ஸ்ரீ மஹாபாரதம் -ஸ்ரீ வன பர்வம்-ஸ்ரீ  கோஷ யாத்ரா பர்வம்–

திருதராஷ்டிரன் புலம்பல்! – வனபர்வம் பகுதி 234-துவைதவனத்தில் பாண்டவர்களைச் சந்தித்த ஓர் அந்தணர், திருதராஷ்டிரனிடம் சென்று பாண்டவர்களின் நிலையைக் குறித்துச் சொன்னது; பாண்டவர்களின் நிலையையும், அதற்கான காரணங்களையும் நினைத்து திருதராஷ்டிரன் புலம்பியது …

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “ஓ! அந்தணரே {வைசம்பாயனரே}, குளிர், கோடை, காற்று மற்றும் சூரியன் ஆகியவற்றின் கடுமைத் தன்மைக்கு அக்கானகத்தில் முழுவதும் ஆட்பட்ட பிருதையின் {குந்தியின்} மகன்களான அந்த மனிதர்களில் முதன்மையானவர்கள், துவைதம் என்ற பெயர் கொண்ட தடாகத்தோடு கூடிய வனத்தை அடைந்த பிறகு என்ன செய்தார்கள்?” என்று கேட்டான்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “அத்தடாகத்திற்குப் பாண்டுவின் மகன்கள் வந்த பிறகு, மனிதர்கள் வசிக்காத ஒரு பகுதியைத் தேர்ந்தெடுத்து அங்கு வசித்தனர். இனிமையான கானகத்திலும், எப்போதும் அழகாக இருக்கும் மலைகளிலும், அழகிய ஆறுகள் கொண்ட பள்ளத்தாக்குகளிலும் உலவ ஆரம்பித்தனர். அவர்கள் தங்கள் வசிப்பிடத்தை அங்கே அமைத்துக் கொண்ட பிறகு, வேத கதைகள் அறிந்த பல மதிப்பிற்குரிய துறவிகள் அவர்களைக் {பாண்டவர்களைக்} காண அங்கே அடிக்கடி வந்து சென்றனர். அந்த மனிதர்களில் முதன்மையானவர்கள் {பாண்டவர்கள்}, வேதமறிந்த முனிவர்களால் எப்போதும் மதிக்கப்பட்டனர். ஒரு நாள், தனது பேச்சின் சக்திக்காக உலகத்தால் நன்கு அறியப்பட்ட ஒரு குறிப்பிட்ட அந்தணர் அந்தக் கௌரவ இளவரசர்களிடம் {பாண்டவர்களிடம்} வந்தார். பாண்டவர்களுடன் சிறிது நேரம் பேசிய அவர், தனது விருப்பத்தின்படி விசித்திரவீரியனுடைய அரசமகனின் {திருதராஷ்டிரனின்} அரசவைக்குச் சென்றார்.

குருக்களின் தலைவனான அந்த முதிய மன்னனால் {திருதராஷ்டிரனால} உரிய மரியாதையுடன் வரவேற்கப்பட்ட அந்த அந்தணர் தனக்கு அளிக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்தார். பிறகு அந்த ஏகாதபதி {திருதராஷ்டிரன்} கேட்டுக் கொண்டதற்கிணங்க, காற்றுக்கும் சூரியனுக்கும் தங்களை வெளிப்படுத்தி, மெலிந்து போய்க் கடும் துன்பத்தில் விழுந்திருக்கும் தர்மன் {யமன்}, பவனன் {வாயு}, இந்திரன் மற்றும் {அஸ்வினி} இரட்டையர்களின் மகன்களைக் குறித்துப் பேசினார். பிறகு அந்த அந்தணர், வீரர்களைக் கணவர்களாகக் கொண்டிருந்தும் துயரத்தில் மூழ்கி, முழுதும் ஆதரவற்ற நிலையில் இருக்கும் கிருஷ்ணையை {திரௌபதியைக்} குறித்தும் பேசினார். அந்த அந்தணரின் வார்த்தைகளைக் கேட்ட விசித்திரவீரியனின் அரச மகன் {திருதராஷ்டிரன்}, அரச பரம்பரையில் பிறந்து துன்பம் எனும் ஆற்றில் நீந்திக்கொண்டிருக்கும் அந்த இளவரசர்களை {பாண்டவர்களை} நினைத்துத் துயரால் தாக்குண்டான். அனைத்தும் தனது சொந்தத் தவறால் நடந்தனவே என்று நினைத்து, தனது உள்ளார்ந்த ஆத்மா சோகத்தில் மூழ்கியதால், பெருமூச்சுவிட்டும் நடுங்கியும், பெரும் முயற்சியை மேற்கொண்டு தன்னை அமைதிப் படுத்திக் கொண்டான் {திருதராஷ்டிரன்}.

அந்த ஏகாதிபதி {திருதராஷ்டிரன்}, “ஐயோ, உண்மையானவனும், பக்திமானும், அறம்சார்ந்த நடத்தை கொண்டவனும், ஒரு எதிரியும் இல்லாதவனும், முன்பு மென்மையான ரங்கு தோல்களாலான மெத்தைகளில் {ஹம்ஸதூளிகாசயனம்} படுத்தவனும், எனது மகன்களின் மூத்தவனுமான யுதிஷ்டிரன் இப்போது வெறுந்தரையில் எப்படி உறங்குகிறானோ? ஐயோ, தினமும் காலையில் சூதர்களாலும் மாகதர்களாலும், பிற பாடகர்களாலும் இனிமையாகப் பாடப்பட்ட தன் புகழ் துதியைக் கேட்டு எழும்பிய, இந்திரனுக்கு நிகரான அந்தக் குருகுல இளவரசன் {யுதிஷ்டிரன்}, இப்போது, இரவின் சில மணிநேரத்தில் {விடியற்காலையில்} பறவைக்கூட்டங்களால் வெறுந்தரையில் இருந்து எழுவானே!

காற்றுக்கும் வெயிலுக்கும் உடலை வெளிப்படுத்தி, இளைத்துப் போய்க் கோபத்தால் நிறைந்திருக்கும் சிரமப்படத்தகாத விரிகோதரன் {பீமன்}, பாஞ்சால இளவரசியின் {திரௌபதியின்} முன்னிலையில் வெறுந்தரையில் எப்படி உறங்குகிறானோ? வலியைத் தாங்கிக் கொள்ள முடியாதவனும், புத்திசாலியுமான அர்ஜுனன், யுதிஷ்டிரனின் விருப்பத்திற்குக் கீழ்ப்படிந்தாலும், தங்களுக்கு ஏற்பட்ட அநீதிகளை நினைத்து இரவெல்லாம் உறங்கமாட்டானே! இரட்டையர்கள் {நகுலனும் சகாதேவனும்}, கிருஷ்ணை, யுதிஷ்டிரன், பீமன் ஆகியோர் துன்பத்தில் மூழ்கியிருப்பதைக் காணும் அர்ஜுனன், ஐயமின்றி, கடும் சக்தி கொண்ட பாம்பைப் போலப் பெருமூச்சுவிட்டபடி கோபத்தால் இரவெல்லாம் உறங்க மாட்டானே!

சொர்க்கத்தில் உள்ள அருளப்பட்ட இரு தேவர்களைப் போல இருக்கும் இரட்டையர்கள் {நகுலன் சகாதேவன் ஆகியோர்}, அருள் நிலைக்குத் தகுதியிருப்பினும், அறம் மற்றும் உண்மைக்குக் கட்டுப்பட்டு, (தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்குப் பழிவாங்குவதைக் கட்டுப்படுத்திக் கொண்டு) விழிப்புடன் ஓய்வில்லாமல் தங்கள் இரவுகளைக் கழிப்பார்களே! வாயுத்தேவனின் பலத்திற்கு இணையான பலம் கொண்ட வாயு தேவனின் மகன் {பீமன்}, தனது அண்ணனால் சத்தியத்திற்குக் கட்டுப்பட்டு, பெருமூச்சுவிட்டபடி சந்தேகமற தனது கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டிருப்பான். அனைத்து போர்வீரர்களுக்கும் மேன்மையானவனாக இருப்பினும், அவன் {பீமன்} இப்போது, அறத்திற்கும் உண்மைக்கும் கட்டுப்பட்டுத் தரையில் அமைதியாகக் கிடக்கிறான். எனது பிள்ளைகளைக் கொல்ல நினைத்திருக்கும் அவன் நேரத்தின் கட்டளைக்காகக் காத்திருக்கிறான்.

ஏமாற்றுகரமாக யுதிஷ்டிரன் பகடையில் வீழ்த்தப்பட்ட போது, துச்சாசனன் பேசிய கொடும் வார்த்தைகள், விருகோதரனின் {பீமனின்} இதயத்தில் ஆழமாக மூழ்கி, எரிந்து கொண்டிருக்கும் வைக்கோல் கட்டு காய்ந்த விறகை உட்கொள்வது போல அவனை எரித்துக் கொண்டிருக்குமே! தர்மனின் மகன் எப்போதும் பாவ வழியில் செயல்படமாட்டான்; தனஞ்சயன் {அர்ஜுனன்} எப்போதும் அவனுக்குக் {யுதிஷ்டிரனுக்குக்} கீழ்ப்படிவான்; ஆனால், நாடுகடத்தப்பட்ட வனவாழ்வின் விளைவாக, காற்றின் துணையோடு எரியும் காட்டுத்தீ போல, பீமனின் கோபம் அதிகரித்துக் கொண்டே இருக்குமே! வீரனான அவன் {பீமன்} அந்தக் கோபத்தினால் பிளக்கப்பட்டு, கைகளைப் பிசைந்து கொண்டு என் பிள்ளைகளையும், பேரப்பிள்ளைகளையும் எரித்துவிடுவதைப் போல, மிகக் கோரமான சூடான பெருமூச்சை விட்டுக் கொண்டிருப்பானே! காண்டீவத்தைத் தாங்குபவனும் {அர்ஜுனனும்} விருகோதரனும் {பீமனும்} கோபப்படும்போது, யமனும் காலனும் போன்று, வஜ்ரங்களைப் போன்ற தங்கள் கணைகளைச் சிதறவிட்டு, எந்தத் தகுதி படைத்த எதிரியையும் கொன்று விடுவார்கள்.

ஐயோ, துரியோதனன், சகுனி, சூதனின் மகன் {கர்ணன்}, தீய ஆன்மா கொண்ட துச்சாசனன் ஆகியோர், பகடை வழியாகப் பாண்டவர்களின் நாட்டைக் களவு செய்து, கொடூரமான அழிவின் குறியைக் கவனிக்காமல் தேனை மட்டும் காண்பதாக அல்லவா தெரிகிறது. சரியாகவோ, தவறாகவோ நடந்து கொண்ட மனிதன் தனது அச்செயலுக்கான கனியை {பலனை} எதிர்பார்க்கிறான். எனினும், அக்கனி {அந்தப் பலன்} அவனைக் குழப்பத்தில் ஆழ்த்தி, முழுமையாக அவனை முடக்கிவிடுகிறது. பின்பு அம்மனிதன் எப்படி விடுபடுவான்? நிலம் நன்கு உழப்பட்டு, அதில் விதைகளைத் தூவி, காலத்தில் {மழையின்} தேவன் {இந்திரன்} {மழையைப்} பொழிந்தாலும், அந்தப் பயிர் விளையாமல் போகலாம். இதைத்தான் நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம். உண்மையில், இங்கே எல்லாம் விதி சார்ந்தே நடக்கிறது என்கிறது பழமொழி; நான் நினைப்பதுபோல் அல்லாமல் இருந்தால் அது எப்படி உண்மையாக இருக்க முடியும்? {இதற்கு தெய்வத்தைத் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்?}

சூதாடியான சகுனி, எப்போதும் நேர்மையாக நடந்து கொள்ளும் பாண்டுவின் மகனிடம் ஏமாற்றுகரமாக நடந்து கொண்டான். எனது தீய மகன்களின் மேல் கொண்ட பாசத்தினால் நானும் அது போலவே நடந்து கொண்டேன். ஐயோ, இதன் காரணமாகவே குருக்களுக்கு அழிவு காலம் வந்துவிட்டதே! ஓ!, ஒருவேளை, தவிர்க்க முடியாத அது {அழிவு} நடந்து விடுமோ! உந்தப்பட்டாலும் இல்லையென்றாலும் காற்று நகர்ந்தே தீரும். கருவுற்ற பெண் பிரசவிக்கத்தான் செய்வாள். வைகறை {விடியல்} இருளை விலக்கத்தான் செய்யும். பகல் மாலையில் மறைந்துதான் போகும்! நம்மாலோ, பிறராலோ ஈட்டப்பட்டது எதுவாயினும் {எந்தப் பொருளாயினும்}, மனிதர்கள் அதைச் செலவு செய்தாலும், செய்யாவிட்டாலும், நேரம் வரும்போது, அந்த நமது உடைமைகள் நமக்குத் துன்பத்தைக் கொண்டு வருகின்றன. இருந்தும் ஏன் மக்கள் செல்வத்தை ஈட்டுவதில் இவ்வளவு ஆவலாக உள்ளனர்?

உண்மையில், எதை அடைந்தாலும், அது விதியின் பயன் என்றால், அது பிரிக்கப்படாதபடி சிறுகச் சிறுக இழக்காமல் உடனே வெளியேற்றப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டாமா? அது பாதுகாக்கப்படாமல் இருந்தால் நூறு துண்டுகளாக உடைந்து போகுமே! {பிரிக்கப்படாமல், சிறிது சிறிதாகச் செலவாகாமல் பொருள் பாதுகாக்கப்பட வேண்டும்; இல்லையெனில் அது நூறு துண்டுகளாகச் சிதறிப் போகும்} ஆனால், நமது உடைமைகளின் தன்மை எதுவாக இருந்தாலும், இவ்வுலகில் நமது செயல்களின் வினை தொலைந்து போவதில்லை. {செய்த வினை பலன் கொடுக்காமல் போவதில்லை}.

வனத்தில் இருந்து இந்திரனின் வசிப்பிடத்திற்குச் சென்ற அர்ஜுனனின் சக்தியைப் பாரும்! நால்வகைத் தெய்வீக ஆயுதங்களில் நிபுணத்துவம் அடைந்த அவன் {அர்ஜுனன்}, மீண்டும் உலகத்திற்குத் திரும்பிவிட்டான்! மனித உருவத்தோடு சொர்க்கத்திற்குச் சென்ற எந்த மனிதன், மீண்டும் திரும்பி வர விரும்புவான்? காலத்தால் அடிக்கப்பட்டு, மரணத்திற்கு ஆட்பட்டிருக்கும் எண்ணற்ற குருக்களைக் {கௌரவர்களைக்} கண்ட காரணத்தாலேயே அவன் {அர்ஜுனன்} திரும்பியிருக்கிறான். இடது கையாலும் வில்லைப் பயன்படுத்தும் திறன் பெற்ற அர்ஜுனனே வில்லாளி! அவன் கையாளும் வில்லான காண்டீவம், கடும் ஊக்கம் கொண்டது. இது தவிர, அவன் தனது தெய்வீக ஆயுதங்களையும் வைத்திருக்கிறான்! இந்த மூன்றின் {தெய்வீக ஆயுதங்கள், காண்டீவம், அர்ஜுனன்} சக்தியை யாரால் தாங்க முடியும்?” என்றான் {திருதராஷ்டிரன்}.

அந்த ஏகாதிபதியின் {திருதராஷ்டிரனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட சுபலனின் மகன் {சகுனி}, கர்ணனுடன் அமர்ந்திருந்த துரியோதனனிடம் சென்று, அனைத்தையும் தனிமையில் சொன்னான். துரியோதனன் சிறு புத்தி கொண்டிருந்தவன் ஆனாலும், அவன் கேட்டதை நினைத்து துயரத்தால் நிறைந்தான்.”

துரியனைத் தூண்டிய சகுனி! – வனபர்வம் பகுதி 235-செழிப்புடன் இருக்கும் தன்னைக் காட்டி, பாண்டவர்களின் பொறாமையைத் தூண்டி அவர்களது துன்பத்தை அதிகரிக்கும்படி சகுனியும், கர்ணனும் துரியோதனனைத் தூண்டியது..

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “திருதராஷ்டிரனின் வார்த்தைகளைக் கேட்ட சகுனி, சந்தர்ப்பம் கிடைத்த போது, கர்ணனின் துணையோடு துரியோதனனிடம் இவ்வார்த்தைகளைப் பேசினான். அவன் {சகுனி}, “ஓ! பாரதா {துரியோதனா}, உனது பராக்கிரமத்தினால் வீரர்களான பாண்டவர்களை நாடு கடத்திய பிறகு, சம்பரனைக் கொன்றவன் சொர்க்கத்தை ஆண்டதைப் போல, எதிரிகள் இல்லாத இப்பூமியை ஆட்சி செய்! ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, கிழக்கு, தெற்கு, மேற்கு மற்றும் வடக்கின் மன்னர்கள் அனைவரும் உனக்குக் கப்பம் செலுத்துகின்றனர். ஓ! பூமியின் தலைவா {துரியோதனா}, முன்பு பாண்டுவின் மகன்களுக்குச் சொந்தமாக இருந்த பிரகாசமான செழிப்பனைத்தையும், இப்போது உனது தம்பிகளுடன் கூடிய நீ அடைந்துவிட்டாய்? இந்திரப்பிரஸ்தத்தில் முன்பு யுதிஷ்டிரனிடம் இருந்த அந்தப் பிரகாசமான செழுமையை நாம் முன்பு கனத்த இதயத்தோடு பார்த்துக் கொண்டிருந்தோம். ஓ! மன்னா {துரியோதனா}, இப்போது அந்தச் செல்வங்கள் உனது தம்பிகளுடன் சேர்ந்த உனக்குச் சொந்தமாகிவிட்டது. ஓ! வலிமைமிக்கக் கரங்கள் கொண்ட ஏகாதிபதி {துரியோதனா}, அரசனான யுதிஷ்டிரனிடம் இருந்து அந்தச் செழிப்பை அறிவின் பலத்தால் மட்டுமே பறித்தோம்.

ஓ! எதிரி வீரர்களைக் கொல்பவனே {துரியோதனா}, பூமியின் அனைத்து மன்னர்களும் உனக்கு அடங்கி வாழ்ந்து, முன்பு யுதிஷ்டிரனுக்காகக் காத்திருந்தது போல, இப்போது உனது கட்டளைக்காகக் காத்திருக்கின்றனர். ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, மலைகள், கானகங்கள், நகரங்கள், சுரங்கங்கள், குன்றுகளுடன் கூடி, கடல்களின் சுற்றளவோடு கட்டுக்கடங்காத பரப்புக் கொண்ட பூமா தேவி இப்போது உனதாகிவிட்டாள். உனது பராக்கிரமத்தின் காரணமாக, அந்தணர்களால் புகழப்பட்டும், மன்னர்களால் வழிபடப்பட்டும், சொர்க்கத்தில் தேவர்களுக்கு மத்தியில் இருக்கும் சூரியனைப் போல நீ பிரகாசித்துக் கொண்டிருக்கிறாய். ருத்திரர்களால் சூழப்பட்ட யமனைப் போலவும், மருதர்களால் சூழப்பட்ட வாசவனைப் {இந்திரனைப்} போலவும் குருக்களால் சூழப்பட்ட நீ, ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, நட்சத்திரங்களுக்கு மத்தியில் இருக்கும் சந்திரனைப் போலப் பிரகாசித்துக் கொண்டிருக்கிறாய்.

எனவே, ஓ! மன்னா {துரியோதனா}, எந்தக் கட்டளைகளுக்கும் கீழ்ப்படியாமல், எந்த அடக்குமுறைக்கும் அடிபணிந்து வாழாமல் இருந்த பாண்டுவின் மகன்கள், தங்கள் செழிப்பை இழந்திருக்கும் இந்த நேரத்தில், நாம் அவர்களைப் பார்க்க வேண்டும். ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, இப்போது பாண்டவர்கள் துவைதவனத்தில் இருக்கும் தடாகத்தின் கரையில், காட்டையே தங்கள் இல்லமாகக் கொண்டு, எண்ணற்ற அந்தணர்கள் புடைசூழ வாழ்ந்து வருகிறார்கள் என்று நாம் கேள்விப்படுகிறோம். தனது வெப்பக் கதிர்களால் அனைத்தையும் தகிக்க வைக்கும் சூரியனைப் போல, அனைத்துச் செல்வங்களுடனும் கூடிய நீ, உன்னுடைய மகிமையை பாண்டுவின் மகன்களைக் காணச் செய்து {அவர்களை}, அனலால் தகிக்க வைப்பதற்கு அவ்விடம் {அவர்கள் இருக்கும் இடத்திற்கு} செல்வாயாக. நீ நாட்டை அடைந்தவன், அவர்கள் நாட்டை இழந்தவர்கள், நீ செழிப்புடன் இருப்பதையும், அவர்கள் அதை இழந்திருப்பதையும், நீ செல்வாக்குடன் இருப்பதையும் அவர்கள் வறுமையில் இருப்பதையும் {அவர்களும், நீயும்} காண, ஓ! மன்னா {துரியோதனா}, பாண்டுவின் மகன்களைச் சென்று பார்.

பெரும் எண்ணிக்கையிலான தொண்டர்கள் புடைசூழ, அனைத்துப் பெரிய அருளையும் அனுபவித்துக் கொண்டு, நகுஷனின் மகனான யயாதியைப் போல இருக்கும் உன்னைப் பாண்டுவின் மகன்கள் காணட்டும். ஒருவனின் நண்பர்கள் மற்றும் எதிரிகள் ஆகிய இருவராலும் காணப்படும் செழிப்பு, நன்கு நிலைபெற்றதாகக் கருதப்படுகிறது. மலை மேல் இருக்கும் ஒருவன், பூமியில் தவழ்ந்து செல்பவனைக் காண்பதைப் போல, தான் செழிப்புடன் வாழும்போது, எதிரிகள் மோசமான நிலையில் வாழ்வதைக் காண்பதை விட ஒருவனுக்கு எது முழுமையான மகிழ்ச்சியை அளிக்கக்கூடும்? ஓ! மன்னர்களில் புலியே {துரியோதனா}, தானம் பெறுவது, செல்வத்தை அடைவது, அல்லது நாட்டை அடைவது ஆகியவற்றைவிட, எதிரிகளின் துயரைக் கண்டு ஒருவன் அடையும் இன்பம் பெரியதாகும்.

செல்வாக்குடன் இருக்கும் ஒருவன் {நீ} மரவுரியும், மான் தோல்களையும் உடுத்தியிருக்கும் தனஞ்சயனைக் கண்டால் எந்த மகிழ்ச்சிதான் அவனுடையதாகாது {உனதாகாது}? {எல்லையற்ற மகிழ்ச்சியை அடைவாய்}. மரவுரியும், மான்தோல்களும் அணிந்து, துயரத்துடன் இருக்கும் கிருஷ்ணை {திரௌபதி}, விலையுயர்ந்த உடைகள் அணிந்திருக்கும் உனது மனைவியைக் கண்டு மேலும் துன்புறட்டும். ஆபரணங்களால் நன்கு அலங்கரிக்கப்பட்டிருக்கும் உனது மனைவியைக் காணும்போது, செல்வத்தை இழந்து துக்கத்தில் இருக்கும் துருபதன் மகள் {திரௌபதி}, சபைக்கு மத்தியில் (துச்சாசனனால் இழுத்து வரப்பட்ட போது) அடைந்த துன்பத்தை விட அதிகமான துன்பத்தை அடைந்து, தன்னையும், தன் வாழ்வையும் நிந்தனை செய்து கொள்ளட்டும்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “ஓ! ஜனமேஜயா, மன்னனிடம் {துரியோதன்னிடம்} இப்படிப் பேசிய பிறகு, கர்ணனும் சகுனியும் {1} தங்கள் சொற்பொழிவை முடித்துக் கொண்டு அமைதியடைந்தனர்”

கர்ணன் தீட்டிய திட்டம்! – வனபர்வம் பகுதி 236-திருதராஷ்டிரன் தன்னைத் துவைதவனம் செல்ல அனுமதிக்க மாட்டான் எனவும், அதனால், திருதராஷ்டிரன் ஏற்றுக்கொள்ளும் வகையில் அதற்கு ஒரு சிறந்த திட்டத்தைத் தீட்டுமாறும் துரியோதனன் கர்ணனைப் பணித்தது; மாட்டு மந்தைகளைக் கண்காணிக்கச் செல்கிறோம் என்று திருதராஷ்டிரனிடம் சொல்லுமாறு துரியோதனனிடம் கர்ணன் சொன்னது….

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “கர்ணனின் வார்த்தைகளைக் கேட்ட பிறகு, மன்னன் துரியோதனன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். எனினும், விரைவில், அந்த இளவரசன் {துரியோதனன்} மனச் சோர்வடைந்து, அப்படிப் பேசியவனிடம் {கர்ணனிடம்}, “ஓ! கர்ணா, நீ சொல்வது, எப்போதும் என் மனதில் இருக்கிறது. எனினும், பாண்டவர்கள் வசிக்கும் இடத்திற்குச் செல்வதற்கான அனுமதியை என்னால் பெற முடியாது. மன்னர் திருதராஷ்டிரர் எப்போது அந்த வீரர்களுக்காக வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார். உண்மையில், தங்கள் தவங்களால் பாண்டுவின் மகன்கள் மேலும் பலமடைந்திருப்பதாக மன்னர் {திருதராஷ்டிரர்} கருதுகிறார். அல்லது, நமது நோக்கங்களைப் புரிந்திருப்பதால், எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, அவர் நமக்கு அனுமதி வழங்கமாட்டார். ஓ! பெரும் பிரகாசமிக்கவனே, துவைதவனத்தில் வனவாசத்தை மேற்கொண்டு இருக்கும் பாண்டவர்களை அழிப்பதைவிட நமக்கு வேறு எதுவும் காரியம் கிடையாது என்பதை அறிந்ததால் அவர் {திருதராஷ்டிரர்} அனுமதி வழங்க மாட்டார்.

பகடையாட்டத்தின் போது, என்னிடமும், உன்னிடமும், சுபலனனின் மகனிடமும் {சகுனியிடமும்} க்ஷத்திரி {விதுரர்} பேசிய வார்த்தைகளை நீ அறிவாய். அந்த வார்த்தைகள் அனைத்தையும், மற்றவர்கள் புலம்பியதையும் (அவரும் {விதுரரும்} பிறரும் புலம்பியதையும்) நினைத்துப் பார்த்தால், நான் போக வேண்டுமா, வேண்டாமா என்பதை என் மனதால் தீர்மானிக்க முடியவில்லை. பீமனும், பல்குனனும் {அர்ஜுனன்} கிருஷ்ணையுடன் {திரௌபதியுடன்} சேர்ந்து தங்கள் நாட்களை வனத்தில் வலியுடன் கடத்துவதை என் கண்களால் கண்டால், நிச்சயம் நான் பெரிதும் மகிழ்வேன். பாண்டுவின் மகன்கள் மரவுரி உடுத்தி மான் தோல்களை அணிந்திருப்பதைக் காணும்போது நான் அடையும் மகிழ்ச்சியை, இந்த முழு உலகின் ஆட்சியும் நான் பெறும்போது கூட அடைய மாட்டேன். ஓ! கர்ணா, துருபதன் மகள் {திரௌபதி} அந்த வனத்தில் சிவப்புக் கந்தலாடை அணிந்திருப்பதைக் காண்பதை விட என்ன மகிழ்ச்சி எனக்குப் பெரிதாக இருக்கும்?

பாண்டுவின் மகன்களான யுதிஷ்டிரனும் பீமனும், நான் பெரும் செல்வாக்கு அடைந்திருப்பதைக் கண்டால்தான், எனது வாழ்வின் பெரிய இலக்கை அடைந்த நிறைவைக் கொள்வேன். எனினும், நான் கானகத்திற்குச் செல்வதற்கான வழிகளைக் காணவில்லை. உண்மையில், நான் அங்குச் செல்வதற்கு, எதைக் கொண்டு மன்னரின் அனுமதியைப் பெற முடியும்! எனவே, நாம் கானத்திற்குச் செல்லும் வகையில், சுபலனின் மகனோடும் {சகுனியோடும்}, துச்சாசனனோடும் சேர்ந்து ஒரு திறமை வாய்ந்த திட்டத்தை முயன்று கண்டுபிடி {திறமையான திட்டத்தை உருவாக்கு}! நானும், நான் அங்குச் செல்வதா வேண்டாமா என்று எனது மனதில் உறுதி செய்து கொண்டு, நாளை மன்னரின் முன்னிலைக்குச் செல்கிறேன். குருக்களில் சிறந்தவரான பீஷ்மரோடு நான் அமர்ந்திருக்கும்போது, நீ சகுனியோடு சேர்ந்து நீங்கள் உருவாக்கிய திட்டத்தை முன்மொழி. பயணம் குறித்துப் பீஷ்மர் மற்றும் மன்னரின் வார்த்தைகளைக் கேட்ட பிறகு, எங்கள் பாட்டனிடம் {பீஷ்மரிடம்} வேண்டிக் கொண்டு அனைத்தையும் தீர்மானிக்கிறேன்” என்றான் {துரியோதனன்}.

“அப்படியே ஆகட்டும்” என்று சொல்லிய அவர்களை அனைவரும் தங்கள் தங்கள் இடங்களுக்குச் சென்று விட்டனர். இரவு கடந்ததும், கர்ணன் மன்னனிடம் {துரியோதனனிடம்} வந்தான். அவனிடம் வந்த கர்ணன் சிரித்துக் கொண்டே துரியோதனனிடம், “என்னால் ஒரு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஓ! மனிதர்களின் தலைவா {துரியோதனா}, அதைக் கேள்! நமது மந்தைகள் {இடைச்சேரிகள்} துவைதவனக் காட்டில் உன்னை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன! ஆடுமாடுகளின் மந்தைகளைக் கண்காணிக்கிறோம் என்ற சாக்கைச் சொன்னால், நிச்சயம் நாம் அனைவரும் அங்கே செல்லலாம். ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, மாட்டு மந்தைகளுக்கு மன்னர்கள் அடிக்கடி செல்வது {கோஷ யாத்திரை செல்வது} முறையே. ஓ! இளவரசே {துரியோதனா}, இதுவே நோக்கமாக முன்மொழியப்பட்டால், உனது தந்தை நிச்சயம் உனக்கு அனுமதி வழங்குவார்!” என்றான்.

துரியோதனனும் கர்ணனும் இப்படிச் சிரித்துப் பேசிக் கொண்டிருக்கையில், சகுனி அவர்களிடம் “அங்குச் செல்வதற்கு, இந்தத் திட்டத்தையே சிரமமற்றது என நானும் கண்டேன்! மன்னர் {திருதராஷ்டிரர்} நமக்கு நிச்சயம் அனுமதி வழங்குவார். மேலும் அவரே நம்மைப் போகும்படியும் ஏவுவார். நமது மந்தைகள் அனைத்தும் துவைதவனக் காடுகளில் உன்னை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன. மாட்டு மந்தைகளைக் கண்காணிக்கச் செல்கிறோம் என்ற சாக்கில் நாம் அனைவரும் அங்குச் செல்வோம் என்பதில் ஐயமில்லை” என்றான் {சகுனி}.

பிறகு அவர்கள் மூவரும் சிரித்து, ஒருவருக்கொருவர் கைகளைக் கொடுத்தனர். ஒரு தீர்மானத்தை அடைந்த அவர்கள், குருக்களின் தலைவனைக் {திருதராஷ்டிரனைக்} காணச் சென்றனர்.” 

சகுனி அளித்த உறுதி! – வனபர்வம் பகுதி 237-கர்ணன், துவைதவனம் செல்வதற்கு துரியோனனுக்கு அனுமதியளிக்குமாறு திருதராஷ்டிரனிடம் வேண்டியது; திருதராஷ்டிரன் முதலில் மறுத்து, பின்பு ஏற்றது; துரியோதனன் துவைதவனத்தை அடைந்தது….

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பிறகு அனைவரும் மன்னன் திருதராஷ்டிரனைக் காணச் சென்றனர். ஓ! ஜனமேஜயா, அவனைக் கண்டு, அவனது நலம் விசாரித்து, பதிலுக்கு அவனால் {திருதராஷ்டிரனால்} அவர்களின் நலம் விசாரிக்கப்பட்டனர். பிறகு, ஏற்கனவே அவர்களால் ஏவப்பட்ட சமங்கன் {சங்கவன்} என்ற பெயர் படைத்த ஒரு மாட்டு இடையன் மன்னனை அணுகி கால்நடைகளைக் குறித்துப் பேசினான். ஓ! மன்னா {ஜனமேஜயா}, பின்பு ராதையின் மகனும் {கர்ணனும்}, சகுனியும் சேர்ந்து திருதராஷ்டிரனிடம், “ஓ! கௌரவரே {திருதராஷ்டிரரே}, நமது கால்நடை நிலையங்கள் இப்போது இனிமையான இடத்தில் இருக்கின்றன. அவற்றை எண்ணுவதற்கும், குட்டிகளைக் குறித்துக் கொள்வதற்கும் நேரம் வந்துவிட்டது {கணக்கெடுப்பு எடுப்பதற்கு நேரம் வந்துவிட்டது}. ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, இதுவே உமது மகன் வேட்டைக்குச் செல்வதற்கு அற்புதமான காலமாகும். எனவே, துரியோதனன் அங்குச் செல்வதற்கு அனுமதி கொடுப்பதே உமக்குத் தகும்” என்றனர்.

திருதராஷ்டிரன், “ஓ! குழந்தாய்! மான் துரத்தலும் {வேட்டையாடுவதும்}, கால்நடைகளை ஆய்வு செய்தலும் மிகச் சரியானதே! உண்மையில் இதுவிஷயத்தில் இடையர்கள் நம்பத்தக்கவர்கள் அல்ல என்பதே என் எண்ணம். ஆனால், மனிதர்களில் புலிகளான பாண்டவர்கள் அந்தக் கால்நடை நிலையங்களுக்கு அருகில் இருப்பதாக நாம் கேள்விப்படுகிறோம். எனவே, நீங்கள் அங்குச் செல்லக்கூடாது என்றே நான் நினைக்கிறேன். வஞ்சகமான வழிகளில் வீழ்த்தப்பட்ட அவர்கள் பெரும் துயரத்துடன் அந்த ஆழ்ந்த கானகத்தில் வாழ்கிறார்கள். ஓ! ராதேயா {கர்ணா}, அவர்கள் பெரும் பலம்மிக்க வீரர்களும், இயற்கையிலேயே திறன் வாய்ந்தவர்களும் ஆவார்கள். இப்போது அவர்கள் தவத்திற்குத் தங்களை அர்ப்பணித்திருக்கிறார்கள். மன்னன் யுதிஷ்டிரன் கோபம் தூண்டப்பட்டுப் பாதிப்படைய மாட்டான். ஆனால் பீமன், இயற்கையிலேயே உணர்ச்சிகள் மிக்கவன் ஆவான். யக்ஞசேனனின் மகள் {திரௌபதி}, தானே சக்தியாக இருக்கிறாள். கர்வமும், அறியாமையம் கொண்ட நீங்கள் நிச்சயம் குற்றம்புரிவீர்கள். தவத்தகுதி பெற்ற அவள் நிச்சயம் உங்களை எரித்துவிடுவாள். அல்லது வாள்களும் ஆயுதங்களும் கொண்ட அந்த வீரர்கள் {பாண்டவர்கள்} உங்களை எரித்துவீடுவார்கள்! அல்லாமலும், எண்ணிகையில் சக்தியுடைய நீங்கள் {எண்ணிக்கையில் அதிகமான நீங்கள்} அவர்களை எந்த விதத்திலாவது காயப்படுத்த முனைந்தால், அது மிகவும் முறையற்ற செயலாகிவிடும். நீங்கள் அதில் வெல்லவும் முடியாது என்பது எனது எண்ணம்.

வலிமையான கரங்கள் கொண்ட அர்ஜுனனும் கானகம் திரும்பிவிட்டான். ஆயுதங்கள் பெற்றிருக்காத போதே பீபத்சு {பீபத்சு} {அர்ஜுனன்} முழு உலகையும் வென்றிருக்கிறான். இப்போது ஆயுதங்களைப் பெற்றிருக்கிற பலமிக்க வீரனான அவனால் {அர்ஜுனனால்}, உங்கள் அனைவரையும் கொல்ல முடியாதா? அல்லது எனது வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து நீங்கள் கவனமாக அங்குச் சென்றாலும், தொடர்ந்து உண்மையற்றவர்களாக இருந்த காரணத்தால் மனக்கலக்கம் அடையும் உங்களால் அங்கு மகிழ்ச்சியாக இருக்க முடியாது. அல்லது உங்களுடைய ஏதாவது ஒரு படைவீரன் யுதிஷ்டிரனுக்குத் தீங்கு செய்தால், அது முன்பே திட்டமிடப்படாத செயலாக இருந்தாலும், அக்குற்றம் உங்களையே சாரும். எனவே, கணக்கெடுக்கும் வேலைக்கு நம்பிக்கைக்குரிய வேறு ஏதாவது மனிதன் செல்லட்டும். பாரதா {இங்கு துரியோதனா என்ற பொருள் வரும் என நினைக்கிறேன். ஆனால் திருதராஷ்டிரன் கர்ணனிடம்தான் பேச ஆரம்பிக்கிறான்}, நீயே அங்குச் செல்வதை நான் முறையாக எண்ணவில்லை” என்றான் {திருதராஷ்டிரன்}.

சகுனி, “பாண்டு மகன்களின் மூத்தவன் {யுதிஷ்டிரன்} அறநெறிகளை அறிந்தவன். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சபைக்கு மத்தியில், பனிரெண்டு வருடங்கள் தான் கானகவாசம் செய்வதாக அவனே சூளுரைத்திருக்கிறான். பாண்டுவின் மற்ற மகன்கள் அனைவரும் அறம் சார்ந்தவர்களும், யுதிஷ்டிரனுக்குக் கீழ்ப்படிந்தவர்களும் ஆவர். குந்தியின் மகனான யுதிஷ்டிரன், நம்மிடம் எப்போதும் கோபம் கொள்ள மாட்டான். உண்மையில், வேட்டைப் பயணம் செல்லவே நாங்கள் மிகவும் விரும்புகிறோம். அப்படிச் செல்லும் போது, நமது கால்நடைகளைக் கணக்கிடுவதை மேற்பார்வையிடும் வாய்ப்பையும் பெறுவோம். பாண்டுவின் மகன்களைக் காண எங்களுக்கு எண்ணமில்லை. பாண்டவர்கள் வசிக்கும் இடத்திற்கு நாங்கள் செல்ல மாட்டோம். அதே போல எங்கள் தரப்பில் இருந்து எந்தத் தவறான நடவடிக்கையும் எழாது” என்றான் {சகுனி}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “சகுனியால் இப்படிச் சொல்லப்பட்ட அந்த மனிதர்களில் தலைவனான திருதராஷ்டிரன், தனக்கு அதில் அதிக விருப்பம் இல்லாவிட்டாலும், துரியோதனனும் அவனது ஆலோசகர்களும் {அமைச்சர்களும், கர்ணனும், சகுனியும்} அங்குச் செல்ல அனுமதி கொடுத்தான். அந்த ஏகாதிபதியால் {திருதராஷ்டிரனால்} அனுமதி அளிக்கப்பட்ட காந்தாரிக்குப் பிறந்த அந்த இளவரசன் {துரியோதனன்}, கர்ணனின் துணையுடன், பெரும் படை சூழ சென்றான். அவனுடன் {துரியோதனனுடன்}, துச்சாசனன், பெரும் புத்திக்கூர்மை கொண்ட சுபலனின் மகன் {சகுனி}, அவனது பல தம்பிகள் மற்றும் ஆயிரக்கணக்கான மங்கையரும் சென்றனர். துவைதவனம் என்ற பெயரால் அறியப்பட்ட அத்தடாகத்தைக் காண தனது மனைவியருடன் அந்த வலிமைவாய்ந்த கரங்கள் கொண்ட இளவரசன் புறப்பட்ட போது, (ஹஸ்தினாபுரத்தின்} குடிமக்களும் தங்கள் தங்கள் மனைவியருடன் அவனைத் தொடர்ந்தனர். எட்டாயிரம் {8000} தேர்கள், முப்பதாயிரம் {30000} யானைகள், ஒன்பதாயிரம் {9000} குதிரைகள், பல்லாயிரம் தரைப்படை வீரர்கள், கடைகள், கூடாரங்கள், வணிகர்கள், பாடகர்கள், வேட்டையில் நன்கு பயின்ற நூற்றுக்கணக்கானவர்களும் ஆயிரக்கணக்கானவர்களும் அவனைத் தொடர்ந்து சென்றனர். ஓ! மன்னா {ஜனமேஜயா}, அம்மன்னன் {துரியோதனன்} புறப்பட்ட போது, அவனைத் தொடர்ந்து சென்ற பெரிய மக்கள் கூட்டம், மழைக்காலக் காற்றின் ஆழ்ந்த இரைச்சலைப் போலப் பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தியது. தனது தொண்டர்களுடனும், வாகனங்களுடனும் துவைதவனத்தை அடைந்த மன்னன் துரியோதனன், {அத்தடாகத்திலிருந்து} நான்கு மைல்கள் {கவ்யூதி அல்லது இரண்டு க்ரோசம்} தொலைவில் தங்கினான்.

வீரர்களைத் தடுத்த கந்தர்வர்கள்! – வனபர்வம் பகுதி 238-இனிமையான காடுகளைக் கடந்து கடைசியாகத் துரியோதனன் தடாகத்தை அடைவது; தடாகத்தின் அருகில் கேளிக்கை விடுதிகளைக் கட்ட துனது பணியாட்களிடம் துரியோதனன் சொன்னது; அவ்வீரர்கள் கந்தர்வர்களால் தடுக்கப்பட்டது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பிறகு மன்னன் துரியோதனன் காடுவிட்டு காடு நகர்ந்து, கடைசியாகக் கால்நடை நிலையங்களை அடைந்து, தனது துருப்புகளை நிறுத்தினான். அவனின் {துரியோதனனின்} பணியாட்கள், நீரும் மரங்களும் அபரிமிதமாக இருக்கும் இனிமையான நன்கு அறியப்பட்ட இடத்தில் அவனுக்காக {துரியோதனனுக்காக} அனைத்து வசதிகளுடன் கொண்ட ஒரு வசிப்பிடத்தைக் கட்டினர். அந்த அரச வசிப்பிடத்திற்கு அருகிலேயே கர்ணனுக்கும், சகுனிக்கும், மன்னனின் {துரியோதனனின்} தம்பிகளுக்கும் தனித்தனியே வசிப்பிடங்களை எழுப்பினர். நாற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான தனது கால்நடைகளை மன்னன் {துரியோதனன்} கண்டு, அதன் உறுப்புகளையும், குறிகளையும் ஆய்வு செய்து கணக்கெடுத்தான்.


கன்றுகளுக்கு அடையாளம் இடச் செய்து, பிறகு பழக்கப்படுத்தப்பட வேண்டிய கன்றுகள் குறித்து {இடையர்களை} குறிப்புகள் எடுக்க வைத்தான். மேலும் அவன் {துரியோதனன்}, எந்தப் பசுக்களின் கன்றுகள் இன்னும் பால் மறக்க வில்லை என்பதையும் கணக்கிட வைத்தான். மூன்று வயது முடிந்த ஒவ்வொரு கன்றையும் அடையாளம் இட்டு எண்ணி கணக்கிடும் வேலைகளை முடித்த அந்தக் குரு இளவரசன் {துரியோதனன்}, மாட்டு இடையர்களால் சூழப்பட்டு, மகிழ்ச்சியாக விளையாடி உலவ ஆரம்பித்தான். {அவனுடன் சென்றிருந்த} ஆயிரக்கணக்கான குடிமக்களும், படைவீரர்களும் அக்காட்டில் தங்களுக்குப் பிடித்தவாறெல்லாம் தேவர்களைப் போல விளையாடிக் கொண்டிருந்தனர். பாடுவது, ஆடுவது, இசைக்கருவிகளை இசைப்பது ஆகியவற்றில் நிபுணத்துவம் கொண்ட இடையர்களும், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த கன்னியர்களும் {virgins}, திருதராஷ்டிரன் மகனின் {துரியோதனனின்} இன்பங்களைக் கவனித்துக் கொள்ளத் தொடங்கினர். அரசகுல மங்கையரால் சூழப்பட்ட மன்னன் {துரியோதனன்}, தன்னை மகிழ்விக்க இருப்பவர்கள் மத்தியில் செல்வம், உணவு மற்றும் பல்வேறு பானங்களை அவர்கள் விருப்பத்திற்கேற்ப மகிழ்ச்சிகரமாகப் பிரித்துக் கொடுத்தான்.

தனது தொண்டர்களால் கவனிக்கப்பட்ட அம்மன்னன் {துரியோதனன்}, சுற்றிலும் இருந்த கழுதைப் புலிகளையும், எருமைகளையும், மான்களையும், காயல்களையும் {கவ்ய விலங்குகளையும்}, கரடிகளையும், பன்றிகளையும் கொல்ல ஆரம்பித்தான். அந்த ஆழ்ந்த கானகத்தில் ஆயிரக்கணக்கான விலங்குகளைத் தனது கணைகளால் துளைத்த அம்மன்னன் {துரியோதனன்}, அக்கானகத்தின் மிக இனிமையான பகுதிகளில் இருந்து மான்களைப் பிடிக்கச் செய்தான். ஓ! பாரதா {ஜனமேஜயா}, பால் குடித்து, இன்னும் பிற மதுரமான பொருட்களையும் உண்டு, பல இனிமையான காடுகளையும், மலரில் இருந்து கிடைத்த தேனால் மயக்கம் கொண்டு அலையும் வண்டுகளும், மயில்களின் ஓசையும் நிறைந்த தோப்புகளையும் கண்டு, கடைசியில் அம்மன்னன் துவைதவனத்தின் புனிதமான தடாகத்திற்கு வந்து சேர்ந்தான்.

அந்த மன்னன் அடைந்த பகுதி, மலரின் தேனால் மயக்கமுற்றிருந்த வண்டுகளாலும், நீல நிறத் தொண்டைகளில் இருந்து மதுரமான குரலை எழுப்பும் மயில்களும் நிறைந்து, ஏழிலைம்பாலைகள் {Saptacchadas}, புன்னை {Punnaga}, மகிழ {Vakula} மரங்களின் நிழலாலும் நிறைந்திருந்தது. உயர்ந்த செழிப்பையுடைய அம்மன்னன் {துரியோதனன்}, வஜ்ரத்தைத் தாங்கிச் செல்லும் தேவர்களின் தலைவனைப் {இந்திரனைப்} போல அங்கே சென்றான். ஓ! குருகுலத்தில் சிறந்தவனே {ஜனமேஜயா}, உயர்ந்த புத்தி கொண்ட நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, அப்போது அந்தத் தடாகத்தின் அருகில், தனது மனைவியான துருபதன் மகளுடன் {திரௌபதியுடன்} சேர்ந்து, {ஒரு} பகலில் செய்யப்படும் ராஜரிஷி என்ற வேள்வியை, அந்த வனத்தில வாழும் மனிதர்கள் மற்றும் தேவர்களின் ஒப்புதலோடு செய்து கொண்டிருந்தான்.

ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, அந்த இடத்தை அடைந்த துரியோதனன், தனது ஆயிரக்கணக்கான மனிதர்களிடம், “விரைவாக இங்கே கேளிக்கை {இன்ப} வீடுகள் {உத்தியானவனங்கள்} கட்டப்படட்டும்” என்று கட்டளையிட்டான். மன்னனின் உத்தரவின் பேரில் குற்றேவல் செய்பவர்கள் அந்தக் குருகுலத் தலைவனிடம் “அப்படியே ஆகட்டும்” என்ற வார்த்தைகளைச் சொல்லி, இன்பவீடுகளைக் கட்ட அந்தத் தடாகத்தின் கரையை நோக்கிச் சென்றனர். திருதராஷ்டிரன் மகனின் {துரியோதனனின்} தேர்ந்தெடுக்கப்பட்ட படைவீரர்கள் அந்தத் தடாகத்தின் பகுதியை அடைந்து, அந்த வனத்தின் வாயிலுக்குள் நுழைய முயன்ற போது, அங்கே எண்ணிலடங்கா கந்தர்வர்கள் தோன்றி அவர்களை நுழைய விடாமல் தடுத்தனர். ஏனெனில், ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, தனது தொண்டர்களுடன் கூடிய கந்தர்வர்களின் மன்னன் {சித்திரசேனன்}, குபேரனின் வசிப்பிடத்தில் இருந்து முன்பே அங்கு வந்திருந்தான். அந்தக் கந்தர்வர்களின் மன்னன் பல்வேறு அப்சரசு இனங்களின் துணையோடும், தேவர்களின் மகன்களோடும் வந்திருந்தான். விளையாட்டுக்கும், கேளிக்கைக்குமாக அங்கு வந்திருந்த அவர்களால், அந்த வனம் அனைத்து மூலைகளிலும் நன்றாக அடைக்கப்பட்டிருந்தது.

கந்தர்வர்களின் மன்னனால் அத்தடாகம் அடைக்கப்பட்டிருப்பதைக் கண்ட, (குரு) மன்னனின் {துரியோதனனின்} பணியாட்கள், ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, மன்னன் துரியோதனன் இருந்த இடத்திற்குச் சென்றனர். இவ்வார்த்தைகளைக் கேட்ட துரியோதனன், போரில் வெல்வதற்குக் கடினமான எண்ணற்ற தனது போர் வீரர்களை அழைத்து, அந்தக் கந்தர்வர்களை விரட்டுமாறு உத்தரவிட்டான். குரு படையின் முன்னணி வீரர்களான அவர்கள் மன்னனின் {துரியோதனனின்} இவ்வார்த்தைகளைக் கேட்டு, துவைதவனத்தின் தடாகத்திற்குச் சென்று, அந்தக் கந்தர்வர்களிடம், “திருதராஷ்டிரன் மகனும் பலமிக்க மன்னனுமான துரியோதனன், இந்த இடத்தில் விளையாடுவதற்காக வருகிறார். எனவே, நீங்கள் ஒதுங்கி நில்லுங்கள்!” என்றனர்.

ஓ! மன்னா {ஜனமேஜயா}, இப்படிச் சொல்லப்பட்ட அந்தக் கந்தர்வர்கள் சிரித்தபடி, அந்த மனிதர்களிடம் கடும் வார்த்தைகளால், “உங்கள் தீய மன்னனான துரியோதனன் அறிவற்றவனாக இருக்க வேண்டும். உண்மையில் அப்படியில்லாமல் இருந்தால், சொர்க்க வாசிகளான எங்களைத் தனது வேலைக்காரர்களைப் போல எப்படி அவனால் {துரியோதனனால்} இப்படிக் கட்டளையிட முடியும்? முன்யோசனை இல்லாத நீங்களும் சந்தேகமற மரணத்தின் அருகில் இருக்கிறீர்கள். நீங்களும் அறிவற்ற முட்டாள்களாக இருப்பதால்தான் இந்தச் செய்தியை எங்களுக்குக் கொண்டு வரத் துணிந்திருக்கிறீர்கள்! குருக்களின் மன்னன் இருக்கும் இடத்திற்கு விரைவில் திரும்பிச் செல்லுங்கள். இல்லையெனில், இன்றே யமனின் வசிப்பிடம் செல்லுங்கள்” என்றனர். கந்தர்வர்களால் இப்படிச் சொல்லப்பட்ட மன்னனின் படையில் இருக்கும் மேம்பட்ட பாதுகாவலன் {படைத்தலைவன்}, மன்னன் துரியோதனன் இருந்த இடத்திற்குத் திரும்ப ஓடினான்.”

தன்னைக் காத்த கர்ணன்! – வனபர்வம் பகுதி 239-கந்தர்வர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்; கந்தர்வர்களின் பெரும்படையைக் கண்டதும் கௌரவப்படை பின்வாங்கியது; கர்ணன் மட்டும் எதிர்த்து நின்றது; கௌரவப் படை திரும்பி வந்து கந்தர்வர்களைத் தாக்கியது; பெரும் கோபம் கொண்ட சித்திரசேனன் மாயப் போர் செய்தது; கர்ணனைக் கொல்ல விரும்பிய கந்தர்வர்கள் அவனது தேரைத் தூள் தூளாக்கியது; தன்னைக் காத்துக் கொள்ள கர்ணன் ஓடியது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! மன்னா {ஜனமேஜயா}, பிறகு அந்த வீரர்கள் அனைவரும் துரியோதனனிடம் திரும்பி, கந்தர்வர்கள் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளையும் திரும்பச் சொன்னார்கள். ஓ! பாரதா {ஜனமேஜயா}, தனது படைவீரர்கள் கந்தர்வர்களால் எதிர்க்கப்பட்டதைக் கண்ட சக்திமிக்க திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்}, கோபத்தால் நிறைந்தான். அந்த மன்னன் {துரியோதனன்} தனது படைவீரர்களிடம், “அவர்கள் {கந்தர்வர்கள்}, அனைத்துத் தேவர்களுடன் சேர்ந்து விளையாடுவதற்காக நூறு வேள்விகளைச் செய்தவனுடன் {இந்திரனுடன்} சேர்ந்து இங்கு வந்திருந்தாலும், எனது விருப்பங்களை எதிர்க்கும் அந்தப் பாதகர்களைத் தண்டியுங்கள்” என்றான். துரியோதனனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட துரியோதனனின் பெரும் பலம் பொருந்திய மகன்களும், அலுவலகர்களும், மேலும் ஆயிரக்கணக்கான போர்வீரர்களும் ஆயுதம் தரிக்க ஆரம்பித்தனர். பத்து திசைகளையும் தங்கள் சிம்மக் கர்ஜனைகளால் நிறைத்தபடி, வாயிலில் காவல் காத்துக் கொண்டிருக்கும் கந்தர்வர்களை நோக்கி விரைந்து காட்டுக்குள் நுழைந்தார்கள்.

குரு {கௌரவப்} படை வீரர்கள் காட்டுக்குள் நுழைந்ததும், பிற கந்தர்வர்கள் அவர்களிடம் வந்து, அவர்கள் முன்னேறுவதை மென்மையான முறையில் தடுத்தனர். ஆனால் அவர்களைக் கிஞ்சிற்றும் மதிக்காத குரு படை வீரர்கள், அந்தப் பெரும் காட்டுக்குள் நுழைய ஆரம்பித்தனர். விண்ணை அதிகாரம் செய்யும் அவர்கள் {கந்தர்வர்கள்}, திருதராஷ்டிரன் படையினரையும், அவர்களது மன்னனையும் {துரியோதனனையும்} வார்த்தைகளால் தடுக்க முடியாது என்பதைக் கண்டு, தங்கள் மன்னனான சித்திரசேனனிடம் சென்று அனைத்தையும் சொன்னார்கள். கந்தர்வர்களின் மன்னனான சித்திரசேனன் இதை அறியவந்தபோது, கோபத்தால் நிறைந்து, குருக்களைச் சுட்டிக்காட்டியபடி தனது தொண்டர்களிடம், “தீய நடத்தை கொண்ட இந்தப் பாதகர்களைத் தண்டியுங்கள்” என்று கட்டளையிட்டான்.

ஓ! பாரதா {ஜனமேஜயா}, இப்படிச் சித்திரசேனனால் உத்தரவிடப்பட்ட கந்தர்வர்கள், கைகளில் ஆயுதங்களுடன், திருதராஷ்டிரன் படையினரை நோக்கி விரைந்தனர். உயர்த்திப் பிடித்த ஆயுதங்களுடன் தங்களை நோக்கி கந்தர்வர்கள் விரைவாக வருவதைக் கண்ட குரு வீரர்கள், துரியோதனன் பார்த்துக் கொண்டிருந்த போதே திடீரென எல்லாத் திசைகளிலும் ஓடினார்கள். எதிரிக்கு முதுகைக் காட்டியபடி ஓடும் குருவீரர்களைக் கண்டும், ராதேயன் {கர்ணன்} மட்டும் ஓடவில்லை. பெரும் பலம்வாய்ந்த கந்தர்வப்படை தன்னை நோக்கி விரைவதைக் கண்ட ராதேயன் {கர்ணன்} தனது குறிதவறாத அம்புகளின் மழையால் அவர்களைத் தடுத்தான்.

அந்தச் சூதனின் மகன் {கர்ணன்}, தனது கைகளின் லாவகத்தால், க்ஷுரபரங்கள், அம்புகள், பல்லங்கள் {பாதி நிலா போன்ற வடிவம் கொண்ட அம்புகள்}, உருக்கு மற்றும் எலும்புகளாலான பல்வேறு வகையான ஆயுதங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி நூற்றுக்கணக்கான கந்தர்வர்களை அடித்தான். அந்தப் பலமிக்கப் போர்வீரன் {கர்ணன்}, குறுகிய காலத்தில் எண்ணிலடங்கா கந்தர்வர்களின் தலைகளை உருளச் செய்து, சித்திரசேனன் படையினரை வேதனையில் கதறவைத்தான். பெரும் புத்தி கூர்மை கொண்ட கர்ணனால் பெரிய எண்ணிக்கையில் கொல்லப்பட்டாலும், அந்தக் கந்தர்வர்கள் நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் மீண்டும் {தங்கள் படையின்} பொறுப்புக்குத் திரும்பினார்கள். சித்திரசேனனின் போர்வீரர்கள் களத்திற்கு விரைந்து வந்ததன் விளைவாக, பூமியானது அந்தக் கந்தர்வப் படையால் விரைவில் மறைக்கப்பட்டது.

பிறகு, மன்னன் துரியோதனன், சுபலனின் மகனான சகுனி, துச்சாசனன், விகர்ணன் மற்றும் திருதராஷ்டிரனின் பிற மகன்கள் ஆகியோர், கர்ணனின் தலைமையைத் {ஏற்றுத்} தொடர்ந்து, கருடனின் கர்ஜனைகளைப் பிரதிபலிக்கும் ஒலிகொண்ட சக்கரங்கள் பொருந்திய தங்கள் ரதங்களில் அமர்ந்து, {தங்கள் படையின்} பொறுப்புக்குத் திரும்பி, எதிரிகளைக் கொல்ல ஆரம்பித்தனர். கர்ணனுக்கு ஆதரவைத் தர விரும்பிய அந்த இளவரசர்கள், பெரும் எண்ணிக்கையிலான தங்கள் ரதங்களையும், உறுதியான உடல் படைத்த குதிரைகளையும் கொண்டு, அந்தக் கந்தர்வப் படையிடம் மோதினர். கந்தர்வப் படை முழுவதும் கௌரவர்களுடன் போர்புரிய ஆரம்பித்தது. போர் செய்த அவ்விரு படைகளுக்கிடையில் நடந்த மோதல், மிகக் கடுமையாகவும், {அதைக் காணும்} ஒருவரின் ரோமம் சிலிர்க்கும்படியும் இருந்தது. குரு படையின் கணைகளால் துன்புற்ற கந்தர்வர்கள் களைப்படைந்தது போலக் காணப்பட்டது. கந்தர்வர்கள் துன்புறுவதைக் கண்ட கௌரவர்கள் உரக்க கர்ஜித்தனர்.

கந்தர்வப்படை பயத்தில் கதறுவதைக் கண்டு கோபம் கொண்ட சித்திரசேனன், குரு படையை அழிப்பதெனத் தீர்மானித்து தனது இருக்கையில் இருந்து எழுந்தான். பல்வேறு வகையான போர்க்கலைகளை அறிந்த அவன் {சித்திரசேனன்} மாய ஆயுதங்களின் துணை கொண்டு போர் நடத்தினான். சித்திரசேனன் ஏற்படுத்திய மாயையால், கௌரவ வீரர்கள் தங்கள் உணர்வுகளை இழந்தனர். ஓ! பாரதா {ஜனமேஜயா}, பிறகு, குரு படையின் ஒவ்வொரு வீரனும் கீழே விழுந்தான். அப்படி விழுந்தவன் பத்து கந்தர்வர்களால் சூழப்பட்டான். பெரும் ஆவேசமான தாக்குதலுக்கு உள்ளான குரு படையின் வீரர்கள் பெரிதும் துன்புற்று பீதியடைந்தனர். ஓ! மன்னா {ஜனமேஜயா}, வாழ விரும்பிய அனைவரும் களத்தைவிட்டு ஓடினர். திருதராஷ்டிரன் படை முழுவதும் கலைந்து ஓடிய போது, சூரியனின் வாரிசான கர்ணன் மட்டுமே அங்கு அசையாத மலையென நின்று கொண்டிருந்தான். உண்மையில், துரியோதனன், கர்ணன், சுபலனின் மகனான சகுனி ஆகிய அனைவரும் அந்த மோதலின் காரணமாகக் காயமுற்று சிதைந்து போயிருந்தாலும், கந்தர்வர்களுடன் போரிட்டுக் கொண்டிருந்தனர்.

கர்ணனைக் கொல்ல விரும்பிய கந்தர்வர்கள் அனைவரும், நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் ஒன்று சேர்ந்து, கர்ணனை நோக்கி விரைந்தனர். அந்தப் பெரும் பலமிக்கப் போர்வீரர்கள் {கந்தர்வர்கள்}, சூதனின் மகனைக் {கர்ணனைக்} கொல்ல விரும்பி, வாள்கள், போர்க்கோடரிகள் மற்றும் ஈட்டிகளுடன் எல்லாப் பக்கங்களிலும் அவனைச் சூழ்ந்து கொண்டனர். சிலர் அவனின் {கர்ணனின்} தேர் நுகத்தடியையும், சிலர் அவனது கொடிக்கம்பத்தையும், சிலர் அவனது தேரின் ஏர்க் காலையும், சிலர் அவனது குதிரைகளையும், சிலர் அவனது தேரோட்டியையும் வெட்டி வீழ்த்தினர். மேலும் சிலர் அவனது {தேரில் இருந்த} குடையையும், சில அந்தத் தேரின் மரக் காப்பான்களையும் {தேரில் சுற்றிலும் இருக்கும் மரங்களையும்}, சிலர் அந்தத் தேரின் இணைப்புகளையும் வெட்டி வீழ்த்தினர். இப்படிப் பல்லாயிரம் கணக்கான கந்தர்வர்கள் ஒன்றுகூடி அவனது தேரைத் தாக்கி, நொடிப்பொழுதில் அதை {அத்தேரை} தூள் தூளாக்கினர். இப்படி அவனது {கர்ணனின்} தேர் தாக்கப்பட்ட போது, கைகளில் வாளுடனும் கேடயத்துடனும் கர்ணன் அதிலிருந்து குதித்து, விகர்ணனின் தேரில் ஏறி, தன்னைக் காத்துக் கொள்ள குதிரைகளை வேகமாகச் செலுத்தினான்.”

பீமனின் கிண்டல் பேச்சு! – வனபர்வம் பகுதி 240-கர்ணன் முறியடிக்கப்பட்ட பிறகு, கௌரவப் படைச் சிதறுவது; துரியோதனன் மட்டும் தனித்துப் போரிடுவது; கந்தர்வர்களால் வீழ்ப்பட்ட துரியோதனன் சிறைபடுவது; தப்பிய கௌரவப் படையினர் பாண்டவர்களிடம் வந்து முறையிடுவது; பீமனின் கிண்டல் பேச்சு…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “அந்தப் பெரும் போர்வீரனான கர்ணன் கந்தர்வர்களால் முறியடிக்கப்பட்ட பிறகு, மொத்த குரு படையும், ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, திருதராஷ்டிரன் மகனின் {துரியோதனனின்} கண் எதிரிலேயே களத்தைவிட்டு ஓடியது. தனது துருப்புகள் அனைத்தும், எதிரிக்குத் தங்கள் முதுகைக் காட்டியபடி ஓடிய பிறகும், மன்னன் துரியோதனன் ஓட மறுத்தான். தன்னை நோக்கி வரும் பெரும் கந்தர்வப்படையைக் கண்டதும், அந்த எதிரிகளை ஒடுக்கபவன் {துரியோதனன்}, அவர்கள் மீது, அடர்த்தியான கணை மழையைப் பொழிந்தான். எனினும், அந்தக் கணை மழையைப் பொருட்படுத்தாத கந்தர்வர்கள், அவனைக் {துரியோதனனைக்} கொல்ல விரும்பி அவனது தேரைச் சூழ்ந்து கொண்டனர். தங்கள் கணைகளின் மூலம், அவனது தேரின் நுகத்தையும், ஏர் காலையும், காப்பான்களையும், கொடிக்கம்பத்தையும், மூன்று அடுக்கு மூங்கில் கம்பத்தையும் {திரிவேணுவையும்}, அவனது தேரின் முக்கியக் கோபுரத்தையும் தூள் தூளாக வெட்டி வீழ்த்தினர். பிறகு அவர்கள் {கந்தர்வர்கள்} அவனின் {துரியோதனனின்} தேரோட்டியையும், குதிரைகளையும் வெட்டிக் கொன்றார்கள்.

துரியோதனன் தேரை இழந்து பூமியில் விழுந்த போது, வலுத்த கரம் கொண்ட சித்திரசேனன், அவனை நோக்கி விரைந்து வந்து, அவனது உயிரையே பறிப்போது போல அவனைப் பற்றினான். அந்தக் குரு மன்னன் {துரியோதனன்} பிடிபட்ட பிறகு, தனது தேரில் அமர்ந்திருந்த துச்சாசனனைச் சூழ்ந்து கொண்ட கந்தர்வர்கள், அவனைத் தங்கள் கைதியாக்கினர். சில கந்தர்வர்கள் விவிம்சதி மற்றும் சித்திரசேனனையும் சிலர் விந்தன் மற்றும் அனுவிந்தனையும், மேலும் சிலர் அரசகுடும்பத்தின் மகளிரையும் பற்றினர். கந்தர்வர்களால் முறியடிக்கப்பட்ட துரியோதனனின் படைவீரர்கள், முன்பே {களத்தைவிட்டு} ஓடியவர்களுடன் சேர்ந்து கொண்டு, (அங்கே அருகினில் இருந்த) பாண்டவர்களை அணுகினர். துரியோதனன் பிடிபட்ட பிறகு, வாகனங்களும், கடைகளும், அரங்குகளும், வண்டிகளும், வண்டியிழுக்கும் விலங்குகளுமான அனைத்தும் பாண்டவர்களிடம் பாதுகாப்பு நாடி சென்றன. அந்த வீரர்கள் {துரியோதனன் படை வீரர்கள்}, “பெரும் பலமும், அழகிய முகமும், வலுத்த கரமும் கொண்ட திருதராஷ்டிரன் மகனை {துரியோதனனை}, கந்தர்வர்கள் சிறைபிடித்துச் செல்கிறார்கள்! பிருதையின் {குந்தியின்} மகன்களே, அவர்களைப் பின் தொடருங்கள்! துச்சாசனன், துர்விஷஹன், துன்முகன், துர்ஜயன் ஆகியோருடன், அரச குடும்பத்தின் மகளிர் அனைவரும் சேர்ந்து சிறைபிடிக்கப்பட்டுச் சங்கிலிகளால் கட்டப்பட்டுக் கொண்டு செல்லப்படுகிறார்கள்” என்றனர்.

இப்படிக் கதறிய துரியோதனனின் தொண்டர்கள், வருத்தமும் மனச்சோர்வும் கொண்டு மன்னனின் {துரியோதனனின்} விடுதலையை விரும்பி யுதிஷ்டிரனை அணுகினர். வருத்தமும் மனச்சோர்வும் அப்படி வேண்டிக் கொண்டிருந்த துரியோதனனின் வயதுமுதிர்ந்த பணியாட்களிடம் பீமன், “உண்மையில், களத்தில் எங்களை வரிசைப்படுத்திக் கொண்டு, குதிரைகளாலும், யானைகளாலும் உதவப்பட்டுப் பெரும் முயற்சி எடுத்துக் கொண்டு நாங்கள் செய்ய வேண்டியதே கந்தர்வர்களால் செய்யப்பட்டுள்ளது! வேறு காரியத்திற்காக இங்கு வந்த அவர்கள், தாங்கள் எதிர்பாராத விளைவுகளால் வீழ்ந்தார்கள். உண்மையில், வஞ்சக விளையாட்டில் விருப்பம் கொண்ட மன்னனின் {துரியோதனனின்} தீய ஆலோசனைகளின் விளைவே இது!

சக்தியற்ற ஒரு மனிதனுக்கு எதிராக இருப்பவன், மற்றவர்களால் வீழ்த்தப்படுவான் என்று நாம் கேள்விப்படுகிறோம். அந்தக் கந்தர்வர்கள் இயல்புக்குமிக்க வழியில் இந்தப் பொன்மொழியின் உண்மைத் தன்மையை நம் கண்களுக்கு முன்னால் நிரூபித்துக் காட்டியுள்ளனர். நாங்கள் சோம்பி அமர்ந்திருந்தாலும், உண்மையில், எங்கள் சுமையைத் தங்கள் தோள்களில் ஏற்றுக் கொண்டு, எங்களுக்கு நன்மையைச் செய்ய விரும்பும் மனிதர்கள், அதிர்ஷ்டவசமாக இன்னும் கூட இருக்கிறார்கள் என்று காணப்படுகிறது. அந்தப் பாதகன் {துரியோதனன்}, தான் செழிப்புடன் இருப்பதையும், காற்றையும், குளிரையும், வெப்பத்தையும் பொறுத்துக் கொண்டு, தவத்தினால் உடல் இளைத்துத் தீக்காலத்தில் இருக்கும் எங்களையும் பார்க்க விரும்பியே இங்கு வந்திருக்கிறான். பாவம் நிறைந்தவனும், பாதகனுமான அந்தக் கௌரவனின் {துரியோதனனின்} நடையைப் பின்பற்றுபவர்களே, இந்த அவனது அவமானத்தைக் காண்கிறார்கள்! துரியோதனனிடம் இதைச் செய்யச் சொன்னவன் {தூண்டியவன்} எவனோ, அவன் நிச்சயமாகப் பாவம் நிறைந்த செயலைச் செய்திருக்கிறான். குந்தியின் மகன்கள் தீயவர்களும் பாவிகளும் அல்லர் என்பதை உங்கள் அனைவரின் முன்னால் சொல்லிக் கொள்கிறேன்” என்றான் {பீமன்}.

குந்தியின் மகனான பீமன் இப்படிக் கிண்டலாகப் பேசிக் கொண்டிருந்தபோது, மன்னன் யுதிஷ்டிரன் அவனிடம் {பீமனிடம்}, “கொடுஞ்சொற்களுக்கு இது நேரமில்லை” என்றான்.

அர்ஜுனன் ஏற்ற உறுதி! – வனபர்வம் பகுதி 241-துரியோதனனை மீட்பதே குடும்ப மதிப்பை உயர்த்தும், பாண்டவர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியைத் தரும் என்று யுதிஷ்டிரன் பீமனிடம் சொன்னது; அர்ஜுனன் துரியோதனனை மீட்க உறுதியேற்றது…

யுதிஷ்டிரன் {பீமனிடம்}, “ஓ! குழந்தாய் {பீமா}, அவல நிலையில் இருக்கும் குருக்கள், அச்சத்துடன் நமது பாதுகாப்பை நாடி வந்திருக்கும்போது, நீ ஏன் இப்படிப்பட்ட மொழியைப் பேசுகிறாய். ஓ! விருகோதரா {பீமா}, ஒற்றுமையின்மையும், சச்சரவுகளும் இரத்த உறவுகளுக்கு மத்தியில் நடக்கத்தான் செய்கின்றன. இது போன்ற பகைமைகள் இருந்து கொண்டே தான் இருக்கும். ஆனால், அதன் காரணமாகக் குடும்ப மதிப்புப் பாதிப்படையக்கூடாது. எந்த அந்நியனாவது நமது குடும்ப மதிப்பைக் கெடுக்கும் வகையில் செயல்படும்போது, அந்நியனிடம் நேரும் இந்த அவமதிப்பை நல்லவர்கள் தாங்கிக் கொள்ள மாட்டார்கள். நாம் சில காலமாக இங்கேதான் தங்கியிருக்கிறோம் என்பதைக் கந்தர்வர்களின் தீய மன்னன் {சித்திரசேனன்} அறிவான். எனினும் நம்மை எண்ணிப் பாராமல், நமக்கு ஏற்பில்லாத இக்காரியத்தை அவன் செய்திருக்கிறான்.

ஓ! மேன்மையானவனே {பீமா}, துரியோதனனை வலுக்கட்டாயமாகச் சிறைபிடித்திருப்பது, நமது குடும்பப் பெண்களை அவமதித்திருப்பது ஆகியவற்றை ஓர் அந்நியன் செய்ததால் நமது குடும்ப மதிப்பு அழிக்கப்பட்டிருக்கிறது. எனவே, மனிதர்களில் புலிகளே {தம்பிகளே}, எழுந்திருங்கள். தாமதமின்றி ஆயுதமேந்தி நமது பாதுகாப்பை நாடியிருப்பவர்களை மீட்டு, நமது குடும்ப மதிப்பைக் காப்பாற்றுங்கள். மனிதர்களில் புலியே {பீமா}, வெல்லப்பட முடியாத வீரமிக்க அர்ஜுனனும், இரட்டையர்களும் {நகுல, சகாதேவர்களும்}, நீயும் சென்று சிறைபிடிக்கப்பட்டிருக்கும் துரியோதனனை விடுவியுங்கள். போர்வீரர்களில் முதன்மையானவர்களே {தம்பிகளே}, தங்கக் கொடிகளுடன் கூடிய இந்தச் சுடர்மிகும் தேர்களும், திருதராஷ்டிரன் மகன்களுக்குச் சொந்தமான அனைத்துவிதமாக ஆயுதங்களும் ஏற்கனவே இங்குத் தயாராக இருக்கின்றன. இந்திரசேனனையும், பிற தேரோட்டிகளையும் அவற்றை வழிநடத்தச் செய்து, ஆழ்ந்த சடசடப்போசை கொண்ட அந்த ரதங்களில் செல்லுங்கள். அவற்றில் {அந்தத் தேர்களில்} பயணித்து, கந்தர்வர்களோடு போரிட்டு, துரியோதனனை மீட்க ஊக்கமுடன் முயற்சி செய்யுங்கள்.

(இங்கு இருப்பவர்களுக்கு மத்தியில் உள்ள) சாதாரண க்ஷத்திரியன் கூட, தனது சக்தியில் சிறந்ததைப் பயன்படுத்தி, தன்னை அடைக்கலமாக நாடி வந்தவனைக் காப்பான். அப்படியிருக்கையில், ஓ! விருகோதரா {பீமா}, உன்னைக் குறித்து நான் என்ன சொல்வேன்? “ஓ!, எனது உதவிக்கு விரைந்து வாருங்கள்” என்று துணைக்கு அழைக்கும் வார்த்தைகளைக் கேட்ட பிறகும், கைகள் கூப்பித் தஞ்சமடைவதைக் கண்ட பிறகும், உயர் ஆன்மா படைத்த எவன்தான் அந்த எதிரிக்குத் துணையாகச் செல்ல மாட்டான்? வரம் பெறுதல், ஆட்சி அடைதல், மகனின் பிறப்பு ஆகியவை மகிழ்ச்சியின் பெரும் ஊற்றக்கண்கள் ஆகும். ஆனால், பாண்டுவின் மகன்களே {தம்பிகளே}, துயரத்தில் இருக்கும் எதிரியை விடுவிப்பது, ஒன்று சேர்ந்த இவை மூன்றையும் பெறுவதற்குச் சமமாகும். துயரத்தில் மூழ்கியிருக்கும் துரியோதனன், நமது கரங்களின் பலத்தால், தனது உயிரைப் பெறக் {காத்துக்கொள்ளக்} கோரும்போது, அதைவிட மகிழ்ச்சியின் பெரிய ஊற்றுக்கண் உங்களுக்கு வேறு என்ன இருக்கிறது?

ஓ! விருகோதரா {பீமா}, இப்போது நான் ஈடுபட்டிருக்கும் நோன்பு முடிந்துவிட்டால், நானே அவனது உதவிக்கு ஓடுவேன் என்பதில் சிறிதும் சந்தேகம் கொள்ளாதே. ஓ! பாரதா {பீமா}, துரியோதனனை விடுவிக்கச் சமரசக் கலைகள் அனைத்தையும் முயன்று பார். எனினும், அந்தச் சமரசக் கலைகளின் மூலம் கந்தர்வர்களின் மன்னனைச் சமாளிக்க முடியவில்லையென்றால், எதிரியிடம் சிறு பூசல் செய்தாவது சுயோதனனை {துரியோதனனை} மீட்க நீ முயற்சிக்க வேண்டும். ஆனால், அதன் பிறகும் கந்தர்வர்களின் தலைவன் {சித்திரசேனன்} குருக்களை விடவில்லையென்றால், அனைத்து வகைகளிலும் எதிரியை நசுக்கி அவர்கள் {குருக்கள்} மீட்கப்பட வேண்டும். ஓ! விருகோதரா {பீமா}, எனது நோன்பு ஆரம்பித்து இன்னும் முடியாத நிலையில், இதைத்தான் என்னால் உனக்குச் சொல்ல முடியும்” என்றான் {யுதிஷ்டிரன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அஜாதசத்ருவின் {யுதிஷ்டிரனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட தனஞ்சயன் {அர்ஜுனன்}, மூத்தவரின் {அண்ணனின்} கட்டளைகளை மதித்து, தானே {அந்த} உறுதியேற்றுக் கொண்டான். அர்ஜுனன், “அமைதியின் மூலம், கந்தர்வர்கள் திருதராஷ்டிரர்களை {கௌரவர்களை} விடுவிக்கவில்லையெனில், இன்று இந்தப் பூமி கந்தர்வ மன்னனின் இரத்தத்தைக் குடிப்பாள்!” என்றான். உண்மை பேசும் அர்ஜுனன் ஏற்ற இந்த உறுதியைக் கேட்ட கௌரவர்களுக்கு, ஓ! மன்னா {ஜனமேஜயா}, (தொலைந்து போன} தங்கள் மனம் மீண்டு வந்தது போல இருந்தது.

“என் அண்ணனை விடுங்கள்” என்ற அர்ஜுனன்! – வனபர்வம் பகுதி 242-யுதிஷ்டிரனின் உத்தரவுக்கிணங்க முதலில் கந்தர்வர்களைப் பாண்டவர்கள் மெதுவாகத் தாக்கியது; பின்பு கந்தர்வர்களிடம் சமரசம் பேசியது; இரண்டும் பலனளிக்காத்தால் கடுமையான போர் வெடித்தது..

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “யுதிஷ்டிரனின் வார்த்தைகளைக் கேட்ட பீமசேனனைத் தலைமையாகக் கொண்ட அந்த மனிதர்களில் காளையர் {பாண்டவர்கள்}, மகிழ்ச்சி பொங்கிய பிரகாசமான முகங்களுடன் எழுந்தனர். அந்தப் பலமிக்கப் போர்வீரர்கள் {பாண்டவர்கள்}, ஓ! பாரதா {ஜனமேஜயா}, பிறகு அருகில் இருந்த சுத்தமான தங்கத்துடன் பல வண்ணங்களில் இருந்த துளைக்கமுடியாத கவசங்களைப் பூண்டு, பல்வேறு வகையான தெய்வீக ஆயுதங்களை ஏந்திக் கொண்டனர். இப்படிக் கவசம் பூண்ட அந்தப் பாண்டவர்கள் கொடிக்கம்பங்களுடன் கூடிய அந்த ரதங்களில் ஏறி, விற்களையும் அம்புகளையும் ஏந்தி, பார்ப்பதற்குச் சுடர்விடும் நெருப்பு போலத் தெரிந்தனர். போர்வீரர்களில் புலி போன்ற அவர்கள், வேகமாகக் குதிரைகளால் இழுக்கப்பட்ட நன்கு அலங்கரிக்கப்பட்ட அந்தத் தேர்களில் பயணித்து, ஒரு கணமும் தாமதியாமல் அந்த இடத்திற்கு முன்னேறினர்.

பாண்டுவின் மகன்களான அந்தப் பலமிக்கப் போர்வீரர்கள் இப்படி (துரியோதனனை விடுவிப்பதற்காக) ஒன்றுகூடி விரைந்து வருவதைக் கண்ட குரு படையினர் {கௌரவப் படையினர்}, ஓங்கிக் குரல் கொடுத்தனர். வெற்றியில் மிதந்து கொண்டிருந்த அந்த விண்ணதிகாரிகளும் {கந்தர்வர்களும்}, கட்டுக்கடங்காத போர்வீரர்களான பாண்டுவின் மகன்களும், அச்சமற்று அந்தக் கானகத்தில் மோதிக் கொண்டனர். வெற்றிக்களிப்பில் இருந்த கந்தர்வர்கள், தேர்களில் அமர்ந்து தங்களை நோக்கி வரும் பாண்டுவின் நான்கு வீரமிக்க மகன்களைக் கண்டதும், தங்களை நோக்கி வரும் போராளிகளை நோக்கித் திரும்பினர். சினத்தால் தூண்டப்பட்டு உலகின் சுடர்மிக்கப் பாதுகாவலர்களைப் {லோகபாலர்களைப்} போல வரும் பாண்டவர்களைக் கண்ட கந்தமாதனவாசிகள் {கந்தர்வர்கள்} களத்தில் வரிசையாக நிற்க ஆரம்பித்தனர்.

ஓ! பாரதா {ஜனமேஜயா}, பெரும் ஞானம் கொண்ட மன்னன் யுதிஷ்டிரனின் வார்த்தைகளுக்கு இணங்க, அங்கே நடந்த மோதல் சிறியதாகவே இருந்தது. ஆனால், எதிரிகளை அழிப்பவனான அர்ஜுனன், கந்தர்வ மன்னனின் {சித்திரசேனனின்} முட்டாள் வீரர்கள், இந்தச் சிறுமோதல் மூலம் தங்களுக்கு எது நன்மை என்பதைப் புரிந்து கொள்ளவில்லை என்பதைக் கண்டு, அந்த ஒப்பற்ற விண்ணதிகாரிகளிடம் {கந்தர்வர்களிடம்} சமரசத் தொனியில், “என் சகோதரனான மன்னன் சுயோதனனை {துரியோதனனை} விட்டுவிடுங்கள்” என்றான். பாண்டுவின் சிறப்புமிக்க மகனால் {அர்ஜுனனால்} இப்படிச் சொல்லப்பட்ட கந்தர்வர்கள் பெருத்த ஒலியுடன் சிரித்து, அவனிடம் {அர்ஜுனனிடம்}, “ஓ! குழந்தாய், நாங்கள் யாருடைய ஆட்சியின் கீழ் எங்கள் நாட்களை மகிழ்ச்சியாகக் கடத்துகிறோமோ, அந்த ஒருவரின் கட்டளைக்கே இவ்வுலகில் கீழ்ப்படிவோம். ஓ! பாரதா {அர்ஜுனா}, அந்த ஒருவரின் கட்டளையின் படியே நாங்கள் செயல்படுவோம். அந்தத் தேவனைத் {சித்திரசேனனைத்} தவிர வேறு யாரும் எங்களுக்கு உத்தரவிடமுடியாது” என்றனர்.

கந்தர்வர்களால் இப்படிச் சொல்லப்பட்ட குந்தியின் மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, அவர்களிடம், “பிறர் மனைவியருடனான இத்தொடர்பு, மனிதர்களுடனான இந்தப் பகைமை ஆகிய இவை இரண்டும் கந்தர்வ மன்னனைக் கண்டிக்கப் போதுமானவை ஆகும். இவை அவனுக்குத் {சித்திரசேனனுக்கு} தகாது. எனவே, வலிமைமிக்க ஆற்றல் கொண்ட இந்த அனைத்து திருதராஷ்டிரன் மகன்களையும் விட்டுவிடுங்கள். நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் ஆணைக்கிணங்க இந்தப் பெண்டிரையும் விட்டுவிடுங்கள். கந்தர்வர்களே! அமைதியான முறையில் நீங்கள் திருதராஷ்டிரன் மகன்களை விடவில்லையென்றால், நான் நிச்சயம் எனது பராக்கிரமத்தை வெளிப்படுத்திச் சுயோதனனை (அவன் கட்சியில் இருந்து) மீட்பேன்” என்றான்.

அவர்களுடன் இப்படிப் பேசிய பிருதையின் {குந்தியின்} மகனும், இடது கையாலும் வில்லைப் பயன்படுத்துபவனுமான தனஞ்சயன் {அர்ஜுனன்} விண்ணை அதிகாரம் செய்யும் தனது கூரிய கணைகளை, ஆகாயத்தில் சஞ்சரிப்பவர்கள் மீது மழையெனப் பொழிந்தான். இப்படித் தாக்கப்பட்ட அந்த வலிமைமிக்கக் கந்தர்வர்கள், பதிலுக்குப் பாண்டுவின் மகன்கள் மீது அடர்த்தியான அம்புகளின் மழையைப் பொழிந்தனர். பாண்டவர்களும் அந்தச் சொர்க்கவாசிகளை {கந்தர்வர்களைத்} திரும்பத் தாக்கினர். ஓ! பாரதா {ஜனமேஜயா}, பிறகு, சுறுசுறுப்பான செயல்கள் கொண்ட கந்தர்வர்களுக்கும், கட்டுக்கடங்காதவர்களான பாண்டுவின் மகன்களுக்கும் இடையில் நடந்த அந்த மோதல் கடுமையின் எல்லையைக் கடந்ததாக இருந்தது.

நண்பனைக் கண்ட அர்ஜுனன்! – வனபர்வம் பகுதி 243-கந்தர்வர்களுடன் மோதிய பாண்டவர்கள்; அர்ஜுனன் வெளிப்படுத்திய வீரம்; அர்ஜுனனால் தாக்கப்பட்ட கந்தர்வ மன்னன் சித்திரசேனன் இறுதியில் தன்னை வெளிக்காட்டுவது..

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “தெய்வீக ஆயுதங்களை அறிந்து பொன்மாலைகள் அணிந்திருந்த கந்தர்வர்கள், தங்கள் சுடர்மிகும் கணைகளைக் காட்டி, பாண்டவர்கள் மீது எல்லாப் புறங்களில் இருந்தும் மோதினர். பாண்டுவின் மகன்கள் எண்ணிக்கையில் நான்காகவும், கந்தர்வர்கள் ஆயிரக்கணக்கிலும் இருந்ததால், அந்தக் களம் பார்ப்பதற்கு இயல்புக்குமிக்க வகையில் இருந்தது. கர்ணன் மற்றும் துரியோதனனின் தேர்கள் ஏற்கனவே கந்தர்வர்களால் தூள் தூளாக்கப்பட்டதுபோலவே, அந்த நான்கு வீரர்களின் தேர்களையும் உடைக்க முயற்சி நடந்தது.

ஆனால் அந்த மனிதர்களில் புலிகள் {பாண்டவர்கள்} தங்கள் ஆயிரக்கணக்கான கணைகளை, ஆயிரக்கணக்கான கந்தர்வர்கள் மீது மழையெனப் பொழிந்து அவர்களை நோக்கி விரைந்தனர். பெரும் சக்தி படைத்த அந்த விண்ணதிகாரிகள் இந்தக் கணை மழையால் எல்லாப்புறங்களிலும் தடுத்து நிறைத்தப்பட்டு, பாண்டுவின் மகன்களின் அருகே வரமுடியாத படி இருந்தனர். பிறகு சினம் தூண்டப்பட்ட அர்ஜுனன், கோபக்கார கந்தர்வர்களை இலக்காக வைத்து, அவர்கள் மீது தெய்வீக ஆயுதங்களை வீசினான்.

இந்த மோதலில், பலமிக்க அர்ஜுனன், தனது அக்னேய ஆயுதத்தால், கந்தர்வர்களை ஆயிரமாயிரமாக யமனுலகுக்கு அனுப்பிக் கொண்டிருந்தான். களத்தின் போர்வீரர்களில் முதன்மையானவனான வலிமைமிக்க வில்லாளியான பீமன், தனது கூரிய கணைகளால் கந்தர்வர்களை நூற்றுக்கணக்கில் கொன்று கொண்டிருந்தான். வீரத்துடன் போரிட்டுக் கொண்டிருந்த மாத்ரியின் பலமிக்க மகன்களும் {நகுலன் மற்றும் சகாதேவனும்} நூற்றுக்கணக்கான கந்தர்வர்களுடன் மோதி, ஓ! மன்னா {ஜனமேஜயா} அனைவரையும் கொன்று கொண்டிருந்தனர். இப்படி அந்தப் பலமிக்கப் போர்வீரர்களின் {பாண்டவர்களின்}, தெய்வீக ஆயுதங்களால் கந்தர்வர்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தபோது, திருதராஷ்டிரன் மகன்களைத் தங்களுடன் எடுத்துக் கொண்டு அவர்கள் {கந்தர்வர்கள்} வானத்திற்கு எழும்பினர்.

ஆனால் குந்தியின் மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, அப்படி அவர்கள் வானுக்கு எழுவதைக் கண்டு, அவர்களை எல்லாப்புறங்களிலும் சூழ்ந்து தனது கணைகளால் பரந்து விரிந்த ஒரு வலையை அமைத்தான். கூண்டுக்குள் அடைப்பட்ட பறவைகளைப் போல, அந்த அம்பு வலையில் அகப்பட்ட அவர்கள் {கந்தர்வர்கள்} கோபத்துடன் அர்ஜுனன் மீது கதாயுதங்களையும், தண்டங்களையும் {சக்திகளையும்}, அகலமான வாள்களையும் {ரிஷ்டிகளையும்} வீசினர். ஆனால் மிகவும் பயனளிக்கக்கூடிய ஆயுதங்களை அறிந்து வைத்திருந்த அர்ஜுனன், அந்தக் கதாயுதங்கள், தண்டங்கள் மற்றும் அகன்ற வாள்களின் {ரிஷ்டிகளின்} மழையை விரைவில் தடுத்து, தனது சந்திர வடிவு கொண்ட கணைகளால் கந்தர்வர்களின் உறுப்புகளைச் சிதைக்க ஆரம்பித்தான். அவர்களது தலைகளும், கால்களும் கரங்களும் மேலிருந்து கீழே விழ ஆரம்பித்தது, கல் மழை பொழிவது போல இருந்தது. இக்காட்சியைக் கண்ட எதிரிகள் பீதியால் தாக்குண்டனர்.

பாண்டுவின் சிறப்பு மிக்க மகனால் {அர்ஜுனனால்} கந்தர்வர்கள் இப்படிக் கொல்லப்பட்டுக் கொண்டிருந்த போது, அவர்கள் வானத்தில் இருந்து, பூமியின் தரையில் நின்று கொண்டிருந்த அர்ஜுனன் மீது கனமாகக் கணைகளின் மழையைப் பொழிய ஆரம்பித்தனர். ஆனால் எதிரிகளைத் தண்டிப்பவனான அந்தப் பலமும் சக்தியும் வாய்ந்த அர்ஜுனன், அந்தக் கணை மழையைத் தனது ஆயுதங்களின் மூலம் தடுத்து, பதிலுக்கு அவர்களுக்குக் காயம் ஏற்படுத்தத் தொடங்கினான். பிறகு குரு குலத்தைச் சேர்ந்த அர்ஜுனன், ஸ்தூணாகர்ணம் {Sthunakarna}, இந்திரஜாலம் {Indrajala}, சௌரா {Saura}, ஆக்நேயா {Agneya}, சௌமயா {Saumya} ஆகிய நன்கு அறியப்பட்ட தனது ஆயுதங்களைப் பயன்படுத்தினான். குந்தியின் மகன் அடித்த நெருப்பைக் கக்கும் அந்த ஆயுதங்களால் எரிக்கப்பட்ட கந்தர்வர்கள், சக்ரன் {இந்திரன்} அடித்த வஜ்ரத்தால் எரிக்கப்பட்ட திதியின் மகன்களைப் போலப் பெரிதும் பாதிப்படைந்தனர்.

அவர்கள் மேலே இருந்தபடி அர்ஜுனனைத் தாக்கிய போது, தனது கணைகளின் வலையால் அவர்களை அவன் தடுத்தான். பூமியின் பரப்பில் நின்று கொண்டிருந்த அவனை {அர்ஜுனனை} அவர்கள் எல்லாப் புறங்களில் இருந்தும் தாக்கிய போது, அவன் {அர்ஜுனன்} தனது பிறை வடிவம் கொண்ட கணைகளால் அவர்களைத் தடுத்தான். குந்தியின் மகனால் {அர்ஜுனனால்} அச்சமூட்டப்பட்ட கந்தர்வர்களைக் கண்டதும், ஓ! பாரதா {ஜனமேஜயா} கதாயுதத்தை ஏந்தியபடி சித்திரசேனன் அங்கு விரைந்தான். மேலே இருந்த அந்தக் கந்தர்வ மன்னன் அர்ஜுனனை நோக்கி கைகளில் கதாயுதத்துடன் வந்தபோது, அர்ஜுனன் முழுவதும் இரும்பாலான அந்தக் கதாயுதத்தை ஏழு துண்டுகளாக்கினான்.  கணைகளின் பெரும் செயலால் அர்ஜுனன் அவனது கதாயுதத்தைப் பல துண்டுகளாக்கியதைக் கண்ட சித்திரசேனன், தான் அறிந்த அறிவியலின் உதவியுடன், தன்னை அந்தப் பாண்டவனின் {அர்ஜுனனின்} பார்வையில் இருந்து மறைத்துக் கொண்டு, அவனுடன் {அர்ஜுனனுடன்} போரிட ஆரம்பித்தான்.

எனினும், வீரனான அர்ஜுனன் தனது தெய்வீக ஆயுதங்களால், தன்னை இலக்காக வைத்து கந்தர்வர்களால் அடிக்கப்பட்ட தெய்வீக ஆயுதங்கள் அனைத்தையும் தடுத்தான். சிறப்புமிக்க அர்ஜுனன், அந்த ஆயுதங்களைக் கொண்டு தன்னைத் தடுப்பதைக் கண்ட கந்தர்வர்களின் தலைவன் {சித்திரசேனன்}, தன் மாய சக்திகளைப் பயன்படுத்தி அவனது காட்சியில் இருந்து முழுவதுமாக மறைந்தான். பார்வையில் இருந்து மறைந்திருந்து தன்னைத் தாக்கிக் கொண்டிருந்த கந்தர்வர்களின் தலைவனை அவதானித்த அர்ஜுனன், முறையான மந்திரங்களால் ஈர்க்கப்பட்ட தெய்வீக ஆயுதத்தைக் கொண்டு தனது பகைவனைத் {சித்திரசேனனைத்} தாக்கினான். பல உருவம் கொண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்} கோபத்தால் நிறைந்து, சப்த வேதம் {Sabda-veda} என்ற பெயரால் அறியப்பட்ட தனது ஆயுதத்தைக் கொண்டு, எதிரி காணாமல் போவதைத் தடுத்தான்.

சிறப்பு மிக்க அர்ஜுனனின் அந்த ஆயுதங்களால் தாக்கப்பட்டபோது, அவனது {அர்ஜுனனின்} அன்புக்குரிய நண்பனான கந்தர்வமன்னன், தன்னை அவனுக்குக் காட்டினான். சித்திரசேனன், “உன்னுடன் போராடும் என்னில் உனது நண்பனைப் பார்!” என்றான். போரால் களைத்துப் போன தனது நண்பன் சித்திரசேனனைக் கண்ட பாண்டு மகன்களில் காளை {அர்ஜுனன்}, தான் அடித்த ஆயுதங்களைத் திரும்பப் பெற்றான். அர்ஜுனன் தனது ஆயுதங்களைத் திரும்பப் பெற்றதைக் கண்ட பாண்டுவின் பிற மகன்களும் ஓடிக்கொண்டிருந்த தங்கள் குதிரைகளையும், தங்கள் ஆயுதங்களின் வீரியத்தையும் தடுத்து, தங்கள் விற்களைத் திரும்பப் பெற்றனர். பிறகு, சித்திரசேனன், பீமன், அர்ஜுனன், இரட்டையர்கள் ஆகியோர் தங்கள் தங்கள் தேர்களில் அமர்ந்தவாறு ஒருவர் நலத்தை மற்றவர் விசாரித்தனர்.

துரியோதனன் விடுதலை! – வனபர்வம் பகுதி 244-துரியோதனனை ஏன் சிறைப்பிடித்தான் என்பதைச் சித்திரசேனன் அர்ஜுனனிடம் கூறியது; யுதிஷ்டிரனிடம் துரியோதனன் விலங்குடன் அழைத்துச் செல்லப்பட்டது; யுதிஷ்டிரன் துரியோதனனை விடுவித்தது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “சுடர்மிகும் பிரகாசமிக்க அந்தப் பலமிக்க வில்லாளியான அர்ஜுனன், கந்தர்வப்படைக்கு மத்தியில் சித்திரசேனனிடம் சிரித்துக் கொண்டே, “ஓ! வீரனே, கௌரவர்களை நீ தண்டிக்கும் நோக்கம் என்னது?” என்று கேட்டான்.

அதற்குச் சித்திரசேனன் {அர்ஜுனனிடம்} , “ஓ தனஞ்சயா {அர்ஜுனா}, எனது வசிப்பிடத்தை விட்டு அசையாமலேயே, நான் இந்தத் தீய துரியோதனனும், கேடுகெட்ட கர்ணனும் இங்கே வருவதற்கான காரணத்தை அறிந்தேன். கவனிக்க யாருமற்றவர்கள் போல, நீங்கள் வனவாசத்தை மேற்கொண்டிருப்பதையும், அதனால் நீங்கள் பெரும் துன்பங்கள் அனுபவிப்பதையும், தான் செழிப்புடன் இருப்பதையும் அறிந்த இந்தப் பாதகன் {துரியோதனன்}, நீங்கள் துயரத்திலும், துரதிர்ஷ்டத்திலும் மூழ்கியிருப்பதைக் காண விரும்பியே இங்கு வந்தான். உங்களையும், சிறப்புமிக்கத் துருபதன் மகளையும் {திரௌபதியையும்} கேலி செய்யவே இங்கே வந்தனர். அவர்களது நோக்கங்களை உறுதி செய்த தேவர்கள் தலைவன் {இந்திரன்}, என்னிடம், ” நீ சென்று, துரியோதனனையும், அவனது ஆலோசகர்களையும் {அமைச்சர்களையும்} சங்கிலியில் பிணைத்து இங்கே கொண்டு வா. தனஞ்சயன் {அர்ஜுனன்} உனது அன்புக்குரிய நண்பனும், சீடனும் ஆனதால், போர்க்களத்தில், அவனும் {அர்ஜுனனும்}, அவனது சகோதரனும் உன்னால் எப்போதும் பாதுகாக்கப்பட வேண்டும்” என்று சொன்னான். தேவர்கள் தலைவனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட நான் இங்கே வேகமாக விரைந்து வந்தேன். இந்தத் தீய இளவரசனும் {துரியோதனனும்} சங்கிலியில் பிணைக்கப்பட்டான். நான் இப்போது, தேவலோகம் செல்வேன். பகனைக் கொன்றவனுடைய {பாகசாசனான இந்திரனுடைய} உத்தரவின் பேரில் இந்தத் தீயவனைக் கொண்டு செல்வேன்” என்றான்.

அதற்கு அர்ஜுனன், “ஓ! சித்திரசேனா, எனக்கு ஏற்புடையதை நீ செய்ய விரும்பினால், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் கட்டளைக்கிணங்க எங்கள் சகோதரனான சுயோதனனை {துரியோதனனை} விடுதலை செய்!” என்றான்.

சித்திரசேனன் {அர்ஜுனனிடம்}, “இந்த இழிந்த பாவி எப்போதும் கர்வம் நிறைந்தவனாக இருப்பவன். விடுதலைக்கு இவன் தகுந்தவனில்லை. ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, இவன் நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் மற்றும் கிருஷ்ணை {திரௌபதி} ஆகிய இருவருக்கும் தீங்கிழைத்திருக்கிறான். குந்தியின் மகனான யுதிஷ்டிரன், இந்தப் பாதகன் {துரியோதனன்} ஏன் இங்கு வந்தான் என்பதை இன்னும் அறியான். எனவே, அனைத்தையும் அறிந்த பிறகு, மன்னனே {யுதிஷ்டிரனே}, தான் விரும்பியதைச் செய்யட்டும்” என்றான்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இதற்குப் பிறகு, அவர்கள் அனைவரும் நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனிடம் சென்றனர். மன்னனிடம் சென்ற பிறகு, அவர்கள் துரியோதனனின் நடத்தைகள் குறித்த அனைத்தையும் அவனிடம் தெரிவித்தார்கள். கந்தர்வர்கள் சொன்ன அனைத்தையும் கேட்ட அஜாதசத்ரு {யுதிஷ்டிரன்}, அனைத்து கௌரவர்களையும் விடுவித்து, கந்தர்வர்களைப் பாராட்டினான். பிறகு அம்மன்னன் {யுதிஷ்டிரன்}, “பெரும் பலத்தைக் கொடையாகக் கொண்டிருந்தும் நீங்கள், திருதராஷ்டிரரின் இந்தத் தீய மகனையும், அவனது ஆலோசகர்கள் மற்றும் உறவினர்களையும் இன்னும் கொல்லாமல் வைத்திருந்தது நாங்கள் செய்த நற்பேறாகும். ஓ! ஐயா, இது கந்தர்வர்கள் எனக்குச் செய்த மிகப்பெரிய கருணையாகும். இந்தத் துன்மார்க்கனை விடுவித்ததால் என் குடும்ப மதிப்பும் காக்கப்பட்டது. உங்கள் அனைவரையும் கண்டு நான் மகிழ்கிறேன். நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று உத்தரவிடுங்கள். நீங்கள் விரும்பிய அனைத்தையும் பெற்றுக் கொண்ட பிறகு, எங்கிருந்து வந்தீர்களோ அங்கே நீங்கள் திரும்புங்கள்” என்றான் {யுதிஷ்டிரன்}.

பாண்டுவின் புத்திசாலி மகனால் {யுதிஷ்டிரனால்} இப்படிச் சொல்லப்பட்ட கந்தர்வர்கள் மிகவும் மகிழ்ந்து, அப்சரசுகளுடன் சேர்ந்து அங்கிருந்து சென்று விட்டார்கள். பிறகு அந்த இடத்திற்குத் தேவர்கள் தலைவன் {இந்திரன்} வந்து, குருக்களுடன் ஏற்பட்ட மோதலில் கொல்லப்பட்ட கந்தர்வர்கள் மீது தெய்வீக அமுதத்தைத் தெளித்து அவர்களை மீட்டெடுத்தான் {உயிர்ப்பித்தான்}. அரச குடும்பத்தின் மகளிரையும், தங்கள் உறவினர்களையும் விடுவித்து, (கந்தர்வப் படையை வீழ்த்தி} செயற்கரிய செயலைச் செய்த பாண்டவர்கள், அதனால் மிகவும் திருப்தியடைந்தனர். தங்கள் மகன்கள் மற்றும் மனைவியரோடு கூடிய குருக்களால் வழிபடப்பட்ட சிறப்புமிக்கவர்களும், பலம்வாய்ந்தவர்களுமான அந்தப் போர்வீரர்கள் {பாண்டவர்கள்}, வேள்வி மண்டபத்தில் சுடர்விடும் நெருப்பைப் போலச் சுடர்விட்டுப் பிரகாசித்தனர். பிறகு, பாசத்தால், தன் சகோதரர்களுடன் கூடி விடுதலை அடைந்த துரியோதனனிடம் யுதிஷ்டிரன், “ஓ! குழந்தாய், மீண்டும் இது போன்ற மூர்க்கச் செயலை ஒருபோதும் செய்யாதே. ஓ பாரதா {துரியோதனா}, மூர்க்கமானவன் ஒருபோதும் மகிழ்ச்சியை அடைந்ததில்லை. ஓ! குரு குலத்தின் மகனே {துரியோதனா}, உனது தம்பிகளுடன் மகிழ்ச்சியாக இரு. மனவருத்தம் {விரக்தி} மற்றும் உற்சாகமின்மைக்கு உன்னை இழக்காமல், உனது விருப்பப்படி, உன் தலைநகருக்குச் செல்” என்றான் {யுதிஷ்டிரன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இப்படிப் பாண்டுவின் மகனால் {யுதிஷ்டிரனால்} விடுவிக்கப்பட்ட மன்னன் துரியோதனன், பிறகு, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனை வணங்கி, அவமானத்தில் மூழ்கி, இதயம் இரண்டாகப் பிளப்பபட்டு, உயிரற்ற ஒருவனைப் போல, இயந்திரத்தனமாகத் தனது தலைநகரை நோக்கிச் சென்றான். அந்தக் கௌரவ இளவரசன் {துரியோதனன்} சென்றதும், குந்தியின் மகனான வீரமிக்க யுதிஷ்டிரன் தனது தம்பிகளுடன் கூடி அந்தணர்களை வணங்கினான். பிறகு, துறவை செல்வமாகக் கொண்ட அந்த அந்தணர்களால் சூழப்பட்ட அவன் {யுதிஷ்டிரன்}, தேவர்களுக்கு மத்தியில் இருக்கும் சக்ரனைப் {இந்திரனைப்} போல, அந்தத் துவைதவனத்தில் தனது நாட்களை மகிழ்ச்சியாகக் கழித்தான்.” 

“உன் கண் முன்பே தப்பி ஓடினேன்” என்றான் கர்ணன்! – வனபர்வம் பகுதி 245-தோற்றுத் திரும்பிய துரியோதனன் ஓரிடத்தில் தனது படைகளை நிறுத்தியது; அங்கே கர்ணன் வந்து துரியோதனனைச் சந்தித்து; துரியோதனன் வெற்றியடைந்து திரும்பியிருப்பதாக எண்ணிய கர்ணன் துரியோதனனை மெச்சி கொண்டது …

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “தோல்வியுற்று, எதிரியால் சிறைபிடிக்கப்பட்டு, அதைத் தொடர்ந்து தான் பாண்டுவின் சிறப்புமிக்க மகன்களின் {பாண்டவர்களின்} ஆயுத சக்தியால் விடுவிக்கப்பட்ட பிறகு, எப்போதும் பாண்டுவின் மகன்களை அவமதிப்பதில் ஈடுபட்டு, தனது சொந்த மேன்மையைத் தற்புகழ்ச்சி செய்து கொள்பவனும், கர்வமும், தீய எண்ணமும், தற்புகழ்ச்சி நிறைந்தவனும், கொடூரம் நிறைந்தவனும், ஆணவம் நிறைந்தவனும், பாதகனுமான துரியோதனன் ஹஸ்தினாபுரத்திற்குள் நுழைந்தது கடினமானதாக எனக்குத் தோன்றுகிறது. ஓ! வைசம்பாயனரே, அவமானத்தில் மூழ்கி, துயரத்தால் மனம் கலங்கியவனுமான அந்த இளவரசன் {துரியோதனன்}, அந்தத் தலைநகருக்குள் எப்படி நுழைந்தான் என்பதை எனக்கு விரிவாகச் சொல்லும்” என்று கேட்டான் {ஜனமேஜயன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனால் விடுவிக்கப்பட்ட திருதராஷ்டிரன் மகனான சுயோதனன் {துரியோதனன்}, அவமானத்தால் சிரம் தாழ்த்தி, துன்பத்தாலும், மனச்சோர்வாலும் பாதிக்கப்பட்டு மெதுவாகக் கிளம்பினான். தனது நால்வகைப் படைகளுடன் தனது நகரத்தை நோக்கி முன்னேறிய அந்த மன்னன் {துரியோதனன்}, இதயம் நிறைந்த துயரத்துடனும், தன் தோல்வி குறித்த சிந்தனைகளில் மூழ்கியபடியும், நீரும் புற்களும் நிறைந்த வழியில் சென்றான். தனக்குத் திருப்தியான ஒரு இனிமையான இடத்தில் அந்த மன்னன் {துரியோதனன்}, தனது யானைகள், தேர்கள், குதிரைப்படை மற்றும் காலாட்படைகளைச் சுற்றிலும் நிறுத்தி வைத்தான். நெருப்பின் பிரகாசத்துடன் கூடிய உயர்ந்த ஆசனத்தில் அமர்ந்திருந்த மன்னன் துரியோதனன், விடியற்காலை நேரத்தில், கிரகணத்தில் மூழ்கிய சந்திரனைப் போல இருந்த போது, கர்ணன் அவனை {துரியோதனனை} அணுகி, “ஓ! காந்தாரியின் மகனே {துரியோதனா}, நற்பேறால் உயிருடன் இருக்கிறாய்! நற்பேறாலேயே மீண்டும் நாம் சந்திக்கிறோம்! நினைத்த உருவை ஏற்கவல்ல கந்தர்வர்களை நீ வீழ்த்தியது நற்பேறாலேயே. ஓ! குரு குலத்தின் மகனே {துரியோதனா}, நற்பேறாலேயே, பெரும் பலமிக்க வீரர்களான உனது தம்பிகள் அனைவரும், எதிரிகளை அடக்கி வெற்றிவாகையுடன் திரும்பி வருவதை என்னால் காண முடிந்தது!

என்னைப் பொறுத்தவரையில், கந்தர்வர்கள் அனைவராலும் தாக்கப்பட்டு, சிதறி ஓடும் நமது படையை நிலைநிறுத்த இயலாமல், உன் கண்களுக்கு முன்பே நான் தப்பி ஓடினேன். முழுப் பலத்தையும் பயன்படுத்தி எதிரியால் தாக்கப்பட்டு, அவர்களது கணைகளால் எனது உடல் சிதைக்கப்பட்டு விடாமல், தப்பி ஓடி பாதுகாப்பைப் பெற முயன்றேன். எனினும், ஓ! பாரதா {துரியோதனா}, உங்கள் மனைவியருடனும், துருப்புகளுடனும், வாகனங்களுடன் அந்த மனிதசக்திக்கு அப்பாற்பட்ட மோதலில் இருந்து அனைவரும் உடல் நலத்துடன் பாதுகாப்பாக வந்திருக்கும் உங்களின் இச்செயல் பெரும் அதிசயமாகும். ஓ! பாரதா {துரியோதனா}, இன்று போர்க்களத்தில் நீ உனது தம்பிகளுடன் சாதித்திருப்பதை, ஓ! மன்னா {துரியோதனா}, உலகில் மற்றொரு மனிதனால் சாதிக்க முடியாது” என்றான் {கர்ணன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “கர்ணனால் இப்படிச் சொல்லப்பட்ட மன்னன் துரியோதனன், அந்த அங்கர்களின் {அங்க தேச மக்களின்} ஆட்சியாளனிடம் {கர்ணனிடம்}, கண்ணீரால் அடைபட்ட குரலுடன் மறுமொழி கூறினான்.”

“சிறை பிடிக்கப்பட்டேன்” என்றான் துரியோதனன்! – வனபர்வம் பகுதி 246-போர்க்களத்தில் நடந்த விவரங்களைத் துரியோதனன் கர்ணனுக்குச் சொல்லல்; கந்தர்வர்களால் தானும் தன் குடும்பத்தாரும், நண்பர்களும் சிறை பிடிக்கப்பட்டதையும், யுதிஷ்டிரன் கட்டளையின் பேரில் அர்ஜுனன், பீமன் மற்றும் நகுல சகாதேவர்கள் கந்தர்வர்களுடன் போரிட்டதையும் துரியோதனன் கர்ணனிடம் சொன்னது;

துரியோதனன் {கர்ணனிடம்} சொன்னான், “ஓ! ராதேயா {கர்ணா}, நடந்தது என்ன என்பதை நீ அறியமாட்டாய். எனவே, நான் உனது வார்த்தைகளால் சீற்றமடையவில்லை. பகைவர்களான கந்தர்வர்களை எனது சக்தியால் நானே வீழ்த்தியதாக நீ நினைக்கிறாய். ஓ! வலிமைமிக்கக் கரங்கள் கொண்டவனே {கர்ணா}, உண்மையில் எனது துணையுடன் என் தம்பிகள் நீண்ட நேரம் கந்தர்வர்களுடன் போரிட்டனர். உண்மையில், இருதரப்பிலும் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. ஆனால், அந்த வீரமிக்கக் கந்தர்வர்கள், தங்கள் மாய சக்திகள் பலவற்றைப் பயன்படுத்தி, வானத்திற்கு உயர்ந்து எங்களுடன் போரிட்டனர். அவர்களுடனான மோதல் சம தன்மையை இழந்தது. தோல்வி எங்களுடையதாகியது. சிறை பிடிக்கவும் பட்டோம்.

எங்கள் பணியாட்கள், ஆலோசகர்கள், பிள்ளைகள், மனைவியர், துருப்புகள், வாகனங்களோடு கூடி பெருந்துன்பத்தில் இருந்த எங்கள் அனைவரையும் அவர்கள் ஆகாய மார்க்கமாக எடுத்துச் சென்றனர். அப்போதுதான், எங்கள் வீரர்களில் சிலரும், வீரமிக்க அதிகாரிகளில் சிலரும், உதவி கேட்போருக்கு எப்போதும் மறுக்காத வீரர்களான பாண்டுவின் மகன்களிடம் சென்றனர். அவர்களிடம் {பாண்டவர்களிடம்} சென்ற அவர்கள் {நமது வீரர்கள்}, “திருதராஷ்டிரன் மகனான மன்னன் துரியோதனன் இங்கே தனது தம்பிகளோடும், நண்பர்களோடும், மனைவியரோடும் கந்தர்வர்களால் சிறைபிடிக்கப்பட்டு ஆகாய மார்க்கமாக எடுத்துச் செல்லப்படுகிறான். நீங்கள் அருளப்பட்டிருங்கள். அரச குடும்பப் பெண்களோடு இருக்கும் மன்னனை விடுவியுங்கள்! குரு குல பெண்களுக்கு எந்த அவமானமும் நேராமல் இருக்கட்டும்” என்று சொல்லினர்.

அவர்கள் இப்படிப் பேசியதும், அற ஆன்மா கொண்ட பாண்டு மகன்களில் மூத்தவன் {யுதிஷ்டிரன்}, தன் தம்பிகளைச் சமாதானப்படுத்தி, எங்களை விடுவிக்கும்படி உத்தரவிட்டான். பிறகு, தங்கள் ஆயுத சக்தியைக் கொண்டு சாதிக்கும் திறன் இருந்தும், மனிதர்களில் காளைகளான அந்தப் பாண்டவர்கள், கந்தர்வர்களை அடைந்து, மென்மையான வார்த்தைகளில் எங்களை விடுவிக்கச் சொன்னார்கள். இப்படிச் சமாதானமான வார்த்தைகளால் கேட்கப்பட்டும், கந்தர்வர்கள் எங்களை விடுவிக்க மறுக்கவே, பெரும் சக்தி கொண்டவர்களான அர்ஜுனன், பீமன் மற்றும் இரட்டையர்கள் {நகுல சகாதேவர்கள்} ஆகியோர் கந்தர்வர்கள் மீது கணை மாரி {அம்பு மழை} பொழிந்தனர்.

பிறகு அந்தக் கந்தர்வர்கள், போரிடுவதைக் கைவிட்டு, மிகுந்த மகிழ்ச்சியுடன், துயரத்துடன் இருந்த எங்களை இழுத்த படியே வானத்தின் வழியே தப்பி ஓடினர். பின்னர்த் தெய்வீக ஆயுதங்களை எதிரிகளின் மீது பயன்படுத்திக் கொண்டிருந்த தனஞ்சயனால் {அர்ஜுனனால்} எல்லாப்புறங்களிலும் அம்புகளாலான வலை அமைக்கப்பட்டிருப்பதைக் கண்டோம். கூரிய கணைகளால் அடர்த்தியாகப் பின்னப்பட்ட அந்த வலை அனைத்துத் திசைகளையும் மூடியிருப்பதைக் கண்ட அவனது {அர்ஜுனனின்} நண்பனான கந்தர்வர்கள் தலைவன் {சித்திரசேனன்}, தன்னை வெளிப்படுத்திக் கொண்டான். சித்திரசேனனும், அர்ஜுனனும் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி கொண்டு, ஒருவரின் நலனை மற்றவர் விசாரித்துக் கொண்டனர். பாண்டுவின் மற்ற மகன்களும் அந்தக் கந்தர்வர்கள் தலைவனைத் {சித்திரசேனனைத்} தழுவினர். பதிலுக்கு அவனும் அவர்களைத் தழுவினான். பிறகு மரியாதை நிமித்தமான விசாரிப்புகள் அவர்களுக்குள் நடந்தது. பிறகு அந்த வீரமிக்கக் கந்தர்வர்கள், தங்கள் ஆயுதங்கள் மற்றும் கவசங்களைத் துறந்து, பாண்டவர்களுடன் நட்புகூடிய ஆவியில் கலந்தனர். சித்திரசேனனும், தனஞ்சயனும் {அர்ஜுனனும்} ஒருவருக்கொருவர் மரியாதையுடன் வணங்கிக் கொண்டனர்.

துச்சாசனன் கண்ணீர்! – வனபர்வம் பகுதி 247-சித்திரசேனன், துரியோதனன் வந்த நோக்கத்தை யுதிஷ்டிரனிடம் வெளிப்படுத்துவது; துரியோதனன் அவமானத்தால் கூனிக் குறுகிப் போவது; தனக்கு நேர்ந்த அவமானத்தால் உணவைத் துறந்து, உயிர் விடப்போவதாகத் துரியோதனன் தீர்மானிப்பது; நீ இல்லாமல் நான் ஆள மாட்டேன் என்று துச்சாசனன் துரியோதனனிடம் கதறி அழுவது; கர்ணன் துரியோதனனுக்குச் சமாதானம் கூறுவது..

துரியோதனன் {கர்ணனிடம்} சொன்னான், “பகை வீரர்களைக் கொல்பவனான அர்ஜுனன், பிறகு சித்திரசேனனை அணுகி, சிரித்துக் கொண்டே ஆண்மை நிறைந்த வார்த்தைகளால், “ஓ! வீரா, ஓ! கந்தர்வர்களில் முதன்மையானவனே {சித்திரசேனா}, என் சகோதரர்களை விடுவிப்பதே உனக்குத் தகும். பாண்டுவின் மகன்கள் உயிரோடு இருக்கும் வரை அவர்கள் {கௌரவர்கள்} அவமதிக்கப்பட இயலாதவர்கள்” என்றான். இப்படிப் பாண்டுவின் சிறப்புமிகுந்த மகனால் சொல்லப்பட்ட கந்தர்வர்கள் தலைவன் {சித்திரசேனன்}, ஓ! கர்ணா, துன்பத்தில் மூழ்கி இருக்கும் பாண்டுவின் மகன்களையும் அவர்களது மனைவியையும் காணவே நாம் அந்த இடத்திற்கு வந்தோம் என்ற நமது நோக்கத்தைப் பாண்டவர்களிடம் வெளிப்படுத்தினான்.

அந்தக் கந்தர்வன் நமது ஆலோசனைகளை வெளிப்படுத்திய போது, வெட்கத்தில் மூழ்கிய நான், அங்கேயே மறைந்து போவதற்கு, பூமி ஒரு பிளவை ஏற்படுத்த வேண்டும் என்று விரும்பினேன். பின்பு பாண்டவர்களுடன் கூடிய கந்தர்வர்கள் கட்டப்பட்டிருந்த எங்களை யுதிஷ்டிரனிடம் அழைத்துச் சென்று, நமது ஆலோசனைகளை வெளிப்படுத்தினர். எனது எதிரிகளின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் சென்று, துயரத்தில் மூழ்கி, சங்கிலியால் கட்டப்பட்டிருந்த நான், எங்கள் குடும்பப் பெண்களின் கண்களுக்கு முன்பாகவே யுதிஷ்டிரனுக்குக் காணிக்கையாக அளிக்கப்பட்டேன். ஐயோ, இதைவிட வேறு என்ன பெரிய சோகம் எனக்கு இருக்க முடியும்?

ஐயோ, என்னால் யார் எப்போதும் துன்புறுத்தப்பட்டார்களோ, நான் யாருக்கு எப்போதும் எதிரியாக இருந்தேனோ, அவர்களாலேயே சிறைமீட்கப்பட்டேன். எனது உயிருக்காக அவர்களுக்குக் கடன்பட்ட நான் இழிந்தவனாகி விட்டேனே. ஓ! வீரா {கர்ணா}, இவ்வழியில் பெறப்பட்ட உயிரோடு இருப்பதைவிட, நான் அந்தப் பெரும் போர்க்களத்தில் மரணத்தைச் சந்தித்திருந்தால் அது மேலானதாக இருந்திருக்குமே. நான் கந்தர்வர்களால் கொல்லப்பட்டிருந்தால், எனது புகழ் உலகம் முழுதும் பரவியிருக்கும். நானும் இந்திரனின் சொர்க்கத்தில், நித்தியமான அருளுடன், மங்களமான பகுதிகளை அடைந்திருப்பேன்.

அதனால், மனிதர்களில் காளைகளே, நான் இப்போது என்ன செய்ய விரும்புகிறேன் என்பதைக் கேளுங்கள். நீங்கள் வீட்டுக்குத் திரும்பிச் செல்லும்போது, நான் அனைத்து உணவையும் துறந்து இங்கேயே தங்கியிருப்பேன். எனது தம்பிகள் அனைவரும் ஹஸ்தினாபுரம் செல்லட்டும். கர்ணன் உட்பட எனது நண்பர்கள் அனைவரும், மற்றும் துச்சாசனன் தலைமையிலான எங்கள் உறவினர்கள் அனைவரும் இப்போதே தலைநகர் திரும்பட்டும். எதிரியால் அவமதிக்கப்பட்ட நான் அங்கே {தலைநகருக்கு} வரவே மாட்டேன். முன்பு எதிரியிடம் இருக்கும் மதிப்பைப் பறித்து, எனது நண்பர்களின் மதிப்பை எப்போதும் உயர்த்திய நான், இப்போது எனது நண்பர்களுக்குக் கவலையையும், எதிரிகளுக்கு மகிழ்ச்சியையும் கொடுப்பவனாகிவிட்டேன். யானையின் பெயரால் அழைக்கப்படும் நகரத்திற்கு {ஹஸ்தினாபுரத்திற்கு} சென்று மன்னரிடம் {திருதராஷ்டிரரிடம்} நான் என்ன சொல்வேன்?

பீஷ்மர், துரோணர், கிருபர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, விதுரர், சஞ்சயன், சோமதத்தன் மற்றும் பிற மதிக்கத்தக்க மூத்தவர்கள் என்னிடம் என்ன கேட்பார்கள்? பிற வகைகளைச் சேர்ந்த முக்கிய மனிதர்களும், சுதந்திரமான தொழில் செய்யும் மனிதர்களும் என்னிடம் என்ன கேட்பார்கள்? நான்தான் அவர்களுக்கு மறுமொழியாக என்ன சொல்வேன்? இதுவரை எதிரிகளின் தலைக்கு மேல் இருந்து, அவர்களின் மார்புகளை மிதித்த நான், இப்போது அந்நிலையில் இருந்து விழுந்துவிட்டேன். அவர்களிடம் இனி நான் எப்படித்தான் பேசுவேன்? செழிப்பு, அறிவு மற்றும் செல்வாக்கு ஆகியவற்றை அடையும் ஆணவமிக்க மனிதர்கள், வெறுமை பொங்கிய என்னைப் போலவே, அபூர்வமாகவே அருள் காலத்தை அனுபவிப்பார்கள்.

ஐயோ, அறியாமையால் வழிநடத்தப்பட்டு மிகவும் முறையற்ற, தீய செயலைச் செய்த முட்டாள் ஆனதால், நான் இத்தகைய துயரத்தில் விழுந்தேனே. இனியும் உயிரை என்னால் தாங்க முடியாததால், நான் பட்டினி கிடந்து சாவேன். எதிரியால் துயரத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட, துணிச்சல் மிகுந்த எவன்தான் {Man of spirit} தனது இருப்பை {தன் வாழ்நாளை} நீண்ட காலம் நீட்டிச் செல்வான்? கர்வம் கொண்ட நான், ஆண்மையற்றுப் போய், துயரத்தில் மூழ்கியதை, பராக்கிரமம் கொண்ட பாண்டவர்கள் பார்த்ததால் எதிரிகளின் நகைப்புக்குள்ளானேன்” என்றான் {துரியோதனன்}

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இதுபோன்ற நினைவுகளுக்கு வழி கொடுத்துக் கொண்டிருந்த துரியோதனன், துச்சாசனனிடம், “ஓ! துச்சாசனா, ஓ! பாரதக் குலத்தவனே, எனது இவ்வார்த்தைகளைக் கேள்! நான் உனக்கு வழங்கும் இந்த {அரச} பட்டத்தை ஏற்று, என் இடத்தில் மன்னனாக இரு. கர்ணானாலும், சுபலனின் மகன்களாலும் பாதுகாக்கப்பட்ட பரந்த பூமியை நீ ஆட்சி செய். மருதர்களைப் பார்த்துக் கொள்ளும் இந்திரனைப் போல, உன் தம்பிகளைப் பேணிப் பராமரித்து, அவர்கள் அனைவரின் நம்பிக்கையைப் பெறுவாயாக. நூறு வேள்விகளைச் செய்தவனைச் {இந்திரனைச்} சார்ந்திருக்கும் தேவர்களைப் போல, நண்பர்களும் உறவினர்களும் உன்னைச் சார்ந்து இருக்கட்டும். சோம்பலில்லாமல் நீ எப்போதும் அந்தணர்களுக்கு பணிக்கொடை கொடுக்க வேண்டும். உனது நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் நீ எப்போதும் புகலிடமாக இரு. தேவர்களைப் பார்த்துக் கொள்ளும் விஷ்ணுவைப் போல, எப்போதும் உனது அனைத்து இரத்த உறவுகளை நீ பார்த்துக் கொள்ள வேண்டும். பெரியவர்களை நீ எப்போதும் பேணிப் பாதுகாக்க வேண்டும். உனது நண்பர்களுக்கு மகிழ்ச்சியூட்டும்படியும், உனது எதிரிகளைக் கண்டித்தும் இந்த உலகத்தை ஆட்சி செய்; போ!” என்றான் {துரியோதனன்}.

பிறகு அவனது {துச்சாசனனின்} கழுத்தைக் கட்டிக் கொண்ட துரியோதனன், மீண்டும் “போ!” என்றான். அவனது {துரியோதனனின்} வார்த்தைகளைக் கேட்ட துச்சாசனன், உற்சாகத்தை முற்றிலும் இழந்து, பெருந்துயரில் மூழ்கி, கண்ணீரால் அடைபட்ட குரலுடன், கைகள் கூப்பி, தனது அண்ணனுக்குச் சிரம் தாழ்த்தி, “மனம் இரங்குவீராக” என்றான். இப்படிச் சொல்லிய அவன் கனத்த இதயத்துடன் கீழே பூமியில் விழுந்தான். துயரால் தாக்கப்பட்ட அந்த மனிதர்களில் புலி {துச்சாசனன்}, தனது அண்ணனின் பாதங்களில் கண்ணீர் சிந்தி மீண்டும், “இது நடக்காது! இந்தப் பூமி பிளந்து போகலாம், ஆகாயம் துண்டு துண்டாகலாம், சூரியன் தனது பிரகாசத்தை இழக்கலாம், சந்திரன் தனது குளுமையைக் கைவிடலாம், காற்று அதன் வேகத்தைக் கைவிடலாம், தனது இருப்பிடத்தில் இருந்து இமயம் நகரலாம், சமுத்திரத்தின் நீர் வற்றிப் போகலாம், நெருப்பு தன் வெப்பத்தைக் கைவிடலாம், எனினும், ஓ! மன்னா {துரியோதனரே}, ஒருபோதும் நீரில்லாமல் {நீயில்லாமல்} இந்தப்பூமியை நான் ஆளமாட்டேன்” என்றான். துச்சாசனன் மீண்டும், “மனம் இரங்கும், ஓ! மன்னா! {துரியோதனரே}, நமது குலத்தில் மன்னனாக நூறாண்டு காலம் உம்மால் மட்டுமே இருக்க முடியும்” என்றான். மன்னனிடம் {துரியோதனனிடம்} இப்படிப் பேசிய துச்சாசனன், ஓ! பாரதா {ஜனமேஜயா}, தன் வழிபாட்டுக்குரிய தனது அண்ணனின் பாதங்களைப் பிடித்துக் கொண்டு, இனிய குரல் கொண்டு அழத் தொடங்கினான்.

துச்சாசனனும், துரியோதனனும் இப்படி அழுவதைக் கண்ட கர்ணன் பெருந்துயரத்துடன் அவர்கள் இருவரையும் அணுகி, “குரு இளவரசர்களே, சாதாரண மனிதர்களைப் போல, அறிவற்றுப் போய், ஏன் துயருக்கு ஆளாகிறீர்கள்? கவலையோடு இருக்கும் மனிதனின் துயரத்தை, அவனது கண்ணீர் ஒருபோதும் நீக்காது. அழுகை ஒருவனின் துயரை நீக்க முடியாது என்கிற போது, இப்படிச் சோகத்துக்கு வழி கொடுப்பதால் உங்களுக்கு லாபமென்ன? இத்தகு நடத்தையால் எதிரியை மகிழ்ச்சியூட்டாது, பொறுமையை உங்கள் துணைக்கு அழையுங்கள். ஓ! மன்னா {துரியோதனா}, உன்னை விடுவித்து, பாண்டவர்கள் தங்கள் கடமையையே  செய்திருக்கிறார்கள். மன்னனின் ஆளுகைக்குட்பட்ட இடத்தில் வசிக்கும் அவர்கள், எப்போதும் மன்னனுக்கு ஏற்புடையதையே செய்ய வேண்டும். பாண்டவர்கள், உனது ஆட்சிக்குட்பட்ட பகுதியில் உன்னால் பாதுகாக்கப்பட்டு மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். சாதாரண மனிதனைப் போல இத்தகு துயரத்தில் ஆழ்வது உனக்குத் தகாது. உணவைக் கைவிட்டு, உயிரை விடப்போவதாக நீ தீர்மானித்ததைக் கண்ட உனது இரத்த உறவுகளான தம்பிகள் அனைவரும் சோகமாகவும், உற்சாகமற்றும் இருப்பதைப் பார். நீ அருளப்பட்டிரு! எழுந்து உனது நகரத்திற்கு வா, உனது இரத்த உறவுகளான தம்பிகளுக்கு ஆறுதல் கூறு” என்றான் {கர்ணன்}.

“உன் கால்களைச் சேவிப்பேன்” என்றான் கர்ணன்! – வனபர்வம் பகுதி 248-துரியோதனனைத் தேற்றி, தற்கொலை எண்ணத்தில் இருந்து அவனை மீட்க கர்ணன் செய்த முயற்சி…

கர்ணன் {துரியோதனனிடம்} தொடர்ந்தான், “ஓ! மன்னா, இன்று உனது நடத்தை குழந்தைத்தனமாக இருக்கிறது. ஓ! வீரா, ஓ! எதிரிகளைக் கொல்பவனே, நீ பகைவனால் வீழ்த்தப்பட்டபோது, பாண்டவர்கள் உன்னை விடுவித்தனர் என்பதில் நீ ஆச்சரியப்பட என்ன இருக்கிறது? ஓ குரு குலத்தின் மகனே {துரியோதனா},  மன்னனின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் வாழ்பவர்கள், அதிலும் குறிப்பாக (அவர்களில்) ஆயுதமேந்துவதைத் தொழிலாகக் கொண்டவர்கள், தாங்கள் ஏகாதிபதியால் அறியப்பட்டவர்களாக இருப்பினும், அறிப்படாதவர்களாக இருப்பினும், தங்கள் மன்னனுக்கு ஏற்புடையதையே எப்போதும் செய்ய வேண்டும். எதிரிப்படையின் தலைவர்களை நசுக்கும் மனிதர்களில் முதன்மையானவர்கள், அவர்களாலேயே {அந்த எதிரிகளாலேயே} வீழ்த்தப்படுவதும், பின்பு தங்கள் துருப்புகளால் மீட்கப்படுவதும் அடிக்கடி நிகழ்ந்து வருவதே.

மன்னனின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும், ஆயுதமேந்துவதைத் தொழிலாகக் கொண்டவர்கள், எப்போதும் ஒருங்கிணைந்து, மன்னனுக்காகத் தங்கள் சக்தியில் சிறந்ததை வெளிப்படுத்த வேண்டும். ஓ! மன்னா {துரியோதனா}, உனது ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் வாழும் பாண்டவர்கள் உன்னை {தற்செயலாக} விடுவித்திருந்தாலும், அதில் நீ வருந்த என்ன இருக்கிறது? ஓ! மன்னர்களில் சிறந்தவனே {துரியோதனா}, உனது துருப்புகளுக்குத் தலைமை தாங்கி போர்க்களத்திற்கான அணிவகுப்பின் முன்னணியில் நீ சென்று கொண்டிருந்த போது, அவர்கள் {பாண்டவர்கள்} உன்னைத் தொடர்ந்து வரவில்லை. அஃது தங்கள் பங்குக்கு அவர்கள் செய்த முறையற்ற செயலாகும். இதற்கு முன்பே அவர்கள் உன் அடிமையாகி, உன் அதிகாரத்தின் கீழ் வந்துவிட்டார்கள். எனவே, துணிவும், பலமும் கொண்டு போர்களத்தில் புறம்காட்டாதவர்களான அவர்கள்

{பாண்டவர்கள்}, இப்போது உனக்கு உதவி செய்வது {அவர்களது} கடனே.

அவர்களது {பாண்டவர்களின்} ஆடம்பர உடைமைகளையெல்லாம் நீ அனுபவித்து வருகிறாய். {ஆயினும்} ஓ! மன்னா {துரியோதனா}, அவர்கள் உயிருடன் இருப்பதைப் பார்! உணவைத் துறந்து சாவதாக அவர்கள் தீர்மானிக்கவில்லை. நீ அருளப்பட்டிரு! ஓ! மன்னா {துரியோதனா} எழுந்திரு! நீண்ட காலத்திற்குப் பெரும் துன்பத்தில் இருப்பது உனக்குத் தகாது. ஓ! மன்னா {துரியோதனா}, மன்னனின் ஆட்சிக்குட்பட்ட பகுதியில் வசிப்பவர்கள் மன்னனுக்கு ஏற்புடையதைச் செய்ய வேண்டும் என்பது அவர்களுக்கு விதிக்கப்பட்ட கடமையாகும். இதில் வருத்தப்பட என்ன இருக்கிறது? ஓ! மன்னா {துரியோதனா}, எனது வார்த்தைகளுக்கு ஏற்ப நீ செயல்படவில்லை எனில், நானும் இங்கேயே இருந்து, உன் பாதங்களை மரியாதையுடன் சேவிப்பதில் என்னை ஈடுபடுத்திக் கொள்வேன். ஓ மனிதர்களில் காளையே {துரியோதனா}, உன் துணையை இழந்து நான் வாழ விரும்பவில்லை. ஓ! மன்னா {துரியோதனா}, உணவைத் துறந்து உன்னைக் கொன்று {தற்கொலை செய்து} கொள்ள நீ தீர்மானித்தாயானால், பிற மன்னர்களுக்கு நீ சாதாரணமான கேலிப் பொருளாகிவிடுவாய்” என்றான் {கர்ணன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “கர்ணனால் இப்படிச் சொல்லப்பட்ட மன்னன் துரியோதனன், இவ்வுலகில் இருந்து விடைபெறுவதாக உறுதியாகத் தீர்மானித்திருந்ததால், தன் இருக்கையில் இருந்து எழும்ப விரும்பவில்லை.” 

“பாண்டவர்களுக்கு நாட்டைத் திருப்பிக் கொடு” என்றான் சகுனி! – வனபர்வம் பகுதி 249-பாண்டவர்களுக்கு நாட்டைத் திருப்பிக் கொடுத்து அவர்களுடன் நட்போடு பழகு என்று சகுனி துரியோதனனுக்குச் சொன்னது; துரியோதனனைத் தேற்றி, தற்கொலை எண்ணத்தில் இருந்து அவனை மீட்க சகுனி செய்த முயற்சி; இறப்பதில் உறுதியாக இருந்த துரியோதனன் உணவைத் துறந்து அமர்ந்தது; தைத்தியர்களும் தானவர்களும் துரியோதனனை பாதாள லோகத்திற்குக் கொண்டு சென்றது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அவமானத்தைத் தாங்க முடியாமல் உணவைத் துறந்து உயிரை விடத் தீர்மானித்து அமர்ந்திருந்த மன்னன் துரியோதனனைக் கண்ட சுபலனின் மகனான சகுனி ஆறுதலாக இவ்வார்த்தைகளை அவனிடம் {துரியோதனனிடம்} கூறினான். சகுனி, “ஓ! குரு குலத்தின் மகனே, கர்ணன் என்ன சொன்னான் என்பதை இப்போதுதான் கேட்டாய். உண்மையில் அவனுடைய {கர்ணனின்} வார்த்தைகள் ஞானம் நிரம்பியவையாக இருந்தன. ஓ! மன்னா {துரியோதனா}, அற்பமான காரியத்துக்காக உனது உயிரை விடத்துணிந்து, உனக்காக நான் வென்ற உயர்ந்த செழிப்பை முட்டாள்த்தனமாக ஏன் கைவிடுகிறாய்? நீ மூத்தவர்களுக்காக எப்போதும் காத்ததில்லை என்பதை இன்றே நான் கண்டு கொண்டேன். திடீர் இன்பத்தையோ, திடீர் துன்பத்தையோ கட்டுப்படுத்தத்தெரியாதவன், ஏற்கனவே செழிப்பை அடைந்தவனாக இருந்தாலும், சுடப்படாத மண் குடத்தைத் தண்ணீரில் இட்டது போலவே அது {அவனிடமிருந்து} தொலைந்து போகும்.

துணிச்சலற்று, ஆண்மையின் சிறு பொறி கூட இல்லாது, அலட்சியப் போக்குக்கு அடிமையாக, எப்போதும் புத்தியற்றவனாக, சிற்றின்பங்களுக்கு அடிமையாக இருக்கும் ஒரு மன்னன், எப்போதும் தனது குடிகளால் மதிக்கப்படுவதில்லை. நன்மையையே அடைந்த உனக்கு, இந்தக் காரணமற்ற சோகம் ஏன் வந்தது? {நடந்த சம்பவங்களை நினைத்து} மகிழ்ச்சி அடைந்து, பாண்டவர்களுக்கு வெகுமதி அளிக்க வேண்டிய நீ, ஓ மன்னா {துரியோதனா} ஏன் துயரப்பட்டுக் கொண்டிருக்கிறாய்? இந்த உனது நடத்தை உண்மையில் நிலையற்றதாகும். உற்சாகமாக இரு. உனது உயிரைத் துறக்காதே. ஆனால் அவர்கள் {பாண்டவர்கள்} உனக்குச் செய்த நன்மையை எண்ணி இதயத்தால் மகிழ்ந்து நினைத்துப் பார். பிருதையின் {குந்தியின்} மகன்களுக்கு {பாண்டவர்களுக்கு}, அவர்களது நாட்டைத் திருப்பிக் கொடு. அத்தகு நடத்தையால், அறத்தையும் புகழையும் வெல். இவ்வழியில் செயல்படுவதால், நீ பெருமையடைவாய். நட்புடன் இருந்து பாண்டவர்களுடன் சகோதர உறவுநிலையை நிறுவு. நீ மகிழ்ச்சியை அடைய வேண்டுமானால், அவர்களது {பாண்டவர்களின்} தந்தை வழி நாட்டை அவர்களுக்குக் கொடு” என்றான் {சகுனி}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “சகுனியின் இவ்வார்த்தைகளைக் கேட்டு, தன் முன்னால் சகோதரப்பாசத்தின் அன்பால் நெடுஞ்சாண்கிடையாகக் கிடக்கும் வீரமிக்கத் துச்சாசனனைக் கண்ட மன்னன் {துரியோதனன்}, துச்சாசனனை எழுப்பி, தனது பருத்த கரங்களால் அவனை வாரி அணைத்து, பாசத்தால் அவனது தலையை முகர்ந்து பார்த்தான். கர்ணன் மற்றும் சுபலன் {சகுனி} ஆகியோரது இவ்வார்த்தைகளைக் கேட்ட மன்னன் துரியோதனன் எப்போதையும் விட அதிகமாக நம்பிக்கை இழந்து, அவமானத்தில் மூழ்கினான். நம்பிக்கையற்ற தன்மை அவனது ஆன்மாவை வென்றது. தன் நண்பர்கள் சொன்னது அனைத்தையும் கேட்ட அவன் சோகத்துடன், “அறம், செல்வம், நட்பு, செழுமை, ஆட்சி, கேளிக்கைகள் ஆகியவற்றால் எனக்கு ஆக வேண்டியது ஒன்றுமில்லை. எனது நோக்கத்தைத் தடை செய்யாது, அனைவரும் என்னை விட்டுச் செல்லுங்கள். உணவைத் துறந்து உயிரை விடுவதில் உறுதியான தீர்மானத்தோடு இருக்கிறேன். நகரத்திற்குத் திரும்பி, எனக்கு மூத்தவர்களை மரியாதையோடு நடத்துங்கள்” என்றான் {துரியோதனன்}.

அவனால் இப்படிச் சொல்லப்பட்டது, அவர்கள் அனைவரும் எதிரிகளை அழிக்கும் அந்த மன்னனிடம் {துரியோதனனிடம்}, “ஓ! ஏகாதிபதி, ஓ! பாரதா {துரியோதனா}, உன் வழி எதுவோ, அதுவே எங்களுடையதுமாகும். நீ இல்லாமல் நாங்கள் எப்படி நகரத்துக்குள் நுழைய முடியும்?” என்றனர்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “நண்பர்கள், அமைச்சர்கள், தம்பிகள், உறவினர்கள் ஆகியோர் எப்படிச் சொல்லிப் பார்த்தும், அந்த மன்னன் {துரியோதனன்}, தனது நோக்கத்தில் இருந்து வழுவவில்லை. அவனது நோக்கத்திற்கு ஏற்ப திருதராஷ்டிரனின் மகன் {துரியோதனன்}, பூமியில் தர்ப்பை புற்களைப் பரப்பி, நீரைத் தொட்டுத் தன்னைச் சுத்திகரித்துக் கொண்டு, அந்த இடத்தில் அமர்ந்தான். மரவுரி மற்றும் தர்ப்பை புற்களை ஆடையாக உடுத்தி அவன் உயர்ந்த நோன்பைக் கடைப்பிடித்தான். {மௌன விரதம் மேற்கொண்டு} அனைத்துப் பேச்சையும் நிறுத்திய அந்த மன்னர்களில் புலி {துரியோதனன்}, சொர்க்கத்திற்குச் செல்ல விரும்பி, வெளி விவகாரங்களை அனைத்தையும் விலக்கி வழிபாட்டையும் வேண்டுதலையும் ஆரம்பித்தான்.

அதே வேளையில், பழங்காலத்தில் தேவர்களால் வீழ்த்தப்பட்டுப் பாதாள லோகங்களில் வாழும் தைத்தியர்களும் தானவர்களும், துரியோதனனின் நோக்கத்தை உறுதி செய்து கொண்டு, மன்னன் {துரியோதனன்} இறந்தால், தங்கள் பக்கம் பலவீனமடையும் என்பதை அறிந்து, துரியோதனனைத் தங்கள் முன்னிலைக்குக் கொண்டு வர, ஒரு வேள்வியைச் செய்தனர். மந்திரங்களை அறிந்தவர்கள், ஏற்கனவே பிருஹஸ்பதியாலும், உசானசாலும் {சுக்கிராச்சாரியராலும்} தீர்மானிக்கப்பட்டிருந்த சூத்திரங்களின் உதவியுடன், மந்திரங்களாலும், வேண்டுதல்களாலும் அடையத்தக்க வகையில், அதர்வ {அதர்வண} வேதத்திலும், உபநிஷத்களிலும் சொல்லப்பட்டுள்ள {நவகுண்டீ} சடங்குகளைச் செய்தனர். வேதங்களையும் அதன் கிளைகளையும் நன்கு அறிந்த, கடும் நோன்புகள் கொண்ட அந்தணர்கள், கவனம் நிறைந்த ஆன்மாவுடன், நெருப்பில் தெளிந்த நெய்யையும் பாலையும் நீர்க் காணிக்கையாக மந்திரங்கள் சொல்லி ஊற்ற ஆரம்பித்தனர்.

அச்சடங்குகள் முடிந்த போது, ஓ! மன்னா {ஜனமேஜயா}, ஒரு விசித்திரமான தேவதை {பேய்}, தன் வாயை அகல விரித்த படி (வேள்வி நெருப்பிலிருந்தபடி), “நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டது. இதயத்தில் நல்ல மகிழ்ச்சியை அடைந்த தைத்தியர்கள் அவளிடம் {கிருத்தியை = ஏவியதைச் செய்யும் தேவதை}, “திருதராஷ்டிரனின் மகனான மன்னன் {துரியோதனன்} இப்போது, உயிரைத் துறப்பதற்காக உண்ணா நோன்பு நோற்றிருக்கிறான். அவனை இங்கே கொண்டு வா” என்று கட்டளையிட்டனர். இப்படிக் கட்டளையிடப்பட்ட அவள், “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி சென்றுவிட்டாள். கண் இமைக்கும் நேரத்தில் சுயோதனன் {துரியோதனன்} இருக்கும் இடத்தை அவள் அடைந்தாள். மன்னனை பாதாள லோகத்திற்கு நொடிப்பொழுதில் கொண்டு வந்த அவள், அதைத் தானவர்களிடம் தெரிவித்தாள். இரவு வேளையில் தங்களுக்கு மத்தியில் கொண்டு வரப்பட்ட மன்னனைக் {துரியோதனனைக்} கண்ட தானவர்கள் ஒன்று கூடி, இதயத்தால் அவர்கள் அனைவரும் நன்கு மகிழ்ந்து, அம்மகிழ்ச்சியால் கண்கள் அகன்று, இந்தப் புகழ்ச்சி வார்த்தைகளை {முகத்துதியை} துரியோதனனிடம் பேசினர்.”

நரகாசுரனே கர்ணன்! – வனபர்வம் பகுதி 250-தானவர்களும் தைத்தியர்களும் துரியோதனனுக்குத் தாங்கள் எவ்வாறெல்லாம் உதவ முடியும் என்று சொன்னது; கர்ணன் நரகாசுரனின் ஆன்மா கொண்டவன் என்று சொன்னது; உயிரைத் துறக்கும் முடிவைக் கைவிடச் சொல்லி மீண்டும் துரியோதனனை அதே இடத்தில் விட்டது; நடந்தது அத்தனையும் கனவெனத் துரியோதனன் நினைத்தது; கர்ணன் துரியோதனனுக்குச் சொன்ன வார்த்தைகள்; துரியோதனன் தனது சொந்த நகரத்திற்குத் திரும்பியது…

தானவர்கள் {துரியோதனனிடம்}, “ஓ! சுயோதனா, ஓ! பெரும் மன்னா! ஓ! பாரதக் குலத்தைத் தழைக்க வைப்பவனே, நீ எப்போதும் வீரர்களாலும், சிறப்பு மிகுந்த மனிதர்களாலும் சூழப்பட்டு இருக்கிறாய். பிறகு ஏன் நீ பட்டினி நோன்பு எனும் இத்தகு மூர்க்கச் செயலைச் செய்கிறாய்? தற்கொலை எப்போதுமே நம்மை நரகத்திலேயே ஆழ்த்தும். மேலும் நம்மை இகழ்ச்சி பேச்சுக்குப் பாத்திரமாக வைக்கும். புத்திக்கூர்மையுள்ள மனிதர்கள், தங்கள் சிறந்த விருப்பங்களுக்கு எதிராக, தங்கள் நோக்கங்களின் வேரையே தாக்கும் பாவம் நிறைந்த செயல்களில் கை வைக்க மாட்டார்கள். எனவே, ஓ! மன்னா, அறநெறிகள், லாபம், மகிழ்ச்சி, புகழ், பராக்கிரமம், சக்தி ஆகியவற்றுக்கு அழிவைத் தந்து, எதிரிக்கு மகிழ்ச்சியைத் தரும் உனது இந்தத் தீர்மானத்தில் இருந்து பின்வாங்கு. ஓ! மேன்மையான மன்னா {துரியோதனா}, உனது உடலை உண்டாக்கிய உனது ஆன்மாவின் தெய்வீக மூலத்தைத் தெரிந்து கொண்டு, உண்மையை அறிந்து கொள். பிறகு பொறுமையை உனது உதவிக்கு அழைத்துக் கொள்.

பழங்காலத்தில் ஓ! மன்னா {துரியோதனா}, பெரும் ஆன்ம தவங்கள் செய்து நாங்கள் உன்னை மகேஸ்வரனிடம் {சிவனிடம்} இருந்து அடைந்தோம். உனது உடலின் மேல் பகுதி {தொப்புளுக்கு மேலே} வஜ்ரக் குவியலால் செய்யப்பட்டது. எனவே, ஓ! பாவமற்றவனே {துரியோதனா}, அஃது எவ்வகை ஆயுதத்தாலும் பாதிப்படையாது. பெண்களின் இதயங்களைக் கவரும் ஈர்ப்புடன் உடைய உனது உடலில் கீழ்ப்பகுதி {தொப்புகளுக்குக் கீழே}, மலர்களைக் கொண்டு மகாதேவரின் மனைவியால் செய்யப்பட்டது. ஓ! மன்னர்களில் சிறந்தவனே {துரியோதனா}, இப்படியே உனது உடல் மகேஸ்வரனாலும் அவனது தேவியாலும் {உமையாலும்} படைக்கப்பட்டதாகும். எனவே, ஓ! மன்னர்களில் புலியே {துரியோதனா}, நீ மனிதனல்ல; தெய்வீகத் தன்மை கொண்டவனாவாய். பகதத்தனின் தலைமையில் உள்ள பெரும் பலம் கொண்ட மற்ற வீரமிக்க க்ஷத்திரியர்கள் அனைவரும், தெய்வீக ஆயுதங்களைப் பெற்றிருப்பதால், உனது எதிரிகளைக் கொல்வார்கள். எனவே, உனது இந்தத் துயரத்தை நிறுத்து. நீ அஞ்சத்தக்க காரணம் ஏதுமில்லை. உனக்கு உதவி செய்வதற்காகப் பல வீரமிக்கத் தானவர்கள் பூமியில் பிறந்திருக்கிறார்கள்.

மற்ற அசுரர்களும், பீஷ்மர், துரோணர், கர்ணன் மற்றும் பிறரைப் பீடிக்க இருக்கின்றனர். அவ்வசுரர்களின் பிடிக்குள் இருக்கும் அந்த வீரர்கள், உனது எதிரிகளுடன் போரிடும்போது, தங்கள் கருணையைக் கைவிடுவார்கள். உண்மையில் அந்தத் தானவர்கள் அவர்களின் இதயத்திற்குள் நுழைந்து, அவர்களை முழுதும் பீடித்ததும், அனைத்துப் பாசங்களையும் தூக்கியெறிந்தவர்களார், இதயத்தில் கடுமையை நிறைத்துக் கொள்ளும் அவ்வீரர்கள், போரில் தங்களை எதிர்த்து வரும் மகன்கள், சகோதரர்கள், தந்தைகள், நண்பர்கள், சீடர்கள், உறவினர்கள் ஆகியோரை மட்டுமல்ல குழந்தைகள், முதியவர்கள் ஆகியோரையும்கூட அடிப்பார்கள். அறியாமையாலும், கோபத்தாலும் குருடாகி, படைப்பாளனால் விதிக்கப்பட்ட விதியால் உந்தப்பட்ட இந்த மனிதப் புலிகளின் இதயங்கள் பாவத்தில் நுழைந்து, ஓ! குருக்களில் முதன்மையானவனே {துரியோதனா}, தங்கள் அனைத்துவகை ஆயுதங்களையும் ஆண்மையுடனும், பலத்துடனும் வீசி உலகை மக்கள் தொகையற்றதாக்குவார்கள். மேலும் அவர்கள் ஒருவரிடம் ஒருவர், “நீ என்னிடம் இருந்து இன்று உயிருடன் தப்பிக்க மாட்டாய்” என்று கர்வத்தோடு பேசுவார்கள். எண்ணிக்கையில் ஐந்து பேரான பாண்டுவின் சிறப்புமிக்க இந்த மகன்கள், இவர்கள் அனைவருடனும் போரிடுவார்கள். விதியின் உதவியால் பலம் பொருந்தி அவர்கள் {பாண்டவர்கள்}, இவர்களது அழிவுக்கு வழிவகுப்பார்கள்.

ஓ! மன்னா {துரியோதனா}, க்ஷத்திரிய வகையில் பிறந்துள்ள தைத்தியர்களும் ராட்சசர்களும், போர்க்களத்தில், கதாயுதங்கள் {maces}, தண்டங்கள் {clubs}, ஈட்டிகள் {lances}, மற்றும் மேன்மையான பல வகை ஆயுதங்களைக் கொண்டும் உனது எதிரிகளுடன் பெரும் வீரத்துடன் போரிடுவார்கள். ஓ! வீரா, அர்ஜுனனைக் குறித்து உனது இதயத்தில் இருக்கும் அச்சத்திற்காக, அர்ஜுனனைக் கொல்லும் வழிகளை ஏற்கனவே நாங்கள் தீர்மானித்து வைத்திருக்கிறோம். கொல்லப்பட்ட நரகனின் ஆன்மா கர்ணனின் வடிவை அடைந்திருக்கிறது. தனது பழைய பகைமையை நினைவுகூரும் அவன் {கர்ணன் வடிவில் இருக்கும் நரகாசுரன்}, கேசவனுடனும் {கிருஷ்ணனுடனும்}, அர்ஜுனனுடனும் மோதுவான். அடிப்பவர்களில் முதன்மையான அந்தப் பலமிக்கப் போர்வீரன் {கர்ணன்}, தனது பராக்கிரமத்தில் கர்வம் கொண்ட அர்ஜுனனையும், உனது எதிரிகள் அனைவரையும் போர்க்களத்தில் வீழ்த்துவான். இவையாவற்றையும் அறிந்த வஜ்ரத்தைத் தாங்குபவன் {இந்திரன்}, அர்ஜுனனைக் காக்க விரும்பி, மாற்றுருவம் கொண்டு வந்து கர்ணனிடம் இருந்து காது குண்டலங்களையும், கவசத்தையும் கவர்ந்து செல்வான்.

அந்தக் காரணத்திற்காகவே, நாங்கள் நூறு நூறாகவும், ஆயிரம் ஆயிரமாகவும் {லட்சக்கணக்கான} சம்சப்தகர்கள் [1] என்ற பெயரால் அறியப்படும் தைத்தியர்களையும், ராட்சசர்களையும் நியமித்திருக்கிறோம். இந்தக் கொண்டாடப்படும் வீரர்கள், வீரனான அந்த அர்ஜுனனைக் கொல்வார்கள். எனவே, ஓ! மன்னா {துரியோதனா}, வருந்தாதே. ஓ! ஏகாதிபதி, எதிரியற்ற முழு உலகை நீ ஆள்வாய். சோர்வுக்கு இடம் கொடுக்காதே. இது போன்ற நடத்தை உனக்குப் பொருந்தாது. ஓ! குரு குலத்தவனே {துரியோதனா}, நீ இறந்துவிட்டால், நமது கட்சி பலவீனமடையும். செல், ஓ! வீரா, உனது மனதில் வேறு வகையான சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காதே. நீயே எங்களுக்கு எப்போதும் புகலிடம், பாண்டவர்கள் தேவர்களுக்குப் புகலிடமாக இருக்கிறார்கள்” என்றனர்.(“வெற்றி அல்லது மரணம் என்ற சபதமேற்றிருக்கும் வீரர்கள். ஒரு முழு அக்ஷௌஹிணி இருந்த இவர்கள் கிருஷ்ணனிடம் இருந்தார்கள். இவர்களைக் கிருஷ்ணன் துரியோதனனுக்காகப் போரிட அவனுக்கு {துரியோதனனுக்குக்} கொடுத்தான். ஒரு புறத்தில் போரிடுவதில்லை என்று சபதமேற்று ஆலோசகராக மட்டும் இருக்கும் தானும் {கிருஷ்ணனும்}, மறுபுறத்தில் அவர்களும் {சம்சப்தகர்களும்} என்ற தேர்வை, கிருஷ்ணன் தானம் கேட்டு வந்த துரியோதனனுக்குக் கொடுத்தான் என்ற கதை உத்யோக பர்வத்தில் முழுமையாக வருகிறது. துரியோதனன் தனது முட்டாள்த்தனத்தால் படைகளை ஏற்றான், முடிவில் அர்ஜுனன் அவர்கள் அனைவரையும் கொன்றான்”)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அவனிடம் {துரியோதனனிடம்} இப்படிப் பேசிய அந்தத் தைத்தியர்கள், மன்னர்களில் யானையான அவனை {துரியோதனனை} அணைத்துக் கொண்டனர். பிறகு தானவர்களில் காளையரான அவர்கள் ஒடுக்கப்பட முடியாத அவனைத் {துரியோதனனைத்} தங்கள் மகனைப் போல நினைத்து உற்சாகமூட்டினர். ஓ! பாரதா {ஜனமேஜயனிடம்}, மென்மையான பேச்சால் அவனது மனத்தைக் குளிர்வித்து, “சென்று வெற்றியை அடை! போ” என்று சொல்லி அவன் விடைபெற அனுமதியளித்தனர். அந்தப் பலமிக்கக் கரம் கொண்டவனுக்கு அவர்கள் விடை கொடுத்ததும், அதே தேவதை {கிருத்தியை = ஏவியதைச் செய்யும் தேவதை}, உயிரை மாய்த்துக்கொள்ள அவன் அமர்ந்திருந்த அதே இடத்திற்கே சுமந்து சென்றாள். அந்த வீரனை {துரியோதனனை} அங்கே இறக்கி, அவனை வணங்கிய அந்தத் தேவதை மன்னனின் அனுமதி பெற்று மறைந்து போனாள். ஓ! பாரதா {ஜனமேஜயா}, அவள் போனதும், மன்னன் துரியோதனன் {நடந்தது அத்தனையும்} கனவெனக் கருதினான். பிறகு அவன் தனக்குள், “நான் போர்க்களத்தில் பாண்டவர்களை வீழ்த்துவேன்” என்று நினைத்தான்.

கர்ணன் மற்றும் சம்சப்தகப் படை ஆகிய இரண்டும் (அழிக்கும்) திறனும், பகைவர்களைக் கொல்பவனான பார்த்தனை {அர்ஜுனனை} அழிக்கும் நோக்கம் உடையவை எனச் சுயோதனன் நினைத்தான். இப்படியே, ஓ பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, தீய மனம் கொண்ட திருதராஷ்டிரன் மகனுக்கு {துரியோதனனுக்கு}, பாண்டவர்களை வெல்லலாம் என்ற நம்பிக்கை பலமடைந்தது. கர்ணனும், அந்தராத்மாவில் நரகனின் ஆன்மா ஊடுருவியதால், அர்ஜுனனைக் கொல்வது என்ற கொடும் தீர்மானத்தோடு அப்போது இருந்தான். வீரர்களான அந்தச் சம்சப்தகர்களும், ராட்சசர்களின் அறிவால் பீடிக்கப்பட்டு, இருள் மற்றும் உணர்வுகளின் குணங்களால் பாதிப்படைந்து, பல்குனனைக் {அர்ஜுனனைக்} கொல்லும் விருப்பத்துடனே இருந்தனர். ஓ! மன்னா {ஜனமேஜயா}, கிருபரைத் தலைமையாகக் கொண்ட பீஷ்மர், துரோணர் ஆகியோர் தானவர்களின் ஆதிக்கத்தால், முன்பிருந்ததைப் போலப் பாண்டுவின் மகன்களின் பாசத்துடன் இருக்கவில்லை. ஆனால் மன்னன் சுயோதனன் இதைக் குறித்து யாரிடமும் சொல்லவில்லை.

இரவு கடந்ததும், சூரியனின் வாரிசான கர்ணன், கரங்கள் கூப்பியபடி, புன்னகையுடன் மன்னன் துரியோதனனிடம் ஞானமுள்ள வார்த்தைகளைப் பேசினான், அவன், “இறந்த எந்த மனிதனும், தனது எதிரிகளை வெல்வதில்லை; அவன் உயிரோடிருக்கும்போதே அவனது நன்மையைக் காண முடியும். இறந்த மனிதனால் ஆகும் நன்மையென்ன? ஓ! கௌரவேயா {துரியோதனா}, அவனது வெற்றி எங்கே? எனவே துயருறவோ, அச்சம் கொள்ளவோ, இறக்கவோ இது காலமன்று” என்றான். அந்தப் பலமிக்கக் கரம் கொண்டவனை {துரியோதனனை} தனது கரங்களால் அணைத்துக் கொண்ட அவன் {கர்ணன்}, மேலும், “ஓ! மன்னா {துரியோதனா}, எழு! ஏன் படுத்திருக்கிறாய்? ஓ! பகைவர்களைக் கொல்பவனே, ஏன் வருந்துகிறாய்? உனது பராக்கிரமத்தால் எதிரிகளைத் துன்புறுத்தியபிறகு, நீ ஏன் மரணத்தை விரும்புகிறாய்? அர்ஜுனனின் பராக்கிரமத்தைக் கண்டதால், உனக்கு இந்த அச்சம் ஏற்பட்டிருக்கிறதென்றால், நான் போர்க்களத்தில் அர்ஜுனனைக் கொல்வேன் என உண்மையில் உனக்குச் சத்தியம் செய்கிறேன். பதிமூன்று வருடங்கள் கடந்ததும், நான் பிருதையின் {குந்தியின்} மகன்கள் உனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவேன் என என் ஆயுதங்களின் மீது சத்தியம் செய்கிறேன்” என்றான் {கர்ணன்}.

கர்ணனால் இப்படிச் சொல்லப்பட்டதும், தைத்தியர்களின் வார்த்தைகளை நினைவு கூர்ந்து, (தனது தம்பிகளான) அவர்கள் விடுத்த கோரிக்கைகளாலும் சுயோதனன் எழுந்தான். தைத்தியர்களின் அந்த வார்த்தைகளைக் கேட்டிருந்த அந்த மனிதர்களில் புலி {துரியோதனன்}, இதயத்தில் நிலைத்த தீர்மானத்தை எடுத்து, குதிரைகளும், யானைகளும், தேர்களும், காலாட்படையும் நிறைந்த தனது படையை வரிசைப்படுத்தினான். ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, வெண்குடைகளும், கொடிகளும், வெண்சாமரங்களும், தேர்களும், குதிரைகளும், காலட்படை வீரர்களும் கொண்ட அந்தப் பலமிக்கப் படை, கங்கையின் நீரைப்போல அசைந்து சென்றது. குறித்த காலத்தில் மேகங்கள் கலைந்து இலையுதிர் காலத்தின் {சரதக் காலம்} குறியீடுகள் கொஞ்சம் தொடங்கியதும் தெரியும் அருள்மிக்க வானம் போல அந்தப்படையின் நடை இருந்தது.

ஓ! மன்னர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, வெற்றிக்கு ஆசிகள் கூறிய அந்தணர்களில் சிறந்தவர்களால் ஏகாதிபதியைப் போலத் துதிபாடப்பட்ட திருதராஷ்டிரனின் மகனான மனிதர்களின் தலைவன் {துரியோதனன்}, எண்ணிடங்கா குவிந்த கரங்களின் வணக்கங்களை ஏற்று, எல்லையில்லா பிரகாசத்துடன் சுடர்விட்டு கர்ணன் மற்றும் சூதாடியான சுபலனின் மகனுடன் சேர்ந்து முன்னே சென்றான். துச்சாசனனைத் தலைமையாகக் கொண்ட அவனது தம்பிகள், பூரிஸ்ரவஸ், சோமதத்தன், பெரும் பலம்வாய்ந்த மன்னனான பாஹ்லீகன் ஆகியோர் பல்வேறு வடிவங்களிலான தங்கள் ரதங்கள், குதிரைகள், யானைகளில் சிறந்தவை ஆகியவற்றில் மன்னர்களில் சிங்கமானவனின் {துரியோதனனின் செல்லும்} வழியில் பின்தொடர்ந்து சென்றார்கள். ஓ! ஏகாதிபதிகளில் தலைமையானவனே {ஜனமேஜயா}, பிறகு, குறுகிய காலத்திற்குள், அந்தக் குரு குலத்தைத் தழைக்க வைப்பவர்கள் தங்கள் சொந்த நகரத்துக்குள் {ஹஸ்தினாபுரத்திற்குள்} நுழைந்தனர்.”

பாண்டவர்களுக்கு ஈடா கர்ணன்? – வனபர்வம் பகுதி 251-வனம் சென்றதற்காகப் பீஷ்மர் துரியோதனனைக் கடிந்து கொண்டது; கர்ணன் துரியோதனனிடம் பீஷ்மரைப் பழித்துப் பேசியது; ‘நான்கு பாண்டவர்கள் சேர்ந்து வென்ற பூமியை நான் ஒருவனாகவே வெல்வேன்’ என்று சூளுரைக்கும் கர்ணன், துரியோதனனிடம் அனுமதி பெற்றுக் கிளம்புவது…

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்} கேட்டான், “பிருதையின் {குந்தியின்} உயர் ஆன்ம மகன்கள் கானகத்தில் வாழ்ந்த போது, மனிதர்களில் முதன்மையானவர்களும், வலிமைமிக்க வில்லாளிகளுமான திருதராஷ்டிரனின் மகன்கள் என்ன செய்தார்கள்? சூரியனின் வாரிசான கர்ணனும், பலமிக்கச் சகுனியும், பீஷ்மரும், துரோணரும், கிருபரும் என்ன செய்தார்கள்? இவையனைத்தையும் எனக்கு நீர் சொல்வதே தகும்”

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! பலம்வாய்ந்த மன்னா {ஜனமேஜயா}, இப்படிச் சுயோதனனை {துரியோதனனை} விட்டுப் பாண்டவர்கள் சென்ற பிறகு, பாண்டுவின் மகன்களால் விடுதலை பெற்று அவன் ஹஸ்தினாபுரம் வந்த போது, அந்தத் திருதராஷ்டிரன் மகனிடம் {துரியோதனனிடம்}, பீஷ்மர், “ஓ! குழந்தாய் {துரியோதனா}, அந்த ஆசிரமத்திற்குப் பயணிக்கும் உங்கள் நோக்கம் எனக்குத் திருப்தியைத் தரவில்லை என்பதை நான் உனக்கு முன்பே சொன்னேன். ஆனால் நீ அதைச் செய்தாய். அதன் தொடர்ச்சியாக, ஓ! வீரா, நீ எதிரியால் பலவந்தமாகச் சிறைப்பிடிக்கப்பட்டாய். அறநெறிகளை அறிந்த பாண்டவர்களால் விடுவிக்கப்பட்டாய். இருப்பினும் நீ வெட்கப்படவில்லை. ஓ! காந்தாரியின் மகனே {துரியோதனா}, உனது முன்னிலையிலேயே, ஓ!மன்னா {துரியோதனா}, உன் படைகளுடன் கூடிய சூதனின் மகன் {கர்ணன்} பீதியடைந்து, கந்தர்வர்களுடனான போரில் இருந்து தப்பி ஓடினான்.

ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, ஓ! ஏகாதிபதியின் மகனே {துரியோதனா}, நீ உனது படையுடன் சேர்ந்து துயரத்தோடு அழுதுகொண்டிருந்த போது, உயர் ஆன்ம பாண்டவர்களின் பராக்கிரமத்தையும், ஓ! பலமிக்கக் கரங்கள் கொண்டவனே {துரியோதனா}, சூதனின் தீய மகனான கர்ணனின் பராக்கிரமத்தையும் சாட்சியாகக் கண்டாய். ஓ! மன்னர்களில் சிறந்தவனே {துரியோதனா}, ஆயுத அறிவியலிலோ, வீரத்திலோ, அறநெறிகளிலோ, ஓ! அறத்திற்குத் தன்னை அர்ப்பணித்திருப்பவனே {துரியோதனா}, கர்ணன், பாண்டவர்களின் நாலில் ஒரு பங்குக்கு ஈடாக மாட்டான். எனவே, இந்தக் குலத்தின் நன்மையைக் கருதி, நான் நினைப்பது என்னவென்றால், உயர் ஆன்ம பாண்டவர்களுடன் அமைதியைத் தீர்மானிப்பதே விரும்பத்தக்கது என்பதாகும்” என்றார் {பீஷ்மர்}.

பீஷ்மரால் இப்படிச் சொல்லப்பட்டதும், திருதராஷ்டிரன் மகனான மன்னன் {துரியோதனன்}, உரக்கச் சிரித்தான். பிறகு திடீரெனச் சுபலனின் மகனுடன் {சகுனியுடன்} {அந்த இடத்தைவிட்டு} வெளியேறினான். அவன் சென்று விட்டான் என்பதை அறிந்த வலிமைமிக்க வில்லாளிகளான கர்ணனையும், துச்சாசனனையும் தலைமையாகக் கொண்டவர்கள் அந்த உயர்ந்த பலமிக்கத் திருதராஷ்டிரன் மகனைத் {துரியோதனனைத்} தொடர்ந்து சென்றனர். அவர்கள் அனைவரும் சென்றுவிட்டதைக் கண்ட குருக்களின் பாட்டனான பீஷ்மர், அவமானத்தால் தலையைத் தொங்கப் போட்டபடி, ஓ! மன்னா {ஜனமேஜயா}, தன் மாளிகைக்குச் சென்றார். ஓ! வலிமைமிக்க ஏகாதிபதி {ஜனமேஜயா}, பீஷ்மர் சென்றவுடன், மனிதர்களின் தலைவனான திருதராஷ்டிரன் மகன் {துரியோதனான்}, மீண்டும் அங்கே வந்து, தனது ஆலோசகர்களுடன் {அமைச்சர்களுடன்}, “எது எனக்கு நன்மையைத் தரும்? இன்னும் செய்யப்பட வேண்டியது என்ன? நன்மையை வெளிக்கொணர சிறந்த முறையில் எவ்வாறு செயல்படலாம் என்பதை இன்று விவாதிப்போம்” என்று கலந்தாலோசித்தான்.

கர்ணன், “ஓ! குருவின் மகனே துரியோதனா, நான் சொல்லும் வார்த்தைகளை உனது இதயத்தில் நன்றாகப் பதிந்து வைத்துக் கொள். பீஷ்மர் எப்போதும் நம்மைப் பழித்து, பாண்டவர்களைப் புகழ்கிறார். உன்னிடம் அவர் பகரும் பகைமையால், என்னையும் அவர் வெறுக்கிறார். ஓ! மனிதர்களின் தலைவா {துரியோதனா}, உனது முன்னிலையில் அவர் என்னை எப்போதும் நிந்திக்கிறார். ஓ! பாரதா {துரியோதனா}, பாண்டவர்களைப் புகழ்ந்து, உன்னை நிந்திக்கும் இந்த விஷயத்தில் பீஷ்மரின் இவ்வார்த்தைகளை என்னால் எப்போதும் பொறுக்க முடியாது. ஓ! பகைவர்களை ஒடுக்குபவனே, ஓ! மன்னா {துரியோதனா}, பணியாட்கள், படைகள் மற்றும் ரதங்களோடு எனக்கு அனுமதி அளி. ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, நான் மலைகள், காடுகள், வனங்களுடன் கூடிய இந்த உலகை வெல்வேன். நான்கு பலமிக்கப் பாண்டவர்களால் இந்தப் பூமி வெல்லப்பட்டுள்ளது. சந்தேகமற நான், உனக்காகத் தனியொருவனாக அதை {பூமியை} வெல்வேன். நிந்திக்கத்தகாதவர்களை இகழ்பவரும், புகழத்தகாதவர்களைப் புகழ்பவரும் குருகுலத்தில் இழிந்தவரும், அதீத தீய மனம் கொண்டவருமான பீஷ்மர் அதைக் காணட்டும். இந்நாளில் அவர் எனது பலத்தைக் கண்டு, தன்னையே பழித்துக் கொள்ளட்டும். ஓ! மன்னா {துரியோதனா}, எனக்கு உத்தரவு கொடு. வெற்றி நிச்சயம் உனதாகும். ஓ! ஏகாதிபதி, எனது ஆயுதங்களின் மேல் நான் உனக்கு உறுதி கூறுகிறேன்” என்றான் கர்ணன்.

ஓ! மன்னா {ஜனமேஜயா}, ஓ! பாரதக் குலத்தின் காளையே, கர்ணனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட, அந்த மனிதர்களின் தலைவன் {துரியோதனன்}, உயர்ந்த மகிழ்ச்சியை அடைந்து, கர்ணனிடம், “நான் அருளப்பட்டவனாவேன். பெரும் பலம் நிறைந்த நீ, எனது நலனில் எப்போதும் அக்கறை கொள்வதால், நான் உன்னால் ஆதரிக்கப்பட்டவனானேன். இன்று எனது வாழ்வு கனி கொடுத்திருக்கிறது. ஓ! வீரா, நமது எதிரிகளை அனைவரையும் நீ வீழ்த்த நினைத்திருப்பதால், நீ செல். உனக்கு நன்மையே விளையட்டும்! (நான் என்ன செய்ய வேண்டும் என்று) நீ எனக்குக் கட்டளையிடு” என்றான். ஓ! பகைவர்களை வீழ்த்துபவனே {ஜனமேஜயா}, திருதராஷ்டிரனின் புத்திசாலி மகனால் இப்படிச் சொல்லப்பட்ட கர்ணன், தனது திசைப்பயணத்திற்கு {திக்விஜயத்திற்குத்} தேவையான அனைத்து இன்றியமையாத பொருட்களையும் கேட்டுப் பெற்றான். ஒரு மங்களகரமான சந்திர நாளில், ஒரு மங்களகரமான நேரத்தில், மங்களகரமான தெய்வத்தால் ஆதிக்கம் செலுத்தப்பட்ட நட்சத்திரம் நடந்த போது, அந்த வலிமைமிக்க வில்லாளி, இருபிறப்பாளர்களால் {பிராமணர்களால்} உரிய முறையில் வணங்கப்பட்டு, மங்களகரமான புனிதமான பொருட்களைப் பயன்படுத்திக் குளித்து, வார்த்தைகளால் வணங்கப்பட்டு, அசையும் மற்றும் அசையாத பொருட்களுடன் கூடிய மூவுலகங்களுக்கும் தனது தேரின் சடசடப்பொலி கேட்கும்படி கிளம்பிச் சென்றான்.”

கர்ணனின் திக்விஜயம்? – வனபர்வம் பகுதி 252-பூமியின் நாற்புறமும் உள்ள மன்னர்களையும் வீழ்த்திய கர்ணன் மீண்டும் ஹஸ்தினாபுரம் திரும்பியது; கர்ணனை துரியோதனன் பாராட்டியது; துரியோதனனும், சகுனியும் அடைந்த பெருமிதம்.

வைசம்பாயனர் {ஜனமேஜயன்} சொன்னார், “பிறகு, ஓ! பாரதர்களில் காளையே {ஜனமேஜயா}, அந்தப் பெரும் பலம்வாய்ந்த வில்லாளியான கர்ணன், பெரிய படை சூழ துருபதனின் அழகிய நகரத்தை முற்றுகையிட்டான். அதன்பிறகு நடைபெற்ற கடும்போரில், அந்த வீரனைத் {துருபதனைத்} தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான். ஓ! ஏகாதிபதிகளில் சிறந்தவனே {ஜனமேஜயா} துருபதனை அவனுக்கு {கர்ணனுக்கு} வெள்ளி, தங்கம் மற்றும் ரத்தினங்களைக் காணிக்கையாகக் கொடுக்க வைத்து, அவனைக் கப்பமும் கட்ட வைத்தான்.[1] ஓ! மன்னர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா} அவனை {துருபதனை} அடக்கிய பிறகு, அவனுக்குக் (துருபதனுக்குக்) கீழ் அடங்கியிருந்த பிற இளவரசர்களையும் தனது (கர்ணன்) கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அவர்களையும் கப்பம் கட்ட வைத்தான்

பிறகு வடக்கு நோக்கி சென்ற அவன் அந்தப் பகுதியின் மன்னர்களைத் தனக்கு அடிபணிய வைத்து, பகதத்தனுக்குத் தோல்வியைக் கொடுத்த ராதையின் மகன் {கர்ணன்}, தனது எதிரிகளுடன் போரிட்டுக் கொண்டே மாபெரும் மலையான இமயத்தின் மீது ஏறினான். அங்கே அனைத்துப் பக்கங்களுக்கும் சென்று, இமயத்தில் வசித்த அனைத்து மன்னர்களையும் தனக்கு அடிபணியச் செய்து, அவர்களைக் கப்பம் கட்ட வைத்தான். பிறகு அந்த மலையில் இருந்து இறங்கி, கிழக்கிற்கு விரைந்து, அங்கம், வங்கம், கலிங்கம், மண்டிகம் {சுண்டிகம், மிதிலை ஆகிய இரண்டும் சேர்ந்த பகுதி என்று நினைக்கிறேன்}, மகதம், கர்க்ககண்டம் ஆகிய நாடுகளையும், பின்பு ஆவசீரம், யோத்யம், அஹிக்ஷத்ரம் ஆகிய நாடுகளையும் வீழ்த்தினான்.

(இப்படி) கிழக்குப்பகுதியை வென்ற கர்ணன், பிறகு தன்னை வத்ஸபூமியில் வெளிப்படுத்தினான். வத்ஸபூமியை வென்று, ஆகியோரையும் வென்று அந்த நாடுகள் அனைத்தையும் கப்பம் கட்ட வைத்தான். கேவலம், மிருத்திகாவதி மோஹனம், பத்ராணம், திரிபுரம், கோசலம் ஆகிய நாடுகளையும் வீழ்த்தி, அவர்கள் அனைவரையும் தனக்குக் கப்பம் கட்ட வைத்தான்.

பிறகு தெற்கே சென்ற கர்ணன், (அந்தப் பகுதியில் உள்ள) பலம்வாய்ந்த தேரோட்டிகளை வீழ்த்தினான். தென்னாட்டில் {Dakshinatya = தக்ஷிநாட்யத்தில்} அந்தச் சூதனின் மகன் {கர்ணன்} ருக்மியுடன் மோதலில் நுழைந்தான். கடுமையாகப் போரிட்டபிறகு, ருக்மி, சூதனின் மகனிடம் {கர்ணனிடம்}, “ஓ ஏகாதிபதிகளில் முதன்மையானவனே {கர்ணா}, உனது பலத்தையும் பராக்கிரமத்தையும் கண்டு மகிழ்ந்தேன். உனக்கு நான் தீங்கிழைக்க மாட்டேன். நான் க்ஷத்திரியக் கடமையையே நிறைவேற்றினேன். நீ விரும்பும் தங்க நாணயங்களை மகிழ்ச்சியுடன் உனக்குக் கொடுப்பேன்” என்றான். ருக்மியைச் சந்தித்த பிறகு, கர்ணன், பாண்டியநாட்டிற்கும், ஸ்ரீ என்ற மலைக்கும் சென்றான். காரலன், மன்னன் நீலன், வேணுதாரியின் மகன், மற்றும் தெற்கு திசையில் வாழ்ந்த மன்னர்களில் சிறந்தவர்கள் அனைவருடனும் போரிட்டு அவர்களைக் கப்பம் கட்ட வைத்தான்.

பிறகு சிசுபாலனின் மகனிடம் சென்ற சூதனின் மகன் {கர்ணன்} அவனை வீழ்த்தினான். அந்தப் பெரும் பலம் வாய்ந்தவன் {கர்ணன்}, {சேதி நாட்டுக்கு அருகில் இருந்த} அண்டை நாட்டு ஆட்சியாளர்கள் அனைவரையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான். ஓ! பாரதகுலத்தின் காளையே {ஜனமேஜயா}, அவந்தி நாட்டினரை அடக்கி, அவர்களோடு அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டு, விருஷ்ணிகளைச் சந்தித்த அவன் [2], மேற்குப்பகுதிகளை வென்றான். வருணன் பகுதிக்கு வந்த அவன் அனைத்து யவன, பர்ப்பர {Varvara} மன்னர்களையும் தனக்குக் கப்பம் கட்ட வைத்தான்

கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என அனைத்தையும் வென்ற அந்த வீரன், தனக்கு எந்த உதவியுமின்றி அனைத்து மிலேச்ச, மலைவாசி, பத்ர, ரோகித, அக்னேய, மாலவ நாடுகளையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான். நகனஜிதனைத் தலைமையாகக் கொண்ட பெரும் பலம்வாய்ந்த ரதசாரதிகளை வென்ற அந்தச் சூதனின் மகன் {கர்ணன்}, சசகர்களையும், யவனர்களையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான். இப்படி முழு உலகையும் தனக்கு அடிபணிய வைத்த அந்தப் பலம்வாய்ந்த தேரோட்டியும், மனிதர்களில் புலியுமானவன் {கர்ணன்} ஹஸ்தினாபுரத்திற்கு (திரும்பி) வந்தான்.

தன் தந்தை, தம்பிகள், நண்பர்களுடன் இருந்த மனிதர்களின் தலைவனான திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்}, போர்த்தகுதிகளால் மகுடம் சூடப்பட்டுத் திரும்பி வந்திருந்த அந்தப் பலம்வாய்ந்த வில்லாளியிடம் {கர்ணனிடம்} வந்து அவனுக்கு {கர்ணனுக்கு} உரிய வரவேற்பைக் கொடுத்தான். அந்த மன்னன் {துரியோதனன்}, “பீஷ்மரிடமோ, துரோணரிடமோ, கிருபரிடமோ, பாஹ்லீகரிடமோ பெறாதாதை, நான் உன்னிடம் பெறுகிறேன். நன்மையே உனக்கு நேரட்டும்! நீளமாகப் பேச வேண்டிய தேவை என்ன? ஓ! கர்ணா! எனது வார்த்தைகளைக் கேள்! ஓ! மனிதர்களின் தலைவா {கர்ணா}, உன்னிடமே எனது புகலிடத்தைக் கொண்டிருக்கிறேன் {நீயே எனது அடைக்கலம்}. ஓ! வலிமைமிக்கக் கரங்கள் கொண்டவனே, ஓ மனிதர்களில் புலியே, பாண்டவர்களும், செழுமையால் முடிசூட்டப்பட்ட மன்னர்கள் அனைவரும் சேர்ந்தாலும், உன்னில் பதினாறில் ஒரு பங்குக்குக்கூட அவர்கள் ஈடாக மாட்டார்கள். ஓ! வலிமைமிக்க வில்லாளியே, ஓ! கர்ணா, வஜ்ரத்தைத் தாங்குபவன் {இந்திரன்} அதிதியைக் காண்பது போல, திருதராஷ்டிரரையும், சிறப்புமிக்கக் காந்தாரியையும் பார்” என்றான்.

பிறகு ஓ! மன்னா {ஜனமேஜயா}, பிறகு அந்த ஹஸ்தினாபுர நகரத்தில் ஓ! என்றும் ஐயோ! என்றும் ஆரவாரம் எழுந்தது. ஓ! மனிதர்களின் தலைவா {ஜனமேஜயா}, சில மன்னர்கள் அவனைப் (கர்ணனைப்) புகழவும், சிலர் நிந்திக்கவும், சிலர் அமைதியாகவும் இருக்கவும் செய்தனர். ஓ! ஏகாதிபதிகளில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, இப்படி மலைகள், காடுகள், வானம், கடல்கள், ஏராளமான உயர்ந்த மற்ற தாழ்ந்த நிலப்பரப்புகள், நகரங்கள், தீவுகள் ஆகியவற்றைக் கொண்ட இந்தப் பூமியைக் குறுகிய காலத்தில் {கர்ணன்} வென்றான். ஓ! பூமியின் தலைவா {ஜனமேஜயா}, இப்படியே அனைத்து ஏகாதிபதிகளையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து வற்றாத செல்வத்தை வென்ற சூதனின் மகன் {கர்ணன்} மன்னனின் {துரியோதனன்} முன்னிலையில் தோன்றினான்.

பிறகு, ஓ! எதிரிகளை ஒடுக்குபவனே {ஜனமேஜயா}, அந்த மாளிகையின் உள்ளே சென்ற வந்த வீரன் {கர்ணன்}, காந்தாரியுடன் இருந்த திருதராஷ்டிரனைக் கண்டான். ஓ! மனிதர்களில் புலியே {ஜனமேஜயா}, அறநெறிகள் அறிந்த அவன் {கர்ணன்}, ஒரு மகனைப் போல அவனது {திருதராஷ்டிரன்} பாதத்தைப் பற்றினான். திருதராஷ்டிரனும் அவனைப் பாசத்துடன் அரவணைத்து, பிறகு அவனுக்கு விடை கொடுத்தனுப்பினான். அந்நேரத்திலிருந்து, ஓ! ஏகாதிபதி, ஓ! பாரதா {ஜனமேஜயா}, மன்னன் துரியோதனனும், சுபலனின் மகனான சகுனியும், பிருதையின் {குந்தியின்} மகன்கள் {பாண்டவர்கள்}, போர்க்களத்தில் ஏற்கனவே கர்ணனால் வீழ்த்தப்பட்டதாகவே கருதினர்.”

துரியோதனனின் வைஷ்ணவ வேள்வி? – வனபர்வம் பகுதி 253-ராஜசூய வேள்வி செய்ய விரும்பிய துரியோதனன்; யுதிஷ்டிரனும் திருதராஷ்டிரனும் உயிரோடு இருப்பதால் துரியோதனன் அவ்வேள்வியைச் செய்ய முடியாது என்று புரோகிதர் சொன்னது; ராஜ சூய வேள்விக்கு ஈடான வைஷ்ணவ வேள்வியைத் துரியோதனன் செய்யலாம் என்று சொன்னது; வைஷ்ண வேள்வி செய்ய நடந்த ஏற்பாடுகள்..

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “ஓ! மன்னா, ஓ !மனிதர்களின் தலைவா {ஜனமேஜயா}, எதிரி வீரர்களைக் கொல்பவனான அந்தச் சூதனின் மகன் {கர்ணன்}, துரியோதனனிடம் இவ்வார்த்தைகளைக் கூறினான், “ஓ! கௌரவா, துரியோதனா, நான் சொல்லும் வார்த்தைகளை உன் இதயத்தில் நிறுத்து. ஓ! எதிரிகளை ஒடுக்குபவனே {துரியோதனா}, எனது வார்த்தைகளைக் கேட்ட பின்பு, அனைத்து வழிகளிலும் அதன்படி செயல்படுவதே உனக்குத் தகும். ஓ! ஏகாதிபதிகளில் சிறந்தவனே {துரியோதனா}, ஓ! வீரா, இப்போது இந்தப் பூமி {உனக்கு} எதிரிகளற்று இருக்கிறது. எதிரிகளை அழித்த பிறகு மனோபலம் கொண்ட சக்ரன் {இந்திரன்} எப்படி ஆண்டானோ, அதே போல அவளை {பூமியை} ஆட்சி செய்” என்றான்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இப்படிக் கர்ணனால் சொல்லப்பட்ட மன்னன் அவனிடம் {கர்ணனிடம்} மீண்டும், “ஓ! மனிதர்களில் காளையே, ஒருவனுடன் இணக்கமாக இருந்து, முழுவதும் அவனுடைய நன்மையையே நீ நோக்கமாகக் கொண்டிருக்கிறாய் எனும்போது, உன்னைப் புகலிடமாகக் கொண்ட இந்த ஒருவனால் {துரியோதனனான என்னால்} அடைய முடியாதது எது? இப்போது எனக்கு ஒரு காரியம் இருக்கிறது. அதைக் கேள். வேள்விகளில் முதன்மையான பெரும் ராஜசூய வேள்வி பாண்டவர்களால் செய்யப்பட்டதைக் கண்டதால், எனக்கு (அதே வேள்வியைச் செய்ய) ஒரு விருப்பம் எழுந்திருக்கிறது. ஓ! சூதனின் மகனே {கர்ணா}, எனது விருப்பத்தை நிறைவேற்றுவாயாக” என்றான்.

இப்படிச் சொல்லப்பட்ட கர்ணன் மன்னனிடம், “பூமியிலுள்ள அனைத்து மன்னர்களும் இப்போது உனக்கு அடிபணிந்து இருக்கிறார்கள். எனவே, முதன்மை அந்தணர்களை அழை. ஓ! குருக்களில் சிறந்தவனே {துரியோதனா}, வேள்விக்குத் தேவையான பொருட்களை முறையாகச் சேகரி. ஓ! எதிரிகளை ஒடுக்குபவனே {துரியோதனா}, பரிந்துரைக்கப்பட்ட வேதமறிந்த ரித்விக்குகளைக் கொண்டு உனது சடங்குகளை விதிப்படி கொண்டாடு. ஓ! மன்னா, ஓ பாரதகுலத்தின் காளையே {துரியோதனா}, உனது அந்தப் பெரும் வேள்வி நடக்கும்போது, இறைச்சி, பானம் மற்றும் ஆடம்பரப் பொருட்கள் நிறைந்திருக்கட்டும்” என்றான் {கர்ணன்}.

ஓ! மன்னா {ஜனமேஜயா}, கர்ணனால் இப்படிச் சொல்லப்பட்ட திருதராஷ்டிரன் மகன் புரோகிதரை அழைத்து அவரிடம், “அற்புதமான தக்ஷினைகளுடன் கூடிய வேள்விகளில் சிறந்த ராஜசூய வேள்வியைச் சரியான உரிய முறையில் எனக்காகக் கொண்டாடுங்கள் {நடத்துங்கள்}” என்று கேட்டான். அதற்கு அந்த அந்தணர்களில் சிறந்தவர், மன்னனிடம் {துரியோதனனிடம்}, “ஓ! கௌரவர்களில் முதன்மையானவனே {துரியோதனா}, யுதிஷ்டிரன் வாழ்ந்து கொண்டிருக்கும்போது, ஓ! மன்னர்களின் இளவரசனே {துரியோதனா}, உனது குடும்பத்தில் அந்த வேள்விகளில் சிறந்த வேள்வியைக் கொண்டாடமுடியாது. ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, உன் தந்தை நீண்ட வாழ்நாளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஓ! மன்னர்களில் சிறந்தவனே {துரியோதனா}, அதன் காரணமாகவும் நீ அந்த வேள்வியைச் செய்யக்கூடாது. ஓ! தலைவா {துரியோதனா}, ராஜசூயத்துக்கு ஈடான மற்றுமொரு பெருவேள்வி இருக்கிறது. ஓ! மன்னர்களில் முதன்மையானவனே {துரியோதனா}, நீ அந்த வேள்வியைச் செய்யலாம்.

எனது இவ்வார்த்தைகளைக் கேள். ஓ! மன்னா {துரியோதனா}, பூமியில் உள்ள இந்த ஆட்சியாளர்கள் எல்லாம் உனக்குக் கப்பம் கட்டுபவர்களாக இருப்பதால், சுத்தமாகவும் சுத்தமல்லாததாகவும் தங்கத்தைக் கப்பமாகக் கொடுப்பார்கள். அந்தத் தங்கங்களைக் கொண்டு, ஓ! ஏகாதிபதிகளில் சிறந்தவனே {துரியோதனா}, இப்போது ஒரு (வேள்வி) கலப்பையைச் செய். ஓ! பாரதா {துரியோதனா}, வேள்வி செய்யும் இடத்தை அந்தக் கலப்பையால் உழு. ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, உரிய சடங்குகளுடன், எந்த இடையூறும் இல்லாமல், மந்திரங்களால் புனிதமாக்கப்பட்ட சுத்தமான உணவுகளுடன் {உழப்பட்ட} அந்த இடத்தில் வேள்வி நடைபெறட்டும். அறம்சார்ந்த மனிதர்களுக்குத் தகுந்த அவ்வேள்வியின் பெயர் வைஷ்ணவம் ஆகும். பழைமையான விஷ்ணுவைத் தவிர வேறு எவரும் அவ்வேள்வியை இதற்கு முன்னால் செய்ததில்லை. இந்தப் பெரும் பிரம்மாண்டமான வேள்வி, வேள்விகளில் சிறந்த ராஜசூய வேள்விக்குச் சமமானது ஆகும். மேலும், அது {வேள்வி} நம்மை விரும்புகிறது. அது உனது நன்மைக்காகவும் கொண்டாடப்படட்டும். மேலும் அது எந்த இடையூறும் இல்லாமல் கொண்டாடக்கூடியதாகும். (இதைச் செய்வதால்) உனது விருப்பங்கள் நிறைவேறும்” என்றார்.

இப்படி அந்த அந்தணர்களால் சொல்லப்பட்ட திருதராஷ்டிரன் மகனான அம்மன்னன் {துரியோதனன்}, கர்ணன், தனது தம்பிகள் மற்றும் சுபலனனின் மகன் {சகுனி} ஆகியோரிடம், “சந்தேகத்திற்கு அப்பால், அந்தணர்களின் வார்த்தைகள் எனக்கு முற்றிலும் பிடித்திருக்கிறது. அவற்றால் நீங்களும் மகிழ்ந்தீர்களென்றால், தாமதிக்காமல் அதை வெளிப்படுத்துங்கள்” என்றான். இப்படிக் கோரப்பட்ட அவர்கள் மன்னனிடம் {துரியோதனனிடம்}, “அப்படியே ஆகட்டும்” என்று சொன்னார்கள். பிறகு மன்னன் ஒருவர் பின் ஒருவராக அவரவர்க்கு உரிய பணிகளில் அமர்த்தினான். சிற்பிகளை அழைத்து (வேள்வி) கலப்பையைச் செய்யச் சொன்னான். ஓ! மன்னர்களில் சிறந்தவனே {ஜனமேஜயா}, செய்யப்பட வேண்டும் என்று கட்டளையிடப்பட்டவையெல்லாம் ஒன்றுன்பின் ஒன்றாக நிறைவேற்றப்பட்டது. –

துரியோதனனின் வைஷ்ணவ வேள்வி? – வனபர்வம் பகுதி 253-ராஜசூய வேள்வி செய்ய விரும்பிய துரியோதனன்; யுதிஷ்டிரனும் திருதராஷ்டிரனும் உயிரோடு இருப்பதால் துரியோதனன் அவ்வேள்வியைச் செய்ய முடியாது என்று புரோகிதர் சொன்னது; ராஜ சூய வேள்விக்கு ஈடான வைஷ்ணவ வேள்வியைத் துரியோதனன் செய்யலாம் என்று சொன்னது; வைஷ்ண வேள்வி செய்ய நடந்த ஏற்பாடுகள்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “ஓ! மன்னா, ஓ !மனிதர்களின் தலைவா {ஜனமேஜயா}, எதிரி வீரர்களைக் கொல்பவனான அந்தச் சூதனின் மகன் {கர்ணன்}, துரியோதனனிடம் இவ்வார்த்தைகளைக் கூறினான், “ஓ! கௌரவா, துரியோதனா, நான் சொல்லும் வார்த்தைகளை உன் இதயத்தில் நிறுத்து. ஓ! எதிரிகளை ஒடுக்குபவனே {துரியோதனா}, எனது வார்த்தைகளைக் கேட்ட பின்பு, அனைத்து வழிகளிலும் அதன்படி செயல்படுவதே உனக்குத் தகும். ஓ! ஏகாதிபதிகளில் சிறந்தவனே {துரியோதனா}, ஓ! வீரா, இப்போது இந்தப் பூமி {உனக்கு} எதிரிகளற்று இருக்கிறது. எதிரிகளை அழித்த பிறகு மனோபலம் கொண்ட சக்ரன் {இந்திரன்} எப்படி ஆண்டானோ, அதே போல அவளை {பூமியை} ஆட்சி செய்” என்றான்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இப்படிக் கர்ணனால் சொல்லப்பட்ட மன்னன் அவனிடம் {கர்ணனிடம்} மீண்டும், “ஓ! மனிதர்களில் காளையே, ஒருவனுடன் இணக்கமாக இருந்து, முழுவதும் அவனுடைய நன்மையையே நீ நோக்கமாகக் கொண்டிருக்கிறாய் எனும்போது, உன்னைப் புகலிடமாகக் கொண்ட இந்த ஒருவனால் {துரியோதனனான என்னால்} அடைய முடியாதது எது? இப்போது எனக்கு ஒரு காரியம் இருக்கிறது. அதைக் கேள். வேள்விகளில் முதன்மையான பெரும் ராஜசூய வேள்வி பாண்டவர்களால் செய்யப்பட்டதைக் கண்டதால், எனக்கு (அதே வேள்வியைச் செய்ய) ஒரு விருப்பம் எழுந்திருக்கிறது. ஓ! சூதனின் மகனே {கர்ணா}, எனது விருப்பத்தை நிறைவேற்றுவாயாக” என்றான்.

இப்படிச் சொல்லப்பட்ட கர்ணன் மன்னனிடம், “பூமியிலுள்ள அனைத்து மன்னர்களும் இப்போது உனக்கு அடிபணிந்து இருக்கிறார்கள். எனவே, முதன்மை அந்தணர்களை அழை. ஓ! குருக்களில் சிறந்தவனே {துரியோதனா}, வேள்விக்குத் தேவையான பொருட்களை முறையாகச் சேகரி. ஓ! எதிரிகளை ஒடுக்குபவனே {துரியோதனா}, பரிந்துரைக்கப்பட்ட வேதமறிந்த ரித்விக்குகளைக் கொண்டு உனது சடங்குகளை விதிப்படி கொண்டாடு. ஓ! மன்னா, ஓ பாரதகுலத்தின் காளையே {துரியோதனா}, உனது அந்தப் பெரும் வேள்வி நடக்கும்போது, இறைச்சி, பானம் மற்றும் ஆடம்பரப் பொருட்கள் நிறைந்திருக்கட்டும்” என்றான் {கர்ணன்}.

ஓ! மன்னா {ஜனமேஜயா}, கர்ணனால் இப்படிச் சொல்லப்பட்ட திருதராஷ்டிரன் மகன் புரோகிதரை அழைத்து அவரிடம், “அற்புதமான தக்ஷினைகளுடன் கூடிய வேள்விகளில் சிறந்த ராஜசூய வேள்வியைச் சரியான உரிய முறையில் எனக்காகக் கொண்டாடுங்கள் {நடத்துங்கள்}” என்று கேட்டான். அதற்கு அந்த அந்தணர்களில் சிறந்தவர், மன்னனிடம் {துரியோதனனிடம்}, “ஓ! கௌரவர்களில் முதன்மையானவனே {துரியோதனா}, யுதிஷ்டிரன் வாழ்ந்து கொண்டிருக்கும்போது, ஓ! மன்னர்களின் இளவரசனே {துரியோதனா}, உனது குடும்பத்தில் அந்த வேள்விகளில் சிறந்த வேள்வியைக் கொண்டாடமுடியாது. ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, உன் தந்தை நீண்ட வாழ்நாளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஓ! மன்னர்களில் சிறந்தவனே {துரியோதனா}, அதன் காரணமாகவும் நீ அந்த வேள்வியைச் செய்யக்கூடாது. ஓ! தலைவா {துரியோதனா}, ராஜசூயத்துக்கு ஈடான மற்றுமொரு பெருவேள்வி இருக்கிறது. ஓ! மன்னர்களில் முதன்மையானவனே {துரியோதனா}, நீ அந்த வேள்வியைச் செய்யலாம்.

எனது இவ்வார்த்தைகளைக் கேள். ஓ! மன்னா {துரியோதனா}, பூமியில் உள்ள இந்த ஆட்சியாளர்கள் எல்லாம் உனக்குக் கப்பம் கட்டுபவர்களாக இருப்பதால், சுத்தமாகவும் சுத்தமல்லாததாகவும் தங்கத்தைக் கப்பமாகக் கொடுப்பார்கள். அந்தத் தங்கங்களைக் கொண்டு, ஓ! ஏகாதிபதிகளில் சிறந்தவனே {துரியோதனா}, இப்போது ஒரு (வேள்வி) கலப்பையைச் செய். ஓ! பாரதா {துரியோதனா}, வேள்வி செய்யும் இடத்தை அந்தக் கலப்பையால் உழு. ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, உரிய சடங்குகளுடன், எந்த இடையூறும் இல்லாமல், மந்திரங்களால் புனிதமாக்கப்பட்ட சுத்தமான உணவுகளுடன் {உழப்பட்ட} அந்த இடத்தில் வேள்வி நடைபெறட்டும். அறம்சார்ந்த மனிதர்களுக்குத் தகுந்த அவ்வேள்வியின் பெயர் வைஷ்ணவம் ஆகும். பழைமையான விஷ்ணுவைத் தவிர வேறு எவரும் அவ்வேள்வியை இதற்கு முன்னால் செய்ததில்லை. இந்தப் பெரும் பிரம்மாண்டமான வேள்வி, வேள்விகளில் சிறந்த ராஜசூய வேள்விக்குச் சமமானது ஆகும். மேலும், அது {வேள்வி} நம்மை விரும்புகிறது. அது உனது நன்மைக்காகவும் கொண்டாடப்படட்டும். மேலும் அது எந்த இடையூறும் இல்லாமல் கொண்டாடக்கூடியதாகும். (இதைச் செய்வதால்) உனது விருப்பங்கள் நிறைவேறும்” என்றார்.

இப்படி அந்த அந்தணர்களால் சொல்லப்பட்ட திருதராஷ்டிரன் மகனான அம்மன்னன் {துரியோதனன்}, கர்ணன், தனது தம்பிகள் மற்றும் சுபலனனின் மகன் {சகுனி} ஆகியோரிடம், “சந்தேகத்திற்கு அப்பால், அந்தணர்களின் வார்த்தைகள் எனக்கு முற்றிலும் பிடித்திருக்கிறது. அவற்றால் நீங்களும் மகிழ்ந்தீர்களென்றால், தாமதிக்காமல் அதை வெளிப்படுத்துங்கள்” என்றான். இப்படிக் கோரப்பட்ட அவர்கள் மன்னனிடம் {துரியோதனனிடம்}, “அப்படியே ஆகட்டும்” என்று சொன்னார்கள். பிறகு மன்னன் ஒருவர் பின் ஒருவராக அவரவர்க்கு உரிய பணிகளில் அமர்த்தினான். சிற்பிகளை அழைத்து (வேள்வி) கலப்பையைச் செய்யச் சொன்னான். ஓ! மன்னர்களில் சிறந்தவனே {ஜனமேஜயா}, செய்யப்பட வேண்டும் என்று கட்டளையிடப்பட்டவையெல்லாம் ஒன்றுன்பின் ஒன்றாக நிறைவேற்றப்பட்டது. 

துரியோதனனின் வைஷ்ணவ வேள்வி? – வனபர்வம் பகுதி 253-ராஜசூய வேள்வி செய்ய விரும்பிய துரியோதனன்; யுதிஷ்டிரனும் திருதராஷ்டிரனும் உயிரோடு இருப்பதால் துரியோதனன் அவ்வேள்வியைச் செய்ய முடியாது என்று புரோகிதர் சொன்னது; ராஜ சூய வேள்விக்கு ஈடான வைஷ்ணவ வேள்வியைத் துரியோதனன் செய்யலாம் என்று சொன்னது; வைஷ்ண வேள்வி செய்ய நடந்த ஏற்பாடுகள்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “ஓ! மன்னா, ஓ !மனிதர்களின் தலைவா {ஜனமேஜயா}, எதிரி வீரர்களைக் கொல்பவனான அந்தச் சூதனின் மகன் {கர்ணன்}, துரியோதனனிடம் இவ்வார்த்தைகளைக் கூறினான், “ஓ! கௌரவா, துரியோதனா, நான் சொல்லும் வார்த்தைகளை உன் இதயத்தில் நிறுத்து. ஓ! எதிரிகளை ஒடுக்குபவனே {துரியோதனா}, எனது வார்த்தைகளைக் கேட்ட பின்பு, அனைத்து வழிகளிலும் அதன்படி செயல்படுவதே உனக்குத் தகும். ஓ! ஏகாதிபதிகளில் சிறந்தவனே {துரியோதனா}, ஓ! வீரா, இப்போது இந்தப் பூமி {உனக்கு} எதிரிகளற்று இருக்கிறது. எதிரிகளை அழித்த பிறகு மனோபலம் கொண்ட சக்ரன் {இந்திரன்} எப்படி ஆண்டானோ, அதே போல அவளை {பூமியை} ஆட்சி செய்” என்றான்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இப்படிக் கர்ணனால் சொல்லப்பட்ட மன்னன் அவனிடம் {கர்ணனிடம்} மீண்டும், “ஓ! மனிதர்களில் காளையே, ஒருவனுடன் இணக்கமாக இருந்து, முழுவதும் அவனுடைய நன்மையையே நீ நோக்கமாகக் கொண்டிருக்கிறாய் எனும்போது, உன்னைப் புகலிடமாகக் கொண்ட இந்த ஒருவனால் {துரியோதனனான என்னால்} அடைய முடியாதது எது? இப்போது எனக்கு ஒரு காரியம் இருக்கிறது. அதைக் கேள். வேள்விகளில் முதன்மையான பெரும் ராஜசூய வேள்வி பாண்டவர்களால் செய்யப்பட்டதைக் கண்டதால், எனக்கு (அதே வேள்வியைச் செய்ய) ஒரு விருப்பம் எழுந்திருக்கிறது. ஓ! சூதனின் மகனே {கர்ணா}, எனது விருப்பத்தை நிறைவேற்றுவாயாக” என்றான்.

இப்படிச் சொல்லப்பட்ட கர்ணன் மன்னனிடம், “பூமியிலுள்ள அனைத்து மன்னர்களும் இப்போது உனக்கு அடிபணிந்து இருக்கிறார்கள். எனவே, முதன்மை அந்தணர்களை அழை. ஓ! குருக்களில் சிறந்தவனே {துரியோதனா}, வேள்விக்குத் தேவையான பொருட்களை முறையாகச் சேகரி. ஓ! எதிரிகளை ஒடுக்குபவனே {துரியோதனா}, பரிந்துரைக்கப்பட்ட வேதமறிந்த ரித்விக்குகளைக் கொண்டு உனது சடங்குகளை விதிப்படி கொண்டாடு. ஓ! மன்னா, ஓ பாரதகுலத்தின் காளையே {துரியோதனா}, உனது அந்தப் பெரும் வேள்வி நடக்கும்போது, இறைச்சி, பானம் மற்றும் ஆடம்பரப் பொருட்கள் நிறைந்திருக்கட்டும்” என்றான் {கர்ணன்}.

ஓ! மன்னா {ஜனமேஜயா}, கர்ணனால் இப்படிச் சொல்லப்பட்ட திருதராஷ்டிரன் மகன் புரோகிதரை அழைத்து அவரிடம், “அற்புதமான தக்ஷினைகளுடன் கூடிய வேள்விகளில் சிறந்த ராஜசூய வேள்வியைச் சரியான உரிய முறையில் எனக்காகக் கொண்டாடுங்கள் {நடத்துங்கள்}” என்று கேட்டான். அதற்கு அந்த அந்தணர்களில் சிறந்தவர், மன்னனிடம் {துரியோதனனிடம்}, “ஓ! கௌரவர்களில் முதன்மையானவனே {துரியோதனா}, யுதிஷ்டிரன் வாழ்ந்து கொண்டிருக்கும்போது, ஓ! மன்னர்களின் இளவரசனே {துரியோதனா}, உனது குடும்பத்தில் அந்த வேள்விகளில் சிறந்த வேள்வியைக் கொண்டாடமுடியாது. ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, உன் தந்தை நீண்ட வாழ்நாளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஓ! மன்னர்களில் சிறந்தவனே {துரியோதனா}, அதன் காரணமாகவும் நீ அந்த வேள்வியைச் செய்யக்கூடாது. ஓ! தலைவா {துரியோதனா}, ராஜசூயத்துக்கு ஈடான மற்றுமொரு பெருவேள்வி இருக்கிறது. ஓ! மன்னர்களில் முதன்மையானவனே {துரியோதனா}, நீ அந்த வேள்வியைச் செய்யலாம்.

எனது இவ்வார்த்தைகளைக் கேள். ஓ! மன்னா {துரியோதனா}, பூமியில் உள்ள இந்த ஆட்சியாளர்கள் எல்லாம் உனக்குக் கப்பம் கட்டுபவர்களாக இருப்பதால், சுத்தமாகவும் சுத்தமல்லாததாகவும் தங்கத்தைக் கப்பமாகக் கொடுப்பார்கள். அந்தத் தங்கங்களைக் கொண்டு, ஓ! ஏகாதிபதிகளில் சிறந்தவனே {துரியோதனா}, இப்போது ஒரு (வேள்வி) கலப்பையைச் செய். ஓ! பாரதா {துரியோதனா}, வேள்வி செய்யும் இடத்தை அந்தக் கலப்பையால் உழு. ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, உரிய சடங்குகளுடன், எந்த இடையூறும் இல்லாமல், மந்திரங்களால் புனிதமாக்கப்பட்ட சுத்தமான உணவுகளுடன் {உழப்பட்ட} அந்த இடத்தில் வேள்வி நடைபெறட்டும். அறம்சார்ந்த மனிதர்களுக்குத் தகுந்த அவ்வேள்வியின் பெயர் வைஷ்ணவம் ஆகும். பழைமையான விஷ்ணுவைத் தவிர வேறு எவரும் அவ்வேள்வியை இதற்கு முன்னால் செய்ததில்லை. இந்தப் பெரும் பிரம்மாண்டமான வேள்வி, வேள்விகளில் சிறந்த ராஜசூய வேள்விக்குச் சமமானது ஆகும். மேலும், அது {வேள்வி} நம்மை விரும்புகிறது. அது உனது நன்மைக்காகவும் கொண்டாடப்படட்டும். மேலும் அது எந்த இடையூறும் இல்லாமல் கொண்டாடக்கூடியதாகும். (இதைச் செய்வதால்) உனது விருப்பங்கள் நிறைவேறும்” என்றார்.

இப்படி அந்த அந்தணர்களால் சொல்லப்பட்ட திருதராஷ்டிரன் மகனான அம்மன்னன் {துரியோதனன்}, கர்ணன், தனது தம்பிகள் மற்றும் சுபலனனின் மகன் {சகுனி} ஆகியோரிடம், “சந்தேகத்திற்கு அப்பால், அந்தணர்களின் வார்த்தைகள் எனக்கு முற்றிலும் பிடித்திருக்கிறது. அவற்றால் நீங்களும் மகிழ்ந்தீர்களென்றால், தாமதிக்காமல் அதை வெளிப்படுத்துங்கள்” என்றான். இப்படிக் கோரப்பட்ட அவர்கள் மன்னனிடம் {துரியோதனனிடம்}, “அப்படியே ஆகட்டும்” என்று சொன்னார்கள். பிறகு மன்னன் ஒருவர் பின் ஒருவராக அவரவர்க்கு உரிய பணிகளில் அமர்த்தினான். சிற்பிகளை அழைத்து (வேள்வி) கலப்பையைச் செய்யச் சொன்னான். ஓ! மன்னர்களில் சிறந்தவனே {ஜனமேஜயா}, செய்யப்பட வேண்டும் என்று கட்டளையிடப்பட்டவையெல்லாம் ஒன்றுன்பின் ஒன்றாக நிறைவேற்றப்பட்டது. 

துரியோதனனின் வைஷ்ணவ வேள்வி? – வனபர்வம் பகுதி 253-ராஜசூய வேள்வி செய்ய விரும்பிய துரியோதனன்; யுதிஷ்டிரனும் திருதராஷ்டிரனும் உயிரோடு இருப்பதால் துரியோதனன் அவ்வேள்வியைச் செய்ய முடியாது என்று புரோகிதர் சொன்னது; ராஜ சூய வேள்விக்கு ஈடான வைஷ்ணவ வேள்வியைத் துரியோதனன் செய்யலாம் என்று சொன்னது; வைஷ்ண வேள்வி செய்ய நடந்த ஏற்பாடுகள்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “ஓ! மன்னா, ஓ !மனிதர்களின் தலைவா {ஜனமேஜயா}, எதிரி வீரர்களைக் கொல்பவனான அந்தச் சூதனின் மகன் {கர்ணன்}, துரியோதனனிடம் இவ்வார்த்தைகளைக் கூறினான், “ஓ! கௌரவா, துரியோதனா, நான் சொல்லும் வார்த்தைகளை உன் இதயத்தில் நிறுத்து. ஓ! எதிரிகளை ஒடுக்குபவனே {துரியோதனா}, எனது வார்த்தைகளைக் கேட்ட பின்பு, அனைத்து வழிகளிலும் அதன்படி செயல்படுவதே உனக்குத் தகும். ஓ! ஏகாதிபதிகளில் சிறந்தவனே {துரியோதனா}, ஓ! வீரா, இப்போது இந்தப் பூமி {உனக்கு} எதிரிகளற்று இருக்கிறது. எதிரிகளை அழித்த பிறகு மனோபலம் கொண்ட சக்ரன் {இந்திரன்} எப்படி ஆண்டானோ, அதே போல அவளை {பூமியை} ஆட்சி செய்” என்றான்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இப்படிக் கர்ணனால் சொல்லப்பட்ட மன்னன் அவனிடம் {கர்ணனிடம்} மீண்டும், “ஓ! மனிதர்களில் காளையே, ஒருவனுடன் இணக்கமாக இருந்து, முழுவதும் அவனுடைய நன்மையையே நீ நோக்கமாகக் கொண்டிருக்கிறாய் எனும்போது, உன்னைப் புகலிடமாகக் கொண்ட இந்த ஒருவனால் {துரியோதனனான என்னால்} அடைய முடியாதது எது? இப்போது எனக்கு ஒரு காரியம் இருக்கிறது. அதைக் கேள். வேள்விகளில் முதன்மையான பெரும் ராஜசூய வேள்வி பாண்டவர்களால் செய்யப்பட்டதைக் கண்டதால், எனக்கு (அதே வேள்வியைச் செய்ய) ஒரு விருப்பம் எழுந்திருக்கிறது. ஓ! சூதனின் மகனே {கர்ணா}, எனது விருப்பத்தை நிறைவேற்றுவாயாக” என்றான்.

இப்படிச் சொல்லப்பட்ட கர்ணன் மன்னனிடம், “பூமியிலுள்ள அனைத்து மன்னர்களும் இப்போது உனக்கு அடிபணிந்து இருக்கிறார்கள். எனவே, முதன்மை அந்தணர்களை அழை. ஓ! குருக்களில் சிறந்தவனே {துரியோதனா}, வேள்விக்குத் தேவையான பொருட்களை முறையாகச் சேகரி. ஓ! எதிரிகளை ஒடுக்குபவனே {துரியோதனா}, பரிந்துரைக்கப்பட்ட வேதமறிந்த ரித்விக்குகளைக் கொண்டு உனது சடங்குகளை விதிப்படி கொண்டாடு. ஓ! மன்னா, ஓ பாரதகுலத்தின் காளையே {துரியோதனா}, உனது அந்தப் பெரும் வேள்வி நடக்கும்போது, இறைச்சி, பானம் மற்றும் ஆடம்பரப் பொருட்கள் நிறைந்திருக்கட்டும்” என்றான் {கர்ணன்}.

ஓ! மன்னா {ஜனமேஜயா}, கர்ணனால் இப்படிச் சொல்லப்பட்ட திருதராஷ்டிரன் மகன் புரோகிதரை அழைத்து அவரிடம், “அற்புதமான தக்ஷினைகளுடன் கூடிய வேள்விகளில் சிறந்த ராஜசூய வேள்வியைச் சரியான உரிய முறையில் எனக்காகக் கொண்டாடுங்கள் {நடத்துங்கள்}” என்று கேட்டான். அதற்கு அந்த அந்தணர்களில் சிறந்தவர், மன்னனிடம் {துரியோதனனிடம்}, “ஓ! கௌரவர்களில் முதன்மையானவனே {துரியோதனா}, யுதிஷ்டிரன் வாழ்ந்து கொண்டிருக்கும்போது, ஓ! மன்னர்களின் இளவரசனே {துரியோதனா}, உனது குடும்பத்தில் அந்த வேள்விகளில் சிறந்த வேள்வியைக் கொண்டாடமுடியாது. ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, உன் தந்தை நீண்ட வாழ்நாளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஓ! மன்னர்களில் சிறந்தவனே {துரியோதனா}, அதன் காரணமாகவும் நீ அந்த வேள்வியைச் செய்யக்கூடாது. ஓ! தலைவா {துரியோதனா}, ராஜசூயத்துக்கு ஈடான மற்றுமொரு பெருவேள்வி இருக்கிறது. ஓ! மன்னர்களில் முதன்மையானவனே {துரியோதனா}, நீ அந்த வேள்வியைச் செய்யலாம்.

எனது இவ்வார்த்தைகளைக் கேள். ஓ! மன்னா {துரியோதனா}, பூமியில் உள்ள இந்த ஆட்சியாளர்கள் எல்லாம் உனக்குக் கப்பம் கட்டுபவர்களாக இருப்பதால், சுத்தமாகவும் சுத்தமல்லாததாகவும் தங்கத்தைக் கப்பமாகக் கொடுப்பார்கள். அந்தத் தங்கங்களைக் கொண்டு, ஓ! ஏகாதிபதிகளில் சிறந்தவனே {துரியோதனா}, இப்போது ஒரு (வேள்வி) கலப்பையைச் செய். ஓ! பாரதா {துரியோதனா}, வேள்வி செய்யும் இடத்தை அந்தக் கலப்பையால் உழு. ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, உரிய சடங்குகளுடன், எந்த இடையூறும் இல்லாமல், மந்திரங்களால் புனிதமாக்கப்பட்ட சுத்தமான உணவுகளுடன் {உழப்பட்ட} அந்த இடத்தில் வேள்வி நடைபெறட்டும். அறம்சார்ந்த மனிதர்களுக்குத் தகுந்த அவ்வேள்வியின் பெயர் வைஷ்ணவம் ஆகும். பழைமையான விஷ்ணுவைத் தவிர வேறு எவரும் அவ்வேள்வியை இதற்கு முன்னால் செய்ததில்லை. இந்தப் பெரும் பிரம்மாண்டமான வேள்வி, வேள்விகளில் சிறந்த ராஜசூய வேள்விக்குச் சமமானது ஆகும். மேலும், அது {வேள்வி} நம்மை விரும்புகிறது. அது உனது நன்மைக்காகவும் கொண்டாடப்படட்டும். மேலும் அது எந்த இடையூறும் இல்லாமல் கொண்டாடக்கூடியதாகும். (இதைச் செய்வதால்) உனது விருப்பங்கள் நிறைவேறும்” என்றார்.

இப்படி அந்த அந்தணர்களால் சொல்லப்பட்ட திருதராஷ்டிரன் மகனான அம்மன்னன் {துரியோதனன்}, கர்ணன், தனது தம்பிகள் மற்றும் சுபலனனின் மகன் {சகுனி} ஆகியோரிடம், “சந்தேகத்திற்கு அப்பால், அந்தணர்களின் வார்த்தைகள் எனக்கு முற்றிலும் பிடித்திருக்கிறது. அவற்றால் நீங்களும் மகிழ்ந்தீர்களென்றால், தாமதிக்காமல் அதை வெளிப்படுத்துங்கள்” என்றான். இப்படிக் கோரப்பட்ட அவர்கள் மன்னனிடம் {துரியோதனனிடம்}, “அப்படியே ஆகட்டும்” என்று சொன்னார்கள். பிறகு மன்னன் ஒருவர் பின் ஒருவராக அவரவர்க்கு உரிய பணிகளில் அமர்த்தினான். சிற்பிகளை அழைத்து (வேள்வி) கலப்பையைச் செய்யச் சொன்னான். ஓ! மன்னர்களில் சிறந்தவனே {ஜனமேஜயா}, செய்யப்பட வேண்டும் என்று கட்டளையிடப்பட்டவையெல்லாம் ஒன்றுன்பின் ஒன்றாக நிறைவேற்றப்பட்டது. 

துரியோதனனின் வைஷ்ணவ வேள்வி? – வனபர்வம் பகுதி 253-ராஜசூய வேள்வி செய்ய விரும்பிய துரியோதனன்; யுதிஷ்டிரனும் திருதராஷ்டிரனும் உயிரோடு இருப்பதால் துரியோதனன் அவ்வேள்வியைச் செய்ய முடியாது என்று புரோகிதர் சொன்னது; ராஜ சூய வேள்விக்கு ஈடான வைஷ்ணவ வேள்வியைத் துரியோதனன் செய்யலாம் என்று சொன்னது; வைஷ்ண வேள்வி செய்ய நடந்த ஏற்பாடுகள்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “ஓ! மன்னா, ஓ !மனிதர்களின் தலைவா {ஜனமேஜயா}, எதிரி வீரர்களைக் கொல்பவனான அந்தச் சூதனின் மகன் {கர்ணன்}, துரியோதனனிடம் இவ்வார்த்தைகளைக் கூறினான், “ஓ! கௌரவா, துரியோதனா, நான் சொல்லும் வார்த்தைகளை உன் இதயத்தில் நிறுத்து. ஓ! எதிரிகளை ஒடுக்குபவனே {துரியோதனா}, எனது வார்த்தைகளைக் கேட்ட பின்பு, அனைத்து வழிகளிலும் அதன்படி செயல்படுவதே உனக்குத் தகும். ஓ! ஏகாதிபதிகளில் சிறந்தவனே {துரியோதனா}, ஓ! வீரா, இப்போது இந்தப் பூமி {உனக்கு} எதிரிகளற்று இருக்கிறது. எதிரிகளை அழித்த பிறகு மனோபலம் கொண்ட சக்ரன் {இந்திரன்} எப்படி ஆண்டானோ, அதே போல அவளை {பூமியை} ஆட்சி செய்” என்றான்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இப்படிக் கர்ணனால் சொல்லப்பட்ட மன்னன் அவனிடம் {கர்ணனிடம்} மீண்டும், “ஓ! மனிதர்களில் காளையே, ஒருவனுடன் இணக்கமாக இருந்து, முழுவதும் அவனுடைய நன்மையையே நீ நோக்கமாகக் கொண்டிருக்கிறாய் எனும்போது, உன்னைப் புகலிடமாகக் கொண்ட இந்த ஒருவனால் {துரியோதனனான என்னால்} அடைய முடியாதது எது? இப்போது எனக்கு ஒரு காரியம் இருக்கிறது. அதைக் கேள். வேள்விகளில் முதன்மையான பெரும் ராஜசூய வேள்வி பாண்டவர்களால் செய்யப்பட்டதைக் கண்டதால், எனக்கு (அதே வேள்வியைச் செய்ய) ஒரு விருப்பம் எழுந்திருக்கிறது. ஓ! சூதனின் மகனே {கர்ணா}, எனது விருப்பத்தை நிறைவேற்றுவாயாக” என்றான்.

இப்படிச் சொல்லப்பட்ட கர்ணன் மன்னனிடம், “பூமியிலுள்ள அனைத்து மன்னர்களும் இப்போது உனக்கு அடிபணிந்து இருக்கிறார்கள். எனவே, முதன்மை அந்தணர்களை அழை. ஓ! குருக்களில் சிறந்தவனே {துரியோதனா}, வேள்விக்குத் தேவையான பொருட்களை முறையாகச் சேகரி. ஓ! எதிரிகளை ஒடுக்குபவனே {துரியோதனா}, பரிந்துரைக்கப்பட்ட வேதமறிந்த ரித்விக்குகளைக் கொண்டு உனது சடங்குகளை விதிப்படி கொண்டாடு. ஓ! மன்னா, ஓ பாரதகுலத்தின் காளையே {துரியோதனா}, உனது அந்தப் பெரும் வேள்வி நடக்கும்போது, இறைச்சி, பானம் மற்றும் ஆடம்பரப் பொருட்கள் நிறைந்திருக்கட்டும்” என்றான் {கர்ணன்}.

ஓ! மன்னா {ஜனமேஜயா}, கர்ணனால் இப்படிச் சொல்லப்பட்ட திருதராஷ்டிரன் மகன் புரோகிதரை அழைத்து அவரிடம், “அற்புதமான தக்ஷினைகளுடன் கூடிய வேள்விகளில் சிறந்த ராஜசூய வேள்வியைச் சரியான உரிய முறையில் எனக்காகக் கொண்டாடுங்கள் {நடத்துங்கள்}” என்று கேட்டான். அதற்கு அந்த அந்தணர்களில் சிறந்தவர், மன்னனிடம் {துரியோதனனிடம்}, “ஓ! கௌரவர்களில் முதன்மையானவனே {துரியோதனா}, யுதிஷ்டிரன் வாழ்ந்து கொண்டிருக்கும்போது, ஓ! மன்னர்களின் இளவரசனே {துரியோதனா}, உனது குடும்பத்தில் அந்த வேள்விகளில் சிறந்த வேள்வியைக் கொண்டாடமுடியாது. ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, உன் தந்தை நீண்ட வாழ்நாளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஓ! மன்னர்களில் சிறந்தவனே {துரியோதனா}, அதன் காரணமாகவும் நீ அந்த வேள்வியைச் செய்யக்கூடாது. ஓ! தலைவா {துரியோதனா}, ராஜசூயத்துக்கு ஈடான மற்றுமொரு பெருவேள்வி இருக்கிறது. ஓ! மன்னர்களில் முதன்மையானவனே {துரியோதனா}, நீ அந்த வேள்வியைச் செய்யலாம்.

எனது இவ்வார்த்தைகளைக் கேள். ஓ! மன்னா {துரியோதனா}, பூமியில் உள்ள இந்த ஆட்சியாளர்கள் எல்லாம் உனக்குக் கப்பம் கட்டுபவர்களாக இருப்பதால், சுத்தமாகவும் சுத்தமல்லாததாகவும் தங்கத்தைக் கப்பமாகக் கொடுப்பார்கள். அந்தத் தங்கங்களைக் கொண்டு, ஓ! ஏகாதிபதிகளில் சிறந்தவனே {துரியோதனா}, இப்போது ஒரு (வேள்வி) கலப்பையைச் செய். ஓ! பாரதா {துரியோதனா}, வேள்வி செய்யும் இடத்தை அந்தக் கலப்பையால் உழு. ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, உரிய சடங்குகளுடன், எந்த இடையூறும் இல்லாமல், மந்திரங்களால் புனிதமாக்கப்பட்ட சுத்தமான உணவுகளுடன் {உழப்பட்ட} அந்த இடத்தில் வேள்வி நடைபெறட்டும். அறம்சார்ந்த மனிதர்களுக்குத் தகுந்த அவ்வேள்வியின் பெயர் வைஷ்ணவம் ஆகும். பழைமையான விஷ்ணுவைத் தவிர வேறு எவரும் அவ்வேள்வியை இதற்கு முன்னால் செய்ததில்லை. இந்தப் பெரும் பிரம்மாண்டமான வேள்வி, வேள்விகளில் சிறந்த ராஜசூய வேள்விக்குச் சமமானது ஆகும். மேலும், அது {வேள்வி} நம்மை விரும்புகிறது. அது உனது நன்மைக்காகவும் கொண்டாடப்படட்டும். மேலும் அது எந்த இடையூறும் இல்லாமல் கொண்டாடக்கூடியதாகும். (இதைச் செய்வதால்) உனது விருப்பங்கள் நிறைவேறும்” என்றார்.

இப்படி அந்த அந்தணர்களால் சொல்லப்பட்ட திருதராஷ்டிரன் மகனான அம்மன்னன் {துரியோதனன்}, கர்ணன், தனது தம்பிகள் மற்றும் சுபலனனின் மகன் {சகுனி} ஆகியோரிடம், “சந்தேகத்திற்கு அப்பால், அந்தணர்களின் வார்த்தைகள் எனக்கு முற்றிலும் பிடித்திருக்கிறது. அவற்றால் நீங்களும் மகிழ்ந்தீர்களென்றால், தாமதிக்காமல் அதை வெளிப்படுத்துங்கள்” என்றான். இப்படிக் கோரப்பட்ட அவர்கள் மன்னனிடம் {துரியோதனனிடம்}, “அப்படியே ஆகட்டும்” என்று சொன்னார்கள். பிறகு மன்னன் ஒருவர் பின் ஒருவராக அவரவர்க்கு உரிய பணிகளில் அமர்த்தினான். சிற்பிகளை அழைத்து (வேள்வி) கலப்பையைச் செய்யச் சொன்னான். ஓ! மன்னர்களில் சிறந்தவனே {ஜனமேஜயா}, செய்யப்பட வேண்டும் என்று கட்டளையிடப்பட்டவையெல்லாம் ஒன்றுன்பின் ஒன்றாக நிறைவேற்றப்பட்டது. 

துரியோதனனின் வைஷ்ணவ வேள்வி? – வனபர்வம் பகுதி 253-ராஜசூய வேள்வி செய்ய விரும்பிய துரியோதனன்; யுதிஷ்டிரனும் திருதராஷ்டிரனும் உயிரோடு இருப்பதால் துரியோதனன் அவ்வேள்வியைச் செய்ய முடியாது என்று புரோகிதர் சொன்னது; ராஜ சூய வேள்விக்கு ஈடான வைஷ்ணவ வேள்வியைத் துரியோதனன் செய்யலாம் என்று சொன்னது; வைஷ்ண வேள்வி செய்ய நடந்த ஏற்பாடுகள்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “ஓ! மன்னா, ஓ !மனிதர்களின் தலைவா {ஜனமேஜயா}, எதிரி வீரர்களைக் கொல்பவனான அந்தச் சூதனின் மகன் {கர்ணன்}, துரியோதனனிடம் இவ்வார்த்தைகளைக் கூறினான், “ஓ! கௌரவா, துரியோதனா, நான் சொல்லும் வார்த்தைகளை உன் இதயத்தில் நிறுத்து. ஓ! எதிரிகளை ஒடுக்குபவனே {துரியோதனா}, எனது வார்த்தைகளைக் கேட்ட பின்பு, அனைத்து வழிகளிலும் அதன்படி செயல்படுவதே உனக்குத் தகும். ஓ! ஏகாதிபதிகளில் சிறந்தவனே {துரியோதனா}, ஓ! வீரா, இப்போது இந்தப் பூமி {உனக்கு} எதிரிகளற்று இருக்கிறது. எதிரிகளை அழித்த பிறகு மனோபலம் கொண்ட சக்ரன் {இந்திரன்} எப்படி ஆண்டானோ, அதே போல அவளை {பூமியை} ஆட்சி செய்” என்றான்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இப்படிக் கர்ணனால் சொல்லப்பட்ட மன்னன் அவனிடம் {கர்ணனிடம்} மீண்டும், “ஓ! மனிதர்களில் காளையே, ஒருவனுடன் இணக்கமாக இருந்து, முழுவதும் அவனுடைய நன்மையையே நீ நோக்கமாகக் கொண்டிருக்கிறாய் எனும்போது, உன்னைப் புகலிடமாகக் கொண்ட இந்த ஒருவனால் {துரியோதனனான என்னால்} அடைய முடியாதது எது? இப்போது எனக்கு ஒரு காரியம் இருக்கிறது. அதைக் கேள். வேள்விகளில் முதன்மையான பெரும் ராஜசூய வேள்வி பாண்டவர்களால் செய்யப்பட்டதைக் கண்டதால், எனக்கு (அதே வேள்வியைச் செய்ய) ஒரு விருப்பம் எழுந்திருக்கிறது. ஓ! சூதனின் மகனே {கர்ணா}, எனது விருப்பத்தை நிறைவேற்றுவாயாக” என்றான்.

இப்படிச் சொல்லப்பட்ட கர்ணன் மன்னனிடம், “பூமியிலுள்ள அனைத்து மன்னர்களும் இப்போது உனக்கு அடிபணிந்து இருக்கிறார்கள். எனவே, முதன்மை அந்தணர்களை அழை. ஓ! குருக்களில் சிறந்தவனே {துரியோதனா}, வேள்விக்குத் தேவையான பொருட்களை முறையாகச் சேகரி. ஓ! எதிரிகளை ஒடுக்குபவனே {துரியோதனா}, பரிந்துரைக்கப்பட்ட வேதமறிந்த ரித்விக்குகளைக் கொண்டு உனது சடங்குகளை விதிப்படி கொண்டாடு. ஓ! மன்னா, ஓ பாரதகுலத்தின் காளையே {துரியோதனா}, உனது அந்தப் பெரும் வேள்வி நடக்கும்போது, இறைச்சி, பானம் மற்றும் ஆடம்பரப் பொருட்கள் நிறைந்திருக்கட்டும்” என்றான் {கர்ணன்}.

ஓ! மன்னா {ஜனமேஜயா}, கர்ணனால் இப்படிச் சொல்லப்பட்ட திருதராஷ்டிரன் மகன் புரோகிதரை அழைத்து அவரிடம், “அற்புதமான தக்ஷினைகளுடன் கூடிய வேள்விகளில் சிறந்த ராஜசூய வேள்வியைச் சரியான உரிய முறையில் எனக்காகக் கொண்டாடுங்கள் {நடத்துங்கள்}” என்று கேட்டான். அதற்கு அந்த அந்தணர்களில் சிறந்தவர், மன்னனிடம் {துரியோதனனிடம்}, “ஓ! கௌரவர்களில் முதன்மையானவனே {துரியோதனா}, யுதிஷ்டிரன் வாழ்ந்து கொண்டிருக்கும்போது, ஓ! மன்னர்களின் இளவரசனே {துரியோதனா}, உனது குடும்பத்தில் அந்த வேள்விகளில் சிறந்த வேள்வியைக் கொண்டாடமுடியாது. ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, உன் தந்தை நீண்ட வாழ்நாளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஓ! மன்னர்களில் சிறந்தவனே {துரியோதனா}, அதன் காரணமாகவும் நீ அந்த வேள்வியைச் செய்யக்கூடாது. ஓ! தலைவா {துரியோதனா}, ராஜசூயத்துக்கு ஈடான மற்றுமொரு பெருவேள்வி இருக்கிறது. ஓ! மன்னர்களில் முதன்மையானவனே {துரியோதனா}, நீ அந்த வேள்வியைச் செய்யலாம்.

எனது இவ்வார்த்தைகளைக் கேள். ஓ! மன்னா {துரியோதனா}, பூமியில் உள்ள இந்த ஆட்சியாளர்கள் எல்லாம் உனக்குக் கப்பம் கட்டுபவர்களாக இருப்பதால், சுத்தமாகவும் சுத்தமல்லாததாகவும் தங்கத்தைக் கப்பமாகக் கொடுப்பார்கள். அந்தத் தங்கங்களைக் கொண்டு, ஓ! ஏகாதிபதிகளில் சிறந்தவனே {துரியோதனா}, இப்போது ஒரு (வேள்வி) கலப்பையைச் செய். ஓ! பாரதா {துரியோதனா}, வேள்வி செய்யும் இடத்தை அந்தக் கலப்பையால் உழு. ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, உரிய சடங்குகளுடன், எந்த இடையூறும் இல்லாமல், மந்திரங்களால் புனிதமாக்கப்பட்ட சுத்தமான உணவுகளுடன் {உழப்பட்ட} அந்த இடத்தில் வேள்வி நடைபெறட்டும். அறம்சார்ந்த மனிதர்களுக்குத் தகுந்த அவ்வேள்வியின் பெயர் வைஷ்ணவம் ஆகும். பழைமையான விஷ்ணுவைத் தவிர வேறு எவரும் அவ்வேள்வியை இதற்கு முன்னால் செய்ததில்லை. இந்தப் பெரும் பிரம்மாண்டமான வேள்வி, வேள்விகளில் சிறந்த ராஜசூய வேள்விக்குச் சமமானது ஆகும். மேலும், அது {வேள்வி} நம்மை விரும்புகிறது. அது உனது நன்மைக்காகவும் கொண்டாடப்படட்டும். மேலும் அது எந்த இடையூறும் இல்லாமல் கொண்டாடக்கூடியதாகும். (இதைச் செய்வதால்) உனது விருப்பங்கள் நிறைவேறும்” என்றார்.

இப்படி அந்த அந்தணர்களால் சொல்லப்பட்ட திருதராஷ்டிரன் மகனான அம்மன்னன் {துரியோதனன்}, கர்ணன், தனது தம்பிகள் மற்றும் சுபலனனின் மகன் {சகுனி} ஆகியோரிடம், “சந்தேகத்திற்கு அப்பால், அந்தணர்களின் வார்த்தைகள் எனக்கு முற்றிலும் பிடித்திருக்கிறது. அவற்றால் நீங்களும் மகிழ்ந்தீர்களென்றால், தாமதிக்காமல் அதை வெளிப்படுத்துங்கள்” என்றான். இப்படிக் கோரப்பட்ட அவர்கள் மன்னனிடம் {துரியோதனனிடம்}, “அப்படியே ஆகட்டும்” என்று சொன்னார்கள். பிறகு மன்னன் ஒருவர் பின் ஒருவராக அவரவர்க்கு உரிய பணிகளில் அமர்த்தினான். சிற்பிகளை அழைத்து (வேள்வி) கலப்பையைச் செய்யச் சொன்னான். ஓ! மன்னர்களில் சிறந்தவனே {ஜனமேஜயா}, செய்யப்பட வேண்டும் என்று கட்டளையிடப்பட்டவையெல்லாம் ஒன்றுன்பின் ஒன்றாக நிறைவேற்றப்பட்டது. 

துரியோதனனின் வைஷ்ணவ வேள்வி? – வனபர்வம் பகுதி 253-ராஜசூய வேள்வி செய்ய விரும்பிய துரியோதனன்; யுதிஷ்டிரனும் திருதராஷ்டிரனும் உயிரோடு இருப்பதால் துரியோதனன் அவ்வேள்வியைச் செய்ய முடியாது என்று புரோகிதர் சொன்னது; ராஜ சூய வேள்விக்கு ஈடான வைஷ்ணவ வேள்வியைத் துரியோதனன் செய்யலாம் என்று சொன்னது; வைஷ்ண வேள்வி செய்ய நடந்த ஏற்பாடுகள்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “ஓ! மன்னா, ஓ !மனிதர்களின் தலைவா {ஜனமேஜயா}, எதிரி வீரர்களைக் கொல்பவனான அந்தச் சூதனின் மகன் {கர்ணன்}, துரியோதனனிடம் இவ்வார்த்தைகளைக் கூறினான், “ஓ! கௌரவா, துரியோதனா, நான் சொல்லும் வார்த்தைகளை உன் இதயத்தில் நிறுத்து. ஓ! எதிரிகளை ஒடுக்குபவனே {துரியோதனா}, எனது வார்த்தைகளைக் கேட்ட பின்பு, அனைத்து வழிகளிலும் அதன்படி செயல்படுவதே உனக்குத் தகும். ஓ! ஏகாதிபதிகளில் சிறந்தவனே {துரியோதனா}, ஓ! வீரா, இப்போது இந்தப் பூமி {உனக்கு} எதிரிகளற்று இருக்கிறது. எதிரிகளை அழித்த பிறகு மனோபலம் கொண்ட சக்ரன் {இந்திரன்} எப்படி ஆண்டானோ, அதே போல அவளை {பூமியை} ஆட்சி செய்” என்றான்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இப்படிக் கர்ணனால் சொல்லப்பட்ட மன்னன் அவனிடம் {கர்ணனிடம்} மீண்டும், “ஓ! மனிதர்களில் காளையே, ஒருவனுடன் இணக்கமாக இருந்து, முழுவதும் அவனுடைய நன்மையையே நீ நோக்கமாகக் கொண்டிருக்கிறாய் எனும்போது, உன்னைப் புகலிடமாகக் கொண்ட இந்த ஒருவனால் {துரியோதனனான என்னால்} அடைய முடியாதது எது? இப்போது எனக்கு ஒரு காரியம் இருக்கிறது. அதைக் கேள். வேள்விகளில் முதன்மையான பெரும் ராஜசூய வேள்வி பாண்டவர்களால் செய்யப்பட்டதைக் கண்டதால், எனக்கு (அதே வேள்வியைச் செய்ய) ஒரு விருப்பம் எழுந்திருக்கிறது. ஓ! சூதனின் மகனே {கர்ணா}, எனது விருப்பத்தை நிறைவேற்றுவாயாக” என்றான்.

இப்படிச் சொல்லப்பட்ட கர்ணன் மன்னனிடம், “பூமியிலுள்ள அனைத்து மன்னர்களும் இப்போது உனக்கு அடிபணிந்து இருக்கிறார்கள். எனவே, முதன்மை அந்தணர்களை அழை. ஓ! குருக்களில் சிறந்தவனே {துரியோதனா}, வேள்விக்குத் தேவையான பொருட்களை முறையாகச் சேகரி. ஓ! எதிரிகளை ஒடுக்குபவனே {துரியோதனா}, பரிந்துரைக்கப்பட்ட வேதமறிந்த ரித்விக்குகளைக் கொண்டு உனது சடங்குகளை விதிப்படி கொண்டாடு. ஓ! மன்னா, ஓ பாரதகுலத்தின் காளையே {துரியோதனா}, உனது அந்தப் பெரும் வேள்வி நடக்கும்போது, இறைச்சி, பானம் மற்றும் ஆடம்பரப் பொருட்கள் நிறைந்திருக்கட்டும்” என்றான் {கர்ணன்}.

ஓ! மன்னா {ஜனமேஜயா}, கர்ணனால் இப்படிச் சொல்லப்பட்ட திருதராஷ்டிரன் மகன் புரோகிதரை அழைத்து அவரிடம், “அற்புதமான தக்ஷினைகளுடன் கூடிய வேள்விகளில் சிறந்த ராஜசூய வேள்வியைச் சரியான உரிய முறையில் எனக்காகக் கொண்டாடுங்கள் {நடத்துங்கள்}” என்று கேட்டான். அதற்கு அந்த அந்தணர்களில் சிறந்தவர், மன்னனிடம் {துரியோதனனிடம்}, “ஓ! கௌரவர்களில் முதன்மையானவனே {துரியோதனா}, யுதிஷ்டிரன் வாழ்ந்து கொண்டிருக்கும்போது, ஓ! மன்னர்களின் இளவரசனே {துரியோதனா}, உனது குடும்பத்தில் அந்த வேள்விகளில் சிறந்த வேள்வியைக் கொண்டாடமுடியாது. ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, உன் தந்தை நீண்ட வாழ்நாளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஓ! மன்னர்களில் சிறந்தவனே {துரியோதனா}, அதன் காரணமாகவும் நீ அந்த வேள்வியைச் செய்யக்கூடாது. ஓ! தலைவா {துரியோதனா}, ராஜசூயத்துக்கு ஈடான மற்றுமொரு பெருவேள்வி இருக்கிறது. ஓ! மன்னர்களில் முதன்மையானவனே {துரியோதனா}, நீ அந்த வேள்வியைச் செய்யலாம்.

எனது இவ்வார்த்தைகளைக் கேள். ஓ! மன்னா {துரியோதனா}, பூமியில் உள்ள இந்த ஆட்சியாளர்கள் எல்லாம் உனக்குக் கப்பம் கட்டுபவர்களாக இருப்பதால், சுத்தமாகவும் சுத்தமல்லாததாகவும் தங்கத்தைக் கப்பமாகக் கொடுப்பார்கள். அந்தத் தங்கங்களைக் கொண்டு, ஓ! ஏகாதிபதிகளில் சிறந்தவனே {துரியோதனா}, இப்போது ஒரு (வேள்வி) கலப்பையைச் செய். ஓ! பாரதா {துரியோதனா}, வேள்வி செய்யும் இடத்தை அந்தக் கலப்பையால் உழு. ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, உரிய சடங்குகளுடன், எந்த இடையூறும் இல்லாமல், மந்திரங்களால் புனிதமாக்கப்பட்ட சுத்தமான உணவுகளுடன் {உழப்பட்ட} அந்த இடத்தில் வேள்வி நடைபெறட்டும். அறம்சார்ந்த மனிதர்களுக்குத் தகுந்த அவ்வேள்வியின் பெயர் வைஷ்ணவம் ஆகும். பழைமையான விஷ்ணுவைத் தவிர வேறு எவரும் அவ்வேள்வியை இதற்கு முன்னால் செய்ததில்லை. இந்தப் பெரும் பிரம்மாண்டமான வேள்வி, வேள்விகளில் சிறந்த ராஜசூய வேள்விக்குச் சமமானது ஆகும். மேலும், அது {வேள்வி} நம்மை விரும்புகிறது. அது உனது நன்மைக்காகவும் கொண்டாடப்படட்டும். மேலும் அது எந்த இடையூறும் இல்லாமல் கொண்டாடக்கூடியதாகும். (இதைச் செய்வதால்) உனது விருப்பங்கள் நிறைவேறும்” என்றார்.

இப்படி அந்த அந்தணர்களால் சொல்லப்பட்ட திருதராஷ்டிரன் மகனான அம்மன்னன் {துரியோதனன்}, கர்ணன், தனது தம்பிகள் மற்றும் சுபலனனின் மகன் {சகுனி} ஆகியோரிடம், “சந்தேகத்திற்கு அப்பால், அந்தணர்களின் வார்த்தைகள் எனக்கு முற்றிலும் பிடித்திருக்கிறது. அவற்றால் நீங்களும் மகிழ்ந்தீர்களென்றால், தாமதிக்காமல் அதை வெளிப்படுத்துங்கள்” என்றான். இப்படிக் கோரப்பட்ட அவர்கள் மன்னனிடம் {துரியோதனனிடம்}, “அப்படியே ஆகட்டும்” என்று சொன்னார்கள். பிறகு மன்னன் ஒருவர் பின் ஒருவராக அவரவர்க்கு உரிய பணிகளில் அமர்த்தினான். சிற்பிகளை அழைத்து (வேள்வி) கலப்பையைச் செய்யச் சொன்னான். ஓ! மன்னர்களில் சிறந்தவனே {ஜனமேஜயா}, செய்யப்பட வேண்டும் என்று கட்டளையிடப்பட்டவையெல்லாம் ஒன்றுன்பின் ஒன்றாக நிறைவேற்றப்பட்டது. 

துரியோதனனின் வைஷ்ணவ வேள்வி? – வனபர்வம் பகுதி 253-ராஜசூய வேள்வி செய்ய விரும்பிய துரியோதனன்; யுதிஷ்டிரனும் திருதராஷ்டிரனும் உயிரோடு இருப்பதால் துரியோதனன் அவ்வேள்வியைச் செய்ய முடியாது என்று புரோகிதர் சொன்னது; ராஜ சூய வேள்விக்கு ஈடான வைஷ்ணவ வேள்வியைத் துரியோதனன் செய்யலாம் என்று சொன்னது; வைஷ்ண வேள்வி செய்ய நடந்த ஏற்பாடுகள்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “ஓ! மன்னா, ஓ !மனிதர்களின் தலைவா {ஜனமேஜயா}, எதிரி வீரர்களைக் கொல்பவனான அந்தச் சூதனின் மகன் {கர்ணன்}, துரியோதனனிடம் இவ்வார்த்தைகளைக் கூறினான், “ஓ! கௌரவா, துரியோதனா, நான் சொல்லும் வார்த்தைகளை உன் இதயத்தில் நிறுத்து. ஓ! எதிரிகளை ஒடுக்குபவனே {துரியோதனா}, எனது வார்த்தைகளைக் கேட்ட பின்பு, அனைத்து வழிகளிலும் அதன்படி செயல்படுவதே உனக்குத் தகும். ஓ! ஏகாதிபதிகளில் சிறந்தவனே {துரியோதனா}, ஓ! வீரா, இப்போது இந்தப் பூமி {உனக்கு} எதிரிகளற்று இருக்கிறது. எதிரிகளை அழித்த பிறகு மனோபலம் கொண்ட சக்ரன் {இந்திரன்} எப்படி ஆண்டானோ, அதே போல அவளை {பூமியை} ஆட்சி செய்” என்றான்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இப்படிக் கர்ணனால் சொல்லப்பட்ட மன்னன் அவனிடம் {கர்ணனிடம்} மீண்டும், “ஓ! மனிதர்களில் காளையே, ஒருவனுடன் இணக்கமாக இருந்து, முழுவதும் அவனுடைய நன்மையையே நீ நோக்கமாகக் கொண்டிருக்கிறாய் எனும்போது, உன்னைப் புகலிடமாகக் கொண்ட இந்த ஒருவனால் {துரியோதனனான என்னால்} அடைய முடியாதது எது? இப்போது எனக்கு ஒரு காரியம் இருக்கிறது. அதைக் கேள். வேள்விகளில் முதன்மையான பெரும் ராஜசூய வேள்வி பாண்டவர்களால் செய்யப்பட்டதைக் கண்டதால், எனக்கு (அதே வேள்வியைச் செய்ய) ஒரு விருப்பம் எழுந்திருக்கிறது. ஓ! சூதனின் மகனே {கர்ணா}, எனது விருப்பத்தை நிறைவேற்றுவாயாக” என்றான்.

இப்படிச் சொல்லப்பட்ட கர்ணன் மன்னனிடம், “பூமியிலுள்ள அனைத்து மன்னர்களும் இப்போது உனக்கு அடிபணிந்து இருக்கிறார்கள். எனவே, முதன்மை அந்தணர்களை அழை. ஓ! குருக்களில் சிறந்தவனே {துரியோதனா}, வேள்விக்குத் தேவையான பொருட்களை முறையாகச் சேகரி. ஓ! எதிரிகளை ஒடுக்குபவனே {துரியோதனா}, பரிந்துரைக்கப்பட்ட வேதமறிந்த ரித்விக்குகளைக் கொண்டு உனது சடங்குகளை விதிப்படி கொண்டாடு. ஓ! மன்னா, ஓ பாரதகுலத்தின் காளையே {துரியோதனா}, உனது அந்தப் பெரும் வேள்வி நடக்கும்போது, இறைச்சி, பானம் மற்றும் ஆடம்பரப் பொருட்கள் நிறைந்திருக்கட்டும்” என்றான் {கர்ணன்}.

ஓ! மன்னா {ஜனமேஜயா}, கர்ணனால் இப்படிச் சொல்லப்பட்ட திருதராஷ்டிரன் மகன் புரோகிதரை அழைத்து அவரிடம், “அற்புதமான தக்ஷினைகளுடன் கூடிய வேள்விகளில் சிறந்த ராஜசூய வேள்வியைச் சரியான உரிய முறையில் எனக்காகக் கொண்டாடுங்கள் {நடத்துங்கள்}” என்று கேட்டான். அதற்கு அந்த அந்தணர்களில் சிறந்தவர், மன்னனிடம் {துரியோதனனிடம்}, “ஓ! கௌரவர்களில் முதன்மையானவனே {துரியோதனா}, யுதிஷ்டிரன் வாழ்ந்து கொண்டிருக்கும்போது, ஓ! மன்னர்களின் இளவரசனே {துரியோதனா}, உனது குடும்பத்தில் அந்த வேள்விகளில் சிறந்த வேள்வியைக் கொண்டாடமுடியாது. ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, உன் தந்தை நீண்ட வாழ்நாளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஓ! மன்னர்களில் சிறந்தவனே {துரியோதனா}, அதன் காரணமாகவும் நீ அந்த வேள்வியைச் செய்யக்கூடாது. ஓ! தலைவா {துரியோதனா}, ராஜசூயத்துக்கு ஈடான மற்றுமொரு பெருவேள்வி இருக்கிறது. ஓ! மன்னர்களில் முதன்மையானவனே {துரியோதனா}, நீ அந்த வேள்வியைச் செய்யலாம்.

எனது இவ்வார்த்தைகளைக் கேள். ஓ! மன்னா {துரியோதனா}, பூமியில் உள்ள இந்த ஆட்சியாளர்கள் எல்லாம் உனக்குக் கப்பம் கட்டுபவர்களாக இருப்பதால், சுத்தமாகவும் சுத்தமல்லாததாகவும் தங்கத்தைக் கப்பமாகக் கொடுப்பார்கள். அந்தத் தங்கங்களைக் கொண்டு, ஓ! ஏகாதிபதிகளில் சிறந்தவனே {துரியோதனா}, இப்போது ஒரு (வேள்வி) கலப்பையைச் செய். ஓ! பாரதா {துரியோதனா}, வேள்வி செய்யும் இடத்தை அந்தக் கலப்பையால் உழு. ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, உரிய சடங்குகளுடன், எந்த இடையூறும் இல்லாமல், மந்திரங்களால் புனிதமாக்கப்பட்ட சுத்தமான உணவுகளுடன் {உழப்பட்ட} அந்த இடத்தில் வேள்வி நடைபெறட்டும். அறம்சார்ந்த மனிதர்களுக்குத் தகுந்த அவ்வேள்வியின் பெயர் வைஷ்ணவம் ஆகும். பழைமையான விஷ்ணுவைத் தவிர வேறு எவரும் அவ்வேள்வியை இதற்கு முன்னால் செய்ததில்லை. இந்தப் பெரும் பிரம்மாண்டமான வேள்வி, வேள்விகளில் சிறந்த ராஜசூய வேள்விக்குச் சமமானது ஆகும். மேலும், அது {வேள்வி} நம்மை விரும்புகிறது. அது உனது நன்மைக்காகவும் கொண்டாடப்படட்டும். மேலும் அது எந்த இடையூறும் இல்லாமல் கொண்டாடக்கூடியதாகும். (இதைச் செய்வதால்) உனது விருப்பங்கள் நிறைவேறும்” என்றார்.

இப்படி அந்த அந்தணர்களால் சொல்லப்பட்ட திருதராஷ்டிரன் மகனான அம்மன்னன் {துரியோதனன்}, கர்ணன், தனது தம்பிகள் மற்றும் சுபலனனின் மகன் {சகுனி} ஆகியோரிடம், “சந்தேகத்திற்கு அப்பால், அந்தணர்களின் வார்த்தைகள் எனக்கு முற்றிலும் பிடித்திருக்கிறது. அவற்றால் நீங்களும் மகிழ்ந்தீர்களென்றால், தாமதிக்காமல் அதை வெளிப்படுத்துங்கள்” என்றான். இப்படிக் கோரப்பட்ட அவர்கள் மன்னனிடம் {துரியோதனனிடம்}, “அப்படியே ஆகட்டும்” என்று சொன்னார்கள். பிறகு மன்னன் ஒருவர் பின் ஒருவராக அவரவர்க்கு உரிய பணிகளில் அமர்த்தினான். சிற்பிகளை அழைத்து (வேள்வி) கலப்பையைச் செய்யச் சொன்னான். ஓ! மன்னர்களில் சிறந்தவனே {ஜனமேஜயா}, செய்யப்பட வேண்டும் என்று கட்டளையிடப்பட்டவையெல்லாம் ஒன்றுன்பின் ஒன்றாக நிறைவேற்றப்பட்டது. 

பீமனின் கோபம்? – வனபர்வம் பகுதி 254-வேள்வி செய்வதற்காகத் துரியோதனன் அனைவரையும் அழைப்பது; துச்சாசனன் பாண்டவர்களை அழைக்க ஒரு தூதுவனை அனுப்புவது; யுதிஷ்டிரன் வாழ்த்துவது; பீமன் கோபத்துடன் பேசி, துரியோதனனுக்கு எச்சரிக்கை அனுப்புவது; வேள்வி நிறைவடைவது; துரியோதனன் ஹஸ்தினாபுரத்திற்குள் நுழைவது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பிறகு அனைத்து கைவினைஞர்களும், முக்கியமான ஆலோசகர்களும் {அமைச்சர்களும்}, உயர்ந்த ஞானம் கொண்ட விதுரனும், திருதராஷ்டிரன் மகனிடம் {துரியோதனனிடம்}, “அற்புதமான வேள்விக்குரிய அனைத்து தயாரிப்புகளும் முடிந்துவிட்டன. ஓ! மன்னா {துரியோதனா}, ஓ பாரதா, நேரமும் வந்துவிட்டது. பெரும் மதிப்புமிக்கத் தங்கக் கலப்பையின் நிர்மாணம் முடிந்தவிட்டது” என்றனர். இதைக் கேட்ட மன்னர்களில் சிறந்தவனான திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்} வேள்விகளில் தலைமையான வேள்வியை ஆரம்பிக்க உத்தரவிட்டான். பிறகு, அபரிமிதமான உணவு வகைகளுடன், மந்திரங்களால் புனிதமாக்கப்பட்ட அந்த வேள்வி ஆரம்பித்தது. காந்தாரியின் மகன் {துரியோதனன்} அவ்வேள்வியை விதிப்படி தொடங்கிவைத்தான். திருதராஷ்டிரன், சிறப்புமிகுந்த விதுரன், பீஷ்மர், துரோணர், கிருபர், கர்ணன், கொண்டாடப்படும் காந்தாரி ஆகியோர் பெரும் மகிழ்ச்சியை அனுபவித்தனர்.

ஓ! மன்னர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, இளவரசர்கள் மற்றும் அந்தணர்களை அழைக்க விரைவாகச் செல்லும் தூதுவர்களைத் துரியோதனன் அனுப்பினான். விரைவாகச் செல்லும் வாகனங்களின், தங்கள் (ஒவ்வொருவருக்கும்) நிர்ணயிக்கப்பட்ட திசைகளில் அவர்கள் {தூதுவர்கள்} சென்றார்கள். ஒரு குறிப்பிட்ட தூதுவன் கிளம்பும் போது துச்சாசனன், “விரைவாகத் துவைத வனத்திற்குச் செல்; பிறகு அந்தக் கானகத்தில் இருக்கும் அந்தணர்களையும், தீய மனிதர்களான பாண்டவர்களையும் முறையாக அழை” என்றான். அதன்பேரில் அவன் {அந்தத் தூதுவன்} அங்கே சென்று அனைத்துப் பாண்டவர்களையும் வணங்கி, “தனது வலிமையின் மூலம் பெருஞ்செல்வத்தை அடைந்த, மன்னர்களில் சிறந்த, குருக்களில் முதன்மையான துரியோதனன், ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, ஒரு வேள்வியைக் கொண்டாடுகிறான் {நடத்துகிறான்}. பல திசைகளில் இருந்து மன்னர்களும், அந்தணர்களும் அங்கே போகிறார்கள் ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, நான் அந்த உயர் ஆன்ம கௌரவனால் அனுப்பப்பட்டேன்; அந்த மன்னனும் மனிதர்களின் தலைவனுமான திருதராஷ்டிரன் மகன், உங்களை அழைக்கிறான். எனவே, அந்த ஏகாதிபதியின் மகிழ்சிகரமான வேள்வியைக் காண்பதே உமக்குத் தகும்” என்றான்.

அத்தூதுவனின் வார்த்தைகளைக் கேட்ட மன்னர்களில் புலியான அந்த அரசன் யுதிஷ்டிரன், “மூதாதையர்களின் புகழை மேம்படுத்தும் மன்னன் சுயோதனன் {துரியோதனன்} நற்பேறினாலேயே வேள்விகளில் சிறந்த வேள்வியைக் கொண்டாடுகிறான். நிச்சயமாக நாங்கள் அங்கு வர வேண்டும்; ஆனால் அதை எங்களால் செய்ய முடியாது; பதிமூன்றாவது வருடம் (நிறைவடையும்) வரை, நாங்கள் எங்கள் நோன்பை நோற்க வேண்டியுள்ளது” என்றான். நீதிமானான யுதிஷ்டிரனின் பேச்சைக் கேட்ட பீமன் {தூதுவரிடம்}, “அதன்பிறகு நீதிமானான மன்னர் யுதிஷ்டிரர் அங்கே வருவார். அப்போது ஆயுதங்களால் கிண்டப்பட்ட நெருப்பில் அவனைத் (துரியோதனனைத்) தூக்கி எறிவார். சுயோதனனிடம், “பதிமூன்றாவது வருடம் நிறைவடையும்போது, மனிதர்களின் தலைவனான அந்தப் பாண்டவன் {யுதிஷ்டிரன்}, போர்க்களம் எனும் வேள்வியில், திருதராஷ்டிரர்கள் மேல், கோபம் எனும் தெளிந்த நெய்யை ஊற்றும்போது, {பீமனாகிய} நானும் வருவேன்” என்று சொல்லும்” என்றான் {பீமன்}.

ஆனால் மற்ற பாண்டவர்கள், ஓ! மன்னா {ஜனமேஜயா}, எந்த விரும்பத்தகாதவற்றையும் பேசவில்லை. அந்தத் தூதுவன் (திரும்பிய போது) அனைத்தையும் திருதராஷ்டிரன் மகனிடம் {துரியோதனனிடம்} சொன்னான். பிறகு திருதராஷ்டிரனின் நகரத்திற்கு, மனிதர்களில் முதன்மையானவர்களும், பல நாடுகளின் தலைவர்களும், உயர்ந்த அறம்சார்ந்த அந்தணர்களும் வந்தனர். முறையாக விதிப்படி வரவேற்கப்பட்ட அந்த மனிதர்களில் தலைவர்கள் பெரும் மகிழ்ச்சியை அனுபவித்து மனநிறைவு கொண்டனர். அனைத்து கௌரவர்களாலும் சூழப்பட்ட ஏகாதிபதிகளில் முதன்மையான திருதராஷ்டிரன், மகிழ்ச்சியின் எல்லையை அனுபவித்து, விதுரனிடம், “ஓ! க்ஷத்தா {விதுரா}, வேள்வி மண்டபத்தில் இருக்கும் அனைவருக்கும் விரைவாக உணவைப் பரிமாறி அவர்களைப் புத்துணர்ச்சிபெற்று, மனநிறைவு கொள்ளச் செய்” என்றான்.

ஓ! எதிரிகளை ஒடுக்குபவனே {ஜனமேஜயா}, அவ்வுத்தரவுக்கு இசைந்த அறநெறி அறிந்த கற்ற விதுரன், மகிழ்ச்சியாக, இறைச்சி, மற்றும் உண்ணத்தக்க, குடுக்கத்தக்க பானங்கள், மணமிக்க மாலைகள், பல்வேறு வகையிலான ஆடைகள் ஆகியவற்றைப் பொருத்தமான அளவுக்குக் கொடுத்து அனைவரையும் உற்சாகமூட்டினான். ({விருந்தினர்கள்} அவர்கள் தங்குவதற்காக) மண்டபங்களைக் கட்டியிருந்த அந்த வீரனான மன்னர்களில் முதன்மையானவன் {துரியோதனன்}, இளவரசர்களுக்கும் அந்தணர்களுக்கும் பலவிதமான செல்வங்களைக் கொடுத்து அவர்களை உற்சாகமூட்டி வழியனுப்பினான். அனைத்து மன்னர்களையும் இப்படி அனுப்பிய அவன் {துரியோதனன்}, தன் தம்பிகள் சூழ, கர்ணன் மற்றும் சுபலனின் மகன் {சகுனி} ஆகியோரின் துணையுடன் ஹஸ்தினாபுரத்திற்குள் நுழைந்தான்.

கர்ணனின் சபதம்? – வனபர்வம் பகுதி 255-துரியோதனன் செய்த வேள்வி, யுதிஷ்டிரன் செய்த வேள்வியின் பதினாறில் ஒரு பங்குக்குக் கூட ஈடாகாது என்று சிலர் சொல்வது; நண்பர்கள் துரியோதனன் செய்த வேள்வியை மெச்சுவது; நான் எப்போது ராஜசூய வேள்வியைச் செய்வேன் என்று துரியோதனன் கேட்பது; கர்ணன் ஏற்கும் நோன்பு; கர்ணன் ஏற்ற சபதத்தைக் கேள்விப்பட்ட யுதிஷ்டிரன் துயருறுவது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “ஓ! பெரும் மன்னா {ஜனமேஜயா}, துரியோதனன் (நகரத்திற்குள்) நுழைந்து கொண்டிருந்த போது, தோற்காத வலிமை கொண்ட அந்த இளவரசனைப் புகழ்ச்சியாளர்கள் {சூதர்கள்} துதிபாடினர். அந்த வலிமைமிக்க வில்லாளியான மன்னர்களில் முதன்மையானவனை {துரியோதனனை} பிறரும் புகழ்ந்தனர். அவன் மீது நெல் பொரிகளையும் {fried paddy}, சந்தனக் குழம்பையும் வாரி இறைத்த குடிமக்கள், “ஓ! மன்னா {துரியோதனா}, நீ அடைந்த நற்பேறாலேயே உனது வேள்வி தடையில்லாமல் நிறைவேறியது” என்றார்கள். அங்கிருந்தவர்களில் இரக்கமற்ற பேச்சுக் கொண்ட சிலர் அந்தப் பூமியின் தலைவனிடம் {துரியோதனனிடம்}, “நிச்சயமாக, இவ்வேள்வி யுதிஷ்டிரனுடைய வேள்வியுடன் ஒப்பிட முடியாததாகும்; இது அதில் {யுதிஷ்டிரன் நடத்திய வேள்வியில்} பதினாறில் ஒரு பங்கிற்குக்கூட ஈடாகாது” என்றனர். பின்விளைவுகளைப் பற்றிச் சிந்திக்காத பொறுப்பற்ற சிலர் அம்மன்னனிடம் இப்படியே பேசினர்.

இருப்பினும் அவனது {துரியோதனனின்} நண்பர்கள், “உனது இந்த வேள்வி மற்ற அனைத்தையும் விஞ்சி நிற்கிறது. இதுபோன்ற வேள்வியைச் செய்து புனிதமடைந்த யயாதி, நகுஷன், மாந்தாதா, பாரதன் ஆகியோர் சொர்க்கம் சென்றனர்” என்றனர். இத்தகு ஏற்புடைய வார்த்தைகளைத் தனது நண்பர்களிடம் கேட்ட அந்த ஏகாதிபதி {துரியோதனன்}, ஓ! பாரதகுலத்தின் காளையே {ஜனமேஜயா}, மிகவும் மனநிறைவு கொண்டு, நகரத்திற்குள் நுழைந்து இறுதியாகத் தனது சொந்த வசிப்பிடத்திற்குச் சென்றான். பிறகு, ஓ! மன்னா {ஜனமேஜயா}, தன் தந்தை {திருதராஷ்டிரன்}, தாய் {காந்தாரி}, பீஷ்மர், துரோணர், கிருபர், ஞானியான விதுரன் ஆகியோரைத் தலைமையாகக் கொண்ட பிறரின் பாதங்களை வழிபட்டான். பிறகு தன் தம்பிகளால் வழிபடப்பட்டான். அந்தத் தம்பிகளுக்கு மகிழ்ச்சியை உண்டாக்குபவன் {துரியோதனன்}, தம்பிகள் சூழ தனது அற்புத இருக்கையில் அமர்ந்தான்.

அப்போது, சூதனின் மகன் {கர்ணன்} எழுந்து, “ஓ! பாரதகுலத்தில் முதன்மையானவனே {துரியோதனா}, உனது இந்தப் பெரும் வேள்வி, நீ பெற்ற நற்பேறாலேயே நல்ல முறையில் நிறைவடைந்தது. எனினும், பிருதையின் {குந்தியின்} மகன்களைப் {பாண்டவர்களைப்} போர்க்களத்தில் கொன்ற பிறகு, நீ ராஜசூய வேள்வியைச் செய்யும்போது, ஓ! மனிதர்களின் தலைவா {துரியோதனா}, நான் உனக்கும் மீண்டும் பெருமையை ஏற்படுத்துவேன்” என்றான். பிறகு திருதராஷ்டிரன் மகனான அந்தப் பலமிக்க மன்னன் {துரியோதனன்}, “நீ சொல்வது உண்மையே. ஓ! மனிதர்களில் முதன்மையானவனே {கர்ணா}, தீய மனம் கொண்ட பாண்டவர்கள் கொல்லப்பட்டு, பிரம்மாண்டமான ராஜசூயம் என்னால் செய்யப்படும்போது, ஓ! வீரா {கர்ணா}, நீ மீண்டும் என்னைப் பெருமைப் படுத்துவாய்” என்று மறுமொழி கூறினான். ஓ! பாரதா {ஜனமேஜயா}, இப்படிச் சொன்ன அந்தக் கௌரவன் {துரியோதனன்} கர்ணனை ஆரத்தழுவி, ஓ! பலமிக்க மன்னா {ஜனமேஜயா}, வேள்விகளில் முதன்மையான ராஜசூயத்தைக் குறித்துச் சிந்திக்க ஆரம்பித்தான்.

அந்த மன்னர்களில் சிறந்தவன் {துரியோதனன்}, தன்னைச் சூழ்ந்திருந்த குருக்களிடம், “கௌரவர்களே, பாண்டவர்களைக் கொன்று, பெரும்பொருட்களால் செய்ய வேண்டிய ராஜசூயம் என்ற முதன்மையான வேள்வியை நான் எப்போது செய்வேன்?” என்று கேட்டான். அப்போது, கர்ணன் அவனிடம் {துரியோதனனிடம்}, “ஓ மன்னர்களில் களிறே {யானையே} {ராஜகுஞ்சரா} {துரியோதனா}, நான் சொல்வதைக் கேள். அர்ஜுனனை நான் கொல்லாதவரை, நான் யாரையும் எனது பாதத்தைக் கழுவ விட மாட்டேன்; இறைச்சியை உண்ணாதிருப்பேன்; நான் அசுர நோன்பை நோற்பேன் [1]எவர் என்னிடம் எதைக் (எந்தப் பொருளைக்) கோரினாலும், “அது என்னிடம் இல்லை” என்று எப்போதும் சொல்ல மாட்டேன்.” என்றான் கர்ணன். போர்க்களத்தில் பல்குனனைக் {அர்ஜுனனைக்} கொல்வேன் என்று கர்ணன் சபதமேற்ற போது, பெரும் பலம் வாய்ந்த ரதசாரதிகளும், பெரும் வில்லாளிகளுமான திருதராஷ்டிரனின் மகன்கள் உற்சாகத்தால் பெருத்த ஆரவாரம் செய்தனர். அந்தத் திருதராஷ்டிரனின் மகன்கள் பாண்டவர்கள் ஏற்கனவே வெல்லப்பட்டதாகவே நினைத்தனர். பிறகு, மன்னர்களின் தலைவனான அருள் நிறைந்த துரியோதனன், மனிதர்களில் காளையரான அவர்களை விட்டுவிட்டு, சித்திரரதத் தோட்டத்திற்குள் நுழையும் தலைவன் குபேரனைப் போலத் தனது அறைக்குள் நுழைந்தான். ஓ! பாரதா {ஜனமேஜயா}, அந்தப் பெரும் பலம் வாய்ந்த வில்லாளிகள் அனைவரும் தங்கள் தங்கள் இடங்களுக்குச் சென்றனர்.

அதேவேளையில், தூதர்கள் பேசிய வார்த்தைகளைக் கேட்ட அந்தப் பெரும்பலம் வாய்ந்த வில்லாளிகளான பாண்டவர்கள் பரபரப்படைந்து, கவலையடைந்தனர். (அந்நேரத்தில் இருந்து) அவர்கள் சிறு மகிழ்ச்சியையும் அனுபவிக்கவில்லை. ஓ! மன்னர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, மேலும், விஜயனை {அர்ஜுனனைக்} கொல்ல சூதமகன் {கர்ணன்} ஏற்ற சபதத்தைப் புலனாய்வின் மூலம் பெற்ற {பாண்டவர்களின்} ஒற்றர்கள், அச்செய்தியை அவர்களுக்குக் {பாண்டவர்களுக்குக்} கொண்டு வந்தனர். ஓ! மனிதர்களின் தலைவா {ஜனமேஜயா}, இதைக் கேட்ட தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்}, கவலையின் எல்லையை அடைந்தான். துளைக்க முடியாத கவசம் கொண்ட கர்ணனை அற்புத பராக்கிரமம் கொண்டவன் என்று கருதி, தங்கள் துன்பங்களையெல்லாம் நினைவு கூர்ந்த அவன் {யுதிஷ்டிரன்}, அமைதியை அறியவில்லை. கவலை நிறைந்த அந்த உயர்ந்த ஆன்மா கொண்டவன் {யுதிஷ்டிரன்}, மூர்க்கமான விலங்குகள் நிறைந்த அந்தத் துவைதவனத்தைக் கைவிட மனதில் தீர்மானம் கொண்டான்.

அதேவேளையில், திருதராஷ்டிரனின் அரச மகன் {துரியோதனன்}, தனது வீரமிக்கத் தம்பிகளுடனும், பீஷ்மர், துரோணர் மற்றும் கிருபருடனும் சேர்ந்து பூமியை ஆளத் தொடங்கினான். படையெடுப்பு செய்த புகழ் என்ற மகுடம் தரித்த சூதமகனின் {கர்ணனின்} உதவியுடன் துரியோதனன், எப்போதும் பூமியின் ஆட்சியாளர்களின் நன்மையிலேயே எப்போதும் குறியோடு இருந்தான். அபரிமிதமான தானங்களுடன் வேள்விகளைச் செய்து அந்தணர்களில் முதன்மையானவர்களை வழிபட்டான். எதிரிகளை வீழ்த்துபவனான அந்த வீரன் {துரியோதனன்}, ஓ! மன்னா {ஜனமேஜயா}, தானத்தையும் இன்பம் அனுபவிப்பதையும் பலனாகக் கொண்டவையே செல்வங்கள் என்பதை உறுதியாக மனதில் தீர்மானித்துத் தனது தம்பிகளுக்கு நன்மைகளைச் செய்தான்.

யுதிஷ்டிரன் கனவில் வந்த மான்கள்? – வனபர்வம் பகுதி 256-யுதிஷ்டிரன் கனவில் வந்த மான்கள், பாண்டவர்கள் துவைத வனத்தை விட்டுப் போகும்படியும், தாங்கள் பல்கிப் பெருக வழி கொடுக்கும்படியும் இரந்து கேட்டது; தன் கனவைத் தனது தம்பிகளுக்கு வெளிப்படுத்திய யுதிஷ்டிரன், அனைவரையும் அழைத்துக் கொண்டு காம்யகம் சென்றது.

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்} கேட்டான், “துரியோதனனை விடுவித்த பிறகு, பாண்டுவின் பலமிக்க மகன்கள் அந்தக் காட்டில் என்ன செய்தனர்? இதை எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்”

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஒரு சமயம், யுதிஷ்டிரன், இரவில் துவைத வனத்தில் படுத்துக் கொண்டிருந்தபோது, ஏதோ சில மான்கள், கண்ணீரால் தடைபட்ட குரலுடன் அவனது கனவில் தோன்றின. கூப்பிய கரங்களுடன் உடல் நடுங்க நின்று கொண்டிருந்தவற்றிடம் {மான்களிடம்} அந்த ஏகாதிபதிகளில் முதன்மையானவன் {யுதிஷ்டிரன்}, “நீங்கள் சொல்ல விரும்பியதை என்னிடம் சொலுங்கள். நீங்கள் யார்? நீங்கள் என்ன விரும்புகிறீர்கள்?” என்று கேட்டான். {பாண்டவர்களால்} கொல்லப்பட்டவையில் மீந்திருந்த அந்தமான்கள், குந்தியின் மகனான சிறப்புமிக்கப் பாண்டவனால் {யுதிஷ்டிரனால்}, இப்படி அணுகி அழைக்கப்பட்டபோது, அவை அவனிடம் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, {உங்களால்} கொல்லப்பட்டவைகளில் இன்னும் உயிரோடு இருப்பவர்கள் நாங்கள். நாங்கள் {உங்களால்” மொத்தமாகக் கொல்லப்படலாம். எனவே, உங்கள் வசிப்பிடத்தை மாற்றுங்கள். ஓ! பலமிக்க மன்னா {யுதிஷ்டிரா}, உனது தம்பிகள் அனைவரும் ஆயுதங்கள் அறிந்த வீரர்கள். இந்தக் காட்டில் வசிப்பவற்றின் எண்ணிக்கையை அவர்கள் குறைத்துவிட்டனர். ஓ! பலமிக்க மனம் கொண்டவனே {யுதிஷ்டிரா}, எஞ்சியவர்களான நாங்களே இப்போது {எங்கள் குலத்தின்} வித்தாக இருக்கிறோம். ஓ! மன்னர்களுக்கு மன்னா {யுதிஷ்டிரா}, உன் கருணையால் எங்களைப் பல்கிப் பெருக விடு” என்றன.

அழிக்கப்பட்டவை போக வித்துப் போல மீந்திருந்த அந்த மான்கள் அச்சத்துடன் நடுங்கிக் கொண்டிருப்பதைக் கண்ட நீதிமானான யுதிஷ்டிரன் பெரும் துயரால் தாக்கப்பட்டான். அனைத்து உயிர்களின் நன்மையைக் கருத்தில் கொண்ட அம்மன்னன் {யுதிஷ்டிரன்}, அவற்றிடம் {அந்த மான்களிடம்}, “அப்படியே ஆகட்டும். நீங்கள் சொன்னது போலவே செயல்படுகிறேன்” என்றான். இப்படிப்பட்ட காட்சியால் விழித்தெழுந்த அந்த அற்புதமான மன்னன் {யுதிஷ்டிரன்}, அந்த மான்களின் மீது இரக்கம் கொண்டு, அங்குக் கூடியிருந்த தனது தம்பிகளிடம், “கொல்லப்பட்டவை போக மீந்திருக்கும் அந்த மான்கள், இரவில் என்னை அணுகி அழைத்து, “நாங்கள் எங்கள் குலங்களின் நினைவுக் குறிப்புகளைப் போலவே எஞ்சியிருக்கிறோம். நீ அருளப்பட்டிரு. எங்களிடம் இரக்கங்கொள்” என்றன. அவை உண்மையையே பேசியுள்ளன. நாம் இந்தக் கானகவாசிகளிடம் {வனவிலங்குகளிடம்} பரிதாபம் கொள்ள வேண்டும். ஒரு வருடம் மற்றும் எட்டு மாதங்களாக நாம் அவற்றை உணவாகக் கொண்டிருக்கிறோம்.

எனவே, பாலைவனத்தின் தொடக்கத்தில், திருணபிந்து எனும் தடாகத்திற்கு அருகில், வனவிலங்குகள் நிறைந்த, கானகங்களில் சிறந்த, அழகிய காம்யக வனத்திற்கே நாம் மீண்டும் செல்வோம். அங்கே நமது மீத நாட்களை இனிமையாகக் கடத்துவோம்” என்றான். பிறகு, ஓ! மன்னா {ஜனமேஜயா}, அறநெறிகள் அறிந்த பாண்டவர்கள், தங்களுடன் இருந்த அந்தணர்கள் மற்றும் தங்களோடு வாழ்ந்தவர்களோடு, இந்திரசேனன் மற்றும் பிற பணியாட்களுடன் விரைவராக (அந்த இடத்திற்கு) சென்றனர். சோளம் மற்றும் தெளிந்த நீர் நிறைந்த, (பயணிகள்) நடக்கும் பாதை வழியாக முன்னேறி, கடைசியாகக் காம்யக வனத்தில் ஆன்மத் தகுதி உடையவர்கள் நிறைந்த புனிதமான ஆசிரமத்தைக் கண்டார்கள். தெய்வீக உலகங்களுக்குள் நுழையும் பக்திமான்கள் போல, பாரதக் குலத்தின் முதன்மையான அந்தக் கௌரவர்கள் {பாண்டவர்கள்}, அந்த அந்தணர்களில் காளைகளால் சூழப்பட்டு, அந்தக் கானகத்தில் {காம்யகத்திற்குள்} நுழைந்தார்கள்.

காம்யகம் வந்த வியாசர்! – வனபர்வம் பகுதி 257-காம்யக வனத்தில் பாண்டவர்களைச் சந்தித்த வியாசர்; தானம், தவம் ஆகியவற்றில் எது அதிகப் பலனைக் கொடுக்கும் என்ற விளக்கம்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “ஓ! பாரதகுலத்தின் காளையே {ஜனமேஜயா}, காட்டில் வசிக்கும் அந்த உயர் ஆன்ம பாண்டவர்கள், அவல நிலையிலேயே பதினோரு {11} வருடங்களைக் கழித்தனர். மகிழ்ச்சியை அனுபவிக்கத் தகுந்த அந்த மனிதர்களில் முதன்மையானவர்கள, தங்களுக்கு ஏற்பட்ட சூழ்நிலையால் அடைகாக்கும் நிலையை அடைந்து, பழங்களிலும், கிழங்குகளிலும் வாழ்ந்து, தங்கள் நாட்களைத் துன்பகரமாகவே கழித்தனர். அந்த அரசமுனியான பலமிக்கக் கரங்கள் கொண்ட யுதிஷ்டிரன், தன் தம்பிகளுக்கு நேர்ந்த இந்த எல்லை கடந்து துன்பம், தனது தவறாலேயே ஏற்பட்டது என்று நினைத்தான். தன் சூதாட்டச் செயலால் விளைந்த அந்தத் துன்பங்களை நினைத்துப் பார்த்த அவனால் {யுதிஷ்டிரனால்} நிம்மதியாக உறங்க முடியவில்லை. தன் இதயம் ஈட்டியால் துளைக்கப்பட்டதைப் போல உணர்ந்தான். சூத மகனின் {கர்ணனின்} கடுமையான வார்த்தைகளை நினைத்துப் பார்த்த அந்தப் பாண்டவன் {யுதிஷ்டிரன்}, தன் கோப விஷத்தை ஒடுக்கி, பெருமூச்சு விட்டபடி, தனது நேரத்தை எளிமையான தோற்றத்தில் கழித்தான். அர்ஜுனன், இரட்டையர் இருவர் {நகுலன் மற்றும் சகாதேவன்}, சிறப்புமிக்கத் திரௌபதி, மனிதர்களில் பெரும் பலம் படைத்த பராக்கிரமம் மிக்கப் பீமன் ஆகியோர், தங்கள் பார்வையை யுதிஷ்டிரன் மேல் செலுத்தும்போதெல்லாம் {அவன் நிலையைக் கண்டு} மிகவும் கசப்பான வலியை உணர்ந்தனர். (வனவாசக் கெடுவில்) மிகக் குறைந்த காலமே எஞ்சியிருப்பதை நினைத்துப்பார்த்து, கோபமும் நம்பிக்கையும் கொண்ட அந்த மனிதர்களில் காளையர், பல்வேறு முயற்சிகளையும் பயிற்சிகளையும் நாடி, தங்கள் உடல்களைப் பல்வேறு உருவங்களில் சமைத்தனர்.

சிறிது காலம் கழித்து வலிமைமிக்கத் துறவியும், சத்தியவதியின் மகனுமான வியாசர் பாண்டவர்களைக் காண அங்கே வந்தார். தங்களை நோக்கி அவர் வருவதைக் கண்ட குந்தியின் மகனான யுதிஷ்டிரன் முன்சென்று, அந்த உயர் ஆன்மா கொண்டவரை முறைப்படி வரவேற்றான். வியாசரை வணங்கி, அவரை மனம் நிறைய வைத்த புலன்களை அடக்கிய பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, அந்த முனிவர் அமர்ந்த பிறகு, அவர் சொல்வதைக் கேட்கும் வண்ணம், அவருக்கு முன்பு அமர்ந்தான். தனது பேரர்கள் மெலிந்து போய், காட்டில் கிடைப்பதை வைத்து உண்டு வாழ்வதைக் கண்ட அந்த வலிமைமிக்கத் தவசி {வியாசர்}, இரக்கத்தால் உந்தப்பட்டு, கண்ணீரால் தடைபட்ட குரலுடன், “ஓ! வலிமைமிக்கக் கரங்கள் கொண்ட யுதிஷ்டிரா, ஓ! அறம்சார்ந்த மனிதர்களில் சிறந்தவனே, கடும் தவம் புரியாதவர்கள் இவ்வுலகில் பெரும் மகிழ்ச்சியை அடைய முடியாது. மனிதர்கள் இன்பத்தையும் துன்பத்தையும் மாறி மாறியே அனுபவிக்கிறார்கள்; இது நிச்சயம். ஓ! மனிதர்களில் காளையே {யுதிஷ்டிரா}, எந்த மனிதனும் தடையற்ற மகிழ்ச்சியை அனுபவிப்பதில்லை. உயர்ந்த ஞானத்தைக் கொண்ட ஒரு ஞானி, வாழ்வு என்பது பள்ளம் மேடுகள் நிறைந்ததே என்பதை அறிந்து, இன்பத்தாலோ, துன்பத்தாலோ நிறைந்திருப்பதில்லை.

பயிரைத் {விதைகளைத்} தூவுபவன் {பயிரிடும் உழவன்}, காலத்தை உணர்ந்து, பயிரின் பலன்களை அனுபவிப்பதைப் போல, மகிழ்ச்சி வரும்போது ஒருவன் மகிழ்ந்திருக்க வேண்டும்; துன்பம் வரும்போது, அவன் அதைத் தாங்கிக் கொள்ள வேண்டும். தவத்திற்கு மேன்மையானது எதுவுமில்லை; தவத்தினால் ஒருவன் வலிமையான கனியை அடைகிறான். ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, தவத்தால் அடைய முடியாதது எதுவும் இல்லை என்பதை அறிந்து கொள். உண்மை, நேர்மை, கோபத்தில் இருந்து விடுதலை, நீதி, சுய அடக்கம், காரியங்களில் கட்டுப்பாடு, அசுத்தம் விலக்கல், சூதற்ற தன்மை, புனிதம், புலன்கள் ஒடுக்கம் ஆகியவை, ஓ! வலிமைமிக்க ஏகாதிபதியே {யுதிஷ்டிரா}, நற்செயல்கள் செய்யும் ஒரு மனிதனை சுத்தப்படுத்துகின்றன. தீமை மற்றும் மிருகத்தனமான வழிகளுக்கு அடிமையாக இருக்கும் மூடர்கள், இவ்வாழ்வுக்குப் பிறகு, மிருகத்தனமான பிறப்புகளை அடைந்து {மிருகங்களாகப் பிறந்து}, எப்போதும் மகிழ்ச்சியை அனுபவிப்பதில்லை. இவ்வுலகில் செய்யப்படும் செயல்களின் கனிகளையெல்லாம், {அம்மனிதன்} அடுத்த உலகில் அறுக்கிறான். எனவே, ஒருவன் தவத்தாலும், நோன்புகள் நோற்பதாலும் தனது உடலை கட்டுப்படுத்த வேண்டும்.

ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, சூதற்ற மகிழ்ச்சியான மனதுடன், {தானம்} பெறுபவர்களிடம் சென்று, அவருக்கு மரியாதை செலுத்தி, தனது சக்திக்குத் தக்க ஒருவன் தானம் அளிக்க வேண்டும். உண்மை பேசும் மனிதன், தொல்லைகளற்ற வாழ்வைப் பெறுகிறான். கோபம் களைந்த ஒருவன் நேர்மையை அடைகிறான். துர்குணம் களைந்த ஒருவன் உச்சபட்ச மனநிறைவை அடைகிறான். தனது புலன்களையும், உள்மனதையும் வென்ற ஒருவன், இன்னல்களை அறியமாட்டான். புலன்களை வென்ற ஒரு மனிதன் மற்றவர்களுடைய செழிப்பின் உயர்வைக் கண்டு பாதிப்படையமாட்டான். அனைவருக்கும் அவர்களுக்கு உரியதைக் கொடுத்து, வரங்களை அளிப்பவன், மகிழ்ச்சியை அடைந்து, அவனது இன்பத்திற்கான அனைத்துப் பொருட்களையும் அடைகிறான். பொறாமை களைந்த மனிதன் பூரண நிம்மதியை அடைகிறான். மரியாதைக்குரியவர்களை மரியாதையுடன் நடத்துபவன், சிறப்புமிக்கக் குலத்தில் பிறப்பை அடைகிறான். தன் புலன்களை வெல்பவன், தீப்பேறுகளைச் {துரதிர்ஷ்டங்களைச்} சந்திப்பதில்லை. நன்மையைத் தொடரும் மனதுடையவன் {நன்மை செய்ய விரும்புபவன்}, இயற்கைக்குத் தான் செய்ய வேண்டிய கடனை செலுத்துவதன் காரணமாக, நேர்மையான மனதுடையவனாக மீண்டும் பிறக்கிறான்” என்றார்.

யுதிஷ்டிரன் {வியாசரிடம்} கேட்டான், “ஓ! அறம்சார்ந்தவர்களில் சிறந்தவரே, ஓ! வலிமைமிக்கத் தவசியே {வியாசரே}, தானமளிப்பதிலும், தவம் மேற்கொள்வதிலும், அடுத்த உலகத்திற்குத் தேவையான கூடுதல் செயல்திறனை {அல்லது பலாபலனை = efficacy} எது கொடுக்கும்? பயில்வதற்கு {செய்வதற்கு} எது கடினமானது?” என்று கேட்டான்.

வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! குழந்தாய் {யுதிஷ்டிரா}, தானத்தைவிட இவ்வுலகில் பயில்வதற்குக் கடினமானது ஏதுமில்லை. செல்வத்தில் {அதைச் சம்பாதிப்பதில்} மனிதர்கள் அதிகத் தாகம் கொள்கின்றனர். செல்வமும் சிரமத்துடனே அடையப்படுகிறது. ஓ! பெருந்தன்மை கொண்டவனே, வீர மனிதர்கள், செல்வத்தை அடைவதற்காக, தங்கள் இன்னுயிரையும் கைவிட்டு {இன்னுயிர் மீதுள்ள பற்றைக் கைவிட்டு} கடலின் ஆழங்களுக்குள்ளும், கானகத்திற்குள்ளும் நுழைகின்றனர். செல்வத்திற்காக, சிலர் உழவு {விவசாயம்} செய்கின்றனர், சிலர் பசுக்களை வளர்க்கின்றனர், சிலர் சேவகம் செய்கின்றனர். எனவே, இத்தகு சிரமங்களுக்கு ஆட்பட்டு அடையும் செல்வத்தைத் துறப்பது மிகவும் கடினமாக இருக்கிறது. தானத்தைவிடப் பயில்வதற்குக் கடினமானது எதுவும் இல்லையென்பதால், வரங்களை அளிப்பது கூட, அனைத்திற்கும் மேன்மையானது என்பது எனது கருத்து.

குறிப்பாக ஒன்றை மனதில் கொள்ள வேண்டும். முறையாக அடைந்த செல்வத்தை, சரியான நேரத்தில், சரியான இடத்தில் பக்தியுள்ள மனிதர்களுக்குக் {தானம்} கொடுக்க வேண்டும். ஆனால், முறையற்று அடைந்த செல்வத்தைக் கொண்டு தானம் செய்பவன், மறுபிறவியின் தீமையில் இருந்து தப்ப முடியாது. ஓ! யுதிஷ்டிரா, குறித்த நேரத்தில், தகுந்த ஆளுக்கு {தானம் பெறுபவருக்கு}, சுத்தமான மனதுடன் சிறு தானத்தைச் செய்தால் கூட, {அந்த தானமளிக்கும் மனிதன்}, மறு உலகத்தில் வற்றாத பலன்களை அடைவான் என்பது தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக ஒரு பழங்கதை இருக்கிறது. முத்கலர், ஒரு துரோணம் [1] சோளத்தைத் தானம் செய்ததால் நல்ல பலனை அடைந்தார்.(சமஸ்க்ருதத்தில் ‘த்ரோணீ’ என்றால் வாளி போன்ற ஒரு பாத்திரம், அது போன்றதொரு பாத்திரத்தில் பிறந்ததாலேயே துரோணருக்கும் அவ்வாறு பெயர் வந்தது. துரோணம் என்பது ஒரு பாத்திர அளவாக இருக்கக்கூடும்.)

முத்கலரும்! துர்வாசரும்! – வனபர்வம் பகுதி 258-முத்கலர் மற்றும் துர்வாசகர் கதையை வியாசர் யுதிஷ்டிரனுக்கு உரைத்தல்; துர்வாசர் முத்கலரைச் சோதித்தால்; முத்கலரை அழைத்துச் செல்ல தேவ தூதன் வந்தது..

யுதிஷ்டிரன் {வியாசரிடம்}, “ஏன் அந்த உயர் ஆன்மா கொண்டவர் {முத்கலர்} ஒரு துரோணம் சோளத்தைத் தானமளித்தார்? ஓ! பக்தியில் பெரியவரே {வியாசரே}, யாருக்கு, எந்தக் குறிப்பிட்ட முறையில் அவர் தானமளித்தார்? இதை நீர் எனக்குச் சொல்லும். அனைத்தையும் சாட்சியாகக் கண்டு வரும், ஆறு குணம் கொண்டவனை {பரமாத்மாவை}, தனது பயிற்சிகளால் நிறைவு கொள்ள வைத்த அறம்சார்ந்த மனிதன், தன் பிறவிப் பயனை அடைந்தவனாவான் என நான் கருதுகிறேன்” என்றான்.

வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, முத்கலர் என்ற பெயரில் ஒரு அறம்சார்ந்த மனிதர் (தவசி) வாழ்ந்து வந்தார். அவர் உண்மையுள்ளவராகவும் {சத்தியவானாகவும்}, தீக்குணத்தை விலக்கியவராகவும், புலன்களை அடக்கியவராகவும் இருந்தார். அவர் {முத்கலர்} சிலம், உஞ்சம் [1] ஆகிய வாழ்வுமுறைகளைப் பின்பற்றிவந்தார். {தானியங்களைச் சேர்த்து} ஒரு புறாவைப் போல வாழ்ந்து வந்தாலும், வலிமைமிக்கத் தவத்தகுதி கொண்டு அவர் {முத்கலர்}, விருந்தினர்களை உபசரித்து, இஷ்டிகிரிதா என்றழைக்கப்படும் வேள்வியையும், மற்றும் பிற சடங்குகளையும் செய்தார். தன் மகன் மற்றும் தன் மனைவியுடன் இருந்த அந்தத் தவசி {முத்கலர்} பதினைந்து நாட்களுக்கு உண்டு, மீதி பதினைந்து தினங்களுக்குப் புறா வாழ்வு வாழ்ந்தார் {அதாவது தானியங்களைச் சேகரித்தார்} {And that sage together with his son and wife, ate for a fortnight, and during the other fortnight led the life of a pigeon, collecting a drona of corn.}. தர்சம், பௌர்ணமாஸ்யம் ஆகிய வேள்விகளைச் செய்த அந்தச் சூதற்றவர் {முத்கலர்}, தேவர்களுக்கும், விருந்தினர்களுக்கும் படைத்த பின்பு  மீந்ததையே உண்டு தன் நாட்களைக் கடத்தி வந்தார்.

மங்களகரமான சந்திர நாட்களில், மூன்று உலகங்களுக்கும் தலைவனான இந்திரன், தேவர்கள் துணையுடன் தானே அங்கு வந்து, ஓ! வலிமைமிக்க ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, அவரது {முத்கலரின்} வேள்வியில் காணிக்கையாகத் தரப்படும் உணவை உண்டு வந்தான். முனிவர்களின் வாழ்வு முறையைப் பின்பற்றி வந்த அவர் {முத்கலர்}, அது போன்ற நாட்களில் வந்த விருந்தினர்களுக்கு, மகிழ்ச்சி நிறைந்த இதயத்தோடு உணவு கொடுத்து உற்சாகமூட்டினார். அந்த உயர் ஆன்மா கொண்டவர் {முத்கலர்}, சுறுசுறுப்புடன் தன் உணவைப் பகிர்ந்தளித்த போது, மீதியிருந்த துரோணம் அளவு சோளம், மேலும் விருந்தினர்கள் தோன்றியதும் {வந்ததும்} பெருகலாயிற்று. சுத்தமான மனம் கொண்ட அவரது {முத்கலரின்} அறத்தால், அத்தவசி {முத்கலர்} தானம் செய்த உணவு, நூற்றுக்கணக்கான அந்தணர்கள் பசியாறும் அளவுக்குப் பெருகிற்று.

ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, நோன்புகள் நோற்கும் அறம் சார்ந்த முத்கலரைப் பற்றிக் கேள்விப்பட்ட துர்வாசர், வெட்டவெளியை மட்டுமே மறைப்பாகக் {ஆடையாகக்} கொண்டு [2], வெறி பிடித்தவனைப் {பைத்தியக்காரனைப்} போல வேடம் பூண்டு, முடியில்லாத தலையுடன் அங்கே வந்து {முத்கலரிடம் வந்து}, ஓ! பாண்டவா {யுதிஷ்டிரா}, {முத்கலரை} அவமதிக்கும் பல்வேறு வார்த்தைகளைப் பேசினார். அந்த முனிவர்களின் சிறந்தவர் {துர்வாசர்}, அந்த அந்தணரிடம் {முத்கலரிடம்} வந்து, “ஓ! அந்தணர்களில் முதன்மையானவனே {முத்கலா}, உணவை நாடி இங்கே நான் வந்திருக்கிறேன் என்பதை அறிவாயாக” என்றார். அதற்கு முத்கலர் அந்தத் தவசியிடம் {துர்வாசரிடம்}, “நீர் வரவேற்கப்படுகிறீர்” என்றார்.

விருந்தினர்களைப் பசியாற்றும் நோன்பிருந்தவர் {முத்கலர்}, பசியால் பாதிக்கப்பட்டு வெறிபிடித்தவர் போல இருந்த அந்தத் தவசிக்கு {துர்வாசருக்கு}, கால் கழுவவும், வாய் கழுவவும் நீர் கொடுத்து, அவர் முன்னிலையில் அற்புதமான உணவை வைத்தார். பசியால் துன்புற்ற அந்தக் கடும் முனிவர் {துர்வாசர்}, தனக்குக் காணிக்கையாக்கப்பட்ட அனைத்து உணவையும் முழுமையாக உண்டார். அதனால், முத்கலர் மீண்டும் அவருக்கு {துர்வாசருக்கு} {தன்னிடம் இருந்த அனைத்து உணவையும் கொண்டு} உணவளித்தார். பிறகு அந்த உணவு அனைத்தையும் உண்டு முடித்த அவர் {துர்வாசர்}, அசுத்தமான மீந்த உணவை தன் மேனியில் பூசிக்கொண்டு, தான் எங்கிருந்து வந்தாரோ அங்கேயே சென்றுவிட்டார்.

இதே போலவே, அடுத்து வந்த காலத்திலும் {அடுத்த பதினைந்து தினத்திலும்}, அவர் மீண்டும் வந்து, உஞ்ச வாழ்வு முறை வாழ்ந்து வந்த ஞானியால் {முத்கலரால்} படைக்கப்பட்ட உணவனைத்தையும் உண்டார். அதனால், உணவு உண்ணாத நிலையில் இருந்த தவசியான முத்கலர் மீண்டும் உஞ்ச வாழ்வுமுறையை மேற்கொண்டு சோளம் சேகரிப்பதில் மீண்டும் ஈடுபட்டார். பசியால் அவரது உள்ளச்சமநிலையைக் {மன அமைதியை [அ] பற்றற்ற தன்மையைக்} கலைக்க முடியவில்லை. கோபம், சூது, இழிந்த உணர்வு, கிளர்ச்சி ஆகியவற்றால் உஞ்ச வகை வாழ்வு வாழ்ந்து, தன் மனைவி மற்றும் மகனுடன் இருந்த அந்த அந்தணர்களில் சிறந்தவரின் {முத்கலரின்} இதயத்திற்குள் நுழையமுடியவில்லை.

இப்படி, துர்வாசர், தொடர்ந்து வந்த ஆறு காலங்களிலும் உஞ்ச வகை வாழ்வு வாழ்ந்து வந்த அந்தத் தவசிகளில் சிறந்தவர் {முத்கலர்} முன்பு பல முறை சென்றார். இருப்பினும், அந்த முனிவரால் {துர்வாசரால்}, முத்கலரின் இதயத்தில் எந்தக் கிளர்ச்சியையும் காண இயலவில்லை. சுத்தமான ஆன்மாவைக் கொண்ட அந்தத் துறவியின் சுத்தமான இதயம், எப்போதும் சுத்தமாக இருப்பதைக் கண்டார். அதனால் மனம் நிறைந்த அந்தத் தவசி {துர்வாசர்}, முத்கலரிடம், “உன்னைப் போன்ற சூதற்றவனும், தானம் செய்பவனும் இவ்வுலகில் இல்லை. பசியின் வேட்கை நேர்மையான உணர்வை வெகு தூரத்திற்கு ஓட்டி, மனிதர்களின் பொறுமை அனைத்தையும் இழக்க வைக்கும். சுவையை விரும்பும் நாக்கு, மனிதர்களை, அவற்றை நோக்கி ஈர்க்கும். உணவாலேயே உயிர் நிலைத்திருக்கிறது. மேலும் மனமானது நிலையற்றதாகவும், அடக்கிவைக்கக் கடினமானதாகவும் இருக்கிறது. குவிந்த நிலையில் உள்ள மனமும், புலன்களும் {கொண்ட நிலை} நிச்சயமாகத் தவத்துறவே என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வலிகளால் அடைந்தவற்றைச் சுத்தமான மனதுடன் கைவிடுவது மிகக்கடினமாகும். இருப்பினும், ஓ! பக்திமானே {முத்கலா}, இவை அனைத்தும் உன்னால் முறையாக அடையப்பட்டுள்ளது. உனது துணையால் நாம் கடமையுணர்ச்சியையும், மனநிறைவையும் உணர்கிறோம். சுயக்கட்டுப்பாடு, மனோபலம், நீதி, புலன் மற்றும் உள்ளுணர்வு அடக்கம், கருணை, நல்லொழுக்கம் ஆகிய இவை அனைத்தும் உன்னில் நிலைபெற்றிருக்கின்றன. உனது செயல்களால் நீ பல உலகங்களை வென்றுவிட்டாய். அதனால், அருள் உலகங்களுக்குச் செல்லும் வழிகளை நீ அடைந்துவிட்டாய். ஆ! சொர்க்கவாசிகள் கூட உனது தானத்தைப் பெருஞ்செயல் எனப் பிரகடனம் செய்கிறார்கள். ஓ! நோன்புகள் நோற்பவனே {முத்கலா}, நீ உனது உடலுடன் சொர்க்கத்திற்குச் செல்வாய்” என்றார் {துர்வாசர்}.

முனிவர் துர்வாசர் இப்படிப் பேசிக்கொண்டிருந்தபோது, முத்கலர் முன்பு, ஒரு தேவ தூதன் தோன்றினான். அவன் {தேவ தூதன்}, அன்னங்களும் கொக்குகளும் பூட்டப்பட்டு, கிண்கிணி மணிகள் நிறைந்து, தெய்வீக நறுமணத்துடன், அழகாக வண்ணம் பூசப்பட்டிருந்த, நினைத்த இடம் செல்லக்கூடிய ஒரு தேரில் வந்திருந்தான். அவன் {தேவதூதன்}, அந்த அந்தண முனிவரிடம் {முத்கலரிடம்}, “ஓ தவசியே {முத்கலரே}, உமது செயல்களால் நீர் அடைந்த இத்தேரில் ஏறும். உமது தவத்தின் கனியை நீர் அடைந்துவிட்டீர்” என்றான்.

அந்தத் தேவர்களின் தூதன் இப்படிப் பேசிக் கொண்டிருந்தபோது, அந்தத் தவசி {முத்கலர்} அவனிடம் {தேவ தூதனிடம்}, “ஓ! தேவதூதா, அங்கே {தெய்வலோகத்தில்} வசிப்பவர்களின் குணங்களை நீர் எனக்கு விவரித்துச் சொல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவர்களுக்குத் தவம் எது? அதற்கான காரணங்கள் யாது? ஓ! தேவர்களின் தூதனே, சொர்க்கத்தில் நிலவும் மகிழ்ச்சிக்கு எது காரணம்? அதனால் ஏற்படும் பாதகம் என்ன? பக்திமான்களுடன் நட்புடன் இருப்பது என்பது, ஏழு பதங்களால் {சொற்கள் அல்லது காலடிகள்} அடையப்படுகிறது என்று நல்ல குலத்தில் பிறந்த அறம்சார்ந்த மனிதர்களால் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. ஓ! தலைவா {தேவதூதா}, அந்த நட்பின் பேரால் நான் உன்னிடம் கேட்கிறேன், “தயங்காமல் நீ எனக்கு உண்மையைச் சொல். அதுவே இப்போது எனக்கு நன்மையைப் பயக்கும். நீ சொல்வதைக் கேட்ட பிறகு, உனது வார்த்தைகளின் படி, நான் எவ்வழியைத் தொடர வேண்டும் என்பதை நான் உறுதி செய்வேன்” என்றார் {முத்கலர்}

சொர்க்கத்தை மறுத்த முத்கலர்! – வனபர்வம் பகுதி 259-சொர்க்கம், நிலையற்றது என்றெண்ணிய முத்கலர் சொர்க்கத்தை ஏற்க மறுத்தது; முத்கலரின் கதையைச் சொன்ன வியாசர் திரும்பிச் சென்றது.

தேவர்களின் தூதுவன் {முத்கலரிடம்}, “ஓ! பெரும் தவசியே {முத்கலரே}, நீர் குறைந்த அறிவுள்ளவராக இருக்கிறீர்; பெரும் புகழைத் தரத்தக்க தெய்வீக அருளை அடைந்தும், ஞானமற்ற மனிதரைப் போல இன்னும் தீர்மானித்துக் கொண்டிருக்கிறீர். ஓ! முனிவரே {முத்கலரே}, சொர்க்கம் என்று அறியப்படும் பகுதி, நமக்கு மேலே இருககிறது. கோபுரத்தின் உயரங்களுக்கு மேலே இருக்கும் அது, ஓ! தவசியே {முத்கலரே}, எப்போதும் தெய்வீகத் தேர்கள் பயணிக்கும் அற்புதமான பாதைகளைக் கொண்டிருக்கிறது. நாத்திகர்கள், உண்மையற்றவர்கள், தவம் பயிலாதவர்கள், பெரும் வேள்விகளைச் செய்யாதவர்கள் ஆகியோர் அங்குச் செல்ல முடியாது. அறம்சார்ந்த ஆன்மா கொண்டவர்கள், மனதை அடக்கியவர்கள், தங்கள் உணர்வுகளை அடக்கியவர்கள், தங்கள் புலன்கள் அனைத்தையும் கட்டுக்குள் வைத்திருப்பவர்கள், தீமை விலக்கியவர்கள், தானம் செய்வதில் முனைப்புடன் இருப்பவர்கள், புலன்களையும், உள்ளுணர்வுகளையும் வென்று, போர்வடுக்களை மேனியில் தாங்கிய மனிதர்கள் மட்டுமே அந்தப் பகுதிகளை அடைய முடியும். ஓ! அந்தணரே {முத்கலரே}, நற்செயல்கள் செய்பவர்களால் அடையப்படும் அவ்வுலகங்களில் பக்திமான்களே வசிக்கின்றனர்.

தேவர்கள், சத்யசுகள், வைஸ்வசுகள், பெரும் தவசிகள், யமன்கள், தர்மர்கள், கந்தர்வர்கள் மற்றும் அப்சரசுகளுக்குச் சொந்தமான, விரும்பிய அனைத்துப் பொருட்களையும் வழங்கவல்ல, அழகான, பளபளப்பான மற்றும் பிரகாசமான உலகங்கள் அங்கே {சொர்க்கத்தில்} இருக்கின்றன. அங்கேதான், மலைகளின் ஏகாதிபதியான பொன் மேரு முப்பத்துமூவாயிரம் யோஜனைகள் பரப்பிற்குப் பரந்திருக்கிறது. ஓ! முத்கலரே, அங்கேதான், நற்செயல்கள் புரிந்த மனிதர்கள் விளையாடும் நந்தனத்தைத் தலைமையாகக் கொண்ட தேவர்களின் தோட்டங்கள் இருக்கின்றன. அங்கே {சொர்க்கத்தில்} பசி, தாகம், சோர்வு, அச்சம், அருவருக்கத்தக்கவை, அமங்களமானவை ஆகியன கிடையாது. அந்த இடத்தின் நறுமணம் இனிமையானது. அங்கே இருக்கும் தென்றல் தீண்டலுக்கு அருமையானது. ஓ! தவசியே {முத்கலரே}, செவி மற்றும் இதயத்தைக் கொள்ளையிடும் அனைத்து ஒலிகளும் அங்கே இருக்கின்றன. துக்கம், மூப்பு, உழைப்பு, பின்னிரக்கம் {தான் செய்த குற்றத்திற்காக வருந்துவது} ஆகியன அங்கே கிடையாது.

ஓ! முனிவரே {முத்கலரே}, ஒருவரது சொந்தச் செயல்களின் கனியாகப் பெறப்படும் அவ்வுலகம், இந்த இயல்பைக் கொண்டதாகவே இருக்கிறது. தாங்கள் செய்யும் நற்செயல்களின் காரணமாக மனிதர்கள் அங்கே செல்கிறார்கள். அங்கே வசிக்கும் மனிதர்கள், ஓ! முத்கலரே, தந்தையர் மற்றும் தாய்மார்களின் தகுதியால் அல்லாமல், தான் செய்யும் செயல்களில் உள்ள நற்தன்மையினாலேயே பிரகாசமாக இருக்கின்றனர். அங்கே வேர்வையோ, துர்நாற்றமோ, சிறுநீரோ கிடையாது. ஓ! முனிவரே {முத்கலரே}, அங்கே ஒருவரது ஆடைகளில் தூசு ஒட்டுவதில்லை. அவர்களது தெய்வீக மணம் கமழும் அற்புதமான {மலர்} மாலைகள், நறுமணமிக்கதாக இருக்கிறது. அவை ஒருபோதும் வாடுவதில்லை. ஓ! அந்தணரே {முத்கலரே}, அவர்கள் (நான் கொண்டு வந்திருக்கும்) இத்தகு தேர்களிலேயே பயணிக்கின்றனர். ஓ! வலிமைமிக்கத் தவசியே {முத்கலரே}, பொறாமை, துன்பம், களைப்பு, அறியாமை, துர்க்குணம் ஆகியவற்றைக் களைந்து, சொர்க்கத்தை அடைந்த மனிதர்கள், அப்பகுதிகளில் மகிழ்ச்சியாக வசிக்கின்றனர். ஓ! முனிவர்களில் காளையே {முத்கலரே}, இத்தகு பகுதிகளுக்கு மேலே, அதற்கும் மேலே எனப் பிற உயர்ந்த தெய்வீக அறம் நிறைந்தவர்கள் உள்ள உலகங்கள் இருக்கின்றன. இவற்றில், அழகும், பிரகாசமும் மிக்கப் பிரம்ம லோகம் முதன்மையானதாக இருக்கிறது.

அங்கே, ஓ! அந்தணரே {முத்கலரே}, நற்செயல்களால் புனிதமடைந்த முனிவர்கள் செல்கின்றனர். அங்கே ருபுக்கள் என்ற பெயர் கொண்ட குறிப்பிட்ட சிலர் வசிக்கின்றனர். அவர்கள் {ருபுக்கள்} தேவர்களுக்கும் தேவர்களாக இருக்கின்றனர். அவர்களுடைய பகுதிகள் மிகவும் அருள் நிறைந்தவையாக இருக்கின்றன. அவை தேவர்களாலும் வழிபடப்படுகின்றன. அவை தங்கள் சுய ஒளியால் பிரகாசித்து, விரும்பும் அனைத்துப் பொருட்களையும் கொடுக்கின்றன. அவர்களுக்கு {ருபுக்களுக்கு} பெண்களால் ஏற்படும் துன்பங்கள் இல்லை; அவர்கள் செல்வங்களை அடைவதில்லை; அவர்கள் சூதற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தானங்களாலோ, அமுதத்தாலோ வாழவில்லை. அவர்கள் புலன்களுக்குப் புலப்படாத தெய்வீக உருவங்களைக் கொண்டிருக்கின்றனர். தேவர்களுக்கு நித்தியமான தேவர்களான இவர்கள் மகிழ்ச்சியின் நிமித்தமாக மகிழ்ச்சியை விரும்புவதில்லை. கல்ப புரட்சியின் போதும் அவர்கள் மாற்றமடைவதில்லை. அவர்களுக்கு {ருபுக்களுக்கு} இன்பமுமில்லை, துன்பமுமில்லை. அப்படி இருக்கும்போது, ஓ! முனிவரே {முத்கலரே}, அவர்களுக்குக் கோபமோ, வெறுப்போ எப்படி ஏற்படும்?

ஓ! முத்கலரே, அவர்களது இந்த உயர்ந்த நிலை தேவர்களாலும் பேராசையுடன் விரும்பப்படுகிறது. அடைய கடினமான அந்த முடிசூட்டப்பட்ட விடுதலையை, விருப்பங்களுக்கு ஆட்படும் மனிதர்களால் அடையவே முடியாது. அந்தத் தேவர்களின் {ருபுக்களின்} எண்ணிக்கை முப்பத்துமூன்று {33} ஆகும். அவர்களது பகுதிகளுக்கு, அற்புத நோன்புகள் நோற்றவர்களும், விதிப்படி தானங்கள் அளித்தவர்களும் செல்கிறார்கள். நீரும் உமது தானங்களின் வெற்றியால் அவற்றை எளிதாக அடைந்துவிட்டீர். நீரும் உமது நற்செயல்களால் அடைந்த நிலையை, உமது தவத்துறவுகளால் அடைந்த அறத்தின் பிரகாசத்தைக் கொண்டு அனுபவிப்பீராக. ஓ! அந்தணரே {முத்கலரே}, பல உலகங்களைக் கொண்ட சொர்க்கத்தின் அருள்நிலை இதுவே.

இப்படியே தெய்வீக உலகங்களின் அருள்நிலையை நான் உமக்குச் சொல்லிவிட்டேன். இப்போது அங்கே {சொர்க்கத்தில்} இருக்கும் சில குறைபாடுகளையும் கேளும். தெய்வீக உலகங்களில் இருக்கும் ஒரு மனிதன், தனது செயல்களுக்கான கனியை அறுத்துக் கொண்டிருக்கும்போது {செயல்களின் பலனைப் பெற்றுக் கொண்டிருக்கும்போது}, எந்தப் பிறவற்றிலும் ஈடுபடமுடியாது. தன் முந்தைய பிறவியின் பலன்களை, அவை தீரும் வரை அனுபவிக்க வேண்டும். பிறகு, தன் தகுதிகளை இழந்த உடன், அவ்வளவு பெரிய உயர்ந்த நிலையில் இருந்து அவர்கள் விழ நேரிடும். அதுவே சொர்க்கத்தின் குறைபாடு என்பது எனது கருத்து. ஓ! முத்கலரே, இன்பத்தில் மூழ்கிய மனம் கொண்ட மனிதன் விழ நேர்வது களங்கம் என்றே சொல்ல வேண்டும். மிக மங்களகரமான பிரகாசமான பகுதியில் இருந்து, தாழ்ந்த நிலை செல்லும் ஒருவன் அதிருப்தியும் வருத்தமும் கொள்வது, தாங்கிக் கொள்வதற்கு மிகக் கடினமானதாக இருக்கும். அப்படி விழுபவனின் மனம் அறியாமையில் மூழ்கி, உணர்ச்சிகளால் கலங்கடிக்கப்படுகிறது. {அங்கிருந்து} விழுவதற்கு முன்னால் மாலைகள் வாடுகிறது. அது அவர்களது இதயத்திற்கு அச்சத்தை ஊட்டுகிறது. ஓ! முத்கலரே, இந்தப் பெரும் குறைபாடுகள் பிரம்ம லோகம் வரை கூட நீள்கிறது.

இந்தத் தெய்வீக உலகங்களில், மனிதர்களின் நற்செயல்களால் செய்யப்பட்ட அறங்கள் எண்ணற்றவையாகும். ஓ! முனிவரே, அப்படி விழுபவர்கள், மனிதர்களிடையே தங்கள் பிறப்பை அடைவது, அவர்கள் பெற்றிருக்கும் தகுதிகளாலேயே ஆகும். பிறகு அவர்கள் பெரும் நற்பேறையும் மகிழ்ச்சியையும் அடைகிறார்கள். எனினும், இங்கே ஞானத்தை அடைய முடியாதவர்களால், தாழ்ந்த பிறப்பு அடையப்படுகிறது. இந்த உலகத்தில் செய்யப்படும் செயல்களின் கனிகள், அடுத்த உலகத்தில் அறுக்கப்படுகின்றன. ஓ! அந்தணரே {முத்கலரே}, இது {இவ்வுலகம்} செயல்களின் உலகம் என்றும், மற்றவை கனிகளின் {பலன்களின்} உலகம் என்றும் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. இப்படியே, ஓ! முத்கலரே! நீர் கேட்டது அனைத்தும் குறித்து விவரித்துவிட்டேன். இப்போது, ஓ! பக்திமானே {முத்கலரே}, உமது கருணையால், நாம் இங்கிருந்து விரைவாகக் கிளம்புவோம்” என்றான் {தேவ தூதன்}.

வியாசர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “இப்பேச்சைக் கேட்ட முத்கலர், மனதில் ஆலோசித்தார். ஆழ்ந்து ஆராய்ந்த பிறகு, அந்த முனிவர்களில் சிறந்தவர் {முத்கலர்}, அந்தத் தேவ தூதனிடம், “ஓ! தேவர்களின் தூதா, நான் உன்னை வணங்குகிறேன். ஓ! தந்தையே, நீ இங்கிருந்து அமைதியுடன் செல்வாயாக. எனகு இன்பத்தாலோ, இத்தகு பெரிய குறைபாடுகள் உடைய சொர்க்கத்தாலோ அடைய வேண்டியது ஒன்றுமில்லை. சொர்க்கத்தில் இன்புற்றிருக்கும் மனிதர்கள், அனைத்திற்கும் பிறகு, இவ்வுலகில் துன்பத்தையும், எல்லையற்ற வருத்தத்தையும் அடைகின்றனர். எனவே, நான் சொர்க்கம் செல்ல விரும்பவில்லை. எந்த உலகங்களில் மனிதர்கள் புலம்பத் தேவையில்லையோ, வலியடைய வேண்டியதில்லையோ, கிளர்ச்சியடைய வேண்டியதில்லையோ, அத்தகு வீழாத உலகை அடைய நான் முயல்வேன். தெய்வீக உலகங்களின் பெரும் குறைகளை நீ எனக்கு விவரித்தாய். இப்போது குறைகளற்ற உலகத்தை எனக்கு விவரிப்பாயாக” என்றார் {முத்கலர்}.

அதன் பேரில் தேவ தூதுவன் {முத்கலரிடம்}, “பிரம்மனின் வசிப்பிடத்திற்கு மேலே பரப்பிரம்மம் என்று அழைக்கப்படும் சுத்தமான, நித்தியமான, ஒளிரும் தன்மையை உடைய விஷ்ணுவின் இடம் இருக்கிறது. ஓ! அந்தணரே {முத்கலரே}, புலன்நுகர் பொருட்களுடன் தொடர்புடைய எந்த மனிதரும் அங்கே செல்ல முடியாது. ஆணவம், பேராசை, அறியாமை, கோபம் மற்றும் பொறாமை ஆகியவற்றுக்கு ஆட்படும் எந்த மனிதனும் அங்கே செல்ல முடியாது. பாசத்திலிருந்து விடுபட்டு, தற்பெருமையில் இருந்து விடுபட்டு முரண்படும் உணர்வுகளில் இருந்து விடுபட்டு, புலன்களைக் கட்டுப்படுத்தி, சிந்தனையிலும் யோகத்திலும் ஆழ்ந்து செல்லும் மனிதர்களே அங்கே {விஷ்ணுலோகத்திற்குச்} செல்ல முடியும்” என்றான் {தேவதூதன்}.

இவ்வார்த்தைகளைக் கேட்ட அம்முனிவர் {முத்கலர்}, தேவ தூதனை வழியனுப்பினார். பிறகு உஞ்ச வகை வாழ்வு வாழும் அந்த அறம் சார்ந்தவர் {முத்கலர்}, முழு மனநிறைவை அடைந்தார். பிறகு, புகழ்ச்சியும், இகழ்ச்சியும் அவருக்குச் சமமானது; செங்கற்கட்டியும், கல்லும், தங்கமும் ஒரே அம்சமாக அவரது கண்களுக்குத் தெரிந்தது. பிரம்மத்தை எட்டுவதற்கான வழிகளைப் பெற்ற அவர், முழுதும் தியானத்திலேயே ஈடுபட்டார். பிறகு ஞானத்தால் சக்தியை அடைந்த அவர், அற்புதமான புரிதலை அடைந்து, நித்தியமாகக் கருதப்படும் உச்சநிலையான விடுதலையை {முக்தியை} அடைந்தார்.

எனவே, ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, நீயும் வருந்தக்கூடாது, உண்மையில் வளமான பேரரசை இழந்தாய். ஆனால், உனது தவத்தின் காரணமாக நீ அவற்றை மீட்பாய். அச்சில் சுழலும் ஒரு சக்கரத்தின் சுற்றளவில் இருக்கும் புள்ளியைப் போல, இன்பத்திற்குப் பின்பு துன்பமும், துன்பத்திற்குப் பின்பு இன்பமும், மாறி மாறி மனிதர்களுக்கு வருகின்றன. பதிமூன்றாவது {13} வருடத்தைக் கடந்த பிறகு, அளவிடமுடியாத வலிமைகொண்ட நீ, உன் தந்தை மற்றும் பாட்டனின் நாட்டை மீண்டும் பெறுவாய். எனவே, உனது இதயத்தில் இருக்கும் நோய் விலகட்டும்” என்றார் {வியாசர்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பாண்டுவின் மகனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} இதைச் சொன்ன வழிபடத்தகுந்த வியாசர், தவம் பயில்வதற்காகத் தனது ஆசிரமத்திற்குத் திரும்பினார்.”

கோஷ யாத்ரா  பர்வம் முற்றிற்று

———————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading