ஞான்றும் எங்கும் ஒழிவற நிறைந்து நின்ற
மெய்ஞ்ஞானச் சோதிக் கண்ணனை மேவுதுமே 
–3-2-7-

பரம்பொருளை யறியும் அந்த ஞானமே ஞானமென்று சொல்லப்படும்;மோக்ஷத்தைக் கொடுக்கக்கூடிய ஞானமே ஞானம் –கண்ணனை மேவுதுமே – ஸூலபன் என்று நினைத்து நம்மாலே கிட்டப்போமோ?’ என்னுதல். ‘நிர்வாஹகனானவனை நம்மால் கிட்டப்போமோ?’ என்னுதல்.நினைவுக்கு வாய்த் தலையிலே புகுந்து நம் படியை உள்ளபடி அறியுமவன் ஆனவனை-‘நெஞ்சே! மெய்ஞ்ஞானச் சோதிக் கண்ணனை எஞ்ஞான்று மேவுதும்?’ என்று கூட்டிப் பொருள்-

——————

மேவு துன்ப வினைகளை விடுத்துமிலேன்
ஓவுதல் இன்றி யுன் கழல் வணங்கிற்றிலேன்
பாவு தொல் சீர்க் கண்ணா வென் பரஞ்சுடரே
கூவிகின்றேன் காண்பான் எங்கு எய்தக் கூவுவனே
 –3-2-8-

சாதன கர்மங்களைப் பண்ணினார் பலம் தாழ்த்துக் கூப்பிடக்கூடிய கூப்பீட்டைப்
பேற்றுக்கு ஈடாய் இருப்பதொரு கைம்முதல் இல்லாத நான் எங்கே வந்து கிட்டக் கூப்பிடுகிறேன்?’ -‘ஒரு கொசுக் கூப்பிட்டது’ என்று பிரமனது ஓலக்கத்திலே கேட்கப் போகின்றதோ? எங்ஙனே வந்து கேட்கக் கூப்பிடுகிறேன்?-என்கிறார்.-ஓவுதல் இன்றி மேவு துன்ப வினைகளை விடுத்துமிலேன், ஓவுதல் இன்றி உன்கழல் வணங்கிற்றிலேன்’ என்று ‘ஓவுதலின்றி’ என்பதனை முன்னும் பின்னும் கூட்டிப் பொருள் அருளிச்செய்வர் எம்பார்.

மேவு துன்ப வினைகளை விடுத்துமிலேன்’ என்றதனால் கர்மயோகம் இன்மையையும்,
‘ஓவுதலின்றி உன்கழல் வணங்கிற்றிலேன்’ என்றதனால் பத்தியோகம் இன்மையையும் கூறினாராயிற்று.-உபலக்ஷணத்தால் ஞானயோகம் இன்மையையும் கொள்க.

கண்ணா என் பரஞ்சுடரே’ என்று ஒன்றாக்கி, ‘தாழ நின்று இவ்வடிவழகை எனக்கு முற்றூட்டு ஆக்கினவனே!’-‘பரஞ்சுடராய் உடம்பாய்’ –

——————

கூவிக் கூவிக் கொடு வினைத் தூற்றுள் நின்று
பாவியேன் பல காலம் வழி திகைத்து அலமர்கின்றேன்
மேவி அன்று ஆ நிரை காத்தவன் உலகம் எல்லாம்
தாவிய வம்மானை எங்கினித் தலைப் பெய்வனே 
–3-2-9-

ஒரு கால் கூப்பிட்டு பின்பு ஸ்வரூப ஞானத்தால் ஆறி இருக்க மாட்டாதே மேல் மேல் எனக் கூப்பிடுகிற படி இவர் கூப்பிட்டால் ஈஸ்வரனுக்கு கை நீட்டி எடுக்க ஒண்ணாத தூற்றிலே யாயிற்று இவர் புக்கு நிற்கிறது –மேவி அன்று ஆ நிரை காத்தவன் -ஆபத்துக்கு உதவாதானாயத் தான் படுகிறேனோ -வழி திகைத்து அலமருகின்றேன் மேவி அன்று ஆ நிரை காத்தவன்’ என்ற சொற்றொடரால்,‘காட்டிலே வழி திகைத்தார்க்கு -இடையர் -அங்கேயுள்ள ஆயர்கள்- போலே காணும் வழி காட்டுவார்’ என்று பொருளும் போதரும்.-திருத்தேர்த்தட்டிலே நின்று சகல ஆத்மாக்களும் உஜ்ஜீவிக்கும் படி சரம ஸ்லோகத்தைக் கூறி வழி காட்டியவன் அவனே யன்றோ?’-–உலகு எல்லாம் தாவிய -அது ஓரூர் அளவேயோ தப்பவுமாம்–தான் ஸ்வாமி என்னுமிடத்தை அறிவித்தவனை.-எல்லார் தலையிலும் திருவடிகளாம் படி சர்வ லோகங்களையும் அளந்த அன்று எம்மூலையிலே கிடந்தேன்-அவன் தான் வந்து அபகரித்த அன்று தப்பின நான் சாதன அனுஷ்டானம் பண்ணி எங்கே சென்று கிட்டப் புகுகிறேனோ -இனி அவனுடைய ஈஸ்வரத்வம் விகலமாக வாகாதே புகுகிறது –என்று நிராசர் ஆகிறார் –

—————-

தலைப்பெய் காலம் நமன் தமர் பாசம் விட்டால்
அலைப்பூண் உண்ணும் அவ் வல்லல் எல்லாம்
அகலக் கலைப்பல் ஞானத்து என் கண்ணனைக் கண்டுகொண்டு
நிலைப்பெற்று என்னெஞ்சம் பெற்றது நீடுஉயிரே
.–3-2-10-

இவர் நசை யற்றவராய் முடியப் புக்கவளவில், ‘இவர் கிரமப் பிராப்தி -பற்றாதார் -பொறாதவர் போலும்!’ என்று நினைத்து, ‘நீர் ஒரு பெரு விடாயர் உண்டு என்றறிந்து, உமக்காக அன்றோ வடக்குத் திருமலையில் நிற்கிறோம்?’ என்று அந் நிலையைக் காட்டித் தரிப்பிக்கத் தரித்து, இனியராகிறார்.

‘அவையெல்லாம் காணக்காண விட்டுக் கடக்க நிற்க, அவற்றோடு-சஜாதீயமான – ஒத்ததான துன்பம்’ என்று எம்பார் அருளிச்செய்வர். என்றது, அவ்வோபாதி கிலேசம் – ‘அந்தத் துக்கத்தைப் போலேயிருக்கிற, பகவானைப் பிரிந்ததனால்-விஸ்லேஷத்தால் –
உண்டான துக்கமெல்லாம் இவர்க்கும் அகல’ என்றபடி.
இனி,‘பகவான் கைவிட்ட பின்னர்-பகவத் அலாபமே யான பின்பு – யமனுக்கு வஸ்யனாகையும் வந்ததேயன்றோ?-அந்த யம வஸ்யதை போம்படியாக’ என்று ஆண்டான் அருளிச்செய்வர்.

நெடுங்கை நீட்டாகப் பிரமாணங்களால் கேட்டுப் போகாதபடி கண்களுக்கு விஷயமாகக் கிருஷ்ணனாய் வந்து அவதரித்தவனைக் கண்டு கொண்டு.நெஞ்சும் ஒரு படி தரிக்கப் பெற்றது–உயிர் நீடு பெற்றது –அழியப் புக்க ஆத்மாவும் இப்போதாயிற்று -நித்யத்வம் -அழிவின்மையைப் பெற்றது.-நித்யமான ஆத்மாவிற்கு நாசமாவது, தாஸ்ய அசித்தி; சேஷமான பொருளுக்குச் சேஷத்துவம் நிரூபகமானால், நிரூபகத்தை யொழிய நிரூப்ய சித்தி யில்லையே’ 

———–

உயிர்கள் எல்லா உலகமும் உடையவனைக்
குயில்கொள் சோலைத் தென்குருகூர்ச் சடகோபன்
செயிர்இல்சொல் இசைமாலை ஆயிரத்துள் இப்பத்தும்
உயிரின்மேல் ஆக்கை ஊனிடை ஒழிவிக்குமே
.–3-2-11-

இவர் தரித்த பின்பாயிற்று அவன் எல்லா வுயிர்களையும் எல்லா உலகங்களையுமுடையவனாயிற்று;-இங்கு இவர் ஒருவரையுமே ஆயிற்று இழக்கப்புக்கது;
அங்கு ஸவிபூதிகனானவனை ஆயிற்று இழக்கப்புக்கது’ என்றபடி.-இவரைப் பெற்ற பின்பாயிற்று ஈஸ்வரத்வம் பூர்ணமாயிற்று ’பிரகாரியானவன் தரித்து,-பிரகாரரான இவரும் தரித்து,-இவர் தம்மளவேயன்றித் திருநகரியும் தரித்து,-அங்கு உண்டான சோலைகளும் தரித்து,-அங்கு உண்டான திர்யக்குகளினுடைய – பறவைகளுடைய-ஹர்ஷ ஸூசகமான த்வனியும் -மகிழ்ச்சிக்கு-அறிகுறியான ஒலியும் கேட்கும்படியாயிற்று,-நித்யமாய் ஞான ஆனந்த லக்ஷணமாய் ஈஸ்வரனுக்கு சேஷமாய் -அடிமையாயிருக்கிற ஆத்மாவையும்,-
பரிணாமி த்ரவ்யமான அசித்தையும் -வளர்தல் குறைதல் முதலிய மாறுபாடுகளையுடைய சரீரத்தையும் தன்னிலே-பந்தித்துக் – கட்டுவித்துக் கிடக்கிற அவித்தியை முதலானவைகளை வாசனையோடே போக்குவிக்கும்.-இவரோடு சம்பந்தமுடையவர்களுடைய சரீர சம்பந்தத்தை அறுத்துக் கொடுக்கும்.

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading