சதுர்தமாயுஷோ பாகமு ஷித்வா ஆத்யம் குரெள த்விஜ: |
த்விதீய மாயுஷோ பாகம் க்ருததாரோ க்ருஹே வஸேத் ||-1-
பிராம்மணன் தன் ஆயுளின் நான்கு பாகத்தில் முதல் ஒரு பாகத்தை குருகுலவாசத்தால் கடத்த வேண்டும் . இரண்டாவது பாகத்தில் திருமணம் புரிந்து கொண்டு இல்லத்தில் வசிக்க வேண்டும்.
அத்ரோஹேணைவ பூதாநாமல்ப த்ரோஹேண வா புந: |
யா வ்ருத்திஸ்தாம் ஸாமாஸ்தாய விப்ரோ ஜீவேதநாபதி ||-2
பிராம்மணன், ஆபத்து ஏதும் இல்லாதபோது எந்த ஜீவனுக்கும் துரோகம் செய்யாமல் இருக்கத்தக்கபடி தன் ஜீவனோபாயத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். இயலாத போது குறைந்த பாதிப்பை மட்டுமே அளிக்கவல்ல தொழிலால் ஜீவிக்க வேண்டும்.
யாத்ராமாத்ர ப்ரஸித்த்யர்த்தம்ஸ்வை: கர்ம பிரகர் ஹிதை: |
அக்ளேஷே ந ஷரீரஸ்ய குர்வீத தநஸஞ்சயம்|| 3
பழிப்புக்கிடமில்லாதபடியான, தன் குலத்துக்கு விதிக்கப்பட்ட தொழில்களை செய்ய வேண்டும் . சுகத்தில் பற்று வையாமல், உடலுக்கும் உபாதையளிக்காமல் செல்வத்தைத் தேட வேண்டும்.
ருதா ம்ருதாப்யாம் ஜீவேத்து ம்ருதேன ப்ரம்ருதே ந வா |
ஸ்தயாந்ரூதாப்யாமபி வா ந ஷ்வவ்ருத்யா கதாசந || 4
ருதம், அம்ருதம், மருதம்,ப்ரம்ருதம், சத்யாந்ருதம் இவைகளால் பிராம்மணர்கள் தங்கள் ஜீவனோபாயத்தை நடத்த வேண்டும்.-ஆனால் நாயைப் போன்று ஒரு காலும் ஜீவிக்கக் கூடாது.
ருதமுஞ்ஷிலம் ஞேயமம்ருதம் ஸ்யாதயாசிதம் |
ம்ருதம் து யாசிதம் பைக்ஷம் ப்ரம்ருதம் கர்ஷணம் ஸ்ம்ருதம்||-5
கீழே சிந்திக்கிடக்கும் தானியங்களை பொறுக்கி எடுத்து வருவது ‘ருதம்’ எனப்படும். தானியக்கதிர்கள் விழுந்து கிடந்தால் அவைகளை எடுத்து வருவது ‘சிலம்’ எனப்படும். யாரையும் யாசிக்காமல் தானாகக் கிடைத்தது ‘அம்ருதம்’ எனப்படும். யாசித்துக் கொண்டு வந்தது ‘ம்ருதம்’ எனப்படும். பயிரிட்டுப் பெறுவது ‘ப்ரம்ருதம்’ எனப்படும்.
ஸத்யாந்ருதம் து வாணிஜ்யம் தேந சைவாபி ஜீவ்யதே|
ஸேவா ஷ்வவ்ருத்திராக்யாதா தஸ்மாத்தாம் பிரிவர்ஜயேத் 6
வர்த்தகம் செய்வது ‘சத்யாந்ருதம்’ எனப்படும். வர்த்தகம் செய்தும் பிராம்மணன் ஜீவிக்கலாம்.-சேவகத் தொழில் செய்வது நாயின் பிழைப்பைக் போன்றது.-எனவே ஒருகாலும் அதை செய்யக் கூடாது.
குசூலதான்யகோ வாஸ்யாத் கும்பீதாந்யக ஏவ வா |
திரய ஹைஹிகோ வாபி பவேதஷ்வஸ்தநிக ஏவ வா ||| 7
மூன்று ஆண்டுகளுக்குத் தேவையான தானியங்களையும், அதற்கு மேலும் களஞ்சியத்தில் சேர்த்து வைத்துக் கொள்பவன்-குசூலதான்யகன்’ எனப்படுவான்.-ஒரு வருடத்துக்குத் தேவையான தானியங்களை சேர்த்து வைத்துக் கொள்பவன் ‘கும்பீதான்யகன்’ எனப்படுவான்.-மூன்று நாட்களுக்குத் தேவையானதை சேகரித்து வைத்துக்
கொள்பவன் திரயஹைஹிகன்’ எனப்படுவான். மறு நாளைக்குத் தேவையானதை மட்டும் வைத்துக் கொள்பவன் ‘அஷ்வஸ்தநிகன்’ எனப்படுவான்.
சதுர்ணாமபி சைதேஷாம் த்விஜாநாம் க்ருஹமேதிநாம் |
ஜ்யாயாக் பர: பரோ ஞேயோ தர்மதோ லோகஜித்தம: || 8
இப்போது கூறிய நான்கு வகையானவர்களில் முதலில் கூறியவரை விட அடுத்தடுத்ததுக் கூறியவர்கள் முறையே சிறந்தவர்கள். ஏனெனில் ஜீவனத்தை நடத்திய படி, மற்ற
விஷயங்களில் மனத்தைச் செலுத்தாமல், பகவானை தியானித்தபடி இருப்பார்கள் இறுதியாகக் கூறியவர்கள்.
ஷட்கர்மைகோ பவத்யேஷாம் த்ரிபிரக்ய: ப்ரவர்ததே|
த்வாப்யா மேகஷ் சதுர்தஸ்து ப்ரஹ்மஸத்ரேண ஜீவதி|-9
முதலில் கூறியவன் (மூன்று வருடங்களுக்கும் அதற்கு மேலும் சேர்த்துக் வைத்துக் கொள்பவன்) ஆறு வகைகளில் ஜீவனம் நடத்தலாம். அதாவது கீழே சிந்திக் கிடக்கும்தானியங்களை பொறுக்கி எடுத்து வருதல், கீழே கிடக்கும் தானியக்கதிர்களை
சேர்த்து எடுத்து வருதல், யாரையும் யாசிக்காமல் தானாகக் கிடைத்ததை வைத்துக் கொள்ளல், யாசித்துப் பெறுதல், விவசாயம், வர்த்தகம் என்னும் ஆறு வகைகளாலும் ஜீவனம் நடத்தலாம். அதற்கடுத்தவன், ( ஒரு வருடத்துக்குத் தேவையானதை சேர்த்து
வைப்பவன்) வேள்வி செய்தல், வேதம் சொல்லிக் கொடுத்தல், தானம் பெறுதல் என்னும் மூன்று வகைகளால் ஜீவிக்கலாம். அதற்கடுத்தவன் (மூன்று நாட்களுக்குத் தேவையானதை
சேகரித்து வைத்துக் கொள்பவன்) வேள்வி புரிதல், வேதத்தின் பொருள் உரைத்தல் என்னும் இருவகைகளால் ஜீவிக்கலாம்.-மறுநாளுக்கு மட்டுமே சேகரிப்பவன் வேதம் கற்பிப்பதால்
மட்டுமே ஜீவிக்கலாம்.
வர்த்தயம்ச ஷிலாம்சாப்யாமாக்நி ஹோத்ர பராயண: |
இஷ்டி: பார்வாயநாந்தியா : கேவலா நிர்வபேத்ஸதா ॥-10
இவ்வாறு ஜீவிப்பவன் செல்வத்தைக் கொண்டு செய்யக் கூடிய மற்ற கிரிகைளை செய்ய இயலாதாகையால், எப்போதும் அக்னி ஹோத்ரம் செய்து கொண்டு அமாவாசை பெளர்ணமி ஆக்ரயண இஷ்டிகளை செய்ய வேண்டும்.
ந லோகவ்ருத்தம் வர்தேத வ்ருத்திஹேதோ: கதஞ்சந |
அஜிஹ்மாமஷடாம் ஷுத்தாம் ஜூவேத் ப்ராஹ்மண ஜீவிகாம் || 11
பிராம்மணன் ஜீவனத்துக்காக விகடம் பண்ணுதல் முதலான தொழில்களில் ஈடுபடலாகாது. பொய் கூறுதல், டம்பமாகப் பேசுதல் முதலானவைகள் கலக்காத பிராம்மணனுக்கான தொழில்கள் செய்து பிழைக்க வேண்டும்.
ஸந்தோஷம் பரமாஸ்தாய சுகார்தீ ஸம்யதோ பவேத் |
ஸந்தோஷ மூலம் ஹி சுகம் துக்க மூலம் விபர்யய: || 12
தனக்குக் கிடைத்தவைகளைக் கொண்டு திருப்தியடைந்து, அதற்குமேலும் ஆசைப்படாமல் வாழ வேண்டும். இவ்வாறு சுகமாக வாழ்வதே சந்தோஷத்தைக் கொடுக்கும். திருப்தியின்றி இருப்பது துக்கத்தைக் கொடுக்கும்.
அதோ அந்யதமயா வ்ருத்யா ஜீவம்ஸ்து ஸ்நாதகோ த்விஜ: |
ஸ்வர்காயுஷ்ய ஷஸ்யாநி வ்ரதாநீமாநி தாரயேத் || 13
இதற்கு முன் கூறிய ஜீவனவிருத்திகளில் தனக்குத் தக்க ஜீவன விருத்தியை செய்து கொண்டு, பரலோகம், ஆயுள், கீர்த்தியை அளிக்கக்கூடியதான இந்தவிரதங்களை அனுஷ்டிக்க வேண்டும்.
வேதோதிதம் ஸ்வகம் கர்ம நித்யம் குர்யாததந்த்ரிய: | தத்தி குர்வந் யதாஷக்தி ப்ராப் நோதி பரமாம் கதிம் | 14
நித்யம் அனுஷ்டிக்க வேண்டும் என்று வேதத்தில் கூறப்பட்ட கிரியைகளை சோம்பலின்றி செய்ய வேண்டும். அவ்வாறு தன்கர்மானுஷ்டானங்களை, சக்திக்குத் தக்கபடி செய்பவன் உத்தமகதியை அடைவான்.
நேஹேதார்தாந் ப்ரசங்கேந ந விருத்தேந கர்மணா |
ந வித்யமா நேஷ்வர்த்தேஷு நார்த்யாமபி யதஸ்தத: ||-15
பாட்டு, நாட்டியம் போன்றவற்றால் பணம் சம்பாதிக்க கூடாது. தகாதவனுக்கு யாகம் செய்து வைக்கக் கூடாது. பணம் இருக்கிறதோ இல்லையோ பாவிகளிடம் தானம் வாங்கக் கூடாது.
இந்த்ரியார்தே ஸர்வேஷீ ஸ ப்ரசஜ்யேத காமத: |
அதிப்ரசக்திம் சைதேஷாம் மநஸா ஸந்நிவர்தயேத் || 16
சகல இந்திரியங்களின் விஷயங்களிலும் ஆசையை விட வேண்டும். எந்த இந்திரிய விஷயத்திலும் அதிக ஆவல் கொள்ளாமல் மனத்தை அதில் செல்லவிடாமல் தடுக்க வேண்டும்.
ஸர்வாந் பரித்யஜேதர்த்தாந் ஸ்வாத்யாயஸ்ய விரோதிந: 11
யதா ததா அத்யாபயம்ஸ்து ஸாஹ்யஸ்ய க்ருதக் ருக்யதா || 17
வேதாத்யயனம் செய்வதற்கு இடையூறாக இருக்கும் சகலத்தையும் விலக்கிவிட வேண்டும்.
வேதாத்யயனமும், சொல்லிக் கொடுத்தலுமே பிராம்மணனுக்கு பிறவிப்பயனை நல்கும்.
வயஸ: கர்மணோ அர்த்தஸ் ய ஷ்ருதஸ்யாபிஐ நஸ்ய ச |
வேஷவாக் புத்தி ஸாரூப்ய மாசரந் விசரேதிஹ || 18
தன்னுடைய வயதுக்கேற்றபடியும், தான் செய்யும் யாகம் இயற்றுதல் அல்லது வேறு தொழிலுக்குத் தக்கபடியும், தன் செல்வநிலைக்குத் தக்கபடியும், குலத்துக்குத் தக்கபடியும் ஆடை, பேச்சு, புத்தியுடன் இருக்க வேண்டும்.
புத்தி வருத்திகராண்யாஷு தந்யாநி ச ஹிதாநி ச |
நித்யம் ஷாஸ்த்ராண்யவே க்ஷேத நிகமாந்ஷ்சைவ வைதிகாந் |19
புத்தியை வளர்க்கக்கூடிய, வேத ஞானத்தை வழங்கக்கூடிய பொருளீட்டப் பயன்படக்கூடிய, தனக்கு நன்மையை நல்கக் கூடிய நூல்களை தினமும் படிக்க வேண்டும்.
யதாயதாஹி புருஷ: ஷாஸ்த்ரம் ஸமதிகச்சதி |
ததா ததா விஜாநாதி விக்ஞானம் சாஸ்ய ரோசதே 20
எவ்வளவுக்கெவ்வளவு சாஸ்திரத்தை அய்யாசம் செய்கிறானோ, அவ்வளவுக்கவ்வளவு அவனுடைய ஞானம் பிரகாசிக்கும்.
ருஷியக்ஞம், தேவயக்ஞம் பூதயக்கும் ச ஸர்வதா | ந்ருயக்ஞம் பித்ருயக்ஞம் ச யதாஷக்தி நஹாபயேத் || 21
கிருஹஸ்தன் வேதமோதுதல், தேவ பூஜை செய்தல், வைஸ்வ தேவம் முதலான ஹோமங்கள் செய்தல், அதிதிபோஜனம், சிராத்தம் முதலானவைகளை சக்திக்குத் தக்கபடி செய்ய வேண்டும். ஒருகாலும் விடக் கூடாது.
ஏதாநேகே மஹாயக்ஞாந் யக்ஞ ஷாஸ்த்ரவிதோ ஐநா: 1 அநீஹமாநாஸ்ஸதத மிந்த்ரியேஷ்வேவ ஜூஹ்வதி || 22
மாபெரும் ஞானிகள் மட்டுமே பஞ்சமஹா யக்ஞங்களான இவைகளைச் செய்ய மாட்டார்கள். அவர்கள் தங்கள் இந்திரியங்களிலேயே இந்த ஹோமங்களைச் செய்தவர்களாகின்றனர்.
வாச்யேகே ஜூஹ்வதி ப்ராணம் ப்ராணே வாசம் ச ஸர்வதா |
வாசி ப்ராணே ச பஷ்யந்தோ யக்ஞ நிர்வ்ருத்தி மக்ஷயாம் || 23
மேலோர் சிலர் யக்ஞபலன்கள் தங்கள் வாக்கிலும் பிராணனிலும் இருப்பதாகக் கருதுவர். வாக்கையும் பிராணனையும் கொண்டு யக்ஞபலனை அடைவார்கள்.
ஞாநேநைவாபரே விப்ரா யஜந்த்யேதைர் மகைஸ்ஸதா |
ஞான மூலம் க்ரியாமேஷாம் பஷ்யந்தோ ஞான சக்ஷஷா 11 24
சில ஞானியர் பிரம்ம ஞானம் என்னும் கண்ணாலேயே எல்லா கிரியைகளின் பலனும் கிடைக்கும் என்று ஞானத்தில் திளைத்திருப்பர்.
அக்நிஹோத்ரம் ச ஜூஹுயா தாத்யந்தே த்யுநி ஷோஸ்ஸதா || தர்ஷேந சார்த்தமாஸாந்தே பெளர்ணமாஸேந சைவஹி|| 25
காலையும் மாலையும் அக்நிஹோத்ர ஹோமம் செய்ய வேண்டும். பௌர்ணமி அமாவாசைகளிலும் யக்ஞம் செய்ய வேண்டும்.
ஸஸ்யாந்தே நவஸஸ்யேஷ்ட்யா ததர்த்வந்தே த்விஜோ அத்வரை: |
ப நா த்வயநஸ்யாதௌ ஸமாந்தே ஸெளமிகை மகை: || 26
பழைய தானியங்கள் தீர்ந்து போகும் தருணத்தில், புதிய தானியங்களை அறுவடை செய்வதற்கு முன்பு ஹோமம் செய்ய வேண்டும். ருதுக்கள் முடியும் தருணத்தில் சாதுர்மாஸத்தில் ஹோமம் செய்ய வேண்டும்.-தக்ஷிணாயன ஆரம்பத்திலும், உத்தராயன ஆரம்பத்திலும் ஹோமம் செய்ய வேண்டும்.வருட ஆரம்பத்திலும் முடிவிலும்
ஹோமம் செய்ய வேண்டும்.
நாநிஷ்ட்வா நவஸ ஸ்யேஷ்ட்யா பஷுநா சாக்நிமாந் த்விஜ: |
நவாந்நமத்யாந்மாம்ஸம் வாபா தீர்கமாயுர்ஜி விஷு: | 27
நீண்ட ஆயுளை விரும்புவன், புது தானியம் வந்ததும், ஹோமம் செய்யாமல் அதை உண்ணலாகாது.-தட்சிணாயன ஆரம்பத்திலும் உத்தராயன ஆரம்பத்திலும்
ஹோமம் செய்யாமல் மாமிசம் சாப்பிடக் கூடாது.
நவேநாநர்சிதா ஹ்யஸ்ய ப ஹவ்யேந சாக்நய: |
ப்ராணா நேவாத்து மிச்சந்தி நவாந்நாமி ஷகர்திந: |-28
இவ்வாறு செய்யாவிட்டால் அவன் இல்லத்திலுள்ள மூன்று அக்னிகளும் புதிய அன்னத்தின் மீதும், மாமிசத்தின் மீதும் கொண்ட ஆவல் தீராமையால், அந்த கிருஹஸ்தன் உயிரை உண்ண விரும்பும்.
ஆஸ்நாஷநஷய்யாபிரத்பிர் மூல பலேந வா|
நாஸ்ய கஷ்சித்வஸேத் கேஹே ஷக்திதோ நர்சிதோ அதிதி: |-29
கிருஹஸ்தன் தன் இல்லத்துக்கு வந்த அதிதிக்கு ஆசனம், போஜனம், கிழங்குகள்,பழங்கள் முதலானவற்றால் உபசரித்துபடுக்க வசதியும் தன் சக்திக்குத் தக்கபடி செய்து தர வேண்டும்.-அவ்வாறில்லாத கிருஹஸ்தனுடைய வீட்டில் அதிதி இருக்கக் கூடாது.
பாஷாண்டிநோ விகர்மஸ்தாந் பைடாலவ்ரதிகாந் ஷடான் |
ஹைதுகாந் பகவ்ருத்தீம்ஷ்ச வாக்மாத்ரேணாபி நார்சயேத் |-30
வேத வழிக்குப் புறம்பான பாஷாண்டர்கள், சாஸ்திரம்அனுமதிக்காத காரியங்களைச் செய்பவர்கள், பூனையைப் போன்றகுணம் கொண்டவர்கள், கொக்கைப் போன்ற குணம் கொண்டவர்கள், வேதத்துக்கு எதிராக தர்க்கம் செய்பவர்கள் முதலானோர்அதிதிகளாக வந்தால் அவர்களுக்கு எந்த வகையான உபசாரமும்செய்யக்கூடாது.-இந்த உபசாரங்கள் மட்டுமல்ல, வாய் வார்த்தையால்கூட உபசரிக்கக் கூடாது.
வேதவித்யா வ்ரதஸ்நாதாந் ஷ்ரோத்ரியாந் க்ருஹமேதிந: |
பூஜயேத் ஹவ்யக்வயேந விபரீதாம்ஷ்ச வர்ஐயேத் || 31
வேதங்களை முழுமையாகப் படித்து, விரதங்களை முழுமையாக செய்யாமல் சமாவர்த்தனம் செய்பவன் வித்யாஸ்நாதகன் எனப்படுவான்.-விரதங்களை முழுமையாகச் செய்து வேதங்களை முழுமையாகப் படிக்காதவன் விரதஸ்நாதகன் எனப்படுவான்.
வேதங்களையும் முழுமையாகப் படித்து, விரதங்களையும் முழுமையாக முடித்து, அதன்பின் குருகுல வாசத்தை முடித்துவிட்டு வந்தவன் வித்யாவிரதஸ்நாதகன் எனப்படுவான்.
இம்மூவகையாரையும் தேவ காரியங்களிலும் பித்ரு காரியங்களிலும் நியமித்து பூஜிக்க வேண்டும். மற்றவர்களை பூஜிக்கக்கூடாது.
ஷக்திதோ அபசமாநேப்யோதாதவ்யம் க்ருஹமேதிநா|
ஸம்விபாகஷ்ச பூதேப்ய: கர்தவ்யோ அநுபரோதத: || 32
தன் குடும்ப போஷணத்துக்கு குறைவு ஏற்படாவண்ணம், பிரம்மசாரிக்கும், சந்யாசிக்கும் பிட்சையளிக்க வேண்டும். (மரம் இருந்தால் நீர்வார்த்தல், பூனை போன்றவை இருந்தால் சாப்பிடக் கொடுத்தல் இப்படியாக) சகல பூதங்களுக்கும் திருப்தி ஏற்படுத்தும் வண்ணம் அவற்றுக்குத் தேவையானதை வழங்க வேண்டும்.
ராஜதோ தநமந்விச்சேத்ஸம்தந் ஸநாதக: க்ஷதா|
யாஜ் யாந்தேவாஸி நோர்வாபி ந த்வந்யத இதி ஸ்திதி: || 33
ஸ்நாதகனான கிருஹஸ்தன் கொடிய வறுமை வந்துற்ற போது, அரசன், தன்னைக்கொண்டு யாகங்கள் செய்வித்துக் கொண்டவன், தன் சிஷ்யன் முதலானோரிடமிருந்து வேண்டியதை பெற்றுக் கொள்ளலாம். இவர்கள் இருக்கும் போது மற்றவர்களிடம் பெறக் கூடாது . இவர்கள் யாரும் இல்லை என்றால் மற்ற திவிஜர்களிடம் பெறலாம். அவர்களும் இல்லாதபோது எவரிடமிருந்தும் பெறலாம்.
நஸீதேத்ஸ்நாதகோ விப்ர: கூதா ஷக்த கதஞ்சந |
நஜீர்ணமலவத் வாஸாபவேச்ச விபவே ஸதி || 34
வித்யை, விரதம் முதலானவைகளை பூர்த்தி செய்தவன், தானம் பெறத் தகுதியுள்ளவன், மேற் கூறிய மூவரும் இருக்கும் போது பசியினால் துவண்டு இளைத்துப்போகக் கூடாது. அவர்களிடம் பெற்று நல்லபடி இருக்க வேண்டும். செல்வம் கிடைக்கும்போது கிழிந்த ஆடைகளை உடுத்தக் கூடாது.
க்ளுப்தகேஷ நகஷ்மஷ்ருர்தாந்தஷ்க்ளாம்பரஷ்சி: |
ஸ்வாத்யாயே சைவ யுக்தஸ்யாந்நித்யமாத்ம ஹிதேஷி ச |35
கிருஹஸ்தன்,அந்தந்த காலத்தில் கேசங்களையும், நகங்களையும், மீசை தாடிகளையும் க்ஷவரம் செய்து கொண்டு, விரதங்களால் ஏற்படும் கஷ்டங்களைப் பொறுத்துக் கொண்டு,
வெண்ணிற ஆடைகளை உடுத்தி பரிசுத்தனாக வேதமோதுதலை செய்தபடி, ஒளஷதங்களால் உடலைப் பேணியபடி வாழ வேண்டும்.
வைணவீம் தாரயேத் யஷ்டிம் ஸோதகம் ச கமண்டலும் | யக்ஞோபவீதம் வேதம் ச பேரௌக்மேச குண்டலே 36
மூங்கில் கோல், நீர் நிறைந்த கமண்டலம், பூணூல், தங்க மோதிரம், பொற்குண்டலங்கள் இவைகள் கிருஹஸ்தன் அணியத்தக்கவை.
நேக்ஷேதோத்யத்தை மாதித்யம் நாஸ்தம் யந்தம் கதாசந
நோபஸ்ருஷ்டம் ந வாரிஸ்தம் ந மத்யம் நபஸோ கதம் |37
சூரியனை உதயகாலத்திலும் அஸ்தமன காலத்திலும் பார்க்கக்கூடாது .அவ்வாறே கிரஹணகாலத்திலும், உச்ச வேளையிலும்பார்க்கக்கூடாது. நீரில் சூரியனுடைய பிரதிபிம்பத்தையும் பார்க்கக் கூடாது.
நலங்கயேத் வத்ஸதந்த்ரீம் நப்ரதாவேச்ச வர்ஷதி 11
ந சோதகே நிரீக்ஷேத ந்வம் ரூபமிதி தாரணா|| 38
கன்றைக் கட்டியிருக்கும் கயிற்றைத் தாண்டக் கூடாது. மழை பொழியும் போது ஓடக்கூடாது . தண்ணீரில் தெரியும் தன் பிரதிபிம்பத்தைப் பார்க்கக் கூடாது.
ம்ருதம் காம் தைவதம் விப்ரம் க்ருதம் மது சதுஷ்பதம் |
ப்ரதக்ஷிணாநி குர்வீத ப்ரக்ஞாதாம்ஷ்ச வனஸ்பதீந்|| 39
பிரயாணம் செய்யும் போது எதிர்ப்படும் குன்று, பசு,தெய்வ விக்ரகங்கள், பிரம்மணர்கள், நெய்க்குடம்,தேன்குடம், நான்கு பாதைகள் கூடும் இடத்தில் உள்ள அரசு முதலான மரங்கள்
முதலானவைகளை பிரதட்சிணமாக சுற்றிக் கொண்டு செல்ல வேண்டும்.
நோபகச்சேத் ப்ரமத்தோ அபி ஸ்த்ரியமார்தவதர்நே|
ஸமாநஷயநே சைவ ந ஷயீத தயாஸஹ 40
காமுகனாக இருந்தாலும் பெண்ரஜஸ்வலையான நாட்களில் கூடக்கூடாது. கூடாவிட்டாலும், ஒரே படுக்கையில் படுக்கவும் கூடாது. (வீட்டுக்கு விலக்காகப் பெண்இருப்பதற்கு ரஜஸ்வலை என்று பெயர்).
ரஜஸா அபிப்ளூதாம் நாரீம் நரஸ்ய ஹ்யுபக கச்சத: I ப்ரக்ஞா தேஜோ பலம் சக்ஷ ராயுஷ்சைவ ப்ரஹீயதே|| 41
ரஜசுடன் இருக்கும் பெண்ணைக் கூடியவனுடைய புத்தி, வீரியம், பலம், கண்பார்வை, ஆயுள் இவை நசிக்கும்.
தாம் விவர்ஜயதஸ்தஸ்ய ரஜஸாஸமபிப்ளூதாம் | ப்ரக்ஞா தேஜோ பலம் ச ராயுஷ்சைவ ப்ரவர்ததே Π 42
அவ்வாறு செய்யாதவனுக்கு புத்தி, வீர்யம், பலம், கண்பார்வை,
ஆயுள் முதலானவை விருத்தியடையும்.
நாஷ்நீயாத் பார்யயா ஸார்தம் நைநாமீ க்ஷேத சாஷ்நதீம் | க்ஷுவதீம் ஜ்ரும்பமாணாம் வா ந சாஸீநாம் யதா சுகம்|| 43
மனைவியுடன் சேர்ந்து உண்ணலாகாது. மனைவி இருமும்போதும், தும்மும் போதும், கொட்டாவி விடும் போதும்,சாவகாசமாய் தன்னிஷ்டத்துக்கு உட்கார்ந்திருக்கும் போதும்
கணவன் பார்க்கக்கூடாது.
நாஞ்ஜயந்தீம் ஸ்வகேநேத்ரே ந சாப்யக்தா மநா வ்ருதாம் |
ந பஷ்யேத் ப்ரஸவந்தீம் ச தேஜ ஸ்காமோ த்விஜோத்தம: || 44
கண்ணுக்கு மையிட்டுக் கொள்ளும் போதும், தலைக்கு எண்ணெய் தேய்த்துக் கொள்ளும் போதும், மேலாடை இல்லாத போதும், பிரசவ காலத்திலும் மனைவியைக் கணவன் பார்க்கக்
கூடாது.
நாந்ந மத்யாதேகவாஸா நக்நஸ்ஸநாநமாசரேத் | நமூத்ரம் பதி குர்வீத நபஸ்மநி ந கோவ்ரஜே || 45
கிருஹஸ்தன் ஒற்றை ஆடையோடு உணவருந்தக்கூடாது. ஆடையின்றி நீராடக் கூடாது. வழியில், சாம்பலில், பசுக் கொட்டிலில் மலஜலம் கழிக்கக் கூடாது.
நபாலக்ருஷ்டே நஜலே நசித்யாம் நச பர்வதே |
ந ஜீர்ண தேவாயதநே ந வல்மீகே கதாசந I-46
உழுதநிலம், தண்ணீர்நிலை, யாக சாலை, மலை, பாழ்பட்ட கோயில், புற்று இவைகளிலும் மலஜலம் கழிக்கக் கூடாது.
நஸஸத்வேஷு கர்தே ந கச்சந்நாபி ச ஸ்தித: ||
ந நதீதீரமாஸாத்ய நச பர்வதமஸ்தகே || 47
ஜந்துக்கள் வசிக்கும் பொந்துக்கள் போன்றவற்றிலும், நடந்து கொண்டும், நின்று கொண்டும், ஆற்றங்கரையிலும், மலையுச்சியிலும் மலஜலம் கழிக்கக் கூடாது.
வாய்வக்நி விப்ராமாதித்யம்ப: பஷ்யம் ததைவ கா: |
ந கதாசந குர்வீத விண்மூத்ரஸ்ய விஸர்ஜநம்||| 48
வாயுவையும், அக்நியையும், பிராம்மணனையும். சூரியனையும், நீரையும், பசுவையும் பார்த்தபடி எதிரில் அமர்ந்து மலஜலம் கழிக்கக் கூடாது. (வாயு என்றால் எதிர்க்காற்று வீசும் வண்ணம் அமர்வது என்று பொருள்.)
திரஸ்க்ருத்யோச்ச ரேத் காஷ்டலோஷ் பத்ரத் ருணாதிநா |
நியம்ய ப்ரயதோ வாசம் ஸம் வீதாங்கோ அவகுண்டித: || 49
நிலத்தில் கழிகள், மண் கட்டிகள், வைக்கோல், இலைகள் போன்றவற்றைப் போட்டு மூடி, மெளனத்தோடு, உடலைப் போர்த்திக் கொண்டு, தலையைத் துணியால் மூடிக்கொண்டு, தலை குனிந்தபடி மலஜலம் கழிக்க வேண்டும்.
மூத்ரோச்சாரஸமுத்ஸர்கம் திவா குர்யாதுதங்முக: |
தக்ஷிணாபிமுகோ ராத்ரௌ ஸந்த்யயோஷ்ச யதா திவா| 50
காலை, மாலை பகல் பொழுதுகளில் வடக்கு முகமாகவும், இரவில் தெற்கு முகமாகவும் அமர்ந்து மலஜலம் கழிக்க வேண்டும்.
சாயாயாமந்தகாரே வா ராத்ராவஹநி வா த்விஜ: |
யதா சுகமுக: குர்யாத்ப்ராணாபாதபயேஹு ச | 51
இரவிலும் பகலிலும் அந்தகாரமும் பனிமூட்டமும் இருக்கும்போது திக்கு திசை தெரியாவிட்டால், அப்போது எந்த திசையிலும் அமர்ந்து கழிக்கலாம். துஷ்ட மிருகங்களாலும், திருடர்களாலும் பயந்து போயிருக்கும்போதும் திசையைப் பற்றி கவலைப்பட வேண்டாம்.
ப்ரத்யக்நிம் ப்ரதிசூர்யம் ச ப்ரதிஸோ மோ தகத்விஜாந் |
ப்ரதிகாம் ப்ரதி வாதம் ச ப்ரக்ஞா நஷ்யதி மேஹத: |-52
அக்னிக்கு எதிரிலும், சூரியனுக்கு எதிர்முகமாகவும், சந்திரனுக்கு எதிர்முகமாகவும் தண்ணீரைப் பார்த்தபடி எதிர்முகமாகவும், பிராம்மணர்களுக்கு எதிர்முகமாகவும், பசுவுக்கு எதிரிலும், காற்றின் திசைக்கு எதிரிலும் மலஜலங்களை விடுபவனுக்கு ஞானம் நசிக்கும்.
நாக்நிம் முகே நோ பத மேந்நக்நாம் நிக்ஷேத ச ஸ்த்ரியம் |
நாமேத்யம் ப்ரக்ஷிபேதக் நௌ நச பாதெள ப்ரதாபயேத் || 53
நெருப்பை வாயால் ஊதக் கூடாது. நிர்வாணமாக உள்ள பெண்ணைப் பார்க்கக் கூடாது. அசுத்தமானவைகளை நெருப்பில் போடக் கூடாது. நெருப்பில் காலைக் காட்டி குளிர் காயக் கூடாது.
அதஸதாந் நோபதத்யாச் ச நசைநமபிலங்கயேத் நசைநம் பாதத: குர்யாந் ந ப்ராணாபாதமாசரேத்|| 54
கட்டிலுக்கருகில் நெருப்பை வைத்துக் கொண்டு படுக்கக் கூடாது. நெருப்பைதாண்டக் கூடாது. கால்மாட்டில் நெருப்பைவைக்கக் கூடாது. மற்றவர்கள் உயிருக்கு ஆபத்து நேரும் வண்ணம் செய்யக்கூடாது.
நாஷ்ரீயாத்ஸந்தி வேலாயாம் ன கச்சேந்நாபி ஸம் விசேத் | நசைவே ப்ரலிகேத் பூமிம் நாத்மநோ பஹரேத் ஸ்ருஜம்|| 55
சந்தியா காலத்தில் சாப்பிடக்கூடாது. வழிப்பயணம் போகக்கூடாது. படுத்துக் கொள்ளக் கூடாது. நிலத்தைக் கீறக் கூடாது. தான்தலையில் சூடிக் கொண்ட பூச்சரத்ததை தானே எடுக்கக் கூடாது.
நாப்சு மூத்ரம் புரீஷம் வா ஷ்டீவநம் வா ஸமுத்ஸ்ருஜேத் |
அமேத் லிப்தமந்யத்வா லோஹிதம் வா விஷாணி வா || 56
தண்ணீரில் சிறுநீர், மலம், கோழை, அசுத்தமான பொருள், ரத்தம், விஷம் இவைகளைக் கலக்கக் கூடாது.
நைகஸ்ஸ்வயா சூந்யகேஹே ஷ்ரேயாம்ஸம் ந ப்ரபோத யேத்|
நோதக்யயா அபிபாஷேத யக்ஷம் கச்சேந் ந சாவ்ருத: | 57
பாழடைந்த வீட்டில் தனியாகப் படுத்துறங்கக் கூடாது. தன்னைவிட, கல்வியாலும் தனத்தாலும் மேம்பட்டவனை அவன் உறங்கும் போது எழுப்பக்கூடாது. மாத விலக்கான பெண்ணுடன் பேசக் கூடாது. வேதவித், தன்னை அழைக்காத போது யாக கர்மாவில் கலந்து கொள்ளப் போகக் கூடாது.
அக்ந்யகாரே கவாம் கோஷ்டே ப்ராஹ்மணாநாம் ச ஸந்நிதௌ |
ஸ்வாத்யாயே போஜநே சைவ தக்ஷிணம் பாணிமுத்த ரேத் || 58
யாக சாலையிலிருக்கும் போதும், பசுக்கொட்டிலில் இருக்கும் போதும், பிராம்மணர்கள் முன் இருக்கும் போதும், வேதாத்யயனம் செய்யும் போதும், போஜனம் செய்யும் போதும் உத்தரீயத்துக்கு வெளியே வலதுகை இருக்க வேண்டும்.
ந வாரயேத் காம் தயந்தீம் ந சா ச த கஸ்யசித் |
ந திவீந்த்ராயுதம் த்ருஷ்ட்வா கஸ்யசித் தர்ஷயேத் புத: 59
நீரருந்தும் பசுவையும், பாலருந்தும் கன்றையும், அவை குடிக்க விடாமல் செய்யக் கூடாது. கன்று பாலருந்துவதை பிறருக்குக் காட்டக் கூடாது. வானவில்லைப் பார்த்தால், பிறரைக் கூப்பிட்டு அதைக் காட்டக்கூடாது.
நாதார் மிகே வஸேத் க்ராமே நவ்யாதிபஹூளே ப்ருஷம் |
நைக: ப்ரபத்யேதாத்வாநம் ந சிரம் பர்வதே வஸேத் || 60
தர்மம் அற்றவர்கள் வசிக்கும் கிராமத்தில் வசிக்கக் கூடாது. வியாதிகள் அதிகமாக உள்ள இடத்திலும் வசிக்கக் கூடாது. தனியாக வழி நடைப் பயணம் கூடாது. மலை மீது வெகுகாலம் வசிக்கக் கூடாது.
ந சூத்ரராஜ்யே நிவஸேந் நாதார்மிக ஐநாவ்ருதே |
ந பாஷண்டிகணாக்ராந்தே நோபஸ்ருஷ்டே அந்ந்யஜைர் ந்ருபி: || 61 சூத்திரன் மன்னனாக இருக்கும் நாட்டில் வசிக்கக்கூடாது. தர்மநெறிப்படி வாழாதவர்கள் அதிகமாக இருக்கும் கிராமத்தில் வசிக்கக் கூடாது. வேதத்துக்கு விரோதமான நெறிகளையுடைய பாஷாண்டிகள் அதிகமாக உள்ள கிராமத்தில் வசிக்கக் கூடாது. சண்டாளர்கள் வசிக்கும் கிராமத்திலும் வசிக்கக் கூடாது.
ந புஞ்ஜீதோத் த்ருதஸ்நேஹம் நாத ஸொஹித்யமாசரேத்
நாதிப்ரகே நாதிஸாயம் ந ஸாயம் ப்ராதராஷித: –62
எண்ணெய் எடுத்த பிண்ணாக்கு போன்ற சாரமற்றதை சாப்பிடக் கூடாது. அளவுக்கதிகமாக சாப்பிடக் கூடாது. சூரியன் உதிக்கும் நேரத்திலும் அஸ்தமிக்கும் நேரத்திலும் சாப்பிடக்கூடாது. பகலில் விசேஷமான உணவை சாப்பிட்டால் இரவில் சாப்பிட வேண்டாம்.
ந குர்வீத வ்ருதா சேஷ்டாம் ந வார்யஞ்ஜலிநா பிபேத்| நோத்ஸங்கே பக்ஷயேத் பக்ஷ்யாந் ந ஜாதுஸ்யாத் குதூஹலீ || 63
இம்மைக்கோ மறுமைக்கோ உதவாத செயலை செய்யக் கூடாது. உள்ளங்கையில் நீரை ஏந்திக் குடிக்கக் கூடாது. பட்சணங்களை மடியில் வைத்துக் கொண்டு சாப்பிடக் கூடாது. தேவையற்றதற்கெல்லாம் குதூகலமடையக் கூடாது.
ந ந்ருத்யேததவா காயேந்ந வாதித்ராணி வாதயேத் 11 நாஸ்போட யேந் ந ச க்ஷ்வே டேந் ந ச ரக்தோ விராவயேத் || 64
சாஸ்திர விரோதமாக நாட்டியமாடக் கூடாது. பாட்டுப் பாடக்கூடாது. வாத்தியங்களை இசைக்கக் கூடாது. தோள்களைத் தட்டுவது, பற்கள் வெளியே தெரியாமல் மூடிக்கொண்டு இருமுவது, வேண்டுமென்றே கழுதை முதலான பிராணிகளைப் போல கத்துவது இவையெல்லாம் கூடாது.
ந பாதெள தாவயேத் காம்ஸ்யே கதாசிதபி பாஜநே |
ந பின்ன பாண்டே பூஞ்ஜீத ந பாவப்ரதி தூஷிதே|||-65
வெண்கலப்பாத்திரத்தில தண்ணீர் எடுத்து அலம்பக்கூடாது. உடைந்த மண்தட்டிலும், மனத்துக்குப் பிடிக்காத எந்தப் பாத்திரத்திலும் உணவுண்ணக் கூடாது.
உபாநஹோ ச வாஸஷ்ச திருத மன்யைர் ந தாரயேத் |
உபவீதமலங்காரம் ஸ்ரஜம் கரக மேவ ச || 66
பிறர் உபயோகித்த செருப்புகளையும்,ஆடைகளையும், பூணூலையும், ஆபரணங்களையும், பூமாலைகளையும், கமண்டலத்தையும் தான் உபயோகிக்கக் கூடாது.
நாவிநீதைர்வ்ரு ஜேத்துர்த்யர் ந ச க்ஷத்வ்யாதி பீடிகை:
ந பிந்ந ஷ்ருங்கா க்ஷி ருரைர்ந வாலதிவி ரூபிதை: |-67
பழக்கப்படாதவை, பசியினால் பீடிக்கப்பட்டவை, கொம்பொடிந்தவை, குருடானவை, வாலறுந்தவை, குளம்பு தேய்ந்தவையுமான எருதுகள் பூட்டிய வண்டிகளில் பிரயாணம்
செய்யக்கூடாது.
விநீதைஸ்து வ்ரஜேந்நித்ய மாஷீகைர்லக்ஷணாந்விதை: |
வர்ணரூபேபஸம்பந்நை: ப்ரதோதேநாதுதந் ப்ருஷம்|| 68
பழக்கப்பட்டவை, விரைந்து செல்பவை, நல்ல லட்சணங்கள் பொருந்தியவை, கண்கவர் அழகுடன் திகழ்பவையுமான எருதுகள் பூட்டிய வண்டியில்,அவற்றை சாட்டையால் அதிகம் அடிக்காமல் பிரயாணம் செய்ய வேண்டும்.
பாலாஆப: ப்ரேததூமோ வர்ஜ்யம் பிந்நம் ததாஆஸநம் | நச்சிந்த்யாந்நகலோமாநி தந்தைர் நோத் பாடயேந்நகாந் || 69
இளம் வெயில், எரியும் பிணப்புகை, உடைந்த இருக்கை இவைகளை நீக்க வேண்டும். நகம், முடி இவைகளை ஒடிக்கக் கூடாது. நகங்களை பற்களால் கடிக்கக் கூடாது.
நம்ருல்லோஷ்டம் ச ம்ருத்நீயாந்நச்சிந்த்யாத்கரஜைஸ்த்ருணம் 1
ந கர்மநிஷ்பலம் குர்யாந்நாயத்யாம சுகோதயம் || 70
காரணமின்றி மண்கட்டிகளை உடைக்கக் கூடாது. நகத்தால் புல்லைக் கிள்ளக் கூடாது. பலனில்லாத செயலை செய்யக்கூடாது.-பின்னால் வருத்தம் ஏற்படக் கூடிய செயலைச் செய்யக்கூடாது.
லோஷ்டமர்த்தீ த்ருணச்சேதீ நககாதீ ச யோநா: 1
ஸ விநாஷம் ப்ரஜத்யாஷு சூசகோ அஷீசிரேவ ச ||| 71
காரணமின்றி மண்கட்டிகளை உடைப்பவன்,புற்களை நகத்தால் கிள்ளியெறிபவன், நகங்களைக் கடிப்பவன், கோள் சொல்பவன், அசுத்தமாக இருப்பவன் முதலானோர் நாசத்தை யடையவர்.
ந விகரஹ்யகதாம் குர்யாத பஹிர்மால்யம் ந தாரயேத்
கவாம் ச யாநம் ப்ருஷ்டேந ஸர்வதைவ விகர்ஹிதம் || 72
எந்த விஷயமாயினும் தான் சொல்வதையே வலியுறுத்திக் கொண்டிருக்கலாகாது. தலைமுடிக்கு வெளியே தெரியுமாறு பூச்சரங்களை சூடிக் கொள்ளலாகாது. எருதின் மீதேறி சவாரி செய்யக் கூடாது. எருதை வண்டியில் பூட்டி அதில் சொல்லலாம்.
அத்வாரேண ச நாதீயாத்க்ராமம் வா வேஷ்ம வாஆவ்ருதம் |
ராத்ரௌ ச வ்ருக்ஷமூலாநி தூரத : பரவர்ஐயேத்|| 73
வீடாயினும், கிராமமாயினும் வாயில் மூடப்பட்டிருக்கும் போது, வேறு வழியில் ஏறிக் குதித்து, அல்லது பின் வாசல் வழியே நுழையக் கூடாது. இரவில் மரத்தடியில் தங்கக்கூடாது. மரங்களை விட்டு தூரமாக இருக்க வேண்டும்.
நாக்ஷ்தை: க்ரீடேத்கதாசித்து ஸ்வயம் நோபாநஹோஹரேத் |
ஷயநஸ்தோ ந பூஞ்ஜீத ந பாணிஸ்தம் ந சாஆஸநே |-74
விளையாட்டுக்குக்கூட சொக்கட்டான் போன்றவை கூடாது. தன் செருப்பை கையில் தூக்கிக் கொண்டு போகக் கூடாது படுக்கையில் அமர்ந்து கொண்டு சாப்பிடக் கூடாது.கையில் சாத
உருண்டையை வைத்துக் கொண்டு சிறிது சிறிதாக உண்ணக் கூடாது. உட்காரும் ஆசனத்தின் மீது சாப்பாட்டை வைத்துக் கொண்டு சாப்பிடக் கூடாது.
ஸர்வம்ச திலஸம்பந்தம் நாத்யாதஸ்தமிதே ரவெள |
நச நக்னஷ்ஷயீதேஹ ந சோச்சிஷ்ட: க்வசித்வ்ரஜேத் |-75
சூரியன் அஸ்தமித்த பிறகு எள் சேர்த்த உணவுப் பொருளை சாப்பிடக் கூடாது. ஆடையின்றி உறங்கக்கூடாது. சாப்பிட்ட பிறகு கையலம்பாமல் வெளியே போகக் கூடாது.
ஆர்த்ரபாதஸ்து பூஞ்ஜீத நார்த்ரபாதஸ்து ஸம்விசேஷ்1
ஆர்த்ரபாதஸ்து பூஞ்ஜாநோ தீர்க்கமாயுரவாப்நுயாத் || 76
கால்களை அலம்பிக் கொண்டு சாப்பிட உட்கார வேண்டும்.-கால்களின் ஈரம் உலருமுன்பே சாப்பிட்டு எழுந்து விட வேண்டும். ஈரக்கால்களோடு உண்பவன் தீர்க்காயுளை அடைவான். ஆனால் ஈரக்கால்களோடு படுக்கக் கூடாது.
அசக்ஷர்விஷயம் துர்கம் ந ப்ரபத்யேத கர்ஹிசித்|
ந விண்மூத்ரமுதீக்ஷேத ந பாஹுப்யாம் நதீம் தரேத் || 77
அடர்ந்த மரங்களோடு இருண்டிருக்கும் ஆரண்யங்களில் நுழைய முடியாத புதர்களில் நுழையக்கூடாது. தன் மல ஜலங்களை கண்ணால் பார்க்கக் கூடாது. கைகளால் நீந்தி நதியைக் கடக்கக் கூடாது.
அதி திஷ்டேந்ந கேஷாஸ்து ந பஸ்மாஸ்திக பாலிகா: |
ந கார்பாஸாஸ்தி நதுஷாந் தீர்கமாயுர்ஜிஜீவிஷு ||-78
நீண்ட ஆயுளோடு வாழ நினைப்பவன், தலைமுடிகள், சாம்பல், எலும்புகள், உடைந்த ஓடுகள், பஞ்சு, மண்டை ஓடுகள், உமி முதலானவைகளின் மீது நிற்கக் கூடாது.
ந ஸம்வஸேச்ச பதிதைர் ந சாண்டாலைர்ந புல்கஸை: |
ந மூர்கைர் நாவலிப்தைஷ்ச நாந்த்யைர் நாந்த்யாவஸாயிபி: || 79
பிரஷ்டர்களுடனும், சண்டாளர்களுடனும், வேட்டைக்காரர்களுக்கும் சூத்திரர்களுக்கும் பிறந்தவர்களான புலகசர்களோடும், மூர்க்கர்களோடும்,தான் பெற்றுள்ள செல்வம் முதலியவற்றால் கர்வத்தோடு இருப்பவர்களோடும், வேட்டைக்காரப் பெண்ணுக்கும்
சண்டாளனுக்கும் பிறந்தநீச ஜாதிக்காரர்களோடும் ஒரு இடத்தில் கூடியிருக்கக் கூடாது.
ந சூத்ராய மதிம் தத்யாந்நோச்சிஷ்டம் ந ஹவிஷ்க்ருதம் |
ந சாஸ்யோபதிஷேத்தர்மம் ந சாஸ்ய வ்ரதமாதிஷேத் |-80
சூத்ரனுக்கு இகலோகத்துக்கு பயன்தரக்கூடிய அர்த்தசாஸ்திரம் முதலான நூல்களை கற்றுக் கொடுக்கக் கூடாது. தான்சாப்பிட்டு மிகுந்த உச்சிஷ்டான்னத்தை (சாப்பிட்டு மிகுந்தது ) சிஷ்யனல்லாத சூத்திரனுக்கு கொடுக்கக் கூடாது.-ஹவிசில் மிகுந்ததையும் கொடுக்கக் கூடாது.-அவனுக்கு தர்மத்தையும் விரதங்களையும் தானே நேரடியாக போதிக்காமல் இன்னொருவரைக் கொண்டு போதிக்கச் செய்ய வேண்டும்.
யோஹ்யஸ்ய தர்ம மாச ஷ்டே யஷ்சை வாதிஷதி வ்ரதம் |
ஸோ அஸம்வ்ருதம் நாம தம: ஸஹதேநைஷ மஜ்ஜதி 81
அவ்வாறன்றி, எவன் இந்த சூத்திரனுக்கு தர்மத்தையும், விரதங்களையும் உபதேசிக்கிறானோ அவன், அந்த சூத்திரனோடு கூட அசம்விருதம் என்னும் பெயருள்ள நரகத்தில் விழுவான்.
நஸம்ஹதாப்யாம் பாணிப்யாம் கண்டூயேதாத்மநஷ்ஷிர: 1
ந ஸ்ப்ரு ஷேச்சைததுச்சிஷ்டோ நச ஸ்நாயாத்விநா தத: 82
இரண்டு கைகளாலும் தலையை சொரியக் கூடாது. சாப்பிட்ட பிறகும்கூட கை, கால்களை அலம்பிக் கொள்வதற்கு முன்னம் தலையைத் தொடக்கூடாது. தலையை விட்டு உடம்புக்கு மட்டுமாகக் குளிக்கக் கூடாது.
கேஷக்ரஹாந் ப்ரஹாராம் ச ஷிரஸ்யேதாந் விஸர்ஜயேத்
ஷிரஸ்நாதஷ்ச தைலேந நாங்கம் கிஞ்சிதபி ஸ்ம்ருஷேத் || 83
கோபத்திலும்கூட தலைமுடியைப் பற்றி இழுத்து தலையில் அடிக்கக் கூடாது. தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளித்த பிறகு, அன்றைய நாளில் சிறிதளவு எண்ணெயைக்கூட உடலில் பூசிக்கொள்ளக்கூடாது.
ந ராக் : ப்ரதிக்ருஹ்ணீயாதராஜந்ய ப்ரசூதித: |
சூநாசக்ர த்வஜவதாம் வேஷேநைவ ச ஜீவதாம் || 84
க்ஷத்ரிய குலத்தில் பிறக்காத மன்னனிடம் தானம் வாங்கக் கூடாது .மிருகங்களை ஹிம்சித்து ஜீவனம் நடத்துபவனிடமும், எள்ளை ஆட்டி எண்ணெய் எடுப்பவனிடமும், கள்ளை விற்பவனிடமும், வேசிகளைக் கொண்டு ஜீவனம் நடத்துபவனிடமும் தானம் வாங்கக் கூடாது.
தஷசூநாஸமம் சக்ரம் தஷசக்ரஸமோ த்வ ஐ |
தஷத்வஜஸமோ வேஷோ தஷவேஷஸமோ ந்ருப: 85
எண்ணெய் ஆட்டுவோன் ஒருவன், மிருகங்களை ஹிம்சித்து ஜீவனம் நடத்தும் கசாப்புக்காரர்களான பத்து பேருக்கு சமம்.-இவனைப்போன்ற பத்து பேருக்கு சமமானவன் கள்ளை விற்பவன். இவனைப்போன்ற பத்து பேருக்கு சமமானவன் வேசிகளை வைதது
பிழைப்பு நடத்துபவன். இவனைப் போன்ற பத்து பேருக்கு சமமானவன் க்ஷத்ரிய குலத்தில் பிறக்காத மன்னன்.
தஷ நாஸஹஸ்ராணி யோ வாஹயதி ஸௌநிக: 11
தேந துல்ய: ஸ்ம்ருதோ ராஜா கோரஸ்தஸ்ய ப்ரதிக்ரஹ: ||86
ஐந்துக்களை ஹிம்சிக்கும் கசாப்புக்காரரைப் போன்ற பத்தாயிரம் பேருக்கு சமம் இத்தகைய மன்னன். எனவே இத்தகைய மன்னனிடம் தானம் வாங்கக் கூடாது
யோராக்கு : ப்ரதிக்ருஹ்ணாதி லுப்தஸ்யோச்சாஸ்த்ர வர்திந: 1
ஸ பர்யாயேண யாதீமாந்நரகாநேக விம்ஷதிம்|| 87
சாஸ்திரத்தை மீறுபவனும், லோபியும். க்ஷத்ரியனல்லாதவனுமான மன்னனிடம் தானம் வாங்கியவன் இருபத்தொரு நரகங்களை வரிசையாக அடைவான்.
தாமிஸ்ரமந்ததாமிஸ்ரம் மஹாரௌரவ ரௌர வெள
நரகம் கால சூத்ரம ச மஹா நரக மேவ ச|-88
ஸஞ்ஜீவனம் மஹாவீசிம் தபநம் ஸம்ப்ரதாபநம்|
ஸந்ஹாதம் ச ஸகாகோலம் குட்மலம் ப்ரதி மூர்த்திகம்|| 89
லோஹஷங்கு ம்ருஜீஷம் ச பந்தானம் ஷால்மலீம் நதீம் | அஸிபத்ரவனம் சைவ லோஹதாரகமேவச|| 90
தாமிஸ்ரம், அந்ததாமிஸ்ரம், மஹாரவுரம், ரவுரம், காலசூத்ரம்,நரகம், மஹாநரகம், சஞ்ஜீவனம், மஹாவீசி, தபநம்,சப்பிரதாபநம்,சங்காதம், ககோலம், குட்மலம், பிரதி மூர்த்திதிகம், லோ சங்கு,ருஜீஷம், பந்தனம்,ஷால்மலீநதி, அசிபத்ரவனம்,லோகதாரகம்,இவை அந்த இருபத்தொரு நரகங்கள்.
எதத்விதந்தோ வித்வாம்ஸோ ப்ராஹ்மணா: ப்ரஹமவாதிந: 1
நராக்கு: ப்ரதிக்ருஹ்நந்தி ப்ரேத்ய ஷ்ரேயோபிகா க்ஷண: || 91
இவ்வாறான நரகங்களுக்கு வழிவகுப்பது இந்த தானம் என்பதை அறிந்த வேதமுணர்ந்த பிராம்மணர்கள், தங்கள் மறுமையின்பத்தை காத்துக் கொள்ள வேண்டி, இத்தகைய
அரசனிடம் தானம் வாங்க மாட்டார்கள்.
ப்ராஹ்மே முஹுர்தே புத்யேத தர்மார்த்தெள சாநு சிந்தயேத் |
காயக்ளேஷாம்ஷ்ச தந்மூலாந் வேததத்வார்த்த மேவ ச || 92
பிரம்ம முகூர்த்த நேரத்தில் கண் விழிக்க வேண்டும். தர்மத்தைப்பற்றியும், அர்த்தத்தைப்பற்றியும் சிந்திக்க வேண்டும். அப்படி தர்மத்தை நடத்துவதிலும், பொருளைத் தேடுவதிலும் எப்படி உழைப்பது என்று சிந்திக்க வேண்டும். பிறகு வேத தத்துவ
விஷயங்களைப்பற்றி சிந்திக்க வேண்டும்.
உத்தாயாவஷ்யகம் க்ருத்வா க்ருத ஷௌசஸ்ஸமாஹித: |
பூர்வாம் சந்த்யாம் ஐபம்ஸ்திஷ்டேத் ஸ்வகாலேசாபராம் சிரம்|| 93
பிறகு எழுந்து காலைக்கடன்களை முடிக்க வேண்டும். பிறகு பரிசுத்தனாகி காலை சந்தியாவந்தனம், ஜபம் செய்ய வேண்டும். இவ்வாறே மாலையிலும் நட்சத்திர உதய நேரத்தில் காயத்ரீஜபம் செய்ய வேண்டும்.
ருஷயோ தீர்க்கஸந்த்யத்வாத் தீர்க்க மாயுரவாப்நுயு: 1
ப்ரக்ஞாம் யஷஷ்சச கீர்த்திம் ச ப்ரஹ்மவர்ச்சஸமேவ ச 94
ரிஷிகள் தீர்க்க காலம் சந்தியாவந்தன அனுஷ்டானங்களை செய்து தீர்க்க ஆயுளைப் பெற்று மேதாவிகளாகவும் புகழுடனும் வாழ்ந்தார்கள்.
ஷ்ராவண்யாம் ஸ்ரௌஷ்டபத்யாம் வா அப்யுபாக்ருத்ய யதாவிதி |
யுக்தஷ்சந்தாஸ்யதீயித மாஸாந் விப்ரோ அர்த்த பஞ்சமாந்||| 95
ஆவணி பௌர்ணமியன்றோபுரட்டாசி பெளணமியன்றோ தங்கள் சூத்திரத்துக்கு ஏற்றுவாறு உபாகர்மா நடத்தி, நாலரை மாதம் காலம் தொடர்ந்து வேதாத்யயனம் செய்ய வேண்டும்.
புஷ்யே து சந்தஸாம் குர்யாத் பஹிருத்ஸர்ஜநம் த்விஜ: |
மாக சுக்ளஸ்ய வா ப்ராப்தே பூர்வாஹ்ணே ப்ரதமே அஹநி || 96
நான்கரை மாதங்கள் ஆனபிறகு தைமாத தேய்பிறை பிரதமை, அல்லது மாசி மாத தேய்பிறை பிரதமையில் ஊருக்கு வெளியே சென்று உத்சர்ஜன கிரியையை அவரவர் முறைப்படி செய்ய வேண்டும்.
யதா சாஸ்த்ரம் து கருத்வை வமுத்ஸர்கம் சந்தஸாம் பஹி: |
விரமேத் பக்ஷிணீம் ராத்ரிம் ததேவைகமஹர்நிஷம் || 97
இவ்வாறு ஊருக்கு வெளியே உத்சர்ஜனக்கிரியையை செய்த பிறகு மூன்று நாட்களோ அல்லது தொண்ணூறு நாழிகைகளோ அல்லது ஒரு நாளோ வேதாத்யயனம் செய்யக் கூடாது.
அத ஊர்த்வம் து சந்தாம்ஸி சுக்ளேஷு நியத: படேத்|
வேதாங்காநி ச ஸர்வாணி க்ருஷ்ணபக்ஷே ஸம்படேத் 98
பிறகு வளர்பிறைகளில் வேதங்களைப் படிக்க வேண்டும்.தேய்பிறைகளில் வேதாங்கங்களைப் படிக்க வேண்டும்.
நாவிஸ்பஷ்டமதீயீத ந சூத்ரஜநஸந்நிதௌ |
ந நிஷாந்தே பரிஷ்ராந்தோ ப்ரஹ்மாதீத்ய புந: ஸ்வபேத் |-99
ஸ்வரமும் வர்ணங்களும் சரியாக அறிய முடியாத படி வேதம்ஓதக்கூடாது. சூத்திரர்கள் அருகில் வேதம் ஓதக் கூடாது.-அதிகாலையில் எழுந்து வேதாத்யயனம் செய்து, பிறகு மீண்டும் படுத்துறங்கக் கூடாது.
யதோதிதேந விதிநா நித்யம் சந்தஸ்க்ருதம் படேத்
ப்ரஹ்ம சந்தஸ்கிருதம் சைவ த்விஜோ யுக்தோ ஹ்யநாபதி || 100
கூறப்பட்ட விதிமுறைப்படி தினமும் காயத்ரி முதலான சந்தஸ்களுடன் கூடிய மந்திரங்களை ஜபிக்க வேண்டும். மற்ற கர்மாக்கள் நேரும்போது சாஸ்திரம் விதித்தபடியான மந்திரங்களை படிக்க வேண்டும்.
இமாந்நித்யநத்யாயாநதியாநோ விவர்ஜயேத் |
அத்யாநம் ச குர்வாண: ஷிஷ்யாணாம் விதிபூர்வகம் ॥-101
வேதத்தைப்படிக்கும் சிஷ்யனும், படிப்பிக்கும் குருவும் வேதமோதக் கூடாத நாளில் படிக்க, படிப்பிக்கக் கூடாது.
கர்ணஷ்ரவே அநிலே ராத்ரெள திவா பாம் சுஸ மூஹநே |
ஏதெள வர்ஷாஸ்வநத்யாயா வத்யாயக்ஞா: ப்ரசக்ஷதே || 102
மழைக்காலத்து இரவில் சத்தத்தோடு காதுகளைத் துளைக்கும் வண்ணம் காற்று வீசும் போதும், பகலில் புழுதி கவிழ்ந்திருக்கும் போதும் வேதாத்யயனம் செய்யக் கூடாது. வேதாத்யயனம் செய்யும் போது, இத்தகைய காற்று வீசினாலோ,புழுதி கவிழ்ந்தாலோ
உடனே வேதாத்யயனத்தை நிறுத்த வேண்டும்.
வித்யுத் ஸ்தநித வர்ஷேசு மஹோல்காநாம் ச ஸம்ப்ளவே |
ஆகாலிகமநத்யாய மேதேசு மநுரப்ரவீத் ||| 103
இடி மின்னல்களுடன் பெருத்த மழை பொழியும் போதும், வால் நாட்சத்திரம் விழும் போதும், அப்போது தொடங்கி மறுநாள் அதே நேரம் வரை அத்யயனம் செய்யக் கூடாது என்று மனு கூறியுள்ளார்.
ஏதாம் ஸ்த்வப்யுதிதாந் வித்யாத்யதா ப்ராதுஷ்க்ருதாக்நிசு |
ததா வித்யாதநத்யாயமந்ருதெள சாப்ரதர்ஷநே||104
இடி மின்னல்கள் ஏற்படும் போது, மழைக்காலத்தில்தான்வேதம் ஒதக்கூடாது . மற்ற காலங்களுக்கு இது பொருந்தாது.ஆனால் எல்லாக்காலங்களிலும் அக்நிகாரியங்கள் ஆரம்பிக்கும்போதுசந்தியா காலத்தில் மேகமூட்டம் மட்டும் தென்பட்டால்கூட
வேதமோதக்கூடாது.
நிர்காதே பூமிசலனே ஜ்யோதிஷாம் சோபஸர்ஐநே |
ஏதாநாகலிகாந் வித்யாதநத்யா யாந்ருதாவபி || 105
மழைக்காலமில்லாத போதும்கூட இடி விழுந்த போதும்,பூகம்பம் ஏற்பட்டபோதும். நட்சத்திரங்கள் உதிர்ந்த போதும்அப்போது தொடங்கி மறுநாள் அந்த நேரம் வரையில் வேதமோதக்கூடாது.
ப்ராது ஷ்க்ருதேஷ்க்நிசு து வித்யுத் ஸ்தநிநிஸ்வநே |
ஸஜ்யோதிஸ்ஸ் யாதநத்யாய : ஷேஸே ராத்ரெள யதா திவா || 106
ஹோமத்துக்காக அக்னியை ஏற்படுத்தும் சமயத்திலும், காலை சந்தியாகாலத்திலும் இடி மின்னல்கள் மட்டும் ஏற்பட்டால்வெளிச்சம் இருக்கும் பொழுதுவரை வேதமோதக்கூடாது. இரவில்இடி மின்னல் களோடு மழையும் பொழிந்தால் அந்த பகலும் இரவும்வேதமோதக் கூடாது.
நித்யாநத்யாய ஏவஸ்யாத்க்ராமே நகரேஷு ச தர்மநைபுண்யகாமாநாம் பூதிகந்தே ச ஸர்வதா|| 107
உயர்வான தர்மத்தை அறிவதில் நிபுணத்துவம் பெறநினைக்கும் சிஷ்யனுக்கு’தர்மநைபுண்ய காமன்’ என்று பெயர்.இந்த தர்ம நைபுண்யகாமன், நகரத்திலும் கிராமத்திலும் துர்நாற்றம்வியாபித்திருக்கும் போது, அந்த துர்கந்தம் நீங்கும் வரையில்வேதமோதக் கூடாது.-உயர்வான வித்தையில் மட்டும் நிபுணத்துவம் பெற நினைப்ப வனுக்கு ‘வித்யாநைபுண்ய காமன்’ என்று பெயர். இந்த வித்யா
நைபுண்ய காமன், இவ்வாறான துர்கந்தம் வியாபித்த தருணங்களில்
வேதமோதலை நிறுத்த வேண்டிய அவசியமில்லை.
அந்தர்கதஷவே க்ராமே வ்வருஷலஸ்ய ச சந்நிதௌ| அநத்யாயோருத்யமாநே ஸமவாயே ஐநஸ்ய ச 108
சவம் கிராமத்தில் இருக்கும்போதும், அதர்மவான்கள் அருகில் இருக்கும் போதும், மக்கள் கூட்டம் கூடி, ஏதோ காரணத்தால் அழும்போதும் வேதம் ஓதக் கூடாது.
உதகே மத்யராத்ரே ச விண்மூத்ரஸ்ய விசர்ஜநே |
உச்சிஷ்ட: ஷ்ராத்தபுக்சைவ மனஸா அபி ந சிந்தயேத் || 109
நீரின் நடுவில் இருக்கும்போதும், நடுஇரவிலும், மலஜலங்கள் கழிக்கும்போதும், சிராத்தத்துக்கு தன்னை நியமித்திருக்கும் போதும், எச்சிலுடன் இருக்கும்போதும் வேதத்தை மனத்தாலும் நினைக்கக் கூடாது.
ப்ரதிக்ருஹ்ய த்விஜோ வித்வாநேகோத்திஷ்டஸ்ய கேதநம் | த்ர்யஹம் நகீர்தயேத் ப்ரஹ்ம ராக்ஞோ ராஹோஷ்ச சூதகே || 110
ஏகோத்திஷ்ட சிராத்தத்துக்கு நியமிக்கப்பட்டால், அன்று முதல் மூன்று தினங்களுக்கும், தன் அரசனுக்குப் புத்திரன் பிறந்தபோதும், சூரியசந்திர கிரஹணங்களின் போதும் மூன்றுநாட்கள் வேதம் ஓதக் கூடாது.
யாவதேகாநுதிஷ்டஸ்ய கந்தோ லேபஷ்ச திஷ்டதி |
விப்ரஸ்ய விதுஷோ தேஹே தாவத்ப்ரஹ்ம ந கீர்தயேத் 1-111
ஏகோத்திஷ்டத்தில் நியமிக்கப்பட்டவன்,தான் சாப்பிட்டது முழுமையாக ஜீரணமாகும் வரை வேதத்தைப் படிக்கக் கூடாது.
ஷயாந: ப்ரௌட பாதஷ் ச க்ருத்வா சைவாவஸக்திகாம் |
நாதீயீதாமிஷம் ஐக்த்வா சூதகாந்நாத்யமேவ ச |–112
: படுத்துக் கொண்டும், கால்களை நீட்டிக் கொண்டும், இடுப்புக்கும் முழங்கால்களுக்குமாக துணியைக் கட்டிக்கொண்டும், மாமிசம் சாப்பிட்டு விட்டும், ஜன்ன மரண சௌசங்கள்
இருப்பவருடைய சாப்பாட்டைச் சாப்பிட்ட பிறகும் வேதாத்யயனம் கூடாது.
நீஹாரே பாணஷப்தே ச ஸந்த்ய யோரேவ சோபயோ: |
அமாவாஸ்யா சதுர்தஸ்யோ: பௌர்ண மாஸ் யஷ்டகாசு ச || 113
பனி மூடியிருக்கும்போதும், வீணையோசை கேட்டபோதும், காலை மாலை சந்தியா காலங்களின்போதும், சதுர்த்தசி அமாவாசைகளிலும், பௌர்ணமி அஷ்டமிகளிலும் வேதாத்யயனம் செய்யக்கூடாது.
அமாவாஸ்யா குரும்ஹந்தி சிஷ்யம் ஹந்தி சதுர்தஷீ|
ப்ரஹ்மாஷ்டகா பௌர்ணமாஸ்யோ தஸ்மாத்தா: பரிவர்ஜயேத் || 114
அமாவாசையில் வேதமோதுதல் குருவைக் கொல்லும்.-சதுர்த்தசியில் சிஷ்யனைக் கொல்லும். அஷ்டமி, பெளர்ணமிகளில் படிக்கப்பட்ட வேதம் தானே நசிக்கும். எனவே இந்நாட்களில்வேதம் படிக்கக்கூடாது.
பாம்சுவர்ஷே திஷாம் தாஹே கோமாயுவிருதே ததா|
ஷ்வகரோஷ்ட்ரே ச ருவதி ப்ரக்ஞா சநபடேத் த்விஜ: || 115
மண்மாரி பெய்யும் போதும், திக்குகள் பற்றி எரியும்போதும், நரிகள் கத்தும்போதும், நாய்கள், கழுதைகள் அழுகுரல் எழுப்பும் போதும், பலபேர் மத்தியில் இருக்கும்போதும் வேதம் ஓதக் கூடாது.
நாதீயீத ஷ்மஷாநாந்தே க்ராமாந்தே கோவ்ரஜே அபி வா|
வஸித்வா மைதுநம் வாஸ: ஷ்ராத்திகம் ப்ரதிக்ருஹ்ய ச || 116
சுடுகாட்டு சமீபத்திலும், கிராம சமீபத்திலும் பசுக் கொட்டிலிலும், பெண் சம்போகத்தின் போது அணிந்த ஆடையை அணிந்தபடியும், சிராத்தசாப்பாட்டை சாப்பிட்ட பிறகும்
வேதாத்யயனம் செய்யக் கூடாது.
ப்ராணி வா யதிவா அப்ராணி யத்கிஞ்சித் ச்ராத்திகம் பவேத்
ததாலப்யாப்யநத்யாய: பாண்யாஸ்யோஹி த்விஜ: ஸ்ம்ருத: || 117
பிராணன் இருக்கும் பசுக்கள் குதிரைகள் முதலியவற்றையோ, பிராணனற்ற வஸ்திரங்கள், தானியங்கள் முதலியவற்றையோ கையால்தானம் வாங்கினால் அன்றைய தினம் வேதம் ஓதக் கூடாது. பிராம்மணனுக்கு கரமே வாய் அல்லவா! எனவே கரம் வாங்கிய
தானம் வாய்க்கும் உரித்தாகும்..
சோரைருபத்ருதே க்ராமே ஸம்ப்ரமே சாக்நிகாரிதே | ஆகாலிகமநத்யாயம் வித்யாத்ஸர்வாத்தேசு ச |-118
ஊரில் திருடர்களால் உபத்திரவம் ஏற்பட்டபோதும், நெருப்பால் உபத்திரவம் ஏற்பட்டபோதும், சகலவிதமான அற்புதங்கள் நிகழ்ந்த போதும், மறுநாள் அந்த நேரம் வரையில்
வேதம் ஓதக்கூடாது.
உபாகர்மணி சோத்ஸர்கே த்ரிராத்ரம் க்ஷேபணம் ஸ்ம்ருதம்
அஷ்டகாசு த்வ அஹோராத்ரம்ருத்வந்தாசு ச ராத்ரிசு || 119
ஆவணி, புரட்டாசி மாதங்களில் உபாகர்மம் நடந்த பின்பும், தை, மாசி மாதங்களில் உத்சர்ஜன விரதம் அனுஷ்டிக்கும் போதும், மூன்று நாட்கள் வேதம் ஓதலாகாது. மேலும் மார்கழி பெளர்ணமிக்குப் பிறகு மூன்று தேய்பிறை அஷ்டமிகளில் இரவும்
பகலும் வேதம் ஓதலாகாது.-சித்திரை, ஆடி, ஐப்பசி,தை மாதப் பிறப்புக்களின் போதும் வேதமோதலாகாது.
நாதீயீதாஷ்வமாரூடோ நவ்ருக்ஷம் நசஹஸ்திநம் |
ந நாவம் ந கரம் நோஷ்ட்ரம் நேரிணஸ்தோ ந யாநக: 120
குதிரையின் மீது அமர்ந்து கொண்டும், மரத்திலேறி அமர்ந்து கொண்டும், யானையின் மீது அமர்ந்து கொண்டும், படகில் அமர்ந்து கொண்டும், கழுதையின் மீது அமர்ந்து கொண்டும். ஓட்டகத்தின் மீது அமர்ந்து கொண்டும், களர்நிலத்தில் அமர்ந்து கொண்டும், வண்டிகளில் அமர்ந்து பிரயாணம் செய்யும் போதும் வேதம் ஓதலாகாது.
ந விவாதே நகலஹே நஸேநாயாம் நஸங்கரே
ந புக்தமாத்ரே நாஜீர்ணே நவமித்வா நசூதகே || 121
வாயால் சண்டையிட்டுக் கொண்டிருக்கும்போதும், கைகலப்பு ஏற்பட்டிருக்கும்போதும், சேனைகள் தங்கி இருக்கும் இடத்திலும், போர் நடந்து கொண்டிருக்கும் போதும், சாப்பிட்ட உடனேயும். அஜீர்ணமாயிருக்கும்போதும், வாந்தியெடுத்த போதும்,சூதகம் ஏற்பட்ட போதும் வேதம் ஓதலாகாது.
அதிதிம் சாநநுஞாப்ய மாருதேவாதி வா ப்ருஷம்|
ருதிரே ச ஸ்ருதே காத்ராச் சஸ்த்ரேண ச பரிக்ஷதே |-122
அதிதி இருந்தால் அவரிடம் அனுமதி பெறாமலும், பெருங்காற்று வீசும் போதும், உடலிலிருந்து ரத்தம் வழியும் போதும், வழியாவிட்டாலும் ரத்தக் காயம் ஏற்பட்டிருந்தாலும் வேதம் ஓதக்கூடாது.
ஸாமத்வ நாவ்ரு க்ய ஷீ நாதீயீத கதாசந |
வேதஸ்யாதீத்ய வாப்யந்தமாரண்யகமதீத்ய ச | 123
சாமவேதம் கானம் செய்யும் சப்தம் கேட்கும்போது ரிக், யஜுர் வேதங்களை ஓதக்கூடாது. வேதம் முழுதையும் ஓதிய பிறகும், நாரண்யகம் என்னும் வேத பாகத்தை ஓதிய பிறகும் அன்றைய தினம் வேதமோதக் கூடாது.
ருக்வேதோ தேவதைவத்யோ யஜுர்வேதஸ்து மானுஷ: I
ஸாமவேத: ஸ்ம்ருத: பித்ர்யஸ் தஸ்மாத் தஸ்யாசுசிர்த்வநி: || 124
ரிக் வேதம் தேவர்களையும், யஜுர் வேதம் மானிடர்களையும், சாமவேதம் பித்ருக்களையும் தேவதைகளாகக் கொண்டுள்ளன. எனவே சாம வேத த்வனி தூய்மை குறைந்தது.
ஏதத்விதந்தோ வித்வாம்ஸஸ்த்ர யீநிஷ்கர்ஷ மந்வஹம் |
க்ரமத: பூர்வமப்யஸ்ய பஷ்சாத் வேதமதீயதே || 125
இதையறிந்த வித்வான்கள் தினமும் பிரம்ம யக்ஞம் செய்யும் போது ரிக், யஜுர்,சாம வேதங்களின் சாரமான பிரணவ வியாஸ்ருதி சாவித்ரிகளை முறையாக அத்யயனம் செய்து, பிறகு வேதங்களை அத்யயனம் செய்கிறார்கள்.
பசுமண்டூக மார்ஜாரஷ்வஸர்ப நகுலாகுபி: |
அந்தராகமநே வித்யாதநத்யாயமஹர் நிஷம்|| 126
பசு, தவளை, பூனை, நாய், பாம்பு, ஓணான், எலி முதலானவை குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையில் வந்தால் அன்றைய தினம் முழுவதும் வேதம் ஓதலாகாது.
த்வாவேவ வரயேந்நித்யமநத்யாயௌ ப்ரயத்நத: 11
ஸ்வாத்யாய பூமிம் சாசுத்தாமாத்மா நம் சாசுசிம் த்விஜ: I-127
வேதாத்யயனம் செய்யும் இடம் அசுத்தமடைந்த போதும், தன்னுடைய சுத்தம் குறைந்திருக்கும் போதும் வேதமோதலாகாது.
அமாவாஸ்யாமஷ்டமீம் ச பெளர்ணமாஸீம் சதுர்த ம்|
ப்ரஹ்மசாரீ பவேந்நித்யமப் ய்ருதெள ஸ்நாதகோ த்வி : I-128
அமாவாசை, அஷ்டமி, பௌர்ணமி, சதுர்த்தசி இந்நாட்களில்மனைவி ருது ஸ்நானம் செய்து வந்தவளான போதும் விரத ஸ்நாதகனான த்விஜன் மனைவியைக் கூடக்கூடாது.
நஸ்நாநமாசரேத் பூக்த்வா நாதுரோ ந மஹாநிஷி |
நவாஸோபிஸ்ஸஹாஜஸ்ரம் நாவிக்ஞாதே ஜலாஷயே 129
சாப்பிட்டுவிட்டு நீராடக் கூடாது. நோயாளியும் நீராடக்கூடாது. நள்ளிரவில் நீராடக் கூடாது. அழுக்காடையுடன் நீராடக்கூடாது. பழக்கமில்லாத, ஆழம் எவ்வளவு, முதலைகள் உண்டா
என்றெல்லாம் தெரியாத நீர்நிலைகளில் நீராடக் கூடாது.
தேவதாநாம் குரோ ராக்: ஸ்நாதகாசார்ய யோஸ்ததா நாக்ராமேத்காமதஷ்சாயாம் பப்ருணோ தீக்ஷிதஸ்ய ச ||–130
தெய்வ விக்கிரகங்களின் நிழலை மிதிக்கவோ தாண்டவோகூடாது. அவ்வாறே தந்தையுடைய,குருவுடைய, அரசனுடைய விரதஸ்நாதகனுடைய, ஆசார்யனுடைய யக்ஞம் செய்ய தீட்சைஏற்றிருப்பவனுடைய நிழல்களையும் தாண்டவும் மிதிக்கவும்கூடாது.
மத்யந்திநே அர்த்தராத்ரேச ஷ்ராத்தம் புக்த்வா ச ஸாமிஷம் |
ஸந்த்யயோருபயோத் சைவ ந ஸேவேத சதுஷ்பதம்|| 131
நடு மத்தியான வேளையிலும், நடு இரவிலும் ஓரிடத்தில்நெடுநேரம் நிற்கக் கூடாது. சிராத்த போஜனம் சாப்பிட்ட பிறகுநெடுநேரம் அங்கேயே இருக்கக் கூடாது. காலை சந்தியா காலத்திலும்மாலை சந்தியா காலத்திலும் ஓரிடத்தில் நெடுநேரம் நிற்கக் கூடாது.நான்கு வழிகள் கூடுமிடத்திலும் நெடுநேரம் நிற்கக் கூடாது.
உத்வர்தநமபஸ்நானம் விண்மூத்ரே ரக்தமேவ ச |
ஷ்லேஷ்ம நிஷ்ட்யூதவாந்தாநி நாதிதிஷ்டேத்து காமத: || 132
பொடிகள், நீராடிய தண்ணீர், மல மூத்திரங்கள், ரத்தம், கபம், வாந்தி, மென்று துப்பியது இவைகளை மிதிக்கக் கூடாது.
வைரிணம் நோபஸேவேத ஸஹாயம் சைவ வைரிண: 1
அதார்மிகம் தஸ்கரம் ச பரஸ்த்யைவ ச யோஷிதம் || 133
பகைவன், பகைவனின் நண்பன், அதர்மவான், திருடன், பிறன் மனைவி முதலானோருடன் உறவு வைத்துக் கொள்ளக் கூடாது.
நஹீத்ருஷமநாயுஷ்யம் லோகே கிஞ்சஞ வித்யதே |
யாத்ருஷம் புருஷஸ்யேஹ பரதாரோபசேவநம் || 134
பிறர் மனைவியைக் கூடுவதைப்போன்று, ஒருவன் ஆயுளைக் குறைப்பது உலகத்தில் வேறொன்றுமில்லை.
க்ஷத்ரியம் சைவ ஸர்பம்ச ப்ராஹ்மணம் ச பஹுஸ்ருதம் |
நாவமந்யேத வை பூஷ்ணு: க்ருஷாநபி கதாசந || 135
க்ஷத்ரியனும், பாம்பும், பிராம்மணனும் நிலை தாழ்ந்திருந்த போதும், தான் நல்லபடியாக செல்வ சுகங்களோடு இருக்க வேண்டும் என்று நினைப்பவன் அவர்களை அவமானப்படுத்தக் கூடாது.
ஏதத் த்ரயம் ஹி புருஷம் நிர்தஹேதவமாநிதம் |
தஸ்மாதேதத் த்ரயம் நித்யம் நாவமந்யேத புத்திமாந் 136
இம்மூவரும் தம்மை அவமானப்படுத்தியவரை தகித்து விடுவார்கள். எனவே தனக்கு நன்மையை விரும்பும் புத்திசாலி எக்காலத்திலும் இவர்களை அவமதிக்கக் கூடாது.
நாத்மாநமவமந்யேத பூர்வாபிர ஸம்ருத்திபி: |
ஆம்ருத்யோ: ஷ்ரியம விச்சேந்நை நாம் மந்யேத துர்லபாம்|| 137
தான் செய்த வியாபாரம் போன்றவற்றால் நஷ்டமடைந்து, செல்வமனைத்தையும் இழந்த போதும் தன்னைத் தானே நிந்தித்துக் கொள்ளக் கூடாது. வாழுங்காலம் வரையும் செல்வத்தைச் சம்பாதிக்க முயல வேண்டும். செல்வம் அடைய முடியாதது என்று
நினைக்கக் கூடாது.
ஸத்யம் ப்ரூயாத் ப்ரியம் ப்ரூயாத் நப்ரூயாத்ஸத்யமப்ரியம் |
ப்ரியம் ச நாந்ரும் ப்ரூயாதேஷ தர்மஸ்ஸநாதந: || 138
சத்தியம் பேச வேண்டும் . பிரியமானதாகப் பேச வேண்டும். தீங்கு விளைவிக்குமாயின் சத்தியத்தையும், பிரியமானதாக இருந்தாலும் அசத்தியத்தையும் பேசக்கூடாது.
பத்ரம் பத்ரமிதி ப்ரூயாத் பத்ரமித்யேவ வா வதேத்| சுஷ்கவைரம் விவாதம் ச ந குர்யாத்கேநசித் ஸஹ|| 139
எப்போதும் மங்களம் ஏற்படட்டும் என்றே கூறிக் கொண்டிருக்க வேண்டும். அமங்கலமானவற்றையும் மங்கலச் சொல்லால் குறிப்புணர்த்த வேண்டும். யாருடனும் வீண் விவாதம் புரிந்து கொண்டிருக்கக் கூடாது.
நாதிகல்யம் நாதிசாயும் நாதிமத்யம் திநேஸ்திதே | நாஞாதேந ஸமம் கச்சேத்நைகோ நவ்ருஷலைஸ்ஸஹ|-140
மிகவும் அதிகாலை நேரத்திலும், மாலை பிரதோஷ நேரத்திலும், நடுப்பகல் நேரத்திலும், அறிமுகமில்லாத புதியவனுடனும், பாவியருடனும் பிரயாணம் செய்யக்கூடாது.
ஹீநாங்கா நதிரிக்தாங்காந் வித்யாஹீநாந் வயோதிகாந்
ரூபத்ரவ்ய விஹீநாம்ஷ்ச ஜாதிஹீநாம் ச நாக்ஷிபேத் |-141
அங்கஹீனர்கள், அதிக அங்கம் கொண்டவர்கள் (ஆறு விரல் கொண்டவர்கள்), வயோதிகர்கள், அழகற்ற குரூபிகள், ஏழைகள், ஈன ஜாதிக்காரர்கள் முதலானோரை குறை கூறிப் பேசலாகாது.
ந ஸ்ப்ரு ஷேத்பாணிநோச்சிஷ்டோ விப்ரோ கோப்ராஹ்மணா நலாந் |
ந சாபி பஷ்யேதசுசி ஸ்சுஸ்தோ ஜ்யோதிர் கணாந் திவி || 142
எச்சிற்கையோடிருக்கும்போது பசுக்களையும் பிராம்மணர்களையும் தொடக் கூடாது.
பரிசுத்தியோடில்லாதபோது ஆகாயத்தில் சூரியன், சந்திரன், நட்சத்திரங்களைப் பார்க்கக் கூடாது.
ஸ்ப்ருஷ்ட்வைதா நசுசிர்நித்யமத்பி: ப்ராணாநுப ஸ்ருசேத் |
காத்ராணி சைவ சர்வாணி நாபிம் பாணிதலேநI து 143
ஒருவேளை பசு அந்தணர்களைத் தொட்டுவிட நேர்ந்தால் ஆசமனம் செய்து நீரால் இந்திரியங்களையும், சிரசையும், புஜங்களையும், முழங்கால்களையும், பாதங்களையும் நாபியையும் தொட வேண்டும்.
அநாதுர: ஸ்வாதி காநி ந ஸ்ப்ருஷேத நிமித்தத: ||
ரோமாணி ச ரஹஸ்யாநி ஸர்வாண்யேவ விவர்ஐயேத்|-144
அவசியமில்லாமல் தன் இந்திரியங்களைத் தொடக் கூடாது. மர்ம ஸ்தானங்களையும் ரோமங்களையும் தொடக்கூடாது.
மங்களாசாரயுக்தஸ்யாத் ப்ரயதாத்மா ஜிதேந்த்ரிய: 11
ஐபேச் ச ஹுயாச்சைவ நித்யமக்நி மதந்த்ரித: || 145
மங்களங்களைத் தரக்கூடிய கஸ்தூரி, சந்தனம் முதலானவைகளைத் தரிக்க வேண்டும். குருவுக்குப் பணிவிடை புரிதல் முதலான ஆசாரங்களைச் செய்ய வேண்டும். பரிசுத்த மனத்தோடு புலன்களை அடக்கியவனாக இருக்க வேண்டும். சோம்பலின்றி காயத்ரி ஜபம், அக்னி ஹோத்ரம் முதலானவைகளைச் செய்ய வேண்டும்.
மங்களாசாரயுக்தா நாம் நித்யம் ச ப்ரயதாத்மநாம் | ஜபதாம் ஜூஹ்வதாம் சைவ விநிபாதோ ந வித்யதே|-146
மங்களமான ஆசாரங்களோடு, பரிசுத்தனாக, ஜபங்களையும் ஹோமங்களையும் செய்து கொண்டிருப்பவனுக்கு எப்போதும் உபத்திரவம் ஏற்படாது.
வேதமேவஜபேந்நித்யம் யதாகாலமதந்திரித: |
தம் ஹ்யஸ் யாஹு: பரம் தர்மமுபதர்மோ அந்ய உச்யதே |147
நித்யானுஷ்டானங்களோடும், வேதங்களை எப்போதும் ஓதுபவனாகவும் இருப்பதே முக்கிய தர்மம். மற்றவை அனைத்தும் சாதாரணமானவை.
வேதாப்யாஸேந ஸததம் சௌசேந தபஸைவ ச |
அத்ரோஹேண ச பூதாநாம் ஜாதிம் ஸ்மரதி பௌர்விகீம் 148
எப்போதும் வேதமோதுவதனாலும், ஆசாரமாக இருப்பதானாலும், தவத்தாலும், உயிர்களுக்குத் துரோகம் நினைக்காமையாலும் தன் முற்பிறவிகளை அறியும் ஞானம் ஏற்படும்.
பௌர்விகீம் ஸம்ஸ்மரந் ஜாதிம் ப்ரஹ்மை வாப்யஸ்யதே புந: 1 ப்ரஹ்மாப்யாஸேந சாஜஸ்ரமநந்தம் சுகமஷ்நுதே || 149
தன் ஜன்மாந்திரங்களையும், அப்போதைய சுகதுக்கங்களையும், அறிவதனால் மேலும் பிறவியெடுக்காமையை விரும்புவான். அதனால் விடாமல் வேதமோதி பிரம்மத்தை அடைவான்.
ஸாவித்ராந் ஷாந்தி ஹோமாம்ஷ்ச குர்யாத் பர்வசு நித்யஷ: பித்ரூம்ஷ்சைவ வாஷ்டகாஸ்வர்சேந்நித்யமந்வஷ்டகாசு ச |-150
அமாவாசை, பௌர்ணமிகளில் சாவித்ரி முதலான ஹோமங்களையும், சாந்தி ஹோமங்களையும் செய்ய வேண்டும்.-ஆக்ரஹாயணத்துக்கு அடுத்து மூன்று கிருஷ்ணாஷ்டமிகளிலும் அஷ்டகம், அன்வஷ்டகம் என்னும் சிராத்தங்கள் செய்து பித்ரு
தேவர்களை மகிழ்விக்க வேண்டும்.
தூராதாவத தாந்மூத்ரம் தூராத்பாதாவசேசநம் |
உச்சிஷ்டான்னம் நிஷேகம் ச தூராதேவ ஸமாசரேத் |-151
வீட்டிற்கு தென்மேற்கேஅம்பு எய்தால் விழும் தூரத்தில் மலஜலங்களைக் கழிப்பது, கால்களை அலம்புவது,சாப்பிட்ட மிகுதிகளைப் போடுவது, கழிவுகளைப் போடுவது முதலானவற்றை செய்ய வேண்டும்.
மைத்ரம் ப்ரசாதநம் ஸ்நாநம் தந்ததாவநமஞ்ஜநம் ||
பூர்வாஹ்ண ஏவ குர்வீத தேவதாநாம் ச பூஜநம்|| 152
பல் தேய்த்தல், நீராடுதல், அலங்கரித்துக் கொள்ளல், பூஜை
செய்தல் இவைகளை மத்தியானநேரத்துக்குள் முடித்துக்கொள்ள வேண்டும்.
தைவதாந்யபிகச்சேத்து தார்மிகாம் ச த்விஜோத்தமாந் |
ஈஷ்வரம் சைவ ரக்ஷார்தம் குரூநேவ ச பர்வசு || 153
அமாவாசை,பெளர்ணமி தினங்களில் ஆலயங்களுக்குச் சென்று தெய்வங்களை வழிபட வேண்டும். தன் ரட்சணத்துக்காக ராஜாவையும், தர்மாத்மாக்களான த்விஜோத்தமர்களையும், பெற்றோர், குரு முதலானோரையும் தரிசனம் செய்ய வேண்டும்.
அபிவாதயே த்வ்ருத்தாம் ச தத்யாச்சை வாஸநம் ஸ்வகம் க்ருதாஞ்சலிருபாசீத கச்சத: ப்ருஷ்டதோஅந்வியாத் || 154
வீட்டிற்கு வந்த பெரியோரை வணங்க வேண்டும். தனது ஆசனத்தைக் கொடுக்க வேண்டும். கைகூப்பியபடி அவர்கள் அருகில் அமர வேண்டும். அவர்கள் நடந்தால் பின்தொடர்ந்து செல்ல வேண்டும்.
ஷ்ருதிஸ்ம்ருத்யுதிதம் ஸம்யக்நிபத்தம் ஸ்வேசு கர்மசு |
தர்மமூலம் நிஷேவேத ஸதாசாமதந்த்ரித: || 155
வேதங்களிலும், சுருதிகளிலும் கூறப்பட்ட, ஸ்வகர்மாக்களையும், தர்மத்துக்கு மூலமாக விளங்கும் ஆசார அனுஷ்டானங்களையும் சோம்பலின்றி நடத்த வேண்டும்.
ஆசாராத் ல தேஹ்யாயு: ஆசாராதீப்சிதா ப்ரஜா: |
ஆசாராத் தநமக்ஷய்ய மாசாரோஹ்யந்த்யலக்ஷணம் |-156
ஆசாரத்தால் தீர்க்க ஆயுள் கிடைக்கும். ஆசாரத்தால் விரும்பிய புத்ர பெளத்திரர்கள் கிடைப்பார்கள். ஆசாரத்தால் குறைவற்ற செல்வம் கிடைக்கும். ஆசாரத்தோடு இருப்பவனுக்கு அசுபங்களும், தகாதவைகளும் ஏற்படா.
துராசாரோஹி புருஷோ லோகே பவதி நிந்தித: ||
துக்கபாகீ ச ஸத்தம் வ்யாதிதோ அல்பாயுரேவ ச || 157
துராசாரத்தோடு இருப்பவன் உலக நிந்தைக்கு ஆளாவான்.-ஒன்று மாற்றி ஒன்றாக எப்போதும் துக்கங்களை அடைந்தும், வியாதியஸ் தனாகவும் இருந்து அற்பாயுளில் மாள்வான்.
ஸர்வலக்ஷணஹீநோ அபி யஸ்ஸதா சார வாந்நர: | ஷ்ரத்ததாநோ அநக்ஷயுஷ்ச ச தம் வர்ஷாணி ஜீவதி|| 158
எந்த லட்சணமும் இல்லாதவனாயினும், எப்போதும் ஆசாரத்தைக் கடைப்பிடிப்பவனாகவும், சிரத்தையோடு செய்பவனாகவும், பொறாமை யற்றவனாகவும் இருந்தால் அவன் நூறாண்டு வாழ்வான்.
யத்யத்பரவஷம் கர்ம தத்தத் யத்நேந வர்ஜயேத் |
யத்யதாத்மவஷம் து ஸ்யாத் தத்தத் ஸேவேத யத்நத: || 159
எந்தெந்த காரியங்கள் பிறரை அண்டி நிறைவேற்றிக் கொள்ளக் கூடியவையோ, அவைகளை முயற்சி செய்து விட்டுவிடவேண்டும். எந்தெந்த காரியங்கள் தன் வசத்தில் இருக்கின்றனவோ, அவற்றை முயற்சி செய்து நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்.
ஸர்வம் பரவஷம் துக்கம் ஸர்வமாத்மவஷம் அகம் |
ஏதத் வித்யாத்ஸமாசேந லக்ஷணம் சுகதுக்கயோ: || 160
பிறர் வசத்திலிருக்கும் எதுவும் துக்ககரம். தன் வசத்திலிருக்கும் எதுவும் சுககரம். இவையே சுக துக்கங்களுக்குக் காரணம் என்று தெரிந்துகொள்ள வேண்டும்.
யத்யத்கர்ம குர்வதோ அஸ்யஸ்யாத் பரிதோஷோ அந்தராத்மந: |
தத்ப்ரயத்நேந குர்வீத விபரீதம் து வர்ஐயேத்|-161
எந்தக் காரியம் செய்யும்போது, தன் மனத்துக்கு ஆனந்தம் ஏற்படுமோ, அந்தக் காரியத்தை, சாஸ்திர விரோதமின்றி, முயற்சியோடு செய்ய வேண்டும். விபரீதமாகத் தோன்றுவதைச் செய்யக் கூடாது.
ஆசார்யம் ச ப்ரவக்தாரம் பிதரம் மாதரம் குரும் |
ந ஹிம்ஸ்யாத் ப்ராஹ்மணாந் காஷ்ச ஸர்வாஷ்சைவ தபஸ்விந: || 162
ஆசாரயன், உபாத்யாயன், தந்தை,தாய், குரு, பிராம்மணர்கள், தபஸ்விகள் முதலானோர் மனத்தை நோகடிக்கக் கூடாது. பசுக்களுக்கு சிறு துன்பமும் விளைவிக்கக் கூடாது.
நாஸ்திக்யம் வேதநிந்தாம்ச தேவதாநாம் ச குத்ஸநம் |
த்வேஷம் தம்பம் ச மௌனம் ச க்ரோதம் தைக்ஷணம் ச வர்ஐயேத் || 163
நாஸ்திகம் பேசுவது, வேத நிந்தை, தெய்வங்களைத் தூற்றுவது, பகை, துவேஷம், டம்பம், கோபம், கொடூரம் முதலான குணங்களை விலக்க வேண்டும்.
பரஸ்ய தண்டம் நோத்யச்சேத் க்ருத்தோ நைவ நிபாதயேத் |
அந்யத்ர புத்ராச் சிஷ்யாத்வா ஷிஷ்ட்யர்த்தம் தாடயேத் து தௌ|-164
பிறரை அடிப்பதற்காகத் தண்டத்தை ஓங்கக்கூடாது . ஓங்கிய பிரம்பை(தண்டத்தை) கோபத்தோடு வீசியெறியக் கூடாது. மனைவி, பணியாள் போன்றோர் குற்றமிழைத்தால், அவர்களை மட்டும் அந்த குற்றத்துக்குத் தக்கபடி சாட்டை, பிரம்பு போன்றவற்றால் அடிக்கலாம்.
ப்ராஹ்மணாயாவ கூர்வைவ த்விஜாதிர்வத காம்யயா|
ஷதம் வர்ஷாணி தாமிஸ்ரே நரகே பரிவர்ததே|| 165
ஒரு அந்தணனைக் கொல்ல ஆயுதமெடுத்தவன் அந்தணனேஆனாலும் நூறு வருடங்கள் தாமிஸ்ரம் என்னும் நரகத்தில்உழல்வான்.
தாடயித்வா த்ருணேநாபிமாரம்பாந் மதிபூர்வகம்|
ஏகவிம்ஷதிமாஜாதீ: பாபயோநிசு ஜாயதே || 166
பிராம்மணனை அறிவுபூர்வமாக புல்லால் அடித்தாலும்இருபத்தொரு ஜன்மங்கள் நாய் முதலான ஈனப் பிறப்புகளை எடுக்க வேண்டி வரும்.
அயுத்யமாநஸ்யோத்பாத் ப்ராஹ்மணஸ்யாஸ்ரு கங்கத: |
து:கம் ச மஹதாப்நோதி ப்ரேத்யாஅப்ராக்தயா நர: II 167
தன்னோடு போர் புரிய வராத பிராம்மணன் உடலிலிருந்து ரத்தம் பெருகுமாறு தாக்கியவன், அந்தப் பிறவிக்குப் பின் பெரும் துன்பங்களுக்கு ஆளாவான்.
ஷோணிதம் யாவத: பாம்ந் ஸம்க்ருஹ்ணாதி மஹீதலாத் |
தாவதோ அப்தாநமுத்ரா ந்யைஷ்ஷோணி தோத்பாதகோ அத்யதே|| 168
அடிப்பட்ட பிராம்மணனின் உடலிலிருந்து ஒழுகிய ரத்தம் மண்ணில் விழுந்து எத்தனை புழுதிகளை நனைக்குமோ அத்தனை வருட காலம், இவன் இறந்த பிறகு இவன் ரத்தத்தை நரிகள் முதலானவை உறிஞ்சும்.
நகதாசித்த்விஜே தஸ்மாத் வித்வாநவகுரேதபி |1
ந தாடயே த்ருணேநாபி ந காத்ரா த்ஸ்ராவயேதஸ்ருக்|| 169
இதை அறிந்தவன் பிராம்மணனை நிந்திக்கக் கூடாது.புல்லால் கூட அடிக்கக் கூடாது. ரத்தம் வர அவனை அடிக்கக் கூடாது.
அதார்மிகோ நரோயோ ஹி யஸ்ய சாப்யந்ருதம் தநம் |
ஹிம்ஸாரதஷ்ச யோநித்யம் நேஹாஸௌ சுகமேததே || 170
சாஸ்திர விரோதமானதைச் செய்பவனும், பொய்சாட்சி கூறி அதனால் பணம் வாங்கிப் பிழைப்பவனும், பிறரை துன்புறுத்துவதையே எப்போதும் செய்பவனும் இவ்வுலகில் சுகமாக வாழ முடியாது.
நஸீதந்நபி தர்மேஷு மநோ அதர்மே நிவேஷயேத் | அதார்மிகாணாம் பாபாநாமாஷு பஷ்யந் விபர்யயம் || 171
தான் தர்மவானாக இருந்து வறுமையில் கஷ்டப்படுபவன், தர்மமற்ற வழிகளில் நடப்பவன் சௌக்கியமாக வாழ்வதைப் பார்த்து மனம் தடுமாறாமல், கடைசியில் அவன் அழிவான் என்பதை அறிந்து கொண்டு, அதர்ம வழியில் தன் மனத்தைச் செலுத்தாமல் பார்த்துக்
கொள்ள வேண்டும்.
நாதர்மஷ்சரிதோ லோகே ஸத்ய: பலதி கௌரிவ 1
ஷநைர் ராவர்த்தமாநஸ்து கர்துர் மூலாநி க்ருந்ததி ||172
அதர்மங்கள் செய்பவன், அதற்கான பாவபலன்களை உடனே அடைந்து விடுவதில்லை. ஆனால் காலம் கனியும் போது அவன் அழிவான்.
யதி நாஆத்மநி புத்ரேசு நசேத்புத்ரேசு நப்த்ருஷு 1
நத்வேவ து க்ருதோ அதர்ம: கர்துர்பவதி நிஷ்பல: 173
அதர்மவான் அதன் பலனை, அழிவை அடையாவிட்டாலும், அவன் புத்திரர்களோ, பௌத்திரர்களோ அல்லது அவர்களது பிள்ளைகளோ அந்தப் பலனை அடைந்து அழிவார்கள். ஒரு நாளும்ஒருவன் செய்த அதர்மம் அதன் பலனைத் தராது போகாது.
அதர்மேணைததே தாவத்ததோ பத்ராணி பஷ்யதி ததஸ்ஸபத்நாந் ஜயதி ஸமூலஸ்து விநஷ்யதி || 174
ஒருவன் செய்த அதர்மங்கள் பரிபக்குவ நிலையை அடையும் வரை, அவன் போக பாக்கியங்களோடு வாழ்வான். தன்னைவிடக்குறைந்த சத்ருக்களை வெல்வான். எப்போது அவன் செய்தபாபங்கள் பரிபக்குவமடையுமோ அப்போது அவன் தன் சொத்துசுகம் பிள்ளைகளோடு தானும் அழிவான்.
ஸத்ய தர்மார்யவருத்தேஷு சௌசே சைவாரமேத் ஸதா|
சிஷ்யாம்ஷ்ச சிஷ்யாத்தர்மேண வாக்பாஹுதர ஸம்யத: || 175
சாத்தியம், தர்மம், நல்லொழுக்கம், தூய்மை இவற்றில்எப்போதும் சிரத்தை கொண்டிருக்க வேண்டும். மனைவி மக்கள்,வேலையாட்கள், சிஷ்யர்கள் ஆகியோர் சாத்தியம், தர்மம்,நல்லொழுக்கம், தூய்மை இவற்றை மீறும்போது தண்டிக்கவேண்டும். வாக்கு, கைகள், வயிறு இவற்றைக் கட்ட வேண்டும். அதாவது வாக்கால் சத்தியம் மட்டுமே பேச வேண்டும். கைகளைக் கொண்டு எந்த அதர்மமும் செய்யக்கூடாது. கிடைத்ததை உண்டுதிருப்தியோடிருக்க வேண்டும்.
பரித்யஜேதர்த்தகாமெள யெள ஸ்யாதாம் தர்மவர்ஜிதெள
தர்மம் சாப்யசுகோதர்க்கம் லோகவிக்ருஷ்டமேவ ச |176
எந்தப் பொருளும் இன்பமும் தர்மத்துக்கு விரோதமானவைகளோ அத்தகைய பொருளையும் இன்பத்தையும் பெறநினைக்கக் கூடாது. உலகத்தோரால் நிந்திக்கப்பட்ட காரியத்தைச் செய்யக்கூடாது.
ந பாணிபாதசபலோ ந நேத்ரசபலோ அந்ரு : |
நஸ்யாத் வாக்சபலஷ்சைவ ந பரத்ரோஹகர்ம : || 177
கைகளால் திருடுதல் முதலானவற்றைச் செய்யக் கூடாது.-கால்களால் பயனில்லாமல் வெட்டியாகத் திரிந்து கொண்டிருக்கக் கூடாது. கண்களால் அடுத்த பெண்களை சபலத்தோடு பார்க்கக் கூடாது. வாக்கால் பிறருக்கு எந்த வகையிலும் தீங்கு விளைவிக்கக்
கூடாது. கபடம் கூடாது. யாருக்கும் துரோகம் நினைக்கக் கூடாது.
யேநாஸ்ய பிதரோ யாதா யேநயாதா பிதாமஹா: |
தேந யாயாத்ஸதாம் மார்கம்தே ந கச்சந்நரிஷ்யதே|| 178
எந்தத் தர்மத்தை குலமூத்தோர் கடைப்பிடித்தார்களோ, எந்தத் தர்மத்தை பாட்டனார்கள் கடைப்பிடித்தார்களோ, அந்த ஸ்வதர்மத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு கடைப்
பிடிப்பதனால் குறையற்ற வாழ்வு வாழலாம்.
ருத்விக் புரோஹிதா சார்யைர் மாதுலாதி திஸம்ஷ்ரிகை: |
பாலவ்ருத்தாதுரை வைத்யைர் ஞாதி ஸம்பந்திபாந்தவை: 179
ருத்விக், புரோகிதர், ஆசார்யர், தாய்மாமன், அதிதிகள், வேலையாட்கள், சிறுவர்கள், முதியோர்கள், நோயாளிகள், வைத்தியர்கள், பங்காளிகள், சம்பந்திகள், பந்துக்கள்…
மாதாபித்ருப்யாம் ஜாமீபிர் ப்ராத்ரா புத்ரேண பார்யயா |
துஹித்ரா தாசவர்கேண விவாதம் ந சமாசரேத்I-180
தாய் தந்தையர், உடன்பிறந்தோர், மருமகள்கள், பிள்ளைகள்,
மனைவி, மகள்,அடிமை வர்க்கத்தார் – இவர்களுடன் விவாதம்செய்யலாகாது.
ஏதைர் விவாதாந் ஸம்த்யஜ்ய ஸர்வபாபை: ப்ரமுச்யதே | ஏபிர்ஜிதைஷ்ச ஜயதி ஸர்வாந் லோகாந் இமாந் க்ருஹீ || 181
இவ்வாறு இவர்களுடன் சண்டையிடாமல் வாழ்பவன் சகல பாபங்களிலிருந்தும் விடுதலையடைகிறான். வாழ்நாளுக்குப் பிறகுசிறந்த உலகங்களை அடைகிறான்.
ஆசார்யோ ப்ரஹ்மலோகேஷ: ப்ராஜாபத்யே பிதா ப்ரபு: | அதிதிஸ்த்விந்த்ரலோகேஷோ தேவலோகஸ்ய சரித்விஜ: || 182
ஆசார்யனுடன் விவாதம் புரியாமல் இருக்கும் கிருஹஸ்தனுக்குப் பிரம்மலோகம் கிடைக்கும்.-தந்தையுடன் விவாதம் புரியாமல் இருக்கும் கிருஹஸ்தனுக்குப்பிராஜாபத்ய லோகம் கிடைக்கும்.-அதிதியுடன் விவாதம் புரியாமல் இருக்கும் கிருஹஸ்தனுக்குஇந்திரலோகம் கிடைக்கும்.-ருத்விக்குகளுடன் விவாதம் புரியாமல் இருக்கும் கிருஹஸ்தனுக்குத் தேவலோகம் கிடைக்கும்.
ஜாமயோ அப்ஸரசாம் லோகே வைஷ்வதேவஸ்ய பாந்தவா: |
ஸம்பந்திநோஹ்யபாம் லோகே ப்ருதிவ்யாம் மாத்ருமாதுலௌ || 183உடன்பி ந்தாருடன் மற்றும் மருமகள்களுடன் விவாதம்புரியாமல் இருப்பவன் அப்சர லோகத்தை அடைவான்.
பந்துக்களுடன் விவாதம் புரியாமல் இருப்பவன் விஸ்வேதேவர்களின் லோகத்தை அடைவான்.-சம்பந்தி வர்க்கத்தாருடன் விவாதம் புரியாமல் இருப்பவன்
வருண லோகத்தை அடைவான்.-தாய்மாமனுடன் விவாதம் புரியாமல் இருப்பவன் பூலோகத்தை அடைவான்.
ஆகா ஷேஷாஸ்து விக்ஞேயா பாலவ்ருத்த க்ருஷாதுரா: |
ப்ராதா ஜ்யேஷ்டஸ்ஸம்: பித்ரா பார்யா புத்ர: ஸ்வகாதநு: || 184
சிறுவர்கள், வயோதிகர்கள், ஏழைகள், வியாதியஸ்தர்கள் இவர்களுடன் விவாதம் புரியாமல் இருந்தால் விண்ணுலகை அடைவான்.-தமையன் தந்தைக்கு நிகரானவன். எனவே தமையனுடன் விவாதம் புரியாமல் இருப்பவன் பிரஜாபதி லோகத்தை அடைவான்.
இனி, மனைவியும் மகனும் தன்னுடைய சொந்த சரீரமே போன்ற வர்கள். அவர்களுடன் விவாதம் செய்வது என்பது தன்னுடன் தானே சண்டையிட்டுக் கொள்வது போன்றது.
சாயா ஸ்வோ தாஸவர்கச’ துஹிதா க்ருபணம் பரம் |
தஸ்மாதேதைரதிக்ஷிப்த: ஸஹேதாஸஞ்ஜ் வரஸ்ஸதா|| 185
ஏவலாட்கள் தன் நிழல் போன்றவர்கள். மகளோ அன்பாகப் பேண வேண்டியவள். இவர்கள் எப்போதாவது தூஷித்தாலும், அதைப் பொறுத்துக் கொண்டு அவர்களுடன் விவாதம்
செய்யலாகாது.
ப்ரதிக்ரஹ ஸமர்தோ அபி ப்ரஸங்கம் தத்ர வர்ஜயேத்
ப்ரதிக்ரஹேண ஹ்யஸ்யா ப்ராஹ்மம் தேஜ: ப்ரஷாம்யதி || 186
கிருஹஸ்தன் தானம் வாங்குவதற்குத் தக்க பாத்திரமாக இருந்தாலும், மீண்டும் மீண்டும் தானம் வாங்குவதிலேயே விருப்பத் தோடிருக்கக் கூடாது.தானம் வாங்குவதால் பிரம்ம தேஜஸ் குறைவுறும். எனவே தேவைக்குத் தக்க அளவு தானம் வாங்க வேண்டும்.
ந த்ரவ்யாணா மவிக்ஞாய விதிம் தர்ம்யம் ப்ரதிக்ரஹே ப்ராக்: ப்ரதிக்ரஹம் குர்யாதவ தந்நபி க்ஷதா || 187
திரவியங்களைத் தானம் வாங்கும்போது, தர்ம சாஸ்திரம் கூறியிருப்பதை நன்கு தெரிந்து கொண்டு, வாங்கத்தக்கவை என்று தர்ம சாஸ்திரம் கூறியிருப்பவற்றை மட்டும் வாங்க வேண்டும்.-தகாதது என்று கூறியிருக்கும் வஸ்துக்களைப் பசியால் துடிக்கும்போது கூட வாங்கக் கூடாது.
ஹிரண்யம் பூமிமஷ்வம் காமந்நம் வாசஸ்திலாந் க்ருதம் | ப்ரதி க்ருஹ்ணந்நவித்வாம்ஸ்து பஸ்மீபவதி தாருவத்|| 188
பொன், பூமி, குதிரை, பசு, அன்னம், வஸ்திரம், எள், நெய் இவைகளைத் தகுதியற்றவன் தானம் பெற்றால் காய்ந்த விறகு தீப்பற்றி எரிவதைப் போன்று பஸ்மமாவான்.
ஹிரண்ய மாயுரந்நம் ச பூர்கௌஷ்சாப்யோ ஷதஸ்தநும் | அஸ்வஷ்ச ஸ்த்வசம் வாஸோ க்ருதம் தேஜஸ்திலா: ப்ரஜா: [-189
தங்க தானம் ஆயுளைக் குறைக்கும். அன்னம், பூமி,பசு முதலானவைகள் தேகத்தைத் தகிக்கும். குதிரை தானம் கண் பார்வையைக் கெடுக்கும். வஸ்திரதானம் தோலை தகிக்கும். நெய் தானம் தேஜஸை அழிக்கும். எள் தானம் சந்ததியை நசிக்கச் செய்யும்.
அதபா ஸ்த்வநதீயாந: ப்ரதிக்ரஹ ருசிர்த்விஜ: | அம்பஸ்யஷ்மப்ளவேநேவ ஸஹ தேநைவ மஜ்ஐதி !-190
கல் தோணியில் ஏறி ஆற்றைக் கடக்க நினைப்பவன், தோணியோடு கூட தானும் மூழ்கிப் போவான். அவ்வாறே, தவமும் வித்யையுமற்ற பிராம்மணன் ஆசையால் தானம் வாங்கினால், தகுதியற்றவன் தானம் பெற்றதால் ஏற்படும் பாவத்தை அடைந்து நரகத்தில் வீழ்வான்.
தஸ்மாத் அவித்வான் பிபியாத்யஸ்மாத்தஸ்மாத் ப்ரதிக்ரஹாத் |
ஸ்வல்பகே நாப்யவித்வாந்ஹி பங்கேகௌரிவ சீததி || 191
தான் வாங்கிய தானத்தின் பாப பலனைப் போக்கிக் கொள்ள சக்தியற்ற அறிவிலி, சிறிதளவே தானம் வாங்கினாலும் சேற்றில் அகப்பட்ட பசுவைப் போன்று நரகத்தில் வீழ்வான்.
ந வார்யபி ப்ரயச்சேத்து பைடாலவரதிகே த்விஜே |
நபகவரதிகே விப்ரே நாவேதவிதி தர்மவித் || 192
தர்மம் அறிந்தவன் பைடால் (பூனை) விரதனான த்விஜனுக்கும், பக (கொக்கு) விரதனான பிராம்மணனுக்கும், வேதாத்யயனம் செய்யாதவனுக்கும் வெறும் தண்ணீரைக்கூட தானம் கொடுக்கக் கூடாது. (அதாவது பூனையைப் போன்றும் கொக்கைப் போன்றும்
குணம் கொண்டவனுக்குக் கொடுக்கக் கூடாது.)
த்ரிஷ்வப்யேதேஷு தத்தம் ஹி விதிநா அப்யர்ஜிதம் தநம் |
தாதுர்பவத்யநர்தாய பரத்ரா தாதுரேவ ச 193
இம்மூவருக்கும் கொடுக்கப்பட்ட தானம் நியாயமான முறையில் சம்பாதித்தாக இருந்தாலும்கூட, கொடுத்தவனையும், வாங்கியவனையும் நரகத்தில் தள்ளிவிடும்.
யதா ப்ளவே நௌபலேந நிமஜ்ஜத்யுதகே தரந் 1
ததா நிமஜ்ஜதோ அதஸ்தாதக்ஞௌதாத் ரூப்ரதீச்ச கௌ |194
கல் தோணியில் ஏறி தண்ணீரைத் தாண்ட நினைப்பவன் தோணியோடு தானும் நீரில் மூழ்குவதைப் போன்று, இத்தகு தானம் கொடுத்தவனும், தானம் வாங்கியவனும் நரகத்தில் வீழ்கிறார்கள்.
தர்மத்வஜீ ஸதா லுப்தஷ்சத்மிகோ லோகதம்பக: 1
பைடால வ்ரதிகோ னேயோ ஹிம்ஸ்ரஸ்ஸர்வாபிஸந்தக: || 195
பலபேர் முன்னிலையில் தர்மம் செய்து தானாகவும், பிறரைக்கொண்டும் அதைப் பரப்புபவன் தர்மத்வஜி’ எனப்படுவான். இப்படிப்பட்டவனும், பிறர் பொருளில் ஆசை வைப்பவனும், கபடமாக நடப்பவனும், வஞ்சகனும், பிறரை ஹிம்சிக்கும் சுபாவம்
கொண்ட வனும், பிறர் புகழைப் பொறுக்காமல் அனைவரையும் தூற்றுபவனும் – ஆக இத்தனை பேருக்கும் ‘பைடாலவிரதிகன்’ என்றுதான் பெயர்.
அதோ த்ருஷ்டிர்நைஷ்க்ருதிக: ஸ்வார்தஸாதந தத்பர: | ஷடோ மித்யாவிநீதஷ்ச பகவரதசரோ த்வி : |-196
தான் பணிவுடன் இருப்பதைப் போல் காட்டிக் கொண்டு நடிப்பவன், கொடூரமானவன், தன்காரியத்தை நடத்திக்கொள்வதிலேயே கண்ணாக இருப்பவன், பிறர் நலனைக் கெடுப்பதில் கண்ணாக இருப்பவன், கபடமான வினயம் காட்டுபவன் – இத்தனை பேருக்கும் ‘பகவிரதன்’ என்றே பெயர்.
யே பகவரதிநோ விப்ரா: யே ச மார்ஜாரலிங்கிந: | தே பதந்த்யந்ததா மிஸ்ரே தேநோபாசேநகர்மசி || 197
எவர்கள் இத்தகைய பைடால விரதனாகவும், பக விரதனாகவும் இருக்கிறார்களோ, அவர்கள் அந்ததாமிஸ்ரம் எனும் நரகத்தில்வீழ்வார்கள்.
ந தர்மஸ்யாபதேஷேந பாபம்க்ருத்வா வ்ரதம் சரேத் | வ்ரதேந பாபம் ப்ரச்சாத்ய குர்வந் ஸ்த்ரீசூத்ர தம்பநம் 198
தன் பாபம் நீங்குவதற்காக தர்மங்களைச் செய்தவன், அதை மறைத்து தான் தர்ம காரியங்களைச் செய்ததாகப் பாசாங்குசெய்யக்கூடாது.-பாவம் நீங்க அனுஷ்டித்த விரதங்களை, ‘தர்மத்துக்காகவிரதங்களை அனுஷ்டிக்கிறேன்’ என்று கூறி பெண்களையும்சூத்திரர்களையும் ஏமாற்றக் கூடாது.
ப்ரேத்யேஹ சேத்த்ருஷா விப்ரா கர்ஹ்யந்தே ப்ரஹ்மவாதிபி:
சத்மநா சரிதம் யச்ச வரதம் ரக்ஷாம்ஸி கச்சதி || 199
இத்தகையவர்களை பிரம்மவாதிகள் நிந்திக்கிறார்கள். இவர்கள் செய்யும் விரதங்களின் பயனும், தர்மங்களின் பயனும் ராட்சதர்களைச் சென்றடையும்.
அலிங்கீலிங்கி வேஷேண யோ வ்ருத்திமுபஜீவதி |
ஸலிங்காநாம் ஹரத்யேந ஸ்திர்யக்யோநௌ ச ஜாயதே|| 200
கிருஹஸ்தன், பிரம்மசாரி வேஷமணிந்து பிச்சையெடுத்து ஜீவிப்பானேயாகில், வாழும் காலத்தில் மற்ற பிரம்மசாரிகளின் பாபத்தை அடைகிறான். இறந்த பிறகு விலங்காகப் பிறக்கிறான்.
பரகீயநிபாநேஷு நஸ்நாயாச்ச கதாசந |
நிபாந கர்துஸ்நாத்வா து துஷ்க்ருதாம்ஷேந லிப்யதே || 201
பிறர் வெட்டிய குளத்தில் நீராடக் கூடாது. அப்படி நீராடினால் இவன் புண்ணியம் குளத்தை வெட்டியவனுக்குப் போகும். மேலும் வெட்டியவனுடையபாபம் இவனை அடையும்.
வேறு வழியின்றி அதில்தான் நீராட வேண்டும் என்னும் நிர்ப்பந்தம் ஏற்பட்டால் அக்குளத்திலிருந்து கைப்பிடி மண்ணெடுத்து வெளியேபோட்டு விட்டு நீராட வேண்டும்.
யாநஷய்யாஸ நாந்யஸ்ய கூபோத்யா நக்ருஹாணிச 1
அதத் தாந்யுபபூஞ்ஜா : ஏநஸஸ் ஸ்யாத்துரீயபாக் | 202
வாகனம், படுக்கை, ஆசனம்,கிணறு, தோட்டம், வீடு முதலானவைகளை, அதன் உடைமைக்காரர்கள் அவற்றைத் தனக்கு வழங்காத நிலையில், அவைகளைத் தான் அனுபவித்து வந்தால், உடைமைக்காரனின் பாவத்தில் நான்கில் ஒரு பங்கை அடைவான்.
நதீஷு தேவகாதேஷு தடாகேஷு ஸரஸ்சு ச |
ஸ்நானம் ஸமா சரேந்நித்யம் கர்தப்ரஸ்ரவணேஷு ச|203
ஓடும் நதியிலும், தேவர்களால் வெட்டப்பட்ட குளம். கிணறுகளிலும், மடுக்களிலும் தினமும் நீராட வேண்டும்.
யமாந் ஸேவேத ஸததம் ந நித்யம் நியமாந் புத: | யமாந் பதத்ய குர்வாணோ நியமாந் கேவலாந் பஜந் ||| 204
புத்திசாலி எப்போதும் யமங்களைக் கடைப்பிடிக்காமல் நியமங்களைக் கடைப்பிடிக்கலாகாது. அவ்வாறு செய்பவன் நரகத்தில் வீழ்வான்.
(பிரம்மசரியம்,தயை, பொறுமை, சத்தியம், பாவம் செய்யாமை, அஹிம்சை, திருடாமை, இன்சொல், வெளிப்புலன்களை அடக்குதல் – இவை யமம் எனப்படும்.
(ஸ்நானம்,மெளனம், உபவாசம்,யாகம்,வேதாத்யயனம்,
புலனடக்கம், குரு பணிவிடை, ஆசாரம், சினமின்மை – இவை நியமம் எனப்படும். )
நாஆஷ்ரோத்ரியததே யக்ஞே க்ராம யாஜிக்ருதே தா | ஸ்த்ரியா க்ளீபேந ச ஹுதே பூஞ்ஜீத ப்ராஹ்மண: கவசித் 205
வேதமறியாதவன் செய்யும் யாகத்திலும், கிராம புரோஹிதன் செய்யும் யாகத்திலும், பெண்களும் நபும்சகர்களும் செய்யும் யாகத்திலும் பிராம்மணன் போஜனம் செய்யக்கூடாது.
அஷ்ளீகமேதத்ஸாதூநாம் யத்ர ஜூஹ்வத்யமீ ஹவி: 1 ப்ரதீபமேதத் தேவாநாம் தஸ்மாத் தத் பரிவர்ஐயேத் || 206
இவர்கள் யாகத்தில் ஹோமம் செய்தால் அந்த ஹவிஸ் சாதுக்களுக்கு அலக்ஷ்மிகரமாகிறது. தேவர்களுக்கு பிரதிகூலமாகிறது. எனவே இத்தகைய யாகங்களில் சாப்பிடக் கூடாது.
மத்தக்ருத்தாதுராணாம் ச ந பூஞ்ஜீரந் கதாசந |
கேஷ கீடாவபந்நம் சபதா ஸ்ப்ருஷ்டம் ச காமத: || 207
குடிபோதையில் உள்ளவர்களும், கோபத்தோடு இருப்பவர்களும், நோயாளிகளும் சமைத்தஅன்னத்தைச் சாப்பிடலாகாது.-முடி, புழு இவைகள் கலந்து விட்டிருக்கும் அன்னத்தையும் சாப்பிடலாகாது.-காலால் உதைத்த அன்னத்தையும் சாப்பிடலாகாது.
ப்ரூணக்நாவேக்ஷிதம் சைவ ஸம்ஸ்ப்ருஷ்டம் சாப்யுதக்யயா|
பதத்ரிணாபலீடம் ச நா ஸம்ஸ்ப்ருஷ்ட மேவ ச ||| 208
குழந்தையைக் கொன்றவன், பசுவைக் கொன்றவன் இவர்களால் பார்க்கப்பட்ட அன்னம், ருதுவான பெண்சாப்பிட்டு மிகுந்த அன்னம், காகம், நாய் போன்றவை முகர்ந்த அன்னம் – இவைகளைச் சாப்பிடக் கூடாது.
கவாசாந்நமுபாஆக்ராதம் குஷ்டான்னம் ச விசேஷத: |
கணாந்நம் கணிகாந்நம் ச விதுஷா ச ஜூகுப்ஸிதம்|| 209
பசு முகர்ந்த அன்னம், சத்திரத்து சாப்பாடு, எல்லோரையும்கூப்பிட்டுக் கொடுக்கும் அன்னம், வேசியர் கொடுக்கும் அன்னம் – இவைகளைச் சான்றோர் நிந்திப்பார்கள்.
ஸ்தேநகாயநயோஷ்சாந்நம் தக்ஷ்ணோ வார்துஷிகஸ்ய ச |
தீக்ஷிதஸ்ய கதர்யஸ்ய பத்தஸ்ய நிகடஸ்ய ச || 210
திருடன் தரும் அன்னம், சங்கீதம்பாடுபவன் அன்னம்,வட்டி வாங்குபவன் அன்னம், தச்சனுடைய அன்னம், யக்ஞ தீட்சை ஏற்றிருப்பவருடைய அன்னம், லோபியின் அன்னம், கைதியின் அன்னம் – இவைகளைச் சாப்பிடக் கூடாது.
அபிஷஸ்தஸ்ய ஷண்டஸ்ய பூம்ஷ்சல்யா தாம்பிகஸ்ய ச | ஷுக்தம் பர்யுஷிதம் சைவ சூத்ரஸ்யோச்சிஷ்டமேவ ச ||| 211
பெரும் பாதகனின் அன்னம், நபும்சகனின் அன்னம், டாம்பீகக்காரனின் அன்னம், புளித்துப் போன பால், பழைய சாதம், சூத்ரன் சாப்பிட்டு மிகுந்த அன்னம் – இவைகளைச் சாப்பிடக்
கூடாது.
சிகித்ஸகஸ்ய ம்ருகயோ: க்ரூரஸ்யோச்சிஷ்ட போஜிந: | உக்ரான்னம் சூதிகான்னம் ச பர்யாசாந்தம நிர்தஷம் | 212
வைத்தியனின் அன்னம், வேடுவனின் அன்னம், குரூரமானகுணங் கொண்டவனின் அன்னம், எச்சில் அன்னத்தைச் சாப்பிடு பவனின் அன்னம், கொடிய காரியங்களைச் செய்பவனுடைய அன்னம்,குழந்தை பெற்ற பெண்ணுக்காகச் சமைத்த அன்னம், பந்தியில் சாப்பிடும் போது, ஒருவன் எழுந்து போன பிறகு மற்றவர்கள் சாப்பிடும் அன்னம், தீட்டுக்காரனுடைய அன்னம் – இவைகளைச் சாப்பிடக் கூடாது.
அநர்சிதம் வ்ருதா மாம்ஸமவீராயாஷ்ச யோஷித: | த்விஷதந்நம் நகர்யன்னம் பதிதாந்நமவக்ஷதம்|| 213
மரியாதையின்றி பரிமாறப்பட்ட அன்னம், தெய்வங்களுக்கு நிவேதிக்காத அன்னம்,கணவனும் பிள்ளையுமற்றவள் சமைத்த அன்னம், எதிரிகள் கொடுத்த அன்னம், பதிதன் இட்ட அன்னம், தூசி விழுந்த அன்னம் – இவைகளைச் சாப்பிடக் கூடாது.
பிஷுநாந்ருதிநோஷ்சாந்நம் க்ரதுவிக்ரயிணஸ்ததா | ஷைலூஷதுந்நவாயாந்நம் க்ருதக்நஸ்யாந்நமேவ ச || 214
கோள் சொல்பவன் அன்னம், பொய்சாட்சி கூறுபவன் அன்னம், யக்ஞபலனை பிறருக்கு விற்பவனுடைய அன்னம்.நட்டுவாங்கம் செய்பவனுடைய அன்னம், தையல்காரனின் அன்னம், நன்றி மறப்பவன் அன்னம் – இவைகளைச் சாப்பிடக் கூடாது.
கர்மாரஸ்ய நிஷாதஸ்ய ரங்காவதரகஸ்ய ச 1
சுவர்ண கர்துர்வைணஸ்ய சஸ்த்ர விக்ரயிணஸ்ததா |||-215
இரும்புப் பட்டறையில் வேலை செய்யும் கருமானின் அன்னம், வலைஞனின் அன்னம், கூத்தாடுபவனின் அன்னம், பொற் கொல்லனின் அன்னம், பிரம்பைக் கொண்டு பொருட்களைத் தயாரிப்பவனின் அன்னம், ஆயுதங்களை விற்பவனின் அன்னம்
இவைகளைச் சாப்பிடக் கூடாது.
ஷ்வவதாம் ஷௌண்டிகாநாம் ச சைலநிர்ணேஜகஸ்ய ச
ரஞ்ஜகஸ்ய ந்ருஷம்ஸஸ்ய யஸ்ய சோபபதிர் க்ருஹே|| 216
வேட்டை போன்றவற்றுக்காக நாய்களை வளர்ப்பவன், கள் விற்பவன், வண்ணான், துணிகளுக்குச் சாயம் போடுபவர்கள், கருணையற்றவன்,கூடாவொழுக்கம் கொண்ட பெண்ணின் கணவன் – இவர்களுடைய அன்னத்தைப் புசிக்கக் கூடாது.
ம்ருஷ்யந்தி யே சோபபதிம் ஸ்த்ரீஜிதாநாம் ச ஸர்வ : |
அநிர்தஷம் ச ப்ரேதான்ன மதுஷ்டிகரமேவ ச || 217
தன் மனைவி கள்ளத் தொடர்பு வைத்திருப்பவன் தன் வீட்டிலேயே இருப்பதை அறிந்த பின்னும் அவனை விரட்டாமல் இருப்பவனுடைய அன்னம், பெண்ணுக்கடங்கி அடிமையா யிருப்பவனுடைய அன்னம், மரணத் தீட்டு கழியாதவனுடைய அன்னம், தன் மனத்துக்குப் பிடிக்காத அன்னம் – இவைகளைச் சாப்பிடக் கூடாது.
ராஜான்னம், தேஜ ஆதத்தே சூத்ரான்னம் ப்ரஹ்மவர்சசம் |
ஆயுஸ்சுவர்ணகாரான்னம் யஷஷ்சர்மாவகர்திந: |-218
இதுவரை யார் யாருடைய சாப்பாட்டை சாப்பிடக் கூடாது என்பது கூறப்பட்டது. இனி யார் சாப்பாட்டைச் சாப்பிட்டால் என்ன கெடுபலன் எனக் கூறப்படுகிறது.-ராஜாவுடைய அன்னத்தைப் புசித்தவனுடைய தேஜஸ் அழியும்.-சூத்திரனுடைய அன்னத்தைப் புசித்தவனுடைய பிரம்ம தேஜஸ் அழியும். பொற்கொல்லனுடைய அன்னத்தைப் புசித்தவனுடைய ஆயுள் குறையும். செருப்பு தைப்பவனுடைய அன்னத்தைச் சாப்பிட்டால் கீர்த்திநசிக்கும்.
காருகாந்நம் ப்ரஜாம் ஹந்தி பலம் நிர்ணேஜகஸ்ய ச | கணாந்நம் கணி காந்நம் ச லோகேப்ய: பரிக்ருந்ததி || 219
சிற்பியின் அன்னத்தைப் புசித்தால் சந்ததி அழியும். வண்ணானின் அன்னத்தைப் புசித்தால் பலம் அழியும். பலருக்கும் வழங்கப்படும் சாப்பாடும், வேசியின் சாப்பாடும் நல்ல உலகங்கள் கிட்டாமல் செய்யும்.
பூயம் சிகித்ஸக ஸ்யாந்நம் பும்ஷ்சல்யாஸ்த்வந்நமிந்த்ரியம் | விஷ்டா வார்துஷிகஸ்யாந்நம் ஷஸ்த்ர விக்ரயிணோ மலம் || 220
வைத்தியனின் சாப்பாடு சீழை உண்பதற்குச் சமம் நபும் சகனுடைய சாப்பாடு சாப்பிடுவது வீரியத்தைச் சாப்பிடுவதற்கு சமம். வட்டி வியாபாரி, ஆயுதம் விற்பவன் இவர்களின் அன்னம் மலத்துக்குச் சமம்.
ய ஏதேஅந்யே த்வபோஜ்யாந்நா: க்ரமஷ: பரிகீர்திதா: | தேஷாம் த்வகஸ்திரோமாணி வதந்த்யந்நம் மநீஷிண: | 221
இப்போது சொன்னவர்களைத் தவிர மற்றவர்களுடைய அன்னம், அவர்களுடைய சருமம், எலும்புகள், ரோமங்கள் இவைகளை உண்பதற்குச் சமம்.
புக்த்வாதோ அந்யதமஸ்யாந்ந மமத்யா க்ஷபணம் த்ரயஹம் |
மத்யா புக்த்வா சரேத் க்ருச்ரம் ரேதோ விண்மூத்ரமேவ ச |222–இத்தகைய பேரில் யார் அன்னத்தைத் தெரியாமல் சாப்பிட்டாலும் மூன்று நாட்கள் உபவாசம் இருக்க வேண்டும்-தெரிந்து சாப்பிட்டால் கிருச்ர விரதம்’ இருக்க வேண்டும். ரேதஸ் மலஜலங்கள் உண்ணப் பட்டாலும் கிருச்ர விரதம் இருக்க வேண்டும்.
நாத்யாச்சூத்ரஸ்ய பக்வாந்நம் வித்வாநஷ்ராத்திநோ த்விஜ: ||
ஆததீதாமமேவாஸ்மாதவ்ருத்தாவேக ராத்ரிகம் [| 223
சூத்திரனிடம் சமைக்கப்பட்ட அன்னத்தைச் சாப்பிடக் கூடாது. வேறு வழியின்றேல், ஒரு பொழுதுக்குத் தேவையான அளவு அரிசி, காய்கறிகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
ஷ்ரோத்ரியஸ்ய கதர்யஸ்ய வதாந்யஸ்ய ச வார்துஷே:
மீமாம்சித்வோபயம் தேவாஸ்ஸமமந்நமகல்பயந் || 224
வேதாத்யயனம் செய்யும் லேப்பியான பிராம்மணன், வள்ளலாக இருக்கும் வட்டி வியாபாரி, இவ்விருவரின் அன்னத்தில் எது மேலான தென்று ஆய்ந்து, இரண்டும் சமம் என்று தேவர்கள் உரைத்தனர்.
தாந் ப்ரஜாபதிராஹைத்ய மாகிருஷ்ட்வம் விஷமம் ஸமம்
ஷ்ரத்தா பூதம் வதாந்யஸ்ய ஹதமஷ்ரத்தயேதரத் || 225
அப்போது பிரம்மா, “விஷமமானதை சமமானதாக எண்ணாதீர்கள். சிரத்தையோடு கொடுக்கும் வட்டி வியாபாரியின் அன்னமே மேலானது சிரத்தையற்ற லோபியான வேத பிராம்மணனின் அன்னம் அதைவிடக் கீழானது’ என்றுரைத்தார்.
ஷ்ரத்தயேஷ்டம் ச பூர்த்தம் ச நித்யம் குர்யாததந்த்ரித: |
ஷ்ரத்தாக்ருதே ஹ்யக்ஷயே தே பவத: ஸ்வாகதைர்தநை: | 226
யாகம் முதலான கிரியைகளையும், குளம் வெட்டுதல் முதலான தர்ம காரியங்களையும் பலனில் விருப்பம் வையாமல் சிரத்தையோடு செய்ய வேண்டும். நல்லமுறையில் சம்பாதிக்கப்பட்ட தனத்தைக் கொண்டு செய்ய வேண்டும். இவ்வாறான தர்மங்கள் குறையாத புண்ணிய பலன்களைத் தரும்.
தானதர்மம் நிஷேவேத நித்யமைஷ்டிக பௌர்திகம்
பரிதுஷ்டேந பாவேந பாத்ரமாசாத்ய ஷக்தித: ||| 227
தானங்களை தக்க பாத்திரத்துக்கு சந்தோஷமாக அளிக்க வேண்டும். யக்ஞாதி கிரியைகளை வேதமோது பவர்களான தக்கவர்களைக் கொண்டு, தன் சக்திக்குத் தக்கபடி சந்தோஷமாகச் செய்ய வேண்டும்.
யத்கிஞ்சிதபி தாதவ்யம் யாசிதேநாநசூயயா |
உத்பத்ஸ்யதே ஹி தத்பாத்ரம் யத்தாரயதி சர்வத: 228
யாசித்தவனுக்கு அசூயையின்றி சிறிதளவாவது தானமளிக்க வேண்டும். ஏனெனில் நரகத்துக்குப் போகாமல் இந்த யாசகர்களே தானமளித்தவனைக் காப்பாற்றுகிறார்கள்.
வாரிதஸ்த்ருப்திமாப்நோதி சுகமக்ஷய்ய மந்நத: |
திலப்ரத: ப்ரஜாமிஷ்டாம் தீபதஷ்சக்ஷருத்தமம்| |-229
தண்ணீர் வழங்குபவன் திருப்தியை அடைவான். அன்னம் வழங்குபவன் அழிவில்லா சுகத்தை அடைவான். எள்ளை வழங்குபவன் விரும்பிய சந்ததியை அடைவான். தீபதானம்
செய்பவன் நல்ல கண் பார்வையை அடைவான்.
பூமிதோ பூமிமாப்நோதி தீர்கமாயுர்ஹிரண்யத: 11
க்ருஹதோக்ர்யாணி வேஷ்மாநி ரூப்யதோ ரூபமுத்தமம் 230
பூதானம் செய்தவன் பூமியை அடைவான். தங்கத்தை தானம்செய்தவன் தீர்க்காயுளை அடைவான். வீடு தானம் கொடுத்தவன் உயர்ந்த வீடுகளை அடைவான். வெள்ளியைத்தானம் செய்தவன் பேரழகை அடைவான்.
வாஸோதஷ்சந்த்ரஸாலோக்ய மஷ்விஸாலோக்யமஷ்வத: |
அநடுத்த: ஷ்ரியம் புஷ்டாம் கோதோ பத்நஸ்ய விஷ்டபம் || 231
வஸ்திர தானமளித்தவன் சந்திர லோகத்தை அடைவான். குதிரை தானமளித்தவன் அஸ்வினி தேவர்களுடைய லோகத்தை அடைவான். காளையை தானமளித்தவன் உயர்ந்த செல்வங்களை அடைவான். கோதானம் செய்தவன் சூரிய லோகத்தை அடைவான்.
யாநஷய்யாப்ரதோ பார்யாமைஷ்வர்யமபயப்ரத:
தாந்யதஷ்ஷாஷ்வதம் சௌக்யம் ப்ரஹ்மதோ ப்ரஹ்மஸார்ஷ்டிதாம்|| 232
வாகனம்.படுக்கை இவைகளைத் தானம் செய்பவர்கள் நல்ல மனைவியை அடைவார்கள். அபயமளித்தவன் ஐசுவரியத்தை அடைவான். தானியங்களைத் தானமளித்தவன் சாஸ்வதமான சுகத்தை அடைவான்.வேதம் சொல்லிக் கொடுப்பவன் பிரம்ம லோகத்தை அடைவான்.
ஸர்வேஷாமேவ தாநாநாம் ப்ரஹ்மதாநம் விசிஷ்யதே |
வார்யந்ந கோ ம வாசஸ்தில காஞ்சநஸர்பிஷாம் || 233
தண்ணீர்தானம், அன்னதானம், கோதானம், பூதானம், வஸ்திர தானம், எள் தானம், ஸ்வர்ண தானம், நெய்தானம் இவைகளைவிட ஞான தானம் மிகவும் சிறப்புடையது.
யேந யேந து பாவேந யத்யத்தாநம் ப்ரயச்சதி | தத்தத்தேநைவ பாவேந ப்ராப்நோதி ப்ரதிபூஜித: 11 234
எதை எதை வேண்டி எந்தெந்த தானத்தைச் செய்கிறார்களோ, அதையதை கௌரவத்தோடு பெறுவார்கள்.
யோ அர்சிதம் ப்ரதிக்ருஹ்ணாதி ததாத்யர்சிதமேவ ச |
தாவுபௌ கச்சதஸஸ்வர்கம் நரகம் து விபர்யயே ||-235
எவன் பூஜை செய்துதானம் அளிக்கின்றானோ, எவன் பூஜை செய்து தானம் பெறுகின்றானோ, இவ்விருவருமே சொர்க்கத்தைஅடைவார்கள். இவ்வாறு பூஜாபூர்வமாக கொடுக்காதவனும், வாங்கியவனும் நரகத்தை அடைவார்கள்.
ந விஸ்மயேத தபஸா வதேதிஷ்ட்வா ச நாந்ருதம் |1
நார்தோ அப்யபவதேத்விப்ராந் ந தத்வா பரிகீர்தயேத் |-236
தான் இயற்றிய தவத்தை எண்ணி, ‘நாமா இவ்வளவு தவம் செய்தோம்?’ என்று ஆச்சரியப்படக்கூடாது. யாகம் செய்தவன் பொய் பேசக் கூடாது. தான் தொல்லைக்
காளானபோதும் பிராம்மணர்களைத் தூற்றக்கூடாது.தானம் செய்துவிட்டு, நான் செய்தேன்’ என்று பறைசாற்றிக் கொண்டிருக்கக்கூடாது.
யக்ஞோஅந்ருதேந க்ஷரதி தப: க்ஷரதி விஸ்மயாத் ஆயுர்விப்ராபவாதேந தாநம்ச பரிகீர்தநாத் | 237
பொய் பேசுவதால் யக்ஞ பலன் கிட்டாமல் போகும்.காவப்படுவதால் தவப்பலன் கிட்டாமல் போகும். பிராம்மணர்களைத் தூற்றுவதால் ஆயுள் குறையும். செய்ததானத்தைப் பிறரிடம்கூறுவதால் தான பலன் கிட்டாமல் போகும்.
தர்மம் ஷநைஸ்ஸஞ்சிநுயாத்வல்மீகமிவ புத்திகா: | பரலோகஸஹாயார்தம் சர்வபூதாந் யபீடயந் || 238
எவ்வுயிருக்கும் தீங்கு விளைவிக்காமல், மேலான உலகை அடைவதற்காக வேண்டி, எறும்புகள் புற்றைச் சிறுகச் சிறுகஉருவாக்குவது போன்று, தர்மத்தைச் சிறிது சிறிதாகச் சேர்க்கவேண்டும்.
நாமுத்ரஹி ஸஹாயார்தம் பிதா மாதா ச திஷ்டத: |
ந புத்ரதாரா ந ஞாதிர் தர்மஸ்திஷ்டதி கேவல: || 239
பரலோகத்தில் உதவுவதற்கு தாயும் தந்தையும் வர மாட்டார்கள். மனைவியும் பிள்ளைகளும் வரமாட்டார்கள். பங்காளிகள் வர மாட்டார்கள். தர்மம் ஒன்றுதான் உற்ற துணையாக விளங்கும்.
ஏக: ப்ரஜாயதே ஐந்துரேக ஏவ ப்ரலீயதே |
ஏகோ அநு புங்த்கேசுக்ருதமேக ஏவ ச துஷ்க்ருதம்|| 240
ஜீவன் தனியாகவே பிறக்கும். தனியாகவே இறக்கும் தனியாகவே நல்வினையை அனுபவிக்கும். தனியாகவே தீவினையையும் அனுபவிக்கும்.
ம்ருதம் ஷரீர முத்ஸ்ருஜ்ய காஷ்டலோஷ்டஸமம் தெள |
விமுகா பாந்தவா யாந்தி தர்மஸ்தமநு கச்சதி || 241
இறந்த பிறகு அவன் உறவினர்கள் விறகுக்கும் மண்ணுக்கும் சமமாக அவன் உடலைப் போட்டுவிட்டுச் செல்கிறார்கள். ஆனால் தர்மம் மட்டுமே அவனைப் பின்தொடர்கிறது.
தஸ்மாத்தர்மம் ஸஹாயார்தம் நித்யம் ஸசினு யாச்சநை: 11
தர்மேண ஹி ஸஹாயேந தமஸ்தரதி துஸ்தரம் || 242
அவ்வாறு சேர்த்த தர்மத்தினால் தாண்ட முடியாததான பாபம் என்னும் இருட்டைத் தாண்ட முடியும். எனவே தன்னுடன் வந்து தனக்கு உதவியாக இருக்க வேண்டி, தர்மத்தைச் சிறிது சிறிதாகச் சேர்க்கவேண்டும்.
தர்மப்ரதாநம் புருஷம் தபஸா ஹதகில்பிஷம்|
பரலோகம் நயத்யா பாஸ்வந்தம் கஷரீரிணம் || 243
தர்மத்தையே பிரதானமாக கடைப்பிடிப்பவனாக,ஒருவேளைஅறியாமல் ஏதும் பாபம் நேர்ந்தால், அதற்குத் தக்க பரிகாரவிரதங்களை அனுஷ்டித்து அப்பாபத்தை போக்கிக் கொண்டவனாக, தர்மத்தால் ஏற்பட்ட தேஜஸோடு விளங்கும் மனிதனை, அவனுடைய
தர்மம் உத்தம லோகங்களை அடையச் செய்யும்.
உத்தமைருத்தமைர்நித்யம் ஸம்பந்தாநாசரேத் சஹ |
நிநீஷு: குலமுத்கர்ஷ மதமாந தமாம்ஸ்த்யஜேத் || 244
தன் குலத்துக்கு உயர்வைத் தர விரும்புபவன், உத்தமர்களோடுசம்பந்தம் வைத்துக் கொள்ள வேண்டும். அதமர்களுடன் சம்பந்தம்வைத்துக் கொள்ளக் கூடாது. குறைந்தபட்சம் தனக்குச் சமமானவர்களுடனாவது சம்பந்தம் வைத்துக்கொள்ள வேண்டும்.
உத்தமாநுத்தமாந் கச்சந் ஹீநாந் ஹீநாம்ஷ்ச வர்ஜயந் |
ப்ராஹ்மண: ஷ்ரேஷ்டதா மேதி ப்ரத்யவாயேந சூத்ரதாம் 245
உத்தமாகளோடு சம்பந்தம் வைத்துக் கொள்ளும் பிராம்மணன்உத்தம நிலையை அடைவான். அதமர்களுடன் சம்பந்தம் வைத்துக்கொண்டால் சூத்திரத் தன்மையை அடைவான்.
த்ருடகாரீ ம்ருதுர்தாந்த: க்ரூராசாரைர ஸம்வஸந் 11
அஹிம்ஸ்ரோ. தமதாநாப்யாம் ஐயேத்ஸ்வர்கம் ததாவரத: || 246
எடுத்த காரியத்தை இடையில் விடாமல், விடாமுயற்சியுடன்செய்து முடிப்பவனும், மிருதுவான இயல்புடையவனும்,குரூரகுணமுடையோருடன் சகவாசம் செய்யாதவனும், அஹிம்சையைஇயல்பாகக் கொண்டவனும் – தவம், விரதம் முதலானவைகளைச்செய்யாமலே, புலனடக்கம், தானம் முதலியவைகளால் சொர்க்கத்தைஅடைவான்.
ஏதோதகம் மூலபலமந்நமப்யுத்யம் ச யத் |
சர்வத: ப்ரதிக்ருஹ்ணீயாந்மத்வதாஅபய தக்ஷிணாம் 1 247
கட்டைகள், தண்ணீர், கிழங்குகள், பழங்கள், தங்கம், தேன் முதலானவைகளை தானாக முன்வந்து யாரும் கொடுத்தால், பதிதர்கள், பாஷாண்டர்கள்போன்றவரல்லாத,மற்றவர்களிட
மிருந்து ஏற்றுக் கொள்ளலாம்.
ஆஹ்ருதாப்யுத்யதாம் பிக்ஷாம் புரஸ்தாதப்ர சோதிதாம்
மேநே ப்ரஜாபதிர்க்ராஹ்யாமபி துஷ்க்ருத கர்மண: || 248
நாடி வந்து கொடுக்கப்பட்டதும், முன்பேகொடுக்க வேண்டும் என்று உத்தேசிக்கப் பட்டதுமானபொருட்களை பதிதர்களைத் தவிர மற்றவர்களிடமிருந்து ஏற்கலாம் என்பது பிரம்மாவின் கருத்து.
நாஷ்நந்தி பிதர: தஸ்ய தஷவர்ஷாணி பஞ்ச ச 1
நசஹவ்யம் வஹத்யக்ர்யஸ்தாமப்யவமந்யதே|| 249
இவ்வாறான தானத்தை ஏற்றுக் கொள்ள மறுப்பவனுடைய பித்ருக்கள் அவன் தரும் உணவை பதினைந்து வருடங்கள் ஏற்க மாட்டார்கள். மேலும் அக்னியும் அவன் தரும் ஹவிஸை ஏற்று தேவர்களுக்கு அளிக்க மாட்டார்.
ஷய்யாம் க்ருஹாந் குஷாந் கந்தாநாப: புஷ்பம் மணிந்ததி தாநாமத்ஸ்யாந் பயோ மாம்சம் ஷாகம் சைவ ந நிர்ணுதேத் 250
படுக்கை, வீடுகள், தர்பைகள், சந்தனம், சாம்பிராணி, அகில் முதலான நறுமணப் பொருட்கள், தண்ணீர், புஷ்பங்கள், மணிகள், தயிர்,அவல், மீன்கள், பால், மாமிசம், காய்கறிகள் முதலானவைகளைத் தானாக முன்வந்து தரும்போது மறுக்கலாகாது.
குரூந் ப்ருத்யாம்ஷ்சோஜ்ஜிஹீர்ஷந் அர்சிஷ்யந் தேவதாதிதீந்
சர்வத: ப்ரதிக்ருஹ்ணீயாந்நது த்ருப்யேத் ஸ்வயம் தத: || 251
பசியால் வாடும் பெற்றோரையும், குருமார்களையும் வேலையாட்களையும், மனைவி முதலானோரைக் காப்பதற்காகவும் தேவபூஜை அதிதி பூஜைகளுக்காகவும், பதிதர்களல்லாத மற்ற அனைவரிடமிருந்தும் தானம் பெறலாம். ஆனால் அந்தத் தானத்தால்
தான் எப்போதும் திருப்தி அடையக்கூடாது.
குரு த்வப்யதீதே விநா வா தைர்க்ருஹே வஸந் | ஆத்மநோ வ்ருத்திமந்விச்சந் க்ருஹ்ணீயாத் ஸாதுதஸ்ஸதா|| 252
யாருமற்ற அனாதையும், அல்லாது தான் மட்டும் தனியாக வசிப்பவனும் தன் ஜீவனத்துக்காக எப்போதும் சாதுக்களிடமே தானம் பெற வேண்டும்.
ஆர்திக: குலமித்ரம் ச கோபாலோ தாசநாபிதௌ | ஏதேசூத்ரேஷு போஜ்யாஅந்நா யஷ்சாத்மாநம் நிவேதயேத்|| 253
தன் பூமியை உழுது பயிரிடுபவன், தன் குலத்துக்கு சிநேகிதன், பசு மேய்ப்பவன், தன் வேலையாள், தனக்கு சவரம் செய்பவன், தன் சர்வத்தையும் அர்ப்பணம் செய்தவன் (தன்னையே அர்ப்பணித்துத் தனக்கு பக்தியோடு ஊழியம் செய்பவன்) இவர்கள் சூத்திரர் என்றபோதும் இவர்கள் அன்னத்தை ஏற்கலாம்.
யாத்ருஷோ அஸ்ய வேதாத்மா யாத்ருஷம் ச சிகீர்ஷிதம் || யதா சோபசரேதேநம் ததாத்மாநம் நிவேதயேத் || 254
சூத்திரன் ஜீவனத்துக்காக ஒருவரை அண்டி வரும்போது தன் குலம், தன் திறமை, கோரிக்கை செய்யத் தெரிந்த வேலை முதலானவற்றைக் கூற வேண்டும்.
யோ அந்யதாஸந்த மாத்மாநமந்யதா ஸத்சு பாஷதே |
ஸ பாக்ருத்தமோ லோகேஸ்தேந ஆத்மா ஹாரக: || 255
தான் ஒரு வகையானவனாக இருந்து, தன்னை வேறு வகையானவனாகக் கூறிக் கொள்பவனை, பாவி என்றும் திருடன் என்றும் கூறலாம்.
வாச்யர்தா நியதாஸ்ஸர்வே வாங்மூலா வாக்விநிஸ்ஸ்ருதா:
தாம் து ய: ஸ்தேநயேத்வாசம் ஸஸர்வஸ்தேயக்ருந்நர: || 256
அனைத்து விஷயங்களும் வாக்கை ஆதாரமாகக் கொண்டுள்ளன.. சப்தங்கள் அனைத்தும் வாக்கை ஆதாரமாகக் கொண்டுள்ளன.-சப்தங்கள் வாக்கின் மூலமாக வெளிப்படுகின்றன. இத்தகைய வாக்கைக் கூறி பிறகு அதை மாற்றிப் பேசுபவன் அனைத்தையும்
திருடிய திருடன் ஆகிறான்.
மஹர்ஷி பித்ருதேவாநாம் கத்வா அந்ருண்யம் யதாவிதி |
புத்ரே சர்வம் ஸமாஸஜ்ய வசேந் மாத்யஸ்த்ய மாஷ்ரித: 257
கிருஹஸ்தன் வேதாத்யயனம் செய்து ரிஷிகளுடைய கடனைத் தீர்த்துக் கொள்ள வேண்டும். புத்திரர்களைப் பெற்று பித்ருக்களுடைய கடனைத் தீர்த்துக் கொள்ள வேண்டும். யக்ஞங்கள் செய்து தேவர்களுடைய கடனைத் தீர்த்துக் கொள்ள வேண்டும்.
பிறகு மகனிடம் குடும்ப பாரம் முழுவதையும் ஒப்படைத்து விட்டு, தான் மத்யஸ்தனாக எந்த விஷயத்திலும் முனைந்து ஈடுபடாமல் வீட்டில் வசிக்க வேண்டும்.
ஏகாகீ சிந்தயேந்நித்யம் விவிக்தே ஹிதமாத்மந: 11
ஏகாகீ சிந்தயாநோ ஹி பரம் ஷ்ரேயோ அதிகச்சதி || 258
இவ்வாறு உலக விஷயங்களில் ஈடுபடாமல், தனிமையில் இருந்தபடி தனக்கு ஹிதம் தருவதான நல்லுலகை விரும்பி, பரமாத்மாவை சிந்தித்திருப்பவன் மேலான மோட்சத்தை அடைவான்.
ஏஷோதிதா க்ருஹஸ்தஸ்ய வ்ருத்திர்விப்ரஸ்ய ஷாஷ்வதீ |
ஸ்நாதக வ்ரத கல்பஷ் ச ஸத்வ வருத்திகர: சுப: || 259
இந்த அத்தியாயத்தில் கிருஹஸ்தனுக்கு முக்கியமான சாஸ்வதமான ஜீவனோபாயம் கூறப்பட்டது.ஸ்நாதவிரதம் பற்றியும் சத்வகுணம் மேலோங்குவதற்கான முறைகளும் கூறப்பட்டன.
அநேந விப்ரோ வ்ருத்தேந வர்தயந் வேதசாஸ்த்ரவித் | வ்யபேத கல்மஷோ நித்யம் ப்ரஹ்மலோகே மஹியதே||–260
வேத சாஸ்திரமறிந்த அந்தணன் இதுகாறும் கூறப்பட்டமுறையில் வாழ்ந்தால் பாபங்களெல்லாம் தொலைந்து பிரம்ம லோகத்தை அடைவான்.
(நான்காவது அத்தியாயம் முற்றிற்று.)
————-
அத்தியாயம் – 5
ஷ்ருத்வைதாந் ருஷயோ தர்மாந் ஸ்நாதகஸ்ய யதோதிதாந் |
இதமூசுர் மஹாத்மானமநல ப்ரபவம் பருகும் || 1
ரிஷிகள், இவ்வாறு கூறப்பட்ட ஸ்நாதகனுடைய இந்த தர்மங்களைக் கேட்டு மஹாத்மாவான பிருகுவிடம் இவ்வாறு கூறினர்:
ஏவம் யதோக்தம் விப்ராணாம் ஸ்வதர்மமநுதிஷ்டதாம் |
கதம் ம்ருத்யு: ப்ரபவதி வேதசாஸ்த்ரவிதாம் ப்ரபோ|| 2
“இவ்வாறாக சாஸ்திரம் கூறியபடி சகல தர்மங்களையும் அனுஷ்டிக்கின்ற வேதசாஸ்திர விற்பன்னர்களான பிராம்மணர்களுக்கு மிருத்யு எவ்வாறு ஏற்படும்?” – என்று கேட்டனர்.
ஸ தாநுவாச தர்மாத்மா மஹர்ஷிந் மாநவோ ப்ருகு: 1
ஷ்ரூயதாம் யேந தோஷேண ம்ருத்யுர்விப்ராந் ஜிகாம்ஸதி I 3
இவ்வாறு கேட்க, தர்மாத்மாவான பிருகு, ரிஷிகளைப் பார்த்து, “எந்த தோஷத்தால் மிருத்யு பிராம்மணர்களைக் கொல்கிறானோ, அந்த தோஷத்தைக் கூறுகிறேன். கேளுங்கள்,” என்றார்.
அநப்யாசேந வேதாநாமசாரஸ்ய ச வர்ஜநாத் |
ஆலஸ்யாதந்ந தோ ஷாச்ச ம்ருத்யுர்விப்ராந் ஜிகாம்ஸதி || 4
வேதாப்யாசம் செய்யாமையாலும், ஆசாரமின்மையாலும், அனுஷ்டானங்களில் ஈடுபாடின்றி இருத்தலாலும், போஜன விஷயத்தில் ஏற்படும் தோஷங்களாலும் மிருத்யு இவர்களைக்
கொல்கிறான்.
லசுநம் க்ருஞ்ஜநம் சைவ பலாண்டும் கவகாநி ச|
அபக்ஷ்யாணி த்விஜாதீநாமமேத்ய ப்ரபவாணி || 5
வெள்ளைப் பூண்டு, நீருள்ளி, வெங்காயம், காளான் மற்றும் தூய்மையற்ற இடத்தில் விளைந்தவை போன்றவற்றை திவிஜர்கள் உண்ணலாகாது.
லோஹிதாந் வ்ருக்ஷ நிர்யாசாந் வ்ரஷ்சநப்ரபவாஸ்ததா | ஷேலும் கவ்யம் ச பீயூஷம் ப்ரயத்நேந விவர்ஜயேஜ்|| 6
மரத்திலிருந்து தானாக ஒழுகும் சிவப்பு நிற பால், கத்தியால் கீறி எடுக்கும்பால், முருங்கைக்காய், ஆலம்பால் முதலானவைகளை முக்கியமாக நீக்க வேண்டும்.
வ்ருதாக்ருசரஸம் யாவம் பாயஸாஅபூ பமேவ ச
அநுபாக்ருதமாம்ஸாநி தேவாந்நாநி ஹவீம்ஷிச || 7
நைவேத்தியத்துக்காக அன்றி தனக்காகச் செய்து கொண்ட எள்ளுச்சாதம், பாயசம்,வடைகள் முதலானவையும், வேள்விக்காக அன்றி தங்களுக்காக கொல்லப்பட்ட மிருகமாமிசம். தெய்வங்களுக்காக தயாரித்து இன்னும் நிவேதனமாகாத அன்னம், ஹோமத்துக்காக தயாரித்து இன்னும் ஹோமம் செய்யப்படாதஹவிஸ் – இவைகளைச் சாப்பிடக் கூடாது.
அநிர்தஷா யாகோ: க்ஷர மௌஷ்ட்ரமைகஷபம் ததா |
ஆவிகம் ஸந்திநீ ரம் விவத்ஸாயாஷ்ச கோ: பய: I-8-
கன்று ஈன்று பத்து நாட்கள் கழியாத பசுவின்பாலும், ஒட்டகம், ஆடு, குதிரை, ஒற்றைக் கொம்புள்ள மிருகங்களின் பாலும், கன்றில்லாத பசுவின்பாலும் சாப்பிடலாகாது.
ஆரண்யாநாம் ச ஸர்வேஷாம் ம்ருகாணாம் மாஹிஷம் விநா |
ஸ்த்ரீ ரம் சைவ வர்ஜ்யாநி ஸர்வ க்தாநி சைவ ஹி || 9
எருமைப் பாலைச் சாப்பிடலாம். மற்ற காட்டு விலங்குகள் அத்தனையின் பாலும், தாய்ப் பாலும், புளித்துப்போனவைகளும் சாப்பிடலாகாது
ததி பக்ஷ்யம் ச க்தேஷ ஸர்வம்ச ததிஸம்பவம் |
யாநிசைவாபி சூயந்தே புஷ்பமூல பலை: சுபை: | ]-10
தயிர், மோர் முதலான புளிக்க வைக்கப்பட்டவைகளையும் போதையைத் தராத, புளிக்கவைக்கப்பட்ட ஆசவங்களையும்-(பழங்கள், பூக்கள் போன்றவற்றை புளிக்க வைப்பது ) சாப்பிடலாம்.
க்ரவ்யாதாந் சகுநீந் ஸர்வாந்ஸ்ததா க்ராமநிவாசிந: | அநிர்திஷ்டாம்ஷ்சைக ஷபாம்டிட்டிபம் ச விவர்ஐயேத் || 11
மாமிசம் உண்ணும் கழுகு முதலான பறவைகளையும், ஊருக்குள் வாழும் புறா முதலான பறவைகளையும், வேதத்தால் ஒதுக்கப்பட்ட ஒற்றைக் கொம்புடைய மிருகங்களையும், சிட்டுக் குருவியையும் சாப்பிடக் கூடாது.
கலவிங்கம் ப்ளவம் ஹம்ஸம் சக்ராங்கம் க்ராம குக்குடம் |
சாரசம் ரஜ்ஜுவாலம் ச தாத்யூஹம் சுகஷாரிகே || 12
ஊர்க்குருவி, நீர்க்காக்கை, அன்னம், சக்ரவாகம், ஊர்க்கோழி, சாரசப்பறவை, கயிறுவால் குருவி, கருங்குருவி, கிளி, சாரிகை முதலான பறவைகளைச் சாப்பிடக் கூடாது.
ப்ரதுதாந்ஜாலபாதாம்ஷ்ச கோயஷ்டிநகவிஷ்கிராந் |
நிமஜ்தஷ்ச மத்ஸ்யாதாந் சௌநம் வல்லூரமேவ ச 13
மரங்கொத்தி, சராரி, குருட்டுக் கொக்கு, காகம், விச்சுளி, ராஜாளி, வல்லூறு முதலான ப வைகளைச் சாப்பிடக் கூடாது.
பகம் சைவ பலாகாம் ச காகோலம் கஞ்ஜரீடகம்
மத்ஸ்யாதாந் விட்வராஹாம் ச மத்ஸ்யாநேவ ச சர்வ : || 14
கொக்கு, நாரை, அண்டங்காக்கை, கருங்குருவி முதலான பறவைகளையும், முதலை, பன்றிகளையும், மீன்களையும் சாப்பிடக் கூடாது.
யோ யஸ்ய மாம்ஸமஷ்நாதிஸ தந்மாம்சாத உச்யதே |
மத்ஸ்யாதஸ்ஸர்வமாம்ஸாதஸ்தஸ்மாந்மத்ஸ்யாந் விவர்ஜயேத்|| 15
எது எதனுடைய மாமிசத்தை உண்ணுகிறதோது, உண்ணப் பட்டஅது, இதனுடைய மாமிசத்தை உண்ணும் எனப்படும்.-இந்த வகையில் மீன்களை உண்டவன் எல்லா மாமிசங்களையும் உண்டவன் ஆவான். எனவே மீன்களைச் சாப்பிடக் கூடாது.
பாடீந ரோஹிதாவாத்யெள நியுக்தெள ஹவ்யகவ்யயோ: 1
ராஜீவாந் சிம்ஹதுண்டாம்ஷ்ச சகல்காம்ஷ்சைவ ஸர்வ :|-16
ஆயிரம் பற்களுடைய மீன்கள், சிவப்புமீன், கும்பலாகத் திரியும் மீன்கள், சிங்கமுக மீன்கள், முள்நிறைந்த மீன்கள் முதலானவைகளை ஹல்ய கவ்யங்களில் நியமிக்கப்பட்ட பிராம்மணர்கள் சாப்பிடலாம்.-மற்ற கர்த்தா முதலானோர் சாப்பிடக்கூடாது. அனைவருமே மற்ற சமயங்களில் சாப்பிடக்கூடாது.
ந பக்ஷயே தேக சநா நக்ஞாதாம்ஷ்ச ம்ருகத்விஜாந் | பயேஷ்வபி ஸமுதிஷ்டாந் ஸர்வாந் பஞ்சந காந்ஸ்ததா || 17
தனியாகத் திரியும் மிருகங்களையும், பெயர் தெரியாத மிருகங்களையும், பறவைகளையும் (பூனை, குரங்கு போன்றவை) ஐந்து நகங்கள் கொண்ட மிருகங்களையும் சாப்பிடக்கூடாது
ஷ்வாவிதம் ஷல்யகம் கோதாம் கட்க கூர்ம ஷஷாம் சஸ்ததா |
பக்ஷ்யாந் பஞ்சநகேஷ்வாஹுரநுஷ்ட்ராந் சைகதோதத: ||| 18
ஐந்து நகங்களுள்ள மிருகங்களில் முள்ளம் பன்றி, சல்ய மிருகம், உடும்பு, காண்டாமிருகம், ஆமை, முயல் இவைகளை உண்டாலும் உண்ணலாமே தவிர மற்றவைகளை உண்ணக் கூடாது. வேறு வழியில்லாதபோது ஒட்டகம் தவிர மற்ற ஒரு பல் வரிசையுள்ள
மிருகங்களை உண்ணலாம்.
சத்ராகம் விட்வராஹம் ச லசுநம் க்ராம குக்குடம்|
பலாண்டும் க்ருஞ்ஜநம் சை மத்யாஜத்வா பதேத் த்விஜ: 19
காளான், ஊர்ப்பன்றி, வெங்காயம், ஊர்க்கோழி, நீருள்ளி, வெள்ளைப் பூண்டு முதலானவைகளை தெரிந்தும் புத்திபூர்வமாக சாப்பிடுபவன் பாபியாவான்.
அமத்யைதாநி ஷட்ஜக்த்வா க்ருச்ரம் ஸாந்தபநம் சரேத்
யதி சாந்த்ராயணம் வாபி ஷேஷேஷுபவசேதஹ: || 20
தெரியாமல் இவற்றை சாப்பிட்டால், சாந்தபந விரதத்தையாவது சாந்திராயண விரதத்தையாவது செய்ய வேண்டும். மற்ற விலக்கப் பட்டவற்றை சாப்பிட்டால் ஒரு நாள் உண்ணாநோன்பிருக்க வேண்டும்.
ஸம்வத்ஸரஸ்யைகமபி சரேத்க்ருச்ரம் த்விஜோத்தம: 1
அக்ஞாதபுக்த சுத்யர்த்தம் ஞாதஸ்ய து விசேஷத: |-21
திவிஜன் தெரியாமல் சாப்பிடத்தகாததை சாப்பிட்ட குற்றம் நீங்க வருடத்தில் ஒருமுறை கிருச்சர விரதம் அனுஷ்டிக்க வேண்டும்.-தெரிந்து சாப்பிட்டால், அதற்குரிய பிராயச்சித்தங்களைச் செய்ய வேண்டும்.
யக்ஞார்த்தம் ப்ராஹ்மணைர்வத்யா: ப்ரஷஸ்தா ம்ருகபக்ஷண: | ப்ருத்யாநாம் சைவ வ்ருத்யர்த்தமகஸ்த்யோஹ்யாசரத்புரா || 22
பிராம்மணர்கள் யக்ஞங்களுக்காகவும், தான் போஷிக்க வேண்டியவர்களை போஷிப்பதற்காகவும் சாஸ்திரத்தில் ஏற்கப்பட்ட மிருகங்களையும், பறவைகளையும் வதம் செய்யலாம்.முன்னர் அகஸ்தியர் இவ்வாறு செய்துள்ளார்.
பபூவுர்ஹி புரோடாஷா பயாணாம் ம்ருகபக்ஷிணாம் | புராணேஷ்வபி யக்ஞேசு ப்ரஹ்மக்ஷத்ரஸவேசு ச || 23
முற்காலத்தில் முனிவர்களின் யாகங்களிலும், பிராம்மண க்ஷத்திரியர்களின் யாகங்களிலும், சாப்பிடத்தக்க மிருகங்கள் பறவைகளின் மாமிசங்களே ஹவிஸ்களாக இருந்தன. எனவே யக்ஞங்களில் மிருகவதை செய்யலாம்.
யத்கிஞ்சித் ஸ்நேஹஸம்யுக்தம் பக்ஷ்யம் போஜ்யமகர்ஹிதம் | தத்பர்யுஷிதமப்யாத்யம் ஹவிஷ்ஷேசம் ச யத்பவேத் || 24
எண்ணெய், நெய்களால் செய்யப்பட்டு, கெடாமல் இருப்பவற்றை பலநாட்கள் கழித்துச் சாப்பிடலாம் . ஹவிசில் மிகுந்ததையும் (எண்ணெய், நெய்களில் பொரித்தவற்றை) அவ்வாறே சாப்பிடலாம்.
சிரஸ்திதமபி த்வாத்யமஸ்நேஹாக்தம் த்விஜாதிபி: | யவகோதூமஜம் ஸர்வம் பயசஷ்சைவ விக்ரியா: || 25
யவை, கோதுமைகளால் செய்யப்பட்டவை, செய்து நாட்கணக்கானதாக இருந்தாலும், கெடாமலிருந்தால் சாப்பிடலாம் . பாலிலிருந்து தயாரித்த தயிர், மோர் போன்றவற்றைச் சாப்பிடலாம்.
ஏததுக்தம் த்விஜாதீநாம் பக்ஷ்யா பக்ஷமசேஷத: 1
மாம்ஸஸ்யாத ப்ரவஷ்யாமி விதிம் பட்சணவர்ஜநே 26
இதுவரை சாப்பிடத்தக்கவை இவை, தகாதவை இவை என்பதை தெரியப்படுத்தினேன். இனி மாமிசங்களில் எவை கூடும், எவை கூடாது என்று கூறுகிறேன்.
ப்ரோக்ஷிதம் பக்ஷயேந்மாம்சம் ப்ராஹ்மணாநாம் ச காம்யயா |
யதாவிதி நியுக்தஸ்து ப்ராணாநாமேவ சாத்யயே|| 27
மந்திர ஜலத்தினால் புரோட்சணம் (தெளிக்கப்பட்ட) செய்யப்பட்ட, யக்ஞத்தில் ஹவிசானமாமிசத்தையும், பிராம்மணன் பிரார்த்தித்து அழைத்துக் கொடுத்த மாமிசத்தையும் ஒருமுறை மட்டும் சாப்பிடலாம். தவிரவும் சிராத்தத்தில் தான் நியமிக்கப்
பட்டபோதும், வேறு உணவின்றி உயிர்போகும் நிலையிலிருக்கும் போதும் மாமிசம் சாப்பிடலாம்.
ப்ராணஸ் யாந்நமிதம் ஸர்வம் ப்ரஜாபதிதர கல்பயத் |
ஸ்தாவரம் ஐங்கமம் சைவ ஸர்வம் ப்ராணஸ்ய போஜனம் || 28
இனி கூறப்போகிறவைகளை பிரம்மா, ஜீவர்கள் உண்பதற்காக உருவாக்கினார். எனவே அசையும், அசையா இவை முழுவதும் ஜீவர்களுக்கு உண்ணத்தக்கவைகளே.
சராணாமந்நமசரா தம்ஷ்ட்ரிணாமப்யதம் ஷ்ட்ரிண: |
அஹஸ்தாஷ்ச ஸஹஸ்தாநாம் சூராணாம் சைவ பீரவ: || 29
ஓரிடத்திலிருந்து வேறிடத்துக்கு அலைந்து திரியக் கூடியவைகளுக்கு ஒரே இடத்திலிருக்கும் தாவரங்களும், நகங்கள் உள்ளவற்றுக்கு நகங்கள் இல்லாதவையும், வீரத்தோடிருப்பவற்றுக்கு வீரமில்லாதவையும் உணவாக உள்ளன.
நாத்தா துஷ்யத்யதந்நாத்யாந் ப்ராணிநோ அஹந்யஹந்யபி |
தாத்ரைவ ஸ்ருஷ்டா ஹ்யாத்யாஷ்ச ப்ராணிநோத்தார ஏவச |-30
தினமும் உண்ணத் தக்கவைகளான பிராணிகளை உண்பவனுக்கு தோஷம் ஏதுமில்லை. பிரம்மாவே எவையெவை உண்ணலாம், அவற்றை யார்யார் உண்ணலாம் என்று விதி
வகுத்துள்ளார்.
யக்ஞாய ஐக்திர் மாம்சஸ்யேத்யேஷ தைவோ விதி: ஸ்ம்ருத: |
அதோ அந்யதா ப்ரவருத்திஸ்து ராட்சஸோ விதிருச்யதே|| 31
யக்ஞத்துக்காக உயிர் வதை செய்து, ஹோமம் செய்து மிகுதியைச் சாப்பிடுவது தெய்வ விதி எனப்படும். தனக்காக மாமிசம் சாப்பிடுவது ராட்சச விதி எனப்படும்.
க்ரீத்வா ஸ்வயம் வாப்யுத் பாத்ய பரோபக்ருதமேவ வா |
தேவாந் பித்ரூந்ஷ்சார் சயித்வாகாதந் மாம்சம் ந துஷ்யதி || 32
வாங்கியதாக இருந்தாலும், தானே தேடிப் பெற்றதாக இருந்தாலும், பிறர் கொடுத்ததாக இருந்தாலும் தேவ பித்ருக்களுக்குவழங்கி மிகுதியை உண்பவன் மாமிசம் சாப்பிட்ட தோஷத்தை அடைய மாட்டான்.
நாத்யாதவிதிநா மாம்சம் விதிக்ஞோ நாபதி த்விஜ: |
ஜக்த்வாஹ்யவிதிநா மாம்சம் ப்ரேத்ய தைரத்யதே அவ : ||| 33
மாமிசம் சாப்பிடுவதற்கான இந்த விதிகளை அறிந்த இருபிறப்பாளன். விதியை மீறி தேவ பித்ருக்களுக்கு வழங்காமல்சாப்பிடுவது, உயிருக்கு ஆபத்தற்ற காலத்திலும் சாப்பிடுவது என்று மாமிச உணவில் விருப்போடு சாப்பிட்டால்,மரணத்துக்குப் பின் எந்த பிராணியின் மாமிசத்தை உண்டானோ, அந்தப் பிராணியால்தான் உண்ணப்படுவான்.
நதாத்ருஷம் பவத்யேநோ ம்ருகஹந்துர்தநார்திற: 1 யாத்ருஷம் பவதி ப்ரேத்ய வ்ருதா மாம்சாநி காதத: || 34
தேவபித்ருக்களுக்கு அளிக்காமல் தனக்காக மாமிசம் தயார் செய்து சாப்பிடுபவன் அடையும் அளவு பாபத்தை ஜீவனத்துக்காக மிருகங்களைக் கொன்று விற்கும் வேடுவன்கூட அடைய மாட்டான்.
நியுக்தஸ்து யதாந்யாயம் யோ மாம்சம் நாத்திமாநவ: | ஸப்ரேத்ய ப தாம் யாதி ஸம்பவாநேகவிம்ஷதிம் || 35
சிராத்தத்தில் நியமிக்கப்பட்டவன், சாஸ்திரப்படி கொடுத்த மாமிசத்தை உண்ண மறுத்தால் பிறவி முடிந்ததும் இருபத்தொரு பிறவிகள் விலங்காகப் பிறப்பான்.
அஸம்ஸ்க்ருதாந் ப ந் மந்த்ரைர் நாத்யாத்விப்ர: கதாசந |
மந்த்ரைஸ்து ஸம்ஸ்க்ருதாநத்யாச்சாஷ்வதம் விதிமாஸ்தித: |-36
வேதமந்திரங்களால் தீர்த்தம் தெளிக்கப்படாமல், வெறுமனே கொல்லப்பட்ட விலங்குகளை பிராம்மணன் எந்நாளும் சாப்பிடக் கூடாது.-வேதமந்திரங்களால் தீர்த்தம் தெளிக்கப்பட்ட யாகங்களில் கொடுக்கப்பட்ட மாமிசத்தைச் சாப்பிடுவது ஆசாரமானது.
குர்யாத் க்ருதபசும் ஸங்கே குர்யாத்பிஷ்டபஷும் ததா |
நித்வேவ து வ்ருதா ஹந்தும் பஷுமிச்சேத்கதாசந |-37
மாமிசத்தில் ஆசை ஏற்படின் நெய், மாவினால் மிருகம் போன்ற உருவைச் செய்து சாப்பிட வேண்டுமேயன்றி யக்ஞங்கள் எதுவுமில்லாமல் வெறுமநே ஜீவஹிம்சை செய்யக்கூடாது.
யாவந்தி ப ரோயாணி தாவத்க்ருத்வோ ஹ மாரணம் |
வ்ருதா பஷுக்ந: ப்ராப்நோதி ப்ரேத்யஐந்மநி ஐந்மநி |-38
அப்படி வெறுமனே மிருகவதை செய்பவன் இறந்தபிறகு, இவன்கொன்ற மிருகத்தின் உடலில் எத்தனை ரோமங்கள் இருந்தனவோஅத்தனை பிறவிகள் எடுத்து பிறரால் கொல்லப்பபடுவான்.
யக்ஞார்த்தம் பஷவஸ்ஸ்ருஷ்டா: ஸ்வயமேவ ஸ்வயம்புவா | யக்ஞோ அஸ்ய பூத்யை ஸர்வஸ்யதஸ்மாத் யக்ஞேவதோ அவத: || 39
யக்ஞத்துக்காக பிரம்மா மிருகங்களைப் படைத்தார்.இவ்வுலகின் நன்மைக்காக யக்ஞம் உருவாக்கப்பட்டது. எனவே யக்ஞத்துக்காக செய்யும் மிருகவதை, வதையாகாது.
ஓஷத்ய: பஷவோ வ்ருக்ஷா ஸ்திர்யங்க பக்ஷிணஸ்ததா | யக்ஞார்த்தம் நிதநம் ப்ராப்தா: ப்ராப்நு வந்த்யுத்ஸ்ருதி: புந: 40
தானியங்கள், மிருகங்கள், மரங்கள், ஒளஷதிகள், பறவைகள்போன்ற அனைத்தும் யக்ஞத்துக்காக நசித்து, பிறகு உத்தம பிறவியைஅடைகின்றன.
மதுபர்கே சயக்ஞே ச பித்ருதைவதகர்மணி |
அத்ரைவ பஷவோ ஹிம்ஸ்யா நாந்யத்தேத்ய ப்ரவீந்மநு: ||| 41
மதுபர்கத்தோடு தேவ பித்ரு கிரியைகளில் யக்ஞத்தில் மட்டும்மிருகவதை செய்யலாம். மற்றபடி செய்யக்கூடாது என்று மனு கட்டளையிட்டுக் கூறுகிறார்.
ஏஷ்வர்த்தேஷு பசூந்ஹிம்ஸந் வேததத்வார்த்தவித் த்விஜ: |
ஆத்மாநம்ச பசூந் சைவ கமயத்யுத்தமாம் கதிம் || 42
மேலே கூறியபடி மிருகவதை செய்யும் வேத வேதாந்தங்களை நன்கறிந்த இருபிறப்பாளன் தன்னையும் அந்த மிருகத்தையும் உத்தம கதியை அடையச் செய்கிறான்.
க்ருஹே குராவரண்யே வா நிவஸந் ஆத்மவாந் த்விஜ: |
நாவேதவிஹிதாம் ஹிம்ஸாமாபத்யபி ஸமாசரேத் |-43
தன்னை அறிந்த இருபிறப்பாளன், கிருஹஸ்தனாக இருந்தாலும், பிரம்மச்சாரியாக இருந்தாலும், வானபிரஸ்தனாக இருந்தாலும், எந்நிலையிலும், ஆபத்து காலத்திலும்கூட மிருகவதை செய்யலாகாது.
யா வேதவிஹிதா ஹிம்சா நியதா அஸ்மிசராசரே |
அஹிம்ஸாமேவ தாம் வித்யாத்வேதாத் தர்மோ ஹி நிர்பபௌ |-44
வேதம் விதித்தது ஹிம்சையாயினும் இந்த சராசரி உலகத்தில் அது அஹிம்சையேயாகும். வேதத்திலிருந்தே அல்லவா தர்மம் நன்கு விளங்குகிறது.
யோ அஹிம்சகாநி பூதாறி ஹிநப்த்யாத்ம சுகேச்சா
ஸ ஜீவம்ஷ்ச ம்ருதஷ்சைவ ந க்வசித் சுகமேததே ||45
யாருக்கும் எந்த தீங்கும் இழைக்காததான விலங்குகளை (மான் போன்றவை) தனக்காக ஹிம்சிப்பவன், தான் உயிரோடிருக்கும் போதே இறந்தவனுக்கு சமமாவான். அவன் உயிரோடிருக்கும் போதும் இறந்த பின்னும் எவ்விடத்திலும் உருப்பட மாட்டான்.
யோ பந்தநவதக்ளேஷாந் ப்ராணிநாம் நசிகீர்ஷதி |
ஸ ஸர்வஸ்ய ஹிதப்ரேப்சு: சுகமத்யந்த மஷ்நுதே || 46
எவன், பிராணிகளை கட்டிப் போடுவது, பிராணிகளைக் கொல்வது, ஹிம்சிப்பது இவைகளைச் செய்யமாட்டானோ, எல்லா உயிர்களுக்கும் நன்மையைக் கோருகிறானோ, அவன் குறைவற்ற மேலான சுகங்களை அடைவான்.
யத்த்யாயதி யத்குருதே த்ருதிம் பத்நாதி யத்ரச ததவாப்நோதி அயத்நேந யோஹிநஸ்தி ந கிஞ்சந-47
மேலும் இவன், எவ்வுயிர்க்கும் தீங்கு நினையாதவன் அடையும் பலனையும், அதிகமாக தர்மங்களைச் செய்து பலனடைய நினைப்பவன் எத்தகைய பலனை அடைகிறானோ அந்தப்பலனையும், உயர்வான புகழுக்குரிய செயலைச் செய்பவன் அடையும் பலனையும், பரத்துவத்தை தியானிப்பவன் அடையும் பலனையும் எவ்வித முயற்சியும் இன்றி அடைகிறான்.
நாக்ருத்வா ப்ராணிநாம் ஹிம்ஸாம் மாம்ஸமுத்பத்யதே க்வசித் |
ஸச ப்ராணிவதஸ் ஸ்வர்க்யஸ்தஸ்மாந் மாம்ஸம் விவர்ஐயேத் | |-48
பிராணிகளை ஹிசிக்காமல் மாமிசம் கிடைக்காது. பிராணிஹிம்சை செய்தாலோ ஸ்வர்க்கலோகம் கிட்டாது. எனவே சாஸ்திரவிதியின்றி மாமிசம் சாப்பிடுவதை அறவே விடவேண்டும்.
ஸமுத்பத்திம் ச மாம்ஸஸ்ய வதபந்தெள ச தேஹிநாம் | ப்ரஸமீக்ஷ்ய நிவர்தேத ஸர்வ மாம்ஸஸ்ய பக்ஷணாத் |-49
மாமிச ஆசைக்கு மூலகாரணம் பிராணிகளைப் பிடிக்கவும்கொல்லவும தூண்டுகிறது. இதை எண்ணிப் பார்த்து சகல மாமிசங்களையும் உண்ணாமை வேண்டும்.
ந பக்ஷயதியோ மாம்சம் விதிம் ஹித்வா பிசாசவத் |
ஸ லோகே ப்ரியதாம் யாதி வ்யாதிபிஷ்ச ந பீட்யதே || 50
பிசாசைப் போன்று தின்று கொண்டிருக்காமல், மாமிசத்தைவிட்டவன் எவனோ அவன் எல்லாவுயிர்க்கும் அன்பானவன்-அவனுக்கு .எந்த நோயும் வராது. சாஸ்திர முறையில்லாமல் செய்தமாமிசங்களை உண்பவனுக்கு நோய்கள் ஏற்படும்.
அநுமந்தா விஷஸிதா நிஹந்தா க்ரய விக்ரயீ |
ஸம்ஸ்கர்தா சோபஹர்தா ச காதகஷ்சேதி காதுகா: I-51
பிராணியைக் கொல்லச் சொல்பவன், பிராணிகளின் அங்கங்களை வெட்டுபவன், பிராணிகளைக் கொல்பவன், மாமிசத்தை வாங்குபவன், விற்பவன், அதைச் சமைப்பவன், பரிமாறுபவன்,சாப்பிடுபவன் இவர்கள் அனைவருமே கொடியவர்கள்.
ஸ்வமாம்சம் பரமாம்சேநயோ வர்தயிதுமிச்சதி |
அநப்யர்சிய பித்ரூந் தேவாம்ஸ்ததோ அந்யோ நாஸ்தி அபுண்யக்ருத் || 52
எவன் யக்ஞங்களாலும் சிராத்தங்களாலும் தேவபித்ரு பூஜைகளுக் கல்லாமல், மற்றவைகளின் மாமிசத்தால் தன் மாமிசத்தைப் பெருக்க வைக்க நினைக்கிறனோ, அவனைவிட பாவி வேறொருவனுமில்லை.
வர்ஷே வர்ஷே அஸ்வமேதேந யோ யஜேத ஷதம் ஸமா: |
மாம்சாநி ச ந காதேத்யஸ்தயோ: புண்யபலம் ஸமம் || 53
எவன் நூறாண்டுகள் ஒவ்வொரு ஆண்டும் அஸ்வ மேதயாகம் செய்கிறானோ அவனுடைய புண்ணிய பலனும், மாமிசம் சாப்பிடாத வனுடைய புண்ணிய பலனும் சமம்.
பலமூலாஷநைர்மேத்யைர் முந்யந்நாதாம் ச போஜநை: |
ந தத் பலமவாப்நோதி யந்மாம்ஸ பரிவர்ஜநாத் || 54
பழம், கிழங்குகள் முதலானவைகளை உண்டு வாழும் முனிவனை விட அதிக பலனை சாஸ்திரம் கூறிய படியல்லாத மாமிச உணவை விட்டவன் அடையமுடியும்.
மாம்ஸ பக்ஷயிதாஅமுத்ர யஸ்ய மாம்ஸமிஹாத்மம்யஹம் | ஏதத்மாம்ஸஸ்ய மாம்ஸத்வம் ப்ரவதந்தி மநீஷிண:-55
இவ்வுலகில் எதனுடைய மாமிசத்தை ஒருவன் உண்கிறானோ, அது வேறுலகில் அவனுடைய மாமிசத்தை உண்ணும் – என்பதாக மாமிசம் என்னும் சொல்லுக்கு அறிஞர்கள் பொருள் கூறுகின்றனர்.-இந்தச் சொல்லைப் பிரித்துப் பொருள் பார்த்தால்-, ‘மாம்’ என்றால்
‘என்னை’ என்று பொருள். ‘சு:’ என்றால் அது என்று பொருள். என்னை அது தின்னும் என்பதே மாமிசத்தின் பொருள்.
ந மாம்ஸபக்ஷணோ தோஷோ ந மத்யே ந ச மைதுநே | ப்ரவ்ருத்திரேஷா பூதாநாம் நிவருத்திஸ்து மஹாபலா || 56
விதிமுறை மீறாமல் மைதுனம் (பெண்சேர்க்கை), மத்யம் (மது), மாமிசம் இவைகளை அனுபவிப்பது தோஷமன்று. ஆனாலும் இவைகளில் ஆசை வைக்காமல் இருப்பதே மிக்க நற்பலனைத் தரும்.
ப்ரேத சுத்திம் ப்ரவக்ஷ்யாமி த்ரவய சுத்திம் ததைவ ச சதுர்ணாமபி வர்ணாநாம் யதாவதநு பூர்வ : || 57
நான்கு வர்ணத்தாருக்கும் இறப்புத் தீண்டல் சுத்தமாவதைப் பற்றியும், திரவியங்களின் சுத்தம் பற்றியும் கூறுகிறேன்.
தந்தஜாதே அநுஜாதே ச க்ருத டே ச ஸம்ஸ்திதே|
அசுத்தா பாந்தவாஸ்ஸர்வே சூதகே ச ததோச்யதே|| 58
பற்கள் முளைத்துக் கொண்டிருக்கும் நிலையில் உள்ளவன் (பாலன்), நன்கு முளைத்தவன், குடுமி வைத்தவன், பூணூல் அணிந்தவன் – இவர்கள் இறந்தால் பங்காளிகள் அனைவருக்கும்தீட்டு உண்டு.
தஷாஹம் ஷாவமாசௌசம் சபிண்டே விதீயதே|
அர்வாக் ஸஞ்சய நாதஸ்த்நாம் த்ர்யஹமேகா ஹமேவ ச || 59
பிராம்மணர்களில், சபிண்டர்களுக்கு ( பங்காளிகளுக்கு)இறப்புத்தீட்டு பத்து நாட்கள் இருக்கும். வேதாத்யயனம் போன்றவற்றால் சிலருக்கு இந்த தீட்டு சீக்கிரம் முடியும்.
வேதங்களை முழுமையாக ஓதி அக்னி ஹோத்ரம் செய்யும் ஆசாரசீலனுக்கு ஒருநாள் மட்டுமே தீட்டு. வேதங்களை ஒதுபவனாக மட்டும் இருந்தால் மூன்று நாட்கள் தீட்டு. அக்னிஹோத்ரம் மட்டும் செய்பவனாக இருந்தால் நான்குநாட்கள் தீட்டு. இது எதுவும்
இல்லாதவனுக்கு பத்து நாட்கள் தீட்டு..
ஸபிண்டதா து புருஷே ஸப்தமே விநிவர்ததே|
ஸமாநோதக பாவஸ்து ஜன்மநாம்நோரவேதநே|| 60
ஒருவனுக்கு தன்னோடு சேர்த்து ஏழுதலைமுறை வரை சபிண்டத்துவம் இருக்கும். இன்னார் மகன் இன்னார் என்று தெரியும் வரை சமான உதகத்துவம் (எள்ளும், நீரும் வார்ப்பது) இருக்கும். தெரியாதபோது இல்லை.-தான், தன் தந்தை (பிதா), அவருடைய தந்தை (பிதாமஹர்),அவருடைய தந்தை (பிரபிதாமகர்), அவருடைய தந்தை (பிரபிதாமகரின் பிதா), அவருடைய தந்தை (பிரபிதாமகரின் பிதாமஹர்), அவருடைய தந்தை (பிரபிதாமகரின் பிரபிதாமகர்) என்று மொத்தம் ஏழு தலைமுறையினர்.-ஒருவனுக்கு தனக்கு முன்புள்ள ஆறு தலைமுறையினரும் சபிண்டர்கள் எனப்படுவர்.-இவர்களில் ஏழாவதாகக் கூறப்பட்ட பிரபிதாமகரின் பிரபிதா மகருக்கு கூடஸ்தர் என்று பெயர். இந்த கூடஸ்தருக்கும் முன் இருந்தவர்களின் சந்ததியினர் சமாநோதகர் எனப்படுவர். தனக்குக்கீழ் ஏழு சந்ததியினரும் சமாநோதகர் எனப்படுவர்.
யதேதம் ஷாவமாசௌசம் ஸபிண்டேஷு விதீயதே | ஐநநேப்யேவமேவ ஸ்யாந்நிபுணாம் சுத்திமிச்சதாம்|-61
மரணத்தீட்டு சபிண்டர்களுக்கு உள்ளது போலவே ஜனனத்தீட்டும் பரிசுத்தம் விரும்புகின்றவர்களான சபிண்டர்களுக்கு உண்டு.
ஸர்வேஷாம் ஷாவமாஷெளசம் மாதா பித்ரோஸ்து சூதகம் | சூதகம் மாதுரேவஸ்யாது பஸ்ப்ருஷ்ய பிதா சுசி: || 62
மரணத்தீட்டில் பிறர் தொடக்கூடாத தீட்டு சபிண்டர்கள் அனைவருக்கும் பொதுவானது.
ஜனனத்தீட்டு அப்படியல்ல. குழந்தை பிறந்ததால் ஏற்படும் தீட்டு தாய்க்கு பத்து நாட்கள். தந்தைக்கு, குழந்தையைத் தொட்டால் தீட்டு, நீராடியதும் தீட்டுப்போய் சுத்தி ஏற்படும்.
நிரஸ்ய து புமாந் சுக்ரமுபஸ்ப்ருஷ்யைவ சுத்யதி | பைஜிகாதபி ஸம்பந்தாதநுருந்த்யாதகம் த்ரயஹம் |63
காமத்தால் ஒருவன் வீரியத்தை விட்டால் நீராடுவதால் பரிசுத்தமடைவான். பிறர் மனைவியுடன் கூடுபவனுக்கு மூன்று தினங்கள் மட்டும் தீட்டு உண்டு.
அஹ்நாசைகே ராத்ர்யா ச த்ரிராத்ரைரேவ ச த்ரிபி: | ஷவஸ்ப்ருஷோ விசுத்யந்தி த்ரியஹாதுதக தாயிந: || 64
சபிண்டர்கள் பத்து நாட்களுக்குப் பிறகு தீட்டு நீங்கி சுத்த மடைவார்கள்.அன்பால் சவத்தைத் தொட்டவர்களும் பத்து நாட்களுக்குப் பிறகு சுத்தமடைவார்கள். சமாநோதகர்கள் மூன்று தினங்களுக்குப் பிறகு சுத்தமடைவர்.
குரோ: ப்ரேதஸ்ய ஷிஷ்யஸ்து பித்ருமேதம் சமாசரந் | ப்ரேதஹார்தைஸ்ஸமம் தத்ர தஷராத்ரேண சுத்யதி || 65
குருவுக்கு ஈமக் கடன்களைச் செய்த சிஷ்யன், குருவின் பங்காளிகளோடுகூட தானும் பத்து நாட்களில் சுத்தியடைவான்.
ராத்ரிபிர்மாஸதுல்யாவிர் கர்பஸ்ராவே வி த்யதி 11 ரஜஸ்யுபரதே ஸாத்வீ ஸ்நாநேந ஸ்த்ரீ ரஜஸ்வலா || 66
பெண்ணுக்கு, மூன்றாவது மாதம் முதல், கர்ப்பச் சிதைவு ஏற்பட்டால், கர்ப்பம் எத்தனை மாதங்களோ அத்தனை நாட்களும் தீட்டு.ரஜஸ்வலையான (மாதவிலக்கான) பெண் ரஜஸ் (ரத்தம்)நின்றபிறகு சுத்தமடைவாள்.
ந்ருணாமக்ருத சூடாநாம் விசுத்திர்நைஷிகீ ஸ்ம்ருதா|
நிர்வ்ருத்த டகாநாம் து த்ரிராத்ராச் சுத்திரிஷ்யதே|| 67
குடுமி வைத்தல் என்னும் கிரியை நடக்காத பாலன் இறந்தால், சபிண்டர்கள் ஒருபகலும் இரவும் தீட்டுக் காக்க வேண்டும்.-குடுமிவைத்தல் என்னும் கிரியை நடந்த பாலனுக்கு சபிண்டர்கள் மூன்றுநாட்கள் தீட்டுக் காக்க வேண்டும்.
ஊநத்விவார்ஷிகம் ப்ரேதம் நிதத்யுர்பாந்தவா: பஹி: |
அலங்கருத்ய சுசௌ பூமாவஸ்திஸஞ்சயநா த்ருதே|| 68
இரண்டு வயது நிறையாத குழந்தை இறந்தால், அந்த பிரேதத்தை அலங்கரித்து ஊருக்கு வெளியே சுத்தமான பூமியில் புதைக்க வேண்டும்.
நாஸ்ய கார்யோ அக்நிஸம்ஸ்காரோ நச கார்யோதக க்ரியா |
அரண்யே காஷ்டவத் த்யக்த்வா க்ஷபேயுஸ்த்ர்யஹமேவச!-69
இரண்டு வயது நிறையாத குழந்தைகளுக்கு அக்னி சமஸ்காரம் என்னும் தகனக்கிரியை (எரித்தல்) கிடையாது. உதகதானம் (எள்ளால் தர்ப்பணம்) கிடையாது. ஆரண்யத்தில் விறகை விட்டெறிவது போல் சவத்தைக் கொண்டு போய் புதைத்து விட்டு வர வேண்டியது
மட்டுமே. இதற்கு மூன்று நாட்கள் தீட்டு.
நாத்ரி வர்ஷஸ்ய கர்தவ்யா பாந்தவைருதக க்ரியா|
ஜாத தந்தஸ்ய வா குர்யுர்நாம்நி வாபி க்ருதே ஸதி ||–70
மூன்று வயது நிரம்பாத பாலகனுக்கு தந்தையோ சபிண்டர்களோ தர்ப்பணம் (உதகதானம்) செய்ய வேண்டியதில்லை. நாமகரணமானவனுக்கும், பற்கள் முளைத்தவனுக்கும் அன்பின்
காரணமாக உதகதானம் செய்யவும் செய்யலாம்.செய்யாமலும் விடலாம்.
ஸப்ரஹ்மசாரிண்யே காஹமதீதே பணம் ஸ்ம்ருதம் | ஐந்மந்யேகோதகாநாம் துத்ரிராதராச்சுத்திரிஷ்யதே|| 71
உடன் வேதம் படித்தவன் இறந்தால் ஒருநாள் தீட்டு. புத்திரன்பிறந்தால், சகோதரர்களுக்கு மூன்று நாட்கள் தீட்டு.
ஸ்த்ரிணாமஸம்ஸ்க்ருதாநாம் து த்ரியஹாச்சுத் யந்திபாந்தவா: | யதோகேநைவ கல்பேந த்யந்தி து ஸநாபய: | 72
ஒரு பெண்ணை ஒருவனுக்கு அளிப்பதாக வாக்குத்தத்தம் செய்த பிறகு அந்தப் பெண் இறந்தால், நிச்சயம் செய்யப்பட்ட அவனுக்கும் அவன் பங்காளிகளுக்கும் மூன்று நாட்கள் தீட்டு. திருமணமான பிறகு இறந்தால், அவளின் தந்தை, தந்தையின் பங்காளிகளுக்கு மூன்று நாட்கள் தீட்டு.
அக்ஷாரலவணாந்நாஸ் ஸ்யுர்நிமஜ்ஜேயுஷ்ச தேத்ரயஹம் | மாம்ஸாஷநம் ச நாஷ்நீயு: ஷயீரம்ஷ்ச ப்ருதக்க்ஷிதௌ|-73
அவ்வாறு மூன்று நாள் தீட்டுள்ளவர்கள், அந் நாட்களில் உப்பில்லாத அன்னத்தைச் சாப்பிட வேண்டும். நதிகளில் நீராட வேண்டும். மாமிசம் சாப்பிடக் கூடாது. தரையில் படுக்க வேண்டும். பெண்சேர்க்கை கூடாது.
ஸந்நிதாவேஷ வை கல்பஷ்ஷாவாஷௌசஸ்ய கீர்தித: அஸந்நிதாவயம் ஞேயோ விதிஸ்ஸம்பந்தி பாந்தவை: || 74
இறந்தவரின் அருகிலிருப்போருக்கே இதுவரை கூறியவை பொருந்தும். வெளியூர்களிலிருப்போரான சபிண்டர்களுக்கும் சமாநோதகர்களுக்குமான விதிமுறைகளை இனி கூறுகிறேன்.
விகதம் து விதேஷஸ்தம் ஷ்ருணுயாத்யோ ஹ்யநிர்தஷம் |
யச்சேஷம் தஷராத்ரஸ்ய தாவதேவாசுசிர்பவேத் |-75
வெளியூர்களில் இருப்பவர்கள் ஜனன மரணங்களை பத்து நாட்கள் கடப்பதற்கு முன்பேகேள்விப்பட்டால், அந்த நாட்கள் போக, மிகுந்த தினங்கள் தீட்டுக் காக்க வேண்டும்.
அதிக்ராந்தே தஷாஹே ச த்ரிராத்ரமசுசிர்பவேத்
ஸம்வத்ஸரே சுப்தீதே து ஸ்ப்ருஷ்ட்வைவாபோவிசுத்யதி || 76
இறந்து பத்து இரவுகள் கடந்தபிறகு தெரிந்தால், சபிண்டர்களும், சமானோதகர்களும் மூன்று நாட்கள் தீட்டுக் காக்க வேண்டும். ஒருவருடம் சென்றபிறகு தெரிந்தால் நீராடுவதால்
சுத்தமடைவார்கள்.
நிர்தஷம் ஞாதிமரணம் ஷ்ருத்வாப்ளுத்ரஸ்ய ஜன்ம ச
ஸவாஸா ஜலமாப்ளுத்ய சுத்தோ பவதி மாநவ: | 77
பத்து நாட்கள் கடந்த பிறகு பங்காளியின் மரணத்தைக் கேள்விப் பட்டாலோ, அல்லது குழந்தை ஜனனத்தைக் கேள்விப் பட்டாலோ, கட்டிய வேட்டியுடன் நீராட சுத்தி ஏற்படும்.
பாலே தேஷாந்தரஸ்தே ச ப்ருதக்பிண்டே ச சம்ஸ்திதே |
ஸ்வாஸா ஜலமாப்ளுத்ய ஸத்ய ஏவ விசுத்யதி|| 78
வெளியூரிலிருக்கும் குடுமி வைக்காத பாலகன் இறந்தாலும், மூன்று நாட்கள் தீட்டுள்ள சமாநோதகன் இறந்தாலும் கட்டிய வேட்டியோடு நீராட உடனே சுத்திஏற்படும்.
அந்தர் தஷாஹே ஸ்யாதாம் சேத்புநர்மரணஜன்மநீ |
தாவத்ஸ்யாதசுசிர்விப்ரோ யாவத்ததாஸ்யாதநிர்தஷம் 79
பத்து நாட்களுக்குள் மீண்டும் பத்துநாள் தீட்டுடைய மரணமோ ஜனனமோ நிகழ்ந்தால், முதல் பத்துநாள் தீட்டு எதுவரையோ அதுவரை மட்டுமே தீட்டுக்காத்தால் போதும்.
த்ரிராத்ரமாஹுராஷௌச மாசார்யே ஸம்ஸ்திதே ஸதி |
தஸ்ய புத்ரே ச பத்ந்யாம் ச திவாராத்ரமிதி ஸ்திதி || 80
ஆச்சாரியன் இறந்தால் சிஷ்யனுக்கு மூன்று நாட்கள் தீட்டு. ஆச்சாரியனுடைய புத்திரன், மனைவி இறந்தால் ஒரு இரவும் பகலும் தீட்டுக் காக்க வேண்டும்.
ஷ்ரோத்ரியேதூபஸம்பந்நே த்ரிராத்ரமசுசிர்பவேத்
மாதுலே பக்ஷிணீம் ராத்ரிம் சிஷ்யரித்விக் பாந்தவேஷு சா 81
அருகாமையில் இருக்கும் வேதசாஸ்திர விற்பன்னன் இறந்த போதும், தாய்மாமன், ரித்விக், சிஷ்யன், தாய்வழி உறவினன் இறந்த போதும் ஒருபகல் நேரம் தொடங்கி அடுத்த பகல் வரை தீட்டு.
ப்ரேதே ராஜநி ஸஜ்யோதிர்யஸ்ய ஸ்யாத்விஷயேஸ்தித: | அஷ்ரோத்ரியேத்வஹ: க்ருத்ஸ்நமநூசாநே ததா குரெள |-82
நால்வர்ணத்தாரும் வசிக்கும் தேசத்து மன்னன் பகலில் இறந்தால் சூரியன் அஸ்தமிக்கும் வரையிலும், இரவில் இறந்தால் நட்சத்திரங்கள் தெரியும் வரையிலும் தீட்டு. வேதமோதுபவன் தன் இல்லத்தில் இறந்தால் மூன்று இரவுகள் தீட்டு. வேதமோதாத
சாதாரணமானவன் தன் இல்லத்தில் இறந்தாலும், குரு இறந்தாலும் ஒரு நாள் தீட்டு.
சுத்த்யேத்விப்ரோ தஷாஹேந த்வாதஷாஹேந பூமிப: |
வைஷ்ய: பஞ்சதஷாஹேந சூத்ரோ மாஸேந சுத்யதி || 83
பூணூல் அணிந்த பிறகு ஸபிண்டன் இறந்தால், பிராம்மணனுக்கு பத்துநாட்களும், வைசியனுக்கு பதினைந்து நாட்களும், சூத்திரனுக்கு ஒரு மாதமும் தீட்டு.
ந வர்தயேதகாஹாநி ப்ரத்யூஹேந்நாக்நிஷு க்ரியா
ந ச தத்கர்ம குர்வாண ஸ்ஸநாப்யோஅப்யசுசிர்பவேத் || 84
தீட்டு தினங்களை இதற்குமேல் வளர்க்கக் கூடாது. அக்னிஹோத்ரம் முதலான கிரியைகளுக்கு குறைவு ஏற்படுத்தக் கூடாது. தீட்டுகழிக்கும் புத்திரன் முதலானோர் அக்னிஹோத்ரம் முதலானவற்றைச் செய்யலாம்.
திவாகீர்திமுதக்யாம் ச பதிதம் சூதிகாம் ததா |
ஷவம் தத்ஸ்ப்ருஷ்டிநம் சைவ ஸ்ப்ருஷ்ட்வாஸ்நாநேந சுத்யதி || 85
நாவிதன், வீட்டுவிலக்கானவள், பதிதன், பிள்ளை பெற்று இன்னும் தீட்டு கழியாதவள், சவத்தைத் தொட்டவனைத் தொட்டவன் முதலானோர் நீராடுவதால் சுத்தியடைவர்.
ஆசம்ய ப்ரயதோ நித்யம் ஜபேதசுசிதர்ஷனே |
சௌராந் மந்த்ராந் யதோத்சாஹம் பாவமானீஷ்ச ஷக்தித: || 86
தூய்மையற்ற பொருட்களைப் பார்த்தவன், நீராடி சக்திக்கேற்பசூரிய மந்திரங்களையும், பவமானம் போன்ற ரிக்குகளையும் முயற்சி)யோடு ஜபிக்க வேண்டும்.
நாரம் ஸ்ப்ருஷ்ட்வாஸ்தி ஸஸ்நேஹம் ஸ்நாத்வா விப்ரோ விசுத்யதி |
ஆசம்யைவது நிஸ்ஸ்நேஹம் காமாலப்யார்கமீக்ஷ்யவா|| 87
பிசுக்கோடு இருக்கின்ற மனித எலும்பைத் தொட்டால் பிராம்மணன் நீராடுவதன் மூலம் சுத்தியடைகிறான்.-பிசுக்கில்லா எலும்பைத் தொட்டால் ஆசமனம் செய்து பசுவைத்
தொடுவதாலோ அல்லது சூரியனைப் பார்ப்பதாலோ பரிசுத்தியடைவான்.
ஆதிஷ்டீ நோதகம் குர்யாத் ஆவ்ரதஸ்ய ஸமாபநாத் |
ஸமாப்தேதூதகம் க்ருத்வாத்ரிராத்ரேணைவ சுத்யதி 88
தீக்ஷை வகிப்பவன் (பிரம்மச்சரிய தீட்சை, யாக தீட்சைபோன்றவை) அந்த தீக்ஷை முடியும் வரைதாய் தந்தையரைத் தவிர்த்து மற்ற பங்காளிகள் இறந்தால் தீட்டுக்காத்து உதகதானம்
செய்ய வேண்டிய தில்லை. தீட்சை முடிந்த பிறகு மூன்று நாட்கள் தீட்டுக்காத்து உதகதானம் செய்து தேவைப்பட்டால் மீண்டும் தீட்சையை ஏற்க வேண்டும்.
வருதா சங்கரஜாதாநாம் ப்ரவ்ரஜ்யாசு ச திஷ்டதாம் |
ஆத்மநஸ்த்யாகிநாம் சைவ நிவர்தேதோதக க்ரியா|-89
சுயதர்மங்களை செய்யாமல் விட்டவர்கள், தாழ்த்தப்பட்டஜாதியில் பிறந்தவர்கள், வேதத்துக்குப் புறம்பானவர்களாக சிவப்பு ஆடை முதலானவைகளைத் தரிப்பவர்கள், தற்கொலை செய்து கொண்டவர்கள் முதலானோருக்கு உதகதானம் போன்றவைகளை
செய்யத் தேவையில்லை.)
பாஷண்டமாஷ்ரிதாநாம் ச சரந்தீநாம் ச காமத: |
கர்ப பர்த்ருத்ருஹாம் சைவ சுராபீநாம் ச யோஷிதாம் || 90
வேதத்தில் சொல்லப்படாததான சிவப்பாடைகளை அணிதல்போன்றவைகளைச் செய்யும் பாஷாண்ட பெண் துறவிகள்,விபச்சாரிகள், கருச்சிதைவு செய்பவர்கள், கணவனுக்கு துரோகம்செய்பவர்கள், மது அருந்துபவர்கள் முதலான இரு பிறப்பாளப்பெண்களுக்கு உதகதானம் செய்யத் தேவையில்லை.
ஆசார்யம் ஸ்வமுபாத்யாயம் பிதரம் மாதரம் குரும் |
நிர்ஹ்ருத்ய து வ்ரதீ ப்ரேதாந் ந வரதேந வியுஜ்யுதே|| 91
தனக்கு வேதபாடம் முழுமையாக நடத்திய ஆச்சார்யன்,சிறிதாவது வேதம் சொல்லிக் கொடுத்த உபாத்யாயன், வேதவேதாந்தங்களை விளக்கியுரைத்த குரு, தாய் தந்தையர் இவர்களுக்குஇறந்தபின் கிரியைகள் செய்வதால் விரதபங்கம் ஏற்படாது.
தக்ஷிணேந ம்ருதம் சூத்ரம் புரத்வாரேண நிர்ஹரேத் |
பஷ்சிமோத்தர பூர்வைஸ்து யதாயோகம் த்விஜந்மந: ||-92
பிராம்மணனுடைய சவத்தை கிழக்குபக்கமாகவும், க்ஷத்ரியனுடைய சவத்தை மேற்குப் பக்கமாகவும், மற்றவர்களின் சவத்தை தெற்குப் பக்கமாகவும் ஊருக்கு வெளியே கொண்டு
போக வேண்டும்.
ஸ ராக் ஞாமகதோஷோஸ்தி வரதிநாம் ந ச ஸத்ரிணாம் |
ஐந்த்ரம் ஸ்தாநமுபா நா ப்ரஹ்மபூதாஹி தே ஸதா!-93
இந்திரனுடைய அம்சமாக விளங்குவதால் மன்னர்களுக்கு சபிண்டர்கள் இறந்தாலும் தீட்டு கிடையாது. விரதங்களைப் பூண்டிருப்பவர்களுக்கும் (பிரம்மச்சரிய விரதம், சாந்தாரயண விரதம் போன்றவை), யாகம் செய்பவர்களுக்கும் அவ்வாறே தீட்டு கிடையாது. இவர்கள் பிரம்ம அம்சமானவர்கள்.
ராக்ஞோமாஹாத்மிகே ஸ்தாநே ஸத்ய: சௌசம் விதீயதே |
ப்ரஜாநாம் பரிரக்ஷார்தமாஸநம் சாத்ர காரணம்11 94
உயர்ந்த ஸ்தானத்தில் இருக்கும் மன்னனுக்கு தீட்டு உடனே விலகிவிடும். மக்களை நன்கு ரட்சிக்க வேண்டிய ஆசனத்தில் அவன் அமர்ந்திருப்பதே காரணம்.
டிம்பாஹவஹதாநாம் ச வித்யதா பார்திவேந ச |
கோ ப்ராஹ்மணஸ்ய சைவார்த்தே யஸ்ய சேச்சதி பார்த்திவ: || 95
மன்னன் பங்கேற்காத யுத்தத்தில் இறந்தவனுக்கும், இடிமின்னல் தாக்கி இறந்தவனுக்கும், பசுவையும் பிராம்மணனையும் காப்பதற்காக இறந்தவனுக்கும், மன்னன் தன் காரிய நிமித்தமாக யாருக்குத் தீண்டல் ஏற்படக் கூடாது என்று நினைக்கிறானோ அவனுக்கும்
உடனேநீராடியதும் தீட்டுப் போகும்.
ஸோமாக்யர்காநிலேந்த்ராணாம் வித்தாப்பத்யோர்யமஸ்யச |
அஷ்டாநாம் லோகபாலாநாம் வபுர்தாரயதே ந்ருப: I96
சோமன், அக்நி, சூரியன், வாயு, இந்திரன், குபேரன், வருணன், யமன் என்னும் லோக பாலர்களின் அம்சமாக உள்ளவன் மன்னன்.
லோகேஷா திஷ்டிதோ ராஜா நாஸ்யாசௌசம் விதீயதே|
ஷௌசா ஷௌசம் ஹி மர்த்யாநாம் லோகேஷ ப்ரபவாப்யயம்|| 97
மன்னன் உலகைக் காப்பவர்களான திக்பாலர்களின் அம்சமாக இருப்பதால் அவனுக்குத் தீட்டு கிடையாது. மனிதர்களுக்கு தூய்மையும் தீட்டும் திக்பாலர்களாலேயே ஏற்படுகின்றன.
அவர்களின் அம்சமான வனுக்குத் தீட்டு ஏற்பட இடமில்லை.
உத்யதைரா ஹவே ஹஸ்த்ரை: க்ஷத்ர தர்ம ஹதஸ்ய ச |
ஸத்யஸ் ஸந்திஷ்டதே யக்ஞஸ்ததா ஷௌச மிதி ஸ்திதி: || 98
தர்மயுத்தம் செய்து போரில் ஆயுதங்களால் அடிப்பட்டு இறந்தவனுக்கு, யாகம் செய்தவனுக்குக் கிடைக்கும் பலன் கிடைக்கும்.தீட்டுஉடனே நீங்கிப்போகும்..
விப்ரஷ்ஷுத்த்யத் யபஸ்ஸ்ப்ருஷ்ட்வா க்ஷத்ரியோ வாஹநாயுதம் |
வைஷ்ய: ப்ரதோதம் ரஷ்மிந் வாயஷ்டிம் சூத்ர: க்ருதக்ரிய: || 99
சிராத்த கிரியைகளையெல்லாம் முடித்த பிறகு, பிராம்மணன் தண்ணீரைத் தொடுவதினால் தீட்டு நீங்கி பரிசுத்தி அடைகிறான். க்ஷத்ரியன் ஆயுதங்களையும், வாகனத்தையும் தொடுவதினால்பரிசுத்தி அடைகிறான். வைசியன் தராசு கயிறுகளைத் தொடுவதினால் பரிசுத்தியடைகிறான்.சூத்திரன் மூங்கில் குச்சியைத் தொடுவதினால் பரிசுத்தி யடைகிறான்.
ஏதத்வோ அபிஹிதம் ஷௌசம் ஸபிண்டே த்விஜோத்தமா: 1
அஸ்பிண்டே ஸர்வேஷு ப்ரேதசுத்திம் நிபோதத: I-100
த்விஜோத்தமர்களே! சபிண்டர்கள் விஷயத்தில் தீட்டுமுறைகளை உங்களுக்கு இதுவரை கூறினேன்.-இனி சபிண்டர்கள் அல்லாதவர் களுடையதைப் பற்றிக் கூறுகிறேன், கேளுங்கள்.
அஸபிண்டம் த்விஜம் ப்ரேதம் நிர்ஹ்ருத்ய பந்துவத் |
விசுத்யதி த்ரிராத்ரேண மாதுராப்தாம்ஷ்ச பாந்தவாந் 1-101
சபிண்டன் அல்லாத பிராம்மண சவத்தை ஸம்ஸ்காரம் செய்த பிராம்மணனுக்கும். தாய் வர்க்கத்தைச் சேர்ந்த பந்துக்களுக்கு ஸம்ஸ்காரம் செய்தவனுக்கும் மூன்று நாட்கள் தீட்டு.
யத்யந்நமத்தி தேஷாம் து தஷாஹேநைவ த்யதி |
அநதந்நந்நமஹ்நைவ ந சேத் தஸ்மிந் க்ருஹே வசேத் 102
சவத்தைச் சுமந்து சென்றவன் அந்த வீட்டில் சாப்பிட்டால், பங்காளிகளைப் போன்று பத்துநாட்கள் தீட்டு உண்டு. அந்த வீட்டில் உண்ணாமலும் தங்காமலும் வெளியே வந்து விட்டால், ஓர் இரவு ஒரு பகலுடன் தீட்டுபோகும்.
அநுகம்யேச்சயா ப்ரேதம் ஞாதிமஞாதிமேவ வா |
ஸ்நாத்வா ஸசேல: ஸ்ப்ருஷ்வாக்நிம் க்ருதம் ப்ராஷ்ய விசுத்யதி 1–103
அன்பினால் பிரேதத்தைத் தொடர்ந்து போனவன், ஆடையோடு நீராடிய பின் நெருப்பைத் தொட்டு, பின் நெய்யை உண்டால் தீட்டு நீங்கி பரிசுத்தியடைவான்.
ந விப்ரம் ஸ்வே திஷ்டத்சு மருதம் சூத்ரேண நாயயேத் |
அஸ்வர்க்யாஹ்யாஹூஸ் ஸ்யாச்சூத்ர ஸம்ஸ்பர்ஷ தூஷிதா || 104
பிராம்மணன் இறந்தால் சவத்தை சூத்ரனை சுமக்கச் சொல்லக் கூடாது. அவ்வாறு செய்தால் இறந்த பிராம்மணனுக்கு சொர்க்க லோகம் கிட்டாது.
ஞாநம் தபோ அக்திராசாரோ ம்ருந்மநோ வார்யுபாஞ்ஜநம் |
வாயு: கர்மார்க்காலெள ச சுத்தே: கர்ம்ரூணி தேஹிநாம் || 105
ஞானம், தவம், அக்னி, ஆசாரம், மண், மனம், தண்ணீர்,பெருக்கி மெழுகுதல், காற்று, கிரியை, சூரியன், காலம் இவை பிராணிகளுக்கு பரிசுத்தம் ஏற்படுத்துபவை.
ஸர்வேஷாமேவ ஷௌசா நாமர்தஷெளசம் பரம் ஸ்ம்ருதம்
யோ அர்தே சிர்ஹி ஸ சிர்ந ம்ருத்வாரிசுசிச்க்ஷசி: || 106
சுத்திகளிலெல்லாம் உயர்ந்தது திரவிய சுத்தி. அநியாயமாக பிறர்பொருளை அடையாமல், நேர்மையாக பொருளீட்டுவதே திரவியசுத்தி. திரவிய சுத்தி உடையவனே பரிசுத்தமானவன். மண்ணாலும்நீராலும் உடலை நன்கு சுத்தமாக வைத்துக் கொண்டாலும் திரவியசுத்தி இல்லாதவனை சுத்தமானவன் என்று கூறமுடியாது .
க்ஷாந்த்யா சுத்யந்தி வித்வாம்ஸோ தாநேநாகார்யகாரிண: | பிரச்சன்னபாபாஜப்யேந தபஸா வேதவித்தமா || 107
வித்வான்கள் பொறுமையாலும், கூடாதகாரியம் செய்பவர்கள்தானத்தாலும், ரகசியமாக பாபம் செய்வோர் மந்திரஜபத்தாலும்,வேதமறிந்த உத்தமர்கள் தவத்தாலும் பரிசுத்தமடைவார்கள்.
ம்ருத்தோயைஷ் த்யதே ஷோத்யம் நதிவேகேந சுத்யதி |
ரஜஸா ஸ்த்ரீ மநோதுஷ்டா ஸந்யாஸேந த்விஜோத்தம: || 108
பாத்திரங்கள், மண்ணாலும் நீராலும் சுத்தமாகும், ஆறு,பெருக்கெடுத்து ஓடுவதால் சுத்தமாகும்.மனத்தால் சோரம் போனவள் மாதவிலக்கால் சுத்தமாவாள். பிராம்மண உத்தமன் சந்யாசத்தில் பரிசுத்தனாவான்.
அத்பிர் காத்ராணி அத்யந்தி மநஸ்ஸத்யேந சுத்யதி | வித்யாதபோப்யாம் பூதாத்மா புத்திர் ஞாநேந த்யதி || 109
உடல், நீராடுவதால் சுத்தமடையும். வேண்டாத சிந்தனைகளில் ஈடுபட்ட மனம், சத்தியத்தால் தூய்மையடையும். ஆத்மா, வித்யையாலும் தவத்தாலும் தூய்மையடையும், புத்தி, ஞானத்தால் தூய்மையடையும்.
ஏஷ ஷௌசஸ்ய வ: ப்ரோக்த: ஷாரீரஸ்ய விநிர்ணய: |
நாநாவிதாநாம் த்ரவ்யாணாம் த்தேஷ்ருணுத நிர்ணயம்11 110
சரீர சம்பந்தமான சுத்திகள் கூறப்பட்டன. மேலும் பல வகையான திரவியங்களின் சுத்தியை கூறுகிறேன், கேளுங்கள்.
தைஜஸாநாம் மணீநாம் ச ஸர்வஸ்யாஷ் மமயஸ்ய ச | பஸ்மநாத்பர்ம்ருதா சைவ த்திருக்தா மநீஷிபி: [111
ஒளி பொருந்திய ரத்தினங்கள், தங்கம், கற்கலான அனைத்தையும் சாம்பல், மண், நீர் முதலியவற்றால் சுத்தப்படுத்த வேண்டும்.
நிர்லேபம் காஞ்சநம் பாண்டமத்பிரேவ விசுத்யதி |
அப்ஐமஷ்மமயம் சைவ ராஜதம் சாநுபஸ்க்ருதம் || 112
பிசுக்கேறாத தங்கப்பாத்திரத்தையும், தண்ணீரில் பிறக்கும் முத்து, சங்கம் முதலானவைகளையும். அழுக்கேறாத வெள்ளிப் பாத்திரங்களையும் ஜலத்தாலேயே சுத்தப்படுத்தலாம்.
அபாமக்நேஷ்ச ஸம்யோகாத்தேம ரூப்யம் ச நிர்பபௌ |
-தஸ்மாத்தயோஸ் ஸ்வயோந்யைவ நிர்ணேகோ குணவத்தர: ! 113
தண்ணீர், அக்நி இவற்றின் சேர்க்கையால் தங்கமும் வெள்ளியும் உருவாகும். இவை உருவாகக் காரணமான அக்னியாலும் ஜலத்தாலும் இவைகளை பரிசுத்தப்படுத்துவதே சிறந்தது.
தாம்ராய: காம்ஸ்யரைத்யாநாம் த்ரபுணஸ்ஸீஸகஸ்ய ச
ஷௌசம் யதார்ஹம் கர்தவ்யம் க்ஷாராம்ளோதக வாரிபி: |-114
செம்பு, இரும்பு, வெண்கலம், பித்தளை, துத்தநாகம், ஈயம் இவற்றாலான பாத்திரங்களை, அவ்வவற்றுக்குத் தக்கபடி சாம்பல், புளி, கோமயம், தண்ணீர் முதலானவற்றால் பரிசுத்தமாக்கவேண்டும்.
த்ரவ்யாணாம் சைவ ஸர்வேஷாம் த்திருத்வ்பவநம் ஸ்ம்ருதம் | ப்ரோக்ஷணம் ஸம்ஹதாநாம் ச தாரவாணாம் சதக்ஷணம் || 115
திரவ ரூபமான திரவியங்களை (நெய், எண்ணெய் முதலானவற்றை) காகம் போன்றவை தீண்டினால்,இரண்டுதர்ப்பைகளால் அவற்றிலிருந்து ஒருதுளி எடுத்து வெளியே போட்டால் சுத்தமாகும். பஞ்சு மெத்தை முதலானவைகளில் எச்சில் போன்ற எதுவும் பட்டால் தண்ணீரால் துடைத்துவிட்டுப்ரோட்சணம் செய்ய சுத்தமாகும். மரப் பாத்திரங்கள் அசுத்தமடைந்தால் அவற்றைச் சிறிது சீவியெடுக்க பரிசுத்தி ஏற்படும்.
மார்ஜநம் யக்ஞபாத்ராணாம் பாணிநா யக்ஞகர்மணி |
சமசாநாம் க்ரஹாணாம் ச த்தி: ப்ரக்ஷாளநேந து 116
வீடுகள், பெருக்கி மெழுகுவதனால் சுத்தமடையும். யக்ஞபாத்திரங்கள் முதலில் கைகளால் துடைத்து பிறகு நீர்விட்டுஅலம்புவதால் சுத்தியடையும்.
சரூணாம் ஸ்ருக் ஸ்ரவாணாம் ச ஷுத்திருஷ்ணேநவாரிணா |
ஸ்ப்யுசூர்ப்ப ஷகடாநாம் ச முஸலோலூகலஸ்ய ச 117
பிசுக்கேறிய சரு. ஸ்ருக், ஸ்ரவம் (யக்ஞத்துக்கு உபயோகப்படுத்துபவை) வெந்நீரில் அலம்பினால் சுத்தமாகும்.பிசுக்கில்லை யெனில் தண்ணீரில் அலம்பினால் போதும்.
மேலும், முறம், உரல், உலக்கை, திரிகை, அம்மி இவைகளைதண்ணீரால் அலம்பினால் சுத்தமாகும்.
அத்பிஸ்து ப்ரோக்ஷணம் ஷௌசம் பஹுநாம் தான்யவாஸஸாம் | ப்ரக்ஷாளநேநத்வல்பாநாமத்பிஷ்சௌசம் வீதீயதே || 118
ஓராள் சுமைக்கு அதிகமான தானியங்கள், துணிமூட்டைகள் அசுத்தமானால், தண்ணீர் தெளிப்பதால் சுத்தமடையும். ஓராள் சுமையைவிட குறைவாக இருந்தால், தண்ணீரால் அலம்பி சுத்தமாக்க வேண்டும்.
சேலவச்சர்மணாம் த்திர்வைதலாநாம் ததைவ ச |
ஷாக மூல பலாநாம் ச தான்யவத் சுத்திரிஷ்யதே || 119
மான்தோல், புலித்தோல் முதலான தோல்களையும், மூங்கிலால் செய்யப்பட்ட பொருட்களையும் வஸ்திரங்களைப் போல சுத்தப்படுத்த வேண்டும்.
காய்கறிகள், கிழங்குகள், பழங்கள் முதலானவற்றை தானியங்களைச் சுத்தம் செய்வது போல சுத்தம் செய்ய வேண்டும்.
கௌஷேயாவிகயோரூஷை: குதபாநாமரிஷ்டகை: ||
ஷ்ரீபலைரம் பட்டாநாம் க்ஷெளமாணாம் கௌரஸர்பபை: || 120
பட்டுப்புழுவால் உண்டான பட்டு வஸ்திரங்களையும், ஆட்டு ரோமத்தால் செய்த கம்பளிகளையும் உவர் மண்ணால் சுத்தம் செய்ய வேண்டும். கம்பளிகளை வேப்பவிதைகளாலும், சால்வைகளை வில்வப் பழங்களாலும் சுத்தம் செய்ய வேண்டும். வெண்பட்டை வெண்கடுகால் சுத்தம் செய்ய வேண்டும்.
க்ஷெளமவத் ஷங்கஷ்ருங்காணா மஸ்தி தந்தமயஸ்ய ச |
ஷுத்திர் விஜாநதா கார்யா கோ மூத்ரேணோதகேந வா!! 121
சங்கு, தந்தம், மான்கொம்பு முதலானவற்றை வெண்பட்டைப் போல வெண் கடுகுப் பொடியோடு கோமயத்தையோ, தண்ணீரையோ சேர்த்து சுத்தம் செய்ய வேண்டும்.
ப்ரோக்ஷணா த்ருணகாஷ்டம் ச பலாலம் சைவ அத்யதி 1
மார்ஜாநோ பாஞ்ஜநைர் வேஷ்ம புந: பாகேந ம்ருந்மயம் || 122
அசுத்தியான விறகு, புல், வைக்கோல் முதலானவை நீரைத்தெளிப்பதால் சுத்தமாகும். வீடுகள், பெருக்குதல் துடைத்தல் சுண்ணாம்பு அடித்தல் முதலியவைகளால் சுத்தியாகும். மண் பாத்திரங்கள் நெருப்பில் சுடுவதால் சுத்தமாகும்.
மத்யைர்மூத்ரை: புரீஷை வாஷ்டீவநை: பூயஷோணிதை: 1 ஸம்ஸ்ப்ருஷ்டம் வை சுத்யேத பந: பாகேந ம்ருந்மயம் || 123
கள், சிறுநீர், மலம், தும்மல், சீழ், ரத்தம் இவைகள் பட்ட மண்பாத்திரங்கள் மீண்டும் சுட்டாலும் சுத்தமாகாது.
ஸம்மார்ஐநோ பாஞ்நேந ஸேகேநோல்லேகநேந ச
கவாம் ச பரிவா ஸேந பூமி: சுத்யதி பஞ்சபி: |-124
பெருக்குதல், சாணம்போட்டு மெழுகுதல், கோ மூத்திரத்தைத்தெளித்தல், மேல் மண்ணைத் தோண்டி வெளியே எறிந்துவிடல், ஒரு இரவும் பகலும் பசுக்களை உள்ளே கட்டிப்போட்டு வைத்தல்என்னும் ஐந்து வகைகளால் பூமி பரிசுத்தமடையும்.
பக்ஷிஜக்தம் கவாகாத்ர மவதூதமவக்ஷதம் |
தூஷிதம் கேஷகீடைஷ் ச ம்ருத்ப்ருக்ஷேபேண சுத்யதி |-125
பறவை எச்சில்பட்டது, பசுவால் முகர்ந்து பார்க்கப்பட்டது காலால் வீசியெறியப்பட்டது. மேலேயே தும்மப்பட்டது. மயிர், புழு இருப்பதுமான அன்னம், ஆகியவற்றின் மீது சிறிது மண்ணைத் தூவ சுத்தமாகும்.
யாவந்நாபைத்ய மேத்யாக்தாத்கந்தோலேபஸ்ச தத்க்ருத: |
தாவதம்ருத்வாரி சாதேயம் ஸர்வாசு த்ரவ்ய சுத்தி || 126
மல ஜலங்களால் அசுத்தியானவற்றை,அவையும் அவற்றின் வாடையும் போகும்வரை மண்ணைப் போட்டு நீரில் அலம்ப வேண்டும்.மண்ணால் சுத்தமாகும் என்று சொல்லும்போதே நீரையும் சேர்த்துத்தான் கூறப்படுகிறது.
த்ரீணி தேவா: பவித்ராணி ப்ராஹ்மணா நாமகல்பயந் அத்ருஷ்ட மத்பிர் நிர்ணிக்தம் யச்ச வாசா ப்ரஷஸ்யதே |-127
எந்த தோஷமும் இருப்பதாக கண்ணுக்குத் தெரியாத பொருள், தண்ணீரால் பரிசுத்தமடைந்தது என்று கூறப்பட்ட பொருள், பிராம்மணனால் தண்ணீரால் பரிசுத்தம் அடைந்தது என்று கூறப்பட்ட பொருள் இவை மூன்றும் பிராம்மணர்களுக்கு பரிசுத்தமானது என்று தேவர்கள் கூறியுள்ளனர்.
ஆப: ஷுத்தா பூமிகதா வைத்ருஷ்ண்யம் யாசுகோர்பவேத் |
அவ்யாப்தாஷ்சேதமேத்யேந கந்தவர்ணரஸாந்விதா: –128
மழையால் சேர்ந்த நீரும், பசுக்கள் குடித்ததுமே தாகம் தீர்க்கவல்லதும், தூய்மையற்ற பொருளோடு சம்பந்த மற்றதும், நல்ல மணத்தோடு இனிமையாக, நிறமாக இருப்பதுமான நீர்கள் தூய்மையானவை.
நித்யம் சுத்த: காருஹஸ்த: பண்யம்யச்ச ப்ரஸாரிதம் |
ப்ரஹ்மசாரிகதம் பைக்ஷம் நித்யம் மேத்யமிதி ஸ்திதி: |-129
தேவ பூஜைக்காக மாலை தொடுப்பவனிடமுள்ள பொருட்களும், அன்னத்தைத் தவிர மற்றபடி கடையில் விற்கும் பொருட்களும், பிரம்மச்சாரி கையிலிருக்கும் பிக்ஷான்னமும்
எப்போதும் சுத்தமானவை.
நித்யமாஸ்யம் சி ஸ்த்ரீணாம் ஷகுநி: பலபாதநே |
ப்ரஸ்ரவே ச சிர்வத்ஸ்: ஷ்வா ம்ருகக்ரஹணேஷுசி 130
எப்போதும் பெண்ணின் முகம் பரிசுத்தமானது. காகங்கள்போன்றவை மூக்கினால் கொத்தித் தள்ளிய பழங்களும் சுத்தமானவை. பாலருந்தும் கன்றின் வாய் சுத்தம்.
ஷ்வபிர்வா தஸ்ய யந்மாம்ஸம் சி தந்மநுரப்ரவீத்|
க்ரவ்யாத்பிஷ்ச ஹதஸ்யாந்யைஷ் சண்டாலத்யைஷ்ச தஸ்யுபி: | 131
எனவே வேட்டை நாயால் கொல்லப்பட்ட மிருகமாமிசம்சுத்தமானது. மாமிசத்தை உண்ணும் புலி முதலான மிருகங்களால்கொல்லப்பட்ட மிருக மாமிசம் சுத்தமானது. மிருகத்தைக் கொன்று ஜீவனம் நடத்தும் வேடுவர்களால் கொல்லப்பட்ட மிருகங்களின் மாமிசம் சுத்தமானது.
ஊர்த்வம் நாபேர்யாநி காநி தாநிமேத்யாநி ஸர்வ : 11
யாந்யதஸ்தாந்ய மேத்யாநி தேஹாச்சைவ மலாஷ்ச்யுதா: || 132
தொப்புளுக்கு மேலுள்ள உறுப்புகள் சுத்தமானவை.தொப்புளுக்குக் கீழுள்ள உறுப்புகள் சுத்தமற்றவை. இந்திரியதுவாரங்களிலிருந்து வெளியேறும் அழுக்குகள் அசுத்தமானவை..
மகா விப்ருஷச்சாயா கௌரஷ்வஸ்சூர்யரஷ்மய: 1
ரஜோ பூர்வாயுரக்நிஷ்ச ஸர்வே மேத்யா விநிர்திஷேத் ||-133
அழுக்கில் அமர்பவையாக இருந்தாலும் ஈக்கள் மேல அமர்ந்தால் குளிக்க வேண்டும் என்பதில்லை. பசு, குதிரை, சூரிய கிரணங்கள், தூசி, பூமி, காற்று, அக்னி இவைகளைத் தொட்டால் எல்லாவகையான அசுத்திகளும் நீங்கி பரிசுத்தம் ஏற்படும்.
விண்மூத்ரோத்ஸர்க த்யர்தம் மருத்வார்யாதேயமர்தவத் |
தைஹிகாநாம் மலாநாம் ச சுத்திஷு த்வாதஷஸ்வபி || 134
மல,மூத்திரங்கள் சேரும் இடத்தை மண்ணாலும் நீராலும் சுத்தப்படுத்த வேண்டும். மேலும் உடலிலிருந்து வெளிப்படும் பன்னிரண்டு மலங்களையும் அவற்றின் வாடை போகுமளவும்
மண்ணாலும் தண்ணீராலும் சுத்தம் செய்ய வேண்டும்.
வஸா க்ர மஸ்ருக்மஜ்ஜாமூத்ர விட்கர்ண விண்ணகா: |
ந்ருணாம் ஷ்ளேஷ்மா ஷு தூஷிகா ஸ்வேதோ த்வாதஷைதே மலா: | 135
வியர்வை, வீரியம், ரத்தம், கொழுப்பு, மூத்திரம்,மலம், காதிலுள்ள அழுக்கு, நகங்களிலுள்ள அழுக்கு, கபம், கண்ணீர், கண்களில் தோன்றும் அழுக்கு, உடலிலிருந்து வெளிப்படும்
கெட்டநீர் முதலான பன்னிரண்டும் மனிதனுடைய உடல் மலங்கள்.
ஏகா லிங்கே குதே திஸ்ரஸ்ததைகத்ரகரே தஷ |
உபயோஸ்ஸப்த தாதவ்யா ம்ருதம் த்திமபீப்ஸதா 136
மல ஜலம் கழித்த பின்னர் மண்ணாலும் நீராலும் லிங்கத்தை ஒரு முறையும், பாயு ஸ்தானத்தை மூன்று முறையும். இடது கையை பத்து முறையும். பிறகு இரண்டு கைகளையும் ஏழு முறையும் தேய்த்துக் கழுவ வேண்டும்.
ஏதத்சௌசம் க்ருஹஸ்தாநாம் த்விகுணம் ப்ரம்ஹசாரிணாம் |
த்ரிகுணம் ஸ்யாத்வநஸ்தாநாம் யதீநாம் து சதுர்குணம் || 137
இந்த சுத்திமுறைகள் கிருஹஸ்தனுக்குச் சொல்லப்பட்டவை. பிரம்மச்சாரிகள் இதையே இரண்டு மடங்காகவும், வானபிரஸ்தர்கள் மூன்று மடங்காகவும், சந்யாசிகள் நான்கு மடங்காகவும் செய்ய வேண்டும்.
க்ருத்வா மூத்ரம் புரீஷம்வா காந்யாசாந்த உபஸ்ப்ருஷேத் |
வேதமத்யேஷ்யமாணஷ்ச அந்நமஷ்நம் ச ஸர்வதா|| 138
மலஜலங்களைக் கழித்த பிறகு முன்னர் கூறியபடி சுத்தி செய்த பிறகு, வேதாத்யயனம் செய்யவோ, சாப்பிடவோபோகும்போது மும்முறை ஆசமனம் செய்து இந்திரியங்களை நீரால் தொட வேண்டும்.
த்ரிராசாமேத : பூர்வம் த்வி: ப்ரம்ருஜயாத்ததோ முகம் |
ஷாரீரம் ஷௌசமிச்சந் ஹி ஸ்த்ரீசூத்ரஸ்து ஸக்ருத்ஸக்ருத் || 139
தேக சுத்தியைக் கோரும் இருபிறப்பாளர்கள் மும்முறை ஆசமனம் செய்ய வேண்டும். பிறகு வாயை இருமுறை நீரால் துடைக்க வேண்டும். பெண்களும் சூத்திரர்களும் ஒருமுறையே
ஆசமனம் செய்ய வேண்டும்.
சூத்ராநாம் மாஸிகம் கார்யம் வபநம் நியாயவர்திநாம்|
வைஷ்யவச் சௌசகல்பஷ்ச த்விஜோச்சிஷ்டம் ச போஜநம் [1 140
சாஸ்திரம் கூறியபடி இருபிறப்பாளருக்கு தொண்டு செய்யும் சூத்திரன் ஒவ்வொரு மாதமும் சவரம் செய்து கொள்ள வேண்டும். வைசியர்களுக்கு விதித்தபடி ஜனன மரண தீட்டுக்களைக் கடைப்பிடிக்க வேண்டும். இருபிறப்பாளர் சாப்பிட்டு மிகுந்ததைச் சாப்பிட வேண்டும்.
நோச்சிஷ்டம் குர்வதே முக்யா விப்ஷோ அங்கே பதந்தியா: 11
ந ஷ்மஷ்ரூணி கதாந்யாஸ்யம் ந தந்தாந்தர திதிதம்|| 141
வாயிலிருந்து உடலில் விழுந்த நீர், வாயில் சிக்கிய மீசை, பற்களுக்கிடையில் ஒட்டிக்கொண்ட உணவு முதலானவற்றுக்கு எச்சில் கிடையாது.
ஸ்ப்ருஷந்தி பிந்தவ: பாதௌ ய ஆசாமயத: பராந் |
பௌமிகைஸ்தே ஸமாஞேயா நதைரப்ரயதோ பவேத் || 142
பிறர் செய்யும் ஆசமனத் தண்ணீர்த் துளி மற்றவர்கள் கால்களில் பட்டாலும் அசுத்தம் கிடையாது. அந்த நீர்த் துளிகள் பூமிக்குள் உள்ளநீருக்குச் சமம்.
உச்சிஷ்டேநது ஸம்ஸ்ப்ருஷ்டோ த்ரவ்யஹஸ்த் கதஞ்சந |
அநிதாயைவ தத்த்ரவ்யமாசாந்தஷ் ஷூசிதாமியாத் || 143
உடலில் எந்த பாகத்திலாவது ஒரு பொருளை வைத்துக் கொண்டிருக்கும் போது கையில் எச்சில் பட்டால், அந்தப் பொருளை கீழே வைக்காமல், அந்தக் கையை மணிக்கட்டுவரையில்
அலம்பிக் கொண்டு ஆசமனம் செய்தால் தானும் பரிசுத்தனாவான். அந்தப் பொருளும் பரிசுத்தமடையும்.
வாந்தோ நிரிக்த: ஸ்நாத்வாது க்ருதப்ராஷநமாசரேத் |
ஆசாமேவதேவ புக்த்வாந்நம் ஸ்நாநம் மைதுநிந: ஸ்ம்ருதம் || 144
வாந்தியெடுத்தால், நீராடி நெய்யை ஆசமனம் செய்ய வேண்டும் .சாப்பிட்ட பிறகு வாந்தியெடுத்தால், ஆசமனம் மட்டும் செய்ய வேண்டும். பெண்ணுடன் கலவி செய்தால் நீராட வேண்டும்.
சுப்த்வா த்வா ச புக்த்வா ச நிஷ்பீவ்யோவாந்ருதாநிச | பீத்வா ஆபோ அத்யேஷ்யமாணஷ்ச ஆசாமேத்ப்ரயதோ அபிஸந் ||145
உறங்கி எழுந்த பிறகும், தும்மிய பிறகும், சாப்பிட்ட பிறகும், காறி உமிழ்ந்த பிறகும், பொய்யுரைத்த பிறகும், தண்ணீர் பருகிய பிறகும். வேத மோதப் போகும் போதும்தான் தூய்மையுடன் இருந்தாலும்கூட ஆசமனம் செய்ய வேண்டும்.
ஏஷ ஷௌச விதி: க்ருத்ஸ் நோ த்ரவ்ய த்தி: ததைவ ச | உக்தோ வஸ்ஸர்வ வர்ணாநாம் ஸ்த்ரீணாம் தர்மாந்நிபோதத || 146
சகல வர்ணத்தாருக்கும், தீட்டு முறை,தானம் அனைத்தும் கூறப்பட்டன.-இனி ஸ்த்ரீ தர்மங்களைக் கூறுகிறேன், கேளுங்கள்.
பாலயா வா யுவத்யா வா வ்ருத்தயா வாபி யோஷிதா ||
ந ஸ்வாதந்த்ரேண கர்த்தவ்யம் கிஞ்சித் கார்யம் க்ருஹேஷ்வபி | 147
சிறுமியாயினும், யுவதியாயினும், முதியவளாயினும் எந்தப் பருவத்திலும் பெண்ணானவள் தன் இல்லத்திலும்கூட சுதந்திரமாக எந்தச் செயலையும் செய்யக் கூடாது.
பால்யே பிதுர்வஷே திஷ்டேத் பாணிக்ராஹஸ்யௌவநே ||
புத்ராணாம் பர்தரி ப்ரேதே ந பஜேத் ஸ்த்ரீஸ்வதந்த்ரதாம்||| 148
பெண், பாலபருவத்தில் தந்தையின் வசத்தில் இருக்க வேண்டும்..யுவதி, கணவனுக்கு வசப்பட்டு இருக்க வேண்டும். கணவன் இறந்து போன பிறகு புத்திரர்களின் வசத்தில் இருக்க வேண்டுமேயல்லாமல் சுதந்திரமாக இருக்கக் கூடாது.
பித்ரா பர்த்ரா சுதைர்வாபி நேச்சே த்விரஹமாத்மந: 1
ஏஷாம் ஹி விரஹேண ஸ்த்ரீ கர்ஹ்யே குர்யாதுபே குலே || 149
ஒரு பெண், தந்தை, கணவன், புத்திரன் இவர்களை விட்டு தனித்திருக்க விரும்பக் கூடாது.
அப்படி இருந்தால், பிறந்த வம்சத்துக்கும் புகுந்த வம்சத்துக்கும் நிந்தை ஏற்படும்.
ஸதா ப்ரஹ்ருஷ்டயா பாவ்யம் க்ருஹகார்யே தக்ஷயா |
சுஸம்ஸ்க்ருதோபஸ்கரயா வ்யயே சாமுக்தஹஸ்தயா || 150
எப்போதும் சிரித்த முகத்தோடு வீட்டு வேலைகளில் திறமை படைத்தவளாக, பொருட்களை நல்லபடி பேணிப்பாதுகாப்பவளாக, வீண்விரயம் செய்யாதவளாக இருக்க வேண்டும்.
யஸ்மை தத்யாத்பிதா த்வேநாம் ப்ராதா வா அநுமதே பிது: |
தம் சுஷ்ரூஷேத ஜீவந்தம் ஸம்ஸ்திதம் ச ந லங்கயேத்|| 151
தந்தை ஒரு பெண்ணை யாருக்கு மணம் புரிவிக்கிறானோ அல்லது சகோதரன் அப்பெண்ணை யாருக்கு மணம் புரிவிக்கிறானோ, அவனுக்கு வாழ்நாள் முழுவதும் பணிவிடை செய்ய வேண்டும்.-அவன் இறந்தபிறகு அவனுக்கு சிராத்தம் முதலான கிரியைகளை நடத்திவர வேண்டும்.
மங்களார்த்தம் ஸ்வஸ்த்யயநம் யக்ஞஷ்சாஸாம் ப்ரஜாபதே: | ப்ரயுஜ்யதே விவாஹேஷு ப்ரதாநம் ஸ்யாம்யகாரணம் ||152
திருமணத்தின்போது செய்யப்படும் சாந்திக்காகக் கூறப்படும் மந்திரங்கள், ஹோமங்கள் மங்களத்துக்காகச் செய்யப்படுபவை. முதலில் வாக்குதத்தம் செய்த உடனேயே அப்பெண்
அம்மணமகனுக்கு உரியவளாகி விடுகிறாள்.
அந்நதா வந்து காலே ச மந்த்ர ஸம்ஸ்கார க்ருத்பதி: 1
சுகஸ்ய நித்யம் தாதேஹ பரலோகே ச யோஷித: || 153
மணம் புரிந்து கொண்ட கணவன் ருதுகாலத்திலும், மற்ற தருணங்களிலும் இகலோக சுகத்தை அளிப்பவன். அவனுக்கு அனுசரணையாக நடந்துகொள்வதால் பரலோக சுகமும் கிட்டும்.
விஷீல: காமவ்ருத்தோ வாகுணைர்வா பரிவர்ஜித: |
உபசர்ய: ஸ்த்ரியா ஸாத்வ்யா ஸததம் தேவவத்பதி: ||| 154
சீலமற்றவனாயினும், பரத்தையர் சேர்க்கை கொண்டவ னாயினும், வித்யையும் நற்குணங்களும் அற்றவனாயினும் பதி விரதையான பெண்கணவனை எப்போதும் தெய்வமாகப் பூஜிக்க வேண்டும்.
நாஸ்தி ஸ்த்ரீணாம் ப்ருதக்யக்ஞோ ந வ்ரதம் நாப்யுபோஷிதம் பதிம் சுஷ்ரூஷதே யேநதேந ஸ்வர்கே மஹீயதே||–155
பெண்ணுக்கு யக்ஞம் செய்ய வேண்டியதில்லை. கணவன் அனுமதியின்றி விரதமும் இல்லை; உபவாசமும் இல்லை. ஆயின் கணவனுக்குப் பணிவிடை புரிவதன் மூலமாகவே மனைவி ஸ்வர்க்க லோகத்தை அடைந்து, அங்கு கௌரவிக்கப்படுகிறாள்.
பாணிக்ராஹஸ்ய ஸாத்வீ ஸ்த்வீ ஸ்த்ரீ ஜீவதோ வாம்ருதஸ்ய வா பதிலோகம பீப்ஸந்தி நாசரேத் கிஞ்சித் அப்ரியம்|-156
கரம் பிடித்த கணவன் இருக்கும் போதும், இறந்தபிறகும் அவனுக்கு எதிரான எந்தக் காரியத்தையும் செய்யக் கூடாது.
காமம்து பயேத்தேஹம் புஷ்பமூலபலை: சுபை: |
நது நாமாபி க்ருஹ்ணீயாத் பத்யெள ப்ரேதே பரஸ்யது 157
கணவன் இறந்தபிறகு, பதிவிரதையான பெண், காய்கனி, கிழங்குகளைச் சாப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டுமேயல்லாமல், மற்றொருவன் பெயரைக்கூட உச்சரிக்கக்கூடாது.
ஆஸீதாமரணாத் க்ஷாந்தா நியதா ப்ரஹ்மசாரிணீ
யோ தர்ம ஏகபத்நீநாம் காந்க்ஷந்தி தமநுத்தமம் || 158
பதிவிரதையான பெண், கணவன் இறந்த பிறகு பொறுமையோடு நியமங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்.-கணவனுக்குச் செய்ய வேண்டிய சிராத்தம் முதலானவைகளைச்
செய்ய வேண்டும். நாவிற்கு சுவை தேடாதவளாக, சம்போகத்தை வேண்டாதவளாக, உயிரோடு இருக்கும் வரை பிரம்மச்சரியத் தோடிருக்க வேண்டும்.
அநேகாநி ஸஹஸ்ராணி குமாரப்ரஹ்ம சாரிணாம் |
திவம் கதாநி விப்ராணாமக்ருத்வா குலஸந்ததிம் || 159
சிறுவயதிலேயே பிரம்மச்சாரிகளாக விவாஹம் செய்து கொள்ளாமலே இருந்த ஆயிரமாயிரம் பேர்கள் புண்ணிய லோகங்களை அடைந்துள்ளனர். எனவே தனக்கு சந்ததி இல்லையே என்று வருத்தப்படத் தேவையில்லை.
மருதே பர்தரி ஸாத்வீ ஸ்த்ரீ ப்ரஹ்மசர்யே வ்யவஸ்திதா |
ஸ்வர்கம் கச்சத்யபுத்ராபி யதா தே ப்ரஹ்மசாரிண: || 160
எனவே, கணவன் இறந்த பிறகு மனைவி பிள்ளைகள் அற்றவளாக இருப்பினும், வேறொரு ஆணை நாடாமல், கற்புள்ளவளாக இருந்தால், நித்ய பிரம்மச்சாரிகளைப் போல
ஸ்வர்க்கலோகத்தை அடைவாள்.
அபத்ய லோபாத்யாது ஸ்த்ரீ பாதாரமதிவர்ததே |
ஸேஹ நிந்தா மவாப்நோதி பதிலோகாச்ச ஹீயதே || 161
தான் ஸ்வர்க்கலோகம் போக பிள்ளைகள் வேண்டும் என்னும் எண்ணத்தோடு வேறொரு புருஷனோடு கூடும் பெண், அவ்வாறு பெற்ற மகனால் ஸ்வர்க்கலோகத்தை அடைய மாட்டாள். மேலும் இவ்வுலகில் நிந்தனைகளுக்கு ஆளாவாள்.
நாந்யோத்பந்நா ப்ரஜாஸ்தீஹ நசாப்யந்ய பரிக்ரஹே|1
நத்விதீயஷ்ச ஸாத்வீநாம் க்வசித்பர்தோ பதிஷ்யதே||-162
கணவனில்லாமல் வேறொருவன் மூலமாகப் பெற்ற மகன், அப்பெண்ணுக்கு, சாஸ்திரம் ஏற்றுக் கொண்ட மகனாகமாட்டான். அம்மகன் பிறக்கக் காரணமானவனும் அவனுக்குத் தகப்பனாக மாட்டான். பதிவிரதையான பெண்ணுக்கு எவ்விடத்திலும் இரண்டாவது மணம் விதிக்கப்படவில்லை.
பதிம் ஹித்வாபக்ருஷ்டம் ஸ்வமுத்க்ருஷ்டம் யா நிஷேவதே |
நிந்த்யைவஸா பவேத்லோகே பரபூர்வேதி சோச்யதே|| 163
கணவன்தாழ்ந்தவன் என்று அவனை விட்டுவிட்டு உயர்ந்தவனான வேறொருவனைக் கணவனாக அடைகிறவள் நிந்தைக்குரியவள். இதற்கு முன் இன்னொருவனுடன் வாழ்ந்தவள் என்று உலகத்தார் அவளைத் தூற்றுவர்.
வ்யபிசாராத்து பர்து: ஸ்த்ரீ லோகே ப்ராப்நோதி நிந்த்யதாம்
ஸ்ருகாலயோநிம் ப்ராப்நோதி பாபரோகைஷ்ச பீட்யதே |-164
விபச்சாரியான பெண் இவ்வுலகில் நிந்தனைகளுக்காளாகி, இறந்த பின் நரியாகப் பிறப்பாள்.-மேலும் குஷ்டம் போன்ற கொடிய நோய்களுக்கும் ஆளாவாள்.
பதிம் யாநாபிசரதி மநோ வாக்தேஹஸம்யதா |
ஸா பர்த்ரூலோக மாப்நோதி ஸத்பிஸ்ஸாத்வீதி சோச்யதே || 165
மனத்தாலும், வாக்காலும், உடலாலும் கற்பு நெறி பிறழாத பெண், கணவன் அடைந்த உத்தம லோகத்தை அடைகிறாள். இவள் கற்பரசி என்று சாதுக்களால் போற்றப்படுகிறாள்.
அநேந நாரீவ்ருத்தேந மநோவாக் தேஹஸம்யதா |
இஹாக்ர்யாம் கீர்திமாப்நோதி பதிலோகம் பரத்ரச || 166
இவ்வாறு பெண்ணுக்குரிய தர்மத்தோடு நடந்து கொண்டு மனம், வாக்கு, உடலால் நெறியோடு வாழும் பெண், இவ்வுலகில் கீர்த்தியோடு வாழ்ந்து இறந்த பிறகு கணவன் அடைந்த உலகத்தை அடைகிறாள்.
ஏவம் வ்ருத்தாம் ஸவர்ணாம் ஸ்த்ரீம் த்விஜாதி: பூர்வமாரிணீம் | தாஹயேத் அக்நி ஹோத்ரேண யக்ஞபாத்ரைஷ்ச தர்மவித் |-167
கற்புக்கரசியான தன் இனத்தவளான மனைவி, தனக்கு முன் இறந்தால், சாஸ்திர முறைப்படி சம்ஸ்காரம் செய்து செய்ய வேண்டிய கிரியைகளை யெல்லாம் முறைப்படி செய்துவர வேண்டும். தான் தினம் வளர்த்த அக்னியோடும் யக்ஞ பாத்திரங்களோடும் அவளைத் தகனம் செய்ய வேண்டும்.
பார்யாயை பூர்வமாரிண்யை தத்வா அக்நீநந்த்யகர்மணி 11 புநர்தாரக்ரியாம் குர்யாத்புநராதாமேவ ச || 168
மனைவிக்கு அந்திமக் கிரியைகளைச் செய்து, சாஸ்திர முறைப்படி அனைத்தையும் முடித்த பின்னர், வேறொரு பெண்ணை மணந்து மீண்டும் வைதிக அக்னியை ஏற்படுத்திக் கொள்ள
வேண்டும்.
அநேந விதிநா நித்யம் பஞ்ச யக்ஞாந்நஹாபயேத் |
த்விதீய மாயுஷோ பாகம் க்ருததாரோ க்ருஹே வஸேத் 169
இவ்வாறாக இதுவரை கூறியவாறு தினமும் பஞ்சமகா யக்ஞங்களை விடாது செய்தபடி, மனைவியுடன் கூடியவனாக வாழ்வின் இரண்டாம் பாகமான கிருஹஸ்தாஸ்ரமத்தை நடத்தவேண்டியது.
(ஐந்தாம் அத்தியாயம் முற்றிற்று.)
————
அத்தியாயம் – 6
ஏவம் க்ருஹாஷ்ரமே ஸ்தித்வா விதிவத் ஸ்நாதகோ த்விஜ: |
வநே வசேத்து நியதோ யதாவத் விஜிதேந்த்ரிய: |-1-
வித்யாவிரதஸ்நாதகனான இருபிறப்பாளன், இவ்வாறு கிரகஸ்தாஸ்ரமத்தை நடத்தி, சாஸ்திரம் நியமங்களின் படியாக வான பிரஸ்தனாகி புலன்களை அடக்கியவனாக காலம் கடத்த வேண்டும்.
க்ரஹஸ்தஸ்து யதா பஷ்யேத்வலீபலி தமாத்மந: 1
அபத்யஸ்யைவ சாபத்யம் ததாரண்யம் ஸமாஷ்ரயேத் 2
கிருஹஸ்தன் எப்போது தன் முகத்தில் சுருக்கங்களைப்பார்க்கிறானோ, தலையில் நரையைப் பார்க்கிறானோ, எப்போது மகனுடைய மகனைப் பார்க்கிறானோ, அப்போது கிருஹஸ்தாஸ்ரமத்தை விட்டு வானபிரஸ்த ஆஸ்ரமத்தை ஏற்று வனத்துக்குப் போக
வேண்டும்.
ஸந்த்யஜ்ய க்ராம்யமாஹாரம் ஸர்வம் சைவ பரிச்சதம் | புத்ரேஷு பார்யாம் நிக்ஷிப்ய வநம் கச்சேத்ஸஹைவ வா 3
ஊருக்குள் கிடைக்கும் தானியங்கள், காய்கறிகள் முதலான உணவுகளை விட்டு விட்டு, வனத்தில் கிடைக்கும் கிழங்குகளையும்கனிகளையும் உணவாக ஏற்க வேண்டும்.
சொந்த பந்தங்களை விட்டு, மனைவியை மகனின் பொறுப்பில்விட்டோ அல்லது அவளுக்கு விருப்பமிருந்தால் தன்னுடன்கூடஅழைத்துக் கொண்டோ போகலாம்.
அக்நிஹோத்ரம் ஸமாதாய க்ருஹ்யம் சாக்நி பரிச்சதம் |
க்ராமாதரண்யம் நிஸ்ஸ்ருத்ய நிவஸேந்நியதேந்த்ரிய: || 4
வீட்டிலிருக்கும் அக்னியையும், அக்னி ஹோத்திரத்துக்குத் தேவையான உபகரணங்களையும் எடுத்துக் கொண்டு ஊரை விட்டு வெளியேறி ஆரண்யத்தை அடைந்து புலன்களை வென்றவனாக வாழ வேண்டும்.
முந்யந்நைர் விவிதைர் மேத்யைஷ்ஷாக மூலபலேந வா |
ஏதாநேவ மஹாயக்ஞாந்நிர்வபேத் விதிபூர்வகம் || 5
முனிவர்களின் ஆஹார நியமங்களோடிருக்க வேண்டும். ஆரண்யத்தில் கிட்டும் கனிகள், காய்கள், கிழங்குகளால் பஞ்சமகா யக்ஞங்களை விதிமுறைப்படி செய்ய வேண்டும்.
வஸீத சர்ம சீரம் வா ஸாயம் ஸ்நாயாத்ப்ரகே ததா
ஜடாஷ்ச பிப்ருயாந்நித்யம் ஷ்மஷ்ருலோமநகாநிச || 6
மான் தோல் முதலான தோல்களையாவது, மரவுரியாவது அணிய வேண்டும். காலையும் மாலையும் நீராட வேண்டும். ஜடை வளர்க்க வேண்டும். தாடி, மீசைகளை வளர்க்க வேண்டும்.
யத் பக்ஷ்யம் ஸ்யாத் ததோ தத்யாத் பலிம் பிக்ஷாம் ஷக்தித |
அம்மூலபலபிஷாபிரர் பயேதாஷ்ரமாக தாந் |-7
தான் எதை உண்கிறானோ அதைக் கொண்டே நித்ய சிராத்தம்,பலி, வைஸ்வதேவம் முதலானவற்றைச் செய்ய வேண்டும். தன் ஆஸ்ரமத்துக்கு வந்தவர்களுக்கு தண்ணீர், கிழங்குகள், பழங்கள் கொடுத்து உபசரிக்க வேண்டும்.
ஸ்வாத்யாயே நித்ய யுக்தஸ் ஸ்யாத்தாந்தோ மைத்ரஸ்ஸமாஹித: |
தாதா நித்யமநாதாதா ஸர்வ பூதா நுகம்பக: |-8
வேதமோதுவதில் எப்போதும் ஊக்கமுடையவனாகவும்,வெயில், மழை, குளிர் முதலானவற்றைப் பொறுத்துக்கொள்பவனாகவும், பரோபகாரியாகவும், மனத்தைத் தன் வசப்படுத்திக்கொள்பவனாகவும், பிறருக்கு ஈபவனாகவும், பிறரிடமிருந்து தானம் ஏற்காதவனாகவும், எல்லா உயிர்களிடத்தும் கருணையுள்ளவனாகவும் இருக்க வேண்டும்.
வைதாநிகம் ச ஜூஹுயாதக்நிஹோத்ரம் யதாவிதி |
தர்ஷமஸ்கந்தயந் பர்வ பௌர்ணமாஸம் ச யோகத: 9
விதான அக்னி ஹோமங்களைச் செய்ய வேண்டும்.கார்பத்ய குண்டத்திலிருக்கும் அக்னிகளை ஆஹவநீய தட்சிணாக்னிகுண்டங்களில் சேர்த்து விடுவது ‘விதான’ மெனப்படும். இத்தகையவைதாநிகாக்னியில் ஷ்ரௌத ஸ்மார்த்த தர்ஷ பௌர்ணமிகளில்
சாஸ்திரப்படி ஹோமம் செய்ய வேண்டும்.
றுக்ஷேஸ்ட்யாக்ரயணம் சைவ சாதுர்மாஸ்யாநி சாஹரேத்
துராயணம் ச க்ரமஷோ தாக்ஷஸ் யாயந மேவச || 10நட்சத்திர ஹோமம், புது தானியங்களின் ஹோமமானஆக்ரயணேஷ்டி, சாதுர்மாதங்களிலும், உத்தராயன தட்சிணாயனகாலங்களில் செய்யும் ஹோமங்களையும் கிரமமாகச் செய்யவேண்டும்.
வாஸந்த ஷாரதைர் மேத்யைர் முந்யந்நை: ஸ்வய மாஹ்ருதை: 1
புரோடாஷாம் சரூந்சைவ விதிவந்நிர்வபேத்ப்ருதக் 11இளவேனில் காலத்திலும் கார் காலத்திலும் காட்டில் விளைந்தநெல்மணிகளைப் பொறுக்கி புரோடாசம் தயாரிக்க வேண்டும்.சருவையும் சாஸ்திர முறைப்படி தயாரிக்க வேண்டும்.
தேவதாப்யஸ்து தத்துத்வா வந்யம் மேத்யதரம் ஹவி: |
சேஷமாத்மநி யுஞ்ஜீத லவணம் ச ஸ்வயம்க்ருதம்|| 12
வனத்தில் கிடைக்கும் தானியங்களால் செய்யப்பட்டவையும் யாகங்களுக்கு உகந்தவையுமான புரோடாசம், சரு முதலான ஹவிஸ்களை தேவர்களுக்களித்து மிகுதியைத் தான் உண்ண வேண்டும்.-உவர் மண்ணிலிருந்து உப்பைக் காய்ச்சியெடுத்து உபயோகப் படுத்திக் கொள்ளலாம்.
ஸ்தலஜௌதக ஷாகாநி புஷ்பமூல பலாநிச |
மேத்ய வருக்ஷோத் பவாந்யத் யாத்ஸ்நேஹாம்ஷ்ச பல ஸம்பவாந் || 13
நிலம், நீர் இவைகளில் விளைந்த காய்கள், மலர்கள், கிழங்குகள், பழங்கள், ஆரண்யத்திலிருக்கும் யக்ஞ சம்பந்தமான மரங்களிலிருந்து கிடைக்கும் பழங்கள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம். சில செடிகளின் விதைகளிலிருந்து எடுத்த எண்ணெய்களை உபயோகித்துக் கொள்ள வேண்டும்.
வர்ஜயேந் மது மாம்ஸம் ச பௌமாநி கவகாநி ச |
பூஸ்த்ருணம் ஷிக்ருகம் சைவ ஷ்லேஷ்மாதக பலாநி ச 14
தேனீ சேகரித்த தேன்,மாமிசம், மண்ணிலும் மரத்திலும் முளைத்த காளான், முருங்கைக் கீரை, முருங்கைக்காய் முதலானவைகளைச் சாப்பிடக் கூடாது.
த்யஜே தாஷ்வயுஜே மாஸி முந்யந்நம் பூர்வஸஞ்சிதம் |
ஜீர்ணாநி சைவ வாஸாம்ஸி ஷாகமூல பலாநி ச 1 15
ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதத்தில் சேர்த்து வைத்திருக்கும் முனிவர்கள் சாப்பிடத்தக்கதான தானியங்களையும், கிழிந்த ஆடைகளையும், பழையதான காய்கள், கிழங்குகள், பழங்கள் அனைத்தையும் நீக்க வேண்டும்.
ந பாலக்ருஷ்டமஷ் யாதுத் ஸ்ருஷ்டமபி கேநசித் |
ந க்ராமஜாதாந்யார்தோ அபிமூலாநி ச பலாநி ச || 16
உழுத நிலத்தில் தோன்றிய தானியங்களை, அவை உடைமையாளனால் வேண்டாமெனத் தள்ளப்பட்டதாயினும்கூட அவற்றை எடுத்துக் கொள்ளக் கூடாது . அவ்வாறன்றி கிராமத்தில் விளைந்த கிழங்குகள், பழங்களையும்கூட, நோயுற்ற காலத்தும்கூட எடுக்கக் கூடாது.
அக்நி பக்வாஷநோ வா ஸ்யாத்காலபக்வ புகேவ வா அஷ்மகுட்டோ பவேத்வாபி தந்தோலூகலிகோ அபி வா 17
நெருப்பில் சமைத்த உணவையும், தானாகப் பழுத்த பழங்களையும், உரல் முதலானவைகளை உபயோகிக்காமல் கல்லின்மீது நுணுக்கியவைகளையும் அல்லது பற்களையே உரலாக பயன்படுத்திப் பெறப்படும் உணவுகளையே சாப்பிட வேண்டும். பற்களையே உரலாகக் கொள்வது என்பது மென்று தின்பதைக் குறிக்கும்.
ஸத்ய: ப்ரக்ஷாளகோ வா ஸ்யாமாஸ ஸஞ்சயிகோ அபி வா |
ஷண் மாஸ நிசயோ வா ஸ்யாத்ஸமாநிசய ஏவ வா|| 18
தனக்கு வேண்டிய தானியங்களை அன்றன்றோ,மாதா மாதமோ, ஆறு மாதத்துக் கொரு முறையோ, வருடத்துக் கொரு முறையோ சேகரித்து வைத்துக் கொள்ளலாம்.
நக்தம் சாந்நம் ஸமஷ்நீயாத்திவா வா அஹ்ருத்ய ஷக்தித: |
சதுர்த்தகாலிகோ வா ஸ்யாத் ஸ்யாத்வாப்யஷ்டம காலிக: ]-19
தேவைக்குத் தக்க உணவைக் கொணர்ந்து மாலையிலோ அல்லது பகலில் நான்காம் காலத்திலோ அல்லது ஒரு நாள் உபவாசமிருந்து மறுநாள் மாலையிலோ, மூன்று நாட்கள்
உபவாசமிருந்து நான்காம் நாள் இரவோ சாப்பிட வேண்டும்.
சாந்த்ராயண விதாநைர்வா க்ளே க்ருஷ்ணோ ச வர்தயேத் | பக்ஷாந்தயோர்வாப்யஷ் யாத்யவாகூம் வதிதாம் ஸக்ருத் || 20
சாந்திராயன விரதப்படி வளர்பிறை, தேய்பிறைகளில்ஒவ்வொரு கவளமாகக் குறைக்க வேண்டும்.-சுக்ல பட்ச, கிருஷ்ண பட்ச முடிவுகளில் காலையிலோ மாலையிலோ இரு வேளையுமோ காய்ச்சிய கஞ்சியைக் குடிக்கவேண்டும்.
புஷ்பமூல பலை வாபி கேவலைர்வர்தயேத்ஸதா |
காலபக்வைஸ் ஸ்வயம் ஷீர்ணைர்வா காநஸமதேஸ்தித: Π 21
அல்லது தாமாய் கீழே விழுந்த பழங்களையும், பூக்களையும்,தாமாய் காய்ந்து போன கிழங்குகளையும் உண்டு காலம் கடத்தவேண்டும். வைகானச தர்மத்தில் கூறியுள்ளதைக் கடைப்பிடித்தொழுக வேண்டும்.
பூமௌ விபரிவர்தேத திஷ்டேத்வா ப்ரபதைர்திநம் |
ஸ்தாநாஸநாப்யாம் விஹரேத் ஸவநே சூபயந்நப: |-22
காலையும், மாலையும் நீராட வேண்டும். உணவு மற்றும்ஸ்நான வேளைகளைத் தவிர்த்து மற்ற தருணங்களில் தரை மீதுபடுத்துப் புரளலாம். அல்லது ஏதேனும் ஆசனத்தில் அமர்ந்திருக்கலாம். முழங்கால்களின் மீது சிறிது நேரம் நிற்கலாம்.
க்ரீஷ்மே பஞ்சதபாஸ்து ஸ்யாத்வர்ஷா ஸ்வப்ராவ காஷிக: |
ஆர்த்ர வாசாஸ்து ஹேமந்தே க்ரமஷோ வர்தயம்ஸ்த : || 23
தன் தவத்தை வளர்த்துக் கொள்வதற்காக கோடையில்பஞ்சாக்நி மத்தியிலும், மழைக் காலத்தில் மழையில் நனைந்தபடியும்,பனிக் காலத்தில் ஈர உடைகளோடும் தவம் செய்ய வேண்டும்.
உபஸ்ப்ருஷம் ஸ்த்ரிஷவனம் பித்ரூந் தேவாம்ஷ்ச தர்பயேத் 1
தபஷ்சரந்ஷ் சோக்ரதரம் ஷோஷயேத் தேஹமாத்மந: 11 24
மூன்று பொழுதுகளிலும் நீராடி, தேவ ரிஷி பித்ரு கிரியைகளைச்செய்து கொண்டு, பட்ச உபவாசமோ, மாத உபவாசமோ இருந்தபடிகடுந்தவம் செய்து உடலை ஒடுக்க வேண்டும்.
அக்ம்ஷ்சாத்மநி வைதாநாந் ஸமாரோப்ய யதாவிதி
அநக்நிரநிகேதஸ் ஸ்யாத்முநிர் மூலபலாஷந: || 25
இவ்வாறு ஆறு மாதங்களான பிறகு வைகானச சாஸ்திரம் கூறியபடி அக்னி காரியங்களை முடித்து விட்டு, இனி அக்னி காரியங்கள் எதுவுமில்லை என்று இதுவரை அமைத்துக்
கொண்டிருந்த வீட்டைத் துறந்து, மௌன விரதம் ஏற்று, காய்கனி கிழங்குகளையே சாப்பிட்டபடி இருக்க வேண்டும். ஆங்காங்கே மரத்தடியில் தங்க வேண்டும்.
அப்ரயத்நஸ் சுகார்தேஷு ப்ரஹ்மசாரீ தராஷய: |
ஷரணேஷ்வமமஷ்சைவ வ்ருக்ஷமூல நிகேதந: || 26
சுகம் தரும் விஷயங்களில் ஈடுபடாதவனாக, பிரம்மச்சாரியாக, தரையில் படுத்தபடி, பற்றுதலற்றவனாக மரத்தடிகளில் வசித்து வர வேண்டும்.
தாபஸேத்வேவ விப்ரேஷு யாத்ரிகம் பைக்ஷமாஹரேத்
க்ருஹமேதி சாந்யேஷு த்விஜேஷ வநவாசிஷு|| 27
தபஸ்விகளாக இருக்கும் பிராம்மணர்களிடமிருந்து தன் ஜீவனத்துக்குத் தேவையான உணவை பிட்சையாக ஏற்க வேண்டும்.அத்தகையதோர் இல்லாதவிடத்து வனத்தில் வசிக்கும் மற்றகிருஹஸ்தர்களிடம் பிட்சைஏற்கலாம்.
க்ராமாஹ்ருத்ய வாஷ்ரீயாதஷ்டௌ க்ராஸாந் வநே வஸந் |
ப்ரதிக்ருஹ்ய புடேநைவ பாணிநா ஸகலேந வா|| 28
அத்தகையவர்களும் இல்லாதபோது கிராமத்திற்குச் சென்றுஎட்டு கவளங்களை மட்டும் கைகளிலோ, இலையிலோ, மரப்பாத்திரத்திலோ, தொன்னையிலோ பெற்றுக்கொண்டு வந்து உண்ண வேண்டும்.
ஏதாஷ்சாந்யாஷ்ச ஸேவேத தீக்ஷா விப்ரோ வநே வஸந்
விவிதாஷ்சௌபநி ஷதீராத் மஸம்ஸித்தயே ஷ்ருதி: || 29
வானபிரஸ்தாஸ்ரமத்தில் சொல்லப்பட்ட நியமங்களை கடைப் பிடித்தபடி, உபநிஷத் வாக்கியங்களால் பலமுறை துதித்தபடி, அவற்றின் பொருளை ஆராய்ந்தபடி,பரமாத்மாவை அடையும் வழியை எண்ணி காலங்கடத்த வேண்டும்.
ருஷிபிர் ப்ராஹ்மணஷ்சைவ க்ருஹஸ்தைரேவ சேவிதா: |
வித்யாதபோ விவருத்த்யர்த்தம் ஷரீரஸ்ய ச ஷுத்தயே|| 30
ரிஷிகளும், பிரம்ம பதத்தையடைந்த மற்றவர்களும், கிருஹஸ்தர்களும் உபநிஷத் வாக்கியங்களை மனனம் செய்துள்ளனர். எனவே வானபிரஸ்தர்கள் இவ்வாறு செய்ய வேண்டும்.
அபராஜிதாம் வாஸ்தாய வரஜேத்திஷமஜிஹ்மக:
ஆ நிபாதாச்சரீரஸ்ய யுக்தோ வார்யநிலாஷ : ||31
குணப்படுத்த முடியாதநோய் ஏற்பட்டபோது,ஈசான திசையை நோக்கி நடக்க வேண்டும். காற்றையும் நீரையும் புசித்தபடி உடல் கீழே விழும்வரை போக வேண்டும்.
ஆசாம் மஹர்ஷிசர்யாணாம் த்யக்த்வாந்யதமயா தநும் 1
வீதஷோகபயோ விப்ரோ ப்ரஹ்மலோகே மஹியதே ||| 32
இதுவரை கூறிய மகரிஷிக்குரிய முறைகளில் ஏதேனும் ஒரு வகையால் உடலை விட்ட பிராம்மணன், பய துக்கங்களற்று பிரம்ம லோகத்தை அடைகிறான்.
வநே து விஹ்ருத்வைவம் த்ருதீயம் பாகமாயுஷ: 1 சதுர்த்தமாயுஷோ பாகம் த்யக்த்வா ஸங்காந்பரிவ்ரஜேத் || 33
வனத்தில் வாழ்வின் மூன்றாவது பாகத்தைக் கடத்தி, மனைவி மக்கள் தொடர்பை விட்டு, நான்காவது பாகமான சந்யாசத்தை ஏற்க வேண்டும்.
ஆஷ்ரமாதாஷ்ரமம் கத்வாஹுதஹோமோ ஜிதேந்த்ரிய: |
பிக்ஷா பலி பரிஷ்ராந்த: ப்ரவரஜந் ப்ரேத்ய வர்ததே |-34
முதல் ஆஸ்ரமத்திலிருந்து அடுத்தது அடுத்தது என்று கடந்து வர வேண்டும். முதல் ஆஸ்ரமங்களில் சக்திக்குத் தக்கபடி அக்னி ஹோத்திரங்களைச் செய்ய வேண்டும்.
புலன்களை வென்றவனாக பிட்சை, பலி முதலியவற்றையும் விட்டு சந்யாசம் ஏற்பவன் பிரம்மபதத்தை அடைகிறான்.
ருணாநி த்ரீண்ய பாக்ருத்ய மநோ மோக்ஷே நிவேஷயேத் 1
அநபாக்ருத்ய மோக்ஷம் து ஸேவமாநோ வ்ரஜத்யத: || 35
ரிஷி கடன், தேவ கடன், பித்ரு கடன் என்னும் மூன்று கடன்களையும் தீர்க்காமல்மோட்சத்தை அடைய முயல்பவன் நரகத்தில் வீழ்வான்.
அதீத்ய விதிவத் வேதாந் புத்ராசோத்பாத்ய தர்மத: 1
இஷ்ட்வாச ஷக்திதோ யக்ஞைர்மநோ மோக்ஷே நிவேஷயேத் 36
சாஸ்திரம் கூறியபடி வேதாத்யயனம் செய்து, புத்திரர்களைப் பெற்று, யாக யக்ஞங்களைச் செய்த பிறகு சந்யாசத்தில் மனத்தைச் செலுத்த வேண்டும்.
அநதீத்ய த்விஜோ வேதாநநுத்பாத்ய ததா சுதாந் | அநிஷ்ட்வா சைவ யக்ஞைஷ்ச மோக்ஷிமிச்சந் வ்ரஜயத: || 37
வேதங்களை ஓதாமல், தன் மனைவியிடம் புத்திரனைப் பெறாமல்,யாகங்கள் செய்யாமல் மோக்ஷத்தை அடைய எண்ணும் இரு பிறப்பாளன் நரகத்தில் வீழ்வான்.
ப்ராஜாபத்யாம் நிரூப்யேஷ்டிம் ஸர்வவேதஸ தக்ஷிணாம் |
ஆத்மந்யக்நீந் ஸமாரோப்ய ப்ராஹ்மண: ப்ரவ்ரஜேத் க்ருஹாத் || 38
பிராஜாபத்ய வேள்வியை முடித்து சகலத்தையும் தக்ஷிணையாக வழங்கி, முன்னர் கூறியபடி மூன்று அக்னிகளையும் உணர்வால் தன்னுள் ஏற்று பிறகு பிராம்மணன் சந்யாசம் ஏற்க வேண்டும்.
யோ தத்வா ஸர்வ பூதேப்ய: ப்ரவ்ரஜத்யபயம் க்ருஹாத் |
தஸ்ய தேஜோமயோ லோகாபவந்தி ப்ரஹ்மவாதிந: 39
எல்லா உயிர்களுக்கும் அபயமளித்து, எவ்வுயிர்க்கும் தீங்கிழைக்காதவனாக வாழ்ந்து, கிருஹஸ்தாஸ்ரமத்தை விட்டு உபநிஷத் வாக்கியங்களில் சிரத்தையோடிருந்து, சந்யாசம் ஏற்றவனுக்கு இறந்த பிறகு ஒளி பொருந்திய உலகங்கள் கிடைக்கும்.
யஸ்மாதண்வபி பூதாநாம் விஜாந்நோத்பத்யதே பயம் |
தஸ்ய தேஹாத் விமுக்தஸ்ய பயம் நாஸ்தி குதஷ்சந || 40
எந்த இருபிறப்பாளனால் சகல உயிர்களுக்கும் சிறிதளவும் பயம் ஏற்படாதோ, அத்தகையவன் இறந்த பிறகு, அவனுக்கு எதனாலும் பயம் ஏற்படாது.
அகாராதபி நிஷ்க்ராந்த: பவித்ரோ பசிதோ முநி: |
ஸமுபோடேஷு காமே நிரபேக்ஷ: பரிவ்ரஜேத் |-41
வீட்டைத் துறந்து வந்தவன் தண்டம். கமண்டலம் முதலான பரிசுத்தப் பொருட்களோடு இருக்க வேண்டும். மற்றவர்கள் சுகமளிக்கும் பொருட்களைக் கொணர்ந்து கொடுத்தாலும்
அவற்றின் மீது நினைவைச் செலுத்தாமல் சந்யாச ஆஸ்ரமத்தை நடத்த வேண்டும்.
ஏகஏவ சரேந்நித்யம் ஸித்யர்த்தமஸஹாயவாந் |
ஸித்திமேகஸ்ய ஸம்பஷ்யந்ந ஜஹதிநஹீயதே||-42
துணையின்றி தனித்து சஞ்சரிக்க வேண்டும். தனித்திருப்ப வனுக்கேமோட்சம் கிட்டும் என்பதை அறிந்து, அனைத்தையும் விட்டு துக்கங்களை அறுத்து நிற்பவன் இறுதியில் மோட்சத்தை அடைவான்.
அநக்நிரநி கேதஸ் ஸ்யாத் க்ராம மந்நார்த்தமாஷ்ரயேத் |
உபேக்ஷகோ அஸம்குசுகோ முநிர்பாவ ஸமாஹித: [-43
தனக்கென்று சமைக்காமல், தனக்கென்று வீடு இல்லாமல், உடலை நோய்கள் தாக்கியபோதும் அதைப்பற்றிக் கவலைப்படாமல், உறுதியான மனத்தோடு பரமாத்மாவை தியானித்தபடி இரவும் பகலும் வனத்திலேயே இருக்க வேண்டும். உணவுக்காக மட்டும் கிராமத்துக்குச் செல்லலாம்.
கபாலம் வருக்ஷமூலாநி குசேலமஸஹாயதா |
ஸமதா சைவ ஸர்வஸ்மிந்நேதந் முக்தஸ்ய I லக்ஷணம் 44
பிட்சை எடுப்பதற்காக மண்பாண்டம், தங்குவதற்கு மரத்தடி, உடுத்த கந்தைத் துணி, அனைத்திலும் பிரம்ம பாவத்தோடிருக்கும் சமபுத்தி என்னும் இவை சந்யாசிக்கு இருக்க வேண்டிய லட்சணங்கள்.
நாபிநந்தேத மரணம் நாபிநந்தேத ஜீவிதம் |
காலமேவ ப்ரதீக்ஷேத நிர்தேஷம் ப்ருதகோ யதா|| 45
உயிரோடிருப்பதை எண்ணி சந்தோஷப்படக் கூடாது. மரணத்தைக் குறித்தும் கவலைப்படக் கூடாது. கூலியை எதிர் பார்த்துக் காத்திருக்கும் தொழிலாளியைப் போல உடல் விழும்
நாளை எதிர்பார்த்திருக்க வேண்டும்.
த்ருஷ்டிபூதம் ந்யஸேத்பாதம் வஸ்த்ரபூதம் ஐலம்பிபேத் |
ஸத்யபூதாம் வதேத்வாசம் மந:பூதாம் ஸமாசரேத் || 46
நன்கு பார்த்து பரிசுத்தமான இடத்தில் கால் வைத்து நடக்க வேண்டும். துணியால் வடிகட்டிய நீரையே அருந்த வேண்டும். சத்தியமே பேச வேண்டும். தீய நினைப்பற்ற மனத்தோடு பரிசுத்தமான ஆத்மாவாக இருக்க வேண்டும்.
அதிவாதாம் ஸ்திதிதே நாவமந்யேத கஸ்சந |
ந சேமம் தேஹமாஷ்ரித்ய வைரம் குர்வீத கேநசித் |-47
பிறரை நிந்திக்கக் கூடாது. பிறர் தன்னை நிந்தித்தாலும் பொறுத்துக்கொள்ள வேண்டும். இந்த உடலுக்காக வேண்டி யாருடனும் பகைபாராட்டக் கூடாது.
க்ருத்யந்தம் ந ப்ரதிக்ருத்யேதாக்ருஷ்ட: குஷலம் வதேத் ||
ஸப்த த்வாராவகீர்ணாம் ச நவாசமந்ருதாம் வதேத்|| 48
தன்னிடம் பிறர் கோபம் கொண்டாலும், தான் யாரையும் கோபிக்கலாகாது. தன்னையொருவன் நிந்தித்தாலும், தான் இனிய சொற்களையே பேச வேண்டும். பஞ்ச இந்திரியங்கள், மனம், புத்தி இவற்றுக்கு சம்பந்தப்பட்ட மாயையான உலக விஷயங்களைப்
பேசக்கூடாது. சத்தியமான வேத வாக்கியங்களையே பேச வேண்டும்.
அத்யாத்ம ரதிராஸீநோ நிரபேக்ஷோ நிராமிஷ: |
ஆத்மநைவ ஸஹாயேந சுக்யார்த்தி விசரேதிஹ 49
ஏதேனும் ஒரு ஆசனத்தில் (பத்மாசனம், சுகாசனம் போன்ற யோகாசனங்கள்) ஒன்றில் அமர்ந்தபடி பரமாத்மதியானத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும். தண்டம், கமண்டலம் முதலியவற்றில்கூட கருத்து செலுத்தக் கூடாது. விஷய சுகங்களில் ஆசையை விட்டு, தன்
உடலின் உதவியோடு மோட்சம் பெறும் வழியில் மட்டுமேஈடுபட்டு சஞ்சரிக்க வேண்டும்.
நசோத்பாத்த நிமித்தாப்யாம் ந நக்ஷத்ராங்கவித்யயா
நாநுஷாஸந வாதாப்யாம் பிக்ஷாம் லிப்ஸேத கர்ஹிசித்||–50
பூகம்பம் முதலான கெடுதிகளைப் பற்றியும், சகுனங்களைப் பற்றி பலன்கள் கூறியும், ஜோதிஷம் கூறியும், கைரேகை பார்த்துச் சொல்லியும், இப்படி நடக்க வேண்டும், அப்படி நடக்க வேண்டும்என்று கூறியும் பிட்சையைப் பெற முயலக்கூடாது.
ந தாபஸைர் ப்ராஹ்மணைர்வா வயோபிரபி வாஷ்வபி: |
ஆகீர்ணம் பிக்ஷகைர்வாந்யைரகாரமுபஸம்வ்ரஜேத் |-51
அதிக பிராம்மணர்கள் பிட்சைக்காக வந்திருக்கும் வீட்டிலும், பறவைகளும், நாய்களும் உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் வீட்டிலும் பிட்சைக்காகப் போகக் கூடாது.
க்ளுப்த கேஷ நக ஷ்மஷ்ரு: பாத்ரீதண்டீ குசும்பவாந்|
விசரேந் நியதோ நித்யம் ஸர்வ பூதாந்யபீட யந் || 52
சிகை, நகங்கள், மீசை இவைகளை அகற்றி, கையில் பிட்சா பாத்திரம், தண்டம், கமண்டலம் வைத்துக் கொண்டு எந்த உயிருக்கும் பாதகம் ஏற்படுத்தாமல், ஒரே இடத்தில் இருக்காமல் எப்போதும் நியமங்களை விடாது சஞ்சரித்தபடி இருக்க வேண்டும்.
அதைஜஸாநி பாத்ராணி தஸ்ய ஸ்யுர்நிர்ரவணாநி ச|
தேஷாமத்பி: ஸ்ம்ருதம் ஷௌசம் சமஸாநாமிவாத்வரே || 53
தங்கம், வெள்ளி முதலான உலோகங்களாலான பாத்திரங்களை சந்யாசிகள் உபயோகப்படுத்தக் கூடாது. மண் பாத்திரங்களையும்,மரப் பாத்திரங்களையும் உபயோகப்படுத்தலாம். ஓட்டையில்லாதவையாக அவை இருக்க வேண்டும்; அவ்வளவே. அவற்றை யக்கு பாத்திரங்களைச் சுத்தம் செய்வது போன்று நீராலும்,மண்ணாலும் சுத்தம் செய்ய வேண்டும்.
அலாபும் தாருபாத்ரம் சாம்ருந்மயம் வைதளம் ததா |
ஏதாநி யதிபாத்ராணி மநுஸ்ஸ்வாயம்புவோ அப்ரவீத் || 54
சுரைக் குடுக்கை, மண்பாண்டம், மரத்தாலான பாண்டம், மூங்கில் படி இவை சந்யாசிக்குரிய பாத்திரங்கள் என்று மனு கூறியுள்ளார்.
ஏக காலம் சரேத் பைக்ஷம் ந ப்ரஸஜ்ஜேத விஸ்தரே |
பைக்ஷே ப்ரஸக்தோ ஹி யதிர்விஷயேஷ்வபி ஸஜ்ஜதிI-55
சந்யாசி தினமும் ஒரு வேளை மட்டுமே பிட்சைக்குச் செல்ல வேண்டும். அதுவும் விஸ்தாரமாக சஞ்சாரம் செய்து கொண்டிருக்கக் கூடாது. மிகுந்தபடி பிட்சை ஏற்பதில் நாட்டமுடையவனுக்கு புலன் விஷயங்களில் மனம் ஈடுபட்டுவிடும்.
விதூமேஸந்நமுஸலே வ்யங்காரே புக்தவஜ்ஜநே |
வ்ருத்தே ஷராபஸம்பாதே பிக்ஷாம் நித்யம் யதிஷ்சரேத் |-56
சந்யாசி பிட்சை ஏற்கச் செல்லும் வீடு எப்படியிருக்க வேண்டுமெனில் – சமையல் முடிந்ததற்கு அடையாளமாக மேலே புகை வருவது நின்று போயிருக்க வேண்டும். உலக்கை சப்தம் கேட்கக்கூடாது. அடுப்பு நெருப்பை அணைத்திருக்க வேண்டும். அனைவரும்
சாப்பிட்டு முடித்த பிறகு சந்யாசி அந்த வீட்டுக்கு பிட்சைக்குச் செல்ல வேண்டும்.
அலாபே ந விஷாதீஸ்யால்லாபே சைவ ந ஹர்ஷயேத்|
ப்ராணயாத்ரிக மாத்ர ஸ்ஸ்யாந்மாத்ராஸங்காத் விநிர்கத: |-57
பிட்சை கிடைக்காத போது வருத்தப்படக் கூடாது. கிடைத்த போது சந்தோஷப்படக் கூடாது. உயிரைக் காத்துக் கொள்ளத் தேவையான அளவுக்கு மட்டுமே பிட்சை ஏற்க வேண்டும். எந்தப் பொருளின் மீதும் சிறிதளவும் பற்று வைக்கக் கூடாது.
அபிபூஜிதலாபாம்ஸ்து குப்ஸேதைவ ஸர்வஷ: | அபிபூஜிதலாபைஷ்ச யதிர்முக்தோ அபி பத்யதே || 58
தன்னைப் போற்றி ஒருவன் பிட்சையளித்தால் ஏற்கக் கூடாது. அதை ஏற்றால், தனக்குப் பிட்சை அளித்தவனின் மீது பாசம் ஏற்படும். முக்தியின் வாயில்வரை சென்றவன்கூட ஜன்ம பந்தத்தில்சிக்கி விடுவான்.
அல்பாந்நாப்யவஹாரேண ரஹஸ்தாவாசநேந ச |
ஹ்ரியமாணாநி விஷயைரிந்த்ரியாணி நிவர்தயேத் 11 59
சிறிதளவே உண்ண வேண்டும்; ஏகாந்தத்தில் இருக்க வேண்டும்; விஷயங்களில் ஈடுபடாமல் இந்திரியங்களைக் கண்காணிக்க வேண்டும்.
இந்த்ரியாணாம் நிரோதேந ராகத்வேஷயக்ஷயேந ச |
அஹிம்சயா ச பூதாநாமம் ருதத்வாய கல்பதே || 60
இந்திரியங்களை அடக்கி, எவரிடமும் பாசமோ பகையோ இல்லாமல், எந்த உயிரையும் ஹிம்சிக்காமல் இருக்கும் சந்யாசிமோட்சத்தை அடைவான்.
அவேக்ஷேத கதீர் ந்ருணாம் கர்ம தோஷஸமுத்பவா: 11
நிரயே சைவ பதநம் யாதநாஷ்ச யமக்ஷயே|-61
தகாததைச் செய்வதாலும், தக்கதைச் செய்யாமல் விடுவதாலும்மனிதர்களுக்குக் கிடைக்கும் நீச்ச ஜன்மங்களைப் பற்றியும்,நரகங்களை அடைவது பற்றியும், நரகத்தில் அநுபவிக்கும்வேதனைகள் பற்றியும் சிந்திக்க வேண்டும்.
விப்ரயோகம் ஸ்ரியைஷ்சைவ ஸம்யோகம் ச ததா அப்ரியை: 1
ஐரயா சாபிபவநம் வ்யாதிபிஷ்சோப பீடநம்|| 62
விருப்பமானவர்களுடன் ஏற்படும் பிரிவு, விருப்பமற்றவர்களுடன் ஏற்படும் உறவு, முதுமையால் வரும் துன்பம், வியாதியால் பீடிக்கப்படுதல் முதலானவற்றைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்.
தேஹாதுத் க்ரமணம் சாஸ்மாத் புநர்கர்பே ச ஸம்பவம்|
யோநிகோடி ஸஹஸ்ரே ச ஸ்ருதீஷ்சாஸ்யாந்தராத்மந: ||| 63
இந்த தேகத்தை விட்டு நீங்குதல், மீண்டும் கர்ப்ப வாசம் செய்தல், எண்ணற்ற பற்பல பிறவிகளை எடுத்தல் முதலான துன்பங்களைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்.
அதர்ம ப்ரபவம் சைவ துக்கயோகம் ஷரீரிணாம் தர்மார்த்த ப்ரபவம் சைவ சுகஸம்யோகமக்ஷயம் || 64
சரீரம் பெற்ற ஜீவாத்மாக்களுக்கு அதர்மத்தால் கிட்டும் துக்கங்களையும், சுகத்தை அள்ளி வழங்கும் தர்மத்தின் பிரபாவத்தையும் பற்றிச் சிந்திக்க வேண்டும்.
சூக்ஷ்மாதாம் சாந்வவேக்ஷேத யோகேந பரமாத்மந: | தேஹேஷு ச ஸமுத்பத்தி முத்தமேஷ்வதமேஷு ச|-65
அந்தர்யாமியாக இருக்கும் பரமாத்மாவின் சூட்சுமமான ரூபத்தையும், அதை அறிய முடியாமல் போய், பாபத்தால் நரகத்தையும், ஈனப் பிறவிகளையும் எடுப்பதைக் குறித்துச் சிந்திக்க வேண்டும்.
தூஷிதோ அபி சரேத் தர்மம் யத்ர தத்ராஷ்ரமே ரத: |
ஸம: ஸர்வேஷு பூதேஷு நலிங்கம் தர்ம காரணம் || 66
எந்த ஆஸ்ரமத்திலிருக்கிறானோ அதற்குரிய ஆடை,அடையாளங்களோடு இருப்பது மட்டும் போதாது. இந்த வேடங்கள் தர்மத்துக்குக் காரணங்களல்ல.
ஸம்ரக்ஷணார்த்தம் ஐந்தூநாம் ராத்ராவஹநி வா ஸதா |
ஷரீர ஸ்யாத்யயே சைவ சமீக்ஷ்ய வசுதாம் சரேத் |-68
எல்லாப் பிராணிகளின் உயிரையும் காப்பதற்காக, இரவிலும்பகலிலும், தனது உடலுக்குக் கஷ்டமாக இருந்தாலும்,பூமியைப்பார்த்தபடியே நடக்க வேண்டும்.
அஹ்நா ராத்ர்யா ச யாந் ஐந்தூந் ஹிநஸ்த்ய ஞாநதோ யதி: |
தேஷாம் ஸ்நாத்வா விசுத்யர்த்தம் ப்ராணாயாமாந் ஷடாசரேத் II 69
இரவிலோ, பகலிலோ சந்யாசி அறியாமல் பிராணிகளுக்குத்தீங்கு செய்துவிட்டால், அதற்குப் பரிகாரமாக ஆறு பிராணாயாமங்களைச் செய்ய வேண்டும்.
ப்ராணாயாமா ப்ராஹ்மணஸ்ய த்ரயோ அபி விதிவத் க்ருதா: |
வ்யாஹ்ருதி ப்ரணவைர்யுக்தா விக்ஞேயம் பரமம் தப: || 70வியாஹ்ருதி பிரணவங்களோடு விதிமுறைப்படி மூன்றுபிராணாயாமங்களாவது பிராம்மணன் செய்யவேண்டும். அதுவேமேலான தவம் என்பதை அறிய வேண்டும்.
தஹ்யந்தேத் மாயமாநாநாம் தாதூநாம் ஹி யதா மலா: ||
ததேந்த்ரியாணாம் தஹ்யந்தே தோஷா: ப்ராணஸ்ய நிக்ரஹாத் || 71
நெருப்பிலிட்டு உலோகங்களை ஊதும்போது,அவற்றின் மாசுகள் அகன்று விடுவதைப் போன்று, பிராணாயாமங்களால் இந்திரியங்களால் ஏற்பட்ட தோஷங்கள் எரிந்து போகும்.
ப்ராணாயாமைர் தஹேத் தோஷாந் தாரணாபிஷ்ச கில்பிஷம் |
ப்ரத்யாஹாரேண ஸம்ஸர்காந் த்யாநே நாரீஷ்வராந் குணாந்|-72
எனவே, சந்யாசி பிராணாயாமத்தால் தனக்கு ஏற்பட்ட தோஷங்களைப் போக்கிக் கொள்ள வேண்டும். பரமாத்மாவை தியானம் செய்வதால் பாபங்கள் தொலையும். விஷய சுகங்களில் ஈடுபடாமல் இந்திரியங்களை அடக்குவதால் விஷயங்களுடனான
சம்பந்தம் நீங்கும்.
உச்சாவசேஷு பூதேஷு துக்ஞேந்யாமக்ருதாத்மபி: 1 த்யானயோகேந ஸம்பஷ்யேத் கதிமஸ்யாந்தராத்மந: 11 73
உயர்ந்த தேவர்கள் எப்படித் தோன்றுகிறார்கள், தாழ்ந்த மிருகப் பிறவிகள் எதனால் ஏற்படுகின்றன என்பதையெல்லாம் அஞ்ஞானிகளால் அறிய முடியாது. தியானத்தால் சந்யாசி இவற்றைப் பற்றி அறிய வேண்டும்.
ஸம்யக் தர்ந சம்பந்ந: கர்மபிர்ந நிபத்யதே |
தர்ஷநேந விஹீநஸ்து ஸம்ஸாரம் பரதிபத்யதே|| 74
ஞானி, புண்ணிய பாபங்களுக்கு ஆட்படமாட்டான். அஞ்ஞானி, புண்ணியபாபங்களுக்கு ஆட்பட்டு சம்சாரத்தில் வீழ்கிறான்.
அஹிம்சயேந்த்ரி யாஸங்கைர் வைதிகைஷ்சைவ கர்மபி: |
தபஸஷ்சரணைஷ் சோக்தைஸ் ஸாதயந்தீஹ தத்பதம்||| 75
அஹிம்சையோடு இருப்பதாலும், இந்திரியங்களை விஷய சுகங்களில் ஈடுபடாமல் காப்பதாலும், வேதம் கூறிய நித்ய கர்மாக்களைக் கடைப்பிடிப்பதாலும், உக்ரமான தவம் புரிவதாலும் இவ்வுலகத்தார் மோட்சத்தை அடைவர்.
அஸ்திஸ்தூணம் ஸ்யாயுயுதம் மாம்ஸஷோணிதலேபநம் | சர்மாவநத்தம் துர்கந்தி பூர்ணம் மூத்ரபுரீஷயோ: || 76
எலும்புகளைத் தூண்களாகக் கொண்டதும், நரம்புகளால்இணைக்கப்பட்டதும், மாமிச, ரத்தங்களால் பூசப்பட்டதும், தோலால் கட்டப்பட்டதும், மலஜலங்களால் துர்கந்தம் கொண்டதும் –
ஜராஷோக ஸமாவிஷ்டம் ரோகாயதநமாதுரம் | ரஜஸ்வலமநித்யம் ச பூதாவாசமிமம் த்யஜேத் || 77
கிழட்டுத்தனம், துக்கம் இவைகளால் சூழ்ந்ததும், நோய்களால்பீடிக்கப்பட்டதும், பசி தாகங்களாலும், வெயில், மழை, பனி முதலான சீதோஷ்ணங்களால் பீடிக்கப்பட்டதும், அழுக்கால்நிறைந்ததும், அழியும் தன்மையுடையதும்,பஞ்ச பூதங்களின்இருப்பிடமாகவும் உள்ள உடலை விடவேண்டும்.
நதிகூலம் யதா வ்ருக்ஷோ வ்ருக்ஷம் வா ஷகுநிர்யதா |
ததா த்யஜந்நிமம் தேஹம் க்ருச்ராத் க்ராஹாத் விழுச்யதே || 78
ஆற்றங்கரையிலுள்ள மரம் எவ்வாறு விழுகிறதோ அவ்வாறுகர்மவசப்பட்ட மனிதன் மரணமடைகிறான். மரத்திலிருக்கும்பறவை சுதந்திரமாக எவ்வாறு நினைத்தபோது மரத்தை விட்டுப்பறந்து போகிறதோ அவ்வாறு ஞானி தன் இச்சைப்படி தேகத்தையும், சம்சார பந்தத்தையும் விடுகிறான்.
ப்ரியேஷு ஸ்வேஷு சுக்ருதமப்ரியேஷு ச துஷ்க்ருதம் |
விஸ்ரூஜ்ய த்யான யோகேந ப்ரஹ்மாப்யேதி ஸநாதநம் 11 79
பிரம்ம ஞானியிடம் பிரியமாக இருப்பவர்கள் அவன் செய்தபுண்ணியத்தை அடைகிறார்கள். வெறுப்போடிருப்பவர்கள் அவனது பாபத்தை அடைகிறார்கள். இவ்வாறு புண்ணிய பாபங்களற்று, தியானத்திலிருந்து பிரம்ம லோகத்தை ஞானி அடைகிறான்..
யதா பாவேந பவதி ஸர்வபாவேஷு நிஸ்ஸ்ப்ருஹ:|
ததா சுகமவாப்நோதி ப்ரேத்ய சேஹ ச ஷாஷ்வதம்|| 80
சகல வஸ்துக்களின் மீதும் சிறிதும் பற்றற்றவனாக ஒருவன் எப்போது ஆகிறானோ அப்போது இவ்வுலகில் சுகமாக வாழ்ந்து, இறந்த பிறகு மோட்சத்தை அடைகிறான்.
அநேந விதிநா ஸர்வாம்ஸ்த்யக்த்வா ஸங்காந் ஷனை: ஷனை: |
ஸர்வத்வந்த்வ விநிர்முக்தோ ப்ரஹ்மண்யேவாவ திஷ்டதே || 81
அனைத்து பந்தங்களையும் விட்டு,மானத்தையும் அவமானத்தையும் விட்டு, ஞானமார்க்கத்தாலும் கர்ம மார்க்கத்தாலும் பிரம்ம லோகத்தை அடைகிறான்.
த்யாநிகம் ஸர்வமேவைதத் யதேததபிஷப்திதம் |
நஹ்யநத்யாத்ம வித் க்வசித் க்ரியா பலமுபாஷ்நுதே!-82
பரமாத்ம தியானத்தில் ஈடுபடுபவனுக்கே இந்நிலை கிட்டும். அனைத்து பந்தங்களையும் விட்டவனாக இருந்தாலும், மானாவமானங்களை விட்டவனாக இருந்தாலும்,பரமாத்ம
தியானத்தில் ஈடுபடவில்லை என்றால் மோட்சத்தை அடைய முடியாது.
அதியக்ஞம் ப்ரஹ்ம ஜபேதாதிதை விகமேவ ச |
ஆத்யாத்மிகம் ச ஸததம் வேதாந்தாபிஹிதம் ஜயத் |-83
யக்ஞங்களைப் பற்றியும். தெய்வங்களைப் பற்றியும், ஜீவாத்மாவைப் பற்றியும் வேதாந்தங்களில் சொல்லப்பட்டிருப்பதை சதா நினைவு கூர்ந்தபடி இருக்க வேண்டும்.
இதம் ஷரண மக்ஞாநா மிதமேவ விஜாநதாம் |
இதமந்விச்சதாம் ஸ்வர்க மிதமாநம்த்ய மிச்சதாம் ||-84
வேதாந்தங்களில் சொல்லப்பட்டிருப்பவையே, அறியாதவனுக்கு ரட்சகமாகும். அறிந்தவனுக்கும் இதுவே ரட்சகமாகும். ஸ்வர்க்கத்தை வேண்டுபவருக்கு இது ஸ்வர்க்கத்தைத் தரும் . மோட்சத்தை வேண்டுபவர்களுக்கு இதுவே மோட்சத்தைத் தரும். எந்நிலையில் இருப்பவருக்கும் இது வழிகாட்டுகிறது என்பது இதன் பொருள்.
அநேந க்ரமயோகேந பரிவ்ரஜதி யோ த்விஜ: ||
ஸ விதூயேஹ பாப்மாநம் பரம் ப்ரஹ்மாதி கச்சதி 85
இவ்வகையில் சந்யாச ஆஸ்ரமத்தைக் கடத்துபவன் இவ்வுலகில் பாபங்களனைத்தும் நீங்கியவனாக பரமாத்மாவை அடைகிறான்.
ஏஷ தர்மோ அநுஷிஷ்டோவோ யதீநாம் நியதாத்மநாம் |
வேதஸந்யாஸிக்காது கர்மயோகம் நிபோதத|| 86
சந்யாசிகள் கடைப்பிடிக்க வேண்டிய நியமங்களைப் பற்றிக் கூறினேன். இல்லத்திலேயே இருக்கும் துறவறத்தைப் பற்றிக் கூறுகிறேன்; கேளுங்கள்.
ப்ரஹ்மசாரீ க்ருஹஸ்தஷ்ச வாநப்ரஸ்தோ யதிஸ்ததா |
ஏதே க்ருஹஸ்த ப்ரபவாஷ்சத்வார: ப்ருதகாஷ்ரமா: I 87
பிரம்மச்சாரி, கிருஹஸ்தன், வானப் பிரஸ்தன், சந்யாசி என்னும் நான்கும் வேறு வேறு ஆஸ்ரமங்களான போதும், இவை நான்குமே கிருஹஸ்தாஸ்ரமத்தாலேயே ஏற்படுகின்றன.
ஸர்வே அபிக்ரமஷஸ்த்வேதே யதா ஷாஸ்த்ர நிஷேவிதா: | யதோக்த காரிணம் விப்ரம் நயந்தி பரமாம் கதிம் || 88
இந்த நான்கு ஆஸ்ரமங்களிலுமே சாஸ்திர முறைப்படி கடைப்பிடித்து வாழ்ந்தால், அதாவது, ஒரு ஆஸ்ரமத்திலேயே வாழ்ந்தாலும் சரி, அடுத்தடுத்த ஆஸ்ரமங்களை அடைந்து வாழ்ந்
தாலும் சரி, உயர்ந்த உலகங்களை அடையலாம்.
ஸர்வேஷாமபி சைதேஷாம் வேதஸ்ம்ருதி விதாநத: 1
க்ருஹஸ்த உச்யதே ஷ்ரேஷ்ட: ஸ த்ரிநேதாந் பிபர்திஹி || 89
இந்த நான்கு ஆஸ்ரமங்களிலும் சாஸ்திரங்களில் சொன்னபடி நியமங்களோடு வாழும் கிருஹஸ்தனே உயர்ந்தவன். கிருஹஸ்தன் மற்ற மூன்று ஆஸ்ரமவாசிகளையும் போஷிப்
பதால் அவனே உயர்ந்தவன்.
யதா நதீநதாஸ்ஸர்வே ஸாகரே யாந்தி ஸம்ஸ்திதம் || ததைவாஷ்ரமிணஸ் ஸர்வே க்ருஹஸ்தே யாந்தி ஸம்ஸ்திதம் || 90
எல்லா நதிகளும் நதஸ்களும் சமுத்திரத்தை அடைவதைப் போன்று மற்ற மூன்று ஆஸ்ரமவாசிகளும் கிருஹஸ்தனிடமே] வருவார்கள்.
சதுர்பிரபி சைவைதைர் நித்யமாஷ்ரமிபிர்த்விஜை: |
தஷலக்ஷணகோ தர்ம: ஸேவிதவ்ய: ப்ரயத்த:I| 91
இந்த நான்கு ஆஸ்ரமத்தாரும் முயற்சியோடு கடைப்பிடிக்க வேண்டிய பத்து வகை தர்மங்களைக் கூறுகிறேன்; கேளுங்கள்:
த்ருதி: க்ஷமா தமோ அஸ்தேயம் ஷௌசமிந்த்ரிய நிக்ரஹ: |
தீர்வித்யா ஸத்யமக்ரோதோ தஷகம் தர்மலக்ஷணம்|| 92
திருதி, க்ஷமை,தமம், அஸ்தேயம், ஷெளசம், இந்திரிய நிக்ரஹம், தீரம், வித்யா, சத்யம், அக்ரோதம் என்னும் பத்து குணங்களும் தர்ம லட்சணங்கள் ஆகும்.-இந்த பத்து குணங்களும் நிறைந்தவன் தர்மாத்மா. முதலில், திருதி’ என்ற குணம் வேண்டும். அதாவது தைரியம், உறுதி, ஊக்கம், தன்னடக்கம், பிறர்க்குதவும் தன்மை இவை வேண்டும்.
இரண்டாவது, க்ஷமை என்னும் குணம் அதாவது பொறுமை.
மூன்றாவது, தமம். அமைதியாக இருத்தல், அடக்கமாக இருத்தல்.
நான்காவது, அஸ்தேயம். அதாவது திருடாமை.
ஐந்தாவது, ஷௌசம். உள்ளும் புறமும் தூய்மையோடிருத்தல்.
ஆறாவது, இந்திரிய நிக்ரஹம். ஐம்புலன்களையும் அடக்கி) வாழ்தல்.
ஏழாவது, தீரம். தைரியத்தோடும் எச்சரிக்கையோடும் சஞ்சலமடையாத திடமான மனத்தோடும், நல்வழியில் அறிவைச் செலுத்தி, வெளியிலிருந்து வரும் எதிர்ப்புகளை அடக்குதல்.
எட்டாவது, வித்யா.கல்வியறிவையும், உலகியல் அறிவையும், ஆத்ம ஞானத்தையும் அடைதல்.
ஒன்பதாவது, சத்தியம். உண்மை. பிறர்க்கு இன்னல் ஏற்படாத வகையில் உண்மைபேசுவதில் உறுதியோடிருத்தல்.
பத்தாவது, அக்ரோதம். குரோதமற்ற தன்மை. கோபமில்லாமை.
தஷ லக்ஷணாநி தர்மஸ்யயே விப்ராஸ்ஸமதீயதே |
அதீத்ய சாநுவர்தந்தே யாந்தி பரமாம் கதிம் || 93
எவர் இந்த பத்து வித தர்மங்களையும் அறிந்தவர்களோ, எவர் இந்த பத்து வித தர்மங்களையும் கடைப்பிடிக்கிறார்களோ அவர்கள் உயர்ந்த கதியை அடைகிறார்கள்.
தஷலக்ஷணம் தர்மமநுதிஷ்டந் ஸமாஹித: |
வேதாந்தம் விதிவத் ஸ்ருத்வா ஸந்யஸேத்தந்ருணோத்விஜ: || 94
இருபிறப்பாளன் இந்த பத்து தர்ம லட்சணங்களையும் அறிந்து, சற்றும் இப்படி அப்படி விலகாமல் கடைப்பிடித்து, வேதங்களின், உபநிஷத்துகளின் பொருளை கிருஹஸ்தனாக இருக்கும்போதே குருவிடமிருந்து நன்கு கற்றறிந்து, தேவ, பித்ரு, ரிஷி கடன்களை
யெல்லாம் முடித்து, பிறகு சந்யாசம் ஏற்க வேண்டும்.
ஸந்யஸ்ய ஸர்வகர்மாணி கர்மதோஷாநபாநுதந் |
நியதோ வேதமப்யஸ்ய புத்ரைஷ்வர்யே சுகம் வசேத்-95
கிருஹஸ்தன், தான் அனுஷ்டிக்க வேண்டிய அக்னி ஹோத்ரம் முதலான சகல கர்மாக்களையும் விட்டு, தெரியாமல் செய்த பாபங்கள் நீங்க பிராணாயாமங்களைச் செய்து, இந்திரியங்களை வென்று, வேத உபநிஷத்துகளின் பொருளை அறிந்து, மகனுடைய வீட்டிலேயே இருந்தபடி, அவன் தரும் உணவையும் உடையையும் ஏற்று, ஜீவனத்தைப் பற்றிய கவலையை விட்டு சுகமாகக் காலம் கடத்த வேண்டும். இப்படி இருப்பவன் இல்லற சந்யாசி எனப்படுவான்.
ஏவம் ஸந்யஸ்ய கர்மாணி ஸ்வகார்ய பரமோ அஸ்ப்ருஹ; |
ஸந்யாஸே நாபஹத்யை : ப்ராப்நோதி பரமாம்கதிம் || 96
இவ்வாறு சகல காரியங்களையும் விட்டு, எதிலும் பற்றற்று, சகல பாபங்களையும் போக்கடித்து, சந்யாசமேற்று பரமாத்ம தியானத்தில் ஈடுபடுபவன் மேலான கதியை அடைவான்.
ஏஷவோ அபிஹிதோ தர்மோ ப்ராஹ்மணஸ்ய சதுர்வித: |
புண்யோ அக்ஷயபல: ப்ரேத்ய ராக்ஞாம் தர்மம் நிபோதத || 97
முனிவர்களே! பிராம்மணர்களுக்குரிய நான்கு ஆஸ்ரமங்களைப் பற்றியும், அவற்றின் தர்மங்களைப் பற்றியும் கூறினேன். இனி புண்ணியமான மிகுந்த பலனைத் தரக்கூடிய ராஜ தர்மங்களைக் கூறுகிறேன்; கேளுங்கள்.
(ஆறாம் அத்தியாயம் முற்றிற்று.)
——————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ மநு பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply