ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —–ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51
இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –
திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது–
—
நீலோத் பல புஷ்பங்கள் கருநெய்தல் மலர்கள் –திருமேனி சாரூப்பியம்-சாம்யா பத்தி சாமீப்யம் சாலோக்யம் சாயுஜ்யம்-கால் வன்மையால் -கடமாயின எல்லாம் கழித்து -நீர் நிலைகளில் நின்ற தபஸ்ஸின் பயனா குடமாடியவர் நடமாடி உலகு அளந்த இரண்டாலும் மண்ணும் விண்ணும் குலுங்கி -உருகி -ஈடுபட்டு – திருத் தாயார் கீழே புலம்பினாலும் பகவத் கடாக்ஷத்தால் போகிற வழிகள் எல்லாம் பூக்கள் சூழ்ந்து-தெய்வ யோகத்தால் தடங்களும் பூக்களுமாக இருக்க -லோக பதார்த்தங்களை பார்த்து
அதுவும் அவனையே நினைவூட்ட -அவன் இடமே ஈடுபட்டாள்
வியந்தும்-போலி கண்டு அழிந்தும் மகிழ்ந்தும்-சொன்னால் விரோதம் -அஸேவ்ய சேவை கூடாது -என்று உபதேசம் –ஏற்கும் பெரும் புகழ் வானவர் யீசனைப் பாடும் ஏற்கும் புகழ் யுடைய ஆழ்வார் –
நான் வேறே ஒருவருக்கும் என்னாவின் இன் கவி கொடுக்கிலேன்-நா கொடுத்த பயன்-வம்மின் புலவீர் உம் மெய் வருத்தி கை செய்து உய்ம்மினோ –-தேவ பித்ரு ரிஷி -மூன்று ருணங்கள் -கடன் தீர -பாடுங்கோள்–
யோகிகள் யோக அப்யாசம் பண்ணும் போது யோகம் சாத்மிக்கைக்காக லோக யாத்ரையிலே ஒன்றுவார்கள்— அது போல் இவரும் பகவத் அனுபவம் சாத்மிக்கைக்காக லோகங்களில் பதார்த்தங்களின் மேல் கண் வைததார் –அவையும் பகவத் விஷயத்துக்கு ஸ்மாரகமாய் நலிகிறபடி –
மயர்வற மதி நலம் அருள பெற்றவர் ஆகையாலே –நம்மை லோக யாத்ரையின் நின்றும் வேத (வைதிக )யாத்ரையில் மூட்டும் தனை அருமை போரும்-ஆழ்வார்களை – வேத (வைதிக )யாத்ரையில் நின்றும்
லோக யாத்ரையிலே மூட்டுகை –நம்மை சம்சாரத்தில் உண்டான ருசி வாசனையை தவிர்த்து பகவத் விஷயத்தில் உண்டாக்குக்கைக்கு உள்ள அருமை போரும்-ஆழ்வார்கள் பகவத் விஷயத்தில் ருசி வாசனையை தவிர்த்து –சம்சாரத்தில் உண்டாக்குக்கைக்கு – இரண்டும் எம்பார் அருளி செய்தார் –
இப்படி ஸம்ஸாரத்தின் துர்கதியை அனுசந்தித்து அருளினவர் -ஆஸ்ரித விஷயத்தில் ஸாம்யாபத்தி ப்ரதனாய்-ஸர்வ ஸமாஸ்ரயணீயனான ஸர்வேஸ்வரனுடைய நீர்மையை அனுசந்தித்து நாம் அவனை ஆஸ்ரயித்து இருக்கையாலே நாம் அவனோடு பரம ஸாம்யா பன்னராகைக்குக் குறையில்லை என்று நினைத்த பிரகாரத்தை தலைமகனான ஸர்வேஸ்வரனுடைய திரு நிறத்தில் போலி கண்ட -நெய்தலைக் கண்ட – தலைமகள் பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –(போலி கண்டு அழிதல் என்றும் மகிழ்தல் என்றும் கொள்ளலாம் )
இது தலைவனைப் பிரிந்த தலைவி போலி கண்டு மகிழ்தல் எனும் துறையில் வருகிற பாசுரம். காதலர் பிரிந்திருக்கும்போது ஒருவர் மற்றவரை நினைந்து அவர் போன்றவற்றை அவராகவே பாவித்து அப்போதைக்குப் பிரிவுத் துயரை மறப்பது ஒன்று உண்டே. ஆழ்வார் இப்படியில் அனுகாரம் என்கிற ரீதியில் பலகாலும் எம்பெருமானை அனுபவிக்கிறார். ஆனது பற்றியே ஆழ்வார்களின் பாசுரங்களில் ஆன்மிக விஷயங்களை விவரிக்கும்போதும் ஓரோர் இடம், திவ்ய தேஶம், அவ்விடத்து இயற்கை எழில், அவ்விடத்து மாந்தர் தோற்றச் சிறப்பு, கல்வி, செல்வ மேன்மைகளைச் சொல்வதும். இதை ஈடு வ்யாக்யானத்தில் நம்பிள்ளை ஆழ்வார் இவ்விபூ4தியும் அவன் உடைமை என்பதால் அனுபவிக்கிறார் என்பர். உண்மையில் அருளாளர்களான ஆழ்வார்களும் ஆசார்யர்களும் தாமும் அனுபவித்து நம்மையும் அனுபவிப்பிக்கிறார்கள்.-இப்பாசுரத்தில் மண்ணும் விண்ணும் அளந்த எம்பெருமான் திருமேனி நிறத்தை நீலோத்பல மலர்கள் நாயகிக்கு நினைப்பூட்டியது தெரிகிறது. ஒரு மலரைக் கண்டாலும் அதன் நிறம் எம்பெருமானை நினைவூட்டுகிறது. இந்த விபூ4தியில் உள்ளன யாவும் அவன் ஸ்வரூபம் என்பதால் அதில் அவளுக்கு மகிழ்ச்சியும் மன நிறைவும் வருகிறது.-ஆளவந்தாரின் ஆசார்யரும், நாத2முனிகளின் சீடரும் ஆன குருகைக் காவலப்பனை அவரது சீடர் ஒருவர், “ஜகத் ஈச்வரர்களுக்கு என்ன தொடர்பு?” (அதாவது உலகுக்கும் எம்பெருமானுக்கும் என்ன ஸம்பந்தம்?) என்று கேட்டார். அதற்கு குருநாதர் “இந்த உடலுக்கும் ஆத்மாவுக்கும் என்ன ஸம்ப3ந்த4மோ அதேதான் உலகுக்கும் ஈச்வரனுக்கும் .” என்கிறார். சீடர் மேலும், “எனக்கு எம்பெருமானை நினைப்பதற்கு ஒரு வழி சொல்லித் தர வேண்டும்” என்று வேண்டினார். அதற்கு குருகைக் காவலப்பன், “நான் உமக்கு எம்பெருமானை எப்போதும் நினைக்க வழி சொல்லித் தருகிறேன்; ஆனால், நீர் எனக்கு அவனை எப்படி மறப்பது, நினையாமல் இருப்பது என்று சொல்லிக் கொடும்!” என்றாராம்.-நீல மலர்களைக் கண்டதும் பராங்குஶ நாயகிக்கு எம்பெருமான் நினைவு வந்தது. ப்ரக்ருதியில் உள்ள அனைத்திலும் “ஶரீரம் யத் அவாப்னோதி” என்று கீதையில் சொன்னபடி அவனே நிறைந்திருப்பதால் எந்தப் பொருளைக் கண்டாலும் ஆசார்யருக்கு அது எம்பெருமானின் ஶரீரமாகவே தோற்றுகிறது. அவ்வாறிருக்க எம்பெருமானை எவ்வாறு நினையாது இருக்க முடியும் என்று கருத்து
கடமாயினகள் கழித்து தன் கால் வன்மையால் பல நாள்
தடமாயின புக்கு நீர் நிலை நின்ற தவமிது கொல்
குடமாடி யிம் மண்ணும் விண்ணும் குலுங்க வுலகளந்த
நடமாடிய பெருமான் உரு ஒத்தன நீலங்களே -38-தலைவனைப் பிரிந்த தலைவி போலி கண்டு மகிழ்தல் –
சொன்னாவில் வாழ் புலவீர் சோறு கூறைக்காக
மன்னாத மானிடரை வாழ்த்துதலா -லென்னாகும்
என்னுடனே மாதவனை ஏத்தும் எனும் குருகூர்
மன்னருளால் மாறும் சன்மம்—39-முடியானேயில் முடியாத ஆசை யுடையராய்க் கூப்பிட்டவர்
தம் கூப்பீட்டுக்கு துணையாவார் யுண்டோ என்று லௌகிகரை பார்த்த இடத்தில்அவர்கள் பகவத் அர்ஹ கரணங்களைக் கொண்டு சூத்திர மனுஷ்யர்களைக் கவி பாடித் திரிகிற படியைக் கண்டு அது பொறுக்க மாட்டாமல் இப்படி வகுத்த விஷயத்தை விட்டு அப்ராப்த விஷயத்தை கவி பாடுகை ஈடல்ல -என்று அவர்களுக்கு ஹிதம் அருளிச் செய்ய மீளவும் அவர்கள் பழைய நிலைகளிலே நிற்க
அவர்களை விட்டு ஸ்வ லாபத்தைச் சொல்லி ப்ரீதராகிற சொன்னால் விரோத-தத்தின் அர்த்தத்தை தொடுத்து சொன்னாவில் இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –திரு நகரிக்கு நாதரான ஆழ்வார் அருளாலே அந்ய சேஷத்வத்துக்கு அடியான ஜன்மம் கழியும்-கண்டு சன்மம் கழிக்க வேண்டிற்று ஆழ்வாருக்கு –இவர்களுக்கு சூழ் பிறப்பும் மருங்கே வரப் பெறுமே -என்று ஆழ்வார் அருளாலே பிறவிப் பெரும்கடல் சுவறிற்று-த்ருஷ்டே பராபரே -கண்டு பேறு ஆழ்வாருக்கு -நமக்கு இத்தை சொல்லியே பேறு
மாறுகை யாவது -ச வாசனமாகப் போகை- இவையுமோர் பத்தேற்கும் பெரும் புகழ் சொல்ல வல்லார்க்கு இல்லை சன்மமே -என்று இறே இத் திருவாய் மொழிக்கு பல ஸ்ருதியும் –
கடமாயினகள் கழித்து –ருணானி த்ரிகுண்ய அபாக்ருத்ய -என்கிறபடியே – மூன்று வித கடன்கள் கழிந்த பின்னர் மனசை மோஷத்தில் நிலை நிறுத்த வேண்டும் —ப்ரஹ்ம சர்யேனருஷிப்ய யஜ்ஜேன தேவேப்ய பிரஜயா பித்ருப்ய – –மனு ஸ்மரதி – 6-35 – என்று சொல்லுகிற படியே –ப்ரஹ்மசர்யம் மூலம் ரிஷிகளின் கடனையும் –யாகம் மூலம் தேவர்கள் கடனையும் – பிள்ளைப் பேறு மூலம் பித்ருக்களின் கடனையும் -தீர்க்கக் கடவன் –உஷ்ண காலத்திலேயே –உஷ்ணமான தேசங்களிலே –சரீர க்லேசங்களாலே – சொல்லுகிற ருண த்ரயத்தையும் இறுத்து —தன் கால் வன்மை இத்யாதி –
தன்னுடைய யத்னத்தாலே யாதல்-தபோ பலத்தால் ஆதல்-சத்தையை நோக்கி இட்டு வைத்து –
சீத காலத்திலேயே கடலோடு -குளப் படியோடு வாசி அற –தீர்த்த தேசங்கள் எல்லாம் புக்கு -கழுத்து மட்டும் நீரிலே நின்று –தபஸ்ஸூ பண்ணின அந்த பலத்தாலே -வந்ததோ உங்களுக்கு இப் பரம சாம்யா பத்தி ?–நீல மலர்கள் இப்படி கடன் தீர்கின்றன –கடம்-கடன் –குடமாடி-மன்றிலே தன் அழகை சூறை கொள்ளும் படிக்கு ஈடாக நின்று –குடக் கூத்தை ஆடி-இடையருக்கு உண்டான செருக்குக்கு தலை சாவி வெட்டின படி –
இம் மண்ணும் இத்யாதி –ஒரு தெருவிலே யாதல்-சிலர்க்கு ஆதல்-தன்னை கொடுக்கும் அது அன்றிக்கே லோகமாக வாழும் படி கூத்தாடின படி –குரவை – கலி நடம்- குடக்கூத்து =கரணம் -நோக்கு – தோற்பாவை -ஆறு வகை கூத்துக்கள் மேலு பலவும் சொல்வர் –குலுங்க- சம்கார காரணன் ந்ருத்யம் ஆகில் இறே லோகம் நடுங்கிற்று என்னாலாவது –அங்கன் அன்றிக்கே – லோகம் அடைய அச் செயலுக்கு நெஞ்சு உளுக்கின படி –உலகு அளந்து நடமாடிய –இந்திரன் தான் இழந்த பூமியைக் கொண்டு போக –மகா பலி தன்னது அல்லாததை தன்னது என்று பிரமித்து –அத்தைக் கொடுத்தோம் -என்று ஒவ்தார்யத்தை நினைத்து போக – இவர் திரு உலகு அளந்து அருளின போதை அழகை தம் பேறாக அனுபவித்தார் –உவந்த உள்ளத்தனாய்-பெருமாளுக்கு தீண்டப்பெற்றோம்-மகா பலிக்கு அவனுக்கே கொடுக்கப்பெற்றோம்-இந்திரனுக்கு இழந்த செல்வம்-ஆழ்வார்களுக்கு சேவை -அழகு அனுபவித்து உகந்து —உரு ஒத்தன நீலங்களே –இப்படி சர்வதா சத்ருசமான வடிவை நீலங்கள் பெருகைக்கு அடி –கடமாயினகள் கழித்து தன் கால் வன்மையால் பல நாள் தடமாயின புக்கு நீர் நிலை நின்ற தபசோ ?-–இவருக்கு பகவத் விஷயத்தில் லோக யாத்ரை அனுசந்திக்க புக்கால் அதுவும் பகவத் விஷயத்துக்கு ஸ்மாரகமாய் நலியும் படி இறே பிறந்து ஞான வைசத்யம் —அத்தை சொல்லுகிறது –
போலி கண்டு மகிழ்ந்து அருளிச் செய்யும் பாசுரம் –போலி கண்டு மகிழ்வதும் உண்டு – வருந்துவதும் உண்டே –பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற காவி மலர் என்றும் காண் தோறும் பாவியேன் மெல்லாவி மெய் மிகவே பூரிக்கும் அவ்வவை எல்லாம் பிரான் உருவே என்று -பெரிய திருவந்தாதி–ஒக்கும் அம்மான் உருவம் என்று உள்ளம் குழைந்து நாள் நாளும் தொக்க மேகப் பல் குழாங்கள் காணும் தோறும் தொலைவன் நான் -திருவாய் -8-5-8-பைம்பொழில் வாழ் குயில்காள் மயில்காள் ஒண் கரு விளை காள் வம்பக் களங்கனிகாள் வண்ணப் பூவை நறு மலர்காள் ஐம் பெரும் பாதகர்காள் அணி மாலிருஞ்சோலை நின்ற எம்பெருமானுடைய நிறம் உங்களுக்கு என் செய்வதுவே -நாச் திரு -9-4-
கடமாயினகள் கழித்து தன் கால் வன்மையால் பல நாள்-தடமாயின புக்கு நீர் நிலை நின்ற தவமிது கொல்-கருங்குவளைகள் காடுகளை இடம் கொள்ளாமல் நீர் நிலைகளை கொண்டமையால் தவப்பயன் என்கிறார் –நீண்ட நாள் அனுபவித்து கழிக்கும் கடன்களை தவிர்த்தவாறு–இம் மண்ணும் விண்ணும் குலுங்க -குடமாடி –உலகு அளந்து நடமாடிய பெருமான் -விளையாட்டாகச் செய்தமை தோன்ற
வாமனனாய்ச் செய்த கூத்துக்கள் காண்டுமே –இம் மண்ணும் விண்ணும் குலுங்க-மனம் இளகும் படி -நடுங்கும் படி அன்று –சம்கார காரணன் ந்ருத்யம் ஆகில் இறே லோகம் நடுங்கிற்று என்னாலாவது –
அங்கன் அன்றிக்கே – லோகம் அடைய அச் செயலுக்கு நெஞ்சு உளுக்கின படி –புஷ்ப்பம் போன்ற திருவடி அன்றோ –
கடமாயினகள் கழித்து-தனக்கு அனுபவித்து அற வேண்டும்படியான பாபங்களைக் கழித்து-தன் கால் வன்மையால்-தான் நின்ற அடி யுரத்தாலே--பல நாள்-அநந்த காலம் -பலம் பெறும் அளவும் என்றபடி-தடமாயின புக்கு-அகாதமான தடாகங்களிலே அவகாஹித்து–நீர் நிலை நின்ற-நீரிலே நித்ய வாஸம் பண்ணின-தவமிது கொல்-இது தபஸ்ஸாகக் கூடும் இறே–குடமாடி-பஞ்ச லக்ஷம் குடியில் பிறந்த கோப கோபீ ஜனங்கள் எல்லாம் காணும்படி குடக் கூத்தாடி–யிம் மண்ணும் விண்ணும் குலுங்க-இந்த பூமியோடு தேவ லோகத்தோடு வாசி யற தன் செயலிலே வ்யாகுலமாம் படியாக–இது கீழோடே சேரவுமாம்-வுலகளந்த நடமாடிய–அளக்கிற இடத்திலே அநாயாசத்தாலே வல்லார் ஆடினால் போலே இருக்கை–பெருமான் அந்நிய சேஷத்வத்தையும் ஸ்வ ஸ்வா தந்தர்யத்தையும் கழித்துக் கொடுக்கையாலே ஸர்வாதிக சேஷி யானவனுடைய–பெருமான் உரு-ரூபமேவாஸ்யை தந் மஹி மாநம் வ்யாஸஷ்டே -யஜுர் -5-1-4-என்கிறபடியே பெருமை சொல்லுவதாக நிறம்–ஒத்தன நீலங்களே-நீலங்களானவை அவன் திரு நிறத்தோடு ஒத்தன–ஆக இந் நிலத்துக்கு ஸாம்யம் உண்டாயிற்று
தன்னுடைய உத்பத்தி ஸ்தானமான தேசத்திலே நித்ய வாஸம் தானே தபஸ்ஸூ ஆகையால் என்றதாயிற்று–திருஅயோத்யையில் இருந்ததே ஹேதுவாக அன்று-சராசரங்களை வைகுந்தம் ஏற்றி அருளினாரே பெருமாள் தவம் க்ஷேத்ர வாசமே–இதுக்கு கடங்கள் கழிக்கை யாவது –தபஸ்ஸூ பாபத்தைப் போக்கும் என்கிற ஸாம் யத்தாலே–இத்தால்–யாவத்த்ரியதே ஸா தீஷா -தைத்ரியம் -என்கிறபடியே அநந்ய ஸாதனனாகிற அதிகாரிக்கு சரீர ஸ்திதி தானே சாதன அனுஷ்டானம் என்னலாம் படி இருக்கை–அதில் கடமாயின கழித்து –என்கையாலே–கடம் என்று ருணமாய்
நாயம் ருணீ -பாகவதம் -என்கிறபடியே இவ் வதிகாரியினுடைய ருண த்ரய அபகரணம் சொல்லுகிறது-தன் கால் வன்மையால் -என்கையாலே வ்யவசாய சக்தியை ஸூசிப்பித்த படி–பல நாள் தடமாயின புக்கு -என்கையாலே சீதமிவஹ்ரதம் -மோக்ஷ -4-50- என்கிறபடியே வாசத் தடமான பகவத் விக்ரஹங்களிலே அவகாஹித்து என்றபடி (நீராடப் போதுவீர் -)நீர் நிலை நின்ற -என்கையாலே
ஸ்வ பாவமான நீர்மையிலே நிலை நிற்கை–தவமிது கொல் -என்கையாலே-அநு பாவ்யம் தானே பல ஸாதனம் என்னும்படி அவிசேஷிதமாய் இருக்கை–குடமாடி இத்யாதியாலே–கிருஷ்ணனுக்கும்
த்ரிவிக்ரமனுக்கும் யுண்டான ஸர்வ ஸமாஸ்ரயணீயதையாலே வந்த நீர்மையின் ஐக்யம் தோற்றுகிறது-உரு வொத்தன நீலங்கள் -என்கையாலே ஸாம்யா பன்னரானவர்கள் புஷ்பவத் ஸ்லாக்ய ஸ்வ ரூபர் என்கை யாயிற்று –
ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-நெடுநாள் ஸம்ஸாரத்திலே இருக்கச் செய்தேயும் பகவத் விஷயத்திலேயே அவகாஹித்த படி இறே கீழ்ச் சொல்லிற்று –இப்பாட்டில் பகவத் விஷயத்தில் அவகாஹித்த நெஞ்சு மீண்டு தரிக்கைக்காக லோக யாத்திரையை அனுசந்திக்கப் புக்கார் அதுவும் பகவத் விஷயத்துக்கே உடலாய் இருக்கும் இறே ஸம்ஸாரிகளானவர்கள் இங்குத்தை வாஸனையாலே அத்தை இங்குத்தைக்கு உடலாக்கிக் கொள்வர்கள் இவர்கள் பகவத் விஷய வாஸனையாலே இத்தையும் அங்குத்தைக்கு உடலாக்கிக் கொள்வர்கள்–நோ பஜனம் ஸ்மரந் -சாந்தோக்யம் -8-1-2- என்கிற
முக்தனில் காட்டில் முமுஷுவுக்கு வாசி இது விறே –ஸம்ஸார ஸ்ம்ருதியும் அனுவர்த்தியா நிற்கச் செய்தே அதுவும் பகவத் அனுபவத்துக்கு உடலாய் இருக்கும் முதலிலே இது தன்னில் ஸ்ம்ருதி தானும் பிள்ளையாய் இருக்கும் முக்தனுக்கு–குருகைக் காவல் அப்பனை-ஜகத் ஈஸ்வரர்களுக்கு ஸம்பந்தம் இருக்கும் படி என் என்று கேட்க-எஜ்ஜகத்துக்கும் எவ்வீஸ்வரனுக்கும் நீ கேட்க்கிறது -என்றான்
சரீரம் யாதவாப்நோதி யச்சாப் யுத்த க்ராம தீஸ்வர -ஸ்ரீ கீதை -15-8-என்று இந்திரியாதிகளோடே கூடி உபசயாத்மகமாய் இருந்துள்ள இச்சரீரம் ஆகிற இஜ்ஜகத்துக்கு ஜீவாத்மாவை ஈஸ்வரனாகச் சொல்லா நின்றது இறே-இச் சரீரத்துக்கும் ஈஸ்வரனான ஆத்மாவுக்கும் யுண்டான ஸம்பந்தம் யாதொன்று அப்படி
இச் சரீர சரீரீ பாவம் ஜகத் ஈஸ்வரர்களுடைய சம்பந்தம் என்று உத்தரம் சொன்னான்–அவன் தானே -எனக்கு எம்பெருமானை ஸ்மரிக்கைக்கு விரகு சொல்ல வேணும் என்ன-நான் உனக்கு அது சொல்லுகிறேன்-நீ எனக்கு மறக்க விரகு சொல் என்றான்–ஆவது என் என்னில்-ஒரு பதார்த்தத்தைக் கண்டால் அதனுடைய வஸ்துத்வ நாம பாக்த்வங்கள் அவன் அந்தராத்மதயா நிற்கில் அல்லது அவற்றுக்கு இல்லை இறே விசேஷண அம்சம் தோற்றா நிற்க நினைக்க விரகு கேட்க வேண்டுவதே என்றபடி–இப்படி பகவத் விஷயத்திலே அவகாஹித்து இருக்கிற இவர் லோக யாத்திரையில் கண் வைத்தார்–சில நீரிலே நிற்கிற நீலங்கள் வந்து கண்ணுக்கு இலக்காயிற்று-இவை அவனோடு ரூப ஸாம்யத்தை யுடையனவாய் இரா நின்றன-இவை நெடுநாள் நீரிலே நின்று பண்ணின தபஸ்ஸூ யுடைய பலமாகாதே -என்கிறார் –குடக்கூத்தாடி ஸஹர்ஷ சீர கம்பம் பண்ணும்படியாக சர்வ லோக க்ரஹணத்தைப் பண்ணி நடந்து அருளின பெருமை யுள்ளவருடைய திருமேனி போன்றி கோள் நிறத்தால்-நீலங்களே-கரு நெய்தல் பூக்கள்
ஸ்வா பதேசம் –
ஆழ்வார் முக்தர்கள் ஸாரூப்யம் பெற்றதை சாஷாத் கரித்து-அவர்கள் இடைவிடா முயற்சியின் பலன் -தன் கால் வன்மை-என்றும்-பல நாள்-தடமாயின புகுதல் -மரகத மணித் தடாகம் போன்றவன் இடம் ஈடுபட்டு முக்தரை நீல மலர் என்றது யாவரும் மகிழ்ந்து சிரஸ் மேல் கொள்ளும் படியான சிறப்புக்கும் மேன்மைக்கும் முக மலர்ச்சிக்கும் ஆம் –
தாத்பர்யம்
இதில் ஆழ்வார் -சர்வேஸ்வரன் ஆஸ்ரிதற்கு ஸாரூப்ய பிரதானம் பண்ணுபவன் ஆகையால் நமக்கும் ஸாரூப்யத்தை அளிக்கும் என்று அனுசந்தித்து உரைத்த பாசுரத்தை கரு நெய்தல்களிலே சர்வேஸ்வரனான நாயகன் போலியைக் கண்டு உரைத்த நாயகியின் பாசுரத்தாலே அருளிச் செய்கிறார்-நாயகி சந்த்ர ஒளியால் மலர்ந்த கருநெய்தல் மலர்கள்-நிறம்–கிருஷ்ண வாமன திரிவிக்ரம அத் யாச்சர்ய அதி மானுஷ சேஷ்டிதங்கள் –-எம்பெருமான் திரு மேனி ஒத்து இருக்க-இது எதனால் இருக்கும்-சா அங்கமாக -முக்கடன்களைக் கழித்து -கர்ம யோகங்கள் அனுஷ்ட்டித்து-வெய்யில் காலத்தில் மலைகளில் நின்றும்-குளிர் காலத்தில் தடாகங்கள் இருந்தும் செய்த தபஸ்ஸுக்களின் பலமோ நானும் செய்து கிட்டக்க கூடாதோ என்கிறார்
3-9-சொன்னால் விரோதம் -பிரவேசம் –
இப்படித் தம் இழவுக்குக் கூப்பிடுகிற இது தவிர்ந்து தங்கள் இழவுக்குக் கூப்பிடும்படி செய்தார்கள் சம்சாரிகள்.
தாமும் தம்முடைய இந்திரியங்களின் கூட்டமுமாய்க் கேட்டார் எல்லாம் நீராகும்படி கூப்பிட்டார் மேல் திருவாய்மொழியில்;
‘பருகிக் களித்தேனே!’2-3-9- என்கிறபடியே, பகவானை அனுபவித்து அதனால் களித்துப் பின்பு ஒருவர்க்கு ஒருவர் உணர்த்திக் கொள்வதற்கு
‘அடியார்கள் குழாங்களை உடன்கூடுவது என்றுகொலோ!’ 2-3-10-என்று நித்தியசூரிகள் திரளிலே புகத்தேடியது போன்று,
இவர் இழவாலே கூப்பிட்ட பின்னர் ‘இந்த இழவுக்குக் கூட்டு ஆவார்கள் அன்றோ?’ என்று சம்சாரிகளைப் பார்த்தார்;
அவர்கள் பேற்றுக்குக் கூட்டு இல்லாததைப் போன்று இழவுக்கும் கூட்டு இன்றிக்கே இருந்தார்கள்;
இதர தேவதா பிராவண்யத்தாலும் –விபரீத சாஸ்திர நிஷ்டர் ஆகையாலும் –சப்தாதி விஷய பிராவண்யத்தாலும்
–இதர ஸ்தோத்ரம் பண்ணுகையாலும் கூட்டு அல்லர்
‘அறியார் சமணர்; அயர்த்தார் பவுத்தர்;சிறியார் சிவப்பட்டார்,’ என்கிறபடியே,
பொருத்தம் இல்லாதவைகளைச் சொல்லுவாரும்,
பிரத்யபிஜ்ஞ அர்ஹமாம்படி ஒரு சேதனனைக் கொள்ளாமல் ஞான சந்தானத்தைக் கொள்ளுவாரும்,
தன்னைப் போன்று ஒரு க்ஷேத்ரஞ்சனையே ‘ஈசுவரன்’ என்று இருப்பாரும்,
வேறு தெய்வங்களைப் பற்றியிருப்பாரும்,
‘அவர்கள் தாங்கள் முற்றறிவினர்’ என்னும்படி ஐம்புல இன்பங்களைப் பற்றி அவற்றைப் பெறுகைக்காகப்
பிறரைக் கவி பாடித் திரிகின்றவர்களுமாய் இருந்தார்கள்.
அவர்களைக் கண்டவாறே, வாளேறு படத்தேள் ஏறு மாயுமாறு போன்று தம் இழவை மறந்தார்; பிறர் கேட்டினைக் கண்டால்
அதனை நீக்கிப் பின்பு தம் இழவை நீக்க நினைப்பார் ஒருவர் ஆகையாலே, ‘இவர்கள் கேட்டினை நீக்கி இவர்களையும்
கூட்டிக் கொண்டு போவோம்’ என்று அவர்களுக்குப் பரமஹிதமான நல்வார்த்தை அருளிச்செய்ய,
அவர்கள் அது கேளாமல் பழைய படியே நிற்க, அவர்களை விட்டுத் தம் நிலையிலே போருகிற இவர்,
அவர்களில் தமக்கு உண்டான வேறுபட்ட சிறப்பினைப் பேசிக் கொண்டு போருகிறார்.
அவர்கள் தாம், மங்களம் பொருந்திய எல்லா நற்குணங்களையும் உடையனாய், திருமகள் கேள்வனாய், பேரழகன் ஆகையாலே
கவி பாடுகிறது பொய் சொல்லிற்று ஆகாதே கவிக்கு விஷயம் போரும்படியாய், இவன் பாடின கவியைக் கேட்பித்துக் கொண்டாடுகைக்கு ஈடாகக்
‘கேட்டு ஆரார் வானவர்கள்’ என்றும், ‘தொண்டர்க்கு அமுது உண்ணச் சொன்மாலைகள்’ என்றும் சொல்லுகிற பரிஜனங்களையுடையவனாய்,
கவி பாடினார்க்கு வழங்குகைக்கு ‘வேண்டிற்று எல்லாம் தரும் கோது இல் என் வள்ளல்’ என்கிறபடியே, பரம வள்ளலாய்,
அவர்களுக்குக் கொடுக்கைக்கு உபய விபூதி ஐஸ்வர்யத்தை உடையனாய், ‘வல்லது ஓர் வண்ணம் சொன்னால்,
அதுவே உனக்கு ஆம் வண்ணம்’ என்கிறபடியே, இவன் யாதேனும் ஒன்றைச் சொன்னாலும் தன்னையே சொல்லியதாம்படி எல்லாச் சொற்களாலும்
குறிக்கப்படுகின்ற பொருள் தானேயானவனாய், பாடின கவி கேட்பிக்க இருந்த இடம் தேடிப்போய் அருமைப்பட வேண்டாதே,
‘எங்கும் உளன் கண்ணன்’ என்கிறபடியே, எல்லா வகையாலும் அண்மையில் இருப்பவனாய், சுலபனுமாய், கவி பாடினார்க்குப் போகம்
மோக்ஷம் முதலிய எல்லாப் பேறுகளையும் கொடுக்கின்றவனாய், அவை கொடாவிடிலும் தன்னைக் கவி பாடுகைதானே பிரயோஜனம்
போரும்படி இருக்கிற சர்வேசுவரனாய் உள்ள இறைவன் நிற்க அவனை விட்டு;
கவி பாடுகைக்கு ஈடான நன்மைகள் ஒன்றும் இன்றியே
தலையில் மயிர் இல்லாதான் ஒருவனைப் ‘பனி இருங்குழலன்’ என்றும், இளிகண்ணனைத் ‘தாமரைக்கண்ணன்’ என்றும்
இப்புடைகளிலே ஆயிற்றுக் கவி பாடுவது; கவி பாடினால் தான் தருவது ஒன்று இல்லாமையாலே நூறு கற்றையாதல்
ஒரு பொய்த்தரவாதல் ஆயிற்று எழுதுவது; வார்த்தை -பதின் கலம்-வழியில் ஓர் எண் கலம் -கூட்டில் அறு கலம் -கொடுப்பது முக்கலம்
-ஆள் கலம் போக்கி பதர் கலம் போக்கி நான் ஒரு கலம் பெற்றேன் -போலே-கல்லாத ஒருவனை கற்றான் என்றேன் –
போர் முகம் அறியானை புலியே என்றேன் -இல்லாது சொன்னேனுக்கு இல்லை என்றாய் -போலே-
இவன்தான் பலநாள் கூடி நெஞ்சு கன்றக் கவிபாடித் துணையாய் உள்ளவர்களையும்
கூட்டிக்கொண்டு செல்லுவதற்குள் ‘அவரே மாண்டார்’ என்று எதிரே வரும்படி நிலை நில்லாதாருமாய்,
ஆக, இருந்தும் இழவாய்ப் போயும் இழவாய் இப்படி அவனுக்கு இழவோடே தலைக்கட்டும்படியாய்; கவி பாடி ஒரு பயன் பெறாது
ஒழிகை அன்றிக்கே, கவி பாட்டுண்கிறவனுக்கு இல்லாத நன்மைகளையிட்டு, இருமருங்கும் துய்யான்’ என்னுமாறு
-தூயவன் -தாய் தந்தை பக்கமும் -என்றவாறு -போன்றே அன்றோ கவி பாடுவது?‘ஆனால், வருவது என்?’ என்னில்,
பிறப்பிலே சில குறைகள் உண்டாய் இருக்குமே இவன் தனக்கு? மறந்தவற்றை அன்றோ இது கேட்ட உலகத்தார் நினைப்பது?
அவனுடைய தோஷங்களை வெளியிட்டு அவ்வழியாலே தாழ்வினை விளைவிக்கின்றவர்களாய்,
பாடத் தகாதாரைக் கவி பாடுகையாலே மேல் நரகமாய், ‘இன்னானைக் கவி பாடினவன் அன்றோ இவன்?’ என்று,
‘தீண்டாதே கடக்கப்போ’ என்னும்படியாய் இருக்கிற புல்லர்களைக் கவி பாடித் திரிகிற படியைக் கண்டு;
ஆத்துமா இறைவனுக்கு அடிமையாய் இருக்க, அவனுக்கே உரியனவான உங்களுடைய உறுப்புகளைக்கொண்டு
பிறரைத் துதித்தல் ஈடு அன்று’ என்று நலத்தை அருளிச்செய்ய, இராவணனுக்கு விபீடணன் முதலியோர் சொன்ன நலம் போலே
அது பலியாது ஒழிய, ‘நலம் சொல்லவும் செவி தாழாத இவர்களோடு ஒத்த சம்பந்தம் அன்றோ நமக்கு உள்ளது?’ என்று பார்த்து
‘இவர்கள் நடுவே இத்தேசத்தில் இச்சரீரத்தோடே வாசிக்கிற நாம் முந்துற முன்னம் பகவானுக்குத் தக்கனவான
உறுப்புகளையுடையோமாகப் பெற்றோம் அன்றே!’ என்று, வழி பறிக்குமிடத்துத் தம் கையிற் பொருள் கொண்டு
தப்பிப் போனார் மகிழுமாறு போன்று தமக்கு -‘உலகம் படைத்தான் கவி ஆயினேற்கு’-உண்டான வேறுபாட்டினை
நினைந்து தம் இலாபத்தைப் பேசிப் பிரீதியோடே தலைக்கட்டுகிறார்.
ஒன்பதாம் திருவாய் மொழியிலே –
இப்படி தாமும் கரண க்ராமமும் கூப்பிட்ட படியைக் கண்ட ஈஸ்வரன் -லோகம் அடங்க இதர ஸ்தோத்ரம் பண்ணி அநர்த்தப்படா நிற்க –
நீர் நம்மை ஸ்தோத்ரம் பண்ணும்படி பண்ணினோமே -என்று இவருடைய பேற்றை பிரகாசிப்பிக்கக் கண்டு ஸந்துஷ்டாராய்
1-அவனுடைய ஸ்துத்யத்துவக்கு ஏகாந்தமான சவ்லப்ய அதிசயத்தையும் ‘
2-ஸூ லாபனுடைய சம்பந்த உத்கர்ஷத்தையும்
3-நித்ய ஸூரி நிர்வாஹகத்வத்தையும்
4-ஸ்துத்யதைக்கு அனுரூபமான -ஏகாந்தமான -சேஷித்வத்தையும்
5-அபேக்ஷித பல ப்ரதத்வமான உதார குண அதிசயத்தையும்
6-அதுக்கு ஏகாந்தமான ஸ்ரீ யபதித்வத்தையும்
7-ஸ்துதி விஷயமான குண நாம பூர்த்தியையும்
8-அவனுடைய ப்ராப்ய பாவத்தையும்
9-புருஷார்த்த ப்ரதத்வத்தையும்
10-ஜகத் ஸ்ரஷ்ட்ருதவத்தையும்
அனுசந்தித்து -எவம்ப்தா விஷயத்தை ஸ்தோத்ரம் பண்ணாதே -நிஷ்பிரயோஜனமான இதர ஸ்தோத்திரங்களைப் பண்ணி அநர்த்தப் படுகிறிகோளே–என்று
லௌகிகரைக் குறித்து ஸ்வ நிஷ்டையை உபதேசித்து அருளுகிறார்
சொன்னால் விரோதம் இது, ஆகிலும் சொல்லுவன் கேண்மினோ!
என் நாவில் இன்கவி யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன்
தென்னா தெனா என்று வண்டு முரல் திரு வேங்கடத்து
என் ஆனை என் அப்பன், எம்பெருமான் உளனாகவே.–3-9-1-
சொன்னால் விரோதம் ஆகிலும் சொல்லுவன்-1-நம் பிரயோஜனத்துக்கு இழவாக வார்த்தை சொல்லுகின்றானே!’ என்று விரோதமாய்த் தலைக்கட்டும் அன்றே உங்களுக்கு?-2-ஸ்ரீ பிரஹ்லாதாழ்வான் அசுரர் குழந்தைகளை? அப்படியே, இது உங்களுக்குக் ‘கேட்டினைத் தருவது’ என்று அறியப்பட்டதாய் இருந்ததே யாகிலும் சொல்லுகிறேன்,’ என்னுதல்.-3சேவிக்கத் தகாதாரைச் சேவித்தல் விலக்கத்தக்கது என்பதாகவும்
அமுத வெள்ளம் அன்பின் தேன் போலே அவன் இருக்க என் வாயாற்சொல்ல ஒண்ணாது;
ஆகையாலே, நான் சொன்னால் அது எனக்கு விரோதமாம் அன்றோ?-உங்கள் கேட்டினைப் பொறுக்க மாட்டாமையாலே சொல்லுகிறேன்;-நீங்கள் உங்களுக்கு விருப்பமான வற்றினின்றும் மீளமாட்டாதது போன்று, நானும் உங்களுக்கு உரிய நன்மையைச் சொல்லுவதினின்றும் மீளமாட்டாதபடி என்கிறார்-அர்த்த ஞான பர்யந்தமாகவும் வேண்டாம் -அனுஷ்டானமும் வேண்டாம் ஒ என்பதால் -கடல் ஓசைக்கு காது கொடுப்பது போலே இவை
கேடு எல்லார்க்கும் ஒத்திருக்கையால், எல்லார்க்கும் சொல்லுகிறார் ஆதலின், ‘கேண்மின்’ எனப் பன்மை-வஞ்சனே என்னும் எப்போதும் என் வாசகமே’ என்னும்படியான நா ஆதலின், ‘என் நா’ என அதனோடு ஒரு சம்பந்தத்தைக் கொண்டாடுகிறார்.-இன் கவி – இவர் கவியை ஈசுவரன் கேட்டு மகிழ்ந்தவனாய் இனியனாக, அவ்வழியாலே தமக்கு இனியதாய் இருக்கிறபடி.-இறைவனுடைய பொருளை ‘நான் என் பொருளைக் கொடுத்தேன்’ என்னலாம்படி அன்றோ சம்பந்தம் இருப்பது?-தென்னா தெனா என்று வண்டு முரல் –-பறவைகளோடு முமுக்ஷீக்களோடு அவன்தன்னோடு வாசி அறத் தென்னா தெனா’ என்னுமித்தனை.
பகவானுடைய அண்மையில் இருப்பார் எல்லார்க்கும் இதுவே பாசுரமானால், அவன் தனக்குச் சொல்ல வேண்டாவே அன்றோ? ‘தென்னா என்னும் என் அம்மான்’ அன்றோ அவன்?-திருவேங்கடத்து என் ஆனை – வேதத்தைக் காட்டிலும் ஸ்ரீராமாயணத்துக்கு உண்டான ஏற்றம் போலே, ஸ்ரீ வால்மீகி பகவான் கவி பாடின விஷயத்தைக்காட்டிலும்
தாம் கவிபாடின விஷயத்திற்கு உண்டான ஏற்றம் சொல்லுகிறார். எப்பொழுதும் துதிக்கலாம்படி இருப்பவன்.-யானை பெறக் கவி பாடுமவர்காணும் இவர்; இவர் கவி பாடிக் கட்டின யானை ஆயிற்று அவன்; கவி பாடினவர்கட்குத் தன்னை ஒழிய
வேறு ஒரு யானையைக் கொடுத்து விடுமவன் அல்லன் ஆதலின், ‘என்ஆனை’ என்கிறார்.1-என் வாயாலே ஒரு சொற்கேட்டுத் தான் உளன் ஆகாநிற்க, நான் வேறு ஒருவரைக் கவி பாடுவேனோ?-2-தான் என்னைக் கிட்டாத அன்று தன் இருப்பு இல்லையாம்படி அவன் வந்து நிற்க நான் வேறு ஒருவரைக் கவி பாடுவேனோ?’ என்னுதல்.-3-அவன் என்னைக் கொண்டு கவி பாடுவித்துக்கொள்ளுகைக்காக இங்கே வந்து நிற்கிற நிலை என்னாவது,-நான் புறம்பே போய் ஒருவரைக் கவி பாடினால்?’ என்னுதல்.-
————
உளனாகவே எண்ணித் தன்னை ஒன்றாகத் தன் செல்வத்தை
வளனா மதிக்கும் இம் மானிடத்தைக் கவி பாடி என்
குளன் ஆர் கழனி சூழ் கண்ணன் குறுங்குடி மெய்ம்மையே
உளன் ஆய எந்தையை எந்தை பெம்மானை ஒழியவே?–3-9-2-
உளன் ஆகவே எண்ணி –1-அவனைத் தவிர -ஸ்வ தந்தரமாக வஸ்து இல்லையே -அவனைச் சார்ந்து இல்லாமல் ஒன்றும் இல்லையே –2-தான் உளன் ஆகையாவது, பிரஹ்மஞானம் உண்டாகை அன்றோ?-3-தன்னைக் கட்டிக் கொண்டு போகாநிற்க, ‘எந்தக் காரணத்தால் மஹாத்துமாவான பெருமாளோடு விரோத உணர்ச்சி உண்டாயிற்றோ,-அந்தக் காரணத்தால் இலங்கை என்ற நகரமும் இல்லை; நீங்களும் இல்லை; இராவணனும் இல்லை,’ என்றானே அன்றோ திருவடி?
ஓர் ஊசி நிற்கிறதாகவும், அதன்மேலே ஒரு மேரு நிற்கிறதாகவும் நினைக்குமாறு போன்று குவாலாக மதிக்கிறான் என்பார், எண்ணி’ என்கிறார்.-தன்னை – உளன் கண்டாய் நல் நெஞ்சே உத்தமன் என்றும் உளன் கண்டாய்’ என்கிறபடியே, உளன் என்று இசைந்ததால் –நல் நெஞ்சு
கல்பிரஹ்மதேசத்திலே கரிகாற்சோழ பிரஹ்மராயன் திருவாய்மொழிக்கு வியாக்கியானம் செய்தேன்’ என்று சீயர்க்குக் காட்ட,-அவன் பக்கல் உண்டாகும் சில பயன்களை நினைத்து, பிள்ளையை ‘நீர் இதனைக் கேட்டு இவனைப் பெருமைப்படுத்தும்’ என்று அருளிச்செய்ய,
அவரும் கேட்டு, ‘ஆழ்வார் திருவுள்ளத்தை அடி ஒற்றி அவர் போன வழியே போம்படியே!’ என்ன,-ஆ! ஆ! பிள்ளை, ஆழ்வார்க்கும் எனக்கும் வாசி புத்தி பண்ணிற்றிலீரே?
கிராம காரியம் செய்து இடையிலே இதுவும் செய்ய வேண்டிற்றே எனக்கு’ என்றான்.
கண்ணன் குறுங்குடி –சர்வேசுவரன் ‘என்னது’ என்று அபிமானித்து வசிக்கும் நகரம்.
‘கண் நல் குறுங்குடி’ என்று பிரித்துப் பொருள் கூறுவார்கள் தமிழ் அறிஞர்கள்;
அப்போது ‘இடமுடைத்தாய் நன்றான திருக்குறுங்குடியிலே’ என்பது பொருள்.எந்தையை –
நான் கவி பாடுகைக்குத் தன் குணங்களைப் பிரகாசிப்பித்து வைத்த உபகாரகனை.
அன்றிக்கே,‘கவிபாடுகைக்கு வகுத்த -ப்ராப்த -விஷயமானவன்’ என்னுதல்.
‘திருக்குறுங்குடியிலே சொன்ன குணங்களெல்லாம் பத்தும் பத்தாக உடையனாய், நமக்கு நாதனுமாய்’ என்றபடி.- பிராப்தி தம் அளவில் பர்யவசியாமையாலே –என் குல நாதன் என்கிறார் – ஸமஸ்த கல்யாண குணாத்மகனாய் ப்ராப்தனுமாய் இருந்துள்ள அவனை ஒழிய ஷூத்ர மனுஷ்யரைக் கவி பாடி என்ன பிரயோஜனம் உண்டு என்கிறார்-
————
ஒழிவு ஒன்று இலாத பல் ஊழிதோறு ஊழி நிலாவப் போம்
வழியைத் தரும் நங்கள் வானவர் ஈசனை நிற்கப் போய்க்
கழிய மிக நல்ல வான்கவி கொண்டு புலவீர்காள்!
இழியக் கருதி ஓர் மானிடம் பாடல் என்னாவதே?–3-9-3-
போம் வழியைத் தரும் –1-அர்ச்சிராதி மார்க்கத்தைத் தரும்.-2-தன்னைக் கிட்டும் வழியைத் தரும்-3-வழி’ என்பது ‘பெறுகிற பேறு’ என்னுதல். ‘பெறுகிற பேறு’ என்னும் போது, தான் போம் நெறியாய், அதாவது, என்றும் ஒக்கப் பின் சென்று நடக்கையே தன்மையாய், இயற்கையான கைங்கரியத்தைச் சொல்லுகிறது-நிற்க – இப்படிப் பட்டவன் இவன் வாயாலே ஒரு சொல் கேட்க்கை தன் பேறாக நினைத்து நிற்க போய்க் அபிராப்தராய் -கவிக்கு பரிசில் கொடுக்க ஷமர் அல்லாமையாலே ஒளித்துப் போம் அவர்களை இறே தேடித் போவதே –.-புலவீர்காள் -உங்கள் விசேஷ ஞானத்துக்கு சேருமோ-மானிடம் -பாடுவதில் நன்மை உண்டோ-இழிய -தாழ்ச்சி வேற வருமே வான் கவி -கவிக்கும் அனுரூபம் இல்லையே –
——————
என்னாவது, எத்தனை நாளைக்குப் போதும், புலவீர்காள்!
மன்னா மனிசரைப் பாடிப் படைக்கும் பெரும்பொருள்!
மின்னார் மணிமுடி விண்ணவர் தாதையைப் பாடினால்,
தன்னாகவே கொண்டு சன்மம் செய்யாமையும் கொள்ளுமே.–3-9-4-
‘கவி பாடினார்க்குக் கொடுக்கச் சூடின முடி’ என்கை-தம்மையே ஒக்க அருள்செய்வர்’ -தன்னாகவே கொண்டு சன்மஞ் செய்யாமையும் கொள்ளும்’-ஒருவன்கீழே இருந்து கவிபாடுகைக்கு அடியான பிறவியைப் போக்கும்.-தலையில் முடியை வைத்து விலங்கை வெட்டி விடுமா போலே-புலவீர்காள் – ‘பேறு இழவு அறியும் நீங்கள் செய்யுமதுவோ இது? உங்கள் நன்மை நான் சொல்லவேண்டி இருப்பதே!-வர்ண ஆஸ்ரமங்களுக்குச் சேருமோ நீங்கள் செய்கிறவை? எல்லாச் சொற்களுக்கும் பொருளாய் இருப்பவன் அவன்
ஆனால், அந்தச் சொற்கள் தமக்குச் சேருமோ?’ என்கிறார்.
கோது இல் – ஒருவனுக்கு ஒன்று கொடுக்குமிடத்தில் குற்றம் அற்று இருக்கும். கொடைக்குக் கோது ஆவது,-‘கால தேச பாத்திரங்கள் பார்த்துக் கொடுத்தல், கொடுத்த பின்னர், ‘கொடுத்தோம்’ என்னும் செருக்குத் தோன்ற நிற்றல்,-கொள்ளுகின்றவனுக்குக் கைம்மாறு தேடி நெஞ்சாறல் படும்படியாகக் கொடுத்தல். ‘நீர் இதனை அறிந்தபடி என்?’ என்ன,-என் வள்ளல் –நான் அனுபவத்தைச்சொல்லுகிறேன். மணி வண்ணன் – கொள்ளும் பயனும் இன்றியே செல்வமும் இன்றியே ஒழிந்தாலும் விட ஒண்ணாதபடி ஆயிற்று வடிவழகு.-உருவத்தின் தோற்றத்தைக் கண்டு மேல் விழா நின்றது அன்றோ புறம்பு? வடிவழகு கண்டு கவி பாடினாலும் இவனையே பாட வேண்டும்;
கைக்கூலி கொடுத்து விரும்பாநின்றது அன்றோ உருவத்தின் தோற்றங்களையும்?
கொடுத்து கொள்ளாதே கொண்டதுக்குக் கைக்கூலி கையூட்டு கொடுக்க வேண்டும் –
————-
வம்மின் புலவீர்!நும் மெய் வருத்திக் கை செய்து உய்ம்மினோ!
இம்மன் உலகில் செல்வர் இப்போது இல்லை நோக்கினோம்;
நும் இன் கவி கொண்டு நும்நும் இட்டா தெய்வம் ஏத்தினால்
செம்மின் சுடர்முடி என் திருமாலுக்குச் சேருமே.–3-9-6-
நும் மெய் வருத்திக் கை செய்து உய்ம்மினோ – உங்கள் சரீரத்தை வருத்தியும் கைத்தொழில் செய்தும் வாழப் பாருங்கோள்.-இதற்கு, ‘கோட்டை சுமத்தல், புற் சிரைத்தல் செய்யமாட்டீர்களோ?’ என்று எம்பார் அருளிச்செய்வர்.
‘அத்தால் எங்கட்கு வேண்டுவன பெற்று வாழமுடியாதே! பிறரைக் கவி பாடினால் எங்களுக்கு வேண்டுவன பெற்று வாழலாம்,’ என்ன அது ஆகுமே அன்றோ, பெற்றால்?
ஆதி ராஜ்ய ஸூ சகமான திரு அபிஷேகத்தை உடைய ஸ்ரீ யபதிக்கே சேரும்
புண்டரீகாக்ஷன் என்றும் -ஸ்ரீ மான் என்றும் மஹா உதாரன் என்றும் இறே கவி பாடுவது
அது உள்ள இடத்தில் சொல்லுகையாலே அவனையே கவி பாடிற்றாம் அத்தனை
கவி பாட்டு உண்கிற தேவதையின் பேரும் தத் அந்தர்யாமி அளவும் செல்லுகையாலே அவனையே கவி பாடிற்றாம் அத்தனை
‘என் திருமாலுக்குச் சேரும்’ என்பதற்கு, ‘உங்கள் நினைவு ஒழிய, கவியின் இயற்கையாலும் திருமகள் கேள்வனைச் சேரும்’ என்னுதல். என்றது, ‘‘ஒண்தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு’ என்கிறபடியே, ஞானமாகில் அவனையே நோக்குமாறு போன்று கவிகளானவை சொற்களின் சேர்க்கையாய் இருக்கையாலே எல்லாச் சொற்களுக்கும் பொருளாக உள்ளவன் அவன் ஆகையாலும் அவனுக்கே சேரும்,’ என்றபடி.
————
சேரும் கொடை புகழ் எல்லை இலானை,ஓர் ஆயிரம்
பேரும் உடைய பிரானை அல்லால்,மற்று யான்கிலேன்;
மாரி அனைய கை, மால்வரை ஒக்கும் திண்தோள் என்று,
பாரில் ஓர் பற்றையைப் பச்சைப் பசும்பொய்கள் பேசவே.–3-9-7-
பெருமாள் சிங்காசனமும் ஸ்ரீ சத்ருஞ்சயனும் அகப்படக் கொடுத்து வெறுவியராய் நின்ற அளவிலே திரிஜடன் வந்து யாசிக்க, சரயூநதி தீரத்துக்கு இவ்வருகுபட்ட பசுக்களை அடையக் கொண்டு போ,’ என்று கொடுக்க, பெருமாள் கொடுத்தாராகில் சேரும்’ என்றார்கள் அன்றோ? அப்படியே, ‘தகுதியான கொடையால் வந்த புகழுக்கு எல்லை இல்லாதவன்’ என்றபடி.-உத் ஒன்றையே விரிக்க தானே ஆயிரம் திருவாய்மொழிகளும்-அவற்றை இவர்க்குப் பிரகாசிப்பித்த உபகாரகன் ஆதலின், ‘பிரானை’ என்கிறார். இவ்விஷயத்தை ஆயிற்றுக் கவி பாடுகிறது.-திண் தோள் மால் வரை ஒக்கும் – கொடையை நினைத்துத் தேம்புகிற தோளைக் குறித்து, ‘கொடுத்துப் பணைத்திருக்கிறது’ என்றும்,
இத்தோள் நிழலிலே அன்றோ உலகம் அடங்க வாழ்ந்து கிடக்கிறது?’
பாரில் ஓர் பற்றையை – பூமியிலுள்ளார் சிலராய், பற்றையாய் இருக்கின்றவர்களை. என்றது, ‘முளைத்து எழுந்து தீந்து போவன சில சிறு தூறுகள் உள அன்றே?
அப்படியே, பிறந்தது தொடங்கி இருக்கின்ற வரையிலும் தனக்கு உறுப்பாதல் பிறர்க்கு உறுப்பாதல் செய்யாதவர்கள்’ என்பதனைக் குறித்தபடி. போக பூமியில் சிலராகில் பொருந்தினும் பொருந்தும்’ என்பார், ‘பாரில் ஓர் பற்றை’ என்கிறார்.
அன்றிக்கே,-பாரில் ‘பற்றையை’ என்பதற்கு, பார் என்பது,நத்தமாய்,-இருப்பிடமாய் – அதனால் ஒரு குடிப்பற்றைக் கூறுகிறது என்றும்,-இல்’ என்பது, இல்லாமையைக் கூறுகிறது என்றும், பற்றை என்பது, கைப்பட்டதை இறுகப் பிடித்து ஒருவர்க்கு ஒன்றும்
ஈயாதவர்களைக் கூறுகிறது என்றும் பொருள் கூறுவாருமுளர்.-ஆயின்,‘திருணசமன்’ -புல்லுக்கு சமன் -என்று கூறப்படும் வழக்கு உளது ஆதலின், மேலதே பொருள்.பச்சைப் பசும்பொய்கள் பேசவே.– மெய் கலவாத பொய் சொல்ல நான் ஷமன் அல்லேன் –
ஆயிரம் பேரும் உடைய பிரானை அல்லால் மாற்று பாரில் ஓர் பற்றையைபச்சை பசும் பொய்கள் பேச யான் கிலேன்-
———–
வேயின் மலிபுரை தோளி பின்னைக்கு மணாளனை
ஆய பெரும்புகழ் எல்லை இலாதன பாடிப்போய்க்
காயம் கழித்து,அவன் தாளிணைக் கீழ்ப்புகும் காதலன்,
மாய மனிசரை என்சொல வல்லேன் என்வாய் கொண்டே?–3-9-8-
அவள் செவ்வி கொள்ள இட்டுப் பிறந்தவன் ஆதலின், ‘பின்னைக்கு மணாளன்’ என்கிறார்.அடிமைக்குப் பாங்கான சரீரத்தைப் பெற்று, தாய் முலைக் கீழே போய் ஒதுங்கும் இளங்குழவியைப் போன்று திருவடிகளின் கீழே ஒதுங்குவேன் என்னும் ஆசையை யுடைய யான்-கழுத்துக்கு மேலே சொல்ல என்னிலும் இசைகிறது இல்லை’ என்பார், ‘வாய்கொண்டு சொல்ல வல்லேன்’ என்கிறார்.-முடியானே’ என்ற திருவாய்மொழியிற்கூறப்படுகிற கரணங்கள் ஆகையாலே கழுத்துக்கு மேலே சொல்ல என்னிலும் இசைகிறதில்லை’ என்கிறார்.-பிறரை நிஷேதிக்கும் பிரகரணத்தில் சுய அனுஷ்டானம் சொல்வது -பிராப்தி – ‘சம்பந்தம் ஒத்திருக்கப் புறம்பே சிலர் சிலரைக் கவி பாடக் காண்கையாலே, நான் முந்துற முன்னம் இதினின்றும் தப்பப்பெற்றேன்,’ என்கிறார்.-
————
வாய் கொண்டு மானிடம் பாடவந்த கவியேன் அல்லேன்;
ஆய் கொண்ட சீர் வள்ளல் ஆழிப் பிரான் எனக்கே உளன்;
சாய் கொண்ட இம்மையும் சாதித்து, வானவர் நாட்டையும்
நீ கண்டு கொள் என்று வீடும் தரும் நின்று நின்றே.–3-9-9-
வாய் வந்தபடி சொல்ல வல்லார் இவரே ஆவர்.-இது சிலேடை: துதிப்பதற்கு உறுப்பாக வாயினைப் படைத்தபடியே’ என்பது நேர்ப்பொருள்; சிலேடை: துதிப்பதற்கு உறுப்பாக
வாயினைப் பெற்று என்பது வேறும் ஒரு பொருள்.
உபதேச நிரபேக்ஷமாகப் பெருமாள் திருவடிகளுக்கு நீரே பரிவரிறே; நான் இன்று இருந்து சொல்ல வேண்டுவது ஒன்று உண்டோ?-அடிமையில் உண்டான ருசி செவி கண்ணாகக் கண்டு அடிமை செய்யுமவரிறே.-செவியே கண் கண்ணே செவி யாக கொண்ட ஆதி சேஷன் அன்றோ-என்னைப் படைத்து அவனைப் பாட வைத்து –அவன் தாளிணை அடைய வைக்கவே -தன் பயனாகவே சிருஷ்டி-அவன், ‘பக்தாநாம் – பத்தர்களுக்காகவே’ என்கிறபடியே,-தன்னை எனக்கு ஆக்கி வைத்தான்; எனக்குக் கவி பாடக் குறை என்?’ என்கிறார்.ஆழிப்பிரான் – தானும் தன் ஆயுதமுமாய் இருக்கிற இருப்பை நான் கவி பாடலாம்படி எனக்கு விஷயம் ஆக்கினான்.-‘வலக் கை ஆழி இடக்கைச் சங்கம் இவையுடை மால் வண்ணனை, மலக்கு நா உடையேற்கு மாறு உளதோ இம்மண்ணின் மிசையே’ என்பர் பின்னும்.வானவர் நாட்டையும் – அடையக்கூடிய தேசம் நித்தியசூரிகள் இட்ட வழக்காய் இருக்கும்; ஆதலின், ‘வானவர் நாடு’ என்கிறார்.-இதனால், ஸ்ரீ வைகுண்டநாதன் பரமபதத்தில் குடியிருப்பாரைப் போன்று இருக்கின்றான் என்பதனைத் தெரிவித்தபடி.
வானவர் நாடு’ என்று வைத்து, ‘நீ கண்டுகொள்’ என்று இவனுக்கு முன்பே உள்ளது ஒன்றனைக் காட்டிக்கொடுத்தாற் போன்று-சொல்லக் கூடுமோ?’ எனின், முன்பே அங்கு உளரான நித்தியசூரிகளோடு இன்று புக்க இவனோடு வாசி அற்று இருக்கின்றான் ஆதலின், அங்ஙனம் அருளிச்செய்கிறார். ‘அதற்கு அடி என்?’ என்னில், ‘அன்று ஈன்ற கன்றின் பக்கல் வாத்சல்யத்தாலே முன் ஈன்ற கன்றைக் காற்கடைக் கொள்ளும் பசுவின் தன்மையைப் போன்ற வாத்சல்யத்தின் மிகுதியே காரணம்’
நின்று நின்றே – ‘இப்படி முழுக்கக் கொடுத்தாலும் ‘இவனுக்கு நாம் ஒன்றும் செய்யப் பெற்றிலோம்’ என்றுதிருவுள்ளத்திலே மிறுக்குப்பட்டிருக்கும்,’ என்று நம் ஆசாரியர்கள் நிர்வஹிப்பார்கள்.
அன்றியே,
‘சொன்னவற்றை அடைவு அடைவே தரும்’ என்று கூறுவாறும் உளர். என்றது, ‘முதலில், இவ்வுலக இன்பத்தை அனுபவிப்பித்துப் பின்பு ஒரு தேச விசேஷத்தைக் காட்டிக் கொடுத்துப் பின்பு கைங்கரிய சுகத்தைக் கொடுக்கும்,’ என்றபடியாம்.
அன்றியே,
‘இவ்வுலகத்தில் தன் அனுபவத்தின் நிறைவையும், பேறாகிய பரமபதத்தையும், அங்கே கைங்கரிய சுகத்தையும் தருமிடத்தில் பொறுக்கப் பொறுக்கத் தரும்’ என்னலுமாம்.
———-
நின்று நின்று பல நாள் உய்க்கும் இவ்வுடல் நீங்கிப் போய்ச்
சென்று சென்றாகிலும் கண்டு,சன்மம் கழிப்பான் எண்ணி,
ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான் கவி ஆயினேற்கு
என்றும் என்றும் இனி மற்றொருவர் கவி ஏற்குமே?–3-9-10-
இவ்வுடல்’ என்றதனால் இப்பொழுது இருக்கிற சரீரத்தையும், இதனைப் போன்ற முன்புள்ள சரீரங்களையும் நினைக்கின்றார்.-‘முன்புள்ள சரீரங்களையும் ‘இவ்வுடல்’ என்றதனால் சொல்லும்படி என்?’ என்னில், முன்புள்ள சரீரங்களும் இவ்வுடல் போலே இடையீடு இன்றி ஒரே அனுபவம் உள்ளவனவாகத் தோன்றுகிறதாயிற்று இவர்க்கு. சஜாதீயம் -பிறப்பு கர்மம் -பொது தானே இவற்றுக்கு-இந்த ஜன்ம சமாஸ்ரயணத்தால் முந்திய கர்மாக்களும் நிவ்ருத்தி ஆகும் –பத்தி உழவன் பழம்புனமே-
உலகம் படைத்தான் கவி ஆயினே்ற்கு – அவன் எதிர் சூழல் புக்குத் திரிந்து பண்ணின கிருஷி பலித்து, அவனுக்குக் கவியாகப் பெற்ற எனக்கு. என்றும் என்றும் இனி மற்று ஒருவர் கவி ஏற்குமே – காலம் என்னும் ஒரு பொருள் உள்ள அளவும் வேறு சிலரைக் கவி பாடத் தகுமோ? ‘நன்று; இப்படிப் பலத்தது அவன் சன்மம் கழிப்பான் எண்ணி ஒன்றி ஒன்றி உலகம் படைத்ததே காரணமாம் ஆகில், பின்னை எல்லார்க்கும் பலிக்க வேண்டாவோ?’ என்னில், இறைவனுடைய நினைவு தானும் சென்று சென்று ஆகிலும் என்பதே அன்றோ?
ஒரு நாளிலேயே பலிக்குமது என்பது இன்றே? ஆகையால், பலிக்கப் பலிக்கக் காணுமித்தனை. இனி, ‘என்றும் என்றும் உலகம் படைத்தான் கவி ஆயினேற்கு மற்று ஒருவர் கவி ஏற்குமே,’ என்று கூட்டி, ‘இனி, மேல் பலவாக உள்ள காலம் எல்லாம் இச்சரீரமுள்ளதனையும் இதுவே வாழ்க்கையாக இருந்து, மேல் ‘மேல் சொல்லப்போகிற சாமத்தைப் பாடிக்கொண்டிருக்கிறார்கள்’ என்றும்,
‘அஹமந்நம் அஹமந்நம் அஹமந்நம்’ என்றும் பாடப் புகுகிற எனக்கு, பகவானுக்கு வேறுபட்டிருக்கிற பொருள்களைப் பற்றிக் கவி பாடுகை போருமோ?’ என்னலுமாம்.
வேறு சிலர்க்கு நான் கவியாகத் தகுமோ?’ என்னுதல்.
அன்றிக்கே, ‘வேறு சிலர் கவியிலே நான் சேர்தல் தகுமோ?’ என்னுதல்
கவி ஆயினேற்கு மற்றொருவர் கவி ஏற்குமே?’ என்பதற்கு இரு வகையாகப் பொருள் அருளிச்செய்கிறார்: முதற்பொருள், ‘இறைவனைப் பாடுதற்கு அமைந்த புலவனாகிய யான் வேறு சிலரைப் பாடும் புலவனாதல் கூடுமோ?’ என்பது. இப்பொருளில் ‘கவி’ என்பது
ஆழ்வாரைக் குறித்தது. இதனையே, ‘அவன் எதிர் சூழல் புக்கு’ என்று தொடங்கிச் சிலரைக் கவி பாடத் தகுமோ?’ என்பது முடிய அருளிச்செய்கிறார்.இரண்டாவது பொருள், ‘அவனைப் பாடுகின்ற பாடல்களைக் கொண்டு வேறு சிலரைப் பாடுதல் கூடுமோ?’ என்பது.
இப்பொருளில் ‘கவி’ என்பது,பாடல் அல்லது பிரபந்தம் என்பதனைக் குறிக்கும். இப்பொருளையே, ‘பலவாக உள்ள காலமெல்லாம்’ என்று தொடங்கிக் ‘கவி பாடுகை போருமோ?’ என்பது முடிய அருளிச் செய்கிறார்.
————–
ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன் றனக்கு
ஏற்கும் பெரும் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
ஏற்கும் பெரும் புகழ் ஆயிரத்துள் இவையும் ஓர்பத்து
ஏற்கும் பெரும்புகழ் சொல்ல வல்லார்க்கு இல்லை சன்மமே.–3-9-11-
தகுதியான மிக்க புகழையுடையவனாய், நித்தியசூரிகளுக்கு நிர்வாஹகனாய், அம் மேன்மையோடே வந்து அவதரித்து மனிதத் தன்மையிலேபரத்துவத்தை யுடையவன் ‘அவன் உபய விபூதிகளை யுடையவன்’ என்றால், தக்கு இருக்குமாறு போன்று -சர்வேஸ்வரன் கவி இவர்’ என்றால் அதற்குப் போரும் படியிருக்கிற ஆழ்வார்
சன்மம் இல்லை – நித்தியசூரிகளைப் ‘பிறரைக் கவி பாடாதே கொண்மின்’ என்று கற்பிக்க வேண்டுவது இல்லை அன்றே? பிறத்தலால் அன்றோ பிறரைக் கவி பாட வேண்டுகிறது?
பிறரைக் கவி பாடாதே கொண்மின் என்று கற்பிக்க வேண்டும்படியான தண்ணிய பிறவிகளிலே சேரமாட்டார்கள்.
——————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
Leave a Reply