ஶ்ரீமத் வல்லபாசார்ய விரசிதம் ஸ்ரீ மதுராஷ்டகம்–

ஸ்ரீ நாத் –முதலில் பிரதிஷ்டை செய்து அருளியவர்-ஸ்ரீ வல்லபாச்சார்யர்-1479–1530-புஷ்ட்டி மார்க்க வைஷ்ணவ சம்ப்ரதாயம் – ஆந்திர -முன்னோர்-ஸ்ரீ பால கிருஷ்ணன் புஷ்டியான அனுக்ரஹம் –

அத⁴ரம் மது⁴ரம் வத³னம் மது⁴ரம்
நயனம் மது⁴ரம் ஹஸிதம் மது⁴ரம் |
ஹ்ருத³யம் மது⁴ரம் க³மனம் மது⁴ரம்
மது⁴ராதி⁴பதேரகி²லம் மது⁴ரம் || 1 ||

மதுராவில் அவதரித்த மாயவனே! உனது இதழ்கள் அழகானவை. முகம் வசீகரமானது. கண்கள் வனப்பானவை. உனது புன்முறுவல் அழகு. இதயம் அழகு, தளிர்நடை அழகு, மதுராதிபனே நீ நிறைந்திருப்பதால் அகிலமே அழகானது.

உன்
இதழும் இனியது; முகமும் இனியது;
கண்கள் இனியது; சிரிப்பும் இனியது;
இதயம் இனியது; நடையும் இனியது;
மதுரா மைந்தனே, எல்லாம் இனியது!

—————

வசனம் மது⁴ரம் சரிதம் மது⁴ரம்
வஸனம் மது⁴ரம் வலிதம் மது⁴ரம் |
சலிதம் மது⁴ரம் ப்⁴ரமிதம் மது⁴ரம்
மது⁴ராதி⁴பதேரகி²லம் மது⁴ரம் || 2 ||

உனது பேச்சு இனியது. தன்மை அழகானது. நீ இருக்கும் இடம் அழகு. தவழ்தல் அழகு, நகர்தல் அழகு. சுழற்சி அழகு, மதுரா நாயகனே எதிலும் நீயே நிறைந்திருப்பதால் உலகமே அழகு.

உன்
சொல்லும் இனியது; குணமும் இனியது;
உடைகள் இனியது; உடலும் இனியது;
இயக்கம் இனியது; உலவல் இனியது;
மதுரா மைந்தனே, எல்லாம் இனியது!

————-

வேணுர்மது⁴ரோ ரேணுர்மது⁴ர꞉
பாணிர்மது⁴ர꞉ பாதௌ³ மது⁴ரௌ |
ந்ருத்யம் மது⁴ரம் ஸக்²யம் மது⁴ரம்
மது⁴ராதி⁴பதேரகி²லம் மது⁴ரம் || 3 ||

உனது குழல் ஓசை இனிமையானது. பாத துளி உயர்வானது. கைகளும் கால்களும் அழகு. உன்திரு நடனம் ஒய்யாரமானது. பழகுதல் அழகு. மதுரா நாயகனே எதிலும் நீ இருப்பதால் அகிலமே அழகு.

உன்
குழலும் இனியது; கால் தூசியும் இனியது;
கைகள் இனியது; பாதம் இனியது;
நடனம் இனியது; நட்பும் இனியது;
மதுரா மைந்தனே, எல்லாம் இனியது!

—————

கீ³தம் மது⁴ரம் பீதம் மது⁴ரம்
பு⁴க்தம் மது⁴ரம் ஸுப்தம் மது⁴ரம் |
ரூபம் மது⁴ரம் திலகம் மது⁴ரம்
மது⁴ராதி⁴பதேரகி²லம் மது⁴ரம் || 4 ||

உனது கீதம் அழகு. நீ பருகுதலும் அழகு. உண்பதும் காண்பதும் அழகு. தூங்குவது கொள்ளை அழகு. உன் உருவம் அழகு. உனது நெற்றிப்பொட்டு அழகு. மதுரா நாயகனே எல்லாமே நீ என்பதால் அகிலமே அழகு.

உன்
பாடல் இனியது; பட்டாடை இனியது;
உண்ணல் இனியது; உறக்கம் இனியது;
உருவமும் இனியது; திலகமும் இனியது;
மதுரா மைந்தனே, எல்லாம் இனியது!

—————

கரணம் மதுரம் தரணம் மதுரம்
     ஹரணம் மதுரம் ரம‌ணம் மதுரம்
வமிதம் மதுரம் ஷமிதம் மதுரம்
     மதுராதிபதேரகிலம் மதுரம்–5-

உன்
குறும்பு இனியது; வெற்றி இனியது;
கள்ளம் இனியது; உள்ளம் இனியது;
எச்சில் இனியது; வெட்கம் இனியது;
மதுரா மைந்தனே, எல்லாம் இனியது!

——————

கு³ஞ்ஜா மது⁴ரா மாலா மது⁴ரா
யமுனா மது⁴ரா வீசீ மது⁴ரா |
ஸலிலம் மது⁴ரம் கமலம் மது⁴ரம்
மது⁴ராதி⁴பதேரகி²லம் மது⁴ரம் || 6 ||

கதம்ப பூக்கள் அழகு. மாலை அழகு. அலைகள் அழகு. நீர் அழகு. கமல மலர் அழகு. மதுராபுரி நாயகனே, அகிலமே உனது என்பதால் அதுவும் பேரழகு.

உன்
மணிகள் இனியது; மாலை இனியது;
யமுனை இனியது; அலைகள் இனியது;
தண்ணீர் இனியது; தாமரை இனியது;
மதுரா மைந்தனே, எல்லாம் இனியது!

—————

கோ³பீ மது⁴ரா லீலா மது⁴ரா
யுக்தம் மது⁴ரம் முக்தம் மது⁴ரம் |
த்³ருஷ்டம் மது⁴ரம் ஶிஷ்டம் மது⁴ரம்
மது⁴ராதி⁴பதேரகி²லம் மது⁴ரம் || 7 ||

கோபிகைகள் அழகு, லீலை அழகு, இனைதல் அழகு, சிஷ்ட பரிபாலனம் அழகு, மதுராதிபனே சகலமும் நீயே என்பதால் அகிலமே அழகு.

உன்
தோழியர் இனியது; கொண்டாட்டம் இனியது;
கூடல் இனியது; குணமும் இனியது;
பார்வை இனியது; பாவனை இனியது;
மதுரா மைந்தனே, எல்லாம் இனியது!

———–

கோ³பா மது⁴ரா கா³வோ மது⁴ரா
யஷ்டிர்மது⁴ரா ஸ்ருஷ்டிர்மது⁴ரா |
த³லிதம் மது⁴ரம் ப²லிதம் மது⁴ரம்
மது⁴ராதி⁴பதேரகி²லம் மது⁴ரம் || 8 ||

கோபர்கள் அழகு. பசுக்கள் அழகு, பிரிதல் அழகு, பயன் பலிப்பது அழகு, நீயே எதிலும் பரவி நிற்பதால் இந்த உலகமே அழகு.

ஆயர் இனியது; ஆக்கள் இனியது;
செண்டை இனியது; பிறவி இனியது;
வீழல் இனியது; ஆழல் இனியது;
மதுரா மைந்தனே, எல்லாம் இனியது!

॥ இதி ஶ்ரீமத்3வல்லபா4சார்யவிரசிதம் மது4ராஷ்டகம் ஸம்பூர்ணம் ॥

ஸ்ரீ மதுராதிபதியே அகிலம் மதுரம் -புண்யா பாப ஹரி ஸூபா -வடமதுரை மன்னு-யுகங்கள் தோறும் -வாமன ஆஸ்ரமம் –சத்ருக்கனன் -லவணாஸூரன்/ஸ்ரீ கிருஷ்ண கா ஜென்ம பூமி -பெயரிலே மதுரம் –
மதுரையார் மன்னன் அடி நிலை தொட்டு எங்கும் அதிரப் புகுரக் கானாக் கண்டேன் –மிகவும் விரும்பிய திரு நாமம் –
விதி வாக்கியம் -அநு வாதம் வாக்கியம் இரண்டும் உண்டே
ஸ்ரவணம்-விதி இல்லை -ஆசை வந்தால் தான் கேட்க வருகிறான் -மனனம் அவனே பண்ணுவான் –கேட்பதும் மனனம் பண்ணுவதும் விதி இல்லை
அடுத்து அனவ்ரத சிந்தனம் ஒழுக்கம் த்யான மாத்திரம் -நிதித்யாஸனம் -விதி வாக்கியம் –
ஆசை -உண்ண பசி போலே –இத்தை வளர்க்கவே இது போன்ற ஸ்லோகங்கள் –
அவன் -பிரிய தமரானவர்களை தானே வரித்து -தன்னைக் காட்டுகிறான் –சததம் கீர்த்த யந்த –தாதாமி புத்தி பூர்வகம்-தேஷாம் நிதயாபி யுக்தாம் -பஜதாம் ப்ரீதி பூர்வகம் -சேர்ந்தே இருக்க ஆசை கொண்டவர் –தாதாமி புத்தி யோகம் -கொடுக்கும் பொழுது ப்ரீதி உடன் கொடுக்கிறான் -பக்தி என்றாலே ப்ரீதி தானே –-ஆகையால் இப்படி கொண்டு கூட்டுப் பொருள்
உன் அடியார்க்கு என் செய்வான் என்றே இருத்தி -பெரிய திருவந்தாதி –
வைகும் சிந்தையிலும் மற்று இனிதோ வைகுண்டம் -நினைவே அமுதம்-நனைந்த சிந்தனையால் மோக்ஷம் பெறுவோம் –

அத⁴ரம் மது⁴ரம் வத³னம் மது⁴ரம்
நயனம் மது⁴ரம் ஹஸிதம் மது⁴ரம் |
ஹ்ருத³யம் மது⁴ரம் க³மனம் மது⁴ரம்
மது⁴ராதி⁴பதேரகி²லம் மது⁴ரம் || 1 ||

அதரம் மதுரம் –
திருவாய் -திரு உதடுகள் -உபதேசம் -இனிமை -பவள வாய்
-பார்த்து நம் உதடு பாட துடிக்கும்
வாலியதோர் கனி கொல்—கோலம் திகழ் திரள் பவளம் –7-7-3-அபூத உவமை —
நீல நெடு முகில் போல் –திரு மேனி அம்மான் -தொண்டை வாய்
–திசைகள் எல்லாம் –
வாய் அழகர் -சம்பாஷ மான இவ–நம்பெருமாள் புன்சிரிப்பால் குழி -ஈர்க்கும் –
செய்ய வாய் ஐயோ என் சிந்தை கவர்ந்ததுவே –அபயம் ஹஸ்த முத்திரை புரியாமல் இருந்தால்
குவிந்த உதடால் மாஸூச சொல்ல –செங்கனி வாய் –நெஞ்சம் நிறைக்கும் – -கோவை வாயாள் -அபிமத அநு ரூபம் –
வாய் திறந்து ஓன்று பணித்தது உண்டு -அஷ்ட புஜத்து எம்பெருமான் –

கழுத்தை உதட்டாட்டம் கண்டு -மயங்கினது போலே –
கண்கள் சிவந்து பெரியவாய் வாயும் சிவந்து –
ஸ்மித புல்ல அதர பல்லவம் -கொழுந்து போலே அன்றோ –
வதனம் மதுரம்

மையல் ஏற்றி மயக்க வல்ல மாய மந்த்ரம் கொலோ –புண்டரீகம் தடாகம் -திரு முகம் செங்கமலம் —குண்டலம் தோடு -ஆண் பெண்- – தாமரை தாதுக்கள்-நீண்டு நுனியில் உருண்டு –கிரீட மகுட -சூடா வதம்ச –-பெரியவன் –ஆதி ராஜ்ய ஜல்பிகா –
வண்டுகள் ஒத்த திருக் குழல்கள் –மை வண்ண நறுங்குஞ்சி குழல் பின் தாழ-மதுவை உண்ண -கபோலம்–யசோதை அன்பு கையால் ஸ்பர்சம் பருத்து -அழகர் இடம் இன்றும் சேவிக்கலாம் –
நயனம் மதுரம் –
கருணை வெள்ளம் அகப்படாமல் இருக்க திரு மணத் தூண்கள் -கருணா பிரவாஹம் -குண பிரவாஹம் பெருமாள் இடம் இருந்து –
நவ ரசம் -ஸ்திரம் –பெறும் கேழலார் தம் பெறும் கண் மலர் புண்டரீகம் -நம் மேல் ஒருங்கே பிறழ வைத்து –எங்கும் பக்க நோக்கம் அறியான் என் பைம் தாமரைக் கண்ணன் –
குருகைக் காவல் அப்பன் -ஆளவந்தார் – சொட்டை குலத்தில் உதித்தார் இங்கே வந்தார் உண்டோ -ஐதிக்யம்-ஆ முதல்வன் -என்று கடாக்ஷம் -ஸ்திரம் தானே –
எழில் கொள் தாம்பு –அழுத கையும் அஞ்சு நோக்கும் அந்நோக்கும் –நம்பி ஹனுமந்த தாசர் -திருவாராதன கிராமம் -ராமானுஜர் -ஐதிக்யம் –
கரியவாகி புடை பரந்து மிளிர்ந்து செவ்வரியோடே நீண்ட அப்பெரியவாய கண்கள் -பக்த ஸூர்யனால் மலரும் தாமரைக் கண்கள் –
கப்யாசம் புண்டரீக அக்ஷிணீ-ராஜீவ லோசனன் -ந யுத்த யோக்யதாம் –
இணைக் கூற்றங்களோ அறியேன் -க ஸ் ஸ்ரீ சரியா கஹா புண்டரீகாஷா
-கோபம்-நரசிம்ஹன் – தயை அனைத்தும் காட்டுமே –செங்கண் சிறிச் சிறிதே எம் மேல் விழியாவோ
எம் பச்யதே புருஷோத்தமன் -ஜெயமான மது ஸூதன கடாக்ஷம்
சிரமணி –நெடு நோக்கு கொள்ளும் பத்த விலோசனத்துக்கு என்னை உய்த்திடுமின் –
சபரி -விதுரன் -ரிஷி பத்தினிகள் -அனுக்ரஹம் உண்டே
பரிகாசமும் -கோபிகள் –சிற்றில் -முற்றத்தூடு புகுந்து -முகம் காட்டி முறுவல் செய்து -சிந்தையும் சிதைக்கக் கடவையோ
எதிர்பார்த்து காத்து இருக்கும் –ஆற்றங்கரை கிடக்கும் கண்ணன் -கடல் கிடக்கும் மாயன் –
சிக்கென செங்கண் மாலே ஆவியே -நான் உன்னை விடேன்-

ஹசிதம் மதுரம்
புன்முறுவல் -பிரகசன்னிவே பாரத -அர்ஜுனன் விசாகம்–சிரித்து கொண்டே ஸ்ரீ கீதா உபதேசம் –
கன்றினை வால் ஓலை கட்டி —
ஹ்ருதயம் மதுரம்

திரு மார்பே -என்றும் -திரு உள்ளம் என்றும் -ஸுஹார்த்தாம் ஸர்வ பூதானாம் -முதல் படி ஈஸ்வரஸ்ய ஸுஹார்த்தம் -கோர மாதவம் செய்தனன் –திரு ஆர மார்பு அதன்றோ-
தாராய வண்டு உழுத வரை மார்பன் என்கின்றாளால் -வக்ஷஸ்தலம் திருத் துளசி மாலை -ஸ்ரீ கௌஸ்துபம் -ஸ்ரீ வத்சம் -ஸ்ரீ கமலா -விமலம் விசாலம் –
கமனம் மதுரம்

நடை -வ்யாக்ர சிம்ம கஜ ரிஷப சர்ப்ப கதிகள்-நம் பெருமாள் பக்கலிலே காணலாம்,
கோபம் தேஜஸ் கர்வம் பெருமிதம் -இங்கனே போந்து அருளி -சீரிய சிங்கம் –
போட்டி போட்டுக் கொண்டு இரண்டு திருவடிகள் வந்து ரஷிக்கும் –எவ்வாறு நடந்தனையோ எம்மிராமாவோ -சீதா மத்யே -அக்ர பிரதயோ ராமா –
நடந்த கால்கள் நொந்தவோ –பேசி வாழி கேசனே -சார்ங்க பாணி தளர் நடை நடவானோ -வருக வருக நம்பி வாமன நம்பி
வா போ வந்து ஒருகால் கண்டு போ –கச்சதி ப்ராதரத்தி
-நடை அழகில் மயங்கி கைங்கர்யம் கெடாமல் -ராகவ ஸிம்ஹம்–
நம்மாழ்வார் நாச்சியார் திருக் கோலம் இராப்பத்து ஏழாம் திரு நாள் திருக் கைத் தலை சேவை இன்றும் சேவிக்கலாம்
மதுராதிபதயே அகிலம் மதுரம்

——————

வசனம் மது⁴ரம் சரிதம் மது⁴ரம்
வஸனம் மது⁴ரம் வலிதம் மது⁴ரம் |
சலிதம் மது⁴ரம் ப்⁴ரமிதம் மது⁴ரம்
மது⁴ராதி⁴பதேரகி²லம் மது⁴ரம் || 2 ||

வசனம் மதுரம்
திரு வாக்கு –பேச்சு வார்த்தை சொல் -மூன்றும் உண்டே –
திருவரங்க செல்வனார் பேசி இருப்பனகள் பேர்க்கவும் பேராதே-பேச்சு ஸ்ரீ வராஹ சரம ஸ்லோகம்
சொல்லும் பொய்யானால் -நானும் பிறந்தமை பொய்/-ஸ்ரீ ராம சரம ஸ்லோகம் -சொல்
மெய்ம்மை பெரு வார்த்தை விஷ்ணு சித்தர் கேட்டு இருப்பர் -ஸ்ரீ கிருஷ்ண சரம ஸ்லோகம் -வார்த்தை
பாவி நீ என்று ஓன்று நீ சொல்லாய் என் முன்னால் காண வந்தே -தஸ்மிந் த்ருஷ்டே பராவரே –
வாக்மீ ஸ்ரீ மான் -கொண்டாடுகிறார் வால்மீகி -அபயப்ரதானம் -மஞ்சு பாஷீ மிருத பாஷீ பூர்வ பாஷீ ராகவா –

உனக்கு ஒரு வார்த்தை எங்களுக்கு வாழ்வு மாஸூச –
அர்ச்சா சமாதி குலைத்து வசனம் மதுரம் –திரு விளக்கு பிச்சன் -தொண்டமான் சக்ரவர்த்தி -திருக் கச்சி நம்பி
சரிதம் மதுரம் -சேஷ்டிதங்கள்
அது இது உது என்னாலாவன
-நைவிக்குமே-சாரித்ரேன கோ யுக்தா -இஷுவாகு வம்ச பிரபவா –ஜென்ம கர்ம மே திவ்யம் -அவதார ரஹஸ்ய ஞானம் -அதே பிறவியிலே மோக்ஷம் -பக்தனுக்கும் –
வசனம் மதுரம் –
வஸ்திரம்

அரைச் சிவந்த ஆடையின் மேல் சென்றதாம் என் சிந்தனையே -செவ்வரத்த உடை ஆடை அதன் மேல் ஓர் சிவலிகை — கச்சு என்கின்றாளால்
ஐயோ அச்சோ ஒருவர் அழகிய வா
-பவ்வ நீர் உடை ஆடை யாக சுற்றி –பவனம் மெய்யா -அண்டம் திருமுடி /திரு மாலே கட்டுரையே –
கைலி –நம் பெருமாள் -மாற்றுவதே அழகு –துலுக்க நாச்சியாருக்காக சாத்திக் கொள்கிறார்
வலிதம் மதுரம் —
மூன்று மடிப்புக்கள் கழுத்திலும் வயிற்றிலும் உண்டே
யா தாமோதர -உதர பந்தம் –சேஷி திரு இலச்சினை –

திரு வயிற்று உதர பந்தம் -பெற்ற வயிற்றுக்கு பட்டம் –
வரத வலி த்ரயம் -பிரதான திரு ஆபரணம் –
நஞ்சீயர் திரைக்குள்ளே -ஏகாந்த தழும்பு சேவிக்க ஆசை -பிரதம விபூஷணம் -தாமோதரனை ஆமோ தரம் அறிய –
தத்வ த்ரயம்-ஞான பக்தி வைராக்யம் -பர பக்தி பர ஞானம் பரம பக்தி -முக்குணம் தாண்டி -ரஹஸ்ய த்ரயம் –
மூன்று பாதங்கள் -மூன்று அக்ஷரங்கள் -மண்டப த்ரயம் காட்டும் –
தேசிகன் -பெறும் தேவி தாயார் ஸ்வர்ண –கனக வளைய முத்ரா –
சலிதம் மதுரம் –

அசைவே மதுரம் –ஓராதவன் போல் உறங்கி அறிவுற்று -மூரி நிமிர்ந்து முழங்கி புறப்பட்டு
முன் இருந்த தானத்தே -தாளால் உலகம் அளந்த அசைவே கொல்

கிடந்த நாள் கிடந்தாய் –உன் திரு உடம்பு அசைய /-எழுந்து இருந்து பேசு வாழி கேசனே -ஆராவமுத ஆழ்வார் – திரு மழிசை பிரான் –
அசைவில் அமரர் தலைவா -அசையா நீ எழுந்து இருப்பதா வாழி –உத்தான சயன -உத்யோக சயனம்

சொன்ன வண்ணம் செய்த பெருமாள் -அசைந்து -காட்டி அருளி -இங்கிதம் நிமிஷ தஞ்சை தாவகம்–நீ பண்ணுவதே ரம்யம் அத்புதம் அதி பிரிய கரம்
தவழ்ந்து போய் என் மகன் கோவிந்தன் புழுதி அழைக்கின்றான் -நீ இங்கே நோக்கி போ -பாலகன் என்று பரிபவம் செய்யேல் –-கிடங்கில் தொட்டில் கிழிய உதைத்திடும்
பிரமிதம் மதுரம்
சுழற்சி மதுரம் -ராஸக்ரீடை -அங்கனாம் அங்கனாம் அந்தரே மாதவா -கோபிகள் கண்ணன் -தோளுடன் தோள் கோத்து-
கோபிகா கீதம் –
குரவை கூத்து –கோப வேஷ பரிகம்மிதா -பஞ்சாவதம்ச -மயில் பீலி சூடி —
ஒருவர் இருவர் ஓர் மூவர் என உருவு கரந்து -சுழன்று –

ஆடி ஆடி அகம் கரைந்து —
மதுராதிபதயே அகிலம் மதுரம்

———————————

வேணுர்மது⁴ரோ ரேணுர்மது⁴ர꞉
பாணிர்மது⁴ர꞉ பாதௌ³ மது⁴ரௌ |
ந்ருத்யம் மது⁴ரம் ஸக்²யம் மது⁴ரம்
மது⁴ராதி⁴பதேரகி²லம் மது⁴ரம் || 3 ||

வேணூர் மதுரா
விசித்திர வேஷம் –செவி ஆட்ட கில்லாவே – அத்புதம் கேளீர் -உபதேசம் ஆச்சார்யர் மூலம் போலே புல்லாங்குழல் -கானம் -சப்த ஸ்வரம் –சஜாதீயர் ஆச்சார்யர் –விஜாதீயர் அவன்
வெள்கி மயங்கி ஆடல் பாடல் மறந்தனர் தாமே -எழுது சித்ரங்கள் போல் நின்றன
ரேணூர் மதுரா
ஸ்ரீ பாத ரேணு-
சித்ரா கல்பா லாங்கனி-வலம் காதில் மேல் தோன்றி பூ அணிந்து –
புழுதி அளந்த பொன் மேனி காண பெரிதும் உகப்பன் ஆகிலும் கண்டார் பழிப்பர் -விளையாடு புழுதியும் கொண்டு – -நப்பின்னை காணில் சிரிக்கும்புனிதனோடு காப்பு நான் கட்ட -இதுவே இவன் ஆச்சாரம்
தவழ்ந்து எழுந்து ஓர் தளர் நடையால் — மண்ணில் செம்பொடி ஆடி வந்து என் தன் மார்பினில் –பெற்றிலேன் அந்தோ –கோபால வேஷம் -கற்றுத் தூளி –தூசரிதமான திருக் குழலும் —ஸைன்ய தூசி -சேனா -தூளி தூசரிதம் -பாரத சாமரம்
பாத தூளி படித்தலால் இவ்வுலகம் பாக்யம் -தொண்டர் அடிப் பொடி
பாணீர் மதுரா

கைத்தலங்கள் வந்து காணீரே –சங்கும் நேமியும் நிலாவிய -ரேகைகள் -யசோதை வளர்க்கும் பிள்ளை -நாராயணன் இல்லை –
அத்புதம் பாலகம் -கராவிந்தேனே –பால முகுந்தம் -உந்தை யாவன் –நிஷ்காரணம் ஜகத் பிதா –விரலாலே காட்ட –நந்தன் பெற்றனர் -வஸூ தேவன் இழந்தான் -எடுத்த பேராளன் –
முழுதும் வெண்ணெய் அலைந்து அலைந்து தொட்டு உண்ணும் –தாமரைக் கை —
கொட்டாய் சப்பாணி
-பிளந்திட்ட கைகளால்
பாணி சிவந்தது ஊன்றி தவழ்ந்ததாலா -சாட்டை ஒட்டியா -தேரோட்டி கடிவாளத்தாலா –
திதியோதனம் ஊறுகாய்-கண் எச்சி படும்படி
செந்தாமரை கை விரல்கள் கோலம் அழிந்தில -வாடிற்றல –திரு உகிர் நொந்தும் இல –
கை வண்ணம் தாமரை -வாய் கமலம் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே பாணி கிரஹணம் -முறை –
அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே
மாம் ஏகம் சரணம் வ்ரஜ -அஞ்சேல் என்ற திருக் கைகள்
பாதவ் மதுரா

திருவடி தாமரைகள் –தானே சுவைத்து பார்ப்பான் -பிடித்து சுவைத்து உண்ணும் பாத கமலங்கள் வந்து காணீரே
கிடக் கில் தொட்டில் கிழிய உதைத்திடும் -எடுத்துக் கொள்ளில் மருங்க இருத்திடும் / ஒடுக்கி புல்கில் உதரத்தே பாய்ந்திடும்
கூசிப் பிடிக்கும் மெல்லடிகள் அன்றோ
சகடாசூர -சகடத்தை சாடிப் போய் –சாடுதைத்த திருவடி -உலகளந்த திருவடி -அவனுக்கும் ரஷகம்
ஒரு காலில் சங்கு ஒரு காலில் சக்கரம் உள்ளடி பொறித்து அமைந்தால் போல் –
கதா புன -சக்ர சங்க த்வஜம் அங்குசம்
திருப் பொலிந்த சேவடி – தேருக்கு கீழே நாட்டிய
உலகம் அளந்த பொன்னடி -உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே
ந்ருத்யம் மதுரம்

குடமாடு கூத்தன் –குரவை கூத்து -கும்ப நாட்டியம் -காளிங்க நர்த்தனம் -சாரீ ந்ருத்தம் எண்ணிக்கை –
ஹல்லீ ந்ருத்தம் –வண்ண புஷ்ப்ப மாலை -கோஷ்ட்டி ந்ருத்தம் ராஸ க்ரீடை
மன்றமர கூத்தாடும் மைந்தன்
-மன்றம் அமரும் படி -மயங்கி அங்கேயே அமர்ந்து
சக்யம் மதுரம்
நட்ப்பு -குகன் ஸூ க்ரீவன் விபீஷணன்-
கோபி -பிரசாதம் -சுகர் ஆச்சர்யம் – உத்தவர் -ஸூ தாமா –
விதுரர் – மாலா காரர் – அக்ரூரர் / சஞ்சயன் -18-நாடார் கூட்டம்
ஆத்ம ஸஹர் -அறிவார் உயிரானார் -யாம் பெறும் ஸம்மானம் -அஹம் வோ பாந்தவ ஜாத –
மதுராதிபதயே அகிலம் மதுரம்

————

கீ³தம் மது⁴ரம் பீதம் மது⁴ரம்
பு⁴க்தம் மது⁴ரம் ஸுப்தம் மது⁴ரம் |
ரூபம் மது⁴ரம் திலகம் மது⁴ரம்
மது⁴ராதி⁴பதேரகி²லம் மது⁴ரம் || 4 ||

ஐயப்பாடு அறுத்ததும் ஆதாரம் பெறுக வைப்பதும் அழகன் -அழகையே ஸைன்யமாக கொண்டு -கட்டுப்படுத்துவானே
மால் பால் மனம் சுழித்து மங்கையர் தோள் கை விட வேண்டுமே –
கீதம் மதுரம்

பாட்டு -ஸ்ரீ கீதா ஸூ கீதா –மதுரம் –தத்வ விவேக –இத்யாதி -பார்த்தன் அன்று ஓதிய –கீதாம்ருதம் மஹத் -ஸர்வ உபநிஷத் -சாரம் –-புல்லாங்குழல் கானம் -சங்க நாதமும் கீதமே -168-mile தூரம் —84-இடங்களில் ஸ்ரீ பாகவதம் சப்தாகம்
ஸ்ரீ வல்லபாச்சார்யர் அருளி-84- க்ரோஸம் தூரம் என்பதால்

ஆ நிரை இனம் மீளக் குறித்த சங்க ஒலி -7-லக்ஷம் பசுக்களை இத்தைக் கொண்டே
நைவளமும் –கொண்டு பெண்ணை -நோக்கா –இது அன்றோ எழில் ஆலி என்பான் –
நாணினார் போலே –இறையே –தாசன் -என்று அபிமதம் விஞ்சி –
கான பிரியன் –முடங்கு கேள்வி இசை என்கோ–சாம வேத கீதனே –
பீதம் மதுரம்

குடித்தது -எதுவாய் இருந்தாலும் –அருகிருந்த மோரார் குடம் உருட்டி –கன்றுக் குட்டிக்கு நீர் குடிக்க –திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி –இது முதலில் -உண்பது அப்புறம் -மாறி -பருகி விட்டே உண்பான் -இரண்டுக்கும் வாசி அறியான் என்றுமாம்
பால் உண்ணோம் -நெய் உண்ணோம் -போலே
புக்தம் மதுரம்
உண்டது –வாரிக் கொண்டு உன்னை விழுங்குவான் —என்னை முற்றும் பருகினான் -உண்டு பருகினான்-அப்பம் கலந்த சிற்றுண்டி –அக்காரம் பாலில் கலந்து-சொப்பட நான் சுட்டு வைத்தேன் – வெண்ணெய் விழுங்கி –ஆராத வெண்ணெய் -வெள்ளி மலை இருந்தது ஒத்த -முப்போதும் கடைந்த வெண்ணெய் –-ஏரார் இடை நோவ- தடம் தோள்கள் உள்ளளவும் கை நீட்டி – கை விரல் அனைத்தும் வாரி வாய்க் கொண்ட அடிசில் மிச்சல் உண்ணப் பெற்றிலேன் -எல்லாம் தெய்வ நங்கை யசோதை பெற்றாளே
குடத்தோடு சாய்த்துப் பருகி -குடத் தயிர் சாய்த்து பருகி —சாளக்கிராமம் உடைய நம்பி சாய்த்து பருகிட்டு -வளையலும் காணேன் –
கன்னல் -இலட்டு வத்தோடும் -சீடை கார் எள்ளின் உண்டை -என்னகம் என்று வைத்துப் போந்தேன்–இவன் புக்கு அவற்றை பெருக்கிப் போனான்
பின்னும் அகம் புக்கு உறியை நோக்கி வெண்ணெயும் சோதிக்கின்றான் -உன் மகனைக் கூவிக் கொள்ளாய் –
சுக்தம் மதுரம்

தூக்கமே மதுரம் –பையத் துயின்ற பரமன் -உறங்குவான் போல் யோகு செய்து -கிடந்தவாறும் நினைப்பு அரியன-அன்று வெக்கணை கிடந்தது –என் நெஞ்சுள்ளே –
புளிங்குடி கிடந்தது –தெளிந்த என் நெஞ்சம் அகம் கழியாமல்
கிடந்தநாள் கிடந்தாய் எத்தனை நாள் கிடப்பாய் -அரவின் அணை மிசை கிடந்த மாயனாய்
ஸ்படிக சிலை -பெருமாள் –சிறு காக்கை முலை தீண்ட -ஸ்ரீ மான் ஸூக ஸூப்த பரந்தபன்- ஓராதவன் போல் உறங்கி அறிவுற்று– ஸ்வரூப த்யானம் -/டோலத்சவம்-
ரூபம் மதுரம்
காந்தா –அத்தியாச்சார்யம்-சாஷாத் மன்மத மன்மதன்-அவனும் மடல் எடுக்க வேண்டும்படி -பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபராஹினாம்-கண்டவர் தம் மனம் வழங்கும் -மின்னு மா மகர குண்டலங்கள் -ஆடினால் தானே ஓளி வீசி -முக காந்தி குழல் காந்தி வாசி –
முத்துப்பல் ஓளி யாலே வா ஸூ தேவர் -தேவகி –மாட்டுயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ அறியேன்
நீல தோயத மத்யஸ்த -மேகம் மின்னல் வெட்டு -சந்திரன் ஓளி -வானவில் நினைத்து உபாஸிக்க -உபநிஷத் சொல்லுமே –
திகழ்கின்ற –திரு மார்பில் -திகழும் மங்கையோடும் -முடிச்சோதியாய் –உனது முகச் சோதி மலர்ந்ததுவோ -திருமாலே கட்டுரையே
நிறைந்த சோதி வெள்ளம் -சூழ்ந்த பொன் மேனியோடும் நிறைந்து என்னுள்ளே ஒழிந்தான்

அருவமும் எண்ணிறந்த உருவங்களில் ஒன்றே –வாரா வருவாய் –வாரா அருவாய்
ஆதியம் சோதி உருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த
பஞ்ச உபநிஷத் சக்தி மயம் —
திலகம் மதுரம்

ஊர்த்வ புண்டர திலகம் -பஹு மாணாத்-உத்தர உபரி பக்த ஜனாதி -நம்மை மேலே தூக்கி செல்லவே –இனிமை அறியவே –தன் திரு நாமத்தை தானே சாத்தி -கம்பர் –
மதுராதிபதயே அகிலம் மதுரம்

——————

கரணம் மதுரம் தரணம் மதுரம்
     ஹரணம் மதுரம் ரம‌ணம் மதுரம்
வமிதம் மதுரம் ஷமிதம் மதுரம்
     மதுராதிபதேரகிலம் மதுரம்–5-

கரணம் மதுரம்
லாவண்யம் ஸுந்தர்யம்–கொள்கின்ற கோள் இருளை –அன்று மாயன் குழல் –
சுட்டுரைத்த பொன் ஒவ்வாதே –
கரும்பு வில் போன்ற திருப் புருவம் –
ஆபரணங்களுக்கும் அழகூட்டும் பெருமாள் –அப்ராக்ருதம் -எழு கமல பூ அழகர் -ஸுந்தர்ய அருவி சுழி -திரு நாபீ-உந்தித் தாமரை –
முற்றும் உண்ட கண்டம் கண்டீர் -கோல திருக் குறுங்குடி நம்பியை -என் சொல்லி நான் மறப்பேனோ –
ஹிரண்ய மஸ்ரு ஹிரண்ய கேச
தரணம் மதுரம்

தாண்டுவிக்கிறார் -வழுக்குப் பாறை –ஸூ கர்- திருவடி படும்படி பாக்யம் –ஸிம்ஹம் புழு மலை தாண்டிய கதை –வைகுந்தன் என்பதோர் தோனி பெறாது உழல்கின்றேன்
வைதிக புத்ரன் கதை -ஒரு நாள் ஒரு பொழுதில் உடலோடு கொண்டு கொடுத்தவனைப் பெற்று இனி என் குறை
-கண்ணன் ரூபம் சேவிக்க ஆசை கொண்ட ஸ்ரீ மஹா லஷ்மீ
அத்யயன உத்சவம் -நம்மாழ்வார் திருவடி சேவை -எங்கும் உண்டே –க்ருஷ்ண த்ருஷ்ணா தத்வம்
ஹரணம் மதுரம்
-அவன் திருட்டே மதுரம் -வெண்ணெய் உடம்பு முழுவதும் பூசிக் கொண்டே –
விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய் -வெள்ளி மலை ஒத்த வெண்ணெய்
திருட்டு ஒரு நாள் இல்லையே –கச்வம் பால –பாலானுஜன் -மன் மந்த்ர சங்கையா-
ஸ்ரீ கௌஸ்துபம் தேஜஸ் கொண்டே திருட்டு –வெண்ணெய் வார்த்தையுள் சீற்றம் கொண்ட அழு கூத்து அப்பன் —துன்னு படல் திறந்து புக்கு –திருமங்கை ஆழ்வார் போட்டி -ஸ்வர்ண விக்ரஹம் -எந்திரத்துக்கு உள்ளே -மதிள் கைங்கர்யம்
ரமணம் மதுரம்
விளையாட்டு –கண்ணை புரட்டு விழுந்து களகண்டு செய்யும் பிரான் – –அப்பூச்சி காட்டுகின்றான்-விளக்கில் வீட்டில் பூச்சி போலே அஸூரர்கள் –ஆயர் குலத்தில் தோன்றிய அணி விளக்கு -பால் குடிக்க உயிரும் சேர்ந்து-ரமண ரேடி -இன்றும் மணலில் உருண்டு வெட்கம் இல்லாமல்
வமிதம் மதுரம்
தாம்பூல ஸ்ரவணம் – தூய பெரு நீர் யமுனை -உமிழும் பொன் வட்டில் பிடித்து புகப் பெறுவேன் –
சமிதம் மதுரம்

பிரளய ஆபத்தில் –வையம் எழும் கண்டாள் பிள்ளை வாய்க்குள்ளே -ப்ரஹ்மாண்டம் ஜிஹாத் -மண் பிரசாதம்-நெய்யூண் மாற்று மருந்து –முற்றும் உண்ட கண்டம் கண்டீர்மஞ்சாரா -எஞ்சாமல் வயிற்றில் அடக்கி -உண்டும் உமிழ்ந்து –
மதுராதிபதியே அகிலம் மதுரம்

—————

கு³ஞ்ஜா மது⁴ரா மாலா மது⁴ரா
யமுனா மது⁴ரா வீசீ மது⁴ரா |
ஸலிலம் மது⁴ரம் கமலம் மது⁴ரம்
மது⁴ராதி⁴பதேரகி²லம் மது⁴ரம் || 6 ||

மதுரா பெண் பால் -மதுரம் ஆண்பால் மதுரம் வரும் -சப்தத்துக்கே லிங்கம் சமஸ்க்ருதம் /
உஞ்சா மதுரம்
பறை வாத்யம் –
இடுப்பில் கட்டி குடக் கூத்து-குரவைக் கூத்து ராஸ க்ரீடை -ஜல க்ரீடை மூன்றாவது விளையாட்டு –ஆர் ஆர் எனச் சொல்லி ஆடும் அது கண்டு —வாராயோ –சென்றேன் என் வல் வினையால்
பறை -திருப்பாவை -/புருஷார்த்தம் –தாத்பர்யம் அறியாமல் -சீதை -திரும்பி இங்கு –
ஜாம்பவான் பறை -சாலப் பெறும் பறை -தான் கட்டின பறை –
கோவிந்தன் வருகின்ற கூட்டம் -தளைகளும் தொங்கலும் -மயில் பீலி கொடை–
தண்ணுமை எக்கம் மத்தளி – -தாள் பீலி குழல்கள் கீதமும் ஆகி எங்கும் மலை கொலோ வருகிறது என்று –
பாலா மதுரா

மாலா -பாட பேதம் -கோப கோபி மேலே வரும் -அதுவே பருவ பரம்
புஷ்பங்கள் தொடுக்கப் பட்ட -காட்டுப் பூ மல்லிகைக்கு பாலா என்று பெயர்
ரமணம் -ஸ்மரணம் -கீழே பாட பேதம் –
செண்பகப் பூ சூட்ட வாராய் – ப்ராத கால புஷ்ப்பம் செண்பகம் –
அனந்தாழ்வான் -மாலாகாரர்- சுமந்து மா மலர் தீபம் கொண்டு -பாசுரம் ஐதிக்யம் –
தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -குறும்பு அறுத்த நம்பி -தொண்டைமான் சக்கரவர்த்தி ஸ்வர்ண புஷ்ப்பம் –மல்லிகை பூ -சாயங்கால பூ -பாதிரிப் பூ -பச்சை தமனகம் சேர்த்து -தவன உத்சவம் -மருவும் தவனமும் சேர்த்து -அடுத்து – செங்கழு நீர் ஐந்தாவது -விடிந்தால் வாய் நெகிழும் -பின்னை பூ -பின்னை மர வாஹனம் உண்டே -குருக்கத்தி பூ அடுத்து –
இருவாட்சி கடைசியில் -நம்பெருமாள் மாலை பிரசாதம் தனியாக தெரியுமே –விருட்சி பூ
சூடிக் கொடுத்த சுடர் கொடியையும் சேர்த்து அவனுக்கு சூட்டினார் –
யமுனா மதுரா
தூய பெரு நீர் யமுனை
–திருவடி தீண்ட பெருகி பின் வற்றிக் கொடுத்ததே -ஜானு மாத்திரம் -மன்றமர கூத்தாடியே -வட திருவேங்கட மைந்தன் –யமுனாச்சார்யர் -யமுனைத் துறைவன் –பலராமன் -ராம் காட் -ஷீர் காட் வஸ்திர லீலை /கோவர்த்தன கிரி -21-மைல் சுற்றளவு -/
வீஸீ மதுரா
அலைகள் –
தரங்கம் -சம்சார சுக துக்கம் மாறுவது போலே –ஆவாரார் துணை
சலிலம் மதுரம்

தண்ணீர் -அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும் -பிள்ளை கார்யம் இடம் கண்டு -காரணத்தில் இருக்குமே –யுத்த பூமியில் மோ ழை எழுவித்தான்இட்டமான பசுக்களை இனிது மருத்து நீராட்டி -தெளிவில்லா கலங்கல் காவேரி -தெண்ணீர் பொன்னி–மாப்பிளை பார்க்க வரும் கலக்கம் -பிரிந்து போகும் கலக்கம் –
கமலம் மதுரம்
அடித்தலமும் தாமரை –அங்கைகளும் பங்கயமே என்கின்றாளால் -ஆசன பத்மம் -தோற்று தாங்கும் திருவடித் தாமரை

ஒப்பாகா –கை வண்ணம் தாமரை வாய் கமலம் -போலும் கண் இணையும் அரவிந்தம் –அடியும் அஃதே -ஆரோகணம் அவரோகணம் இல்லாமல் –
திருக் கல்யாணம் -பாணி கிரஹணம் -மந்த்ரம் வாயால் சொல்லி -கண்ணால் இவளையே நோக்கி -தோற்று விழுந்த திருவடி –சப்த பதிக்கு திருவடி -கையைப் பிடித்து -வாயால் மந்த்ரம் சொல்லி -கண்ணால் முகத்தை பார்த்து தான் சொல்ல வேண்டும்
ஸர்வ லோக மகேஸ்வரன் வெட்கப்படாமல் -கண்டு –அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே –
பா மருவு மூ உலகம் படைத்த பத்ம நாபாவோ—அளந்த -பத்ம பாதாவோ –தாமரைக் கண்ணாவோ –தனியேன்-கரை புரண்டு –அரவம் சுமப்பது அஞ்சன மலை -அம்மலை பூத்தது அரவிந்த வனம் –அரவிந்த மலர் தோறும் அதிசயம் உள்ளதே
கண்ணை தனியாக -அடியேனை பாட வைத்ததால் –
கமலக் கண் என்னும் நெடும் கயிறு -அமலங்களாக விழிக்கும்
மதுராதிபதியே அகிலம் மதுரம்

————

கோ³பீ மது⁴ரா லீலா மது⁴ரா
யுக்தம் மது⁴ரம் முக்தம் மது⁴ரம் |
த்³ருஷ்டம் மது⁴ரம் ஶிஷ்டம் மது⁴ரம்
மது⁴ராதி⁴பதேரகி²லம் மது⁴ரம் || 7 ||

கோபீ மதுரா-5-லக்ஷம் -காத்யாயினி நோம்பு -சொல்லும் அவிடு ஸ்ருதியும் – கண்ணனை கையிலே வைத்துள்ளார்கள்-த்வதீய -கம்பீர -மநோ அநு சாரீ -வேதம் பின் செல்லுமே -வ்ரஜை ஸ்த்ரீகள் கண் அடி படவே அவதாரம் உத்தவர் ஞான உபதேசம் செய்ய வந்து பக்தி கற்று வந்தார் -ஞானம் அக்னியால் எல்லாம் போக்கலாம் -முயல வந்து –
காளியனாக அநு காரம் –கோவிந்தா வாங்கலையோ – மண்ணை இருந்து துழாவி வாமனன் மண் இது என்னும் –ஆண் உடையுடன் எப்படி நுழைந்தீர் -கோகுலத்துக்குள் –
லீலா மதுரா
சேஷ்டிதங்கள் அனைத்தும் மதுரம் -அவதரித்ததே மதுரம் -வண்ண மாடங்கள் சூழ் -ஒருத்தி மகனாய் பிறந்து-விளையாட்டாக பூதனை முதல் கேசி வரை -மிச்சம் இல்லாமல் அனைவரையும் முடித்து –அரவம் அடல் வேழம்-10- சேஷ்டிதங்கள் ஒரே பாசுரம்
யுக்தம் மதுரம்
அவர்கள் உடன் கூடியதும் ஆடியதும் -சம்யோகம் –யோகம் -சேர்க்கை – மதுரம்
பரீக்ஷித் -தர்ம ஸ்தாபனம் -பண்ண வந்த -இப்படி செய்யலாமோ -அக்னி -அனைத்தையும் புனிதமாக்கும் –சர்வதவசாகம் -சர்வாந்தராமி -உடல் மிசை உயிர் என எங்கும் பரந்துளன் சரீராத்மா பாவம் -சரீர த்வாரா ஆடினால் என்ன நேராக —-சரீர சம்பந்தமே இல்லையே -ஆத்ம சம்பந்தம் தானே
முக்தம் மதுரம்
பிரிவும் மதுரம் –கோபீகா கீதம் –விரஹம்-குடில குந்தளம்–நீண்டு சுழன்று செறிந்துன் நேத்து கடை சுருண்டு கரு நீலம் –இரட்டை திருவடி –அஹங்காரம் -தூக்கி கொள்ளச் சொல்ல -ஆழ்ந்த ஒரு திருவடி இணை -ஒருத்தி அழ–பூ கொத்து பறித்து வைத்து -குனிய -காண வில்லையே-சுரத்துடன் அழுது-
த்ருஷ்டம் மதுரம்
கடாக்ஷம் -செங்கண் சிறுச் சிறிதே
-ஜாயமான புருஷன் எம் பச்யதி -சாத்விக சிரத்தை –நெடு நோக்கு புண்டரீகாக்ஷன்-வேண்டாத துரியோதனனுக்கும் –பீஷ்ம த்ரோண -கிம் அர்த்தம் புண்டரீகாஷா -புக்தம் விதுர போஜனம் –அழல விழித்தான் அச்சோ அச்சோ -பார்வையால் துச்சோதனனை-இத்யாதிகளை – நிரசித்து – அஹம் காலோஸ்மி நிமித்தம் தான் அர்ஜுனா நீ —
சிஷ்டம் மதுரம்
மிச்சல் –போனகம் செய்த சேடம் –நிவேதனம் பண்ணிய மிச்சல் -இல்லை என்றால் பாப உருண்டைகள் –-பரமன் உண்ட எச்சில் நச்சினேன் -லஷ்மணன் -தாரை இடம் –
மதுராதிபதயே அகிலம் மதுரம்

—————

கோ³பா மது⁴ரா கா³வோ மது⁴ரா
யஷ்டிர்மது⁴ரா ஸ்ருஷ்டிர்மது⁴ரா |
த³லிதம் மது⁴ரம் ப²லிதம் மது⁴ரம்
மது⁴ராதி⁴பதேரகி²லம் மது⁴ரம் || 8 ||

கோபா மதுரா
கோபர்கள் -கோப குமாரர்கள் -தன்னேராயிரம்-கை கலந்து –திருட்டுக்கு துணை –பொத்த உரலை கவிழ்த்து- –-பிரசாதம் கை கலந்து -பிரமனுக்கு கற்றுக் கொடுத்த பாடம் -சென்று செருச் செய்யம் குற்றம் ஓன்று இல்லாத கோபர் –
நல் செல்வன் -இருவரும் உண்டே -சாமான்ய விசேஷ தர்மங்கள் -லஷ்மணன் அக்னி கார்யம் செய்யும் அன்று தான் இவன் பால் கறப்பான்-தோழன்மார் கண்டதே –செண்டு கோல் மேலாடை இத்யாதி -ஒரு கையால் ஒருவன் தன் தோள் ஊன்றி-ஸத்ய பாமை -பின்பு -தோள் கொடுப்பாள்
காவோ மதுரா
பசுக்களும் கன்றுகளும் –ஏற்ற கலங்கள் எதிர் கொண்டு மீதளிக்கும் -வள்ளல் பெறும் பசுக்கள் – கணங்கள் பல -கற்று கறவை -கறவைகள்–பல பன்மை
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி -இட்டமான பசுக்களை –கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் –
ஆ மருவி அப்பன்
-கோ சகன் -தேர் அழுந்தூர் –நிரை மேய்த்து அமரர் கோமான் –
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்தான் –
நெருஞ்சி முள் காட்டை மேய்ச்சல் நிலம்
யஷ்ட்டிர் மதுரா
கையில் கோல் –கொள்ளா மாக் கோல் –பார்த்தசாரதி -கையிலே பிடித்த -கோபால வேஷம் –
ஸ்ருஷ்ட்டிர் மதுரா
இயல்பு -குழந்தைகள் – ப்ரத்யும்னன் -அநிருத்தினான் -16008-ஒவ் ஒருவருக்கும் -10-அஷ்ட மஹிஷிகள்-குழந்தை பேறுக்கு ராம மந்த்ரம் -சொத்துக்கு கிருஷ்ண மந்த்ரம் –
கைலாச யாத்திரையில் -கள்வா –ருக்மிணி தேவி உடன் -சென்று –
தலிதம் மதுரம்

உடைந்த மண் பாத்திரம் கண்ணன் கை ஸ்பர்சம் -இதுவும் மதுரம் –வெறும் கலத்தை வெற்பிடை இட்டு அதன் ஓசை கேட்க்கும் உய்க்கும் கண்ணபிரான் கற்ற கல்வி
ஆத்மாவை ஸ்வா கருத்து சரீரம் விடுவதை
ததீ பாண்டன் -வ்ருத்தாந்தம் –இங்கு இல்லை என்றேனோ -ததி பாண்டனைப் போலே –
ததி பாண்டன் பிரகலாதன் இருவர் இடம் உள்ள பக்தியே முக்கியம்
முக்தி பெற்றது அன்றோ தயிர் தாழி யும்-
பலிதம் மதுரம்

பழம் -காய்-கண்ணன் அமுத செய்த சேஷம் -பலமும் சொல்லி நிகமிக்கிறார்
அவன் உண்ட மிச்சலே பலம் -முக்தி -மோக்ஷம் அங்கு காவு காவு தானே -இதுவே பரம புருஷார்த்தம் -உண்டதும் உமிழ்ந்ததுமே
என் அமுதினைக் கண்டா கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே -போலே இங்கும் பல ஸ்ம்ருதி இல்லாமல் –
இந்த ஸ்லோகம் சொல்வதே கேட்பதே பலம் பூமாதிகரணம் -போலே இதுவே பூமா –
மதுராதிபதியே அகிலம் மதுரம் –
-48-மதுரங்கள் -அனைத்தும் மதுரம் அஷ்ட 8-தடவை சொல்லி -நிகமிக்கிறார்

———————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வல்லபாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading