ஸ்ரீ கீதா ஸ்லோகங்களும் தமிழ் பாசுரங்களும்- முதல் ஷட்கம்-அமைதியும் ஆனந்தமும்-ஸ்ரீ கிருஷ்ணாத்மாநந்த ஸரஸ்வதி ஸ்வாமிகள்-

அமைதியும் ஆனந்தமும் -பாகம் -1 – ஜீவாத்ம விசாரணை
1-அர்ஜுனனிடம் துக்கத்தின் வெளிப்பாடு-அர்ஜுன விஷாத யோகம் -47 பாடல்கள்
2-தத்துவ ஞானத்தைப் பெறுதல்- ஸாங்கிய நயாகம் -72 பாடல்கள்
3-செயலை செயல் யோகமாக்குதல்—கர்ம யோகம் –43 பாடல்கள்
4-அறிவால் செயலை விலக்கி அறிதல்-ஞான கர்ம ஸந்ந்யாஸ யோகம் –42 பாடல்கள்
5-செயல் துறவு-ஸந்ந்யாஸ யோகம் — 29 பாடல்கள்
6-தியானத்தில் தெளிவு-தியான யோகம் – 47 பாடல்கள்

—————-

  1. தர்ம ஷேத்ரே குரு ஷேத்ரே ஸமவேதா யுயுத்ஸவ​:
    மாமகா​: பாண்டவாஸ்சைவ கிமகுர்வத ஸஞ்ஜய

த்ருதராஷ்ட்ர உவாச-திருதராஷ்டிரன் சொல்லுகிறான்,
தர்ம ஷேத்ரே குரு ஷேத்ரே-அற நிலமாகிய குரு நிலத்தில்,
ஸமவேதா-ஒன்று கூடி,
யுயுத்ஸவ-போர்செய்ய விரும்பித் திரண்ட,
மாமகா-நம்மவர்களும்,
பாண்டவா-பாண்டவரும்,
கிம் அகுர்வத-என்ன செய்தனர்?

திருதராஷ்டிரன் புகன்றான்”
தர்ம பூமியாம் குரு பூமியில் ஒன்று கூடி யுத்தம் விரும்பியே |
என்னவர்களும் அவ்வைவரும் என் செய்தனர் ஸஞ்ஜயா ||

———–

2. ஸஞ்ஜய உவாச
த்ருஷ்ட்வா து பாண்டவாநீகம் வ்யூடம் துர்யோதநஸ்ததா
ஆசார்யமுபஸங்கம்ய ராஜா வசநமப்ரவீத்

ஸஞ்ஜய உவாச-ஸஞ்ஜயன் சொல்லுகிறான்,
ததா துர்யோதந-அப்போது துர்யோதனன்;
வ்யூடம் பாண்டவாநீகம்-அணிவகுத்து நின்ற பாண்டவர் படையை,
த்ருஷ்ட்வா-பார்த்துவிட்டு,
ஆசார்யம் உபஸங்கம்ய-துரோணனிடம் போய்,
வசனம் அப்ரவீத்-வார்த்தைகளை சொல்லலாயினன்.

சஞ்ஜயன் சொல்லுகிறான்: அப்போது துரியோதன ராஜன் அணிவகுத்து நின்ற பாண்டவர் படையைப் பார்த்துவிட்டு, ஆசாரிய (துரோண)னிடம் போய்(ப் பின்வரும்) வார்த்தை சொல்லலாயினன்:

“சஞ்ஜயன் புகன்றான்”
ராஜா துரியோதனன் அச் சமயம் ஐவர் படை அணி வகுப்புக் கண்டதும் |
ஆச்சார்யர் துரோணரையே அணுகி வாய் மொழிந்தா னிவ்வார்த்தையினை ||

—————

3. பஸ்யைதாம் பாண்டு புத்ராணாமாசார்ய மஹதீம் சமூம்
வயூடாம் த்ருபத புத்ரேண தவ ஸிஷ்யேண தீமதா

ஆசார்ய தவ ஸிஷ்யேண-ஆசார்யரே! உன்னுடைய சீடனான,
தீமதா- நிபுணனான,
த்ருபத புத்ரேண-துருபதன் மகனால்,
வ்யூடாம் பாண்டு புத்ராணாம்-வகுப்புற்ற பாண்டுவின் பிள்ளைகளின்,
ஏதாம் மஹதீம் சமூம்-இந்த பெரிய படையை, பஸ்ய-பார்.

குருவே, துருபதன் மகனும் நின் சீடனுமாகிய நிபுணனால் வகுப்புற்ற இப்பெரிய பாண்டவப் படையப் பார்.

ஆச்சார்ய நர! உம் புத்திமான் சிஷ்யன்; துருபதன் மகன் த்ருஷ்டத்யும்னன் |
அணி வகுத்த பாண்டு புத்திரர்கள் தம் மா பெரும் சேனையைப் பாரும் ||

————-

4. அத்ர ஸூரா மஹேஷ்வாஸா பீமார்ஜுநஸமா யுதி
யுயுதாநோ விராடஸ்ச த்ருபதஸ்ச மஹாரத​:

அத்ர-இங்கு,
மஹேஷ்வாஸா-பெரிய வில்லாளிகளும்,
யுதி-போரில்,
பீமார்ஜுநஸமா-வீமனையும் பார்த்தனையும் நிகர்த்தவருமாகிய,
ஸூரா-சூரர்,
யுயுதாந-யுயுதானன்,
த்ருபத-மகாரதனாகிய துருபதன்.

இங்கு சூரரும் பெரிய வில்லாளிகளும் போரில் வீமனையும் பார்த்தனையும் நிகர்த்தவருமாகிய பலர் இருக்கிறார்கள் யுயுதானன்; விராடன்; மகாரதனாகிய துருபதன்;

காணீர்!இப் படை சூரர் வில்லாளிகள் பீமார்ஜுனனுக்குச் சமமாமவர் |
போரில் சாத்யகியாம் யுயுதானனும் விராட தேசத்தரசன் துருபதனுமாம் ॥

————

5. த்ருஷ்டகேதுஸ்சேகிதாந​: காஸிராஜஸ்ச வீர்யவாந்
புருஜித்குந்திபோஜஸ்ச ஸைப்யஸ்ச நரபுங்கவ​:

த்ருஷ்டகேது-திருஷ்ட கேது,
சேகிதாந-சேகிதானன்,
வீர்யவாந் காஸிராஜ-வீரியமுடைய காசி ராஜன்,
புரூஜித் -புரூஜித்,
குந்திபோஜ-குந்தி போஜன்,
நரபுங்கவ ஸைப்ய-மனிதரேறாகிய சைவியன்.

திருஷ்ட கேது சேகிதானன்; வீரியமுடைய காசி ராஜன்; புருஜித்; குந்தி போஜன்; மனிதரேறாகிய சைவியன்;

த்ருஷ்ட கேதுவும் சேகிதானனும் வீர்யவான் காசி ராஜனும் |
புருஜித்தும் குந்தி போஜனும் மா மனிதன் சைப்ய னிருப்பதும் காணீர் ||

———————

6. யுதாமந்யுஸ்ச விக்ராந்த உத்தமௌஜாஸ்ச வீர்யவாந்
ஸெளபத்ரோ த்ரௌபதேயாஸ்ச ஸர்வ ஏவ மஹாரதா​:

விக்ராந்த-வலிமை மிக்க,
யுதாமந்யு-யுதாமந்யு,
வீர்யவாந் உத்தமௌஜா-வீரன் உத்தமௌஜா,
ஸௌபத்ர-சுபத்திரை மகன்,
த்ரௌபதேயா-திரௌபதி மக்கள்,
ஸர்வ ஏவ மஹாரதா-எல்லோருமே மகாரதர்.

வலிமை மிக்க யுதாமந்யு; உத்தமௌஜா என்ற வீரன்; சுபத்திரை மகன்; திரௌபதி மக்கள்; எல்லோருமே மகாரதர்.

பேராற்றல் பெற்ற யுதாமன்யுவும் வல்லமை யுடை உத்ததமௌஜஸும் |
சுபத்ரையின் மகன் அபிமன்யுவும் திரௌபதியின் ஐம் புதல்வரும் மஹா ரதர்களே ||

——————–

7. அஸ்மாகம் து விஸிஷ்டா யே தாந்நிபோத த்விஜோத்தம
நாயகா மம ஸைந்யஸ்ய ஸஞ்ஜ்ஞார்தம் தாந்ப்ரவீமி தே

த்விஜோத்தம்-இருபிறப்பாளரில் மேம்பட்டவனே,
அஸ்மாகம்-நம்முள்ளே,
யே விஸிஷ்டா-எவர் விசேஷமாக இருக்கின்றனரோ,
தாந்-அவர்களை,
நிபோத-தெரிந்து கொள்,
மம ஸைந்யஸ்ய-எனது படையின்,
யே நாயகா-எவர் நாயகர்களோ,
தாந்-அவர்களை,
ஸம்ஜ்ஞார்தம்-கவனத்திற்காக,
ப்ரவீமி-சொல்லுகிறேன்.

இனி, எனது படைக்கு நாயகராய், நம்முள்ளே சிறந்தோரையுந் தெரிந்து கொள்.
இருபிறப்பாளரில் மேம்பட்டவனே, குறிப்பின் பொருட்டாக அவர்களை உனக்குச் சொல்லுகிறேன்.

அந்தண உத்தம நர! நம்மில் சிறந்தோ ரவர்களையும் நீ ரறிந்து கொள்ளும் |
என்னுடைய சேனையின் நாயகர்கள் கூறுகேன் அவர்களை அறியும் பொருட்டே
||

———————

8. பவாந் பீஷ்மஸ்யுச கர்ணஸ்ச க்ருபஸ்ச ஸமிதிஞ்ஜய​:
அஸ்வத்தாமா விகர்ணஸ்ச ஸெளமதத்திர்ஜயத்ரத:

பவாந்-நீ,
பீஷ்ம: கர்ண: க்ருப-பீஷ்மன், கர்ணன், கிருபன்,
ஸமிதிஞ்ஜய-பொருநர் கூட்டத்தை வெல்வோனாகிய,
ததா ஏவ-அதே போல,
அஸ்வத்தாமா விகர்ண, ஸௌமதத்தி-அசுவத்தாமன் விகர்ணன் சோமதத்தன் மகன்.

நீ; பீஷ்மன்; கர்ணன்; பொருநர் கூட்டத்தை வெல்வோனாகிய
கிருபன்; அசுவத்தாமன்; விகர்ணன்; சோமதத்தன் மகன்;

தாங்களும் பீஷ்மரும் கர்ணனும் வெற்றியே வடிவான க்ருபரும் |
அங்ஙனமே அஶ்வத்தாம விகர்ணனும் ஸோம தத்தன் மகன் பூரிஸ்ரவஶுமுளரே ||

———–

9. அந்யே ச பஹவ​: ஸூரா மதர்த்தே த்யக்தஜீவிதா​:
நாநாஸஸ்த்ரப்ரஹரணா​: ஸர்வே யுத்தவிஸாரதா​:

அந்யே ச-இன்னும் வேறு,
பஹவ: ஸூரா-பல சூரர்,
மதர்தே -என் பொருட்டு,
த்யக்தஜீவிதா-வாழ்க்கையைத் துறந்தோர்,
ஸர்வே-எல்லோருமே,
நாநாஸஸ்த்ரப்ரஹரணா-பலவிதமான ஆயுதங்களும் அம்புகளுமுடையோர்,
யுத்வவிஸாரதா-போரில் நிபுணர்.

எண்ணிலா ஆயுத மம்புகள் கூடி பலப் பல சூரர்க தளல்லாம் |
யுத்தத்தில் சிறந்தே உளர் என் பொருட்டு உயிர் துறக்கவே ||

————

10. அபர்யாப்தம் ததஸ்மாகம் பலம் பீஷ்மாபிரக்ஷிதம்
பர்யாப்தம் த்விதமேதேஷாம் பலம் பீமாபிரக்ஷிதம்

பீஷ்மாபிரக்ஷிதம்-பீஷ்மனால் காக்கப்படும்,
அஸ்மாகம் பலம்-நமது படை,
அபார்யாப்தம்-(கண்ணுக்கு) நிறைந்திருக்கவில்லை,
பீமாபிரக்ஷிதம்-வீமனால் காக்கப்படும்,
ஏதேஷாம் பலம்-இவர்களுடையை படையோ,
பர்யாப்தம்-நிறைந்திருக்கிறது

(எனினும்) பீஷ்மனால் காக்கப்படும் நமது படை (கண்ணுக்கு) நிறைந்திருக்கவில்லை.
வீமனால் காக்கப்படும் இவர்களுடையை படையோ நிறைந்திருக்கிறது.

இன்னும் வேறு பல சூரர்; என் பொருட்டு வாழ்க்கையைத் துறந்தோர்;
பலவிதமான ஆயுதங்களும் அம்புகளுமுடையோர்; எல்லோருமே போரில் நிபுணர்.

———–

11. அயநேஷு ச ஸர்வேஷு யதாபாகமவஸ்திதா​:
பீஷ்மமேவாபிரக்ஷந்து பவந்த​: ஸர்வ ஏவ ஹி

ஸர்வேஷு அயநேஷு-எல்லா இடங்களிலும்,
யதாபாகம் அவிஸ்ததா-வகுப்புகளின்படி நின்றுகொண்டு,
பவந்த: ஸர்வ-நீங்களனைவரும்,
பீஷ்மம் ஏவ-பீஷ்மனையே,
அபிரக்ஷந்து-காக்கக் கடவீர்.

நீங்களனைவரும் வகுப்புகளின்படி எல்லா இடங்களிலும் நின்றுகொண்டு பீஷ்மனையே காக்கக் கடவீர்.

பீஷ்மர் காக்கும் நம் சேனை அளவில் அடங்காது விரிந்துளது |
பீமனால் காக்கப்படு மச்சேனை அளவில் அடங்கியே யுள்ளது ||

———-

12. தஸ்ய ஸஞ்ஜநயந் ஹர்ஷம் குருவ்ருத்த​: பிதாமஹ​:
ஸிம்ஹநாதம் விநத்யோச்சை​: ஸங்கம் தத்மௌ ப்ரதாபவாந்

குருவ்ருத்த-கௌரவரில் மூத்தவராகிய,
ப்ரதாபவாந் பிதாமஹ-கீர்த்திமிக்க பாட்டன்,
தஸ்ய-அவனுடைய(துரியோதனனுடைய இதயத்தில்),
ஹர்ஷம் ஸஞ்ஜநயந்-மகிழ்ச்சி விளைவிக்குமாறு,
உச்சை: ஸிம்ஹநாதம்-உயர்ந்த குரலில் சிங்கநாதம்,
விநத்ய-புரிந்து,
ஸங்கம் தத்மௌ-சங்கை ஊதினான்

(அப்போது) துரியோதனனுக்கு மகிழ்ச்சி விளைவிக்குமாறு கீர்த்தி மிக்க கௌரவர் கிழவனாகிய பாட்டன் உயர்ந்த குரலில் சிங்கநாதம் புரிந்து சங்கை ஊதினான்.

வல்லவன் கௌரவ முதல்வன் பாட்டன் பீஷ்ம பிதா மகன் |
உற்சாகமூட்டவே அவன் பொருட்டு உரக்க ஊதினான் சிம்ம நாதம்தனை ||

———–

13. தத​: ஸங்காஸ்ச பேர்யஸ்ச பணவாநககோமுகா​:
ஸஹஸைவாப்யஹந்யந்த ஸ ஸப்தஸ்துமுலோ பவத்

தத-அப்பால்,
ஸங்கா ச பேர்ய: ச-சங்குகளும், பேரிகைகளும்,
பணவ ஆநக கோமுகா-தம்பட்டங்களும், பறைகளும், கொம்புகளும்,
ஸஹஸா-திடீரென,
அப்யஹந்யந்த-ஒலித்தன,
ஸ: ஸயுப்த-அந்த ஓசை,
துமுல-பயங்கரமாக,
அபவத்-இருந்தது.

அப்பால், சங்குகளும், பேரிகைகளும், தம்பட்டங்களும், பறைகளும், கொம்புகளும்,
திடீரென ஒலித்தன. அஃது பேரோசையாயிற்று.(இது கௌரவர்கள் பக்கம் உண்டாகிய இரைச்சல்.)

பின்பு தொடர்ந்த பல நாதங்கள் சங்கு பேரிகை தம்பட்டைகளும் |
பறையுடன் ஒலி மிகுந்த கொம்புகளுமே ஒருங்கே சேர்ந்து முழங்கினவே ||

———-

14. தத​: ஸ்வேதைர்ஹயைர்யுக்தே மஹதி ஸ்யந்தநே ஸ்திதௌ
மாதவ​: பாண்டவஸ்சைவ திவ்யௌ ஸங்கௌ ப்ரதத்மது​:

தத-பின்பு,
ஸ்வேதை: ஹயை: யுக்தே-வெள்ளை குதிரைகள் பூட்டிய,
மஹதி ஸ்யந்தநே-பெருந் தேரில்,
ஸ்திதௌ மாதவ: பாண்டவ-நின்ற மாதவனும் பார்த்தனும்,
திவ்யௌ ஸங்கௌ-தெய்வீகமான சங்குகளை,
ப்ரதத்மது-ஊதினர்.

பின்பு வெள்ளைக் குதிரைகள் பூட்டிய பெருந் தேரில் நின்ற மாதவனும் பார்த்தனும் (தம்முடையை) தேவச் சங்குகளை ஊதினர்.

பிறகு வெண் குதிரைகளுள்ள மேலாம் தேரில் வீற்றிருந்த மாதவ அர்ஜுனரும் |
தத்தம் தெய்வீகம் மிகு சங்குகளையே உடன் எடுத்து உரக்க ஊதினரே ||

————–

15. பாஞ்சஜந்யம் ஹ்ருஷீகேஸோ தேவதத்தம் தநஞ்ஜய​:
பௌண்ட்ரம் தத்மௌ மஹாஸங்கம் பீமகர்மா வ்ருகோதர​:

ஹ்ருஷீகேஸ: பாஜ்ஜந்யம்-கண்ணன் பாஞ்சஜன்யம் என்கிற பெயருடைய சங்கை,
நஞ்ஜய: தேவதத்தம்-அர்ஜுனன் தேவ தத்தம் என்ற சங்கை,
பௌணட்ரம் மஹாஸங்கம் பீமகர்மா வ்ருகோதர-பௌண்ட்ரம் என்ற பெருஞ்சங்கை அஞ்சுதற்குரிய செயல்களையுடைய ஓநாய் வயிற்று வீமன்,
தத்மௌ-ஊதினான்.

கண்ணன் பாஞ்சஜன்யத்தை ஊதினான்; தேவ தத்தம் என்ற சங்கை தனஞ்ஜெயன் ஒலித்தான்; அஞ்சுதற்குரிய செயல்களையுடைய ஓநாய் வயிற்று வீமன் பௌண்ட்ரம் என்ற பெருஞ்சங்கை ஊதினான்.

ஊதினான் ஹ்ருஷீகேசன் பாஞ்சஜன்யம் ஊதினான் தனஞ்சயன் தேவதத்தம் |
ஊதினான் பெரு வினை யாற்றும் பீமசேனன் ஊதினனே பௌண்ட்ர மஹா சங்கம் தனையே ||

வ்ருகோதர = ஓனாய் வயிற்றோன்; பெரு வினை யாற்றும் திறன்

—————-

16. அநந்த விஜயம் ராஜா குந்தீபுத்ரோ யுதிஷ்டிர​:
நகுல​: ஸஹதேவஸ்ச ஸுகோஷமணிபுஷ்பகௌ

அநந்தவிஜயம் ராஜா குந்தீபுத்ரோ யுதிஷ்டிர​-அநந்த விஜயம் என்ற சங்கை குந்தியின் மகனான ராஜா யுதிஷ்டிரன்,
நகுல​: ஸஹதேவஸ்ச ஸுகோஷமணிபுஷ்பகௌ-சுகோஷம், மணிபுஷ்பகம் என்ற சங்குகளை நகுலனும் சகாதேவனும்

குந்தி மகனாகிய யுதிஷ்டிரன் அநந்த விஜயம் என்ற சங்கையும்,
நகுலனும் சகதேவனும் (முறையே) சுகோஷம், மணிபுஷ்பகம் என்ற சங்குகளையும் ஊதினர்.

குந்தியின் மகன் தர்ம ராஜன் ஊதினனே அநந்த விஜயம் தனை |
ஊதினரே ஸுகோஷ மணி புஷ்பகம் தனை முறையே நகுல சக தேவருமே ||

17. காஸ்யஸ்ச பரமேஷ்வாஸ​: ஸிகண்டீ ச மஹாரத​:
த்ருஷ்டத்யும்நோ விராடஸ்ச ஸாத்யகிஸ்சாபராஜித​:

பரமேஷ்வாஸ: காஸ்ய: ச-வில்லாளிகளில் மிகச் சிறந்த காசிராஜனும்,
மஹாரத: ஸிகண்டீ ச-மகாரதனாகிய சிகண்டியும்,
த்ருஷ்டத்யும்ந விராட: ச-திருஷ்டத்யும்னனும் விராடனும்,
அபராஜித: ஸாத்யகிஸ்ச-வெல்லப்படாத ஸாத்தியகியும்.

வில்லாளிகளில் மிகச் சிறந்த காசிராஜனும், மகாரதனாகிய சிகண்டியும், திருஷ்டத்யும்நனும், விராடனும், வெல்லப்படாத ஸாத்தியகியும்,

சீர்மிகு வில்லாளி காசிராஜன் மஹாரதி த்ருஷ்டத்யும்ன சிகண்டியும் |
அங்ஙனமே விராட தேசத்தரசனும் வெல்ல வியலா சாத்யகியு மூதினரே ||

————-

18. த்ருபதோ த்ரௌபதேயாஸ்ச ஸர்வஸ​: ப்ருதிவீபதே
ஸௌபத்ரஸ்ச மஹாபாஹு​: ஸங்காந் தத்மு​: ப்ருதக் ப்ருதக்

த்ருபதோ த்ரௌபதேயா: ச-துருபதனும் திரௌபதியின் புதல்வர்களும்,
மஹாபாஹு: ஸௌபத்ர-பெருந்தோளுடையவனாகிய சுபத்திரை மகனும்,
ஸர்வஸ-எல்லோரும்,
ப்ருதிவீபதே-பூமிக்குத் தலைவனே! (சஞ்சயன் திருதராட்டிரனிடம்),
ப்ருதக் ப்ருதக்-தனித்தனியாக,
ஸங்காந் தத்மு-சங்குகளை ஒலித்தனர்.

துருபதனும், துரோபதை மக்களும், பெருந்தோளுடையவனாகிய சுபத்திரை மகனும்
தனித்தனியே தத்தம் சங்குகளை ஒலித்தனர். பூமிக்குத் தலைவனே!

புவியாளும் வேந்தனே ! மன்னா! துருபதனும் த்ரௌபதியின் ஐம் புதல்வரும் |
பெரும் தோளோன் சுபத்தர மகனும் ஊதினரே தத்தம் சங்குகளை எப்புறமும் ஓலிக்கவே ॥

————–

19. ஸ கோ÷ஷா தார்தராஷ்ட்ராணாம் ஹ்ருதயாநி வ்யதாரயத்
நபஸ்ச ப்ருதிவீம் சைவ துமுலோ வ்யநுநாதயந்

ஸ: துமுல: கோஷ-அந்த பயங்கர ஓசை,
நப: ப்ருதிவீம் ச-ஆகாயத்தையும் பூமியையும்,
வ்யநுநாதயந்-ஒலிக்கச் செய்து,
தார்தராஷ்ட்ரணாம்-திருதராஷ்டிரக் கூட்டத்தாரின்,
ஹ்ருதயாநி-நெஞ்சுகளை,
வ்யதாரயத்-பிளந்தது.

அந்தப் பெருமுழக்கம் வானையும் மண்ணையும் உடனொலிக்கச் செய்வதாய்,
திருதராஷ்டிரக் கூட்டத்தாரின் நெஞ்சுகளைப் பிளந்தது.

அப்போரொலிப் பெரு முழக்கம் விண் புவிக்கும் இடை ஒலிக்க |
கௌரவரின் உள்ளம் தன்னில் சீறிப் புகுந்துப் பிளந்தது காணும் ||

—————

20. அத வ்யவஸ்திதாந்த்ருஷ்ட்வா தார்தராஷ்ட்ராந் கபித்வஜ​:
ப்ரவ்ருத்தே ஸஸ்த்ரஸம்பாதே தநுருத்யம்ய பாண்டவ​:

அத-அப்பால்,
கபித்வஜ: பாண்டவ-குரங்குக் கொடியர்த்த பார்த்தன்,
வ்யவஸ்திதாந் தார்தராஷ்ட்ராந்-எதிர் நிற்கும் திருதராஷ்டிரக் கூட்டத்தாரை,
த்ருஷ்ட்வா-நோக்கி,
ததா ஸஸ்த்ரஸம்பாதே ப்ரவ்ருத்தே-அப்போது ஆயுதங்களை விடுக்க முனைகின்ற போது,
தநு: உத்யம்ய-வில்லையேந்திக் கொண்டு.

அப்பால், (இரு திறத்தும்) அம்புகள் பறக்கத் தலைப்பட்டன. அப்போது குரங்குக் கொடியுயர்த்த பார்த்தன் திருதராஷ்டிரக் கூட்டத்தாரை நோக்கி வில்லை யேந்திக் கொண்டு, கண்ணனைப் பார்த்துச் சொல்லுகிறான்.-தன்னை எதிர்ப்பவர்களைக் காண அர்ஜுனன் தவிக்கிறான்.

புவியாளும் மன்னா! குரங்குக் கொடியோன் போர் துவங்கிய தார்த்தராஷ்டிரர் தமை நோக்கி| அம்புகள் விண்ணிலே பாயுமுன்னே || இருஷீகேசரிட மிவ்வார்த்தை தனைப் புகன்றான் |

————

அர்ஜுன உவாச

21. ஹ்ருஷீகேசம் ததா வாக்யமிதமாஹ மஹீபதே
ஸேநயோருபயோர்மத்யே ரதம் ஸ்தாபய மேச்யுத

ஹ்ருஷீகேஸம் இதம் வாக்யம்-கண்ணனிடம் இந்த வார்த்தைகளை,
ஹ-சொல்கிறான்,
மஹீபதே-ராஜனே!,
அச்யுத-ஹே அச்சுதா,
மே ரதம்-என்னுடைய ரதத்தை,
உபயௌ:ஸேநயோ-இரண்டு படைகளின்,
மத்யே-நடுவே,
ஸ்தாபய-நிறுத்துக

அர்ஜுனன் சொல்லுகிறான்: “அச்சுதா, படைகளிரண்டுக்கும் நடுவே என் தேரைக் கொண்டு நிறுத்துக என்று. (கேளாய், திருதராஷ்டிர ராஜனே!)

  1. யாவதேதாந்நிரீஷே அஹம் யோத்துகாமாநவஸ்திதாந்
    கைர்மயா ஸஹ யோத்தவ்யமஸ்மிந்ரணஸமுத்யமே

அஸ்மிந் ரணஸமுத்யமே-இந்தப் போர்த் தொடக்கத்தில்,
மயா கை: ஸஹ யோத்வவ்யம்-என்னால் எவருடன் போர் செய்ய நேருமோ
யோத்துகாமாந் அவஸ்திதாந் ஏதாந்-சமரை விரும்பி நிற்கும் இவர்களை,
யாவத்-எவ்வளவு நேரம்,
அஹம் நிரீஷே அஹம் -நான் பார்க்கிறேன்

சமரை விரும்பி நிற்கும் இவர்களை நான் பார்க்க வேண்டும்.
இந்தப் போர்த் தொடக்கத்தில் என்னோடு போர் செய்யக் கடவோர் யார்?”

“அர்ஜுனன் புகன்றான்”
ஓஅச்சுதா! இவ்விரு சேனை யிடையே எம் தேரை எதிர் நிறுத்து வீரே ||
என்னுடன் போர் விரும்பி நிற்கும் | இக் கூட்டம் தனை நான் காணவே ||

————–

23. யோத்ஸ்யமாநாநவே÷க்ஷஹம் ய ஏதேத்ர ஸமாகதா​:
தார்தராஷ்ட்ரஸ்ய துர்புத்தேர்யுத்தே ப்ரியசிகீர்ஷவ​:

துர்புத்தே: தார்தராஷ்ட்ரஸ்ய-கெட்ட மதிகொண்ட துரியோதனனுக்கு,
யுத்தே ப்ரியசிகீர்ஷவ-போரில் நன்மை செய்யும் வண்ணம்,
யே-எவர்,
ஏதே-இந்த அரசர்கள்,
அத்ர ஸமாகதா: இங்கே வந்துள்ளனர்,
யோத்ஸ்யமாநாந்-போர் செய்ய திரண்டு நிற்பவர்களை,
அஹம் அவே÷க்ஷ-நான் காண வேண்டும்

“கெட்ட மதிகொண்ட துரியோதனனுக்குப் பிரீதி செய்யும் வண்ணம், இங்கு போர் செய்யத் திரண்டு நிற்போரை நான் காண வேண்டும்” என்றான்.

இவ்விதம் துஷ்ட புத்தி யுடன் நிற்கும் அந்தகன் மகன் துரியோதனன் தம் |
பிரியம் விரும்பியுளோர் தமையும் களம் புகுந்தோரையும் காணவே ||

————-

24. ஏவமுக்தோ ஹ்ருஷீகேஸோ குடாகேஸேந பாரத
ஸேநயோருபயோர்மத்யே ஸ்தாபயித்வா ரதோயுத்தமம்

பாரத-(கேளாய்) பரத நாட்டரசே,
குடாகேஸேயுந-அர்ஜுனனால்,
ஏவம் உக்த-இவ்வாறு சொன்னவற்றை கேட்டு,
ஹ்ருஷீகேஸயு-கண்ணன்,
உபயோ: ஸேநயோ-இரண்டு படைகளுக்கும்,
மத்யே-நடுவில்,
ரதோயுத்தமம்-மேன்மை கொண்ட அத்தேரை,
ஸ்தாயுபயித்வா-நிறுத்தி.

சஞ்ஜயன் சொல்லிக்கொண்டு வருகிறான்: (கேளாய்) பரத நாட்டரசே, இங்ஙனம் பார்த்தனுரைத்துக் கேட்ட கண்ணன் மிகவும் மேன்மை கொண்ட அத்தேரை இரண்டு படைகளுக்குமிடையே கொண்டு நிறுத்தினான்.

சஞ்ஜயன் புகன்றான்”
பரத குலத்தோன்றலே ! த்ருதராஷ்டிரரே ! இவ்விதம் பகர் குடாகேசன் சொல் கேட்ட |
ஹ்ருஷீகேசர் உத்தமமாம் தேரை இரு சேனைக்கிடை நிறுத்தியே |

———————

25. பீஷ்மத்ரோணப்ரமுகத​: ஸர்வேஷாம் மஹீக்ஷிதாம உவாச பார்த்த பஸ்யைதாந்ஸமவேதாந்குரூநிதி

பீஷ்மத்ரோணப்ரமுகத-பீஷ்மனுக்கும் துரோணனுக்கும் மற்ற வேந்தருக்கும் முன்பாக,
ஸர்வேஷாம் மஹீக்ஷிதாம்-எல்லா அரசர்களுக்கு முன்,
இதி உவாச-இவ்வாறு சொன்னான்,
ஸமவேதாந்-கூடி இருக்கும்,
ஏதாந் குருந்-கௌரவரை, பஸ்ய-பார்

பீஷ்மனுக்கும் துரோணனுக்கும் மற்றெல்லா வேந்தருக்குமெதிரே தேரை நிறுத்திக்கொண்டு,“பார்த்தா! இங்குக் கூடி நிற்கும் கௌரவரைப் பார்!” என்றான்.

வழிநடாத்தும் பீஷ்மரும் த்ரோணரும் மற்றுமுள வேந்தர்களின் முன்னிருத்தியே |
ஒருங்கே கூடியுள்ள இக் கௌரவர் தமைப்- பார்த்தனே ! “தீர்க்கமாய்க் காண் ”என்றார்||

——–

26. தத்ராபஸ்யத் ஸ்திதாந் பார்த​: பித்ரூநத பிதாமஹாந்
ஆசார்யாந்மாதுலாந்ப்ராத்ரூந் புத்ராந்பௌத்ராந் ஸகீம்ஸ்ததா

அத பார்த-இதற்கு பின் அர்ஜுனன்,
தத்ர ஸ்திதாந்-அங்கே நிற்கும்,
பித்ரூந் பிதாமஹாந் ஆசார்யாந் மாதுலாந்-தந்தை உடன் பிறந்தவர்களையும் பாட்டனாரும் குருக்களும் மாமன்மார்களும்,
ப்ராத்ருந் புத்ராந் பௌத்ராந்-சகோதரர்களும், பிள்ளைகளும், பேரரும்,
ததா-அதே போல,
ஸகீந்-நண்பர்களும்,
அபஸ்யத்-பார்த்தான்

அங்குப் பார்த்தன் தன்னுடைய தந்தையாரும், பாட்டன்மாரும், குருக்களும், மாதுலரும்,
அண்ணன் தம்பிகளும், மக்களும், பேரரும், தோழர்களும் நிற்பது கண்டான்.

பார்த்தன்! பார்த்தானிரு சேனையினரை பாட்டன்- ஆச்சார்யர்- அம்மான் களையும் |
சகோதர புத்திர பேரர்களையும் அவ்விதமே அனைத்துத் தோழர்களையும்.||

—————

27. ஸ்வஸுராந்ஸுஹ்ருதஸ்சைவ ஸேநயோருபயோரபி
தாந்ஸமீ÷க்ஷய ஸ கௌந்தேய​: ஸர்வாந்பந்தூநவஸ்திதாந்

ஸேநயோ: உபயோ: அபி-இரண்டு படைகளிலும்,
ஸ்வஸுராந்-மாமன்மாரும்,
ஸுஹ்ருத ச-நண்பர்களும்,
ஸர்வாந் பந்தூந்-உறவினரெல்லாரும்,
அவஸ்திதாந்-நிற்பவர்களை,
ஸமீக்ஷ்ய-நன்றாக பார்த்து,
கௌந்தேய​-அர்ஜுனன்

அங்ஙனமே மாமன்மாரும், நண்பர்களும், உறவினரெல்லாரும் இரண்டு படைகளிலும் நிற்கக் கண்டு, குந்தி மகனாகிய அப்பார்த்தன் மிகவும் இரக்கமுற்றவனாய்த் துயருடன் சொல்லுகிறான்:

மாமனார்கள், நல்உள்ள முள்ளோரையும் ஒன்று கூடி நிற்கு முறவுகளையும் |
உற்று நோக்கி உள்ளம் வருந்தியே மிகு விரக்கமுடன் குந்தி மகன் கூறினானே ॥

28. க்ருபயா பரயா விஷ்டோ விஷீதந்நிதமப்ரவீத்
த்ருஷ்ட்வேமம் ஸ்வஜநம் க்ருஷ்ண யுயுத்ஸும் ஸமுபஸ்திதம்

ஸ: கௌந்தேய-அந்த அர்ஜுனன்,
பரயா க்ருபயா அவிஷ்ட-மிகுந்த இரக்கத்துடன் நிரம்பியவனாக,
விஷீதந்-துயரடைந்து,
இதம் அப்ரவீத்-இவ்வாறு சொல்லுகிறான்
க்ருஷ்ண-ஹே கிருஷ்ணா,
யுயுத்ஸும்-போர் செய்ய விருப்பத்துடன்,
ஸமுபஸ்திதம்-நிற்கிற,
இமம் ஸ்வஜநம் த்ருஷ்ட்வா-இந்த சுற்றத்தார்களை கண்டு.

அர்ஜுனன் சொல்லுகிறான்: கண்ணா, போர் செய்ய வேண்டு இங்கு திரண்டு நிற்கும் சுற்றத்தார்களைக் கண்டு,

29. ஸீதந்தி மம காத்ராணி முகம் ச பரிஸுஷ்யதி
வேபதுஸ்ச ஸரீரே மே ரோமஹர்ஷஸ்ச ஜாயதே

மம காத்ராணி ஸீதந்தி-என்னுடைய உறுப்புகள் சோர்கின்றன,
முகம் பரிஸுஷ்யதி-வாய் உலர்கிறது,
மே ஸரீரே வேபது-என்னுடைய உடலில் நடுக்கம்
ரோமஹர்ஷ: ஜாயதே-மயிர் சிலிர்ப்பு அடைகிறது.

என் அவயங்கள் சோர்கின்றன. என் வாய் உலர்கிறது. என்னுடம்பு நடுங்குகிறது. மயிர் சிலிர்க்கிறது.

“அர்ஜுனன் புகன்றான்”
ஓ கிருஷ்ணா வென்றே கூவி! | யுத்தம் விரும்பிக்களம் புகுந்து நிற்கும்
உறவுகளை யான் உற்று நோக்கிடில் |
அங்கமெலாம் தளர்ந்து நாவறள்கின்றதே உடல் நடுங்கி மயிர்க்கூச் செறிகின்றதே ||

———–

30. காண்டீவம் ஸ்ரம்ஸதே ஹஸ்தாத்த்வக்சைவ பரிதஹ்யதே
ந ச ஸக்நோம்யவஸ்தாதும் ப்ரமதீவ ச மே மந​:

ஹஸ்தாத் காண்டீவம் ஸ்ரம்ஸதே-கையிலிருந்து காண்டீபம் என்கிற வில் நழுவுகிறது,
த்வக் ச ஏவ பரிதஹ்தே-உடலிலும் எரிச்சல் உண்டாகிறது,
மந: ப்ரமதி இவ-மனம் குழம்புவது போல,
அவஸ்தாதும் ந ஸக்நோமி-நிற்கவும் முடியவில்லை.

காண்டீவம் கையிலிருந்து நழுவுகிறது. உடம்பில் எரிச்சலுண்டாகிறது.-என்னால் நிற்க முடியவில்லை. என் மனம் சுழலுகிறது.

காண்டீவம் கையினின்றும் நழுவுகிறதே சர்மமெல்லாம் பற்றி எரிகின்றதே |
நிற்பதற்கும் சக்தி யற்றவனானேனே என் மனம் குழம்புவது போலுள்ளதே ||[சர்மம்
– த்வக் – உடலின் மேல் தோல் ]

————

31. நிமித்தாநி ச பஸ்யாமி விபரீதாநி கேஸவ
ந ச ஸ்ரேயோ நுபஸ்யாமி ஹத்வா ஸ்வஜநமாஹவே

விபரீதாநி நிமித்தாநி ச பஸ்யாமி-விபரீதமான சகுனங்களும் காண்கிறேன்,
ஆஹவே-போரிலே,
ஸ்வஜநம் ஹத்வா-சுற்றத்தார்களை கொன்று,
ஸ்ரேய: ச-நன்மையும்,
ந அநுபஸ்யாமி-தோன்றவில்லை.

கேசவா, விபரீதமான சகுனங்கள் பல காண்கிறேன். போரிலே சுற்றத்தார்களை மடிப்பதில்
எனக்கு நன்மை தோன்றவில்லை.

ஓ கேசவா! கெடுதல்கள் அளிக்கும் சகுனங்க ளனைத்தும் காண்கின்றேன் |
உறவினர் தமை நாம் கொல்லுவதால் மேன்மை ஏதும் காண்கிறேனில்லை ॥

  1. ந காங்ஷே விஜயம் க்ருஷ்ண ந ச ராஜ்யம் ஸுகாநி ச
    கிம் நோ ராஜ்யேந கோவிந்த கிம் போகைர்ஜீவிதேந வா

விஜயம் ராஜ்யம் ச ஸுகாநி-வெற்றியையும் ராஜ்யத்தையும் இன்பங்களையும்,
கோவிந்த -ஹே கோவிந்தா,
ந காங்ஷே-விரும்புகிலேன்,
ஜீவிதேந ராஜ்யேந:
போகை வா-உயிர் வாழ்க்கையாலோ அல்லது ராஜ்யத்தாலோ அல்லது இன்பங்களாலோ
கிம்-என்ன

கண்ணா, நான் வெற்றியை விரும்புகிலேன்; ராஜ்யத்தையும் இன்பங்களையும் வேண்டுகிலேன்-கோவிந்தா. நமக்கு ராஜ்யத்தால் ஆவதென்? இன்பங்களால் ஆவதென்?
உயிர் வாழ்க்கையாலேனுமாவ தென்னே?

ஹே கிருஷ் ணா! வெற்றியையும் விரும்பவில்லை ராஜ்யம் தனையும் விரும்பவில்லை |
சுகங்களையும் யான் விரும்பவில்லை கோவிந்தா! ராஜ போகத்தால் நமக்கென் பயன்? ||

———

33. யேஷாமர்தே காங்க்ஷிதம் நோ ராஜ்யம் போகா​: ஸுகாநி ச
த இமே வஸ்திதா யுத்தே ப்ராணாம்ஸ்த்யக்த்வா தநாநி ச

யேஷாம் அர்தே-எவருக்காக,
ராஜ்யம் போகா: ஸுகாநி தநாநி-அரசு, போகங்கள் இன்பங்கள், செல்வம்,
ந: காங்க்ஷிதம்-நமக்கு விருப்பமோ,
தே இமே-அந்த இவர்களே,
யுவே-யுத்தத்தில்,
ப்ராணாந்-உயிர்களை,
த்யக்த்வா-இழந்தவராய்,
இமேஅவஸ்திதா-நிற்கிறார்கள்.

யாவர் பொருட்டு நாம் ராஜ்யத்தையும், போகங்களையும், இன்பங்களையும் விரும்புகிறோமோ, அவர்கள் உயிரையும் செல்வங்களையும் துறந்தோராய் இங்கு வந்து நிற்கிறார்கள்.

யாவர்க்காக நாம் சுக போகங்களை வேண்டி விரும்பத் தக்கதாயிற்றோ |
அவர்களோ செல்வமுயிராசையும் துறந்து போர்க் களத்தில் கூடிநிற்கக் காணீர்||

34. ஆசார்யா​: பிதர​: புத்ராஸ்ததைவ ச பிதாமஹா​:
மாதுலா​: ஸ்வஸுரா​: பௌத்ரா​: ஸ்யாலா​: ஸம்பந்திநஸ்ததா

ஆசார்யா: பிதர: புத்ரா-குருமார்கள், தந்தையர், மக்கள்,
ததா பிதாமஹா: மாதுலா: ஸ்வஸுரா-அதே போல, பாட்டன்மார், மாமன்மார், மாமனார்கள்,
பௌத்ரா: ஸ்யாலா: ஸம்பந்திந-பேரரும், மைத்துனரும், உறவினர்களும்.

குருக்களும், தந்தையரும், மக்களும், பாட்டன்மாரும், மாதுலரும், மாமன்மாரும்,
பேரரும், மைத்துனரும், சம்பந்திகளும்

அனைத்து ஆசார்யர்களும் தந்தை தனயரும் அவ்வாறே பாட்டன் அம்மான் மார்களும் |
மைத்துன மாமனார்களும் பேரன் களனைவரும் உறவினருடன் கூடி யிருக்கக் காணீர்||

———-

35. ஏதாந்ந ஹந்துமிச்சாமி க்நதோ பி மதுஸூதந
அபி த்ரைலோக்யராஜ்யஸ்ய ஹேதோ​: கிம் நு மஹீக்ருதே

மதுஸூதந-மதுசூதனா,
க்நத: அபி-நான் கொல்லப்பட்டாலும்
த்ரைலோக்ய ராஜ்யஸ்ய ஹேதோ-மூவுலகின் ஆட்சிக்காகவும்,
ஏதாந் ஹந்தும் ந இச்சாமி-இவர்களை கொல்ல விரும்பவில்லை,
மஹீக்ருதே கிம் நு-பூமிக்காக (சொல்லவும் வேண்டுமா).

மதுசூதனா, யான் கொல்லப்படினும் இவர்களைக் கொல்ல விரும்புகிலேன். மூவுலகின் ஆட்சி பெறுதற்கெனினும் (இது செய்யேன் செய்யேன்!) பூமியின் பொருட்டு செய்வனோ?
மது என்ற அசுரனைக் கொன்றதனால் கிருஷ்ணனுக்கு மது சூதனன் என்ற பெயர் வந்தது.

ஓ மதுஸூதனா! என்னைக் கொன்றாலும் மூவுலக ராஜ்யத்தின் ஆசையாலும் |
கொல்லேன் இவர்களை நானொரு பொழுதும் கொல்வேனோ இப் புவியின் பொருட்டு ||

———–

36. நிஹத்ய தார்தராஷ்ட்ராந்ந​: கா ப்ரீதி​: ஸ்யாஜ்ஜநார்தந
பாபமேவாஸ்யுரயேதஸ்மாந்ஹத்வைதாநாததாயிந​:

ஜநார்தந-ஜனார்தனா,
தார்தராஷ்ட்ராந் நிஹத்ய-திருதராஷ்டிரக் கூட்டத்தாரை கொன்று,
ந: கா ப்ரீதி: ஸ்யாத்-நமக்கு என்ன இன்பம் ஏற்படப் போகிறது,
ஏதாந் ஆததாயி, த்வா-இந்த பாவிகளை கொல்வதால்,
அஸ்மாந் பாபம் ஏவ ஆஸ்ரயேத்-நம்மை பாவமே சாரும்.

ஜநார்த்தன! திருதராஷ்டிரக் கூட்டத்தாரைக் கொன்று நாம் என்ன இன்பத்தை யடையப் போகிறோம்? இந்தப் பாதகரைக் கொல்வதனால் நம்மைப் பாவமே சாரும்.

ஓ ஜனார்தனா!
திருதாஷ்டிர மைந்தர்கள் தம் உயிர்-நீக்கினால் மகிழ்ச்சி யுண்டோ நமக்கு |
இப் பஞ்சமா பாதகர் தமைக் கொன்றால் பாவம் அன்றோ நம்மைச் சாரும் ||[ ஆததாயிந =
பஞ்ச மகா பாதகர்]

———-

37. தஸ்மாந்நார்ஹா வயம் ஹந்தும் தார்தராஷ்ட்ராந்ஸ்வபாந்தவாந்
ஸ்வஜநம் ஹி கதம் ஹத்வா ஸுகிந​: ஸ்யாம மாதவ

மாதவ-ஹே மாதவா,
தஸ்மாத்-இதிலிருந்து,
ஸ்வபாந்தவாந் தார்தராஷ்ட்ராந் -சுற்றத்தார்களான திருதராஷ்டிர வர்க்கத்தாரை,
ஹந்தும் வயம் ந அர்ஹா-கொல்வதற்கு நாம் உரியவர் அல்லர்,
ஹி-ஏனெனில்,
ஸ்வஜநம் ஹத்வா-பந்துக்களை கொன்றபின்,
கதம் ஸுகிந: ஸ்யாம-எப்படி இன்புற்று இருப்போம்?

ஆதலால், சுற்றத்தாராகிய திருதராஷ்டிர வர்க்கத்தாரைக் கொல்வது நமக்குத் தகாது.
மாதவா, பந்துக்களைக் கொன்றபின் நாம் இன்புற்றிருப்பதெப்படி?

ஆம்! நம்உறவினர் துரியோதனாதிகளை நாம் கொல்லுதல் தக்கதன்றே |
ஓ மாதவா! உறவினர்களுயிர் போக்கி சுகத்தை யெப்படிக் காண்போம் ||

————-

38. யத்யப்யேதே ந பஸ்யுயந்தி லோபோபஹதசேதஸ​:
குலக்ஷயக்ருதம் தோஷம் மித்ரத்ரோஹே ச பாதகம்

லோப உபஹதசேதஸ-அவாவின் மிகுதியால் அறிவிழந்து,
ஏதே-இவர்கள்
குலக்ஷயக்ருதம் தோஷம்-குலத்தை அழிப்பதால் வரும் குற்றம்,
மித்ரத்ரோஹே பாதகம்-நண்பருக்கு துரோகம் இழைக்கும் பாவத்தையும்,
ந பஸ்யந்தி-காண்கிலர்,
யத்யபி-இருந்தும்,

அவாவின் மிகுதியால் அறிவிழந்த இவர்கள் குலத்தையழிப்பதில் விளையும் தீங்கையும்
நண்பருக்குச் சதி செய்வதிலுள்ள பாதகத்தையும் காண்கிலராயினும்,

பேராசையால் கவர்ந்த இவர் மனம் குல நாச தோஷத்தை யறியுமோ ? |
மித்ர த்ரோக பாவம் தனை உணருமோ அவர்கள் தீமையை யுணரா விடினும்.. ||

——————

39. கதம் ந ஜ்ஞேயமஸ்மாபி​: பாபாதஸ்மாந்நிவர்திதும்
குலக்ஷயக்ருதம் தோஷம் ப்ரபஸ்யத்பிர்ஜநார்தந

ஜநார்தந-ஜனார்தனா,
குலக்ஷயக்ருதம் தோஷம்-குல நாசத்தினால் வரும் குற்றம்
ப்ரபஸ்யத்பி-நன்கு அறிந்த அஸ்மாபி​-நம்மால்
பாபாத் நிவர்திதும்-பாவத்தில் இருந்து விலக,
கதம் ந ஜ்ஞேயம்-அறியாமல் இருப்பது ஏன்?

ஜநார்த்தன! குலநாசத்தால் ஏற்படுங் குற்றத்தையுணர்ந்த நாம் இப்பாவத்தினின்று விலகும் வழியறியாதிருப்பதென்ன?

ஓ ஜனார்தனா! குலநாச தோஷங்களைத் தெளிவுற நன்றாயறியும் நாம் |
இப் பாவச் செயல் விடுத்து விலகிட ஏன் முயலுதல் செ(ய்)யக் கூடாது? ||

———-

40. குலக்ஷயே ப்ரணஸ்யந்தி குலதர்மா​: ஸநாதநா​:
தர்மே நஷ்டே குலம் க்ருத்ஸ்நமதர்மோ பிபவத்யுத

குலக்ஷயே-குல நாசத்தினால்,
ஸநாதநா​-தொன்று தொட்டு வருகின்ற,
குல தர்மா​-குல தர்மங்கள்,
ப்ரணஸ்யந்தி-அழிகின்றன,
தர்மே நஷ்டே-தர்மம் அழிவதில்,
க்ருத்ஸ்நம் குலம்-குலம் முழுவதிலும்,
அதர்ம: உத அபிபவதி-அதர்மமும் பரவுகிறது.

குல நாசத்தால் என்றுமுள்ள குல தர்மங்கள் அழிகின்றன.-தர்மம் அழிவதனால் குல முழுவதையும் அதர்மம் சூழ்கிறதன்றே?

குல நஷ்ட மெய்திடில் என்றுமுள குல தர்மங்கள் அழிவது திண்ணம் |
தர்மம் அழிந்தால் குலமனைத்திலு மதர்மம் வெகுவாய்ப் பரவுமே ||

——–

41. அதர்மாபிபவாத்க்ருஷ்ண ப்ரதுஷ்யந்தி குலஸ்த்ரிய​:
ஸ்த்ரீஷு துஷ்டாஸு வார்ஷ்ணேய ஜாயதே வர்ணஸங்கர​:

அதர்ம: அபி பவாத்-அதர்மம் பரவுவதால்,
க்ருஷ்ண-கண்ணா,
குலஸ்த்ரிய​-குலப் பெண்கள்,
ப்ரதுஷ்யந்தி-கெட்டுப் போகிறார்கள்,
துஷ்டாஸு ஸ்த்ரீஷு-கெட்ட பெண்களால்,
வர்ணஸங்கர​: ஜாயதே-வர்ணக் கலப்பு உண்டாகிறது,
வார்ஷ்ணேய-விருஷ்ணி குலத் தோன்றலே!

கண்ணா, அதர்மம் சூழ்வதனால் குல ஸ்திரீகள் கெட்டுப் போகிறார்கள்.
விருஷ்ணி குலத் தோன்றலே, மாதர் கெடுவதனால் வர்ணக் குழப்பமுண்டாகிறது.

கிருஷ்ணா! அதர்மம் மிகப் பெருகிடில் குலப் பெண்கள் நன்னலம் இழப்பர்|
பெண் கள் அந்நலம் இழக்கில் வர்ணக் கலப்பும் தோன்றும் வ்ருஷ்ணி குலத்தோனே ! ||

————-

42. ஸங்கரோ நரகாயைவ குலக்நாநாம் குலஸ்ய ச
பதந்தி பிதரோ ஹ்யேஷாம் லுப்தபிண்டோதகக்ரியா​:

ஸங்கர-குழப்பத்தால்,
குலஸ்ய ச-குலத்தையும்,
குலக்நாநாம்-குல நாசம் செய்தவர்களையும்,
நரகாய ஏவ-நரகத்துக்கே (கொண்டு செல்கிறது),
பிண்ட, தகக்ரியா​: லுப்த-பிண்டமும் சடங்குகளும் இன்றி,
ஏஷாம் பிதர:
ஹி-இவர்களுடைய முன்னோர்களும்,
பதந்தி-வீழ்வர்.

அக் குழப்பத்தால் குலத்தார்க்கும் அதனை அழித்தார்க்கும் நரகமேற்படுகிறது.
இவர்களுடைய பிதிருக்கள் பிண்டமும் நீருமின்றி வீழ்ச்சி பெறுகிறார்கள்.

குல நாச கருமவர் குலமும் வர்ணக் கலப்பால் நரகம் அடைவரே |
இவர் முன்னோர் பிண்ட நீர்க் கடனற்றே நிச்சயம் வீழ்ச்சி அடைவார்களே ||

———–

43. தோஷைரேதை​: குலக்நாநாம் வர்ணஸங்கரகாரகை​:
உத்ஸாத்யந்தே ஜாதிதர்மா​: குலதர்மாஸ்ச ஸாஸ்வதா​:

குலக்நாநாம்-குலநாசம் செய்பவர்களின்,
ஏதை: வர்ணஸங்கரகாரகை​:
தோஷை-இந்த வர்ணக் கலப்பு ஏற்படுத்துகின்ற குற்றங்களால்,
ஸாஸ்வதா​-என்றும் உள்ள,
ஜாதி தர்மா​: குலதர்மா ச-குல ஜாதி தருமங்கள்,
உத்ஸாத்யந்தே-அழிகின்றன.

வர்ணக் குழப்பமுண்டாகும்படி குலக் கேடர் செய்யும் இக் குற்றங்களால் ஜாதி தர்மங்களும்
தொன்று தொட்டுள்ள குலதர்மங்களும் எடுபட்டுப் போகின்றன.

குலநாசகர் செயும் இவ் வர்ணக் கலப்பு எனுமிந்த தோஷங்களா லென்றும் |
சாச்வத ஜாதி குல தர்மங்களும் நிச்சயம் அழிவில் அழுந்துமே ||

———–

44. உத்ஸந்நகுலதர்மாணாம் மநுஷ்யாணாம் ஜநார்தந
நரகே நியதம் வாஸோ பவதித்யநுஸுஸ்ரும

உத்ஸந்ந குல தர்மாணாம்-எடுபட்டுப் போன குல தருமங்கள்,
மநுஷ்யணாம் -மனிதர்களுக்கு,
அநியதம் நரகே வாஸ-அளவற்ற காலம் நரக வாசம்,
வதி-ஏற்படுகிறது,
இதி அநுஸுஸ்ரும-கேள்விப்படுகிறோம்.

ஜநார்த்தனா! குல தர்மங்கள் எடுபட்டுப் போன மனிதருக்கு எக்காலும் நரகத்தில் வாசமென்று கேள்விப்படுகிறோம்.

ஜனார்தனா! குல தர்மத்தை யிழந்த மனிதர்கள் தாம் நரகத்தில் |
நெடிது வாழும் நிலை யடைவர் என்று கேட்டிருக்கிறோம் நாம் ||

————–

45. அஹோ பத மஹத்பாபம் கர்தும் வ்யவஸிதா வயம்
யத்ராஜ்யஸுகலோபேந ஹந்தும் ஸ்வஜநமுத்யதா​:

அஹோ-அந்தோ,
பத-பாவம்,
வயம் மஹத் பாபம் கர்தும்-பெரும் பாவம் செய்வதற்கு நாம்,
வ்யவஸிதா-முனைந்து இருக்கிறோம்,
யத் ராஜ்ய ஸுக லோபேந-ஏனெனில் ராஜ்ய சுகத்திற்கு ஆசைப் பட்டு,
ஸ்வஜநம் ஹந்தும்-சுற்றத்தாரைக் கொல்ல,
உத்யதா​-முனைந்து விட்டோம்,

அந்தோ! அரசவின்பத்தை விழைந்து சுற்றத்தாரைக் கொல்ல முற்படும் நாம் பெரிய பாவஞ் செய்யத் தலைப்பட்டோம்!

அந்தோ பெரும் பாவம் செய விழைந்தோம் அன்றோ நாமே |
ராஜீயசுக ஆசையாலே கொல்லவே முனைந்தோமோ உறவினர்கள் தமையே ||

————

46. யதி மாமப்ரதீகாரமஸஸ்த்ரம் ஸஸ்த்ரபாணய​:
தார்தராஷ்ட்ரா ரணே ஹந்யுஸ்தந்மே ÷க்ஷமதரம் பவேத்

அஸஸ்த்ரம்-ஆயுதம் இன்றி,
அப்ரதீகாரம்-எதிர்த்து போரிடாமல்,
மாம்-என்னை,
ஸஸ்த்ரபாணய​-ஆயுதம் தாங்கிய,
தார்தராஷ்ட்ரா-திருதராஷ்டிரக் கூட்டத்தார்,
யதி ரணே ஹந்யு-ஒருவேளை போரில் கொன்று விடினும்,
தத் மே-அதில் எனக்கு, ÷
க்ஷமதரம் பவேத்-நன்மையே ஆகிறது.

கையிலாயுதமில்லாமல், எதிர்க்காமல் நிற்குமென்னை இந்தத் திருதராஷ்டிரக் கூட்டத்தார்
ஆயுத பாணிகளாய்ப் போரில் மடித்து விடினும் அது எனக்குப் பெரிய நன்மையேயாம்-இக் கூற்றானது அளவுக்கு மிஞ்சிய மனக்குழப்பத்தின் அறிகுறியாகும்.

ஆயுதமின்றி எதிர்த்துப் போரிடா எனை ஆயுதம் தாங்கியே துரியோதனாதிகள் |
இப் போர்க் களத்தில் கொன்றாலும் அது வெனக்கு நன்மை பயப்பதாகுமே ||

———

ஸஞ்ஜய உவாச

47. ஏவமுக்த்வார்ஜுந​: ஸங்க்யே ரதோபஸ்த உபாவிஸத்
விஸ்ருஜ்ய ஸஸரம் சாபம் ஸோகஸம்விக்நமாநஸ​:

ஸங்க்யே-போர்க்களத்தில்,
ஸோக ஸம்விக்ந மாநஸ​-சோகத்தினால் கலங்கிய மனத்துடன்,
அர்ஜுந​: ஏவம் உக்த்வா-அர்ஜுனன் இவ்வாறு கூறி,
ஸஸரம் சாபம்- அம்பையும் வில்லையும்,
விஸ்ருஜ்ய-எறிந்து விட்டு,
ரதோபஸ்த-தேர்த்தட்டில்,
உபாவிஸத்-உட்கார்ந்தான்.

சஞ்ஜயன் சொல்லுகிறான்: செருக் களத்தில் இவ்வாறு சொல்லி விட்டுப் பார்த்தன் அம்புகளையும் வில்லையும் எறிந்து போட்டுத் துயரில் மூழ்கிய மனத்தனாய்த் தேர்ப் பீடத்தின் மேலுட்கார்ந்து கொண்டான்.

சஞ்ஜயன் புகன்றான்’
சோகம் தாக்கிய மனதுடை அர்ஜுனன் போர்க் களத்தி லிவ்விதம் பகன்றே |
வில்லம்புகளைக் கீழ் எறிந்தே தேர்த் தட்டில் அமர்ந்தனனே ||

———————————-

அத² த்³விதீய அத்⁴யாய: ।-இரண்டாம் அத்தியாயம் -ஸாங் க்²ய யோக³: । “தத்துவ ஞானத்தைப் பெறுதல் ”

ஸஞ்ஜய உவாச

1. தம் ததா க்ரிபயாவிஷ்டமஸ்ருபூர்ணாகுலேக்ஷணம்
விஷீதந்தமிதம் வாக்யமுவாச மதுஸூதந:

ஸஞ்ஜய உவாச-சஞ்சயன் சொல்லுகிறான்
ததா க்ரிபயா ஆவிஷ்டம்-அவ்வண்ணம் இரக்கம் மிஞ்சியவனாய்
அஸ்ருபூர்ண ஆகுல ஈக்ஷணம்- நீர் நிரம்பிய விழிகளுடன்
விஷீதந்தம்-சோகத்தோடு கூடிய தம்-அவனை (அர்ஜுனனை)
மதுஸூதந: இதம் வாக்யம் உவாச- மதுசூதனன் இந்த வாக்கியத்தை சொல்லுகிறான்

அவ்வண்ணம் இரக்க மிஞ்சியவனாய் நீர் நிரம்பிய சோக விழிகளுடன் வருந்திய
அர்ஜுனனை நோக்கி மதுசூதனன் சொல்லுகிறான்:

சஞ்ஜயன் புகன்றான்”
இவ்வித மிரக்கம் மேலோங்கி கண்களில் கண்ணீர் ததும்பி வழிய I
சோகமே வடிவான அர்ஜுனனிடம் மதுசூதனன் இவ் வார்த்தை தனைப் பகர்ந்தனனே II

ஸ்ரீ பகவாநுவாச

2. குதஸ்த்வா கஸ்மலமிதம் விஷமே ஸமுபஸ்திதம்
அநார்யஜுஷ்டமஸ்வர்க்யமகீர்திகரமர்ஜுந

ஸ்ரீ பகவான் உவாச-
ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்
அர்ஜுந!-அர்ஜுனா
விஷமே-தகாத சமயத்தில்
குத த்வா இதம் கஸ்மலம் ஸமுபஸ்திதம்-எங்கிருந்து உன்னை இந்த உள்ளச் சோர்வு அடைந்தது
அநார்யஜுஷ்டம்-ஆரியருக்கு தகாதது
அஸ்வர்க்யம்-வானுலகை தடுப்பது
அகீர்திகரம்-புகழையும் தராதது

ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: இந்த முட்டுதலில் இவ்வுள்ளச் சோர்வை நீ எங்கிருந்து பெற்றாய்? இஃது ஆரியருக்குத் தகாது. வானுலகைத் தடுப்பது; அபகீர்த்தி தருவது அர்ஜுனா!

ஸ்ரீபகவான் பகர்ந்தார்”
ஹே அர்ஜுனா! தகாத சமயந் தனில் இம் மோஹம் வந்ததன் காரணமென் சொல் I
இச் செயல் சான்றோர் தவிர்த்ததன்றோ உனக்கிது ஸ்வர்க்கமும் புகழுமளிக்காதே II

———

3. க்லைப்யம் மா ஸ்ம கம: பார்த்த நைதத்த்வய்யுபபத்யதே
க்ஷத்ரம் ஹ்ருதய தௌர்பல்யம் த்யக்த்வோத்திஷ்ட பரந்தப

க்லைப்யம் மா ஸ்ம கம:-அலியின் தன்மையை அடையாதே
ஏதத் ந உபபத்யதே-இது பொருத்தமன்று
க்ஷத்ரம் ஹ்ருதய தௌர்பல்யம் த்யக்த்வா-இழிந்த மனத்தளர்ச்சியை விடுத்து
உத்திஷ்ட பரந்தப-எழுந்து நில், பகைவரைச் சுடுவோனே.

பார்த்தா பேடித் தன்மை யடையாதே! இது நினக்குப் பொருந்தாது.
இழிபட்ட மனத் தளர்ச்சியை நீக்கி எழுந்து நில்; பகைவரைச் சுடுவோனே!

ஓ பார்த்தனே ! பேடித்தன்மையை அடையாதே உனக்கித் தன்மை பொருத்தமன்றே I
“இழிந்த இவ் வுள்ளத் தளர்ச்சியினையே விடுத்து போருக்கெழுந்திடு” பரந்தப! II

—–

அர்ஜுந உவாச

4. கதம் பீஷ்மமஹம் ஸங்க்யே த்ரோணம் ச மதுஸூதந
இஷுபி: ப்ரதியோத்ஸ்யாமி பூஜார்ஹாவரிஸூதந

அர்ஜுந உவாச-அர்ஜுனன் சொல்லுகிறான்
அஹம் ஸங்க்யே-நான் போரில்
கதம் இஷுபி:-எவ்வாறு அம்புகளால்
பூஜார்ஹௌ பீஷ்மம் த்ரோணம் ச-தொழுதற்குரிய பீஷ்மர், துரோணர் ஆகியோரை
ப்ரதியோத்ஸ்யாமி-எதிர்ப்பேன்
அரிஸூதந-பகைவர்களை அழிப்பவனே

அர்ஜுனன் சொல்லுகிறான்: மதுசூதனா, பீஷ்மனையும் துரோணரையும் போரில் அம்புகளால் எப்படி எதிர்ப்பேன்? இவர்கள் தொழுதற்குரியவர்; பகைவரை யழிப்போய்!

“அர்ஜுனன் புகன்றான்”
ஓமதுஸூதனா! இப் போர்களம் தனில் நான் பெரியோராம் பீஷ்ம துரோணர்களை I
அரிஸூதனா! பூஜைக்குரிய இவர்களை அம்புகளாலே எவ்விதம் எதிர்ப்பேன் II

———

5. குரூநஹத்வா ஹி மஹாநுபாவாஞ் ச்யுரேயோ போக்தும் பைக்ஷ்யமபீஹ லோகே
ஹத்வார்தகாமாம்ஸ்து குரூநிஹைவ புஞ்ஜீய போகாந் ருதிரப்ரதிக்தாந்

மஹாநுபாவாந் குரூந் அஹத்வா- பெரியோராகிய குருக்களைக் கொல்லாமல்
இஹ லோகே-இவ்வுலகத்தில்
பைக்ஷ்யம் அபி-பிச்சையெடுத்து
போக்தும் ஸ்ரேய:-உண்பதும் நன்று
ஹி-ஏனெனில்
அர்த காமாந் குரூந் ஹத்வா-பொருளை விரும்பும் குருக்களைக் கொன்று
இஹ-உலகில்
புஞ்ஜீய-துய்க்கும்
போகாந் ருதிரப்ரதிக்தாந் ஏவ-இன்பங்கள் உதிரத்திற் (ரத்தத்தில்) கலந்தனவாம்

பெரியோராகிய குருக்களைக் கொல்லாமல், உலகத்தில் பிச்சை யெடுத்துண்பதும் நன்று.
பொருளை விரும்பும் குருக்களைக் கொன்று நாம் துய்க்கும் இன்பங்கள் உதிரத்தில் (ரத்தத்தில்) கலந்தனவாம்.

மேன்மை பொருந்தின ஆச்சார்யர்களைக் கொல்லாமல் இவ் வுலகிலே
மேன்மை தருமே பிச்சையால் கிட்டும் உணவையும் கூட உண்பதாலே I
குருமார்களைக் கொன்ற பின் இப் புவியில் அனுபவிக்கப் போகிறேன்
இரத்தம் கலந்த செல்வமும்; ஆசைக்குரிய வஸ்து போகங்களையே
II

———

6. ந சைதத்வித்ம: கதரந்நோ கரீயோ யத்வா ஜயேம யதி வா நோ ஜயேயு:
யாநேவ ஹத்வா ந ஜிஜீவிஷாமஸ் தேவஸ்திதா: ப்ரமுகே தார்தராஷ்ட்ரா:

ந:-நமக்கு
கதரத் கரீயோ-இவற்றுள் எது மேன்மை
யத்வா ஜயேம-இவர்களை வெல்லுதல்
யதி வா நோ ஜயேயு:-இவர்கள் நம்மை வெல்லுதல்
ந வித்ம:-விளங்கவில்லை
யாந் ஹத்வா ந ஜிஜீவிஷாம -எவரைக் கொன்ற பின் நாம் வாழ விரும்ப மாட்டோமோ
தே தார்தராஷ்ட்ரா: ஏவ-அத்தகைய திருதராஷ்டிரக் கூட்டத்தார்
ப்ரமுகே அவஸ்திதா:-முன்னே நிற்கிறார்கள்

மேலும், நாம் இவர்களை வெல்லுதல், இவர்கள் நம்மை வெல்லுதல் -இவற்றுள் எது நமக்கு மேன்மை யென்பது விளங்கவில்லை. எவரைக் கொன்ற பின் நாம் உயிர் கொண்டு வாழ விரும்போமோ, அத்தகைய திருதராஷ்டிரக் கூட்டத்தார் போர் முனையில் வந்து நிற்கிறார்கள்.

நமக்கு இவ்விரண்டில் எது சிறந்த தென்றறியோம்
நாமோ ! இவர்களோ ! வெல்வோம் என்பது மறியோம் I
எவர்களைக் கொன்ற பின் வாழ விரும்ப வில்லையோ
அத் துரியோதனாதிகளே எதிர்த்து நிற்கின்றனர் நம் முன்னே II

————-

  1. கார்பண்யதோஷோபஹத ஸ்வபாவ: ப்ருச்சாமி த்வாம் தர்ம ஸம்மூடசேதா:
    யச்ச்ரேய: ஸ்யாந் நிஸ்சிதம் ப்ரூஹி தந்மே ஸிஷ்யஸ்தேஹம் ஸாதி மாம் த்வாம் ப்ரபந்நம்

கார்பண்யதோஷ உபஹத ஸ்வபாவ:-கோழைத் தனத்தால் சீரழிந்த சுபாவம்
தர்மஸம்மூடசேதா:-அறம் இன்னது என்றுணராமல் மயங்கிய அறிவுடன்
த்வாம் ப்ருச்சாமி-உன்னைக் கேட்கிறேன்
யத் ஸ்ரேய: ஸ்யாத்-எது நல்லது
தத் மே நிஸ்சிதம் ப்ரூஹி-அதை நிச்சயப் படுத்தி சொல்லுக
அஹம் தே ஸிஷ்ய-நான் உங்கள் சீடன்
த்வாம் ப்ரபந்நம் மாம் ஸாதி-உன்னை சரணடைந்த எனக்கு கட்டளை இடுக

சிறுமையாகிய குறையால் இயல்பு அழிந்தவனாய், அறம் இன்னது என்றுணராமல் மயங்கிய அறிவுடன்,யான் உன்னைக் கேட்கிறேன். எது நன்றென்பதை எனக்கு நிச்சயப்படுத்திக் சொல்லுக. நான் உன் சீடன். உன்னையே சரணமெனப் புகுந்தேன். கட்டளை தருக.

கோழைத்தன மோங்கிச் சீரழிந்த மன முடையோனாகி தர்மத்தில்
குழம்பிய மனதால் தங்களிடம் வினவுகின்றேன் ஏதெனக்கு I
நிலையான மேன்மை யளித்திடுமோ அதைப் புகல்வீர்; உம் சீடன் நான்
எனக்கு பதேசித்துக் காப்பீர், தங்களை சரணடைகின்றேனே II

————

8. ந ஹி ப்ரபஸ்யாமி மமாபநுத்யாத் யச்சோகமுச்சோஷணமிந்த்யூரியாணாம்
அவாப்ய பூமாவஸபத்நம்ருத்தம் ராஜ்யம் ஸுராணாமபி சாதிபத்யம்

ஹி-ஏனெனில்
பூமௌ-பூமியில்
அஸபத்நம்-எதிரிகளற்றருத்தம்-செழிப்பான
ஸுராணாம் ச அதிபத்யம் ராஜ்யம்-வானோர்மிசை ஆட்சி அவாப்ய அபி-அடைந்தாலும்
யத் மம இந்த்ரியாணாம்-என்னுடைய புலன்களை
உச்சோஷணம் சோகம்-வாட வைக்கின்ற சோகம்
அபநுத்யாத்-போக்கடிக்கும்
ந ப்ரபஸ்யாமி-காணவில்லை

பூமியின் மேல் நிகரில்லாத செல்வமுடைய ராஜ்யம் பெறினும், அன்றி வானோர் மிசை ஆட்சி பெறினும் புலன்களை அடக்கும் இயல்புடைய இந்தத் துயர் எம்மை விட்டு நீங்குமென்று தோன்றவில்லை.

பூமியில் எதிரிகளற்ற தன தான்யங்கள் மிகு ராஜ்யமும்
தேவர்களுக் கரசனாய் இருக்கும் நிலை யடையப் பெறினும் I
எனது இப் புலன் களையெலாம் வாட்டுகின்ற சோகந் தனை
போக்குமென அதனை நான் ஒரு பொழுதும் காண்கிறேனிலேன் II

——–

ஸஞ்ஜய உவாச

9. ஏவமுக்த்வா ஹ்ருஷீகேஸம் குடாகேஸ: பரந்தப:
ந யோத்ஸ்ய இதி கோவிந்தமுக்த்வா தூஷ்ணீம் பபூவ ஹ

ஸஞ்ஜய உவாச-ஸஞ்ஜயன் சொல்லுகிறான்
பரந்தப:-எதிரிகளை எரிப்பவனே!
குடாகேஸ: ஹ்ருஷீகேஸம்
ஏவம் உக்த்வா-உறக்கத்தை வென்றவன் அர்ஜுனன்), ஸ்ரீ கிருஷ்ணனிடம் இவ்விதம் சொல்லி
ந யோத்ஸ்யே இதி ஹ கோவிந்தம் உக்த்வா-இனி போர் புரியேன் என்று கோவிந்தனிடம் சொல்லி
தூஷ்ணீம் பபூவ-மௌனம் ஆனான்.

சஞ்ஜயன் சொல்லுகிறான்: பகைவரைக் கொளுத்தும் பார்த்தனங்கு பசு நிரை காக்கும் பகவனை நோக்கிப் போரினிப் புரியேன் என்று வாய் புதைத்திருந்தான்.

“சஞ்ஜயன் புகன்றான்”
எதிரிகளை வாட்டுபவனான குடாகேசன் புலன்களின் அதிபதியாம் ஹ்ருஷீகேசரிடம்
இவ்விதம் கூறியே போர் புரியேன் என்றுரைத்து மௌனமாகி விட்டான் II

—-

10. தமுவாச ஹ்ருஷீகேஸ: ப்ரஹஸந்நிவ பாரத
ஸேநயோருபயோர்மத்யே விஷீதந்தமிதம் வச:

பாரத-பாரதா
உபயோ: ஸேநயோ: மத்யே-இரண்டு படைகளுக்கும் நடுவே
விஷீதந்தம்- துயருற்று இருக்கும்
தம்-அவனிடம் (அர்ஜுனன்)
ப்ரஹஸன் இவ- புன்னகை பூத்து
இதம் வச: உவாச-இவ்வசனம் கூறினான்.

பாரதா, அப்போது கண்ணன் புன்னகை பூத்து, இரண்டு படைகளுக்கும் நடுவே துயருற்று நின்ற பார்த்தனை நோக்கி இவ் வசனமுரைக்கிறான்:

பரத வம்சத்தரசே ! புலன்களின் அதிபதி இருசேனை நடுவிருக்கும் துயரோன்- I
அர்ஜுனனை நோக்கியே , புன் சிரிப்பு மேலிட வாய் மலர்ந்தாரே இவ் வார்த்ததகளை II[ ஹ்ருஷீகேஶ
: = புலன்களின் அதிபதி ]

———

11. அஸோச்யாநந் வஸோசஸ்த்வம் ப்ரஜ்ஞாவாதாம்ஸ்ச பாஷஸே
கதாஸூநகதாஸூம்ஸ்ச நாநுஸோசந்தி பண்டிதா:

ஸ்ரீ பகவான் சொல்கிறான்

த்வம்-நீ அஸோச்யாந்-துயர் படத் தகாதார்
அந்வஸோச:-வருந்துகிறாய்
ப்ரஜ்ஞாவாதாந்-பண்டிதர்களைப் போன்று
பாஷஸே-பேசுகிறாய்
கதாஸூந்-இறந்தார்க்கேனும்
அகதாஸூந்-இருந்தார்க்கேனும்
பண்டிதா: ந அநுஸோசந்தி-பண்டிதர்கள் வருந்துவது இல்லை

துயர்ப் படத் தகாதார் பொருட்டுத் துயர்ப்படுகின்றாய். ஞான வுரைகளு முரைக்கின்றாய்!
இறந்தார்க் கேனும் இருந்தார்க் கேனுந் துயர் கொளார் அறிஞர்.

“ஸ்ரீபகவான் பகர்ந்தார்”
துக்கப்படத் தகாதவர்க்கு துக்கிக்கிறாய் பண்டிதர்கள் போல் பகருகின்றாய்நீ I
உயிர் பிரிந்தும் பிரியாத வர்களுக்காக ஞானிகள் இருப்பர் வருத்தமின்றியே II

——–

12. நத்வேவாஹம் ஜாது நாஸம் ந த்வம் நேமே ஜநாதிபா:
ந சைவ ந பவிஷ்யாம: ஸர்வே வயமத: பரம்

ஜாது அஹம் ந ஆஸம் ந ஏவ-எக்காலத்திலும் நான் இல்லாதிருந்திலேன்,
ந த்வம் இமே ஜநாதிபா: ச ந ஏவ-நீயும் இங்குள்ள வேந்தர் யாவரும் அப்படியே,
அத: பரம்-இனி மேலும்,
வயம் ஸர்வே ந பவிஷ்யாம:-நாம் அனைவரும் இல்லாமற் போகவும் மாட்டோம்

இதன் முன் எக்காலத்திலும் நான் இல்லாதிருந்திலேன். நீயும் இங்குள்ள வேந்தர் யாவரும் அப்படியே. இனி நாம் என்றைக்கும் இல்லாமற் போகவும் மாட்டோம்.

இவ்விதம் நானில்லாம லிருந்ததென்பது இல்லை ; நீ யுமிவ்வரசர்களும் இல்லாமல் I
இருந்ததில்லை ஒரு பொழுதும்; நாமெலாம் இனியுமில்லாமற் போவதென் பதில்லையே II

——–

13. தேஹிநோऽஸ்மிந்யதா தேஹே கௌமாரம் யௌவநம் ஜரா
ததா தேஹாந்தரப்ராப்திர்தீரஸ்தத்ர ந முஹ்யதி

யதா தேஹிந:-எப்படி ஆத்மாவுக்கு,
அஸ்மிந் தேஹே-இந்த உடலில்
கௌமாரம் யௌவநம் ஜரா-பிள்ளைப் பிராயமும் இளமையும்,
மூப்பும் ததா தேஹாந்தரப்ராப்தி-அப்படியே வேறு உடலும் வந்து சேருகிறது
தீர தத்ர ந முஹ்யதி-தீரன் அதில் கலங்கமாட்டான்.

ஆத்மாவுக்கு இவ்வுடலில் எங்ஙனம் பிள்ளைப் பிராயமும் இளமையும், மூப்பும் தோன்றுகின்றனவோ அங்ஙனமே மற்றொரு சரீரப் பிறப்புந் தோன்றுகிறது. தீரன் அதில் கலங்கமாட்டான்.

எவ்விதம் ஜீவனுக்கு இளமையும் வாலிபமும்
முதுமையும் இவ் வுடலில் தோன்றுவது போல் I
அவ்விதம் வேறுடலெடுப்பதுவு மமைகிறதே
அறிவாளி யிக் கூற்றில் மயங்குவதில்லையே II

———

14. மாத்ராஸ்பர்ஸாஸ்து கௌந்தேய ஸீ÷க்ஷதாஷ்ணஸுகது:கதா:
ஆகமாபாயிநோऽநித்யாஸ்தாம்ஸ்திதிக்ஷஸ்வ பாரத

கௌந்தேய-குந்தியின் மகனே,
ஸீதோஷ்ண ஸுகது:கதா:-குளிரையும் வெப்பத்தையும், இன்பத்தையும் துன்பத்தையும்,
மாத்ராஸ்பர்ஸா: து-இயற்கையின் தீண்டுதல்கள்,
ஆகமாபாயிந:-உண்டாகி அழிபவை
அநித்யா:-அநித்யமானவை
பாரத – தாந் ஸ்திதிக்ஷஸ்வ-பாரதா, அவற்றைப் பொறுத்துக் கொள்.

குந்தியின் மகனே, குளிரையும் வெப்பத்தையும், இன்பத்தையும் துன்பத்தையும் தரும் இயற்கையின் தீண்டுதல்கள் தோன்றி மறையும் இயல்புடையன. என்றுமிருப்பனவல்ல. பாரதா, அவற்றைப் பொறுத்துக் கொள்.

புலன்களின் போக விஷயச் சேர்க்கை தருமே குளிர் வெப்பம் சுக துக்கங்களையே I
நிலை யில்லா இவை தோன்றி மறைபவையே அவை தமைப் பொறுத்திடு பரத குலத்தோனே II

———-

15. யம் ஹி ந வ்யதயந்த்யேதே புருஷம் புருஷர்ஷப
ஸமது:கஸுகம் தீரம் ஸோऽம்ருதத்வாய கல்பதே

ஹி-ஏனெனில்,
புருஷர்ஷப-புருஷர்களில் சிறந்தவனே,
ஸமது:கஸுகம்-இன்பமுந்துன்பமும் நிகரென,
யம் தீரம் புருஷம்-எந்த தீர புருஷன், ந வ்யதயந்தி-கலங்க வைப்பதில்லையோ,
ஸ: அம்ருதத்வாய கல்பதே-அந்த தீரன் சாகாதிருக்கத் தகுவான்.

யாவன் இவற்றால் துயர்ப்படான், இன்பமுந்துன்பமும் நிகரெனக் கொள்வான்,
அந்த தீரன், சாகாதிருக்கத் தகுவான்.

சிறந்தோனே புனிதர்களில்! எத்தீரன் சுக துக்கங்களைச் சமமாய்க் கருதுவானோ I
அவனைக் கலங்கச் செய்யா இவ் விருமைகள் அவன் தகுதியுற்றான் மாேஷத்திற்கே II

———

16. நாஸதோ வித்யதே பாவோ நாபாவோ வித்யதே ஸத:
உபயோரபி த்ருஷ்டோऽந்தஸ்த்வநயோஸ்தத்த்வதர்ஸிபி:

அஸத: பாவ ந வித்யதே-இல்லாததற்கு இருப்பது என்பது இல்லை,
ஸத: அபாவ ந வித்யதே-உள்ளதற்கு இல்லாதது என்பது இல்லை,
அநயோ உபயோ அபி அந்த:-இந்த இரண்டுக்குமுள்ள தத்துவம்
தத்த்வதர்ஸிபி: த்ருஷ்டா-தத்துவ தரிசிகள் உணர்வார்.

இல்லாதது உண்மையாகாது. உள்ளது இல்லாததாகாது.
உண்மை யறிவார் இவ்விரண்டுக்குமுள்ள வேற்றுமை யுணர்வார்.

இல்லாததற்கு இருப்பு என்பதில்லையே இருப்பதற்கு இல்லாமை யென்ப தில்லையே I
இருப்பதில்லாமை இவ் விரு தத்துவம் தனையே இறை ஞானிகள் இவ்விதம் கண்டறிந்தனரே II[ தத்த்வ த³ர்ஶிபி
= இறை ஞானிகள் = ஆத்ம ஞானிகள் =
தனை யுணர்ந்தவர்கள் ]

———-

17. அவிநாஸி து தத்வித்தி யேந ஸர்வமிதம் ததம்
விநாஸமவ்யயஸ்யாஸ்ய ந கஸ்சித்கர்துமர்ஹதி

அவிநாஸி து-அழிவற்றது தான் என்று,
தத் வித்தி:-அதை அறிந்து கொள்.
யேந இதம் ஸர்வம்-எதனால் இவை அனைத்தும்,
ததம்-வியாபிக்கப் பட்டிருக்கிறதோ
அஸ்ய அவ்யயஸ்ய-அந்த அழிவற்றதற்கு,
விநாஸம் கர்தும் கஸ்சித் ந அர்ஹதி-அழிவை ஏற்படுத்த யாருக்கும் இயலாது.

இவ்வுலக முழுவதிலும் பரந்து நிற்கும் பொருள் அழிவற்ற தென்றறி; இது கேடற்றது;
இதனை யழித்தல் யார்க்கும் இயலாது.

அழிவற்றதென்று அதை யறிந்து கொள்வாய் அனைத்தும் எதனால் வியாபிக்கப் பட்டுளதோ I
அந்த அழிவில்லாததற்கு ஆங்கழிவை ஆக்குவதற்கு எவர்க்கு மாற்றலில்லையே II

———-

18. அந்தவந்த இமே தேஹா நித்யஸ்யோக்தா: ஸரீரிண:
அநாஸிநோப்ரமேயஸ்ய தஸ்மாத்யுத்யஸ்வ பாரத

அநாஸிந:-அழிவற்றான்,
அப்ரமேயஸ்ய-அளவிடத்தகாதான்,
நித்யஸ்ய-நித்தியன்,
ஸரீரிண: இமே தேஹா-ஆத்மாவினுடைய இந்த வடிவங்கள்,
அந்தவந்த உக்தா:-அழியக் கூடியவையாக என்பர்,
தஸ்மாத் யுத்யஸ்வ பாரத-ஆதலால் பாரதா, போர் செய்.

ஆத்மா நித்தியன்; அழிவற்றான்; அளவிடத்தகாதான். எனினும் அவனுடைய வடிவங்கள்
இறுதியுடையன என்பர். ஆதலால் பாரதா, போர் செய்.

அறிதற் கரிதான ஜீவன் முடிவில்லா நித்யமாம் அதனுடை இவ் வுடலங்கள் அனைத்தும் I
அழியக் கூடியவை யென்று கூறப்பட்டுளது ஆதலால் பரத குலத்தோனே ! போர் புரிவாயாக
II[ இவ்வுடலங்கள் = இந்த சரீரங்கள் = ஶரீரிண: ]

———-

19. ய ஏநம் வேத்தி ஹந்தாரம் யஸ்சைநம் மந்யதே ஹதம்
உபௌ தௌ ந விஜாநீதோ நாயம் ஹந்தி ந ஹந்யதே

ய: ஏநம்-எவன் இந்த (ஆத்மாவை),
ஹந்தாரம் வேத்தி-கொல்பவனாக நினைக்கிறானோ,
ய: ஏநம் ஹதம் மந்யதே-எவன் இந்த ஆத்மாவை கொல்லப் பட்டவனாக நினைக்கிறானோ,
தௌ உபௌ-அந்த இருவருமே,
ந விஜாநீத:-அறியாதவர்கள்,
அயம் ந ஹந்தி-இவன் கொல்லுவதுமில்லை,
ந ஹந்யதே-கொலையுண்டதுமில்லை.

இவன் கொல்வானென்று நினைப்போனும் கொல்லப்படுவானென்று நினைப்போனும் இருவரும் அறியாதார். இவன் கொல்லுவதுமில்லை, கொலையுண்பதுமில்லை. இவன் பிறப்பதுமில்லை;

எவனிதைக் கொல்பவனாக அறிகின்றானோ எவனிதைக் கொல்லப்பட்டதா யறிகின்றானோ I
இவ் வுண்மை அறியாதோரிவ் விருவரே இவ் வாத்மா கொல்வதும் கொல்லப்படுவது மில்லையே II

————-

20. ந ஜாயதே ம்ரியதே வா கதாசிந்
நாயம் பூத்வா பவிதா வா ந பூய:
அஜோ நித்ய: ஸாஸ்வதோऽயம் புராணோ
ந ஹந்யதே ஹந்யமாநே ஸரீரே

அயம் கதாசித்-இந்த ஆத்மா எப்போதும்,
ந ஜாயதே வா ம்ரியதே-பிறப்பதும் இல்லை இறப்பதும் இல்லை,
பூத்வா பூய: ந பவிதா-முன் உண்டாகி பிறகு ஏற்படக் கூடியதும் இல்லை,
அயம் அஜ: நித்ய: ஸாஸ்வத: புராண:-இவன் பிறப்பற்றான்; அனவரதன்; சாசுவதன்; பழையோன்,
ஸரீரே ஹந்யமாநே ந ஹந்யதே-உடம்பு கொல்லப்படுகையில் இவன் கொல்லப்படான்.

எக்காலத்திலும் இறப்பதுமில்லை. இவன் ஒரு முறையிருந்து பின்னர் இல்லாது போவதுமில்லை-இவன் பிறப்பற்றான்; அனவரதன். இவன் சாசுவதன்; பழையோன்; உடம்பு கொல்லப்படுகையில் இவன் கொல்லப்படான்.

இவ்வாத்மா ஒரு போதும் பிறப்பது மிறப்பது மில்லையே இருந்து விட்டு மீண்டு மில்லாமல் போவதென்பதுமில்லையே I
இவ்வாத்மா பிறவாத, நித்யமான, மாறாத, பழமை யானதுமாம் மிவ் வாத்மாவுக் கழிதவன்ப தில்லையே இவ்வுடலழியும் இடத்தும்
II[ இருந்துவிட்டு = ஒரு காலத்தில் இருந்து விட்டு = பூத்வா ]

——–

21. வேதாऽவிநாஸிநம் நித்யம் ய ஏநமஜமவ்யயம்
கதம் ஸ புருஷ: பார்த கம் காதயதி ஹந்தி கம்

பார்த-பார்த்தா!
ஏநம்-இந்த பொருள் (ஆத்மா),
அவ்யயம்-மாறாதது,
நாஸிநம்-அழிவற்றது,
நித்யம்-என்றும் உளது,
அஜம்-பிறப்பற்றது,
ய: புருஷ: வேத-எந்த மனிதன் உணர்கிறானோ,
ஸ: கதம் கம் காதயதி ஹந்தி-அவன் யாரை கொல்வது? யாரை கொல்விப்பது?

இப்பொருள் அழிவற்றது, பிறப்பற்றது, என்றுமுளது இங்ஙனமுணர்வான் கொல்வதெவனை? அவன் கொல்விப்பதெவனை?

பார்த்தனே ! இவ்வாத்மா அழிவற்றது என்றுமுளது பிறவாதது மாறுதலற்றதென்று I
எவனொருவ னறிகின்றானோ அம் மனிதன் எவ்வாறெவரைக் கொல்வான் கொல்விப்பான் II

——-

22. வாஸாம்ஸி ஜீர்ணாநி யதா விஹாய
நவாநி க்ருஹ்ணாதி நரோऽபராணி
ததா ஸரீராணி விஹாய ஜீர்ணாந்
யந்யாநி ஸம்யாதி நவாநி தேஹீ

யதா நர:-எப்படி மனிதன்,
ஜீர்ணாநி வாஸாம்ஸி விஹாய-பழைய துணிகளை நீக்கி விட்டு
நவாநி க்ருஹ்ணாதி-புதியதை எடுத்துக் கொள்கிறானோ,
ததா தேஹி ஜீர்ணாநி ஸரீராணி விஹாய-அவ்வாறே ஆத்மா நைந்த உடல்களை களைந்து,
அந்யாநி நவாநி ஸம்யாதி-வேறு புதியதை அடைகிறான்.

நைந்த துணிகளைக் கழற்றி யெறிந்துவிட்டு மனிதன் புதிய துணிகள் கொள்ளுமாறு போல,ஆத்மா நைந்த உடல்களைக் களைந்து புதியனவற்றை எய்துகிறான்.

எவ்விதம் மனிதன் நைந்த தன் துணிகளைக் களைந்து விட்டு வேறு புதுப்புது ஆடைகளை அணிந்து கொள்கிறானோ I
அவ்விதம் ஜீவன் பழைய நைந்த விவ் வுடல்களை விட்டு வேறு புதுப் புது உடல்களை அணிந்து கொள்கின்றானே II

——

23. நைநம் சிந்தந்தி ஸஸ்த்ராணி நைநம் தஹதி பாவக:
ந சைநம் க்லேதயந்த்யாபோ ந ஸோஷயதி மாருத:

ஏநம் ஸஸ்த்ராணி ந சிந்தந்தி-இவனை ஆயுதங்கள் வெட்டுவதில்லை,
ஏநம் பாவக: ந, தஹதி-இவனை நெருப்பு எரிப்பதில்லை,
ஏநம் ஆப: ந க்லேதயந்தி-இவனை தண்ணீர் நினைப்பதில்லை,
மாருத: ச ந ஸோஷயதி-காற்றும் உலர்த்துவதில்லை.

இவனை ஆயுதங்கள் வெட்ட மாட்டா; தீ எரிக்காது; நீர் இவனை நனைக்காது; காற்று உலர்த்தாது.

இவ்வாத்மாவை ஆயுதம் வெட்டுவதில்லை இவ்வாத்மாவை நெருப்பும் எரிப்பதில்லை I
இவ்வாத்மாவை நீரும் நனைப்பதில்லை இவ்வாத்மாவை , காற்றும் உலர்த்துவதில்லையே II

——-

24. அச்சேத்யோऽயமதாஹ்யோऽயமக்லேத்யோऽஸோஷ்ய ஏவ ச
நித்ய: ஸர்வகத: ஸ்தாணுரசலோயம் ஸநாதந:

அயம் அச்சேத்ய:-இவன் பிளத்தற்கரியவன்,
அயம் அதாஹ்ய:-எரிக்கப் பட முடியாதவன்,
அக்லேத்ய:-நனைக்கப் படமுடியாதவன்,
அஸோஷ்ய:-உலர்த்தப் படமுடியாதவன்,
நித்ய: ஸர்வகத:-நித்தியன்; எங்கும் நிறைந்தவன்,
ஸ்தாணு அசல:-உறுதி உடையவன்; அசையாதவன்
ஸநாதந:-என்றும் இருப்பான்.

பிளத்தற் கரியவன்; எரித்தற்கும், நனைத்தற்கும், உலர்த்துதற்கும் அரியவன்; நித்தியன்;
எங்கும் நிறைந்தவன்; உறுதியுடையான்; அசையாதான்; என்றும் இருப்பான்.

இவ்வாத்மா வெட்ட எரிக்கவியலாது இவ்வாத்மா நனைக்க உலர்த்த வியலாது I
இவ்வாத்மா நித்யமாய் எங்குமுளதியங்காது இவ்வாத்மா எக் காலமும் நகராதிருப்பதுவே II

——

25. அவ்யக்தோऽயமசிந்த்யோऽயமவிகார்யோऽயமுச்யதே
தஸ்மாதேவம் விதித்வைநம் நாநுஸோசிதுமர்ஹஸி

அயம் அவ்யக்த:-இந்த ஆத்மா புலன்களுக்கு புலப் படாதவன்,
அயம் அசிந்த்ய:-மனத்தால் சிந்தனைக்கு அரியவன்,
அயம் அவிகார்ய:-மாறுதல் இல்லாதவன்,
உச்யதே-என்று கூறப் படுகிறது,
தஸ்மாத் ஏநம் ஏவம் விதித்வா-இவனை இவ்வாறு அறிந்து கொண்டு
அநுஸோசிதும் அர்ஹஸி-வருத்தப் படாமல் இரு.

தெளிதற் கரியான் சிந்தனைக் கரியான் மாறுத லில்லாதா னென்ப!
ஆதலால் இவனை இங்ஙனம் அறிந்து நீ துயர்ப் படாதிருக்கக் கடவாய்.”

இவ்வாத்மா புலன்களுக்குப் புலப்படாது இவ்வாத்மா மனதிற்கு அகப்படாது I
இவ்வாத்மா மாறுதலற்றதெனப் பகர்வரே இவ்விதமறிந்து வருத்தம் தவிர்ப்பாயே II

——–

26. அத சைநம் நித்யஜாதம் நித்யம் வா மந்யஸே ம்ருதம்
ததாபி த்வம் மஹாபாஹோ நைநம் ஸோசிதுமர்ஹஸி

அத ச த்வம்-ஆயினும்,
ஏநம் நித்யஜாதம் நித்யம் ம்ருதம் வா மந்யஸே-இந்த ஆத்மா எப்போதும் பிறந்து கொண்டே இருக்கிறது, அல்லது
எப்போதும் இறந்து கொண்டே இருப்பான் என்று நினைப்பாயானால்,
மஹாபாஹோ-நீண்ட கைகளை உடையவனே,
ததாபி த்வம் ஏவம் ஸோசிதும் ந அர்ஹஸி-அப்போதும் வருத்தப்படுவது தகாது.

அன்றி, நீ இவனை நித்தமும் பிறந்து நித்தமும் மடிவானென்று கருதினால்,
அப்போதும், பெருந்தோளுடையாய், நீ இவன் பொருட்டுத் துயருறல் தகாது.

இவ்வாத்மாவை எப்பொழுதும் பிறப்பதும் இறப்பதும் என்றே நீ கருதிடினும் I
இங்ஙனமே யாயினும் பெருந்தோளா! இவ்விதம் வருத்தமுறுதல் சரியன்றே II

——–

27. ஜாதஸ்ய ஹி த்ருவோ ம்ருத்யுர்த்ருவம் ஜந்ம ம்ருதஸ்ய ச
தஸ்மாதபரிஹார்யேऽர்தே ந த்வம் ஸோசிதுமர்ஹஸி

ஜாதஸ்ய ம்ருத்யு: த்ருவ: ஹி-பிறந்தவன் சாவது உறுதி எனில்,
ம்ருதஸ்ய ச ஜந்ம த்ருவம்-செத்தவன் பிறப்பது உறுதி எனில்,
தஸ்மாத் அபரிஹார்யே அர்தே-ஆகவே பரிகாரம் இல்லாத விஷயத்துக்காக,
த்வம் ஸோசிதும் ந அர்ஹஸி-நீ துயரப் படுவது தகாது.

பிறந்தவன் சாவது உறுதியெனில், செத்தவன் பிறப்பது உறுதியெனில்,
இந்த விலக்கொணாச் செய்திக்கு நீ அழுங்குதல் தகுதியன்று.

ஏனெனில் பிறந்தவனுக்கிறப்பு நிச்சயம் இறந்தவனுக்குப் பிறப்பும் நிச்சயமே I
ஆதலால் தவிர்க்க வியலா இவ் விஷயமதில் நீ வருத்தப்படுவதற்கு அருகதை யன்றே II

———

28. அவ்யக்தாதீநி பூதாநி வ்யக்தமத்யாநி பாரத
அவ்யக்தநிதநாந்யேவ தத்ர கா பரிதேவநா

பாரத-பாரதா!
பூதாநி அவ்யக்தாதீநி-உயிர்கள் ஆரம்பம் தெளிவில்லை,
அவ்யக்தநிதநாநி ஏவ-இறுதியும் தெளிவில்லை,
வ்யக்தமத்யாநி-நடுநிலைமை தெளிவுடையது,
தத்ர கா பரிதேவநா-இதில் துயற்படுவது என்ன ?

பாரதா, உயிர்களின் ஆரம்பம் தெளிவில்லை; நடுநிலைமை தெளிவுடையது;
இவற்றின் இறுதியுந் தெளிவில்லை. இதில் துயர்ப்படுவதென்ன?

உயிரெலாம் தோன்றுமுன் தென் படாதிருந்தன அவை யிறந்த பின் தென்படாது போகின்றனவே I
அவ் வுயிர்கள் இடையில் மட்டுமே தோன்றுபவை இவ் விஷயத்தில் வருத்தமேன் பரத குலத்தோனே ! II

——-

29. ஆஸ்சர்யவத்பஸ்யதி கஸ்சிதேந
மாஸ்சர்யவத்வததி ததைவ சாந்ய:
ஆஸ்சர்யவச்சைநமந்ய: ஸ்ருணோதி
ஸ்ருத்வாऽப்யேநம் வேத ந சைவ கஸ்சித்

கஸ்சித் ஏநம்-யாரோ ஒருவன்,
ஆஸ்சர்யவத் பஸ்யதி-வியப்பெனக் காண்கிறான்,
ஆஸ்சர்யவத் வததி-வியப்பென ஒருவன் சொல்கிறான்,
ஆஸ்சர்யவத் அந்ய ஸ்ருணோதி-வியப்பென ஒருவன் கேட்கிறான்,
கஸ்சித் ஸ்ருத்வா அபி ஏநம் ந ஏவ வேத-கேட்கினும் இதனை அறிந்தவன் எவனும் இலன்.

இந்த ஆத்மாவை, “வியப்பென ஒருவன் காண்கிறான், வியப்பென ஒருவன் சொல்லுகிறான், வியப்பென ஒருவன் கேட்கிறான், கேட்கினும், இதனை அறிவான் எவனுமிலன்.”

யாரோ ஒரு மகான் இவ்வாத்மாவை ஆச்சர்யமாய்க் காண்கிறான் வேறு ஒரு மகான் இவ்வாத்மாவை ஆச்சர்யமாய்ச் சொல்கிறான் I
மற்றொருவனோ இவ் வாத்மாவை ஆச்சர்யமாய்க் கேட்கின்றான் யாரொருவனும் இவ்வாத்மாவை அறிவதில்லை கேட்பினுமே II[ஆஶ் சர்யவத்
= அதிசயம் மற்றும் ஆச்சர்யமாய் = அதிசயம் போல் ]

———

30. தேஹீ நித்யமவத்யோऽயம் தேஹே ஸர்வஸ்ய பாரத
தஸ்மாத்ஸர்வாணி பூதாநி ந த்வம் ஸோசிதுமர்ஹஸி

பாரத-பாரதா,
அயம் தேஹீ-இந்த ஆத்மா,
ஸர்வஸ்ய தேஹே-எல்லா உடலிலும்,
நித்யம் அவத்ய-எப்பொழுதும் கொல்லப் படமுடியாதவன்,
தஸ்மாத் ஸர்வாணி பூதாநி-ஆகவே எந்த உயிரின் பொருட்டும்,
த்வம் ஸோசிதும் ந அர்ஹஸி-நீ வருந்துதல் தகாது.

பாரதா, எல்லாருடம்பிலுமுள்ள இந்த ஆத்மா கொல்ல முடியாதவன்.
ஆதலால் நீ எந்த உயிரின் பொருட்டும் வருந்துதல் வேண்டா!

பரதகுலத்தோனே ! உடல்களனைத் திலுமுள இவ் வாத்மாவை ஒரு போதும் கொல்ல வியலாதே I
ஆதலால் அனைத்துயிர்களின் பொருட்டும் நீ வருத்த முறுதலென்பது சரியன்றே II

——-

31. ஸ்வதர்மமபி சாவேக்ஷ்ய ந விகம்பிதுமர்ஹஸி
தர்ம்யாத்தி யுத்தாச்ச்ரேயோऽந்யத்க்ஷத்ரியஸ்ய ந வித்யதே

ஸ்வதர்மம் சாவேக்ஷ்ய அபி-ஸ்வதர்மத்தைப் கருதினாலும்,
விகம்பிதும் ந அர்ஹஸி-நீ நடுங்குதல் தகாது,
க்ஷத்ரியஸ்ய தர்ம்யாத் யுத்தாத் அந்யத்-மன்னருக்கு அறப்போரைக் காட்டிலும்
ஸ்ரேய: ந வித்யதே-உயர்ந்ததொரு நன்மை இல்லை.

ஸ்வ தர்மத்தைக் கருதியும் நீ நடுங்குதல் இசையாது. அறப்போரைக் காட்டிலும் உயர்ந்ததொரு நன்மை மன்னர்க்கில்லை.

அவ்விதம் தன்தர்மமென்றே நோக்கினும் பயங்கொள உனக்குத் தகுதியன்றே I
அரசனுக்கு தர்மமாம் போரைக் காட்டினும் மேன்மை தகு கடமை வேறில்லையே II

——–

32. யத்ருச்சயா சோபபந்நம் ஸ்வர்கத்வாரமபாவ்ருதம்
ஸுகிந: க்ஷத்ரியா: பார்த லபந்தே யுத்தமீத்ருஸம்

பார்த-பார்த்தா,
யத்ருச்சயா உபபந்நம்-தானே வந்திருப்பதும்,
அபாவ்ருதம் ஸ்வர்கத்வாரம்-திறந்து கிடக்கும் பொன்னுலக வாயில்,
ஈத்ருஸம் யுத்தம்-இத்தகைய போர்
ஸுகிந: க்ஷத்ரியா: லபந்தே-பாக்கியமுடைய மன்னரே அடைகிறார்கள்.

தானே வந்தெய்துவது, திறந்து கிடக்கும் பொன்னுலக வாயில் போன்றது.
இத்தகைய போர் கிடைக்கப் பெறும் மன்னர் இன்பமுடையார்!

பரந்தப! சொர்க்க வாயில் வடிவிலே திறந்துளது இத்தகை தர்ம யுத்தம் I
தற்செயலாய் வாய்த்திருக்கும் வாய்ப்பீது பாக்யமுடை வேந்தர்களே டைவர் காண் II[ ஸுகின
: = பாக்யவந்த = பாக்யத்தை உடைய ]

——-

33. அத சேத்த்வமிமம் தர்ம்யம் ஸங்க்ராமம் ந கரிஷ்யஸி
தத: ஸ்வதர்மம் கீர்திம் ச ஹித்வா பாபமவாப்ஸ்யஸி

அத-அன்றி,
இமம் தர்ம்யம் ஸங்க்ராமம்-இந்தத் தர்மயுத்தத்தை,
த்வம் ந கரிஷ்யஸி சேத்-நீ நடத்தாமல் விடுவாயானால்,
தத: ஸ்வதர்மம் கீர்திம் ச ஹித்வா-அதனால் ஸ்வதர்மத்தையும், கீர்த்தியையும் கொன்று,
பாபம் அவாப்ஸ்யஸி-பாவத்தையடைவாய்

அன்றி நீ இந்தத் தர்மயுத்தத்தை நடத்தாமல் விடுவாயானால், அதனால் ஸ்வதர்மத்தையும்,
கீர்த்தியையும் கொன்று பாவத்தையடைவாய்.

ஆதலால் தர்மத்துடனி ணைந்துள இப் போர் தனைச் செய்யாதிருப்பாயேல் I
அச் சமயம் பாவத்தைப் பெற்றிடுவாய் இழப்பாய் செய் கடமையையும் புகழையும் II

——-

34. அகீர்திம் சாபி பூதாநி கதயிஷ்யந்தி தேऽவ்யயாம்
ஸம்பாவிதஸ்ய சாகீர்திர்மரணாததிரிச்யதே

பூதாநி ச-உலகத்தாரும்,
தே அவ்யயாம்-உனக்கு நீண்டகாலம் இருக்கக் கூடிய,
அகீர்திம் அபி கதயிஷ்யந்தி-வசை உரைப்பார்கள்,
ஸம்பாவிதஸ்ய-புகழ் கொண்டோன்
அகீர்தி: மரணாத் அதிரிச்யதே-அப கீர்த்தி மரணத்திலுங் கொடிதன்றோ?

உலகத்தார் உனக்கு மாறாத வசையுமுரைப்பார்கள். புகழ் கொண்டோன் பின்னரெய்தும்
அபகீர்த்தி மரணத்திலுங் கொடிதன்றோ?

மேலுமே உலகத்தோர் உனைப்பற்றிப்- பேசுவரே அழியா இழிச் சொல் கூறி I
பேரோடும் புகழோடு மிருந்தவனுக்கு மரணத்தினும் கொடிதே இவ்விழிச் சொல் II

———

35. பயாத்ரணாதுபரதம் மம்ஸ்யந்தே த்வாம் மஹாரதா:
யேஷாம் ச த்வம் பஹுமதோ பூத்வா யாஸ்யஸி லாகவம்

ச யேஷாம் த்வம் பஹுமதோ பூத்வா-மேலும் எவர்களுடைய (கருத்தில்) நீ நன்மதிப்பைப் பெற்று இருந்து,
லாகவம் யாஸ்யஸி-தாழ்மையாய் அடைவாயோ,
மஹாரதா: த்வாம்-அந்த மகாரதர்கள் உன்னை,
பயாத் ரணாத் உபரதம்-பயத்தினால் யுத்தத்திலிருந்து பின்வாங்கியவனாக,
மம்ஸ்யந்தே-கருதுவார்கள்.

நீ அச்சத்தால் போரை விட்டு விலகியதாக மகாரதர் கருதுவார்கள். அவர்களுடைய நன்மதிப்பைப் பெற்ற நீ இதனால் சிறுமையடைவாய்.

பயத்தினால் போர் விடுத்துப் புறம் போனாயென்றே யுனைக் கருதுவர் பெருந் தேராளிகள் I
யாவர் முன் மதிப்புயர் வோடிருந்தனையோ அவர் முன் நிச்சயம் சிறுமை யடைவாயே நீ II

———

36. அவாச்யவாதாம்ஸ்ச பஹூந்வதிஷ்யந்தி தவாஹிதா:
நிந்தந்தஸ்தவ ஸாமர்த்யம் ததோ து:கதரம் நு கிம்

தவ அஹிதா:-உனக்கு வேண்டாதார்,
தவ ஸாமர்த்யம் நிந்தந்த-உன் திறமையைப் பழிப்பார்கள்,
பஹூந் அவாச்யவாதாம் ச-சொல்லத் தகாத வார்த்தைகள் பல,
வதிஷ்யந் -சொல்லுவார்கள்,
தத: து:கதரம் நு கிம்-இதைக் காட்டிலும் அதிகமான துன்பமெது

உனக்கு வேண்டாதார் சொல்லத் தகாத வார்த்தைகள் பல சொல்லுவார்கள். உன் திறமையைப் பழிப்பார்கள். இதைக் காட்டிலும் அதிகமான துன்பமெது?

உன் எதிரிகள் உன் திறமை தனை இகழ்ந்தே சொல்லத்தகா பல சொற்களைச் சொல்வாரே I
அதனினும் மிக்கதோர் துன்பந் தனையே அளிக்க வல்லது வேறேதும் உண்டோ ? II

———

37. ஹதோ வா ப்ராப்ஸ்யஸி ஸ்வர்கம் ஜித்வா வா போக்ஷ்யஸே மஹீம்
தஸ்மாதுத்திஷ்ட கௌந்தேய யுத்தாய க்ருதநிஸ்சய:

ஹதோ வா ப்ராப்ஸ்யஸி ஸ்வர்கம்-கொல்லப்படினோ வானுல கெய்துவாய்,
ஜித்வா வா போக்ஷ்யஸே மஹீம்-வென்றால் பூமியாள்வாய்,
தஸ்மாத் கௌந்தேய-ஆகவே குந்தி மைந்தனே,
க்ருதநிஸ்சய: யுத்தாய உத்திஷ்ட-நிச்சயித்துக் கொண்டு போருக்கு எழுந்திரு

கொல்லப்படினோ வானுல கெய்துவாய். வென்றால் பூமியாள்வாய். ஆதலால் போர் செயத் துணிந்து நீ எழுந்து நில்.

கொலை யுண்டால் சொர்கமதை யடைவாய் வெற்றி கண்டால் பூமி தனை யனுபவிப்பாய் I
கௌந்தேயா! ஆதலால் எழுந்திடுவாய் போர் புரியவே நிச்சயம் செய்தவனாய் II

——-

38. ஸுகது:கே ஸமே க்ருத்வா லாபாலாபௌ ஜயாஜயௌ
ததோ யுத்தாய யுஜ்யஸ்வ நைவம் பாபமவாப்ஸ்யஸி

ஸுக – து:கே-இன்பம், துன்பம்,
லாப – அலாப= பேறு, இழவு,
ஜய அஜயௌ-வெற்றி, தோல்வி,
ஸமே க்ருத்வா-நிகரெனக் கொண்டு,
ததோ யுத்தாய யுஜ்யஸ்வ-அதற்கு பின் யுத்தத்துக்கு தயாராவாயாக,
ஏவம் ந பாபம் அவாப்ஸ்யஸி-இவ்விதம் (செய்தால்) பாவத்தை அடைய மாட்டாய்.

இன்பம், துன்பம், இழவு, பேறு, வெற்றி, தோல்வி இவற்றை நிகரெனக் கொண்டு,
நீ போர்க்கொருப்படுக. இவ்வணம் புரிந்தால் பாவமெய்தாய்.

இன்ப துன்ப லாப நஷ்டந்தனையும் வெற்றித் தோல்வியும் சமமாயெதிர் கொள்வாய் I
அதன் பின் தயாராய் யுத்தம் செய்வாய் இவ்விதம் நீ செய்திடில் பாவமடையாய் II

——–

39. ஏஷா தேபிஹிதா ஸாங்க்யே புத்திர்யோகே த்விமாம் ஸ்ருணு
புத்த்யா யுக்தோ யயா பார்த கர்மபந்தம் ப்ரஹாஸ்யஸி

பார்த-பார்த்தா,
ஏஷா புத்தி தே-இந்த புத்தி (அறிவுரை) உனக்கு,
ஸாங்க்யே அபி ஹிதா-ஸாங்கிய வழிப்படி சொன்னேன்,
து இமாம் யோகே ஸ்ருணு-இனி யோக வழியால் (சொல்லுகிறேன்) கேள்,
யயா புத்த்யா யுக்த: இந்தப் புத்தி கொண்டவன் கர்மபந்தம்
ப்ரஹாஸ்யஸி-கர்மத் தளைகளைச் சிதறிவிடுவான்.

இங்ஙனம் உனக்கு ஸாங்கிய வழிப்படி புத்தி சொன்னேன். இனி யோக வழியால் சொல்லுகிறேன்; கேள்-இந்தப் புத்தி கொண்டவன் கர்மத் தளைகளைச் சிதறிவிடுவான்.

ஞானயோக விஷயத்தில் இவ்வறிவையே பகர்ந்தேன் உனக்குப் பார்த்தனே
கர்மயோக விஷயத்தி லினிக் கேளிதை கர்மபந்தமதை எவ்வறிவுடன் விலக்கிடுவாயோ II

——

40. நேஹாபிக்ரமநாஸோऽஸ்தி ப்ரத்யவாயோ ந வித்யதே
ஸ்வல்பமப்யஸ்ய தர்மஸ்ய த்ராயதே மஹதோ பயாத்

இஹ-இதில் (கர்ம யோகத்தில்),
அபிக்ரமநாஸ: ந அஸ்தி-விதைக்கு (முயற்சிக்கு) நஷ்டம் இல்லை,
ப்ரத்யவாய: ந வித்யதே-நேரெதிரான விளைவும் இல்லை,
அஸ்ய தர்மஸ்ய ஸ்வல்பம் அபி-இந்த தர்மத்தில் (கர்ம யோகம்) சிறிதிருப்பினும்,
மஹதோ பயாத் த்ராயதே-பேரச்சத்தினின்று காப்பாற்றும்.

இதில் முயற்சிக்கு அழிவில்லை. இது வரம்பு மீறிய செய்கையுமன்று. இந்தத் தர்மத்தில் சிறிதிருப்பினும்-அஃதொருவனைப் பேரச்சத்தினின்று காப்பாற்றும்.

இதில் முயற்சி வீணாகவில்லையே எதிர் வினைகளு மிதிலில்லையே I
இந்த தர்மத்தின் சிறிதளவுமே பெரும் பயத்திலிருந்து காத்திடுமே II

——-

41. வ்யவஸாயாத்மிகா புத்திரேகேஹ குருநந்தந
பஹுஸாகா ஹ்யநந்தாஸ்ச புத்தயோऽவ்யவஸாயிநாம்

குருநந்தந-குருகுலத் தோன்றலே!
இஹ வ்யவஸாயாத்மிகா புத்தி ஏகா-இந்த உலகத்தில் உறுதியுடைய புத்தி ஒருமையுடையது,
அவ்யவஸாயிநாம்-உறுதியில்லாதோரின்
புத்தய:-புத்திகள்,
பஹுஸாகா-பல கிளைப்பட்டது,
அநந்தா: ச-முடிவற்றது,

குருகுலத் தோன்றலே! உறுதியுடைய புத்தி இவ்வுலகத்தில் ஒருமையுடையது.
உறுதியில்லாதோரின் மதி பல கிளைப்பட்டது, முடிவற்றது.

குரு நந்தனா! இங்கு நிச்சய வடிவாம் புத்தியோ ஒன்று தானுள்ளது I
நிச்சயம் அற்றோருடைய புத்திகளோ பல கிளை கொண்டும் முடி வற்றதாயுளதே II

———-

  1. யாமிமாம் புஷ்பிதாம் வாசம் ப்ரவதந்த்யவிபஸ்சித:
    வேதவாதரதா: பார்த நாந்யதஸ்தீதி வாதிந:

பார்த-பார்த்தா!
வேதவாதரதா:-வேதங்களின் வெளியுரையில் மகிழ்வார்,
புஷ்பிதாம் வாசம் ப்ரவதந்த்ய-பூக்களைப் போன்ற (அலங்காரச்) சொற்கள் பேசுகிறார்கள்,
ந அந்யத் அஸ்தி இதி வாதிந:-தமது கொள்கை தவிர மற்றது பிழை யென்கிறார்கள்.

வேதங்களின் வெளியுரையில் மகிழ்வார் சிலர், பூக்களைப் போன்ற (அலங்காரச்) சொற்கள் பேசுகிறார்கள்.-தமது கொள்கை ஓழிய மற்றது பிழை யென்கிறார்கள்.

பார்த்தனே ! தெளிவிலோர் மனமகிழ்ந்து வேத கர்ம பலன் புகழ்களைப் பாடியே I
அலங்காரச் சொல் கூறி சொர்கமே முடிந்த முடிவாம் வேறில்லை என்பரே II

———

43. காமாத்மாந: ஸ்வர்கபரா ஜந்மகர்மபலப்ரதாம்
க்ரியாவிஸேஷபஹுலாம் போகைஸ்வர்யகதிம் ப்ரதி

காமாத்மாந:-ஆசைகளில் மூழ்கியவர்கள்,
ஸ்வர்கபரா:-சொர்க்கத்தைப் பரமாகக் கொண்டோர்
ஜந்மகர்மபலப்ரதாம்-பிறப்புக்கும் தொழிலுக்கும் பயன் வேண்டுவோர்,
போகைஸ்வர்யகதிம்-போகத்தையும் ஆட்சியையும் வேண்டுவோர்,
க்ரியாவிஸேஷபஹுலாம்-பலவகையான கிரியைகள்.

இவர்கள் காமிகள்; சொர்க்கத்தைப் பரமாகக் கொண்டோர். பிறப்புக்கும் தொழிலுக்கும் பயன் வேண்டுவோர்; போகத்தையும் ஆட்சியையும் வேண்டுவோர்; பலவகையான கிரியைகளைக் காட்டிப் பேசுகிறார்கள்.

போகத்தில் மனம் மூழ்கி வுயர் சொர்கம் மேலானதென்றே எண்ணி வுயர் பதவியும் I
போகமும் பெற வேண்டி யுயர் பிறவியும் போதல் கருதி விசேஷச் செயல் செய்வராம் II

———-

44. போகைஸ்வர்யப்ரஸக்தாநாம் தயாபஹ்ருதசேதஸாம்
வ்யவஸாயாத்மிகா புத்தி: ஸமாதௌ ந விதீயதே

தயா அபஹ்ருத சேதஸாம்-அந்த (பேச்சினால்) மனம் அபஹரிக்கப் பட்டு,
போக ஐஸ்வர்ய ப்ரஸக்தாநாம்-போகத்திலும் ஆட்சியுலும் பற்றுறுவோர்,
வ்யவஸாயாத்மிகா புத்தி:-நிச்சய புத்தி,
ஸமாதௌ ந விதீயதே-சமாதியில் நிலைபெறாது.

இவர்கள் சொல்லுவதைக் கேட்டு மதிமயங்கி போகத்திலும் ஆட்சியுலும் பற்றுறுவோருடைய நிச்சய புத்தி சமாதியில் நிலை பெறாது.

செல்வ போகப் பற்றும் மிகவுடையோன் அப்பேச்சிலே மனதையு மிழந்தோன் I
தெளிவில்லா அறிவையு முடையோன் புத்தியுமே பரம் நிலை நிற்பதில்லையே II

——–

45. த்ரைகுண்யவிஷயா வேதா நிஸ்த்ரைகுண்யோ பவார்ஜுந
நிர்த்வந்த்வோ நித்யஸத்த்வஸ்தோ நிர்யோக÷க்ஷம ஆத்மவாந்

வேதா-வேதங்கள்,
த்ரைகுண்ய விஷயா-மூன்று குணங்களுக்குட்பட்டன,
நிஸ்த்ரைகுண்யோ-மூன்று குணங்களையும் கடந்தோனாக,
நிர்த்வந்த்வ-இருமைகளற்று,
நித்யஸத்த்வஸ்த-எப்போதும் உண்மையில் நின்று,
நிர்யோக÷க்ஷம-யோக ஷேமங்களைக் கருதாமல்
ஆத்மவாந் பவ-ஆத்மாவை வசப்படுத்தியவனாகுக.

மூன்று குணங்களுக்குட்பட்டனவற்றைக் குறித்து வேதங்கள் பேசுகின்றன. அர்ஜுனா, நீ மூன்று குணங்களையும் கடந்தோனாகுக-இருமைகளற்று, எப்போதும் உண்மையில் நின்று, யோக ÷க்ஷமங்களைக் கருதாமல், ஆத்மாவை வசப்படுத்தியவனாகுக.

ஆகமங்க ளறிவிக்கும் முக் குண விஷயமாய் அக் குண சாதனமதில் பற்றற்றிருப்பாய் I
இருமை கடந்தே சத்துவத்தில் நிலைப்பாய் ஈட்டிக் காத்தல் துறந்தும் தன் மயமாவாய் II

——

46. யாவாநர்த உதபாநே ஸர்வத: ஸம்ப்லுதோதகே
தாவாந்ஸர்வேஷு வேதேஷு ப்ராஹ்மணஸ்ய விஜாநத:

ஸர்வத: ஸம்ப்லுத உதகே-எங்கும் நீர் நிரம்பிய இடத்தில்,
யாவாந் அர்த உதபாநே-ஒரு சிறு குட்டை என்ன பொருளுடையது,
ஸர்வேஷு வேதேஷு-எல்லா வேதங்களினாலும்,
விஜாநத: ப்ராஹ்மணஸ்ய-ஞானமுடைய பிராமணனுக்கு,
தாவாந்-அவ்வளவு தான் (பயன்).

எங்கும் நீர் நிரம்பிய இடத்தில் ஒரு சிறு குட்டம் என்ன பொருளுடையது;
அன்ன பொருளே ஞானமுடையை பிராமணனுக்கு வேதங்களுமுடையன.

எங்குமே நீர் விரிந்து இருக்கையிலே சிறிய நீர் நிலை யென்பதும் பயனுளதோ I
வேதப் பொருளு ணர்ந்த விற்பனருக்கோ வேத கர்மங்களின் பயனு மம்மட்டே II

——–

47. கர்மண்யேவாதிகாரஸ்தே மா பலேஷு கதாசந
மா கர்மபலஹேதுர்பூர்மா தே ஸங்கோऽஸ்த்வகர்மணி

தே கர்மணி ஏவ அதிகார-தொழில் செய்யத்தான் உனக்கு அதிகாரமுண்டு,
கதாசந மா பலேஷு-எப்போதுமே பலன்களில் இல்லை,
கர்மபலஹேது மா பூ-செய்கையின் பயனைக் கோருபவனாக ஆகாதே,
தே அகர்மணி-உனக்கு கர்மங்களை ஆற்றாமல்,
ஸங்க: மா அஸ்து-இருப்பதிலும் பற்று கூடாது.

தொழில் செய்யத்தான் உனக்கு அதிகாரமுண்டு. அதன் பயன்களில் எப்போதுமே உனக்கதிகாரமில்லை. செய்கையின் பயனைக் கருதாதே; தொழில் செய்யாமலுமிராதே.

உனக்கதிகாரம் செயல் செய்தலில் மட்டுமே உனக்கதிகாரம் பயனில் வேண்டாமே I
கர்ம பலன் நிர்ணயம் நீ செய்யாதே கர்மம் செய்தலில் பற்றற்றும் நீ இராதே

——-

48. யோகஸ்த: குரு கர்மாணி ஸங்கம் த்யக்த்வா தநஞ்ஜய
ஸித்த்யஸித்த்யோ: ஸமோ பூத்வா ஸமத்வம் யோக உச்யதே

தநஞ்ஜய-அர்ஜுனா!
யோகஸ்த:-யோகத்தில் நின்று,
ஸங்கம் த்யக்த்வா-பற்றை நீக்கி,
ஸித்தி அஸித்தயோ: ஸமோ பூத்வா-வெற்றி தோல்விகளை நிகரெனக் கொண்டு,
கர்மாணி குரு-தொழில்களைச் செய்க,
ஸமத்வம் யோக உச்யதே-நடுநிலையே யோகமெனப்படும்.

தனஞ்ஜயா, யோகத்தில் நின்று, பற்றை நீக்கி, வெற்றி தோல்விகளை நிகரெனக் கொண்டு
தொழில்களைச் செய்க. நடுநிலையே யோகமெனப்படும்.

தனஞ்ஜயா! பற்றனைத்தும் விலக்கியே அடைந்த, அடையாததில் சமநிலை யெய்தியே I
யோகத்தி லமர்ந்தே செய் கர்மத்தையே யோகமென்பது மனதின் சம நிலையே II

————

49. தூரேண ஹ்யவரம் கர்ம புத்தியோகாத்தநஞ்ஜய
புத்தௌ ஸரணமந்விச்ச க்ருபணா: பலஹேதவ:

தநஞ்ஜய-தனஞ்ஜயா!
புத்தியோகாத் கர்ம-புத்தி யோகத்தைக் காட்டிலும் கர்மம்,
தூரேண அவரம்-நெடுந்தொலைவு தாழ்ந்தது,
புத்தௌ ஸரணம் அந்விச்ச-புத்தியைச் சரணடை
பலஹேதவ: க்ருபணா:-பயனைக் கருதுவோர் லோபிகள்.

தனஞ்ஜயா, புத்தி யோகத்தைக் காட்டிலும் கர்மம் நெடுந்தொலை தாழ்ந்தது. புத்தியைச் சரணடை. பயனைக் கருதுவோர் லோபிகள்.

தனஞ்ஜயா! இப் புத்தி யோகத்தினும் மிகத் தாழ்ந்த தல்லவோ இக் கர்மம் I
அடைவாயே தஞ்சம் சம புத்தியில், அற்பமாம் பலன் கருதியே செய்கர்மம்
II[க்ருபணா = அற்பமாம் = வரை யறுக்கப் பட்டது ]

——

50. புத்தியுக்தோ ஜஹாதீஹ உபே ஸுக்ருததுஷ்க்ருதே
தஸ்மாத்யோகாய யுஜ்யஸ்வ யோக: கர்மஸு கௌஸலம்

புத்தியுக்த:-புத்தியுடையவன்,
ஸுக்ருத துஷ்க்ருதே-நற்செய்கை தீச்செய்கை,
உபே இஹ ஜஹாதி-இரண்டையும் இங்கு துறக்கிறான்,
தஸ்மாத் யோகாய யுஜ்யஸ்வ-ஆதலால் நீ யோகத்திலே பொருந்தி விடு,
யோக: கர்மஸு கௌஸலம்-யோகம் செயல்களில் திறமையாம் (விடுபட உபாயமாகும்).

புத்தியுடையவன் இங்கு நற்செய்கை தீச்செய்கை இரண்டையுந் துறக்கிறான்.
ஆதலால் நீ யோகத்திலே பொருந்தி விடு. யோகம் செயல்களில் திறமையாம்.

சம புத்தி உடையோன் இவ் வுலகில் விடுகின்றான் புண்ய பாவ மிரண்டையும் I
சமத்துவமாம் யோக நிலை மேற் கொண்டே திறமையுடன் செய்கடமை யோகமதே II

———-

51. கர்மஜம் புத்தியுக்தா ஹி பலம் த்யக்த்வா மநீஷிண:
ஜந்மபந்தவிநிர்முக்தா: பதம் கச்சந்த்யநாமயம்

ஹி புத்தியுக்தா மநீஷிண:-ஏனெனில் புத்தியுடைய மேதாவிகள்,
பலம் த்யக்த்வா-பயனைத் துறந்து,
ஜந்மபந்தவிநிர்முக்தா:-பிறவித் தளை நீக்கி,
அநாமயம் பதம் கச்சந்தி-மாறுதலற்ற பரமபதத்தை அடைகிறார்கள்.

புத்தியுடைய மேதாவிகள் செய்கையில் விளையும் பயனைத் துறந்து, பிறவித் தளை நீக்கி,
ஆனந்தப் பதவி அடைகிறார்கள்.

சமபுத்தி கூடி ஞானியர் ஞானமடைந்திட்டு கர்ம வினையாம் பலனைத் துறந்திட்டு I
பிறவியெனும் பந்தம் அறுத்திட்டு பிணி யற்ற பரம்நிலை அடைந்திட்டனரே II

——–

52. யதா தே மோஹகலிலம் புத்திர்வ்யதிதரிஷ்யதி
ததா கந்தாஸி நிர்வேதம் ஸ்ரோதவ்யஸ்ய ஸ்ருதஸ்ய ச

யதா தே புத்தி-எப்போது உனது புத்தி,
மோஹகலிலம்-மோகக் குழப்பத்தை,
வ்யதிதரிஷ்யதி-கடந்து செல்லுகிறதோ,
ததா-அப்போது,
ஸ்ரோதவ்யஸ்ய ஸ்ருதஸ்ய ச-கேட்கப் போவது, கேட்கப்பட்டது என்ற இரண்டிலும்,
நிர்வேதம் கந்தாஸி-வேதனையேற்படாது.

உனது புத்தி மோகக் குழப்பத்தைக் கடந்து செல்லுமாயின், அப்போது கேட்கப் போவது, கேட்கப்பட்டது என்ற இரண்டிலும் உனக்கு வேதனையேற்படாது.

எக்காலம் உன்னுடைய புத்தியே மோஹமெனும் சேற்றினைக் கடந்திடுமோ I
அக் காலம் நீ கேட்டது பற்றியுமே கேட்க வுளதிலுமே நீ வைராக்யம் அடைவாய் II

———

53. ஸ்ருதிவிப்ரதிபந்நா தே யதா ஸ்தாஸ்யதி நிஸ்சலா
ஸமாதாவசலா புத்திஸ்ததா யோகமவாப்ஸ்யஸி

ஸ்ருதிவிப்ரதிபந்நா-கேள்வியிலே கலக்கமுறாததாய்,
தே புத்தி-உனது புத்தி,
மாதௌ-சமாதி நிலையில்,
நிஸ்சலா அசலா-உறுதிகொண்டு, அசையாது,
யதா ஸ்தாஸ்யதி-நிற்குமாயின்,
ததா யோகம் அவாப்ஸ்யஸி-அப்போது யோகத்தை அடைவாய்.

உனது புத்தி, கேள்வியிலே கலக்கமுறாததாய், உறுதிகொண்டு, சமாதி நிலையில்
அசையாது நிற்குமாயின், அப்போது யோகத்தை அடைவாய்.

பற்பல வேத வாக்யங்களால் கலங்கியஉம் புத்தி எப்பொழுது அசையாமலே I
ஆத்மனிலே உறுதியாய் நிலை நிற்குமோ அப்பொழுதிலே அடைவாய் யோகத்தையே II

———–

அர்ஜுந உவாச

54. ஸ்திதப்ரஜ்ஞஸ்ய கா பாஷா ஸமாதிஸ்தஸ்ய கேஸவ
ஸ்திததீ: கிம் ப்ரபாஷேத கிமாஸீத வ்ரஜேத கிம்

அர்ஜுந உவாச-அர்ஜுனன் சொல்லுகிறான்,
கேஸவ-கேசவா!
ஸமாதிஸ்தஸ்ய ஸ்திதப்ரஜ்ஞஸ்ய கா பாஷா-உறுதிகொண்ட அறிவுடன் சமாதியில் நிற்போன் எவ்வாறு பேசுவான்?
ஸ்திததீ:-ஸ்திர புத்தியுடையவன் என்ன சொல்வான்?
கிம் ப்ரபாஷேத-என்ன சொல்வான்?
கிம் ஆஸீத-எப்படியிருப்பான்?
கிம் வ்ரஜேத-எதனையடைவான்?

அர்ஜுனன் சொல்லுகிறான்: கேசவா, உறுதிகொண்ட அறிவுடன் சமாதியில் நிற்போன் எவ்வாறு பேசுவான்? ஸ்திர புத்தியுடையவன் என்ன சொல்வான்? எப்படியிருப்பான்? எதனையடைவான்?

“அர்ஜுனன் புகன்றான்”
உறுதியான நிலைத்த அறிவுடையோன் ஆத்மனில் தெளிந்த ஞானமுடையோன் I
இலக்கண மெதுவோ கேசவரே !அவன் பேசுவது மமர்வதும் நடப்பது மெங்ஙனம் II

———-

ஸ்ரீ பகவாநுவாச

55. ப்ரஜஹாதி யதா காமாந்ஸர்வாந்பார்த மநோகதாந்
ஆத்மந்யேவாத்மநா துஷ்ட: ஸ்திதப்ரஜ்ஞஸ்ததோச்யதே

ஸ்ரீ பகவாநுவாச- ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்,
பார்த-அர்ஜுனா!
மநோகதாந் ஸர்வாந் காமாந்-மனதில் எழும் விருப்பங்களனைத்தையும்,
ப்ரஜஹாதி-துறக்கிறான்,
யதா ஆத்மநா ஆத்மநி ஏவ துஷ்ட:-தன்னிலே தான் மகிழ்ச்சி பெறுவானாயின்,
ததா ஸ்திதப்ரஜ்ஞ: உச்யதே-அப்போது ஸ்திர புத்தியுடையவனென்று சொல்லப்படுகிறான்.

ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்:
ஒருவன் தன் மனதில் எழும் விருப்பங்களனைத்தையும் துறந்து தன்னிலே தான் மகிழ்ச்சி பெறுவானாயின், அப்போது ஸ்திர புத்தியுடையவனென்று சொல்லப்படுகிறான்.

“ஸ்ரீபகவான் பகர்ந்தார்”
பார்த்தனே ! எப்பொழுதிலே மனதிலே எழும் ஆசைகள னைத்தும் விலக்கியே நிற்கிறானோ Iதன்னிலே தனைக் கண்டு திருப்தி காண் பானோ அப்பொழுது நிலைத்த ஞான முடையோன் என்பரே II

———

56. து:கேஷ்வநுத்விக்நமநா: ஸுகேஷு விகதஸ்ப்ருஹ:
வீதராகபயக்ரோத: ஸ்திததீர்முநிருச்யதே

து:கேஷு அநுத்விக்நமநா:-துன்பங்களிலே மனங்கொடாதவனாய்,
ஸுகேஷு விகதஸ்ப்ருஹ:-இன்பங் களிலே ஆவலற்ற வனாய்,
வீதராகபயக்ரோத:-அச்சமும் சினமுந் தவிர்த்தவன்
முநி ஸ்திததீ உச்யதே-அம்முனி, மதியிலே யுறுதி வாய்ந்தவ னென்ப.

துன்பங்களிலே மனங்கொடாதவனாய், இன்பங் களிலே ஆவலற்ற வனாய், அச்சமும் சினமுந் தவித்தவ னாயின், அம்முனி, மதியிலே யுறுதி வாய்ந்தவ னென்ப.”

துக்கங்களில் கலங்கிடா மனதுடனும் சுகங்களில் ஏங்குதலைத் தவிர்த்தவனும் I
விருப்பு பய கோபம் நீங்கி யுள்ளவனாம் அம் முனியை நிலைத்த அறி வுடையோன் என்பர்II

———–

57. ய: ஸர்வத்ராநபிஸ்நேஹஸ்தத்தத்ப்ராப்ய ஸுபாஸுபம்
நாபிநந்ததி ந த்வேஷ்டி தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா

ய:-எவன்,
ஸுப அஸுபம்-நல்லதும் கெட்டதும்,
ப்ராப்ய-அடைந்து,
ந அபிநந், ததி -மகிழ்வதில்லை,
ந த்வேஷ்டி-வெறுப்பதும் இல்லை,
ஸர்வத்ர அநபிஸ்நேஹ-பகைப்பதுமின்றியிருப்பானோ,
தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா-அவனுடைய அறிவே நிலைகொண்டது.

எவன் நல்லதும் கெட்டதும் வருமிடத்தே எதனிலும் வீழ்ச்சியற்றவனாய், ஆவலுறுவதும்
பகைப்பதுமின்றி யிருப்பானோ, அவனுடைய அறிவே நிலைகொண்டது.

யாரொருவ னனைத்திலும் பற்றின்றியும் அவ் வவ் வின்ப துன்ப மடைந்ததனில் I
மகிழ்வும் வெறுப்பும் கொள்வதில்ளையோஅவனுடை ஞானம் நிலை யானதாம்
II

———–

58. யதா ஸம்ஹரதே சாயம் கூர்மோऽங்காநீவ ஸர்வஸ:
இந்த்ரியாணீந்த்ரியார்தேப்யஸ்தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா

கூர்ம ஸர்வஸ: ச-ஆமை தன் அவயங்களையும்,
ஸம்ஹரதே இவ-இழுத்துக்கொள்ளுவது போல்,
அர்தேப்ய இந்த்ரிய-விஷயப் பதார்த்தங்களினின்று புலன்களை,
யதா அயம்-எப்போது இந்த மனிதன் (இழுத்துக் கொள்ள வல்லானாயின்)
தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா-அவனுடைய அறிவே நிலைகொண்டது.

ஆமை தன் அவயங்களை இழுத்துக்கொள்ளுவது போல், எப்புறத்தும் விஷயப் பதார்த்தங்களினின்று புலன்களை யருவன் மீட்க வல்லானாயின், அவனறிவே நிலைகொண்டது.

எப்பொழுதங் கங்களைப் யெப்புறத்தினின்றும் உள்ளிழுக்கு மாமைபோல், புலன் களை எல்லாம் I
புலப் பொருட் களினின்று முள்ளிழுப்பானோ அவனுடை ஞானம் உறுதி பெற்றதாமே II

——–

59. விஷயா விநிவர்தந்தே நிராஹாரஸ்ய தேஹிந:
ரஸவர்ஜம் ரஸோऽப்யஸ்ய பரம் த்ருஷ்ட்வா நிவர்ததே

நிராஹாரஸ்ய தேஹிந:-கவராத ஜீவனிடமிருந்து,
விஷயா விநிவர்தந்தே-விஷயங்கள் தாமே விலகிக் கொள்ளுகின்றன,
ரஸவர்ஜம்-(எனினும் இவன் அவற்றிடமுள்ள ) சுவையை மறப்பதில்லை,
அஸ்ய பரம் த்ருஷ்ட்வா-இவன் பரம்பொருளைக் கண்டதும்,
ரஸ: அபி நிவர்ததே-அச்சுவையுந் தீர்ந்துவிடும்.

தம்மைக் கவராத ஜீவனிடமிருந்து விஷயங்கள் தாமே விலகிக் கொள்ளுகின்றன. எனினும் அவற்றிடமுள்ள சுவையை இவன் மறப்பதில்லை. பரம்பொருளைக் காண்பானாயின் அச்சுவையுந் தீர்ந்துவிடும்.

புலப் பொருட்களைத் தவிர்த்த மனிதன் தன், அவை நீங்கியும், ரஸமாம் பற்று விலகாதே I
உயர் ஆன்மாவை யறிந்த வவனுக்கே அந்த ரஸப் பற்று முழுதும் விலகிடுமே II

——-

60. யததோ ஹ்யபி கௌந்தேய புருஷஸ்ய விபஸ்சித:
இந்த்ரியாணி ப்ரமாதீநி ஹரந்தி ப்ரஸபம் மந:

கௌந்தேய-குந்தியின் மகனே,
ஹி-ஆனால்,
யதத: விபஸ்சித:-முயற்சியுள்ள புத்திசாலியான
புருஷஸ்ய மந: அபி-புருஷனின் மனதிலே கூட,
ப்ரமாதீநி இந்த்ரியாணி-கலக்குபவையான இந்திரியங்கள்,
ப்ரஸபம் ஹரந்தி-வலிய வாரிச் செல்கின்றன.

குந்தியின் மகனே, (தவ) முயற்சியுடைய புருஷனிடத்திலே கூட, இந்திரியங்கள் வரம்பு கடந்து செல்லும் போது தம்முடன் மனத்தையும் வலிய வாரிச் செல்கின்றன.

குந்திமகனே ! ஏனெனில் முயற்சி யுடைய புத்திமானான மனிதனின் மனத்தையும் I
கொந்தளிப் பியல்புடைப் புலன்கள் பலமாக விழுத்துச் செல்கின்றனவே II

———

61. தாநி ஸர்வாணி ஸம்யம்ய யுக்த ஆஸீத மத்பர:
வஸே ஹி யஸ்யேந்த்ரியாணி தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா

தாநி ஸர்வாணி ஸம்யம்ய-அவற்றையெல்லாம் நன்றாக அடக்கி,
மத்பர:-என்னைப் பரமாகக் கொண்டு,
யுக்த ஆஸீத-யோகத்தில் அமர்ந்தவனாய்,
யஸ்ய இந்த்ரியாணி வஸே-எவன் புலன்களை வசப்படுத்தியிருக்கிறானோ,
தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா-அவனுடைய அறிவே நிலைகொண்டது.

அவற்றையெல்லாம் நன்றாக அடக்கி, யோகத்தில் அமர்ந்தவனாய், என்னைப் பரமாகக் கொண்டு, புலன்களை வசப்படுத்தி வைத்திருப்பவன் எவனோ, அவனுடைய அறிவே நிலைகொண்டது.

அவை யனைத்தையும் தன் வயமாக்கிய விவேகி குவிந்த மனதுடன் எனை லக்ஷியமாய் அமர்வன் I
எவனுடைப் புலன்கள் வசப்பட்டிருக்குமோ அவனுடை யறிவு தான் நிலை யானதாகுமே II

———–

62. த்யாயதோ விஷயாந்பும்ஸ: ஸங்கஸ்தேஷூபஜாயதே
ஸங்காத்ஸஞ்ஜாயதே காம: காமாத்க்ரோதோऽபிஜாயதே

பும்ஸ: விஷயாத் த்யாயத-மனிதன் விஷயங்களைக் கருதும் போது,
தேஷூ ஸங்க: உபஜாயதே-அவற்றில் பற்றுதலுண்டாகிறது,
ஸங்காத் காம: ஸஞ்ஜாயதே-பற்றுதலால் விருப்பமுண்டாகிறது,
காமாத் க்ரோத: அபிஜாயதே-விருப்பத்தால் சினம் பிறக்கிறது.

மனிதன் விஷயங்களைக் கருதும்போது அவற்றில் பற்றுதலுண்டாகிறது. பற்றுதலால் விருப்பமுண்டாகிறது. விருப்பத்தால் சினம் பிறக்கிறது.

புலப்பொருட்களையே சிந்திக்கும் மனிதனுக்கு அவ் விஷயங்களிலே பற்றும் படர்ந்தது I
பற்றுதலினாலே ஆசையும் அலர்ந்தது ஆசையினாலே கோபமும் தோன்றியது II

——–

63. க்ரோதாத்பவதி ஸம்மோஹ: ஸம்மோஹாத்ஸ்ம்ருதிவிப்ரம:
ஸ்ம்ருதிப்ரம்ஸாத்புத்திநாஸோ புத்திநாஸாத்ப்ரணஸ்யதி

க்ரோதாத் ஸம்மோஹ: பவதி-சினத்தால் மயக்கம் உண்டாகிறது,
ஸம்மோஹாத் ஸ்ம்ருதி விப்ரம:-மயக்கத்தால் நினைவு தவறுதல்,
ஸ்ம்ருதி ப்ரம்ஸாத் புத்தி நாச நினைவு தவறுதலால் புத்தி நாசம்,
புத்திநாஸாத் ப்ரணஸ்யதி-புத்தி நாசத்தால் அழிகிறான்.

சினத்தால் மயக்கம்; மயக்கத்தால் நினைவு தவறுதல்; நினைவு தவறுதலால் புத்தி நாசம்;
புத்தி நாசத்தால் அழிகிறான்.

கோபத்தினாலே மயக்கமும் மலர்ந்தது மயக்கத்தினாலே நினைவிழத்தல் வந்தது I
நினைவிழத்தலாலே மதி நாசமும் ஏற்பட்டது மதி நாசத்தாநல மனிதன் மடிகின்றானே II

————–

64. ராகத்வேஷவியுக்தைஸ்து விஷயாநிந்த்ரியைஸ்சரந்
ஆத்மவஸ்யைர்விதேயாத்மா ப்ரஸாதமதிகச்சதி

விதேயாத்மா-தன் விதிக்குத்தான் உட்பட்ட மனிதன் (சாதகன்),
ராக த்வேஷ வியுக்தை: -விழைதலும் பகைத்தலுமின்றி,
ஆத்மவஸ்யை இந்த்ரியை:-தனக்கு வசப்பட்ட புலன்களுடன்
விஷயாந் சரந்-போகத்தில் சஞ்சரித்துக் கொண்டு,
ப்ரஸாதம் அதிகச்சதி-உள்ளத் தெளிவை அடைகிறான்.

விழைதலும் பகைத்தலுமின்றி தனக்கு வசப்பட்ட புலன்களுடன் விஷயங்களிலே ஊடாடுவோனாய் தன் விதிக்குத்தான் உட்பட்ட மனிதன் ஆறுதலடைகிறான்.

மாறாக! அடங்கிய மனதுடையோன் விருப்பு வெறுப்பற்ற தன் வயமுடையோன் I
புலன் களைப் புலப் பொருட்களில் செலுத்தினும் தெளிந்த மனவமைதியை அடைகின்றான் II

———–

65. ப்ரஸாதே ஸர்வது:காநாம் ஹாநிரஸ்யோபஜாயதே
ப்ரஸந்நசேதஸோ ஹ்யாஸு புத்தி: பர்யவதிஷ்டதே

ப்ரஸாதே-உள்ளம் தெளிவு பெற்ற சாந்தி நிலையில்,
ஸர்வது:காநாம்-எல்லாத் துன்பங்களுக்கும் ஹாநி:
உபஜாயதே-அழிவு ஏற்படுகிறது,
ப்ரஸந்ந சேதஸ:-சித்தம் சாந்தி பெற்ற மனிதன்,
புத்தி ஆஸு ஹி பர்யவதிஷ்டதே-புத்தி விரைவிலே நிலைப்படுகிறது

சாந்தி நிலையில் மனிதனுக்கு எல்லாத் துன்பங்களும் அழிகின்றன. சித்தம் சாந்தி பெற்ற பின் ஒருவனுடைய புத்தி விரைவிலே நிலைப்படுகிறது.

மனவமைதி தோன்றிடில் இவனுடைய துக்கங்க ளனைத்தும் அழிவடையுமே I
ஏனெனில், தெளிவாம் மனமுடைய ஞானியினறிவு விரைவில் நிலை நிற்குமே II

———–

66. நாஸ்தி புத்திரயுக்தஸ்ய ந சாயுக்தஸ்ய பாவநா
ந சாபாவயத: ஸாந்திரஸாந்தஸ்ய குத: ஸுகம்

அயுக்தஸ்ய-யோகமில்லாதவனுக்கு,
புத்தி நாஸ்தி-புத்தியில்லை,
அயுக்தஸ்ய ந பாவநா ச-யோகமில்லாதவனுக்கு மனோபாவனையும் இல்லை,
அபாவயத: ந ஸாந்தி ச-மனோபாவனை யில்லாதவனுக்குச் சாந்தி இல்லை,
அஸாந்தஸ்ய குத: ஸுகம்-சாந்தியில்லாதவனுக்கு இன்பமேது?

யோகமில்லாதவனுக்குப் புத்தியில்லை. யோகமில்லாதவனுக்கு மனோ பாவனை இல்லை.
மனோ பாவனை யில்லாதவனுக்குச் சாந்தி இல்லை. சாந்தி யில்லாதவனுக்கு இன்பமேது?

மனமடங்கா தோனுக்குப் புத்தியில்லை மனமடங்கா தோனுக்குத் தியானமில்லை I
தியானமில்லா தோனுக்கமைதி யில்லை அமைதியில்லா தோனுக்கு ஸுகமெங்கே ? II

———

67. இந்த்ரியாணாம் ஹி சரதாம் யந்மநோऽநுவிதீயதே
ததஸ்ய ஹரதி ப்ரஜ்ஞாம் வாயுர்நாவமிவாம்பஸி

ஹி-ஏனெனில்,
அம்பஸி நாவம் வாயு: ஹரதி இவ-கடலில் தோணியைக் காற்று இழுப்பது போல்,
சரதாம் இந்த்ரியாணாம்-(போகங்களில்) சஞ்சரிக்கின்ற இந்திரியங்கள் (புலன்கள்)
யத் மந: அநுவிதீயதே-மனமும் ஒட்டி இருக்கிறதோ,
தத் அஸ்ய ப்ரஜ்ஞாம் ஹரதி-அதுவே அவனது அறிவை இழுத்து செல்கிறது.

இந்திரியங்கள் சலிக்கையில் ஒருவனுடைய மனமும் அவற்றைப் பின்பற்றிச் செல்லுமாயின், அம் மனம் கடலில் தோணியைக் காற்று மோதுவது போல் அறிவை மோதுகிறது.

காரணம் அலையும் புலன்கள் பின்னே எம் மனம் சென் றலையுமோ அங்ஙனமே I
காற்றினால் நீரிலலையும் படகு போலே அம் மனம் அவனறிவையும லையச் செயுமே II

——

68. தஸ்மாத்யஸ்ய மஹாபாஹோ நிக்ருஹீதாநி ஸர்வஸ:
இந்த்ரியாணீந்த்ரியார்தேப்யஸ்தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா

மஹாபாஹோ-பெருந்தோளாய்,
தஸ்மாத்-ஆகையால்,
யஸ்ய இந்த்ரியாணி-எவனுடைய புலன்கள்,
இந்த்ரிய அர்தேப்ய-புலன்களுக்குரிய போக விஷயங்களில் இருந்து
நிக்ருஹீதாநி-மீட்கப் பட்டு விட்டதோ,
தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா-அவனறிவே நிலைகொண்டது.

ஆதலால், பெருந்தோளாய், யாங்கணும் விஷயங்களினின்றும் இந்திரியங்களைக் கட்டவல்லான் எவனோ, அவனறிவே நிலை கொண்டது.

ஆகையால் பெருந்தோள் படைத்தவனே !எவருடை புலன்கள் புலப் பொருளிலிருந்தே I
முற்றிலும் அடங்கிய நிலை யிலுள்ளதோ அவருடை ஞானம் நிலை நின்றிருக்குமே II

———-

69. யா நிஸா ஸர்வபூதாநாம் தஸ்யாம் ஜாகர்தி ஸம்யமீ
யஸ்யாம் ஜாக்ரதி பூதாநி ஸா நிஸா பஸ்யதோ முநே:

ஸர்வபூதாநாம் யா நிஸா-எல்லா உயிர்களுக்கும் இரவாகிய நேரத்தில்,
தஸ்யாம் ஸம்யமீ ஜாகர்தி-(தன்னைக் கட்டிய) முனி விழித்திருக்கிறான்,
யஸ்யாம் பூதாநி ஜாக்ரதி-மற்ற உயிர்கள் விழித்திருக்கும் நேரமெதுவோ,
பஸ்யத: முநே: ஸா நிஸா-பரமனைக் கண்ட (உண்மையை உணர்ந்த) முனிக்கு அது இரவு.

எல்லா உயிர்களுக்கும் இரவாகிய நேரத்தில், (தன்னைக் கட்டிய) முனி விழித்திருக்கிறான்.
மற்ற உயிர்கள் விழித்திருக்கும் நேரமெதுவோ அதுவே முனிக்கிரவு.

எல்லா வுயிர் களுக்குமெது விருளோ வதிலே விழிப்புடனி ருப்பான் மன மடங்கியோன் I
எதில் உயிரினங்கள் விழித் திருக்குமோ அதில் இருளிலி ருப்பான் தனை யறிந்த முனி II

70. ஆபூர்யமாணமசலப்ரதிஷ்டம் ஸமுத்ரமாப: ப்ரவிஸந்தி யத்வத்
தத்வத்காமா யம் ப்ரவிஸந்தி ஸர்வே ஸ ஸாந்திமாப்நோதி ந காமகாமீ

யத்வத்-எவ்விதம்,
ஆப: ப்ரவிஸந்தி-நீர்த் தொகுதிகள் வந்து விழுகையில்,
ஆபூர்யமாணம் அசலப்ரதிஷ்டம் ஸமுத்ரம்-நிறைந்து இருந்து அசையா நிலைகொண்டிருக்கும் கடல்
தத்வத்-அதே விதமாக,
யம் காமா: ப்ரவிஸந்தி-எவன் விருப்பங்கள் தன்னுள்ளே புகும்போது (கடலைப் போல இருக்கிறானோ),
ஸ ஸாந்திம் ஆப்நோதி-அவன் சாந்தியடைகிறான்
காமகாமீ ந-விருப்பங்களை விரும்புவோன் அதனை அடையான்.

கடலில் நீர்த் தொகுதிகள் வந்து விழுகையில் அது மேன்மேலும் நிரப்புதற்குரியதாய் அசையா நிலை கொண்டிருப்பது போலே விருப்பங்கள் தன்னுள்ளே புகும்போது இயல்வான் எவனோ அவன் சாந்தியடைகிறான். விருப்பங்களை விரும்புவோன் அதனை அடையான்.

எங்கும் நிரம்பித்ததும்பி அசைவற்று நிலை நிற்கும் கடலை யடைந்து நதிகள் தந்நிலை இழக்கின்றனவோ I
அவ் விதம் தனை யறிந்தோனைப் பொருட்கள் சென்றடையினும் அவனமைதி மாறாதாம், போக விரும்பி அதை யடையானாம் II

———

71. விஹாய காமாந்ய: ஸர்வாந்புமாம்ஸ்சரதி நி:ஸ்ப்ருஹ:
நிர்மமோ நிரஹங்கார: ஸ ஸாந்திமதிகச்சதி

ய: புமாந்-எந்த மனிதன்,
ஸர்வாந் காமாந் விஹாய-எல்லா இன்பங்களையும் துறந்து
நிர்மம: நிரஹங்கார:-எனதென்பதற்றான், யானென்பதற்றான்,
நி:ஸ்ப்ருஹ: சரதி-இச்சையற்றான்,
ஸ ஸாந்திம் அதிகச்சதி-அவனே சாந்தி நிலை அடைகிறான்.

இச்சையற்றான், எல்லா இன்பங்களையும் துறந்தான், எனதென்பதற்றான், யானென்பதற்றான், அவனே சாந்தி நிலை அடைகிறான்.

எம் மனிதன் ஆசைகளனைத்தும் துறந்து நானெனது என்பதனைத்தும் இழந்து I
ஏங்குதல் சிறிதுமின்றி உலாவிடுவானோ அவன் அடைகின்றானே அமைதியை

———

72. ஏஷா ப்ராஹ்மீ ஸ்திதி: பார்த நைநாம் ப்ராப்ய விமுஹ்யதி
ஸ்தித்வாஸ்யாமந்தகாலேऽபி ப்ரஹ்மநிர்வாணம்ருச்சதி

பார்த ஏஷா ப்ராஹ்மீ ஸ்திதி:-பார்த்தா! இது பிரம்ம ஸ்திதி,
ஏநாம் ப்ராப்ய ந விமுஹ்யதி-இதையடைந்தோன் பிறகு மயங்குவதில்லை,
அந்தகாலே அபி-இறுதிக் காலத்திலேனும்
அஸ்யாம் ஸ்தித்வா-இதில் நிலை கொண்டு,
ப்ரஹ்ம நிர்வாணம் ருச்சதி-ப்ரஹ்ம நிர்வாண மெய்துகிறான்.

பார்த்தா, இது பிரம்ம ஸ்திதி. இதையடைந்தோன் பிறகு மயங்குவதில்லை.
இறுதிக் காலத்தி லேனும் இதில் நிலை கொள்வோன், பிரம்ம நிர்வாண மெய்துகிறான்.

ஓபார்த்தனே !
இதுவன்றோ பிரம்மத்தை யடைந்தோன் நிலை இந்நிலை யடைந்த பின் மோகமென்பதில்லை I
அந்திமக் காலத்திலும் அதில் நிலைத்தே திரும்பி வாரா முக்தி நிலை யடைகின்றானே II

———–

ஸ்ரீ பகவத்கீதை –மூன்றாம் அத்தியாயம் –கர்ம யோகம்–செயலை செயல் யோகமாக்குதல்

அர்ஜுன உவாச

1. ஜ்யாயஸீ சேத்கர்மணஸ்தே மதா புத்திர்ஜநார்தந
தத்கிம் கர்மணி கோரே மாம் நியோஜயஸி கேஸவ

அர்ஜுந உவாச-அர்ஜுனன் சொல்லுகிறான்,
ஜநார்தந-ஜநார்த்தனா,
கர்மண: புத்தி ஜ்யாயஸீ-செய்கையைக் காட்டிலும் புத்தியே சிறந்ததென்பது,
தே மதா சேத்-நின் கொள்கையாயின்,
தத் கோரே கர்மணி-இந்தக் கொடிய செய்கையில்,
மாம் கிம் நியோஜயஸி கேஸவ-என்னைப் புகுத்துவதென்னே, கேசவா?

அர்ஜுனன் சொல்லுகிறான்: ஜநார்த்தன, செய்கையைக் காட்டிலும் புத்தியே சிறந்ததென்பது நின் கொள்கையாயின் இந்தக் கொடிய செய்கையில் என்னைப் புகுத்துவதென்னே, கேசவா?

“அர்ஜுனன் புகன்றான்”
ஜனார்த்தனா! ஞானம் கர்மத்தினும் மேலாமென்பது உம்முடை கருத்தானால் |
அவ் வமயம் கேசவா! எனை யேன் கொடியதான வினையதில் ஏவுகின்றீர்||

2. வ்யாமிஸ்ரேணேவ வாக்யேந புத்திம் மோஹயஸீவ மே
ததேகம் வத நிஸ்சித்ய யேந ஸ்ரேயோऽஹமாப்நுயாம்

வ்யாமிஸ்ரேண இவ வாக்யேந-குழம்பியது போன்ற பேச்சினால்,
மே புத்திம் மோஹயஸி இவ-என் புத்தியை மயங்கச் செய்கிறாய் போல!
யேந அஹம் ஸ்ரேய: ஆப்நுயாம்-எது எனக்கு நன்மை தருமென்பதை,
தத் ஏகம் நிஸ்சித்ய வத-அந்த ஒன்றை நிச்சயப் படுத்தி சொல்

குழப்பமான பேச்சினால் என் புத்தியை மயங்கச் செய்கிறாய். ஆதலால் எது எனக்கு நன்மை
தருமென்பதை உறுதிப்படுத்தி ஒரே வார்த்தையாகச் சொல்.

முரண்பாடுளது போன்ற சொற்களாலென் புத்தியைத் தாம் மயக்குவது போலுள்ளது |
நானெதனால் உயர் நலம் பெறுவேனோ அதிலொன்றை நிச்சயித்துப் பகர வேண் டுமே ||

———-

ஸ்ரீ பகவாநுவாச

3. லோகேऽஸ்மிந் த்விவிதா நிஷ்டா புரா ப்ரோக்தா மயாநக
ஜ்ஞாநயோகேந ஸாங்க்யாநாம் கர்மயோகேந யோகிநாம்

ஸ்ரீ பகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்,
அநக-பாபமொன்று மில்லாத அர்ஜுனா
லோகே மயா-இவ்வுலகில் என்னால்,
த்விவிதா நிஷ்டா-இரண்டுவித நிஷ்டை,
புரா ப்ரோக்தா-முன்னர் கூறப்பட்டது,
ஸாங்க்யாநாம் ஜ்ஞாநயோகேந-ஸாங்கியர்களின் ஞான யோகத்தால்,
யோகிநாம் கர்மயோகேந-யோகிகளின் கர்ம யோகத்தால்.

ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: பாபமொன்று மில்லாத அர்ஜுனா, இவ்வுலகில் இரண்டு வித நிஷ்டை முன்னர் என்னால் கூறப்பட்டது-ஸாங்கியர்களின் ஞான யோகத்தால் எய்துவது, யோகிகளின் கர்ம யோகத்தால் எய்துவது என.

“ஸ்ரீபகவான் பகர்ந்தார்”
பாவமற்றவனே ! ஆதியிலென்னா லிப் புவியில் தத்வ விசாரம் செய்வோனுக்கு ஞான யோகமாம் I
செயல்களைச் செய்வோனுக்கு கர்ம யோகமாம், இவ் விரு வாழ்க்கை முறை பகரப் பட்டதாம் II

——–

4. ந கர்மணாமநாரம்பாந்நைஷ்கர்ம்யம் புரு÷ஷாऽஸ்நுதே
ந ச ஸந்ந்யஸநாதேவ ஸித்திம் ஸமதிகச்சதி

புருஷ: கர்மணாம் அநாரம்பாத்-தொழில்களைத் ஆரம்பிக்காமல் இருப்பதால்,
நைஷ்கர்ம்யம் ந அஸ்நுதே-செயலற்ற நிலை அடைவதில்லை,
ஸந்ந்யஸநாத் ஏவ-துறவினாலேயே
ஸித்திம் ச ந ஸமதிகச்சதி-ஈடேற்றம் பெற்றுவிட மாட்டான்,

தொழில்களைத் தொடாமலே யிருப்பதனால் மனிதன் செயலற்ற நிலை அடைவதில்லை.
துறவினாலேயே மனிதன் ஈடேற்றம் பெற்றுவிட மாட்டான்.

மனிதன் செயல்களைத் துவங்காததால் செயலற்ற முக்திநிலை அடை வதில்லையே I
செயல்களை மட்டுமே துறப்பதனால் செயலில்லா நிறை நிலை எய்துவதில்லையே II

———–

5. ந ஹி கஸ்சித்க்ஷணமபி ஜாது திஷ்டத்யகர்மக்ருத்
கார்யதே ஹ்யவஸ: கர்ம ஸர்வ: ப்ரக்ருதிஜைர்குணை:

ஹி கஸ்சித் ஜாது க்ஷணம் அபி-எவனும் ஒரு கணப்பொழுதேனும்,
அகர்மக்ருத் ந திஷ்டதி-செய்கையின்றிருப்பதில்லை,
ஹி ப்ரக்ருதிஜை குணை:-இயற்கையில் விளையும் குணங்களே,
ஸர்வ: அவஸ:-எல்லா உயிர்களையும் தன் வசமின்றி,
கர்ம கார்யதே-தொழில் புரிவிக்கின்றன.

எவனும் ஒரு கணப்பொழுதேனும் செய்கையின்றிருப்பதில்லை. இயற்கையில் விளையும் குணங்களே எல்லா உயிர்களையும் அவசரமாகத் தொழில் புரிவிக்கின்றன.

யாரும் கணப் பொழுதேனும் செயலில் ஈடுபடா திருப்பதில்லையே ஏனெனில் I
இயல்பான குணங்களினாலே யெல்லோரும் தன் வயமின்றிச் செயலிலீடு படுகிறார்களே II


6. கர்மேந்த்ரியாணி ஸம்யம்ய ய ஆஸ்தே மநஸா ஸ்மரந்
இந்த்ரியார்தாந்விமூடாத்மா மித்யாசார: ஸ உச்யதே

ய: விமூடாத்மா-எந்த மூடாத்மா,
கர்மேந்த்ரியாணி ஸம்யம்ய-கர்மேந்திரியங்களை அடக்கிக் கொண்டு,
இந்த்ரியார்தாந்-இந்திரிய விஷயங்களை,
மநஸா ஸ்மரந் ஆஸ்தே-மனத்தால் ஸ்மரித்துக் கொண்டிருக்கிறானோ,
ஸ மித்யாசார: உச்யதே-பொய்யழுக்கமுடையவனென்று சொல்லப் படுகிறான்.

கர்மேந்திரியங்களை அடக்கிக்கொண்டு, ஆனால் இந்திரிய விஷயங்களை மனத்தால் ஸ்மரித்துக் கொண்டிருப்போனாகிய மூடாத்மா பொய்யழுக்கமுடையவனென்று சொல்லப்படுகிறான்.

எவன் செயல் புலன்களையே நன்கடக்கியும் மனதால் புலப்பொருட்களையே நினைந்தும் I
மனம் கலங்கி யிருக்கின்றானோ அவனைப் பொய் யொழுக்கமுடை யோனென்றே பகர்வர் II

———

7. யஸ்த்விந்த்ரியாணி மநஸா நியம்யாரபதேऽர்ஜுந
கர்மேந்த்ரியை: கர்மயோகமஸக்த: ஸ விஸிஷ்யதே

து அர்ஜுந-ஆனால் அர்ஜுநா,
ய மநஸா இந்த்ரியாணி-எவன் இந்திரியங்களை மனத்தால்
நியம்ய அஸக்த:-கட்டுப்படுத்திக்கொண்டு பற்றில்லாமல்,
கர்மேந்த்ரியை: கர்மயோகம் ஆரபதே-கர்மேந்திரியங்களால் கர்ம யோகம் பண்ணுகிறானோ,
ஸ விஸிஷ்யதே-அவன் சிறந்தவன்.

அர்ஜுனா, எவன் இந்திரியங்களை மனத்தால் கட்டுப்படுத்திக்கொண்டு, கர்மேந்திரியங்களால் கர்ம யோகம் பண்ணுகிறானோ, அவன் சிறந்தவன்.

அர்ஜுனா, அவ்விதமின்றி யெவன் தன் புலன்களை மனத்தினால் நன்கடக்கியும் I
பற்றற்றும் செயல் புலன்கள் மூலமாய் செயல் யோகத்தைத் துவங்குமவன் சிறந்தோன் II

——-

8. நியதம் குரு கர்ம த்வம் கர்ம ஜ்யாயோ ஹ்யகர்மண:
ஸரீரயாத்ராபி ச தே ந ப்ரஸித்த்யேதகர்மண:

நியதம் கர்ம த்வம் குரு-விதிக்கப்பட்ட தொழிலை நீ செய்,
ஹி அகர்மண: கர்ம ஜ்யா ய:-ஏனெனில் தொழிலின்மையைக் காட்டிலும் தொழில் சிறந்ததன்றோ,
அகர்மண:-தொழிலின்றி,
தே ஸரீரயாத்ரா அபி-உனக்கு உடம்பைப் பேணுதல் கூட,
ந ப்ரஸித்த்யேத்-சாத்தியம் ஆகாது.

விதிக்கப்பட்ட தொழிலை நீ செய். தொழில் தொழிலின்மையைக் காட்டிலும் சிறந்ததன்றோ? தொழிலின்றி இருப்பதால் உடம்பைக் கொண்டு செலுத்துதல் கூட உனக்கில்லாமல் போய் விடும்.

விதிக்கப்பட்டுள செயல்களை நீ செய்வாய் செயல் செய்யாமை யினும் செய்தல் சிறந்ததாம் I
மேலுமெவ்விதச் செயலையும் செய்யாதோன் உடலைப் பேணுத லென்பது மியலாது போகுமே II

———–

9. யஜ்ஞார்தாத்கர்மணோऽந்யத்ர லோகோऽயம் கர்மபந்தந:
ததர்தம் கர்ம கௌந்தேய முக்தஸங்க: ஸமாசர

யஜ்ஞார்தாத் கர்மண:-வேள்வியின் பொருட்டென்று செய்யப்படுவது,
அந்யத்ர அயம் லோக கர்மபந்தந:-தவிர (மற்றைத் தொழில்) மனிதருக்குத் தளையாகிறது,
கௌந்தேய முக்தஸங்க:-குந்தி மகனே, பற்றைக் களைந்து,
ததர்தம் கர்ம ஸமாசர-அந்த வேள்வியின் பொருட்டே தொழில் செய்து கொண்டிரு.

வேள்வியின் பொருட்டென்று செய்யப்படுவது தவிர மற்றைத் தொழில் மனிதருக்குத் தளையாகிறது-ஆதலால், குந்தி மகனே, பற்றைக் களைந்து தொழில் செய்து கொண்டிரு.

வேள்விச் செயல் தவிரப் பிற செயல்களால் இம் மனித உலகம் பந்தப் படுகின்றதே I
குந்திமகனே ! பற்றின்றிச் செயல்களையே வேள்வியின் பொருட்டு நன்கியற்றுவாயே II

———-

10. ஸஹயஜ்ஞா: ப்ரஜா: ஸ்ருஷ்ட்வா புரோவாச ப்ரஜாபதி:
அநேந ப்ரஸவிஷ்யத்வமேஷ வோऽஸ்த்விஷ்டகாமதுக்

புரா-முன்பு,
ப்ரஜாபதி: ஸஹயஜ்ஞா: ப்ரஜா: ஸ்ருஷ்ட்வா-பிரம்மதேவன் வேள்வியுடனே உயிர்க்குலத்தை படைத்து,
உவாச-சொல்லினான்,
அநேந ப்ரஸவிஷ்யத்வம்-இதனால் பல்குவீர்கள்,
ஏஷ: வ: இஷ்டகாமதுக் அஸ்து-இது (இந்த வேள்வி) உங்களுக்கு விரும்பும் விருப்பங்களை யெல்லாம் தருவதாக ஆகட்டும்.

முன்பு பிரம்மதேவன் வேள்வியுடனே உயிர்க் குலத்தை ஒருமிக்கப் படைத்துச் சொல்லினான்:இதனால் பல்குவீர்கள், நீங்கள் விரும்பும் விருப்பங்களையெல்லாம் உங்களுக்கிது கறந்து தரும்.

ஆதியில் பிரம்ம தேவன் வேள்வியுடன் உலகோரைத் தோற்றுவித்து வேள்வியினால் I
வளமடைவீர்! ஈதுங்களுக்கு இஷ்டமானதை வழங்கிடும் காமதேனுவா கட்டுமென்றார் II

———–

11. தேவாந்பாவயதாநேந தே தேவா பாவயந்து வ:
பரஸ்பரம் பாவயந்த: ஸ்ரேய: பரமவாப்ஸ்யத

அநேந தேவாந் பாவயத-இதனால் தேவர்களைக் கருதக் கடவீர்,
தே தேவா வ: பாவயந்து-அந்த தேவர் உங்களைக் கருதக் கடவர்,
பரஸ்பரம் பாவயந்த:-பரஸ்பரமான பாவனை செய்வதனால்,
பரம் ஸ்ரேய:-உயர்ந்த நலத்தை,
அவாப்ஸ்யத-எய்துவீர்கள்.

இதனால் தேவர்களைக் கருதக் கடவீர்; அந்த தேவர் உங்களைக் கருதக் கடவர்.
(இங்ஙனம்) பரஸ்பரமான பாவனை செய்வதனால் உயர்ந்த நலத்தை எய்துவீர்கள்.

இதன் மூலம் தேவர்களைப் போஷியுங்கள் அவர்களும் உங்கதளப் போஷிக்கட்டும் I
இவ்விதம் ஒருவரை யொருவர் பேணுதலால் உயர்வான நன்மையை யெய்துவீர்களாம் II

——–

12. இஷ்டாந்போகாந்ஹி வோ தேவா தாஸ்யந்தே யஜ்ஞபாவிதா:
தைர்தத்தாநப்ரதாயைப்யோ யோ புங்க்தே ஸ்தேந ஏவ ஸ:

யஜ்ஞபாவிதா: தேவா:-வேள்வியில் பாவனை செய்யப்பட்ட தேவர்,
வ: இஷ்டாந் போகாந்-உங்களுக்கு விரும்பிய போகங்களையெல்லாம்,
ஹி தாஸ்யந்தே-தருவர்,
தை தத்தாந்-அவர்கள் தந்தவற்றுக்கு,
ஏப்ய: அப்ரதாய ய: புங்க்தே-அவர்களுக்கு கைம்மாறு (அர்ப்பணம்) செய்யாமல் உண்போன்,
ஸ: ஸ்தேந ஏவ-கள்வனே ஆவான்.

வேள்வியில் பாவனை செய்யப்பட்ட தேவர் உங்களுக்கு விரும்பிய போகங்களையெல்லாந் தருவர். அவர்களுக்குக் கைம்மாறு செலுத்தாமல் அவர்கள் கொடுப்பதை உண்போன் கள்வனே யாவன்.”

வேள்வியால் பேணப்பட்ட அத் தேவர்களுங்களுக்குப் பிடித்த போகங்களை நிச்சய- I
மளிப்பர்; அவர்களளித்தவைகளை மீண்டு மளிக்காது தானே யுண்ணுவோன் கள்வனாம் II

————-

3. யஜ்ஞஸிஷ்டாஸிந: ஸந்தோ முச்யந்தே ஸர்வகில்பிஷை:
புஞ்ஜதே தே த்வகம் பாபா யே பசந்த்யாத்மகாரணாத்

யஜ்ஞஸிஷ்டாஸிந: ஸந்த:-வேள்வியின் மிச்சத்தை யுண்ணும் நல்லோர்,
ஸர்வகில்பிஷை: முச்யந்தே-எல்லா பாபங்களினின்றும் விடுபடுகிறார்கள்,
யே பாபா: ஆத்மகாரணாத் பசந்தி-தம்பொருட்டென்று மாத்திரமே உணவு சமைக்கும் பாவிகள்,
தே து அகம் புஞ்ஜதே-பாவத்தை உண்ணுகிறார்கள்.

வேள்வியின் மிச்சத்தை யுண்ணும் நல்லோர் எல்லா பாபங்களினின்றும் விடுபடுகிறார்கள்.
தம்பொருட்டென்று மாத்திரமே உணவு சமைக்கும் பாவிகள் பாவத்தை உண்ணுகிறார்கள்.

வேள்வியி லெஞ்சியதை யுண்ணும் சான்றோர் எல்லாப் பாவங்களி லிருந்தும் விடுபடுகின்றனர்I
ஆனாலெவர்கள் தமக்காகவே சமைக்கும் அத்தீச் செயலோர் பாவத்தையே உண் கின்றனர்II

—————

14. அந்நாத்பவந்தி பூதாநி பர்ஜந்யாதந்நஸம்பவ:
யஜ்ஞாத்பவதி பர்ஜந்யோ யஜ்ஞ: கர்மஸமுத்பவ:

பூதாநி அந்நாத் பவந்தி-உயிர்கள் அன்னத்தால் உண்டாகின்றன,
பர்ஜந்யாத் அந்ந ஸம்பவ:-மழையால் உணவு தோன்றுகிறது,
பர்ஜந்ய: யஜ்ஞாத் பவதி-மழை வேள்வியால் ஆகிறது,
யஜ்ஞ: கர்ம ஸமுத்பவ:-வேள்வி செய்கையினின்று பிறப்பது.

அன்னத்தால் உயிர்கள் சமைகின்றன. மழையால் உணவு தோன்றுகிறது.
மழை வேள்வியால் ஆகிறது. வேள்வி செய்கையினின்று பிறப்பது.

உணவினின்று உயிரினங்க ளுருவாகின்றன-மழையினின்று உணவுகள் உண்டாகின் றன I
வேள்வியினின்று மழைகள் பொழிகின்றன வேள்வியோ செயல்களிலிருந்து விளைகின்றதே II

——–

15. கர்ம ப்ரஹ்மோத்பவம் வித்தி ப்ரஹ்மாக்ஷரஸமுத்பவம்
தஸ்மாத்ஸர்வகதம் ப்ரஹ்ம நித்யம் யஜ்ஞே ப்ரதிஷ்டிதம்

கர்ம ப்ரஹ்மோத்பவம்-செய்கை பிரம்மத்தினின்றும் பிறப்பதென்றுணர்,
ப்ரஹ்ம: அக்ஷரஸமுத்பவம் வித்தி-பிரம்மம் அழிவற்ற பரமாத்மாவில் தோன்றுவது,
தஸ்மாத் ஸர்வகதம் ப்ரஹ்ம-ஆதலால் எங்கும் நிறைந்த பிரம்மம்,
நித்யம் யஜ்ஞே ப்ரதிஷ்டிதம்-எப்போதும் வேள்வியில் நிலைபெற்றது.

செய்கை பிரம்மத்தினின்றும் பிறப்பதென்றுணர். பிரம்மம் அமிர்தத்தில் தோன்றுவது.
ஆதலால் எங்கும் நிறைந்த பிரம்மம் எப்போதும் வேள்வியில் நிலைபெற்றது.

வேதத்திலிருந்து செயல்களு திக்கின்றன வேதமோ அழியாப் பிரஹ்ம்மனிடமு திக்கின்றன- I
வென் றறிக; ஆதலாதலெங்குமுள்ள வேதமோ வேள்வியில் நித்யமாம் நிலை நிற்கின்றதே II

————

16. ஏவம் ப்ரவர்திதம் சக்ரம் நாநுவர்தயதீஹ ய:
அகாயுரிந்த்ரியாராமோ மோகம் பார்த ஸ ஜீவதி

பார்த ய: இஹ-பார்த்தா எவன் இவ்வுலகில்,
ஏவம் ப்ரவர்திதம் சக்ரம்-இங்ஙனம் சுழலும் வட்டத்தை,
ந அநுவர்தயதி-பின்பற்றி ஒழுகாதவனாக,
இந்த்ரியாராம:-புலன்களிலே களிக்கிறானோ,
ஸ: அகாயு:-அவன் பாப வாழ்க்கையுடையான்,
மோகம் ஜீவதி-(அவன்) வாழ்க்கை விழலேயாம்.

இங்ஙனம் சுழலும் வட்டத்தை இவ்வுலகில் பின்பற்றி ஒழுகாதோன் பாப வாழ்க்கை யுடையான்;புலன்களிலே களித்தான்; பார்த்தா, அவன் வாழ்க்கை விழலேயாம்.

அர்ஜுனா! யாவனிங்கு இவ் விதமாய்ச் சுழலும் படைப்புச் சக்கரம் பின் பற்றானோ I
பாவ வாழ்வும், புலனின் பத்திலுமவன் திளைத்தே வீண் வாழ்வு வாழ்கின்றானே II

———

17. யஸ்த்வாத்மரதிரேவ ஸ்யாதாத்மத்ருப்தஸ்ச மாநவ:
ஆத்மந்யேவ ச ஸந்துஷ்டஸ்தஸ்ய கார்யம் ந வித்யதே

து ய: மாநவ:-ஆனால் எந்த மனிதன்,
ஆத்மரதி ஏவ ச-தன்னிலேதான் இன்புறுவான்,
ஆத்மத்ருப்த ச-தன்னிலேதான் திருப்தியடைவான்,
ஆத்மநி ஏவ ஸந்துஷ்ட: ஸ்யாத்-தன்னிலேதான் மகிழ்ந்திருப்பான் எனில்,
தஸ்ய கார்யம் ந வித்யதே-அவனுக்குத் தொழிலில்லை.

தன்னிலேதான் இன்புறுவான்; தன்னிலேதான் திருப்தியடைவான்; தன்னிலேதான் மகிழ்ந்திருப்பான், அவனுக்குத் தொழிலில்லை.

ஆனாலாத்மாவிலே திளைத்திருக்கும் மனிதன் ஆத்மாவிலேயே திருப்தி யுடனி ருப்பவனாய் I
ஆத்மாவிலேயே சந்தோஷமுள்ள வனாயிருக்கும் அவனுக்குச் செய்ய வேண்டிய தே துமில்லையே II

———

18. நைவ தஸ்ய க்ருதேநார்தோ நாக்ருதேநேஹ கஸ்சந
ந சாஸ்ய ஸர்வபூதேஷு கஸ்சிதர்தவ்யபாஸ்ரய:

தஸ்ய இஹ க்ருதேந-அவனுக்குச் செய்கையில்,
கஸ்சந அர்த ந-யாதொரு பயனுமில்லை.
அக்ருதேந: ஏவ ந-செயலின்றி இருப்பதிலும் (அவனுக்கு பயன்) இல்லை,
ச ஸர்வபூதேஷு-எந்த உயிரிலும்,
அஸ்ய அர்த வ்யபாஸ்ரய:-அவனுக்கு எவ்வித பயனும்,
கஸ்சித் ந-சிறிது கூட இல்லை.

அவனுக்குச் செய்கையில் யாதொரு பயனுமில்லை; செயலின்றி இருப்பதிலும் அவனுக்குப் பயனில்லை;எவ்விதப் பயனையுங் கருதி அவன் எந்த உயிரையுஞ் சார்ந்து நிற்பதில்லை.

இப்புவியிலிருக்கும் இஞ்ஞானிக்கு செயலைச் செய்தும், செய்யாததாலும் பலநேதுமில்லை I
இன்னும் இவனுக்கு எவ் வுயிர்களிடத்தும் பயன் நாடிச் சார்ந்திருக்க வேண்டுவதில்லையே II

———-

19. தஸ்மாதஸக்த: ஸததம் கார்யம் கர்ம ஸமாசர
அஸக்தோ ஹ்யாசரந்கர்ம பரமாப்நோதி பூருஷ:

தஸ்மாத் ஸததம் அஸக்த:-ஆதலால், எப்போதும் பற்று நீக்கி,
கார்யம் கர்ம-செய்யத்தக்க தொழிலை,
ஸமாசர-செய்து கொண்டிரு,
ஹி அஸக்த:-ஏனெனில் பற்றில்லாமல்,
கர்ம ஆசரந் பூருஷ:-தொழில் செய்துகொண்டிருக்கும் மனிதன்,
பரம் ஆப்நோதி-பரம்பொருளை எய்துகிறான்.

ஆதலால், எப்போதும் பற்று நீக்கிச் செய்யத்தக்க தொழிலைச் செய்து கொண்டிரு.
பற்றில்லாமல் தொழில் செய்துகொண்டிருக்கும் மனிதன் பரம்பொருளை எய்துகிறான்.

ஆதலால் நீ பற்றின்றிச் செய்ய வேண் டிய செயல்களை எப்பொழுதும் நன்கியற்றுவாய் I
ஏனெனில் பற்றற்று செயல்களைச் செய்யும் மனிதன் பரம நிலை எய்துகின்றான் II

——-

20. கர்மணைவ ஹி ஸம்ஸித்திமாஸ்திதா ஜநகாதய:
லோகஸங்க்ரஹமேவாபி ஸம்பஸ்யந்கர்துமர்ஹஸி

ஜநகாதய: ஹி-ஜனகன் முதலியோரும்,
கர்மணா ஏவ-செய்கையாலேயே,
ஸம்ஸித்திம் ஆஸ்திதா-சித்தி (சிறந்த பேற்றை) பெற்றார்கள்,
லோகஸங்க்ரஹம் ஸம்பஸ்யந்-உலக நன்மையைக் கருதியும்,
அபி கர்தும் ஏவ அர்ஹஸி-நீ தொழில் புரிதல் தகும்.

ஜனகன் முதலியோர் செய்கையாலேயே சித்தி பெற்றார்கள். உலக நன்மையைக் கருதியும்
நீ தொழில் புரிதல் தகும்.

ஏனெனில் கடமைகளின் மூலம் முக்தியையும் ஜனகன் முதலானோர்கள் அடைந்தனரே I
நீ யுமுலகை நல் வழிப் படுத்த வேண்டியே கடமையைச் செய்வதற்குரிய வனாகின்றாய் II

—–

21. யத்யதாசரதி ஸ்ரேஷ்டஸ்தத்ததேவேதரோ ஜந:
ஸ யத்ப்ரமாணம் குருதே லோகஸ்ததநுவர்ததே

ஸ்ரேஷ்ட யத் யத் ஆசரதி-எதனை யெதனை உயர்ந்தோன் செய்கிறானோ,
இதர ஜந: தத் தத் ஏவ-மற்ற மனிதர் அதை அதையே (பின்பற்றுகிறார்கள்),
ஸ யத் ப்ரமாணம் குருதே-அவன் எதை பிரமாணம் ஆக்குகிறானோ,
லோக தத் அநுவர்ததே-உலகத்தார் அதையே தொடருகிறார்கள்.

எதனை யெதனை உயர்ந்தோன் செய்கிறானோ அதையே மற்ற மனிதர் பின்பற்றுகிறார்கள்.-அவன் எதை பிரமாணமாக்குகிறானோ, அதையே உலகத்தார் தொடருகிறார்கள்.

மேலோன் எதை யதைக் கடைப் பிடிக்கின் றானோ உலகோர் அதை யதையே யனுசரிக்கின்றனரே I
அவனெதைப் பிரமாணமாய்க் கொள்கின்றானோ அதனையே உலகமும் பின்பற்றுகின்றதே II

——-

22. ந மே பார்தாஸ்தி கர்தவ்யம் த்ரிஷு லோகேஷு கிஞ்சந
நாநவாப்தமவாப்தவ்யம் வர்த ஏவ ச கர்மணி

பார்த-பார்த்தா,
மே-எனக்கு,
த்ரிஷு லோகேஷு-மூன்றுலகத்திலும்,
கர்தவ்யம் கிஞ்சந ந அஸ்தி-யாதொரு கடமையுமில்லை,
அவாப்தவ்யம் அவாப்தம் ச ந-பெற்றிராத பேறுமில்லை,
கர்மணி ஏவ வர்தே-தொழிலிலேதான் இயங்குகிறேன்.

பார்த்தா, மூன்றுலகத்திலும் எனக்கு யாதொரு கடமையுமில்லை. நான் பெற்றிராத பேறுமில்லை. எனினும் நான் தொழிலிலேதான் இயங்குகிறேன்.

அர்ஜுனா! மூவுலகிலும் எனக்குச் செய்ய வேண்டிய தேதுமில்லையே ! இனியுமே பெற- I
வேண்டியதும் வேண்டாததும் ஏதுமில்லை இருப்பினும் செயலில் நான் ஈடுபடுகின்றேனே II

——-

23. யதி ஹ்யஹம் ந வர்தேயம் ஜாது கர்மண்யதந்த்ரித:
மம வர்த்மாநுவர்தந்தே மநுஷ்யா: பார்த ஸர்வஸ:

ஹி பார்த-ஏனெனில் பார்த்தா!
ஜாது அஹம் அதந்த்ரித:-ஒருக்கால் நான் சோம்பலில்லாமல்
யதி கர்மணி ந வர்தேயம்-எப்போதும் தொழில் கொண்டிராவிடின்,
ஸர்வஸ: மநுஷ்யா: மம வர்த்ம அநுவர்தந்தே-எல்லாப் பக்கங்களிலும் மனிதர் என் வழியையே பின்பற்றுகிறார்கள்.

நான் சோம்பலில்லாமல் எப்போதும் தொழில் கொண்டிராவிடின், பார்த்தா,
எல்லாப் பக்கங்களிலும் மனிதர் என் வழியையே பின்பற்றுகிறார்கள்.

பார்த்தனே ! ஏனெனில் எப்பொழுதும் நான் சோம்பலின்றிச் செயல்களி லீடுபடாவிடில் I
என் பாதயையே யுதாரணமாய் மனிதர்கள் என்றுமே எவ் விதத்திலும் பின் பற்றுவரே II

——-

24. உத்ஸீதேயுரிமே லோகா ந குர்யாம் கர்ம சேதஹம்
ஸங்கரஸ்ய ச கர்தா ஸ்யாமுபஹந்யாமிமா: ப்ரஜா:

அஹம் கர்ம ந குர்யாம் சேத்-நான் தொழில் செய்யாவிட்டால்,
இமே லோகா: உத்ஸீதேயு-இந்த ஜனங்களெல்லோரும் அழிந்து போவார்கள்,
ஸங்கரஸ்ய கர்தா-குழப்பத்தை ஆக்கியோன்,
இமா: ப்ரஜா:-இந்த மக்களை,
உபஹந்யாம் ஸ்யாம்-கொல்வோன் ஆவேன்.

நான் தொழில் செய்யாவிட்டால், இந்த ஜனங்களெல்லோரும் அழிந்து போவார்கள்;
குழப்பத்தை நான் ஆக்கியோன் ஆவேன்; இந்த மக்களை யெல்லாங் கொல்வோனாவேன்.

செயல்களை யான் செய்யா திருப்பேனாகில் இப் புவன மனைத்தும் அழிந்து போகும் I
மேலும் நான் குலக் குழப்பம் செய்தவனாவேன் இம் மக்களனைவரையும் அழித்தவனாவேன் II

—–

25. ஸக்தா: கர்மண்யவித்வாம்ஸோ யதா குர்வந்தி பாரத
குர்யாத்வித்வாம்ஸ்ததாஸக்தஸ்சிகீர்ஷுர் லோகஸங்க்ரஹம்

பாரத-பாரதா,
அவித்வாம்ஸ: கர்மணி ஸக்தா:-அறிவில்லாதோர் செய்கையில் பற்றுடையோராய்,
யதா குர்வந்தி-எப்படித் தொழில் செய்கிறார்களோ,
ததா வித்வாம்ஸ: அஸக்த:-அப்படியே அறிவுடையோன் பற்றை நீக்கி,
லோக ஸங்க்ரஹம் சிகீர்ஷு-உலக நன்மையை நாடி,
குர்யாத்-தொழில் செய்ய வேண்டும்.

பாரதா, அறிவில்லாதோர் செய்கையில் பற்றுடையோராய் எப்படித் தொழில் செய்கிறார்களோ அப்படியே அறிவுடையோன் பற்றை நீக்கி உலக நன்மையை நாடித் தொழில் செய்ய வேண்டும்.

பரத குலத்தோனே ! செயல் பற்றி னா லெவ்விதம் அறிவிலோர் செயல்களைச் செய்வாரோ அவ் விதம்
அறிவுளோர் உலக நன்மையைக் கருதியே பற்றற்றுச் செயல்களைச் செய்ய வேண்டுமே II

———–

26. ந புத்திபேதம் ஜநயேதஜ்ஞாநாம் கர்மஸங்கிநாம்
ஜோஷயேத்ஸர்வகர்மாணி வித்வாந்யுக்த: ஸமாசரந்

யுக்த: வித்வாந்-அறிவுடையோன்,
கர்மஸங்கிநாம் அஜ்ஞாநாம்-தொழிலில் பற்றுதல் கொண்ட அஞ்ஞானிகளுக்கு,
புத்திபேதம் ந ஜநயேத்-புத்தி பேதம் விளைவிக்கக் கூடாது
ஸர்வகர்மாணி ஸமாசரந்-எல்லா கர்மங்களையும் செவ்வனே ஆற்றி,
ஜோஷயேத்-(அவர்களையும்) செய்யச் செய்ய வேண்டும்.

அறிவுடையோன் தொழிலில் பற்றுதல் கொண்ட அஞ்ஞானிகளுக்கு புத்தி பேதம் விளைவிக்கக் கூடாது.-அவன் யோகத்தில் நின்று தொழில் செய்து எல்லாத் தொழில்களையும் கவர்ச்சியுடையவனாக்க வேண்டும்.

செயலில் பற்றுள்ள அறிவிலோர் புத்தியிலே ஞானியவன் குழப்பமுண்டு பண்ணலாகாதே I
நன்றாகத் தானும் செயல்களை நன்கியற்றியே அவர்களையும் செயலிலீடுபடச் செய வேண்டுமே II

——–

27. ப்ரக்ருதே: க்ரியமாணாநி குணை: கர்மாணி ஸர்வஸ:
அஹங்காரவிமூடாத்மா கர்தாஹமிதி மந்யதே

ப்ரக்ருதே: குணை: ஸர்வஸ:-இயற்கையின் குணங்களால் எங்கும்,
கர்மாணி க்ரியமாணாநி-தொழில்கள் செய்யப்படுகின்றன,
அஹங்கார விமூடாத்மா-அகங்காரத்தால் மயங்கியவன்,
கர்தா அஹம் இதி மந்யதே-“நான் செய்கிறேன்” என்று நினைக்கிறான்.

எங்கும் தொழில்கள் இயற்கையின் குணங்களால் செய்யப்படுகின்றன.
அகங்காரத்தால் மயங்கியவன், “நான் செய்கிறேன்” என்று நினைக்கிறான்.

எவ் வகையிலும் பிரகிருதியின் குணங்களால் செயல்களனைத்தும் செய்யப் படுகின்றன I
அகங்காரத்தால் மனம் மயங்கி யிருப்போன் செய்பவன் நான் என்றெண்ணி யிருக்கின்றானே II

————

28. தத்த்வவித்து மஹாபாஹோ குணகர்மவிபாகயோ:
குணா குணேஷு வர்தந்த இதி மத்வா ந ஸஜ்ஜதே

து மஹாபாஹோ-ஆனால் பெருந்தோளாய்!
குண கர்ம விபாகயோ:-குணம், செய்கை இவற்றினுடைய பிரிவுகளின்,
தத்த்வவித்-உண்மையறிந்தோன்,
குணா குணேஷு வர்தந்த-குணங்கள் குணங்களில் செயல்படுகின்றன,
இதி மத்வா ந ஸஜ்ஜதே-என்று கருதி பற்றற்றிருப்பான்.

குணம், செய்கை இவற்றினுடைய பிரிவுகளின் உண்மையறிந்தோன், குணங்கள்
குணங்களில் இயலுகின்றன’ என்று கருதி பற்றற்றிருப்பான்.

ஆனால், பெருந்தோளா!குணங் களுமவை தம் செயல்களின் தத்துவத்ததயு முணர்ந்தோன் I
குணத் தோன்றல் குண வடிவாம் பொருட்களில் செல்கின்றன வென்றே பற்றற்றிருப்பான் II

————–

29. ப்ரக்ருதேர்குணஸம்மூடா: ஸஜ்ஜந்தே குணகர்மஸு
தாநக்ருத்ஸ்நவிதோ மந்தாந்க்ருத்ஸ்நவிந்ந விசாலயேத்

ப்ரக்ருதே: குணஸம்மூடா:-இயற்கையில் குணங்களால் மயங்கியவர்கள்,
குணகர்மஸு ஸஜ்ஜந்தே-குணங்களிலும் தொழில்களிலும் பற்றுதலடைகிறார்கள்,
தாந் அக்ருத்ஸ்நவித:-அந்த முற்றும் அறிந்திராத,
மந்தாந் ந விசாலயேத்-சிற்றறிவுடைய அந்த மாந்தர்களை உழல்விக்கக் கூடாது.

இயற்கையில் குணங்களால் மயங்கியவர்கள் குணங்களிலும் தொழில்களிலும் பற்றுதலடைகிறார்கள்.சிற்றறிவுடைய அந்த மாந்தர்களை முழுதுணர்ந்த ஞானி உழல்விக்கக் கூடாது.

பிரகிருதி குணங்களால் நன்கு மயங்கியோர் குணக் கர்மங்களில் பற்று வைக்கிறார்கள் I
முற்றுமறியா அம் மந்த புத்தி யுடையோரை முற்றுமறிந்தோன் கலங்கச் செய்யலாகாதே II

————–

30. மயி ஸர்வாணி கர்மாணி ஸந்ந்யஸ்யாத்யாத்மசேதஸா
நிராஸீர்நிர்மமோ பூத்வா யுத்யஸ்வ விகதஜ்வர:

அத்யாத்மசேதஸா:-என்னிடம் ஒன்றிய மனதுடயவனாக,
ஸர்வாணி கர்மாணி-எல்லாச் செய்கைகளையும்,
மயி ஸந்ந்யஸ்ய-என்னில் அர்ப்பணம் செய்து விட்டு,
விகதஜ்வர:-மனக் காய்ச்சல் தீர்ந்தவனாய்,
நிராஸீ நிர்மம:
பூத்வா-ஆசை நீங்கி, எனது என்பது அற்று,
யுத்யஸ்வ-போர் செய்.

எல்லாச் செய்கைகளையும் உள்ளறிவினால் எனக்கு அர்ப்பணமாகத் துறந்துவிட்டு, ஆசை நீங்கி, எனது என்பது அற்று, மனக் காய்ச்சல் தீர்ந்தவனாய்ப் போர் செய்யக் கடவாய்.

ஆத்மனில் வைத்த மனதுட னிருந்திடு எல்லாச் செயல்களையு மென்னிடமளித்திடுI
எதிர்பார்ப் பெனதென்றெண் ணங்கதளந்திடு மனக் கொந் தளிப்பின்றிப் போ
ர் புரிந்திடு II

————-

31. யே மே மதமிதம் நித்யமநுதிஷ்டந்தி மாநவா:
ஸ்ரத்தாவந்தோऽநஸூயந்தோ முச்யந்தே தேऽபி கர்மபி:

யே மாநவா: அநஸூயந்த:-எந்த மனிதர் பொறாமையின்றி,
ஸ்ரத்தாவந்த:-சிரத்தையுடையோராய்,
மே இதம் மதம்-என்னுடைய இந்த கொள்கையை,
நித்யம் அநுதிஷ்டந்தி-எப்பொழுதும் பின்பற்றுகிறார்களோ,
தே அபி கர்மபி: முச்யந்தே-அவர்களும் தொழில்களிலிருந்து விடுபடுகிறார்கள்.

என்னுடைய இந்த நித்தியமான கொள்கையை எந்த மனிதர் சிரத்தையுடையோராய்ப்
பொறாமையின்றிப் பின்பற்றுகிறார்களோ, அவர்களும் தொழில்களிலிருந்து விடுபடுகிறார்கள்.

எம் மனிதர்கள் சிரத்தை யுடன் கூடி நின்று என்னுடை கொள்கையைக் குறை காணாமல் I
இவ் வுபதேசத்தின் படி வாழுமவர்களும் செயல்களினால் விடுபடு கின் றார்களே II

——–

32. யே த்வேததப்யஸூயந்தோ நாநுதிஷ்டந்தி மே மதம்
ஸர்வஜ்ஞாநவிமூடாம்ஸ்தாந்வித்தி நஷ்டாநசேதஸ:

து யே அப்யஸூயந்த:-யாவர் பொறாமையால்,
மே எதத் மதம் ந அநுதிஷ்டந்தி-என்னுடைய இக்கொள்கையை பின்பற்றாது விடுகிறார்களோ,
தாந் அசேதஸ:-அந்த மூடர்களை,
ஸர்வஜ்ஞாந விமூடாந்-முழுமையான ஞானத்தில் அறிவு மயக்கம் அடைந்தவர்கள் என்றும்,
நஷ்டாந் வித்தி-நாசமடைந்தோராகவே தெரிந்துகொள்.

என்னுடைய இக்கொள்கையை யாவர் பொறாமையால் பின்பற்றாது விடுகிறார்களோ,
எவ்வித ஞானமுமில்லாத அம்மூடர்களை நாசமடைந்தோராகவே தெரிந்துகொள்.

எவர்கள் யான் கூறிய இவ் வுபதேசத்தைக் கடைப் பிடியாது குறை கண்டும் வாழ்ந்திடில் |
எவ்வறிவிலும் குழப்பமுடை அவர்களை விவேகமிலாது நஷ்டமடைந் தோனாயறிதி ||

————

33. ஸத்ருஸம் சேஷ்டதே ஸ்வஸ்யா: ப்ரக்ருதேர்ஜ்ஞாநவாநபி
ப்ரக்ருதிம் யாந்தி பூதாநி நிக்ரஹ: கிம் கரிஷ்யதி

பூதாநி ப்ரக்ருதிம் யாந்தி-எல்லா உயிர்களும் (இயற்கைக்கு ஏற்ப) இயல்பை அடைகின்றன,
ஜ்ஞாந்வாந் அபி-ஞானமுடையவன் கூட,
ஸ்வஸ்யா: ப்ரக்ருதே ஸத்ருஸம்-தன்னுடைய இயற்கைக்கு தக்கபடியே,
சேஷ்டதே-நடக்கிறான்,
நிக்ரஹ: கிம் கரிஷ்யதி-(என்றால்) பலவந்தமாக அடக்குதல் என்ன செய்யும்?

ஞானமுடையவன்கூடத் தன் இயற்கைக்குத் தக்கபடியே நடக்கிறான்.
உயிர்கள் இயற்கைப்படி நடக்கின்றன. அடக்குதல் பயன்படாது.

ஞானத்தை யுடையோனும் தன்னுடைய இயல்பு சார்ந்தே இயங்குகின்றான் எல்லா I
உயிர்களு மியல்பையே அனுசரிக்கின்றன இதைத் தடுப்பதாலாகப் போவதென்ன? II

———

34. இந்த்ரியஸ்யேந்த்ரியஸ்யார்தே ராகத்வேஷௌ வ்யவஸ்திதௌ
தயோர்ந வஸமாகச்சேத்தௌ ஹ்யஸ்ய பரிபந்திநௌ

இந்த்ரியஸ்ய இந்த்ரியஸ்ய அர்தே-இந்திரியத்துக்கு இந்திரிய விஷயத்தில்,
ராகத்வேஷௌ வ்யவஸ்திதௌ-விருப்பு வெறுப்புகள் ஏற்பட்டிருக்கின்றன,
தயோ: வஸம் ந ஆகச்சேத்-இவ்விரண்டுக்கும் வசப்படலாகாது,
ஹி தௌ அஸ்ய பரிபந்திநௌ-ஏனெனில் இவ்விரண்டும் இவனுக்கு வழித்தடைகளாம்.

இந்திரியத்துக்கு இந்திரிய விஷயத்தில் விருப்பு வெறுப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.
இவ்விரண்டுக்கும் ஒருவன் வசப்படலாகாது. இவை இவனுக்கு வழித்தடைகளாம்.

ஒவ்வொரு புலன்களின் விஷயத்திலும் விருப்பும் வெறுப்பும் அமைந்துள்ளன I
அவைகளினிடத்தில் வசப்படலாகாது ஏனெனில் அவை இவனுக்கு விரோதிகளாம் II

——–

35. ஸ்ரேயாந்ஸ்வதர்மோ விகுண: பரதர்மாத்ஸ்வநுஷ்டிதாத்
ஸ்வதர்மே நிதநம் ஸ்ரேய: பரதர்மோ பயாவஹ:

ஸ்வநுஷ்டிதாத் பரதர்மாத்-நன்றாகச் செய்யப்படும் பர தர்மத்தைக் காட்டிலும்,
விகுண: ஸ்வதர்மோ ஸ்ரேயாந்-குணமற்றதெனினும் ஸ்வதர்மமே சிறந்தது,
ஸ்வதர்மே நிதநம் ஸ்ரேய:-ஸ்வதர்மத்தில் இறந்துவிடினும் நன்றேயாம்,
பரதர்ம: பயாவஹ:-பரதர்மம் பயத்துக்கிடமானது.

நன்றாகச் செய்யப்படும் பர தர்மத்தைக் காட்டிலும் குணமற்றதெனினும் ஸ்வதர்மமே சிறந்தது. ஸ்வதர்மத்தில் இறந்துவிடினும் நன்றேயாம். பரதர்மம் பயத்துக்கிடமானது.

திறமையோடு செயும் பிறர் தர்மந் தன்னிலும் குணங்களற்ற தன் தர்மம் மீலானதாம் I
மரணமும் தன் தர்மத்தில் மேன்மையாம் பிறர் தர்மமோ அபாயத்தை யளித்திடுமாம் II

————

அர்ஜுந உவாச

36. அத கேந ப்ரயுக்தோऽயம் பாபம் சரதி பூருஷ:
அநிச்சந்நபி வார்ஷ்ணேய பலாதிவ நியோஜித:

அர்ஜுந உவாச-அர்ஜுனன் சொல்லுகிறான்,
வார்ஷ்ணேய-விருஷ்ணி குலத் தோன்றலே
அத அயம் பூருஷ:-பின் இந்த மனிதன்,
அநிச்சந் அபி-இச்சையில்லாத போதும்,
பலாத் நியோஜித: இவ-வலியக் கொண்டு புகுத்துவதுபோல்,
கேந ப்ரயுக்த: பாபம் சரதி-எதனால் ஏவப்பட்டு பாவம் செய்கிறான்?

அர்ஜுனன் சொல்லுகிறான்: விருஷ்ணி குலத் தோன்றலே, மனிதனுக்கு இச்சையில்லாத போதும் அவனை வலியக் கொண்டு புகுத்துவதுபோல் தூண்டிப் பாவம் செய்விப்பது யாது?

அர்ஜுனன் புகன்றான்”
வ்ருஷ்ணி குலத்தோனே! இனி யிம் மனிதன் விருப்ப மில்லாமலி ருக்கும் பொழுதும் I
பலமாகத் தள்ளி விடப் பட்டவன் போலே எதனால் ஏவப்பட்டுப் பாவம் செய்கிறான்? II

————–

ஸ்ரீ பகவாநுவாச

37. காம ஏஷ க்ரோத ஏஷ ரஜோகுணஸமுத்பவ:
மஹாஸநோ மஹாபாப்மா வித்த்யேநமிஹ வைரிணம்

ஸ்ரீ பகவாநுவாச-பகவான் சொல்லுகிறான்,
ரஜோகுணஸமுத்பவ:-ரஜோ குணத்திற்பிறப்பது
ஏஷ: காம: க்ரோத-இஃது விருப்பமும் சினமும்,
மஹாஸந: மஹாபாப்மா-பேரழிவு செய்வது; பெரும்பாவம்,
யேநம் இஹ வைரிணம் வித்தி-இங்கு சத்துருவாகத் தெரிந்து கொள்.

பகவான் சொல்லுகிறான்: இஃது விருப்பமும் சினமும்; ரஜோ குணத்திற்பிறப்பது; பேரழிவு செய்வது;பெரும்பாவம். இதனை இங்கு சத்துருவாகத் தெரிந்து கொள்.

ஸ்ரீபகவான் பகர்ந்தார்”
இதுவே வேட்கையும் இதுவே கோபமுமாம் இவையோ ரஜோ குணத்தில் தோன்றியவையாம் I
இங்கே யிதை அனைத்தையும் விழுங்குமெனவும் இதை மஹா பாவியுமாய் எதிரியுமா யறிவாயே II

————–

38. தூமேநாவ்ரியதே வஹ்நிர்யதாதர்ஸோ மலேந ச
யதோல்பேநாவ்ருதோ கர்பஸ்ததா தேநேதமாவ்ருதம்

யதா தூமேந வஹ்நி- எப்படி புகையினால் தீயும்,
மலேந ஆதர்ஸ: ச-அழுக்கால் கண்ணாடியும்,
ஆவ்ரியதே-மறைக்கப் படுகிறதோ,
யதா உல்பேந கர்ப ஆவ்ருத:-எப்படி தசையால் கர்ப்பம் மூடப் பட்டிருக்கிறதோ,
ததா தேந இதம் ஆவ்ருதம்-அதே போல இது (ஞானம்) இவ்வுலகைச் சூழ்ந்திருக்கிறது.

புகையினால் தீ சூழப்பட்டிருப்பது போலவும், கண்ணாடி அழுக்கால் மாசுபடுவது போலவும்
இது இவ்வுலகைச் சூழ்ந்திருக்கிறது.

எங்ஙனம் நெருப்பைப் புகை சூழ்ந்துளதோ கண்ணாடி அழுக்கினால் மறைக்கப் பட்டுளதோ I
கருவை கருப்பை எவ்விதம் மூடியுளதோ அவ்விதம் அதனாலிது மறைக்கப் பட்டுளதே II

———

39. ஆவ்ருதம் ஜ்ஞாநமேதேந ஜ்ஞாநிநோ நித்யவைரிணா
காமரூபேண கௌந்தேய துஷ்பூரேணாநலேந ச

ச கௌந்தேய-மேலும் குந்தியின் மகனே,
துஷ்பூரேண அநலேந-திருப்தி அடையாத நெருப்பைப் போன்றதும்,
காமரூபேண-விருப்பமேனும் வடிவில் இருப்பதும்,
ஜ்ஞாநிந: நித்யவைரிணா-ஞானிக்கு நித்தியப் பகை,
ஏதேந ஜ்ஞாநம் ஆவ்ருதம்-இந்த காமம் (ஆசை) ஞானத்தைச் சூழ்ந்து நிற்கிறது.

குந்தியின் மகனே, விருப்பமெனப்படும் இந் நிரப்பொணாத் தீ, ஞானிக்கு நித்தியப் பகையாய் ஞானத்தைச் சூழ்ந்து நிற்கிறது.

ஞானிகளுக் கெப்பொழுதும் பகையதுவாய் எளிதினில் நிறைவினை யடையாததுமாய் I
குந்திமகனே ! வேட்கை யெனுமித் தீயினால் ஞானம் மூடி மறைக்கப்பட் டுளது காண் II

———-

40. இந்த்ரியாணி மநோ புத்திரஸ்யாதிஷ்டாநமுச்யதே
ஏதைர்விமோஹயத்யேஷ ஜ்ஞாநமாவ்ருத்ய தேஹிநம்

இந்த்ரியாணி மந: புத்தி-இந்திரியங்களும், மனமும், புத்தியும்,
அஸ்ய அதிஷ்டாநம் உச்யதே-இதற்கு நிலைக்களன் என்பர்,
ஏதை: ஏஷ: ஜ்ஞாநம் ஆவ்ருத்ய-இவற்றால் இது ஞானத்தைச் சூழ்ந்து,
தேஹிநம் விமோஹயத்-மனிதனை மயங்குவிக்கிறது.

பொருள் : இந்திரியங்களும், மனமும், புத்தியும் இதற்கு நிலைக்களன் என்பர்.
இவற்றால் இது ஞானத்தைச் சூழ்ந்து மனிதனை மயங்குவிக்கிறது.

இந்திரியங்களும் மனமும் புத்தியும் இவைகளே இதனுடைய இருப்பிடமாம் I
இவைகளின் வழியாக ஞானத்தை மறைத்து இது உடல் உடையோனை மயக்குகின்றதே II

————

41. தஸ்மாத்த்வமிந்த்ரியாண்யாதௌ நியம்ய பரதர்ஷப
பாப்மாநம் ப்ரஜஹி ஹ்யேநம் ஜ்ஞாநவிஜ்ஞாநநாஸநம்

தஸ்மாத் பரதர்ஷப-ஆதலால் பாரத ரேறே,
ஆதௌ இந்த்ரியாணி நியம்ய-தொடக்கத்தில் இந்திரியங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டு,
ஜ்ஞாந விஜ்ஞாந நாஸநம்-ஞானத்தையும் விஞ்ஞானத்தையும் அழிப்பதாகிய,
ஏநம் பாப்மாநம் ஹி ப்ரஜஹி-இந்தப் பாவத்தைக் கொன்றுவிடு.

பொருள் : ஆதலால் பாரத ரேறே, நீ தொடக்கத்தில் இந்திரியங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டு ஞானத்தையும் விஞ்ஞானத்தையும் அழிப்பதாகிய இந்தப் பாவத்தைக் கொன்றுவிடு.

பரத குலக் காளையே ! ஆகையால் ஆதியில் நீ புலன்களை யெலாம் நன்றாய் வசப்படுத்தி I
ஞான விஞ்ஞான மிவைகளை யழித்திடும் இப் பாவியை நிச்சயம் விலக்கி விடு II

—————

42. இந்த்ரியாணி பராண்யாஹுரிந்த்ரியேப்ய: பரம் மந:
மநஸஸ்து பரா புத்திர்யோ புத்தே: பரதஸ்து ஸ:

இந்த்ரியாணி பராணி ஆஹு-இந்திரியங்களை உயர்வுடையன என்பர்,
இந்த்ரியேப்ய: பரம் மந:-அவற்றிலும் மனம் மேல்,
மநஸ: து பரா புத்தி-மனத்தைக் காட்டிலும் புத்தி மேல்,
புத்தே: பரத து ஸ:-புத்திக்கு மேலே அவன் (ஆத்மா).

பொருள் : இந்திரியங்களை உயர்வுடையன வென்பர். அவற்றிலும் மனம் மேல்;
மனத்தைக் காட்டிலும் புத்தி மேல்; புத்திக்கு மேலே அவன் (ஆத்மா).

புலன்களை தேகத்திலும் மேலாய்ச் சொல்வர் புலன்களைக் காட்டிலும் மேலானதாம் மனம் I
மனதினும் மேலானதாம் புத்தி யென்பர் புத்தியைக் காட்டிலும் மேலானவன்-
அவன் II

43. ஏவம் புத்தே: பரம் புத்த்வா ஸம்ஸ்தப்யாத்மாநமாத்மநா
ஜஹி ஸத்ரும் மஹாபாஹோ காமரூபம் துராஸதம்

ஏவம் புத்தே: பரம்-இங்ஙனம் புத்திக்கு மேலான,
புத்த்வா-பொருளை (ஆத்மாவை) உணர்ந்து,
ஆத்மநா ஆத்மாநம் ஸம்ஸ்தப்ய-தன்னைத்தான் உறுதிபடுத்திக் கொண்டு,
துராஸதம் காமரூபம்-வெல்லற்கரிய விருப்பமாம்,
ஸத்ரும் ஜஹி மஹாபாஹோ-பகையைக் கொல்லக் கடவாய், பெருந்தோளுடையாய்!

இங்ஙனம் புத்திக்கு மேலான பொருளை (ஆத்மாவை) உணர்ந்து, தன்னைத்தான் உறுதிபடுத்திக் கொண்டு, வெல்லற்கரிய விருப்பமாம் பகையைக் கொல்லக் கடவாய், பெருந்தோளுடையாய்!

பெருந்தோளாய்! இங்ஙனம் புத்தியினும் மேலாம் பரத்தை யறிந்து, நன்கடக்கியே I
மனதை மனதால், எளிதினில் வெல்லவியலா ஆசை வடிவாம் பகைவனை அழிப்பாய் நீயே ! II

———

ஸ்ரீ பகவத்கீதை — நான்காம் அத்தியாயம் –ஞான கர்ம ஸந்யாஸ யோகம்–அறிவால் செயலை விலக்கி அறிதல் ”

ஸ்ரீ பகவாநுவாச

1. இமம் விவஸ்வதே யோகம் ப்ரோக்தவாநஹமவ்யயம்
விவஸ்வாந்மநவே ப்ராஹ மநுரிக்ஷ்வாகவேऽப்ரவீத்

ஸ்ரீ பகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்,
இமம் அவ்யயம் யோகம்-இந்த அழிவற்ற யோகத்தை,
அஹம் விவஸ்வதே ப்ரோக்தவாந்-நான் சூரியனுக்கு (விவஸ்வான்) சொன்னேன்
விவஸ்வாந் மநவே ப்ராஹ-விவஸ்வாந் மனுவுக்கு சொன்னான்,
மநு: இக்ஷ்வாகவே அப்ரவீத்-மனு இக்ஷ்வாகு மன்னனுக்கு சொன்னார்.

“ஸ்ரீபகவான் பகர்ந்தார்”
இந்த அழிவில்லா யோகத்தை யான் ஆதித்யனுக்குப் பகர்ந்தேன் |
ஆதித்யன் மனுவுக்குப் புகன்றார் மனு இஷ் வாகுவுக்குக் கற்பித்தாரே ||

——–

2. ஏவம் பரம்பராப்ராப்தமிமம் ராஜர்ஷயோ விது:
ஸ காலேநேஹ மஹதா யோகோ நஷ்ட: பரந்தப

பரந்தப-எதிரிகளை எரிப்பவனே !
ஏவம் பரம்பராப்ராப்தம்-இவ்விதம் வழிவழியாக வந்த
இமம் ராஜர்ஷய: விது:-இந்த யோகத்தை ராஜ ரிஷிகள் அறிந்திருந்தனர்,
ஸ: யோக மஹதா காலேந-அந்த யோகம் வெகுகாலமாக,
ஹ நஷ்ட:-இவ்வுலகில் இழக்கப் பட்டது.

இவ்வாறு பரம்பரையாகக் கிடைத்த இதனை ராஜரிஷிகள் உணர்ந்திருந்தனர்.
பரந்தபா, அந்த யோகம் காலமிகுதியால் இவ்வுலகத்தில் இழக்கப்பட்டது.

இவ்வாறு பரம்பரையாய் வழங்கப்பட்ட இதனை இராஜரிஷிகள றிந்திருந்தனர் I
எதிரிகளை வாட்டுபவனே அர்ஜுனா!அந்த யோகமானது காலப் போக்கில் மறைந்த
தே II

————

3. ஸ ஏவாயம் மயா தேऽத்ய யோக: ப்ரோக்த: புராதந:
பக்தோऽஸி மே ஸகா சேதி ரஹஸ்யம் ஹ்யேததுத்தமம்

மே பக்த: ஸகா ச அஸி-என்னுடைய பக்தனும் நண்பனும் ஆவாய்,
இதி ஸ: ஏவ புராதந: அயம் யோக:-ஆகவே அதே பழமையான இந்த யோகத்தை,
அத்ய மயா தே ப்ரோக்த:-இன்று என்னால் உனக்கு சொல்லப் பட்டது,
ஹி எதத் உத்தமம் ரஹஸ்யம்-ஏனெனில் இந்த யோகம சிறந்தது ரகசியமானது.

அந்தப் பழைய யோகத்தையே இன்று நான் உனக்குச் சொன்னேன்,
நீ என் பக்தனும் தோழனுமென்பது கருதி. இது மிகவும் உயர்ந்த ரகசியம்.

என் பக்தனும் தோழனுமாய் யுள்ளாய் ஆதலால் அத் தொன்மையான அதே யோகம் I
இத்தினம் என்னாலுனக்கு இயம்பப் பட்டது ஏனெனில் இது மேலான இரஹஸ்யமாம் II

———

அர்ஜுந உவாச

4. அபரம் பவதோ ஜந்ம பரம் ஜந்ம விவஸ்வத:
கதமேதத்விஜாநீயாம் த்வமாதௌ ப்ரோக்தவாநிதி

அர்ஜுந உவாச-அர்ஜுனன் சொல்லுகிறான்,
பவத: ஜந்ம அபரம்-உன் பிறப்பு பிந்தியது
விவஸ்வத: ஜந்ம பரம்-விவஸ்வானுடைய பிறப்பு முந்தியது,
த்வம் ஆதௌ ப்ரோக்தவாந் இதி-நீ இதை ஆதியில் சொன்னவனென்று,
ஏதத் கதம் விஜாநீயாம்-நான் தெரிந்துகொள்வதெப்படி?

அர்ஜுனன் சொல்லுகிறான்: உன் பிறப்பு பிந்தியது; விவஸ்வானுடைய பிறப்பு முந்தியது.
நீ இதை ஆதியில் சொன்னவனென்று நான் தெரிந்துகொள்வதெப்படி?

“அர்ஜுனன் புகன்றான்”
உம்முடையப் பிறப்பென்பது பிந்தியது கதிரவனின் பிறப்பென் பது முந்தியது I
ஆதியில் தாங்கள் தான் உபதேசித்தீர்கள் என்பதை யான் எங்ஙன மறியலாகும் II

ஸ்ரீபகவாநுவாச

5. பஹூநி மே வ்யதீதாநி ஜந்மாநி தவ சார்ஜுந
தாந்யஹம் வேத ஸர்வாணி ந த்வம் வேத்த பரந்தப

ஸ்ரீபகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்,
பரந்தப அர்ஜுந-அர்ஜுனா,
மே தவ ச-எனக்கும் உனக்கும்,
பஹூநி ஜந்மாநி வ்யதீதாநி-பல ஜன்மங்கள் கழிந்திருக்கின்றன,
தாநி ஸர்வாணி த்வம் ந வேத்த-அவை எல்லாவற்றையும் நீ அறியமாட்டாய்,
அஹம் வேத-நான் அறிவேன்.

ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: அர்ஜுனா, எனக்குப் பல ஜன்மங்கள் கழிந்திருக்கின்றன.
உனக்கும் அப்படியே. பரந்தபா, நான் அவற்றை எல்லாம் அறிவேன். நீ அவற்றை அறிகிலை.

“ஸ்ரீபகவான் பகர்ந்தார்”
எனக்கும் உனக்கும் அர்ஜுனா! பலப்பல பிறவிகள் கடந்து போயின I
எதிரிகளை வாட்டுபவனே ! அவை யெலாம் நன்கறிவேன் நான், நீயோ வறிய மாட்டாய் II

——–

6. அஜோऽபி ஸந்நவ்யயாத்மா பூதாநாமீஸ்வரோऽபி ஸந்
ப்ரக்ருதிம் ஸ்வாமதிஷ்டாய ஸம்பவாம்யாத்மமாயயா

அஜ: அவ்யய ஆத்மா ஸந் அபி-பிறப்பற்றவனாகவும் அழிவற்றவனாகவும்,
பூதாநாம் ஈஸ்வர: அபி ஸந்-உயிர்களுக்கெல்லாம் ஈசனே யெனினும்,
ஸ்வாம் ப்ரக்ருதிம் அதிஷ்டாய-யான் எனது பிரகிருதியில் நிலை பெற்று,
ஆத்ம மாயயா ஸம்பவாமி-என்னுடைய மாயையால் பிறப்பெய்துகிறேன்.

ஸ்ரீ பகவான் பிறப்பற்றே னெனினும், அழிவற்றே னெனினும், உயிர்களுக்கெல்லாம் ஈசனே யெனினும், யான் எனது பிரகிருதியில் நிலைபெற்று ஆத்ம மாயையால் பிறப்பெய்துகிறேன்.

பிறப்பற்றவன் நான் அழியாதிருப்பினும் உயிர்களுக் கெல்லாம் ஈசனாயிருப்பினும் I
என்னுடைய பிரகிருதியை வசப் படுத்தியே என்னுடைய மாயையால் அவதரிக்கின்றேனே II

————-

7. யதா யதா ஹி தர்மஸ்ய க்லாநிர்பவதி பாரத
அப்யுத்தாநமதர்மஸ்ய ததாத்மாநம் ஸ்ருஜாம்யஹம்

பாரத யதா யதா-பாரதா, எப்போதெப்போது,
தர்மஸ்ய க்லாநி-தர்மம் அழிந்துபோய்,
அதர்மஸ்ய அப்யுத்தாநம் பவதி-அதர்மம் எழுச்சி பெறுமோ,
ததா ஹி ஆத்மாநம் ஸ்ருஜாம், யஹம்-அப்போது நான் என்னைப் பிறப்பித்துக் கொள்ளுகிறேன்.

பாரதா, எப்போதெப்போது தர்மம் அழிந்துபோய் அதர்மம் எழுச்சி பெறுமோ,
அப்போது நான் என்னைப் பிறப்பித்துக் கொள்ளுகிறேன்.

பரதவம் சத்தோனே ! எப்பொழுதெலாம் தர்மத்திற்கு நலிவு ஏற்படுகின்றதோ I
அதர்மத்திற்கு எழுச்சியும் ஏற்படுகின்றதோ அப்பொழுது எனை யான் தோற்று விக்கின்றேனே II

—————

8. பரித்ராணாய ஸாதூநாம் விநாஸாய ச துஷ்க்ருதாம்
தர்மஸம்ஸ்தாபநார்தாய ஸம்பவாமி யுகே யுகே

ஸாதூநாம் பரித்ராணாய-நல்லோரைக் காக்கவும்,
துஷ்க்ருதாம் விநாஸாய ச-தீயன செய்வோரை அழிக்கவும்,
தர்ம ஸம்ஸ்தாபநார்தாய-அறத்தை நிலை நிறுத்தவும்,
யுகே யுகே ஸம்பவாமி-நான் யுகந்தோறும் பிறக்கிறேன்.

நல்லோரைக் காக்கவும், தீயன செய்வோரை அழிக்கவும், அறத்தை நிலை நிறுத்தவும்
நான் யுகந்தோறும் பிறக்கிறேன்.

ஸந் மார்கத்தோரைக் காக்கும் பொருட்டும் தீயன செய்வோரை விலக்கும் பொருட்டும் I
தர்மம் தனை நிலை நாட்டும் பொருட்டும் யுகங்கள் தோறும் அவதரிக்கின்றேன் நான் II

———-

9. ஜந்ம கர்ம ச மே திவ்யமேவம் யோ வேத்தி தத்த்வத:
த்யக்த்வா தேஹம் புநர்ஜந்ம நைதி மாமேதி ஸோऽர்ஜுந

அர்ஜுந!-அர்ஜுனா!
மே ஜந்ம கர்ம ச திவ்யம்-எனது பிறப்பும் செய்கையும் தெய்வத்தன்மை கொண்டது,
ஏவம் ய: தத்த்வத: வேத்தி-இங்ஙனமென்பதை உள்ளபடி யுணர்வோன்,
ஸ: தேஹம் த்யக்த்வா-உடலைத் துறந்த பின்னர்,
புநர்ஜந்ம ந ஏதி-மறுபிறப்பு எய்துவதில்லை,
மாம் ஏதி-என்னை எய்துகிறான்.

எனது தெய்வத்தன்மை கொண்ட பிறப்பும் செய்கையும் இங்ஙனமென்பதை உள்ளபடி யுணர்வோன் உடலைத் துறந்த பின்னர் மறுபிறப்பு எய்துவதில்லை. அர்ஜுனா! அவன் என்னை எய்துகிறான்.

அர்ஜுனா!இவ்விதம் என்னுடைய தெய்வீகப் பிறப்பையும் செயலையும் உள்ளவாறெவன் I
அறிகின்றானோ , அவனுடலை விட்ட பின் மீண்டும் பிறவாது எனையே அடைகிறான் |
|

———–

10. வீதராகபயக்ரோதா மந்மயா மாமுபாஸ்ரிதா:
பஹவோ ஜ்ஞாநதபஸா பூதா மத்பாவமாகதா:

வீத ராக பய க்ரோதா- விருப்பத்தையும், அச்சத்தையும், சினத்தையும் துறந்தோராய்,
மந்மயா:-என் மயமாய்,
மாம் உபாஸ்ரிதா:-என்னை அடைக்கலம் புகுந்து,
பஹவ: ஜ்ஞாநதபஸா பூதா-ஞானத்தவத்தால் தூய்மை பெற்று,
மத்பாவம் ஆகதா: பஹவ:-என்னியல்பு எய்தினோர் பலர்.

விருப்பத்தையும், அச்சத்தையும், சினத்தையும் துறந்தோராய், என் மயமாய், என்னை அடைக்கலம் புகுந்து ஞானத் தவத்தால் தூய்மை பெற்று என்னியல்பு எய்தினோர் பலர்

ஆசை யச்சம் சினம் நீக்கி யோரெலாம் என் மயமாய் யெனைத் தஞ்ச மடைந்நதாரெலாம் I
ஞான தபஸால் தூய்மை யடைந்தோராய்ப் பலர் என்னுடை இயல்பையே அடைகிறார்கள் II

11. யே யதா மாம் ப்ரபத்யந்தே தாம்ஸ்ததைவ பஜாம்யஹம்
மம வர்த்மாநுவர்தந்தே மநுஷ்யா: பார்த ஸர்வஸ:

பார்த யே மாம் யதா ப்ரபத்யந்தே-பார்த்தா! யாவர் என்னை எங்ஙனம் வேண்டுகிறார்களோ
தாந் அஹம், ததா ஏவ பஜாமி-அவர்களை நான் அங்ஙனமே சார்கிறேன்,
மநுஷ்யா: ஸர்வஸ:-மனிதர் யாங்கணும்,
மம வர்த்ம அநுவர்தந்தே-என் வழியையே பின்பற்றுகிறார்கள்.

யாவர் என்னை எங்ஙனம் வேண்டுகிறார்களோ அவர்களை நான் அங்ஙனமே சார்கிறேன்.
பார்த்தா, மனிதர் யாங்கணும் என் வழியையே பின்பற்றுகிறார்கள்.

எவர்கள் எனை எப்படி வழிபடுகின்றனரோ அவர்களுக்கு நானவ்விதமே அருளுகின்றேன் I
பார்த்தனே ! மக்கள் எல்லா விதங்களிலும் என்னுடை வழியையே பின் பற்றுகின்றனரே ॥

———–

12. காங்க்ஷந்த: கர்மணாம் ஸித்திம் யஜந்த இஹ தேவதா:
க்ஷிப்ரம் ஹி மாநுஷே லோகே ஸித்திர்பவதி கர்மஜா

இஹ மாநுஷே லோகே-இந்த மனிதவுலகத்தில்,
கர்மணாம் ஸித்திம் காக்ஷந், த:-தொழில்களில் வெற்றியை விரும்புவோர்,
தேவதா: யஜந்தே-தேவதைகளைப் பூஜை செய்கிறார்கள்,
ஹி கர்மஜா ஸித்தி:-தொழிலினின்றும் வெற்றி,
க்ஷிப்ரம் பவதி-விரைவில் விளைவதன்றோ!

தொழில்களில் வெற்றியை விரும்புவோர் இங்கு தேவதைகளைப் பூஜை செய்கிறார்கள்.
மனிதவுலகத்தில் தொழிலினின்றும் வெற்றி விரைவில் விளைவதன்றோ!

வினைகளின் பலன்களை விரும்புவர்கள் தேவதைகளை இவ்வுலகில் பூஜிக்கின் றனர் I
ஏனெனில் கர்மத்திலுதிக்கும் பலன்கள் விரைவில் வருகின்றனவே மனித வுலகில் II

————-

13. சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குணகர்மவிபாகஸ:
தஸ்ய கர்தாரமபி மாம் வித்த்யகர்தாரமவ்யயம்

குண கர்ம விபாகஸ:-குணத்துக்கும் செய்கைக்கும் தக்கபடி பிரிவுகளாக
சாதுர்வர்ண்யம், மயா ஸ்ருஷ்டம்-நான்கு வர்ணங்கள் என்னால் உருவாக்கப் பட்டது,
தஸ்ய கர்தாரம் அபி-நானே அவற்றை செய்தேன் என்றாலும்,
அவ்யயம் மாம்-அழிவற்றவனாகிய என்னை
அகர்தாரம், வித்தி-கர்த்தா அல்லேன் என்று உணர்.

குணத்துக்கும் செய்கைக்கும் தக்கபடி நான் நான்கு வர்ணங்களைச் சமைத்தேன்.
செயற்கையற்றவனும் அழிவற்றவனுமாகிய யானே அவற்றைச் செய்தோனென்றுணர்.

நான்கு வர்ணங்களு மென்னால் குணத்திற்கும் செயல்களுக்கு மேற்பப் படைக்கப் பட்டன I
அவைகளைச் செய்தவனாயினும் செய்யாதவனாய் மாற்றமில்லா தவனாயுமெனை அறிவாயாக! II

———–

14. ந மாம் கர்மாணி லிம்பந்தி ந மே கர்மபலே ஸ்ப்ருஹா
இதி மாம் யோऽபிஜாநாதி கர்மபிர்ந ஸ பத்யதே

மே கர்மபலே ந ஸ்ப்ருஹா-எனக்குக் கர்மப் பயனில் விருப்பமில்லைல,
மாம் கர்மாணி ந லிம்பந்தி-என்னைக் கர்மங்கள் ஒட்டுவதில்லை,
ய: இதி மாம், அபிஜாநாதி-இங்ஙனம் என்னை யறிவோன்,
ஸ: கர்மபி: ந பத்யதே-கர்மங்களால் கட்டப்பட மாட்டான்.

என்னைக் கர்மங்கள் ஒட்டுவதில்லை. எனக்குக் கர்மப் பயனில் விருப்பமில்லை.
இங்ஙனம் என்னை யறிவோன் கர்மங்களால் கட்டப்பட மாட்டான்.

என்னைச் செயல்கள் தீண்டுவதில்லை எனக்குச் செயல் பலனிலே ஆசை யில்லை I
என்றெனை எவன் நன்கு அறிகின்றனோ செயல் பலன் களாலவன் கட்டுண்ணான் II

———

15. ஏவம் ஜ்ஞாத்வா க்ருதம் கர்ம பூர்வைரபி முமுக்ஷúபி:
குரு கர்மைவ தஸ்மாத்த்வம் பூர்வை: பூர்வதரம் க்ருதம்

பூர்வை: முமுக்ஷúபி: அபி-முற்காலத்தில் முக்தியை வேண்டினோரும்,
ஏவம் ஜ்ஞாத்வா-இதையுணர்ந்து,
கர்ம க்ருதம்-தொழிலே செய்தனர்,
தஸ்மாத் த்வம்-அதனால் நீயும்,
பூர்வை: பூர்வதரம் க்ருதம்-முன்னோர்கள் முன்பு செய்தபடி,
கர்ம ஏவ குரு-தொழிலையே செய்யக் கடவாய்.

முற்காலத்தில் முக்தியை வேண்டினோரும் இதையுணர்ந்து தொழிலே செய்தனர்.
ஆதலால், முன்னோர்கள் முன்பு செய்தபடி, நீயும் தொழிலையே செய்யக் கடவாய்.

இவ்விதமறிந்து முக்தியில் நாட்டமுடைய முன்னோர்களாலும் செயல்கள் செயப்பட்டன I
ஆதலால் நீயும் முன்னாளில் முன்னோர்கள் செய்து வந்த அச் செயல்களையே
செய்வாயாக II

————-

16. கிம் கர்ம கிமகர்மேதி கவயோऽப்யத்ர மோஹிதா:
தத்தே கர்ம ப்ரவக்ஷ்யாமி யஜ்ஜ்ஞாத்வா மோக்ஷ்யஸேऽஸுபாத்

கிம் கர்ம கிம அகர்ம இதி-எது தொழில்; எது தொழிலல்லாதது என்ற விஷயத்தில்,
கவய: அபி அத்ர மோஹிதா:-ஞானிகளும் இங்கே மயக்கமெய்துகிறார்கள்,
யத் ஜ்ஞாத்வா-எதை தெரிந்து கொள்வதால்,
அஸுபாத் மோக்ஷ்யஸே-தீங்கினின்றும் விடுபடுவாய்,
தத் கர்ம தே ப்ரவக்ஷ்யாமி-அந்த கர்மத்தின் தத்துவத்தை உனக்கு சொல்லப் போகிறேன்.

எது தொழில்; எது தொழிலல்லாதது என்ற விஷயத்தில் ஞானிகளும் மயக்க மெய்துகிறார்கள்.-ஆதலால் உனக்குத் தொழிலினியல்பை உணர்த்துகிறேன். இதை அறிவதனால் தீங்கினின்றும் விடுபடுவாய்.

செயலெது செயலின்மை யெதுவென்று மேதாவிகளும் மதி மயங்கியே யுள்ளனர்I
எதை யறிந்து துக்கத்தினின்று விடுபடுவாயோ அச் செயல் பற்றி யுனக்குப் பகர்வேன் கேள் II

————-

17. கர்மணோ ஹ்யபி போத்தவ்யம் போத்தவ்யம் ச விகர்மண:
அகர்மணஸ்ச போத்தவ்யம் கஹநா கர்மணோ கதி:

கர்மண: அபி-தொழிலின் இயல்பும்,
போத்தவ்யம்-தெரிய வேண்டும்,
அகர்மண: ச போத்தவ்யம்-தொழிற் கேட்டின் இயல்பும் தெரிய வேண்டும்,
விகர்மண: ச போத்தவ்யம்-தொழிலின்மையின் இயல்புந் தெரிய வேண்டும்,
ஹி கர்மண: கதி: கஹநா-ஏனெனில் கர்மத்தின் போக்கு ஆழமானது.

தொழிலின் இயல்புந் தெரிய வேண்டும்; தொழிற் கேட்டின் இயல்புந் தெரிய வேண்டும்;
தொழிலின்மையின் இயல்புந் தெரிய வேண்டும்; கர்மத்தின் நடை மிகவும் சூழ்ந்தது.

செயல்களைப் பற்றியு மறிய வேண்டும் செயல் தவிர்த்தல் பற்றியு மறிய வேண் டும் I
செய்யாதிருத்தல் பற்றியு மறிய வேண்டும் செயலினியல்பு அறிதற்கு அரிதானதாம் II

———-

18. கர்மண்யகர்ம ய: பஸ்யேதகர்மணி ச கர்ம ய:
ஸ புத்திமாந்மநுஷ்யேஷு ஸ யுக்த: க்ருத்ஸ்நகர்மக்ருத்

கர்மணி அகர்ம-செய்கையில் செயலின்மையும்,
ச அகர்மணி கர்ம-செயலின்மையில் செய்கையும்,
ய: பஸ்யேத்-எவன் காணுகிறானோ,
ஸ மநுஷ்யேஷு புத்திமாந்-அவனே மனிதரில் அறிவுடையோன்,
ஸ யுக்த: க்ருத்ஸ்நகர்மக்ருத்-அந்த யோகி அனைத்துக் கர்மங்களையும் செய்கிறவன் (ஆகிறான்).

செய்கையில் செயலின்மையும், செயலின்மையில் செய்கையும் எவன் காணுகிறானோ,
அவனே மனிதரில் அறிவுடையோன்; அவன் எத்தொழில் செய்கையிலும் யோகத்திலிருப்பான்.

யாரொருவன் செய்தலில் செயலின்மையையும் செய்யாதிருத்தலில் செயலையும் காண் கிறானோ I
மனிதருள் புத்திமானும் யோகியுமாமவன் செய வேண்டிய தெல்லாம் செய்து முடித்தோனாம் II

———-

19. யஸ்ய ஸர்வே ஸமாரம்பா: காமஸங்கல்பவர்ஜிதா:
ஜ்ஞாநாக்நிதக்தகர்மாணம் தமாஹு: பண்டிதம் புதா:

யஸ்ய ஸர்வே ஸமாரம்பா:-எவனுடைய செய்கைத் தொடக்கங்களெல்லாம்,
காம ஸங்கல்ப வர்ஜிதா:-விருப்ப நினைவு தவிர்ந்தனவோ,
ஜ்ஞாநாக்நி தக்த கர்மாணம்-எவனுடைய செயல்கள் ஞானத் தீயால் எரிக்கப்பட்டனவோ,
தம் புதா:-அவனை ஞானிகள்,
பண்டிதம் ஆஹு:-அறிவுடையோன் என்கிறார்கள்.

எவனுடைய செய்கைத் தொடக்கங்களெல்லாம் விருப்ப நினைவு தவிர்ந்தனவோ, அவனுடைய செயல்கள் ஞானத் தீயால் எரிக்கப்பட்டனவாம்; அவனை ஞானிகள் அறிவுடையோனென்கிறார்கள்.

எவருடைய செயல் தொடக்கமு மவாவும் பலனைச் சார்ந்த நோக்கமு மின்றியும் I
ஞானத் தீயால் எரிக்கப் பட்டதாயுளதோ அறிவாளிகள், அவரை ஞானி யென்பரே II

———–

20. த்யக்த்வா கர்மபலாஸங்கம் நித்யத்ருப்தோ நிராஸ்ரய:
கர்மண்யபிப்ரவ்ருத்தோऽபி நைவ கிஞ்சித்கரோதி ஸ:

கர்ம பலா ஸங்கம் த்யக்த்வா-கர்மப் பயனிலே பற்றுக் களைந்தவனாக,
நித்யத்ருப்த: நிராஸ்ரய:-திருப்தியுடையோனாக சார்பற்று நிற்போனாக,
ஸ: கர்மணி அபிப்ரவ்ருத்த: அபி-அவன் கர்மத்தில் நன்கு ஈடுபட்டிருந்தாலும் கூட,
கிஞ்சித் ஏவ ந கரோதி-சிறிது கூட செய்வதே இல்லை (செயலற்றவனாவான்).

கர்மப் பயனிலே பற்றுக் களைந்தவனாய் எப்போதும் திருப்தியுடையோனாய் எதனிலும்
சார்பற்று நிற்போன் செய்கை செய்து கொண்டிருக்கையிலும் செயலற்றவனாவான்.

செயல் பலனிலே ஆழ் பற்றை விட்டு என்றும் செயலில் திருப்தனாய் எதையுமே சாராது I
செயலில் ஈடு பட்டிருந்த பொழுதிலும் செயலெதையும் செய்வதில்லை யவன் II

21. நிராஸீர்யதசித்தாத்மா த்யக்தஸர்வபரிக்ரஹ:
ஸாரீரம் கேவலம் கர்ம குர்வந்நாப்நோதி கில்பிஷம்

யதசித்தாத்மா-சித்தத்தை ஆத்மாவால் கட்டுப்படுத்தி,
த்யக்த ஸர்வ பரிக்ரஹ:-எவ்வித தானங்களும் வாங்குவதைத் துறந்து,
நிராஸீ-ஆசையற்றவனாய்,
கேவலம் ஸாரீரம் கர்ம குர்வந்-வெறுமே சரீரத் தொழில் மாத்திரம் செய்து கொண்டிருந்தாலும்,
கில்பிஷம் ந ஆப்நோதி-பாவத்தையடைய மாட்டான்.

பொருள் : ஆசையற்றவனாய், சித்தத்தை ஆத்மாவால் கட்டுப்படுத்தி, எவ்வித தானங்களும் வாங்குவதைத் துறந்து,வெறுமே சரீரத் தொழில் மாத்திரம் செய்து கொண்டிருப்போன் பாவத்தையடைய மாட்டான்.

எதிர்பார்ப்பற்ற, மனதையும் உடலையும் நன்கடக்கி அனைத்துடைமை களைத் துறந்தும் I
செயல்களை உடலைப் பேணுதற்கு மட்டுமே செய்பவன், பாவத்தை அடைவதில்லையே II

—————–

22. யத்ருச்சாலாபஸந்துஷ்டோ த்வந்த்வாதீதோ விமத்ஸர:
ஸம: ஸித்தாவஸித்தௌ ச க்ருத்வாபி ந நிபத்யதே

யத்ருச்சா லாப ஸந்துஷ்ட-தானாக வந்தெய்தும் லாபத்தில் சந்தோஷமுறுவோனாக,
விமத்ஸர:-பொறாமையற்றவனாக,
த்வந்த்வ அதீத:-இருமைகளைக் கடந்தவனாக,
ஸித்தௌ அஸித்தௌ ச ஸம:-வெற்றியிலும் தோல்வியிலும் சமநிலை பெற்றான்,
க்ருத்வாபி ந நிபத்யதே-தொழில் செய்தாலும் அதனால் கட்டுப்படுவதில்லை.

தானாக வந்தெய்தும் லாபத்தில் சந்தோஷமுறுவோனாகி, இருமைகளைக் கடந்து, பொறாமை யற்றவனாய் –வெற்றியிலும் தோல்வியிலும் சமநிலை பெற்றான் தொழில் செய்தாலும் அதனால் கட்டுப்படுவதில்லை.

தானாகக் கிடைத்ததில் மகிழ்வுடையோன் பொறாமை யற்றவ னிருமைகளைக் கடந்தவன் I
வெற்றி தோல்வியில் சமமா யுள்ளவன் செயலைச் செய்யினும் பந்தப் படுவதில்லை II

23. கதஸங்கஸ்ய முக்தஸ்ய ஜ்ஞாநாவஸ்திதசேதஸ:
யஜ்ஞாயாசரத: கர்ம ஸமக்ரம் ப்ரவிலீயதே

கதஸங்கஸ்ய-உலகப் பற்றை ஒழித்து,
முக்தஸ்ய-உடற்பற்று மமதை ஆகியவற்றை ஒழித்து
ஜ்ஞாநாவஸ்திதசேதஸ:-ஞானத்தில் மதி நிலைக்கப் பெற்றவன்,
யஜ்ஞாய ஆசரத:-வேள்வியெனக் கருதித் தொழில் புரிவான்,
ஸமக்ரம் கர்ம ப்ரவிலீயதே-கர்மமெல்லாம் தானே நழுவிப் போய்விடுகிறது.

பற்றுதலகன்றான், விடுதலை கொண்டான், ஞானத்தில் மதி நிலைக்கப் பெற்றான்,
வேள்வியெனக் கருதித் தொழில்புரிவான் அவனுடைய கர்மமெல்லாம் தானே நழுவிப் போய்விடுகிறது

பற்றிலனாய் முக்தனாய் ஞானமதில் நிலை பெற்ற மனத்தினை யுடையோனாய் I
இறைவனுக்காகச் செயலில் ஈடுபடுமவனின் எல்லாச் செயல்களும் கரைந்து விடுகிறதே II

———————–

24. ப்ரஹ்மார்பணம் ப்ரஹ்ம ஹவி: ப்ரஹ்மாக்நௌ ப்ரஹ்மணா ஹுதம்
ப்ரஹ்மைவ தேந கந்தவ்யம் ப்ரஹ்ம கர்ம ஸமாதிநா

அர்பணம் ப்ரஹ்ம-வேள்வியில் உபயோகப் படும் பொருட்கள் பிரம்மம் தான்,
ஹவி: ப்ரஹ்ம-ஹோமம் செய்யப் படும் திரவியமும் பிரம்மம் தான்,
ப்ரஹ்மாக்நௌ ஹுதம்-பிரம்மத் தீயில் பிரம்மத்தால் ஓமம் செய்யும் செயலும் பிரம்மம்தான்,
ப்ரஹ்ம கர்ம ஸமாதிநா தேந-பிரம்மத்தின் செய்கையில் ஊன்றி நிற்கின்ற அந்த யோகியினால், கந்தவ்யம் ப்ரஹ்ம ஏவ-அடையத்தக்க பயனும் பிரம்மம் தான்.

பிரம்மத்துக்கு அர்ப்பணமாக பிரம்ம அவியை பிரம்மத் தீயில் பிரம்மத்தால் ஓமம் பண்ணுவோன், பிரம்மத்தின் செய்கையில் சமாதானமெய்தினோன், அவன் பிரம்மத்தை அடைவான்.

அர்ப்பணக் கருவியும் ஹவிஸும் பிரம்மன் அர்ப்பணிக்கிறதா மக்னியில் பிரம்மன் I
அப்பிரம்மச் செயலில் மனம் குவிந்துள்ள அவனால் அடையப் படுவதும் பிரம்மனே II

————–

25. தைவமேவாபரே யஜ்ஞம் யோகிந: பர்யுபாஸதே
ப்ரஹ்மாக்நாவபரே யஜ்ஞம் யஜ்ஞேநைவோபஜுஹ்வதி

அபரே யோகிந:-சில யோகிகள்,
தைவம் யஜ்ஞம் ஏவ-தேவருக்குச் செய்யப்படும் வேள்வியையே,
பர்யுபாஸதே-வழிபடுகிறார்கள்,
அபரே ப்ரஹ்மாக்நௌ-வேறு சிலர் பிரம்மத் தீயில்,
யஜ்ஞேந ஏவ யஜ்ஞம்-வேள்வியையே ஆகுதி செய்து,
உபஜுஹ்வதி-ஹோமம் செய்கிறார்கள்.

சில யோகிகள் தேவருக்குச் செய்யப்படும் வேள்வியை வழிபடுகிறார்கள்.
வேறு சிலர் பிரம்மத் தீயில் வேள்வியையே ஆகுதி செய்து வேட்கின்றனர்.

மற்ற யோகிகள் தேவதைகளை யெலாம் வேள்வியால் பூஜிக்கின்றனர், இன்னும் I
வேறு சிலர் பிரம்மத் தீயில் ஆத்மாவை ஆத்மாவினாலேயே வேள்வி செய்கின் றனர்II

————–

26. ஸ்ரோத்ராதீநீந்த்ரியாண்யந்யே ஸம்யமாக்நிஷு ஜுஹ்வதி
ஸப்தாதீந்விஷயாநந்ய இந்த்ரியாக்நிஷு ஜுஹ்வதி

அந்யே ஸ்ரோத்ராதீநீ இந்த்ரியாணி-வேறு சிலர் செவி முதலிய இந்திரியங்களை,
ஸம்யமாக்நிஷு, ஜுஹ்வதி-அடக்கம் என்னும் அக்னிகளில் ஆகுதி செய்கிறார்கள்,
அந்யே ஸப்தாதீந் விஷயாந்- வேறு சிலர் ஒலி முதலிய புலன் நுகர் விஷயங்களை,
இந்த்ரியாக்நிஷு ஜுஹ்வதி-இந்திரியங்களாகிய தழல்களில் ஹோமம் செய்கிறார்கள்.

வேறு சிலர் உட்கரணத்தை யடக்குதலாகிய சம்யமம் என்ற தீயில் செவி முதலிய இந்திரியங்களை ஆகுதி செய்கிறார்கள். வேறு சிலர் இந்திரியங்களாகிய தழல்களில் ஒலி முதலிய விஷயங்களைச் சொரிகிறார்கள்.

செவி முதலிய புலன் களை வேள்வியாய்ச் சிலர் அடக்கு தலெனுமக்னியி லிடுகிறார்கள் I
மற்றையோர் ஒலி முதலாய் விஷயங்களை வேள்வியாய்ப் புலனக்னியி லிடுகிறார்கள் II

————-

27. ஸர்வாணீந்த்ரியகர்மாணி ப்ராணகர்மாணி சாபரே
ஆத்மஸம்யமயோகாக்நௌ ஜுஹ்வதி ஜ்ஞாநதீபிதே

அபரே ஸர்வாணீ இந்த்ரியகர்மாணி-வேறு சிலர் எல்லா இந்திரியச் செயல்களையும்,
ப்ராணகர்மாணி ச-உயிர்ச்செயல்களையும்,
ஜ்ஞாநதீபிதே-ஞானத்தால் ஒளிபெற்ற,
ஆத்ம ஸம்யம யோகாக்நௌ-தன்னாட்சியென்ற யோகத் தீயில்,
ஜுஹ்வதி-ஹோமம் செய்கிறார்கள்.

வேறு சிலர் ஞானத்தால் கொளுத்துண்ட தன்னாட்சியென்ற யோகத் தீயில் எல்லா
இந்திரியச் செயல்களையும் உயிர்ச் செயல்களையும் ஓமம் பண்ணுகிறார்கள்.

மேலும் சிலர் ஞானக் கர்மப் புலன்களின் செயல்களை , விவேகத்தால் பிரகாசிக்கும் I
ஆத்மாவினில் மனதை யடக் குதலெனும் யோகத் தீயில் வேள்வியாய்ச் செய்கின் றனர் II

————–

28. த்ரவ்யயஜ்ஞாஸ்தபோயஜ்ஞா யோகயஜ்ஞாஸ்ததாபரே
ஸ்வாத்யாயஜ்ஞாநயஜ்ஞாஸ்ச யதய: ஸம்ஸிதவ்ரதா:

அபரே த்ரவ்யயஜ்ஞா-வேறு சிலர் திரவியத்தால் வேள்வி செய்வோர்,
தபோயஜ்ஞா-தவத்தால் வேட்போர்,
ததா யோகயஜ்ஞா ச-அதே போல யோகத்தால் வேட்போர்
ஸம்ஸிதவ்ரதா: யதய:-அகிம்சை முதலிய கொள்கை உடையோர், முயற்சி செய்வோர்,
ஸ்வாத்யாய ஜ்ஞாநயஜ்ஞா-சிலர் ஞானத்தால் வேட்போர்.

விரதங்களை நன்கு பாதுகாக்கும் முனிகளில் வேறு சிலர் திரவியத்தால் வேள்வி செய்வோர்; சிலர் தவத்தால் வேட்போர்; சிலர் கல்வியால் வேட்போர்; சிலர் ஞானத்தால் வேட்போர்.

சிலர் பொருட்களைத் தானமெனும் வேள்வியாகவும், தவ யோகங் களையும், வேதமோதுதல்-ஞான I
விசாரத்தையும் வேள்வி யாய்ச் செயும்,விடா முயற்சிதீர் மானமுடையோரென அநேகராம் II

———–

29. அபாநே ஜுஹ்வதி ப்ராணம் ப்ராணேऽபாநம் ததாபரே
ப்ராணாபாநகதீ ருத்த்வா ப்ராணாயாமபராயணா:

அபரே ப்ராணாயாமபராயணா:-வேறு சிலர் பிரணாயாமத்தில் ஈடுபட்டவர்களாய்,
ப்ராணஅபாநகதீ, ருத்த்வா-பிராணன் அபானன் என்ற வாயுக்களின் நடையைக் கட்டுப்படுத்தி
அபாநே ப்ராணம், ப்ராணே அபாநம்-அபான வாயுவில் பிராண வாயுவையும், பிராண வாயுவில் அபானத்தையும்,
ஜுஹ்வதி-ஆகுதி பண்ணுகிறார்கள்.

இனி வேறு சிலர் பிரணாயாமத்தில் ஈடுபட்டவர்களாய், பிராணன், அபானன் என்ற வாயுக்களின் நடையைக் கட்டுப்படுத்தி அபானவாயுவில் பிராணவாயுவையும், பிராண வாயுவில் அபானத்தையும் ஆகுதி பண்ணுகிறார்கள்.

மற்று சிலர் அபான வாயுவில் பிராணனையும் பிராணனிலபா னனையும் வேள்வியாய்ச் செய்வர்I
பிராணாபானப் போக்கினை அடக்கியே சிலர் பிராணா யாமத்திலேயே கருத்தூன் றியுளர் II

———–

30. அபரே நியதாஹாரா: ப்ராணாந்ப்ராணேஷு ஜுஹ்வதி
ஸர்வேऽப்யேதே யஜ்ஞவிதோ யஜ்ஞக்ஷபிதகல்மஷா:

அபரே நியதாஹாரா:-வேறு சிலர் உணவை ஒழுங்குபடுத்தி,
ப்ராணாந்ப்ராணேஷு ஜுஹ்வதி-உயிரை உயிரில் ஆகுதி செய்கிறார்கள்,
ஏதே ஸர்வே அபி-இவ்வனைவரும்
யஜ்ஞவிதோ-வேள்வி நெறியுணர்ந்து,
யஜ்ஞக்ஷபிதகல்மஷா:-வேள்வியால் பாவமற்றுப் போயினோர்.

வேறு சிலர் உணவை ஒழுங்குபடுத்தி உயிரை உயிரில் ஆகுதி செய்கிறார்கள்.
இவ்வனைவரும் வேள்வி நெறியுணர்ந்து வேள்வியால் பாவமற்றுப் போயினோர்.

வேறு சிலர் உணவில் நியம முடையோராய் பிராணனைப் பிராணனில் வேள்வி யாய்ச் செய்வர்I
வேள்வியறிந்து செய்யுமிவர் களனைவரும் வேள்வியாலே பாவத்ததப் போக்கி யவர்களாம் II

————

31. யஜ்ஞஸிஷ்டாம்ருதபுஜோ யாந்தி ப்ரஹ்ம ஸநாதநம்
நாயம் லோகோऽஸ்த்யயஜ்ஞஸ்ய குதோऽந்ய: குருஸத்தம

குருஸத்தம-குரு குலத்தாரில் சிறந்தோய்,
யஜ்ஞஸிஷ்ட அம்ருதபுஜ:-வேள்வியில் மிஞ்சிய அமுதை யுண்போர்,
ஸநாதநம் யாந்தி ப்ரஹ்ம-என்றுமுளதாகிய பிரம்மத்தை எய்துகிறார்கள்,
யஜ்ஞஸ்ய அயம் லோக: ந அஸ்தி-வேள்வி செய்யாதோருக் கிவ்வுலகமில்லை,
அந்ய: குத:-வேறு (பர உலகம்) ஏது?

வேள்வியில் மிஞ்சிய அமுதை யுண்போர் என்றுமுளதாகிய பிரம்மத்தை எய்துகிறார்கள்.
வேள்வி செய்யாதோருக்கிவ்வுலகமில்லை. அவர்களுக்குப் பரலோகமேது, குரு குலத்தாரில் சிறந்தோய்?

32. ஏவம் பஹுவிதா யஜ்ஞா விததா ப்ரஹ்மணோ முகே
கர்மஜாந்வித்தி தாந்ஸர்வாநேவம் ஜ்ஞாத்வா விமோக்ஷ்யஸே

ஏவம் பஹுவிதா யஜ்ஞா-இங்ஙனம் பலவித வேள்விகள்,
ப்ரஹ்மண: முகே-வேதங்களின் வாயிலாக,
விததா-விரித்துக் காட்டப்பட்டிருக்கின்றன,
தாந் ஸர்வாந் கர்மஜாந்-அவையெல்லாம் தொழிலிலே பிறப்பன,
வித்தி-என்று உணர். ஏவம் ஜ்ஞாத்வா விமோக்ஷ்யஸே-இவ்வாறுணர்ந்தால் விடுதலை பெறுவாய்.

பிரம்மத்தின் முகத்தில் இங்ஙனம் பலவித வேள்விகள் விரித்துக் காட்டப்பட்டிருக்கின்றன.
அவையெல்லாம் தொழிலிலே பிறப்பனவென்றுணர். இவ்வாறுணர்ந்தால் விடுதலை பெறுவாய்.

இங்ஙனம் பலவகையான வேள்வி யெலாம் வேதத்தின் வாயிலாய் விளம்பப் பட்டுள்ளன I
அவையாவும் செயலில் தோன்றி யவைகள் எனவறி இவ்விதம் நீ யறிந்துப் பின் முக்தி யடைவாயே II

33. ஸ்ரேயாந்த்ரவ்யமயாத்யஜ்ஞாஜ்ஜ்ஞாநயஜ்ஞ: பரந்தப
ஸர்வம் கர்மாகிலம் பார்த ஜ்ஞாநே பரிஸமாப்யதே

பரந்தப பார்த-பரந்தப அர்ஜுனா!
த்ரவ்யமயாத் யஜ்ஞாத்-திரவியத்தைக் கொண்டு செய்யப்படும்,
ஜ்ஞாநயஜ்ஞ: ஸ்ரேயாந்-ஞானவேள்வி சிறந்தது,
அகிலம் கர்ம: ஸர்வம் -கர்மமெல்லாம்,
ஜ்ஞாநே பரிஸமாப்யதே-ஞானத்தில் முடிவு பெறுகிறது.

பரந்தபா, திரவியத்தைக் கொண்டு செய்யப்படும் வேள்வியைக் காட்டிலும் ஞானவேள்வி சிறந்தது. பார்த்தா, கர்மமெல்லாம், முற்றிலும், ஞானத்தில் முடிவு பெறுகிறது.

பரந்தப! பொருள் கொண்டு செயும் வேள்வியினும் ஞானத்தால் செயும் வேள்வி மிக வுயர்ந்தது I
பார்த்தனே ! எல்லாச் செயலும் மீதமின்றியே ஞானத்தில் முழு முடிவை அடைகின்றனவே II

34. தத்வித்தி ப்ரணிபாதேந பரிப்ரஸ்நேந ஸேவயா
உபதேக்ஷ்யந்தி தே ஜ்ஞாநம் ஜ்ஞாநிநஸ்தத்த்வதர்ஸிந:

ப்ரணிபாதேந பரிப்ரஸ்நேந ஸேவயா-வணக்கத்தாலும், சூழ்ந்த கேள்வியாலும் தொண்டு புரிவதாலும்,
தத் வித்தி-அதனை அறிந்துகொள்,
தத்த்வதர்ஸிந: ஜ்ஞாநிந-உண்மை காணும் ஞானிகள்,
தே ஜ்ஞாநம் உபதேக்ஷ்யந்தி-உனக்கு ஞானத்தை உபதேசிப்பார்கள்.

அதனை வணக்கத்தாலும், சூழ்ந்த கேள்வியாலும் தொண்டு புரிவதாலும் அறிந்து கொள்.
உண்மை காணும் ஞானிகள் உனக்கு ஞானத்தை உபதேசிப்பார்கள்.

வீழ்ந்து வணங்கியே பணிவிடை செய்தும் உண்மை யறியவே கேள்விகள் கேட்டும் I
அதனை யறிவோமாக;கற்று ணர்ந்த ஆத்ம ஞானிகள் ஞானத்தை உபதேசிப்பரே II

———-

35. யஜ்ஜ்ஞாத்வா ந புநர்மோஹமேவம் யாஸ்யஸி பாண்டவ
யேந பூதாந்யஸேஷாணி த்ரக்ஷ்யஸ்யாத்மந்யதோ மயி

யத் ஜ்ஞாத்வா-எதை அறிந்து கொண்ட பின்னர்,
பாண்டவ புந: ஏவம் மோஹம்-பாண்டவா, நீ அப்பால் இவ்வித மயக்கம்,
ந யாஸ்யஸி-அடைய மாட்டாயோ,
யேந பூதாநி அஸேஷாணி-இதனால் எல்லா உயிர்களையும், மிச்சமின்றி,
ஆத்மநி அதோ மயி த்ரக்ஷ்யஸி-நின்னுள்ளேயும், பிறகு என்னுள்ளேயும் காண்பாய்.

அந்த ஞானம் பெறுவதனால், பாண்டவா, நீ அப்பால் இவ்வித மயக்கமெய்த மாட்டாய்.
இதனால் நீ எல்லா உயிர்களையும், மிச்சமின்றி நின்னுள்ளே காண்பாய். அப்பால் அவற்றை என்னுள்ளே காண்பாய்.

பாண்டவா! எதை யறிந்த பின் மோஹத்தை மீண்டுமடைய மாட்டாயோ எதனால் I
அனைத்து உயிர்களையுமே உன்னிடத்தும் என்னிடத்தும் காண்பாயோ அதை யறிவாய் II

————-

36. அபி சேதஸி பாபேப்ய: ஸர்வேப்ய: பாபக்ருத்தம:
ஸர்வம் ஜ்ஞாநப்லவேநைவ வ்ருஜிநம் ஸந்தரிஷ்யஸி

ஸர்வேப்ய: பாபேப்ய: அபி-பாவிகளெல்லாரைக் காட்டிலும்,
பாபக்ருத்தம: அஸி சேத்-நீ அதிகப் பாவியாக இருந்தாலும்,
ஜ்ஞாநப்லவேந ஏவ-ஞானத்தோணியால்,
ஸர்வம் வ்ருஜிநம் ஸந்தரிஷ்யஸி-அப்பாவத்தையெல்லாம் கடந்து செல்வாய்.

பாவிகளெல்லாரைக் காட்டிலும் நீ அதிகப் பாவியாக இருந்தாலும், அப்பாவத்தை யெல்லாம்
ஞானத் தோணியால் கடந்து செல்வாய்.

பாவஞ் செய்தோ ரெல்லோரை நோக்கினும் பெரும்பாவம் செய்தவனாய் நீ யிருப்பினும் I
ஆத்ம ஞானமென்னும் படகிலேறி எளிதில் பாவமங்களனைத்தையும் கடந்திடுவாய் நீ II

————

37. யதைதாம்ஸி ஸமித்தோऽக்நிர்பஸ்மஸாத்குருதேऽர்ஜுந
ஜ்ஞாநாக்நி: ஸர்வகர்மாணி பஸ்மஸாத்குருதே ததா

அர்ஜுந-அர்ஜுனா!
யதா ஸமித்த அக்நி-நன்கு கொளுத்துண்ட தீ,
ஏதாம்ஸி பஸ்மஸாத் குருதே-விறகுகளைச் சாம்பராக்கி விடுகிறதோ,
ததா ஜ்ஞாநாக்நி:-அதே போல ஞானத் தீ,
ஸர்வகர்மாணி பஸ்மஸாத் குருதே-எல்லா வினைகளையும் சாம்பராக்கி விடும்.

நன்கு கொளுத்துண்ட தீ, விறகுகளைச் சாம்பராக்கி விடுதல் போலவே, அர்ஜுனா,
ஞானத் தீ எல்லா வினைகளையும் சாம்பராக்கி விடும்.

அர்ஜுனா! சுடர் விட்டெரியும் நெருப்பானது எவ்விதம் விறகுகளை நீறாகச் செய்யுமோ I
அவ்விதம் ஞானமெனுமக் கனலானது அனைத்துச் செயல்களையும் நீறாக்குமே II

————

38. ந ஹி ஜ்ஞாநேந ஸத்ருஸம் பவித்ரமிஹ வித்யதே
தத்ஸ்வயம் யோகஸம்ஸித்த: காலேநாத்மநி விந்ததி

இஹ ஜ்ஞாநேந ஸத்ருஸம்-இவ்வுலகத்தில் ஞானத்தைப் போல்,
பவித்ரம் ஹி ந வித்யதே-தூய்மை தரும் பொருள் வேறெதுவுமில்லை,
தத் காலேந யோகஸம்ஸித்த:-தக்க பருவத்தில் கடைப்பிடித்து யோகத்தில் நல்ல சித்தியடைந்தவன்,
ஸ்வயம் ஆத்மநி விந்ததி-தனக்குத்தானே ஆத்மாவிடம் எய்தப் பெறுகிறான்.

ஞானத்தைப் போல் தூய்மை தரும் பொருள் இவ்வுலகத்தில் வேறெதுவுமில்லை. யோகத்தில் நல்ல சித்தியடைந்தவன் தானாகவே தக்க பருவத்தில் அதைத் தனக்குள் கிடைக்கப் பெறுகிறான்.

இவ்வுலகில் தூய்மை தனைத் தருதலில் ஞானத்துக் கொப்பானதே துமில்லையே I
செயல்யோக மதில் நிறைவடைந்தோனதை காலப் போக்கில் தன்னகத் தடைகின்றான் II

————

39. ஸ்ரத்தாவாம்லூல்லபதே ஜ்ஞாநம் தத்பர: ஸம்யதேந்த்ரிய:
ஜ்ஞாநம் லப்த்வா பராம் ஸாந்திமசிரேணாதிகச்சதி

ஸம்யதேந்த்ரிய:-இந்திரியங்களைக் கட்டுப்படுத்தியவனாக,
தத்பர: ஸ்ரத்தாவாந்-சாதனையிலேயே ஒன்றிய சிரத்தையுடையோன்,
ஜ்ஞாநம் லபதே-ஞானத்தையடைகிறான்,
ஜ்ஞாநம் லப்த்வா-ஞானத்தையடைந்த பின்,
அசிரேண பராம் ஸாந்திம் அதிகச்சதி-விரைவிலே பர சாந்தி பெறுகிறான்.

பிரம்மத்தைப் பரமாகக் கொண்டு, இந்திரியங்களைக் கட்டுப்படுத்தியவனாய், சிரத்தையுடையோன் ஞானத்தையடைகிறான். ஞானத்தையடைந்த பின் விரைவிலே பர சாந்தி பெறுகிறான்

சிரத்ததயும் முக்தியும் மேலாயுடையோன் புலன் களை யடக்கியோன் ஞானமடைகிறான் I
ஞானமதனை யடைந்தபி னவன் மேலாம் அமைதியினைத் தாமதமின்றி யடைகின் றான் II

———-

40. அஜ்ஞஸ்சாஸ்ரத்ததாநஸ்ச ஸம்ஸயாத்மா விநஸ்யதி
நாயம் லோகோऽஸ்தி ந பரோ ந ஸுகம் ஸம்ஸயாத்மந:

அஜ்ஞ ச ஸ்ரத்ததாந் ச-அறிவும் சிரத்தையுமின்றி,
ஸம்ஸயாத்மா விநஸ்யதி-ஐயத்தை இயல்பாகக் கொண்டோன் அழிந்து போகிறான்,
ஸம்ஸயாத்மந: அயம் லோக: ந அஸ்தி-ஐயமுடையோனுக்கு இவ்வுலகமில்லை,
பர: ந ஸுகம் ச ந-மேலுலகமில்லை; இன்பமுமில்லை.

அறிவும் சிரத்தையுமின்றி ஐயத்தை இயல்பாகக் கொண்டோன் அழிந்து போகிறான்.
ஐயமுடையோனுக்கு இவ்வுலகமில்லை; மேலுலகமில்லை; இன்பமுமில்லை.

அறிவிலியும் நம்பிக்கை யில்லோனும் ஐயமுறு பவனுமழிவை யடைகின்றான் I
சந்தேக முறுமவனுக்கிவ் வுலகும் அவ்வுல குமில்லை ,சுகமுமில்லையே II

41. யோகஸந்ந்யஸ்தகர்மாணம் ஜ்ஞாநஸஞ்சிந்நஸம்ஸயம்
ஆத்மவந்தம் ந கர்மாணி நிபத்நந்தி தநஞ்ஜய

தனஞ்ஜயா!-அர்ஜுனா,
யோக ஸந்ந்யஸ்த கர்மாணம்-யோகத்தால் செய்கைகளைத் துறந்து,
ஜ்ஞாந ஸஞ்சிந்ந ஸம்ஸயம்-ஞானத்தால் ஐயத்தை அறுத்து,
ஆத்மவந்தம்-தன்னைத் தான் ஆள்வோனை,
கர்மாணி ந நிபத்நந்தி-கட்டுப்படுத்த மாட்டா.

யோகத்தால் செய்கைகளைத் துறந்து, ஞானத்தால் ஐயத்தை அறுத்துத் தன்னைத் தான் ஆள்வோனை, தனஞ்ஜயா! கர்மங்கள் கட்டுப்படுத்த மாட்டா.

யோகத்தினால் செயல்களைத் துறந்தவனை மெய்யறிவினால் ஐயங்களை யகற்றியவனை I
தன்னாத்ம சொரூபத்தி லிருக்குமவனை தனஞ்ஜயா! செயல்கள் தீண்டுவதில்லை II

———-

42. தஸ்மாதஜ்ஞாநஸம்பூதம் ஹ்ருத்ஸ்தம் ஜ்ஞாநாஸிநாத்மந:
சித்த்வைநம் ஸம்ஸயம் யோகமாதிஷ்டோத்திஷ்ட பாரத

தஸ்மாத் பாரத-ஆகவே பாரதா,
ஹ்ருத்ஸ்தம்-நெஞ்சில் நிலைகொண்டிருக்கும்,
அஜ்ஞாநஸம்பூதம் ஆத்மந: ஏநம் ஸம்ஸயம்-அஞ்ஞானத்தால் தோன்றும் இந்த ஐயத்தை,
ஜ்ஞாந அஸிநா: சித்த்வா-ஞானவாளால் அறுத்து,
யோகம் ஆதிஷ்ட: உத்திஷ்ட-யோக நிலைகொள், எழுந்து நில்.

அஞ்ஞானத்தால் தோன்றி நெஞ்சில் நிலைகொண்டிருக்கும் இந்த ஐயத்தை உன் ஞானவாளால் அறுத்து யோக நிலைகொள். பாரதா, எழுந்து நில்.

ஆதலால் நீ யறியாமை யாலுதித்திருக்கும் அகஉள்ளத் திலுள இவ்வான்ம சந்தேகத்தை I
மெய்ஞான மெனும் வாளினால் வெட்டி வீழ்த்தி யோகம் தனைக் கைக் கொள் பாரதா!எழுந்திரு II

——

ஸ்ரீ பகவத்கீதை — ஐந்தாம் அத்தியாயம் — ஸந்யாஸ யோகம்–“செயல் துறவு”

அர்ஜுந உவாச

1. ஸந்ந்யாஸம் கர்மணாம் க்ருஷ்ண புநர்யோகம் ச ஸம்ஸஸி
யச்ச்ரேய ஏதயோரேகம் தந்மே ப்ரூஹி ஸுநிஸ்சிதம்

அர்ஜுந உவாச க்ருஷ்ண-அர்ஜுனன் சொல்லுகிறான், கண்ணா !
கர்மணாம்-செய்கைகளின்
ஸந்ந்யாஸம் புந: யோகம் ச ஸம்ஸஸி-துறவியும் பின்னர் அவற்றுடன் கலப்பதை பற்றியும் புகழ்ந்து பேசுகிறாய்,
ஏதயோ: யத் ஏகம்-இவ்விரண்டில் எதுவொன்று,
ஸ்ரேய: ஸுநிஸ்சிதம்-சிறந்ததென்பதை நன்று நிச்சயப்படுத்தி,
தத் மே ப்ரூஹி-என்னிடம் சொல்!

அர்ஜுனன் சொல்லுகிறான்: கண்ணா, செய்கைகளின் துறவைப் புகழ்ந்து பேசுகிறாய்;
பின்னர் அவற்றுடன் கலப்பதைப் புகழ்கிறாய். இவ்விரண்டில் எதுவொன்று சிறந்ததென்பதை நன்று நிச்சயப்படுத்தி என்னிடஞ் சொல்.

“அர்ஜுனன் புகன்றான்”
கிருஷ்ணா! தாங்கள் செயல் துறத்தலையும் செயல் யோகத்தையும் புகழ்கின்றீர்கள் |
ஏதெனக்கு இவ் விரண்டினில் மேலானதோ அஃதொன்றை நிச்சயித்துப் பகர வேண்டுமே ||

ஸ்ரீபகவாநுவாச

2. ஸந்ந்யாஸ: கர்மயோகஸ்ச நி:ஸ்ரேயஸகராவுபௌ
தயோஸ்து கர்மஸந்ந்யாஸாத்கர்மயோகோ விஸிஷ்யதே

ஸ்ரீபகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்,
ஸந்ந்யாஸ: கர்மயோக உபௌ ச-துறவு, கர்ம யோகம் இவ்விரண்டும்,
நி:ஸ்ரேயஸகரௌ-உயர்ந்த நலத்தைத் தருவன,
து தயோ: கர்மஸந்ந்யாஸாத் கர்மயோக-இவற்றின் கர்ம துறவைக் காட்டிலும் கர்ம யோகம்,
விஸிஷ்யதே-மேம்பட்டது.

ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: துறவு, கர்ம யோகம் இவ்விரண்டும் உயர்ந்த நலத்தைத் தருவன. இவற்றின் கர்மதுறவைக் காட்டிலும் கர்ம யோகம் மேம்பட்டது.

“ஸ்ரீபகவான் பகர்ந்தார்”
செயலைத் துறத்தலும் செயல் யோகமும் இவ்விரண்டும் மேன்மை அளிப்பவையே I
ஆனாலவைகளில் செயலைத் துறத்தலினும் செயலைச் செய்தலென்பது மேலானதே —
ஸம்ந்யாஸ = ஸாங்க்ய யோகம் / செயல்துறவு / ஞான யோகம் / சன்யாஸ வாழ்க்கை ; –கர்மயோகம் / செயல் யோகம் / க்ருஹஸ்த பாதை / இல்வாழ்க்கை

————

3. ஜ்ஞேய: ஸ நித்யஸந்ந்யாஸீ யோ ந த்வேஷ்டி ந காங்க்ஷதி
நிர்த்வந்த்வோ ஹி மஹாபாஹோ ஸுகம் பந்தாத்ப்ரமுச்யதே

மஹாபாஹோ!-பெருந்தோளாய்! ய:
ந த்வேஷ்டி-எவன் வெறுப்பு இல்லாமலும்,
ந காங்க்ஷதி-விரும்புதலும் இல்லாமலும்,
ஸ நித்ய ஸந்ந்யாஸீ ஜ்ஞேய:-அவன் எப்பொழுதும் சந்நியாசியே தான் என்று அறியத்தக்கவன்,
ஹி நிர்த்வந்த்வ:-இருமை நீங்கி,
ஸுகம் பந்தாத் ப்ரமுச்யதே-எளிதில் பந்தத்தினின்று விடுபடுகிறான்.

பகைத்தலும் விரும்புதலுமில்லாதவனை நித்திய சந்யாசி என்றுரைக்கக் கடவாய்.
பெருந்தோளுடையாய், இருமை நீங்கி அவன் எளிதில் பந்தத்தினின்று விடுபடுகிறான்.

பெருந்தோளா! விருப்பும் வெறுப்பு மற்றோன் என்றும் துறவி யென் றறியத் தக்கவன் I
ஏனெனில் இருமைகளை விட்டொழித்தவன் எளிதில் தளைகளிலிருந்து விடுபடுகிறானே II

————–

4. ஸாங்க்யயோகௌ ப்ருதக்பாலா: ப்ரவதந்தி ந பண்டிதா:
ஏகமப்யாஸ்தித: ஸம்யகுபயோர்விந்ததே பலம்

ஸாங்க்யயோகௌ-(மேலே கூறிய) சந்நியாசத்தையும் யோகத்தையும்,
ப்ருதக்-வெவ்வேறென்று,
பாலா: ப்ரவதந்தி பண்டிதா: ந-அறியாதவர் கூறுகிறார்கள், பண்டிதர்கள் அங்ஙனம் கூறார்,
ஏகம் அபி ஸம்யக் ஆஸ்தித:-யாதேனுமொன்றில் நன்கு நிலை பெற்றோன்,
உபயோ: பலம் விந்ததே-இரண்டின் பயனையும் எய்துகிறான்.

சாங்கியத்தையும் யோகத்தையும் வெவ்வேறென்று சொல்வோர் குழந்தைகள்; பண்டிதர்கள் அங்ஙனம் கூறார்.-இவற்றுள் யாதேனுமொன்றில் நன்கு நிலை பெற்றோன் இரண்டின் பயனையும் எய்துகிறான்.

செயல் துறவையும், செயல் யோகத்தையும் பாலர்கள் வேறாய்ப் பகர்வர், பண்டிதரோ I
அவ்விதமில்லை , இவற்றுள் ஒன்றினில் நிலைத்தோனிரண்டின் பலனைப் பெறுகிறானே II

5. யத்ஸாங்க்யை: ப்ராப்யதே ஸ்தாநம் தத்யோகைரபி கம்யதே
ஏகம் ஸாங்க்யம் ச யோகம் ச ய: பஸ்யதி ஸ பஸ்யதி

ஸாங்க்யை: யத் ஸ்தாநம் ப்ராப்யதே-சாங்கியர் எந்த நிலையை பெறுகின்றனரோ,
தத் யோகை: அபி கம்யதே-அந்த நிலையையே யோகிகளும் அடைகிறார்கள்,
ய: ஸாங்க்யம் யோகம் ச ஏகம் பஸ்யதி-எவன் சாங்கியத்தையும் யோகத்தையும் ஒன்றாகக் காண்பானோ,
ஸ ச பஸ்யதி-அவனே காட்சியுடையோன்.

சாங்கியர் பெறும் நிலையையே யோகிகளும் பெறுகிறார்கள். சாங்கியத்தையும் யோகத்தையும் எவன் ஒன்றாகக் காண்பானோ, அவனே காட்சியுடையோன்.

எந்நிலை யடைவரோ செயல் துறந்தோர் அந் நிலை யடைவரே செயல் யோகத்தார் I
எவன் யோகம் ஸாங்க்ய மிரண் டிதனயும் ஒன்றாய்க் காணுமவன் அவனே காணுமவன் II

—————

6. ஸந்ந்யாஸஸ்து மஹாபாஹோ து:கமாப்துமயோகத:
யோகயுக்தோ முநிர்ப்ரஹ்ம ந சிரேணாதிகச்சதி

து மஹாபாஹோ-ஆனால் பெருந் தோளாய்,
அயோகத: ஸந்ந்யாஸ: ஆப்தும் து:கம்-யோகமில்லாதவன் சந்நியாசம் பெறுதல் கஷ்டம்,
யோக யுக்த: முநி: ப்ரஹ்ம-யோகத்தில் பொருந்திய முனி பிரம்மத்தை,
நசிரேண அதிகச்சதி-விரைவில் அடைகிறான்.

பெருந் தோளாய், யோகமில்லாதவன் சந்நியாசம் பெறுதல் கஷ்டம்.
யோகத்தில் பொருந்திய முனி விரைவில் பிரம்மத்தை அடைகிறான்.

பெருந் தோளாய்! செயல் யோக மின்றித் துறவை அடைவதரிதாமா னாலிறை தியானத்துடன் I
கூடியே முயற்சி செய்யும் முனி வனானவன் தாமதமின்றியே பிரம்மத்தை யடைகின்றான் II

————–

7. யோகயுக்தோ விஸுத்தாத்மா விஜிதாத்மா ஜிதேந்த்ரிய:
ஸர்வபூதாத்மபூதாத்மா குர்வந்நபி ந லிப்யதே

விஜிதாத்மா-தன்னைத் தான் வென்றோன்,
ஜிதேந்த்ரிய:-இந்திரியங்களின் மீது வெற்றி கொண்டோன்,
விஸுத்தாத்மா-தூய்மையுற்றோன்,
ஸர்வ பூதாத்ம பூதாத்மா-எல்லா உயிர்களுந் தானே யானவன்,
யோகயுக்த: குர்வந் அபி-அவன் கர்மயோகியாக தொழில் செய்து கொண்டிருப்பினும்,
ந லிப்யதே-அதில் ஒட்டுவதில்லை.

யோகத்திலே மருவித் தூய்மையுற்றோன், தன்னைத் தான் வென்றோன், இந்திரியங்களின் மீது வெற்றி கொண்டோன்,-எல்லா உயிர்களுந் தானே யானவன் அவன் தொழில் செய்து கொண்டிருப்பினும், அதில் ஒட்டுவதில்லை.

செயல் யோகம் கூடி மனந் தெளிந்தோன் உடல் புலன் எல்லாம் நன் கடக்கியே I
அதனத் துயிர்களைத் தன் னாத்மாவாய்க்- காணுபவன் செயல் செய்யினுமது தீண்டாதே I

—————-

8. நைவ கிஞ்சித்கரோமீதி யுக்தோ மந்யேத தத்த்வவித்
பஸ்யஞ்ச்ருண்வந்ஸ்ப்ருஸஞ்ஜிக்ரந்நஸ்நங்கச்சந்ஸ்வபந்ஸ்வஸந்

பஸ்யந்-காண்கினும்,
ச்ருண்வந்-கேட்கினும்,
ஸ்ப்ருஸந்-தீண்டினும்,
ஜிக்ரந்-மோப்பினும்,
அஸ்நந்-உண்பினும்,
கச்சந்-நடப்பினும்
ஸ்வபந்-, உறங்கினும்,
ஸ்வஸந்-உயிர்ப்பினும்
தத்த்வவித் யுக்த:-உண்மை அறிந்த யோகி,
கிஞ்சித் ஏவ ந கரோமி-நான் எதனையும் செய்வதில்லை,
இதி மந்யேத-என்று நினைக்க வேண்டும்.

உண்மை அறிந்த யோகி, “நான் எதனையுஞ் செய்வதில்லை” என்றெண்ணக் கடவான்.
காண்கினும், கேட்கினும், தீண்டினும், மோப்பினும், உண்பினும், நடப்பினும், உயிர்ப்பினும், உறங்கினும்,

தத்துவம் தனை யறிந்த யோகியவன் பார்த்தல் கேட்டல் தொடுதல் பேசுதல் I
முகர்த லுண்ணுத லுறங்குதல் செயினும் சுவாசித்தல் போதல் விட லெடுத்தலும் II

————–

9. ப்ரலபந்விஸ்ருஜந்க்ருஹ்ணந்நுந்மிஷந்நிமிஷந்நபி
இந்த்ரியாணீந்த்ரியார்தேஷு வர்தந்த இதி தாரயந்

ப்ரலபந்-புலம்பினும்,
விஸ்ருஜந்-விடினும்,
க்ருஹ்ணந்-வாங்கினும்,
உந்மிஷந்-இமைகளைத் திறப்பினும்,
நிமிஷந் அபி-மூடினும் இந்த்ரியாணி,
இந்த்ரியார்தேஷு-இந்திரியங்கள் தம்முடைய விஷயங்களில்,
வர்தந்தே இதி தாரயந்-செயல் படுகின்றன என்று உணர்ந்து கொண்டு,
(நான் எதனையும் செய்வதில்லை என்று கருதி இருக்க வேண்டும்).

புலம்பினும், விடினும், வாங்கினும், இமைகளைத் திறப்பினும், மூடினும், எதிலும், இந்திரியங்கள் தம்முடைய விஷயங்களில் சலிக்கின்றன” என்று கருதியிருக்கக் கடவான்.

கண் திறந்து மூடுமிவை களைச் செயினும் புலன்கள் புலபொருட் களிலுள்ளன I
எனத் தெளிந்து நானெதனையும் செய்வதில்லை

—————–

10. ப்ரஹ்மண்யாதாய கர்மாணி ஸங்கம் த்யக்த்வா கரோதி ய:
லிப்யதே ந ஸ பாபேந பத்மபத்ரமிவாம்பஸா

ய: கர்மாணி ப்ரஹ்மணி ஆதாய-எவன் செய்கைகளை யெல்லாம் பிரம்மத்தில் சார்த்தி விட்டு,
ஸங்கம் த்யக்த்வா, கரோதி-பற்றுதலை நீக்கி எவன் தொழில் செய்கிறானோ,
அம்பஸா பத்ம பத்ரம் இவ-நீரில் தாமரையிலை போல்,
ஸ: பாபேந ந லிப்யதே-அவன் பாவத்தால் தீண்டல் பெறுவதில்லை.

செய்கைகளை யெல்லாம் பிரம்மத்தில் சார்த்தி விட்டுப் பற்றுதலை நீக்கி எவன் தொழில் செய்கிறானோ, அவன், நீரில் தாமரையிலை போல், பாவத்தால் தீண்டல் பெறுவதில்லை.

எவனிறை வனிடமர்ப்பித் துச் செயல்களைப் பற்றின்றியே செய்கின் றானோ வவன் I
பாவத்தினால் பற்றுதலற் றிருப்பான் தாமரை யிலைத் தண்ணீர் போன்றே I

11. காயேந மநஸா புத்த்யா கேவலைரிந்த்ரியைரபி
யோகிந: கர்ம குர்வந்தி ஸங்கம் த்யக்த்வாத்மஸுத்தயே

யோகிந: ஸங்கம் த்யக்த்வா-யோகிகள் பற்றுதலைக் களைந்து,
ஆத்மஸுத்தயே-ஆத்ம சுத்தியின் பொருட்டாக,
காயேந மநஸா புத்த்யா-உடம்பாலும், மனத்தாலும், புத்தியாலும்
கேவலை: இந்த்ரியை: அபி-வெறுமே இந்திரியங்களாலும்,
கர்ம குர்வந்தி-தொழில் செய்வார்.

யோகிகள் பற்றுதலைக் களைந்து, ஆத்ம சுத்தியின் பொருட்டாக உடம்பாலும், மனத்தாலும்,
புத்தியாலும் அன்றி வெறுமே இந்திரியங்களாலும் தொழில் செய்வார்.

செயல் யோகிகள் பற்றினை விடுத்தே மனத் தூய்மைப் பொருட்டு வெறும்- I
உடலாலும் மனத்தாலும் புத்தியாலும் புலனினாலும் மட்டுமே செயல்புரிவரே II

————

12. யுக்த: கர்மபலம் த்யக்த்வா ஸாந்திமாப்நோதி நைஷ்டிகீம்
அயுக்த: காமகாரேண பலே ஸக்தோ நிபத்யதே

யுக்த: கர்மபலம் த்யக்த்வா-யோகத்தில் பொருந்தியவன் கர்மப் பயனைத் துறந்து,
நைஷ்டிகீம் ஸாந்திமாப்நோதி-நிஷ்டைக்குரிய சாந்தியை அடைகிறான்,
அயுக்த: காமகாரேண-யோகத்தில் இணங்காதோன் விருப்பத்துக்கு வசமாய்ப்,
பலே ஸக்த:-பயனிலே பற்றுதல் கொண்டு,
நிபத்யதே-தளைப்படுகிறான்.

யோகத்தில் பொருந்தியவன் கர்மப் பயனைத் துறந்து நிஷ்டைக்குரிய சாந்தியை அடைகிறான்.-யோகத்தில் இணங்காதோன் விருப்பத்துக்கு வசமாய்ப் பயனிலே பற்றுதல் கொண்டு தளைப்படுகிறான்.

யோகியானவன் செயல் பலனைத் துறந்து நிஷ்டையா லுதிக்குமமைதி யுடையோனாம் I
செயல் யோக மற்றானோ ஆசை யுந்துதலால் பலனில் பற்று வைத்தே கட்டுறுகிறான் II

13. ஸர்வகர்மாணி மநஸா ஸந்ந்யஸ்யாஸ்தே ஸுகம் வஸீ
நவத்வாரே புரே தேஹீ நைவ குர்வந்ந காரயந்

வஸீ தேஹீ-தன்னை வசங்கொண்ட ஆத்மா,
ந குர்வந் ந காரயந் ஏவ-எதனையும் செய்வதுமின்றிச் செய்விப்பதுமின்றி,
நவத்வாரே புரே-ஒன்பது வாயில் கொண்ட உடற்கோட்டையில்,
ஸர்வகர்மாணி மநஸா ஸந்ந்யஸ்ய-எல்லா கர்மங்களையும் மனதால் துறந்து,
ஸுகம் ஆஸ்தே-இன்புற்றிருக்கிறான்.

தன்னை வசங்கொண்ட ஆத்மா எல்லா கர்மங்களையும் மனதால் துறந்து, எதனையும் செய்வதுமின்றிச் செய்விப்பதுமின்றி, ஒன்பது வாயில் கொண்ட உடற்கோட்டையில் இன்புற்றிருக்கிறான்.

புலன் மன மிவைகளை வசப் படுத்திய தேஹீ விவேகத்தால் செயலை யெலாம் விலக்கியே I
ஏதும் செய்யாதும் செய்விக்காது மொன்பது வாயிலுடைய நகரில் சுகமாயி ருக்கின்றானே II

———-

14. ந கர்த்ருத்வம் ந கர்மாணி லோகஸ்ய ஸ்ருஜதி ப்ரபு:
ந கர்ம பல ஸம்யோகம் ஸ்வபாவஸ்து ப்ரவர்ததே

கர்த்ருத்வம்-செயலின் கர்த்தா என்னும் தன்மை,
கர்மாணி-கர்மங்கள்,
கர்ம பல ஸம்யோகம்-செய்கைப் பயன் பெறுதல்,
ப்ரபு: லோகஸ்ய ந ஸ்ருஜதி-(இவற்றுள் எதனையும்) இறைவன் மனிதர்களுக்கு தரவில்லை,
து ஸ்வபாவ: ப்ரவர்ததே-ஆனால் இயல்புதான் செயல்படுகிறது.

செய்கைத் தலைமை, செய்கை, செய்கைப் பயன் பெறுதல் இவற்றுளெதனையும் கடவுள்
மனிதனுக்குத் தரவில்லை. இயற்கையே இயல்பெறுகிறது.

பரமாத்மா எவர்க்கும் செயல்களையும் செய்பவனென் பதையுமுண்டு பண் ணுவதில்லை I
செயல் பலனி னிணைப்பையும் செய்வதில்லையே சுபாவம் அனைத்தையும் செய்விக்கின்றதே II

————-

15. நாதத்தே கஸ்யசித்பாபம் ந சைவ ஸுக்ருதம் விபு:
அஜ்ஞாநேநாவ்ருதம் ஜ்ஞாநம் தேந முஹ்யந்தி ஜந்தவ:

பாபம் ஸுக்ருதம் ச-பாவி அல்லது நற்செய்கையுடையோனென்று,
கஸ்யசித் ந ஆதத்தே-எவனையும் கடவுள் ஏற்பதில்லை,
அஜ்ஞாநேந ஆவ்ருதம் ஜ்ஞாநம்-அஞ்ஞானத்தால் ஞானம் சூழப்பட்டிருக்கிறது,
தேந ஜந்தவ: முஹ்யந்தி-அதனால் ஜந்துக்கள் மயக்கமெய்துகின்றன.

எவனையும் பாவி அல்லது நற்செய்கையுடையோனென்று கடவுள் ஏற்பதில்லை.
அஞ்ஞானத்தால் ஞானம் சூழப்பட்டிருக்கிறது. அதனால் ஜந்துக்கள் மயக்கமெய்துகின்றன.

எங்குமுள்ள ஆத்மா எவருடைய பாவ புண் ணியங்களையும் ஏற்பதில்லையே I
அறிவு அறி யாமையால் மறை பட்டுளதே ஆதலால் மனிதர்கள் மயங்குகின்றனரே II.

————-

16. ஜ்ஞாநேந து ததஜ்ஞாநம் யேஷாம் நாஸிதமாத்மந:
தேஷாமாதித்யவஜ்ஜ்ஞாநம் ப்ரகாஸயதி தத்பரம்

து ஏஷாம் தத் அஜ்ஞாநம்-ஆனால் எவர்களுடைய அஞ்ஞானம்,
ஆத்மந: ஜ்ஞாநேந நாஸிதம்-ஆத்ம ஞானத்தால் அழிக்கப் பட்டதோ,
தேஷாம் ஜ்ஞாநம் ஆதித்யவத் -அவர்களுடைய ஞானம் சூரியனைப் போன்றதாய்,
தத்பரம் ப்ரகாஸயதி-பரம்பொருளை ஒளியுறக் காட்டுகிறது.

அந்த அஞ்ஞானத்தை ஆத்ம ஞானத்தால் அழித்தவர்களுடைய ஞானம் சூரியனைப் போன்றதாய்ப் பரம்பொருளை ஒளியுறக் காட்டுகிறது.

ஆனால், எவர்களுடைய அவ்வறியாமை ஆத்ம அறிவினால ழிக்கப்பட்டுளதோ I
அவர் தம் ஞானம் கதிரவன் போல் அப் பரம் பொருளை விளங்கச் செய்கிறதே II

——–

17. தத்புத்தயஸ்ததாத்மாநஸ்தந்நிஷ்டாஸ்தத்பராயணா:
கச்சந்த்யபுநராவ்ருத்திம் ஜ்ஞாநநிர்தூதகல்மஷா:

தத்புத்தய: ததாத்மாந: தந்நிஷ்டா: தத்பராயணா:-பிரம்மத்தால் புத்தியை நாட்டி, அதுவே தாமாய், அதில் நிஷ்டையெய்தி, அதில் ஈடுபட்டோர்,
ஜ்ஞாந நிர்தூத கல்மஷா:-ஞானத்தால் தம்முடைய பாவங்களெல்லாம் நன்கு கழுவப் பெற்றோராய்,
அபுநராவ்ருத்திம் கச்சந்தி-மீளாப் பதமடைகிறார்கள்.

பிரம்மத்தால் புத்தியை நாட்டி, அதுவே தாமாய், அதில் நிஷ்டையெய்தி, அதில் ஈடுபட்டோர்,
தம்முடைய பாவங்களெல்லாம் நன்கு கழுவப் பெற்றோராய், மீளாப் பதமடைகிறார்கள்.

அதில் புத்தியுளோரதுவே தாமாயிருப்போர் அதிலே நிலை பெற்றவரா யதையே மேலாம் I
அடைக்கலமா யடைந்து, ஞானத்தால் பாவம் அழித்தோர் திரும்பி வாரா நிலை யடைவரே II

————-

18. வித்யாவிநயஸம்பந்நே ப்ராஹ்மணே கவி ஹஸ்திநி
ஸுநி சைவ ஸ்வபாகே ச பண்டிதா: ஸமதர்ஸிந:

வித்யா விநய ஸம்பந்நே ப்ராஹ்மணே -கவி ஹஸ்திநி ஸுநி ச ஏவ-பசுவினிடத்திலும், யானையினிடத்தும், நாயினிடத்தும் கூட,
ஸ்வபாகே: ச-நாயைத் தின்னும் புலையனிடத்தும்,
பண்டிதா: ஸமதர்ஸிந:-பண்டிதர் சமப் பார்வையுடையோர்.

கல்வியும் விநயமும் நன்கு கற்ற பிராமணனிடத்திலும், பசுவினிடத்திலும், யானையினிடத்தும், நாயினிடத்தும், நாயைத் தின்னும் புலையனிடத்தும், பண்டிதர் சமப் பார்வையுடையோர்.

கல்வி யடக்கமுடைய அந்தணரிடத்தும்பசு யானை யிடத்தும் நாயினிடத்தும் I
நாயைச் சமைத்துண்போனிடத்தும் ஞானியர் சம திருஷ்டி யுடனிருப்பரே II

19. இஹைவ தைர்ஜித: ஸர்கோ யேஷாம் ஸாம்யே ஸ்திதம் மந:
நிர்தோஷம் ஹி ஸமம் ப்ரஹ்ம தஸ்மாத் ப்ரஹ்மணி தே ஸ்திதா:

ஏஷாம் மந: ஸாம்யே ஸ்திதம்-எவர்களுடைய மனம் சமநிலையில் நிற்கிறதோ,
தை: இஹ ஏவ ஸர்க: ஜித:-இவ்வுலகத்திலேயே (உயிர் வாழும் போதே) இயற்கையை வென்றோராவர்,
ஹி ப்ரஹ்ம நிர்தோஷம் ஸமம்-ஏனெனில் பிரம்மம் மாசற்றது. சமநிலை யுற்றது,
தஸ்மாத் தே ப்ரஹ்மணி ஸ்திதா:-ஆதலால் அவர்கள் பிரம்மத்தில் நிலைபெறுகிறார்கள்.

மனம் சமநிலையில் நிற்கப் பெற்றோர் இவ்வுலகத்திலேயே இயற்கையை வென்றோராவர்.
பிரம்மம் மாசற்றது. சமநிலையுற்றது. ஆதலால் அவர்கள் பிரம்மத்தில் நிலைபெறுகிறார்கள்.

எவர் மனம் சமத்தில் நிலைத்துள்ளதோ அவர்களால் பிறப்பும் வெல்லப் பட்டதாம் I
ஏனெனில் குற்றமிலா சமமாம் பிரம்மம் ஆதலாலவர் பிரம்மனில் நிலையாயுளரே II

————–

20. ந ப்ரஹ்ருஷ்யேத்ப்ரியம் ப்ராப்ய நோத்விஜேத்ப்ராப்ய சாப்ரியம்
ஸ்திரபுத்திரஸம்மூடோ ப்ரஹ்மவித்ப்ரஹ்மணி ஸ்தித:

ப்ரியம் ப்ராப்ய ந ப்ரஹ்ருஷ்யேத்-விரும்பிய பொருளைப் பெறும்போது மகிழ்ச்சி அடையாமலும்,
அப்ரியம் ப்ராப்ய ச ந உத்விஜேத்-பிரியமற்றதைப் பெறும்போது துயர்ப்படாமலும்,
ஸ்திரபுத்தி: அஸம்மூட: ஸ்திர புத்தி யுடையோனாய், மயக்கம் நீங்கி,
ப்ரஹ்மவித் ப்ரஹ்மணி ஸ்தித:-பிரம்மஞானி பிரம்மத்தில் நிலைபெறுகிறான்.

விரும்பிய பொருளைப் பெறும்போது களிகொள்ளான்; பிரியமற்றதைப் பெறும்போது துயர்ப்பட மாட்டான்; பிரம்ம ஞானி ஸ்திர புத்தி யுடையோனாய், மயக்கம் நீங்கி, பிரம்மத்தில் நிலைபெறுகிறான்.

பிரம்மத்தை யறிந்தோன் அதில் நிலை பெற்று மயக்கமில்லா உறுதியான புத்தி யுடையோன் I
பிரியமானதை யடைந்து மகிழ்வதுமில்லை பிரியமற்றதை யடைந்து வருந்துவதுமி[ல்]லையே II

21. பாஹ்யஸ்பர்ஸேஷ்வஸக்தாத்மா விந்தத்யாத்மநி யத்ஸுகம்
ஸ ப்ரஹ்மயோகயுக்தாத்மா ஸுகமக்ஷயமஸ்நுதே

பாஹ்ய ஸ்பர்ஸேஷு-புறத் தீண்டுதல்களில்,
அஸக்தாத்மா ஆத்மநி-பற்றற்ற சாதகன் உள்ளத்தில்,
யத் ஸுகம் விந்ததி-எந்த சுகம் தியானத்தால் விளைகிறதோ அதை பெறுகிறான்,
ப்ரஹ்ம யோக யுக்தாத்மா-(அதன் பிறகு) பிரம்ம யோகத்தில் பொருந்தி,
ஸ: அக்ஷயம் ஸுகம் அஸ்நுதே-அவன் அழியாத இன்பத்தை எய்துகிறான்.

புறத் தீண்டுதல்களில் பற்றுதல் கொள்ளாமல் தனக்குள்ளே இன்பத்தைக் காண்போன்
பிரம்ம யோகத்தில் பொருந்தி அழியாத இன்பத்தை எய்துகிறான்.

புறப் பொருட் களில் மனம் பற்றாதோன் ஆத்மாவிட முள்ள சுகத்தை யடைகிறான் I
பிரம்ம சமாதியில் நிலைத்த வறிவுடையோன் அழிவில்லா ஆனந்தம் அனுபவிக்கின்றான் II

——–

22. யே ஹி ஸம்ஸ்பர்ஸஜா போகா து:கயோநய ஏவ தே
ஆத்யந்தவந்த: கௌந்தேய ந தேஷு ரமதே புத:

ஸம்ஸ்பர்ஸஜா யே போகா:-புறத் தீண்டுதல்களில் எந்த இன்பங்கள் உள்ளனவோ,
தே ஹி து:கயோநய: ஏவ-அவை நிச்சயமாக துன்பத்துக்குக் காரணங்களாகும்,
ஆதி அந்தவந்த:-தொடக்கமும் இறுதியுமுடையன (அநித்யமானவை),
கௌந்தேய-குந்தி மகனே,
புத: தேஷு ந ரமதே-அறிவுடையோன் அவற்றில் களியுறுவதில்லை.

புறத் தீண்டுதல்களில் தோன்றும் இன்பங்கள் துன்பத்துக்குக் காரணங்களாகும்.
அவை தொடக்கமும் இறுதியுமுடையன. குந்தி மகனே, அறிவுடையோன் அவற்றில் களியுறுவதில்லை.

புலப் பொருட் களைத் தீண்டு வதாலுதித்த இன்பங்களே துக்கத்திற்குக் காரணமாம் I
துவக்கமும் முடிவுமுள்ள வவைகளில் கௌந்நதயா! ஞானியர் களின்புறுவ தில்லையே ॥

———-

23. ஸக்நோதீஹைவ ய: ஸோடும் ப்ராக்ஸரீரவிமோக்ஷணாத்
காமக்ரோதோத்பவம் வேகம் ஸ யுக்த: ஸ ஸுகீ நர
:

ய: இஹ ஏவ-எவன் இவ்வுலகத்திலேயே,
ஸரீரவிமோக்ஷணாத் ப்ராக்-சரீரம் நீங்குமுன்னர்,
காம க்ரோத உத்பவம்-விருப்பத்தாலும் சினத்தாலும் விளையும்,
வேகம் ஸோடும் ஸக்நோதி-எழுச்சியை பொறுக்க வல்லானோ,
ஸ நர: யுக்த:-அந்த மனிதன் யோகி,
ஸ ஸுகீ-அவன் இன்பமுடையோன்.

சரீரம் நீங்குமுன்னர் இவ்வுலகத்திலேயே விருப்பத்தாலும் சினத்தாலும் விளையும் வேகத்தை எவன் பொறுக்க வல்லானோ அந்த மனிதன் யோகி. அவன் இன்பமுடையோன்.

இப்பிறவியில் உடலை விடும் முன்பே ஆசை கோபம் இவை தம் மால் தோன்றும் I
வேகமதைத் தாங்க வல்லோனே யோகியாம் அவனே மகிழ்ச்சி யுடைய மனிதனாம் II

————

24. யோऽந்த:ஸுகோ’ந்தராராமஸ்ததாந்தர்ஜ்யோதிரேவ ய:
ஸ யோகீ ப்ரஹ்மநிர்வாணம் ப்ரஹ்மபூதோऽதிகச்சதி

ய: ஏவ அந்த:ஸுக-எவன் தனக்குள்ளே இன்பமுடையவனாக,
அந்தராராம:-உள்ளே மகிழ்ச்சி காண்பவனாய்,
ததா ய: அந்தர்ஜ்யோதி:-அவ்வாறே உள்ளே ஒளி பெற்றவனாகிய யோகி எவனோ,
ஸ: ப்ரஹ்மபூத:-அவன் தானே பிரம்மமாய்,
ப்ரஹ்மநிர்வாணம் அதிகச்சதி-பிரம்ம நிர்வாணமடைகிறான்.

தனக்குள்ளே இன்பமுடையவனாய், உள்ளே மகிழ்ச்சி காண்பவனாய்,
உள்ளே ஒளி பெற்றவனாகிய யோகி, தானே பிரம்மமாய், பிரம்ம நிர்வாணமடைகிறான்.

எவன் தன்னிலே இன்பம் துய்த்தும் தன்னிலே களிப் படைந்து மவ்விதம் I
எவன் உட்ப்ர காசமுளனோ அவ்யோகி பிரம்ம மாயறிந்து பேரானந்தமடைகிறானே II

———————-

25. லபந்தே ப்ரஹ்மநிர்வாணம்ருஷய: க்ஷீணகல்மஷா:
சிந்நத்வைதா யதாத்மாந: ஸர்வபூதஹிதே ரதா:

சிந்நத்வைதா-இருமைகளை வெட்டிவிட்டு,
ஸர்வபூதஹிதே ரதா:-எல்லா உயிர்களுக்கும் இனியது செய்வதில் மகிழ்ச்சி யெய்தி,
யதாத்மாந:-எவர்கள் சஞ்சலமின்றி பரமாத்மாவில் நிலைத்துள்ளதோ,
ருஷய: க்ஷீணகல்மஷா:-(அந்த) ரிஷிகள் பாவங்களழிந்து,
ப்ரஹ்மநிர்வாணம் லபந்தே-பிரம்ம நிர்வாணம் அடைகிறார்கள்.

இருமைகளை வெட்டிவிட்டுத் தம்மைத் தாம் கட்டுப்படுத்தி, எல்லா உயிர்களுக்கும் இனியது செய்வதில் மகிழ்ச்சி யெய்தும் ரிஷிகள் பாவங்களழிந்து பிரம்ம நிர்வாணம் அடைகிறார்கள்.

பாவங்களைக் களைந்தும் ஐயங்களை யகற்றியும் புலனடக்க முடையோராய் I
உயிரனைத்தின் நன்மையில் மகிழ்வுடை ரிஷிகள் முக்தியினை யடைகின்றார்களே II

————

26. காமக்ரோதவியுக்தாநாம் யதீநாம் யதசேதஸாம்
அபிதோ ப்ரஹ்மநிர்வாணம் வர்ததே விதிதாத்மநாம்

காமக்ரோதவியுக்தாநாம்-விருப்பமும் சினமும் தவிர்த்து,
யதசேதஸாம் விதிதாத்மநாம்-சித்தத்தைக் கட்டுப்படுத்திய ஆத்ம ஞானிகளாகிய,
யதீநாம் அபித:-முனிகளுக்கு நாற்புறமும்,
ப்ரஹ்மநிர்வாணம் வர்ததே-பிரம்ம நிர்வாணம் அருகிலுள்ளது.

விருப்பமும் சினமும் தவிர்த்து சித்தத்தைக் கட்டுப்படுத்திய ஆத்ம ஞானிகளாகிய
முனிகளுக்கு பிரம்ம நிர்வாணம் அருகிலுள்ளது.

ஆசை கோபத் தினின்றும் விடுபட்டோரும், ஆத்மாவினை அறிந்தவர்களும்,மனத்தை I
அடக்கியோரு மான,சந்யாஸிகளுக்கு இம்மையிலும் மறுமையிலும் முக்தியுள்ளதே II

27. ஸ்பர்ஸாந்க்ருத்வா பஹிர்பாஹ்யாம்ஸ்
சக்ஷúஸ்சைவாந்தரே ப்ருவோ:
ப்ராணாபாநௌ ஸமௌ க்ருத்வா
நாஸாப்யந்தரசாரிணௌ

பாஹ்யாந் ஸ்பர்ஸாந் பஹி ஏவ க்ருத்வா-புறத் தீண்டுதல்களை வெளியிலேயே தள்ளி,
சக்ஷú: ப்ருவோ: அந்தரே-புருவங்களுக்கிடையே விழிகளை நிறுத்தி,
நாஸாப்யந்தர சாரிணௌ-மூக்கினுள்ளே இயங்கும் பிராண வாயுவையும் அபான வாயுவையும்,
ஸமௌ க்ருத்வா ச-சமமாகச் செய்துகொண்டு.

புறத் தீண்டுதல்களை அகற்றிப் புருவங்களுக்கிடையே விழிகளை நிறுத்தி மூக்கினுள்ளே
இயங்கும் பிராண வாயுவையும் அபான வாயுவையும் சமமாகச் செய்துகொண்டு;

28. யதேந்த்ரியமநோபுத்திர்முநிர்மோக்ஷபராயண:
விகதேச்சாபயக்ரோதோ ய: ஸதா முக்த ஏவ ஸ:

யதேந்த்ரிய: மந: புத்தி:-புலன்களை, மனத்தை, மதியையும் அடக்கி,
விகத: இச்சா பய க்ரோத:-விருப்பமும் அச்சமும் சினமும் தவிர்த்து,
மோக்ஷ பராயண:-மோட்சத்தை குறிக்கோளாக கொண்டிருக்கிற,
ய: முநி: ஸ: ஸதா முக்த ஏவ-அந்த முனிவன் எக்காலமும் முக்தனே யாவான்.

புலன்களை, மனத்தை, மதியையும் கட்டி விடுதலை யிலக் கெனக் கொண்டு
விருப்பமும் அச்சமும் சினமும் தவிர்ந்தான் முக்தனே யாவான் முனி. (27-28)

வெளியிலுள்ள பொருட்களை வெளியே வைத்தும் கண் களைப் புருவங்களிடை யிருத்தியும் I
மூக்கிலியங் கும் பிராண அபானங்களை நன்கு சமன் செய்து புலன் மனபுத்தி- II
இவை தமை நன் கடக்கியே முக்தியினை மேலாமிலக் காய்க் கருதியே , பயமச்சமும் I
விருப்பும் விலக்கிய வனான அந்த முனிவனவன் எப்பொழுதும் முக்தன் தானே II

———–

29. போக்தாரம் யஜ்ஞதபஸாம் ஸர்வலோகமஹேஸ்வரம்
ஸுஹ்ருதம் ஸர்வபூதாநாம் ஜ்ஞாத்வா மாம் ஸாந்திம்ருச்சதி

மாம் யஜ்ஞதபஸாம் போக்தாரம்-என்னை வேள்வியும் தவமும் ஏற்பவன் என்றும்,
ஸர்வலோகமஹேஸ்வரம்-உலகுகட்கெல்லாம் ஒருபேரரசன் என்றும்,
ஸர்வபூதாநாம் ஸுஹ்ருதம்-எல்லா உயிர்கட்கு நண்பன் என்றும்,
ஜ்ஞாத்வா ஸாந்திம் ருச்சதி-என்று அறிபவன் அமைதி அடைகிறான்.

வேள்வியுந் தவமும் மிசைவோன் யானே; உலகுகட்கெல்லாம் ஒரு பேரரசன்;
எல்லா உயிர்கட்கு நண்பன் யான்” என்றறிவான் அமைதி யறிவான்.

யாக தவம் இவைகளை அனுபவிப்பனாக அனைத்துல கங்களுக்குமீஶ் வரனாக I
அனைத்துயிர்களுக்கும் நண்பனாக எனை அறியுமவன் சாந்தியை அடைகின்றான் II

————

ஸ்ரீ பகவத்கீதை –ஆறாம் அத்தியாயம் — தியான யோகம்–தியானத்தில் தெளிவு”

ஆசைகளாகிய நீரலைகள், மலர்களாகிய வாசனைகள், பட்டாம் பூச்சி போல் சுற்றித் திரியும் மனம், இவற்றை -விழிப்புணர்வாய் தியானித்தல்

ஸ்ரீபகவாநுவாச

1. அநாஸ்ரித​: கர்மபலம் கார்யம் கர்ம கரோதி ய​:
ஸ ஸந்ந்யாஸீ ச யோகீ ச ந நிரக்நிர்ந சாக்ரிய​:

ஸ்ரீபகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்,
ய: கர்மபலம் அநாஸ்ரித​:-எவனொருவன் செய்கையின் பயனில் சார்பின்றி,
கார்யம் கர்ம கரோதி-செய்யத்தக்கது செய்கிறானோ,
ஸ ஸந்ந்யாஸீ யோகீ ச-அவன் சந்யாசியும் யோகியும் ஆவான்,
ச நிரக்நி ந-மேலும் அக்னி காரியங்களை மட்டும் துறப்பவன் ஆகமாட்டான்,
அக்ரிய​: ச ந-செயல்களை துறப்பவனும் ஆகமாட்டான்.

ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: செய்கையின் பயனில் சார்பின்றிச் செய்யத்தக்கது செய்வோன் துறவி; அவனே யோகி. தீ வளர்க்காதவனும் கிரியை செய்யாதவனும் அவன் ஆகார்.

“ஸ்ரீபகவான் பகர்ந்தார்”
எவன் செயல் பலனைச் சாராம லிருந்து செய்ய வேண்டிய செயலைச் செய்பவனோ |
அவன் சந்யாஸியும் யோகி யுமாவான், அக்னி கர்மமும் செயலையும் விட்டவனாகான் ||

———–

2. யம் ஸந்ந்யாஸமிதி ப்ராஹுர்யோகம் தம் வித்தி பாண்டவ
ந ஹ்யஸந்ந்யஸ்தஸங்கல்போ யோகீ பவதி கஸ்சந

பாண்டவ-பாண்டவா! யம் ஸந்ந்யாஸம் இதி ப்ராஹு-எதனை சந்நியாச மென்கிறார்களோ,
யோகம் தம் வித்தி-அதுவே யோகமென்று அறி,
ஹி அஸந்ந்யஸ்த ஸங்கல்ப:-ஏனெனில் கோட்பாடுகளைத் துறக்காத,
கஸ்சந யோகீ ந பவதி-எவனும் யோகியாக மாட்டான்.

பாண்டவா, எதனை சந்நியாச மென்கிறார்களோ, அதுவே யோகமென்றறி.
தன் கோட்பாடுகளைத் துறக்காத எவனும் யோகியாக மாட்டான்.

பாண்டவனே ! எதை சன்யாஸமென்று பகர்வரோ அதை யோகமென்று அறிதி I
ஏனென் றால் ஸங்கல்பத்தை விடாத எவனும் யோகியாய் ஆக மாட்டான் II

——————-

3. ஆருருஷோர்முநேர்யோகம் கர்ம காரணமுச்யதே
யோகாரூடஸ்ய தஸ்யைவ ஸம​: காரணமுச்யதே

யோகம் ஆருருஷோ முநே-யோக நிலையில் ஏற விரும்பும் யோகிக்கு,
கர்ம காரணம் உச்யதே-தொழிலே கருவியாகக் கூறப்படுகிறது,
தஸ்ய யோகாரூடஸ்ய-அந்நிலையில் ஏறியபின்
ஸம​: ஏவ காரணம் உச்யதே-சாந்தம் கருவியாகிறது.

யோக நிலையில் ஏற விரும்பும் யோகிக்குத் தொழிலே கருவியாகக் கூறப்படுகிறது.
அந்நிலையில் ஏறியபின் அவனுக்கு சாந்தம் கருவியாகிறது.

தியான யோகமதில் முன்னேற விரும்பும் முனிக்குச் செயல் சாதனமாய்ச் சொலப் பட்டது I
தியான யோகமதில் முன்னேறி யவனுக்கே செயலின்மை சாதனமாய்ச் சொலப்பட்டது II

—————-

4. யதா ஹி நேந்த்ரியார்தேஷு ந கர்மஸ்வநுஷஜ்ஜதே
ஸர்வஸங்கல்பஸந்ந்யாஸீ யோகாரூடஸ்ததோச்யதே

யதா இந்த்ரியார்தேஷு ந அநுஷஜ்ஜதே-எப்போது புலன்களுக்குரிய போகப் பொருட்களில் பற்றுக் கொள்வதில்லையோ,
கர்மஸு ஹி ந-கர்மங்களிலும் பற்றுக் கொள்வதில்லையோ,
ததா ஸர்வஸங்கல்பஸந்ந்யாஸீ-அப்போது எல்லா கோட்பாடுகளையும் துறந்தவனான அவன்,
யோகாரூட உச்யதே-யோகாரூடன் என்று கூறப் படுகிறான்.

ஒருவன் எல்லாக் கோட்பாடுகளையும் துறந்து விட்டுப் புலன்களிலேனும் செயல்களிலேனும் பற்றுதலின்றி யிருப்பானாயின், அப்போதவன் யோக நிலையில் ஏறியவன் என்று சொல்லப்படுகிறான்.

எப்பொழுது புலப் பொருட்கள னைத்திலும் செயல்களிலும் பற்றுக் கொள்வ தில்லையோ I
அப் பொழுது எல்லா சங்கல்பங் களையும் துறந்த யோகியை யோக நிலை யுற்றவரென்பர் II

—————

5. உத்தரேதாத்மநாத்மாநம் நாத்மாநமவஸாதயேத்
ஆத்மைவ ஹ்யாத்மநோ பந்துராத்மைவ ரிபுராத்மந​:

ஆத்மாநம் ஆத்மாநா உத்தரேத்-தன்னைத் தான் உயர்த்திக் கொள்க,
ஆத்மாநம் ந அவஸாதயேத்-தன்னைத் தன்னால் இழிவுறுத்த வேண்டா,
ஹி ஆத்மா ஏவ ஆத்மந: பந்து-தனக்குத்தானே நண்பன்,
ஆத்மா ஏவ ஆத்மந​: ரிபு:-தனக்குத்தானே பகைவன்.

தன்னைத் தான் உயர்த்திக் கொள்க; தன்னைத் தன்னால் இழிவுறுத்த வேண்டா;
தனக்குத்தானே நண்பன்; தனக்குத்தானே பகைவன்.

தன்னைத் தானே உயர்த்திக் கொள்வானாக தன்னைத் தாழ்த்திக் கொளாதி ருப்பானாக I
ஏனென்றால் தனக்குத்தானே நண்பனும் தனக்குத் தானே பகைவனு மாவானவன் I

—————

6. பந்துராத்மாத்மநஸ்தஸ்ய யேநாத்மைவாத்மநா ஜித​:
அநாத்மநஸ்து ஸத்ருத்வே வர்தேதாத்மைவ ஸத்ருவத்

ஏன ஆத்மநா ஆத்மா ஜித​:-எந்த ஜீவாத்மாவினால் புலன்களுடன் கூடிய உடல் அடக்கி ஆளப் பட்டிருக்கிறதோ,
தஸ்ய ஆத்மநா-அந்த ஜீவாத்மாவிற்கு,
ஆத்மா ஏவ பந்து-தனக்குத் தானே நண்பன்,
து அநாத்மந:-ஆனால் தன்னைத்தான் வெல்லாதவன்,
ஆத்மா ஏவ ஸத்ருவத்-தனக்குத் தான் பகைவனைப் போல,
ஸத்ருத்வே வர்தேத-பகைமையாக செயல்படுவான்.

தன்னைத் தான் வென்றவனே தனக்குத்தான் நண்பன்;
தன்னைத் தான் வெல்லாதவன் தனக்குத் தான் பகைவன் போற் கேடு சூழ்கிறான்.

எவ்வாத்மா வினாலாத்மா வெல்லப் பட்டதோ அவ் வாத்மா அவனுடை யாத்மா வுக்கு நண்பன் I
ஆனாலாத்மாவை வெல்லாதவ னுக்கவனே எதிரியைப் போலே பகை யுடனிருப்பானே II

——————–

7. ஜிதாத்மந​: ப்ரஸாந்தஸ்ய பரமாத்மா ஸமாஹித​:
ஸீதோஷ்ணஸுகது​:கேஷு ததா மாநாபமாநயோ​:

ஸீதோஷ்ண ஸுகது​:கேஷு-சீதோஷ்ணங்களிலும், சுக துக்கங்களிலும்,
மாந அபமாநயோ​:-மானாபிமானங்களிலும்,
ப்ரஸாந்தஸ்ய-சமநிலைப்பட்ட,
ஜிதாத்மந​:-தன்னை வென்ற மனிதனிடத்தில்,
பரமாத்மா ஸமாஹித​:-பரமாத்மா நன்கு நிலைத்து நிற்கிறார்.

தன்னை வென்று ஆறுதலெய்தவனிடத்தே சீதோஷ்ணங்களிலும், சுக துக்கங்களிலும்,
மானாபிமானங்களிலும் சமநிலைப்பட்ட பரமாத்மா விளங்குகிறது.

தன்னை வென்று மனம் தெளிந்தோனுக்குச் சீதோஷ்ண சுக துக்கத் திலுமவ்விதமே I
மான அவமானத் திலும் சித்த மொரு முகமாகிப் பரமாத்மாவில் நிலைத்திருக்குமே II

————-

8. ஜ்ஞாநவிஜ்ஞாநத்ருப்தாத்மா கூடஸ்தோ விஜிதேந்த்ரிய​:
யுக்த இத்யுச்யதே யோகீ ஸமலோஷ்டாஸ்மகாஞ்சந​:

ஜ்ஞாந விஜ்ஞாந த்ருப்தாத்மா-எவனது உள்ளம் ஞானத்திலும் விஞ்ஞானத்திலும் திருப்தியாக நிறைந்திருக்கிறதோ,
கூடஸ்த:-எந்த சூழ்நிலையிலும் தம் நிலையிலிருந்து பிறழாமல் இருக்கிறானோ,
விஜிதேந்த்ரிய​:-புலன்களை வென்று வசப் படுத்தியுள்ளானோ,
ஸம லோஷ்ட அஸ்ம காஞ்சந​:-ஓட்டையும் கல்லையும் பொன்னையும் ஒன்று போலே காணும்,
யோகீ யுக்த: இதி உச்யதே-அந்த யோகியே யோக நிலையுற்றானெனப் படுவான்.

ஞானத்திலும் விஞ்ஞானத்திலும் திருப்தி கொண்டவனாய், மலை முடிவில் நிற்பான் போன்று, புலன்களை வென்று,ஓட்டையும் கல்லையும் பொன்னையும் ஒன்றுபோலே காணும் யோகியே யோக நிலையுற்றானெனப் படுவான்.

அறிவில் அனுபவ அறிவில் மனநிறைவும் மாறுதலில்லா தோன் புலன் களையு மொருங்கிணைத்தோன், கல் மண் பொன் னிவை தமைக் காணுமிடத்தும் யோகி சமமாயிருப்பா னென்பர் II

———–

9. ஸுஹ்ருந்மித்ரார்யுதாஸீநமத்யஸ்தத்வேஷ்யபந்துஷு
ஸாதுஷ்வபி ச பாபேஷு ஸமபுத்திர்விஸிஷ்யதே

ஸுஹ்ருத் மித்ர உதாஸீந மத்யஸ்த த்வேஷ்ய பந்துஷு-அன்பர், நட்பார், பகைவர், ஏதிலர், நடுவர், எதிரிகள், சுற்றத்தார்,
ஸாதுஷு பாபேஷு ச அபி-சாதுக்கள், பாவிகளிடம் கூட,
ஸமபுத்தி-எல்லோரிடத்தும் சம புத்தியுடையோன்,
விஸிஷ்யதே-மேலோனாவான்.

ஞானமென்பது கடவுளியலைப் பற்றிய அறிவு. விஞ்ஞானமென்பது உலகவியலைப் பற்றியது. அன்பர், நட்பார், பகைவர், ஏதிலர், நடுவர், எதிரிகள், சுற்றத்தார், நல்லோர், தீயோர்
எல்லோரிடத்தும் சம புத்தியுடையோன் மேலோனாவான்.

நல்லுள்ளமுடையோன் நண்பன் பகைவன் உதாஸீனனும் நடுவு நிற்போனுறவினன் வெறுப்புக்கு ரியோன் சாது பாவிகளிடமும் சம புத்தி யுடையோன் சிறந்தோனாவான் II

10. யோகீ யுஞ்ஜீத ஸததமாத்மாநம் ரஹஸி ஸ்தித​:
ஏகாகீ யதசித்தாத்மா நிராஸீரபரிக்ரஹ​:

யத சித்தாத்மா நிராஸீ-உள்ளத்தைக் கட்டி, ஆசையைத் துறந்து,
அபரிக்ரஹ​:-ஏற்பது நீக்கிய
யோகீ ஏகாகீ-யோகி தனியனாக,
ரஹஸி ஸ்தித​:-மறைவிடத்தில் இருந்துகொண்டு,
ஸததம் ஆத்மாநம் யுஞ்ஜீத-எப்போதும் ஆன்மாவில் யோகமுறக் கடவான்.

மறை விடத்தில் இருந்து கொண்டு, தனியனாய் உள்ளத்தைக் கட்டி, ஆசையைத் துறந்து,
ஏற்பது நீக்கி எப்போதும் ஆன்மாவில் யோகமுறக் கடவான்.

யோகி தனிமையில் தனியாய் இருந்தும், ஆசைகளும் பொருட்களும் இன்றியும், I
தன்னடக்க முடையோனாய் எப்பொழுதும் தியானத்தில் தானீடுபட வேண்டும் II

———-

11. ஸுசௌ தேஸே ப்ரதிஷ்டாப்ய ஸ்திரமாஸநமாத்மந​:
நாத்யுச்ச்ரிதம் நாதிநீசம் சைலாஜிநகுஸோத்தரம்

ஸுசௌ தேஸே-சுத்தமான இடத்தில்,
சைல அஜிந குஸ உத்தரம்-துணி, மான் தோல், தர்ப்பை இவற்றின் மீது,
ந அத்யுச்ச்ரிதம் ந அதிநீசம்-அதிக உயரமில்லாமலும், அதிகத் தாழ்வில்லாமலும்,
ஆத்மந​: ஸ்திரம் ஆஸநம்-தனக்கோர் உறுதியான ஆசனம்,
ப்ரதிஷ்டாப்ய-அமைத்துக் கொண்டு.

சுத்தமான இடத்தில் அதிக உயரமில்லாமலும், அதிகத் தாழ்வில்லாமலும், துணி, மான் தோல், தர்ப்பை இவற்றின் மீது தனக்கோர் உறுதியான, ஆசனம் சமைத்துக்கொண்டு,

தூய்மையான அசையாததான இடத்தில் தர்பை தோல் மேல் பருத்தித் துணியாலான
தனக்காகவே ஆன ஆசனத்தை மிகவும் தாழ்வுமின்றி, உயரமுமின்றியே அமைத்து

——–

12. தத்ரைகாக்ரம் மந​: க்ருத்வா யதசித்தேந்த்ரியக்ரியா​:
உபவிஸ்யாஸநே யுஞ்ஜ்யாத்யோகமாத்மவிஸுத்தயே

தத்ர ஆஸநே உபவிஸ்ய-அந்த ஆசனத்தில் அமர்ந்து,
யதசித்த இந்த்ரிய க்ரி, ய:-உள்ளத்தையும் புலச் செயல்களையும் நன்கு கட்டுப்படுத்தி,
மந​: ஏகாக்ரம் க்ருத்வா-மனதை ஒருமுகமாக்கி,
ஆத்மவிஸுத்தயே-ஆத்மா நன்கு தூய்மையடையும்படி,
யோக யுஞ்ஜ்யாத்-யோகத்திலே பொருந்தக் கடவான்.

அங்கு மனதை ஒருமுகமாக்கி, உள்ளத்தையும் புலச் செயல்களையும் நன்கு கட்டுப்படுத்தி,
ஆசனத்தமர்ந்து ஆத்மா நன்கு தூய்மையடையும்படி யோகத்திலே பொருந்தக் கடவான்.

ஆங்காசனத் தமர்ந்து மனதை நன்- கொருமுனைப் படுத்தியே புலன் மனச்- I
செயல்களை யடக்கியே மனத்தின் தூய்மை கருதி தியானம் பழக வேண்டும் II

———–

13. ஸமம் காயஸிரோக்ரீவம் தாரயந்நசலம் ஸ்திர​:
ஸம்ப்ரேக்ஷ்ய நாஸிகாக்ரம் ஸ்வம் திஸஸ்சாநவலோகயந்

காய ஸிரோ க்ரீவம் ஸமம்-உடம்பையும், தலையையும் கழுத்தையும் சமமாக,
ச அசலம் தாரயந்-அசைவின்றி வைத்துக்கொண்டு,
திஸ: அநவலோகயந்-திசைகளை நோக்காமல்,
ஸ்வம் நாஸிகாக்ரம்-தன்னுடைய மூக்கு நுனியை,
ஸம்ப்ரேக்ஷ்ய-பார்த்துக் கொண்டு.

உடம்பையும், தலையையும் கழுத்தையும் சமமாக அசைவின்றி வைத்துக்கொண்டு,
உறுதி சான்றவனாய், மூக்கு நுனியைப் பார்த்துக் கொண்டு, திசைகளை நோக்காமல்,

உடல்தலைக் கழுத்திவை தமை நேராயும் அசையாமலே யிருத்தி யுறுதியுடனும் I
தன்னுடைய மூக்கின் நுனியைக் கண்டும் திசைகளைக் காணாமல் அமர வேண்டுமே II

————

14. ப்ரஸாந்தாத்மா விகதபீர்ப்ரஹ்மசாரிவ்ரதே ஸ்தித​:
மந​: ஸம்யம்ய மச்சித்தோ யுக்த ஆஸீத மத்பர​:

ப்ரஸாந்தாத்மா விகதபீ-நன்கு சாந்த மெய்தியவனாய், அச்சத்தைப் போக்கி,
ப்ரஹ்மசாரிவ்ரதே ஸ்தித​:-பிரம்மச்சாரி விரதத்தில் நிலைகொண்டு,
மந​: ஸம்யம்ய-மனதை வசப்படுத்தி,
மச்சித்த: மத்பர​:-என்னிடத்தே சித்தத்தை இசைத்து, என்னையே அடையத்தக்க கதி எனக்கொண்டு,
யுக்த: ஆஸீத-யோகத்திலிருக்கக் கடவான்.

நன்கு சாந்த மெய்தியவனாய், அச்சத்தைப் போக்கி, பிரம்மச்சாரி விரதத்தில் நிலைகொண்டு, மனதை வசப்படுத்தி, என்னிடத்தே சித்தத்தை இசைத்து, எனக்கு ஈடுபட்டு யோகத்திலிருக்கக் கடவான்.

மனவமைதி பயமற்றோன் பிரம்மச்சாரியும் விரதமுளோனும் மனதை வசமாக்கியோனும் I
மனமொருநிலைப் பட்டும்,என்பால் சித்தமும் எனையே யிலக்கா யமர வேண்டும் தியானத்திலே II

—————-

15. யுஞ்ஜந்நேவம் ஸதாத்மாநம் யோகீ நியதமாநஸ​:
ஸாந்திம் நிர்வாணபரமாம் மத்ஸம்ஸ்தாமதிகச்சதி

நியதமாநஸ​:-மனதைக் கட்டுப்படுத்தி,
யோகீ ஏவம்-யோகி இவ்விதம்,
ஆத்மாநம் ஸதா யுஞ்ஜந்-ஆத்மாவை இடையறாது (பிரம்மத்துடன்) இணைத்துக் கொண்டு,
மத்ஸம்ஸ்தாம் நிர்வாணபரமாம்-என்பால் நிலை பெற்றதாகிய மிகச்சிறந்த விடுதலையிலுள்ள,
ஸாந்திம் அதிகச்சதி-ஆறுதலை அடைவான்.

இங்ஙனம் எப்போதும் மனதைக் கட்டுப்படுத்தி ஆத்மாவில் யோகமுற்றிருக்கும் யோகி,
என்பால் நிலை பெற்றதாகிய மிகச்சிறந்த விடுதலையிலுள்ள ஆறுதலையறிவான்.

இவ்விதம் கணப்பொழுதும் தன் மனதை தியானத்தி லிருத்தியே ,மன மடங்கிய I
யோகியவன் என்னிடமுள்ள முக்தியில் முற்றுப் பெறும் சாந்தியை யடைகின்றான் II

———-

16. நாத்யஸ்நதஸ்து யோகோऽஸ்தி ந சைகாந்தமநஸ்நத​:
ந சாதிஸ்வப்நஸீலஸ்ய ஜாக்ரதோ நைவ சார்ஜுந

அர்ஜுந!-அர்ஜுனா!
அத்யஸ்நத து யோக: ந அஸ்தி-மிகைபட உண்போனுக்கு யோகமில்லை,
அநஸ்நத​: ச ஏகாந்தம் ந-உணவற்றோனுக்கும் ஏகாந்த நிலை எய்தாது,
ந ச அதிஸ்வப்நஸீலஸ்ய-மிகுதியாக உறங்குவோனுக்குமில்லை,
ஜாக்ரத: ஏவ ந-மிகுதியாக விழிப்போனுக்கும் அஃதில்லை.

மிகைபட உண்போனுக்கு யோகமில்லை; உணவற்றோனுக்கும் ஏகாந்த நிலை எய்தாது.
மிகுதியாக உறங்குவோனுக்குமில்லை; அர்ஜுனா, மிகுதியாக விழிப்போனுக்கும் அஃதில்லை.

அர்ஜுனா! மிக உண்போனுக்கு யோகமில்லை அறவே யுண்ணாதோனுக்கு மஃதில்லையே I
அதிக முறங்குவோனுக்குத் தியானமில்லை அதிகமாய் விழித்திருப் போனுக்குமில்லையே II

———–

17. யுக்தாஹாரவிஹாரஸ்ய யுக்தசேஷ்டஸ்ய கர்மஸு
யுக்தஸ்வப்நாவபோதஸ்ய யோகோ பவதி து​:கஹா

யுக்த ஆஹார விஹாரஸ்ய- ஒழுங்குக்கு உட்பட்ட உணவு உண்டு நடமாடுகிறவனுக்கு
கர்மஸு யுக்தசேஷ்டஸ்ய-வினைகளில் ஒழுங்குக்குட்பட்ட முயற்சி செய்கிறவனுக்கும்
ஸ்வப்ந அவபோதஸ்ய யுக்த-உறக்கத்திலும் விழிப்பிலும் ஒழுங்குக்குட்பட்டானாயின்
து​:கஹா யோக: பவதி-துயரை அழிக்கும் யோகம் கை கூடுகிறது

ஒழுங்குக்கு உட்பட்ட உணவும், விளையாட்டும் உடையோனாய், வினைகளில் ஒழுங்குக்குட்பட்ட நடைகளுடையவனாய், உறக்கத்திலும் விழிப்பிலும் ஒழுங்குக்குட்பட்டானாயின், அவனுடைய யோகம் துயரை அழிக்கிறது.

உண்பதிலு முலாவுவதிலு மிதமாயிருப்போரும் கடமையை அளவுடன் செய்பவருக்கும் I
விழிப்பு முறக்கமுமள விலுள்ளோருக்கும் யோகம் துன்பத்தைத் துடைப்பதாகிறதே II

————-

18. யதா விநியதம் சித்தமாத்மந்யேவாவதிஷ்டதே
நி​:ஸ்ப்ருஹ​: ஸர்வகாமேப்யோ யுக்த இத்யுச்யதே ததா

விநியதம் சித்தம்-தன்வசப் பட்டுள்ள உள்ளம்,
யதா ஆத்மநி ஏவ-எப்பொழுது தனதுள்ளேயே,
அவதிஷ்டதே-நிலைபெற்றிருகிறதோ,
ததா ஸர்வகாமேப்ய: நி​:ஸ்ப்ருஹ​:-அப்போது எந்த விருப்பத்திலும் பற்று நீங்கிய மனிதன்,
யுக்த: இதி உச்யதே-யோக முற்றான் எனப் படுவான்.

உள்ளம் கட்டுக்கடங்கித் தனதுள்ளேயே நிலைபெற, ஒருவன் எந்த விருப்பத்திலும்
வீழ்ச்சியற்றானாயின், யோக முற்றானெனப் படுவான்.

நன்றா யடக்கிய சித்தம் எப்பொழுது ஆத்மாவிலே நிலைத்துளதோ , அப்பொழுது I
அனைத்துப் பொருட் களினின்றும் பற்று நீங்கியோன் தியானம் கூடியவனாவான் II

———-

19. யதா தீபோ நிவாதஸ்தோ நேங்கதே ஸோபமா ஸ்ம்ருதா
யோகிநோ யதசித்தஸ்ய யுஞ்ஜதோ யோகமாத்மந​:

நிவாதஸ்த: தீப:-காற்றில்லாத இடத்தில் விளக்கு,
யதா ந இங்கதே-எப்படி அசையாமல் இருக்குமோ,
ஸா உபமா-அதே உவமை,
ஆத்மந: யோகம் யுஞ்ஜத: யோகிந:-ஆத்ம யோகத்தில் கலந்து நிற்கும் யோகியினுடைய,
யதசித்தஸ்ய ஸ்ம்ருதா-வெற்றி கொள்ளப பட்ட மனதிற்கும் சொல்லப் பட்டது.

சித்தத்தைக் கட்டி ஆத்ம யோகத்தில் கலந்து நிற்கும் யோகிக்குக் காற்றில்லாத இடத்தில்
அசைவின்றி நிற்கும் விளக்கை முன்னோர் உவமையாகக் காட்டினர்.

எவ்விதம் காற்றில்லா விடத்திலே யுள்ளதீபமானது அசையாமலி ருக்குமோ I
அவ்விதம் மனமடங்கி ஆத்ம தியானம்- பழகும் யோகிக்கு உவமையாய் எண் ணுவர் II

————–

20. யத்ரோபரமதே சித்தம் நிருத்தம் யோகஸேவயா
யத்ர சைவாத்மநாத்மாநம் பஸ்யந்நாத்மநி துஷ்யதி

யோகஸேவயா-யோகப் பயிற்சியினால்,
நிருத்தம் சித்தம்-கட்டுண்ட சித்தம்,
யத்ர உபரமதே-எங்கு ஆறுதல் எய்துமோ,
ச யத்ர ஆத்மநா ஆத்மாநம் பஸ்யந்-எங்கு ஆத்மாவினால் ஆத்மாவை யறிந்து,
ஆத்மநி ஏவ துஷ்யதி-ஆத்மாவில் மகிழ்ச்சி யடைகிறானோ.

எங்கு சித்தம் யோக ஒழுக்கத்தில் பிடிப்புற்று ஆறுதலெய்துமோ, எங்கு ஆத்மாவினால்
ஆத்மாவை யறிந்து ஒருவன் ஆத்மாவில் மகிழ்ச்சியடைகிறானோ

எப்பொழுது யோகப் பயிற்சி யிலடங்கிய மனமானது ஆத்மாவிலேயே நிலை நிற்கிறதோ I
அப்பொழுது மேலும் தன்னில் தன்னைக் கண்டு தன்னிலேயே மகிழவடைந்திருக்கின்றானே II

——–

21. ஸுகமாத்யந்திகம் யத்தத்புத்திக்ராஹ்யமதீந்த்ரியம்
வேத்தி யத்ர ந சைவாயம் ஸ்திதஸ்சலதி தத்த்வத​:

அதீந்த்ரியம்-புலன்களைக் கடந்து நிற்பதும்,
புத்திக்ராஹ்யம்-புத்தியால் தீண்டத்தக்கதும்,
யத் ஆத்யந்திகம் ஸுகம்-எந்த முடிவற்ற பேரின்பத்தை,
தத் யத்ர வேத்தி-அதை எங்கு காண்பானோ,
யத்ர ஸ்தித-எங்கு நிலைபெறுவதால்,
தத்த்வத​: ந ஏவ சலதி-இவன் உண்மையினின்றும் வழுவுவதில்லையோ.

புத்தியால் தீண்டத்தக்கதும், புலன்களைக் கடந்து நிற்பதுமாகிய பேரின்பத்தை எங்குக் காண்பானோ, எங்கு நிலைபெறுவதால் இவன் உண்மையினின்றும் வழுவுவதில்லையோ,

———-

22. யம் லப்த்வா சாபரம் லாபம் மந்யதே நாதிகம் தத​:
யஸ்மிந்ஸ்திதோ ந து​:கேந குருணாபி விசால்யதே

யம் லாபம் லப்த்வா-எதனை யெய்தியபின்,
தத: அபரம் அதிகம் ந மந்யதே ச-அதைக் காட்டிலும் பெரிய லாபம் வேறிருப்பதாகக் கருத மாட்டானோ,
யஸ்மிந் ஸ்தித:-எங்கு நிலை பெறுவதால்,
குருணா து​:கேந அபி-பெரிய துக்கத்தாலும்,
ந விசால்யதே-சலிப்பெய்த மாட்டானோ.

எதனை யெய்தியபின் அதைக் காட்டிலும் பெரிய லாபம் வேறிருப்பதாகக் கருத மாட்டானோ,
எங்கு நிலை பெறுவதாய் பெரிய துக்கத்தாலும் சலிப்பெய்த மாட்டானோ,

மேலுமெதை யடைந்த பின் வேறு லாபத்தை அதிக மென்று எண்ணுவதில்லையோ ,எதில்- I
நிலைத்து நின் றவன் மிகப் பெரியதான துக்கத்தாலு மசைக்கப் படுவதில்லையோ

23. தம் வித்யாத்து​:கஸம்யோகவியோகம் யோகஸம்ஜ்ஞிதம்
ஸ நிஸ்சயேந யோக்தவ்யோ யோகோऽநிர்விண்ணசேதஸா

து​:க ஸம்யோக வியோகம்-துன்பத்துடன் கலத்தலை விடுதலை,
தம் யோகஸம்ஜ்ஞிதம்-அந்நிலையே யோக நிலையென்று,
வித்யாத்-உணர்,
ஸ யோக:-அந்த யோகத்தை,
அநிர்விண்ணசேதஸா-உள்ளத்தில் ஏக்கமின்றி,
நிஸ்சயேந யோக்தவ்ய:-உறுதியுடன் பற்றி நிற்கக் கடவன்.

அந்நிலையே துன்பத்துடன் கலத்தலை விடுதலாகிய யோக நிலையென்று உணர்.
உள்ளத்தில் ஏக்கமின்றி உறுதியுடன் அந்த யோகத்தை ஒருவன் பற்றி நிற்கக் கடவன்.

துக்கத்தின் சேர்க்கை யிலிருந்து பிரிதல் யோகமென்று சொல்லப்ப டுவதாயறிக I
தளர்விலா சித்தத்துடனும் உறுதியான மனதுடனும் அவ்யோகத்தைப் பயில வேண்டும் II

———-

24. ஸங்கல்பப்ரபவாந்காமாம்ஸ்த்யக்த்வா ஸர்வாநஸேஷத​:
மநஸைவேந்த்ரியக்ராமம் விநியம்ய ஸமந்தத​:

ஸங்கல்பப்ரபவாந்-சங்கல்பத்தினின்றும் எழும்,
ஸர்வாந் காமாந் அஸேஷத​: த்யக்த்வா-எல்லா விருப்பங்களையும் மிச்சமற துறந்துவிட்டு,
மநஸா இந்த்ரியக்ராமம் ஸமந்தத​: ஏவ விநியம்ய-மனதினால் இந்திரியக் குழாத்தைக் கட்டுப்படுத்தி.

சங்கல்பத்தினின்றும் எழும் எல்லா விருப்பங்களையும் மிச்சமறத் துறந்துவிட்டு,
எல்லாப் பக்கங்களிலும் மனத்தால் இந்திரியக் குழாத்தைக் கட்டுப்படுத்தி,

சங்கல்பத் தினின்று தோன்றிய ஆசை களனைத்தையும் மிச்சமில்லாமல் துறந்தும் I
மனத்தினால் புலக் கூட்டத்தை யெல்லாம-னைத் துப்பக் கத்தினின்றும் நன் கடக்கிப்

25. ஸநை​: ஸநைருபரமேத்புத்த்யா த்ருதிக்ருஹீதயா
ஆத்மஸம்ஸ்தம் மந​: க்ருத்வா ந கிஞ்சிதபி சிந்தயேத்

ஸநை​: ஸநை: உபரமேத்- மெல்ல மெல்ல ஆறுதல் பெறச் செய்து,
த்ருதி க்ருஹீதயா புத்த்யா-துணிந்த மதியுடன்,
மந​: ஆத்மஸம்ஸ்தம் க்ருத்வா-மனதை ஆத்மாவில் நிறுத்தி,
கிஞ்சித் அபி ந சிந்தயேத்-எதற்கும் கவலையுறாதிருக்கக் கடவன்.

துணிந்த மதியுடன் மனதை ஆத்மாவில் நிறுத்தி மெல்ல மெல்ல ஆறுதல் பெறக் கடவான்;
எதற்கும் கவலை யுறாதிருக்கக் கடவன்.

பகுத்தறிவுடன் கூடிய புத்தியினால் மனதை யாத்மாவில் நிலை நிற்கச் செய்து I
மெது மெதுவா யொடுங்கச் செய்ய வேண்டும், வேறெதையுமே சிந்திக்கா திருந்தவாறே II

———

26. யதோ யதோ நிஸ்சரதி மநஸ்சஞ்சலமஸ்திரம்
ததஸ்ததோ நியம்யைததாத்மந்யேவ வஸம் நயேத்

யத: யத:-எங்கெங்கே,
எதத் அஸ்திரம்-இந்த நிலையில்லாத,
சஞ்சலம் மந: நிஸ்சரதி -சஞ்சலமான மனம் அலைகிறதோ,
தத: தத: நியம்ய-அங்கங்கே அதைக் கட்டுப்படுத்தி,
ஆத்மநி ஏவ வஸம் நயேத்-ஆத்மாவுக்கு வசமாக்கிக் கொள்க.

எங்கெங்கே மனம் சஞ்சலமாய் உறுதியின்றி உழலுகிறதோ, அங்கங்கே அதைக்
கட்டுப்படுத்தி ஆத்மாவுக்கு வசமாக்கிக் கொள்க.

மனமானது யுறுதி யற்று மெக் காரணத்தினால் எதனெதனி டத்திலேய வைகின்றதோ I
அதனதனி டத்திலிருந்த ழைத்து வந்து ஆத்மாவினி டத்திலே யிருக்கச் செய்வாயாக II

————

27. ப்ரஸாந்தமநஸம் ஹ்யேநம் யோகிநம் ஸுகமுத்தமம்
உபைதி ஸாந்தரஜஸம் ப்ரஹ்மபூதமகல்மஷம்

ஹி ப்ரஸாந்தமநஸம்-ஏனெனில் மனம் சாந்தமாக,
அகல்மஷம் ஸாந்தரஜஸம்-மாசு நீங்கி, ரஜோ குணம் ஆறி,
ப்ரஹ்ம பூதம்-பிரம்மமேயாகிய,
ஏநம் யோகிநம்-இந்த யோகிக்கு,
உத்தமம் ஸுகம் உபைதி-மிகச் சிறந்த இன்பம் கிடைக்கிறது.

மனம் சாந்தமாய், ரஜோ குணம் ஆறி, மாசு நீங்கி, பிரம்மமேயாகிய இந்த யோகிக்கு
மிகச் சிறந்த இன்பம் கிடைக்கிறது.

ஆழ்அமைதி யுள்ள மன முடையோனும் ரஜோ குண வேகம் தணிந்து பாவ தோஷங்- I
களற்றவனும் பிரம்மமாய்த் தனை யறியும் இந்த யோகியை உத்தம சுகம் சேர்கின்றதே II

———-

28. யுஞ்ஜந்நேவம் ஸதாத்மாநம் யோகீ விகதகல்மஷ​:
ஸுகேந ப்ரஹ்மஸம்ஸ்பர்ஸமத்யந்தம் ஸுகமஸ்நுதே

விகதகல்மஷ​:-குற்றங்களைப் போக்கி,
ஏவம் ஸதா ஆத்மாநம் யுஞ்ஜந்-இங்ஙனம் எப்போதும் ஆத்மாவில் கலப்புற்றிருப்பானாயின்,
ப்ரஹ்ம ஸம்ஸ்பர்ஸம்-(அந்த யோகி) பிரம்மத்தைத் தொடுவதாகிய,
அத்யந்தம் ஸுகம்-மிக உயர்ந்த இன்பத்தை,
ஸுகேந ஸுகம் அஸ்நுதே-எளிதில் துய்க்கிறான்.

குற்றங்களைப் போக்கி இங்ஙனம் எப்போதும் ஆத்மாவில் கலப்புற்றிருப்பானாயின்,
அந்த யோகி பிரம்மத்தைத் தொடுவதாகிய மிக உயர்ந்த இன்பத்தை எளிதில் துய்க்கிறான்.

இவ்விதமே யெப்போதும் தன்னை யிணைத்துக் கொண் டவப் பாவங்களற்ற யோகியானவன் I
பிரம்மத்தி லொன்று படுவதால் தோன்றும் அளவற்ற ஆனந்தத்தை யடைகின் றானே II

—————

29. ஸர்வபூதஸ்தமாத்மாநம் ஸர்வபூதாநி சாத்மநி
ஈக்ஷதே யோகயுக்தாத்மா ஸர்வத்ர ஸமதர்ஸந​:

யோகயுக்தாத்மா-யோகத்தில் கலந்தவன்,
ஸர்வத்ர ஸமதர்ஸந​:-எங்கும் சமப் பார்வை யுடையவனாய்,
ஸர்வபூதாநி ஆத்மாநம்-எல்லா உயிர்களிடத்தும் தானிருப்பதையும்,
ஆத்மநி ச ஸர்வபூதாநி-தன்னுள் எல்லா உயிர்களுமிருப்பதையும், ஈக்ஷதே-காணுகிறான்.

யோகத்தில் கலந்தவன் எங்கும் சமப் பார்வையுடையவனாய், எல்லா உயிர்களிடத்தும் தானிருப்பதையும், தன்னுள் எல்லா உயிர்களுமிருப்பதையும் காணுகிறான்.

ஆத்ம யோகத்தில் மனமொடுங்கியவனும் எல்லாவற்றிலும் சமநோக்குடனிருப்போனும் I
தன்னிலே அசையு மசையாவனைத் துயிர்களையும் மேலும் தன்னை யெல்லா வுயிர்களிலும் காண்கிறான் II

—————-

30. யோ மாம் பஸ்யதி ஸர்வத்ர ஸர்வம் ச மயி பஸ்யதி
தஸ்யாஹம் ந ப்ரணஸ்யாமி ஸ ச மே ந ப்ரணஸ்யதி

ய: ஸர்வத்ர மாம் பஸ்யதி-எவன் எங்கும் என்னைக் காண்கிறானோ,
ஸர்வம் ச மயி பஸ்யதி-எல்லாப் பொருள்களையும் என்னிடத்தே காண்கிறானோ,
தஸ்ய அஹம் ந ப்ரணஸ்யாமி-அவனுக்கு நான் காணப் படாமல் போவதில்லை,
ஸ ச மே ந ப்ரணஸ்யதி-எனக்கும் அவன் காணப் படாமல் போவதில்லை.

எவன் எங்கும் என்னைக் காண்கிறானோ, எல்லாப் பொருள்களையும் என்னிடத்தே காண்கிறானோ, அவனுக்கு நான் அழியமாட்டேன்; எனக்கவன் அழியமாட்டான்.

31. ஸர்வபூதஸ்திதம் யோ மாம் பஜத்யேகத்வமாஸ்தித​:
ஸர்வதா வர்தமாநோऽபி ஸ யோகீ மயி வர்ததே

ய: ஏகத்வம் ஆஸ்தித-எவன் ஒருமையில் நிலைகொண்டவனாக,
ஸர்வபூதஸ்திதம்-எல்லா உயிர்களிடத்திலுமுள்ள,
மாம் பஜதி-என்னைத் தொழுவோன்,
ஸ யோகீ:-அந்த யோகி
ஸர்வதா வர்தமாந அபி-யாங்கணும் சென்றபோதிலும்,
மயி வர்ததே-என்னுள்ளேயே செயல் பட்டுக் கொண்டிருக்கிறான்.

ஒருமையில் நிலைகொண்டவனாய் எல்லா உயிர்களிடத்திலுமுள்ள என்னைத் தொழுவோன், யாங்கணும் சென்ற போதிலும், அந்த யோகி என்னுள்ளேயே இயலுகிறான்.

எவன் அதனத்துயிர்களிலு முறையும் என்னை ஒன்றே யென எண்ணி நிலை நின்று I
எனையே தொழுகின்றானோ அந்த யோகீயானவன் எப்பாங்கி லிருப்பினு மென்னிடத்தே யுளன் II

—————-

32. ஆத்மௌபம்யேந ஸர்வத்ர ஸமம் பஸ்யதி யோऽர்ஜுந
ஸுகம் வா யதி வா து​:கம் ஸ யோகீ பரமோ மத​:

அர்ஜுந ய:-அர்ஜுனா! எந்த யோகி,
யதி ஸுகம் வா து​:கம் வா-இன்பமாயினும், துன்பமாயினும்,
ஸர்வத்ர ஆத்ம ஒளபம்யேந-எல்லாவற்றிலும்/எல்லாவற்றையும் தன்னைப் போலவே,
ஸமம் பஸ்யதி-சமமாக பார்க்கிறானோ,
ஸ: பரம யோகீ மத​:-அவன் பரமயோகியாகக் கருதப்படுவான்.

இன்பமாயினும், துன்பமாயினும் எதிலும் ஆத்ம சமத்துவம் பற்றி சமப் பார்வை செலுத்துவானாயின், அவன் பரமயோகியாகக் கருதப்படுவான்.

எவன் தன்னை உவமையா யெண் ணி, அர்ஜுனா! எப்பொழுதும் சுகத்தையும் துக்கத்தையும் I
அனைத்திலும் சமமாய்க் காண்கின்றானோ அந்த யோகி மேலோனெனக் கருதப்படுகிறான் II

————

அர்ஜுந உவாச

33. யோऽயம் யோகஸ்த்வயா ப்ரோக்த​: ஸாம்யேந மதுஸூதந
ஏதஸ்யாஹம் ந பஸ்யாமி சஞ்சலத்வாத்ஸ்திதிம் ஸ்திராம்

அர்ஜுந உவாச-அர்ஜுனன் சொல்லுகிறான்,
மதுஸூதந!-மதுசூதனா,
அயம் யோக ஸாம்யேந-இந்த யோகம் சம பாவனையோடு கூடியதென்று,
ய: த்வயா ப்ரோக்த​:-எது உங்களால் சொல்லப் பட்டதோ,
ஏதஸ்ய ஸ்திராம் ஸ்திதிம்-அந்த யோகத்தினுடைய உறுதியான இருப்பை,
சஞ்சலத்வாத் அஹம் ந பஸ்யாமி-எனது சஞ்சலத் தன்மையால் எனக்குத் தோன்றவில்லை.

அர்ஜுனன் சொல்லுகிறான்: மதுசூதனா, இங்ஙனம் நீ சமத்துவத்தால் ஏற்படுவதாகச் சொல்லிய யோகம், ஸ்திரமான நிலையுடையதாக எனக்குத் தோன்றவில்லை, எனது சஞ்சலத் தன்மையால்.

“அர்ஜுனன் புகன்றான்”
மதுசூதனா! சமமாய்க் காணுதலெனும் இந்த யோகம் உம்மால் உபதேசிக்கப்பட்ட- I
இதற்கு நிலையாயுள்ள இருப்பை யான் மனச் சஞ்சலத்தினால் காண்கிறேனில்லை I

———

34. சஞ்சலம் ஹி மந​: க்ருஷ்ண ப்ரமாதி பலவத்த்ருடம்
தஸ்யாஹம் நிக்ரஹம் மந்யே வாயோரிவ ஸுதுஷ்கரம்

ஹி க்ருஷ்ண-ஏனெனில் கண்ணா!
மந​: சஞ்சலம்-மனம் சஞ்சலமுடையது,
ப்ரமாதி-தவறும் இயல்பினது,
பலவத் த்ருடம்-வலியது; உரனுடையது,
தஸ்ய நிக்ரஹம் வாயு: இவ-அதைக் கட்டுப்படுத்துதல் காற்றைக் கட்டுவது போல்,
ஸுதுஷ்கரம் அஹம் மந்யே-மிகவும் கஷ்டமான செய்கையென்று நான் நினைக்கிறேன்.

கண்ணா, மனம் சஞ்சலமுடையது; தவறும் இயல்பினது, வலியது; உரனுடையது. அதைக் கட்டுப்படுத்துதல் காற்றைக் கட்டுவது போல் மிகவும் கஷ்டமான செய்கையென்று நான் மதிக்கிறேன்.

கிருஷ்ணா! மனமலையும் தன்மை யானதன்றோ கலக்கமும்,வலிமையும் திண்மையு மானதன்றோ ? I
அதனை யடக்குதல் காற்றை அடக்குவது- போல் கடின மானதென நானெண் ணுகிறேன் II

ஸ்ரீ பகவாநுவாச

35. அஸம்ஸயம் மஹாபாஹோ மநோ துர்நிக்ரஹம் சலம்
அப்யாஸேந து கௌந்தேய வைராக்யேண ச க்ருஹ்யதே

ஸ்ரீபகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்,
மஹாபாஹோ-பெருந் தோளாய்,
அஸம்ஸயம் மந: சலம்-ஐயமின்றி மனம் சலனமுடையதுதான்,
துர்நிக்ரஹம் து-கட்டுதற்கரியது தான்,
கௌந்தேய! அப்யாஸேந வைராக்யேண ச-குந்தியின் மகனே! பழக்கத்தாலும், வைராக்கியத்தாலும்,
க்ருஹ்யதே-வசப் படுத்தப் படுகிறது.

ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: பெருந்தோளாய், மனம் கட்டுதற்கரியதுதான். சலனமுடையதுதான்; ஐயமில்லை. ஆனால் குந்தியின் மகனே, அதைப் பழக்கத்தாலும், விருப்பமின்மையாலும் கட்டி விடலாம்.

ஸ்ரீபகவான் பகர்ந்தார்”
பெருந்தோளா! ஐயமில்லை மனதின் தன்மை அடக்குதற் கரிது மலைவதும் தான் I
குந்திமகனே ! தொடர் பயிற்சியாலும் வைராக்யத்தாலு மடக்கவியலுமே II

—————

36. அஸம்யதாத்மநா யோகோ துஷ்ப்ராப இதி மே மதி​:
வஸ்யாத்மநா து யததா ஸக்யோऽவாப்துமுபாயத​:

அஸம்யத ஆத்மநா-தன்னைக் கட்டாதவன்,
யோக: துஷ்ப்ராப-யோக மெய்துதல் அரிது,
து வஸ்ய ஆத்மநா யததா உபாயத​:- தன்னைக் கட்டியவன் முயற்சியாலும் உபாயத்தாலும்,
அவாப்தும் ஸக்ய:-யோகத்தை அடைவதும் சாத்தியமானது,
இதி மே மதி​:-என்று நான் கருதுகிறேன்.

தன்னைக் கட்டாதவன் யோக மெய்துதல் அரிதென்று நான் கருதுகிறேன்.
தன்னைக் கட்டியவன் முயற்சியாலும் உபாயத்தாலும் அதை எய்த வல்லான்.

மனதை யடக்காதவனால் யோகமடைய வியலாது என்பதென் கருத்து,மற்றும் I
மனதை யடக்கியவன் உபாயத்தாலும் முயற்சி செய்வதாலு மடைய வியலுமே II

—————-

அர்ஜுந உவாச

37. அயதி​: ஸ்ரத்தயோபேதோ யோகாச்சலிதமாநஸ​:
அப்ராப்ய யோகஸம்ஸித்திம் காம் கதிம் க்ருஷ்ண கச்சதி

அர்ஜுந உவாச-அர்ஜுனன் சொல்லுகிறான்,
ஸ்ரத்தயா உபேத:-யோகத்தில் சிரத்தை உள்ளவனாக இருந்தும்,
அயதி​: யோகாத் சலிதமாநஸ​:- தன்னைக் கட்டாமையால் யோகத்தினின்றும் மனம் வழுவி, யவன்
யோக ஸம்ஸித்திம் அப்ராப்ய-யோகத்தில் தோற்றுப் போய்,
காம் கதிம் கச்சதி க்ருஷ்ண!-என்ன கதியடைகிறான் கண்ணா!

அர்ஜுனன் சொல்லுகிறான்: நம்பிக்கையுடையோ னெனினும், தன்னைக் கட்டாமையால் யோகத்தினின்றும் மனம் வழுவியவன், யோகத்தில் தோற்றுப் போய், அப்பால் என்ன கதியடைகிறான், கண்ணா?

“அர்ஜுனன் புகன்றான்”
கிருஷ்ணா! சிரத்தை யுடையோனாயினும் முயற்சி யிலாதவனால் யோகத்தினின்றும் I
நழுவிய மனமுடையோன் யோகம் முழுமை பெறாமல் எக் கதியினை அடைகின்றான் II

————–

38. கச்சிந்நோபயவிப்ரஷ்டஸ்சிந்நாப்ரமிவ நஸ்யதி
அப்ரதிஷ்டோ மஹாபாஹோ விமூடோ ப்ரஹ்மண​: பதி

மஹாபாஹோ ப்ரஹ்மண​:-பெருந்தோளாய்! பிரம்மத்தை அடைகின்ற,
பதி விமூடோ-மார்க்கத்தில் வழி தெரியாமல் மயங்கி,
அப்ரதிஷ்ட:-உறுதியற்றவனாக,
உபய விப்ரஷ்ட-இரண்டுங் கெட்டவனாக,
சிந்ந அப்ரம் இவ-உடைந்த மேகம்போல்,
கச்சித் ந நஸ்யதி-அழிந்து போக மாட்டானா?

ஒருவேளை அவன் இரண்டுங் கெட்டவனாய், உடைந்த மேகம்போல் அழிகிறானோ?
பெருந்தோளாய், உறுதியற்றவனாய், பிரம்ம நெறியிலே குழப்பமெய்திய மூடன் யாதாகிறான்?

பெருந்தோளாய் பிரம்மப் பாதையில் மதி மயங்கியவன், நிலை பெறாது இரண்டு- I
பாதையிலிருந்தும் வழுவியே சிதறுண்ட மேகம் போலல்லவா அழிவடைகின்றான் II

—————

39. ஏதந்மே ஸம்ஸயம் க்ருஷ்ண சேத்துமர்ஹஸ்யஸேஷத​:
த்வதந்ய​: ஸம்ஸயஸ்யாஸ்ய சேத்தா ந ஹ்யுபபத்யதே

க்ருஷ்ண! மே ஏதத் ஸம்ஸயம்-கண்ணா! எனக்குள்ளே இந்த ஐயத்தை,
அஸேஷத​: சேத்தும் அர்ஹஸி-மீதமின்றி போக்க (நீயே) தகுதியானவன்,
ஹி அஸ்ய ஸம்ஸயஸ்ய சேத்தா-ஏனெனில் இந்த சந்தேகத்தை போக்குபவர்,
த்வத் அந்ய​: உபபத்யதே-நின்னையன்றி வேறெவருமிலர்.

கண்ணா, எனக்குள்ளே இந்த ஐயத்தை நீ அறுத்து விடுக. நின்னையன்றி
இந்த ஐயத்தை யறுப்போர் வேறெவருமிலர்.

ஹே கிருஷ்ணா! எனதிந்த ஐயத்தை யறவே விலக்கு வதற்குத் தகுதியானவர் நீரே I
தங்களைக் காட்டிலும் இவ் ஐயத்தை நீக்குபவர் நிச்சயமாய் வேறு ஓருவரில்லையே II

———–

ஸ்ரீபகவாநுவாச

40. பார்த நைவேஹ நாமுத்ர விநாஸஸ்தஸ்ய வித்யதே
ந ஹி கல்யாணக்ருத்கஸ்சித்துர்கதிம் தாத கச்சதி

ஸ்ரீபகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்,
பார்த-பார்த்தா,
தஸ்ய இஹ விநாஸ ந வித்ய,தே-அவனுக்கு இவ்வுலகிலும் அழிவில்லை,
அமுத்ர ஏவ ந-மேலுலகத்திலும் இல்லை,
தாத-பிரியமானவனே (மகனே!),
ஹி கல்யாணக்ருத்-ஏனெனில் ஆன்மீக மேம்பாட்டிற்காக,
கஸ்சித் துர்கதிம் ந கச்சதி-எவனும் கெட்ட கதியடைய மாட்டான்.

ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: பார்த்தா, அவனுக்கு இவ்வுலகிலும், மேலுலகத்திலும் அழிவில்லை; மகனே, நன்மை செய்வோன் எவனும் கெட்ட கதியடைய மாட்டான்.

“ஸ்ரீபகவான் பகர்ந்தார்”
பார்த்தனே ! அவனுக்கு இம்மையிலும் அழிவில்லை , அழிவில்லையே மறுமையிலும் I
மகனே !நன்மையைச் செய்பவரெவரும் அடையார் துன்ப கதியை நிச்சயமாய் II

———-

41. ப்ராப்ய புண்யக்ருதாம் லோகாநுஷித்வா ஸாஸ்வதீ​: ஸமா​:
ஸுசீநாம் ஸ்ரீமதாம் கேஹே யோகப்ரஷ்டோऽபிஜாயதே

யோகப்ரஷ்ட:-யோகத்தில் தவறியவன்,
புண்யக்ருதாம் லோகாந் ப்ராப்ய-புண்ணியம் செய்வோரின் உலகங்களை யெய்தி,
ஸாஸ்வதீ​: ஸமா​: ஊஷித்வா-அங்கு கணக்கில்லாத வருஷங்கள் வாழ்ந்து,
ஸுசீநாம் ஸ்ரீமதாம் கேஹே-தூய்மையுடைய செல்வர்களின் வீட்டில்
அபிஜாயதே-பிறக்கிறான்.

யோகத்தில் தவறியவன், புண்ணியம் செய்வோரின் உலகங்களை யெய்தி, அங்கு
கணக்கில்லாத வருஷங்கள் வாழ்ந்து, தூய்மையுடைய செல்வர்களின் வீட்டில் பிறக்கிறான்.

யோகத்தினின்று வழுவியவன் புண்ணியம் செய்தோருலகங்களை யடைந்து நெடிது காலம்- I
வாழ்ந்த பின், ஆசாரமுடன் கூடிய செல்வர்களி னில்லத்திலே பிறக்கின்றான் II

———-

42. அதவா யோகிநாமேவ குலே பவதி தீமதாம்
ஏதத்தி துர்லபதரம் லோகே ஜந்ம யதீத்ருஸம்

அதவா தீமதாம் யோகிநாம்-அல்லது, புத்திமான்களாகிய யோகிகளின்,
குலே ஏவ பவதி-குலத்திலேயே பிறக்கிறான்,
ஈத்ருஸம் யத் எதத் ஜன்ம-இதுபோன்ற பிறவியெய்துதல்
ஹி லோகே துர்லபதரம்-ஐயமின்றி மிகவும் அரிது.

அல்லது, புத்திமான்களாகிய யோகிகளின் குலத்திலேயே பிறக்கிறான்.
இவ்வுலகில் இதுபோன்ற பிறவியெய்துதல் மிகவும் அரிது.

அல்லதிவன் அறிவாளிகளாம் யோகிகளி னில்லத்தில் பிறக்கின்றான், இவ்விதமான I
பிறப்பானது எதுவோ ,அது உலகத்தில் நிச்சயம் அடைவதற் கரிதானதாகுமே II

———-

43. தத்ர தம் புத்திஸம்யோகம் லபதே பௌர்வதேஹிகம்
யததே ச ததோ பூய​: ஸம்ஸித்தௌ குருநந்தந

தத்ர தம் பௌர்வதேஹிகம்-அங்கே அவன் பூர்வ சரீரத்துக்குரிய,
புத்தி ஸம்யோகம்-புத்தியைப் பெறுகிறான்,
குருநந்தந-குருநந்தனா, தத: பூய​: ஸம்ஸித்தௌ-அப்பால் அவன் மறுபடியும் வெற்றிக்கு,
யததே-முயற்சி செய்கிறான்.

அங்கே அவன் பூர்வ சரீரத்துக்குரிய புத்தியைப் பெறுகிறான். குருநந்தனா, அப்பால்
அவன் மறுபடியும் வெற்றிக்கு முயற்சி செய்கிறான்.

குரு நந்தனா! முற்பிறவி தேகத்திலடைந்த யோக புத்தியை இப்பிறவியி லடைகின் றான் I
மேலுமே அதை விட அதிகமாய் முயற்சியைச் செய்கிறான் யோக புத்தி முழுமை பெறவே II

———

44. பூர்வாப்யாஸேந தேநைவ ஹ்ரியதே ஹ்யவஸோऽபி ஸ​:
ஜிஜ்ஞாஸுரபி யோகஸ்ய ஸப்தப்ரஹ்மாதிவர்ததே

ஸ: அவஸ:-அவன் தன் வசமின்றியும்,
தேந பூர்வாப்யாஸேந ஏவ ஹ்ரியதே-பண்டைப் பழக்கத்தால் இழுக்கப்படுகிறான்,
யோகஸ்ய ஜிஜ்ஞாஸு அபி-யோகத்தை அறிய வேண்டுமென்று விரும்பவன் கூட,
ஸப்த ப்ரஹ்ம-ஒருவன் ஒலியுலகத்தைக் (வேதத்தையும்) கடந்து,
அதிவர்ததே-செல்லுகிறான்.

பண்டைப் பழக்கத்தால் அவன் தன் வசமின்றியும் இழுக்கப்படுகிறான். யோகத்தை அறிய வேண்டுமென்ற விருப்பத்தாலேயே ஒருவன் ஒலியுலகத்தைக் கடந்து செல்லுகிறான்.

அவன் தன் முயற்சியின்றியே முற்பிறவி அப்யாஸத் தாலிழுக்கப் படுகின் றானே I
யோக தத்துவ மறிய முயல்பவனும் கூட வேத கர்ம பாகத்தைக் கடக்கின்றானே II

———-

45. ப்ரயத்நாத்யதமாநஸ்து யோகீ ஸம்ஸுத்தகில்பிஷ​:
அநேகஜந்மஸம்ஸித்தஸ்ததோ யாதி பராம் கதிம்

ஸம்ஸுத்த கில்பிஷ​:-பாவம் நீங்கியவனாய்,
து ப்ரயத்நாத் யதமாந-முழு முயற்சியுடன் பயிற்சி செய்யும்,
யோகீ அநேகஜந்ம ஸம்ஸித்த:-யோகி பல பிறவிகளின் வெற்றிப் பயனாகிய
தத: பராம் கதிம் யாதி-அக்கணமே பரகதியை அடைகிறான்.

பாவம் நீங்கியவனாய், ஊன்றி முயல்வானேயாயின், யோகி பல பிறவிகளின்
வெற்றிப் பயனாகிய பரகதியை அப்போதடைகிறான்.

ஆனால் முழு முயற்சி யுடைய யோகியோ பாவங்கள் நீங்கிப் புனிதனாயாகியே I
பல பிறவிகளில் பக்கு வமடைந்தே அதனால் மேலாம் கதியை யடைகின்றானே
II

———

46. தபஸ்விப்யோऽதிகோ யோகீ ஜ்ஞாநிப்யோऽபி மதோऽதிக​:
கர்மிப்யஸ்சாதிகோ யோகீ தஸ்மாத்யோகீ பவார்ஜுந

யோகீ தபஸ்விப்ய: அதிக​:- யோகி தவஞ் செய்வோரைக் காட்டிலும் சிறந்தோன்,
ஜ்ஞாநிப்ய: அபி அதிக​: மத:-ஞானிகளிலும் அவன் சிறந்தோனாக கருதப்படுகிறான்,
ச கர்மிப்ய: யோகீ அதிக​:-கர்மிகளிலும் அவன் சிறந்தோன்,
தஸ்மாத் யோகீ பவ அர்ஜுந!-ஆதலால், அர்ஜுனா, யோகியாகுக.

தவஞ் செய்வோரைக் காட்டிலும் யோகி சிறந்தோன்; ஞானிகளிலும் அவன் சிறந்தோனாகக் கருதப்படுகிறான்; கர்மிகளிலும் அவன் சிறந்தோன்; ஆதலால், அர்ஜுனா, யோகியாகுக.

தவமுடை யோரினும் யோகீ மேலானவன் வேதமறிந் தோரினும் யோகீ மேலானவன் I
செயல் புரிவோரினும் யோகீ மேலானவனே ஆதலால் யோகீ யாவாய் நீ அர்ஜுனா! II

——–

47. யோகிநாமபி ஸர்வேஷாம் மத்கதேநாந்தராத்மநா
ஸ்ரத்தாவாந்பஜதே யோ மாம் ஸ மே யுக்ததமோ மத​:

ய: ஸ்ரத்தாவாந்-எவனொருவன் சிரத்தையுடைய யோகியோ,
மத்கதேந அந்ராத்மநா -என்னிடம் ஈடுபாடு கொண்ட உள்ளத்தால்,
மாம் பஜதே-என்னை போற்றுகிறானோ,
ஸ: மே யுக்ததம மத​:-அந்த யோகியே மேலான யோகியென்பது என்னுடைய கொள்கை.

மற்றெந்த யோகிகளெல்லாரிலும், எவனொருவன் அந்தராத்மாவில் என்னைப் புகுத்தி என்னை நம்பிக்கையுடன் போற்றுகிறானோ அவன், மிக மேலான யோகியென்பது என்னுடைய கொள்கை.

எவன் முழு நம்பிக்கை யுடனும்,சித்தம் என் பால் லயித்துமுள்ளோன் தியானத்தால்- I
என்னைத் தொழுகின்றானோ ,அவன் யோகிகளில் எல்லாம் சிறந்தோன் என்பதென் கருத்து II

—————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading