10-1-தாள தாமரைத் தட மணி வயல் திரு மோகூர்-ப்ரவேஸம்-
முதல் பத்தால் -பகவத் விஷயம் -புருஷார்த்தம் -என்று அறுதி இட்டார் –
இரண்டாம் பத்தால் -அந்த கைங்கர்யத்தில் களை அறுத்தார் –
மூன்றாம் பத்தால் -களை அறுக்கப் பட்ட அந்த கைங்கர்யமானது பாகவத சேஷத்வ பர்யந்தமான பகவத் கைங்கர்யம் -என்றார்
நான்காம் பத்தால் -இப்படிப் பட்ட கைங்கர்யத்துக்கு விரோதிகள் ஐஸ்வர்ய கைவல்யங்கள் -என்றார் –
ஐந்தாம் பத்தால் -அந்த விரோதிகளைப் போக்குவானும் அவனே என்றார்
ஆறாம் பத்தால் -விரோதிகளை அழிக்கும் தன்மையான சர்வேஸ்வரன் திருவடிகளிலே சரணம் புக்கார் –
ஏழாம் பத்தால் – இப்படி பெரிய பிராட்டியார் முன்னிலையாக சரணம் புக்க இடத்திலும்
தக்தபட நியாயம் போலே சம்சாரம் தொடருகிறபடியை கண்டு நோவு பட்டார் –
எட்டாம் பத்தால் -இப்படி பிரபன்னராய் இருக்கச் செய்தே தக்தபட நியாயம் போலே நம்மை விடாமல் தொடருகிறது
நம்முடைய ஆத்மாவிலும் ஆத்மா உடன் சம்பந்தப் பட்ட-பொருள்களிலும்-நசை அறாத படியாலே -என்று பார்த்து அவற்றில் ஒரு நசை இல்லை என்றார் –
ஒன்பதாம் பத்தால் -இப்படி நசை அற்ற பின்பும் பாதுகாவாமல் ஒழிவான் என் -என்று ஐயம் கொள்ள –
நான் நாராயணன்-எல்லா ஆற்றலோடும் கூடினவன்-உம்முடைய விருப்பங்கள் அனைத்தையும் செய்து முடிக்கிறேன்
என்று அருளிச் செய்ய -அவனுடைய சீல குணத்தில் ஆழம் கால் பட்டார்
ஆழ்வார் உடைய பதற்றத்தைக் கண்டு-திரு மோகூரிலே-தங்கு வேட்டையாய் வந்து தங்கி
இவருக்கு அர்ச்சிராதி கதியையும் காட்டி இவருடைய விருப்பத்தை நிறைவேற்றின படியை-அருளிச் செய்கிறார் இந்தப் பத்தாம் பத்தால் –
–பக்தி பாரவஸ்யத்தையால் -அர்ச்சையிலே சரணா கதி பண்ணி
திருக் கண்ண புரம் பெருமாள் வார்த்தை அருளி –
திரு மோகூர் –ஆப்தன் வழித்துணை -யாய் இருப்போம் –
திரு வனந்த புரத்தில் -கூட்டிச் சென்று உமக்கு – சாம்யம் காட்டுவோம் –
திரு வாட்டாற்றில் ஆதி கேசவ பெருமாள் -எம் விதி வகை யே -கச்ச லோக -பெருமாள் சொன்னால் போலே –ஆணை இடுவோம் –
திருப் பேர் நகரில் -அப்பால ரெங்கன் ஸ்வாமித்வம் நாம் என்று ஏற்போம் –
திருமால் இரும் சோலை மலையிலே சரீர ஆதார அதிசயம் காட்டுவோம் –
மேலே ஸ்ரீ வைகுந்தம் கூட்டிப் போவோம் –
ஈரரசு ஆகாமல் -அது நமது விதி வகையே –
செஞ்சொல் கவிகாள் உயிர் காத்து ஆட் செய்மின் -என்றும்
மங்க ஒட்டு உன் மா மாயை -ஆழ்வார் களுக்கும் அவனுக்கும் -நாலு ஆறும் – உபதேசித்து –
பத்தாம் பத்தால் -ஆர்த்தி ஹரத்வம் காட்டி -அருளுகிறார் –
அவா -கடல் -குளப்படி போலே -தான் திருவடிகளில் சேர்த்துக் கொண்டு இத்தால் புகர் பெற்றான் –
அர்ச்சிராதிகதி நேராகக் கண்டு -அவன் காட்டக் கண்டு -அனுபவித்து அருளிச் செய்கிறார் –
பத்தாம் பத்தில் -கீழ்ப் பத்திலே சர்வேஸ்வரனுடைய பல ரூபத்வத்தை நிரூபித்து அருளி –
தத் அனுபவ ரூபமான பலத்தினுடைய அவாப்தி பிரகாரத்தை இப்பத்திலே நிரூபித்து அருளுவதாகக் கொண்டு –
ஆப்தனான அவனுடைய அதி சாஹாய்யத்தையும்
முன்பு யுண்டான நிரவதிக கிலேச சாந்தியைப் பண்ணும் போக்ய நாமாதி யோகத்தையும்
சம்ஸ் லிஷ்டனாய் இருக்கச் செய்தேயும் விஸ்லேஷ சங்கை பண்ணி கிலேசிக்கும் படியான சாரஸ்ய அதிசயத்தையும்
அநந்ய ஸாதனரோ பாதி உபாசகர்களுக்கும் ப்ராப்யனாம் ஆகாரத்தையும்
ச பிரகார உபாஸன பரர்க்கும் அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட ப்ராப்திகளுக்குத் தானே நிர்வாஹகன் என்னும் இடத்தையும்
ததீய சேஷத்வ பர்யந்தமாக தன்னை ஆஸ்ரயித்தாருடைய சித்த அநுவிதானம் பண்ணிக் கொண்டு பல பிரதானத்திலே அபி யுக்தனாம் படியும்
தன் பக்கல் ப்ரவணரானாருடைய சரீராதிகளையும் தான் விரும்பா நின்று கொண்டு அவர்கள் அபேக்ஷைக்காக அவற்றை விடுவிக்கும் படியையும்
யாத்ருச்சிகமான ஆனுகூல்யமே பற்றாசாக யதாவத் போக ப்ரதானாகையும்
போக ஸித்திக்கு உறுப்பான அர்ச்சிராதி மார்க்கத்தில் ஆதி வாஹிந ஸத்கார பிரதர்சனகத்தையும்
அதிசயிதையான பயபக்தி ரூபமான அபி நிவேசத்தை யுடைய தமக்கு
ஸ்ரீ யபதியான தன்னோடு உண்டான ஸ்த்திர சாயுஜ்ய ப்ரகாசத்தைப் பண்ணின படியையும்
அபரோக்ஷித்து அத்யந்த ஹ்ருஷ்டராய் அவாப்த பலராய் முடித்து அருளுகிறார் –
முதல் திருவாய் மொழியில் -கீழ் ப்ரஸ்துதமான கைங்கர்ய பிரதி சம்பதித்வம் ஒரு தேச விசேஷத்திலே பூரணமாய் இருக்கையாலே –
இந்த தேசத்தில் நின்றும் அங்கு ஏறப் போகைக்கு பாதகமான நம்முடைய விரோதியைக் கழித்து உகப்போடே
வழி நடத்திக் கொண்டு போவான் ஒரு ஸஹாய பூதன் வேணும் என்று அறுதியிட்டு திருமோகூரிலே ஸந்நிஹிதனான சர்வேஸ்வரனுடைய
நிரவதிக போக்யமான யுதார ரூபதையையும்
நித்ய அனுபாவ்யத்வ யுக்தமான திரு நாம பூர்த்தியையும்
நிகில ஜகத் ரக்ஷகத்வத்தையும்
ரக்ஷண அர்த்தமான அநந்த ஸாயித்வத்தையும்
அசேஷ ஜன சம்ச்லேஷத்தையும்
அனுபவ ப்ரீதி கரமான ஆப்தத்வத்தையும்
அகில லோக ஸ்ரஷ்ட்ருத்வத்தையும்
அவதார ப்ரயுக்த சீல சீதலத்வத்தையும்
திவ்ய அவயவ வைலக்ஷண்யத்தையும்
ஆஸ்ரித ரக்ஷணத்தில் அபீஷ்ட திவ்ய விக்ரஹ பரிக்ரஹத்தையும்
அனுசந்தித்து ஏவம் விதனான ஸர்வேஸ்வரனே நமக்கு வழித் துணையாவான் என்று
ஸ்ரீ காளமேகத்தின் திருவடிகளையே தஞ்சமாகப் பற்றி அருளுகிறார் –
———————
10-2-கெடும் இடராய வெல்லாம் கேசவா வென்ன -ப்ரவேஸம்–
ஒரு நல் சுற்றம் -என்ற -10-1-பெரிய திரு மொழியிலே-பல திருப்பதிகளையும் அருளிச் செய்த -இதற்கு கருத்து என் –
என்று சீயர் பட்டரைக் கேட்க –
பிறந்தகத்தின் நின்றும் புக்ககத்துக்கு போகும் பெண் பிள்ளைகள்-பந்துக்கள் இருந்த இடம் எங்கும் கண்டு
வினவப் போமாறு போலே-அடையத் தக்க பரமபதம் அணித்தான வாறே
திருப்பதிகள் தோறும் புகுகிறார் -என்று அருளிச் செய்தார் –
பண்டை நாளாலே தொடங்கி இவரும்-திருப்பதிகள் மங்களா சாசனம் செய்து அருளுகிறார் –
திருப் புளிங்குடியிலே புகுவது-9-2-
திரு காட் கரையிலே புகுவது-9-6-
திரு மூழிக் களத்திலே புகுவது-9-7-
திரு நாவாயிலே புகுவது-9-8-
திருக் கண்ணபுரத்திலே புகுவது-9-10
திரு மோகூரிலே புகுவது-10-1-
திரு வநந்த புரத்திலே புகுவதாகிறார் –10-2-
அடையத் தக்க பரமபதம் ஏறப் போவதாக ஒருப்பட்டு-நடுவிலே உண்டான தடைகளைப் போக்கி
வழி கொடு போய் விடுகைக்கு-காளமேகத்தை துணையாகப் பற்றினாராய் நின்றார் மேல் –
அவ்வளவு தான் நமக்கு போக வேண்டுமோ
இங்கே உள்ள திரு வநந்த புரமே அடையத் தக்க பரம பதமாக இருக்க-என்று திரு வநந்த புரத்தை பரம பதமாக அறுதி இட்டார் –
அங்கனம் அறுதி இட்டு
அந் நகரமாகிற இது தான்-வாசமே கமழும் சோலை வயல் அணி அனந்தபுரம் ஆகையாலே
அவன் விரும்பி வசிக்க வேண்டும்படி எல்லை இல்லாத இனியதுமாய் -தேசம் செய்து –
அவன் வந்து வசிக்கையாலே சம்சார துக்கமும் தட்டாத இடமுமாய் -தீரும் வினை நோய்கள் எல்லாம் தீரும் –
இச் சரீர சம்பந்தம் அற்று அவ்வருகு போனால் செய்யும் அடிமையை
ருசி பிறந்த போதே இங்கேயே செய்யலாம் படியாய் -கடைத் தலை சீய்க்கப் பெற்றால் –
இனித்தான் –
அமரர்கோன் அர்ச்சிக்கின்று அங்கு அகப்பணி செய்வர் விண்ணோர் -10-2-6-என்கிறபடியே
நித்ய சூரிகளும் வந்து அடிமை செய்யும் நகரம் ஆகையாலே
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -2-8-10-என்று
ஆசைப் பட்டபடி அவர்களோடு கூடவுமாய்-அவ்வருகு போக வேண்டினாரே ஆகிலும்
பெரியோரை ஒருகாலும் பிரிகிலேன் -பெரிய திருமொழி -7-4-4-என்கிறபடியே-அவர்களோடு போகவுமாய் இருக்கும் அன்றோ –
உகந்து அருளின நிலங்களில் நிலை இது தான் –
முதலிலே பகவான் இடத்தில் ருசியைப் பிறப்பிக்கைக்கு உடலுமாய் –
ருசி பிறந்தால் –
யே யதா மாம் ப்ரபத்யந்தே தான் ததைவ பஜாமி அஹம்-மம வர்த்ம அனுவர்த்தந்தே மனுஷ்யா பார்த்த சர்வச -ஸ்ரீ கீதை -4-11-
எவர்கள் என்னை இந்த விதமாக வணங்குகிறார்களோ-அவர்களுக்கு அந்த விதமாகவே
நான் அருள் செய்கிறேன் -என்கிறபடியே
சுலபனாய் இருக்கும் தன்மைக்கு எல்லை நிலமும் ஆகையால் –உபாயத்துக்கு உரிய தன்மைகளும் நிறைந்ததாய்
பரம பதத்துக்கு கொடுபோம் இடத்தில்-ஆதி வாஹிக கணத்தில் முதல்வனான தானே-
ஹார்த்த அனுக்ருஹீத சதாதிகயா -உத்தர மீமாம்சம் -4-அத்யாயம் -2-பாதம்
உள்ளத்தில் உறையும் இறைவனால் அருளப் பட்டவன் ஆகிறான் -என்கிறபடியே
வழியில் உண்டாகும் தடைகளையும் போக்கி கொடு போகைக்கும்-முற்பாடானாகைக்கும் உடலாய் –
பிறப்பு இறப்புகளின் தளை நீங்கி அவ்வருகே போனால் செய்யும் அடிமையை-இவ் உடலோடு கிடக்கச் செய்தேயும்
யாதாயினும் ஒரு காலத்தில் செய்கைக்கும் உடலாய் இருக்கும் அன்றோ-ஆகையால் -கூடும் என்க –
ஆக –
ருசியைப் பிறப்பிக்கைக்கும் உடலாய் –
ருசி பிறந்தவாறே உபாயம் ஆகைக்கும் உடலாய் –
ஞானத்தையும் பக்தியையும் வளர்க்கக் கூடியதுமாய் –
இச் சரீரத்தோடு இருக்கச் செய்தே அடிமை செய்கைக்கும் உடலாய் இருக்கையாலே-
திருவனந்த புரமே -அடையத் தக்க மேலான பரமபதம் -என்று-அறுதி இட்ட படியே -நடமினோ நமர்கள் உள்ளீர்-
நம்மோடு சம்பந்தம் உடையவர்கள் எல்லாரும் அங்கே போய் திரளுங்கோள் -என்கிறார்-
இதுதான்
மற்ற திவ்ய தேசங்களுக்கும் ஒவ்வாதோ
யாவரும் வந்து வணங்கும் பொழில் திரு வாறன் விளையதனை
மேவி வலம் செய்து கை தொழக் கூடும் கொல் எண்ணும் என் சிந்தனையே -7-10-9-
என்பது போன்றவைகளும் உண்டே -என்னில்
எல்லாவற்றுக்கும் எல்லாம் உண்டாய் இருந்தாலும்-
ஒவ்வோர் இடங்களிலே ஒவ்வொரு வகையான-
நினைவின் விசேடங்கள் ஓடினால் -அவற்றுக்குச் சேர வார்த்தை சொல்லும் இத்தனை-
ஸ ஸைன்ய புத்ர சிஷ்ய சாத்ய சித்த பூ ஸூ ரார்ச்ச நத்துக்கு முக நாபி பாதங்களை
த்வார த்ரயத்தாலே காட்டும் சாம்யம் அநந்த சயனத்தில் வ்யக்தம் –சூர்ணிகை -183-
திரு நாம சங்கீர்த்தனம் பிரதானம் -அனந்தன் காடி இலுப்ப மரம் தாரு -ப்ரஹ்மம் 1686- நெருப்பு பிடிக்க
-மீண்டும் -மார்த்தாண்ட வர்ம அரசர் 40 வருஷம் வேலை பார்த்து 72 யானைகள் 24000 சாளக்கிராமம் பாகன் இல்லாமல் யானைகள் வர –
பெருமாள் சொப்பனம் பாதி ஜாக்கிரதையாக கீழே -பின்பு ஒரு காலம் ஆபத்து வரும் –
சாளக்கிராமம் கடு சக்கரை பூசி –
சமஷடி ஸ்ருஷ்ட்டி ஆரம்பம் முன்னே திரு வாட்டாறு -நான் முக்கண் இல்லை அங்கே
வில்வ மங்கள சாமியார் -சின்ன பெருமாள் வைத்து ஆராதனை -சின்ன பிள்ளை உடன் இருக்க -காலில் சதங்கை -காட்டுக்கு ஓட
மலை வால் பெண் இருக்க -அனந்தன் காட்டில் போடுவேன் -சதங்கை ஓசை அங்கே -இலுப்ப மரம் -விழுந்து –
12 mile நீளம்
திவாகரன் துளுவ பிராமணர் நம்பூதிரி கலந்து திரு ஆராதனம்
பிரார்த்திக்க -18 அடி நீளம் -குறைத்து –
மூன்று ஊருக்கு காட்சி முதலில் -அதனால் மூன்று துவாரங்கள் –
ஸ ஸைன்ய -விஷ்வக் சீனர் நித்ய ஸூ ரிகள் உடன் -சாத்ய தேவர்கள் முகம் சேவிக்க
புத்திரர் -நான் முக்கண் -சித்த புருஷர் சாரணர் நாபி கமல துவாரம்
சிஷ்யர் நாம் -பூ சூரர்கள் நிலத்தேவர் பரம பக்தர்கள் பாத கமல துவாரம்
சாம்யம் குணம் காட்டி அருளி -சமோஹம் சர்வ பூதேஷூ –
சுதை -சிலா -தாரு -பூரி ஜெகந்நாத பெருமாள் -களேபரம் நவ களே பரம் -12-19 வருஷங்களுக்கு ஒரு முறை –
1726 -முதல் சேவை இந்த திரு மேனி உடன் –
ஒத்தக் கால் மண்டபம் முன் –
பாதாதி கேசம் -சேவிக்க வேண்டும் பாரதந்தர்யம் ஸ்வரூபம் –
பத்ம நாப தாசர் -அரசர்களுக்கு திரு நாமம் –
ஹாடாகமாடம் -ஸ்வர்ண மயமான மண்டபம் ஸ்வர்ணமயமான திருமேனி -மார்த்தாண்ட வர்மா -பத்ம நாப தாசர்கள் –
அரசர்கள் -திருமால் பிரதிநிதிகள் -அமரர்கோன் அர்ச்சிக்கின்று -இன்றும் -அரசர் அர்ச்சிக்கிறார்கள் Rs-160 அபராதம் -வர முடியாவிடில்
ஐப்பசி பங்குனி -ப்ரஹ்ம உத்சவங்கள் சங்க முகத்துறை அளவு
பள்ளி வேட்டை முதல் நாள் -அரசரே அம்பு போட்டு -தேங்காய் மேலே அம்பு -காம க்ரோதங்கள்
ஆராட்டு உத்சவம் தீர்த்தவாரி 9 நாள் நடக்கும்
ஆண்டாள் 9 நாள்
இலுப்ப மரம் பெரிய திரு உருவம் -இருந்த இடம்
குல சேகர மண்டபம் –
வெண்ணெய் காப்பு ஹனுமான் எப்பொழுதும் –
நரசிம்மர் உக்ர ஸ்ரீ ராமாயணம் பாராயணம் உக்ரம் குறைய -ஹிரண்ய வைத்த படலம் கம்பர் –
மார்த்தாண்ட-சூர்ய வம்சம் -ராஜ புத்திரர் -நான்கு கோத்த்ரம் வஸிஷ்ட கோத்ரம் –
நீண்ட கத்தி கீழே வைத்து பத்ம நாப தாசர் -குடும்ப சொத்து ஒன்றும் இல்லை
1008 வேத வித்து நான்கு வேதம் ஏழு தடவை முறை ஜபம் உத்சவம் -என்பர்
கடைசி நாள் லக்ஷ தீபம் நடக்கும் –
இரண்டாம் திருவாய் மொழியிலே -கீழே -வழித் துணையாகக் காளமேகத்தை ஆஸ்ரயித்து ப்ராப்ய தேசத்து
ஏறக் கொண்டு போக உத்யோகித்த சர்வேஸ்வரன் –
தேசத்தினுடைய ப்ராப்யத்வத்தையும் தன்னுடைய கைங்கர்ய பிரதி சம்பந்தித்தையும் இந்த விபூதியில் பிரகாசிப்பித்து
இவர் உகப்பை விளைவித்துக் கொண்டு போவோம் என்று திரு உள்ளம் பற்றி –
நிரதிசய போக்யமான திரு வனந்த புறத்திலே கண் வளர்ந்து அருளுகிறபடியைக் காட்டாக கண்டு ஸந்துஷ்டாராய் -அவனுடைய
ஆஸ்ரித சம்ச்லேஷ ஸ்வ பாவத்தையும்
ஆச்சர்ய அவஹமான அன்வயத்தையும்
அசேஷ ஜகத் ரக்ஷகத்வத்தையும்
அனவதிக வாத்சல்யத்தையும்
அனுபஹித சேஷித்வத்தையும்
சர்வ தேவ நிர்வாஹகத்வத்தையும்
சகல ஜகத் ஸ்ருஷ்ட்யாதி யோகத்தையும்
பரம ப்ராப்யத்வத்தையும்
கைங்கர்ய பிரதிசம்பந்தித்யித்வத்தையும்
ஆராதன வைலக்ஷண்ய அபாதகத்வத்தையும்
அநு சந்தித்து -ஏவம் பூதனான சர்வேஸ்வரன் வர்த்திக்கிற திரு வனந்த புரம் தன்னையே ப்ராப்யமாக அறுதியிட்டு
இங்கே தம்முடைய சகல கிலேசமும் தீரும்படி
அவனுடைய போக்யமான திரு நாமங்களைக் கீர்த்தித்தும்
பஹு முகமான கைங்கர்யங்களைப் பண்ணியும் அனுகூல ஜனங்களோடே அனுபவிக்கப் பார்க்கிறார் –
————
10-3-வேய் மரு தோளிணை மெலியும் ஆலோ-ப்ரவேஸம்-
திரு வனந்த புரத்திலே புக்குப் பாரித்த படியே அடிமை செய்யப் பெறாமையாலே -அதி சங்கை ––ஐயப்பட வேண்டும்படியாய் வந்து விழுந்தது –
ஸ்ரீ வைஷ்ணவர்களும் தாமுமாய் அடிமை செய்ய வேண்டும் என்று பாரித்தார் –
பாலாழி நீ கிடக்கும் பண்பை யாம் கேட்டேயும்-காலாழும் நெஞ்சழியும் கண் சுழலும் -என்னுமவர் ஆகையாலே –
பாரித்த படியே அந்நகரிலே போய் புக்கு அடிமை செய்யப் பெற்றிலர் –
1-அந்நகரிலே அப்போதே சென்று சேரப் பெறாமையாலும்–
2-பாரித்த படி அடிமை செய்யப் பெறாமையாலும்-
-பல காலம் பிரிந்து போன வாசனையாலும் -திருவிருத்தம் -95-
3-தொன்று தொட்டு வருகின்ற சரீரத்தின் சேர்க்கையை நினைந்து அஞ்சின அச்சத்தாலும்-
4-சர்வேஸ்வரனுடைய ஸ்வாதந்த்ர்யத்தை நினைந்து அஞ்சின படியாலும் -அதாவது –
சிசுபாலனுக்கு தன்னைக் கொடுத்தும்-ஸ்ரீ பரத ஆழ்வான் வளைப்பு கிடக்க மறுத்து மீண்டு போரும்படியும் அன்றோ-ஸ்வா தந்த்ர்யம் இருப்பது -அதனாலும்
5-இனி–சர்வேஸ்வரன் தானே வந்து அங்கீ கரிக்கைக்கு ஈடான பக்தி தமக்கு இல்லை என்று இருக்கையாலும்
இன்னம் இவ் உலகில் வைக்கில் செய்வது என் -என்னும்-அச்சத்தாலே துன்புற்றவராய்
-தமக்குப் பிறந்த நிலை வேறுபாட்டினை-ஒரு பிராட்டி பாசுரத்தாலே அருளிச் செய்கிறார்-
காலைப் பூசல் –கீழும் மேலும் இரண்டு திருவாய் மொழிகளில் பர உபதேசம் –
அச்சம் நீங்குதற்கு உடலான இவை தாமே அன்றோ இப்போது-இவர்க்கு அச்சத்துக்கு காரணங்கள் ஆகின்றன –
1-இப்போதே அந்நகரிலே சென்று சேரப் பெற்றிலோம் -என்று இருக்க வேண்டா –
அவனை நினைந்தால் காலாழும் நெஞ்சழியும் -பெரிய திருவந்தாதி -34-என்கிறபடியே
பத்தியினால் பரவசப் பட்ட காரணத்தால் இப்போது அடி இட மாட்டாதே ஒழிகிறார் ஆகையாலே-
2-அடிமை செய்யப் பெற்றிலோம் என்று அஞ்ச வேண்டா –
புகழும் நல் ஒருவன்-என்கிற திருவாய் மொழியின் படியே
இருந்த இடத்தே இருந்து ஏதேனுமாக சொன்னவற்றையே-தனக்கு அடிமையாகக் கொள்ளும் தன்மையன் ஆகையாலே
இன்று நினைத்தவற்றையும் செய்தவற்றையும் எல்லாம் தனக்கு அடிமையாக-நினைத்து இருக்குமவன் அன்றோ அவன் –
3-இனித் தமப்பன் பகையாக அவனிலும் இவன் அண்ணியன்-என்று வர நின்ற பிரகலாதன் அன்றோ-முடிவில் வந்து எதிர் இட்டான்-
ஆக-மயக்கம் கொண்டவனுக்கு பிறந்த தெளிவு போலே-இச் சரீரத்தோடு சேர்ந்து இருக்கிறவனுக்கு பிறக்கும் ஞானத்தினை நம்ப ஒண்ணாது என்றே அன்றோ
இவர் தாம் இச் சரீர சம்பந்தத்தை நினைந்து-தேறேல் என்னை -2-9-10-என்று அஞ்சிற்றும் –அங்கண் அஞ்ச வேண்டா –
முடியானே -என்ற திருவாய் மொழியிலே கூறப் பட்ட உறுப்புகளை உடையவர் ஆகையாலே-
4-அவனுடைய ஸ்வா தந்த்ர்யத்தை நினைத்து அஞ்ச வேண்டா–சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி மாசுச -ஸ்ரீ கீதை -18-66-எல்லா பாபங்களில் நின்றும்
உன்னை விடுவிக்கிறேன்-நீ துக்கப் படாதே -என்கிறபடியே –பாபங்களைத் துண்டித்துக் கொண்டு போகைக்கும் உடலாய் இருக்கையாலே ..
5-பக்தி தமக்கு இல்லை என்று இருக்க வேண்டா -பிரபத்தியை உபாயமாக பற்றினவர் ஆகையாலே –
நாராயணாயா – ஏக நிஷ்டை யில் இருந்தால் எத்தை செய்தாலும் கைங்கர்யம் -யோ யோ ஜல்ப -ஜபம் -தது தியானம் —
பிரகலாதன் போலே இவருடைய கரணங்கள் பிராகிருத போகங்களில் இல்லையே –
நெடு நாள் பிரிந்து -போன வாசனை-முடியானே கரணங்கள் உடையவர் -பிரகிருதி சம்பந்தம் நினைத்து அஞ்ச வேண்டாம் என்பதை
அத்தால் வந்த பிரிவையும் கண்டு அஞ்ச வேண்டாம் என்றபடியும் ஆகுமே –
இனி –ச உத்தம புருஷ சதத்ரபர்யேதி ஜஷத் கிரீடன் ராமமான-
ஸ்த்ரீபிர்வா யானைர்வா ஜ்ஞாதிபிர்வா நோபஜனம் ஸ்மரன் இதம் சரீரம் -சாந்தோக்யம் -8-12-3-என்கிறபடியே
இதனை நினையாதபடியான சாஷாத் காரம் இல்லாமல் படுத்துகிற பாடே அன்றோ இது –
நேரே கண்கூடாக காண்கிற காட்சியும் பயன் இல்லாததாய்-கூட இருக்கச் செய்தே பிரிந்தான் -என்று மயங்கும்படி
பிரிவால் வந்த வாசனை மேற்கொள்ளுகிறது அன்றோ-தகுதி கிடந்து படுத்துகிற பாடே அன்றோ-
கெடும் இடரில் பிரத்யக்ஷ சாமானாகாரம் கிட்டிற்றே -வைகுந்தம் கிட்டினால் போலே -என்றாரே -எதற்காக துன்பப் பட வேண்டும்
பிரத்யக்ஷமும் அகிஞ்சித் கரமாய் கூட இருக்கச் செய்தே பிரிந்தான் என்று அதி சங்கை
பிரிந்தான் என்று இவள் உடம்பு மெலிய -அத்தைக் கண்டு அவனும் பிரிந்தோமோ என்று அவனும் நினைக்கும் படி
-இப்படி இருவரும் ஊமத்தங்காய் தின்றால் போலே மயங்கி
கலப்பார் பிரிவார் என்கிற வாசனை மேலிட –யோக்யதை கிடந்து படுத்தும் பாடு இது -சரீரம் இருப்பதால் -விஸ்லேஷ ஹேது அன்றோ சரீரம் –
அதி சங்கை பிராந்தி கார்யம் இல்லை -மயர்வற மதி நலம் அருளப் பெற்றதால் —
மயர்வற மதிநலம் அருளினன் – என்கிறபடியே-பகவானுடைய திருவருளால் கிடைத்ததாய்-
பரபக்தி ரூபமாய்-ருசி கார்யமாய்-இருக்கிற இருட்சி இருக்கிறபடி அன்றோ இது –
இனி ஈஸ்வரனுக்கு கால் நடையாடாதது ஒரு தேசத்தில்-இவரை வைத்து அதனைப் போக்கலாம் அத்தனை –
கலந்து பல நாள் பிரிந்து போந்தாள் ஒரு பிராட்டியாய்-அவ் வாசனையாலே
கிருஷ்ணன் கூடி இருக்கச் செய்தேயும் -நீ கண்ணா -என்கிறாள் இங்கே –
இவன் பண்டு பிரிந்து போந்த விடியில் காலமும் வந்து அக்காலத்துக்கு அடைத்த காற்றுக்கள் அடிக்கையாலும் -வாடை தூவ –
குயில்கள் கூவுகையாலும்-மயில்கள் ஆலிக்கையாலும்-காடு எங்கும் ஒக்க கன்றுகளும் பசுக்களும் பரக்கையாலும்-இக்காலத்தில் அவன் போகை தவிரான்
பசுக்களை ஒரு தலையாக காப்பாற்றுமவன் ஆகையாலே அவற்றை விட்டு நம்மோடு இருப்பான் ஒருவன் அல்லன் –
ஆனபின்பு அவன் போனான் -என்று-கூட இருக்கச் செய்தேயும் அவன் பிரிவினை நிச்சயித்து-
இன்னுயிர் சேவல்-மல்லிகை கமழ் தென்றல்-தொடக்கமான திருவாய் மொழிகளில்
அவன் முன்னம் இல்லாமையால் பட்ட துக்கம் முழுதினையும் அவன் கண் முகப்பே படுகிறாள்-
எல்லா வற்றையும் செய்து முடிக்கும் ஆற்றல் வாய்ந்த-அவனாலும் போக்க ஒண்ணாதபடி ஆயிற்று இவ் வாபத்து-
அதாவது-போனானாய் வருகிறவன் அல்லன்-போக நினைத்தானாய் தவிருகிறவன் -அல்லனே -என்றபடி –
இப்படி நோவு பட்டு-நீ பசு மேய்க்கப் போதலை நிச்சயமாக தவிராய்-
நீ போதல் எனக்கு விருப்பம் இல்லாத கார்யம் ஆகையாலே உன் செலவினை விலக்க வேண்டும் என்று நினையா நின்றேன்-
இதற்கு நா நீர் வருகிறது இல்லை
அதற்கு மாற்றாக-உன் கையை என் தலையிலே வைக்க வேண்டும் –அணி மிகு தாமரைக் கையை –
நீபசு மேய்க்கப் போகாது ஒழிய வேண்டும்-வீவ நின் பசு நிரைமேய்க்கப் போக்கு –
தீங்கினை விளைக்கக் கூடிய காட்டில் நீ பசு மேய்க்கப் போனால் அங்குள்ள-அசுரர் இராக்கதர்கள் முதலியோர்களால் என் வருகிறதோ –
அசுரர்கள் தலைப்பெய்யில் எவன்கொல் –என்று அஞ்சா நின்றேன் –என்கிறாள் –
அஞ்சன வண்ணனை -பெரியாழ்வார் திருமொழி –என் செய்யப் பிள்ளையை போக்கினேன் ஏ பாவமே -தாயார் பாசுரம் –
இனி-மாதா பிதா ப்ராதா நிவாஸ சரணம் சூக்ருத் கதி நாராயணா -சுபால உபநிஷத் -என்கிறபடியே
அவன் எல்லா வகையான உறவுமாய் இருப்பதைப்போன்று –
இத்தலைக்கும் சம்பந்த ஞானம் பிறந்தால் எல்லா பிரிவுகளும் உளவாய் இருக்கும் அன்றோ –அதனால் இவளும் தாய் போலே படுகிறாள் என்றவாறு –
யதா யதா ஹி கௌசல்யா தாசிவச்ச சகீவச-பார்யாவத் பைநீவச்ச மர்த்ருவச்ச உபநிஷ்டதே -அயோத்யா -18-68-
ஸ்ரீ கௌசல்யார் சகரவர்த்திக்கு-வேலைக்காரி தோழி மனைவி உடன் பிறந்தவள் தாய் ஆகிய இவர்களைப் போன்று இருந்தாரே -என்கிறபடியே –
ஆனபின்பு–நீ செல்லில் நான் உளளாக மாட்டேன் -என்று-இப்படி நோவுபட-அவனும் இவை முழுதினையும் நினைந்து -நான் போகிறேன் அல்லேன் -என்று
தன் போகாமையை இவள் நெஞ்சிலே படுத்தி தரிப்பிக்க-தரிப்பததாய் -செங்கனிவாய் எங்கள் ஆயர் தேவு –தலைக் கட்டுகிறது -இத் திருவாய் மொழியில்-
இதனால்
திரு மந்த்ரத்தில் கூறிய அடிமைத் தன்மையின் எல்லை இருக்கிறபடியைத் தெரிவித்தபடி-
உன் தன் திரு உள்ளம் இடர் கெடும் தோறும் -அவனுக்கே உறுப்பாக பயன் கொடுக்கை -தானே அடிமைத் தனத்தின் எல்லை-
எம்மா வீடு -திருவாய் மொழியில்-தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே -என்று அறுதி இட்டது ஓன்று உண்டே அன்றோ –
அதனை அழிக்கிறதாயிற்று இங்கு –என்னைக் கொள்ள வேண்டும் என்றே அன்றோ அங்குச் சொல்லிற்று-
என்னோடு கலக்கவுமாம்-வேறு சிலரோடு கலக்கவுமாம் –அங்குத்தைக்கு குறை தீரும் அத்தனை வேண்டுவது என்கிறது இங்கு-
அங்கு -எனக்கு என்ற இடம் புருஷார்த்தம் ஆகைக்கு சொன்ன இத்தனை அன்றோ –
உனக்கே நான் ஆட் செய்வோம்-அது அறிவில்லா பொருளின் வேறுபாட்டுக்கு உடலாம் இத்தனை-
இவன் தான் எனக்கு என்னாத அன்று புருஷார்த்தம் ஆகாது-அவன் தான் விரும்பி கார்யத்தை செய்யவும் தொடங்கான்-
உனக்கு நல்லவரோடும் உழி தந்து -உன் தன் திரு உள்ளம் இடர் கெடும் தோறும் நாங்கள் வியக்க இன்புறுதும் எம் பெண்மை யாற்றோம் –
தாதார்த்தம் -அத்தலைக்கே உறுப்பாக -தாதர்த்த சதுர்த்தி லுப்த சதுர்த்தி -பகவான் பிரயோஜனம் பிரதானம் -எம்மா வீட்டிலும் இதுக்கு ஆதிக்யம் –
மூன்றாம் திருவாய் மொழியில் -கீழே -திருவனந்த புரத்திலே அடிமை செய்யப் பாரித்தவர்
அவிம்பலேன -கிட்டப் பெறாமையாலே -அவனுடைய
போக்யத்தையும்
ப்ராப்ய பாவமும்
அடிமை கொள்ளப் பாரித்து இருக்கிற படியும்
புத்திஸ்த்தமாம் படி ஹ்ருதய ஸந்நிஹிதனாய் இருக்கச் செய்தேயும்
சீக்ர ப்ராப்தியில் இச்சையால் த்வரிக்கும் படியான ஸுபாக்ய அதிசயத்தை யுடையானாகையாலே -அவனுடைய
புண்டரீகாக்ஷத்வத்தையும்
அர்ஜனீய சம்ச்லேஷத்வத்தையும்
அசகாய ஸ்வ பாவத்தையும்
ரமணீய ஸுலப்யத்வத்தையும்
ஆகர்ஷக திவ்ய அவயவத்தையும்
அசாதாரண நாயகத்வத்தையும்
ஆச்ரித ஜன போக்யத்வத்தையும்
அனுசந்தித்து விளம்பம் பொறாமையால் விஸ்லேஷத்தை அதி சங்கித்து
ஏவம் பூதனான நீ என்னை அகலாது ஒழிய வேணும் என்று அபேக்ஷித்து தமக்குப் பிறந்த ஆர்த்தியை
அவன் சந்நிதியில் விண்ணப்பம் செய்த பிரகாரத்தை
ஸ்ரீ கிருஷ்ணனோடு ஸம்ஸ்லேஷித்து ப்ரபாத சமயத்திலே அவனுடைய பிரிவை சங்கித்து அஞ்சினாள் ஒரு கோபிகை –
சந்தியில் பாதகங்கள் நலிவு செய்யா நிற்கும் என்னை நீ ஆஸ்வசிப்பித்துக் கொண்டு இருக்கவும் வேணும் –
போன இடத்தில் ஆஸூரா ப்ரக்ருதிகள் வரில் என் ஆமோ என்று அஞ்சா நின்றேன் -என்று
திருவாய்ப்பாடியில் பெண்கள் எல்லார்க்குமாகச் சமைந்தவனுடைய போக்கை விலக்கின பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –
——
10-4-சார்வே தவ நெறிக்குத் தாமோதரன் தாள்கள்-ப்ரவேஸம்-
தம்மைப் பிரிய நினைவு இன்றிக்கே இருந்த ஐயத்தாலே-பிரிந்தார் படும் துன்பத்தினைப் பட்டு-அதனாலே மயக்கம் உற்றவரை –
உம்மை ஒரு நாளும் பிரியேன் -என்று அவன் தெளியச் செய்ய–செங்கனி வாய் -அதனாலே தரித்து மிகவும் ப்ரீதர் ஆனார் மேல் –
எம்பெருமானார் நிர்வாகம்
முதல் திருவாய் மொழியிலே -1-1-பரம் பொருள் விஷயமாகச் சொல்ல வேண்டுவன எல்லாம் சொல்லி யற்றது –
இனி அந்த பொருள் தானே அடியைக் கூடியதாய் இருக்கும் அன்றோ –ப்ராப்யமாய் -அமரரர்கள் அதிபதி –
அடியைக் கூடியதான அந்த பரம் பொருளின் தன்மையையும்-அடைவதன் பலமான கைங்கர்யத்தையும்-தொழுது ஏழு –
படமுடை அரவில் பள்ளி பயின்றவன் -என்றும்-கடைத்தலை சீய்க்கப் பெற்றால் -என்றும்-
அருளிச் செய்தார் -கெடும் இடராய வெல்லாம் -என்ற திருவாய் மொழியிலே –10-2-
அடையக் கூடியதான அப்பொருள் அப்போதே கை புகுரப் பெறாமையாலும்-நெடுநாள் படப் பிரிந்து போந்த வாசனையாலும்
வெருவி இவர் துன்பம் உற்றவராக-இவருக்கு பிரசாங்கிகமாக பிறந்த துன்பத்தினை நினைத்து-
அவனும் தெளிவிக்க தெளிந்தவராய் நின்றார் – வேய் மரு தோளிணை-என்ற திருவாய் மொழியிலே-10-3-
ஆக முதல் திருவாய் மொழியிலே பரம் பொருள் விஷயமாக சொல்ல வேண்டுவன எல்லாம் சொல்லி-
அப்பறம் பொருள் தானே அடியைக் கூடிய பேறாக-ப்ராப்யமாய்- இருக்கையாலே-
அப்பேற்றினைப் பெறுதற்கு உபாயமான பக்தி யோகத்தை வீடுமுன் முற்றவும் -1-2–என்ற திருவாய் மொழியிலே சொல்லி
அந்த பக்தி மான்களுக்கு அவன் சுலபனாய் இருக்கும் தன்மையை பத்துடை அடியவர்க்கு -1-3–என்கிற திருவாய் மொழியாலே சொல்லி-
சாத்ய பக்தி -உபாயமாக சொல்லுவது எதனால் –
பிரபத்திக்கு முன்பே பக்தி வேண்டுமே -பரம்பரையா உபாயம் -பரம பிராப்யம் என்கிற ஆசை வர பக்தி வேண்டுமே –
பக்தி அதன் சாத்தியமான பிரபத்தி உடன் பொருந்தி -அது பின் பக்தி உடன் பொருந்தி
பின் சாத்தியமான பிராப்யத்துடன் பொருந்தியதை சொன்னவாறு –
ஆக-வீடுமுன் முற்றத்திலும் பத்துடை அடியவரிலும் சொன்ன பத்தியானது அதன் பலத்தோடு
பொருந்தின படியைச் சொல்லி -தாமோதரன் தாள்கள் தவ நெறிக்குச் சார்வே –10-4-
அத் திரு வாய் மொழிகளிலே பத்தியை வளர்ப்பனவாகச் சொன்ன குணங்களை ஆதரித்துக் கொண்டு –
-உரலினோடு இணைந்து இருந்து -என்றதனை தாமோதரன் என்றும்
புயல் கரு நிறத்தனன் -என்றதனை கார் மேக வண்ணன் என்றும்
அடியவர்க்கு எளியவன் -எளிவரும் இயல்வினன் -என்றதனை சார்வே -என்றும்
பிறர்களுக்கு அறிய வித்தகன் -என்றதனை காண்டற்கு அருமையனே -என்றும்
அமைவுடை முதல் கெடல் -என்றதனை -பெருமையனே வானத்து இமையோர்க்கும் -என்றும்
மலர் மகள் உறையும் -என்றதனை திரு மெய் உறைகின்ற -என்றும்
தாம் தம்முடைய பேற்றுக்கு உபாயமாக-முதல் திருவாய் மொழியில் சொன்ன பிரபத்தியோடு -அருளினன் -தலைக் கட்டுகிறார் இதில் –
பண்டே பரமன் பனித்த பணி வகையே கண்டேன் கமல மலர்ப்பாதம் -என்று-
சாத்ய பக்தி பிரபத்தி என்கிற -இவ்விரண்டு கோடியும் இவருக்கு உண்டாய் இருக்கச் செய்தேயும்-
தம்முடைய பேற்றுக்கு உடலாக இவர் நினைத்து இருப்பது பிரபத்தியே யாம்
முதல் திருவாய் மொழியில் பிரபத்தியைக் காட்ட சொல் உண்டோ என்னில்-அருளினன் -என்றாரே அன்றோ –
அதுவும் அவனது இன்னருளே -9-7-6- என்றபடி –
இனித் தான் இவருடைய பக்தி வேதாந்தங்களில் கூறப் படுகிற பக்தி அன்று-அது சாதன பக்தி அன்றோ –
வேதாங்களில் கூறப் படும் பக்தியாகக் கொள்ளும் இடத்து-அப சூத்ர அதிகரண நியாயத்துக்கு விரோதம் உண்டாகும்-
அது தான் இவ் வாழ்வார் உடைய பிரபாவத்தோடு கூடாதோ என்னில் –அது இவரோடு பாசுரங்களோடு முரண்படும்-
அருளினன் -என்று இப்புடைகளில் அன்றோ இவருடைய பாசுரங்கள்-
உபய பரிகர்மித ச்வாந்தச்ய ஐகாந்தி காத்யந்திக பக்தி யோகைக லப்ய -ஆளவந்தார் ஸ்ரீ ஸூக்தி-
ஆத்மசித்தி-கர்ம ஞானங்கள் இரண்டாலும் தூய்மை செய்யப் பட்ட-
மனத்தினை உடையவனுக்கு உண்டாகும் பக்தி யோகம் ஒன்றினாலே அடையத் தக்கவன் இறைவன் -என்கிறபடியே
ஞான கர்மங்கள் இரண்டாலும் தூய்மை செய்யப் பட்ட மனத்தினை உடையவனுக்கு-பிறக்குமது அன்றோ பக்தி யாகிறது –
அந்த ஞான கர்மங்களிடத்து இறைவனுடைய திருவருள் நிற்க-அதற்புப் பின் உண்டான பரபக்தி தொடங்கி பிறந்ததே இருக்கும் இவருக்கு –
இனித் தான் இவர் வழியே போய் இவருடைய பேறே பேறாக-நினைத்து இருந்த ஸ்ரீ பாஷ்யகாரரும்
பிரபத்தியைப் பண்ணி-பின்னர் பக்தி தொடங்கி வேண்டிக் கொண்டார் அன்றோ –
மாறன் அடி பணிந்து உய்ந்தவர் -இதுவே ஸ்வரூபம் பிராப்தம் -பக்தி ஸ்வரூப விரோதம் என்றவாறு –
அவன் உபாயம் ஆனாலும் – இவனுக்கு ருசி உண்டாய் – பேற்றினைப் பெற வேண்டுமே-இல்லையாகில் புருஷார்த்தம் ஆகாதே –
அவனே சாத்ய உபாயம் என்றாலும் – ருசி வளர்ந்தால் தான் – பிராப்பிய சித்தி -இது அதிகாரி ஆக்குவதற்கு –
பெறுகிற பேறு இன்னது என்று அறுதி இட்டு- அந்த பேற்றிலே ருசி கண் அழிவு அற-உடையவனுக்கு அன்றோ – அடைவிக்கும் வழியாக அவன் இருப்பது –
பெறுகிற பேறு இன்னது என்று அறுதி இட்டு- பிரபத்திக்கு முன் பக்தி
அந்த பேற்றிலே ருசி கண் அழிவு அற-உடையவனுக்கு -பிரபத்திக்கு பின் பக்தி
இரண்டும் இருந்தால் தான் அன்றோ – – அடைவிக்கும் வழியாக அவன் இருப்பது –
ஆகையால் இவருடைய பக்தி பிரபத்திகள் மாறாடலாம் படி அன்றோ இருப்பன –
ஆக
வீடுமுன் முற்றவும் -என்ற திருவாய் மொழியிலும்-பத்துடை அடியவர் -என்ற திருவாய் மொழியிலும் பிறருக்கு உபதேசித்த பக்தி-
தம்முடைய பேற்றுக்கு உடலாய் இருந்தபடியைச் சொல்லி –இது தான் பலத்தோடு சேர்ந்த படியைச் சொல்லி முடிக்கிறார் இதில் –10-4-
நன்று -பிறருக்கு உபதேசித்த இந்த பக்தி யானது பலத்தோடு சேர்ந்து இருப்பது-இறைவனை நேரே கண்டு அனுபவித்தாலே அன்றோ -என்னில் –
கண்கூடாகக் காண்பது போன்று தோற்றாமல்-கண் கூடாக காண்பதாகவே தோற்றுகிற மனத்தின்-அனுபவம் அமையும் அன்றோ இப்போது –
ஸ அஸ்நுதே சர்வான் காமான் சஹ ப்ரஹ்மண விபஸ்சிதா-
சர்வஞ்ஞன் உடன் சேர்ந்து முக்தன் அனுபவிக்கிறான் எல்லா குணங்களையும் என்றபடியே-குணங்கள் அனுபவிக்கத் தக்கன ஆனால்
அக் குணங்களோடு கூடியதாக இங்கே இருந்து வணங்குகிறானே அன்றோ
ஆக வணங்குகிற வேளையிலும் அது இருக்கும்படியை நினைக்க தட்டு இல்லை -என்க
ஆனால் மேலும் எல்லாம் கண் கூடாக காணுதலைப் போன்று-மனத்தினால் கண்டு அனுபவிக்கும் அனுபவத்தை அன்றோ –
கண்ணனை நான் கண்டேனே
கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேன்
கண்ட சதிர் கண்டு ஒழிந்தேன்
கண்டு கொண்டு என் கண்ணினை ஆரக் களித்து-சொல்லிக் கொண்டு போந்தது -என்னில்
அவற்றைப் பற்றி -ஒவ் ஒரு குணத்தைப் பற்றி -பிறந்தன சில ரச விசேடங்களை சொன்ன இத்தனை யேயாம் அவ்விடங்களில்
தொடங்கின பொருளை முடிக்கை என்பதும் ஓன்று உண்டே-அதனைச் சொல்லுகிறது இங்கே-
முனியே -அணித்தாகையாலே மானஸ அனுபவம் பூரணமாக இருக்குமே –
மேலே அருளியவை எம்பெருமானார் நிர்வாகம் –
இங்கன் அன்றிக்கே -நீ பசு மேய்க்கப் போக வேண்டா -என்கிறாள்-ஆகில் தவிர்ந்தேன் -என்றான் –
இவனைப் போன்ற சுலபன் இலன் காண் -இவன் பக்தியினால் அடையத் தக்கவன் என்னும் இடம் உறுதி -என்கிறாள்-
-என்று ஒரு உருவிலே பணிப்பர் பிள்ளான் –
இனி ஆளவந்தார் நிர்வாஹம் ஒன்றும் அருளுகிறார் அடுத்து –
முதல் திருவாய் மொழியிலே-1-1- பெறக் கூடிய பேற்றினை அருளிச் செய்தார்-
அந்த பேற்றினை அடைவதற்கு வேதாந்தங்களில் பக்தி என்றும் பிரபத்தி என்றும் இரண்டு வழிகள் விதிக்கப் பட்டன –
அவை இரண்டிலும் பக்தி முதல் மூன்று வருணத்தவர்களே செய்யத் தக்கது-பிரபத்தி எல்லாராலும் செய்யத் தக்கது-
அவற்றில் எல்லாராலும் செய்யத் தக்கதாய்-தாம் தம் திரு உள்ளத்தாலே தமக்கு உபாயமாக ஏற்றுக் கொண்ட பிரபத்தியை-
வீடுமுன் முற்றவும் -1-2–என்ற திருவாய் மொழியிலே அருளிச் செய்தார்-
முதல் மூன்று வர்ணத்தவர் உடைய சாதன பக்தியை -பத்துடை அடியவர்க்கு -1-3–திருவாய் மொழியில் அருளிச் செய்தார்-
ஆக இரண்டு திருவாய் மொழிகளிலும் அருளிச் செய்த-பக்தி பிரபத்திகள் தம் பலத்தோடு-பொருந்தின படியை அருளிச் செய்கிறார் –
சார்வே தவ நெறி -10-4-–/ கண்ணன் கழலிணை -10-5-–/ என்னும் இரண்டு திருவாய் மொழிகளாலும் –
அவற்றுள் சார்வே தவ நெறி -என்ற திருவாய் மொழியில்-பிரபத்தி அதற்கு உரிய பலத்தோடு பொருந்தின படியை அருளிச் செய்கிறார்-
சார்வே தவ நெறிக்கு தாமோதரன் தாள்கள் -என்று –தவம் -என்னும் சொல்லால் பிரபத்தியைச் சொல்லுகிறது –
தஸ்மாத் ந்யாசம் ஏஷாம் தபஸாம் அதிரிக்தம் ஆஹூ -தைத்ரிய உபநிஷத்-தவங்களில் மிக்க தவமாக சொல்லிற்றே அன்றோ பிரபத்தியை –
பண்டே பரமன் பணித்த பணி வகையே-கண்டேன் கமல மலர்ப்பாதம் -காண்டலுமே
விண்டே ஒழிந்த வினை யாயின எல்லாம்-என்றும் –
இருமை வினை கடிந்து இங்கு என்னை ஆள்கின்றான் -என்றும் –
சர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் விரஜ அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி மா சுச -என்ற-அர்த்தத்தை அருளிச் செய்தார்
இனி ஆளவந்தார் அருளிச் செய்ததாக திருமலை ஆண்டான் பணிப்பது -ஆவது –
பிரபத்தி விஷயமாக ஆயிற்று -வீடுமுன் முற்றவும் -என்ற திருவாய் மொழி –
ஸ்ரீ பாஷ்ய காரரும் அப்படியே பிரபத்தி விஷயமாக அருளிக் கொடு போந்து-ஸ்ரீ பாஷ்யம் அருளிச் செய்த பின்பு
இரகசிய உபாயத்தை வெளி இட ஒண்ணாது என்று
வீடுமுன் முற்றவும் -என்ற திருவாய் மொழியையும் பக்தி விஷயமாக அருளிச் செய்தார்-
ஆக
முதல் திருவாய் மொழியில் -1-1-சொன்ன பரம்பொருளின் ஸ்வரூபத்தையும்-
அதனைக் காண்பதற்கு பலமான கைங்கர்யத்தையும்
கெடும் இடராய -என்கிற திருவாய் மொழியிலே-10-2-
படமுடை அரவில் பள்ளி பயின்றவன் -என்றும் –
கடைத் தலை சீய்க்கப் பெற்றால் -என்றும் அருளிச் செய்து –
உன் தன் திரு உள்ளமிடர் கெடும் தோறும் நாங்கள் வியக்க இன்புறுதும்-என்று-அக் கைங்கர்யத்திலே களை பறித்து
அதாவது-த்வய மகா மந்த்ரத்தில் பின் வாக்கியத்தில் -நம -அர்த்தம் அருளிச் செய்து –
கெடும் இடராய -10-2–என்னும் திருவாய் மொழியாலும்–வேய் மரு தோளிணை -10-3–என்னும் திருவாய் மொழியாலும்
முதல் திருவாய் மொழியில் -1-1-சொன்ன பொருளை முடித்து-
சார்வே தவ நெறி -என்ற திருவாய் மொழியாலும்-10-4-/கண்ணன் கழலிணை -என்கிற திருவாய் மொழியாலும்-10-5-
வீடுமுன் முற்றவும் -1-2–என்ற திருவாய் மொழியாலும் /பத்துடை அடியவர் -1-3–என்ற திருவாய் மொழியாலும்-சொன்ன -பக்தி -பிரபத்திகள் –
அதன் அதன் பலத்தோடு பொருந்தின படியை அருளிச் செய்கிறார் என்று -ஆளவந்தார் அருளிச் செய்ததாக திருமாலை ஆண்டான் பணிப்பார் –
10-4-சாத்ய பக்தி சொல்லப்பட்டது -எம்பெருமானார் நிர்வாகம் -1-2- போலே -10-3- பிராசங்கிகம் –
பிரபத்தி பரம் -1-2- ஆளவந்தார் -பத்துடை அடியவர் 1-3-சாதன பக்தி பரம் –
-சார்வே தவ நெறி பிரபத்தி -பரம்-கண்ணன் கழலிணை பக்தி பரம் –
பிரபதிக்கு முன்னும் பின்னும் பக்தி வேணுமே -ப்ரேமம் வேணும் அவனை சரண் அடைய –
-உபாய பாவனையில் கண் வைக்காமல் கைங்கர்யம் -ப்ராப்ய ருசிக்கு பக்தி வேண்டுமே –
ஸ்தான த்ரயோ பக்தி -சாத்ய பக்தி -சாத்யத்துடன் சேர்ப்பிக்கும் பக்தி பிரார்த்தித்து பெற்றார் -எம்பெருமானார் –
உயர்வற உயர்நலம் -தத்வம் -ப்ராப்யம் -அயர்வறும் அமரர்கள் அதிபதி -பரத்வம்
அருளினன் -ஹிதம் -உபாயம் –
தொழுது ஏழு -புருஷார்த்தம் -வழி ஆகுமோ –
தொழுகை உபாயம் எழுகை உபேயம் என்றால் என்ன -தொழுகையே எழுகை -சாத்ய பக்தி அன்றோ -அதனால் அருளினன் சாதனம் –
மயர்வற மதி நலம் -பக்தி ரூபாபன்ன ஞானம் -தாரை போலே அனைத்து திருவாய்மொழிகளும் இதில் அடங்கும் –
உபாயம் இருந்தாலும் புருஷார்த்த பிரதான்யம் -முதல் திருவாய்மொழி –
கெடும் இடரில் -கைங்கர்ய பிரதி சம்பந்தி -கைங்கர்ய பிரதானம் இதில் -1-1-பரத்வம் -இருந்தாலும் -அங்கும் கைங்கர்ய பிரதி சம்பந்தி தானே –
அதனால் 1-1 /10-2- சேரும் என்றவாறு -அங்கே தொடங்கி இங்கே நிகமிக்கிறார் –
தாம் உபதேசித்த சாத்ய பக்தி -1-2- பிரபத்தியிலே மூட்ட -சேஷத்வ ஞானம் பரதந்த்ரன் புரிந்து -பிரபத்தி உபாயமாக தலைக் கட்டும் என்றபடி –
சாத்ய பக்தியையே பிரபத்தி என்னலாமோ என்னில்- இருவரும் பக்தி சாதனம் இல்லை என்பார்களே
பேற்றுக்கு உபாயமாக பிரபத்தியைப் பற்றி இருக்கிறார் என்பதுடன் சேராதே
சாத்ய பக்தி எதற்கு -என்றால் பிரபத்தியில் தூண்ட -மேலே ருசி வளரவும் பக்தி வேண்டும் –
அருளினன் -என்றது கர்ம ஞான யோக ஸ்தானங்களில் –
தவ நெறிக்கு சார்வு -சாத்யத்துடன் பொருந்தி பக்தி உபாயம் பலத்துடன் சேர்ந்தது என்றது பிரபத்தியில் மூட்ட என்றவாறு –
உபய பரிகர்மித ச்வாந்தச்ய ஐகாந்தி காத்யந்திக பக்தி யோகைக லப்ய-ஆளவந்தார்
உபய கர்ம ஞான யோகம் -பக்தி ஆரம்ப விரோதிகளை போக்க –
அந்தக்கரணம் ஐ காந்திக பக்தி ஏக அந்த ஒன்றே முடிவு ஆத் யந்திக முடிவைத் தாண்டி யாவதாத்மா பாவி
பக்தியால் அடைய பெறலாம் -ஆத்மா இருக்கும் அளவும் பக்தி என்றால் -சாதனம் இல்லையே -பரம பாதம் சாத்ய பூமியிலும் உண்டே –
அனுபவம் தானே அங்கே -உபாய பாவம் வழி இல்லையே அங்கே கர்மம் தொலைத்த பின்பு
இங்கு விதி அற்ற படியால் கரு முக்கை மாலையை சும்மாடு ஆக்குகிறோம்
அந்திம -சரம உபதேசம் -உபாய பாவம் மறந்து உபேய பாவத்தில் கண் வைக்க வேண்டும் உடையவர்
அருளினன் -என்றது கர்ம ஞான யோக ஸ்தானம் -பிரபன்னனுக்கும் அனுபவ த்துக்கும் கைங்கர்யத்துக்கும் -பக்தி வேண்டுமே –
சர்வ தர்மான் பரித்யஜ்ய -உபாய புத்தியை விட்டு -சாத்தியமாக ருசி வளர பண்ண வேண்டும் -ஸ்வயம் பிரயோஜன பக்தி —
கிருபையே உபாயம் உறுதி என்பதால் பிரபன்னர் -என்னலாம் -ஆர்த்தி மிகுதியைப் பார்த்தால் சாத்ய பக்தர் என்னலாம்-
கோபிகள் செய்வதை எல்லாம் பண்ணுகிறார் –
சாதன பக்தி ஆரம்ப விரோதிகளை போக்க பக்தன் பிரபத்தி அங்கமாக செய்து -இதுவே ஸ்ரீ கீதை யிலே சரம ஸ்லோக அர்த்தம் –
விபீஷணாதிகள் இராவணாதிகளுக்கு உபதேசிக்க அது பக்திக்கு உடலானது போலே வீடு மின் முற்றவும் -நமக்கு உபதேசித்து பக்தி வளர்ந்து பிரபத்தி
ராகவன் சரணம் கத -பல வாக்கியம் இருந்தாலும் ஒரே சரணா கதி -முன்பு எல்லாம் அறிவிப்பு –
சர்வ லோக சரண்யாய ராகவாயா சரணம் -உபதேசிக்க பக்தி வளர அது தானே பிரபத்திக்கு தூண்டு வித்து –
ராவணன் தள்ளி விட்டு அதனால் இல்லை -பிராவண்யம் வளர பிரபன்னன் ஆனான் போலே –
சாத்யம் உடன் சேர்வது பகவத் சாஷாத்காரம் –
ஞான தரிசன பிராப்தி அவஸ்தைகள் -பிரபத்தி அனுஷ்டித்தவனுக்கும் மூன்று அவஸ்தைகளும் உண்டே
கத்ய த்ரயத்தில் மூன்றையும் பிரார்த்தித்தார் -அது சாதன பக்தி இல்லை -ஸாத்ய பக்தி –
யாவதாத்மா பாவி -பக்தி வேண்டும் -பரம பக்தி -அங்கு -நிஜ சாஷாத்காரம் –
பிரத்யக்ஷ சாமானாக சாஷாத்காரம் -பர ஞான அவஸ்தையிலும் -ஆழ்வார் ப்ரத்யக்ஷமாகவே
-நீ போகேல் -சாஸ்திரம் -வரம்பு இல்லையே ஆழ்வார் உடைய பிரேம பக்திக்கு –
அங்கும் குண அனுபவம் -உபாசனத்திலும் குண அனுபவம் -பிராப்தி தசை போலே போக ரூபமாக இருக்குமோ என்னில்
ஆழ்வார் வேறு ஒன்றிலும் கண் வைக்காமல் சம்சாரம் நினைவில் இல்லாமல் உண்ணும் சோறு இத்யாதி
-பூவை பூம் –யாவையும் திருமால் திரு நாமமே என்று அன்றோ இருப்பார்
எதனால் இனி இனி என்று கதறுவதால் -பிராகிருதம் –
10-4 சாஷாத்கார நிலை -முன்பே இந்த நிலை இருந்தாலும் -அங்கு ஓர் ஓர் குணங்களை பற்றி –
இங்கு முனியே நான்முகனே அணித்து-விசத தமமான அனுபவம் -இங்கு தானே பல அனுபவம் பூர்ணம் –
பாடீர் அவன் நாமம் வீடே பெறலாமே -சாதன பக்தி உபதேசம் -ஆளவந்தார் நிர்வாகம் படி –
ஆழ்வார் பிரபன்னர் -சாதன பக்தியை உபதேசிக்கிறார் –
அவனாலே அவனை அடைந்து பாட வேண்டும் -காலம் போக்க பிரபன்னர்களாகிய நாம் பாடி ஆடி கழிப்போம் –
————
10-5-கண்ணன் கழலிணை-நண்ணும் மனம் உடையீர்-ப்ரவேஸம்-
விஸ்ரம் பதோ-அதி சங்கை போக்கி -10-3
பக்தி ஏக லப்தன் -10-4-
கரண த்ரய ஆச்ரயணீயத்வம் -10-4-
கண்ணன் கழலினை -பிரவேசம் –
பக்தியானது தனது பலத்தோடு பொருந்தின படியை அருளிச் செய்தார் மேல் –
அத்துணை முறையைப் பொறுக்க மாட்டாமல் ஈஸ்வரன் தன்னை கொடு போகையிலே
விரைகிற படியைக் கண்டு -என்றது -மரணமானால் -என்றது-
அவனுக்கு பல நாள்களாய் அத்துனையும் பொறுக்க மாட்டாமல் அவன் கொடு போகையில் விரைகிற படியைக் கண்டு -என்றபடி-
நமக்கு போக்கு தவிராத பின்பு-இனி இவர்களுக்கு-பக்திமான்கள் உடைய செயல்கள் இருக்கிற படியையும்
அறிய வேண்டுவது ஓன்று ஆகையாலே-அதனை உபதேசிப்போம் என்று பார்த்தார்-
இவர் தாம் எம்பெருமானாரைப் போலே பேர் அருள் உடையவர் காணும் –காரேய் கருணை ராமாநுசன் அன்றோ
இது தான் ஓன்று இவர்களுக்கு குறை கிடந்தது ஆகிறது என் -என்று
அது இருக்கும்படியை உபதேசிப்போம் என்று பார்த்து-பரோபதேசத்திலே ஒருப்பட்டு
அவன் தம்மை பரம பதத்துக்கு கொடு போவதாக விரைகிறபடியாலும்
கேட்கிற இவர்கள் அறிவுக்கு புலன் ஆக வேண்டும் என்னும் அதனாலும்-பாசுரப் பரப்பு அறும்படி சுருங்கக் கொண்டு
அந்த பக்திக்கு – -பற்றுக் கோடான -எண்ணும் திரு நாமம்-திருப் பெயரைச் சொல்லி –
இதில் இழிவார்க்கு நினைக்க தகும் மந்த்ரம் -நாரணம் –இன்னது என்றும் –
அதனுடைய பொருள் நினைவே -3/4-பாசுரங்களால் -மோஷத்துக்கு சாதனம் என்றும்-
தாள்வாய் மலரிட்டு நாள்வாய் நாடீர் -அவ்வழியாலே பக்தியைப் பண்ணுங்கோள் என்றும் –
முக்கரணங்களாலும் அவனைப் பற்றுங்கோள் என்றும் –5-
இப்படிப் பற்றுவார்க்கு அவன் -மேயான் வேங்கடம் – சுலபன் என்றும் –6-
மாதவன் -திருமகள் கேள்வன் ஆகையாலே எளிதில் ஆராதிக்கத் தக்கவன் -என்றும் –7-
மாதவன் என்று என்று -இவனை இடுவித்து பற்றச் செய்து இதனையே
அவன் திரு உள்ளத்தில் படுத்தி குவால் ஆக்குவாரும் அருகே உண்டு -என்றும்-8-
பேர் ஆர் ஓதுவார் -மனம் உடையீர் -பற்றும் இடத்தில் அதிகாரிகளுக்கு சொன்ன முறைகள் வேண்டா-
ருசி உடையார் எல்லாரும் இதற்கு அதிகாரிகள் என்றும்-9-
சுனை நன் மலரிட்டு -மலர் முதலான சாதனங்களைக் கொண்டு-அடையுங்கோள் என்றும்-10-
இதில் இழிய விரோதிகள் -அமரா வினைகள் -வினை வல் இருள் -தன்னடையே போம் -என்றும்-
இப்புடைகளிலே சொல்லி-
நாம் இன்னமும் சில நாள்கள் இங்கே இருக்கிறோம் அன்றிக்கே
போக்கு அணித்தான பின்பு எல்லோரும் இதனைக் கொள்ளுங்கோள் -என்று-உபதேசித்து-
அதனோடே தொடங்கின பரோபதேசத்தை தலைக் கட்டுகிறார்-
வீடு முன் முற்றவும் -திருவாய் மொழியில்
எண் பெருக்கு அந் நலத்து ஒண் பொருள் ஈறில வண் புகழ் நாரணன் -என்று
வணங்குதற்கு பற்றுக் கோடாகச் சொல்லப் பட்ட மந்த்ரத்தை-
எண்ணும் திரு நாமம் திண்ணம் நாரணமே -என்று காட்டுகிறார் இங்கு-
அஞ்சாம் திருவாய் மொழியில் கீழ் போக உபகரண போதையான பக்தியினுடைய ஸ்வரூபத்தை ப்ரதிபாதித்து
அதனுடைய பிரகார ப்ரதிபாதன அர்த்தமாக பஜநீயனான சர்வேஸ்வரனுடைய
மந்த்ர லிங்கமான அசாதாரண நாமத்வத்தையும்
நாமார்த்த பூத குணாதி யோகத்தையும்
ஸ்ருஷ்ட்யாதி கர்த்ருத்வத்தையும்
ஆஸ்ரயண அர்த்தமான அருணாவை ஸாயித்வத்தையும்
மோக்ஷ பிரதத்வத்தையும்
ரக்ஷணார்த்த ஸுலப்யத்தையும்
உபாய உபேயத்வத்தையும்
அதிசயித்த புருஷ போக்யத்வத்தையும்
அநந்ய ப்ரயோஜன ஸூல பத்வத்தையும்
ஆஸ்ரித ரக்ஷணத்தில் அதிசயித மஹத்த்வத்தையும்
அனுசந்தித்து ஏவம் பூதனான சர்வேஸ்வரனை யுக்தார்த்த ப்ரதிபாதகமான மந்த்ர அனுசந்தான பூர்வகமாகப்
புஷ்பாதி யுபகரணங்களைக் கொண்டு கரண த்ரயங்களாலும் அனுபவிக்க ஸமஸ்த விரோதிகளும் தானே போம் –
நிரதிசய புருஷார்த்தமும் கைப்படும் -என்று பல வ்யாப்தமான
பக்தி யோக பிரகாரத்தை ஸூ க்ரஹமாம் படி சங்க்ரஹேண யுபதேசித்துத் தலைக் கட்டுகிறார் –
———
அருள் பெறுவார் -பிரவேசம் –
பொய் நின்ற ஞானம் தொடங்கி -இவ்வளவும் வர –சர்வேஸ்வரனை ஆழ்வார் பின் தொடர்ந்த படி சொல்லிற்று –
இது தொடங்கி ஆழ்வாரைச் சர்வேஸ்வரன் பின் தொடருகிற படியைச் சொல்கிறது –
கண்ணன் கழலிணை யில் -இப்படி பக்தியின் தன்மையை உபதேசித்து-
கை ஒழிந்த பின் தன் பக்கலிலே இவர்க்கு விடாய் பெருகிற படியைக் கண்டு-
இவர்க்கு முன்பே விடாய்த்து திரு வாட்டாற்றிலே தங்கு வேட்டையாக -பரஸ்தானம் போலே -வந்து நிற்கிறவன் ஆகையாலே-
ஸ்வ ஸ்தானம் பரமபதம் அன்றோ -இவரைக் கொண்டு போகையிலே அவன் விரைவு மிக்கவன் ஆனான் –
இவர் விடாயின் அளவு அன்றே அவனுடைய விடாயின் அளவு –
சிரஞ்சீ வதி வைதேஹீ யதி மாசம் தரிஷ்யதி-ந ஜீவேயம் ஷணம்அபி விநாதாம் அஸி தேஷணாம்-சுந்தர -66-30-
ஒரு கணமும் நான் உயிர் தரித்து இருக்க மாட்டேன் -என்னும் ஏற்றம்-உண்டே அன்றோ அவன் விடாய்க்கு
வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று
ஆர்வுற்ற என்னை ஒழிய என்னின் முன்னம்-பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான் -9-6-10-
ஆழ்வாரும் நாமுமாய் அனுபவிக்க வேண்டும் -என்று பாரித்து-அது செய்யும் இடத்தில்-
அனுபவத்துக்கு ஒரு பிரிவு வாராதபடி தன்னந்தனியே இருப்பது ஒரு தேச விசேடத்திலே கொடு போய் வைத்து-
அனுபவிக்க வேண்டும் -என்று பாரித்து-அங்கனம் செய்யும் இடத்தில்-
இவருக்கு பர தந்த்ரனாய் இவர் ஏவுகிறபடி செய்தோமாக வேண்டும் என்று-
இவர் அனுமதி ஒழியச் செய்த மாட்டாதவனாய் நின்றான்-
சர்வேஸ்வரனை தாம் ஏவ மாட்டாரே தம்முடைய பாரதந்த்ர்யத்தாலே-
இப்படி தம் பக்கலிலே மிக்க காதலைச் செய்கிறவனுடைய மேன்மையையும்-
அப்படி மேன்மையை உடையவன் தம் பக்கல் பாரதந்த்ர்யனாய் தாழ நிற்கிற படியையும் நினைந்து-
இதற்கு உசாத் துணையாக இவ் உலக மக்களை பார்த்த இடத்து-நாட்டார் உடன் இயல் ஒழிந்து –
அவர்கள் ஐம்புல இன்பங்களுக்கு வசப் பட்டவர்களாய் அவற்றோடு பணி போந்து இருந்தார்கள்-
சோஸ்ச்னுதே ஸர்வான் காமான் -என்று அவன் உடன் கூடவே இருந்தே அனுபவிக்கும் முக்த நித்யர் போலே –
அவனைப் பார்த்த இடத்தில் மிக்க காதலை உடையவனாய் முன்னடி தோற்றாதே இருக்கிறவன்-
ஆகையாலே அவன் இதற்கு ஆளாக மாட்டு இற்றிலன்-
இனி அவன் திரு அருளுக்கு இலக்கான தாமும் தம்மோடு-உடன் கேடான நெஞ்சமேயாய் இருந்தது –
அந் நெஞ்சினைக் குறித்து-
அவனுடைய மேன்மை இருந்த படியும்-அப்படி மேன்மை உடையவன் நம் பக்கல் தாழ நின்ற நிலையும்
நாம் பெற்ற பேற்றின் கனம் இருந்தபடியும் எல்லாம் கண்டாயே-
நம் கார்யம் விழுந்தபடி கண்டாயே -என்று இதனை தம் திரு உள்ளத்தோடு கூட்டி இனியர் ஆகிறார் –
இதற்கு முன்பெல்லாம்-
சர்வேஸ்வரன் ஆகிறான் எல்லாரையும் ஏவுகின்றவனாய்-ஸ்வ தந்த்ரனாய் இருப்பான் ஒருவன்-என்று இருந்தார்
இப்போது அங்கன் அன்று –
அடியார்கட்கு பரதந்த்ரப்பட்டு இருப்பதுவே அவனுடைய தன்மை என்கிறார்-
முன்பு எல்லாம் தம்மாலே பாரதந்த்ர்யத்தை இழந்தார்-
இப்போது அவனாலே பார தந்த்ர்யத்தை இழக்கிறார்-
அதுதான் -இருந்தும் வியந்து -என்ற திருவாய் மொழியில் சொல்லிற்று இல்லையே -என்னில்
அதைக் காட்டிலும் இதற்கு வாசி உண்டு –மூன்று தத்துக்கு பிழைத்த பிள்ளை என்ற பிரிவால் அன்றோ அங்கு –
இப்பொழுது -அடியார் தம் அடியனேன் -என்று காரணத்தோடு சொல்லுகிறார்-
சரம தசையில் தாம் நிற்பத்தால் வந்த விளைவு இது என்கிறார் –
நெடுமாற்கு அடிமை -பாடியதன் பயன் பெற்றார் –பாரதந்தர்யம் இழக்க முடியாதே –
நாம் ததீய சேஷத்வத்தில் நிற்கவே -அவனும் ஆஸ்ரித பாரதந்தர்யத்தில் நிலை நிற்கிறான் திவ்ய தேச பிராவண்யம் விட்டு -அவன் உடன் செல்ல -இத்தையே மருள் என்கிறார் -நெஞ்சுக்கு –இந்த பிராவண்யம் போக்க தானே திரு வாட்டாற்று எம்பெருமான் இடம் –
அவன் தானே இவரை அங்கே கூட்டிச் செல்ல த்வரிக்கின்றான்-
மருள் ஒளி மட நெஞ்சே -இத்தையே அருளிச் செய்கிறார் –
மோக்ஷ தாநத்தில் பிராண பாரதந்தர்யம் வளம் மிக்க நதியிலே கரை புரளும் -சூர்ணிகை -184-
———-
10-7-செஞ்சொற் கவிகாள் உயிர் காத்து ஆட்செய்மின்-ப்ரவேஸம்-
விதி வகையே -என்கிறபடியே அவன் தம்மிடத்தில்-பரதந்த்ரனாய் நிற்கிறபடியை அருளிச் செய்தார் –
அவ்வழியாலே-
விரை குழுவு நறுந்துளவம் மெய்ந்நின்று கமழுமே -என்றும்-
தலை மேலே தாள் இணைகள் -என்றும் –
அவன் தன் திரு மேனியோடு புகுந்து கலந்த படியை அருளிச் செய்தார் –
தம்மோடு வந்து கலந்த இடத்தில் தம்மிடத்தில் பரதந்த்ரனாய்-திரு மேனியை விட மாட்டாதே-
அவன் செய்கிற காதல் பெருக்கினை கண்டார் –
கண்டவர் -இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்று நாம் அடியிலே வேண்டிக் கொள்ளச் செய்தேயும்-
இங்கு நம்மை வைத்தது ஒரு கார்யத்துக்காக என்று இருந்தோம்-
அதாவது இப்பிரபந்தம் தலைக் கட்டு வித்துக் கொள்ளுகை -என்றபடி
அது அவ்வளவில் அன்றிக்கே-நம் உடம்பினை விரும்பி விட மாட்டாமையாலேயாய் இருந்தது –
இவன் வெற்று உடம்பனாய்-சரீர சபலனாய் – இருந்தான்-கவி பாடுவித்துக் கொள்ளுகை ஒரு வ்யாஜ மாத்ரம்-
அது பிரதானம் அன்று-இதுவே இவனுக்கு நினைவு -என்று நினைந்தார் –
நினைந்தவர் -இவ் உடம்பினை விரும்புகிறது நம் இடத்தில் காதலால் அன்றோ –
இப்படி நம்மை விரும்பின இவ்வளவிலே நம்முடைய விருப்பத்தை முடித்துக் கொள்வோம் என்று பார்த்து –
தேவரீர் திரு உள்ளத்தில் ஓடுகிறது என் -என்றார் –
நான் உடம்பனாயே வேறு ஓன்று அறியாமல் படுகிற பாடு அன்றோ -மற்று உண்டோ -என்றான் –
உம் உயிர் வீடுடையான் -உயிரையும் வீடான சரீரத்தையும் உடையான் -ஆத்மாவை வீடான சரீரமாக உடையான் –
அங்கண் ஒண்ணாது -தேவர் -இச் சரீரத்தில் செய்து அருளும் விருப்பத்தை தவிர வேண்டும் –
மங்க ஒட்டு உன் மா மாயை -என்று விண்ணப்பம் செய்தார் –
இவர் விலக்கினது-அவருடைய காதல் பெருகுவதற்கு உடலாயிற்று –
ஒரு மா நொடியும் பிரியான் –
தந்தாமைக் கொண்டு அருமைப் படுத்துவார்கள் அன்றோ மேல் விழுகைக்காக-அது போலே ஆயிற்று-
இப்படி இவன் இவ் உடம்பிலே செய்கிற ஆதரத்தினைக் கண்டு-இவனுடைய காதல் பெருக்கு இருந்தபடியைக் காணில்-
இவ் உடம்போடு நம்மைக் கொடு போக நினைத்து இருக்கிறான் போலே இருக்கிறது-
அப்படிச் செய்யும் போது இவ் உலக வாழ்க்கை நமக்கு என்றும் உள்ளதாய் விடும்-நித்ய மண்டலம் அன்றோ -சரீரமும் நித்தியமாக இருந்து விடுமே –
இங்கே இருந்து இதற்கு ஒரு முடிவு கண்ட தாமத்தை இழந்தோம் ஆவோம் இத்தனை-இதனைக் கழித்துக் கொள்ள வேண்டும் என்று பார்த்தார்-
பார்த்தவர் –
மங்க ஓட்டே -என்றும்
மங்க ஒட்டு உன் மா மாயம் -என்றும்-
பொங்கு ஐம்புலனும் -பாசுரம்-என்றும்-
மும்முறை விரும்புவதும் மும்முறையும் தவிரச் சொல்லுகையும் அறியலாம்-
தேவரீர் இச் சரீரத்தை விரும்புகைக்கு அடி-
என்னிடத்தில் செலுத்தும் காதல் பெருக்கே அன்றோ-நான் இதனை விரும்பவில்லை
தேவரீரும் இவ் உடம்பில் செய்கிற விருப்பத்தினைத் தவிர வேண்டும் -என்ன
நீர் உம்முடைய விருப்பத்தை விடாதவாறு-நம் விருப்பத்தை விடுவதாமோ -என்றான்
அம் தண் திருமால் இரும் சோலை வாழி மனமே கை விடேல் -பாசுரம் கொண்டு பிரவேசம்
இவன் இப்படி விரும்புகிறது – இவ் உடம்பின் இழிவுகளை காணாமையால் அன்றோ –
இவனுக்கு இவ் உடம்பின் தாழ்வுகளைக் காட்டுவோம் என்று பார்த்து
இவ் உடம்பாகிறது -பருத்தல் சிறுத்தல் வளர்தல் குறைதல் களை உடையதாய் -விடத் தக்கதாய் இருப்பது ஓன்று –
விரும்பப் படும் ஆத்மாவைப் போன்று ஒரே தன்மையதாய்-வேறு பட்ட சிறப்பினை உடையதாய் இருப்பது ஓன்று அன்று
இதனை வெறுத்து அருள வேண்டும் -என்றார்-
அவ்வார்தைகளே இவன் மென்மேலும் விரும்புவதற்கு காரணங்கள் ஆயின –
மனைவினது அழுக்கை உகப்பாரைப் போலே எல்லா காலத்திலும் இவன் விட மாட்டாதவனாய் இருந்தான் –
இவனை கால் கட்டியாகிலும் ‘இக் கால்கட்டினை-அவிழ்த்துக் கொள்வோம் என்று பார்த்து-
இதில் செய்கிற விருப்பத்தினை தேவரீர தவிர வேண்டும்-என்று சரணம் புக்கார் –பிரார்தனாமதி சரணாகதி –
இவர் சொன்னபடியே செய்ய இழிந்தவன் ஆகையாலே
தனக்கு இவ் உடம்பிலே மென்மேலும் விருப்பம் செல்லச் செய்தேயும்
இவர் இதனை விரும்பாத பின்பு நாமும் இதனை வருந்தியாவது வெறுப்போம் -என்று பார்த்தான் –
இவர் இடத்து அவன் காட்டும் பாரதந்த்ர்யத்தாலே
இவ் உடம்பு ஒழிய அவன் கொடு போவானாய் இருந்தான் -மான் ஆங்கார மனம் கெட –
ஆக
இப்படியாலே -அருள் பெறுவார் -திருவாய் மொழியிலே தொடங்கின ஈஸ்வர பாரதந்த்ர்யத்தை முடித்து-
எல்லாப் பொருள்களையும் ஏவுகின்றவனாய்-எல்லா பொருள்களுக்கும் தலைவனான -சர்வேஸ்வரன்-
தனக்கு இவ் உடம்பில் விருப்பம் செல்லா நிற்கச் செய்தே-
நாம் -இதனைத் தவிர வேண்டும் -என்னத் தவிருவதே –என்ன ஒரு சீல குணம் இருக்கும்படியே –
இவ் விஷயத்தில் ஒருவரும் இழியாதீர்கள்-இழிந்து நான் பட்டதுவே அமையும்-என்று மிகுந்த பிரீதியாலே-
உயிர் காத்து ஆட்செய்மின் -என்று – பிறருக்கு சொல்லித் தலைக் கட்டுகிறார் –
த்யாஜ்ய தேஹ வ்யாமோஹம் மருள்கள் கடியும் மயல் மிகு பொழிலே தழைக்கும் -சூர்ணிகை -185-
நீராடப் போதுவீர்–அனுபவம் அடியார்கள் முன்னிட்டே -இனியது தனி அருந்தேல் -கரீஷ்மா காலத்தில் மடுவில் -செல்வார் துணை தேட்டம் -மூன்றும்
கல்யாண குணாம்ருத சாகரம் -அன்றோ இவன் -பரத்வம் கணுக்கால் அளவு -ஸுலப்யம் இடுப்பு -வாத்சல்யம் நெஞ்சு -ஸுசீல்யம் முழுகப் பண்ணும்
ஸஹ பதன்யா விசாலாஷ்யா சீதா பிராட்டி கூட்டி அன்றோ பெருமாள் இழிந்தார் –
கவி பாட சரீரம் வேண்டுமே -ஸுசீல்யத்தில் இழியாமல் இருக்க உபதேசிக்கிறார் –
ஏழாம் திருவாய் மொழியில் கீழ் இவர்க்குப் பரமபதத்தைக் கொடுக்கையில் யுத்யோகித்த சர்வேஸ்வரன்
இவர் முடியில் திருவடிகளை வைத்துத் திரு உள்ளத்திலே பூர்ணமாகப் புகுந்து இருந்து –
விரை குழுவு நாறும் துளவம் மெய்ந்நின்று கமழும்என்னும்படி
திருமேனி முழுக்கத் திருத்துழாய் பரிமளமாம்படியாக இவருடைய சரீரத்தோடு அந்த கரணத்தோடு
மற்றும் உள்ள அவயவங்களோடு வாசியற அத்யபி நிவிஷ்டனாய்
ஆதரிக்கிறபடியைக் கண்டு இவ்வாதார அதிசயத்துக்கு ஹேது வான அவனுடைய
ஆச்ரித விஷயமான அபி நிவேசத்தையும்
அதிசயித போக்யத்வத்தையும்
ஆஸ்ரித தேகத்தில் ஆதாரத்தையும்
அதில் அத்யந்த அபி நிவேசத்தையும்
ரசிகத்வத்தையும்
சர்வாதிகத்வத்தையும்
ஆஸ்ரிதார்த்த திவ்ய தேச வாசத்தையும்
சர்வ பிரகார சம்ச்லேஷத்தையும்
ஜகத் ஸ்ருஷ்ட்யாதி ஹேதுத்வத்தையும்
அபேக்ஷ அபராதீனத்வத்தையும்
அனுசந்தித்து ஏவம் விதனான சர்வேஸ்வரன் யுடைய ஆதார அதிசயம் இருந்த படியால் நாம் இனி யாம் உறாமை -என்று
உபேக்ஷித்த தேஹாதிகளையும் விளம்பமறக் கொண்டு போவாரைப் போலே இரா நின்றது –
அஸ்த்திரமாய் தோஷ பூயிஷ்ட்ட்மாகையாலே அ புருஷார்த்தமாய் அனுபவ விரோதி யாகையாலே
இருக்கிற இத்தை நம் பக்கல் ஆதரத்தாலே விரும்பா நின்றான் –
இத்தை அறிவித்தும் நாம் அவனை அர்த்தித்தும்-விடுவித்துக் கொள்ளுவோம் என்று
தெற்கில் திருமலையில் அவனை அபேக்ஷிக்க அதுக்காக அவன் நிவர்த்திப்பிக்கையிலே உத்யுக்தனாம் படியைக் கண்டு ஹ்ருஷ்டராகிறார் –
———
10-8-திருமால் இரும் சோலை மலை என்றேன் என்ன-ப்ரவேஸம்–
அருள் பெறுவார் -என்கிற திருவாய் மொழியிலே-தம்மைக் குறித்து சர்வேஸ்வரனுக்கு உண்டான பாரதந்த்ர்யத்தைப் பேசினார் –
அந்த பார தந்த்ர்யத்தை முடிய நடத்தினபடி சொன்னார் செஞ்சொல் கவிகாள் -என்ற திருவாய் மொழியிலே –
நீர் சொன்னபடி செய்யக் கடவோம் -என்று தலை துலுக்கினான் அன்றோ –
இவரைத் திரு மேனியோடு கொடு போவதாக தேங்கின தேக்கம் அன்றோ நடுவே உள்ள பாசுரங்கள் –
அது ஒழியக் கொடு போவதாக அற்ற அன்றே பதறத் தொடங்கினான்-
சிலரை ஆதி வாஹிக கர்த்தாக்களை வரவிட்டுக் கொடு போம்-
சிலரை பெரிய திருவடியை வரக் காட்டி கொடு போம் –
திருவடி திருத் தோளிலே வந்து தானே கொடு போகத் தக்கவர் அன்றோ -இவர்
மத் பக்தம் நயாமி பரமாம் கதிம்-என்னுடைய அடியவனை இறுதிக் காலத்திலேயே நானே நினைக்கிறேன் -கொண்டு போகிறேன் -என்கிறபடியே-
கள்வன் கொல் -பெரிய திருமொழி -8-7-1-என்ற திருவாய் மொழியில் பிராட்டியை ஆள் இட்டுக் கொண்டு போகும் அன்றே அன்றோ-
இவரையும் ஆள் இட்டுக் கொடு போவது-
நானிலம் வாய்க்கொண்டு நன்னீர் அறம் என்று கோது கொண்ட
வேனிலம் செல்வன் சுவைத்து உமிழ் பாலை கடந்த பொன்னே
கானிலம் தோய்ந்து விண்ணோர் தொழும் கண்ணன் வெக்கா உது அம்பூந்
தேன் இளம் சோலை அப்பாலது எப்பாலைக்கும் சேமத்ததே -திரு விருத்தம் -26-
மாலை நண்ணி சுருக்கமான பாசுரம் இது –
நானிலம் வாய்க்கொண்டு -நான்கு வித குறிஞ்சி முல்லை மதம் நெய்தல் -உண்ட பின்பு
நன்னீர் அறம் என்று கோது கொண்ட-வேனிலம் செல்வன் -ஆதித்யன் -சுவைத்து உமிழ் பாலை கடந்த பொன்னே
-நாயகியைக் கூப்பிட்டு -மீதி பாலை வானம் தாண்டி போக
தானே சோலை வானம் கூப்பிட்டு போக -சம்சாரம் பாலை வானம் தாண்டி
புணர்ந்து உடன் போக்கு துறை –
ஈஸ்வரன் வைஷ்ணவர் –
கானிலம் தோய்ந்து விண்ணோர் தொழும் கண்ணன் வெக்கா உது அம்பூந்-இது அது உது -தள்ளி இல்லை கிட்டவும் இல்லை திரு வெக்கா
கால் நிலம் தோய்ந்து -தேவர்கள் காலை வைத்து பற்ற
தேன் இளம் சோலை அப்பாலது எப்பாலைக்கும் சேமத்ததே-எல்லா அவஸ்தைகளிலும் க்ஷேமம் –
இவ் உலக வாழ்க்கையாகிற பாலை நிலத்தைக் கழித்துப் போந்தோம்-
நச புன ஆவர்த்ததே -என்கிற தேசத்திலே புகுந்தோம்-என்று தானே சொல்லித் தேற்றிக் கொண்டே அன்றோ போவது –
முன்னம் ஏழ் புரவியார் இரவிகாய் வெயிலினால்
முத்தரும் பியகிலா முழு மதித் திரு முகத்து
அன்னமே இன்னமோர் காவதம் போது மேல்
அகலும் இப்பாலை அப்பால் அரைக் காவதம்
என்னை யான் உடையவன் துயில் அரா அமளியும்
இலகு பொற் கோயிலும் இந்துவின் பொய்கையும்
புன்னை வாய் நீழலும் புரிசையும் மதுகரப்
பூ விரித் துறையும் அக் காவிரித் துறையுமே -திருவரங்க கலம்பகம்-50-
ஆக
இப்படி தம்மை அவ்வருகே கொடு போகையிலே பதருகிறபடியை அருளிச் செய்தார்-
இவன் இப்படி நம் பக்கலிலே பதருகைக்கு அடி என் என்று பார்த்தார்-
தம்பக்கல் ஒன்றும் கண்டிலர் -என்றது –பலம் கண்டோம் சாதனம் கண்டிலம் –
முதலிலே தம்பக்கலிலே -அத்வேஷம் -வெருப்பின்மையும் பிறப்பித்து-
அது அடியாக -விசேஷ கடாக்ஷம் -விசேடமான திரு வருளைச் செய்து –
நம் மேல் ஒருங்கே பிறழ வைத்தார் -எங்கும் பக்க நோக்கு அறியான் என் பைம் தாமரைக் கண்ணன் –
என்னைத் தீ மனம் கெடுத்தாய்-வெருப்பின்மையும் பிறப்பித்து-
அமலங்களாக விழிக்கும்-விசேடமான திரு வருளைச் செய்து
மருவித் தொழும் மனமே தந்தாய்-தம்பக்கலிலே இச்சையும் பிறப்பித்து-
நின் பாதமே சரணாகத் தந்து ஒழிந்தாய்-தானே உபாயம் என்னும் புத்தியையும் பிறப்பித்து
விண்டே ஒழிந்தன வினையாயின வெல்லாம்-
நின் அலால் இலேன் காண்-தன்னால் அல்லது செல்லாமையைப் பிறப்பித்து-
விண்ணுலகம் தருவானாய் விரைகின்றேன்-தானே வந்து அவ்வருகு கொடு போவனாக விரைகிறபடியை
தம்பக்கலிலே இச்சையும் பிறப்பித்து-தானே உபாயம் என்னும் புத்தியையும் பிறப்பித்து-அசஹ்ய அபச்சாரத்திலே மிக்கராய்-
அசஹ்ய அபசாரம் ஆவது -நிர் நிபந்தனமாக பகவத் பாகவத விஷயம் என்றால்-
அசஹமானனாய் இருக்கையும் ஆச்சார்ய அபச்சாரமும்-தத் பக்த அபச்சாரமும் -ஸ்ரீ வசன பூஷணம் -3-305-
இவர் தம்முடைய அபசாரங்கள் அனைத்தையும் பொறுத்து-ஐம்புல இன்பங்களில் ஆசை உடையவராய் போந்த தம்மை-
பல நீ காட்டிப் படுப்பாயோ -என்று தாமே சொல்லும்படி செய்து-
தன்னால் அல்லது செல்லாமையைப் பிறப்பித்து-தானே வந்து அவ்வருகு கொடு போவனாக விரைகிறபடியை நினைத்து –
இன்று இப்படி நம்மை விரும்புகிற இவன் -இன்று என்னைப் பொருளாக்கி –
பலகாலமாக நம்மை விட்டு ஆறி இருந்த படி எங்கனே-இன்று நம்மை விரும்புகைக்கு காரணம் என் -என்று பார்த்தார் –
தம் பக்கல் ஒரு காரணத்தையும் கண்டிலர்-
இப் பேறு – தாம் அடியாக வந்தது ஓன்று அல்லாமையாலே-தம் பக்கல் ஒரு வாசி கண்டிலர்-
முன்புத்தையில் காட்டிலும் இப்போது தமக்கு ஒரு ஏற்றம்-உண்டாக நினைத்து இருக்குமவர் அன்றே –
முன்பே தொடங்கி பல காலம் இவரைப்பெற வேண்டும் என்று இருக்கிறவன்-இப்போது இவர்க்கு ஒன்றனைச் செய்தானாக நினைத்து இரானே-
தாங்களும் அறியாதே சாஸ்திரமும் அறியாதே -ஈஸ்வரன் அறிந்த ஸூ ஹ்ருதம் –
ஊரைச் சொன்னாய் -மடி மாங்காய் இட்டு -தலையில் பொகட்டு ஒன்று பத்தாக்கி நடத்திக் கொண்டு போவான் –
இனி -சர்வஞ்ஞன் ஆகிலும்-இதற்கு ஒரு போக்கு சொல்லுமாகில் அவனைக் கேட்போம் -என்று பார்த்து-
இன்று இப்படி இவனைத் தலையாலே தாங்கும் தேவரீர்-முன்பு பலகாலம் இதனைக் கை விட்டு இருப்பான் என்-
இப்போது இதனை விரும்புவான் என் -என்று கேட்டார்-
ஓன்று எனக்கு அருள் செய்ய உணர்த்தல் உற்றேனே –உம் பக்கல் உண்டான வெறுப்பின்மை அடியாகச் செய்தோம் என்ன -மாட்டானே-
தான் அறிய அதுவும் தன்னாலே வந்தது ஆகையாலும்-
அது தான் பேற்றுக்கு ஈடான சாதனமாகப் போராமையாலும்-
இனி பாதுகாக்கின்றவனுக்கு பாது காக்கப் படும் பொருள்களை பல காலம் விட்டு இருந்த இதற்கு சொல்லலாவது ஓன்று இல்லையே
ஸ்வதந்த்ரம் அன்றோ இப்படி கெடுத்தது என்று -பிற்பாடன் ஆனதற்கு நாணம் உறுவதற்கு மேற்பட –
ஆகையால் சொல்லலாவது ஒரு மாற்றம் காணாமையாலே கவிழ்ந்து நின்று காலாலே தரையைக் கீறினான் –
ஊர்தல் உற்றேன் -ஒன்பதாவது பாசுரத்துக்கு இறைவன் பதில் இல்லை-
அடுத்து உற்றேன் உகந்து பணி செய்ய -தானே சமாதனம் அடைகிறார்-
ப்ராப்யாந்தகதம் இது வரை பண்ணியவை எல்லாம் –
அறம் கடந்தவர் செயல் இது என்று உலகு எலாம் ஆர்ப்ப
நிறம் கரிந்திட நிலம் விரல் கிளைத்திட நின்றான்
இறங்கு கண்ணினன் எல்லழீ முகத்தனன் தலையன்
வெறுங்கை நாற்றினன் விழுதுடை ஆய் அன்ன மெய்யன் – கம்பர் –
முதலிலே
உலகத்தை படைத்தல் முதலானவைகளைச் செய்து-தன் பக்கலில் இச்சையைப் பிறப்பிக்கைக்கு வழி இட்டு வைத்தான் –
அவ் வழியாலே இச்சையைப் பிறப்பித்தான் –
தன்னிடத்திலே உபாயத் தன்மையை எறட்டுக் கொண்டு-
பொய் நின்ற ஞானம் தொடங்கி-இவ்வளவாகத் தன் பக்கலிலே வர நிறுத்தினான் –
பர பக்தி தொடங்கி பரம பக்தி முடிய உள்ள நிலை விசேடங்களைப் பிறப்பித்தான் –
இதனை முன்பே செய்யா விட்டது என் -என்ன –இதற்கு சொல்லலாவது ஓன்று இல்லாமையாலே-
செயல் அற்றவனாய் நிற்கிறான் இத்தனை-என்று பார்த்து-
இப்படி-என் நெஞ்சு நிறையப் புகுந்தான் –
அவன்தம் பக்கல் செய்த அங்கீகாரத்தையும் –அதற்கு அடியான அவனுடைய கிருபை முதலான குணங்களையும் நினைந்து-
கார் ஏழ் கடல் ஏழ் மலை ஏழ் உலகுண்டும் ஆரா வயிற்றானை-
இது நிர் ஹேதுகமாக -ஒரு காரணம் இல்லாமலே-இன்று என்னைப் பொருள் ஆக்கி தன்னை என்னுள் வைத்தாரே –
–அங்கீ கரிக்கும் அங்கீ காரம் இருக்கும் படியே -என்று
அதிலே ஆழம் கால் பட்டு -ஆச்சர்யத்தை உடையராய்-அமுதம் உண்டு களித்தேனே –உவகை மீதூர்ந்தவராக களிக்கிறார்-
அப்பால ரெங்கம் -கோயில் அடி -காவேரி தாயார் திருவடி வருட -கல்லணை அருகில்-
உபமன்யு துர்வாசர் சாபம்
ஸ்ரீ வைஷ்ணவ ததீயாராதனம் – நெய் சமர்ப்பித்த அப்பம் -அபி நிவேசத்துடன் குடத்தை கட்டிக் கொண்டு –
மேற்கு நோக்கி திரு கண் வளர்ந்து
ஸ்வாமித்வம் -அங்கீகரிக்க அவகாசம் பார்க்கும் ஸ்வாமித்வம் பெரு நகரிலே பேர் பெற்றது -சூர்ணிகை -186-
ஸ்வாமித்வம் -பெரு நகரிலே பேர் பெற்றது -திரு மங்கை ஆழ்வார் -பெரு நகர் -சப்தம்
பெருவரை மதிள்கள் சூழ்ந்த பெருநகர் அரவணை மேல் கருவரை வண்ணன் தென் பேர் கருதி நான் உய்ந்தவாறே -பெரிய திருமொழி 5-9-3-
-அங்கீ கரிக்க அவகாசம் -மோக்ஷம் கூட்டிப் போக -என்ற அர்த்தம் இல்லை -யாதிருச்சிகமாக -இசைவு பார்த்து -திருத்த சந்தர்ப்பம் பார்த்து மா முனிகள் –
-யுக்தி மாத்ரமாக -பாசுரம் அடி ஒற்றி -வியாஜ்யம் மாத்ரமாக -கொண்டு ஸ்வாமி தானே சொத்தை கொள்ள அவகாசம் பார்த்து இருக்க வேண்டும் –
மலைக் கட்டு பிரதேசம் -மாட விளக்கு -என்பதால் பேர் பெற்றது -ஹர்மீதளம்-
எட்டாம் திருவாய் மொழியில் -கீழே -தாம் அபேக்ஷித்தபடியிலே ஈஸ்வரன் கார்யம் செய்வதாக அறுதியிட்டு படியைக் கண்டு
இப்படி நம் பக்கல் வ்யாமோஹம் பண்ணுகைக்கும் –
நாம் அபேக்ஷித்த கார்யம் செய்யும்படி பரதந்த்ரன் ஆகைக்கும்-
நம் பக்கல் ஒரு ஹேதுவில்லை -நிர்ஹேதுகமாக நம்மை விஷயீ கரித்து
அருளினானாம் அத்தனை என்று அறுதியிட்டு -அதுக்கு அடியான அவனுடைய
யாதிருச்சிக அனுகூல்ய நிபந்தனமான பூர்ண அங்கீ காரத்தையும்
அங்கீகார ஸ்த்தைர்யத்தையும்
ஸூகமத்வ அதிசயத்தையும்
புருஷார்த்த பிரதத்வத்தையும்
பிராப்தி பிரதிபந்தக நிவர்த்தகத்வத்தையும்
போக ரஸ பிரதத்வத்தையும்
நித்ய அனுபாவ்யத்வத்தையும்
நிரவாதிக சர்வ பிரகார போக்யத்வத்தையும்
நிர்ஹேதுக உபகாரகத்வத்தையும்
நித்ய கைங்கர்ய பிரதி சம்பந்தித்வத்தையும்
அனுசந்தித்து ஏவம் பூதனான சர்வேஸ்வரன் நிருபாதிக பூர்ண விஷயீ காரத்தைப் பண்ணி
ஸமஸ்த விரோதியும் நிரஸ்தமாம்படி திருப்பேரிலே ஸந்நிஹிதனாய்
நிரதிசய ஆஹ்லாத காரமான அனுபவத்தைப் பிறப்பித்தான் –
இது ஒரு சீல அதிசயமே என்று மிகவும் ஹ்ருஷ்டராகிறார்-
——
10-9-சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின-ப்ரவேஸம்-
மேலான யோகிகளுக்கு பிறக்கக் கூடியதான பரபக்தி இவருக்கு பிறக்க –
அதனால் உளவாகும் தன்மைகளை இத் திருவாய் மொழி அளவும் வர அனுபவித்து –
இனி இங்கு இருந்து அனுபவிக்குமது ஓன்று இல்லாமையாலே-
பரம பதத்துக்கு ஏறப் போக வேண்டும் -என்று எண்ணுகிற இவரை
தம்மிற்காட்டிலும் சடக்கென கொடு போக வேண்டும் என்று விரைகின்ற ஈஸ்வரன்
அங்குத்தை அனுபவத்துக்கு ஈடாம்படி மிக்க விடாய் பிறக்கைக்காக-
தன்னுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளை கண்களாலே கண்டால் போன்று-பிரத்யக்ஷ சமானஹார சாஷாத்காரம் —
தெளிவாக விளங்கும்படி செய்து அருளினான் –
பரஞானம் -தர்சன -தசை –தர்சன -சமா நாகாரமான தசை -இடைப்பட்ட நிலை —
அதாவது
வேதாந்தங்களில் பிரசித்தமான அர்ச்சிராதி நெறியையும்-
சரீரம் பிரியும் போது வரும் துக்கம் எல்லாம் ஆறும்படி தான் வந்து முகம் காட்டும் படியையும் –
போகும் நெறியில் உள்ளவர்களான தேவர்கள் செய்யும் உபசாரங்களையும்-
அந் நெறியாலே சென்று புகக் கூடிய பரமபதத்தையும்-
நித்ய சூரிகள் வந்து ஆதரிக்கும் படியையும்-
பிராட்டி மாரும் ஸ்ரீ வைகுண்ட நாதனும் எதிரே வந்து ஆதரிக்கும் படியையும்-
நித்ய சூரிகள் சேவிக்க பிராட்டிமாரோடே வீற்று இருந்து அருளுகிறபடியையும்-
அடையத் தகுந்தவர்களில் மேலான வர்களான நித்ய சூரிகள் நடுவே தாம் பாரம் அற்றவராய்
ஆனந்தத்தை உடையவராய் இருக்கும்படியையும்-
காட்டி அருளக் கண்டு ப்ரீதராய்
அதனை அன்யாபதேசத்தாலே பேசி அனுபவிக்கிறார் –
தமக்கு அவன் செய்து கொடுத்த பேற்றினை ஸ்ரீ வைஷ்ணவர் எல்லாரும்-பெற்றாராக பேசின இது அன்யாபதேசம் ஆவது-
அதற்குப் பிரயோஜனம் -இங்கு உள்ளார் நமக்கும் ஆழ்வார் பேறு தப்பாது -என்று இருக்கை-
தூமாதி மார்க்கம் அர்ச்சிராதி மார்க்கம் —சுக்ல கிருஷ்னே –தேவயான மார்க்கம் -முக்தி அபிலாஷை -ஹார்த்தா அனுக்ரஹ தானே வந்து முகம் காட்டி –
7 பாசுரம் வரை பிரகிருதி ஸத்காரம் 8-11- மேலே –
மாதவன் வைகுந்தம் புகவே -அந்த மார்க்கம்
முடி உடை வானவர் எதிர் கொள்ள -நித்ய ஸூ ரிகள்-ஸத்காரம்
பிராட்டிமாரும் -தானுமாக – வந்தவர் –மா மணி மண்டபத்து அந்தமில் பேர் இன்பத்து அடியாரோடு இருந்தமை –
மாதவன் தமர் -என்பதால் அந்யாபதேசம் –
ஸோஸ்ச்னுதே ஸர்வான் காமான் -சக ஸ்ருதி
பரமம் சாம்யம் உபைதி -சாம்ய ஸ்ருதி
மம சமதர்மம் -சமதர்ம ஸ்ருதி –
சூர்ய கிரணம் பிடித்தே –தேக சம்பந்தம் நீங்கிய பின்பு உடனே -மோக்ஷம் -பகலோ இரவோ -தஷிணாயனமோ உத்தரணமோ –
அர்ச்சிஸ் /பகல்/சுக்ல /உத்தர அயனம் /-சம்வத்சரம் / வாயு லோகம் -முதல் ஆறு –
சூர்ய லோகம் / சந்த்ர லோகம் /வித்யுத் -அமானவான்-/வருண லோகம் /-சுவர்க்கம் /சத்ய லோகம் -ஆகிய 12 -தாண்டி
இவ்வளவையும் காட்டி -மேலும் ருசியை வளர்க்க -நமக்கு அருளிச் செய்ய –
அர்ச்சிராதி மார்க்க பிரதர்சனம் -மார்க்கம் காட்டிக் கொடுத்த குணம் –
28 சூர்ணிகைகள் -கல்யாண குணங்கள் -காட்டி -30 திவ்ய தேசங்கள் -நவ திருப்பதி கணக்கில் 8 திவ்ய தேசம் –
தெளிந்த என் சிந்தை -ஒரே சூர்ணிகை மூன்று திவ்ய தேசங்கள் –
வன் பெரு வானக முதல் உய்ய இனிதாகத் திருக் கண்கள் வளர்கின்ற திருவாளர் திருப்பதி வடிவுடை கடலிடம் கட்கிலீ என்னுமவற்றில்
இவள் திறத்து என் கொலோ என்பிக்கிற வியூஹ ஸுஹார்த்த பிரதானம் -159
மண்ணோர் விண்ணோர் வைப்பில் போகின்ற ஏழ் உலகுக்குக் உயிர் பாசம் வைத்த நிகரில் வாத்சல்யம் உஜ்வலம் -160
உபய பிரதான ப்ரணவமான உறை கோயிலிலே எத்தேவும் என்னும் பரே சத்வம் பொலியும்-161 –
வைஷ்ணவ வாமனத்தில் நிறைந்த நீல மேனியின் ருசி ஜனக விபவ லாவண்யம் பூர்ணம் -162-
ருசி விவசரக்குப் பாதமே சரணாக்கும் உதாரயம் வானமா மலையிலே கொழுந்து விடும் -163-
களை கண் அற்றாரை உருக்கும் மாதுர்யம் கூட மூக்கிலே ப்ரவஹிக்கும் -164
மெலிவிலும் சேமம் கோள்விக்கும் க்ருபை தென்னகரிலே நித்யம் -165
வ்யவசா யஜ்ஞர் ரக்ஷண ஸ்தைரியம் பம்பா உத்தர தேசஸ்த்தம் -166-
விளம்ப விரோதம் அழிக்கும் விருத்த கட நா சாமர்த்தியம் நன்னகரிலே விஸ்தீரணம் -167-
கடி தகட கவி கடநா பாந்தவம் அவ்வூரிலே த்வி குணம் -168-
கைம்முதல் இழந்தார் உண்ணும் நிதியின் ஆபத் சகத்வம் புகுமூரிலே சம்ருத்தம் -169
சென்று சேர்வார்க்கு உசாத் துணை யறுக்கும் ஸுந்தர்யம் மா நகரிலே கோஷிக்கும் -170
ப்ரவண சித்தம் பரத்வ விமுகமாக்கும் ஆனந்த வ்ருத்தி நீணகரிலே -171-
சாதராரைப் பரிசு அழிக்கும் சேஷ்டித்த ஆஸ்ச்சர்யம் குளத்தே கொடி விடும் -172-
ஸ்ரம மனம் சூழும் ஸுகுமார்யா பிரகாசம் ஆய்ச்சேரியிலே -173
மஹா மத்தியில் அச்சம் கேட்டு அமரும் ஸுர்யாதிகள் சிற்றாற்றிலே கொழிக்கும் -174-
சாத்ய ஹ்ருதி ஸ்த்தனாயும் சாதனம் ஒருக்கடுக்கும் க்ருதஜ்ஞதா கந்தம் தாயப்பதியிலே -175-
அவகாஹித்தாரை அநந்யார்ஹம் ஆக்கும் நாயக லக்ஷணம் வளம் புகழமூரிலே கூட்டமிடும் -176-
போக்ய பாகத் த்வரை தெளிந்த சந்தைக்கு முன்னிலை மூன்றிலும் பிறக்கட்டும் -177
போகத்தில் தடுமாறும் சீலம் காட்கரையிலே கரை அழிக்கும் -178
மகாத்மாக்கள் விரஹம் சஹியாத மார்த்தவம் வளத்தின் களத்தே கூடு பூரிக்கும் -179
பிரிந்த துன்பக் கடல் கடத்துக் விஷ்ணு போது ஆன்ரு சம்சயம் நாவாயிலே நிழல் எழும் -180
சரண்ய முகுந்தத்வம் உத்பலாவதாகத்திலே பிரசித்தம் -181-
மார்க்க பந்து சைத்யம் மோஹ நத்தே மடுவிடும் -182-
ச ஸைன்ய புத்ர சிஷ்ய சாத்ய சித்த பூ ஸூரார்ச்சிநத்துக்கு முக நாபி பாதங்களை த்வார த்ரயத்தாலே காட்டும் சாம்யம் அநந்த சயனத்தில் வ்யக்தம் -183-
மோக்ஷ தானத்தில் ப்ரண பாரதந்தர்யம் வளம் மிக்க நதியிலே கரை புரளும் -184-
த்யாஜ்ய தேஹ வ்யாமோஹம் மருள்கள் கடியும் மயல் மிகு பொழிலிலே தலைக்கும் -185
அங்கீ கரிக்க அவகாசம் பார்க்கும் ஸ்வாமித்வம் பெரு நகரிலே பேர் பெற்றது -186-
12 மலை நாட்டு திவ்ய தேசங்கள் / 5 சோழ நாட்டு திவ்ய தேசங்கள் / 1 வட நாட்டு திவ்ய தேசம் / 12 பாண்டிய நாட்டு திவ்ய தேசங்கள் /-ஆக 30 –
38 திவ்ய தேசங்கள் –ஊரகம் / பாடகம்/ வெக்கா/ அயோத்யா/ த்வாரகா / வட மதுரை / பாற்கடல் / பரம பதம் -சேர்த்து -38-
அது வரை தான் கால தாமதம் -பிராரப்த கர்மம் தொலையும் வரை -ஞானம் ஆதித்யவது -கர்மங்களால் மூடப்படாமல் -விளங்கி –
சூஷ்ம சரீரம் -நுண்ணிய மேனி உடன் சென்று -ஸத்காரம் -பெரிய கல்யாணம் போலே
-பரன் போலே சஜாதீயம் தானே ஞாத்ருத்வம் -ஆனந்தமயத்வம் -சேஷத்வம் -பாரதந்தர்யம் –
சக சாம்யா சமதர்ம சுருதிகள்
இடத்தால் கூடி இருந்து -சாமியாபுத்தி பெற்று -சமதர்மம் பெற்று -ஞானா ஆனந்தங்களில் சாம்யம் -போக மாத்ர சாம்ய லிங்காசா -ஸூ த்ரம்-
ஜகத் வியாபாரம் வர்ஜம் -ஏக போக உரிமை அவனுக்கு -யுக பத்தாக அனுக்கிரக கார்யம் –
சேஷி மற்ற சேஷ பூதர்களையும் இப்படி ஆக்க பரம காருண்யத்தால் செய்யும் கிரியைகள் –
ஆனந்தம் இங்கே -அங்கு எதிர்பார்ப்பு -மகிழ்ச்சி -ஆழ்வார் திரு அடி சேவை -கைகளில் எழுந்து அருளி -பெருமாள் திருவடிகளில் –
பிரத்யக்ஷ மாக பிரமாணம் காட்டி -நம்பிக்கை கொடுத்து நமக்கும் இந்த பேறு-சூழ் விசும்பு -பாசுரம் அனுசந்தித்து
நம்பெருமாள் அனைத்தையும் களைந்து ஆழ்வாருக்கு சம்பாவனையாக கொடுத்து அருளி
செம்மா பாத பற்பு தலை மேல்சேர்த்து -இளையவர்க்கு கவித்த மௌலி – சர்வ ஸ்வதானம்-பண்ணி – பிரபன்ன ஜன கூடஸ்தர் –
பிரபத்தி ஏற்றம் காட்டி அருளி -திருத் துழாய் வைத்து மறைத்து -அவா அற ச் சூழ் -சாத்து முறை பாசுரம் சாதித்து பிரசாதம் சாதிப்பார்கள் –
பிரகிருதி உள்ளார் ஆர்ப்பாராம் முதல் இரண்டு பாசுரங்கள் –
ஒன்பதாம் திருவாய் மொழியில் -கீழில்-திருவாய் மொழி இறுதியாக பகவத் விஷயமாகத் தமக்கு
அனுபவ ப்ராவண்ய ரூபமான பரபக்தி நடந்தபடியே அருளிச் செய்து
அனுபவத்தில் அன்விதாரான இவர்க்குப் பரிபூர்ண அனுபவத்தில் ப்ராவண்ய அதிசயம் பிறக்கைக்கு உறுப்பாக
இவரைக் கொண்டு போய் அனுபவிப்பிப்பதாக நினைத்து
அர்ச்சிராதி மார்க்கம் முதலாக பிராப்தி பர்யந்தமான ப்ரயோஜன அம்சத்தைப்
பரஞ்ஞான விஷயமாம்படி பிரகாசிப்பிக்க நினைத்த சர்வேஸ்வரனுடைய
போக்ய குண பூர்த்தியையும்
நிருபாதிக சேஷித்வத்தையும்
அநந்யார்ஹத அபாதகத்வத்தையும்
போக்யத்வ பூர்த்தியையும்
அதுக்கு அடியான ஸ்ரீ யபதித்வத்தையும்
சேஷித்வ சிஹ்னத்தையும்
சமுத்திர ஸாயித்வாதிகளால் வந்த சர்வாதிகத்வத்தையும்
ஆஸ்ரித ஸுலப்யத்தையும்
பரமபத நிலயத்வத்தையும்
ஸத்காரத்தையும்
அனுசந்தித்து -ஏவம் பூதனான சர்வேஸ்வரன் முக்தராய்ப் போகிற பாகவதருக்கு பந்தவ்யமான அர்ச்சிராதி மார்க்கத்தையும்
அங்கு உண்டான ஆதி வாஹிக சதிகார பிரகாரங்களையும்
தேச விசேஷ ப்ராப்தியையும்
நித்ய ஸூரி பரிஷத் அந்தர்பவாத்தையும்
அபரோஷித்த க்ரமத்திலே முக்தராய்ப் போகிற பாகவருடைய ஸத்கார பிரகாரத்தை அருளிச் செய்கிறார் –
———
10-10-முனியே நான்முகனே முக்கண் அப்பா -ப்ரவேஸம்-
பரமபதத்திலே புக்கு-அந்தமில் பேர் இன்பத்து அடியரொடு இருந்தமை -என்கிறபடியே
எல்லை இல்லாத ஆனந்தத்தை உடையராய்-
அத் திரளிலே இருந்த இருப்பு நினைக்கக் கூடிய ஞானமே மாத்ரமாய்-
புறம்பே கண்டு அனுபவிப்பதற்கு தகுதி இன்றிக்கே இருந்தது –அதற்கு மேலே-
இல்லை கண்டீர் இன்பம் -9-1-6–என்றும்
பிறப்பாம் பொல்லா அருவினை மாய வன் சேற்று அள்ளல் பொய்ந்நிலம் -திரு விருத்தம் -100-என்றும்
தாம் பிறருக்கு உபதேசிக்கிற இவ் உலகத்திலே சரீரத்தோடு கட்டுப் பட்டவராய்-
இருக்கிற படியையும் கண்டார் –
கண்டு -மேருவின் உச்சியில் துக்கம் இல்லாதவனாய்-மேலான சுகத்தை உடையவனாய் இருக்கிறான் ஒருவன்-
பல பல துக்கங்களை உடையதாய்-தாண்ட முடியாததாய்-பேர் ஆழமாய்-
ஓர் இடத்திலும் நிலை இன்றிக்கே இருக்கும்படியான பாதாளத்திலே-
விழுந்து நோவு படுமாறு போலே துக்கம் கொண்டவர் ஆனார் –
அதற்கு மேலே
பண்டு அவன் தமக்கு கை வந்த படியையும் -என்னை உயிர் வேறு அன்றி ஒன்றாக –
தன்னைப் பெறுகைக்கு உபாயம் தானே அல்லது வேறு இன்றிக்கே இருக்கிற படியையும்-
ஆவிக்கு ஒரு பற்றுக் கொம்பு நின் அலால் அறிகின்றிலேன் –
தன் தலையிலே ஒரு உபாயத்தை ஏறிட்டுக் கொண்டு ஒழுகுமவனுக்கும் -மேவித் தொழும் பிரமன் சிவன் –
தன் கை பார்த்து இருக்க வேண்டும் படி-
எல்லா பொருள்களையும் காப்பாற்றுகின்றவனாய்-இருக்கும் படியையும் நினைந்து-
அக்கணத்தில் பெறாமையாலே-
இப்படி இருக்கிறவன் நம்மை இங்கனே நோவு பட விட்டு வைப்பதே என்று-மிகவும் துக்கம் கொண்டவர் ஆனார்-
அங்கனம் துக்கம் கொண்டவர் -தாய் தந்தையர்கள் முன்னே இருக்க பசியாலும் தாகத்தாலும்-
நோவு படுகிற சிறு குழவியானது துன்பத்தின் மிகுதியாலே தாய் பேரைச் சொல்லிக் கூப்பிடுமாறு போலே-
வள வேழ் உலகின் -என்ற திருவாய் மொழியில் கூறிய தன்மையை உடைய தாம்-
தம் தன்மையை நினைக்க ஆற்றல் இல்லாதவராய் –
தூதர் மூளவும் அறிவிக்கவும் இயலாதவராய்-
அவனே எதிரே நின்று பிராட்டி ஆணை இட்டு தலக்கு -நாணம் -அற்றுச் சொல்லும்படியான ஆற்றாமையோடு-
இரக்கம் இல்லாதவர் உடைய மனங்களும் இரங்கும்படியாக-
அவனுக்கு தம்மைக் காப்பாற்றி அல்லது பரம பதத்தில் இருப்பு அரிதாம் படியாகவும்-
காற்றுத் தீயிலே அகப்பட்டாரைப் போலே துயர ஒலியோடு பெரு மிடறு செய்து கூப்பிட்டு-
தே யத்யமானா பதிதா சவிரா ந நத்யமானா பயசல்யவித்யா
சாகா ம்ருகா ராவணா சாயகர்த்தா ஜக்மு சரண்யம் சரணம் சம ராமம் -யுத்தம் -50-45
வானரங்கள் ராவணனுடைய அம்பால் துன்பம் உற்றவனாய் ஓடின
புகலிடமான ராமனை சரணம் அடைந்தன -என்கிறபடியே
தரிக்க மாட்டாமையாலே அவன் திருவடிகளிலே சரணம் புக்கார்
இவர் சரணம் புக
அவன் அருள்கடல் ஆகையாலே-இவரை இப்படி நோவுபட இட்டு வைத்தோமே அன்றோ -என்று
இவரைக் காட்டிலும் தாம் நொந்து
கோலத் திரு மாகளோடு உன்னைக் கூடாதே –
பண் கொண்ட புள்ளின் சிறகு ஒலி பாவித்து –
பிராட்டிமாரோடே பெரிய திருவடி மேலே இவர் விரும்பியபடியே எல்லாவற்றாலும் நிறைந்தவனாய் வந்து தோற்றி
இவருடைய சரீர சம்பந்தத்தையும் அறுத்து
அடியார்கள் குழாம களை உடன் கூடுவது என்று கொலோ -என்று இவர் ஆசைப் பட்ட படியே
அத்திரளிலே புகப் பெற்று-
என் அவா அறச் சூழ்ந்தாயே -என்றும்
அவா அற்று வீடு பெற்ற -என்றும்
இவர் தாமே சொல்லலாம்படி இவர் விடாயும் தீர
இவர் விடாய்க்கு அவ்வருகான தன்னுடைய விடாயும் தீரும் படி கலந்து அருளினான் -என்கிறார்-
இப் பிரபந்தத்துக்கு தலைவன் சர்வேஸ்வரன் -பிரமேயம் –
இப்பிரபந்தம் -அவாவில் அந்தாதி -பிரமாணம்
மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர் கவி பாடினார் -பிரமாதா
இனி இவருடைய அவதாரம் தான்-சர்வேஸ்வரனுடைய அவதாரத்தைப் போன்று
சாதுக்களின் உடைய புண்ணியத்தின் பலம்
பிரமேய பிரமான பிரமாதா வைலஷணயத்தையும்
இவர் அவதார வைலஷணயத்தையும்
அருளிச் செய்கிறார் –
ஷேமுசி பக்தி ரூபா -பக்தி ரூபாபன்ன -மதி நலம் -பக்தி பூமா என்றுமாம் –
அகில புவன ஜென்ம ஸ்தேம பங்க-ஆதி லீலே-
உலகம் யாவையும் -தாம் உளவாக்கலுக்கும் நிலை பெறுத்தலும் நீங்கலும் நீங்கலா -அலகிலா விளையாட்டுடை அண்ணல் அவன் –
பத்தாம் திருவாய் மொழியில் கீழ் -அர்ச்சிராதி மார்க்கத்தாலே போய் தேச விசேஷத்திலே புக்குத்
திரு மா மணி மண்டபத்திலே ஏறி ஸூரி பரிஷத்திலே அந்தர்பவித்து நிரதிசய ஆனந்த யுக்தனாய்க் கொண்டு
முக்தன் இருக்கும் இருப்பை அபரோஷிக்க –
பர ஞானத்தால் இது தம்முடைய பேறாக சாஷாத் கரித்து அனுபவித்தவர் -அந்த சமாதி குலைந்தவாறே –
முன்பு இருந்த சம்சாரத்தை தரிசித்து -கொடு உலகம் காட்டேலே -என்று தாம் அஞ்சி இருந்த சம்சாரத்தைத் தரிசித்து
மிகவும் ஆர்த்தராய் அபரோக்ஷ ஸித்தமான இப்பேற்றை பெற்று அல்லது தரிக்க மாட்டாத படி
பரமபக்தி ரூபமான நிரவதிக அபி நிவேசம் பிறந்து
இவ்வளவும் நம்மைப் புகுர நிறுத்தினவன் தானே முழுக்க நிர்வஹிப்பானாக ஏறிட்டுக் கொண்டு
பெரிய திருவடி திருத் தோளிலே ஸந்நிஹிதனாய்த் தம் தலையிலே திருவடிகளை வைத்து
பல பிரதானத்திலே அதி த்வரிதானாம் படியை அனுசந்தித்து
அவ்வனுசந்தான பாவநத்வத்தாலே அபரோக்ஷ சித்தனான சர்வேஸ்வரனுடைய உபகாரமான
போக்ய விக்ரஹத்தையும்
ஸ்ரீ மஹா லஷ்மீ வல்லபத்வத்தையும்
சர்வ காரணத்வத்தையும்
ஸமஸ்த வாஸ்து பிரகார யோகத்தையும்
அதிசயித போக்யத்வத்தையும்
அத்யந்த பிரணயித்வத்தையும்
ஆஸ்ரித ரக்ஷகத்வத்தையும்
சர்வ அந்தராத்மவத்தையும்
ஸமஸ்த பிரதானத்வத்தையும்
பரிபூர்ண போக பிரதத்வத்தையும்
அனுசந்தித்து ஏவம் விசிஷ்டனான சர்வேஸ்வரனுடைய சந்நிதியில் தம்முடைய
ஆர்த்தியும் அபி நிவேச அதிசயமும் தோற்றும்படி அவனுடைய உபகாரகத்வாதிகளைச் சொல்லி
மறுக்க ஒண்ணாத படி பிராட்டி திருவாணை இட்டு-
சர்வ பிரகார ரக்ஷகனான நீ எனக்குப் பூர்ண அனுபவத்தைத் தர வேணும் -என்று மிகவும் கூப்பிட
அவனும் இவருடைய வரவுக்கு ஈடாக குண விக்ரஹ விபூதி பரிபூர்ணனாய்க் கொண்டு பிராட்டியோடும் கூட
ஏக ரஸமாம்படி ஸம்ஸ்லேஷித்த பிரகாரத்தை அனுசந்தித்து
இனி இந்தப் பேற்றுக்குத் தட்டில்லை என்று நிஷ்கர்ஷித்து தாம் அவாப்த ஸமஸ்த பலரான படியைப் பேசி முடித்து அருளுகிறார் –
———
ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –
ஆத்யே அந்திம சதகம் முனி ஸூ யாத்ராம் நிச்சிதய
சகாயம், அபேக்ஷமான ஆப்தம் ஹிதஞ்ஞாம்
அஹித சிதம் அம்புஜாக்ஷம்
மோகூர் அதிசம் முராரி ஆஸ்ரய சஹா –
———
தனு வ்ருத்திகளுக்கு அஸ்ய பிராப்யத்வம் துரித ஓகம்
நிவர்த்தனம் வைகுண்ட மேத்ய கரணீய
அசேஷ தாஸ்யம் அத்ரைவ கேவலம்
அநந்த புரே சடஜித் த்வதீயே –
தனு வ்ருத்திகளுக்கு -சரீரம் உடைய சம்சாரிகளுக்கு
அசேஷ தாஸ்யம் அத்ரைவ -இந்த தேகத்துடன் இந்த தேசத்தில்
———
ஸூ உபேஷகம் ஸ தேனை விஸ்ரம்பித
கோபீ வ்யூக்தம் அபி கோ சபலம் அசிரமேவ
வ்யூக்த தாஸ்யம் ஹரிம் அபி நிஜேஷ்டம்
உபேக்ஷகம் தம் விபுல த்ருஷ்ணா தம் அதி ஸங்க்யை-
கோ சபலம் -த்வத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி
அசிரமேவ சடக்கென
வ்யூக்த தாஸ்யம் -விடுபட்ட -நித்ய ஸூரிகளை விட்டு
ஹரிம் அபி நிஜேஷ்டம் -தனக்கு இஷ்டம்
உபேக்ஷகம் -தம் -விரும்பாமல்
விபுல த்ருஷ்ணா தம் அதி ஸங்க்யை-அடங்கா காதலால் –
———
ஹரவ் பூர்வாம் உபதிஷ்ட உஜ்ஜீவனாயா
ஜெகதாம் பலயுதாம் அநு கம்பையா
பக்திம் நிஜகாதா ஸூ பலாமகஸ்ய
சுவார்த்தாத் பரார்த்த ஆஸக்தி –
———
பக்தேக சரீரம் அபி பஞ்சமோ மித ஸூக்தி ஜாலைகி
பிராப்தவ் த்வாராதிசயம் பக்தி சமுசுகானாம்
கிருஷ்ணஸ்ய பாத உகளம் பிரதி பாவ நீயும்
ஜகதி ஜிஞ்ஞாசித்தம்
பக்தேக சரீரம் அபி -பிரகாரம் கரண த்ரயத்தால் ஆஸ்ரயம் -உபதேசிக்க வந்து பக்தி அங்கங்கள் அருளிச் செய்கிறார்
பிராப்தவ் த்வாராதிசயம் -பெருமாளுக்கு த்வரை
பக்தி சமுசுகானாம் -ஜகதி நண்ணும் மனம் உடையீர்
கிருஷ்ணஸ்ய பாத உகளம் கண்ணன் கழல் இணை
——–
வைகுண்ட தாம வி நிவேச ஈஷும் ஈசம்
தச்ச ஸூ கீய விதி விதாது காமம் ஈசம்
ததீயா வாஞ்சாதீ த உபக்ருதீ
ஷ்ஷடே பஸ்யன் முனி –
———
ததீயே சீலே அதிகம்ய ஹரிம் அஸ்மின் இதம் உபைமி
ஸூ சரீர லோலா தத் தோஷ முக்தமபி
தத் த்யஜனே ஸூ யாஞ்சாம் சார்த்தாம் சிகீரிஷும்
முனி சகுலு சப்தமதோ –
ததீயே சீலே அதிகம்ய ஹரிம் -அனைத்தையும் போக்கும் மானங்கார கெடும் அபகரிக்க
அஸ்மின் இதம் உபைமி -அடைகிறேன் அணைவேன்
தத் த்யஜனே ஸூ யாஞ்சாம் பிரார்த்தனையை
———
அஷ்டமே அபூத் முனி தத்த உத்தரம் வியாமோஹம்
ஆத்மனி விபோ-அவேலா-அத்யாதரம்
மயி பிராக் -முன்பு -கதம் தும் அநாதார
ஹேதும் வைத்த உசிதமிக்க அனுப்பிருச்ச்ய
முன்பு -கதம் தும் அநாதார ஹேதும் வைத்த உசிதமிக்க
அனுப்பிருச்ச்ய விடாமல் கேட்டு –
——
நவமே சடாரி ஆசாதீதோ முனி ரபோத்
தத்ர ஸ்திதிக்கு சுகமயீஞ்ச ஹரி பிரியாணாம் ததீய ஜனீ
ஸத்காரம் சுரைர் அபி அத்வனி
சந்நிஹ்ருஷ்டேபிரதி உத் கதிம் பரம தாம்நி –
——–
தத் தர்ச நஞ்ச மனசையைவ ஸஷு
தைவ இதி பக்த்யாதயா பரமயா அச்யுதபாதம்-
நச புன பார்த்ததே மாந்த்யம்
பத்தமாஞ்ஞாஜாய பகவதா பரிக்ருதயா
ஆச்சாரயோதயா பந்தாதி த்ராவிட நியாயம் சங்கதி
அப்யதா து அபிராம வராமர் வராஹயத்
—
ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்-
தைத்யா நாம் நாசகத்வாத்- வித்திருத்த துளசிதாயா மவ்லி
ஜையித்வாத் சார்பாதீஸே சயதவாத நிரவதிக மஹாத்வாத் பரஞ்சோதி
உல்லாச பாவாத்யாத் லோகா நாம் ஸ்ருஷ்டு பாவாத்
தசரத சுத தாபஸ் சிராந்தி ஹாரத் ஆகாரதை சத் கதி ஜலத தனு ருசி
1–தைத்யா நாம் நாசகத்வாத்–திரு மோகூர் நாளும் மேவி நன்கமர்ந்து நின்று அசுரரைத் தகர்க்கும்
2–வித்திருத்த துளசிதாயா மவ்லி–ஈன் தண் துழாயின் அலம் கலம் கண்ணி ஆயிரம் பேருடை யம்மான்
3-ஜையித்வாத்–நான்முகன் அரனொடு தேவர்கள் நாட வென்றி இம் மூ வுலகளித்து உழல்வான்
4–சார்பாதீஸே சயதவாத–சுடர் கொள் சோதியைத் தேவரும் முனிவரும் தொடர படர் கொள் பாம்பணைப் பள்ளி கொள்வான் திரு மோகூர்
5–நிரவதிக மஹாத்வாத் பரஞ்சோதி–நம் சுடர் ஒளி ஒரு தனி முதல்வன் அண்ட மூ வுலகளந்தவன் அணி திரு மோகூர்
6–உல்லாச பாவாத்யாத்–கூத்தன் கோவலன் குதற்று வல்லசுரர்கள் கூற்றம் ஏத்தும் நம் கட்கும் அமரர்க்கும் முனிவர்க்கும் இன்பன்
7–லோகா நாம் ஸ்ருஷ்டு பாவாத்–சுற்றும் நீர் படைத்து அதன் வழித் தொல் முனி முதலா முற்றும் தேவரோடு உலகு செய்வான் திரு மோகூர்-
8–தசரத சுத தாபஸ் சிராந்தி ஹாரத்–திரு மோகூர் பெயர்கள் ஆயிரம் உடைய வல்லரக்கர் புக்கு அழுந்த தயரதன் பெற்ற மரகத மணித் தடத்தினையே
9–ஆகாரதை சத் கதி–திரு மோகூர் நணித்து நம்முடை நல்லரண் நாம் அடைந்தனமே–
10–ஜலத தனு ருசி–காம ரூபம் கொண்டு எழுந்து அளிப்பான் திருமோகூர் நாமமே நவின்று எண்ணுமின் ஏத்துமின் நமர்காள்-
——-
ஸ்ரீ கேஸவாத்வேனே அத்புத சரிதேனே கதாதீச தாஸ்ய சஹா –
த்ரயீ மயன் ஆஸந்நத்வாத் பதித்வாத் அமர பரிஷதாம் ஆதி பூதத்வாத்
வியாபாரை ஸ்ருஷ்ட்டி முக்யை மதன ஜனனதா
புஜ சாய்த்தவம் முக்யைகி சரித்ரை அத்பத் கிலேச அபஹர்த்தா-
1–ஸ்ரீ கேஸவாத்வேனே–கெடும் இடராய வெல்லாம் கேசவா வென்ன நாளும் கொடு வினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுக கில்லார்
2–அத்புத சரிதேனே–அனந்த புர நகர் மாயன் நாமம் ஒன்றும் ஓர் ஆயிரமாம் உள்ளுவார்க்கும் உம்பரூரே
3–கதாதீச தாஸ்ய சஹா -த்ரயீ மயன்–தீரும் நோய் வினைகள் எல்லாம் திண்ணம் நாம் அறியச் சொன்னோம் பேரும் ஓர் ஆயிரத்துள் ஓன்று நீர் பேசுமினே
4–ஆஸந்நத்வாத்–அனந்த புரம் நேசம் செய்து உறைகின்றானை நெறிமையால் மலர்கள் தூவி பூசனை செய்கின்றார்கள் புண்ணியம் செய்தவாறே
5–பதித்வாத்–அனந்த புரத்து அண்ணலார் கமலபாதம் அணுகுவார் அமரர் ஆவார்
6–அமர பரிஷதாம் ஆதி பூதத்வாத்–அனந்த புரத்து அமரர் கோன் அர்ச்சிக்கின்று அங்கு அகப்பணி செய்வர் விண்ணோர்
நமர்களோ சொல்லக் கேண்மின் நாமும் போய் நணுக வேண்டும்
7–வியாபாரை ஸ்ருஷ்ட்டி முக்யை–துடைத்த கோவிந்தனாரே உலகு உயிர் தேவு மற்றும் படைத்த வெம் பரம மூர்த்தி பாம்பணைப் பள்ளி கொண்டான்
8–மதன ஜனனதா–படமுடை யரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண நடமினோ நமர்கள் உள்ளீர் நாமும் உமக்கு அறியச் சொன்னோம்–
9–புஜ சாய்த்தவம்–அனந்த புரம் தூம நல் விரை மலர்கள் துவளற வாய்ந்து கொண்டு வாமனன் அடிக்கென்று ஏத்த மாய்ந்து அறும் வினைகள் தாமே
10-முக்யைகி சரித்ரை–அனந்த புர நகர் எந்தைக்கு என்று சாந்தொடு விளக்கம் தூபம் தாமரை மலர்கள் நல்ல ஆய்ந்து கொண்டு ஏத்த வல்லார் அந்தமில் புகழினாரே
அத்பத் கிலேச அபஹர்த்தா–மாய்ந்து அறும் வினைகள் தாமே-
———
அம்போஜ அஷதய கீர்த்யா யது குல ஜதயா ஆத்மன ஸ்யாமளத்தவாத
கோவிந்தத்வாத் பிரிய உத்யத் வசன தயா சக்ர தாராயுதத்வாத்
ஸ்ரீ நீளா அஸ்மத் ப்ரதத்வாத் அதி சுபாக தயா கோப நிர்வாகத்வாத்
அஸ்தான ஸ்நேகா சங்காத பத காரிஜன் உதித ஸ்ரீ பதி
1–அம்போஜ அஷதய கீர்த்யா–தாமரைக் கண்கள் கொண்டு ஈர்தி ஆலோ தகவிலை தகவிலையே நீ கண்ணா–
2–யது குல ஜதயா–வீவ நின் பசு நிரை மேய்க்கப் போக்கே–
3–ஆத்மன ஸ்யாமளத்தவாத–யாவரும் துணை இல்லை யான் இருந்து உன் அஞ்சன மேனியை ஆட்டம் காணேன்
4–கோவிந்தத்வாத்–கோவிந்தா நின் தொழுத்தனில் பசுக்களையே விரும்பி துறந்து எம்மை இட்டு அவை மேய்க்கப் போதி
5–பிரிய உத்யத் வசன தயா–பணி மொழி நினைதொறும் ஆவி வேமால் பகல் நிரை மேய்க்கிய போய கண்ணா
6–சக்ர தாராயுதத்வாத்–அடிச்சியோம் தலை மிசை நீ அணியாய் ஆழி அம் கண்ணா உன் கோலப் பாதம்
7–ஸ்ரீ நீளா அஸ்மத் ப்ரதத்வாத்–ஆ மகிழ்ந்து உகந்து அவை மேய்க்கின்று உன்னோடு அசுரர்கள் தலைப் பெய்யில் எவன் கொல் ஆங்கே
8–அதி சுபாக தயா–உன் தாமரைக் கண்ணும் வாயும் கைகளும் பீதக வுடையும் காட்டி ஓசி செய் நுண்ணிடை இள வாய்ச்சியர் நீ யுகக்கும் நல்லவரோடும் உழி தராயே–
9–கோப நிர்வாகத்வாத்–எம்பெருமான் பசு மேய்க்கப் போகேல்
10-அஸ்தான ஸ்நேகா சங்காத பத–அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ
காரிஜன்-உதித ஸ்ரீ பதி–திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவே-
——–
ஸ்ரீ மத் தாமோதரத்வாத் அமர பரிஷதாம் அபி அத்ருஸ்ய பூம்னா
சக்ராதீஸ்யாத் வாத வட தள சயநாத் நாக ராஜா சயநாத்
வக்ஷஸ் பரிஷத் முகத்வா பரம புருஷதாய மாதவத்வாத் யோகாதி
துஷ் பிராப்யாப்யோ அஹம் ஸூ கம திடம் மாதவம் –
1–ஸ்ரீ மத் தாமோதரத்வாத்–சார்வே தவ நெறிக்குத் தாமோதரன் தாள்கள் கார்மேக வண்ணன் கமல நயனத்தன்-
2–அமர பரிஷதாம் அபி அத்ருஸ்ய பூம்னா–பெருமையனே வானத்து இமையோர்க்கும் காண்டற் கருமையனே-
3–சக்ராதீஸ்யாத் வாத–ஆள்கின்றான் ஆழியான் ஆரால் குறை உடையம் மீள்கின்றதில்லை பிறவித் துயர் கடிந்தோம்
4–வட தள சயநாத்–தலை மேல் புனைந்தேன் சரணங்கள் ஆலின் இலைமேல் துயின்றான் இமையோர் வணங்க
5–நாக ராஜா சயநாத்–மெச்சப் படான் பிறர்க்கு மெய் போலும் பொய் வல்லன் நச்சப் படும் நமக்கு நாகத்து அணையானே
6–வக்ஷஸ் பரிஷத் முகத்வா–நாகத்து அணையானை நாள்தோறும் ஞானத்தால் ஆகத்து அணைப்பார்க்கு அருள் செய்யும் அம்மானை
7–பரம புருஷதாய -பணி நெஞ்சே நாளும் பரம பரம்பரனை பிணி ஒன்றும் சாரா பிறவி கெடுத்து ஆளும்-
8/9-மாதவத்வாத் யோகாதி–ஆழியான் ஆழி யமரர்க்கும் அப்பாலான்–என்றும்
கண்டேன் கமல மலர்ப்பாதம் காண்டலுமே விண்டே ஒழிந்த வினை யாயின வெல்லாம்–என்றும்
10-துஷ் பிராப்யாப்யோ அஹம் ஸூ கம திடம் மாதவம் –மாதவனை நாளும் புகையால் விளக்கால் புது மலரால் நீரால்
திகை தோறு அமரர்கள் சென்று இறைஞ்ச நின்ற
——
நாம்நாம் சங்கீர்த்தனேன ஸ்திர பரிபீடன் தயா பாவ நாதோ
அநு வேலாம் ஸம்ஸ்ப்ருத்யா புஷ்ப த்யான அத்யயனம் நிவாஸனை
தர்மகி வர்ணாஸ்ரம பத்து வித பஜனை கிரியா நிருத்யாயா
ஸ்தோத்ர க்ருத்யை தீர்க்க பந்து அகில த்ரவிட தர்சி
1–நாம்நாம் சங்கீர்த்தனேன—கண்ணன் கழலிணை-நண்ணும் மனம் உடையீர் எண்ணும் திருநாமம்-திண்ணம் நாரணமே
2–ஸ்திர பரிபீடன் -தயா –நாரணன் எம்மான் பாரணங்கு ஆளன் வாரணம் தொலைத்த காரணன் தானே
3-பாவ நாதோ –தானே உலகு எல்லாம் தானே படைத்து இடந்து தானே உண்டு உமிழ்ந்து தானே ஆள்வானே–
4-அநு வேலாம் –ஆள்வான் ஆழி நீர்க் கோள்வாய் அரவு அணையான் தாள்வாய் மலர் இட்டு நாள்வாய் நாடீரே
5-ஸம்ஸ்ப்ருத்யா—நாடீர் நாள் தோறும் வாடா மலர் கொண்டு பாடீர் அவன் நாமம் வீடே பெறலாமே-நாடீரே த்யானம்
6–புஷ்ப த்யான அத்யயனம்–நாடீர் நாள் தோறும் வாடா மலர் கொண்டு பாடீர் அவன் நாமம் வீடே பெறலாமே
7–நிவாஸனை–மேயான் வேங்கடம் காயா மலர் வண்ணன் பேயார் முலை உண்ட வாயான் மாதவனே
8–தர்மகி வர்ணாஸ்ரம –மாதவன் என்று என்று ஓத வல்லீரேல் தீது ஒன்றும் அடையா ஏதம் சாரவே
9-பத்து வித பஜனை கிரியா–சாரா ஏதங்கள் நீரார் முகில் வண்ணன் பேர் ஆர் ஓதுவார் ஆரார் அமரரே
10-நிருத்யாயா ஸ்தோத்ர க்ருத்யை–அமரர்க்கு அரியானை தமர்கட்கு எளியானை அமரத் தொழுவார்கட்கு அமரா வினைகளே
தீர்க்க பந்து –வினை வல் இருள் என்னும் முனைகள் வெருவிப் போம் சுனை நல் மலர் இட்டு நினைமின் நெடியானே
அகில த்ரவிட தர்சி–நெடியான் அருள் சூடும் படியான் சடகோபன்
——–
சக்ரித்வாத் கேசவத்வாத் நாராயணத் வாத் ஸ்நேஹீத்வாதி
பாண்டாவானாம் அபிமத துளஸீ பூஜை நீயாத்வாத அம்போ
ஜாதீஷயத்வாத் கோவிந்தத்வாத் ஸூ யஷ ஸ்ரீ பாதித்தவை பாவாத்
தீவிர உத்தர மோதம் ஸூ பத விதரணே
1–சக்ரித்வாத்–ஆழியான் அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே
2-கேசவத்வாத்–கேசவன் எம்பெருமானைப் பாட்டாயே பல பாடிப் பழ வினைகள் பற்று அறுத்து
நாட்டாரோடு இயல்வு ஒழிந்து நாரணனை நண்ணினமே
3–நாராயணத் வாத்–நண்ணினம் நாராயணனை நாமங்கள் பல சொல்லி-
4–ஸ்நேஹீத்வாதி பாண்டாவானாம் அபிமத–மன் அஞ்சப் பாரதத்து பாண்டவர்க்காய் படை தொட்டான்
நன்னெஞ்சே நம் பெருமான் நமக்கு அருள் தான் செய்வானே
5–துளஸீ பூஜை நீயாத்வாத-தேன் ஏறு மலர்த் துளவம் திகழ் பாதன் செழும் பறவை
தான் ஏறித் திரிவான தாளிணை என் தலை மேலே
6–அம்போ ஜாதீஷயத்வாத்–வாட்டாற்றான் மதம் மிக்க கொலையானை மருப்பு ஒசித்தான் குரை கழல்கள் குறுகினமே–
7-8-கோவிந்தத்வாத் –குரை கழல்கள் குறுகினம் நம் கோவிந்தன் குடி கொண்டான்–என்றும்
மெய்ந்நின்ற கமழ் துளவ விரை ஏறு திரு முடியன் கைந்நின்ற சக்கரத்தன் –என்றும் –
9-ஸூ யஷ ஸ்ரீ பாதித்தவை பாவாத்–திகழ்கின்ற திரு மார்வில் திரு மங்கை தன்னோடும்
திகழ்கின்ற திருமாலார் சேர்விடம் தண் வாட்டாறு
10-தீவிர உத்தர மோதம்–பெரியார்க்கு ஆட்பட்டக் கால் பெறாத பயன் பெறுமாறு
வரி வாள்வாய் அரவணை மேல் வாட்டற்றான் காட்டினனே
ஸூ பத விதரணே–காட்டித் தன் கனை கழல்கள் கடு நரகம் புகல் ஒழித்த
வாட்டாற்று எம் பெருமானை வளம் குருகூர்ச் சடகோபன்-
———
அத்யாச்சர்ய ஸ்வ பாவாத் ஹ்ருதய கதத்தயா -ஸூவஸ்துதா பிரேரகத்வாத்
ஸ்வாமித்வாத் சர்வ பூதாந்தர அனுகதாதயாத் ஸூ வஸ்துதவ்
கர்த்ரு பாவாத் ஆபத் பந்துத்வ யோகாத் பகுவித ஸவித ஸ்தான
வத்த் வேனா தேவ ஸ்ரீ மான் ஸூ ஜன பரிகரம் திருமேனி
1–அத்யாச்சர்ய ஸ்வ பாவாத்- ஹ்ருதய கதத்தயா -திருமால் இரும் சோலை வஞ்சக் கள்வன் மா மாயன்
மாயக் கவியாய் வந்து என் நெஞ்சும் உயிரும் உள் கலந்து நின்றார் அறியா வண்ணம்
2–ஸூவஸ்துதா பிரேரகத்வாத்-தானே ஆகி நிறைந்து எல்லா உலகும் உயிரும் தானே யாய்
தானே யான் என் பான் ஆகி தன்னைத் தானே துதித்து
3–ஸ்வாமித்வாத் —என்னை முற்றும் உயிர் உண்டு என் மாய ஆக்கை இதனுள் புக்கு
என்னை முற்றும் தானேயாய் நின்ற மாய அம்மான்-அடுத்த பதிகார்த்தம் பொசிந்து காட்டுகிறார்
4–சர்வ பூதாந்தர அனுகதாதயாத்–உலகும் உயிரும் தானேயாய் நன்கு என் உடலம் கை விடான் ஞாலத்தூடே நடந்து உழக்கி
5–ஸூ வஸ்துதவ் கர்த்ரு பாவாத்–பண்ணார் பாடல் இன் கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி
தென்னா என்னும் என் அம்மான் திரு மால் இரும் சோலையானே
6–ஆபத் பந்துத்வ யோகாத்–செழு மூஉலகும் தன்
ஒரு மா வயிற்றின் உள்ளே வைத்து ஊழி ஊழி தலை அளிக்கும் திருமால்
7–8–9-10–பகுவித ஸவித ஸ்தான வத்த் வேனா தேவ –பிரமன் அம்மானும் தேவர்கோனும் தேவரும் இருள்கள் கடியும் முனிவரும் ஏத்தும் அம்மான்-என்றும்
திருமால் இரும் சோலை மலையே திருப் பாற் கடலே என் தலையே திருமால் வைகுந்தமே தண் திரு வேங்கடமே எனது உடலே–என்றும்
ஊழி முதல்வன் ஒருவனே என்னும் ஒருவன் உலகு எல்லாம்
ஊழி தோறும் தன்னுள்ளே படைத்துக் காத்துக் கெடுத்து உழலும் ஆழி வண்ணன் என் அம்மான்–என்றும்
ஸ்ரீ மான் ஸூ ஜன பரிகரம் திருமேனி–திரு மால் இரும் சோலை மேய நங்கள் கோனே யானே நீ ஆகி என்னை அளித்தானே–
———
லஷ்மி காந்தஸ்ய யோகாத் விபதி சகிதயா திவ்ய தேச ஸ்திதித்யாத்
மோக்ஷ உத்யோகாத் தத்தர்த்தம் க்ரியா சபதத்வாத் ஸர்வதாகா
சந்நிஹிதாத் த்ருஷ்யந்த சந்நிவாசாத் அதி விதாரணக
ஸூ ஸ்வபாவ பிரகாசாத் ஸ்வாமித்வாத் துஷ்யந்தி இத்தம்
1–லஷ்மி காந்தஸ்ய யோகாத்-திருமால் சென்று சேர்விடம் தென் திருப் பேரே
2–விபதி சகிதயா–காரேழ் கடல் ஏழ் மலை ஏழ் உலகு உண்டும் ஆரா வயிற்றானை அடங்கப் பிடித்தேனே
3–திவ்ய தேச ஸ்திதித்யாத்–கொடிக் கோபுர மாடங்கள் சூழ் திருப் பேரான் அடிச் சேர்வது எனக்கு எளிது ஆயினவாறே
4–மோக்ஷ உத்யோகாத்–திருப் பேரான் தெளிது ஆகிய சேண் விசும்பு தருவானே
5–தத்தர்த்தம் க்ரியா சபதத்வாத்–ஊனேய் குரம்பை இதனுள் புகுந்து இன்று தானே தடுமாற்ற வினைகள் தவிர்த்தான்
6–ஸர்வதாகா சந்நிஹிதாத்–திருப் பேர் நகரான் திருமால் இரும் சோலைப் பொருப்பே உறைகின்ற பிரான்
இன்று வந்து இருப்பேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
7–த்ருஷ்யந்த சந்நிவாசாத்–திருப் பேரான் கண்டு களிப்ப கண்ணுள் நின்று அகலானே
8–அதி விதாரணக–திருப் பேரான் திண்ணம் என் மனத்துப் புகுந்தான் செறிந்து இன்றே
9–ஸூ ஸ்வபாவ பிரகாசாத் –குன்று என்னத் திகழ் மாடங்கள் சூழ் திருப் பேரான் ஓன்று எனக்கு அருள் செய்ய உணர்த்தல் உற்றேனே
10-ஸ்வாமித்வாத் துஷ்யந்தி இத்தம்–உற்றேன் உகந்து பணி செய்ய உன பாதம் பெற்றேன் ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய்–
——
ஸ்வாமி த்வாத் ஸ்ரீ சன் நாராயணன் இதி விக்ரமாது விஷ்டமானாம்
ஸ்ரீ மத்வாத் மதுரா மது சக்ரவத்வாத் ஜல நிதி சயநாச்சாபீ
கோவிந்தன் பாவாத் வைகுண்ட ஸ்வாமி பாவாத் அபிச
நிஜ ஜன அர்ச்சிராதி கம்ய ஸ்ரீ சடாரி பபூவ-கதயாமாச-
1–ஸ்வாமி த்வாத்-ஏழ் பொழிலும் வளம் ஏந்திய என் அப்பன் வாழ் புகழ் நாரணன்–
2–ஸ்ரீ சன் நாராயணன் இதி–நாரணன் தமரைக் கண்டு உகந்து நன்னீர் முகில் பூரண பொற் குடம் பூரித்தது
3-விக்ரமாது விஷ்டமானாம் –பொழி வனர் பூமி அன்று அளந்தவன் தமர் முன்னே எழுமின் என்று இருமருங்கு இசைந்தனர்
4-5-ஸ்ரீ மத்வாத்—மது விரி துழாய் முடி மாதவன் தமர்க்கே—என்றும்
மாதவன் தமர் என்று வாசலில் வானவர் போதுமின் எமது இடம் புகுதுக என்றலும் கீதங்கள் பாடினர்–என்றும் –
மதுரா மது -லவணாசுரன் மது அப்பா பிள்ளை
6–சக்ரவத்வாத்–ஆழியான் தமர் என்று வாள் ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே
7–ஜல நிதி சயநாச்சாபீ–கடல் கிடந்த எம் கேசவன் கிளர் ஒளி மணி முடி குடந்தை எம் கோவலன் குடி அடியார்க்கே
8–கோவிந்தன் பாவாத்–குடி அடியார் இவர் கோவிந்தன் தனக்கு என்று முடி யுடை வானவர் முறை முறை எதிர் கொள்ள
9–வைகுண்ட ஸ்வாமி பாவாத் அபிச–வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர் வைகுந்தன் தமர் எமர் எமது இடம் புகுது என்று
வைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர் வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே-
10-நிஜ ஜன அர்ச்சிராதி கம்ய–நிதியும் நல் சுண்ணமும் நிறை குட விளக்கமும் மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே
ஸ்ரீ சடாரி பபூவ-கதயாமாச–வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து அந்தமில் பேர் இன்பத்து அடியரொடு இருந்தமை
கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல் சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே–
———
ப்ரஹமே ச அந்தர் பிரவேசத் வாத் ஜல நிதி சுதயா ஸந்நிரோதபவ்ய பாவாத்
திவ்ய ஸ்ரீ விக்ரஹத்வாத் அகில தனு தயா அத்ருப்த்ய பீயூஷா பாவாத்
பத்மா பந்துத்வாத் பூம் உத்தரணாத் புண்ய பாப ஈஸி தத்வாத்
முக்தேகே தாதா அனுபாவாத்யாத் சடஜித் முக்திமான –
1–ப்ரஹமே ச அந்தர் பிரவேசத் வாத்–முனியே நான்முகனே முக்கண் அப்பா என் பொல்லாக்
கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே என் கள்வா
2–ஜல நிதி சுதயா -ஸந்நிரோதபவ்ய பாவாத் –மாயம் செய்யேல் என்னை உன் திரு மார்வத்து மாலை நங்கை
வாசம் செய் பூங்குழலாள் திரு ஆணை நின் ஆணை கண்டாய்
3–திவ்ய ஸ்ரீ விக்ரஹத்வாத்–என் பொல்லாக் கருமாணிக்கமே ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன்
4–அகில தனு தயா–உம்பர் அம் தண் பாழேயோ அதனுள் மிசை நீயேயோ அம்பரம் நற் சோதி அதனுள் பிரமன் அரன் நீ
உம்பரும் யாதவரும் படைத்த முனிவன் அவன் நீ
5–அத்ருப்த்ய பீயூஷா பாவாத்–தீர இரும்பு உண்ட நீரது போலே என் ஆர் உயிரை ஆரப் பருக எனக்கு ஆரா அமுது ஆனாயே
6–பத்மா பந்துத்வாத்–உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பா என் அன்பேயோ
7–பூம் உத்தரணாத்–கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்
நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனி போக்குவனோ
8–புண்ய பாப ஈஸி தத்வாத்–உற்ற இரு வினையாய் உயிராயப் பயன் ஆயவையாய்
9-முக்தேகே தாதா அனுபாவாத்யாத்–முதல் தனி வித்தேயோ முழு மூ உலகு ஆதிக்கெல்லாம்
முதல் தனி யுன்னை யுன்னை எனை நாள் வந்து கூடுவன் நான்
10-சடஜித் முக்திமான – சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே–
அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன்
——-
ஏவம் ஸ்வாநாம் கதிம் வியத்வஜ துரித ஹராஸ்தான சங்கார்ஹ ராகம்
சுப்ராபம் பக்தி பாஜாம் பஹுவித போஜன ப்ரக்ரியாம் ஸ்ரீ சடாரி
தீவ்ரோ த்யோகம் ஸ்வ தானே ஸ்வ ஜன தனு க்ருதார்த்யாதரம் பிராஹ காந்தே
ஸ்வேச்சா துஷ்டாம் சுக அர்ச்சீர் முகாஸ் சரணிமுக்தாம் மோஷாதம் முக்த போக்யம் –ரத்னாவளி –124-
அவனே அர்ச்சிராதி வழித் துணை ஆப்தன்
————
இத்தம் சேவ்யம் ஸூ போக்யம் ஸூபாஸ் உபகதனும் சர்வ போக்ய ப்ரக்ருஷ்தே
ஸ்ரேயஸ் தத ஹேது பூதம் பிரபதன சுலபம் ஸ்வ ஆஸ்ரித அநிஷ்ட ஜிஷ்ணும்
பக்த சந்த அநு க்ருதம் நிருபாதிக ஸூ ஹ்ருதம் சத் பத அவ்யய ஸஹாயம்
ஸ்ரீ சம் பிராஹ ஸ்வ சித்தே ஸ்வயம் இஹ கரணாம் ஸ்வ பிரபந்தே சடாரி –ரத்னாவளி -125-
ஆத்யே ஸ்வ பிரபந்தே சதஜித பிதாதே ஸம்ஸரதேர் துஸ் சஹத்வம்
த்வைதிகே ஸ்வரூபாத்ய அகில மத ஹரேர் அனுவபூத் ஸ்பஷ்ட த்ரஷ்டாம்
தார்த்திகே ஸு க்யம் பகவத் அநுபவே ஸ்போரயாம்ஸ தீவ்ரம்
ஆசாம் துர்யே யதேஷ்டம் பகவத் அனுபவா தாப முக்திக்கு சடாரி –ரத்னாவளி –126-
திரு விருத்தத்தில் சம்சார சுழல்களால் வரும் துரிதங்களையும் -அதில் இருக்க மாட்டாமையையும் -அருளிச் செய்து
திருவாசிரியத்தில் ஜீவ பர ஸ்வரூப குணாதி களை அருளிச் செய்து
பெரிய திருவந்தாதியில் -தனது மானஸ அனுபவத்தையும் -பாஹ்ய சம்ச்லேஷத்தில் ஆர்த்தியையும் வெளியிட்டு அருளி
திருவாய் மொழியிலே அவா அற்று வீடு பெற்றதை அருளிச் செய்கிறார் –
ஸ்ரீ மான் சீமாதி லங்கிஸ்திரதர கருணா சர்வவித் சர்வ சக்திர்
ஸ்வாமி ஸர்வஸ்ய ஐந்தோ ஸ்வ சரண யுகள ஸ்வீ க்ருதாஸ்மாக பர
கிம் ந க்ருத்யம் ஸ்வ ஹேதவ் கிமிக ந சுலபம் க விபதிர் பவித்ரி
கஸ்யான் யஸ்யா தர்மனா வயமிதி விதிஷாமாக துங்கத்வ மந்தே–ரத்னாவளி -127-
ஸ்ரீ மான் சீமாதி லங்கிஸ்திரதர கருணா சர்வவித் சர்வ சக்திர்
ஸ்வாமி ஸர்வஸ்ய ஐந்தோ ஸ்வ சரண யுகள ஸ்வீ க்ருதாஸ்மாக பர – கல்யாண குணக்கடல் /கருணா சாகரம் /
உலோகரை எல்லாம் திருவடியால் தீண்டி அணைக்கும் தாய் /
இப்படி உணர்ந்தோர் மார்பில் கை வைத்து-உபாயமாக ஒன்றுமே செய்யாமல் கைங்கர்யமாக
அவன் ஆனந்தத்துக்கு மட்டுமே செய்வது தானே அடுத்து /
கிம் ந க்ருத்யம் ஸ்வ ஹேதவ் – இவ்வாறு உள்ளோரால் செய்ய முடியாதது தான் எது –
துக்க கேசமும் இவர்களை அணுகாவே -வேறே எவருக்கும் பணியா அமரர்கள் ஆவார்கள்
——–
இத்தம் சத் சம்பிரதாய க்ரம சமதிகதா சேஷ வர்ணார்ஹ வேத
ஸ்ரத்தாஸ் சுத்த சயானா மகதயாதநகம் கௌதுகம் வேங்கடேச
சம்யக்த்வே தஸ்ய சாஷாத் சடாரி புரத்வா சர்வ சாக்ஷி ச சாக்ஷி
சாவத்யத்வேபி சோதும் பிரபவதி பஜதாம ப்ரகாம்ப யனுகம்பா –ரத்னாவளி –129-
———
சோகா ஸ்லோகாத்வமப் யாகத இதை வதத சுத்த போதார்ண போத்யன்
நாநாக லோலா நாதானுபவ ரஸ பரிவாஹத ஸ்ராவ்ய வேதாத்
வேதாந்த சார்யக ஸ்ரீ பஹுமத பஹுவித் வேங்கடேசா ஸ்தோத்ரேயம்
ரம்யா தாத்பர்ய ரத்னாவளிர் அநக குண ரஞ்சினி ரங்க பர்த்ரு–130-
——-
ஸ்ரீ த்ரமிட உபநிஷத் சாரம் -ஸ்ரீ வேதாந்த தேசிகன் –
உதந்தை இத்யேவம் நிருபாதிக ஸு ஹார்த்தபி சுனை
உதந்தயாம் உத்வேலாம் உபஜனித்தவந்தம் நிஜபதே
த்ரை வர்க்காதி க்ராந்த ஸ்திர நகரி கந்தா பத கதே
சஹாயி குர்வாணா சரம சதகே விந்தத்தி முநி –21-
———————————–
கதிம் வ்யாத்வக்லே சச்சிதாம் பத ஸங்காஸ் பத ரசம்
பஜத்பி சுப்ராபம் விதித்த பஜன ப்ரக்ரியமிக
பலே தீவ்ரத் யோகம் ஸ்வ விஷய க்ருதாத்யா தரமகாத்
யதர்ச்சா துஷ்டம் சத்சரநிமா புனர் ஜன்ம சாயுஜ்யம் –22-
———-
பரம் ப்ராப்யம் பஸ்யன் பரிசரணா ஹேதும் விஞ்ஞாயன்
பரிஷுக்குருவன் அஞ்ஞானம் அனிதர சரண்ய சரண்யன்
அநிஷ்ட ப்ரத்வம்ச ப்ரப்ரிஷு நிதானம் ச கதயன்
முகுர்த்தேவம் லஷ்ம்யா ஸஹிதமிக பேஜே முனிவரா –23-
பரம் ப்ராப்யம் பஸ்யன் பரம புருஷார்த்தம் இவனே /
பரிசரணா ஹேதும் விஞ்ஞாயன் – கைங்கர்யம் கொண்டு அருள உபாயமும் அவனே /
பரிஷுக்குருவன் அஞ்ஞானம்-சர்ம ஸ்லோகப்படி சர்வ தர்மான் பரித்யஜ்ய– செய்தால் —
சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -செய்பவனும் அவனே
அனிதர சரண்ய சரண்யன் -புகல் ஒன்றும் இல்லாத அனன்யா கதிகளுக்கு அவனே சரண்யன்
அநிஷ்ட ப்ரத்வம்ச ப்ரப்ரிஷு நிதானம் ச கதயன் முகுர்த்தேவம் லஷ்ம்யா ஸஹிதமிக–
அநிஷ்ட நிவ்ருத்திக்கும் இஷ்ட பிராப்திக்கும் மிதுனமே ஒரே நிருபாதிக ரக்ஷை –
——-
புரா சோகா ஸ்லோகா பவதிதி நயாதிதி உபநிஷத்
முநே புண்யா ஸ்லோகாத ஜநி பர பக்தே பரிணாதி
வ்யாபோக்ய ஸ்வாம் பாவம் ஹரி சரணா சந்தான லிகாம்
அவிக்ஷத் யோகி யஸ்தனுமதனு காருண்ய விவசா –24-
வால்மீகி சோகத்தால் பிறந்த ஸ்ரீ இராமாயண ஸ்லோகங்கள் /
சடகோப முனி ஆழ்ந்த பக்தியால் பிறந்த தமிழ் உபநிஷத்தான திருவாய் மொழி
கருணைக் கடலுள் ஆழ்ந்து -அவனையே நினைந்து அவன் அருளாலே அவனை அடைந்தார்
சோகா ஸ்லோகாத்வமப் யாகத இதை வதத சுத்த போதார்ண போத்யன்
நாநாக லோலா நாதானுபவ ரஸ பரிவாஹத ஸ்ராவ்ய வேதாத்
வேதாந்த சார்யக ஸ்ரீ பஹுமத பஹுவித் வேங்கடேசா ஸ்தோத்ரேயம்
ரம்யா தாத்பர்ய ரத்னாவளிர் அநக குண ரஞ்சினி ரங்க பர்த்ரு–130-
——-
சதாம் இத்தம் சாரம் த்ராமிட நிகமஸ் யான்வகதயத்
பஹு நாம் வித்யா நாம் பஹு மதி பதம் வேங்கடபதி
திசா சவ்தா ஸ்ரேநீ த்ர்தா கதிதா ஜைத்ர த்வஜ பதி
பராமர் ஸப்ரஸ்யாத் ப்ரதிமத நிராபாத நிகம–25-
இத்தம் சத் சம்பிரதாய க்ரம சமதிகதா சேஷ வர்ணார்ஹ வேத
ஸ்ரத்தாஸ் சுத்த சயானா மகதயாதநகம் கௌதுகம் வேங்கடேச
சம்யக்த்வே தஸ்ய சாஷாத் சடாரி புரத்வா சர்வ சாக்ஷி ச சாக்ஷி
சாவத்யத்வேபி சோதும் பிரபவதி பஜதாம ப்ரகாம்ப யனுகம்பா –ரத்னாவளி –129-
——-
மனு வியாச ப்ராசேதச பரிஷ்தர்ஹா க்வசிதியம்
ஸூதாஷிக்த ஸூக்தீ ஸ்வயம் உதயமனவிச்சதி ஜநே
ந்ருந்த்யுஹ்கே விந்த்யாசல விகத ஸந்த்யா ந தஜ
தாபரிப்ராந்தா பங்கோ உபரி யதி கங்கா நிபததி –26-
இந்த பிரபந்தம் மஹா முனிகளான மனு பகவான் வியாச பகவான் வால்மீகி ரிஷி போன்றார் கூட்டங்களாலே கேட்கத் தக்கது-
அவனது நிருபாதிக ஸூ ஹ்ருதம் அடியாகவே பிறந்தது –
விந்தியமலை சாரல் -கங்கா நதி -திருச்சித்ர கூடம் -உண்டாக்கி அருளினால் போலே
அடியேனையும் ஆக்கி இப்பிரபந்தம் அருளப்பண்ணினான்
———
ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி –
அவதாரிகை –
இதில்-நாள் இடப் பெற்று-வழித் துணையோடு போக ஒருப்படுகிற ஸ்ரீ ஆழ்வார் பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார் –அது எங்கனே என்னில்
சரீர அவசானத்தில் பேறு-என்று-ஸ்ரீ சர்வேஸ்வரன் நாள் இட்டுக் கொடுக்கையாலே-போக்கிலே ஒருப்பட்டு
நெடும் காலம் முகம் பழகின சரீரத்தை விட்டு
ஹ்ருதய குகையில் நின்றும் வழி கண்டு மூர்த்தன்ய நாடியாலே சிர கபாலத்தை பேதித்துக் கொண்டு
ஸ்ரீ அர்ச்சிராதி மார்க்கத்தாலே-ஸ்ரீ பரம பதத்தே ஏறப் போம் இடத்தில்
கேட்ட போதே துளங்க வேண்டும்படியான யாம்ய மார்க்கத்திலே பட்ட இளைப்பு எல்லாம் ஆறும்படி
தன் கடாஷாம்ருத வ்ருஷ்டிகளாலே குளிர வழிய வார்த்து யம படருடைய சரவண கடுகமான கடும் சொற்களை
கேட்ட யுள் வெதுப்பு ஆறும்படி செவிக்கினிய செம் சொற்களாலே செந்தளிப்பித்தும்
உக்ரமான யம தர்சனத்தால் வந்த வெக் காயம் ஆறும்படி
தன்னுடைய சௌம்ய வர்ஷத்தை நிரந்தரம்-வர்ஷித்துக் கொண்டு வழியில் உண்டான இடையூறுகளையும்
திவ்ய ஆயுதங்களாலே இரு துண்டமாக விட்டு
நயாமி பரமாங்கதம் -என்கிற படியே-ஸ்ரீ பெரிய திருவடி திருத் தோள்களிலே வைத்துக் கொண்டு
ஆதி வாஹகரைக் காட்டாமல்
தானே கொண்டு போய்-ஸ்ரீ திரு நாட்டிலே விடுகைக்கு
வேடன் -வேடுவிச்சி -பஷி -குரங்கு -பிசாசம் -சராசரம்-18 நாடன் பெரும் கூட்டம் – முதலானாரை வருத்தம் அறக் கொண்டு போய்
ஸ்ரீ வைகுந்தத்து ஏற்றி அருளின-காளமேகமான ஸ்ரீ அரங்கத்து உறையும் இன் துணைவனை ஒழிய-வேறு ஒருவரும் இல்லை என்று
ஸ்ரீ காளமேகத்தை வழித் துணையாகப் பற்றுகிற-தாள தாமரையில் அர்த்தத்தை
தாள் அடைந்தோர் தங்கட்கு -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் -என்கை –
தாள் அடைந்தோர் தங்கட்குத் தானே வழித் துணையாம்
காளமேகத்தைக் கதியாக்கி -மீளுதலாம்
ஏதமிலா விண்ணுலகில் ஏக வெண்ணும் மாறன் என
ஏதம் உள்ளது எல்லாம் கெடும்—91-
வியாக்யானம்–
தாள் அடைந்தோர் தங்கட்குத் தானே வழித் துணையாம் காளமேகத்தைக் கதியாக்கி –
சரணமாகும் தனதாள் அடைந்தார்கட்கு எல்லாம் மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் -என்று
தன் திருவடிகளை உபாயமாக அடைந்தவர்களுக்கு தானே மார்க்க பந்துவாம் –
ஆதி வாஹிகர் கையிலும் காட்டிக் கொடாதே
துன்னு குழல் கரு நிறத்தன் என் துணையே -என்கிறபடியே
சுரி குழல் கமல கட்கனிவாய் காளமேகத்தை அன்றி மற்று ஒன்றிலம் கதியே -என்ற-ஸ்ரீ காளமேகம் தானே
நயாமியில் படியே -நடத்தும் –
தாள் அடைந்தோர் -என்கிற இதில் – தாமும் அந்தர்பூதர் – இறே –
காளமேகத்தை கதியாக்கி –
சாம்சாரிக தாபம் எல்லாம் ஆறும்படி-சௌந்த்ர்ய அம்ருத வர்ஷியான ஸ்ரீ காளமேகத்தை
வழிக்கு ரஷகமான கதி ஆக்கி –
அதாவது –
அவன் நிழல் தடம் அன்றி அறியோமே -என்றும்
அண்ட மூ வுலகு அளந்தவன் -என்றும்
கூத்தன் கோவலன் திரு மோஹூர் ஆத்தன் தாமரை அடி அன்றி மற்றிலம் அரணே -என்றும்
தயரதன் பெற்ற மரகத மணித் தடம் -என்றும்
மணித்தடத்து அடி மலர்க் கண்கள் பவளச் செவ்வாய் அணிக்கொள்
நால் தடம் தோள் தெய்வம் அசுரரை என்றும் துணிக்கும் வல்லரட்டன் -என்றும்
காம ரூபம் கொண்டு எழுந்து அளிப்பான் -என்றும் –
இப்படி வழிக்கு வேண்டும்-நிழல் தடங்கள் முதலானவை எல்லாம்-தானே யானவன் -என்கை –
அக்ரத ப்ரய யௌ ராம -என்று அவர் முன்னே போக –
மன்னன் இராமன் வைதேவி என்று உரைக்கும் அன்ன நடைய அணங்கு
அவர் தோள் நிழலை அண்டை கொண்டு நடந்தால் போலே-நடக்கப் பாரிக்கிறார் இறே-
மீளுதலாம் ஏதமிலா விண்ணுலகில் ஏக வெண்ணும் மாறன் –
குடி மன்னுமின் சுவர்க்கம் எய்தியும் மீள்வர்கள் -என்னும்படி
மீளுதல் ஆகிற தோஷம் இன்றிக்கே-ந ச புனராவர்த்ததே -என்றும்
புணை கொடுக்கிலும் போக ஒட்டாரே -என்றும்
மீளாப் பொருவரிய விண்ணாடு -என்றும்
மீட்சி இல்லா நாடு -என்றும் சொல்லப்படுகிற-பரம வ்யோம சப்த வாச்யமான -பரமபதத்திலே
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணுமே -என்றும்
எழுந்து அருள மனனம் பண்ணுகிற மோஷ லஷ்மியை உடைய
மாறன் -என
ஸ்ரீ ஆழ்வார் -என்று அனுசந்திக்க –
கேதம் உள்ளது எல்லாம் கெடும் –
மனக்கேதம் சாரா -என்னும்படி-துக்கம் என்று பேர் பெற்றவை எல்லாம் நசிக்கும் –
பிராப்ய லாப துக்கம் எல்லாம்-நிவ்ருத்தமாம்-
———
அவதாரிகை
இதில் – ஸ்ரீ பரமபதத்தில் செய்யும் அடிமையை ஸ்ரீ திருவனந்த புரத்திலே செய்யப் பாரிக்கிற ஸ்ரீ ஆழ்வார்
ஸ்ரீ ஸூக்தியை அனுவதித்து அருளிச் செய்கிறார் -அது எங்கனே என்னில்
குறைவற ஸ்ரீ பரம பதத்தினில் போனால்- வானிளவரசான வைகுந்த குட்டனுக்குச் செய்யக் கடவ
வழு விலா அடிமைகளை-நித்ய சூரிகளில் தலைவரான ஸ்ரீ சேனாதிபதி ஆழ்வான் எடுத்துக் கை நீட்டும்படி
நிரதிசய போக்யமான ஸ்ரீ திருவனந்த புரத்திலே ஸ்ரீ திருவனந்த ஆழ்வான் மேலே
பள்ளி கொண்டு அருளுகிற பரம பிராப்ய பூதரான ஸ்ரீ பத்ம நாபப் பெருமாள் திருவடிகளிலே
அனுகூல ஜனங்களும் தாமுமாய் போய் அடிமை செய்ய வேண்டும் என்று மநோ ரதிக்கிற
கெடும் இடரில் அர்த்தத்தை-கெடும் இடர் வைகுந்தத்தை -இத்யாதியாலே
அருளிச் செய்கிறார் -என்கை-
கெடுமிடர் வைகுந்தத்தைக் கிட்டினால் போல்
தடமுடை அனந்தபுரம் தன்னில் -படவரவில்
கண் துயில் மால்க்கு ஆட்செய்யக் காதலித்தான் மாறன் உயர்
விண் தனில் உள்ளோர் வியப்பவே—-92-
கெடும் இடர் வைகுந்தம் -துக்க ரஹிதமான பரம பதம் -வினைகள் போக்கி தானே -அங்கே போக முடியும் –
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளை பற்றி இடர் கெடும் சொல்ல வேண்டாமே –
அதனால் பலன் சொல்லாமல்- பாசுரம் சொல்லவே இடர் கெடுமே –
வியாக்யானம்–
கெடுமிடர் வைகுந்தத்தைக் –
கைங்கர்ய சித்தியாலே நிவ்ருத்த துக்கராம்படி பண்ண வற்றான ஸ்ரீ வைகுண்டத்தை –
அன்றிக்கே –
துக்க ரஹிதமான ஸ்ரீ வைகுண்டத்தை என்னுதல்-
கிட்டினால் போல் – அத்தை பிராபித்து அடிமை செய்யப் பெற்றால் போலே
தடமுடை அனந்தபுரம் தன்னில் -படவரவில் கண் துயில் மால்க்கு ஆட்செய்யக் காதலித்தான் –
ஏபிஸ் ச சசிவை -இத்யாதியாலே ஸ்ரீ பரத ஆழ்வான் பாரித்தால் போலே
தடமுடை அனந்த புரம் தன்னில்-படமுடை அரவில் பள்ளி பயின்ற ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு அடிமை செய்ய அபேஷித்தார்-
அதாவது –
பூசனை செய்கின்றார்கள் புண்ணியம் செய்தவாறே -என்றும்
சாந்தொடு விளக்கம் தூபம் தாமரை மலர்கள் நல்ல ஆய்ந்து கொண்டு-ஏத்த வல்லார் அந்தமில் புகழினாரே -என்றும்
அமரராய் திரிகின்றார்கட்கு -என்று தொடங்கி-நாமும் போய் நணுக வேணும் -என்றும்
படமுடை யரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண நடமினோ-நமர்கள் உள்ளீர் -என்றும் –
தாமும்-தம் திரு உள்ளத்தோடு ஒத்த ஸ்ரீ வைஷ்ணவர்களும் கூட அடிமை செய்த மநோ ரதித்த -என்கை –
படவரவில் கண் துயில் மால்க்கு ஆட்செய்யக் காதலித்தான் -மாறன் உயர் விண் தனில் உள்ளோர் வியப்பவே –
சர்வோத்தரமான பரம ஆகாசத்திலுள்ளராய்-ஸ்ரீ கோயில் கொள் தெய்வங்களான
ஸ்ரீ திருவடி-ஸ்ரீ திருவனந்த ஆழ்வான்-ஸ்ரீ சேனாபதி ஆழ்வான் தொடக்கமானவர்கள் –
நாம் தெளி விசும்பு திரு நாட்டில் இருந்து செய்யும் அடிமையை
இவர் – இருள் தரும் மா ஞ்லாலத்தில் இருந்து பாரிப்பதே -என்று விஸ்மயப்ப்படும்படி
ஸ்ரீ சேஷசாயியாய்-ஸ்ரீ யபதியான-ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு சர்வ வித கைங்கர்யங்களையும்
செய்ய வாதரித்தார் ஸ்ரீ ஆழ்வார் – இவரும் ஒருவரே -என்று இவருக்கு ஈடுபாடாய் இருக்கிறது-
அங்கே செய்வதை விட இங்கே பாரிப்பது மேல் -ருசி வந்தால் தானே கிட்டும் –
——
அவதாரிகை –
இதில் – யதா மநோ ரதம் பெறாமல் சம்சாரத்திலேயே ஸ்ரீ சர்வேஸ்வரன் வைக்க எண்ணினான் என்று சங்கிக்க
அவன் தெளிவித்த படியை அருளிச் செய்கிற பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில் –
தம் மநோ ரத அனுகுணமாக அப்போதே அத்தேசத்திலே புக்கு அடிமை செய்யப் பெறாமையாலே-கலங்கி
பழைய படி நமக்கு சம்சாரத்தில் இருப்பே சேஷித்து விடுகிறதோ -என்று
பிரகிருதி சம்பந்த்தத்தின் கொடுமை ஸ்ரீ ஈஸ்வர ஸ்வாதந்த்ர்யம்
முதலான ஹேதுக்களால் தமக்கு பிறந்த அதிசங்கையை ஒரு படுக்கையிலே கூட இருக்கச் செய்தே
பண்டு பசு மயக்கப் போகிற ப்ரபாத காலம் வந்து
அக் காலத்துக்கு அடைத்த குயில் மயில் முதலானவற்றின் பாடல் ஆடல் முதலான
அடையாளங்களையும் காண்கையாலே
அவற்றையே கொண்டு ஸ்ரீ கிருஷ்ணன் பசு மேய்க்கப் போனான் -என்று அதி சங்கை பண்ணி
நோவு படுகிற இடைப் பெண்கள் பேச்சாலே அருளிச் செய்கிற-வேய் மரு தோளிணை யில் அர்த்தத்தை
வேய் மரு தோள் இந்த்ரிரை கோன் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை –
வேய் மரு தோள் இந்திரை கோன் மேவுகின்ற தேசத்தை
தான் மருவாத் தன்மையினால் தன்னை யின்னம் பூமியிலே
வைக்கும் எனச் சங்கித்து மால் தெளிவிக்கத் தெளிந்த
தக்க புகழ் மாறன் எங்கள் சார்வு –93-
வியாக்யானம்–
வேய் மரு தோள் இந்திரை கோன் மேவுகின்ற தேசத்தை –
வேய் போலும் எழில் தோளி பொருட்டா -பெருமாள் திருமொழி –என்னும்படி
அணைக்கைக்கு பணை போல் இருக்கிற தோளை யுடைய ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு வல்லபன் ஆனவன் –
படமுடை அரவில் பள்ளி பயின்றவன் -என்று ஸ்ரீ அனந்த சாயியாய்-
திரு மாற்கு அரவு -என்கிறபடி இருவருமாய்ச் சேர்த்தியாய் இருக்கிற தேசத்தை –
மாதவா என்ன -என்றார் இறே-
தான் மருவாத் தன்மையினால் –
நாமும் போய் நணுக வேணும் -என்னும் அபி நிவேசத்தை யுடைய தாம்
போய் புகப் பெறாத படியாலே –
தன்னை யின்னம் பூமியிலே வைக்கும் எனச் சங்கித்து –
நன்றும் அஞ்சுவன் நரகம் நான் அடைதல் -என்று
தம்மை ஸ்வா தந்த்ர்யாதிகளாலே சம்சாரத்திலே இட்டு வைக்குமோ என்று சங்கித்துப் போர –
அதாவது –
இவர் உடைய ரஷண சிந்தை பண்ணிக் கொண்டு சௌஹார்த்த யுக்தன் ஆனவனும்
என் கை கழியேல் -என்னும்படி -பொருந்தி
பிரத்யஷ சாமானாகாரம் போலே இவர் கையிலே இருக்க-அத்தசையிலே
ஸ்வ ரஷணத்திலே கை வாங்கி இருக்குமவர்கள்-விஷயத்திலே ரஷணத்திலே அவன் மண்டி
அங்கே விச்லேஷிக்கும் காலத்தையும்
அவன் கை கழிந்தால்-சப்தாதிகள் பாதகமாகிற படியையும்
கால தைர்க்க்யா சஹதையையும்
ஆஸ்ரித ரஷணத்தில் அந்ய பரதையாலே அந்த ராயங்கள் புகும் படியையும்
அவனுக்கு அறிகிற பிரகாரத்தை-
வேய் மரு தோளிணை -என்று தொடங்கி -ஆ மருவின நிரை மேய்க்க நீ போக்கு-ஒரு பகல் ஆயிரம் ஊழி யாலோ -என்றும்
தகவிலை தகவிலை இனி யுன்னை நீ பிரிவை யாமால் வீவ-நின் பசு நிரை மேய்க்கை போக்கு -என்றும்
வீவ நின் பசு நிரை மேய்க்கை போக்கு-சாவது இவ்வாய் குலத்து ஆய்ச்சியோமாய் பிறந்த வித் தொழுத்தையோம் தனிமை தானே -என்றும்
நின் தொழுத்தனில் பசுக்களையே விரும்பித் துறந்து-எம்மை விட்டவை மேய்க்கப் போதி -என்றும்
பிணியவிழ் மல்லிகை வாடை தூவப் பெரு மத மாலையும் வந்தின்றாலோ -என்றும்
வெடிப்பு நின் பசு நிரை மேய்க்கப் போக்கு -என்றும்
ஆ மகிழ்ந்து உகந்து அவை மேய்க்கின்று உன்னோடு அசுரர்கள்-தலைப்பெய்யில் யவம் கொல் ஆங்கே -என்றும்
அசுரர்கள் தலைப் பெய்யில்அவம் கொல் ஆங்கு என்று ஆழும்-என் ஆர் உயிர் பிரான் பின் போகல் நீ உகக்கும் நல்லவரோடு உழி தராயே -என்றும்
உகக்கும் நல்லவரோடு -என்று தொடங்கி-அவத்தங்கள் விளையும் என் சொல் கொள்- என்றும்
அவத்தங்கள் விளையும் என் சொல் கொள்- திவத்திலும்-பசு நிரை மேய்ப்பு உவத்தி -என்றும்
இப்படி பஹூ முகமாக சங்கிக்க-
மால் தெளிவிக்கத் தெளிந்த –
அதாவது –
அணி ஆய்ச்சியர் சிந்தையுள் குழகனார் ஆனவனும் –என்றும்
முஹூர்த்தம் அபி ஜீவாவ -என்னும்படி
அவனை விட்டு அகன்று உயிர் ஆற்ற கில்லாதே -என்றும்
அவனோடு பிரிவதற்கு இரங்கும்படியான இவர்கள் பிரேம ஸ்வ பாவத்தைக் கண்டு
செங்கனிவாய் எங்கள் ஆயர் தேவு -என்னும்படி சவிலாத ஸ்மிதம் பண்ணி
அணி மிகு தாமரைக் கையாலே அஞ்சேல் என்று ஆச்வசிபபித்து
உம்முடைய அபேஷித்ததின் படியே செய்கிறோம் என்று அதி சங்கையைத் தீர்த்தான் ஆயிற்று
அதாவது
பசு நிரை மேய்ப்பு ஒழிகை -அத்தைப் பற்ற -தாமோதரன் -என்றார்–
மால் தெளிவிக்க தெளிந்த –
ஸ்ரீ கிருஷ்ணன் தெளிவிக்கத் தெளிந்த-கலங்கினவனை தேற்றுமவன் இறே
தக்க புகழ் மாறன் எங்கள் சார்வு –
சங்கா ஹேது இன்றிக்கே-கூட இருக்கச் செய்தே சங்கிக்க சர்வஞ்ஞனான ஸ்ரீ சர்வேஸ்வரன் சமாதானம் பண்ண
சமாஹிதராய்
அத்தாலே தமக்கு சத்ருசரான யசஸை யுடைய ஸ்ரீ ஆழ்வார் அநந்ய கதிகளான எங்களுக்கு அபாஸ்ரயம்-
——
அவதாரிகை –
இதில்
அடியில் உபதேசித்த பக்தி-ஸ்வசாத்தியமான பலத்தோடே தலைக் கட்டினபடியை அருளிச் செய்த
திவ்ய ஸூக்தியை அனுவதித்து அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில்
கீழ்-ஸ்ரீ காளமேகத்தை வழித் துணையாக-
ஸ்ரீ தாள தாமரையிலே பற்றி போக்கிலே ஒருப்பட்டவர் ஆகையாலே-
ஸ்ரீ உயர்வற உயர் நலத்தில்-அயர்வறும் அமரர்கள் அதிபதியாக அறுதி இட்ட ஸ்ரீ பரத்வமே பரம பிராப்யமாகையாகவே
அந்த பிராப்ய வேஷத்தையும்-
பிராப்ய பலமான கைங்கர்யத்தையும்- ஸ்ரீ கெடும் இடரிலே அனுசந்தித்து-
அந்த பிராப்ய வேஷத்தை பெறுகைக்கு உபாயமாக-
ஸ்ரீ வீடுமின் முற்றத்திலும்—ஸ்ரீ பத்துடை அடியவரிலும் தொடங்கின-பக்தியானது ஸ்வ சாத்தியத்தோடே பொருந்தின படியை சொல்லி
தமக்கு உபாயமாக
முதல் ஸ்ரீ திருவாய் மொழியில் சொன்ன பிரபத்தியையும்-சொல்லித் தலைக் கட்டுகிற
ஸ்ரீ சார்வே தவ நெறியில் அர்த்தத்தை–சார்வாகவே அடியில் -இத்யாதியாலே
அருளிச் செய்கிறார் என்கை –
சார்வாகவே யடியில் தானுரைத்த பத்தி தான்
சீரார் பலத்துடனே சேர்ந்ததனை -சோராமல்
கண்டுரைத்த மாறன் கழல் இணையே நாடோறும்
கண்டு உகக்கும் என்னுடைய கண் –94-
வியாக்யானம்–
சார்வாகவே யடியில் தானுரைத்த பத்தி தான் –
ஸ்ரீ வீடுமின் முற்றத்திலும் ஸ்ரீ பத்துடை அடியவரிலும் பரோபதேச ரூபேண எல்லாருக்கும் அபாஸ்ரயமாக அருளிச் செய்த
பிரபத்தி யோடு விகல்பிக்கலாம் படியான பக்தி யானது தான்
சரண்ய -என்றத்தை- சர்வ லோக சரண்யாய -என்றும்-
பாதயோஸ் சரணான் வேஷீ நிபபாத -என்றும்
சாஷாத் பலத்தோடே தலைக் கட்டினால் போலே –
இவரும் –
உம்முயிர் வீடுடை யானிடை வீடு செய்மினே -என்றும்
எல்லையில் அந்நலம் புல்கு பற்றற்றே -என்றும்
உள்ளம் உரை செயல் உள்ள இம் மூன்றையும்-உள்ளிக் கெடுத்து இறை உள்ளில் ஒடுங்கே -என்றும்
பத்துடை அடியவர்க்கு எளியவன் -என்றும்
அம்பகவன் வணக்குடை தவ நெறி வழி நின்று -என்றும்
நன்றென நலம் செய்வது -என்றும்
இப்படி அருளிச் செய்த பக்தி மார்க்கம் ஆனது-சாத்தியமான பலத்தோடே பொருந்தின படியையும்
சார்வே தவ நெறிக்கு தாமோதரன் தாள்கள் -என்றும்
அருளினான் துயர் அறு சுடர் அடி தொழுது எழு மனனே -என்றும்
வண் புகழ் நாரணன் திண் கழல் சேர் -என்றும்
நாளும் நம் திருவுடை அடிகள் தம் நலம் கழல் வணங்கி -என்றும்
அடியே தொடங்கி அருளிச் செய்து போருகிற-பிரபத்தி-ஸ்வ சாத்தியத்தோடு-பொருந்தினப டியையும் –
பண்டே பரமன் பனித்த பணி வகையே-
கண்டேன் கமல மலர்ப்பாதம் காண்டலுமே-விண்டே ஒழிந்த வினை யாய வெல்லாம் -என்றும்-அருளிச் செய்து
மற்றும்
பக்தி-பிரபக்திக்கு-உக்தமான வற்றையும்
கார்மேக வண்ணன் கமல நயனத்தன் -என்றும்
திரு மெய் யுறைகின்ற செங்கண் மால் -என்றும்
மடப்பின்னை தன கேள்வன் தாள் கண்டு கொண்டு -என்றும்
தலை மேல் புனைந்தேனே -என்றும்
நச்சப்படும் நமக்கு -என்றும்
வரை எடுத்தான் பாதங்கள் வாழி என் நெஞ்சே மறவாது வாழ் கண்டாய் -என்றும்-அருளிச் செய்தார் இறே-
ஏவம் விதமான வர்த்தங்களை –
சோராமல் கண்டுரைத்த மாறன் –
இவ் வர்த்தமானது வ்யர்த்தமே-நழுவிப் போகாமே-இஸ் ஸூஷ்ம அர்த்தத்தை தர்சிப்பித்து அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வார் –
கழல் இணையே நாடோறும் –
இப்படி-சூஷ்ம அர்த்த தர்சியான ஸ்ரீ ஆழ்வார்-சேர்த்தி அழகை யுடைய திருவடிகளையே –
கண்டு உகக்கும் –
சேவித்து-ஹ்ருஷ்டமாம் –
என்னுடைய கண் –
மே திருஷ்டி -என்னும்படியான-என் கண்கள் –
ஸ்ரீ தாமோதரன் தாள் யுடைய-ஸ்தானத்திலே-இவர்க்கு-ஸ்ரீ மாறன் தாள்-ஆயிற்று –
——
அவதாரிகை –
இதில் பக்திமான்கள் பரிமாற்றத்தை சுருங்க அருளிச் செய்த படியை அனுவதித்து
அருளிச் செய்கிறார் அது எங்கனே என்னில்
ஸ்ரீ ஈஸ்வரன் தம்மை ஸ்ரீ பரம பதத்திலே கொடு போகையிலே த்வரிக்கிற படியை கண்டு
இவர்களுக்கு இது ஓன்று குறை பட்டு கிடக்க ஒண்ணாது என்று பார்த்து
தம்முடைய பரம கிருபையாலே
ஸ்ரீ சர்வேஸ்வரனைப் பற்றுகையாலும் இவர்களுக்கு ஸூக்ரஹமாக வேணும் என்று பாசுரப் பரப்பு அறச் சுருக்கத்திலே
பக்திமான்கள் பரிமாற்றம் இருக்கும் படியை சம்சாரிகளுக்கு உபதேசித்து பரோபதேசத்தை நிகமிக்கிற
கண்ணன் கழலிணையில் அர்த்தத்தை-கண்ணன் அடி இணையாலே
அருளிச் செய்கிறார் -என்கை –
கண்ணன் அடி இணையில் காதல் உறுவார் செயலை
திண்ணமுறவே சுருங்கச் செப்பியே -மண்ணவர்க்குத்
தான் உபதேசிக்கை தலைக் கட்டினான் மாறன்
ஆன புகழ் சேர் தன்னருள்–95-
வியாக்யானம்–
கண்ணன் அடி இணையில்-
ஸ்ரீ கிருஷ்ணன் திருவடிகளிலே
காதல் உறுவார் செயலை –
பக்தி உக்தராய் இருப்பார்-க்ருத்யத்தை –
திண்ணமுறவே –
த்ருடமாகவே-அதிலே-ஊன்றும்படி-
சுருங்கச் செப்பியே –
சங்க்ரஹமாக அருளிச் செய்து
யே -ஈற்றசை –
மண்ணவர்க்குத் –
பிருத்வியில் யுண்டான-சர்வாத்மாக்களுக்கும் –
தான் உபதேசிக்கை தலைக் கட்டினான் மாறன் –
ஸ்ரீ பிராட்டி-விதித-சுந்தர 21-25- -இத்யாதி யாலே பரோபதேசத்தை முடித்தால் போலே
கீழே உபதேசித்துக் கொடு போந்த-பரோபதேசத்தை பரி சமாப்தி பண்ணி அருளினார்-பெரு மதிப்பரான ஸ்ரீ ஆழ்வார் –
ஸ்ரீ பகவத் பிரபாவம் ஸ்ரீ சீதை பிராட்டி சொல்லி நிகமிக்க பிராட்டி பாகவத பிரபாவம் சொல்லி இவர் நிகமிக்கிறார் –
ஆன புகழ் சேர் தன்னருள் –
ஸ்லாக்கியமான யசஸ் உடன் கூடின-தம்முடைய பரம கிருபையாலே-பரோபதேசத்தை தலைக் கட்டி அருளினார் –
நின் கண் வேட்க்கை எழுவிப்பன் -பிராட்டி ஆழ்வார் உடைய ஒரே க்ருத்யம்
ஆன புகழ்
உலகத்தார் புகழும் புகழ்
தன்னருள்
அருள் கொண்டாடும்படியான அருள்-
கண்ணன் அடி இணையில்
காதல் உறுவார் செயலை-சுருங்கச் செப்புகை யாவது –
கண்ணன் கழலிணை நண்ணும் மனம் உடையீர்-எண்ணும் திரு நாமம் திண்ணம் நாரணமே -என்றும்
நாரணன் எம்மான் -என்றும்
கோள் வாய் அரவணையான் தாள் வாய் மலரிட்டு-நாள்வாய் நாடீரே -என்றும்
நாடீர் நாடோறும் வாடா மலர் கொண்டு-பாடீர் அவன் நாமம் -என்றும்
மேயான் வேங்கடம் காயா மலர் வண்ணன்-பேயார் முலை யுண்ட வாயான் மாதவனே -என்றும்
மாதவன் என்று என்றே ஓத வல்லீரேல் -என்றும்
பேரார் ஓதுவார் ஆரார் அமரரே -என்றும்
சுனை நன் மலரிட்டு நினைமின் நெடியானே -என்றும்
இப்படி-எண் பெருக்கில் எண்ணும் திரு நாமத்தை சப்தார்த்தங்களை சுருக்கி- ஸ்ரீ மாதவன் -என்று த்வயமாக்கி-
கரண த்ரய பிரயோஜன வ்ருத்தி சம்சாரிகளுக்கு கையோலை செய்து கொடுத்தபடி -என்கை-
————
அவதாரிகை –
இதில்
பரம பதத்தில் கொடு போகையில்-த்வரிக்கும் இடத்திலும்
விதி பரதந்த்ரனாய் செய்கிறபடியை
பேசின பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
இப்படி பரோபதேசம் தலைக் கட்டின பின்பு
தம்மை அவன் திரு நாட்டிலே கொடு போகிக்கு த்வரிக்கும் படியையும்
கொடு போகும் இடத்தில் தாம் நியமித்தபடி
கொடு போக வேணும் என்று
தமக்கு அவன் பரதந்த்ரனாய் நிற்கிறபடியையும்
தாம் பெற்ற பேற்றின் கனத்தையும்
தம்முடைய திரு உள்ளத்துக்குச் சொல்லி-இனியராய் பேசுகிற
அருள் பெறுவாரில் அர்த்தத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார்
அருளால் அடியில் -தொடங்கி -என்கை –
அருளால் அடியில் எடுத்த மால் அன்பால்
இருளார்ந்த தம்முடம்பை இச்சித்து -இரு விசும்பில்
இத்துடன் கொண்டேக இசைவு பார்த்தே யிருந்த
சுத்தி சொல்லும் மாறன் செஞ்சொல் – —————96-
த்யாஜ்ய தேஹ வ்யாமோஹம் -அடுத்த பதிகார்த்தம் –
பிரணவ பாரதந்தர்யம் -மோக்ஷ தானத்தில் -ஆஸ்ரித பாரதந்தர்யம் -இதில் –
வியாக்யானம்–
அருளால் அடியில் எடுத்த மால் –
கரண களேபரைர்க் கடயிதும் தயமா நாம நா -என்றும்
அந்நாள் நீ தந்த ஆக்கை -என்றும்-அடியிலே எடுத்த படியால் –
அன்றிக்கே
மயர்வற மதிநலம் அருளினான் -என்று-கேவல நிர்ஹேதுக கிருபையாலே
அஜஞாநாவஹமான சம்சாரத்தில் நின்றும்
அடியிலே எடுத்த சர்வேஸ்வரன்-என்றாதல்
அதுவும் அன்றிக்கே
மால் அருளால் மன்னு குருகூர் சடகோபன் -என்னும்படி
அயோக்யா அனுசந்தானத்தாலே-அகன்று-முடியாத படி எடுத்த-என்றாகவுமாம் —
அன்பால் இருளார்ந்த தம்முடம்பை இச்சித்து –
அந்தாமத்து அன்பு செய்யும் அன்பாலே-
இருள் தரும் மா ஞாலத்தில் ‘ஜன்மம் ஆகையாலே-இருளார்ந்த தம் உடம்பை இச்சித்து
ஜ்ஞானப் பிரசுரமான-தம் தேஹத்தை-வாஞ்சித்து
அன்றிக்கே –
இருளார்ந்து தம்முடம்பை இச்சித்து -ராகாந்தனாய்
நெய்யூண் மருந்தோ மாயோனே -என்று
இவன் திருவாய்ப் பாடியிலே வெண்ணெயை-ஆதரித்தால் போலே
ஜ்ஞான பரிமளம் விஞ்சின-சரம சரீரம் ஆகையாலே
இவர் திரு மேனியை அவன் ஆதரிக்கப் புக்கான்-என்றாகவுமாம்-
இரு விசும்பில் –
பெரிய வானிலே
இத்துடன் கொண்டேக –
இவர் அஜஞாநாவஹம்-என்று அநாதரிக்கிற-இச் சரீரத்துடனே கொண்டு போக-
இசைவு பார்த்தே யிருந்த சுத்தி சொல்லும் மாறன் செஞ்சொல் –
விதி பரதந்த்ரனாய்-
சரைஸ்து சங்குலாம் க்ருத்வா –இத்யாதிப் படியே
பிராட்டி திரு உள்ளக் கருத்தைப் பின் சென்று செய்தாப் போலே
இவர் அனுமதி பார்த்து இருந்தவனுடைய-சுத்தியை சொல்லும்
ஆழ்வார் உடைய-ஸ்ராவ்யமான சப்தங்கள்-
அதாவது –
என் நெஞ்சத்து உள்ளிருந்து -என்றும்
நிலை பேரான் என் நெஞ்சத்து எப்பொழுதும் -என்றும்
என் நன்றி செய்தேனா என் நெஞ்சில் திகழ்வதுவே -என்றும்
இகழ்வின்றி என் நெஞ்சத்து எப்பொழுதும் பிரியானே -என்றும்
நங்கள் குன்றம் கை விடான் -திருமால் இரும் சோலை கை விடாதவன் போல் இவர் திருமேனியையும் கை விடான் -என்றும்-
இப்படி
இவர் திரு உள்ளத்தை விரும்பி –
அருள் பெறுவார் அடியார் தம் அடியனேற்கு ஆழியான்
அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே -என்றும்
இன்று விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் விதி வகையே -என்றும்
இவர் தம் தேஹத்தை ஒழிய கொடு போக வேணும்-என்றபடியே
பரதந்த்ரனாய்
நின்ற குணசுத்தியைப் பேசினபடி-என்கை –
விதி வகையே நடத்துமவனே உபதேச சத்பாத்ரம் என்ற-பாத்ர ஸூத்தி இறே-கரை ஏற்றுமவனுக்கு நாலாறும் உபதேசித்தார் –
இசைவு பார்த்தே இருந்த சுத்தி என்று -அவ்விருத்தாந்தத்தை பேசினபடி-என்றுமாம்-
———
அவதாரிகை –
இதில்-அவன் தேக சபலனாய்-ஆதரிக்க-இவர் -விரோதியான சரீரத்தை விடுவி -என்று
விடுவித்துக் கொண்டமை பேசின பாசுரத்தை அனுவதித்து-அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
தம்மோடு வந்து கலந்து-தமக்கு பரதந்த்ரனாய் தம் திரு மேனியிலே அத்ய அபி நிவிஷ்டனாய்
திரு மேனியோடே தம்மை ஸ்ரீ திரு நாட்டில் கொடு போக வேணும் என்று
அவன் தம் திருமேனியில் மிகவும் பண்ணுகிற சாபலத்தைக் கண்டு
நம் பக்கல் ஆதர அதிசயத்தால் அன்றோ-இவன் நம் உடம்பை ஆதரிக்கிறது என்று பார்த்து
இதன் தோஷம் அறியாமல்-ராகாந்தனாய் இருக்கிற இவனுக்கு
இதன் தோஷத்தை யுணர்த்தவே இத்தை தவிரும் என்று நினைத்து-இதன் தோஷங்களை அவனுக்கு அறிவிக்க
அபிமத விஷயத்தில் அழுக்கு உகப்பாரைப் போலே
அது தானே அவனுக்கு மேல் விழுகைக்கு உடலாக-எனக்கு இது மிகவும் அநபிமதமாய் இருக்கும்
ஆன பின்பு இத்தைக் கழிக்க வேணும் -என்று
இவர் அவன் திருவடிகளிலே தலையை மடுத்து சரணம் புக
இவர் விதி வகை பார்க்குமவன் ஆகையாலே
இவர்க்கு அநபிமதம் ஆகில்-வருந்தியும் நாம் இத்தை கழித்து கொடுக்கக் கடவோம்-என்று தலை துலுக்க
நம் சொலவைப் பரிபாலிப்பதே
இது ஒரு சீலம் இருந்தபடி என் –என்று தலை துலுக்குகிற-
செஞ்சொல் கவிகாள் லில் அர்த்தத்தை
செஞ்சொல் பரன் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை –
செஞ்சொல் பரன் தனது சீராரும் மேனி தனில்
வஞ்சித்துச் செய்கின்ற வாஞ்சை தனின் -விஞ்சுதலைக்
கண்டவனைக் காற்கட்டிக் கை விடுவித்துக் கொண்ட
திண் திறல் மாறன் நம் திரு—97-
———————————————————–
வியாக்யானம்–
செஞ்சொல் பரன் –
செஞ்சொல் மறைப் பொருளாகி நின்ற தேவர்கள் நாயகன் -என்கிறபடியே
செவ்விய சொல்லால் ஆன இத் திருவாய் மொழியால்-பிரதிபாதிக்கப் படுகிற
சர்வ ஸ்மாத் பரனான ஸ்ரீ சர்வேஸ்வரன் –
இது தான் செவிக்கு இனிய செஞ்சொல் இறே –
தனது சீராரும் மேனி தனில் –
தனிச் சிறையில் விளப்புற்று
அஸ்நாதையாய் இருந்த பிராட்டி வடிவைக் காண-ஆசைப் பட்டால் போலே
பிறவி அஞ்சிறையிலே
ஜ்ஞான பக்த்யாதிகள் விஞ்சி இருக்கிற-விக்ரஹத்திலே –
வஞ்சித்துச் செய்கின்ற வாஞ்சை தனின் -விஞ்சுதலைக் கண்டு –
அதாவது
வஞ்சக் கள்வன் ஆகையாலே
நெஞ்சும் உயிரும் அவை உண்டு-தானே யாகி நிறைந்தான் -என்றும்
என்னை முற்றும் உயிர் உண்டே -என்றும்
என்னை முற்றும் உயிர் உண்டு என் மாய வாக்கை யதனுள் புக்கு -என்றும்
என்கொல் அம்மான் திருவருள்கள் நன்கு என் உடலம் கை விடான் -என்றும்
திருமால் இரும் சோலை மலையே -என்று தொடங்கி-ஒரு மா நொடியும் பிரியான் -என்றும்
இப்படி இவர் திரு மேனியை மேல் விழுந்து-அத்யாதரம் பண்ணுகிற படியைக் கண்டு-
உடலும் உயிரும் மங்க வொட்டு -என்றும்
பொங்கு ஐம்புலனும் என்று தொடங்கி –மானாங்கார மனங்கள் மங்க வொட்டு -என்றும்
இதன் தோஷ தர்சன பூர்வகமாக
அவனைக் கால் கட்டி-தம் கால் கட்டை விடுவித்துக் கொண்டபடி –
கை விடுவித்துக் கொண்ட –
கை விடுவித்துக் கொள்ளுகை யாவது -அவன் காலைக் கட்டி
கை விடுவித்துக் கொண்டார்-என்றபடி –
கை விடுவித்துக் கொண்ட -திண் திறல் மாறன் –
சர்வ சக்தி-சரீரத்துடன் கொடு போக வேணும் என்று-கர க்ரஹணம் பண்ண
இவர்
சரண க்ரஹணம் பண்ணி-விடுவித்துக் கொண்ட த்ருடமான சக்தியை யுடைய-ஆழ்வார் –
நம் திரு –
சம்பச்ச சாத்விக ஜனச்ய -என்னும்படி
ஸ்ரீ ஆழ்வாரான ஸ்ரீ மாறன்-நம்முடைய சம்பத்து –
———
அவதாரிகை –
இதில்-இப்போது ஆதரிக்கிற தேவர்-அநாதி அநாதர ஹேது சொல்லும் என்று-மடி பிடித்துக் கேட்க
அவன் அதுக்கு ஒன்றும் சொல்லாமல்
நிருத்தனனான படியை அருளிச் செய்கிற ஸ்ரீ ஆழ்வார் திவ்ய ஸூக்தியை அனுவதித்து-அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
முதலிலே
அத்வேஷத்தைப் பிறப்பித்து-ஆபிமுக்யத்தை யுண்டாக்கி-ஆஸ்ரயண ருசியை விளைத்து
தானே யுபாயமாய்-தன் திருவடிகளிலே பிரேமத்தையும்-பரம பக்தி பர்யந்தமாக முற்றுவித்து
தன்னால் அல்லாது செல்லாதபடி பண்ணி
நாம் சொன்னபடியே செய்வானாக சமைந்து
நம்மை இவன் இப்படி தலையாலே-சுமவா நின்றதுக்கு அடி ஏது என்று அவனைக் கேட்க –
அவன் நிருத்தரனாய்-கவிழ் தலை இட்டு நிற்க
நிர்ஹேதுகமாகாதே -என்று ப்ரீதராய்
தம்மை அவன் அங்கீ கரித்த படியையும்
அங்கீகார ஹேதுவானவன் கிருபாதி குணங்களையும்-அனுசந்தித்து
இது ஒரு நிர்ஹேதுக விஷயீகாரம் இருந்தபடியே-என்று வித்தராகிற
திரு மால் இரும் சோலை மலை யில் அர்த்தத்தை
திருமால் தம்பால் -இத்யாதியாலே-அருளிச் செய்கிறார் -என்கை-
திருமால் தன்பால் விருப்பம் செய்கின்ற நேர் கண்டு
அரு மாயத்து அன்று அகல்விப்பான் என் -பெருமால் நீ
இன்று என்பால் செய்வான் என் என்ன இடருற்று நின்றான்
துன்னு புகழ் மாறனைத் தான் சூழ்ந்து —98-
வியாக்யானம்–
திருமால் தன்பால் விருப்பம் செய்கின்ற நேர் கண்டு –
அதிகம் புரவா சாச்சம் மன்யே தவச தர்சநாத் -என்னும்படி-ஸ்ரீ யபதியானவன்
தம் விஷயத்தில்-அத்யாதாரம் பண்ணுகிற படியைக் கண்டு –
அதாவது
திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான் -என்றும்
இன்று வந்து பேரேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான் -என்றும்
திருப் பேரான் அடி சேர்வது எனக்கு எளிதாயினவாறே -என்றும்
தெளிதாகிய தேண் விசும்பு தருவானே -என்றும்
வானே தருவான் எனக்காய் என்னோடு ஒட்டி
யூனேய் குரம்பை இதனுள் புகுந்து இன்று தானே தடுமாற்ற வினைகள் தவிர்த்தான் -என்றும்
இன்று வந்து இருப்பேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான் -என்றும்
உண்டு களித்தேற்கு -என்று தொடங்கி-கண்டு களிப்ப கண்ணுள் நின்று அகலான் -என்றும்
கருத்தின் கண் பெரியன் -என்றும்
திண்ணம் என் மனத்து புகுந்தான் செறிந்து இன்றே -என்றும்
இப்படி-மேல் மேல் என-அத்யாதாரத்தை பண்ணின படி என்கை –
ஏவம் வித நிர்ஹேதுக வ்யாமோஹத்தை தர்சித்து
அரு மாயத்து அன்று அகல்விப்பான் என் -பெருமால் நீ இன்று என்பால் செய்வான் என் என்ன-
அன்று-அநாதி காலம்-துரத்யயமான பிரக்ருதியிலே இட்டு வைத்து அகற்றி விடுவான் என் –
இன்று நிர்ஹேதுகமாக-நிரவதிக வ்யாமோஹத்தை
சர்வஞ்ஞனாய் சர்வசக்தனாய் நிரஸ்த சமஸ்த ஹேயனான நீ
அஞ்ஞனாய் அசக்தனாய் ஹேய சம்சர்க்க அர்ஹனாய் இருக்கிற என் விஷயத்தில்
இப்படிச் செய்வான் என் என்று கேட்க
இன்று என்னைப் பொருளாக்கி தன்னை என்னுள் வைத்தான் அன்று என்னைப் புறம போகப் புணர்த்தது என் செய்வான்
குன்றன்ன திகழ் மாடங்கள் சூழ் திருப் பேரா ஓன்று எனக்கு அருள் செய்ய உணர்த்தல் உற்றேன் –
என்றத்தை கடாஷித்து அருளிச் செய்தபடி —
இப்படி அநாதி அநாதர ஹேது சொல் என்று மடியைப் பிடித்து கேட்க
அவனும் சில ஹேது பரம்பரைகளை இவர் உத்தரத்துக்கு பிரத்யுத்தரமாக சொல்லிக் கொடு போர
இவர் தம் நா வீருடைமையாலே அவனை நிருத்தனாம்படி பண்ண –
இடருற்று நின்றான் –
இப்படி இவர் அருளிச் செய்ய மேல் போக்கடி காணாமல்
தரைக் கீறி கவிழ தலை இட்டு ஸ்தப்தனாய் நின்றான்
இடராவது-அதிகோக்தி சொல்ல முடியாத ஆகுலம் –
துன்னு புகழ் மாறனைத் தான் சூழ்ந்து –
இது நிர்ஹேதுகமாகாதே -என்று அவன் விஷயீ காரத்திலே விக்ருதராய்
அத்தாலே வந்த சம்ருத்தமான யசஸை யுடைய ஸ்ரீ ஆழ்வாரை –
அந்த யசஸ் ஸோபாதியாகத் தானும் சூழ்ந்து -இடருற்று நின்றான்
ஸ்ரீ சர்வஞ்ஞனும் நிருத்தனாய் நிற்பதே -என்று இவருக்கு ஈடுபாடாய் இருக்கிறது –
————
அவதாரிகை –
இதில் ஸ்ரீ அர்ச்சிராதி மார்க்க சத்காரத்தை அடையக் காட்ட அனுபவித்து அருளிச் செய்த பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார்-அது எங்கனே என்னில் –
இவரை அமர்ந்த நிலமான ஸ்ரீ பரம பதத்திலே கொடு போய் வைத்து இவரும் தானுமாக அனுபவிப்பதாக ஸ்ரீ சர்வேஸ்வரன் விசாரித்து
இவருக்கு ஸ்ரீ அர்ச்சிராதி மார்க்கத்தையும்-அங்கு உள்ளார் பண்ணும் சத்கார விசேஷங்களையும்
ஸ்ரீ பரமபத பிராப்தியையும் அங்கு உள்ளார் வந்து எதிர் கொண்டு சத்கரிக்கும் கட்டளைகளையும்
தன்னுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளையும் இவருக்கு கண்டு அனுபவிக்கலாம்படி
பர ஜ்ஞான தசையை பிறப்பித்துக் காட்டிக் கொடுக்க
இவரும் கட்டடங்க கண்டு அனுபவித்து
தாம் பெற்ற பேற்றை அன்யாபதேசத்தாலே அருளிச் செய்கிற சூழ் விசும்பு அணி முகிலில் அர்த்தத்தை
சூழ்ந்து நின்ற மால் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை-
சூழ்ந்து நின்ற மால் விசும்பில் தொல்லை வழி காட்ட
ஆழ்ந்து அதனை முற்றும் அனுபவித்து -வாழ்ந்து அங்கு
அடியருடனே இருந்தவாற்றை யுரை செய்தான்
முடி மகிழ் சேர் ஞான முனி –99-
வியாக்யானம்–
சூழ்ந்து நின்ற மால் விசும்பில் தொல்லை வழி காட்ட –
கீழ் இவரைச் சூழ்ந்து கொண்டு நிவ்ருத்தனாய் நின்ற ஸ்ரீ சர்வேஸ்வரன்
ஏஷா சாத்ருச்யதே -இத்யாதி படியே- ஸ்ரீ பரம ஆகாசத்திலே தேஜக்ரச்சாச்வதே மதே -என்று
பூர்வ மார்க்கமான ஸ்ரீ அர்ச்சிராதி மார்க்கத்தைக் காட்ட
அமந்திர ஜோஸ்த்வ கோஷம் போலே ஏறப் பெறுகிற எழுச்சியை ஸூசிப்பிக்கிற
மேக சமுத்திர பேரீ கீத காஹள சங்கா சீச்துதி-கோலாஹலம்-செவிப்படும் படியையும் –
அலங்கார விகிம்க்ருதச்னாம் காரயமாச வேசமான -என்கிறபடியே-அங்குள்ள ஆதிவாஹிக சத்கார க்ரமத்தையும்
மேல் ஸ்ரீ நித்ய சூரிகள் பிரத்யுக்தராய் சத்கரிக்கும் க்ரமத்தையும்
த்வாராத்ய ஷரர்சத்கரிக்கும் க்ரமத்தையும் திவ்ய அப்சரஸ் சத்கார க்ரமத்தையும்
ஸ்ரீ சர்வேஸ்வரனும் ஸ்ரீ பெரிய பிராட்டியாரும் ஆதரிக்கும் படியையும்
திவ்ய சூரி பரிஷத்தில் இருந்து ஆனந்த நிர்பரராய் அனுபவிக்கும் படியையும்
தொல்லை வழி காட்ட -என்ற அதிலே இவ்வளவும் அனுவர்த்தித்த படி –
ஆழ்ந்து அதனை முற்றும் அனுபவித்து —
அதிலே ஆழம் கால் பட்டு-அவன் காட்டின எல்லாவற்றையும் கட்டடங்க அனுபவித்து
அதாவது –
சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின-ஆழ் கடல் அலை திரை கை எடுத்து ஆடின-என்றும்
நாரணன் தாமரைக் கண்டு உகந்து நன்னீர் முகில்-பூரண பொற் குடம் பூரித்த உயர் விண்ணில் -என்றும்
தொழுதனர் உலகர்கள் -என்று தொடங்கி வழி இது வைகுந்ததற்கு என்று வந்து எதிர் எதிர் -என்றும்
எதிர் எதிர் இமையவர் என்று தொடங்கி-மது விரி துழாய் முடி மாதவன் தமர்கே-என்றும்
மாதவன் தமர் என்று வாசலில் வானவர் -என்று தொடங்கி-வேத நல் வாயவர் வேள்வியுள் மடுத்தே -என்றும்
வேள்வியுள் மடுத்தலும் -என்று தொடங்கி -வாள் ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர் -என்றும்
மடந்தையர் வாழ்த்தலும் -என்று தொடங்கி -குடந்தையன் கோவலன் குடி குடி யார்க்கே -என்றும்
குடியடியார் -என்று தொடங்கி-வடிவுடை மாதவன் வைகுந்தம் புகவே -என்றும்
வைகுந்தம் புகுதலும் -என்று தொடங்கி-வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே -என்றும்
விதிவகை -என்று தொடங்கி -மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே -என்றும்
வந்தவர் எதிர் கொள்ள மா மணி –பேரின்பத் தடியரோடு இருந்தமை -என்றும்
இப்படி-முழுவதும் அனுபவித்த படி -என்கை –
அனுபவித்து வாழ்ந்து –
இவ் வனுபவத்தை அடைவே அனுபவித்து க்ருதார்த்தராய் –
அங்கு அடியருடனே இருந்தவாற்றை யுரை செய்தான் –
ஸ்ரீ பரம பதத்திலே ஆனந்த மயமான ஸ்ரீ திரு மா மணி மண்டபத்திலே
ஸ்ரீ அனந்த ஸ்ரீ கருட ஸ்ரீ விஷ்வக் சேனர் பிரமுகராய் உள்ள-அடியரோடு
ஆனந்த நிர்பரராய் இருந்த பிரகாரத்தை அருளிச் செய்தார்
முடி மகிழ் சேர் ஞான முனி –
முடியுடை வானவரோடே கூடுகையாலே-முடியை யுடையராய் பிரபந்தம் தலைக் கட்டுகையாலே
ஸ்ரீ ஆழ்வாரும்-அளக பந்தத்திலே வகுள பந்தத்தை யுடையராய் தலைக் கட்டின படியை அருளிச் செய்கிறார் –
அவன் – மது விரி துழாய் மாதவன் –
இவர் -முடி மகிழ் சேர் ஞான முனி-பர ஜ்ஞானத்தை உடைய பராங்குச முனியானவர் –
அடியருடனே இருந்த வாற்றை யுரை செய்தான் –
சூழ் விசும்பு அணி முகில் தொடங்கி-அடியரோடு இருந்தமை என்னும் அளவும் அருளிச் செய்தார் –
எல்லாரும் விஸ்வசித்து உஜ்ஜீவிக்கைக்காக –
———
அவதாரிகை –
இதில் – ஸ்ரீ பரம பத்தியாலே-பர ப்ராப்தியான படியை பேசின பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
கீழ் சூழ் விசும்பு அணி முகிலிலே ஸ்ரீ பரம பதத்திலே புக்கு நிரதிசய ஆனந்த உக்தராய்
நித்ய சூரிகள் திரளிலே இருக்கிறாராக-தம்மை அனுசந்தித்த இது
ஜ்ஞான அனுசந்தானம் மாத்ரமாய் பாஹ்ய சம்ச்லேஷ யோக்கியம் அல்லாமையாலே
மேரு சிகரத்திலே ஸூ கோத்ரமாக இருந்தவன்
பேர் ஆழமான பள்ளத்திலே தலை கீழாக தள்ளுண்டு-விழுந்து நோவு படுமா போலே
அனந்த கிலேச பாஜனமான சம்சாரத்தில்-தாம் இருக்கிற படியைக் கண்டு
ஸ்ரீ ஈஸ்வரனுக்கு
பண்டு போலே ஒரு குணாவிஷ்காராதிகளால் பரிஹரிக்க ஒண்ணாத படி ஆற்றாமை தலை எடுத்து
ஒரு தூத ப்ரேஷாணாதிகளால் இட்டு நீட்டுகையும் இன்றிக்கே
தாமே அவன் முகத்தைப் பார்த்து
தம்மால் இது பரிஹரித்துக் கொள்ளப் போகாது இருக்கிறபடியும்
சாதநாந்தரங்களை அனுஷ்டித்தாலும் அவன் கை பார்த்து இருக்க வேண்டி இருக்கும் படியையும் சொல்லிக் கொண்டு
ஸ்ரீ பெரிய பிராட்டியார் ஆணை இட்டு-தடுத்தும்-வளைத்தும் அவனைப் பெற வேண்டும்படியான பரம பக்தி தலை எடுத்து
நிர்க்குணர் உடைய ஹிருதயங்களும் கூட இரங்கும் படியாகவும்
அவனுக்கும் தம் கார்யம் செய்து அல்லது ஸ்ரீ திரு நாட்டிலே குடி இருப்பு அரிதாம்படியாகவும்
பெரும் மிடறு செய்து கூப்பிட்டு பெரிய ஆர்த்தியோடே திருவடிகளிலே சரணம் புக
ஸ்ரீ பெரிய திருவடி திருத் தோளிலே ஸ்ரீ பெரிய பிராட்டியாரோடு கூட இவர் அபேஷித்த படியே ஸ்ரீ சர்வேஸ்வரன் வந்து தோற்றி
கால் கட்டான பிரகிருதி சம்பந்தத்தையும் அறுத்து
ஸ்ரீ பரம பதத்திலே கொடு போய் நித்ய சூரிகளோடே ஒரு கோவை யாக்கி-நித்ய கைங்கர்யம் கொண்டருள-
அத்தாலே-தாம் நிரஸ்த பிரதிபந்தகராய் பிராப்த சமஸ்த மநோ ரதரான படியை-சொல்லித் தலைக் கட்டுகிற
முனிய நான் முகனே யில் அர்த்தத்தை
முனி மாறன் இத்யாதியாலே அருளிச் செய்து தலைக் கட்டுகிறார் -என்கை –
முனி மாறன் முன்புரை செய் முற்றின்பம் நீங்கி
தனியாகி நின்று தளர்ந்து -நனியாம்
பரம பத்தியால் நைந்து பங்கயத்தாள் கோனை
ஒருமை யுற்றுச் சேர்ந்தான் உயர்ந்து –100-
வியாக்யானம்–
முனி மாறன்
ஸ்ரீ சர்வேஸ்வரன் -முனியே -என்னும்படி சதவஸ்தமான சம்ஹ்ருதி சமயத்தில் சர்வ சேதன ரஷணத்திலே
த்யாநாந்தஸ்தனாய் இருக்குமா போலே
இவரும்
நித்ய சம்சாரிகளாய் சம்சாரித்து
அசித் ப்ராயரான ஆத்மாக்கள் விஷயத்திலும் ரஷண சிந்தை பண்ணிப் போருகையாலே முனி -என்கிறது –
அன்றிக்கே –
பகவத் விஷயத்தில்-எண்ணா தனகள் எண்ணும் நல் முனிவர்-என்னுதல் –
அன்றிக்கே
பிரக்ருததுக்குச் சேர-ஸ்ரீ சர்வேஸ்வரன் விஷயத்தில்-பரம பக்தி பர்யந்தமாக
நிரந்த சிந்தா உக்தராய் இருக்குமவர் -என்னுதல் –
இப்படி மனன சீலராய் இருக்கிற ஸ்ரீ ஆழ்வார் —
முன்புரை செய் முற்றின்பம் நீங்கி –
அதாவது
களிதாகி சிந்தையனாய் களிக்கின்றேன் -என்றும்
விருப்பே பெற்று அமுதம் உண்டு களித்தேனே -என்றும்
உண்டு களித்தேற்கு உம்பர் என் குறை-மேலைத் தொண்டு களித்து அந்தி தொழும் சொல்லும் பெற்றேன் -என்றும்
கண்ணுள் நின்று அகலான் -என்றும்
உற்றேன் உகந்து பணி செய்து உன பாதம் பெற்றேன் -என்றும்
வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து அந்தமில்-பேரின்பத்து அடியரோடு இருந்தமை -என்றும்
இப்படி
முன்பு பேற்றை பெற்றதாக அருளிச் செய்த சமஸ்த ஆனந்தமும் நிரஸ்தமாய்ப் போய்
அது எல்லாம் மானச அனுபவ மாத்ரமாய்-பிரத்யஷ சாஷாத் காரத்திலே அபேஷை யுடையவராய்
அத்தை அப்போதே பெறாமல்
மீளவும் அஜஞாநாவஹமான சம்சாரத்த்லே இருக்கக் கண்டு
பூர்வத்தில் ஆனந்தமும் அபூர்வமாம்படி கழிந்தது -என்கை –
தனியாகி நின்று தளர்ந்து –
அந்தமில் பேர் இன்பத்து அடியாரான-ஸூரி சங்கங்கள் உடனே இருந்தும்
ஸ்வப்ன கல்பமாய் பழைய சம்சாரத்தில் தனிமையே சேஷித்து
ஸ்ரீ பிராட்டி ஸ்ரீ திரு அயோத்யையிலே ராவாணந்தகரான ஸ்ரீ பெருமாளை
பரமனும் தம்பி சத்ருக்னனும் இலக்குமனோடு மைதிலியும் -என்னும்படி சேர்த்தியாய் இருந்து அனுபவித்து
பின்பு பிரிந்து
காந்தார மத்யே விஜகே விஸ்ருஷ்டா பாலேவ கன்யா விலலாப சீதா -என்னும்படி
தனியே நின்று கூப்பிட்டாப் போலே
தனியேன் ஆர் உயிரே -என்று
தனியாகா நின்று தளர்ந்து மிகவும் அவசாதத்தை உடையவராய் தரைப்பட்டு-
அதாவது –
கனிவாய்த் தாமரை கட்கரு மாணிக்கமே –மாயம் செய்யேல் என்னை -என்றும்
மாயம் செய்யேல் என்று தொடக்கி –திரு வாணை நின் ஆணை-கண்டாய் –கூ விக் கொள்ளை வந்து அந்தோ -என்றும்
ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின் அல்லால் அறிகின்றிலேன் நான் -என்றும்
உம்பர் பரம் தண் பாழேயோ–என்னைப் போற விட்டிட்டாயே -என்றும்
எனக்கு ஆரா வமுதானாயே -என்றும்
எனக்கு ஆரா அமுதாய் எனது ஆவியை இன்னுயிரை மனக்காராமை மன்னி யுன்டிட்டாய் இனி யுண்டு ஒழியாய் -என்றும்
கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ-உன்னைப் பெற்று இனி போக்குவேனோ -என்றும்
முதல் தனி உன்னை எனை நாள் வந்து கூடுவன் நான் -என்றும்
இப்படி ஆற்றாமையாலே-அவசன்னராய்க் கூப்பிட்டு -என்கை –
நனியாம் பரம பக்தியால் நைந்து —
அதனில் பெரிய அவா -என்னும்படி
தத்வ த்ரயங்களிலும் பெரியதாய்-முடிந்த அவாவான பரம பக்தியாலே-பரிபக்வராய் –
நனி -பெருமை
அன்றிக்கே
பரம பக்தியால் அலைந்து -என்ற பாடமான போது
அவா வாகிற அமுத வெள்ளமான-ஆனந்த சாகரத்திலே மக்னராய் -அலைந்து -என்றுமாம் –
பங்கயத்தாள் கோனை –
அந்த பரம பக்திக்கு விஷயமான-ஸ்ரீயபதியை –
கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ –
உன்னைப் பற்றி இனி போக்குவேனோ -என்று அருளிச் செய்தவனை
உத்தர வாக்யத்தில் கைங்கர்ய பிரதி சம்பந்தியான ஸ்ரீயபதியை –
ஒருமையுற்று
வீடு திருத்தி -என்றும்
விண்ணுலகம் தருவானே விரைகின்றான் -என்றும்
வானே தருவான் எனக்காய் என்னுள்ளே ஒட்டி -என்றும்
த்வரிக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரன் திரு உள்ளத்தோடு சேரும்படி
இவர் திரு உள்ளமும் த்வரித்து -ஒரு தளைத்து -என்னுதல்-
அன்றிக்கே
பர பக்தி
பர ஞான
பரம பக்தி
உக்தராய்-பேற்றுக்குத் த்வரித்து
அவாவாலே கூப்பிட்டுப் போந்த இவர் திரு உள்ளமும் –
முதித பரிஷச்வஜே -என்னும்படி
என் அவா அறச் சூழ்ந்தாயே -என்று
இவர் அபி நிவேசம் தீரும்படி சம்ஸ்லேஷிக்கையாலே
அவா அற்று வீடு பெற்ற பிரகாரத்தை-ஆகவுமாம்-
பங்கயத்தாள் கோனை –ஒருமை யுற்று –உயர்ந்து -சேர்ந்தான் –
அதாவது
கோலத் திரு மா மகளோடு உன்னைக் கூடாதே சாலப் பல நாள் அடியேன் இன்னம் தளர்வேனோ -என்கிற-இழவு தீர
ஸ்ரீ யபதியான ஸ்ரீ சர்வேஸ்வரனை-ஒரு தலைத்த பரமபக்தி உக்தராய்
அத்தால்
நித்ய சூரிகள் ஆச்சார்யத்தை-இங்கே யுடையராய்
பிரத்யஷ சாஷாத்காரமாம் படி கிட்டி-இருவருமான சேர்த்தியிலே
அடிமை செய்வார் திரு மாலுக்கே -என்னும்படி –
அடிமை செய்யப் பெற்றார் –
அங்கே
பரதமாரோப்ய முதித பரிஷச்வஜே -என்று-இவரைப் பெற்று ஹ்ருஷ்டனாக
இவரும்
அத்தலையில்-முகோல்லாசத்தைப் பெற்று -அனுபவித்து-ஹ்ருஷ்டரானார் –
அத்தை யாயிற்று-ஒருமை யுற்றுச் சேர்ந்தான் -என்கிறது –
இத்தால்
அவா அற்று
வீடு பெற்ற
குருகூர் சடகபன் –
என்றத்தை நினைக்கிறது-
சாஷாத் கரித்த பரம பிராப்திக்கு தலை மிசையாய் வந்து-தாள்களைப் பூண்டு-போகாமல் தடுத்து
திரு வாணை இட்டு-கூசம் செய்யாதே-செய்திப் பிழை யற்று
கொம்பற்ற கதி கேடு போர விட்ட பெரும் பழி-புறம்பு போனால் வரும் இழவு உண்டிட்ட முற்றீம்பு
அன்பு வளர்ந்த அடி யுரம்-உயிர் உறவு முதல் அளவு துரக் கைகளாலே
பெறா வாணை அல்லவாக்கின-பேரவா-குளப்படியாம்படி-கடல் போன்ற ஆதாரத்தோடு சூழ்ந்து
தாபங்களை ஹரித்தமையை-வெளியிடுகிறார் பத்தாம் பத்தில் -என்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயத்தில்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிச் செய்தார் –
கண்டு களிப்பளவும் -பரஞ்ஞான கர்ப்ப பரபக்தி
இருந்தமை -என்றது பூர்ண பரஞ்ஞானம்
முடிந்த அவா என்றது பரமபக்தி
இவை
ஞான
தர்சன
பிராப்தி
அவஸ்தைகள் -என்று
இந்த பரபக்தியாதி பேதத்தையும் அருளிச் செய்தார் —
ஏவம்விதமான
பரமபக்தியாலே-பரிபக்வராய்-பலத்தோடு சேர்ந்தார் -என்கிற
ஸ்ரீ திருவாய்மொழியில் அர்த்தத்தை-இப்பிரபந்தத்தில்-இப்பாட்டாலே சேகரித்து அருளினார் ஆயிற்று —
———
ஆச்சார்ய ஹிருதயம்-ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் -சூர்ணிகை –227–
ஒன்பதாம் பத்தால்
சாதன பல உபகாரம் கைம்மாறு இன்றி
க்ருதஞ்ஞதா பல க்ருதமானம் -ஆத்மாவை உணர்ந்தார் எட்டாம் பத்தில்
ஆத்ம தரிசன பல பிராப்தி மரணாவதியாகப் பெற்று —
சரணமாகும் தனது தாள் அடைந்ததற்கு எல்லாம் மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் –
சர்வ சக்தித்வம் -கீழே -ஆபத் ஸகத்வம் இதில் –
பகவத் அனுபவ ப்ரீதி காரித கைங்கர்யம் ஸ்வரூபத்துக்கு அனுரூபமான ப்ராப்யம் –
சஞ்சித கர்மா மூட்டை பிராரப்த கர்மா -வர்த்தமான சரீரம் -வரும் சரீரம் இரண்டிலும் அனுபவிக்கும் ஆரப்தம்-
வர்த்தமான ஆரப்தம் முடிந்தால் பேறு-சரீரம் விழும் பொழுது -நாள் அவதி இட்டுகே கொடுக்கும் திருக்கண்ண புரம்-
கிருபையால் சிலருக்கும் -பரம கிருபையால் – பலருக்கும் சர்வ உபாயங்கள்
பக்தி -பிரபத்தி -வாயால் திவ்ய தேசம் சொல்வது -இவற்றை நினைப்பது -இப்படி பல படிகள்
சங்கதி –
நெடுமாற்கு அடிமையில் பாகவத பிரபாவம் காட்டி அருளிய நிருபாதிக பந்து –
கிருபை அடியாக பந்து-கர்மம் அடியாக மற்ற பந்துக்கள் –
கிருபை பொது -சாதாரணம் -அனைவருக்கும் -நிஷ் காரணம் நிருபாதிகம்–
வால்மீகி -திருட -ரிஷி -திருடிய பயனை பகிர்ந்து கொள்ள பத்னி இடம் கேட்கச் சொல்ல -அவள் மறுக்க உணர்ந்த ஐதிக்யம்
சம்சாரிகள் சோபாதிக பந்துக்களுடன் இருக்கக் கண்டவர் அவர்களைத் திருத்த –
கை விட்ட அனைவரையும் ரக்ஷித்து அருளுபவர் சகலவித பந்து -பிராப்தி -9-1-சொல்லி
அதுக்கு பலம் -கைங்கர்யம் -பந்து க்ருத்யம் -9-2-பண்டை நாளாலே -கொடுவினையேனும் பிடிக்க கூவுதல் வருதல் செய்யாயே
என் ஆர்த்தியும் உம் ஆர்த்தியும் தீர்க்காமல் இருக்கவோ -இவர் ஆர்த்தி மட்டும் ஆராவமுதே -5-8-
சஞ்சயனை பள்ளிக் கட்டுக்குள்ளே வரச் சொல்லி -அந்த அந்தரங்க கைங்கர்யம் -பிரார்த்தனை த்வரை-
செய்கிறேன் -வார்த்தை கேட்டதும் ஸமாஹிதரானார் -கௌசல்யை மங்களம் பெருமாளுக்கு -அனுக்ரஹம் செய்தால் போலே-
ஒரு வார்த்தை கேட்டது போலே துடித்து இருந்தாலும் –நாராயணன் அர்த்தம் கேட்டதும் -9-3-
வியாபக மந்த்ர ப்ரீதி–ஓங்கார அர்த்தம் -8-8-/ நமஸ் சப்தார்த்தம் -8-9-அநந்யார்ஹத்வம் /–நெடுமாற்கு அடிமை ஆர்த்தமான அர்த்தம் -8-10-
அவனே பந்து ஆபாச பந்துக்கள் அல்லர் -9-1-/ பந்து இடம் கைங்கர்யம் ஆய அர்த்தம் -9-2-/
சார தம காயத்ரியின் முன் ஓதிய நாராயணன் அர்த்தம் விருப்பம் –
திருமந்திர நாராயணனுக்கு மேலே ஸ்ரீ யபதி–அணியார் மலர் மங்கை தோள் கீழே வந்ததே -சேர்த்து வைக்க வேண்டுமே
முடியானே ஆசை திரும்ப -9-4-மையார் கரும் கண்ணி காண விரும்பும் கண்ணே -த்வய நாராயணன் -அர்த்தம் –
கருவாகிய கண்ணனைக் கண்டு கொண்டே -மானஸ அனுபவம் -பாஹ்ய சம்ச்லேஷம் கிட்டாமல்
இன்னுயிர்ச் சேவலும் -எம்பெருமானார் உகந்த -9-5-லௌகிக பதார்த்தம் பார்த்து ஆசுவாசப்படாமல் இவை சேர்ந்து ஆழ்வாரை நலிய
கூடி இருக்கும் பொழுது ஸந்தோஷம்-விஸ்லேஷத்தில் நலிவு -இவர்களை குற்றம் சொல்லக் கூடாதே
குண அனுபவம் செய்து தரிக்க
மகள் பதிகம் இது 9-5–
இருத்தும் வியந்து 8-7-உடன் –9 -6-உருகுமால் சங்கதி -போகத்தில் தட்டு மாறும் சீலம் காட்கரையில் கரை அழிக்கும்-
ஆத்ம தத்வம் -சரீரம் -மனஸ் அனைத்தும் உருக —
குணம் -என்றாலே சீலம் -ஸ்ரீ ராமாயணம் பார்த்தோம் -குணவான் —
சீல குணம் அனுபவித்து -அப்ரீதி கர்ப்ப குண அனுசந்தானம் இது –
தன்னிலைமை இழந்து தூது -9-7-எம் கானல் -திரு மூழிக் களத்து –தாம் தம்மைக் கொண்டு அகல்வது தகுதியோ –
அழகை நினைவு படுத்தி -ஸுவ்ந்தர்யம் பற்றாசாக தூது–
இது நான்காம் தூது -கடைசி தூது -தூது விட்டு அவன் வருவதற்குள் நிலை -திரு நாவாய் -9-8-கிட்டே போவேனோ –
சீதா நிலைமை போலே -பெருமாள் கடலை தாண்டி வருவாரா பாரிப்பு போலே
அடியேன் அணுகப் பெறு நாள் என்றோ –
ஆளவந்தார் மிகவும் உகந்த பதிகம்–
மல்லிகை –மகள் பாசுரம் -9-9-நலிய -ப்ராப்ய வஸ்து அடைய ஆசைப்பட்டார் திரு நாவாய் –
கோபிகள் ஒரு இரவில் பட்ட வருத்தம் ஆளவந்தார் –நான்கு பதிகமாக பட்ட வருத்தம் — –
ராமானுஜர் ஒரு இரவு -இல்லை முற் கூறு இல்லாமல் பிற கூறு வரும் வரை பட்ட வியசனம்-
மங்கைமார் சாலக வாசல் பற்றி நிற்பார்கள் -பெரியாழ்வார் –
ஆயிரம் பிள்ளைகள் பின் வருவதால் பட்ட பாடு –மாலைப்பூசல் –
உமது வருத்தம் என்னது அன்றோ -நியத பிரகாரம் சொன்னோமே எட்டாம் பத்திலே -நாள் குறித்து -அருளிச் செய்ய ஸமாஹிதரானார்
மரண அவதி யாக அருளிச் செய்த பதிகம் -9-10-
நீல மேக பெருமாள் -மூலவர் -ஸுவ்ரி ராஜ பெருமாள் உத்சவர் -கலங்கா பெருநகரம் காட்டுவான் -பர உபதேசம் -9-1-போலே -9-10-
சரண முகுந்தத்வம் –குணம் காட்டி -ஆபத் ஸகத்வம்
ஒன்பதாம் பத்தால்-
இப்படி அவாப்த சமஸ்த காமன் ஆகையாலே –
இத்தலையில் ஒன்றும் அபேஷிக்காமல் -பிரளயாதி ஆபத்துகளிலே உதவி ரஷிக்கும் ஆபத் சகனான சர்வேஸ்வரன் –
கீழ் பிரகாசிப்பித்த ஆத்ம தர்சனதுக்கு பலம்-
ஸ்வரூப அனுரூபமான பிராப்த்யத்தை அனுபவிக்கை ஆகையாலே –
அவ் அனுபவத்தில் உண்டான த்வரையாலே -ஷண காலம் விளம்பம் பொறுக்க மாட்டாமல் –
ஆர்த்தரான தமக்கு -ஆரப்த சரீர அவசானத்திலே -பேறாகக் கடவது -என்று
நாள் அவதி இட்டு கொடுக்கப் பெற்றவர் –
கீழ் தாம் உபதேசித்துத் திருந்தினவர்கள் ஒழிய -அல்லாதாரையும் விட மாட்டாத
பரம கிருபையாலே -யதா அதிகாரம் சர்வ உபாயங்களையும் அருளிச் செய்கிறார் -என்கிறார்-
———————————————–
1-எண் திசையும் அகல் ஞாலம் எங்கும் அளிக்கின்ற
ஆலின் மேல் என்னும் படி நித்ய போக பாத
லீலா உபகரணத்தின் லயாதிகளை போக்கும் ஆபத் சகன்
2-ஆர் உயிர் என்னப் படுத்தின ஆத்ம தர்சன பல அனுபவ
பரம்பரையைக் கூவுதல் வருதல் என்று முடுக விட்டு
3-ஏகம் எண்ணிக் காணக் கருதி எழ நண்ணி நினைதொறும்
உருகி அலற்றி கவையில் மனம் இன்றி பதினாலாண்டு
பத்து மாசம் ஒரு பகல் பொறுத்தவர்கள் ஒரு மாச தின
சந்த்யையில் படுமது ஷணத்திலே யாக விரங்குகிற த்வரைக்கு ஈடாக
4-இனிப் பத்தில் ஓன்று தசம தசையிலே பேறு என்று
நாட் கடலாக தம்பிக் கிட்டதாகாமல் நாளை வதுவை
போலே நாள் இடப் பெற்றவர்
5-இம்மட உலகர் கண்ட தோடு பட்ட
அபாந்தவ அரஷக அபோக்ய அஸூக அனுபாய
பிரதி சம்பத்தியைக் காட்டி
6-மற்று ஓன்று கண்ணன் அல்லால் என்கிற
வைகல் வாழ்தலான சித்தோபாயம்
7-அதில் துர் பல புத்திகளுக்கு மாலை
நண்ணி காலை மாலை விண்டு தேனை
வாடா மலர் இட்டு அன்பராம் சாங்க பக்தி –
அதில் அசக்தருக்கு தாள் அடையும் பக்தி
8-அதில் அசக்தருக்கு உச்சாரண மாத்ரம்
சர்வ உபாய சூன்யருக்கு இப் பத்தும்
பாடி யிடும் தண்டன் என்று
கீதாச்சர்யனைப் போலே அதிகார
அனுகுணம் நெறி எல்லாம் உரைக்கிறார் ஒன்பதாம் பத்தில் ..
———————————————–
1-எண் திசையும் அகல் ஞாலம் எங்கும் அளிக்கின்ற ஆலின் மேல் என்னும் படி நித்ய போக பாத
லீலா உபகரணத்தின் லயாதிகளை போக்கும் ஆபத் சகன்-
(பாத லீலா உபகரணம் -நித்ய போகமான பரம பதத்தை நோக்காக கால் கூறாக இருக்கும் லீலா விபூதி -என்றவாறு)
அதாவது-
எண் திசையும் கீழும் மேலும் முற்றவும் உண்ட பிரான்-9-1-1- -என்றும் ,
அவனே அகல் ஞாலம் படைத்து இடந்தான்-அவனே அஃது உண்டு உமிழ்ந்தான் அளந்தான்-9-3-2- -என்றும்
அகலிடம் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்து எங்கும் அளிக்கின்ற வாயன்-9-9-2- -என்றும்
ஆலின் மேலால் அமர்ந்தான்-9-10-1- -என்றும்
சகல லோகங்களையும் பிரளயம் கொள்ளாமல் ஏற்கவே -திரு வயிற்றில் வைத்து நோக்கி
அழிந்தவற்றை மீண்டும் உண்டாக்கியும் –
ஹிரண்யாஷனாலே தள்ளுண்டு அண்ட பித்தியிலே சேர்ந்த பூமியை ஒட்டு விடுவித்து எடுத்தும்-
மகா பலி பலாத்கரித்து ஆளுகிற தசையிலே -எல்லை நடந்து மீட்டும் –
இப்படி பிரளயாதி ஆபத்துகளில் உதவி ரஷித்தவன் என்னும் படி —
கீழ் சொன்ன சத்ய காமத்வத்தால் வந்த நைரபேஷ்யம் தோற்ற -இத் தலையில் அபேஷம் அற –
பிரதுபகாரம் நினையாமல் -வரையாதே -தன் பேறாக நோவு படும் அளவுகளிலே உதவி –
பாதோஸ்ய விஸ்வா பூதானி த்ரிபாதாஸ் யாம்ருதம் திவி -புருஷ ஸூக்தம்–என்கிறபடியே
அம்ருத சப்தத்தால் சொல்லும்படி -நித்ய போகமான-த்ரிபாத் விபூதியைப் பற்ற அல்பம்
ஆகையாலே பாத சப்தத்தால் சொல்ல பட்ட லீலா உபகரணமான இவ் விபூதியில்
லயாதிகளை போக்கும் ஆபத் சகனானவன்–
———————————————————-
2-ஆர் உயிர் என்னப் படுத்தின ஆத்ம தர்சன பல அனுபவ பரம்பரையை கூவுதல் வருதல் என்று முடுக விட்டு
அதாவது
இ6ருந்தும் வியந்தில் -8-7–தம்மோடு கலந்த கலவியை ஸ்மரிப்பிக்க
வித்தராய் –பேசுகிற அளவிலே –
அவன் தட்டு மாறி -நின்று பரிமாறின சீலத்தில் ஈடுபட்டு –
ஆர் உயிர் பட்டது எனது உயிர் பட்டது -9-6-9–என்று என் ஆத்மா பட்டது –
நித்ய அனுபவம் பண்ணுகிற நித்ய சூரிகள் ஸ்வரூபம் தான் பட்டதோ என்னும் படியாக –
தாம் மேல் விழுந்து அனுபவித்த -ஆத்ம வைலஷண்யத்தை
கீழில் பத்தில் (கண்கள் சிவந்து-8-8-) யாதாவாகக் காட்டக் கண்டு -அதுக்கு பலம்-ஸ்வரூப அனுரூபமான
பிராப்யத்தை அனுபவிக்கை ஆகையாலே –
சோதி வாய் திறந்து உன் தாமரைக் கண்களால் நோக்காய்-9-2-1–என்றும் –
பாத பங்கயமே தலைக்கு அணியாய்–9-2-2-என்றும் –
உன் தாமரை மங்கையும் நீயும் இடம் கொள் மூ உலகும் தொழ இருந்து அருளாய் -9-2-3–என்றும் –
கனி வாய் சிவப்ப நீ காண வாராய் -9-2-4–என்றும் –
நின் பன்னிலா முத்தம் தவழ கதிர் முறுவல் செய்து நின் திரு கண் தாமரை தயங்க நின்று அருளாய் -9-2-5-என்றும்-
திருப் பவளத்தை திறந்து -ஒரு வார்த்தை அருளிச் செய்ய வேண்டும் –
திரு கண்களால் குளிர நோக்கி அருள வேண்டும் –
திரு அடிகளை என் தலை மேல் வைத்து அருள வேண்டும் –
தேவரீரும் பிராட்டியும் சேர்ந்து கூட எழுந்து அருளி இருக்கிற இருப்பை எனக்கு காட்டி அருள வேண்டும் –
என் முன்னே நாலடி உலாவி அருள வேண்டும்
அனுகூல தர்சனத்திலே பிறக்கும் ஸ்மிதம் காண வேண்டும் -என்று இப்படி
அனுபவ பரம்பரையை ஆசைப் பட்டு -க்ரம பிராப்தி பற்றாமையாலே –
கூவுதல் வருதல் செய்யாய் -9-2-10–என்று7-
நிரதிசய போக்யமான உன் திரு அடிகளில் நான் வந்து அடிமை செய்யும் படி
என்னை அங்கே அழைத்தல்- நீ இங்கே வருதல்-செய்து அருள வேணும் என்று –
இப்படி முடுக விட்டு–
(தனது உயிரை ஆர் உயிர் என்று சொல்ல வைத்தார் -ஆத்ம ஸ்வரூபம் உள்ளபடி அறிந்து –
அதன் பலமாக கைங்கர்யம் விருத்திக்கு பிரார்த்திக்க வேண்டுமே )
————————————————-
3-ஏகம் எண்ணிக் காணக் கருதி எழ நண்ணி நினைதொறும் உருகி அலற்றி கவையில் மனம் இன்றி
அதாவது
(ஓராயிரமாய்-9-3- -திருவாய்மொழியில்)
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணும் இராப் பகல் இன்றியே –9-3-7-
என்று அவன் நித்ய வாசம் பண்ணுகிற பரமபதத்தைக் காண்கையிலே சர்வ காலமும் ஏக ரூபமாய் மனோரதித்து –
(மையார் கருங்கண்ணி-9-4- திருவாய்மொழியில்)காணக் கருதும் என் கண்ணே -9-4-1-– என்று
பெரிய பிராட்டியா1-ரோடும் -திவ்ய ஆயுதங்களோடும் -திவ்ய விக்ரகத்தோடும் –
கூடி இருக்கிறவனைக் காண வேண்டும் என்று ஆசை பட்டு –
(இன்னுயிர்ச் சேவலும்-9-5- திருவாய்மொழியில் )எழ நண்ணி நாமும் நம் வான நாடோடு ஒன்றினோம் -9-5-10–என்று
ஸ்மாரக பதார்த்த தர்சனத்தில் நோவு படுகையாலே -முடிந்து போகையிலே ஒருப் பட்டு –
(உருகுமால் நெஞ்1-சம்-9-6- திருவாய்மொழியில் )
திரு காட்கரை மருவிய மாயன் தன் மாய9-99-ம் நினை தொறு-நெஞ்சம் உருகுமால்-9-6-1- -என்று
அவன் அனுபவ தசையில் பரிமாறின சீலாதிகளை நினைக்கும் தோறும்
அனுபவ உபகரணமான நெஞ்சு சிதிலமாய் கரைந்து –
(எம் கானல் அகம் கழிவாய் திருவாய்மொழியில்-9-7- )தமரோடு அங்கு உறைவார்க்குத் தக்கிலமே கேளீரே -9-7-2-என்று
தூத பிரேஷண முகத்தாலே – கிளி மொழியாள் அலற்றிய சொல் – 9-7-11-என்று
ஆற்றாமையாலே அக்ரமமாகக் கூப்பிட்டு –
(அறுக்கும் வினையாயின -9-8-திருவாய்மொழியில்)கவையில் மனமின்றி கண்ணீர்கள் கலுழ்வன் -9-8-3–என்று
இரு தலைத்த நெஞ்சு இன்றிக்கே -ஏகாக்ர சித்தராய்-
1-1-
பதினாலாண்டு பத்து மாசம் ஒரு பகல் பொறுத்தவர்கள்
ஒரு மாச தின சந்த்யையில் படுமது ஷணத்திலே யாக விரங்குகிற த்வரைக்கு ஈடாக
அதாவது-
(மல்லிகை கமழ் தென்றல்-9-9- திருவாய்மொழியில்)
பெருமாளைப் பிரிந்து பதினாலாண்டு பொறுத்து இருந்த ஸ்ரீ பரதாழ்வான் –
பூர்ணே சதுர்தச வர்ஷே பஞ்சம்யாம் லஷ்மணாக்ரஜ –யுத்த -127-1—என்று அவதி கழிந்த ஒரு நாளில் பட்ட கிலேசமும் —
பத்து மாசம் பொறுத்து இருந்த பிராட்டி -மாஸாத் ஊர்த்தவம் ந ஜீவிஷ்யே –ஸூந்தர –40 -10–
(இன்னம் ஈண்டொரு திங்கள் இருப்பல் யான் நின்னை நோக்கிப் பகர்ந்து நீதியோய்-
பின்னை ஆவி பிடிக்கின்றிலேன் அனந்த மன்னன் ஆணை இதனை மனக்கொள் நீ –ஸ்ரீ கம்பநாட்டாழ்வார் )-என்று
திருவடி இடம் சொல்லி விட்ட அநந்தரம் -அவ்வொரு மாசத்தில் பட்ட கிலேசமும் –
கிருஷ்ணன் பசு மேய்க்கப் போக ஒரு பகல் எல்லாம் பொறுத்து இருந்த ஸ்ரீ கோபிமார்-
அவன் பசுக்களின் பின் குழையிலே வாரா நிற்க – முற் கொழுந்தில் காணாமையால்
ஒரு சந்த்யையில் பட்ட கி2-லேசம் எல்லாம் –
ஒரு ஷணத்திலே யாம் படி –
அவனை விட்டு அகல்வதற்க்கே இரங்கி-9-9-11-என்று ஈடு படுகிற த்வரைக்கு ஈடாக-
——————————————————-
4-இனிப் பத்தில் ஓன்று தசம தசையிலே பேறு என்று
அதாவது-
நயன பிரீதி பிரதமம் சிந்தா போகஸ் ததோனு சங்கல்ப
நித்ராஸ் சேதஸ் தநுதா விஷய விரக்திஸ் த்ரபாநாச
உந்மாதோ மூர்ச்சா ம்ருதி ரித்யேதா ச்மரதசா தசைவ ஸ்யு-என்றும்-( த்ராபா -வெட்கம்)
பி9-ரதமஸ் தவபிலாஷ ஸ்யாத் த்விதீயம் சிந்தனம் பவேத்
அநு ஸ்ம்ருதிஸ் த்ருதீயந்து சதுர்த்தம் குண கீர்த்தனம்
உத்யோக பஞ்சமம் ப்ரோக்த பிரலாப ஷஷ்ட உச்யதே
உ-ன்மாதஸ் சப்தமோ ஞேய அஷ்டமோ வ்யாதிருச்யதே
நவமே ஜடாத சைவ தசமம் மரணம் ததா -என்றும்-
காட்சி முதலாச் சாக்காடு ஈறாக் காட்டிய பத்தும் கை வரும் எனினே
மெய்யுறு புணர்ச்சி எய்துதற்கு உரித்தே –நம்பியகப்பொருள் -என்றும்
வேட்கை ஒருதலை உள்ளுதல் மெலிதல் ஆக்கம் செப்பல் நாணுவரை இறத்தல் நோக்குவம் எல்லாம்
அவையே போறல் மறத்தல் மயக்கம் சாக்காடு என்றச் சிறப்புடை மரபினவை கழவென மொழிப–தொல்காப்பியம்-என்றும்
சொல்லுகிறபடி -9-1
காமுகராய் இருப்பார்க்கு தசம அவஸ்தையிலே மரணமாம் போலே –
நம் பக்கல் பரபக்தி உக்தரான உமக்கும் நம்மை பெறாவிடில் முடியும் படியான பரம பக்தி தசை –
பத்தாம் பத்திலே -பிறக்கத் தேடுகிறது –
ஆகையால் கீழ் சொன்ன விளம்பம் இல்லை –இனி உள்ளது பத்தில் ஓன்று தசம தசையான
மரண அவஸ்9-தையிலே பேறு என்று-
நாட் கடலாக தம்பிக் கிட்டதாகாமல் நாளை வதுவை போலே நாள் இடப் பெற்றவர்
அதாவது
நாட் கடலை கழிமின்-1-6-7- –என்கிறபடியே -விரஹ வ்யசனத்தாலே ஒருநாள் கடல் போலே துச்தரமாம் படி –
பூர்ணே சதுர்தசே வர்ஷே -யுத்த -127-1–என்று தம்பியான ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு நெடுக நாள் இட்டு
கொடுத்தால் போல் ஆகாமே –
நாளை வதுவை மணம் என்று நாள் இட்டு -நாச்சியார்-6-2-– என்று
இன்று எனில் வெள்ளக் கேடாம்-சில நாள் கழித்து எனில் வறட்கேடாம் என்று நினைத்து –
நாளை என்று நாச்சியாருக்கு நாள் இட்டால் போலே –
–
மரணமானால் -9-10-5–என்று ஆரப்த சரீர அவசானத்திலே -பேறாக -அவன் தானே
நாள் இட்டு கொடுக்கப் பெற்று ஹ்ருஷ்டர் ஆனவர் –
–
——————————————
5-இம் மட உலகர் கண்ட தோடு பட்ட அபாந்தவ அரஷக அபோக்ய அஸூக அனுபாய பிரதி சம்பத்தியைக் காட்டி
அதாவது-
சரம உபாய உபேய பர்யந்தமாக -தாம் அருளிச் செய்த ஹித வசனம் கேட்டு –(சரம உபேயம் -அர்ச்சாவதாரம்)
திருந்தினவர்களை ஒழிய -அல்லாதாரையும் விட மாட்டாத தம்முடைய கிருபையால் –
இம் மட உலகீர் -9-2-7–என்று சம்சாரத்தில் அறிவு கேடர் ஆனவர்களுக்கு –
கொண்ட பெண்டிர் –9-1-1-என்று தொடங்கி -சந்நிதியிலே ஸ்நேகிக்கும் அது ஒழிய காணாத போது
ஸ்நேகம் ஓன்று இன்றிக்கே இருக்கிற பார்யா புத்ராதிகள் பந்துக்கள் அன்று —
பிரளய ஆபத் சகனானவனே பரம பந்து என்றும் —
துணையும் சார்வும் –9-1-2-
பொருள் கை உண்டாய் –9-1-3-
அரணமாவர்- 9-1-4-என்ற பாட்டுகளாலே –
அவனை ஒழிந்தார் தாங்கள் உபகாரரைப் போலே -பிரயோஜனம் உள்ள போது பந்துக்களாய் கொண்டாடி –
ஆபத்து வந்தவாறே கண்ணற்று உபேஷிப்பார்கள்–ஆகையால் அவர்கள் ரஷகர் அல்லர் –
தன்னுடைய ரஷணத்தில் அதி சங்கை பண்ணினாரையும் விஸ்வசிப்பித்து ரஷிக்கும் அவனே–அவதார முகத்தால்
ஸூலபனாய் -ரஷண அனுரூபமான குணங்களை உடையவனாய் – -அவனை ஒழிய வேறு ரஷகன் இல்லை –
சதிரம் என்று தம்மைத் தாமே சம்மதித்து-9-1-5 –என்று தொடங்கி -தங்களுக்கு போக்யைகளாக சம்பாதித்த
ஸ்திரீகள் ஆபத்து வந்த வாறே உபேஷிப்பர்கள் —
ஏக பிரகாரமாக சந்நிக்தனாய் இருப்பவன் அவனே- ஆன பின்பு -அவர்கள் போக்யர் அல்லர் —
அவனே நிரதிசய போக்யன் என்றும் –
இல்லை கண்டீர் இன்பம்-9-1-6-என்று தொடங்கி
துக்கங்களிலே சில வற்றை ஸூகம் என்று பிரமிக்கும் இத்தனை போக்கி அவனை ஒழிய
ஸூக ரூபமாய் இருப்பது ஓன்று இல்லை என்றும் –
யாதும் இல்லை மிக்கு அதனில்-9-1-9-என்று தொடங்கி
அவனை ஒழிய வேறு ஒன்றை ரஷகம் என்று பற்றினவர்கள் பண்டை நிலையும் கெட்டு
அனர்த்தப் பட்டு போவர்கள் –ஆன பின்பு அவனை ஒழிய உபாயம் இல்லை என்றும் –
இப்படி-அவனை ஒழிந்தாருடைய அபந்துவத்தையும் -அரஷகத்வத்தையும் –அபோக்யத்வத்தையும் —
அஸூகத்வத்தையும் –அனுபாயத்வத்தையும் –
அதுக்கு பிரதி கோடியான -அவனுடைய –
பரம பந்துத்வத்தையும் –நிருபாதிக ரஷகத்வத்தையும் –நிரதிசய போக்யதையும் –
ஸூக ரூபத்தையும் –நிரபேஷ உபாயத்வத்தையும் –தர்சிப்பித்து-
(விசேஷணங்கள் அவனுக்கு ஒவ் ஒன்றிலும் காட்டி அருளி )
இம் மட உலகருடைய அபாந்தவாதிகள் பிரதி சம்பந்தியை அவர்களுக்குக் காட்டி என்று
வாக்ய யோஜன க்ரமம்–
—————————————————-
6-மற்று ஓன்று கண்ணன் அல்லால் என்கிற வைகல் வாழ்தலான சித்தோபாயம்
அதாவது-
மற்று ஓன்று இல்லை சுருங்க சொன்னோம்- மா நிலத்து எவ் உயிர்க்கும்
சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் கண்டீர்கள்-9-1-7-என்று இதுக்கு மேல் சொல்லல் ஆவது ஓன்று இல்லை –
இது தன்னை ஸூக்ரகமாக சொன்னோம் –மகா பிருத்வியில் சகல ஆத்மாக்களுக்கும் இது தனக்கு பரக்க
ஆயாசிக்க வேண்டா – சிந்தா மாத்ரமே அமையும் –கேளி கோள் -என்கையாலே –
தனக்கு மேல் ஓன்று இன்றியே இருப்பதாய்
ஸங்க்ரஹேன உபதேசிக்கலாய் –
சர்வாதிகாரமாய் –
வரண ஸூகரமுமாய் -இருக்குமதாய் –
கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண்–9-1-10–என்று
மாம் ஏகம் சரணம் வ்ரஜ -என்று
கிருஷ்ணனை ஒழிய வேறு உபாயம் இல்லை என்கையால்-
சித்தமாய்
பரம சேதனமாய்
சர்வ சக்தியாய்
நிர் பயமாய்
ப்ரப்தமாய்
சகாயாந்தர நிர பேஷமாய்
இருக்குமதாகவும் சொல்லப் படுமதாய்
வட மதுரை பிறந்தான் குற்றமில் சீர் கற்று வைகல் வாழ்தல்–9-1-7-என்கிற
யாவதாத்மபாவியான -குண அனுபவத்துக்கு உடலான -சித்தோ உபாயத்தை உபதேசித்தும் –
————————————————
7-அதில் துர் பல புத்திகளுக்கு மாலை நண்ணி காலை மாலை விண்டு தேனை
வாடா மலர் இட்டு அன்பராம் சாங்க பக்தி –
அதாவது-
சக்ருதேவ ஹி சாஸ்தார்த்த க்ருதோயம் தார என்னரம்
நராணாம் புத்தி தெவ்பல்யா துபாயாந்தர மிஷ்யதே -என்கிறபடியே
அந்த சித்தோ உபாயத்தில் மகா விசுவாசம் பிறக்கைக்கு அடியான
பாக்கியம் இல்லாமையாலே -இதர உபாய பரித்யாக பூர்வகமாக
அதில் இழிகையில் விசுவாசம் இல்லாமை யாகிற புத்தி துர் பல்யம் உடையவர்களுக்கு –
(குண அனுபவம் சிந்திப்பது -அதுவே சித்த உபாயம் -என்ற நினைவே போதும் -முதல் நிலை
சித்த உபாயம் சுலபமானாலும் மஹா விசுவாசம் வேண்டுமே -எனவே இத்தை உபதேசித்து
அதில் துர்லபரானவர்களுக்கு அங்கங்கள் உடன் கூடிய உபாசனை பக்தி யோகம் -)
மாலை நண்ணி தொழுது எழுமினோ –காலை மாலை கமல மலர் இட்டு நீர் –9-10-1-
விண்டு வாடா மலர் இட்டு நீர் இறைஞ்சுமின் –9-10-3-
தேனை வாடா மலர் இட்டு நீர் இறைஞ்சுமின் –9-10-4-
தனதன்பர்க்கு -9-10-5–என்று
பக்தி யுக்தராய் கொண்டு சர்வ காலமும் புஷ்ப்யாதி உபகரணங்களாலே -அவனை சமாராதனம் பண்ணி
அவன் பக்கலிலே பக்தி நிஷ்டர் ஆகுங்கோள் -என்று
அங்க சகிதையான பக்தியை உபதேசித்தும்
அதில் அசக்தருக்கு தாள் அடையும் பக்தி
அதில் துஷ்கரத்வம் -விளம்ப பயம் -ஆகிய வற்றால் அனுஷ்டிக சக்தர் அல்லாதவருக்கு –
சரணமாகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம் மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் -9-10-5–என்று
நிவ்ருத்தி சாத்தியம் ஆகையாலே
ஸூகரமாய்
சர்வாதிகாரமுமாய்
சரீர அவசானத்திலே பல பிரதமுமான பிரபத்தியை வெளி இட்டும்–
——————————————————–
8-அதில் அசக்தருக்கு உச்சாரண மாத்ரம்-
அதாவது
உபாய பல்குத்வ பல கௌரவ விரோதி பூய ஸ்தவங்களாகிற சங்காத்ரயத்தாலே
அதில் வ்யவசாயதுக்கு உடலான சக்தி இல்லாதார்க்கு –
திரு கண்ண புரம் சொல்ல நாளும் துயர் பாடு சாராவே-9-10-10- -என்று
வசனத்தை பற்றாசாகப் பிடித்து அவன் திருத்திக் கொள்ளும் படியான
உச்சாரண மாத்ரத்தை வெளி இட்டும்
சர்வ உபாய சூன்யருக்கு இப் பத்தும் பாடி யிடும் தண்டன் என்று
அதாவது
உச்சாரணம் தனக்கும் தாமாக ஒரு பாசுரம் இட்டு சொல்ல ஷமர் அன்றிக்கே –
கீழ் சொன்ன உபாயங்கள் எல்லா வற்றிலும் -அயோக்யராய் இருப்பார்க்கு –
இப்பத்தும் பாடி யாடி பணிமின் அவன் தாள்களையே -9-10-11-என்று இத் திரு வாய் மொழியை
பிரீதி பிரேரராய் கொண்டு பாடி அவன் திருவடிகளில் விழுங்கோள் என்று
ஸ்ரீ கீதாச்சர்யனைப் போலே அதிகார அனுகுணம் நெறி எல்லாம் உரைக்கிறார் ஒன்பதாம் பத்தில் ..
அதாவது
ஸ்ரீ கீதோ உபநிஷதாச்சர்யன் தன்னுடைய பரம கிருபையால்-
நெறி எல்லாம் எடுத்து உரைத்த –4-8-6-என்கிறபடியே சேதனருடைய ருசி அனுகுணமான உபாயங்கள்
எல்லாவற்றையும் உபதேசித்தாப் போலே
இவரும்
பிராப்தி அணித்தவாறே சம்சாரிகள் ஒருவரும் இழக்க ஒண்ணாது என்கிற கிருபையால் எல்லாம் எடுத்து உரைத்து –
அவ்வவருடைய அதிகார அனுகுணமாக உபாயங்கள் எல்லாம் உபதேசித்து அருளுகிறார்
ஒன்பதாம் பத்தில் என்கை-
——————————————————————————————————————————————————————————-
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply