ஸ்ரீ பிரஹ்மாண்ட புராணத்தில் மஹேஸ்வர நாரத ஸம்வாதத்திலுண்டான ஸ்ரீ பிருந்தாவன ஷேத்திரமென்னும் மயிலை திருஅல்லிக்கேணி மஹாத்மியம்–

ஸ்ரீ பிரஹ்மாண்ட புராணத்தில் மஹேஸ்வர நாரத ஸம்வாதத்திலுண்டான ஸ்ரீ பிருந்தாவன ஷேத்திரமென்னும் மயிலை திருஅல்லிக்கேணி மஹாத்மியம்

ஸ்ரீ ஸதாசிவ மூர்த்தியானவர் ஸ்ரீ கைலாசத்தில் சிவ கணங்களும், சித்த கணங்களும், தேவ கணங்களும், ரிஷி கணங்களும் புடை சூழ, ரத்ன ஸிம்ஹாஸநத்தில் கொலு வீற்றிருக்கின்ற சமயத்தில் நாரத பகவானானவர் உமா மஹேசரைப் பார்த்து, ஸ்வாமீ! நீர் சொல்லிக் கொண்டு வந்த பரப்பிரம்ஹ மூர்த்தியான ஸ்ரீமந் நாராயணன் வாசஞ் செய்யும் திவ்ய தேச மஹாத்மியங்களைக் கேட்டு மிகவும் ஆனந்தத்தை யடைந்தேனாயினும், நான் ருஷி சிரேஷ்டர்கள் நித்ய வாசஞ்செய்யும் நைமிஸாரண்யத்தைக் கிட்டிய போது, அங்கு ஸப்த ருஷிகளையும் மற்றுமுள்ள ருஷிகளையுங் கண்டேன். அவர்கள் மத்தியில் ஸனத்குமாரர் அஷ்ட வஸூக்களின் நடுவே யிருக்கும் இந்திரனைப் போல் வீற்றிருந்து மற்ற ருஷிகள் சொல்லும் பகவத் குணானுபவங்களைக் கேட்டுக் கொண்டிருக்கும் போது சௌனகர் அந்த ஸனத்குமாரரைப் பார்த்து ஸ்வாமீ ! முன்னம் ஜம்பூத்வீபத்தில் கெளமோதக
தாரியான புராண புருஷனுக்கு நித்திய வாஸஸ்தானங்களான ஸ்ரீரங்கம், வேங்கடாத்ரி, ஹஸ்தி ஸைலம் முதலான நூற்றெட்டுத் திவ்ய தேசங்களென்று சொல்லி இருக்கின்றீரே; அந்த திவ்ய தேசங்களின் வைபவங்களைக் கிரமமாகச் சொல்ல வேண்டுமென்று
கேட்க ; அப்போது ஸனத்குமாரர் செனகரைப் பார்த்துக் கிரமமாகச் சொல்லிக் கொண்டு வருகையில் நூற்றெட்டுத் திவ்ய தேசங்களுக்குள் மிகச் சிறப்புற்றோங்கிய திவ்ய தேசம் மயிலை பிருந்தாவன் க்ஷேத்திரமென்றும் அது ஸ்ரீமந் நாராயணனுக்கு வாசஸ்தான மென்றும் ஐஹிக ஆமூஷ்மிக ஸகல புருஷார்த்ங்களையும் கொடுக்கத்தக்கதென்றும், அந்த பிருந்தாவனத்திலே விஷ்ணுவிற்கு ஐந்து விதமான திவ்யமங்கள் விக்ரஹ ஸ்வரூபங்களுண்டா யிருக்கின்ற தென்றுஞ் சொல்லக்கேட்டு அந்தப் பிருந்தாவன வைபவங்களைத் தேவரீரிடத்தில் ஸவிஸ்தாரமாகத் தெரிந்து கொள்ளலாமென்று வந்தே
னென்று சொன்ன நாரத முனிவரைப் பார்த்து சிவபிரான் சொல்லுகின்றார்.

வாநீர் நாரதரே! பிருந்தாரண்யத்தின் மஹாத்மியத்தையும், அங்கெழுந்தருளி யிருக்கும் ஐந்து விதமான விஷ்ணு மூர்த்தியின் பெருமையையும், தீர்த்த மஹிமையையும், பிரம்ஹாதி தேவர்கள் ருஷிகள் முதலிய யாவராலுஞ்சொல்ல முடியாதாயினும் பக்தியுடன்
கேட்ட வுமக்கு நானறிந்த மாத்திரஞ் சொல்லுகின்றேன், கேளும்-என்று சொல்லத் தொடங்கினார்.
மயிலையின் சிறப்பு.
பூர்வம் நீரறிந்து, நித்யசூரிகளாலும், பிரம்ஹாதி தேவர்கள் ருஷிகள் முதலானவர்களாலும், ஆராதித்துக் கொண்டு வரும்படியான, பூலோகத்திலுள்ள திருநீர்மலை என்னுந் திவ்ய தேசத்திற்கு வடகிழக்கான ஈசான்ய திக்கிலே ஓர் ஐப்பசி மாஸம் ஸதய நக்ஷத்ரத்தில் நீர் நிறைந்த ஒர் ஓடையில் செவ்வல்லிப்பூ வொன்றில் திருவவதரித்து, ஓடித் திரியும் யோகிகளான தத்துவதரிசிகளிற் சிறந்தவராய் அனாதியான கேசவனுக்கு அந்தரங்கரான
மஹதாஹ்வயர்
அவதாரத்திற்கு ஸ்தானமாகியும், நவரத்ன கசிதமான மாட மாளிகைகளாலே அலங்கிருதமாகியு மிரா நின்ற மயூர நகரியை மூன்று லோகங்களிலும் பிரசித்தமான விருஷபுனென்னும்,ராஜ சிரேஷ்டன் பிரம்ஹாவைத் தபசினாலே சந்தோஷிப்
பித்து விசுவகர்மாவைக் கொண்டு ஸ்ருஷ்டிப்பித்தான்.
அந்த பட்டணத்தில் ஷண்முகன், சூத்ர ஜன்மாவான மந்தாரகனென்னும் ஒரு ருஷிக்குப் பிரசன்னனாகி அவர் வேண்டும் வரங்களைக் கொடுத்து வாத்ஸல்யத்தாலே ஸ்வார்க்கத்தைப் பார்க்கிலும்
மிகவுகந்து வாசத்திற்கு யோக்கியமாய் எப்போதும் க்ரீடத்துக் கொண்டிருக்கிறான்.
திவ்யகந்த திவ்ய ரஸ திவ்ய புஷ்ப திவ்ய பலங்களைடைய ஸாலம், தாலம், தமாலம், ஹிந்தாலம், சம்பகம்,நாரிகேளம், புந்நாகம், சூதம், சிந்துவாரம், கந்தபூரம், பீஜபூரம், தவம், அசோகம், பாடலம், வகுளம், வஞ்சுளம் முதலான வ்ருக்ஷங்களையும், ஸாரஸம், சக்ரவாகம், காரண்டம் முதலான ஜல பக்ஷிகளாலும்,
விகபிதங்களாய்த் தாதுக்களை யுடைத்தான தாமரை செங்குவளை முதலான புஷ்பங்களாலும், நிறைந்து தெளிந்து குளிர்ந்த நீரையுடைய ஓடைகளையு முடைத்தாய் மாயை என்றும், மாதவி என்றும், மயூரநகர் என்றும், வைஷ்ணவீ என்றும் மஹரிஷிக
ளாலே சொல்லப்பட்டதாய்
; மயூரநகர் என்று மூன்று லோகத்திலும் ப்ரஸித்தமாய் விளங்கிக் கொண்டிருக்கிறது.
அந்த பட்டணத்திற்கு சமீபத்தில் நூறுவிற்கடை தூரத்திற்கு வடக்கே செம்பவள வெண் முத்தம் வெண் திரைகள் வந்துதைக்கும் கடற்கரை யோரமாய் அதி மனோ ஹரமான பிருந்தாவன மென்றொருவன மிருக்கின்றது.
பிருந்தாவனத்தின் சிறப்பு.
அதில் துள வனம் மிகச் செழிப்பாய், நானா விருக்ஷங்களாலும், தெளிந்த தீர்த்தங்களாலும் சோபித்து அனேக ருஷிகளாலே சேவிதமா யிருக்கின்றது. அதில் ஸ்ரீமந் நாராயணன் தன் திருமேனியை ஐந்து விதமாகச் செய்து கொண்டு நித்ய வாசஞ்செய்கின்றான். அந்த மூர்த்திகளை சகலமான சேதனர்களும் சேவித்து ஸார்வாபீஷ்டங்களைப் பெறுகிறார்கள். அங்கு முஹுர்த்த காலம் வசிக்குமவர்கள் வாஜபேய யாக பலத்தை யடைகின்றார்கள்.ஸ்வப்னத்தில் அந்தத் திவ்ய தேச யாத்திரையை நினைத்த போதினும் அந்த< பலனை யடைகின்றார்கள்.அங்கு வாசஞ்செய்யுந் திரியக் ஸ்தாவரங்களும் பாபம் போய்க் குல விருத்தியாய்ப் பரமபதத்தை யடையும்.அந்தப் பிருந்தாவனத்தை இருந்த யிடத் திருந்தேனும் நினைக்குமவர்கள் குடும்ப விருத்தியாயவர்கள் பாகவதாளாய்த் தேஹாவசான காலத்தில் பரமபதத்தை யடைவார்கள்
வாரீர் நாரதரே! ஒரு கால விசேஷத்தில் தேவர்கள் மேருபர்வத்தின் சிகரத்திலே யொரு கார்யார்த்தமாகச் சேர்ந்திருக்கையில் தேவதைகளில் ராமாபதியும் அடியார்களில் உமாபதியும் ஸ்ரேஷ்டரானாப் போலே எம்பெருமானுடைய திவ்ய தேசங்களில் அந்த பிருந்தாவனம் சிரேஷ்டமென்று கொண்டாடினார்கள். அந்த சிரேஷ்டமான பிருந்தாவனத்தைத் தூஷிக்கின்றவர்களும், ஸ்வபனத்திலும் நினையாதவர்களும் மஹாபாபிகளாகையால் நரகத்தை யடைவார்கள். அந்த பிருந்தாவனத்திலே தாமரை ஆம்பல் கருநெய்தல் முதலான புஷ்பங்களால் அலங்கிருதமாயிருக்கும் ஸ்ரேஷ்டமான கைரவிணி சரசான தொன்றிருக்கின்றது. அதிலே ஸ்நானஞ்செய்து சேவித்து ஆசமநீயஞ் செய்கின்றவர்கள், சகல பாபங்களில் நின்றும் விடுபட்டு மோக்ஷத்தை யடைகின்றார்கள்-அந்த பிருந்தாவன மஹாத்மியத்தை யறிந்து நிர்மல மனஸ்கரனாகி அங்குள்ள கைரவிணி தீர்த்தத்தில் ஸ்நானஞ்செய்து பஞ்சமூர்த்திகளைச் சேவித்துத் தியானிக்குமவர்கள் பாபங்களற்று சமஸ்த காமங்களையும் அடைகின்றார்கள்.

வேதத்தை வேதத்தின் சுவைப் பயனை விழுமிய முனிவர் விழுங்கும்
கோதிலின் கனியை நந்தனார் களிற்றை குவலயத்தோர் தொழு நேத்தும்
ஆதியை அமுதை என்னை யாளுடை யப்பனை ஒப்பவரில்லா
மாதர்கள் வாழும் மாடமாமயிலைத் திருவல்லிக் கேணிக் கண்டேனே

மந்நாதன் (ரங்கநாதன்)வேதவல்லித் தாயர், புஜங்க சயநம்,ப்ரணவவிமாநம், கிழக்கே திருமுகமண்டலம், கன்னிகாதானம் செய்து கொடுத்த ப்ருகு மஹரிஷிக்கும் மார்க்கண்டேயருக்கும் ப்ரத்யக்ஷம்.
மன்னாதன் பிருகுமருஷிக்கு ப்ரத்யக்ஷமாதல்
வாரீர் நாரதரே! அந்த பிருந்தாவனத்தில் வாதாம்பூபர்ணாசனாளாய் மோக்ஷத்தின் பொருட்டு, பிருகு, அத்ரி, மரீசி, மார்க்கண்டேயர்,சுமதி, சாப்தரோமா,ஜாலி,என்னும் சப்த ருஷிகள் தபசு செய்து கொண்டிருந்தார்கள். இப்படியிருக்க ஷீராப்தியில் ஸ்ரீயபதிக்கும் பெரிய பிராட்டியாருக்கும் ப்ரணய கலஹம் நேரிட்டு அனேக ஆத்மோஜ்ஜீவனத்தின் பொருட்டு பெரிய பிராட்டியாரானவள் திருப்பாற்கடலை விட்டு முனி கணங்கள் நிறைந்த பாவனமான அந்த பிருந்தாவனத்தில் தபசு செய்து கொண்டிருந்த பிருகு மஹாருஷியின் ஆஸ்ரமத்தை யடைந்து,ஒரு சந்தன விருக்ஷத்தினடியிலே அப்ராகிருத திவ்ய மங்கள விக்கிரஹ ரூபமான சிறு குழந்தையாய்ச் சயனித்திருந்தாள். பிருகு மஹருஷியானவர் மார்க்கண்டேயருடனும் சிஷ்யாளுடனும் பகவதாராதனத்திற்கு புஷ்பம் பறிக்க வந்த போது தற்செயலாய் அதிக சுந்தரமான அந்தக் குழத்தையைக் கண்டனர். பிருகு மஹருஷியும் ஆச்சரியத்தை யடைந்து இந்தக் குழந்தை சாக்ஷாத் லக்ஷ்மியைப் போன்றிருக்கின்ற தென்று நினைத்துத் தாமே எடுத்துக் கொண்டு வந்து தன் பார்யை முதலான ருஷி பத்னிகளிடத்தி லொப்பித்து ஜாக்கிரதையாய் ரக்ஷித்து வாருங்கோளென்று நியமித்தார். ருஷி பத்னிகளும் அப்படியே யாகட்டுமென்று சொல்லி மிகவும் ஆதராதிசயத்துடன் வளர்த்து வந்தார்கள்.

இப்படி நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக வளர்ந்து கொண்டு வருங்குழந்தைக்கு ஒரு நல்லநாளில் குஷிகளுடன் கூடி பிருகு வானவர் வேதவல்லி என்று திருநாமஞ்சாற்றினர்.வேதவல்லியும் ருஷிகளுக்குச் சிஸ்ருஷை செய்து கொண்டு சிலகாலம் வசித்திருக்கையில் ஷிராப்திநாதன் ஸ்ரீமாஹா லஷ்மியைக் காடக்ஷிக்கும் பொருட்டு இராஜ வடிவு கொண்டு அந்தப் பிருந்தாவனத்தை யடைந்தார். அங்கு ஸகிகளோடு புஷ்பம் பறித்துக் கொண்டிருந்த வேதவல்லியைக் கண்டு வியாமோஹங்கொள்ள அவளும் தன் பிதாவான பிருகுவுக்கறிவிக்க அவரும் அந்த மஹா புருஷனைக் கண்டு இவர் சாக்ஷாத் ஸ்ரீமாஹாவிஷ்ணு வென்றறிந்து வேத வேதாந்தங்களினாலே பல்லாயிரக்கோடி அண்டங்களுக்கும்,நாதனே பிரம் ருத்ரேந்திராதி தேவர்கள் முதலானோர்களுக்கும்,காரண பூதனே மந் தாதனே என்றிப்படிப் பலவாறாக ஸ்தோத்திரஞ் செய்து சாஷ்டாங்க தண்டஞ் சமர்ப்பித்துத் தேவரீர் அப்பிராகிருத திவ்ய மங்கள விக்ரஹ ஸ்வரூபத்தைச் சேவை சாதித்தருள வேண்டுமென்று பிரார்த்தித்து பத்தாஞ்சலியுடராய் நின்றுகொண்டிருந்தார்.

வாரீர்நாரதரே! இப்படிப் பிரார்த்தித்த பிருகு மஹருஷிக்கு ஷிராப்தி நாதனான ஸ்ரீமந் நாராயணன் தன்நிஜ ஸ்வரூபமான சதுர்ப்புஜ சங்கு சக்ர மகர குண்டல கிரீடக் கிரைவேய கௌஸ்துப ஹார வைஜயந்தி வனமாலிகாதி திவ்யாயுத திவ்ய பூஷண திவ்ய மங்கள விக்ரஹ ஸ்வரூபத்தைச் சேவை சாதித்தருளினர். பிருகு முனிவரும் சாஷ்டாங்கமாகத் தண்டஞ்சமர்ப்பித்து ஆனந்தித்துப் பலவாறாக ஸ்தோத்திரஞ்செய்தனர். அப்போது ஆழிவண்ணன்,அவரை நோக்கி வேண்டின வரங்களைக் கேளுமென்று அருளிச் செய்ய, பிருகு மஹாருஷியும் ஸ்வாமீ! இந்தத் திவ்ய மங்கள் விக்ரஹ ஸ்வரூபத்துடன்’ இந்தப் பிருந்தாவனத்திலே அடியேனுக்கும், மார்க்கண்டேயருக்கும் மற்றும் சமஸ்தாத்மாக்களுக்கும் எப்போதும் சேவை சாதித்துக் கொண்டெழுந்தருளி இருக்க வேண்டுமென்று பிரார்த்தித்தார். அருமாகடலும் அப்படியே சேவை சாதிக்கின்றே மென்று வரப்ரதானஞ் செய்தருளி, வாரீர் பிருகுவே உம்மிடத்தில் வளரும் வேதவல்லி என்னும் கன்னிகையை எனக்குக் கொடுத்துத் திருக்கலியாணஞ் செய்யவேண்டுமென்று அருளிச்செய்தார்
பிருகுமஹாரிஷியும் தன்யோஸ்மி என்று ஒத்துக்கொண்டு, வேத வல்லியை அழைக்க அவளும் புன்னகையுடன் வந்து ஸ்ரீயபதியைச் சேவித்து, இவர் தான் மந்நாதனான பர்த்தாவென்றும் இவரைத்தான் விவாஹஞ் செய்துகொள்ளக் கடவேனென்றுஞ் சொல்ல
அப்படியே செய்விக்கின்றேனென்று சொல்லி பிருகுவும் தேவர்களும் ரிஷிகள் சூழ ஸாஸ்திரோக்தளும் பிரகாரம் ஹோமாதிகளை வளர்த்து பாணிக்கிரஹண விவாஹ மஹோத்ஸவங்களைச் செய்வித்தார் . அப்போது ப்ரம்ஹருத்திரேந்திராதி தேவர்கள் ரிஷிகள் முதலான சகலரும் மந்நாதனன ஸ்ரீய பதியைச் ஸாஷ்டாங்கமாகத் தண்டஞ் சமர்ப்பித்து பலவாறாக ஸ்தோத்திரஞ் செய்து புஷ்ப மாரி பொழிந்து ஆனந்த பரிதராய் பிருகுவைக் கொண்டாடி இந்தவேதவல்லித் தாயாரை சாக்ஷாத் ஸ்ரீமாஹாக்ஷ்மி என்றறியு மென்று சொல்லித் தங்கள் தங்கள் ஸ்தானங்களை யடைந்தார்கள்.
அனந்தரம் மந்நாதனான என்னையாளுடை அப்பன் என்னும் ஸ்ரீயபதியானவர் மாக மாதத்துச் சுலபக்ஷத் துவாதசியில் ஆவிர்ப்பவித்து திருக்கலியாணஞ்செய்துகொண்டு அனேக ஆத்மோஜ்ஜீவனமாக அந்த பிருந்தாவனத்தில் சேவை சாதித்துக் கொண்
டிருக்கும் வைபவத்தைக் கேட்கின்றவர்கள் வாசிக்கின்றவர்கள் அந்தத் தினத்திலே அவரைத் தண்டஞ் சமர்ப் பிக்கின்றவர்கள் முதலாயினார் இஹபரைஸ்வரியத்தை யடைந்து வாழ்ந்துகொண்டிருப்பார்கள்.

——————-

தெள்ளிய சிங்கர்
பள்ளியி லோதிவந்த தன் சிறுவன் வாயில் ஒராயிரநாமம்
ஒள்ளிய வாகிப்போத ஆங்குஅதனுக்கு ஒன்று மோர்பொறுப்பிலனாகி)
பிள்ளையை ச்சீறிவெகுண்டுதூண்புடைப்பப் பிறையெயிற்றனல்விழி பேழ்வாய்
தெள்ளிய சிங்கமாகியதேவைத் திருவல்லிக்கேணிக்கண்டேனே.

தெள்ளியசிங்கர் (நரசிம்மர்)தைவி விமாநம், வீற்றிருந்த திருக் கோலம், மேற்கே திருமுகமண்டலம். அத்ரி மஹரிஷிக்கும் ஜாலி மஹரிஷிக்கும் பிரத்யக்ஷமாய் மோக்ஷம் தந்தவர்.
தெள்ளியசிங்கர்அத்ரி மஹாமுனிவருக்கு மோக்ஷமளித்தல்
-சிவபிரான் சொல்லுகிறார் வாரீர் நாரதரே, அந்த பருந்தாவனத்தில் மஹா ப்ரசித்தரும் பாகவதருமான அத்ரி என்னும் மஹா ரிஷியானவர் ஸ்ரீ மந் நாரயணனைக் குறித்து மோக்ஷாபேஷையை யுடையவராய் இதராளாலே செய்யவரித்தான மஹா தபசைச் செய்து கொண்டிருந்தார். கபில மஹரிஷிக்குப் பெளத்திரரும் தருண ரென்பவருக்குப் புத்திரருமான விகட மஹா ரிஷியானவர் பூவலம்செய்து கொண்டு மனோஹரமான அந்த ப்ருந்தாவனத்திற்கு வந்து சேர்ந்து தபசு செய்து கொண்டிக்கும் அத்ரி மஹா ருஷியைக் கண்டு தண்டஞ்சமர்பிக்க அத்திரி முனிவரும் அவரைப் பூஜித்து ஆலிங்கனஞ் செய்துகொண்டு வர்த்தமானங்களைக் கேட்க,விகடர் சொல்லுகின்றார். வாரீர், முனி புங்கவரே! லோகபாவனமான கங்காதீரத்தில் தடாக விரு பக்ஷி புஷ்பங்களாலும் ரிஷி கணங்களாலுஞ். சூழ்ந்து ரம்யமாயிருந்துள்ள ஜம்பூவனமொன்றிருக்கின்றது. அங்குள்ள கபிலர் புத்திரரான தருணர் என்னைப் பெற்று லோகாந்தரத்தை யடைந்தார். நான் அங்குள்ள ரிஷி களால் வளர்ந்து உபநயன அத்யயனாதிகளை யடைந்து அங்கு வெகு காலம் அந்த பெரியோர்களுக்கு சிஸ்ரூஷை செய்து கொண்டிருந்தேன்.அங்கிருக்கும் பார்க்கவ முனிவரைப் பார்க்க வேண்டுமென்று மேரு பர்வதத்தி லிருக்கும் மரீச ருஷியானவர் வந்தார். அவரைப் பார்க்கவ ருஷியும் பூஜித்து நீர் மேரு பர்வதத்தி லிருந்து வருகின்றீரே அங்குள்ள தேவ ரிஷிகள் சமுதாயத்தில் நடந்த விருத்தாந்த மேதென்று வினவினார். மாரீசர் பார்க்கவரைப் பார்த்து அந்த மஹ மேருவில் தேவ ரிஷிகள் ஸித்தர்கள் வசிஷ்டர் முதலானோர் ஏகீபவித்தார்கள் . இவர்களில் வசிஷ்டர் சொன்னதாவது, தக்ஷிண திக்கிலே துளசீ வனமானது பிரசித்தமா யிருக்கின்றது.அங்கே சிரேஷ்டரான அத்ரி மஹா முநியானவர் அரியதான தபசைச் செய்து கொண்டிருக்கின்றார். அவருக்கு ஸ்ரீயபதி பிரசன்னராய்ச் சேவை சாதிக்கப் போகின்றாரென்று வசிஷ்டர் சொன்னதாக மாரீசர் பார்க்கவருக்குச் சொன்னார். அதைக் கேட்டுக் கொண்டிருந்த விகடனான நான் தேவரீரைத் தண்டஞ்சமர்ப்பிக்க வேண்டி விடை கொண்டேனென்று சொல்லினர். கர்ணாம்ருதமான செய்தியைக் கேட்ட அத்ரியும் மிகவும் ஆச்சரியத்துடன் சந்தோஷித்து விகடரைக் கொண்டாடிக் கொண்டிருந்தார். விகட மாமுனிவரும் அங்குள்ள முனிவர்களோடே வெகுகாலம் வாசித்துக் கொண்டிருந்தார்.கேட்டீரோ நாரதரே! இப்படி அந்த ப்ருந்தாவனத்திலே ரிஷிகளுடன் கூடின அத்ரி மஹாமுனியானவர் சரத்காலம் வந்து ஆஹ்லாதகரமாய்ச் சந்திரன் பிரகாசிக்கு மொரு நாள் பிராதக் காலத்தில் அனேக ரிஷிகளுடனே பிராதஸ்ஸந்தியைச் செய்யப் புறப்பட்டு அங்குள்ள இந்திர தீர்த்தத்திலே ஸ்நானஞ்செய்து நித்தியா நுஷ்டானங்களைத் தீர்த்துக் கொண்டு ஆஸ்ரமத்தை யடைந்து அந்த ரிஷிகளுடனே ஆசனத்தி லிருந்து கொண்டு ஸ்ரீயபதியின் அனந்த கல்யாண குண வைபவங்களை யனுபவித்துக் கொண்டிருந்தார். நிர்ஹேதுகமாய் தேவதுந்தும் முழங்கிற்று. புஷ்பமாரி பொழிந்தது . தேவர்கள் ரிஷிகள் முதலான கூட்டங்கள் வந்தன.அப்சரசுக்கள் நடனஞ்செய்தனர்.இப்படி ஆச்சரியகரமான சப்தத்தைக் கேட்டுத் தேவர்கள் ரிஷிகள் முதலானோர்களையுங் கண்டு அவர்களுடளே யெழுந்திருந்து நான்கு திக்குகளையும் சிஷ்யாளுடனே பார்த்துக் கொண்டிருந்தார். கிழக்கு முகமாக விருக்கும் இந்த அத்ரி மஹாரிஷிக்கு முன்பாகத் திவ்ய தேஜசை யுடைத்தான ஒரு விமானம் தோன்றிற்று. அதின் உபய பார்சுவங்களிலும் சாமரங்களை வீசிக் கொண்டிருக்குஞ் சர்வாபரண பூஷிதாளான் இரண்டு திவ்ய புருஷர்களையும் பின்பக்கத்தில் தைத்ய தானவர்களை ஸம்ஹரிப்பவரான சூர்யகாந்தி போன்ற கருட பகவானையும் முன்புறத்தில் பொற் பிரம்பேந்திய சேனை முதலியாரையும் இடப்பக்கத்தில் சந்திரகாந்தியை யொத்த ஆதி ஸேஷனையும் தக்ஷிண பார்சுவத்தில் சனகாதி முனிவர்களையுங் கண்டு தண்டஞ்சமர்ப்பித்தனர்.அனந்தரம் அந்த விமானத்தின் மத்தியில் ஆஸ்ரிதாளுக்கு செளம்யாரூபராகியும் அனாஸ்ரிதாளுக்கு பயங்கர ரூபியாகியும் சதுர்ப்புஜ சங்க சக்ர மகர குண்டல கிரீடாதி திவ்யாயுத திவ்யபூஷ யுக்க திவ்ய திருமேனியுடனே சேவை சாதித்தருளும் நரசிம்ஹ மூர்த்தியைக் கண்டு சாஷ்டாங்கமாகத் தண்டஞ்சமர்ப்பித்து எழுந்திருந்து மயிர்கூச்சிட்டு ஆனந்த பரவசராய்-வாரீர் தேவாதீரரே, மஹாபாஹுவே! ஜகந் நாயகரே ஜகத் குருவே புண்டரீகாக்ஷ ப்ரபுவே! அனேக காலம் ஸ்தோத்திரஞ் செய்த போதிலும் அறியக் கூடாத தேவரீரை ஸ்தோத்திரஞ்செய்ய நானெப்படி சக்தனாவேன். வாரீர் ஸ்வாமீ, நிரஞ்சனராயும் நித்ய நிரவத்யராயும் பரிசுத்தராயும் சத்ய சங்கற்பராயும் குண சஹிதராயும் ஞானானந்த ஸ்வரூபியாயும் ஜகத்ருஷ்டி ஸ்திதி லய கர்த்தராயும் ஜகத்காரண பூதராயும் சேஷியாயும் சகல ஜகதீ ராயும் சேஷசாயியாயும் பிரம்ம ஸ்வரூபியாயும் பிரணவ ஸ்வரூபியாயும் வேத ஸ்வரூபியாயும் வேத வேத்யராயும் ஏக ஸ்வரூபியாயும் ஏக நாதராயும் ஏக போக்தாவாயும் அனந்த கல்யாண குண பரி பூர்ணதாயும் புத்தி ஸ்வரூபியாயும் பரமாத்ம ஸ்வரூபியாயும் ஸ்தூல சூக்ஷ்ம ரூபராயும் குருவாயும் லகுவாயும் துர்பராயும் சுலபராயும் ஆயிரந்திருமுடிகளையும், ஆயிரந்திருக்கண்களையும் ஆயிரந்திருக்கைகளையும்.ஆயிரந்திருவடிகளையும் உடைத்தானவராயும் அனந்தராயும் ஸ்ரீதர மாதவ அச்சுதானந்த கோவிந்த நரஹரி கேசவ நாராயணாதி திருநாமங்களை யுடைத்தான ஸ்வாமீ! என்றிப்படி பலவாறாக ஸ்தோத்திரஞ் செய்தார்.

வாரீர் நாரதரே இப்படி ஸ்தோத்திரஞ்செய்த மஹாநுபாவரான அத்ரி மஹாமுனிவரைப் பார்த்து அழகியசிங்கர் அருளிச் செய்கின்றார். அத்திரி முனிவரே! இதராளாலே செய்ய வரித்தான தபசையும் ஸ்தோத்திரத்தையுஞ் செய்தபடியாலுமக்குப் பிரசன்னனானேன். என்னைத் தியானித்து துதிக்கின்றவர்களுக்கு வேண்டின வரங்களையும் என் பதத்தையுங் கொடுப்பேனாகையால் உமக்கு வேண்டினதைக் கேளும் என்றனர். அத்ரியும், ஸ்வாமீ, கொழுப்பு,எலும்பு, ரக்தம், தண்ணீர், மல மூத்திராதிகளாலே கட்டப்பட்டு குசிதமாய் ஹோலயமா யிருக்கு மிந்த சரீரத்தைத் தரிக்கைக்குச் சக்தனல்லேனாகையால் முக்தியைக் கொடுத்தருள வேண்டும்.அன்றியில் அடியேனுடனிருக்குமிந்த ஜாலி மஹாருஷிக்கும் முக்தியைக் கிருபை செய்தருளவேண்டுமென்று விண்ணப்பம் செய்தனர்.
அழகியசிங்கர் அத்ரியை கடாக்ஷித்து அப்படியே கொடுக்கின்றே னென்றருளிச்செய்து உம் நிமித்தமாக இதராளான சகல ஜனங்களுக்கும் முக்தியைக் கொடுக்கத் துளசீ வனத்தாலும் சோலைகளாலும் ரம்யமாய்த் தாமரை முதலான புஷ்பங்களாலும் ஹம்சம் முதலான பக்ஷிகளாலும் நிறைந்து மனோஹரமா யிருக்கின்ற கைரவிணீ புஷ்கரிணி முதலான ஸரசுக்களாலும் பிரகாசிக்ன்றது உமதாஸ்ரமமான இந்த பிருந்தாவனத்திலே பாப ரஹிதர்களாகியும் பரிசுத்தர்களாசியும் மஹா நுபாவர்களாகியு மிருக்கின்ற இந்த மஹாருஷி களானவர்கள் என் பொருட்டுத் தீக்ஷணமான விருதத்தைக் கைக் கொண்டவர்களாய் வாசஞ்செய்கின்றார்கள். ஆகையால் இப்படி மனோஹரமான இந்தப் பிருந்தாவனத்திலேயே பிரம்மஸி கல்ப பரியந்தம் ஆத்மாக்களின் செளக்கியத்தின் பொருட்டு வசிக்கப் போகின்றேன். வாராய் அத்ரியே; ஸம்சாரமாகின்ற மருகாந்தாரத்தில் சஞ்சாரத்தாலே யுண்டான தாபத்திரையாதுராளாயுத் பகவதலாப க்கிலேசத்தாலே துக்கிதாளாயும் புத்திஹீனாளாய் மிருக்கின்ற மநுஷ்யாஹிதத்தின் பொருட்டு அனே கால மிங்கே வசிக்கின்றேன். வாராய் அத்ரியே! கர்மத்தாலே துக்கமுண்டாக்கும் அத்தால் குரோதமுண்டாகும், அத்தால் அக்யான் முண்டாகும். அத்தால் பாபங்களுண்டாகு மாகையால் சேதனர்கள் ஸம்சாரமாம் சமுத்திரத்திலே மூழ்கிப் பாபங்களைப் பெருக்கச் செய்து பரந்தாமனான என்னைக் காரண பூதனென்றறியாமல் நசித்து நரகத்திலே யழுந்துகின்றார்கள்.அனாதியான என்னை ஜகத்காரண பூதனென்றறியத் தக்க மஹாநுபாவர்கள் துர்லபாள். இந்த லோகத்தில் ஒருவனுக்குத் தருமத்தில் புத்தி யுண்டாய் அத்தாலே அர்த்தத்தை யடைந்து காமத்தின் பொருட்டு எத்தனிக்கின்றானே யல்லது மோக்ஷத்திலெத்தன முடையவனில்லை. ஓரனொருவன் ஜன்மாந்தர சஹஸர நற்றவங்களாலே யொரு ஜன்மத்தில் பாப ரஹிதனாகி என்னை யாஸ்ரயித்து ஞானியா யிருப்பனேயானால் அவனுக்குப் பாபங்களில்லை.ஒருவேளை பிரமாதத்தாலே இஞ்சித்து உண்டானாலும் அதுகளை நானே போக்கி அதோ லோகத்தில் பிரவேசியாமல் ரக்ஷிக்கின்றேன். என் பக்தாளுக்கு ஒரிடத்திலும் பயமில்லை.அவர்களைக் கண்டால் பிசாசங்கள் ராக்ஷசாள் அசுராள் முதலினோர்கள் பயப்படுவார்கள். என் பக்தர்களின் சேவை மாத்திரத்தினாலேயே எம தூதர்கள் பயமோஹிதர்களாய்க் கைகளைக் கூப்பிக் கொண்டு தூர விலகிப் போகின்றார்கள். சகலலோக ஹிதர்களாகியும் பூஜ்யர்களாகியும் மஹாத்மாக்களுமான என் பக்தர்களைச் ஸகலமான தேவ சமூஹங்கள் தண்டஞ் சமர்பபிக்கின்றார்கள். எந்தப் புருக்ஷனானவன் மூடனாய்க் கொணடு என் பக்தர்களை நிந்திக்கின்றானோ அவன் குலபந்துக்களோடே நரகத்தை யடைவான், என் பக்தன் குலீன்னானாலும் துஷ்குல ஜாதனானாலும் நல்ல ஸ்வபாவனானாலும் கெட்ட ஸ்வபாவனானாலும் ஆசாரமுள்ளவனானாலும் துராசாரனானாலும் அவனை நிந்திக்காலகாது. சகல வித்யாபாரிணனாகவும் ஸாங்க வேத வித்தாகவு மிருக்கின்ற புருஷனைப் பார்க்கிலும் குசலனான என்பக்தன் ஸ்ரேஷ்டன். எந்தப் புருஷாள் அர்த்த காம பராளாய் எந்தெந்த தேவர்களை உபாசிக்கின்றார்களோ அவர்களுக்கு நானே அந்தத் தேவர்களுள் அந்தரியாமியாயிருந்து அந்தந்தப் பலன்களைக் கொடுக்கிறேன். யாவரென்னைக் குறித்து அர்த்த காம விஷயங்களை ஆம் செயிக்கின்றார்களோ அவர்களுக்கு அதைக் கொடுக்கின்றேன். லோகத்தில் தர்மார்த்த காம மோக்ஷங்களென்று புருஷார்த்தங்கள் நான்கு விதங்களுண்டு. அவற்றுள் மோக்ஷத்திலிச்சை யுடையவன் மஹாத்மாவாய் விலக்ஷணனாவன்,இப்படிப்பட்ட மஹாத்மியமுடைத்தான மஹாநுபாவன் என் பக்தன் எனக்கு மிகவும் இஷ்டனாகவும் புரமேகாந்தியாகவும் பூஜிக்கத் தக்கவனாகவும் லோகங்களுக்கெல்லாஞ் ஸேவிக்கத் தகுந்தவனாகவுமாவான்- வாரீர் அத்ரியேநீ ர் இந்திரிய ஸமூகஹங்களை ஜயித்து இதர விஷங்களில் ஆசா ரஹிதராய் என் விஷயத்தில் பரிபூர்ணமான பக்தியைச் செய்தீராகையால் உமது விஷயத்தில் அனுக்கிரஹமுள்ள நான் உமக்கும் உமது சம்பந்த சம்பந்திகளுக்கும் மோக்ஷத்தைக் கொடுக்கிறேன். பரிசுத்தமாகவும் சாசுவதமாகவு மிருக்கும் பரம பதத்தைச் சீக்கிரமாக அடையக்கடவீர் என்றருளிச்செய்தனர் .லக்ஷ்மீ நரசிம்ம மூர்த்தியான அழகிய சிங்கரின் கடாக்ஷத்தைப் பெற்று அத்ரி மஹா ருஷியும் ஜாலி மஹாருஷியுடனே சர்ப்பமானது ஜீர்ணமான சர்மத்தை விடுமாப் போலே சரீரத்தை விட்டார்.இப்படி தேஹத்தைப் பரிஹரித்தவர்களிருவரும் கோடி சூர்யப்ரகாசமான விமானத்திலே மஹருஷிகள் பார்த்துப் பூஜிக்க வேறு லோகாந்தரங்களிலுள்ள தேவர்கள் கொண்டாட பால சூர்யளைப் போலே அதி சோபா சம்பன்னராய்ப் பரமபதத்தை யடைந்தார்கள் அன்று முதல் லோக குருவான ஸ்ரீநரசிம்ஹமூர்த்தி யானவர் மனோஹரமான ப்ருந்தாவனத்திலே சகல தேவர்கள் முதலான லீலாவிபூதியிலுள்ள சேதனர்கள் பூஜித்து உஜ்ஜீவிக்கும் பொருட்டு அர்ச்சாரூபமாக நிர்ஹேதுகக் கிருபையினாலே தெள்ளியசிங்கர் சேவை சாதிக்கின்றார். வாரீர்நாரதரே! ஆகையால் இந்த வைபவத்தைக் கேட்கின்றவர்கள் சர்வாபீஷ்டங்களையு மடைந்து மோக்ஷத்தையும் பெறுவார்களென்று நாரதரை பார்த்துச் சிவபிரான் சொல்லிப் பின்னுஞ் சொல்லுகின்றார்.

—————

ஸ்ரீராமபிரான்
பரதனும் தம்பித்துருக்கனும் இலக்குமனோடு மைதிலியும்
இரவும் நன்பகலும் துதிசெய்யநின்ற இராவணாந்தகனை எம்மானை
குரவமே கமழும்குளிர் பொழிலுடு குயிலொடு மயில்கள் நின்றால்
இரவியின் கதிர்கள் நுழைதல்செய்தறியாத் திருவல்லிக் கேணிக் கண்டேனே.

சக்கரவர்த்தி திருமகன் (ஸ்ரீராமர்,) பரதாழ்வான், சத்ருக்னாழ்வான் லக்ஷமணர், மைதிலி புஷ்பக விகாநம் தெற்கே திருமுக மண்டலம், நின்ற திருக் கோலம் சசபதர் குமாரரான மதுமான் என்னும் மஹாரிஷிக்கு ப்ரத்யக்ஷம்.
சக்ரவர்த்தி திருமகன் மதுமானுக்கு சேவைசாதித்தல்
.
வாரீர் நாரதரே! முன் திரேதா யுகத்திலே ஸ்ரீயபதியானவர் ராக்ஷஸ் வதார்த்தமாக இட்சுவாகு வம்சத்திலே ஸ்ரீராமரென்று நாமமுடையவராய் சஹோதராளுடன் மநுஷ்ய ரூபியா யவதரித்து சீதாபிராட்டியாலே ராவணாதி ராக்ஷசாளனைவரையும் சம்ஹரித்து சீதாபிராட்டியை யடைந்து தர்மமாக வெகுகாலம் ராஜ்ய பரிபலானஞ்செய்து பிராதாக்களுடனே தன்னுடை ஜோதிக்கு எழுந்தருளினார்.ஸ்ரீராமபிரானைக் குறித்து பாண்டிய தேசத்திலுள்ள பாண்ட பர்வதத்தில் மஹா தேஜஸ்வியான ஸஸபதரென்பவர் தபசு செய்து கொண்டிருந்தார். தேவேந்திரன் முதலான தேவர்களால் அநுப்பப்பிட்ட ஹேலையென்னும் அப்சர ஸ்திரியானவள் ஸஸபதரை கானத்தினாலே மயக்கி ஒர் புத்திரனை ஈன்று ஓர்குஹையிலே விட்டுப் போனாள். அந்த ஆண் சிசுவும் தெய்வீகமாகத் தேன்தன் வாயில் வந்துவிழ அத்தால் ஜீவித்திருந்த அந்த சிசுவை அங்குள்ள,ருஷிகள் கண்டனர். மதுவினால் ஜீவிந்திருந்த குழந்தைக்கு

மதுமானென்று திருநாமஞ்சாற்றி வளர்த்து வேதவேதாந்த பாரங்கதனாகச் செய்தனர். அதனாலே மதுமானும் மஹாக்யானாதிகனாக விருக்கையில் பார்க்கவரை யொத்த கார்க்கே யரானவர் மதுமானிருக்கும் அந்த வனத்திலே வரக் கண்டனர். மதுமானும் அவரை பூஜித்து நீர் யாரென்று வினவ அவரும் என்பேர் கார்க்கேயரென்று சொல்லுவர்கள்.என் குரு அனக மஹாமுனிவர்.நான் வால்மீகர் ஆஸ்ரமத்திலிருந்து அவர் சொன்ன ஸ்ரீராமாயணத்தை அகஸ்தியருக்கு விண்ணப்பஞ் செய்யப்போகின்றேனென்று சாங்கேர்பாங்கமாகச் சொல்லிப் போயினர். அது கேட்ட மதுமானும் சக்ரவர்த்தித் திருமகனார் வைபவங்களி வீடுபட்டு அத் தரும ஸ்வரூபியான சக்ரவர்த்தித் திருமகனையும், அவர் சஹோதரர்களான இளயபெருமாள், ஸ்ரீபரதாழ்வான், சத்துருகனாழ்வானையும் சீதாபிராட்டியையுங் கண்டு சேவிக்கும் பாக்கியமும்,மோக்ஷமும், நமக்கு உண்டாகப் போகின்றதா வென்று சிந்தித்துக் கொண்டிருந்தார்.கார்க்கேய மஹாருஷி சொல்லிப் போன அன்றிராத்திரியே ஸ்ரீயபதியும் கார்ககேயரைப் போல் ஸ்வப்னத்தில் சேவை சாதித்து நீர் தக்ஷிணத்தில் மயிலை மாநகருக்குச் சமீத்திலுள்ள பிருந்தாவனத்திற்குப் போனால், சௌக்கிய முண்டாகு மென்றருளிச் செய்தனர்.மதுமானும் விழித்துப் பார்த்துச் சற்று நேரம் யோசித்து ஸ்வப்னஞ் சாதித்தவர் விஷ்ணுவே யென்று நிச்சையித்துப் பிராத காலத்திலெழுந்திருந்து அநுஷ்டானங்களை முடித்துப் பரியோர்கள் அநுமதி பெற்று, இராப்பகலாக கடந்துவந்து, திவ்யமான மயூரநகர பிருந்தாவனத்தை யடைந்து, கைரவிணி என்னும் புஷ்கரிணியிலே தீர்த்தமாடி அங்குள்ள பெரியோர்களையும் பகவானையுந் தண்டஞ் சமர்ப்பித்து அஞ்சலி ஹஸ்தனாக நின்று கொண்டு சக்ரவர்த்தித் திருமகனை நோக்கி,அகில ஜகத் ஸ்வாமின், வீலாமாநுஷ விக்ரஹ ஸ்வரூபா, ரக்ஷச குலகாலா, தர்ம ஸம்ஸ்தாபன ஸ்வரூபா ஆஸ்ரிதவாத் ஸல்யைக ஜலதே, அபராவார கருணாம்புதே, பக்தபராதீனா, நிகில ஜகத் காரண பூதா, அகிலஹேய ப்ரத்யனீகா, ஆனந்த கல்யாண குண கண ஸ்வரூபா, ஸரணாகத வத்சலா, திருவயோத்தியில் ஒருசாதனமு மின்றிக்கே வாழும் புல்லெறும்பாதி சராசரங்களையும் நிர்ஹேதுகமாக வைகுந்தத்தேற்றி நித்யைஸ்வர்யத்தைக் கொடுத்த கிருபாநிதியே ராவணாதிகளை வதித்து பிரம்ஹாவான ஸ்ரீவிபீஷணாழ்வானுக்கும், பரம சிவனான ஆஞ்சனேயரென்னுந் திருவடிக்கும் லீலாவிபூதியிலே சிலகாலம் வாழுமைஸ்வரியத்தைப் பிரதானஞ் செய்த தயாநிதியே, என்றிப்படி பலவாறாக ஸ்தோத்திரஞ்செய்து நவரத்ன கசிதமான கிரீடத்தைப் பிரகாசிப்பிக்கும் பரஞ்சோதி ஸ்வரூபமான திருமுகமண்டலத்தையும், செந்தாமரை போன்ற திரு நயனங்களையும், சங்கம் போன்ற திருக்கழுத்தையும், திரண்டுருண்டு நீண்டுமிருக்கும் புஜங்களையும், தேஜோ மயமான பீதாம்பரத்தையும்,மகர குண்டல கர்ண பூஷணங்களாலும் விசாலமான திருமார்பிலணிந்த வைஜயந்தி வனமாலிகாதிக் கிரைவேய முக்தா ஹாரங்களாலும், அலங்கிருதமான திவ்ய திருமேனியையும், செந்தாமரையையொத்த திருவடிகளையும், அவரருகிலே வசிக்கும் பூஜ்யையான சீதாபிராட்டிபையும்,கைங்கர்ய ஸ்ரீயையடைந்த இளயபெருமாள், பரதாழ்வான், ஸ்ரீசத்துருக்னாழ்வான் முதலான்வர்களையுஞ் சேவித்தனர். ஆனந்த ஸமுத்திரமாகின்ற அலைகளிலே மூழ்கிக் கொண்டிருக்குகும் மஹாநுபாவரான மதுமானை பரம தயாளுவான சக்ரவர்த்தித் திருமகன் கடாக்ஷித்து, வாராய் பக்தியிலே சிறந்த மதுமானே! உமக்கு வேண்டின அபீஷ்டங்களைக் கேட்டுக் கொள் என்றருளிச் செய்தார். மதுமானும் ஸ்வாமீ! அடியேன் தேவரீரை ஆராதிக்கும்படி சேவை சாதித்தருள வேண்டுமென்று விண்ணப்பஞ் செய்ய, சக்ரவர்த்தித் திருமகனாரும் அங்கீகரித்து அந்தப் பிருந்தாவனத்திலே லோக ஹிதத்தின் பொருட்டுக் கிருபையினாலே வாசஞ்செய்து வெகு காலம் மதுமானாலாரதிக்கும்படியாக வெழுந்தருளியிருந்து மதுமானுக்குத் தேஹாவஸான காலத்திலே பரமபதத்தையுங்கொடுத்து அந்த ஸ்தலத்திலே இப்போதும் அனேக சேதனாளாலே பிரார்த்திக்கும் படியான ஸர்வாபீஷ்டங்களையுங் கொடுத்துக் கொண்டு சேவை சாதிக்கின்றாரென்று பரம சிவன் விளம்பினார்.

———————

ஸ்ரீ வரதராஜப்பெருமாள்
மீனமர்பொய்கை நாள்மலர்கொய்வான் வேட்கையினோடு சென்றிழிந்த
கானமர்வேழம் கையெடுத்தலறக் கராஅதன் காலினைக்கதுவ
ஆனையின் துயரம் தீரப் புள்ளூர்ந்து சென்று நின்று ஆழி தொட்டானை
தேனமர் சோலை மாடமாமயிலைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே.


தேவப்பெருமாள் கருடாரூடர், சேஷவிமாநம். கிழக்கேதிருமுகமண்டலம், ஸப்தரோமாவுக்கு ப்ரத்யக்ஷம்.-ஸ்ரீவரதராஜப் பெருமாள் ஸப்தரோமாவுக்கு மோக்ஷமளித்தல்
வாரீர்நாரதரே! அனந்த பல புஷ்ப விருக்ஷபக்ஷிமிருகாதிகளாலும், தடாகவாவீ கூபாதிகளாலுஞ் சூழ்ந்து ரமணீயமாக விருந்துள்ள அந்தப் பிருந்தாவனத்திலே வேதவேதாந்த பாரங்கதராய் பகவத் தியான தபோ ஸ்ரேஷ்டரான சதரோமாவென்னும் பிரசித்தரான ஒருமஹாரிஷி இருந்தனர்.அவர் பகவந் நியமனத்தாலே கருடாரூடரான ஸ்ரீவரதனை சாஸ்திரோக்த ப்ரகாரம் ஏறியருளச் செய்து வைகானஸ விதியினாலே ஸ்தாபித்து வெகுகாலம் ஆராதித்துவந்தனர். பிறகு பகவானான ஸ்ரீயபதியின் கடாக்ஷத்தைப் பெற்றுப் ப்ரமபதத்தை யடைந்தார். அன்று முதல் இன்றளவாகத் தம்மைச் ஸேவிக்கின்ற சேதனர்களுக்கு ஏதேதபிஷ்டமோ அவைகளை எல்லாங் கொடுத்துக் கொண்டு கஜேந்திர வரதன் என்று பிரசன்னராக வெழுந்தருளி இருக்கின்றார்.
வாரீர் நாரதரே!சோலைகளாலும் திருநந்தவன துள்சீ பிருந்தாவனங்களாலுந் தடாகங்களாலும் ரிஷிகளாலுஞ் சூழ்ந்து மனோ ஹரமாகவும் ரமஹரமாகவும் ரமணீயமாகவும் பாவனமாகவும் போக்கியமாகவும் வாசஞ்செய்வதற்கு யோக்கியமாகவுமிருந்துள்ள மயிலை திருஅல்லிக்கேணி அன்று பிரசித்தமான அந்த பிருந்தா வனத்திலே பரமபதநாதனாகும் திருவேங்கடத்தானான ஸ்ரீநிவாசன் வேங்கடகிருஷ்ணனென்னும் பார்த்தசாரதித் திருக்கோலமாகத் திருக் கைரவிணிக் கரையிலே சேவை சாதித்தருளும் வைபவத்தைக் கேளும் என்று நீலகண்டர் சொல்லுகிறார்.

—————-

பார்த்த சாரதிப் பெருமாள்,ருக்மணி பிராட்டி,பலராமர், ஸாத்யகி அநிருத்தர், பிரத்யும்நர், ஆநந்த விமாநம், கிழக்கே திருமுக மண்டலம்,நின்ற திருக்கோலம் வ்யாஸ மஹரிஷியினால் ப்ரதிஷ்டிக்கப்பட்டு ஆத்ரேய மஹரிஷியினால் ஆராதிக்கப்பட்டவர். ஸு மதி யென்னும் ராஜாவுக்கும் தொண்டைமான் சக்கரவர்த்திக்கும் பரத்யக்ஷம்.இந்திர தீர்த்தம், ஸோமதீர்த்தம், மீந்தீர்த்தம், அக்நிதீர்த்தம், விஷ்ணுதீர்த்தம், இவ் வைந்து தீர்த்தங்களால் சூழப்பட்ட கைரவணியென்னும் ஸரஸ்ஸ -பருகு,அத்ரி, மரீசி,மார்க்கண்டேயர், ஸுமதி சப்தரேமார ஜாலியென்னும் ஏழு மஹரிஷிகள் தவம் புரிந்த லிடம். பேயாழ்வார்,திருமழிசையாழ்வார் திருமங்கையாழ்வர்ர் மங்களாசாஸநம்.

ஸ்ரீபார்த்த சாரதிப் பெருமாள் சுமதி மஹாராஜனுக்கு பிரத்யக்ஷமாதல் வாரீர் நாரத்ரே! இப்படிக்கெல்லாம் அதிக மஹத்மியத்தைக் கொண்டிருக்குங் கைரவிணி தீரமான அந்த பிருந்தாவனத்தில் விஷ்ணு பக்தியிற் சிறந்தவராய் மஹா தபஸ்வியாயிருக்கும் சுமதி என்னும் ஒரு மஹாருஷி யானவர் கைரவிணி புஷ்கரணிக் கரையில் வெகுகாலம் தபசு செய்து வாசஞ் செய்து கொண்டிருந்தார். இப்படி இருக்கையில், தொண்ட மண்டலத்தில் மிகவும் ஞானியாகியும் மன்மதனைப்போல் சகல லக்ஷணங்களுடன் கூடினவராகியும்,சகல சாஸ்திரங்களை யறிந்தவராகியும், பிரஜா பரிபாலனத்தில் ஆசத்தியுடைய வராகியும், மங்களமான வார்த்தைகளைச் சொல்பவாரகியும் தைர்யசாலியாகியும் மண்டலாதிபதி யாகியும் அகண்டைஸ்வர்யத்தையும் பகவத் கைங்கர்யத்தையும் உடைத்தான வருமான சுமதி என்று பேரையுடைய ஒரு மஹாராஜனானவர் நீதியாக அரசாக்ஷிசெய்து கொண்டிருந்தார். அவர் முராசுர சம்ஹாரகரான ஸ்ரீ ய பதியினிடத்தில் நிச்சலமான பக்தியை வஹித்து ஆராதித்துக் கொண்டிருக்கையில், ஒருகால விஸேஷத்தில் அனேக விருக்ஷபக்ஷி மிருகங்களாலும் அனேக தீர்த்தங்கள் மலையருவிகள் குகைளாலும் நானாவர்ணங்களான கரிகாதிதாதுக்களென்னும் நற்சங்கப்பொன், அரிதாரப்பொடிகளுடன் கூடின உன்னதங்களான சிகரங்களாலும் ப்ரகாசித்துப் பிரம்ஹாதி தேவர்களும் பகவத் பக்த சீலாளான அனேக ருஷிகளும் தபசு செய்து சேவிக்கும் நாசரஹிதமான வேங்கடாசலத்தை யடைந்தார். ஆங்கு தீர்த்தங்களுக்கெல்லாம் ராஜாவாய் பாவனமான ஸ்வாமிபுஷ்கரணியை யடைந்து தீர்த்தமாடி நித்யா நுஷ்டானங்களை முடித்துக்கொண்டு,பிரதக்ஷணமாக வந்து, கோடி சூர்யர்களைப் போலே பிரகாசிக்கும் ஆனந்த நிலய விமானத்தைத் தண்டஞ்சமர்ப்பித்துச் சந்நிதியினுள்ளே பிரவேசித்து ஸ்ரீ அலர்மேல் மங்கை நாயகியுடன் சேவைசாதித்தருளும் சதுர்ப்புஜ சங்க சக்ர மகர குண்டல கிரீட வைஜயந்தி வனமாலிகாகிரைவேய முக்தாஹா ராதி திவ்யாயுத திவ்ய பூஷண திவ்யமங்கள விக்ரஹமான திருவேங்கடத்தானைக் கண்டு சஷ்டாங்கமாகத் தண்டஞ்சமர்ப்பித்துப் பலவாறாக ஸ்தோத்திரஞ் செய்து ஆனந்த பரவசத்தை யடைந்து தீர்த்தப் பிரசாதம் முதலான சகல வரிசைகளையும் பெற்று க்ஷேத்திரக்யரான பூவராஹப் பெருமாளையும் சேவித்துக் கிருதார்த்தனாகி ஸ்ரீநிவாசனான ஸ்ரீயபதியின் கடாக்ஷத்தைப் பெற்று இப்படி நித்யமாகச் சேவித்துக் கொண்டு அனேகவித கைங்கர்யங்களைச் செய்துகொண்டு வந்தார். ஒருநாள் திருவேங்கட முடையானைத் தண்டஞ்சமர்ப்பித்து சாக்ஷத் பரப்பிரம்ஹ மூர்த்தியான இந்த ஸ்ரீநிவாசன் தயா பரவசராய்ப் பாரத யுத்தத்தில் சுலபராய்க் கொண்டு அர்ச்சுனனுக்குச் சாரத்யாஞ்செய்த சின்னங்களுடனே நமக்குச் சேவைசாதித்தருளி யாட்கொள்வரோவென்று தியானித்துக் கொண்டிருந்தான் ஒருபோது ஸர்வாந்தரியாமிதான திருவேங்கடத்தான் அவன் முன் தோன்றியவராய், சுமதியே! நீ செய்த பக்தியாலும் கைங்கர்யங்களாலும் தியானத்தாலும் மிகவுஞ்சந்தோஷத்தை யடைத்தேன்.நீ அர்த்தித்த பார்த்தசரரதியான திருக்கோலத்தைப் பிரசித்தமான மயிலை பிருந்தாவனத்திற்கு வந்தால் ஆங்கு கைரவிணி புஷ்கரிணிக் கரையிலே நான் சேவை சாதிக்கின்றேனென் றருளிச்செய்தார். பிறகு ராஜனுக்கு விடை சாதித்தருளி வியாஸரைக் கடாக்ஷித்து நியமிக்க அவரும் மஹாபாக்கியமென்றும் ஸ்ரீய பதியின் குணா நுபவங்களை யநுபவித்து கொண்டிருந்தார். வியாசர் சிஷ்யரான ஆத்ரேயரானவர் வியாசரைத் தண்டஞ் சமர்ப்பித்து ஸ்வாமீ!பூர்வம் பிரம்ம ருத்திரேந்திராதி தேவர்கள் அசுராளாலே நலிவுபட்டு ஷீராப்திக் கரையை யடைந்து ஸ்ரீமந் நாராயணனைச் சரணாகதி செய்தார்களன்றோ? பகவான் அப்போது அவர்களுக்கு அபய ப்ரதானஞ்செய்து கண்ணனாகத் திருவவதரித்துக் கம்ஸாதிகளைச் ஸம்ஹரித்துப் பாரதத்தை முடித்து ஸ்வஸ்தானத்தை யடைந்தாரே, இனி கலி தோஷத்தாலே எப்படியாகுமோ வென்று சிந்தித்துக் கொண்டிருந்தார். சிஷ்யரான ஆத்ரேயரை வியாசர் கடாக்ஷித்துக் கலிதர்மம் மாறாடி நடந்தபோதினும் அதைப்பரிஹரிக்கும் உபாயத்தைச் சொல்லுகின்றேன் கேள் என்று சொல்லத் தொடங்கினார், என்னவென்றால் இதற்குத் தக்ஷிண திக்கிலே பிரசித்தியாய் பனோக்யமான பிருந்தாவன மொன்றிருக்கின்றது வாசஞ்செய்கின்றார்கள் . அன்றியில் அல்லித்தாமரை கருநெய்தல் முதலான புஷ்பங்களாலும் ஹம்ஸகாரண்டவ சக்ரவாகங்கள் முதலான பக்ஷிகளாலும் அலங்கிருதமா யிருந்துள்ள கைரவிணி என்னும் பிரசித்தமான சரசின் கரையில் ஸ்ரீயபதிக்கு இருப்பிடமாகிய துளசிவனமென்னும் பிருந்தாவனத்தில் சுமதி என்னும் நாமமுடையவோர் முநி சிரேஷ்டர் வசிக்கின்றார். அவருடன் நீரும் வாசஞ் செய்து கொண்டிருந்தாலுமக்குச் சிரேயசு உண்டாகுமென்று ஆத்ரேயருக்கு நியமித்து விட்டு வியாசரும் பார்த்தசாரதியை சங்கம் வலக்கையிலும் தான முத்திரை இடக்கையிலுமாக பிரமாணப்படி யமைத்து அர்ச்சாவதார விக்ரஹ ஸ்வருபமாக ஏறி யருளச்செய்து, அதில் சாஸ்திரோக்தப் பிரகாரம் பரமபதநாதனான ஸ்ரீநிவாஸன ஆவாஹனஞ்செய்து ஸாஸ்திர விதியாலாராதித்துப் பிறகு ஆத்ரேயருக்குக் காட்டிக் கொடுத்து நீர் சுமதி என்னும் முநி சிரேஷ்டரிடஞ்சென்று கைரவிணி மேலைக் கரையிலுள்ள துளசி வனத்திலே பார்த்தசாரதி திவ்யமங்கள விக்ரஹத்தைச் ,ஹாஸ்திரோக்தப் பிரகாரம் பிரதிஷ்டை செய்து வைகானச விதியாலே ஆராதித்துக் கொண்டிரும். கலி தோஷமும் நீங்கும்.வேங்கடகிருஷ்ண னென்னும் இந்தப் பார்த்தசாரதி கடாக்ஷத்தாலே சகலாத்துமாக்களும் உஜ்ஜீவிப்பார்க ளென்றருளிச் செய்தார். ஆத்ரேய முனிவரும் வியாஸ பகவானைச் சாஷ்டாங்கமாகத் தண்டஞ்சமர்ப்பித்துப் பார்த்தசாரதி திவ்ய மங்கள விக்ரஹத்தைச் சிரசாகவஹித்து எழுந்தருளச்செய்து கொண்டு பிருந்தாவனத்திலுள்ள சுமதி என்னும் முநிசிரேஷ்டரிடம் வந்து சேர்ந்தார். அங்கு அவர் சஹாயத்தால் வியாஸர் நியமித்தபடி கைரவிணி மேலைக்கரையில் கிழக்கே திருமுகமண்டலமாகப் பார்த்தசாரதி என்னும் வேங்கடகிருஷ்ணப் பெருமாளைச் சாஸ்திரோக்தமாகப் பிரதிஷ்டை செய்து தாம் ஏறியருளச்செய்த, ருக்மணி, பலராமர் சாத்துவீகி அநிருத்தான்,பிரத்யும்னான், இவர்களையும் சாஸ்திர வத்தாய்ப் பிரதிஷ்ட்டை செய்து வைகானஸ விதியாலே ஆராதித்துக் கொண்டிருந்து ஸ்ரீய: பதியின் கடாக்ஷத்தை யடைந்தார். இப்படியிருக்கத் திருவேங்கடத்தானாலே நியமனம் பெற்ற தொண்ட மண்டலத்தரகனான சுமதி என்னும் ராஜனும் தன் பட்டணத்தையடைந்து சில நாளிருந்து அங்கு நின்றும் புறப்பட்டுத் தென்தேசத்திலுள்ள மயூர பிருந்தாவனத்தை யடைந்து ஸ்ரமஹரமும் பாவனமுமான கைரவிணி புஷ்கரிணியிலே தீர்த்தமாடிச் சகல தாபங்களுமற்றுத் திருவேங்கடத்தான் தனக்குக் கிருபையாலே சேவை சாதித்தருளும் பார்த்தசாரதி திருக் கோலமான வேங்கடகிருஷ்ணப் பெருமாளைக் கண்களாரக் கண்டு வாயார வாழ்த்தி ஆனந்த பாஷ்ப யுக்தனாகிச் ஸாஷ்டாங்க தண்டஞ்சமர்ப்பித்துத் திருப்தி யடைந்து, அனந்தரம் க்ஷேத்திரக்யையான வேதவல்லித் தாயாரையும் அவள் நாயகனான மந்தாதனென்னும் என்னையாளுடை யப்பனையும், தெள்ளிய சிங்கரையும் சக்ரவர்த்தித் திருமகனாரையும், கஜேந்திர வரதராஜப் பெருமாளையும் தண்டஞ்சமர்ப்பித்து தீர்த்தப் பிரசாதம் முதலான் வரிசைகளையும் பெற்று விமான கோபுரப் பிராகார மண்டபாதி சந்நிதி கைங்கர்யங்களைச் செய்து அனேகமான திருவாபரணங்களைச் சமர்ப்பித்து ஐந்துப்பிரகாரங்களாகச் சேவை சாதித்தருளும் பெருமாள்களுக்கு திரிகால ஆராதனங்கள் நடக்கும்படியாகச் செய்வித்து ததனந்தரம் பார்த்தசாரதிக்குச் சுபமான ஆவிர்ப்பாவத்தை யுடைத்தான சைத்திர மாதத்திலே பிரம்மோற்சவத்தைச் செய்வித்து ஆனந்தித்துப் பார்த்தசாரதியான வேங்கட கிருஷ்ண ஸ்வாமியின் அநுக்ரஹத்தைப் பெற்றுத் தன் பட்டணத்தை யடைந்து திருவேங்கடத்தானைச் சர்வ காலமும் ஆராதித்துக் கொண்டிருந்தான்.இந்த வைபவங்களை வாசிக்கின்றவர்கள், கேட்கின்றவர்கள்.இஹபர சம்பத்தை யடைந்து வாழ்வார்களென்று நாரதரைப் பார்த்து சிவபிரான் சொன்னார்.

————-

கைரவிணி தீர்த்தமஹிமை.
வாரீர் நாரதரே! அந்த பிருந்தாவனத்திற்கும் அல்லித் தாமரை ஹம்ஸாதிகளால் அலங்கிருதமான கைரவிணி தீர்த்தத்திற்கும்,காசியும் கங்கையும் சமமாக மாட்டாது. ஜன்ம ஸஹஸ்ரங்களிலே கங்கையில் ஸ்நானஞ் செய்கின்றதைப் பார்க்கிலும் ஒருகால் கைரவிணி தீர்த்தத்தில் ஸ்நானஞ் செய்கை விசேஷம். அதற்கு சந்தேஹமில்லை.கங்கையில் ஸ்நானஞ் செய்கின்றவர்கள் புண்ணிய பலன்களை யடைந்து புண்ணியம் ஷீணமானால் பிறவி சாகரத்தை யடைவார்கள்; கைரவிணியில் தீர்தமாடினால் சித்தமாகப் பாபங்களெல்லாம் போய்ப் பரிசுத்தர்களாகி மோக்ஷத்தையடைவார்கள். அதன் வைபவத்தை யார் தான் சொல்லமாட்டுவர்கள்
வாரீர் நாரதரே !வியாக்ர ஜன்மாவானவர் ஸார்த்தூலரை பார்த்துச் சொல்லுகின்றார்.ஒருகால் விசுவாவசுவென்னுந் கந்தருவன் ஆகாச மார்க்கத்தில் சஞ்சரித்துக் கொண்டு வருகையில் ஹிமோத் கிரியின் மூன்று சிகரங்களுள் மேற்கு பாகத்திலுள்ள ஓர் சிகரத்திலிருக்கும் அரஜஸ் என்னுந் தீர்த்தக்கரையில் தபசு செய்து கொண்டிருந்த, அத்ரி புத்ரரான துர்வாசர் மீது அந்தக் கந்தருவன் நிழல் படக் கண்ட துர்வாசரும் அசரீரியாய் போகக்கடவா யென்று சபித்தனர். அவனும் சாபத்தைப் பெற்றுக் குபேரனை யடைய அவன் சிவபிரானை நோக்கித் தபசு செய்தால் சாப விமோசனமாகுமென்று சொல்லக் கேட்டு என்னை வந்தடைந்து என்னாலே கைரவிணி தீர்த்தத்திலே ஸ்நானஞ்செய்து சாப விமோசனமாகி எதா பிரகாரந் தேஹத்தை யடைந்து சுகித்திருந்தான். கார்த்திகை மாதக் கிருஷ்ண பக்ஷத்து அஷ்டமி திதியில் யாவர் கைரவிணியில் சிராத்தஞ் செய்கின்றார்களோ அவர்களின் பிதுருக்கள் திருப்தி யடைந்து மோக்ஷத்தை யடைவார்கள். அந்த கைரவிணி புஷ்கரிணிக்கு உத்தர பூர்வாதிக்கில் இந்திர தீர்த்த மொன்றுண்டு. அதில் ஸ்நானஞ்செய்து அசுவதானஞ் செய்யவேண்டும் கைரவிணிக்குத் தக்ஷிணபாகத்தில் சோமதீர்த்தமொன்றுண்டு. அதில் ஸ்நானஞ் செய்து பால் தயிர் வெண்ணெய் பட்டு வஸதிரம் தானஞ் செய்ய வேண்டும். கைர விணிக்குத் தென்மேற்கு திக்கில் மீன தீர்த்தமொன்றுண்டு அதில் ஸ்நானஞ்செய்து முத்து,பவளம்,தென், நெய்தானஞ்செய்ய வேண்டும். கைரவிணிக்கு வடமேற்கு திக்கில் அக்னி தீர்ததமொன்றுண்டு, அதில் ஸ்நானஞ்செய்து அஜதானஞ்செய்ய வேண்டும் கைரவிணிக்கு உத்தர திக்கில் விஷ்ணுதீர்த்தமொன்றுண்டு, அதில் ஸ்நானஞ்செய்து தானங்களெல்லாஞ் செய்யலாம்.இப்படிக் கைரணியைச் சூழ்ந்துள்ள இந்த ஐந்து தீர்த்தங்களும் இஷ்ட காம்யங்களை எல்லாங்கொடுக்கும், உத்தமமான கைரவிணியானது சர்வாபீஷ்டங்களையுங் கொடுத்து மோக்ஷத்தையுங் கொடுக்கும். பூர்வம் கண்ணுவர் புத்திரரான முத்கலரென்பவர் கோகாண ஷேத்திரத்தில் தபசுசெய்து கொண்டிருக்கையில் கோஹிலர் முதலான ஐந்து ருஷிகள் வரக்கண்ட முத்கலர் நீங்களெங்கே போகின்றீர்களென்று வினவ, நாங்கள் தபோ சித்திக்கு யோக்கிமாகி ரமணியமான பிருந்தாவனத்திற்குப் போகின்றோமென்ன ஆகில் நானுங் கூடவருகின்றேனென்று எல்லோருஞ் சேர்ந்து கைரவிணி தீரத்திலுள்ள பிருந்தாவனத்தை யடைந்து கைரவிணியில் ஸ்நானஞ்செய்து தபசு செய்து கொண்டிருந்தார்கள். இப்படியிருக்க கைரவிணி புஷ்கரணிக் கரையிலே தபசு செய்து கொண்டிருக்கும் முத்கலரானவர் அந்தக் கைரவிணியிலிருக்கும் அனேக மத்சியங்களின் ஆரவார லீலா வினோதங்களாலே தபோ விக்னமாகின்ற தென்று அந்த மத்பியங்களுக்கு நாதனான ஒருபெரிய மீனைப் பார்த்து உங்கள் வம்சங்களிலொன்றாகிலும் இந்த புஷ்கரணியிலிராமல் உங்களுக்குத் தகுதியான இடத்திற்கு நாளை சூர்யோதயத்திற்குள்ளாகப் போய்ச் சேருங்கோ ளென்று சொல்லித் தபசுசெய்து கொண்டிருந்தார். அனந்தரம் அவராக்யைப்படியே மத்ஸ்யங்கள் ளெல்லாம் மறுநாள் சூர்யோதயத்திற்குள்ளாகப் போய்விட்டன.ஆகையாலிது பர்பந்தமும் அந்தக் கைரவிணி புஷ்கரணியிலொரு மீனாகிலுங்கிடையாது. பிரமதேவர் கைரவிணி புஷ்கரணியின் மஹாத்மியத்தை வசிஷ்டருக்குச் சொல்லி அபஹரமமதுரிதானி பிரதி ஸேத்வம் நிருபமாம்ய ஸோலக்ஷ்மீம் பகவதி கைரவிணி த்வாம் ப்ரணமாமி ஜநார்த்தன ப்ரியேஸ் சுபகே

ஸ்ரீமந் நாராயணனுக்கு அர்க்கிய பாத்யாதி யுபசாரங்களுக்கு அர்ஹையாய் அத்தால் ப்ரியையாய்ப் பாக்யவதியா இருக்கின்ற கைரவிணியே உன்னை தண்டஞ் சமர்ப்பிக்கினறேன் என் சகல பாபங்களையும் அபஹரி,உபமான ரஹிதையான யசோ லக்ஷ்மியை உண்டாக்கு, என்னும் மந்திரத்தையும் உபதேசித்தார். இந்தப் பிரகாரம் பிரஹ்மாண்ட புராணத்தில் மஹேஸ்வர நாரத சம்வாதத்தில் திரு அல்லிக்கேணி என்னும் பிருந்தாவன மஹாத்மியத்தில் ஐந்து மூர்த்திகளின் வைபவங்களையும் அவைகளில் திருவேங்கடத்தானே பார்த்தசாரதி என்னும் வேங்டகிருஷ்ணனாகக் சேவை சாதித்தருளும் பிரகாரத்தையும் கேட்கின்றவர்கள் சர்வாபீஷ்டங்களை யுமடைந்து தேஹாவசான காலத்திலே பரம பதத்தையும் பெற்று வாழ்வார்சுள்
திருவல்லிக்கேணி மஹாத்மியம் முற்றிற்று

—————————————————————————-———————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading