ஸ்ரீ திரு விருத்தம்–பாசுரம் -13-தனி வளர் செங்கோல் நடாவு-மல்லிகை கமழ தென்றல் -9-9–

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிறசொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

கீழே பகவத் விஸ்லேஷம் பிரஸ்த்துதமானதே விஸ்லேஷத்தில் அனைத்தும் நலிய- ஜகத்தில் பொருந்தாமல் – மல்லிகை கமழ தென்றல் -9-9-போல் தலைவி இரவி வியஸனம் துறை இது
இரவை விவரித்து பாசுரம் –

ஆஸ்வாசம் ஏற்படுத்தும் பகலை அப நோதித்து- தள்ளி அந்தகாரம் வந்து நலியா நின்றது
இந்த தசையில் வாடையால் வந்த நலிவைத் தவிர்த்து நமக்கு ரக்ஷகராவார் யாரோ என்கிறாள்-

1-ஆஸ்வாச கரமான  காலம் போகையும் ,
2-பிரதி கூலமான காலம் வருகையும் ,
3-அதற்கு ஸஹ காரிகள் குவாலா  லாகையும்
4-ரஷகன் வாராது ஒழிகையும்–முடிந்தோம் இறே என்கிறாள் .

பகல் பதார்த்த தர்சனம் பண்ணி ,இந்த்ரியங்கள் அந்ய பரம் ஆகையாலே , தரித்து இருக்கலாம் –ராத்திரி எல்லாம் ஒக்க ,உபரதமாய் ஒரு மடப் படுகையாலும் , சம்போக யோக்யமான காலம் ஆகையாலும் தரிக்க ஒண்ணாது

இப்படி பகவத் லாபம் அடியான ஆர்த்தி அதிசயத்தாலே தம்முடைய விவேகமும் குலைந்து (பகல் மறைந்து ) மோஹ அந்தகாரமும் விஞ்சி ஸ்வ பாக ஸைதில்யமும் பிறந்து விளம்ப அஷமதை அடியாக ரக்ஷக அபேக்ஷை பிறந்த ஆகாரத்தை பிரிவாற்றாத் தலைமகள் இருளாலும் வாடையாலும் ஈடுபட்ட உரைத்த பாசுரத்தாலே அனுசந்தித்து அருளுகிறார்

தனி வளர் செங்கோல்  நடாவு தழல் வாயரசவிய
பனிவளர் செங்கோல்  இருள் வீற்று இருந்தது பார் முழுதும்
துனி வளர் காதல் துழாயை துழாவு தண் வாடை தடிந்து
இனி வளை காப்பவர் ஆர் எனை வூழிகள் ஈர்வனனே
-13–தலைவி பிரிவு மேலிட இருளுக்கும் வாடைக்கும் இரங்கல் –-

தனி வளர் செங்கோல் நடாவு தழல் வாயரசவிய
நக்ஷத்ராதிகளை அடர்த்து வளரா நின்றுள்ள செங்கோலை நடத்தும் வேறே தேஜஸ் பதார்த்தங்கள் இவன் சந்நிதியில் ஒளி விடாவே-தானே உஷ்ணத்துக்கு ராஜா என்று இருக்கும் ஆதித்யன் வளரா நின்றுள்ள செங்கோலை நடத்துகிற உஷ்ண கிரண ராஜா கொஞ்சமாக ஒளி இல்லாமல் மட்டும் இல்லாமல் முழுவதுமாக அவிந்து போக -நசிக்க –அஸ்தமித்த பின்பு-

தனி வளர் செங்கோல் நடாவு –
பாவியேன் பர பஷம் பட்டது என்கிறாள்-ராத்ரியிலே சந்திரனும் நட்ஷத்ரங்களும் கூட செலுத்தினது எல்லாம் தானே ,-தானே ராத்ரியை போல,சத்தா நாசம் பண்ணி செலுத்துகை அன்றியே..
எதிரிகளும் நிற்கச் செய்தே அசத் கல்பமாம் படி தேஜஸ்ஸாலே அமுக்கி  செலுத்துகை ..-சூரியோதயம் ஆனதும் நக்ஷத்திரங்கள் ஒளி இல்லாத படி-அந்த பரபக்ஷம் ஒன்றுமே எழும்பாமல் உள்ள –இவை இருக்கவே மின்மினி போல் ஆக்கிற்றே-அதே போல் இரவில் இது இல்லாமலே போனதே-அத்தைச் சொல்லவே இது இங்கு-குருந  ப்ரச்சாதையா நஸ்ரியா —கிருஷ்ணன் தனது காந்தியால் பீஷ்மாதிகளின் ஒளி மங்கிப் போனது போலே சந்த்ரவம்சன் -ஸூர்ய குணம் கொண்டு அடக்கியது போல் )

செங்கோல் நடாவு--மனு மாந்த்தாதாக்களை போல–தழல் வாய் அரசு அவிய –-அநபிபவநீயன் கிடீர் இப்படி பட்டான்–அரசு-ஏக வீரன்–அவிய –விளக்கு அவிந்தார் போல- ஒண் சுடரோன் வாராது ஒழிந்தான் -என்னும் தசைக்கு-அவ் வருகே இருந்தபடி-விடியக் காணாமையாலே இவன் முடிந்தான் என்கிறாள்–சூர்யன் மறைய என்னாமல்-அவிய -என்றது – மீண்டும் உதயம் ஆகாமல் இரவே நீண்டதை சொல்லுமே
ஸூர்யன் அழிந்தான் என்னுமா போலே –

பனி வளர் செங்கோல் இருள் வீற்று இருந்தது பார் முழுதும்
அரசர் சிறிது அந்தகார சந்த்ராதிகளை அடர்த்து கொண்டு போனது போல் துக்கத்தை மிகப் பண்ணா நிற்கும் அந்தகாரமானது ஆதித்யனும் போய் பிரதிபக்ஷமே இல்லாமல் தனது வேண்டற்பாடு தோன்ற பூமியைத் தனக்கு இருப்பிடமாக்கிக் கொண்டதே-

பனி வளர் செங்கோல் இருள் வீற்று இருந்து –
பனித்தல்
-துளிர்த்தலும்-குளிர்த்தியுமாய்-குளிர்ச்சியை வளரா  நின்று உள்ள செங்கோலை உடைய ராத்திரி பூமி பரப்பை அடங்க தனக்கு இருப்பிடமாக கொண்டது ராஜ்ஜியம் பண்ணின ராஜா முடிந்தால் வேற ஒரு ராஜா புகுருமா போல புதுக் கோமுற்றாரை கண்டால் நடுங்குமா போல வீற்று  இருந்தது ஆதித்யன் ராஜ்ஜியம் இத்தனையும் -ராத்ரிக்கு அழகு ஓலக்கம் இருக்க போந்த இத்தனை-(பனி குளிர்ச்சி நடுக்கம் இரண்டு அர்த்தம் உண்டே )வீற்று இருந்து – இனி எதிரிகள் இல்லை என்னும் படி இருந்தது–பனி வளர் செங்கோல் வீற்று இருந்து –அரைகளிலே ஒளித்து கிடந்தார் புறப் படுமா போலே

துனி வளர் காதல் துழாயை துழாவு தண் வாடை தடிந்து
துக்கம் வளர்க்கும் காதலை விளைக்கும் திருத்துழாயை அளைந்து கொண்டு கந்தத்தை முகந்து வரும் வாடையை இரு துண்டமாக்கி-தடிந்துவெட்டி உருவம் இல்லாத காற்றை வெட்ட முடியுமோஅது செய்யும் துயரம் பொறுக்க உண்ணாமல் கோபத்தில் சொன்ன வார்த்தை

இனி வளை காப்பவர் ஆர் எனை வூழிகள் ஈர்வனனே
இப்படி நான் சிதிலமாகி உள்ள தசையில் எனது சைத்தில்யத்தைப் போக்கி ரஷிப்பார் உண்டோ
பாதகமான இவை எத்தனை காலம் ஈருமோ-

துனி வளர் காதல் துழாயை துழாவு தண் வாடை தடிந்து-தினி வளை காப்பவர் ஆர்–
துக்கம் வளரா நின்றுள்ள காதலை உடைத்தான துழையை-துழாவி வருகிற குளிர்ந்த வாடையை
இரு முறியாக வெட்டி-இனி வளையை காப்பவர் ஆர் ?—ரக்ஷக ஸந்நிதி இன்றியே பாதக ஸந்நிதி யுண்டான பின்பு கை கழலத் தேடுகிற வளையைக் காப்பவர் யார்–தண் வாடை அமூர்தம் மூர்த்தம் ஆகிற படி பாதகத்வத்தில்  உறைப்பு-(வளை -கற்பு நிறை ஆழ்வார் )-இனி வளை காப்பவர் ஆர் ? –-வந்து கிட்டுவது  காணும் என்று இருக்கிறாள்–வளை காப்பவர் ஆர்–புணர்ச்சியை உண்டாக்கிக் தருவார் யார் –எனை வூழிகள் ஈர்வனவே —அநேகமான கல்பங்கள் ஈரா நின்றன –ஆழ்வாருக்கு சம்சாரத்தோடு பொருந்தாமை இருந்த படி சொல்கிறது-

1-அஸ்தமித்த ஆதித்யன் காக்கவோ
2-அறிவு அழிக்கிற அந்தகாரம் காக்கவோ
3-வறுத்துகிற வாடை காக்கவோ
4-வருந்துகின்ற நான் காக்கவோ -என்றதாயிற்று –

(ஈஸ்வரனை ஒழிந்தவர் ரக்ஷகர் அல்லர் என்பதை பிரபன்ன பரித்ராணத்திலே சொன்னோம் )

இத்தால்
தனி வளர் செங்கோல் நடாவு தழல் வாயரசவிய-இவருடைய அனுபவ அலாப கிலேசத்தால் ஆதித்ய பிரகாசம் போலே அத்விதீயமாய் அபி வ்ருத்தமாம் படி ஈஸ்வர ஆஜ்ஜை நடத்துவதால் பாஹ்ய குத்ருஷ்ட்டி நிரசனத்தாலே பிரதாப உத்தரமான விவேகத்தை யுடைய ஸ்வரூபமும் (அனுபவ அலாப கிலேசத்தாலே ) அஸத் ஸமமாம் படி-

யத்கோஸஹரஸ்ரமபஹந்தி தமாம்ஸி பும்ஸாம்
நாராயணோ வஸதி யத்ர ஸசங்க சக்ர: |
யந்மண்டலம் ஸ்ருதிகதம் ப்ரணமந்தி விப்ரா:
தஸ்மை நமோ வகுளபூஷண பாஸ்கராய ||–
ஸ்ரீ பராங்குச அஷ்டகம் ஸ்லோகம் 4)

சூர்யனுடைய ஆயிரம் கிரணங்கள் வெளி இருளைப் போக்குவது போலே யாவர் ஒரு ஸ்ரீ ஆழ்வார் உடைய ஆயிரம் பாசுரங்கள் சகல சேதனர்களுடையவும் அகவிருளைத் தொலைக்கின்றனவோ,
சூர்யன் இடத்தில் ஸ்ரீ நாராயணன் சங்கு சக்கரங்களோடு கூடி விளங்குவது போல் அப்பெருமான் யாவர் ஒரு ஸ்ரீ ஆழ்வார் இடத்தில் அவ்விதமாகவே உறைகின்றானோ, வேத ப்ரதிபாத்யமான ஸூர்ய மண்டலத்தை அந்தணர்கள் வணங்குவது போலே யாவரொரு ஸ்ரீ ஆழ்வார் யுடைய திவ்ய ஸ்தலம் செவிப்பட்ட யுடனே பரம பாகவதர்கள் கை கூப்பி வணங்குவார்களோ – அப்படிப்பட்ட ஸ்ரீ நம்மாழ்வார் ஆகிற ஸூர்யனை வணங்குவோமாக!)

(ஆதித்ய ராம திவாகர அச்யுத பானுக்களுக்கு போகாத உள்ளிருள் நீங்கி சோஷியாத பிறவிக் கடல் வற்றி விகஸியாத போதில் கமலம் மலர்ந்தது வகுள பூஷண பாஸ்கர உதயத்தாலே–ஆச்சார்ய ஹிருதயம்–சூரணை -83-)

பனிவளர் செங்கோல் இருள் வீற்று இருந்தது பார் முழுதும்-அபிமத அலாபம் அடியான ஆந்த்யத்தை (அறியாமையை ) வர்த்திப்பிக்கிற பெருமையை யுடைத்தான மோஹ அந்தகாரமானது ஈசேஸீ தவ்ய விபாகமறத் திரோதானம் பண்ணுகையாலே தானேயாய் விட்டது–வீற்று இருந்தது பார் முழுதும்-பனியை விஜ்ரும்பிக்க வற்றான சக்தி யுள்ள தமஸ்ஸானது லோகம் எங்கும் தானே தானாய் ஸ்திரப்ரதிஷ்டித்தமாயிற்று-துனி வளர் காதல் துளாயை துழாவு தண் வாடை தடிந்து-துக்க அபி வர்த்தகமான அபி நிவேசத்துக்கு விஷயமான பகவத் போக்யதைக்கு ஸ்மாரகமாய்க் கொண்டு ஸஞ்சரிக்கிற சீதாதி துக்க ஜனகமான பாதக பதார்த்தத்தை விலக்கி–துக்கத்தை வளர்ப்பதாக காதலுக்கு விஷயமான திருத்துழாயை அளைந்து வருகிற குளிர்ந்த வாடையால் ஸோஷிதையாய் க்ருசையானேன்-இனி வளை காப்பவர் ஆர்-பர சம்பந்த ஸூசகமான என் கையில் ஆகாரத்தை இனிக் கழலாமல் நோக்குபவர் யார்–கையில் ஆகாரம் -அஞ்சலி -வளையல்கள் -சேஷத்வ பாரதந்த்ர ஸ்வரூபம் -எனை வூழிகள் ஈர்வனனே-விளம்ப அஸஹத் வடிவமான கால தைர்க்யமானது ஸ்வரூப சத்தையையும் அழிக்கத் தேடா நின்றது என்று அனுசந்தித்து அருளினார் ஆயிற்று –இப்படியான பின்பு கை கழலத் தேடுகிற வளை கழலாத படி பண்ணுவார் யார்-இக் கங்குலும் எத்தனை கல்பமாய் என்னைப் பாதியா நின்றதே என்கிறாள் தலைமகள்-இவளை என்கிறாள் தோழி-இப்படி இருவகையால் ஞான சூன்யரோடும் அஞ்ஞரோடும் இருப்பு அஸஹ்யமாய் அவனைப் பிரிகையாலே அனுகூலரும் பாதகராவாரும் விடுவாருமாய் நோவு படுகிறாள் –

ஸ்வாபதேசம்
ஸர்வேஸ்வரனுடைய பிரிவுக்கு ஆற்றா மாட்டாமல் அறிவு குலைந்து மோகம் தலையெடுத்து தளர்ச்சி பிறந்து தஞ்சம் தேடும்படியான நிலையில் ஆழ்வார் அருளிச் செய்தது-தனி வளர் செங்கோல் நடாவு தழல் வாயரசவிய–இருளை ஒழிப்பதும் -வெவ்வியதும் -தடையற்றதும் -ஒப்பிலாதான கதிரவன் ஒளி போல் மதாந்தரங்களை ஒழித்து -அதனால் பிரதாபம் மிக்கு எம்பெருமான் கட்டளையை தடை அற நடத்தி -அதனால் ஒப்பில்லாத விவேகமும் குலையும் படிபனிவளர் செங்கோல் இருள் வீற்று இருந்தது –வருத்தத்தை வளரச் செய்கிற பெருமையை யுடைய மோஹ அந்தகாரம் பரவி விட்டது -இனி மேல் பார் முழுதும்-துனி வளர் காதல் துளாயை துழாவு தண் வாடை தடிந்து–-அன்புக்கு விஷயமான எம்பெருமான் போக்யதை நினைப்பூட்டி -இவ்வுலகப் பொருளை விலக்கி-இனி வளை காப்பவர் —
மறந்தும் புறம் தொழா அடிமைத் தனத்தை பாதுகாப்பார் யார் –வளை-அநந்யார்ஹ சேஷத்வம்ஆர் எனை வூழிகள் ஈர்வனனே–கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ -கால விளம்பம் அஸஹ்யம் -என்றவாறு –

தாத்பர்யம்
ஆழ்வார் தமக்கு சம்சாரம் அஸஹ்யமான படியை – காலம் குறித்துப் போன சமயத்தில் வருவதாகச் சொன்ன நாயகன் வாராமையைக் கண்டு வருந்தி உரைத்த நாயகியின் பாசுரத்தால் பேசுகிறார்-பகல் காலத்தில் சூர்யன் நக்ஷத்ரங்களும் சந்திரனும் மறையும்படி தனது கிரணங்களை வியாபிக்கச் செய்து ஸகல பதார்த்தங்களையும் பிரகாசிப்பிக்க அவற்றைப் பார்த்துக் கொண்டு காலம் போக்கினோம்-இரவில் ஸூர்யனும் அஸ்தமித்து இராத்திரி பிரவேசித்தது-இருள் மண்டிற்று-குளிர் நடுங்கத் தொடங்கிற்று-இருள் பதார்த்தங்களை எல்லாம் மறைத்ததே
இதுக்கு மேல்-நான் ஆசைப்பட்ட திருத்துழாய் வாசனையை அளாவி வந்து வாடைக்காற்று
என்னை நலிந்தது -பாதியா நின்றது-இதனால் என் சரீரம் இளைத்து வளையல்கள் கழன்று போகவே
கழல் வளை கழலும் வளையானவே-நாயகனோ வரவில்லை-எனக்கு பாதகங்களான இவைகளைப் போக்கி நாயகன் வந்து ரக்ஷித்து அருளுவது எப்போதோ என்கிறாள்

9-9-மல்லிகை கமழ் தென்றல் -ப்ரவேஸம்

திரு நாவாயில் ஆனந்த அனுபவம் -மநோ ரதித்த இவருக்கு -பாதக வர்க்கங்களுக்கு அஞ்சி கூப்பிடும் படி அமைந்ததே –
மாலைப் பூசல் என்பர் இந்த திருவாய்மொழி –
பிராப்ய வஸ்து பெற மனோ ரதித்தார்-கீழில்
உடன் பெற கிடைக்காமல் ஒரு இரவு பட்ட வியசனம்-
கோபிகள் பட்டது போலே ஆளவந்தார் -திருமாலை ஆண்டான் பணிக்க-அத்தை எம்பெருமானார் கேட்டு அருளி –
ஆற்றாமையால் முன்பே தூது விட்டு
முடியா நின்றார்-அத்தனை ஆடல் கொடுக்க வல்ல ஆற்றாமை பாராதே –
சங்கையில் பிரிந்த துன்பம் அடைகிறார் -எம்பெருமானார் –

பெற்றி நஞ்சீயர் சிஷ்யர்-
நம்பி திருவரங்க நாராயண தாசர்-நம்பிள்ளை சிஷ்யர் –
பிள்ளை பாடு வினோதம் என்ன பெற்றி கேட்க-
அறுக்கும் வினை சாற்றினோம் -என்றாராய் – உடனே
நாளைக்கு மல்லிகை கமல் தென்றலும்
மாலைப் பூசலும் என்று பெற்றி பணித்தாராம்-
எம்பெருமானார் நிர்வாகம் -படியே பெற்றி பணித்தார் –

ஞானம் பிறந்த பின்பு சம்சாரத்தில் இருந்து கால் வாங்க மாட்டாமல் –ப்ராப்ய தேசம் புகை -மநோ ரதம் மட்டும் -இருக்க
பாதக வர்க்கங்கள் ஈரலாம் படி –பதம் செய்ததாய் ஆயிற்று
பொய் நின்ற ஞானம் -அபேக்ஷித்த பின்பும் இவரைக் கொண்டு பிரபந்தம் தலைக் கட்ட -இருத்த
விரோதியை அருசி இவ்வளவும் வர நிலை நிற்க –
வேதாந்த -ஜிஞ்ஞாஸூ ப்ரஸ்னம் -தஸ்ய தாவதேவ சிரம யாவன்ன விமோஷ்யே-என்கிற
வாக்கியம் அன்றோ இவ் வர்தத்தைச் சொல்லுகிறது

முக்தி கிடைக்கும் வரை அது வரை தான் கால தாமதம் –
முமுஷு தசையில் எப்பொழுது பெறுவோம் என்கிற நிலை போலே இந்த மாலைப் பூசல் –
தஸ்ய மே தாவதேவசிரம் -அது வரை தான் கால தாமதம் -பிராரப்ய கர்மம் தொலையும் வரை –
சிரம் -க்ஷணம் காலமும் நெடும் காலமாக தோன்றுமே -விமோஷே –ஸம்பத்ஸ்ஸே -உத்தம புருஷ சப்தம் தன்னிலை -ஆரம்பம் தஸ்ய -மே –அந்த எனக்கு –
சம்சாரத்தில் நசை அற்ற முமுஷுவான எனக்கு -என்றவாறு –

ஒரு பகல் ஆயிரம் ஊழியாக தோன்றுமே -தெரிந்த பின்பு துடிப்போம்-அதனால் இதுவும் வேதாந்த சித்தம் –
ஸ்வாபதேசம் பகல் கண்டேன் -விடிவு -இருள் தரும் மா ஞாலம் இரவு நடுவில் சந்த்யா காலம் முமுஷுத்வ தசை –
சம்சாரம் ஹேயம் -ஞானம் பிறந்த பின்பு –
அழுக்கு உடம்பும் -இனி யான் உறாமை -அந்த அருசி இது வரை நிலை -அறுக்கும் வினை -சம்சாரம் நீக்க பிரார்த்தித்தார் –
அர்த்தமாக -சப்தம் அணுகப் பெரு நாள் -என்று அருளிச் செய்கிறார் –

முடியானே கரணங்கள் சைதில்யம் சொல்லி –
இதில் அவற்றுக்கு ஆஸ்ரயமான கரணி -அவயவியும் ஒன்றாக அழிகின்றன –
ஞான கர்ம இந்திரியங்கள் ஒன்றாக அழிகின்றன
மல்லிகை – கமழ் ஸ்பர்ச இந்திரியங்கள் –குறிஞ்சி இசை ஸ்ரோத்ரியம் -தோளும் கொண்டு கர்ம இந்திரியம் –

இராமாவதாரத்தில் பதினான்கு ஆண்டு போலே ஆயிற்று-திரு வாய்ப்பாடியில் உள்ள பெண்களுக்கு
கிருஷ்ண விரஹத்தாலே ஒரு மாலைப் போது-
குணங்களால் மேம்பட்ட பெருமாளைப் பிரிகையாலே-அங்கு பதினான்கு ஆண்டுகளாய்க் கழியவும் கூடும்
இங்கு இவன் நீர்மையிலே கையடி உண்டு இருக்கையாலே
தீம்பனான நீர்மையிலே ஈடுபட்டு -ஒரு பகல் பல கல்பமாகத் தோற்றுகிறது –

விளைவான் மிக வந்து நாள் திங்கள் ஆண்டு ஊழி நிற்க எம்மை
உளைவான் புகுந்து இதுவோர் கங்குல் ஆயிரம் ஊழிகளே-திரு விருத்தம் -70
குணங்கள் தாம் கால் கட்டுவான குணங்களாய் அல்லவே-பெருமாள் இடத்தில் கிடந்தவையாய் அன்றோ
இங்கு தர்மி அதுவேயாய் -குணங்களால் மேம்பட்டதாய் –அதற்கு மேலே தீம்பும் ஆனால்-
பாடு ஆற்றப் போகாதே அன்றோ -துன்பம் பொறுக்கப் போகாது என்றது ஆயிற்று-
உலகத்தார் இனிமை உண்டு என்று நினைத்து இருக்கிற-ஐம்புல விஷயங்கள்
அனைத்தும் தமக்கு துன்புறுத்துவனவாக-பெற வேண்டிய பொருளைப் பெறாமல்
ஆண் புலியான ஸ்ரீ வீடுமர்-அர்ஜுனன் கையிலே அம்புகளால் உளைய
ஏவுண்டு கிடந்து துடித்தால் போலே-நடுவே கிடந்தது துடிக்கிறார் –
திரு வாய்ப்பாடியிலே பெண்கள் கிருஷ்ணன் பசு மேய்க்கப் புறப்பட்டால்
அவன் வரும் அளவும் அவர்கள் படும் பாடு சொல்லுகிறது –

அதாவது பிராமணர்க்கு சந்த்யா வந்தனம் போலே அன்றோ-ஆயர்கட்கு பசு மேய்க்கை ஆயிற்று-
அது சாதிக்கு உரிய தர்மம் ஆகையாலே தவிர்க்க ஒண்ணாது இருக்கும் அன்றோ –
இப்படியாலே அவனை பசுக்களின் பின்னே புறப்பட விட்டு
அவன் வரும் மாலை நேரத்தை பார்த்து இருப்பார்கள் அத்தனை -ஆயிற்று

ஆக
அவன் பசு மேய்க்க போனால் பகல் பொழுதை வருந்தி ஒரு படி ஆற்றினால்
அவன் வரும் காலமான மாலைப் பொழுதும் வந்து முகம் காட்டி
பசுக்களின் முற் கொழுந்து வந்து தலை வைக்கச் செய்தேயும்
அவன் வரக் காணா விட்டால் ஆற்றப் போகாதே அன்றோ –

அதாவது
அவன் தான் முற் கொழுந்திலே வாராமல்-பிற் கூழையிலே நிற்கும் ஆயிற்று-நடுவு படும் அலமாப்பு காண்கைக்காக-
அவன் வரக் கூடிய காலமான மாலைப் பொழுதும் வந்தது-கூட பசுக்களும் வந்தன -ஆ புகும் மாலையும் ஆகின்றது –
பசுக்களும் வந்தன -மாயன் வாரான் –அவன் தான் வரக் காணா விட்டவாறே-

அக்காலத்தில் – மல்லிகையின் பரிமளம்-நல்ல குறிஞ்சி இசை தொடக்கமான இன்பப் பொருள்கள்
தென்றல்
நிலா
கடல் ஓசை
அன்றில்
குழல் ஓசை
முதலானவை துன்புறுத்தத் தொடங்கின-

அவன் முன்னே வந்து இருந்தால் இவை எல்லாம் உத்தேச்யமாக இருக்குமே -சிங்கம் இல்லா விட்டால் நரிக் கூட்டம் நலியும் –
குழல் ஓசையும் அவ்வழியே அவனுடைய குணங்களை நினைவு ஊட்டி நோவு படுகைக்கு-உடலாய் இருக்கும் அன்றோ –

அப்படி இருக்கிற துன்புறுத்துகின்ற பொருள்கள் எல்லாம்-முன்பு தனித் தனியே இழி சொற்களைப் பேசி நலிந்த-
ஒற்றைக் கண்ணள்-
ஒற்றைக் காதள்-
உள்ளிட்ட அரக்கிகள் பின்பு-அவ்வளவிலே நில்லாதே எல்லாரும் ஒரு சேர மேல் விழுந்து
அதற்கு மேலே சில நலிவுகளைச் செய்ய நினைத்தால் போலே-துன்புறுத்துகின்ற பொருள்கள் எல்லாம்
தனைத் தனியேவும் திரளவும் மேல் விழுந்து நலிய-
அவற்றால் நலிவு பட்டவர் எல்லாரும் கூப்பிட்ட கூப்பீட்டை-இவர் ஒருவருமே கூப்பிடுகிறார்-

இது மாலைப் பூசல் –இரவு முழுவதும் துன்பம் -5-4 ஊரெல்லாம் துஞ்சி –10-3 -காலைப் பூசல் –

ஒன்பதாம் திருவாய் மொழியிலே கீழ் ப்ராப்ய விஷயமான அபி நிவேசத்தாலே ஈடுபட்டவர்
அனுபவ யோக்ய அவஸ்த்தை சந்நிஹிதையாய் இருக்கச் செய்தேயும் அநு பாவ்யானான ஈஸ்வரன்
அஸந்நிஹிதன் ஆகையால் விளம்ப அஷமதாய் படியாக போக்ய பூதனானவனுடைய
ரஞ்ச நீய திவ்ய ஸ்வபாவதையையும்
ரக்ஷண திவ்ய பிரகாரத்தையும்
ரமணீய திவ்ய அவயவத்தையும்
அபிரூப திவ்ய வாஹனத்வத்தையும்
ஆஸ்ரித ஸுலபயத்தையும்
அனவதிக ஸுசீல்யத்தையும்
அத்ய யுதார ரூபதையையும்
அதிசயித சம்ச்லேஷத்தையும்
சாபிப்ராய நிரீக்ஷணாதிகளையும்
விஸ்லேஷ அஸக்யமான ஆச்சர்ய ரூபத்தையையும்
அனுசந்தித்து ஏவம் பிரகார விசிஷ்டனான போக்கிய பூதனை யதா மநோ ரதம் அனுபவிக்கப் பெறாத ஆர்த்தியாலும்
ஸ்மாரகமாயும் ஆஸக்தி ஸூ சகமாயும் இருக்கிற பதார்த்த தரிசனத்தால் வந்த ஸைதில்யத்தாலும்
அல்ப கால விளம்பமும் பொறுக்க மாட்டாமல் கூப்பிட்ட பிரகாரத்தை
பசு மேக்கப் போந்த ஸ்ரீ கிருஷ்ணன் ஸந்த்யை வந்து இருக்கச் செய்தேயும் வாராத விளம்பம் பொறுக்க மாட்டாமல்
கோபீ ஜனங்கள் தத் கால சித்த போக்யங்களாலே ஈடுபட்டு பொழுது கண்டு இரங்கிக்
கூப்பிட்ட பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் —

மல்லிகை கமழ் தென்றல் ஈருமாலோ வண் குறிஞ்சி இசை தவரும் ஆலோ
செல் கதிர் மாலையும் மயக்கும் ஆலோ செக்கர் நன் மேகங்கள் சிதைக்கும் ஆலோ
அல்லி அம் தாமரைக் கண்ணன் எம்மான் ஆயர்கள் ஏறு அரி ஏறு எம் மாயோன்
புல்லிய முலைகளும் தோளும் கொண்டு புகலிடம் அறிகிலம் தமியம் ஆலோ –9-9-1-

மாலைக் காலத்தில் தென்றல் தொடக்கமான-பொருள்கள் –ஈருமாலோ-தவரும் ஆலோ–மயக்கும் ஆலோ–சிதைக்கும் ஆலோ-தனித் தனியே தன்னை வருத்து கிறபடியை சொல்லுகிறாள்-
மல்லிகை -என்றது முதல்-செக்கர் நன் மேகங்கள் சிதைக்குமாலோ -எனபது முடிய  இவள் யார் கேட்க கூப்பிடுகிறாள் தான் –

வட்ட வாய் நேமி வலம் கையா போலே எங்கும் வாயாக இருக்குமே வாயுவுக்கு –ரூப ரஹித ஸ்பர்சவான் வாயு —கிராண இந்த்ரியமான மூக்கிற்கு பாதகமாய்-ஸ்பர்ச இந்த்ரியமான உடம்பையும் அழியா நின்றது -என்பாள்
கமழ் தென்றல் ஈரும் -என்கிறாள் –

அல்லி அம் தாமரைக் கண்ணன் –முதல் உறவு செய்வன கண்களே அன்றோ –கண்ணோடு கண்ணினை கௌவி-ஒன்றை ஓன்று உண்ட பின் அன்றோ-மெய்யுறு புணர்ச்சி உண்டாவது –

எம்மான் –அக் கண் அழகாலே என்னைத் தனக்கே உரியவள் ஆகும்படி செய்தவன் –எம் மாயோன் –அம் மேன்மையை உடையவன்-தாழ்ந்தார் சிலர் உயர்ந்தவர்களோடு கலக்குமா போலே-
கையைக் காலைப் பிடித்து-தாழ நின்று பரிமாறின படி –கலக்கும் போது மின் மினி பறக்கும்படி காணும் கலந்தது –

புல்லிய முலைகளும் தோளும் கொண்டு –
அவனும் வாராது இருக்கிறான்-நானும் வருந்தி ஒருபடி ஜீவித்து கிடக்கிறேன்- அவனுக்காக உண்டான இந்த பிள்ளைகளைக் கொண்டு புகலிடம் அறிகிலேன்-
நான் செய்தபடி செய்ய-இம் முலைகளின் வீக்கம் தீர அனுபவிக்கப் பெறுவது எப்போதோ – பஞ்ச காலத்தில் குழந்தைகள் சோறு சோறு என்னுமா போலே படுத்தா நின்றன –
அவன் தானும் கலக்கும் போது எல்லா அங்கங்களிலும் கலப்பதற்கு-ஆற்றல் இல்லாதவன் போலே காணும்-
அவன் இழிந்த துறையும்-இளைப்பாறின இடமும்-மலராள் தனத்து உள்ளான் -இழிந்த துறை-மெல்லியல் தோள் தோய்ந்தாய் -இளைப்பாறின

ஆக-இங்கும் பொருந்தாதே-அங்குப் புகப் பெறாதே-நடுவே நின்று கிலேசப் படுகிற நிலை-மாலை நேரமாகிறது -என்று-இங்கனே ஒரு கருத்தாக சொல்லக் கடவதாய் இருக்கும் –ஸந்த்யா காலத்துக்கு ஸ்வா பதேசம் முக்தன் படும் நிலை –முன்பு தூசி ஏறின பேர்க்கு உரமாக நின்று-பேரணி உறு பூசல் ஆனவாறே திரள அமுக்குமாறு போலே-தனித்தனியே நலிந்த பொருள்கள்-வலிமை குறைய குறைய-
பல கூடி வந்து நலியா நின்றன –என்கிறாள்– மணி தென்றல் ஆம்பல் மாலை சாந்தம் பஞ்சமம் முல்லை வாடை அனைத்தும்-திரளாக வந்து நலிகிற படியை-பேசுகிறாள்-

————-

புகலிடம் அறிகிலம் தமியம் ஆலோ புலம்புறு மணி தென்ற லாம்ப லாலோ
பகலடு மாலை வண் சாந்த மாலோ பஞ்சமம் முல்லை தண் வாடை யாலோ
அகலிடம் படைத்து இடந்து உண்டு உழிந்து அளந்து எங்கும் அளிக்கின்ற வாயன் மாயோன்
இகலிடத் தசுரர்கள் கூற்றம் வாரான் இனி இருந்து என்னுயிர் காக்குமாறு என்–9-9-2-

கிரியா பதம் இல்லை -நலியும் பிரகாரங்கள் -சொல்லாமல் பொருள்களை மட்டும் -நெருப்பு நெருப்பு என்று காத்துமா போலே —இங்கு கீழ் உள்ள நிதானம் கூட இல்லை

ஈருமாலோ -தவருமாலோ -மயக்குமாலோ –சிதைக்குமாலோ -என்ன வேண்டா புலி புலி -எனபது போன்று இவற்றின் பெயரைச் சொன்னாலே அச்சம் உண்டாகிறதே

அன்றிக்கே-இவற்றின் உடைய நலிவை-வாயால் சொல்லில் வாய் வக்குரிக்கும்படி யாய் -வேகும்படியாய் -இருக்கையாலே சொல்லாது ஒழிந்தாள்

அகலிடம் படைத்து இடந்து உண்டு உழிந்து அளந்து எங்கும் அளிக்கின்ற வாயன் மாயோன்–பொதுவான ஆபத்து வந்தால் வயிற்றிலே வைத்து நோக்குமவன் கண்டீர்
தன் தேவியானவள் இப்படி துன்புறுத்தும் பொருள்களின்-கையிலே நோவு படா நிற்க இப்போது வாராது ஒழிகிறான்-என்றபடி

வாரான் – இங்கு அம்பு ஏற்கவும் வேண்டா-பகைவர்களும் இலர்-முகம் காட்ட அமையும் –

இனி இருந்து என் உயிர் காக்குமாறு என் –
வரைந்து நோக்குவான் ஒருவனாய் நான் ஆறி இருக்கேனோ-
வரும் இடத்தில் தடை உண்டு என்று ஆறி இருக்கிறேனோ-
என்னைப் பாது காத்து கொள்வதில் எனக்கு சம்பந்தம் உண்டாய்த்தான் ஆறி இருக்கிறேனோ

இப்பொழுது -இனி இருந்து -என்கையாலே இதற்கு முன்பு எல்லாம் அவன் சரக்கு அழிய ஒண்ணாது -என்று-நோக்கிக் கிடந்தமை தோற்றுகிறது-
பிறர் -சர்வேஸ்வரன் -உயிராகத் தான் நோக்கி இருக்கிறேனோ -என்பாள்–அவன் விரும்பா விட்டால் நோக்கப் போமோ –என் உயிர் -என்கிறாள்
இவற்றின் கையில் நோவு பட-எனக்கு பணி யாகவோ என்னுடைய உயிரைப் பாதுகாப்பது -என்றபடி-துஷ்கரம் க்ருதவான் ராம பிரபு -என்று திருவடி –

———-

இனி இருந்து என் உயிர் காக்குமாறு என் இணை முலை நமுக நுண்ணிடை நுடங்க
துனியிரும் கலவி செய்து ஆகம் தோய்ந்து துறந்து எம்மை விட்டு அகல் கண்ணன் கள்வன்
தனி இளம் சிங்கம் எம் மாயன் வாரான் தாமரைக் கண்ணும் செவ்வாயும்
நீலப் பனி இரும் குழல்களும் நான்கு தோளும் பாவியேன் மனத்தே நின்று ஈருமாலோ–9-9-3-

கண்களுக்கு இலக்கான பொருள்கள்-முழுதும் துன்புறுத்த புக்கவாறே-அவற்றுக்கு அஞ்சி கண்களைச் செம்பளித்தாள்-பாஹ்யமான பாதகங்கள் அன்றிக்கே அதி ரமணீயமான -அவன் அவயவங்கள் ஆந்தரங்கமாக நலிய-
அகவாயிலே அவன் அழகு நினைவுக்கு வந்து-நலியா நின்றது -என்கிறாள்-மனத்தே நின்று ஈரும் -என்கையாலே கண்ணை மூடினாள் எனபது தானே போதரும்-செம்பளித்தல் -மூடுதல்

இணை முலை நமுக நுண்ணிடை நுடங்க துனியிரும் கலவி செய்து ஆகம் தோய்ந்து-முலைகள் இளைக்க -இடையை நுடங்கும் படி -தளரும் படியாக
மார்பு -பக்தி -இடை வைராக்யம் -கண் -ஞானம் -அவனுக்கு-கலக்கும் போது எதிர்த் தலையை பேண அறிந்திலன் –தன் காதல் தீர்ந்தான் இத்தனை -என்றபடி –

ஆகம் தோய்ந்து–இக் கலவியாலே நீராகச் செய்து-இவளோடு கலந்தவன் ஆயிற்று –நீராட்டம் -ஸ்ரீ கிருஷ்ண அனுபவம் -தோய்தல் –வில்லிறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் என்னும் -நீர்ப் பண்டமாகி உருக்கி பின்பு தோய்ந்தான் -இட்டு -அசேதனம் போலே பொகட்டு-அகலுகையே நிரூபகம் கிருஷ்ணனுக்கு –விட்டு அகல் கிருஷ்ணன் -ஸ்வரூப நிரூபக தர்மம்

தனி இளம் சிங்கம்—தனி-இவளுடைய கலவியாலே ஒப்பற்றவனாக இருந்தான்-என்று தோற்றும்படி இருந்தான் –
இளம்–கலக்க கலக்க கீழ் நோக்கிப் பிராயம் புகா நின்றான் ஆதலின்-இளமை -என்கிறது –
சிங்கம்–இவளுடைய கலவியாலே பெறாப் பெறு பெற்றானாய் மேல்-நாணித்து இருந்தான் ஆதலின் -சிங்கம் -என்கிறது –

தாமரைக் கண்ணும் செவ்வாயும் -நீலப்பபனி இரும் குழல்களும் நான்கு தோளும்பாவியேன் மனத்தே நின்று ஈருமாலோ-
அவன் கண்களுக்கு தோன்றாது ஒழிந்தால்–இவை நெஞ்சுக்கு தோன்றாது ஒழிந்தால் ஆகாதோ –தான் போகிறான்-இவற்றை வைத்துப் போக வேண்டுமோ –

தாமரைக் கண்ணும் –கலந்த போது தன் பேறு என்று தோற்றும்படியான-திருக் கண்களை உடையவன் -என்னுதல் –
பிரிவினை நினைத்து வாய் விட மாட்டாதே-ஆற்றாமை அடங்கலும் நோக்கிலே தோற்றும்படி நின்ற நிலை -என்னுதல்

செவ் வாயும் –பிரிவினைச் சொல்லப் புக்கு முடியச் சொல்ல மாட்டாதே-போதைச் சிவந்த திரு அதரமும்-
இவனுடைய -நிமியும் வாயும் கண்களும் -6-5-2- இருக்கிறபடி-நிமியும் வாய் -உதடு நெளிக்கிற வாய்-

மனத்தே நின்று ஈருமாலோ- மனத்திலே எப்பொழுதும் நின்று நலியா நின்றது
அணைக்கும் படி கைக்கு எட்டுதல்-நெஞ்சுக்கு எட்டாது ஒழியல்-செய்யப் பெற்றிலன் – அறிவு அழிந்து-மறந்து பிழைக்க-ஒண்ணாதபடி-செய்தான் ஆயிற்று –

பாவியேன் மனத்தே நின்று ஈருமாலோ-அனைவருக்கும் சாதகம் எனக்கு பாதகம் ஆவதே -பிரிந்து இருந்து -ஈடு படுக்கைக்கு ஈடான பாபங்கள் –

———

பாவியேன் மனத்தே நின்று ஈருமாலோ வாடை தண் வாடை வெவ்வாடை யாலோ
மேவு தண் மதியம் வெம் மதியமாலோ மென் மலர்ப் பள்ளி வெம் பள்ளி யாலோ
தூவியம் புள்ளுடைத் தெய்வ வண்டுதைத்த எம் பெண்மை யம் பூவி தாலோ
ஆவியின் பரமல்ல வகைகளாலோ யாமுடை நெஞ்சமும் துணை யன்றாலோ–9-9-4-

தூவியம் புள்ளுடைத் தெய்வ வண்டுதைத்த எம் பெண்மை யம் பூவி தாலோ-அபி ரூபமான கருட வாஹனம் உடையவன் புஜித்த -பெண்மை ஆஸ்ரயமும் ஈடு படும் படி -அகவாயில் நலிகிறது ஒழிய-நேராக வந்து நின்றும் பெண்மை –ஸ்பர்சம் முதலியவற்றால் வந்து நின்றும் -வாடை -போல்வன-நினைப்பூட்டுதலால் வந்து நின்றும் —அம் பூ இது ஆலோ  -அழகிய பூ போன்ற இது-புஷபமாக நான் இருக்க-பெண்மை ஸ்த்ரீத்வம் -என்னுடைய பெண்மை யாகிற பூ –பெண்மையாம் பூ -பாட பேதமும் உண்டே-மென் மலர்ப் பள்ளி-நலிகிற பொருள்களைச்-சொல்லுகிறாள்-

வாடை தண் வாடை வெவ்வாடை யாலோ-சம்ச்லேஷ தசையில் பொதுவாக அனைவருக்கும் -குளிர்ந்த வாடை -இப்பொழுது விஸ்லேஷத்தில் எனக்கு மட்டும் வெவ்வாடை ஆனதே -தாய்மார் வார்த்தையைக் கேட்டு தண் வாடை என்கிறாள்-தன் அனுபவத்தால் வெவ்விய வாடை -என்கிறாள்-வாயோர் அக்னி -ஸூக தாதா -வாயுவின் பிள்ளை அன்றோ நெருப்பு –பிள்ளையை இட்டுச் சொல்லுமா போல்  வெவ்விய வாடை-

மேவு தண் மதியம் வெம் மதியமாலோ – உலகத்தார் வெம்மைக்கு அஞ்சி நிலாவிலே ஒதுங்க காண்கையாலே-தானும் அதிலே ஒதுங்கப் பார்த்தாள்-அவன் நெருப்பு மயமான சந்தரன் ஆனான்-அவன் நெஞ்சு அறிந்தவன் ஆகையாலே -இச் சந்திரனும் வேறு பட்டான் –-சந்த்ரமா மநசோ ஜாத -புருஷ ஸூக்தம் படி- பரம் பொருளின் மனத்தில் இருந்து சந்தரன் உண்டானான் -என்னக் கடவது அன்றோ-ஆயன் தன் மனம் கல்லானது -9-9-5-அறிந்து மதி கேடாய் இருந்தது

—————

யாமுடை நெஞ்சமும் துணையன்றாலோ ஆ புகுமாலையும் ஆகின்றாலோ
யாமுடை ஆயன் தன் மனம் கல்லாலோ அவுனுடைத் தீங்குழல் ஈருமாலோ
யாமுடைத் துணை என்னும் தோழி மாரும் எம்மின் முன்னவனுக்குமாய் வராலோ
யாமுடை யார் உயிர் காக்குமாறு என் அவனுடை யருள் பெறும் போதரிதே–9-9-5-

எல்லா பொருள்களும் தம்தம் தன்மைகளை நீக்கி வேறு பட்டனவாக–நெஞ்சம் துணை அன்று -துணை என்னும் தோழி மாரும் மாய்வர்-
அவ்வளவிலும் அவனுடைய திருவருள் அரிதானால்-அவனுடை யருள் பெறும் போதரிதே-தரித்து இருப்பதற்கு விரகு உண்டோ-என்கிறாள்-

என்னது என்று விரும்ப அமையும் அன்றோ-துணை இன்றிக்கே ஒழிகைக்கு-
யாமுடை நெஞ்சம் – யாமுடை ஆயன் -யாமுடை தோழி மார்-ஆ புகு மாலையும் ஆகின்றாலோ –

யாமுடை யார் உயிர் காக்குமாறு என் –இத் தனிமையில் ஆத்துமாவைத் தரித்துக் கொண்டு இருப்பதற்கு விரகு -என்-பிறர் உயிர் ஆகில் நோக்கவுமாம்–ஆதலால் யாமுடை உயிர் -என்கிறாள்

————-

அவனுடை யருள் பெறும் போதரிதால் அவ்வருள் அல்லன வருளும் அல்ல
அவன் அருள் பெருமள வாவி நில்லாது அடு பகல் மாலையும் நெஞ்சும் காணேன்
சிவனோடு பிரமன் வண் திரு மடந்தை சேர் திரு வாகம் எம்மாவி ஈரும்
எவன் இனிப் புகுமிடம் எவன் செய்கேனோ ஆருக்கு என் சொல்லுகேன் அன்னைமீர்காள்–9-9-6-

அகலகில்லேன் இறையும்-என்று-நித்ய வாசம் செய்கிற பிராட்டியோடு வேறு ஒன்றிலே நோக்கு உள்ளவர்களான பிரமன் சிவன்-முதலானவர்களோடு வாசி அற-உடம்பு கொடுக்குமவனுடைய -சௌசீல்யம்
சிவனோடு பிரமன் வண் திரு மடந்தை சேர் திரு வாகம் எம்மாவி ஈரும்-என் உயிரை ஈரா நின்றது–அச் சீலத்தை உடைய திருமேனி நித்தியமான ஆத்துமாவை-முடியா நின்றது–என்கிறாள் –காபாலி கந்தர்க்கு எளிதானது கண்டீர் எனக்கு அரிதாயிற்று-ஆயின் புறம்பே சென்றாகிலும் தரிக்கல் ஆகாதோ என்ன-காபாலி கந்தர் -மூலம் -பிரமன் என்றபடி –

அடு பகல் மாலையும் நெஞ்சும் காணேன் –பகல் அடு மாலையும் -பகலை முடித்துக் கொடு வந்து-மாலையும் தோற்றா நின்றது –நெஞ்சையும் காண்கின்றிலேன்-எம்பெருமானார் நிர்வாகம்
அன்றிக்கே-மாலையும் காண்கின்றிலேன்-நெஞ்சையும் காண்கின்றிலேன் -என்னுதல் -என்றது –ஆளவந்தார் நிர்வாகம் –
மேலே வருகிற காலத்தின் உடைய கொடுமையைப் பார்த்தவாறே-மாலையே தேட்டமாக இருக்கிறது -என்றபடி
வழியில் போகா நிற்க வழி தெரியாமல் மயங்கினால்-கையில் பொருளைக் கொண்டாகிலும் வழி காட்ட வல்லடிக்காரரை யாகிலும் கிடையாதோ -என்னுமாறு போன்றும்
ஒற்றைக் கண்ணள்- ஒற்றைக் காதள் -தொடக்கமான அரக்கியர்கள்-கையில் காட்டிக் கொடுத்து இராவணன் பேர நின்றால் போலே
ஆற்றலாம்படியான பகலை முடித்துக் கொடு வந்த மாலை நேரமானது-தேட்டமாம்படி யாய் வந்து விழுந்தது -என்றபடி –பகல் -ஜடாயு -மாலை -ராவணன் -இரவு ராக்ஷஸிகள் போல்

ஆருக்கு என் சொல்லுகேன்-மீனுக்கு தண்ணீர் வார்த்தால் போன்று நித்ய ஸூரிகளுக்கு சொல்லவோ
ஈஸ்வரோஹம் -என்று இருக்கும் பிரமன் முதலானவர்க்கு சொல்லவோ
விஷயங்களில் ஈடுபட்டவர்களாய் திரியும் சம்சாரிகட்குச் சொல்லவோ

அன்றிக்கே
ஆச்சார்யனை அடைந்து-ஸ்வரூப ஞானம் பிறந்து-துறும்பு நறுக்கலாகாது -என்று இருக்கிற செங்கோடு குட்டைகளுக்கு சொல்லவோ
செங்கோடு குட்டை -செவ்வையாக கொடுக்கிற நாழி-தாம் கொண்ட கொள்கை விடாதவர்கள்-கிருஹீதக் ராஹிகள்-
உபாய பாவத்தில் செய்வதற்கு ஒன்றும் இல்லை -கைங்கர்யம் வேண்டாம் என்று சொல்ல வில்லை என்று உணராதவர்கள் —
யாருக்கு எதனைச் சொல்ல-சொல்லுதற்கு வார்த்தை இல்லை-கேட்கைக்கு அதிகாரிகளும் இல்லை

———–

ஆருக்கு என் சொல்லுகேன் அன்னைமீர்காள் ஆர் உயிரவள் அன்றிக் கூர் தண் வாடை
காரொக்கும் மேனி நம் கண்ணன் கள்வம் கவர்ந்தவத் தனி நெஞ்சம் அவன் கண் அக்தே
சீருற்ற அகில் புகை யாழ் நரம்பு பஞ்சமா அம் தண் பசுஞ்சாந்து அணைந்து
போருற்ற வாடை தண் மல்லிகைப் பூப் புது மணம் முகந்து கொண்டு எறியுமாலோ–9-9-7-

மேல் கூறிய துன்புறுத்தும் பொருள்கள் -வரிசையாக எட்டு பொருள்களும்-எல்லாம்-திரண்டு வந்து கண் பாராதே நலியா நின்றன –என்கிறாள்-பரிமளம் கொண்ட அகில் புகை -யாழின் நரம்பு -பஞ்சம பண் -குளிர்ந்த சந்தனம் -அளைந்து -சஹகாரி இல்லாமல் போர் உற்ற வாடை
கவசம் பூண்டு -இவற்றை -மணத்தை கானத்தை ராகத்தை குளிர்ந்த சந்தனம் க்ரஹித்துக் கொண்டு செவ்வியான மல்லிகைப் பூ -நஞ்சு -புது மணம் முகந்து -வந்து -வீசா நிற்கும்

ஆருக்கு என் சொல்லுகேன்–நெஞ்சம் உங்களதாய்-துன்புறுத்தும் பொருள்கள் இனிய பொருள்கள் என்று அவற்றைத் தேடித் திரிகிற-உங்களுக்குச் சொல்லவோ-என் நெஞ்சினாரும் அங்கே ஒழிந்தார்- என்கிறபடியே-அதுவும் மீளா இடத்தே புக்கதே –

காரொக்கும் மேனி நம் கண்ணன் கள்வம் கவர்ந்தவத் தனி நெஞ்சம் அவன் கண் அக்தே –
மேகம் போன்று சிரமத்தை போக்கும் வடிவு உடையவனாய்-அவ்வடிவைக் காட்டி என்னை தனக்கே உரியவள் ஆக்கி-எனக்கு உரிமைப் பட்டவனான கிருஷ்ணன் உடைய-
கள்வம் உண்டு-கலவிக் காலத்தில் பேசின தாழ்ந்த பேச்சுகளும்-செய்த செயல்களும்
அவற்றாலே கவரப் பட்ட ஒப்பற்றதான என் மனதானது அவன் பக்கலது-பேச்சும் செய்கையும் – நாச்சியார் திருமொழி -2-4–என்னக் கடவது அன்றோ

————

புது மணம் முகந்து கொண்டு எறியுமாலோ பொங்கிள வாடை புன் செக்கராலோ
அது மணந்து அகன்ற நம் கண்ணன் கள்வம் கண்ணனில் கொடுத்தினியதனிலும்பர்
மது மண மல்லிகை மந்தக் கோவை வண் பசும் சாந்தினில் பஞ்சமம் வைத்து அது மணம் தின்ன அருள் ஆய்ச்சியர்க்கே ஊதும் அத் தீம் குழற்கே உய்யேன் நான்-9-9-8-

ஆய்ச்சியர்க்கே ஊதும் அத் தீம் குழற்கே உய்யேன் நான்-இரண்டு ஏவ காரங்கள் –தீம் குழலே -ஆய்ச்சியர்க்காகவே ஊதுவது –

மேலே தனித் தனியாகவும்-திரண்டும் வந்த-பாதகப் பொருள்கள்-ஒன்றுக்கு ஓன்று முற்கோலி-நலியா நின்றன-என்கிறாள்-சாந்தினில் பஞ்சமம் வைத்து-நான் முன்னே என்றவாறு -அக்காலத்தில் காட்சியால் -உண்டான இனிமை -கேட்பதிலும் இனிமை -கோபால சூடாமணி -பிரகாசிப்பிக்கும் -இதற்கே நான் முடிந்தேன் –

புன் செக்கராலோ –செக்கர் வானமும் சென்று மறையும் அளவாயிற்று -என்றது
மேல் வருகிற காலத்தின் தண்மையைப் பார்த்தவாறே-பகலைப் போன்று மாலைப் பொழுதும் தேட்டமாய் வந்து விழுந்தது-ஆளவந்தார் நிர்வாஹம் படி வியாக்யானம் இது –
எம்பெருமானார் நிர்வாஹம் -புன்மை தண்ணியமாய் -கொடிய செக்கர் வானமும் வாரா நின்றது-

அது மணந்து அகன்ற நம் கண்ணன் கள்வம் கண்ணனில் கொடிது –அது -பேச்சுக்கு நிலம் இல்லாத படிக்கு ஆயிற்று கலந்தது –அப்படி கலந்து அகன்ற நம் கண்ணபிரானுடைய-கலக்கிற போதை தாழ்ந்த பேச்சுக்களும்-அவன் வருத்துவதைக் காட்டிலும் வருத்தா நின்றன

பஞ்சமம் வைத்து அது மணம் தின்ன அருள் ஆய்ச்சியர்க்கே ஊதும் அத் தீம் குழற்கே உய்யேன் –பஞ்சமம் ஆகிற பண்ணையும் கூட்டிக் கொண்டு-குழல் ஓசை துன்புறுத்துகிறது -என்னுதல்-இவற்றில் பஞ்சமம் என்கிற பண்ணையும் கூட்டிக் கொண்டு -என்னுதல்

குழற்கே உய்யேன் நான் –துன்புறுத்தும் மற்றைப் பொருள்களுக்கு பிழைத்து இருந்தேன் ஆகிலும்-இக் குழல் ஓசைக்கு நான் பிழைக்க மாட்டேன்-அவை எல்லாம் ஒரு படியும்-இது ஒரு படியும் ஆயிற்று நலிகிறபடி

————–

ஊதும் அத் தீம் குழற்கே உய்யேன் நான் அது மொழிந்து இடை இடைத் தன் செய் கோலம்
தூது செய் கண்கள் கொண்டு ஓன்று பேசித் தூ மொழி இசைகள் கொண்டு ஓன்று நோக்கிப்
பேதுறு முகம் செய்து நொந்து நொந்து பேதை நெஞ்சு அறவு அறப் பாடும் பாட்டை
யாதும் ஒன்றும் அறிகிலம் அம்ம அம்ம மாலையும் வந்தது மாயன் வாரான்–9-9-9-

கண்கள் கொண்டு ஓன்று பேசித் தூ மொழி இசைகள் கொண்டு ஓன்று நோக்கி–முக்த ஜீவன் -சுத்த ஆத்ம ஸ்வரூபம் –அசித் மிஸ்ராத் விஸுக்தாத் -15 அத்யாய ஸங்க்ரஹ ஸ்லோகம் –சங்கல்ப ரூப ஞானம் -கொண்டே பார்த்து கேட்டு -கண் காது மூலம் இல்லை –பண்டே ஆயர் பெண்கள் நடுவே-இவன் குழல் ஊதுகிற போது-நடு நடுவே தன் ஆற்றாமையாலே சில வார்த்தைகளை பேசிக் கொண்டும்-சில செயல்களைச் செய்து கொண்டும்-பாடும் பாட்டை நினைத்து-ஒன்றும் தரிக்க மாட்டு கின்றிலேன் –என்கிறாள் –வாக்கின் பேச்சும் கண்களின் நோக்கும்-மாறாடின படி -என்னுதல் –

அது மொழிந்து இடை இடைத் –இடை இடை -அது -மொழிந்து-
பிரிந்தேன்-ஆற்றேன்-என்றாப் போலே சொல்லுகிற இழி சொற்களை இடை இடையே சொல்லி-ஆயிற்றுப் பாடுவது-தாழ்ந்த செயல்களையும் சொற்களையும் தன் வாயாலே-சொல்ல மாட்டாமையாலே –அது -என்கிறாள் –
எம்பார் -இந்த இடம் வந்தவாறே மோர் உள்ளதனையும் சோறேயோ-தேசிகரும் கூட பாசுரம் இட்டு சொல்ல மாட்டாதே -அது-என்னா நிற்க மத்யஸ்தரான நாம் இதற்கு என்ன பாசுரம் இட்டுச் சொல்வது -என்று அருளிச் செய்தாராம் –
அன்றிக்கே –அது ஒழிந்து–என்ற பாடமான போது-அது தவிர்ந்து -என்னுதல் –அதாவது
நடு நடுவே-தாழ்ந்த சொற்களை சொல்லிப் பாடுகிற பாட்டை விட்டு -என்றபடி –
குழகன் என் தன் கோமள பிள்ளாய் –மழலை மென்னகை இடை இடை அருள வாயிலே முலை இருக்க வென் முகத்தே
எழில் கொள் நின் திருக் கண்ணினை நோக்கம் தன்னையும் இழந்தேன் இழந்தேன் -பெருமாள் திருமொழி -7-7-

பேதுறு முகம் செய்து -நித்ய நிர்விகார தத்வம் -ஜென்ம கர்ம மே திவ்யம் –

மாயன் வாரான் –தன்னைப் பிரிந்தார் நாணம் உறும்படி-தானே இழவாளனாய் வந்து-காலைப் பிடிக்கும் ஆச்சர்யத்தை உடையவன்-வருகின்றிலன் –

————

மாலையும் வந்தது மாயன் வாரான் மா மணி புலம்ப வல்லேறு அணைந்த
கோல நன் நாகுகள் உகளுமாலோ கொடியன குழல்களும் குழறுமாலோ
வாலொளி வளர் முல்லை கரு முகைகள் மல்லிகை யலம்பி வண்டாலுமாலோ
வேலையும் விசும்பில் விண்டு அலறுமாலோ என் சொல்லி உய்வன் இங்கு அவனை விட்டே–9-9-10-

மாலையும் வந்தது மாயன் வாரான்–என் சொல்லி உய்வன் இங்கு அவனை விட்டே–வருவதாக சொன்ன காலம் வந்திருக்க-அவன் வருகின்றிலன்-துன்புறுத்துகின்ற பொருள்களின் நடுவிலே-அவனை ஒழிய தரிப்பது எங்கே –என்கிறாள் –நான் பிழைக்க என்று ஓன்று உண்டோ -முடிந்தேன் -என்றபடி –

கோல நன் நாகுகள் உகளுமாலோ-வாலொளி வளர் முல்லை கரு முகைகள் மல்லிகை யலம்பி வண்டாலுமாலோ-திர்யக்குகள் ஆனவை கல்வியால் வந்த உவகைக்கு போக்கு விட்டு களிப்பனவும்-குதித்து ஆடா நின்றனவும் ஆகா நின்றன

கொடியன குழல்களும் குழறுமாலோ-எல்லாரும் ஒரு சேரக் குழல்களை வாங்கி-சாம்யா பத்தி — ஆயர்களுக்கு குழல் உண்டே-வாரணம் ஆயிரம் இத்யாதி –தன்னேராயிரம் பிள்ளைகள் போலே -இங்கேயே அருளுவான் —

————

அவனை விட்டு அகன்று உயிர் ஆற்ற கில்லா அணி யிழையாய்ச்சியர் மாலைப் பூசல்
அவனை விட்டகல்வதற்கே யிரங்கி அணி குருகூர்ச் சடகோபன் மாறன்
அவனியுண்டு உமிழ்ந்தவன் மேல் உரைத்த ஆயிரத்துள் இவை பத்தும் கொண்டு
அவனியுள் அலற்றி நின்று உய்ம்மின் தொண்டீர் அச் சொன்ன மாலை நண்ணித் தொழுதே–9-9-11-

அவன் பக்கல் ஆசை உடையார்-இத் திருவாய் மொழியைச் சொல்லி-அவனைப் பெருங்கோள் என்கிறார்-அச் சொன்ன மாலை நண்ணித் தொழுதே-திரு மாலை சொன்ன –அப்படிப் பட்ட -கோபிகா ஸ்த்ரீகள் கோகுலத்தில் நின்று –மாலைப் பூசல்-மாநசமாக ஆழ்வார் அங்கே சென்று அருளிச் செய்ய-அவர்கள் எல்லாரும் பட்ட துன்பத்தை இவர் ஒருவரும் பட்டார் -என்கை- -வ்யாமோஹனை அடைந்து -அனுபவிப்பார் –
கோபிமார் தனித்த தனியே -திரளாகவும் கூப்பிட்ட பாசுரங்கள் –மாலையும் இருக்கும் மாயனும் இருப்பான் -கைங்கர்யமும் கிட்டும்

இத்தால் ஆழ்வார் உடன் ஸம்ஸலேஷித்தான் -நான்கு பதிகமாக பட்ட பாடு தீர்ந்து அடுத்த திருவாயமொழி மாலை நண்ணி என்பதால்

அவனியுண்டு உமிழ்ந்தவன் மேல் உரைத்த ஆயிரத்துள் இவை பத்தும் கொண்டு–இப்போது இது சொல்லிற்று-விரகப் பிரளயத்தின் நின்றும்-தம்மை எடுக்க வேண்டும் -என்கைக்காக-அகாராம் ஈஸ்வர விசேஷணம் –அம்மாலை -ஆலோ ஆலோ என்று கதற வைத்த வியாமோஹன்-இப்பாசுரத்தை கற்பார்க்கு என்னைப் போன்று கூப்பிட வேண்டா –
என் சொல்லி உய்வன் -என்று-ஆசைப் பட்ட பேறு பெறுகையில் கண் அழிவு இல்லை –

மல்லடிமை செய்யும் நாள் மால் தன்னைக் கேட்க அவன்
சொல்லும் அளவும் பற்றாத் தொன்னலத்தால் செல்கின்ற
ஆற்றாமை பேசி யலமந்த மாறன் அருள்
மாற்றாகப் போகும் என் தன் மால்
–89-அவனை அனுபவிக்கப் பெறுவதற்கு முன்னே
தத் ப்ராப்தி ஸூசகமான அடையாளங்களைக் கண்டு நோவு பட்டுச் செல்லுகிறபடியை பகல் எல்லாம் பசு மேய்க்கப் போன ஸ்ரீ கிருஷ்ணன் மீண்டு வருவதற்கு முன்னே அவன் வரவுக்கு அடையாளமான
மல்லிகை கமழ் தென்றல் முதலான வஸ்துக்களைக் கண்டு ஸ்ரீ திரு ஆய்ப்பாடியில் இடைப் பெண்கள்
அந்த ஸ்ரீ கிருஷ்ண விரஹத்தாலே சந்த்யா சமயத்திலே நோவு பட்டுச் செல்லுகிற துறை மேலே வைத்து அருளிச் செய்கிற மல்லிகை கமழ் தென்றலில் அர்த்தத்தை-மல்லடிமை -இத்யாதியாலே அருளிச் செய்கிறார்-இப்படி ஆற்றாமையை அருளிச் செய்து-முன்னாடி தோற்றாமல் அலமந்து நிலம் துழாவின ஸ்ரீ ஆழ்வார் அருள் –அஞ்ஞானத்துக்கு பிரதிபடமாக என்னுடைய அஞ்ஞானம் நிவ்ருத்தமாகும் –

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading