ஸ்ரீ திருவாய் மொழி ஒன்பதாம் பத்தில் ஈட்டு ஸ்ரீ ஸூக்திகள் தாத்பர்ய சார அமுதம் —

9-1-கொண்ட பெண்டிர் மக்கள் உற்றார் சுற்றத்தவர் பிறரும்-ப்ரவேஸம்-

ஒன்பதாம் பத்து -பிரவேசம் –
முதல் பத்தால் -பகவத் கைங்கர்யம் புருஷார்த்தம் என்று அறுதி இட்டார் –
இரண்டாம் பத்தால் -அந்த கைங்கர்யத்தில் களை அறுத்தார் –
மூன்றாம் பத்தால் – களை அறுக்கப் பட்ட அந்த கைங்கர்யமானது-பாகவத சேஷத்வ பர்யந்தமான பகவத் கைங்கர்யம் -என்றார் –
நான்காம் பத்தால் -இப்படிப் பட்ட கைங்கர்யத்துக்கு விரோதிகள் ஐஸ்வர்ய கைவல்யங்கள் -என்றார்
ஐந்தாம் பத்தால் -அந்த விரோதிகளைப் போக்குவானும் அவனே -என்றார் –
ஆறாம் பத்தால் -விரோதிகளைப் அளிக்கும் தன்மையனான சர்வேஸ்வரன் திருவடிகளிலே சரணம் புக்கார் –
ஏழாம் பத்தால் -இப்படி பெரிய பிராட்டியார் முன்னிலையாக சரணம் புக்க இடத்திலும்-தக்தபட நியாயம் போலே சம்சாரம் தொடருகிற படியைக் கண்டு நோவு பட்டார் –
எட்டாம் பத்தால் -இப்படி பிரபன்னராய் இருக்கச் செய்தே-தக்த பட நியாயம் போலே நம்மை விடாமல் தொடருகிறது
நம்முடைய ஆத்மாவிலும் ஆத்மா சம்பந்தப்பட்ட பொருள்களிலும்-நசை அறாத படியாலே -என்று பார்த்து -அவற்றில் ஒரு நசை இல்லை -என்றார்
இப்படி நசை அற்ற பின்பும் பாது காவாமல் ஒழிவான் -என்-என்று ஐயம் கொள்ள
நான் நாராயணன்-எல்லா ஆற்றலோடும் கூடினவன்-உம்முடைய விருப்பங்கள் அனைத்தையும் செய்து முடிக்கிறேன் –என்று அருளிச் செய்ய
அவனுடைய சீல குணங்களிலே ஆழம் கால் படுகிறார்-இந்த ஒன்பதாம் பத்தில் –

————————————————————————————————-

கொண்ட பெண்டிர் -பிரவேசம் –

மேல் திருவாய் மொழியிலே
பாகவதர்களுக்கு அடிமைப் பட்டு இருத்தலை எல்லையாக உடைய-தனக்கு மேல் ஓன்று இல்லாததான பேற்றினை
யாதொரு தடையும் இல்லாதபடி அவன் காட்டிக் கொடுக்க
மிக்க ப்ரீதியோடே-காட்டிக் கொடுத்த அந்த பேர் உபகாரத்தைக் கூறிக் கொண்டு
சயமே அடிமை தலை நின்றார் -என்றும்
நீக்கம் இல்லா அடியார் -என்றும் –
கோதில் அடியார் -என்றும்-பாகவதரை விரும்பினாராய் நின்றார் –
ஆப்பான் திருவழுந்தூர் அரையர் -தாம் ஆஸ்ரியராய் அடைந்ததும் திருவாய்மொழி கேட்டதும்-ஆழ்வான் உடன் அன்றோ –
சயமே அடிமை தலை நின்றார் -என்றது -ஸ்ரீ பரத ஆழ்வானை போல்வாரை –
நீக்க மில்லா அடியார் -என்றது -இளைய பெருமாளை போல்வாரை –
கோதில் அடியார் -என்றது -ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வான் போல்வாரை காணும்-என்று ஆழ்வான் பணித்தாராக பணிப்பர் –
இப்படிப் பட்ட -பாகவதர்களுக்கு அடிமை பட்டு இருத்தல் ஆகிற பேற்றின் எல்லையை நமக்குத் தந்த-
அவனே இயல்பாகவே அமைந்த நல்ல எண்ணத்தை உடையவன் –
அல்லாதார் பக்கல் தோன்றுகிற நல்லெண்ணம் ஒரு காரணத்தைப் பற்றி-வருகிற நல்லெண்ணம் -ஆகும்-என்று
பிராப்ய ஆபாசங்களைத் தவிர்த்து-அவனே பிராப்யன் என்றும் –
பிராபக ஆபாசங்களைத் தவிர்த்து -அவனே பிராபாகன் என்றும்
அறுதி இட்டு பிறந்த லாபத்தாலே உண்டான உவகையாலே-மக்களைக் குறித்து
நீங்கள் ஒரு காரணம் பற்றி வந்த பந்துக்களான மற்றோரை விடுத்து-இயல்பாகவே உள்ள பந்துவான அவனையே பற்றி-
உஜ்ஜீவிக்க பாருங்கோள்-என்று-பரோபதேசத்திலே மூளுகிறார்

சர்வேஷாம் ஏக லோகாநாம் பிதா மாதா ச மாதவ-கச்சத்வம் ஏனம் சரணம் சரண்யம் புருஷர்ஷபா -பாரதம் –
உலகில் உள்ள எல்லா உயிர்கட்கும் திருமகள் கேள்வரே தந்தையும் தாயுமாக இருக்கிறார் -ஓர் ஆடவர் ஏறே –
காப்பவரான அவரையே சரணமாக சென்று அடைமின் –
பூதாநாம் ய அவ்யய பிதா – சஹஸ்ரநாமம் –
மற்றையோர் தாய் தமப்பன் என்ற பேரே-நாலு நாள்கள் இருந்து மணல் கொட்டகம் போலே அழிந்து போவார்கள் –
அங்கன் இன்றிக்கே -அழியாதே என்றும் ஒக்கக் காப்பாற்றும் தமப்பன் அவனே ஆயிற்று –
தனக்கு நலத்தை கூறிய விபீடணனை –
அன்யஸ்து ஏவம் விதம் ப்ரூயாத் வாக்யம் ஏதத் நிசாசர-அஸ்மின் முகூர்த்தே நபவேத் த்வாம் து திக் குலபாம்சனம் – யுத்த -16-15-
அரக்கர் குலத்துக்கு குறையை விளைவித்த உன்னை விடுகிறேன் -என்று
புறப்பட விட்டான் அன்றோ ராவணன் –
அவன் தம்பியை ஒழியச் செல்லாது என்றார் அன்றோ -பெருமாள் –
பெற்ற தமப்பன் பகையாக அவனிலும் அண்ணியனாய் வந்து உதவினான் அன்றோ பிரகலாதனுக்கு
மகாராஜர் தமையனால் நோவு பட தனிமையில் வந்து உதவினார் அன்றோ பெருமாள் –
மாதா பிதாக்கள் கை விட்ட ஜெயந்தனுக்கு ப்ரஹ்மா-தரீன் லோகன் சம்பரிக்ரம்ய தமேவ சரணம் கத -சுந்தர -38-33-
அந்த காகாசுரன் தமப்பனாலும் முனிவர்களாலும் தேவர்களாலும்-விடப்பட்டவனாய் மூன்று லோகங்களிலும் நன்றாக திரிந்து
அந்த பெருமாளையே சரணம் அடைந்தான் -என்கிற படியே-ஸ-நீரிலே புக்கு அழுந்துவாரைப் போலே
தாரகர் ஆனவரே பாதகராய்-அம்பு தொடுக்கும் படி சூழ்த்துக் கொடு நின்ற அவன்
மற்றைய பதங்கட்கு முன்பு கூறியது போன்று கொள்க –பயிலும் சுடர் ஒளி -நம்பனை பாசுர வியாக்கினத்தில் கண்டு கொள்வது -என்றவாறு –

த்ரௌபதி தர்மத்திலே தலை நின்றவர்களான கணவன்மார் ஐவரும் வெறும் தரையைக் கீறிக் கொண்டு இருக்க
அவர்களை ஒழிய சேயனான கிருஷ்ணனை நினைக்க –
கோவிந்தேதி யத் ஆக்ரந்தத் கிருஷ்ணா மாம் தூரவாசினம்
ருணம் பிரவ்ருத்தம் இவ மே ஹ்ருதயாத் ந அபசர்பதி -பாரதம் -உத்தியோக பர்வதம் -58-22-
அவள் ஆபத்தை அடைந்தவளாய் நம்மை நினைக்க நாம் உதவப் பெற்றிலோம் -என்று
த்ரௌபதி யானவள் தூரத்தில் இருக்கிற என்னை கோவிந்தா என்று அழைத்து அழுதாள் –
எனபது யாது ஓன்று உண்டோ -அது வட்டிக்கு வட்டி ஏறின கடன் போன்று
என் மனத்தின் நின்றும் நீங்க வில்லை என்று புண் பட்டான் அவன் அன்றோ –
அர்ஜுனன் என் கார்யங்களை என்னால் செய்து கோடல் அரிது-என்று சோகிக்க
உன்னைத் தொற்றி வருவது ஓன்று பேற்றுக்கு உடலாம் அன்றே அன்றோ உனக்கு சோகிக்க வேண்டுவது –
உன்னுடைய எல்லா பாரங்களையும் நம் தலையிலே போகட்டு -நாமே கடவோம் -என்று இரு –
உன்னுடைய பகைக் கூட்டத்தை எல்லாம் நாமே போக்கித் தருகிறோம் -என்றான் அன்றோ –
இப்படிகளாலே
அவனே நிருபாதிக பந்து-அவனையே பற்றப் பாருங்கோள் -என்று-தாம் அறுதி இட்ட அர்த்தத்தை
தம்மைப் பற்றினார்க்குத் தஞ்சமாக உபதேசித்து அருளுவதாக-பரோபதேசத்தில் மூளுகிறார் –

ஒன்பதாம் பத்தில்
கீழ் ஏழாம் பத்திலும் எட்டாம் பத்திலும் விரோதி ஸ்வரூபத்தையும் -தந் நிவ்ருத்தி பிரகாரத்தையும் அருளிச் செய்து –
மேல் இரண்டு பாத்தாலும் பிராப்தி பலாவாப்தியை அருளிச் செய்வதாக –
இப்பத்திலே பல ஸ்வரூபத்தை நிரூபிப்பதாகக் கொண்டு
பல பூதனான ஈஸ்வரனுடைய நிருபாதிகதையையும்
கைங்கர்ய பிரதி சம்பந்தி தயா நித்ய பிரார்த்யத்வத்தையும்
நிரதிசய போக்ய சீலாதி குண யோகத்தையும்
நித்ய அபூர்வ யோக்யதையையும்
ஸ்மரண தசையில் சைத்தில்ய ஜனகமான போக்கிய குணவத்தையும்
ஸ்ம்ருதிஸைதில்யம் யுடையாரை புஜிம்பிக்கையில் உண்டான பிரதம உத்யோத்தையும்
அத்தயதரணீய கடக கமயத்வத்தையும்
பத்னீ பரிஜன பூர்த்தியையும்
அல்ப கால விளம்பத்திலும் அதி கிலேச அவஹத்வத்தையும்
பத்தி காரிதமான கைங்கர்ய பிரதி சம்பந்தத்வத்தையும்
அருளிச் செய்து அவனுடைய பல ரூபத்தை அருளிச் செய்து அருளுகிறார்

முதல் இரண்டு பத்தாலே நிரூபித்த ப்ராப்ய ஸ்வரூபத்தினுடைய ப்ரயோஜன ரூபத்வம் இங்கே நிரூபிக்கப் படுகிறது –

முதல் திருவாய் மொழியிலே ததீய சேஷத்வ போக்யதா பிரதிபத்தி பிறக்கும் படி ஸமஸ்த விரோதி நிவ்ருத்தி பிறந்த பின்பு –
அந்த ததீய சேஷத்வ போக்யதா மூலமான தத் போக்யதையை அனுசந்தித்து –
அவனுடைய சர்வ பிரகார பலத்தவத்துக்கு உபபாதகமான சர்வவித அந்வயத்துக்கு ப்ரகாசகமான
ஆபத் ஸகத்வத்தையும்
அவிஸ்வாச நிராசகத்வத்தையும்
அநிஷ்ட நிரசன கிருபா யோகத்தையும்
அவதார ப்ரயுக்த குணோத்தரத்தையையும்
அநிஷ்டயத்வம்சகத்வம் அடியான அபிமத நீயதையையும்
கீர்த்த நீய குணவத்ததையும்
சிந்தா மாத்திரை ஸூலபத்வத்தையும்
உஜ்ஜீவன ஹேதுத்துவத்தையும்
போக்கிய விக்ரஹ விசிஷ்டதையையும்
பூ பார நிராசகத்வத்தையும்
அனுசந்தித்து -ஏவம் பூதனான சர்வேஸ்வரன் நிருபாதிக பந்துவானவன் -அல்லாதார் உபாதி நிபந்தனபந்துக்கள் –
ஆதலால் அவர்களை விட்டு நிருபாதிக பந்துவானவான இவனை நோக்கி உஜ்ஜீவியுங்கோள் -என்று
தாம் அறுதியிட்டு அர்த்தத்தை தம்மைப் பற்றினார்க்குத் தஞ்சமாக உபதேசித்து அருளுகிறார் –

——————

9-2-பண்டை நாளாலே நின் திரு வருளும்பங்கயத்தாள் திருவருளும்கொண்டு -ப்ரவேஸம்-

போக்ய பாகத் த்வரை தெளிந்த சிந்தைக்கு முன்னில் மூன்றிலும் ப்ரகடம் -சூர்ணிகை -177-
உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்-இறுதியில் தானே ஆழ்வார் -பந்து க்ருத்யம் -கைங்கர்ய பிரார்த்தனை இதில் —

மேல் திருவாய் மொழியில் -அவனை ஒழிந்தார் அடங்கலும் -ஔபாதிக -ஒரு காரணம் பற்றி வந்த உறவினர்கள்-
அவன் ஒருவனுமே -நிருபாதிக -ஒரு காரணமும் பற்றாமல் இயல்பாகவே அமைந்த உறவினன் -என்றார் –
ஒரு காரணம் பற்றாமல் அமைந்த உறவினன் ஆனால்-பின்னை உறவினருக்கு உரிய கார்யங்களைச்
செய்யாது இருக்க முடியாது அன்றோ –
ஆதலால் ஒரு காரணம் பற்றாமல் இயல்பாகவே அமைந்த-உறவினனான சர்வேஸ்வரன்
திருக் கண் வளர்ந்து அருளுகிற திருப் புளிங்குடியிலே-
எல்லா வித கைங்கர்யங்களையும் பெற வேண்டும் என்று ஆசைப் பட்டு இவர் சென்று கிட்டினார் –
கிட்டின இடத்தில் -இவரை-என் -என்னுதல்-திருக் கண்களாலே குளிர நோக்குதல் –
ஒரு வார்த்தை சொல்லுதல்-செய்யக் கண்டிலர் –காணாமையாலே மிகவும் துன்புற்றவர் ஆனார்
அத்துன்பம் அவன் உளனாக தீரும் அன்றோ –அதற்கு மேலேயும் ஓன்று உண்டாயிற்று –அது என் எனின் –

திருமேனி அலசும்படி பலகாலமாக ஒரே தன்மையாக திருக்கண் வளர்கின்றான் -என் வருகிறதோ
என்று ஒரு அச்சம் உண்டாயிற்று -திரு உடம்பு அசைய –எத்தனை காலம் கிடத்தி –
மேலே ஆரா அமுதே -என்கிற திருவாய் மொழியிலே-என் துன்பத்தை தீர்க்கின்றிலன் -என்று இன்னாதார் ஆனார் –
இங்கே -என் துன்பத்தினையும் தன் துன்பத்தினையும் தீர்க்கின்றிலன் -என்று இன்னாதார் ஆகிறார் –

ஆக –
கொடியார் மாடம் கோளூரகத்தும் புளிங்குடியும் மடியாது இன்னே -என்று அதுவே தலை எடுத்து-
அங்கும் இங்கும் -திருவாய் மொழியிலும் தன் துன்பங்களை தீர்க்காமை அருளிச் செய்தாரே –
அதனுடைய அனுபாஷனம் -இத் திருவாய் மொழி –அனுபாஷனம் –
பெரிய ஆற்றாமையோடு-மீண்டும் கூறுதல் –
பெரிய ஆற்றாமையோடு என்னுடைய துன்பம் எல்லாம் தீரும்படி-
திருக் கண்களாலே நோக்கி அருள வேண்டும் -தாமரைக் கண்களால் நோக்காய் –
என் தலை மேலே திருவடிகளை வைத்து அருள வேண்டும் -பாத பங்கயமே தலைக்கு அணியாய் –
தேவரும் பிராட்டியாரும் கூட எழுந்து அருளி இருக்கும் இருப்பை எனக்கு காட்டி அருள வேணும் –உன் தாமரை மங்கையும் நீயும் –

யத்ர கிருஷ்னௌ ச கிருஷ்ணச சத்யபாமாச பாமி நீ -பாரதம் -உத்தியோக பர்வம் –
எந்த இடத்தில் கிருஷ்ணனும் திரௌபதியும் அர்ஜுனனும்-கோபத் தன்மை உள்ள சத்ய பாமையும்-இருக்கிறார்களோ -என்று சொல்லுகிறபடி
அவ்விருப்பில் அன்றோ அவனை அழைத்து காட்சி கொடுத்தது -என்றது-இப்படி சஞ்சயன் வந்தான் என்று அறிவிக்க
நமக்கு நல்லான் ஒருவன்-உகவாதார்க்கும் இவ்விருப்பைப் போய்ச் சொல்லுவான் ஒருவன்
அனுகூலனான இவனுக்கு விழிநீர் அடைத்தோம் ஆகிறோம்
உகவாதார் மண் உண்ணும்படி கார்யம் பார்த்தோம் ஆகிறோம்-புகுர விடும் கோள்
என்று உள்ளே அழைப்பித்து காட்சி கொடுத்தான் -என்றபடி –சஞ்சயன் பெற்ற பேற்றில் எனக்கு குறைய ஒண்ணாது –
நச அபிமன்யு நயமௌ தம் தேசம் துபிஜக்மது -பாரதம் உத்தியாக பர்வம்
அவர்கள் வீற்று இருந்த அந்த இடத்துக்கு அபிமன்யுவும் சென்றான் இல்லை-
இரட்டையர்களான நகுல சகா தேவர்களும் போனார்கள் இல்லை -என்கிறபடியே-
தாயும் தமப்பனும் சேர இருந்த இடத்தில் குழந்தைகளுக்கு சென்று கிட்ட ஒண்ணாமை இல்லை அன்றோ –
அவர்களுக்கும் சென்று கிட்ட ஒண்ணாத படி ஆயிற்று எழுந்து அருளி இருக்கிற இருப்பு-
அவ் விருப்பிலே அன்றோ அவனை அழைத்து காட்சி கொடுத்தது –

அப்படியே
தேவரும் பிராட்டிமாரும் எழுந்தருளி இருக்கும் இருப்பை எனக்குக் காட்ட வேண்டும் –
என்னைக் கண்ட காட்சியிலே வேறுபட்டவனாய் என் முன்னே-நாலடி உலாவி அருள வேண்டும் –பவளம் போல் கனிவாய் சிவப்ப நீ காண வாராய் –
அனுகூலரைக் கண்டால் பிறக்கும் புன்முறுவல் காண வேண்டும் -தவழ கதிர் முறுவல் செய்து-
ஒரு வார்த்தை அருளிச் செய்ய வேண்டும் -கூவுதல் வருதல் செய்யாய் –என்று இங்கனே-
தாமும் அவனும் அறிந்ததாக திருவாசலை திருக் காப்பு கொண்டு தனி இடத்திலே-
தம்முடைய எண்ணங்களை எல்லாம் விண்ணப்பம் செய்து-கொடு வினையேனும் -ஏக வசனம் —
இவற்றை இப்போதே பெற வேண்டும் என்று விரைகிறார்-
இறைவனுக்கும் உயிர்கட்கும் உள்ள சம்பந்தத்தை அனுபவித்தார் மேல் திருவாய் மொழியில் –
சம்பந்தத்தின் பலத்தை ஆசைப்பட்டு விரும்புகிறார் இத் திருவாய் மொழியில் —
சர்வ வித பந்து அவனே -கண்ணன் அல்லால் வேறு சரண் இல்லை –பற்ற உபதேசித்தார்-
ஆடாமல் அசையாமல் அர்ச்சையில் கண் வளர்ந்து இருக்க கண்டார் –கைங்கர்யம் செய்ய பாரிக்கிறார் -இதில்-

உபாதி-கர்மத்தால் வந்த பந்துத்வம் -விட்டு -சர்வவித பந்து -காரணம் இல்லாமல் -ஆச்ரயித்தால் -அடியார்க்கு ஆட்படுத்த விமலன் போலே ராமானுஜர்
அனந்தாழ்வான் -அருளாள பெருமாள் எம்பெருமானார் இடமும் -வான மா மலை ஜீயர் -கோயில் அண்ணன்
அப்பாச்சி அண்ணா -இவருக்கு பொன்னடிக்கு கால் ஜீயர் இடம் காட்டிக் கொடுத்து -ஆய்ச்சியர் குமாரர் –
நித்ய நிருபாதிக சர்வ பந்து –பிராதா –பிதா ச மம ராகவா –
பந்துவும் பிதாவும் அவரே என்றார் இளைய பெருமாள் -ராமம் தசரதன் வித்தி -கச்சதாம் -தாய் சொன்ன படியே –
சர்வேஸ்வரனுக்கு அடிமை செய்து போக அருளிச் செய்கிறார் –
லுப்த சதுர்த்தி -அகாரம் -நாராயணாயா -வியக்த சதுர்த்தி –
நாராயணனுக்குக்காக -தருவித்துக் கொண்டு சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்த்தை உசித கைங்கர்யம் -செய்ய வேண்டும் –
ஸ்யாம் பவேயம் —சேர்த்தியில் -குடிக்கிடந்து கைங்கர்யம் செய்ய வேண்டும் –

இரண்டாம் திருவாய் மொழியில் கீழே நிருபாதிக பந்துவான சர்வேஸ்வரனுடைய பல ரூபதயா ப்ராப்யத்தையை அருளிச் செய்து –
அவன் கண் வளர்ந்து அருளில் கைங்கர்யம் பண்ணுகையை மநோ ரதித்து-கைங்கர்ய பிரதிசம்பந்தியானவனுடைய
புண்டரீகாக்ஷத்வத்தையும்
அனுரூப சம்பந்தத்தையும்
ஸ்ரீ மஹா லஷ்மீ ஸஹாயத்வத்தையும்
தர்ச நீய ஆகாரதையையும்
மந்த ஸ்மித சோபையையும்
ஆஸ்ரித அர்த்தமான திவ்ய வாஹந திவ்ய ஆயுதவத்தையும்
அசாதாரண திவ்ய பரிகர யோகத்தையும்
அகில லோக வந்த்யத்வத்தையும்
அதிசயித ஸுகுமார்யத்தையும்
ஸ்ரீ மஹா லஷ்மி சேவ்யத்வத்தையும்
அனுசந்தித்து -ஏவம் பிரகார விசிஷ்டனான நீ உனக்கு அசாதாரண சேஷ பூதராயப் போந்த எங்களுக்கு
கிருபை பண்ணி பூர்ண கடாக்ஷம் பண்ணவும் –
திருவடிகளை எடுத்துத் தலையிலே வைக்கவும் அங்கீ கரிக்கும் பொழுது பிராட்டியோடே கூட எழுந்து அருளி இருந்து அங்கீ கரிக்கவும்
ஆசா அநு ரூபமாக நடந்து எழுந்து அருளி வரவும்
முகமும் முறுவலுமாய்க் கொண்டு என் முன்னே நிற்கவும்
நிற்கும் போது பெரிய திருவடியை மேற்கொண்டு திவ்ய ஆயுதங்களையும் ஏந்திக் கொண்டு வரவும்
அசாதாரண பரிகாரத்தோடே வந்து என் முன்னே எழுந்து அருளி வந்து இருக்கவும்
சர்வ லோகங்களும் கண்டு வாழும்படி எழுந்து அருளி இருக்கவும்
இந்த ஸூ குமாரமான வடிவை நான் அனுபவிக்கும்படி பண்ணவும்
நாய்ச்சிமாரை அடிமை கொண்டு அருளுகிறாப் போலே உன் திருவடிகளில் அடிமை கொண்டு அருளவும் வேணும்
என்று தம்முடைய மநோ ரத பரம்பரையை திருப் புளிங்குடியிலே கிடந்தது அருளுகிற சர்வேஸ்வரன் திருவடிகளில் பிரார்த்தித்து அருளுகிறார் –

—————

9-3-ஓர் ஆயிரமாய் உலகு ஏழ் அளிக்கும்-ப்ரவேஸம்-

நீர் இங்கனே விரும்பிக் கேட்க வேண்டுமோ-நம்முடைய குடல் துவக்கை அறியீரோ -என்ன
அதனை-நினைந்தும் சொல்லியும் இனியர் ஆகிறார் –
நாராயணனே நங்கள் பிரான் -என்றத்தை கடாக்ஷித்து சுருக்கமாக பிரவேசம் அருளிச் செய்தார் –
கூவுதல் வருதல் செய்யாய் -என்று வேண்டிக் கொண்டார் மேல் –யார் வேண்டிக் கொள்ள வேண்டியதை யார் வேண்டிக் கொள்ளுகிறார் –
உம்முடைய லாபத்துக்கு நாம் வேண்டிக் கொள்ளும்படி அன்றோ-உம்மோடு நமக்கு உண்டான இரத்த சம்பந்தம் –குடல் துவக்கு –
ஆனபின்பு நீர் விரும்பியவை அனைத்தையும் செய்யக் கடவோம்-நீர் வெறுக்க வேண்டா -என்று சமாதானம் செய்தான் –
இவரும் சமாதானத்தை அடைந்தார் –
மையல் ஏற்றி மயக்க உன் முகம் மாய மந்த்ரம் தான் கொலோ-நாச்சியார் திரு மொழி -2-4-என்னக் கடவது இறே-
ஸ்ரீ கௌசல்யார் ஒரே பிள்ளையை உடையாளான நாம் உம்மைப் பிரிந்து தனி இருக்க மாட்டேன்-கூட வருவேன் இத்தனை -என்று பின் தொடர-
புரிந்து பார்த்து -அம்மையீர் நீர் என்னைப் பின் தொடருகிற இடம் தர்மத்துக்கு குறைவு வரும் காண் -என்று
முகத்தை பார்த்து ஒரு வார்த்தை அருளிச் செய்ய-மீட்பதற்குப் போன இவர் மங்களா சாசனம் செய்து மீண்டாரே அன்றோ –
இப்படி அன்றோ -அவனுடைய பார்வைகளும் -மையல் ஏற்றி -வார்த்தைகளும் -பெருமாள் வார்த்தைகள் -இருக்கும்படி –
அவன் வார்த்தை சொன்னால் பின்னை அவன் வழியே போக வேண்டும்படியாய் அன்றோ இருப்பது –அம்மான் பொடி போலே அன்றோ –
இதே போலே தான் ஸ்ரீ சீதா பிராட்டி வார்த்தை கேட்டு -பெருமாள் உடன் கூட்டி சென்றார் -இதுவும் அவனுக்கு இவள் போட்ட அம்மான் பொடி –

ஆக –
அவன் நாராயணனாய் இருக்கிற இருப்பை நினைந்தார் –நாராயணன் அவனே
அந் நாராயண மந்த்ரத்தின் உடைய பொருளை ஆராய இழிந்தவாறே-
ஒரு பொருளுக்கும் தன்னுடைய பேறு இழவுகட்கு வேண்டிக் கொள்ளுதற்கு தனக்கு சம்பந்தம் இல்லாமலே இருந்தது –
இப்படி இருக்கிறவன் தம் பக்கலிலே விசேடக் கடாஷம் செய்த படியையும்- நங்கள் பிரான் அவனே-
இந்த நாராயண மந்த்ரத்தின் அர்த்தத்துக்கு எல்லையான அவன் சீல குணத்தையும் நினைத்தார்-கடைவதும் கடலுள் அமுதம்
நினைந்தவாறே -இப்படி சீல குனமுடையவனை இப்பொழுதே காண வேண்டும் என்னும் விருப்பம் பிறந்தது-என் மனம் ஏகம் என்னும் இராப்பகல் –
அதில் தமக்கு அவன் இருந்த இடத்தளவும் கால்நடை தராதபடிக்கு ஈடாயிற்று-
அவனுடைய சீலம் முதலான குணங்களிலே ஈடுபட்டு தாம் துவக்கு உண்டபடி –சீலம் எல்லை இலான் –
இனித்தான் இவர் போனாலும் ஒரு கைங்கர்யத்தை செய்கை மிகையாம்படி இருப்பான் ஒருவனாய் இருந்தான் அவன்-
சுணை கேடன்-ஓதி நாமம் குளித்து -உச்சி தன்னால் —-நமக்கே நலம் ஆதலின் -தொழுது எழுதும் என்னும் இது மிகை –
இவர்தாம் ஓன்று செய்து அனுபவிக்க வல்லவர் அன்றிக்கே இருந்தார் –
அவனுடைய சீல குணங்களிலே கால் தாழ்ந்து இருக்குமவர் ஆகையாலே –
இப்படிப் பட்டவனுடைய சீல குணத்தின் மிகுதியைச் சொல்லி-தலைக் கட்டுகிறது இத் திருவாய் மொழி-

அன்றிக்கே-
முதல் பாசுரத்தால் பிராப்யமாக இருந்துள்ள ரூபம் -திரு மேனி வைலக்ஷண்யம் -இரண்டாம் பாட்டால் அதற்கு ஆதாரமான
ஸ்வரூபம் அடியேன் உள்ளான் -அகாரத்தால் -சேஷி -காரணம் -அழகன் -ஸ்வரூபத்தால் மேம்பட்ட -அர்த்த பலத்தால் வந்த
ஸ்ரீ யபதித்தவமும்-அகாரம் ரக்ஷணம் ரஷிக்கும் பொழுது பிராட்டி சம்பந்தம் வேணும் –
மூன்றாம் பாட்டில் முதல் பாதியால் -அவனது அருளால் –உணர்வின் உள்ளே நிறுத்தினேன் -அதுவும் அவனது இன்னருள் -ரக்ஷகத்வம்
காரணத்வத்தையும் -சப்த காரணம் அகாரம் -சுத்தமான உபாயத்வத்தையும் அருளிச் செய்து -அகரார்த்தம் அருளிச் செய்தார் ஆயிற்று –

கண்கள் சிவந்து -என்ற திருவாய் மொழியிலே பிரணவத்தின் அர்த்தத்தை அருளிச் செய்தார்-
அத் திருவாய் மொழியிலே முதல் இரண்டரை பாசுரங்களிலே-அகாரார்தம் -அகாரத்தின் பொருளை -அருளிச் செய்தது-

மேல்-ஒன்றரைப் பாசுரங்களாலே நான்காம் வேற்றுமையின் பொருளையும் -அடிமைத் தன்மையும் –
மகாரத்தின் பொருளையும் -யானும் தானாய் ஒழிந்தான் -அத்யந்த சேஷன் -அநந்யார்ஹ சேஷ பூதன் -அருளிச் செய்தார்-
நன்று -இது அடிமையாம் தன்மை -இது அவனுக்கே உரிமையாம் தன்மை -இது அவற்றுக்கு இடமாய் இருக்கிற ஆத்துமா-
என்று பிரித்து சொல்லாமல்-மகாரத்தின் பொருளாய் இருக்கின்ற ஆத்துமாவோடு கூட்டியே அருளிச் செய்தது என் -எனில்-
அவற்றைத் தனித் தனியே பிரித்து அருளிச் செய்யாதது
நான்காம் வேற்றுமையின் அர்த்தமும்–சேஷத்வம் -உகாரத்தின் அர்த்தமும்-அநந்யார்ஹத்வம் -ஆத்துமாவை விட்டுப் பிரிந்து
தனித்து இராமையாலே கூட அருளிச் செய்தார் -என்க –-
நர நாராயணன் -நியத பிரகாரம் -சரீர தயா -சாமான்ய கரண்யம் –
அதற்க்கு மேல நான்கு பாசுரங்களாலே-மகாரத்தால் சொல்லப்படுகின்ற ஆத்துமாவின் உடைய ஞான ஆனந்தங்கள்
முதலிய வற்றின் சிறப்பினை அருளிச் செய்தார்
மேல் இரண்டு பாசுரங்களாலே-இம்முறையில் பிரணவத்தின் அர்த்தத்தை நினையாத-வேதத்துக்கு புறம்பான
புறச் சமயத்தாரையும்-அகச் சமயத்தார் ஆகிற குத்ருஷ்டிகளையும் மறுத்தார் –
ஆக –
கண்கள் சிவந்து -என்ற திருவாய் மொழியாலே பிரணவத்தின் அர்த்தத்தை அருளிச் செய்து –
மேல்
கருமாணிக்க மலை -நெடுமாற்கு அடிமை -என்னும்-இரண்டு திருவாய் மொழி களாலும்
-நம –என்றதன் அர்த்தத்தை அருளிச் செய்தார்
எங்கனே எனின் –
சொல்லால் கிடைக்கின்ற பொருளும்-பொருளால் கிடைக்கின்ற பொருளும்
என்னும் இரண்டு வகையான பொருள்களும் கூறப்படும் -நம -என்ற சொல்லுக்கு-
அவற்றுள் சொல்லால் -கிடைக்கும் பொருளை -கரு மாணிக்க மலை -என்னும் திருவாய் மொழியில் அருளிச் செய்து
பொருளால் கிடைக்கும் பொருளை -நெடுமாற்கு அடிமை -என்னும் திரு வாய் மொழியில் அருளிச் செய்தார்-
நம -என்பதன் சொற்பொருள் -நானஎனக்கு உரியன் அல்லேன் -என்பதே அன்றோ –
ஒரு கன்னியானால் ஒருவனுக்கேயாய் இருக்கையும்-தான் தனக்கு உரியன் அன்றிக்கே இருக்கையும்-அன்றோ ஸ்வரூபம் –
அதனை அருளிச் செய்தார் கரு மாணிக்க மலை என்ற திருவாய் மொழியில்-
பொருள் ஆற்றலால் கிடைக்கும் பொருள் -அவன் அடியார்க்கு அடிமை பட்டு இருத்தல்-
அதனை அருளிச் செய்தார் – நெடுமாற்கு அடிமை -என்ற திருவாய் மொழியில்-
அதற்கு மேல்-கொண்ட பெண்டிர் -என்ற திருவாய் மொழியில்-நாராயண மந்த்ரத்தின் பொருளை அருளிச் செய்தார்
யாங்கனம் எனின் –
நாராயண பதத்துக்கு பொருள்-
தத் புருஷ சமாஹம் -ஸ்வாமித்வம் -நும்மது ஆகும் அவன் அன்றி மற்று இல்லை -தொண்டரோமாய் -பாசுரங்களால் –
-பஹு வ்ருஹீ சமாஹம் -வாத்சல்யம் -வண் புகழே -என்றும் -கணை ஒன்றாலே ஏழு மரமும் எய்த
உபாயத்வம் -கண்ணன் அல்லால் இல்லை கண்டீர்
உபேயத்வம்-குற்றமில் சீர் கற்று வைகல் வாழ்தல் கண்டீர் குணமே
வியாபகத்வம் -நும்மது ஆதும் அவன் அன்றி மற்று இல்லை
என்னும் இவை முதலானவைகள் அன்றோ –
அதற்கு மேல்
பண்டை நாளால் -என்கிற திருவாய் மொழியில் ஆய -என்னும் நான்காம் வேற்றுமையும்-அர்த்தத்தை அருளிச் செய்தார்
நான்காம் வேற்றுமைக்கு பொருள் -கைங்கர்யத்தை பிரார்த்தித்தல் அன்றோ –
பிரணவத்தின் பொருளும்
நம -என்ற சொல்லின் பொருளும்
எங்கும் பரந்து இருத்தலும் -பரந்து இராமையும் –
வாசு தேவன் -விஷ்ணு -என்னும் வியாபக மந்த்ரங்களிலும் உண்டு-
அதில் தாம் ஆதரித்து அருளியது -திரு எட்டு எழுத்தே -என்னுமதனை-ஓர் ஆயிரமாய் -என்னும் இத் திருவாய் மொழியிலே
அருளிச் செய்கிறார்-இங்கனம் -நடுவில் திரு வீதிப் பிள்ளை -அருளிச் செய்வர் –

அர்த்தத்தை மட்டும் அருளிச் செய்யாமல் சப்தம் -நாராயண -தனிச் சிறப்புடன் அருளிச் செய்து -ஆப்த உபதிஷ்டம்-
சரம சதுர்த்தியில் -ஆய -தாதரத்தே சதுர்த்தி -சேஷத்வம் லுப்த சதுர்த்தி -அவனையே பிரதானமாக என்று சொல்லி –
இது பிரார்த்தனா சதுர்த்தி -கைங்கர்யம் பிரார்த்திக்கிறது -அநந்யார்ஹ சேஷத்வம் சித்திக்க பிரார்த்திக்க வேண்டுமே –
சேஷத்வம் நிலை நாட்டும் கைங்கர்யம் -சகல வித கைங்கர்யங்களையும் –பிரார்த்திக்க வேண்டுமே –
அவனும் சித்தம் -கைங்கர்யமும் சித்தம் -ஆய பிரார்த்தனா கர்ப்பம் –
தத் பிரார்த்தனா உபபத்தி பலத்தாலும் -பிரார்த்தனா சதுர்த்தி என்பது சித்திக்கும் –

மூன்றாம் திருவாய் மொழியிலே
கீழே கைங்கர்ய பிரார்த்தனையைப் பண்ணி கூவுதல் வருதல் செய்ய வேணும் -என்று அபேக்ஷிக்க –
அவனும் தன் நிருபாதிக பந்யத்தாலே-நீர் அபேக்ஷிக்க வேணுமோ நம்முடைய கார்யம் செய்கைக்கு என்று
தன்னுடைய பிரகார பிரகாரி சம்பந்த தயோதகமான நாராயணத்வத்தை பிரகாசிப்பிக்கக் கண்டு –
கார்யமான சர்வ லோக ரக்ஷண ரசமர்த்தமாயுள்ள
திவ்ய நாம சம்பத்தையும்
ரக்ஷணாதி வியாபாரத்தையும்
அகில வேத வேத்யதா பிரகாரத்தையும்
நித்ய ஸூரி போக்யதையையும்
அதனுடைய நிருபம வைலக்ஷண்யத்தையும்
அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட பிராப்தி ஹேதுவான ஸ்ரீ லஷ்மீ சம்பந்தத்தையும்
பிரபல அநிஷ்ட பஞ்சநத்வத்தையும்
அபீஷ்ட தேச வர்த்தித்தவத்தையும்
ஆஸ்ரயண மிகையான அதிசயித்த சீலத்வத்தையும்
அதனுடைய வாசா மகோசர மஹத்தையையும்
அனுசந்தித்து எவம்வித ஸ்வ பாவனான சர்வேஸ்வரனை ஆசைப்பட்டு அவனுடைய சீலத்திலே வித்தராய்
அனுபவம் தன்னிலும் அஷமரான பிரகாரத்தை அருளிச் செய்கிறார் –

—————

9-4-மையார் கருங்கண்ணி கமல மலர்மேல்செய்யாள்-ப்ரவேஸம்-

இறைவனுடைய ஸ்வா தந்த்ர்யத்துக்கு அடி -அவன் தானே இருக்கும்-
அவனுடைய சீலம் முதலான குணங்களுக்கு அடி -பிராட்டியே இருக்கும் –

சீலம் முதலான குணங்கள் வந்தவாறே-ஸ்வா தீனம் இன்றிக்கே ஒழிகிறதோ -என்னில்-நிரூபித்தால்
அந்த ஸ்வா தந்த்ரியத்தைப் போன்று-இவளுடைய சேர்த்தி-நித்தியமாய் இருக்கையாலே –
அங்கனமாய் இராது -காரணம் பற்றி வந்தது ஆனாலும் –
பாஷ்ய காரர் மேலே ஸ்ரீ வல்லப என்று நினைத்து-ஸ்வரூபத்தை நிரூபிக்கிற இடத்தில்-
ஞானம் ஆனந்தம் இவற்றுக்கு முன்பு ஸ்ரீய பதி என்றாரே அன்றோ –கீதா பாஷ்யத்தில் –

ஸ்ரீய பதி – நிகில ஹேய ப்ரத்ய நீக கல்யாணை கதாநாநந்த
ஞான ஆனந்த ஏக ஸ்வரூப ––இத்யாராப்ய –ஸ்வ அபிமத அநுரூப நித்ய நிரவத்ய ஸ்வரூப ரூப குண விபவ
ஐஸ்வர்ய சீலாத்ய-அநவதிக அதிசய அசங்கேய கல்யாண குண கண ஸ்ரீ வல்லப

இப்படி இருக்கிறவனுடைய-சீல குணத்தையும்(சீலம் எல்லை இலான் அடிமேல் அணி கோல நீள் குருகூர்ச் சடகோபன் சொல்)
அதற்கடியான திருமகள் கேள்வனாய் இருக்கும் தன்மையையும் -(அடைவதும் அணியார் மலர் மங்கை தோள் )
அருளிச் செய்தார் மேல் திருவாய் மொழியிலே –

கடுக பெற வேண்டும்படி-குணங்களால் மேம்பட்டவனுமாய்-பெறுவிப்பாரும் அருகிலே உளராய் இருக்கையாலே
இப்போதே பெற வேண்டும்படியான ஆசை பிறந்தது –அப்போதே பெறக் காணாமையாலே-விஷயத்துக்கு தகுதியாக விடாய்த்தார்-
பெற வேண்டும்படி குணங்களால் மேம்பட்டவனுமாய்-பெறுவிப்பாரும் அருகே உளராய்- இருக்கப் பெறாவிட்டால் ஆறி இருக்க போகாதே அன்றோ –

ஆகையாலே-
முடியானே -என்ற திருவாய்மொழியின் வாசனையாலே-அறிவுடைப் பொருள்களைப் போன்று தனித் தனியே
கரணங்களும் விடாய்க்க -தாமும் விடாய்க்கிறார் -முதல் ஐந்து பாசுரங்களில்-
வீற்று இருந்து ஏழ் உலகு -திருவாய்மொழி வாசனை 6-7-8-பாசுரங்களில்-
என்றைக்கும் என்னை -திருவாய்மொழி வாசனை -9-பாசுரத்தில்
செஞ்சொற் கவிகாள் –திருவாய்மொழி வாசனை –10-பாசுரத்தில்
இதுதான் எல்லா திருவாய் மொழி களோடும் கூடி இருப்பது ஒன்றாயிற்று -என்றது-கலம்பகம் மாலை போலே –

முடியானே /வீற்று இருந்து ஏழ் உலகு /என்றைக்கும் என்னை /செஞ்சொற் கவிகாள்
என்னும் திருவாய் மொழிகளில் ஓடுகிற எண்ணங்களை உடைத்தாய் இருப்பது ஆயிற்று -என்றபடி-

இப்படி இந்த்ரியங்களும் தனித் தனியே விடாய்க்க -(கண்ணே -என் கருத்தே -உன்னை உள்ளும் என் உள்ளம் –)இப்படி இந்த்ரியங்களும் தனித் தனியே விடாக்க(பேதுறுவன்-)
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் உடைய துயரத்துக்கு தோற்றின-அது தான் காலம் தாழ்த்து வந்தான் என்னலாம்படி
ஆற்றாமைக்கு காலம் தாழ்த்துத் தோற்றாமல்-தூணிலே வந்து தோற்றினால் போலே -நரசிங்கமாய் –தோற்ற வேண்டும் படி ஆயிற்று –

இப்படிப் பட்ட
தம் நிலையையும்
அதற்கு அடியான விடாயையும்-
விடாய் அறிந்து அதற்கு உதவ வந்து அவன் முகம் காட்டின படியையும் நினைத்து உவகையினராய்-(என் உள்ளம் உகந்தே)
நான் கிருதக் கிருத்தியன் ஆனேன்-(கண்டு கொண்டேனே)
அடிமை செய்யப் பெற்றேன்-(தொண்டர்க்கு அமுது உண்ண)
வாழ்ந்தேன்-(உய்ந்தவாறே)
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கும் எல்லாம் நான் உபகாரகனாம் படி ஆனேன்
இது ஒருவன் பெரும் பேறு இருந்தபடியே -என்று தமக்கு பிறந்த லாபத்தை நினைத்து இனியராய் அதனைப் பேசித் தலைக் கட்டுகிறார்-

நாலாம் திருவாய் மொழியில் கீழே அவன் ஸீலாதிசயத்தை அனுபவித்து சிதிலரானவர் –
ஸீலவானாய் ஸ்ரீ யபதியானவனை அனுபவிக்க வேணும் என்று அபி நிவேசித்து அந்த அபி நிவேச அனுரூபமான
ஸ்ரீ மஹா லஷ்மீ விசிஷ்டத்வத்தையும்
அத்ய அபி நிவேச விஷயத்வத்தையும்
ஆஸ்ரித ரக்ஷகத்வத்தையும்
அசேஷ பிரதி சம்பந்தித்வத்தையும்
காரணத்தவாதி குண யோகத்தையும்
பரமபத நிலயத்வத்தையும்
ஹ்ருஷ்ட யதிசயத்தையும்
சர்வ அந்தராத்மாதிகளையும்
கிஞ்சித்க்கார விஷயத்வத்தையும்
நிருபாதிக சம்பந்தத்தையும்
அனுசந்தித்து ஏவம் வித பூதனானவனை அனுபவிக்க வேணும் என்கிற ஆகாங்ஷையாலே தம்மோடு கரணங்களோடு வாசியற
ஈடுபட்ட இவருடைய ஆர்த்தி தீர்க்கும்படி முகம் காட்ட அனுபவித்து ஸந்துஷ்டராய்
ஆஸ்ரித அனுபாவ்யமான திருவாய் மொழியை அவன் திருவடிகளில் பாடி உஜ்ஜீவிக்கப் பெற்றேன் என்று மிகவும் ஹ்ருஷ்டராகிறார் –

————

9-5-இன்னுயிர்ச் சேவலும் நீரும் கூவிக் கொண்டு-ப்ரவேஸம்-

தொண்டர்க்கு அமுது உண்ண சொன்மாலைகள் சொன்னேன் -என்று களித்தவர்
தம்முடைய உயிரைப் பாது காப்பதற்காக-பறவைகளின் காலிலே விழும்படி ஆயிற்று –
தேவர்கட்கு எல்லாம் கருவாகிய கண்ணனைக் கண்டு கொண்டேனே -என்னும்படி தெளிவு பிறந்த போதே-
புறத்திலே காண வேண்டும் என்னும் ஆசை பிறந்தது-
இவர்க்கு இன்னம் விடாயைப் பிறப்பித்து முகம் காட்ட வேண்டும் -என்று-இவர் விருப்பத்தை சடக்கென முடித்திலன் -இறைவன் –
நினைத்த போதே விரும்பியது பெறாமையாலே தளர்ந்தார்-
தளர்ந்தவர் உலகப் பொருள்களில் கண் வைத்தார் –
பரம விரக்தராய் இருக்கிற இவர் உலகப் பொருள்களில் கண் வைப்பான் -என் என்னில் –
உலகப் பொருள்களை நினைக்கும் நினைவாலே மனத்தினை வேறு ஒன்றினில்-செலுத்து தரிப்போம் -என்று கண் வைத்தார் –
அன்றிக்கே
அவனுக்கு போலியான பொருள்களைக் கண்டாகிலும் தரிப்போம் என்று கண் வைத்தார் -என்னுதல்
அவை தரிப்புக்கு காரணம் ஆகாமல்-அவனுடைய நினைவினை ஊட்டுவனவாய் துன்பினைத் தரப் புக்கன –
யாதானும் ஒரு பொருள் தோற்றிலும்-அப்பொருளின் உளதாம் தன்மை-
அவனை ஒழிய இல்லாமையாலே-அவனைக் காட்டிக் கொண்டே அன்றோ தோற்றுவது –
ஆக
உலகப் பொருள்கள் அவனை நினைப்பு ஊட்டுவனவாய் நலிய
அவற்றால் நோவு படுகிறபடியை-அன்யாபதேசத்தால் பேசுகிறார் –
அவனுக்கு போலியான பொருள்களைக் கண்டாகிலும் தரிப்போம் என்று-அவ்வாற்றாமை கை கொடுக்க-
உபவனமாகிய பூம் சோலைக்கு புறப்பட –
அங்கு உண்டான குயில் மயில் தொடக்கமானவை-அவனுடைய பேச்சினையும் வடிவினையும் நினைப்பு ஊட்டுவனவாய் நலிய
இவை நலிகைக்கு இவற்றோடு நமக்கு ஒரு பகை இல்லை-
இவை நலிகைக்கு ஒரு காரணம் உண்டாக வேண்டும்-
அது -அவன் -நம்மை முடிக்க வேண்டும் என்று பார்த்தான் –அதற்கு தக்க வழி நம்மை பிரிவதே -என்று நினைந்து
பிரிவு கலவியை ஒழியக் கூடாமையாலே நம்மோடு கலந்தான் –
கலந்து நம்மைப் பிரிந்தான் –பிரிந்த இடத்திலும் நாம் முடியாது இருந்தோம் –
பிரிந்து நோவு பட்டு இருக்கும் சமயத்தில்-நம்மோடு போலியாக இருக்கிற பொருளைக் காட்டி முடிப்போம் -என்று
பார்த்து வர விட்டான் இத்தனையே யாம் என்று கொண்டு
உங்களுக்கு நினைவு இதுவாகில் இப்பாரிப்பு எல்லாம் வேண்டுமோ-என்று அவற்றைப் பார்த்து கூறி
நம்மைப் பார்த்தால் அன்றோ இப்படி நோவு பட வேண்டுவது
தாயாதி குண விசிஷ்டனான -அவனைப் பார்த்தால் நோவு பட வேண்டா அன்றோ -என்று
அவனுடைய கல்யாண குணங்களை ஏத்துகையாலே-வருந்தி தரித்து தலைக் கட்டுகிறதாய்-இருக்கிறது –

இது எம்பெருமானார் உகந்த திருவாய் மொழி என்று-ஆழ்வார் திருவரங்க பெருமாள் அரையர்-அருளிச் செய்வர்

மாதுகரத்தில் விஷம் வைக்க உடையவர் திருவரங்கத்தில் இருக்க ஒட்டாமல் திரு வெள்ளறையில் எழுந்து அருளி இருக்க
அரையர் -இந்த பத்து பாசுரங்களையும் -ஸாதித்து மயக்கி திருவரங்கம் கூட்டி வந்தார்
துக்கம் — ஒன்பது பாசுரங்கள் – மஹா துக்கம்–ஒரு பாசுரம் -பலம் -நிகமந பாசுரம்

ஐஞ்சாம் திருவாய் மொழியில் கீழே மாசமாக அபரோஷித்து அனுபவித்து ப்ரீதரானவர் –
அவ்வனுபவ அனுரூபமாக பாஹ்ய சம்ச்லேஷத்திலே அபி நிவேசம் பிறந்து -அனுபாவ்யமான சர்வேஸ்வரனுடைய
ஆஸ்ரித ஸுலப்யத்தையும்
ஸுசீல்யத்தையும்
தன் நிபந்தநமான ஆகர்ஷகத்வத்தையும்
ஆச்சர்ய குணாதி யோகத்தையும்
அநந்யார்ஹத்வ அபாதனத்தையும்
அனுபாவ்யமான திவ்ய அவயவ சோபையையும்
சைதில்ய ஜனகமான ரூப வை லக்ஷண்யத்தையும்
அவ்சாத்தை காரமான நாமாவத்தையையும்
போக்யமான புண்டரீகாக்ஷத்வத்தையும்
ப்ராப்ய தேச வர்த்தித்தவத்தையும்
அனுசந்தித்து ஏவம் பூதனானவனோடு யதா மநோ ரதம் கலந்து பரிமாறப் பெறாத ஆர்த்திக்கு மேலே –
ஸ்வ சந்த வர்த்திகளான லௌகிக பதார்த்தங்களும் தத் குண விக்ரஹாதிகளுக்கு ஸ்மாரகமாக –
அத்தாலே சிதிலராய் கத்யந்தர ஸூன்யதையாலே அவனுடைய குண அனுசந்தானத்தாலே தரித்த பிரகாரத்தை
நாயகனான ஈஸ்வரனைப் பிரிந்தாள் ஒரு நாயகி தன் ஆற்றாமையால்
லௌகிகமான பஷ்யாதி பதார்த்தங்களைக் கண்டாகிலும் போது போக்குவோம் என்று அபி சந்தி பண்ணி –
பரஸ்பர ஸம்ஸ்லிஷ்டங்களாய் -ரசித்துத் திரிகிற அவை
அவனுடைய சம்ச்லேஷத்துக்கும் வடிவுக்கும் பேச்சுக்கும் ஸ்மாரகமாய்க் கொண்டு நலிய
அத்தாலே ஈடுபட்டுப் போலி கண்டு இரங்கினவள்-
பின்னும் போக்கில்லாமையாலே அவனுடைய குணங்களை ஸ்மரித்து தரித்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

—————

9-6-உருகுமால் நெஞ்சம் உயிரின் பரம் அன்றி-ப்ரவேஸம்-

எழ நண்ணி நாமும் நம் வான நாடனோடு ஒன்றினோம் -என்று-தம் இருப்பில் நசை அற்றுச் சொன்ன வார்த்தை அன்றோ -மேல்
இவ்வளவில் வந்து முகம் காட்டி இவரைப் பெறுதல் –இல்லையாகில் இழத்தல் –செய்ய வேண்டும்படி யான நிலை ஆயிற்று –
இந்நிலையிலே திருவடி சென்று கிட்டின போது-முன்பு பல நாள் பட்ட துக்கமும் கிடக்கச் செய்தே-பெருமாளும் வாராது இருக்க
சமா த்வாதச தத்ர அஹம் ராகவச்ய நிவேசனே-புஜ்ஞானா மானுஷான் போகான் சர்வகாம சம்ருத்தி நீ -சுந்தர -36-11-
பன்னிரண்டு ஆண்டு பெருமாளும் தானும் ஒருபடிப்பட கலந்த கலவி வந்து
பிராட்டியின் நினைவுக்கு விஷயம் ஆனால் போலே –
இருத்தும் வியந்து -என்ற 8-6-திருவாய் மொழியிலே -தலைதடுமாறாக பிறந்த கலவி வந்து-நினைவுக்கு விஷயம் ஆயிற்று
இங்கு திருவடி போல்வார் வர வில்லை -ஸத்ருச அத்ருஷ்ட-ஸத்ருச -சம்பந்த பதார்த்தம் –அத்ருஷ்ட வசத்தால் என்றுமாம் –

அதற்கடி-
இவர் மேற்கொண்ட கைங்கர்யத்தை முடியச் செய்து-தலைக் கட்டுகைக்கு தகுதியான ஜீவன அதிர்ஷ்டமாவது –
அன்றிக்கே –-
இவர் சொல்லக் கேட்கையிலே பாரித்துக் கொண்டு இருக்கின்ற ஈஸ்வரனுடைய பாக்யமாவது –
அன்றிக்கே –
பகவானை அனுபவிக்கிற அனுபவத்தால் உண்டான ப்ரீதி-உள் அடங்காமை வழிந்து புறப்பட
இவர் சொற்களைக் கேட்டு பகவத் விஷயத்திலே ருசி பிறக்க இருக்கிற மக்கள் உடைய பாக்கியமாவது –
நின் கண் வேடிக்கை எழுவிப்பேன் -இது அன்றோ ஆழ்வார் செய்த கைங்கர்யம் —
இராமர் பாக்யம் சீதை பாக்யம் -தரணி செய்த பாக்யம் -தவம் உடைத்து தரணி -கம்பர் –
சேர்த்தி சேவை இன்றும் நமக்கு அதிருஷ்டம் -நாம் தான் பாக்கியவான்கள் -மூன்றும் என்றால் போலே –

இப்படி -இருத்தும் வியந்து -திருவாய் மொழியில் பேசப்பட்ட கலவி வந்து நினைவுக்கு விஷயம் ஆயிற்று-
சமாத்வாதச -பிள்ளாய் -இன்று இங்கு வெறும் தரையாய் இருக்கிற நான்-
எங்கள் மாமனார் மாளிகையிலே பன்னிரண்டு ஆண்டு ஒருபடிப்பட இராம குணங்களை விளை நீர் அடைத்துக் கொண்டேன் காண்
என்றாள் அன்றோ –

வீற்று இருந்து ஏழு உலகம் -கலவி என்றாலும் இருந்தும் வியந்து -என்பதில் தான் நெறி மாறி அனுபவம் –
இங்கு -இருத்தும் வியந்து -என்கிற திருவாய் மொழியிலே-மூ வுலகும் தன் நெறியா வயிற்றில் கொண்ட
சிறியேனுடைச் சிந்தையுள் நின்று ஒழிந்தான் -என்கிறபடியே
புறம்பு எங்கும் முறையிலே கார்யம் செய்தவன்-இவர் ஒருவர் அளவிலும் அன்றே -முறை கெடக் கார்யம் செய்தது
–8-7/9-6 ஏகார்த்தம் -இரண்டிலும் -சிறிய என் ஆருயிர் உண்ட -இங்கும்
அப்படிப் பட்ட அக்கலவி தான் இப்பொழுது-ஒரு நினைவின் அளவில் இருக்கை அன்றிக்கே-நினைதொறும் -ஸ்ம்ருதி விஷயம் –
அப்பொழுது உண்டான அக்கலவி இன்பத்தை-இப்பொழுதும் அனுபவிப்பதாக ஒரு புத்தி பிறந்தது -என்றது
அப்படியே மேன்மை உடையவன்-அம்மேன்மையும் கிடக்கச் செய்தே-
தாழ நின்று கலந்த குணத்தையும்-வடிவு அழகையும் சொல்லி-அது தான் இப்பொழுதைய அனுபவமே யென்னும்படியாய்
இருப்பது ஒரு புத்தி பிறந்து –
அவனுடைய சீல குணத்தை நினைக்கும் நினைவாலே-உருகுகிறார் -என்றபடி –

விஸ்வரூபம் ரூபம் அத்புதம் ஹரே -நினைத்து -இன்பம் இல்லை -கண் முன்னால் சஞ்சயன் -இன்றும் கண்டால் போலே –
ஆச்சார்ய அனுக்கிரகத்தால் – -நினைவு மாத்திரம் அன்றிக்கே –
நேராக காண்பது போன்ற இன்பம்
மேன்மை -இருத்தும் வியந்த -வாமனன் த்ரிவிக்ரமன் -சொன்னபடி -கார் முகில் வண்ணன் -அழகையும் -சொல்லி –

கடலைத் தரை காண்பாரைப் போலே-இருத்தும் வியந்து -என்கிற திருவாய் மொழியின் அனுபவத்தை-
இதிலே கொண்ட வந்து சேர்ப்பதே நம் முதலிகள் -என்று ஈடுபட்டு அருளிச் செய்வர் நஞ்சீயர்–
அப்ராப்தியும் கிடக்கச் செய்தே-சீல குணத்தை நினைக்கும் நினைவாலே உருகுகிறார் ஆயிற்று
ப்ரீதி இன்மையை உட்கொண்ட குண அனுசந்தானம் காண்-என்று இதற்கு ஆளவந்தார் அருளிச் செய்யும் சந்தை-
ஸ்ம்ருதி மாத்ர வியசனம் இருக்கச் செய்தெ -பிரத்யக்ஷ சாமானாகாரம் தர்சனம் இல்லையே -அதனால் அப்ரீதி கர்ப்ப குண அனுசந்தானம் –

குணங்கள் பல ஈடுபடுத்தும் -என்பதற்கு பிரமாணங்கள் மேலே காட்டி அருளுகிறார்-
தே தம் ஊசு மகாத்மானாம் பௌர ஜானபதை சஹ-பகவோ ந்ருப கல்யாணா குணா புத்ரஷ்ய சந்தி தே -அயோத்யா -2-26-
சக்கரவர்த்தி பெருமாளுக்கு திருமுடி சூட வேண்டும் என்று கோலி-
நாம் அறுபதினாயிரம் ஆண்டு ஒரு தலை மிதிக்க ஒரு தலை கிளற இப்படி வருந்தி அடிப்படுதின-
இராச்சியத்தை-இன்று சிறியவன் தலையில் வைத்தால் இது பொறுக்குமோ-என்று பார்த்து
இதை நாட்டோடு சேர விசாரித்து செய்வோம் என்று அரசர்கள் கூட்டத்தை கூட்டின இடத்து

சநிக்தோ நுநாத சஞ்ஜஞ்ஞே நேத்ர ஹர்ஷ சமீரித-ஜனௌ கோத்குஷ்ட சந்நாதோ விமாநம் கம்பயந்நிவ-அயோத்யா -2-18-
மக்கள் ஆரவாரித்த ஆரவாரமானது அரண்மனையை கிடு கிடுக்கச் செய்தது -என்கிறபடியே-
சகரவர்த்தி மாளிகையை அளித்து செய்யும்படி ஆரவாரிக்க அதனைக் கேட்டு
நாம் நினைத்த கார்யம் பலித்தது -ஆயினும் இவர்கள் நினைவை இவர்கள் வாயால் சொல்லக் கேட்டால் ஆகாதோ என்று நினைத்து –
கதம் நு மயி தர்மேன பிருதிவீம் அனுசாசதி-பவந்தோ த்ருஷ்டும் இச்சந்தி யுவராஜம் மமாத்மாஜம் –அயோத்யா -2-25-
வாரீர் கோள் -நான் அற நெறியில் தேசத்தை ஆண்டு வரும் போது இளவரசனைப் பார்க்க வேண்டும் என்று
எவ்வாறு விரும்புகிறீர்கள் -என்கிறபடியே
அறுபதினாயிரம் ஆண்டு சிறியது பெரியதை நலியாதபடியாக-பூமிப் பரப்பை அடைய நோக்கிக் கொண்டு
இதம் சரீரம் க்ருத்ச்னச்ய லோகஸ்ய சரதா ஹிதம்-பாண்டரஷ்ய ஆத்பத்ரஷ்ய சாயாயாம் சரிதம் மா -அயோத்யா -2-7-
எல்லா உலகங்கட்கும் நன்மையைச் செய்கிற என்னால் இந்த உடல் வெண் கொற்றக் குடையின் நிழலில்
கிலம் ஆக்கப் பட்டது -என்கிறபடியே
முத்தின் குடை நிழலிலே திரிந்து -எனக்கு என்று ஒரு சுகம் கோலாதே
உங்களைப் பாதுகாக்கும் தர்மத்தையே செய்து கொண்டு போந்தேன்-
நான் ஒரு வார்த்தை கேட்ட இடத்து –இப்போது நீ இருக்கச் செய்ய வேண்டாமோ
செய்ய வேண்டிய காலத்தில் செய்து கொள்ளுகிறோம் -என்னுதல்-அன்றியே
கார்யம் ஆகில் செய்ய லாகாதோ -என்று வார்த்தை சொல்லுதல் அன்றிக்கே –
படுகுலை அடித்தவனை தப்ப ஒரு அறவன் கீழே ஒதுங்க நினைப்பாரைப் போலே
என்னை விட்டு என் மகனே அமையும் என்று நீங்கள் விரும்புகைக்கு நான்-உங்களுக்கு செய்த தீங்கு என் என்ன –
ஜ்ஞான விஞ்ஞான சம்பன்ன நிதசே நிரத பிது-தாதுநாமிவ சைலேந்த்ரோ குணாநாம்
ஆக்ரோ மகான் – கிஷ்கிந்தா -13-20-தாரை வாலி இடம் பேசியது
நீ எங்களுக்கு செய்த தீங்கு ஒன்றும் இல்லை-உன் மகனுடைய குண அபராதங்கள் கான் இதற்கு அடி –
நீ நோக்கிக் கொண்டு போந்த படிகளில் ஒரு குறை இல்லை-
குணவானாய் இருப்பான் ஒரு புத்ரினைப் பெற்று நாட்டினை படுகுலை அடித்தாய் காண் –
பஹவ -உன் அளவு அன்று காண்-காக்கும் தர்மத்தில் அவர்க்கு உண்டான பாரிப்பு
விராஜயன் ராஜ ஸூதா ராஜமார்க்கம் நரை வ்ருதம்-ஹ்ருதயானி ஆமமந்தேவ ஜனச்ய குண வத்தையா -அயோத்யா -26-2-
பொன் முதலிய தாதுக்கள் இமய மலையைப் போன்று
சௌலப்யம் முதலிய குணங்களுக்கு எல்லாம் இருப்பிடமாய் இருப்பவன் -என்கிறபடியே
நாட்டிலே சிலரை குணம் இல்லாதவர் என்று பழித்தும்-சிலரை குணவான்கள் என்று கொண்டாடுகிறதும்
இன்ன ஆகாரத்தின் பொன் -என்று விலை பெறுமா போலே-
இன்னார் இடத்திலே இருக்கிற குணம் -என்று ஆயிற்று புறம்பு விலை போவது
சிறந்த குணம் உள்ளவர் ஆகையாலே மக்களின் மனத்தினைக் கடைந்தவர் போல் ஆனார் -எனபது ஸ்ரீ ராமாயணம் –

எர்ணா குளம் பக்கம் திருக் காட்கரை -பெரிய கோயில் –
போகத்திலே தட்டு மாறும் சீலம் காட்கரையிலே -கரை அழிக்கும் –
ஞானம் -தர்சன் பிராப்தி -ப்ரீதி காரித கைங்கர்யம் வரை -மூன்று தசைகள் உண்டு –
மயர்வறமதி நலம் அருள பெற்று அந்தாமத்து அன்பத்து-அனுபவம் கலந்து –
ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழு விலா அடிமை செய்ய பாரித்து -உகந்து பெற்றார் ஆழ்வார்-

ஆறாம் திருவாய்மொழியில் கீழ் இவர் ஸ்மாரக தர்சனத்தாலே அத்யந்தம் அவசன்னரான அளவிலே
ஆஸ்வாச கரமாம்படி ஈஸ்வரன் தன் குணங்களை பிரகாசிப்பிக்க -அவனுடைய
ஆச்சர்ய பிரகாரத்தையும்
அனுபஹித பந்யத்தையும்
உதார குண ஸ்வ பாவத்தையும்
அதிசயித சீலத்தையும்
ஆஸ்ரித பவ்யதையையும்
அத்யந்த வ்யாமோஹத்தையும்
வ்யாமோஹ பர்யவசானத்தையும்
அபேஷா நிரபேஷமான நித்யாதரத்தையும்
அனுபாவ்ய ஸுந்தர்யத்தையும்
அபி நிவேச ஸைக்ர்யத்தையும்
அனுசந்தித்து இந்த குணங்களினுடைய வைலக்ஷண்ய அனுபவத்தால் பிறந்த ப்ரீதி அதிசயத்தாலே
மிகவும் சிதிலராகிறார் –

—————

9-7-எம் கானல் அகம் கழிவாய் இரை தேர்ந்து இங்கு இனிது அமரும்-ப்ரவேஸம்-

மேல் திருவாய் மொழியிலே அப்ரீதியை உட்கொண்ட குணங்களின் நினைவாலே-மிகவும் ப்ரீதியை அடைந்தவர்-
நல்வினைக் குறையாலே-அப்ரீதி இன்மையே தலையெடுத்து-அவனைப் பெற்றால் பிழைத்தல் -பெறா விடில் முடிதல்
ஆம்படி தனக்கு உண்டான தம்முடைய நிலையினை-அன்யாபதேசத்தால் அருளிச் செய்கிறார் –

இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து பிரிந்தாள் ஒரு பிராட்டி-அவன் வடிவு அழகில் ஈடுபட்டு-துயரம் உற்றவளாய் –
தன் ஆற்றாமை கை கொடுக்க -தன் உபவனத்திலே சென்று-அங்கு இருக்கிற பறவைகளைக் குறித்து
பின்னானார் வணங்கும் சோதி திரு மூழிக் களம் -திரு நெடும் தாண்டகம் -10-என்கிறபடியே
தூது போவார்க்கு வருந்தி அறிவிக்க வேண்டாத படி-திரு மூழிக் களத்திலே வந்து நின்று அருளினான்
தனக்கு நல்லாரை விட மாட்டாதவன் ஆகையாலே நம் நிலை அறியாது இருந்தான் அத்தனை –
அருள் உடையவன் ஆகையாலே-நம் நிலையை அறிவிக்க வரும்-என்று அவற்றை வினயத்தோடு
இரக்கிறாள்-ஒரு பிராட்டி பேச்சாலே தம் நிலையை-அருளிச் செய்கிறார் –

தம் பிழையும் -சிறந்த செல்வமும் -படைத்த பரப்பும் – தமரோட்டை வாசமும்
மறப்பித்த
ஷமா – தீஷா – சாரஸ்ய – ஸுந்தர்யங்களை
உணர்த்தும்
வ்யூஹ விபவ பரத்வ த்வய அர்ச்சைகள் தூது நாலுக்கும் விஷயம் –சூர்ணிகை -156-

அஞ்சிறைய மட நாராய் -என்ற திருவாய் மொழியிலே
நம் பக்கல் உள்ள குற்றத்தால் வராது ஒழிந்தான் இத்தனை –என் பிழையே நினைந்து அருளி –
குற்றங்களைப் பொறுக்கும் அவனுடைய பொறை உடைமையை அறிவிக்க வருவான் –என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கே -என்று
பொறை உடைமையை பற்றாசாகக் கொண்டு தூது விட்டாள்-

வைகல் பூம் கழிவாய் -என்ற திரு வாய் மொழியிலே
நல்லது கண்டால்-சிறந்த செல்வம் – கால் தாழுமவன் ஆகையாலே-திரு வண் வண்டூரில் நிறைவினைக் கண்டு கால் தாழ்ந்தான் இத்தனை-
தம் துயரை அறிவித்தால் -என்னையும் உளள் என்மின்கள் –
தன் இனிமையில் நெஞ்சு வைப்பான் ஒருவன் அல்லன் –என்று அது பற்றாசாக தூது விட்டாள் –

பொன்னுலகு ஆளீரோ-என்ற திரு வாய் மொழியிலே
திருக் கோளூர் ஏறப் போக -என்று
தன்னுடைய உபவனத்து அளவும் சென்று மேலும் செல்லுவதற்கு வலி இல்லாமையாலே போக மாட்டாதே
இருக்கிற பிராட்டி -பின்னையும் வரக் காணாமையாலே –
யாவையும் யாவருமாய் – முன் உலகங்கள் எல்லாம் படைத்த –செல்வப் பரப்பாலே வாராது ஒழிந்தான் –
தண் துழாய் நமக்கு அல்லது நல்கான் -அடியார்களோடு-ஓன்று பட்ட இன்பத்தை உடையவன் ஆகையால் வரும் –
என்று ஓன்று பட்ட இன்பத்தை உடையவனாய் இருத்தலையே-பற்றாசாக தூது விட்டாள் –

இதில் தனக்கு நல்லராய் இருப்பாரை விட மாட்டாமையாலே-வாராது இருந்தான் அத்தனை
தன் வடிவு அழகு அது -அக்கமலத்து இலை போலும் திரு மேனி அடிகளுக்கு –குணங்கள் அவை -தமரோடு அங்கு உறைவார்க்கு –
ஆன பின்பு பிரிந்தார்க்குப் பிழைத்து இருக்கப் போமோ -என்று-அவன் வடிவு அழகையும் குணங்களையும்
பற்றாசாக தூது விடுகிறாள் –

அங்க மாலி அருகில் -திரு மூழிக் களம் –எர்ணா குளம் -திருக் காட்கரைக்கு -கிழக்கே உள்ள திவ்ய தேசம் –
மகாத்மாக்கள் விரஹம் சஹியாத மார்த்த்வம் வளத்தின் களத்தே கூடு பூரிக்கும் -சூர்ணிகை -179
திரு மூழிக் களத்து விளக்கு -பின்னானார் வணங்கும் சோதி –
கல்லும் கனை கடலும் -திரு வேங்கடம் அர்ச்சா ஸ்தலங்களுக்கு பிரதி நிதி போலே
திரு மூழிக்களம் -அர்ச்சைக்கு தூது இதில் -பிரதி நிதி தானே இந்த திவ்ய தேசம்
அப்பன் -ஸ்ரீ ஸூக்தி நாதன்-ஸ்ரீ மதுரை வேணி நாச்சியார்– பாரத புழா நதி அருகில்
ஹரிதா மகா ரிஷி தவம் -பக்தி ஸூ த்ரங்களை பிரார்த்தித்து -ஸ்ரீ ஸூக்தி -திரு மொழி –
களத்து மேடு -பயிர் செழிக்கும் -மொழி மருவி மூழிக் களம்
லஷ்மணன் தபம் -பரத அபசாரம் போக்கிக் கொள்ள -இங்கே வந்து –லஷ்மண ஸ்வாமி என்றே இந்த பெருமாள் இன்றும் –

ஏழாம் திருவாய் மொழியில் -கீழ் -குண ஸ்மரணத்தாலே சிதிலரானவர் அந்த ஸைதில்யம்
பாஹ்ய அனுபவ பர்யந்தமான அபி நிவேசத்தைப் பிறப்பிக்க –
அனுபவ யோக்யமாம் படி திரு மூழிக் காலத்திலே எழுந்து அருளி இருக்கிற சர்வேஸ்வரனுடைய
அதிசயித போக்யதாகாரத்தையும்
அசாதாரண ஜன அனுபாவ்யத்தையும்
சேஷித்வ பிரகாச ரூப வைலக்ஷண்யத்தையும்
நித்ய அனுபாவ்ய சேஷித்வத்தையும்
நிரதிசய விபூதிமத்வத்தையும்
நித்ய அநபாயினீ சம்பந்தத்தையும்
அத்யுஜ்ஜ்வல திவ்ய அவயவத்தையும்
ஆபி ரூப்ய அதிசயத்தையும்
அசாதாரண சேஷித்வ சிஹ்னத்தையும்
அநுபஹித கிருபா யோகத்தையும்
அனுசந்தித்து ஏவம் விசிஷ்டனான சர்வேஸ்வரனைக் கிட்டி அனுபவிக்கப் பெறாத ஆர்த்தியாலே
கடக முகத்தால் லபிக்கப் பாரித்த பிரகாரத்தை
நாயகனான சர்வேஸ்வரனைப் பிரிந்த நாயகியானவள் வ்யதிரேகத்தில் தரிக்க அரிதான அவனுடைய அழகை
அனுபவிக்கைக்காகச் சில பஷிகளை இரந்து தூது போக விடுகிற பாசுரத்தாலே அருளிச் செய்கிறார்
அஞ்சிறைய மட நாரையிலே அபராத சஹத்வம் பற்றாசாகவும்
வைகல் பூம் கழிவாயில் சேஷித்வ சம்பந்தம் பற்றாசாகவும்
பொன்னுலுகு ஆளீரிலே ஏக ரஸத்வம் பற்றாசாகவும்
இத்திருவாய் மொழியிலே ஸுந்தர்யம் பற்றாசாகவும் தூது விடுகிறாள் –

—————

9-8-அறுக்கும் வினையாயின ஆகத்து அவனைநிறுத்தும் மனத்து ஒன்றிய சிந்தையினார்க்கு-ப்ரவேஸம்-

திருவடி சென்று பிராட்டியைத் திருவடி தொழுது-மீண்ட பின்னர் பெருமாளை அடைவதற்கு முன்பு பிராட்டிக்கு பிறந்த
எண்ணங்கள் போலே
த்வம் சமேஷ்யசி ராமேண சசாங்கேந இவ ரோஹிணீ-ஷிப்ரம் ச தேவி சோகச்ய பராம் யாச்யசி மைதிலி -சுந்தர -39-45-
சந்த்ரனோடு ரோஹிணி சேர்வதைப் போலே நீ ராமபிரானோடு சேர்வாய்
அதி விரைவில் சோகத்தின் உடைய முடிவை அடைவாய் –
திருவடி வார்த்தையை எப்பொழுதும் எண்ணிக் கொண்டே இருந்த சீதைப் பிராட்டி போலே
மேல் திருவாய் மொழியில் விட்ட தூதுவர்கள்
அத்தலைப் பட்டு அவனைக் கொண்டு வருவதற்கு முன்பே-நடுவில் இவர்க்குப் பிறந்த
எண்ணங்களைச் சொல்லுகிறது இத் திருவாய் மொழியில் –

இப்படி தம்முடைய துயரத்தை அறிவிக்கச் செய்தேயும்-அப்போதே வரக் காணாமையாலே துயர் உற்றவர்
தூது விடுகையாலும்
அவன் குணங்களை அனுசந்திப்பதாலும்
மனத்தின் தெளிவினாலும்
அவன் வந்து நம்மை அங்கீ கரித்து-அமர்ந்த நிலமான திரு நாவாயிலே கொடு போகை நிச்சயம்
என்று அறுதி இட்டு-
க்ரமத்தில் போக பற்றாமையாலே பதறி-அங்கே புக வல்லேனே-புகும் நாள் என்றோ
அங்கே புக்கு என் கண்ணாரக் கண்டு அடிமை செய்ய வல்லேனே-குறுக்கும் வகை உண்டு கொலோ –
என்று இப்படி பல வகையான எண்ணங்களை எண்ணுகிறார் –

உபாயமும் உபேயமும் இரண்டும் ஈஸ்வரனே -என்று அறுதி-இட்டார்க்கு
பிராப்யத்திலே ருசி கண் அழிவு அற்றால்-
விளம்பத்துக்கு காரணம் இல்லாமையால் –பேறு சித்திக்கும் அளவும் எண்ணம் செல்லா நிற்கும் அன்றோ-

இவ் எண்ணம் தான் இவனுக்கு தவிரதாதுமாய்-அது தான் இனியதுமாய்-
இவனுடைய ஸ்வரூபத்தோடு சேர்ந்து இருப்பதுமான-ஓன்று அன்றோ –
பெரிய முதலியார் -ஆளவந்தார் –பேற்றினை பெறுவதில் உள்ள விரைவாலே-
எப்பொழுதும் இத் திருவாய் மொழியினைச் சொல்லிக் கொண்டே இருப்பார் –ஆளவந்தார் மிகவும் உகந்த திருவாய்மொழி –
ஆகையால் இத் திருவாய்மொழி யினை-பெரிய முதலியார் திருமொழி -என்று ஆயிற்றுச் சொல்லுவது –
அன்றிக்கே
விட்ட தூதுவர்கள் தாழ்ந்தார்கள் என்று-தாமே அவன் எழுந்து அருளிய தேசத்துக்கு
ஏறப் போக ஒருப்படுகிறார் –என்பாரும் உளர் –

மூன்று அடுத்து அடுத்து வரும் திருவாய் மொழிகள் மலையாள திவ்ய தேசங்களுக்கு –
தாயாருக்கு தனி சந்நிதி -திரு நாவாய் முகுந்தன் -ஸ்ரீ விஷ்ணு போதம் –
வைகுந்தன் என்னும் தோனி பெறாமல் உழல்கின்றேன் -விபு -இவன் -அதனால் -இந்த தோனி -இக்கரைக்கு அக்கரைக்குமாக விபுவாக –
லீலா விபூதியில் இருந்து நித்ய விபூதி வரை பரந்து இருக்க – -நாமே -அனுபவித்து -விஷ்ணு போதம் -நாவாய் நாராயணன் -நாவாய் முகுந்தன்-
நவ யோகி ஸ்தலம் -எட்டு பேர் முத்தி ஒன்பதாவது யோகி வேண்டி சேவை நவ யோகி மருவி நாவாய்
திருவடி சேவை இல்லை -கால் வாசி உள்ளே -வற்கலை திருக்கையால் ஆசமனம்
இங்கு வேத விமானம் செங்கமல சரஸ் -பாரத புழா நதிக் கரையில்
பிண்ட பிரதானம் செய்வது இங்கே பிரசித்தம் -கடத்த -துன்பக் கடன் பித்ரு கடன் தீர்க்கவும் இந்த ஸ்தலம்
மு மோக்ஷம் கு பூமி த ததாதி முகுந்தன் –பிரிந்த துன்பக் கடல் கடத்தும் விஷ்ணு போத ஆன்ரு ஸம்ஸயம் நாவாயிலே நிழல் எழும் -சூர்ணிகை -180-

எட்டாம் திருவாய் மொழியில் -இப்படி கடக முகத்தால் பிராபிக்க அபி நிவேசித்தவர் -ப்ராப்ய த்வர அதிசயத்தாலே –
அவன் பரிபூர்ணனாய்க் கொண்டு திரு நாவாயிலே எழுந்து அருளி இருக்கிற படியை பிரகாசிப்பித்துக் கொண்டு அவனுடைய
அனுபவ விரோதி நிராசக தேச வர்த்தித்வத்தையும்
அனுபாவ்யத்வ வைபவத்தையும்
அசாதாரண ஸம்பந்தத்தையும்
நித்ய கைங்கர்ய விஷயத்வத்தையும்
பத்னீ பரிஜன ஸ்தாந அநு பூர்த்தியையும்
ஆஸ்ரித பவ்யதையும்
சேஷித்வ ரக்ஷகத்வ ஆகார பூர்ணதையையும்
அனுபவ ஞான பிரதத்வத்தையும்
ஸூ ர வஸ்ம ஸர்வேஸ்வரத்வத்தையும்
அதி ரமணீய விக்ரஹ யோகத்தையும்
அனுசந்தித்து -ஏவம் பிரகாரனான சர்வேஸ்வரன் எழுந்து அருளி இருக்கிற தேசத்தைக்கிட்டி அனுபவிப்பது
ஒரு நாளே என்று பஹு முகமாக மநோ ரதிக்கிறார்-

—————

9-9-மல்லிகை கமழ் தென்றல் -ப்ரவேஸம்

திரு நாவாயில் ஆனந்த அனுபவம் -மநோ ரதித்த இவருக்கு -பாதக வர்க்கங்களுக்கு அஞ்சி கூப்பிடும் படி அமைந்ததே –
மாலைப் பூசல் என்பர் இந்த திருவாய்மொழி –
பிராப்ய வஸ்து பெற மனோ ரதித்தார்-கீழில்
உடன் பெற கிடைக்காமல் ஒரு இரவு பட்ட வியசனம்-
கோபிகள் பட்டது போலே ஆளவந்தார் -திருமாலை ஆண்டான் பணிக்க-அத்தை எம்பெருமானார் கேட்டு அருளி –
ஆற்றாமையால் முன்பே தூது விட்டு
முடியா நின்றார்-அத்தனை ஆடல் கொடுக்க வல்ல ஆற்றாமை பாராதே –
சங்கையில் பிரிந்த துன்பம் அடைகிறார் -எம்பெருமானார் –

பெற்றி நஞ்சீயர் சிஷ்யர்-
நம்பி திருவரங்க நாராயண தாசர்-நம்பிள்ளை சிஷ்யர் –
பிள்ளை பாடு வினோதம் என்ன பெற்றி கேட்க-
அறுக்கும் வினை சாற்றினோம் -என்றாராய் – உடனே
நாளைக்கு மல்லிகை கமல் தென்றலும்
மாலைப் பூசலும் என்று பெற்றி பணித்தாராம்-
எம்பெருமானார் நிர்வாகம் -படியே பெற்றி பணித்தார் –

ஞானம் பிறந்த பின்பு சம்சாரத்தில் இருந்து கால் வாங்க மாட்டாமல் –ப்ராப்ய தேசம் புகை -மநோ ரதம் மட்டும் -இருக்க
பாதக வர்க்கங்கள் ஈரலாம் படி –பதம் செய்ததாய் ஆயிற்று
பொய் நின்ற ஞானம் -அபேக்ஷித்த பின்பும் இவரைக் கொண்டு பிரபந்தம் தலைக் கட்ட -இருத்த
விரோதியை அருசி இவ்வளவும் வர நிலை நிற்க –
வேதாந்த -ஜிஞ்ஞாஸூ ப்ரஸ்னம் -தஸ்ய தாவதேவ சிரம யாவன்ன விமோஷ்யே-என்கிற
வாக்கியம் அன்றோ இவ் வர்தத்தைச் சொல்லுகிறது

முக்தி கிடைக்கும் வரை அது வரை தான் கால தாமதம் –
முமுஷு தசையில் எப்பொழுது பெறுவோம் என்கிற நிலை போலே இந்த மாலைப் பூசல் –
தஸ்ய மே தாவதேவசிரம் -அது வரை தான் கால தாமதம் -பிராரப்ய கர்மம் தொலையும் வரை –
சிரம் -க்ஷணம் காலமும் நெடும் காலமாக தோன்றுமே -விமோஷே –ஸம்பத்ஸ்ஸே -உத்தம புருஷ சப்தம் தன்னிலை -ஆரம்பம் தஸ்ய -மே –அந்த எனக்கு –
சம்சாரத்தில் நசை அற்ற முமுஷுவான எனக்கு -என்றவாறு –

ஒரு பகல் ஆயிரம் ஊழியாக தோன்றுமே -தெரிந்த பின்பு துடிப்போம்-அதனால் இதுவும் வேதாந்த சித்தம் –
ஸ்வாபதேசம் பகல் கண்டேன் -விடிவு -இருள் தரும் மா ஞாலம் இரவு நடுவில் சந்த்யா காலம் முமுஷுத்வ தசை –
சம்சாரம் ஹேயம் -ஞானம் பிறந்த பின்பு –
அழுக்கு உடம்பும் -இனி யான் உறாமை -அந்த அருசி இது வரை நிலை -அறுக்கும் வினை -சம்சாரம் நீக்க பிரார்த்தித்தார் –
அர்த்தமாக -சப்தம் அணுகப் பெரு நாள் -என்று அருளிச் செய்கிறார் –

முடியானே கரணங்கள் சைதில்யம் சொல்லி –
இதில் அவற்றுக்கு ஆஸ்ரயமான கரணி -அவயவியும் ஒன்றாக அழிகின்றன –
ஞான கர்ம இந்திரியங்கள் ஒன்றாக அழிகின்றன
மல்லிகை – கமழ் ஸ்பர்ச இந்திரியங்கள் –குறிஞ்சி இசை ஸ்ரோத்ரியம் -தோளும் கொண்டு கர்ம இந்திரியம் –

இராமாவதாரத்தில் பதினான்கு ஆண்டு போலே ஆயிற்று-திரு வாய்ப்பாடியில் உள்ள பெண்களுக்கு
கிருஷ்ண விரஹத்தாலே ஒரு மாலைப் போது-
குணங்களால் மேம்பட்ட பெருமாளைப் பிரிகையாலே-அங்கு பதினான்கு ஆண்டுகளாய்க் கழியவும் கூடும்
இங்கு இவன் நீர்மையிலே கையடி உண்டு இருக்கையாலே
தீம்பனான நீர்மையிலே ஈடுபட்டு -ஒரு பகல் பல கல்பமாகத் தோற்றுகிறது –

விளைவான் மிக வந்து நாள் திங்கள் ஆண்டு ஊழி நிற்க எம்மை
உளைவான் புகுந்து இதுவோர் கங்குல் ஆயிரம் ஊழிகளே-திரு விருத்தம் -70
குணங்கள் தாம் கால் கட்டுவான குணங்களாய் அல்லவே-பெருமாள் இடத்தில் கிடந்தவையாய் அன்றோ
இங்கு தர்மி அதுவேயாய் -குணங்களால் மேம்பட்டதாய் –அதற்கு மேலே தீம்பும் ஆனால்-
பாடு ஆற்றப் போகாதே அன்றோ -துன்பம் பொறுக்கப் போகாது என்றது ஆயிற்று-
உலகத்தார் இனிமை உண்டு என்று நினைத்து இருக்கிற-ஐம்புல விஷயங்கள்
அனைத்தும் தமக்கு துன்புறுத்துவனவாக-பெற வேண்டிய பொருளைப் பெறாமல்
ஆண் புலியான ஸ்ரீ வீடுமர்-அர்ஜுனன் கையிலே அம்புகளால் உளைய
ஏவுண்டு கிடந்து துடித்தால் போலே-நடுவே கிடந்தது துடிக்கிறார் –
திரு வாய்ப்பாடியிலே பெண்கள் கிருஷ்ணன் பசு மேய்க்கப் புறப்பட்டால்
அவன் வரும் அளவும் அவர்கள் படும் பாடு சொல்லுகிறது –

அதாவது பிராமணர்க்கு சந்த்யா வந்தனம் போலே அன்றோ-ஆயர்கட்கு பசு மேய்க்கை ஆயிற்று-
அது சாதிக்கு உரிய தர்மம் ஆகையாலே தவிர்க்க ஒண்ணாது இருக்கும் அன்றோ –
இப்படியாலே அவனை பசுக்களின் பின்னே புறப்பட விட்டு
அவன் வரும் மாலை நேரத்தை பார்த்து இருப்பார்கள் அத்தனை -ஆயிற்று

ஆக
அவன் பசு மேய்க்க போனால் பகல் பொழுதை வருந்தி ஒரு படி ஆற்றினால்
அவன் வரும் காலமான மாலைப் பொழுதும் வந்து முகம் காட்டி
பசுக்களின் முற் கொழுந்து வந்து தலை வைக்கச் செய்தேயும்
அவன் வரக் காணா விட்டால் ஆற்றப் போகாதே அன்றோ –

அதாவது
அவன் தான் முற் கொழுந்திலே வாராமல்-பிற் கூழையிலே நிற்கும் ஆயிற்று-நடுவு படும் அலமாப்பு காண்கைக்காக-
அவன் வரக் கூடிய காலமான மாலைப் பொழுதும் வந்தது-கூட பசுக்களும் வந்தன -ஆ புகும் மாலையும் ஆகின்றது –
பசுக்களும் வந்தன -மாயன் வாரான் –அவன் தான் வரக் காணா விட்டவாறே-

அக்காலத்தில் – மல்லிகையின் பரிமளம்-நல்ல குறிஞ்சி இசை தொடக்கமான இன்பப் பொருள்கள்
தென்றல்
நிலா
கடல் ஓசை
அன்றில்
குழல் ஓசை
முதலானவை துன்புறுத்தத் தொடங்கின-

அவன் முன்னே வந்து இருந்தால் இவை எல்லாம் உத்தேச்யமாக இருக்குமே -சிங்கம் இல்லா விட்டால் நரிக் கூட்டம் நலியும் –
குழல் ஓசையும் அவ்வழியே அவனுடைய குணங்களை நினைவு ஊட்டி நோவு படுகைக்கு-உடலாய் இருக்கும் அன்றோ –

அப்படி இருக்கிற துன்புறுத்துகின்ற பொருள்கள் எல்லாம்-முன்பு தனித் தனியே இழி சொற்களைப் பேசி நலிந்த-
ஒற்றைக் கண்ணள்-
ஒற்றைக் காதள்-
உள்ளிட்ட அரக்கிகள் பின்பு-அவ்வளவிலே நில்லாதே எல்லாரும் ஒரு சேர மேல் விழுந்து
அதற்கு மேலே சில நலிவுகளைச் செய்ய நினைத்தால் போலே-துன்புறுத்துகின்ற பொருள்கள் எல்லாம்
தனைத் தனியேவும் திரளவும் மேல் விழுந்து நலிய-
அவற்றால் நலிவு பட்டவர் எல்லாரும் கூப்பிட்ட கூப்பீட்டை-இவர் ஒருவருமே கூப்பிடுகிறார்-

இது மாலைப் பூசல் –இரவு முழுவதும் துன்பம் -5-4 ஊரெல்லாம் துஞ்சி –10-3 -காலைப் பூசல் –

ஒன்பதாம் திருவாய் மொழியிலே கீழ் ப்ராப்ய விஷயமான அபி நிவேசத்தாலே ஈடுபட்டவர்
அனுபவ யோக்ய அவஸ்த்தை சந்நிஹிதையாய் இருக்கச் செய்தேயும் அநு பாவ்யானான ஈஸ்வரன்
அஸந்நிஹிதன் ஆகையால் விளம்ப அஷமதாய் படியாக போக்ய பூதனானவனுடைய
ரஞ்ச நீய திவ்ய ஸ்வபாவதையையும்
ரக்ஷண திவ்ய பிரகாரத்தையும்
ரமணீய திவ்ய அவயவத்தையும்
அபிரூப திவ்ய வாஹனத்வத்தையும்
ஆஸ்ரித ஸுலபயத்தையும்
அனவதிக ஸுசீல்யத்தையும்
அத்ய யுதார ரூபதையையும்
அதிசயித சம்ச்லேஷத்தையும்
சாபிப்ராய நிரீக்ஷணாதிகளையும்
விஸ்லேஷ அஸக்யமான ஆச்சர்ய ரூபத்தையையும்
அனுசந்தித்து ஏவம் பிரகார விசிஷ்டனான போக்கிய பூதனை யதா மநோ ரதம் அனுபவிக்கப் பெறாத ஆர்த்தியாலும்
ஸ்மாரகமாயும் ஆஸக்தி ஸூ சகமாயும் இருக்கிற பதார்த்த தரிசனத்தால் வந்த ஸைதில்யத்தாலும்
அல்ப கால விளம்பமும் பொறுக்க மாட்டாமல் கூப்பிட்ட பிரகாரத்தை
பசு மேக்கப் போந்த ஸ்ரீ கிருஷ்ணன் ஸந்த்யை வந்து இருக்கச் செய்தேயும் வாராத விளம்பம் பொறுக்க மாட்டாமல்
கோபீ ஜனங்கள் தத் கால சித்த போக்யங்களாலே ஈடுபட்டு பொழுது கண்டு இரங்கிக்
கூப்பிட்ட பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் —

————————

9-10-மாலை நண்ணித் தொழுது எழுமினோ-ப்ரவேஸம்-

அறுக்கும் வினையாயின -என்ற திருவாய் மொழியிலே அவனை பெற-வேண்டும் என்ற எண்ணமேயாய்ச் சென்றது –
எண்ணின சமயத்திலே விரும்பியபடி கிடையாமையாலே
மிக்க துன்பத்தை அடைந்தபடி சொல்லிற்று -மல்லிகை கமழ் தென்றல் என்ற திருவாய் மொழியில்-
அது தான் இரவில் விசனமாக நோவு பட்ட படி அன்றோ –
இப்படி எண்ணினவாறு பெறாமையாலே-நோவு படுகிற இவருடைய துன்பத்தினை நினைத்து-
நான்கு திருவாயமொழி தொடர்ந்து நலிய -இதற்கு மேலே ஆழ்வார் பொறுக்க மாட்டார் என்று திரு உள்ளம் கொண்டு –
சர்வேஸ்வரன்-நீரோ இப்படி எண்ணுவீரும்-அது கிடையாமல் துன்பப் படுவீரும்
உம்மைப் பெற வேண்டும் என்று எண்ணுவோரும் நாம் அன்றோ-ஸ்வாமி யன்றோ சொத்தைப் பெற எண்ணுவர் —
-உம்மைப் பெறாமையால் இழவு பட்டோமும் நாம் அன்றோ-உமக்கு ஒரு குறை உண்டோ-
கலங்கா பெரு நகரம் கலவிருக்கையாய் இருக்க-அவ்விடத்தை விட்டு
திருக் கண்ணபுரத்திலே வந்து நாம் எழுந்து அருளி இருப்பதும் உமக்காக அன்றோ
நீர் விரும்பியதை உம்முடைய சரீரத்தின் முடிவிலே -செய்யக் கடவோம் –
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் –என்று சமாதானம் செய்ய
சமாதானத்தை அடைந்தவராய் இவரும்உவகையர் ஆகிறார் –
அவன் ஓன்று செய்யக் கடவோம் -என்றால்-
அப்போதே பெற்றதாக நினைத்து உவகையர் ஆகலாம்படி அன்றோ அவன்படி இருப்பது –

இப்படி உவகையராய்-அவன்படி இதுவான பின்பு-சர்வேஸ்வரன்-எல்லாராலும் பற்றப்படுபவனாய்க் கொண்டு –
சரணமாகும் தான தாள் அடைந்தார்க்கு எல்லாம் –தொழுது எழுமினோ தொண்டீர் –
திருக் கண்ணபுரத்தில் அணித்தாக எழுந்து அருளி இருக்கிறான்
எல்லாரும் ஒரு சேர அவனை அடையுங்கோள்
அடையும் இடத்தில் அவன் திருவடிகளில் பக்தியைப் பண்ணுங்கோள் –முதல் நான்கு பாசுரங்களில் பக்தி பற்றி அருளி –
மேலே பிரபத்தி பற்றி அருளி-பக்திக்கு சாதனம் இல்லாதார் பிரபத்தியை செய்யுங்கோள்-
அதற்கு தகுதியான மன உறுதி இல்லாதார்-திருக் கண்ணபுரம் -என்ற வார்த்தை மாத்ரம் ஆகிலும் சொல்லுங்கோள் –
-பத்தாவது பாசுரத்தில் –அவ்வளவே கொண்டு அவன் தான் கை விடான்-
ஆனபின்பு எல்லாரும் ஒரு சேர அவனை அடையுங்கோள்-என்று பரோபதேசத்தில் மூளுகிறார்
மோகித்துக் கிடப்பார் ஆகில் கிடப்பார் இத்தனை போக்கி-உணர்ந்தார் ஆகில் பிறர்க்கு நலம் சொல்லி அல்லது நிற்க மாட்டார் –

பிராரப்த கர்மங்களின் முடிவில் மோஷமாகக் கடவது -என்று அன்றோ-வேதாந்தங்களில் சொல்லப் பட்டு இருக்கின்றது
சரீரத்தின் முடிவில் நீர் விரும்பியதை செய்யக் கடவோம்-என்று சர்வேஸ்வரன் சொன்ன இடமும்
அதனைக் கேட்டு இவர் உவகையர் ஆன இடமும் பொருந்தா -என்னில்
இத் திருவாய் மொழியில் -பக்தியை செய்யுங்கோள் என்றும்-
அது மாட்டாதார் பிரபத்தியை செய்யுங்கோள் என்றும்-சொல்லிற்றே அன்றோ –
வேதாந்தங்களில் உபாசகன் ஆகிற அதிகாரியை நோக்கிக் சொல்கிறது-இங்குப் பிரபன்னனுக்கு சொல்லுகிறது
தஸ்ய தாவதேவ சிரம யாவன்ன விமோஷ்யே-என்கிற-வாக்கியம் அன்றோ இவ் வர்தத்தைச் சொல்லுகிறது
இந்த உபநிஷ வாக்கியம் தான் சரீரத்தின் முடிவில் மோஷம் என்பதனைச் சொல்லுகிறதோ-
கர்மங்களின் முடிவில் மோஷம் என்பதனைச் சொல்லுகிறதோ-என்று விசாரித்து
கர்மங்களின் முடிவில் மோஷம் என்பதனைச் சொல்லுகிறது-என்று -ஸ்ரீ பாஷ்யகாரர்-சித்தாந்திப் படுத்தி உள்ளாரே அன்றோ
தேகாவசேனே முக்தி -ஸ்ரீ தேவ பெருமாள் -அதிகாரி பேதத்தால் முரண்பாடு இல்லை என்றதாயிற்று –

அதனோடு சரீரத்தின் முடிவில் மோஷம் என்று இங்கே சொன்னது முரண் படாதோ என்னில்
நியாயத்தோடு கூடிய வாக்கியம் அன்றோ பொருளை அறிவிப்பதற்கு உரியது ஆவது
உபாசகனுக்கு தான் பற்றின உபாயம் முற்றுப் பெற்ற பின்னரே பலிக்க வேண்டி இருக்கையாலே-அவ்வளவும் நியாயம் நடக்கும்-
பிரபன்னன் முதல் அடியிலே -என்னுடைய எல்லா பாபங்களுக்கும் நீயே கடவாய் -என்று கொண்டு
சர்வேஸ்வரன் பக்கலிலே-பரந்யாசம் செய்தவன் அன்றோ-
இவன் தான் இனி செய்கிறது என்று ஓன்று உண்டாய்-அது முடிந்த பின்பு பெற வேண்டும் என்னும்
கால தாமதத்துக்கு காரணம் இல்லையே
இதனால் பரந்யாசம் பண்ணப் பட்ட சர்வேஸ்வரனுக்கு-ஆற்றல் இல்லை
அதனால் அது விளம்பதுக்கு காரணம் ஆகின்றது என்று சொல்லுவதற்கும் இன்று –
ஆக
இப்படி நியாயங்கள் காட்டினவாறே-இவனுக்கு சரீரத்தின் முடிவிலே பேறு கிடைப்பதற்கு தட்டு இல்லை அன்றோ

இனித் தான்
அதாத்ர மாதலீ சாப தபஸ் தப்த்வா ஸூ துஷ்கரம்
பகவந்தம் பிரபன்னா ஸா பகவந்தம் அவாப ஸா – காருட புராணம் -ஸ்ரீ ரங்க மகாத்மியம் -அத்யா-3
அவள் பகவானைச் சரண் அடைந்தாள்
பகவானை அடைந்தாள் -என்கிறபடியே மாதவி சரணாகதி செய்து மோஷத்தை பெற்றாள் ஆகச் சொல்லப் பட்டுள்ளது அன்றோ-
நமனும் முற்கலனும் பேச நரகில் நின்றார்கள் கேட்க
நரகமே சுவர்க்கமாகும் நாமங்கள் உடைய நம்பி
அவனது ஊர் அரங்கம் என்னாது அயர்த்து வீழ்ந்து அளிய மாந்தர்
கவலையுள் படுகின்றார் என்று-அதனுக்கே கவல்கின்றேனே -திருமாலை
அவதார ரகஸ்ய ஞானம் உடையவன் இந்த சரீரத்தின் முடிவிலே பேறு பெறக் கடவேன் -என்றே சொல்லா நின்றது அன்றோ –
த்யக்த்வாம் தேஹம் புனர் ஜன்ம நைதிமாம் ஏதிச அர்ஜுன -ஸ்ரீ கீதை -4-9-
த்யக்த்வா தேஹம்-உபாசனனுக்கு விஷயமானாலும் கிம்புநர் நியாயத்தாலே பிரபன்னனுக்கும் சித்திக்கையாலும்
சரீரத்தின் முடிவில் மோஷம் என்பதற்கு பிரமாணம் ஆக குறை இல்லை –
புருஷோத்தம வித்யையையும் அவதார ரகஸ்யமும் அறிந்தால் அந்த தேவ அவசானத்திலே முக்தி என்றானே –
சக்தி இருந்தாலும் பிராப்தி இல்லையே பக்திக்கு -பாரதந்த்ர காஷ்டை என்பதாலே பூர்வாச்சார்யர்கள் -பிரபத்தி நிஷ்டர் ஆனார்கள்
-பார்த்தாவின் கையை எதிர்பார்க்கும் பார்யை போலே –
அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி மாசுச -ஸ்ரீ கீதை –18-66
நன்று
ஆனால் சரணாகதி செய்த உடனே பகவானை அடைதல் வேண்டாவோ-
இந்த விரோதியைப் போக்கி உன் திருவடிகளைத் தர வேண்டும் என்று அன்றோ இவன் விரும்புவது-
பின்பும் தனக்கு விருப்பம் இல்லாத இச் சரீரத்தோடு இருக்கும் இருப்பு-
கர்மங்கள் அனுபவித்து முடிவு பெறாமையாலே ஆவதோ-சர்வேஸ்வரன் வைக்க இருக்கிறான் ஆவதோ -என்னில்
சர்வேஸ்வரன் வைக்க இருக்கிறான் ஆகில் அவனுக்கு சில குற்றங்கள் உண்டாகும்
அவன் தான் நம் இரு வினைகளையும் நடுவே துண்டித்து-அவ்வருகே கொண்டு-போகிறேன் என்று சொன்னதோடும் முரண்படும்
ஆனபின்பு கர்மங்கட்கு கட்டுப் பட்டவர்கள் போன்று இன்ப துன்பங்களை இவனும்-அனுபவித்து இருக்கையாலே கர்மத்தாலே யாம் இத்தனை அன்றோ –
நன்று
இனிக் கர்மம் நடையாடக் கடவது ஆனால்-பிராரப்த கர்மங்களை அனுபவித்து முடிகிற வரையிலும்
போகத் தட்டு என் என்னில்-அதிகாரி விசேடத்தாலே அது வேண்டா-யாங்கனம் எனின்-
இவன் சரணாகதி-செய்த அளவிலே முக்தனாம் ஆகில்-இது தன்னை நச்சுப் பொய்கை போன்றதாக நினைத்து அஞ்சுவார்கள் –
அதனால் ஆள் பற்றாது
இனி அவனை இங்கே சில நாள் வைக்கவே-ஸ்ரீ வீடுமரைக் கொண்டு நாட்டுக்கு வெளிச் சிறப்பைச் செய்து கொடுத்தால் போலே
இவன் சிலருக்கு உபதேசித்தும்-இவனுடைய ஒழுக்கைத்தைக் கண்டு திருந்துவாருமாய்-இங்கனம் சில நன்மைகளும் காரணமாக இருக்கும்
இனித் தான் -இவனை நமக்கு தந்த சரீரம் அன்றோ -என்று-இறுதியாக இந்த சரீரத்தை ஈஸ்வரன் தானாக உபஷிக்கவும் மாட்டான்
சந்தாம் ச யாக் சந்ததே ப்ரஹ்மனைஷ ரமதே தஸ்மின் உத ஜீர்னே-சயாநேன ஏனம் ஜாஹாதி அஹ ஸூ பூர்வயேஷூ-யஜுர் வேதம் ஆருணம்
முதுமை அடைந்த இவன் சரீரத்தை விடாதவன் ஆகி-இறைவன் இச் சரீரத்தில் இன்புற்று வசிக்கிறான் -பிரமாணம்-சரம விமல திருமேனி -அன்றோ –
இது காறும் ஆர்த்த பிரபன்னன் விஷயமாக மூன்று விஷயங்களை அருளி-மேலே த்ருப்த பிரபன்னன் விஷயமாக ஒரு விஷயம் அடுளிச் செய்கிறார்-
இவன் தான் சரணாகதி செய்யும் காலத்தில்-இப்போதே இவ் உடல் நீங்கி உன் திருவடிகளை பெற வேண்டும் -என்னும் விரைவும்
இவனுக்கு உண்டாக காரணம் இல்லை
முகம் பழகினது ஆகையாலே -இச் சரீரத்தை விட -என்றால் கடுக இசையான் –
இனி வேறு ஒரு சரீரத்தை அடைதல் கர்ப்ப வாசம் செய்தல்-செய்யாது ஒழிய வேண்டும் என்னும் அளவாயிற்று இவனுக்கு உண்டாகில் உண்டாவது-
ஆகையாலே -தத் க்ரது-நியாயத்தாலே எங்கனம் நினைத்தானோ அங்கனமே பலித்தல் –அப்படியே பேறாக இருக்கும்
ஆகையால் இவனுடைய நினைவையும் நோக்கி-இவன் தான் இச் சரீரத்தில் ஆசை வைத்து இருந்தானே ஆகில் நாலு நாள் இருந்திடுவானுக்கு
என்று இருப்பன் சர்வேஸ்வரன் –
ஆனால்-இங்கு இருக்கிற நான்கு நாள்களும் ஆதி வியாதிகளுக்கு இடம் கொடாதபடி-
மற்றையோரைக் காட்டிலும் வேறுபாடு தோற்ற மிக உயர்ந்த இன்பத்தினை உடையவனாக-இவனை வையாது ஒழிவான் என் -என்ன
உலகத்து மக்களைப் போன்று ஒன்றனை இழந்த காலத்தில் துன்புற்றும்-விரும்பிய பொருள்களை பெற்ற காலத்தில் இன்புற்றும்
போரும்படிக்கு தகுதியாக வைக்கிறது என் -என்னில்
இவன் தன் சரீரத்தைப் போக்கி உன்னைத் தர வேண்டும்-என்றோ அன்றோ விரும்பியது
இச் சரீரம் தான் தண்ணியது என்று அறிந்து இருக்கச் செய்தேயும் விட மாட்டாது-இச் சரீரத்தில் இன்பத்தையே அனுபவிக்குமாறு வைக்கும் அன்று
இது தான் நன்றாய் இருந்ததாகில் ஈனனம் சில நாள் இச் சரீரமே தொடர்ந்து நமக்கு இருந்திடுக-என்று விரும்புவான் அன்றோ
இவனுடைய இச்சைக்கு ஈடாக வைக்கும் அன்று இன்னமும் ஒரு சரீரத்திலே இவனுக்கு ருசி உண்டாகவும் கூடுமே
ஆகையால்
இவனுடைய நலத்திலே நோக்கு உடையவனாய்-இவன் இருந்தபடி இருக்கிறான் என்று இருப்பான் இறைவன்
-ஆகையால் முகம் பழகின இச் சரீரம் தன்னடையே கழிய-இனி வேறு ஒரு சரீரத்திலே இவனுக்கு ருசி பிறப்பதற்கு முன்பே ஈஸ்வரனுக்கு
கார்யம் செய்து தலைக் கட்டலாய் இருக்கும்-
முகம் பழகின இச் சரீரம் தன்னடையே கழிந்து கொடு நிற்கும்-மேல் வரப் புகுகிறது அறியாமையாலே அச் சரீரத்திலே ருசி இல்லை
இது தான் பொல்லாதது என்று போலியாக அறிந்தும் வைக்குமே
இவன் முதலிலே இச் சரீரத்தை நீக்கி அருள வேணும் -என்று ஒரு வார்த்தை சொல்லி வைக்கையாலே
அவன் விரும்பாதது ஒன்றை செய்தானாகவும் சொல்ல ஒண்ணாதே அன்றோ –
விச்வாஸ ஆயாஸ பூம்நா -பக்திக்கு ஆயாசம் -பிரபத்திக்கு விச்வாஸம் -வேணுமே
அனுபவித்து -போகேனே அனுபவனே -பிராரப்த கர்மா முடிந்தால் மோக்ஷம் -முடிக்கும் பொறுப்பை பிரபன்னனுக்கு அவனே ஏறிட்டுக் கொள்கிறான் –
இனி
இறக்கும் நிலையிலே காஷ்ட பாஷானங்களைப் போலே இருப்பானே அன்றோ இவன் தானே-
ஆகையால் முதலில் சொன்ன வார்த்தையை கொண்டு இவன் விலக்க மாட்டாத அளவில்
ஈஸ்வரன் காரித்தைச் செய்து தலைக் கட்டுவான்-
தத தம் ம்ரியமானம்து காஷ்ட பாஷாண சந்நிபம்-அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம் கதம் -ஸ்ரீ வராக சரம ஸ்லோகம்
அறிவில்லாத பொருளைப் போன்று கிடக்கிறவன் தலையிலே ஒரு தேவை இடேன் –
நானே நினைக்கக் கடவேன் -என்று சொல்லி வைத்தானே அன்றோ –
இந்த இரண்டு ஸ்லோகங்களும் எம்பெருமானுடைய முழுச் செல்வம் -என்று சொல்லக் கடவது அன்றோ
மனஸி ஸ்திதே –
நின்றவா நில்லா நெஞ்சம் -பெரிய திருமொழி -1-1-4-ஓர் இடத்திலே நிற்பது-
பட்டி நின்று திரியும் பசு உடையவனுக்கு ஓர் கார்யத்தை செய்யத் தொடங்குவதற்கு முடியாதே அன்றோ –
மனத்தினைக் கொண்டு தொடங்க வேண்டும் அன்றோ புருஷார்த்தத்தை பெறும் போதும் –
சஞ்சலம் ஹி மன கிருஷ்ண பிரமாதி பலவத் த்ருடம்-தச்யாஹம் நிக்னஹம் மன்யே வயோரிவ ஸூ துஷ்கரம் -ஸ்ரீ கீதை -6-34-
காற்றினைப் போன்று அம் மனத்தினை அடக்குதல் எனபது செய்ய முடியாத கார்யம் என்று நான் நினைக்கிறேன்-என்றான் அன்றோ அவனும்

த்ருஷ்ட்வைவச ஊர்வசீம் ப்ராப்தாம் லஜ்ஜாவ்ருத விலோசன-பாதாபி வந்தனம் க்ருத்வா குரு பூஜாம் ப்ரயுக்த வான் -பாரதம் ஸ்லோகம்
-ஆரண்ய பர்வம் அர்ஜுனன் தவ நிலை சுருக்கும் -160-
உலகத்தார் ஊர்வசியின் உலகத்துக்கு செல்ல விரும்பி அதற்கு வேண்டிய சாதனங்களைச் செய்யா நிற்க
அந்த ஊர்வசியே வந்து கிட்டி நிற்க –
நீ என் தாயே அன்றோ -என்று கைகூப்பி வணங்கி கிடக்க வல்ல-விரக்தன் அன்றோ இவ் வார்த்தை சொல்கிறான்-
எந்தை பெயர் புனை யாயு எனும் பேர் முடி இறைவன்
தந்தைக்கு உயிர் நிகராகிய தளவத் திரு நகையாய்
கொந்து உற்றெழு குழலாய் குழல் நிகராகிய மொழியாய்
வந்துற்றது என என அன்னை மலர்த்தாள் களில் வீழ்ந்தான் –வில்லி புத்தூரார் செய்யுள்
ஸூஸ்வஸ்தே சரீரே –
வேறுபாட்டினை அடியைக் கூடியதான இந்த சரீரமும் ஒரு நிலையிலே நிற்பது
தாது சாம்யே ஸ்திதே –
அதற்கு உறுப்பாக தாதுக்களும் ஓன்று முடங்கி-ஓன்று நிமுருகை அன்றிக்கே இவை எல்லாம் சமமாய்
சரீரத்திலே ஒரு நொய்ம்மை பிறந்து-சத்துவம் தலை எடுத்த போதாக-நம்மை யாவன் ஒருவன்
ஸ்மர்த்தா –
நினைக்கிறான் -என்றது-நாம் யார் -சரீரம் ஆகிற இது அறிவில்லாத பொருளாய் இருந்தது –
சரீரத்துக்கு வேறு பட்டதாய் ஒரு ஆத்மா உண்டு-அவ்வாத்மாவானது ஈஸ்வரனுக்கு அடிமைப் பட்ட பொருள்-
சர்வேஸ்வரனைப் பெறுதல் இவ்வாத்மாவுக்கு மோஷம் ஆகிறது -என்று நினைக்கிறவன் -என்றபடி –
விஸ்வ ரூபஞ்ச மாம் –
குடல் தொடக்கத்தால் முள் பாய்ந்தால் வரும் துன்பம் ஆத்துமாவினது ஆமாறு போலே-
இவற்றுக்கு வந்த இன்ப துன்பங்கள் தனக்கு வந்தனவாம்படி-
எல்லா வற்றையும் சரீரமாக உடையனாய் இருக்கிற என்னை –
அஜம் –
இவனைப் போன்று பிறவி காரணமான கலக்கம் இன்றிக்கே இருக்கை அன்றோ –
விஸ்வ ரூபஞ்ச மாம் -அஜம் –
நாராயணன்-ஸ்வாமித்வம் சௌலப்யம் வாத்சல்யம் சௌசீல்யம்
அஜம் -ஞான சக்தியாதிகள் –
தத
ஆகையாலே
தம் காஷ்ட பாஷாண சந்நிபம் ம்ரியமாணம் அஹம் ஸ்மராமி
நடையாடித் திரியும் அன்று இவனுக்கும் உண்டே அன்றோ இந் நினைவு-
அறிவில்லாத பொருளைப் போன்று கிடந்த அன்றும்-இவன் நினைதிலன் -என்ற தேவை இடாதே-
நான் அவனை எப்போதே நினைத்தபடி நிற்பன்-
மத் பக்தம் –
அடைகொடு பாழ் பொகடுமவனையோ அவன் பற்றிற்று -என்றது –
பல நாள்கள் பச்சை இடுவித்துக் கொண்டு-காரிய காலத்தில் வந்தவாறே-
பச்சை இடாத நாள்களை எண்ணி-அகற்றுமவனையோ பற்றிற்று -என்றது-
நயாமி பரமாம் கதிம் –
கள்வன் கொல் -பெரிய திருமொழி – 7-7-1-பிராட்டியை-அத்வாளத்தலையை-முந்தானையின் தலையில் -இட்டு
மறைத்து கொடு போனால் போலே-தானே கையைப் பிடித்து கொடு போமாயிற்று -என்றது
ஆதி வாஹிகரை வரக் காட்டி யாதல்-பெரிய திருவடியை வரக் காட்டி யாதல்-கொடு போகை அன்றிக்கே
ஆதி வாஹிகரில் முதன்மையான தானே கொடு போம் -என்றபடி –

சரண்ய முகுந்தவம் உத்பலா வதகத்திலே பிரசித்தம் -சூர்ணிகை -181-

மற்று ஓன்று -என்றும்-கண்ணன் அல்லால் -என்றும்-வைகல் வாழ்தலான சித்த உபாயம் –
அதில் துர்பல புத்திகளுக்கு
மாலை நண்ணி-காலை மாலை-விண்டு தேனை மலரிட்டு-அன்பராம் சாங்க பக்தி –
அதில் அசக்தருக்கு-தாள் அடையும் பிரபத்தி –
அதில் அசக்தருக்கு-உச்சாரண மாத்ரம்-
சர்வ உபாய ஸூன்யருக்கு -இப்பத்தும் பாடியிடும் தண்டன் -என்று
கீதாச்சார்யனைப் போலே-அதிகார அனுகுணம் நெறி எல்லாம் உரைக்கிறார் -என்று இறே
ஆச்சார்ய ஹிருதயத்தில் நாயனாரும் அருளிச் செய்தது-சூர்ணிகை –227-

உத்பல -மாம்சத்தில் விருப்பம் இல்லா ரிஷிகள் -விமானம் -சரண்ய முகுந்தத்வம் -காட்டி அருள
-பர உபதேசம் பண்ணி -அழுகை நின்றால் உடனே உபதேசிப்பாரே –
முதல் 4 பாசுரங்கள் பக்தி பாரமாக
மேலே பிரபத்தி பாரமாக -5 பாசுரம் –
மேலே -திவ்ய தேசம் சொன்னாலே போதும் -மூன்று நிலைகள் –
ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன் -ஆகதோ மதுராம் புரிம்-தனி ஸ்லோக வியாக்யானம் –
ஏஷ -ஸவ்ரி -/நாராயண ஸவ்ரி /ஸ்ரீ மான் ஸவ்ரி -இப்படி ஒவ் ஒன்றும் -கீழை வீடு திருக் கண்ண புரம் -திருமங்கை ஆழ்வாரை பாடுவித்த முக்கோட்டை –
ஆனந்தமாக ஆழ்வார் அருளிச் செய்யும் திருவாய் மொழி -இது –
நீல மேகப் பெருமாள் மூலவர் -புண்டரீக விசாலாக்ஷம் -சரஸ் சந்த்ர ஆனணம்-நீலாத்ரி -நீல மலை போலே
மலை இலங்கு தோள் நான்கே-கருவரை போலே நின்றானை கண்ண புரத் தம்மானை கண்டாள் கொலோ
பதமினி தாயார் -திருக் கல்யாணம் –
பிரயோக சக்கரம் மூலவர் –
சர்வாங்க ஸூ ந்தரன் -அழகியான -திரு நாக்கை ஸூ உத்தர பெருமாள் -அச்சோ ஒரு அழகிய வா -சமுதாய சோபை –
ஸவ்ரி அழகால் இவர் ஈர்ப்பார்
உபரி சரவசூ அரசன் வேட்டை -ரிஷிகள் -சாமைக் கதிர் போலே இளைத்து -இருக்க -16 வயசு பாலகனாய் வந்து -ரக்ஷிக்க
பக்தர்களை காக்க -அவனை அனுக்ரஹித்து -அவன் ஏழு மதிள்கள் இருந்த -வேலை மோதும் மதிள் -அலைகள் வீசா நிற்கும்
திருமலை ராயன் பட்டணம் -மாசி மகம் தீர்த்தவாரி -பல்லக்கில் -மாப்பிள்ளை ஸ்வாமி –
பெற்றக்கால் அவன் ஆகம் பெண் பிறந்தார் -கொற்றப் புள் ஒன்று ஏறி மன்னூடே வருகின்றான்
திருக்கைகள் மேலே -யதாஸ் ஸ்தானம் -இங்கு ஒரு திருவடி மேலும் ஒன்றும் கீழும் பரம பதன் போலே சேவை –
அரையர் -சோழ மன்னன் மதிள்களை இடிக்க -கையில் வில் பொம்மையா -சிலை இலங்கு பொன் ஆழி–தாளம் வீசி திரு முகம் நெற்றியில் வடு –
மயங்கினேன் பாசுர இனிமையால் -அம்பு பொழிந்து ரக்ஷித்தான்
அம்மாவாசை திருக் கைத் தல சேவை -கண்ண புரத்தமுதே என் அவலம் களைவாய் –
ராஜா ஒத்தக்க குழை -காதில் அழகிய மணி சூடி -நாஞ்சிலும் ஒரு பாடு இலக-
ராம சந்நிதியில் கண்ணன் சேவை -பஞ்ச கிருஷ்ண க்ஷேத்ரம் -தண்டக மகரிஷிக்கு சேவை -முனியதரையர் பொங்கல் பிரசித்தம்-
அரசன் புத்ர காமோஷடி யாகம் -சுமதி -ராணி உபரி வசூ ராஜா -பதமினி தாயார் -தானம் பெரும் ஹஸ்தம் -64 சதுர் யுகம் கண்ட பெருமாள் –

பத்தாம் திருவாய் மொழியில் கீழே ப்ராப்ய ஆர்த்தராய்க் கூப்பிட்டவர்க்கு ஈஸ்வரன் அர்ச்சாவதார ஸூலபனாய்க் கொண்டு
திருக் கண்ணபுரத்திலே நிற்கிற நிலையைக் காட்டி இவருடைய ஆர்த்தியை சாமிப்பித்த இவ்வாபத் ஸகத்வத்திலே ஸந்துஷ்டாராய்
வடதள ஸாயித்தவ மஹா உபகாரத்வத்தையும்
வஸ்த்வய தேச வைலக்ஷண்யத்தையும்
விலக்ஷண விபூதி யோகத்தையும்
அதிசயித்த போக்யத்வத்தையும்
பரமபத பிரதத்வத்தையும்
அனுகூல விரோதி நிராசைக்காதவத்தையும்
அநந்ய ப்ரயோஜன ஸூலபதையையும்
சம்சார நிவர்த்தகத்வத்தையும்
காரணத்வத்தையும்
ஸ்ரீ யாபதித்தவத்தையும்
அனுசந்தித்து -ஏவம் பிரகார விசிஷ்டானாய்க் கொண்டு ஆஸ்ரயண ஸ்தலத்தில் அடிமை கொள்வதாக நிற்கிற
கைங்கர்ய பிரதி சம்பந்திவத்தையும் அனுசந்தித்து அத்யந்த ஹ்ருஷ்டராய் –
பக்தி பரராயும் பிரபத்தி பரராயும் யுக்தி பரராயும் அவனை
ஆஸ்ரயித்தும் அனுபவித்தும் அவன் திருவடிகளில் கைங்கர்யம் பண்ணியும்
நிவ்ருத்த சாம்சாரிக சகல கிலேசராய்க் கொண்டு வர்த்தியுங்கோள்-என்று
அவனுடைய கிஞ்சித்க்கார பிரதி சம்பந்தவத்தால் வந்த பல ரூபத்தை ப்ரதிபாதித்து நிகமிக்கிறார் –

——————

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

சடாரி நவமே சதகே பரோபதேசம் ஆத்யே சதகே
தத் சேஷத்வ அனுபவ சம்மதி சம்மதேந நிச்சித்ய
தம் ஈசன் சர்வவித பந்து தயா நிச்சித்ய
தம் ஈசன் ஆபத்சகம் பிரணமத இதி பரோபதேசம் –

நிச்சயம் பண்ணி -பற்றுமின் -அனைவர் இடம் கொள்ளும் பிரியத்துடன் இவனை -பற்றுமின்
மாதா பிதா -சர்வம் –குலபதே-

———

பந்துத்வ ஸ்வம் அனுகம்பிதம் வந்தும் ஆதவ்
ஆஸன்ன தாமினி புஜகாதி பத்வ சயானாம்
ஸூ அபேக்ஷிதம் முனி அயாச்சத தம் த்வதீய
தஸ்ய ஏக ரூபா சயனேபி துக்கிதோ பூத் –

பந்துத்வ ஸ்வம் அனுகம்பிதம் வந்தும் ஆதவ்-பண்டை யுறவான பரனை
ஆஸன்ன தாமினி புஜகாதி பத்வ சயானாம் -புளிங்குடிக்கே கண்டு
ஸூ அபேக்ஷிதம் முனி அயாச்சத -எல்லா வுறவின் காரியமும் பிரார்த்தித்து -ஆய -அர்த்தம் -கைங்கர்யம் –

———–

நாராயணே-அனுபவ பூவ நிஜ சீலவத்தாம்
நிரவத்யம் ஆவிஷ்க்ருதாம் மை நாராயணே சதி
ஸூ பரார்த்த சிந்த்தா தவ நார்ஹா
இது பஹுமான பாஜா விபு நா நார்ஹா தவ

நான் நாராயணனாக இருக்கும் போது கவலை பட வேண்டாமே –
உபாயம் உபேயம் வத்சலன் வியாபகம் ஸ்வாமி
ரஷா பரம் உமக்கு பொருந்தாதே –
நாம் இரந்து கொடுப்போம் மணக்கால் நம்பி போலே –

——–

தஸ்ய க்ருபா கடாக்ஷம் ஈசன் அத்ராக்ஷம்
சீலாதி கஸ் ஸ்ரீ யம் உரஸ்தல ததானோபி
அதி மாத்ர சிதில லப்பியா தஸ்ய
கிருபா கடாக்ஷம் ப்ரஜஹர்ஷ

———-

துக்கேன துஸ்ஸஹ தமம் ஆஸன்ன ஹானி கதயா
ஆலோக நஞ்ச -தத் அசாஸுஷம் இதை யதார்த்தம்
தத் சரண ஹிந்து பதார்த்த ஜாதம்
ஆஸன்ன ஹானி கதயா அவசித்தா ஸூ கத்யா-

———–

சுவஸ்தி யாத்மா ஸ்வயம் அர்த்தயித்வா
ஸ்வம் ப்ராப்யா ஹர்ஷ விவஸ்த்யா
ஹரி அதஸ்தாத் எச் சீலம் அன்வயம் ததேவ தேவாதி
அநு ஸ்ம்ருதியா திருத்த மனகா வியாஸனே ஷஷ்ட்யயே

ஹரி அதஸ்தாத் -தாழ விட்டுக் கொண்டு

—————

ஸ்ரீயம் வியோகி ஜனம் ஹந்த்ரு நிஜ ஆபீ ரூப்யம்
விஸ்ம்ருத்ய ஸம்ஸ்ருதியா ஜனகி
அர்ச்சா ஹரே கொசன தத் பிரதி போதனாயா
தூதி சக்கர விகதான்

——–

பவ்மம் தேவி சுஷாக காமபி தேச விசேஷ யாராத்
யாவது யாயாம் கதம் இதி அவதி
தூத வாக்யாத் தாவத் விளம்பம் அஸஹன்ன
முனி ஈசே ஜிஹமிஷத்

———–

ஸூ பிராப்தி காலம் அவிபாவயதி
இந்திரேஸ் ரமேஸ்-கிருஷ்னே கவாம்
சாயம்விசமாகமம் விளம்பிநீ
ஸ்ப்ருதே சடாரி

——

பிராப்தி பிரதான சமயோயம் பிரகாசஸ்ய
அந்நிய உபதேசம் ஹர்ஷத் ஈசன் யதா சாதனம்
ஆஸ்ரயத இதி மஹதி கிருஷ்ண புரி
வசந்தம் ஈசன் தசமே முனிந்தரே –

——

ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்-

ஆபத் பந்துத்வ கீர்த்தியாகபீந்த்ரே திருட மதி ஜனநாத்
தைத்யா நாஸாத் பூமவ் ஜாதத்வாத்
பந்தோ கிருஷ்ணஸ்ய பாதாஸ்ரயா நம் இதை விணோ நோஸஹாயம்
ரஷா சாமர்த்தியம்

1–ஆபத் பந்துத்வ கீர்த்தியா-கொண்ட பெண்டிர் மக்கள் உற்றார் சுற்றத்தவர் பிறரும் கண்டதோடு பட்டது அல்லால் காதல் மற்று யாதும் இல்லை

2-கபீந்த்ரே திருட மதி ஜனநாத் –எம் கார் முகிலை புணை என்று உய்யப் போகல் அல்லால் இல்லை கண்டீர் பொருளே

3-10-தைத்யா நாஸாத் பூமவ் ஜாதத்வாத் -உத்தர மதுரா புரிம் —
வடமதுரைப் பிறந்தார்க்கு அருள் கொள் ஆளாய் யுய்யல் அல்லால் இல்லை கண்டீர் அரணே-என்றும்
வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே சரண் என்று உய்யப் போகல் அல்லால் இல்லை கண்டீர் சதிரே–என்றும்
வடமதுரைப் பிறந்தார்க்கு எதர் கொள் ஆளாய் யுய்யல் அல்லால் இல்லை கண்டீர் இன்பமே-என்றும்
வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே சொல்லி யுப்பப் போக வல்லால் மற்று ஓன்று இல்லை சுருக்கே–என்றும் –
வடமதுரைப் பிறந்தான் குற்றமில் சீர் கற்று வைகல் வாழ்தல் கண்டீர் குணமே-என்றும்
வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே வீழ் துணையாப் போமிதனில் யாதுமில்லை மிக்கதே–என்றும்
வடமதுரைப் பிறந்த தாதுசேர் தோள் கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரணே–என்றும்

அஷ்டாக்ஷர – பந்தோ கிருஷ்ணஸ்ய பாதாஸ்ரயா நம் இதை விணோ நோஸஹாயம்
ரஷா சாமர்த்தியம் -மற்றவர்க்கு இல்லை -கண்ணன் அல்லால் இல்லை –

கண்ணனே சரண் -முதல் ஆழ்வார் –
கண்ணன் அல்லால் இல்லை -திரு மழிசை ஆழ்வார்
நம் கண்ணன் கண் அல்லது மற்று ஓர் கண் இல்லையே -நம் ஆழ்வார் சேர்த்து அருளிச் செய்கிறார்

——

லஷ்மீ சம்பந்த பூம்னா மித தரணி தயா பத்ம நேத்ரத்வ யோகாத்
ஸ்திதியா ஸ்வைகி சரித்தரைத்தி ஸூ ஹ்ருத் அபஹரணாத்
ஸ்ரீ கஜேந்த்ர அவதாச்சிய தாரக்ஷ்யாம்சவ் அதிருஹ்ய அரி கண நிரஸனாத்
தேவ துஷ் பிரபாவாத் துஷ் கர்ம உன்மூலநத்வாத் ஸூ சிர ஹ்ருதத்தாயா மாதவா சேதியைதி –

1–லஷ்மீ சம்பந்த பூம்னா–பண்டை நாளாலே நின் திரு வருளும் பங்கயத்தாள் திருவருளும்
கொண்டு நின் கோயில் சீய்த்துப் பல்படிகால் குடி குடி வழி வந்து ஆள் செய்யும் தொண்டரோர்க்கு

2–மித தரணி தயா–நீ யொருநாள் படிக்களவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே தலைக்கணியாய்

3–பத்ம நேத்ரத்வ யோகாத்–தொண்டரோர்க்கு அருளி தடம் கொள் தாமரைக் கண் விழித்து
நீ எழுந்து உன் தாமரை மங்கையும் நீயும் இடம் கொள் மூ வுலகும் தொழ விருந்து அருளாய்

4-ஸ்திதியா ஸ்வைகி சரித்தரைத்தி ஸூ ஹ்ருத் -அபஹரணாத்-நளிர்ந்த சீர் உலகம் மூன்றுடன் வியப்ப
நாங்கள் கூத்தாடி நின்று ஆர்ப்பப் பளிங்கு நீர் முகிலின் பவளம் போல் கனி வாய் சிவப்ப நீ காண வாராயே–

5–ஸ்ரீ கஜேந்த்ர அவதாச்சிய–கவள மாக் களிற்றின் இடர் கெடத் தடத்துக் காய்சினப் பறவை ஊர்ந்தானே

6-தாரக்ஷ்யாம்சவ் அதிருஹ்ய அரி கண நிரஸனாத்–காய்ச்சினப் பறவை யூர்ந்து பொன்மலையின் மீமிசைக் கார்முகில் போல்
மாசின மாலி மாலிமான் என்று அங்கவர் படக் கனன்று முன்னின்ற காய்சின வேந்தே கதிர் முடியானே

7-தேவ துஷ் பிரபாவாத்- துஷ் கர்ம உன்மூலநத்வாத்-எம்மிடர் கடிந்து இங்கு என்னை யாள்வானே இமையவர் தமக்கும் ஆங்கனையாய்

8-9-10–ஸூ சிர ஹ்ருதத்தாயா மாதவா சேதியைதி –எங்கள் கண் முகப்பே யுலகர்கள் எல்லாம் இணை யடி தொழுது எழுது இறைஞ்சி
தங்கள் அன்பாரத் தமது சொல் வலத்தால் தலைச் தலைச் சிறந்து பூசிப்ப–என்றும்
வடி விணை யில்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியை கொடு வினையேனும் பிடிக்க நீ யொருநாள்
கூவுதல் வருதல் செய்யாயே–என்றும்

——-

ந ஏக சீல ரத்நாகரம் அச்வ ந ஏக ஸ்ரீ நாம வாத்வாத் –
ஏக -ந ஏக -அப்ரதிமஸ்ய ஸ்வ பாவம் ஜகத் உதய ஸூ ஸம்ஸ்தானத்தியை
ஹரித்வாத் தானாத் மோக்ஷஸ்ய ஹேய பிரதிபட கடக ஸ்ரேணி சம்பாதிமத்வத்
பிரகலாத ஆஹ்லாதகத்வாத் விருக்ஷ கிரி கடகே சன்னிஹிதத்வாத் சர்வா தேகே ஸ்வ அங்கதானாத் –

1–ந ஏக–ஓர் ஆயிரமாய் உலகு ஏழ் அளிக்கும் பேர் ஆயிரம் கொண்டது ஓர் பீடு உடையன்

2-சீல ரத்நாகரம் -ரத்னங்களுக்கு இருப்பிடம் -கடல் –அவனே யவனும் அவனுமவனும்
அவனே மற்று எல்லாமும் அறிந்தனமே-சமுத்திரைவ காம்பீர்யம் -சீலம் ஒன்றே இருக்கும் –

3–ந ஏக ஸ்ரீ நாம வாத்வாத் –ஏக -ந ஏக -அப்ரதிமஸ்ய ஸ்வ பாவம் -அ சித்தும் சித்தும் -உண்டு –
விசிஷ்டாத்வைத சித்தாந்தம் சொல்லும் திரு நாமங்கள் –

4–ஜகத் உதய ஸூ ஸம்ஸ்தானத்தியை ஹரித்வாத்–அறிந்தனர் எல்லாம் அரியை வணங்கி
அறிந்தனர் நோய்கள் அறுக்கும் மருந்தே -பாபங்கள் ஹரிப்பவன் மருந்து–என்றும்
மருந்தே நங்கள் போக மகிழ்ச்சிக்கு என்று பெரும் தேவர் குழாங்கள் பிதற்றும் பிரான்-என்றும்

5–தானாத் மோக்ஷஸ்ய–கருந்தேவன் எம்மான் கண்ணன் விண்ணுலகம் தருந்தேவனை சோரேல் கண்டாய் மனமே

6-ஹேய பிரதிபட -நிகர் அற்றவன் -அடையாளங்கள் இரண்டிலும் –புனமேவிய பூந்தண் துழாய் அலங்கல் இனமேதும் இலானை அடைவதுமே-

7-கடக ஸ்ரேணி சம்பாதிமத்வத்–கடைவதும் கடலுள் அமுதம் என் மனம் உடைவதும் அவற்கே யொருங்காகவே

8-பிரகலாத ஆஹ்லாதகத்வாத் -குளிர்ச்சி கொடுத்த பலன் –ஆகம் சேர் நரசிங்கமதாகி ஓர் ஆகம் வள்ளுகிரால் பிளந்தான்-அநிஷ்ட நிவாரணம் பாசுரத்தில் –

9-10-விருக்ஷ கிரி கடகே சன்னிஹிதத்வாத் —நின்ற வேங்கடம் நீணிலத் துள்ளத்து சென்று தேவர்கள் கை தொழுவார்களே–என்றும் –
பழுதில் தொல் புகழ்ப் பாம்பணைப் பள்ளியாய் தழுவுமாறு அறியேன் உன தாள்களே-என்றும் –
பாம்பணை பள்ளி -வேங்கடம் ஆதி சேஷன் சேர்த்து

சர்வா தேகே ஸ்வ அங்கதானாத் –தாள தாமரையான் உனதுந்தியான் வாள் கொள் நீள் மழு வாளி உன்னாகத்தான்–

——–

லஷ்மீ வக்ஷஸ்தல பாவாத் ஸ்வ ஜன சுலபதா பர்வத உத்தாரானோ
துர்யாஞ்ஞாம் அகில பதிதயா நாகி நாம் வ்ருத்த பாவாத்
சுவேஷம் ஹ்ருத் வாசிதவ்யா ஸூ ஜன வசதியா
தத்ரஜா அதி பூம்னா ஸூ ஸ்வஸ் ஸ்வாமித் வாதி பந்த்வாத்–

1–லஷ்மீ வக்ஷஸ்தல பாவாத்–மையார் கருங்கண்ணி கமல மலர்மேல் செய்யாள் திரு மார்வினில் சேர் திருமாலே

2-ஸ்வ ஜன சுலபதா–விண்ணோர் முனிவர்க்கு என்றும் காண்பு அரியாயை நண்ணாது ஒழியேன் என்று நான் அழைப்பேனே

3-பர்வத உத்தாரானோ –மழைக்கு அன்று குன்றம் எடுத்து ஆநிரை காத்தாய்

4-துர்யாஞ்ஞாம்–வானவர் தானவர்க்கு என்றும் அறிவது அரிய அரியாய அம்மானே

5–அகில பதிதயா–அரியாய அம்மானை அமரர் பிரானைப் பெரியானைப் பிரமனை முன் படைத்தானை

6–நாகி நாம் வ்ருத்த பாவாத்–தேவர்கட்கு எல்லாம் விருத்தா விளங்கும் சுடர் சோதி உயரத்து ஒருத்தா

7–சுவேஷம் ஹ்ருத் வாசிதவ்யா–என்னுள்ளத்து அகம்பால் அகந்தான் அமர்ந்தே யிடங்கொண்ட வமலா

8–ஸூ ஜன வசதியா–எல்லாப் பொருட்கும் அருவாகிய வாதியைத் தேவர்கட்கு எல்லாம் கருவாகிய கண்ணனை

9–தத்ரஜா அதி பூம்னா–அண்டத்து அமரர் பெருமான்

10-ஸூ ஸ்வஸ் ஸ்வாமித் வாதி பந்த்வாத்–அடியான் இவன் என்று எனக்கு ஆர் அருள் செய்யும்
நெடியானை நிறை புகழ் அம் சிறைப் புள்ளின் கொடியானைக் குன்றாமல் உலகம் அளந்த
அடியானை அடைந்து அடியேன் உய்ந்தவாறே-

——-

பிராணத்வாத் அத்புதத்வாதி ஸூ விதித்வேன
பவ்யத்ய யோகாத் லஷ்மீ வஷஸ்த்தஸ்ய யோகாத் ரகு குல ஜனநாத்
நீல ரத்நாபி மூர்த்தியாத் கிருஷ்ணத்வாத் பரம பதி தயா
ச ஈஸ்வரீம் ஸம்ஸராயத்தயாம் குண சுமாராகம் சர்வ தர்சி –

1–பிராணத்வாத்–என்னுயிர் கூவிக் கொடுப்பார்க்கும் இத்தனை வேண்டுமோ

2-அத்புதத்வாதி–வித்தகன் கோவிந்தன் மெய்யன் அல்லன் ஒருவர்க்கும் அத்தனை ஆம் இனி என் உயிர் அவன் கையதே

3–ஸூ விதித்வேன-தவம் செய்தில்லா வினையாட்டியேன் உயிர் இங்கு உண்டோ எவன் சொல்லி நிற்றும் நும் ஏங்கு கூக்குரல் கேட்டுமே

4-பவ்யத்ய யோகாத்–வாக்கும் மனமும் கருமமும் நமக்கு ஆங்கு அதே ஆக்கையும் ஆவியும் அந்தரம் நின்று உழலுமே

5–லஷ்மீ வஷஸ்த்தஸ்ய யோகாத்–இந்திர ஞாலங்கள் காட்டி இவ் ஏழ் உலகும் கொண்ட நம் திரு மார்வன் நம் ஆவி உண்ண நன்கு எண்ணினான்–

6–ரகு குல ஜனநாத்–என் ஆர் உயிர்க் காகுத்தன் நின் செய்ய வாய் ஒக்கும் வாயன் கண்ணன் கை காலினன் நின் பசுஞ்சாம நிறத்தன்

7-நீல ரத்நாபி மூர்த்தியாத்–வாட்டமில் என் கரு மாணிக்கம் கண்ணன் மாயன்

8—கிருஷ்ணத்வாத்–கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர்

9–பரம பதி தயா–தண் பெரு நீர்த் தடம் தாமரை மலர்ந்தால் ஒக்கும் கண் பெரும் கண்ணன் நம் ஆவி உண்டு எழ நண்ணினான்

10-ச ஈஸ்வரீம் ஸம்ஸராயத்தயாம்–எழ நண்ணி நாமும் நம் வான நாடனோடு ஒன்றினோம்

குண சுமாராகம்
சர்வ தர்சி –

——

கம்ச ஜேதா-சடஜித் ஆச்சர்ய ஏகான் அகில பதிதயா
அந்தராத்மத்வ பூம்னா சக்தத்த்வ பூம்னா ஜலதய தனுதயா
பவ்யதா ஆகர்ஷத்வாத் உதார தேகியே-பாவ ப்ருதாம்
ரக்ஷசனாம் தீவ்ர சங்த்காத் விஸ்மர்த்தும் –

கம்ச ஜேதா-சடஜித் -கம்சனை வென்றவரை சடத்தை வென்றவர் –
1-ஆச்சர்ய ஏகான்—திருக் காட்கரை மருவிய மாயன் தன் மாயம் நினைதொறே

2-அகில பதிதயா—நினைதொறும் சொல்லும் தொறும் நெஞ்சு இடிந்து உகும் வினை கொள் சீர் பாடிலும் வேம் எனது ஆர் உயிர்

3-அந்தராத்மத்வ பூம்னா–நீர்மையால் நெஞ்சம் வஞ்சித்துப் புகுந்து என்னை ஈர்மை செய்து என் உயிராய் என் உயிர் உண்டான்

4-சக்தத்த்வ பூம்னா–அறிகிலேன் தன்னுள் அனைத்து உலகும் நிற்க நெறிமையால் தானும் அவற்றுள் நிற்கும் பிரான்

5-ஜலதய தனுதயா–திருவருள் செய்பவன் போல என் உள் புகுந்து உருவமும் ஓர் ஆர் உயிரும் உடனே உண்டான்

6-பவ்யதா ஆகர்ஷத்வாத்–எம் கண்ணன் கள்வம் எனக்குச் செம்மாய் நிற்கும் அம் கண்ணன் உண்ட என் ஆர் உயிர்க்கோது இது

7/8/9/-உதார தேகியே-பாவ ப்ருதாம் ரக்ஷசனாம் –ஆட் கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மாயனால்
கோட் குறை பட்டது என் ஆர் உயிர் கோள் உண்டே–என்றும்
காள நீர் மேகம் தென் காட் கரை என் அப்பற்குஆள் அன்றே பட்டது என் ஆர் உயிர் பட்டதே–என்றும்
ஆர் உயிர் பட்டது எனது உயிர் பட்டது பேர் இதழ்த் தாமரைக் கண் கனிவாயது ஓர் கார் எழில் மேகம்-என்றும்

தீவ்ர சங்த்காத் விஸ்மர்த்தும் –ஆர்வுற்ற என்னை ஒழிய என்னில் முன்னம் பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான்
கார் ஒக்கும் காட் கரை அப்பன் கடியனே

——

ரம்யத்வாத் ஸ்ரீ துளஸ்யா ஆஸ்ரித ஜன சரித்ரத்த வேன
பத்மாஷரா தாயா ஸ்வாமித்வத்த சத் பரஞ்சோதி கர்த்தநதகா
ஸ்ரீ தரத்வ அதி கீர்த்தயா அசதி புஷப சியாமளா
ரத சரண முககா ஸுரே ஸ்ரீ மான் சடாரி கடக முக

1–ரம்யத்வாத் -ஸ்ரீ துளஸ்யா–கொங்கார் பூம் துழாய் முடி எம் குடக் கூத்தர்க்கு என் தூதாய்

2–ஆஸ்ரித ஜன சரித்ரத்த வேன–நுமரோடும் பிரியாதே நீரும் நும் சேவலுமாய்
அமர் காதல் குருகினங்காள் அணி மூழிக் களத்து உறையும்

3-பத்மாஷரா தாயா–செக்கமலத்து அலர்போலும் கண் கை கால் செங்கனி வாய்
அக்கமலத்து இலைபோலும் திரு மேனி அடிகளுக்கே

4-ஸ்வாமித்வத்த–திருமேனி அடிகளுக்குத் தீ வினையேன் விடு தூதாய்

5-சத் பரஞ்சோதி கர்த்தநதகா–திரு மூழிக் களத்து உறையும் ஒண் சுடர்குத் தெளிவிசும்பு திரு நாடாத்
தீ வினையேன் மனத்து உறையும் துளிவார்கள் குழலார்க்கு என் தூதுரைத்தல் செப்புமினே

6–ஸ்ரீ தரத்வ–மூழிக் களத்து உறையும் மாதரைத் தம் மார்பகத்தே-வைத்தார்க்கு

7–அதி கீர்த்தயா–படர் புகழான் திரு மூழிக்-களத்து உறையும் பங்கயக் கண் சுடர் பவள வாயனைக் கண்டு

8-அசதி புஷப சியாமளா–திரு மூழிக் களத்து உறையும் புனக்கொள் காயாமேனிப்-பூந்துழாய் முடியார்க்கே

9-10–ரத சரண முககா–பூந்துழாய் முடியார்க்கு பொன் ஆழிக் கையார்க்கு ஏந்து நீர் இளங்குருகே திரு மூழிக் களத்தார்க்கு
ஒழிவின்றித் திரு மூழிக் களத்து உறையும் ஒண் சுடரை ஒழிவில்லா அணி மழலைக் கிளி மொழியாள் அலற்றிய சொல்

ஸுரே ஸ்ரீ மான் சடாரி கடக முக

——

வல்லி மத்யத்வ யோகாதி அபி அபி ச ஸ்ரீ வாசோ வாஸ்ய பாவாத்
பூமியாத் ஐஸ்வர்யா யோகாத் அவதரண தசா
ஸூ பத்ரு சந்தான த்ருத த்வாத சு போத பரதம்
துரித ஹரணம் சமா சன்ன பாவாத் லஷ்மயா ஸ்ரீ ஈசன் நாதன் –

1–வல்லி மத்யத்வ யோகாதி அபி -2 பாசுரம் –கொடி ஏர் இடைக் கோகன கத்தவள் கேள்வன்
வடி வேல் தடம் கண் மடப்பின்னை மணாளன்-

2–அபி ச ஸ்ரீ வாசோ வாஸ்ய பாவாத் -3 பாசுரம் -எவைகோல் அணுகப் பெரும் நாள் என்று எப்போதும்
கவை யில் மனம் இன்றி கண்ணீர்கள் கலுழ்வன்-

3–பூமியாத் ஐஸ்வர்யா யோகாத்–நீளார் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்
வாளேய் தடம் கண் மடப்பின்னை மணாளா-

4–அவதரண தசா ஸூ பத்ரு சந்தான த்ருத த்வாத–மணாளன் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும்
கண்ணாளன் உலகத்து உயிர் தேவர்கட்கு எல்லாம் விண்ணாளன்–

5–சு போத பரதம்–வண்டு ஆர் மலர்ச் சோலைகள் சூழ் திருநாவாய்
கொண்டே உறைகின்ற எம் கோவலர் கோவே

6–துரித ஹரணம் -1 பாசுரம் –வெறித் தண் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்
குறுக்கும் வகை உண்டு கொலோ கொடியேற்கே-

6–சமா சன்ன பாவாத்–வண்டு ஆர் மலர்ச் சோலைகள் சூழ் திருநாவாய்
கொண்டே உறைகின்ற எம் கோவலர் கோவே

7-8-9-10–லஷ்மயா ஸ்ரீ ஈசன் நாதன் –கோவாகிய மாவலியை நிலம் கொண்டாய் தேவா சுரம் செற்றவனே திருமாலே–என்றும்
அருள் செய்து அடியேனைப் பொருளாக்கி உன் பொன்னடிக் கீழ் புக வைப்பாய்-என்றும்
மூவர் முதல்வன் ஒரு மூ உலகு ஆளி தேவன் விரும்பி உறையும் திரு நாவாய்-என்றும்
அந்தோ அணுகப் பெரு நாள் என்று எப்போதும் சிந்தை கலங்கி திருமால் என்று அழைப்பன்-என்றும்

———

பத்மாக்ஷத்வாத் ஜகத் அவதரணத்தயா பவ்யாத்யை
சார க்ராஹ்யத்வாத் வேணு நாதையைகி கிருஷி ஜனதயா
அஜாதேயே ஸ்வாங்கத்வாத் ஸ்யாமளத்வாத்
கவ்விய சோரத்வாத் வசன அவலோகநா-சரஸசேஷ்டத்வ பூம்னா

1–பத்மாக்ஷத்வாத்–அல்லி அம் தாமரைக் கண்ணன் எம்மான் ஆயர்கள் ஏறு அரி ஏறு எம் மாயோன்

2–ஜகத் அவதரணத்தயா–அகலிடம் படைத்து இடந்து உண்டு உழிந்து அளந்து எங்கும் அளிக்கின்ற வாயன் மாயோன்

3–பவ்யாத்யை-கண்ணன் கள்வன் தனி இளம் சிங்கம் எம்மாயன் வாரான் தாமரைக் கண்ணும் செவ்வாயும் நீலப்
பணி இரும் குழல்களும் நான்கு தோளும் பாவியேன் மனத்தே நின்று ஈருமாலோ

4–சார க்ராஹ்யத்வாத்–தூவியம் புள்ளுடைத் தெய்வ வண்டுதைத்த எம் பெண்மை யம் பூவி தாலோ

5–வேணு நாதையைகி கிருஷி ஜனதயா–யாமுடை ஆயன் தன் மனம் கல்லாலோ அவுனுடைத் தீங்குழல் ஈருமாலோ

6–அஜாதேயே ஸ்வாங்கத்வாத்–சிவனோடு பிரமன் வண் திரு மடந்தை சேர் திரு வாகம் எம்மாவி ஈரும்

7–ஸ்யாமளத்வாத்–காரொக்கும் மேனி நம் கண்ணன் கள்வம் கவர்ந்தவத் தனி நெஞ்சம் அவன் கண் அக்தே

8–கவ்விய சோரத்வாத்–நம் கண்ணன் கள்வம் கண்ணனில் கொடுத்தினியதனிலும்பர்

9–வசன அவலோகநா-ஊதும் அத் தீம் குழற்கே உய்யேன் நான் அது மொழிந்து இடை இடைத் தன் செய் கோலம்
தூது செய் கண்கள் கொண்டு ஓன்று பேசித் தூ மொழி இசைகள் கொண்டு ஓன்று நோக்கி

10-சரஸசேஷ்டத்வ பூம்னா–என் சொல்லி உய்வன் இங்கு அவனை விட்டே-

——–

ஸர்வஸ்ய சிரேஷ்டாஸ்யது ஸ்வ கீய அண்ட ஷாண்டாதி பத்யாத்
நீளே வல்லபத்யாத் அம்ருத விதரணாத் பக்த ஸூஸ் முக்த பாவாத்
தாஸானாம் சத்ய பாவாத் அதி ஸூலபதய ஜகத் காரணத்வாத்
ஸ்ரீ மான் வேலா பிரதீஷா பவ பய ஹரனே

1–ஸர்வஸ்ய சிரேஷ்டாஸ்யது–மாலை நண்ணித் தொழுது எழுமினோ வினை கெடக் காலை மாலை கமல மலர் இட்டு நீர்

2–ஸ்வ கீய-திருக் கண்ணபுரம் உள்ளி நாளும் தொழுது எழுமினோ தொண்டீரே

3–அண்ட ஷாண்டாதி பத்யாத்–திருக் கண்ணபுரத்து அண்ட வாணன் அமரர் பெருமானையே–

4–நீளே வல்லபத்யாத்–மானை நோக்கி மடப்பின்னை தன் கேள்வனைத் தேனை வாடா மலர் இட்டு நீர் இறைஞ்சுமின்

5–அம்ருத விதரணாத்—சரணமாகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம் மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்–

6–பக்த ஸூஸ் முக்த பாவாத் –திருக் கண்ணபுரத்து அன்பன் நாளும் தன் மெய்யர்க்கு மெய்யனே

7–தாஸானாம் சத்ய பாவாத்–மெய்யனாகும் விரும்பித் தொழுவார்க்கு எல்லாம் பொய்யானாகும் புறம்பே தொழுவார்க்கு எல்லாம்

8–அதி ஸூலபதயா–அணியன் ஆகும் தன தாள் அடைந்தார்கட்கு எல்லாம் பிணியும் சாரா பிறவி கெடுத்து ஆளும்

9–ஜகத் காரணத்வாத் –திருக் கண்ணபுரத்து ஆதியானை அடைந்தார்க்கு அல்லல் இல்லையே

10-ஸ்ரீ மான்–இல்லை அல்லல் எனக்கேல் இனி என் குறை அல்லி மாதர் அமரும் திரு மார்பினன்

வேலா பிரதீஷா பவ பய ஹரனே -நேரம் எதிர் பார்த்து –

———

இத்தம் சர்வைக பந்தும் சிர க்ருதக்ருநாம் ஸீல சிந்தும் பதித்வாத்
சம்பந்தாத் ரஷிதாராம் ஸ்வ குணாகரிமாசம் ஸ்மாரகம் ப்ராஹ நாதம்
விஸ்மர்தும் சாப்ய சக்யம் கடாகமுகாசு விஸ்ரம்ப ணீயம் சுமதய
லஷ்மயா ஸ்லிஷ்டம் ஸ்வ சித்தி உன்முகாஸ் அநேகக ப்ரதீஷம் சுமித்ரம் –

சர்வ பந்து
கிருபாவான்
குண சாகரம்
ரக்ஷணத்துக்கு இசையும் அவகாசம் பார்த்து இருக்கும் ஸ்ரீ யபதி

1–சர்வைக பந்தும்–கொண்ட பெண்டிர் மக்கள் உற்றார் சுற்றத்தவர் பிறரும்

2-சிர க்ருதக்ருநாம்–பண்டை நாளாலே நின் திரு வருளும் பங்கயத்தாள் திருவருளும் கொண்டு நின் கோயில் சீய்த்துப் பல்படிகால்

3–ஸீல சிந்தும்-ஓர் ஆயிரமாய் உலகு ஏழ் அளிக்கும் பேர் ஆயிரம் கொண்டது ஓர் பீடு உடையன்

4–பதித்வாதி சம்பந்ததா ரஷிதாரம்–மையார் கருங்கண்ணி கமல மலர்மேல் செய்யாள் திரு மார்வினில் சேர் திருமாலே

5–ஸ்வ குணாகரிமாசம் ஸ்மாரகம்–இன்னுயிர்ச் சேவலும் நீரும் கூவிக் கொண்டு இங்கு எத்தனை என்னுயிர் நோவ மிழற்றேன்மின்

6–ப்ராஹ நாதம் விஸ்ம்ருத சாப்ய சக்யம்—உருகுமால் நெஞ்சம் உயிரின் பரம் அன்றி பெருகுமால் வேட்கையும் என் செய்கேன் தொண்டனேன்

7–கடாகமுகாசு விஸ்ரம்ப ணீயம்–எம் கானல் அகம் கழிவாய் இரை தேர்ந்து இங்கு இனிது அமரும் செங்கால மட நாராய் திரு மூழிக் களத்து உறையும்

8–லஷ்ம்யாய ஸஹாயன்–அறுக்கும் வினையாயின ஆகத்து அவனை நிறுத்தும் மனத்து ஒன்றிய சிந்தையினார்க்கு

9-ஸ்வ சித்தி உன்முகாஸ்–மல்லிகை கமழ் தென்றல் ஈருமாலோ

10–அநேகக ப்ரதீஷம் -சுமித்ரம் –மாலை நண்ணித் தொழுது எழுமினோ வினை கெட

————

ஸ்ரீ த்ரமிட உபநிஷத் சாரம் -ஸ்ரீ வேதாந்த தேசிகன் –

அபீஷ்டம் விஸ்வஸ்மின் விஷம பல காங்க்க்ஷி நிய விஷமம்
பிரயச்சந்தம் த்ருஷ்ட்வா பரம புருஷார்த்தைக ரசிகா
நிரஸ்த அன்யா அபேஷா நிகிலா ஜெகதீதஸ்ய நவமே
நிதானம் சித்தினாம் நிருபாதிக்க ஸூ ஹ்ருதம் கானயதி –
19-

நிருபாதிக ஸூ ஹ்ருத்
நித்ய நிரவத்ய பரம புருஷார்த்தை ரசிகை -கைங்கர்ய ரசம்

——

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி

அவதாரிகை –

இதில் -சோபாதிக பந்துக்களை விட்டு நிருபாதிக பந்துவை பற்றச் சொல்லுகிற ஸ்ரீ ஆழ்வார்
பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார்
அது எங்கனே என்னில்
தன்னைப் பற்றினாரை தனக்கு அபிமதரான பாகவதர்கள் திருவடிகளிலே சேர்த்து ரஷிக்கும் ஸ்ரீ சர்வேஸ்வரனே
பிராப்யமும்-பிராபகமும் சர்வ வித பந்துவும் – அல்லாதார் அடங்கலும் ஔபாதிக பந்துக்கள் – ஆன பின்பு –
அவனை ஒழிந்த ஔபாதிக பந்துக்களை விட்டு
பிராதா பார்த்தா ச பந்து ச பிதா ச மம ராகவா -என்னும்படி
நிருபாதிக-சர்வவித பந்துவுமாய் இருக்கும் ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு அடிமை புக்கு உஜ்ஜீவித்துப் போருங்கோள் என்று
ப்ரீதி பிரகர்ஷத்தாலே பிறரைக் குறித்து உபதேசிக்கிற கொண்ட பெண்டீரில் அர்த்தத்தை
கொண்ட பெண்டிர் தாம் முதலா -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை –

கொண்ட பெண்டிர் தாம் முதலாக் கூறும் உற்றார் கன்மத்தால்
அண்டினவர் என்றே யவரை விட்டு -தொண்டருடன்
சேர்க்கும் திருமாலைச் சேரும் என்றான் ஆர்க்குமிதம்
பார்க்கும் புகழ் மாறன் பண்டு
–81-

வியாக்யானம்–

கொண்ட பெண்டிர் தாம் முதலாக் கூறும் உற்றார்-
கையில் தனத்தை அழிய மாறிக் கொண்ட ஸ்திரீகள் கொண்ட -என்று
அதில் ஔபாதிகதவம் தோற்றுகிறது-
தான் என்று கொண்ட பெண்டீரில் ப்ராதான்யம் தோற்றுகிறது –
இப்படி களத்திர புத்ராதி யாகச் சொல்லப் படுகிற பந்து வர்க்கம் எல்லாம் –
கூடும் உற்றார் -என்ற பாடமான போது
ஆகந்துகமாக வந்து கூடினவர்கள் -என்றாகிறது –

கன்மத்தால் அண்டினவர் என்றே யவரை விட்டு –
கர்ம ஔபாதிகமாக அடைந்தவர்கள் என்றே-ஔபாதிக பந்து வர்க்கங்களை விட்டு –
கொண்ட பெண்டீர் மக்கள் உற்றார் -என்று தொடங்கி அருளிச் செய்ததை
அனுவதித்து அருளிச் செய்தபடி –

தொண்டருடன் சேர்க்கும் திருமாலைச் சேரும் என்றான் –
தன்னை ஆஸ்ரயித்தவர்களை தனக்கு சேஷ பூதர் ஆனவர்கள் உடன் சேர்க்கும்
ஸ்ரீ யபதியை ஆஸ்ரயுங்கோள் -என்றார் –

ஆர்க்குமிதம் பார்க்கும் புகழ் மாறன் பண்டு –
எத்தனை அறிவில்லாதவர்கள் விஷயத்திலும்
ஹிதத்தை தம்முடைய தீர்க்க தர்சிக்கும்-யசஸை உடையரான ஸ்ரீ ஆழ்வார்-முற் காலத்திலே-
இப்படி ஆத்மஹித தர்சியான இவரும் ஒருவரே -என்றபடி –

ஆர்க்கும் ஹிதம் பார்க்கை யாவது –
கொண்ட பெண்டீர் -என்று தொடங்கி-தொண்டரோமாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் துணை -என்றும்
துணையும் சார்வும் ஆகுவார் போல் -என்று தொடங்கி -புணை ஓன்று உய்யப் போகல அல்லால் இல்லை கண்டீர் பொருள் -என்றும்
பொருள் கை யுண்டாய் -என்று தொடங்கி -அருள் கொள் ஆளாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் அரணே -என்றும்
அரணாம் அவர் -என்று தொடங்கி -சரண் என்று உய்யப் போகில அல்லால் இல்லை கண்டீர் சதிரே -என்றும்
சதிரம் -என்று தொடங்கி -எதிர் கொள் ஆளாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் இன்பமே -என்றும்
இல்லை கண்டீர் இன்பம் -என்று தொடங்கி -சொல்லி உய்யப் போகில அல்லால் மற்று ஓன்று இல்லை சுருக்கே -என்றும்
மற்று ஓன்று இல்லை சுருங்கச் சொன்னோம் -என்று தொடங்கி வடமதுரை பிறந்தான் குற்றமில் சீர் கற்று வைகல் வாழ்தல் கண்டீர் குணமே -என்றும்
வாழ்தல் கண்டீர் குணம் இது -என்று தொடங்கி வீழ் துணையாப் போமிதினில் யாதும் இல்லை மிக்கதே -என்றும்
யாதும் இல்லை மிக்கு இதினில்-என்று தொடங்கி -தாது சேர் தோள் கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரணே -என்றும்
கண்ணன் அல்லால் -என்று தொடங்கி -அவன் அன்றி மற்று இல்லை -என்றும்
இப்படி பஹூ முகமாக
சர்வர்க்கும்-சர்வ ஹிதங்களையும் உபதேசித்து அருளிற்று -என்கை-

இம் மட வுலகர் கண்டதோடு பட்ட-அபாந்தவ-அரஷக-அபோக்ய-அஸூக அநுபாய பிரதி சம்பந்தியைக் காட்டி -என்று இறே
ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயத்தில் ஸ்ரீ நாயனாரும் அருளிச் செய்தது –

———

அவதாரிகை –
இதில் –
பந்து க்ருத்யம் எல்லாம் செய்ய வேணும் -என்று பேசின ஸ்ரீ ஆழ்வார் பாசுரத்தை அனுவதித்து-
அருளிச் செய்கிறார் -அது எங்கனே என்னில் –
இப்படி நிருபாதிக பந்துவான ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு சர்வவித பந்து க்ருத்யமும் செய்ய வேணும்-என்று
ஸ்ரீ திருப் புளிங்குடியிலே போய்ப் புக்கு-அங்கே ஸ்ரீ பிராட்டியாரோடு கூட-
பள்ளி கொண்டு அருளுகிற-ஸ்ரீ காய்ச்சின வேந்தைக் குறித்து –
திருப் பவளத்தைத் திறந்து ஒரு இன் சொல்லுச் சொல்ல வேணும் –
மா ஸூ ச -உபாயத்துக்கு சோகப்படாதே– க்ரியதாம் மாம் வத -கைங்கர்யம் –
திருக் கண்களை அலர விழித்துக் குளிர நோக்கி அருள வேணும்-
திருவடிகளைத் தலைக்கு அலங்காரமாக வைத்து அருள வேணும் –
ஸ்ரீ பிராட்டியும் ஸ்ரீ தேவருமாக திவ்ய சிம்ஹாசனத்திலே எழுந்து அருளி இருக்க வேணும்-
கண் முகப்பே நாங்கள் சசம்ப்ர்ம ந்ருத்தம் பண்ணும்படி உலாவி அருள வேணும்-என்றால் போலே
ஒரு கோடி வெள்ளங்களை-அவர் சந்நிதியிலே-அசல் அறியாதபடி- பிரார்த்திக்கிற பண்டை நாளில் -அர்த்தத்தை
பண்டை யுறவான இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை –

பண்டை யுறவான பரனைப் புளிங்குடிக்கே
கண்டு எனக்கு எல்லா வுறவின் காரியமும் -தண்டற நீ
செய்தருள் என்றே யிரந்த சீர் மாறன் தாளிணையே
உய்துனை என்று உள்ளமே ஓர்
—82-

தண்டற -தடை இல்லாமல் –

வியாக்யானம்–

பண்டை யுறவான பரனைப் –
உலகுக்கு ஓர் முந்தை தாய் தந்தையே முழு வேழு உலகுண்டாய் -என்றும்
தாய் இருக்கும் வண்ணமே யும்மைத் தன் வயிற்றில் இருத்தி உய்யக் கொண்டான் -என்னும்படியும்
எண் திசையும் கீழும் மேலும் முற்றவும் உண்ட பிரான் -என்று
அநாதி சித்தமான சம்பந்தத்தை யுடைய-சர்வ ஸ்மாத் பரனை –
அன்றிக்கே –
கண்கள் சிவந்து -தொடங்கி -நடந்து வருகிற- ஸ்ரீ திரு மந்திர பிரதிபாத்யமான நவவித சம்பந்த யுக்தனான-
சர்வ ஸ்மாத் பரனை -என்றாகவுமாம்-

புளிங்குடிக்கே கண்டு –
ஸ்ரீ திருப் புளிங்குடி கிடந்தானே -என்னும் படி-ஸ்ரீ திருப் புளிங்குடியிலே கண்டு
என் மனக்கே -என்னுமா போலே ஸ்ரீ புளிங்குடிக்கே -என்று இருக்கிறது –

எனக்கு எல்லா வுறவின் காரியமும் –
குடி குடி வழி வந்து ஆட்செய்யும் தொண்டர் -என்றும்
வழி வருகின்ற அடியர் -என்றும்
தொல் அடிமை வழி வரும் தொண்டர் -என்றும்-சொல்லும்படியான எனக்கு
ப்ராதுஸ் சிஷ்யச்ய தாஸ்ய-என்னும்படி -சர்வவித பந்துத்வ காரியமும்-
விகல்பமாக -ஏதாவது ஒரு வழியில் -பரதன் பிரார்த்தனை -எல்லா உறவின் காரியமும் வேணும் -என்கிறார் ஸ்ரீ ஆழ்வார்
தாயே தந்தை என்றும் தாரமே மக்கள் என்றும் ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் –1-9–

தண்டற நீ செய்தருள் என்றே யிரந்த –
தண்டு -விளம்பம்-விளம்பம் இன்றிக்கே -என்னுதல்
பரப்ரேரிதனாய் அன்றிக்கே -என்னுதல் –
இவற்றில் ஒன்றிலும்-இடை விடாமல்-தடை அற தேவர் நடத்தி அருள வேணும் என்று அர்த்தித்து -என்னுதல் –

அதாவது –
சோதிவாய் திறந்து உன் தாமரைக் கண்களால் நோக்காய் -என்றும்
நின் பாத பங்கயமே தலைக்கு அணியாய் -என்றும்
நீ எழுந்து உன் தாமரை மங்கையும் நீயும் இடம்கொள் மூ வுலகும் தொழ இருந்து அருளாய் -என்றும்
கனி வாய் சிவப்ப நீ காண வாராய் -என்றும்
நின் திருக் கண் தாமரை தயங்க நின்று அருளாய் -என்றும்
காய்சினப் பறவை ஊர்ந்து -காய்சின ஆழி சங்கு வாள் வில் தண்டு-ஏந்தி எம் இடர் கடிவானே -என்றும்
இம் மட வுலகர் காண நீ ஒரு நாள் இருந்திடாய் எங்கள் கண் முகப்பே -என்றும்
இருந்திடாய் வீற்று இருந்து கொண்டே -என்றும்
வடிவிணை இல்லா மலர் மகள் மற்றை நிலமகள் பிடிக்கும்
மெல்லடியைக் கொடு வினையேனும் பிடிக்க-நீ ஒரு நாள் கூவுதல் வருதல் செய்யாயே -என்றும்
இப்படி
ஆத்ம தர்சன-பரமாத்மா -தர்சனம் –பல அனுபவ-பரம்பரையை கூவுதல் வருதல் என்று முடுக விட்ட படி -என்கை-
இப்படி செய்து அருள வேணும் -என்று அர்த்தித்த-

சீர் மாறன் தாளிணையே –
கைங்கர்ய சம்பத்தை -யுடையவர்-என்னுதல்
பக்த்யாதி குணங்களை யுடையவர்-என்னுதல் –
ஏவம் விதராண ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளை –

உய்துனை என்று உள்ளமே ஓர்-
நாசத்தை விளைக்கும் துணை போல்-அன்றிக்கே-உஜ்ஜீவனத்தைப் பண்ணும் துணை என்று
மனசே-அனுசந்தித்துப் போரு-என்கிறார் –

————

அவதாரிகை –

இதில்-சீல குணத்திலே ஆழம் கால் பட்டு ஸ்ரீ ஆழ்வார் பேசின பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
உம்முடைய பேற்றுக்கு நீர் பிரார்த்திக்க வேணுமோ –நாமே பிரார்த்திதுச் செய்ய வேண்டும்படி அன்றோ
நமக்கு யுண்டான ஸ்ரீ நாராயணத்வ பிரயுக்தமான ரக்த ஸ்பர்சம் –
ஆன பின்பு நாமே உம்முடைய சர்வ அபேஷிதங்களையும் செய்யக் கடவோம் -என்று
அவன் அருளிச் செய்ய
தனது பெருமை பாராதே-எனது சிறுமை பாராதே-இப்படி அருளிச் செய்வதே
இது ஒரு சீலம் இருக்கும் படியே -என்று அவனுடைய சீல குணத்திலே வித்தராகிற
ஓர் ஆயிரத்தில் அர்த்தத்தை-ஓரா நீர் வேண்டினவை -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் என்கை-

ஓரா நீர் வேண்டினவை உள்ளதெல்லாம் செய்கின்றேன்
நாராயணன் அன்றோ நான் என்று –பேருரவைக்
காட்ட அவன் சீலத்தில் கால் தாழ்ந்த மாறன் அருள்
மாட்டி விடும் நம்மனத்து மை–
83-

வியாக்யானம்–

ஓரா நீர் வேண்டினவை உள்ளதெல்லாம் செய்கின்றேன் –
ஓரா -ஓர்ந்து-அது வேணும் இது வேணும் என்று ஆராய்ந்து – நீர் அர்த்தித அவை உள்ளதெல்லாம் என்னுதல்
அன்றிக்கே
நீர் அர்த்திதவற்றை எல்லாம்-இன்னது உபகரிக்க வேணும்-இன்னது உபகரிக்க வேணும் என்று நாம் நிரூபித்து -என்னுதல்
இப்படி பந்து க்ருத்யமாய் உள்ளவற்றை எல்லாம்-நாமே அர்த்திகளாய் செய்கிறோம் –

அதுக்கு உடலாக –
நாராயணன் அன்றோ நான் என்று –பேருரவைக் காட்ட-
ஸ்ரீ ராமோ நாராயண ஸ்ரீ மான் -என்னும்படி சர்வ வித பந்துத்வமும் நடத்தும் படி
நான் ஸ்ரீ நாராயண சப்த வாச்யன் அன்றோ -என்று
அத்தாலே பெரிதான தன் சர்வ வித பந்துத்வத்தைக் காட்ட -அத்தை –
ஓர் ஆயிரம் உலகு ஏழ் அளிக்கும் பேர் ஆயிரம் கொண்டதோர் பீடு உடையன்
ஸ்ரீ நாராயணன் நாங்கள் பிரான் அவனே –என்று அனுசந்தித்து –

அவன் சீலத்தில் கால் தாழ்ந்த மாறன் அருள் –
அதாவது –
அவனே மற்று எல்லாமும் அறிந்தனமே -என்றும்
அரியை வணங்கி அறிந்தனர் நோய்கள் அறுக்கும் மருந்தே -என்றும்
விண்ணுலகம் தரும் தேவனைச் சோரேல் கண்டாய் மனமே -என்றும்
இனமேதுமிலானை அடைவதுமே-என்றும்
என் மனம் உடைவதும் அவர்க்கே ஒருங்காகவே -என்றும்
ஆகம் சேர் நரசிங்கமதாகி -என்றும்
நின்ற வேங்கடம் நீண் நிலத்து உள்ளது -என்றும்
தொழுது எழுதும் என்னுமிது மிகை -என்றும்
தாள தாமரையான் -என்று தொடங்கி-நாளும் என் புகழ் கோ சீலமே -என்றும்
சீலம் எல்லை இலான் -என்றும்
இப்படி குணவான் என்னும்படியான —சீல குணத்திலே ஆழம் கால் பட்டு அருளிச் செய்த
ஸ்ரீ ஆழ்வார் அருள் உண்டு – கிருபை –

அந்த கிருபை –
மாட்டி விடும் நம் மனத்து மை –
நம்முடைய அஞ்ஞானத்தை நிச்சேஷமாகப் போக்கும் –

அம்மான் ஆழிப் பிரான் அவன் எவ்விடத்தான் யான் யார் -என்று பிற்காலிக்கிற கலக்கத்தை
சீல குண பிரகாசத்வத்தாலே சேஷியாதபடி நசிப்பிக்கும் –
சாமான்யமான அஞ்ஞானம் ஆகவுமாம்-

—————

அவதாரிகை –

இதில் -விலஷண விக்ரஹ உக்தனானவனை காண-ஆசைப்பட்டு கூப்பிடுகிற பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில் –
கீழ் – சீலாதிகனாய் -அதுக்கு ஊற்றுவாயான ஸ்ரீ பிராட்டியோடு நித்ய சம்யுக்தனாய் –
இரண்டு இடத்திலும் அழகு பெற தரித்த ஸ்ரீ ஆழ்வார்களை யுடையனான-ஸ்ரீ எம்பெருமானை அனுபவிக்க வேணும் என்று
தாமும் தம்முடைய கரண க்ராமங்களுமாக விடாய்த்துக் கூப்பிட தூணிலே தோற்றி சிறுக்கனுக்கு உதவினாப் போலே
மானசமாகத் தோற்றி தன் குணங்களை அனுபவிப்பிக்க
அத்தை அனுபவித்து ஹ்ருஷ்டராகிற -மையார் கரும் கண்ணியில் அர்த்தத்தை
மையார்கண் மா மார்பில் மன்னும் -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் -என்கை –

மையார் கண் மா மார்பில் மன்னும் திருமாலை
கையாழி சங்கு டனே காண வெண்ணி -மெய்யான
காதலுடன் கூப்பிட்டுக் கண்டு உகந்த மாறன் பேர்
ஓத வுய்யுமே இன்னுயிர்–
84-

வியாக்யானம்–

மையார் கண் மா மார்பில் மன்னும் திருமாலை –
அஸி தேஷணையான லஷ்மி-வஷஸ் ஸ்தலத்திலே நித்ய வாசம் பண்ணும்படியாக
அத்தாலே ஸ்ரீ யபதியான ஸ்ரீ சர்வேஸ்வரனை-

கையாழி சங்குடனே காண வெண்ணி –
அச் சேர்த்தியை காத்தூட்ட வல்ல ஸ்ரீ ஆழ்வார்கள் உடன் அனுபவிக்க எண்ணி –
இத்தால் – மையார் கரும் கண்ணி -என்று தொடங்கி-உன்னைக் காணக் கருதும் என் கண்ணே -என்று
முதல் பாட்டை கடாஷித்து அருளிச் செய்தபடி –
வைதேஹீம் லஷ்மணம் ராமம் நேத்ரைர நிமிஷை ரிவ-என்றும்
அவஷ்டப்ய சதிஷ்டந்தம் ததர்சத நுரூர்ஜிதம் -என்னும் படி-ஆயிற்றே அபேஷிததது

மெய்யான காதலுடன் கூப்பிட்டுக் கண்டு உகந்த மாறன் –
யகாவத்தான பிரேமத்தோடே கூப்பிட்டு அப்படியே கண்டு ஹ்ருஷ்டரான –
அதாவது
கண்ணே உன்னைக் காணக் கருதி -என்று தொடங்கி -நண்ணாது ஒழியேன் என்று நான் அழைப்பன் -என்றும்
உகந்தே யுன்னை யுள்ளும் என் யுள்ளத்து -என்று தொடங்கி-நரசிங்கமகதாய உருவே -என்றும் –
தேவர்கட்கு எல்லாம் கருவாகிய கண்ணனைக் கண்டு கொண்டேனே -என்றும்
கண்டு கொண்டு -என்று தொடங்கி -அண்டத்து அமரர் பெருமான் அடியேனே -என்றும்
உலகம் அளந்த அடியானை யடைந்தேன் அடியேன் உய்ந்த வாறே -என்றும்-
இவற்றாலே அவற்றை வெளி இட்டார் -என்கை-

மாறன் பேர் ஓத வுய்யுமே இன்னுயிர் –
இப்படி பகவத் விஷய பக்தியை உடைய ஸ்ரீ ஆழ்வார் திருநாமத்தை அனுசந்திக்கவே
உஜ்ஜீவிக்கும் -விலஷணமான ஆத்ம வஸ்து –

————

அவதாரிகை –

இதில் -ஸ்மாரக பதார்த்தங்களாலே நோவு பட்ட ஸ்ரீ ஆழ்வார் பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
கீழ்ப் பிறந்த அனுபவம் மானஸ அனுபவம் ஆகையாலே-அவனை பாஹ்ய கரணங்களாலே அனுபவிக்க வேணும்
என்று ஆசைப் பட்டு-அப்போதே அது கிடையாமையாலே சிதில சித்தராய்
அவன் குண சேஷ்டிதாதிகளுக்கு ஸ்மாரகமான லௌகிக பதார்த்தங்களைக் கண்டு அவ்வழியாலே
ஸ்மார்யமாணமான அவன் குண சேஷ்டிதாதிகளை அனுசந்தித்து
அவனை யதா மநோ ரதம் அனுபவிக்கப் பெறாமல் இப்படி ஸ்மாரக பதார்த்தத்தாலே தாம் ஈடுபட்டுச்-செல்லுகிற படியை
அன்யாபதேசத்தாலே அருளிச் செய்கிற -இன்னுயிர் சேவலில் அர்த்தத்தை
இன்னுயிர் மால் இத்யாதியால் -அருளிச் செய்கிறார் -என்கை –

இன்னுயிர் மால் தோற்றினது இங்கு என் நெஞ்சில் என்று கண்ணால்
அன்று அவனைக் காண வெண்ணி யாண் பெண்ணாய் -பின்னையவன்
தன்னை நினைவிப்ப வற்றால் தான் தளர்ந்த மாறன் அருள்
உன்னும் அவர்க்கு உள்ளம் உருகும்
—85

வியாக்யானம்–

இன்னுயிர் மால் தோற்றினது இங்கு என் நெஞ்சில் என்று –
கீழில் திருவாய் மொழியில் ஸ்ரீ நரசிங்கமதாய உருவே -என்றும்
உகந்தே யுன்னை யுள்ளும் என் யுள்ளத்து -என்றும்
தேவர்கட்கு எல்லாம் கருவாகிய கண்ணனைக் கண்டு கொண்டேனே -என்றும்
கண்டு கொண்டு என் கண்ணினை ஆரக் களித்து -என்றும் அருளிச் செய்தவை –
மானஸ சாஷாத்காரம் மாத்ரமாய்-ப்ரத்யஷ சாஷாத்காரம் அல்லாமையாலே
இத்தசையில் எனக்குத் தாரகனான ஸ்ரீ சர்வேஸ்வரன் சாஷாத் கரித்தது மானஸ ஞான விஷயம் என்று –

கண்ணால் அன்று அவனைக் காண வெண்ணி யாண் பெண்ணாய் –
சஷூர் விஷயமாக அவனை தர்சிக்க எண்ணி அது லபியாமையாலே பும்ஸ்த்வம் குலைந்து
ஸ்த்ரீத்வ பத்தியைப் பஜித்து-

பின்னையவன் தன்னை நினைவிப்ப வற்றால் –
இப்படி-ஸ்த்ரீத்வ பத்தியை பஜித்த-அநந்தரம்-அவனை பிரணய கதகத ஸ்வரத்தாலும்
ரூபவத்தையாலும்-ஸ்மரிப்பிக்கும் அவற்றாலே-விகூ ஜக்பிர்வி ஹங்க மை -என்னும்படியான
பஷி சமூஹங்களாலும்-மேக சமூஹங்களாலும்-

தான் தளர்ந்த –
தான்யே வார மணீ யாநி -என்னும்படி-அசஹ்யமாய்-மிகவும் பாரவச்யத்தை அடைந்த –
அதாவது –
இங்கு எத்தனை என்னுயிர் நோவ மிழற்றேல்மின் குயில் பேடை காள்-என்றும்
இத்தனை வேண்டுவது அன்று அந்தோ அன்றில் பேடைகாள் -என்றும்
எவம் சொல்லிற்றும் நும் ஏங்கு கூக்குரல் கேட்டுமே -என்றும் –
மேற் கிளைக் கொள்ளேல் மின் நீரும் சேவலும் கோழி காள்-ஆக்கையும் ஆவியும் அந்தரம் நின்று உழலுமே -என்றும்
அந்தரம் நின்று உழல்கின்ற யானுடைப் பூவைகாள்-நும் திறத்து ஏதும் இடை இல்லை குழறேல்மினோ -என்றும்
நன்கு எண்ணி நான் வளர்த்த சிறு கிளிப் பைதலே இன்குரல்-நீ மிழற்றேல்-நின் பசும் சாம நிறத்தனன் கூட்டுண்டு நீங்கினான் -என்றும்
கண்ணன் மாயன் போல் கோட்டிய வில்லோடு மின்னு மேகக் குழாங்காள்-காட்டேன்மின் நும் உரு என் உயிர்க்கு அது காலன் -என்றும்
குயில் பைதல்காள் கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர் -என்றும்
பண்புடை வண்டோடு தும்பிகாள் பண மிழற்றேன்மின்-புண்புரை வேல்கொடு குத்தல் ஒக்கும் நும் இன் குரல் -என்றும்
நாரைக் குழாங்கள் காள் பயின்று என் இனி -என்றும்
இப்படி
ரூப தர்சனத்தாலும்-நாம சங்கீர்த்தனத்தாலும்-பிரணய கூஜிதத்தாலும் மிகவும் தளர்ந்து
ஜீவநா த்ருஷ்டத்திலும் நசை அற்ற படி -என்கை –
இப்படி மிகவும் பாரவச்யத்தை அடைந்த –

மாறன் அருள் –
அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே -என்னும்படியான ஸ்ரீ ஆழ்வார் கிருபையை –

உன்னும் அவர்க்கு உள்ளம் உருகும்-
அனுசந்திக்கும் அவர்களுக்கு-மனஸ்ஸூ- நீராய் உருகும் —
இது ஒரு கிருபாதிக்யம் இருந்தபடியே என்று-ஹிருதயம் த்ரவ்ய பூதமாகும்

மாறன் உரை உன்னும் அவர்க்கு -என்ற பாடம் ஆன போது
ஸ்ரீ ஆழ்வார் திவ்ய ஸூக்தியை அனுசந்திக்கப் புக்கால்-இதுவும் ஒரு ஸ்ரீ ஸூக்தியே என்று
மனஸ்ஸூ த்ரவ்ய பூதமாம் –
இவை ஒன்பதனோடு ஒன்றுக்கும் மூவுலகும் உருகுமே -என்றத்தை பின் சென்ற படி என்றாகவுமாம் –

————

அவதாரிகை –

இதில் ஸ்ரீ ஆழ்வார் உடைய அப்ரீதி கர்ப்ப குண அனுசந்தான வித்தராம் ஸ்ரீ ஸூக்தியை அனுவதித்து
அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில் –
ஸ்மாரக பதார்த்தங்களைக் கண்டு நோவு பட்டு செல்லா நிற்கச் செய்தே
இருந்ததும் வியந்தில் தடுமாறாகக் கலந்த கலவி ஸ்ம்ருதி விஷயம்மாக தரிக்க
அத்தாலே
பூர்வ சம்ச்லேஷ பிரகாரத்தை அனுசந்தித்து ப்ரீதராய்ச் செல்லுகிற -உருகுமால் நெஞ்சத்தில் -அர்த்தத்தை
உருகுமால் என் நெஞ்சம் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை –

உருகுமால் என்நெஞ்சம் உன் செயல்கள் எண்ணி
பெருகுமால் வேட்கை எனப்பேசி -மருவுகின்ற
இன்னாப்புடன் அவன் சீர் ஏய்ந்து உரைத்த மாறன் சொல்
என் நாச் சொல்லாது இருப்பது எங்கு
—86-

என்னால் -என் நா என்றுமாம்

வியாக்யானம்–

உருகுமால் என்நெஞ்சம் உன் செயல்கள் எண்ணி –
ஹ்ருதயா ந்யாமமன் தேவ ஜனச்ய குணவத்தயா-என்னும்படி உன்னுடைய தாழ்ந்த செயல்களை அனுசந்தித்து
என்னுடைய மனசானது த்ரவ்ய த்ரவ்யம் போல் உருகா நின்றது –

பெருகு மால் வேட்கை எனப் பேசி –
அதுக்கு மேலே-அபி நிவேசமும் மிக்குவாரா நின்றது என்று அருளிச் செய்து —

மருவுகின்ற இன்னாப்புடன் –
கீழே-ஸ்மாரக பதார்த்தங்களாலே நோவு பட்டு அந்த அனுவ்ருதமான வெறுப்போடு-

அவன் சீர் ஏய்ந்து உரைத்த மாறன் சொல் –
அவனுடைய-இருத்தும் வியந்திலே-அறியேன் மற்று அருள் -இத்யாதியாலே
அருளிச் செய்த பிரணயித்வ குணங்களை-திரு உள்ளத்திலே பொருந்த அருளிச் செய்த-

அதாவது –
உருகுமால் நெஞ்சம் -உயிர் பாட்டாய்
அத்தைப் பின் சென்று
நினை தொறும்-என்று தொடங்கி – நினைகிலேன் உனக்கு ஆட்செய்யும் நீர்மையே -என்றும்
நீர்மையால் கார் முகில் வண்ணன் தன் கலவம் அறிகிலேன் -என்றும்
அறிகிலேன் –சிறிய என் ஆர் உயிர் உண்ட திருவருளே -என்றும்
திருவருள் செய்பவன் போலே –கரு வளர் மேனி நம் கண்ணன் கள்வங்களே -என்றும்
என் கண்ணன் கள்வம் எனக்கு செம்மாய் நிற்கும் –என் கண்ணன் என்றவன் காட்கரை யேத்துமே -என்றும்
என் ஆர் உயிர் கோள் உண்டே –காட்கரை ஏத்தும் அதனுள் கண்ணா என்னும் -என்றும்
கோள் உண்டான் அன்றி ஆளன்றே பட்டது என் ஆர் உயிர் பட்டதே -என்றும்
தெய்வ வாரிக்கு இங்கு எனது உயிர் பட்டது அங்கு ஆர் உயிர் பட்டது -என்றும்
வாரிக் கொண்டு பருகினான் -கார் ஒக்கும் காட்கரை அப்பன் கடியனே -என்றும்
இப்படி
அவன் தாழ நின்று பரிமாறின சீலாதி குணங்களிலே சிதில அந்த கரணராய் அருளிச் செய்த ஸ்ரீ ஸூக்தி -என்கை –

இப்படி ஈடுபாட்டை யுடையராய் அருளிச் செய்த இச் சொல்லை –
என் நாச் சொல்லாது இருப்பது எங்கு –
என்னுடைய நா வானது-எவ்விடத்து-சொல்லாது இருப்பது –

எல்லா விடத்திலும்-நாவினால் நவிற்று –ஸ்ரீ குருகூர் நம்பி பாவின் இன்னிசை பாடித் திரிவன் -என்னுதல் –

அன்றியே
என் நா சொல்லாது இருப்பது எங்கு -என்று பாடமாய் –
இதில்-ரசஞ்ஞனான என்னாலே-சொல்லப் படாது இருப்பது எத்தசையிலே எங்கனே-என்றது ஆகவுமாம் –
எல்லா தசையிலும் அனுசந்தியாது இருக்க ஒண்ணாது-என்றபடி –

———

அவதாரிகை –

இதில் வடிவு அழகு பற்றாசாக தூது விட்டு அருளின திவ்ய ஸூக்தியை அனுவதித்து அருளிச் செய்கிறார்
அது எங்கனே என்னில்
அப்ரீதி கர்ப்ப குண அனுசந்தானமாக மாத்ரமாக சென்ற இடத்தில் பாக்ய வைகல்யத்தாலே
குண அனுபவத்தால் வந்த ப்ரீதி கீழ்ப்பட்டு
அப்ரீதி அம்சமே தலை எடுத்து அவனுடைய சௌந்தர்யத்தாலே அபஹ்ருத சித்தராய்
அவ் வழகைக் கண்ணாலே கண்டு அனுபவிக்க வேணும் -என்று கண்ணால் கண்ட பஷிகளை தூது விடுகிற
எங்கானலில் அர்த்தத்தை-அருளிச் செய்கிறார் எம் காதலுக்கு அடி-இத்யாதியாலே -என்கை –

எம் காதலுக்கு அடி மால் ஏய்ந்த வடிவு அழகு என்று
அங்காது பற்றாசா ஆங்கு அவன் பால் -எங்கும் உள்ள
புள்ளினத்தைத் தூதாகப் போக விடும் மாறன் தாள்
உள்ளினர்க்குத் தீங்கை யறுக்கும்–
87-

வியாக்யானம்–

எம் காதலுக்கு அடி –
என்னுடைய பிரேமத்துக்கு ஹேது –

மால் ஏய்ந்த வடிவு அழகு என்று –
ஸ்ரீ சர்வேஸ்வரன் உடைய ஸ்வரூப அனுபந்தியாய் அனுரூபமான விக்ரஹ சௌந்தர்யம்-என்று –

அங்காது பற்றாசா ஆங்கு அவன் பால் –
அத்தசையில் அவன் சௌந்தர்யமே பற்றாசாக -ஆலம்பனமாக – அவ்விடத்தில்
அவன் விஷயமாக ஸ்ரீ திரு மூழிக் களத்து உறையும் அவன் விஷயமாக

எங்கும் உள்ள புள்ளினத்தைத் தூதாகப் போக விடும் மாறன்-
யாம் கபீ நாம் சஹஸ்ராணி -என்னும்படி சர்வ திக்குகளிலும் உண்டான பஷி சமூஹத்தை
தம்முடைய பிராண ரஷக அர்த்தமாக தூத பரேஷணம் பண்ணும் ஸ்ரீ ஆழ்வார் –

அதாவது –
செங்கால மட நாராய் -என்று தொடங்கி –
என் குடக் கூத்தர்க்கு என் தூதாய் -என்றும் அமர் காதல் குருகினங்காள் -என்று தொடங்கி
தமரோடு அங்கு உறைவாருக்கு தக்கிலமே கேளீரே -என்றும் –
தக்கிலமே கேளீர்கள் -என்று தொடங்கி-கொக்கினங்காள் குருகினங்காள் செக்கமலத் தலர் போலும்
கண் கை கால் செங்கனிவாய்-அக்கமலத்திலை போலும் திருமேனி யடிகளுக்கு -என்றும் –
திருமேனி யடிகளுக்கு என்று தொடங்கி -மாதரைத் தன மார்பகத்தே வைத்தார்க்கு -என்றும்
திரு மூழிக் களத்து உறையும் பங்கயச் சுடர் பவள வாயனைக் கண்டு -என்றும்
புனம் கொள் காயா மேனி பூம் துழாய் முடியார்க்கு -என்றும் –
பூம் துழாய் முடியார்க்கு -என்று தொடங்கி-தாம் தம்மைக் கொண்டு அகல்தல் தகவன்று என்று உரையீர் -என்றும்
என் அகமேனி ஒழியாமே திரு மூழிக் களத்தார்க்கு -என்றும்
இப்படி
பூம் துழாய் முடியார்க்கு-என்னும் அளவும்
வடிவு அழகு பற்றாசாக பல பஷிகளைத் தூது விட்டார் -என்கை-

நம் பிழையும்-சிறந்த செல்வமும்-படைத்த பரப்பும்-தமரோட்டை வாசமும்
மறப்ப்பித்த
ஷமா-தீஷா-ஸாரஸ்ய சௌந்தர்யங்களை-யுணர்த்தும்
வ்யூஹ-விபவ-பரத்வத்வய-அர்ச்சைகள்
தூது நாலுக்கும் விஷயம் -என்று இறே-ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயத்தில் ஸ்ரீ நாயனாரும் அருளிச் செய்தது –

அபராத சஹத்வாச்ச விபோஸ் சம்பந்த வைபவாத் ஐகரச்யாச்ச சௌந்தர்யாத் கடக அனயாதசே முனி -என்று
இறே ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயரும் அருளிச் செய்தது

மாறன் தாள் உள்ளினர்க்குத் தீங்கை யறுக்கும்-
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகள் ஆனவை தன்னை மனசாலே அனுசந்தித்தவர்களுக்கு
பிரதிபந்தங்களை தானே சேதித்துப் போகடும் –
துடர் அறு சுடர் அடி -போலே –

———

அவதாரிகை –

இதில் தூதர் வரும் அளவும் பற்றாமல் ஸ்ரீ திரு நாவாயில் போய்ப் புக வேணும் என்று
மநோ ரதிக்கிற ஸ்ரீ ஆழ்வார் பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில் –
இப்படி விட்ட தூதர் அத்தலைப் பட்டு அவனுக்கு ஸ்வ தசையை அறிவித்து மீண்டு வருவதற்கு முன்னே
பிராப்ய த்வர அதிசயத்தாலே அவன் எழுந்து அருளி இருக்கிற ஸ்ரீ திரு நாவாயிலே போய்ப் புக்கு
அவ்வோலகத்திலே அங்கு உள்ளவர்களோடு கூட சபத்நீகனான அவனைக் கண்டு அனுபவித்து
அடிமை செய்யப் பெறுவது எப்போதோ –என்று மநோ ரதிக்கிற
அறுக்கும் வினையில் -அர்த்தத்தை
அறுக்கும் இடர் என்று தொடங்கி அருளிச் செய்கிறார் -என்கை –

அறுக்கும் இடர் என்று அவன் பால் அங்கு விட்ட தூதர்
மறித்து வரப் பற்றா மனத்தால் -அறப் பதறிச்
செய்ய திரு நாவாயில் செல்ல நினைந்தான் மாறன்
மையலினால் செய்வது அறியாமல்
—88-

வியாக்யானம்–

அறுக்கும் இடர் என்று –
நம்முடைய துக்கத்தை போக்கி அருளும் என்று -வினை காரணம் -இடர் கார்யம் –

பால் அங்கு விட்ட தூதர் –
ஸ்ரீ திரு மூழிக் களத்து யுறைவார் விஷயமாக அவ் விடத்திலே விட்ட தூதர் –

மறித்து வரப் பற்றா மனத்தால் —
திரும்பி மீண்டு வந்து மறுமாற்றம் சொல்ல பற்றாத திரு உள்ளத்தாலே –

அறப் பதறிச் –
மிகவும் த்வரித்து –
இதம் ப்ரூயாச்ச மே நாதம் ஸூரம் ராமம் புன புன -என்று
ஸ்ரீ திருவடியைத் தூது போக விட்ட-அநந்தரம்-ஸ்ரீ பிராட்டி பதறினால் போலே –

செய்ய திரு நாவாயில் செல்ல நினைந்தான் மாறன் –
அழகிய ஸ்ரீ திரு நாவாயிலே எழுந்து அருளும்படி-எண்ணிய ஸ்ரீ ஆழ்வார் –

அதாவது –
வெறித் தண் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்-குறுக்கும் வகை உண்டு கொலோ கொடியேற்கே -என்றும் –
திரு நாவாய் அடியேன் அணுகப் பெறுநாள் யவை கொலோ -என்றும்-
திரு நாரணன் சேர் திரு நாவாய் யவையுட் புகலாவதோர் நாள் அறியேனே -என்றும் –
திரு நாவாய் வாளேய் தடங்கண் மடப்பின்னை மணாளா –நாளேல் அறியேன்-என்றும்-
விண்ணாளன் விரும்பி யுறையும் திரு நாவாய் கண்ணாரக் களிக்கின்றது இங்கு என்று கொள் கண்கள் -என்றும்-
நாவாய் யுறைகின்ற என் நாரணன் நம்பி ஆவா அடியான் இவன் என்று அருளாயே -என்றும்-
தென் திரு நாவாய் என் தேவே அருளாது ஒழிவாய் -என்றும்-
திரு நாவாய் யாவர் அணுகப் பெறுவார் இனி யந்தோ -என்றும்-
திரு நாவாய் யுறைகின்ற எம்மா மணி வண்ணா அந்தோ அணுகப் பெறு நாள் -என்றும்-
இப்படி த்வர அதிசயத்தை பிரகாசிப்பித்தார் என்கை-

அது எத்தாலே என்னில் –
மையலினால் செய்வது அறியாமல் –
சௌந்தர்யத்தாலே அறிவு கலங்கி அத்தாலே பிராப்த அப்ராப்த விவேகம் இன்றிக்கே
விட்ட தூதர் வருவதற்கு முன்பே த்வரித்தார் –

இவர் பிரேம ஸ்வபாவம் இருந்த படி-என் -என்று-வித்தராய் – அருளிச் செய்கிறார் —

——

அவதாரிகை –

இதில்-ஒரு சந்தையில் யுண்டான ஸ்ரீ ஆழ்வார் அபிசந்தியை அனுவதித்து
அருளிச் செய்கிறார் –அது எங்கனே என்னில்
அறுக்கும் வினையில் பெரிய த்வரையோடே மநோ ரதித்தவர் த்வர அனுகுணமாக பிராப்ய பூமியிலே புக்கு
அவனை அனுபவிக்கப் பெறுவதற்கு முன்னே
தத் ப்ராப்தி ஸூசகமான அடையாளங்களைக் கண்டு
நோவு பட்டுச் செல்லுகிறபடியை பகல் எல்லாம் பசு மேய்க்கப் போன ஸ்ரீ கிருஷ்ணன்
மீண்டு வருவதற்கு முன்னே அவன் வரவுக்கு அடையாளமான
மல்லிகை கமழ் தென்றல் முதலான வஸ்துக்களைக் கண்டு ஸ்ரீ திரு ஆய்ப்பாடியில் இடைப் பெண்கள்
அந்த ஸ்ரீ கிருஷ்ண விரஹத்தாலே
சந்த்யா சமயத்திலே நோவு பட்டுச் செல்லுகிற துறை மேலே வைத்து அருளிச் செய்கிற
மல்லிகை கமழ் தென்றலில் அர்த்தத்தை-மல்லடிமை -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் என்கை-

மல்லடிமை செய்யும் நாள் மால் தன்னைக் கேட்க அவன்
சொல்லும் அளவும் பற்றாத் தொன்னலத்தால் செல்கின்ற
ஆற்றாமை பேசி யலமந்த மாறன் அருள்
மாற்றாகப் போகும் என் தன் மால்
–89-

மல்லடிமை – பூர்ண அனுபவம் –
மால் -மருட்சி அஞ்ஞானம்-
தொல் நலம் -ஸ்வாபாவக பக்தி – சஹஜ பக்தி –

வியாக்யானம்–

மல்லடிமை செய்யும் நாள் மால் தன்னைக் கேட்க –
மல்லடிமை -சம்ருத்தமான அடிமை –பரிபூரணமான கைங்கர்யம் –
அது செய்யும் காலம் எப்போதோ என்று ஸ்ரீ சர்வேஸ்வரனை கேட்க –
நாளேல் அறியேன் -எனக்கு உள்ளன -என்று கேட்க –

அவன் சொல்லும் அளவும் பற்றாத் தொன்னலத்தால் –
அவன்-மாலை நண்ணியிலே-மரணமானால் -என்று நாள் அறுதி இட்டு அருளிச் செய்யும்
அத்தனையும் பற்றாத-ஸ்வா பாவிகமான பக்தியாலே —

செல்கின்ற ஆற்றாமை பேசி யலமந்த மாறன் –
தமக்கு நடந்து செல்லுகிற-தரியாமையை அருளிச் செய்து அலமாப்பை அடைந்த ஸ்ரீ ஆழ்வார் –
அதாவது –
மல்லிகை கமழ் தென்றல் -என்றும்
புலம்புறு மணி தென்றல் -என்றும்
தாமரைக் கண்ணும் கனி வாயும் -என்றும்
வாடை தண் வாடை -என்றும்
ஆ புகு மாலை -என்றும்
அவனுடை அருள் பெரும் போது அரிதால் -என்றும்
ஆர் உயிர் அளவன்றி கூர் த வாடை -என்றும்
புது மணம் முகந்து கொண்டு எறியுமாலோ பொங்கிள வாடை -என்றும்
ஊதும் அத்தீம் குழற்கே உய்யேன் நான் -என்றும்
மாலையும் வந்தது மாயன் வாரான் -என்றும்
இவை அடியாக-பாதக பதார்த்தங்களாய் உள்ள எல்லா வற்றாலும் நொந்து
ஸ்ரீ பிராட்டி ஸ்ரீ ஸூக்ரீவ தர்சன அநந்தரம்- ஸ்ரீ மாருதி தர்சநாத் பூர்வம்
மத்யே ராவண ப்ரேரிரதான-ராஷசீ வசம் ஆபந்னையாய்-ஜீவிதத்தில் நசை ஆற்றாப் போலே
யாமுடைய ஆர் உயிர் காக்கும் ஆறு என் -என்கிறார்-
அதாவது –
புகலிடம் அறிகிலம் தமியமாலோ -என்றும்
இனி இருந்து என் உயிர் காக்கும் ஆறு என் -என்றும்
பாவியேன் மனத்தே நின்று ஈருமாலோ -என்றும்
ஆவியின் பரமல்ல வகைகளாலோ -என்றும்
யாமுடைய ஆர் உயிர் காக்கும் ஆறு என் -என்றும்
எவம் இனிப் புகுமிடம் எவம் செய்கேனோ -என்றும்
ஆருக்கு என் சொல்லுகேன் அன்னை மீர்காள் ஆர் உயிர் அளவன்றிக் கூர் தண் வாடை -என்றும் –
ஆய்ச்சியற்கே ஊதும் அத தீம் குழற்கே உய்யேன் நான் -என்றும்
யாதும் ஒன்றும் அறிகிலம் வம்ம -என்றும்
என் சொல்லி உய்கேன் இங்கு அவனை விட்டு -என்றும் –
அவனை விட்டு உயிர் ஆற்ற கில்லா -என்றும்
இப்படி ஆற்றாமையை அருளிச் செய்து-முன்னாடி தோற்றாமல் அலமந்து நிலம் துழாவின ஸ்ரீ ஆழ்வார் -என்கை-

இப்படியான
மாறன் அருள் மாற்றாகப் போகும் என் தன மால் –
அதாவது-அவனி யுண்டு உமிழ்ந்தவன் மேல் உரைத்த ஆயிரத்துள் இவை பத்தும் கொண்டு
அவனியுள் அலற்றி நின்று உய்மின் தொண்டீர் –என்று உபக்ரமித்த ஸ்ரீ ஆழ்வார் அருள் –
அஞ்ஞானத்துக்கு பிரதிபடமாக என்னுடைய அஞ்ஞானம் நிவ்ருத்தமாகும் –
பண்டை வல்வினை பாற்றி அருளினான் -என்னக் கடவது இறே –
ஆ புகு மாலைக்கு அவனுடை அருள் பெறும் போது அரிதாயிற்று –
இங்கு-என் தன மால் மாறன் அருள் மாற்றாகப் போகும் -என்று நிச்சிதம் ஆயிற்று –

——

அவதாரிகை –

இதில் ஸ்ரீ ஆழ்வாருக்கு நாள் அவதி பிறக்க அத்தாலே அவர் பரோபதேசம் பண்ணின பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில் –
நாளேல் அறியேன் -என்று கேட்டவர்க்கு உம்முடைய த்வரை அனுகுணமாக உம்முடைய சரீர அவசானத்திலே
உம்மை ஸ்ரீ பரம பத்திலே கொடு போய் அடிமை கொள்ளக் கடவோம் –என்று நாளிட்டுக் கொடுக்க-
விலக்ஷணம் அதிகாரி -த்வரை மிக வேணுமே -ஆர்த்தி அதிகார பூர்த்தி வேணுமே —
அத்தாலே ஹ்ருஷ்டராய்-
அந்த ஹர்ஷ பிரகர்ஷத்தாலே ஸ்ரீ திருக்கண்ண புரத்திலே நிற்கிறவன் திருவடிகளிலே
புஷ்பாத் உபகரண்ங்களைப் பணிமாறி பக்தியைப் பண்ணுங்கோள் –
அதுக்கு மாட்டாதார் –
இந்த பத்துப் பாட்டையும் பிரீதி பூர்வகமாம் படி அவன் திருவடிகளிலே வணங்குங்கோள் -என்று
சர்வரையும் தத் சமாஸ்ரயணத்தில்-அதிகார அனுகுணமாக மூட்டுகிற-மாலை நண்ணியில் அர்த்தத்தை
மால் உமது வாஞ்சை முற்றும் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை –

மால் உமது வாஞ்சை முற்றும் மன்னு உடம்பின் முடிவில்
சால நண்ணிச் செய்வன் எனத் தான் உகந்து -மேல் அவனைச்
சீரார் கணபுரத்தே சேரும் எனும் சீர் மாறன்
தாரானோ நம்தமக்குத் தாள்
–90-

வியாக்யானம்–

மால் உமது வாஞ்சை முற்றும் மன்னு உடம்பின் முடிவில் சால நண்ணிச் செய்வன் எனத் –
ஆஸ்ரித வ்யாமுக்தனான ஸ்ரீ சர்வேஸ்வரன் உம்முடைய அபேஷிதங்கள் எல்லாம் ஆத்மாவுடன் பொருந்தி இருக்கிற
சரீரத்தின் உடைய வியோக அனந்தரத்திலே ஸ்ரீ திருக்கண்ண புரத்திலே மிகவும் கிட்டிச் செய்வன் -என்னுதல்
அன்றிக்கே
உம்மைக் கிட்டி-மிகவும் செய்வன்-என்னுதல் –
அங்கனும் அன்றிக்கே
அந்தக் கார்யத்திலே-மிகவும் உற்று -என்னுதல் —

இப்படி செய்வன் என்று
ஸ்ரீ கண்ணபுரம் ஓன்று உடையான் -என்று அருளிச் செய்ய – தான் உகந்து –அவனைக் கொண்டு
நாள் அவதி இட்டுக் கொண்ட தாம்-ஹ்ருஷ்டராய் –

மேல் அவனைச் சீரார் கணபுரத்தே சேரும் எனும் சீர் மாறன் –
நாள் அவதி இட்டுக் கொடுத்ததுக்கு மேலாக ஸ்ரீ திருக்கண்ண புரத்திலே வந்து
அத்யா சன்னனாய் இருக்கிறவனை –

மேல் அவனை -என்று
மேலான அவனை -என்றுமாம் –
ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு-பூர்ணே சதுர்தசே வர்ஷே என்று நாள் அவதி இட்டுக் கொடுத்து
அவதி பார்த்துக் கொண்டு நின்றால் போலே நின்றபடி –

சீரார் கணபுரத்தே சேரும் எனும் சீர் மாறன்-
ஐஸ்வர் யாதிகளும் – சீலாதி குணங்களும்-புற வெள்ளம் இடும்படியான ஸ்ரீ திருக் கண்ணபுரத்தில் நிலையில் –

சேரும் என சீர் மாறன்-
ஆஸ்ரயிங்கோள் என்று-அனைவரையும் குறித்து அருளிச் செய்யும்
ஜ்ஞானப் ப்ரேமாதி குணங்களை யுடைய–ஸ்ரீ ஆழ்வார்-
அதாவது –
திருக்கண்ண புரத்து ஆலில் மேலால் அமர்ந்தான் அடி இணைகளை
காலை மாலை கமல மலரிட்டு –மாலை நண்ணித் தொழுது எழுமினோ என்றும்
திருக்கண்ண புரம் உள்ளி -கள்ளவிழும் மலரிட்டு -நாளும் தொழுது எழுமினோ தொண்டீர் -என்றும் –
திருக்கண்ண புரத்து அண்ட வாணன் அமரர் பெருமானை
தொண்டர் நும் தம் துயர் போக -விண்டு வாடா மலரிட்டு நீர் இறைஞ்சுமின் -என்றும்
வானை யுந்து மதிள் சூழ் திருக்கண்ண புரம் தான் நயந்த பெருமான் –
மடப்பின்னை தன கேள்வனைத் தேனை வாடா மலரிட்டு நீர் இறைஞ்சுமின் -என்றும் –
திருக்கண்ண புரத்து தரணியாளன்–சரணமாகும் தான தாள் அடைந்தார்க்கு எல்லாம் -என்றும்
திருக் கண்ணபுரத்து இன்பன் -தான தாள் அடைந்தார்க்கு எல்லாம் அன்பனாகும் -என்றும்
செய்யில் வாளை யுகளும் திருக் கண்ணபுரத்து ஐயன் ஆகத்து அணைப்பார் கட்கு அணியனே -என்றும்
மணி பொன் ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரம் பணிமின் -என்றும்
வேத நாவர் விரும்பும் திருக் கன்னபுரத் தாதியானை-அடைந்தார்க்கு அல்லல் இல்லையே -என்றும்
அல்லி மாதர் அமரும் திரு மார்பினன் கல்லில் ஏய்ந்த மதிள் சூழ்
திருக் கண்ணபுரம் சொல்ல நாளும் துயர் பாடு சாராவே என்றும் –
பாடு சாரா வினை பற்றற வேண்டுவீர் -இப்பத்தும் பாடி யாடிப் பணிமின் அவன் தாள்களையே -என்றும்
இப்படி
சர்வருக்கும்-சர்வாதிகராமாம்படி-சமாஸ்ரயணத்தை-அருளிச் செய்தார் -என்கை –

மற்று ஓன்று -என்றும்-கண்ணன் அல்லால் -என்றும்-வைகல் வாழ்தலான சித்த உபாயம் –
அதில் துர்பல புத்திகளுக்கு-
மாலை நண்ணி-காலை மாலை-விண்டு தேனை மலரிட்டு-அன்பராம் சாங்க பக்தி –
அதில் அசக்தருக்கு
தாள் அடையும் பிரபத்தி -அதில் அசக்தருக்கு-உச்சாரண மாத்ரம்-
சர்வ உபாய ஸூன்யருக்கு – இப் பத்தும் பாடிடும் தண்டன் -என்று-
ஸ்ரீ கீதாச்சார்யனைப் போலே-அதிகார அனுகுணம் நெறி எல்லாம் உரைக்கிறார் -என்று இறே
ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயத்தில் ஸ்ரீ நாயனாரும் அருளிச் செய்தது-

ஏவம் வித வைபவ உக்தரான
சீர் மாறன் -தாரானோ -நம்தமக்குத் தாள் –
இப்படி உபதேசிக்கைக்கு உடலான-ஜ்ஞான ப்ரேமாதிகளை யுடைய ஸ்ரீ ஆழ்வார் நம்முடைய ஸ்வரூப அனுகுணமாக
திருவடிகளை உபாய உபேயமாக உபகரித்து அருளாரோ –

நம் தமக்கு –
தம்முடைய திருவடிகளிலே பிறந்து முற்றுண்டு பெற்று
முயல்கின்றேன் உன் தன மொய் கழற்கு அன்பையே -என்று ஆதரித்துப் போருகிற நமக்கு –

ஆகையால் ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே நித்ய பிரார்த்யம் என்றபடி –

———

ஆச்சார்ய ஹிருதயம்-ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம்– சூர்ணிகை –227–

ஒன்பதாம் பத்தால்
சாதன பல உபகாரம் கைம்மாறு இன்றி
க்ருதஞ்ஞதா பல க்ருதமானம் -ஆத்மாவை உணர்ந்தார் எட்டாம் பத்தில்
ஆத்ம தரிசன பல பிராப்தி மரணாவதியாகப் பெற்று —
சரணமாகும் தனது தாள் அடைந்ததற்கு எல்லாம் மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் –

சர்வ சக்தித்வம் -கீழே -ஆபத் ஸகத்வம் இதில் –
பகவத் அனுபவ ப்ரீதி காரித கைங்கர்யம் ஸ்வரூபத்துக்கு அனுரூபமான ப்ராப்யம் –
சஞ்சித கர்மா மூட்டை பிராரப்த கர்மா -வர்த்தமான சரீரம் -வரும் சரீரம் இரண்டிலும் அனுபவிக்கும் ஆரப்தம்-
வர்த்தமான ஆரப்தம் முடிந்தால் பேறு-சரீரம் விழும் பொழுது -நாள் அவதி இட்டுகே கொடுக்கும் திருக்கண்ண புரம்-
கிருபையால் சிலருக்கும் -பரம கிருபையால் – பலருக்கும் சர்வ உபாயங்கள்
பக்தி -பிரபத்தி -வாயால் திவ்ய தேசம் சொல்வது -இவற்றை நினைப்பது -இப்படி பல படிகள்

சங்கதி –
நெடுமாற்கு அடிமையில் பாகவத பிரபாவம் காட்டி அருளிய நிருபாதிக பந்து –
கிருபை அடியாக பந்து-கர்மம் அடியாக மற்ற பந்துக்கள் –
கிருபை பொது -சாதாரணம் -அனைவருக்கும் -நிஷ் காரணம் நிருபாதிகம்–
வால்மீகி -திருட -ரிஷி -திருடிய பயனை பகிர்ந்து கொள்ள பத்னி இடம் கேட்கச் சொல்ல -அவள் மறுக்க உணர்ந்த ஐதிக்யம்
சம்சாரிகள் சோபாதிக பந்துக்களுடன் இருக்கக் கண்டவர் அவர்களைத் திருத்த –
கை விட்ட அனைவரையும் ரக்ஷித்து அருளுபவர் சகலவித பந்து -பிராப்தி -9-1-சொல்லி
அதுக்கு பலம் -கைங்கர்யம் -பந்து க்ருத்யம் -9-2-பண்டை நாளாலே -கொடுவினையேனும் பிடிக்க கூவுதல் வருதல் செய்யாயே
என் ஆர்த்தியும் உம் ஆர்த்தியும் தீர்க்காமல் இருக்கவோ -இவர் ஆர்த்தி மட்டும் ஆராவமுதே -5-8-
சஞ்சயனை பள்ளிக் கட்டுக்குள்ளே வரச் சொல்லி -அந்த அந்தரங்க கைங்கர்யம் -பிரார்த்தனை த்வரை-
செய்கிறேன் -வார்த்தை கேட்டதும் ஸமாஹிதரானார் -கௌசல்யை மங்களம் பெருமாளுக்கு -அனுக்ரஹம் செய்தால் போலே-
ஒரு வார்த்தை கேட்டது போலே துடித்து இருந்தாலும் –நாராயணன் அர்த்தம் கேட்டதும் -9-3-
வியாபக மந்த்ர ப்ரீதி–ஓங்கார அர்த்தம் -8-8-/ நமஸ் சப்தார்த்தம் -8-9-அநந்யார்ஹத்வம் /–நெடுமாற்கு அடிமை ஆர்த்தமான அர்த்தம் -8-10-
அவனே பந்து ஆபாச பந்துக்கள் அல்லர் -9-1-/ பந்து இடம் கைங்கர்யம் ஆய அர்த்தம் -9-2-/
சார தம காயத்ரியின் முன் ஓதிய நாராயணன் அர்த்தம் விருப்பம் –
திருமந்திர நாராயணனுக்கு மேலே ஸ்ரீ யபதி–அணியார் மலர் மங்கை தோள் கீழே வந்ததே -சேர்த்து வைக்க வேண்டுமே
முடியானே ஆசை திரும்ப -9-4-மையார் கரும் கண்ணி காண விரும்பும் கண்ணே -த்வய நாராயணன் -அர்த்தம் –
கருவாகிய கண்ணனைக் கண்டு கொண்டே -மானஸ அனுபவம் -பாஹ்ய சம்ச்லேஷம் கிட்டாமல்
இன்னுயிர்ச் சேவலும் -எம்பெருமானார் உகந்த -9-5-லௌகிக பதார்த்தம் பார்த்து ஆசுவாசப்படாமல் இவை சேர்ந்து ஆழ்வாரை நலிய
கூடி இருக்கும் பொழுது ஸந்தோஷம்-விஸ்லேஷத்தில் நலிவு -இவர்களை குற்றம் சொல்லக் கூடாதே
குண அனுபவம் செய்து தரிக்க
மகள் பதிகம் இது 9-5–
இருத்தும் வியந்து 8-7-உடன் –9 -6-உருகுமால் சங்கதி -போகத்தில் தட்டு மாறும் சீலம் காட்கரையில் கரை அழிக்கும்-
ஆத்ம தத்வம் -சரீரம் -மனஸ் அனைத்தும் உருக —
குணம் -என்றாலே சீலம் -ஸ்ரீ ராமாயணம் பார்த்தோம் -குணவான் —
சீல குணம் அனுபவித்து -அப்ரீதி கர்ப்ப குண அனுசந்தானம் இது –
தன்னிலைமை இழந்து தூது -9-7-எம் கானல் -திரு மூழிக் களத்து –தாம் தம்மைக் கொண்டு அகல்வது தகுதியோ –
அழகை நினைவு படுத்தி -ஸுவ்ந்தர்யம் பற்றாசாக தூது–
இது நான்காம் தூது -கடைசி தூது -தூது விட்டு அவன் வருவதற்குள் நிலை -திரு நாவாய் -9-8-கிட்டே போவேனோ –
சீதா நிலைமை போலே -பெருமாள் கடலை தாண்டி வருவாரா பாரிப்பு போலே
அடியேன் அணுகப் பெறு நாள் என்றோ –
ஆளவந்தார் மிகவும் உகந்த பதிகம்–
மல்லிகை –மகள் பாசுரம் -9-9-நலிய -ப்ராப்ய வஸ்து அடைய ஆசைப்பட்டார் திரு நாவாய் –
கோபிகள் ஒரு இரவில் பட்ட வருத்தம் ஆளவந்தார் –நான்கு பதிகமாக பட்ட வருத்தம் — –
ராமானுஜர் ஒரு இரவு -இல்லை முற் கூறு இல்லாமல் பிற கூறு வரும் வரை பட்ட வியசனம்-
மங்கைமார் சாலக வாசல் பற்றி நிற்பார்கள் -பெரியாழ்வார் –
ஆயிரம் பிள்ளைகள் பின் வருவதால் பட்ட பாடு –மாலைப்பூசல் –
உமது வருத்தம் என்னது அன்றோ -நியத பிரகாரம் சொன்னோமே எட்டாம் பத்திலே -நாள் குறித்து -அருளிச் செய்ய ஸமாஹிதரானார்
மரண அவதி யாக அருளிச் செய்த பதிகம் -9-10-
நீல மேக பெருமாள் -மூலவர் -ஸுவ்ரி ராஜ பெருமாள் உத்சவர் -கலங்கா பெருநகரம் காட்டுவான் -பர உபதேசம் -9-1-போலே -9-10-
சரண முகுந்தத்வம் –குணம் காட்டி -ஆபத் ஸகத்வம்

ஒன்பதாம் பத்தால்-

இப்படி அவாப்த சமஸ்த காமன் ஆகையாலே –
இத்தலையில் ஒன்றும் அபேஷிக்காமல் -பிரளயாதி ஆபத்துகளிலே உதவி ரஷிக்கும் ஆபத் சகனான சர்வேஸ்வரன் –
கீழ் பிரகாசிப்பித்த ஆத்ம தர்சனதுக்கு பலம்-
ஸ்வரூப அனுரூபமான பிராப்த்யத்தை அனுபவிக்கை ஆகையாலே –
அவ் அனுபவத்தில் உண்டான த்வரையாலே -ஷண காலம் விளம்பம் பொறுக்க மாட்டாமல் –
ஆர்த்தரான தமக்கு -ஆரப்த சரீர அவசானத்திலே -பேறாகக் கடவது -என்று
நாள் அவதி இட்டு கொடுக்கப் பெற்றவர் –
கீழ் தாம் உபதேசித்துத் திருந்தினவர்கள் ஒழிய -அல்லாதாரையும் விட மாட்டாத
பரம கிருபையாலே -யதா அதிகாரம் சர்வ உபாயங்களையும் அருளிச் செய்கிறார் -என்கிறார்-

———————————————–

1-எண் திசையும் அகல் ஞாலம் எங்கும் அளிக்கின்ற
ஆலின் மேல் என்னும் படி நித்ய போக பாத
லீலா உபகரணத்தின் லயாதிகளை போக்கும் ஆபத் சகன்
2-ஆர் உயிர் என்னப் படுத்தின ஆத்ம தர்சன பல அனுபவ
பரம்பரையைக் கூவுதல் வருதல் என்று முடுக விட்டு
3-ஏகம் எண்ணிக் காணக் கருதி எழ நண்ணி நினைதொறும்
உருகி அலற்றி கவையில் மனம் இன்றி பதினாலாண்டு
பத்து மாசம் ஒரு பகல் பொறுத்தவர்கள் ஒரு மாச தின
சந்த்யையில் படுமது ஷணத்திலே யாக விரங்குகிற த்வரைக்கு ஈடாக
4-இனிப் பத்தில் ஓன்று தசம தசையிலே பேறு என்று
நாட் கடலாக தம்பிக் கிட்டதாகாமல் நாளை வதுவை
போலே நாள் இடப் பெற்றவர்
5-இம்மட உலகர் கண்ட தோடு பட்ட
அபாந்தவ அரஷக அபோக்ய அஸூக அனுபாய
பிரதி சம்பத்தியைக் காட்டி
6-மற்று ஓன்று கண்ணன் அல்லால் என்கிற
வைகல் வாழ்தலான சித்தோபாயம்
7-அதில் துர் பல புத்திகளுக்கு மாலை
நண்ணி காலை மாலை விண்டு தேனை
வாடா மலர் இட்டு அன்பராம் சாங்க பக்தி –
அதில் அசக்தருக்கு தாள் அடையும் பக்தி
8-அதில் அசக்தருக்கு உச்சாரண மாத்ரம்
சர்வ உபாய சூன்யருக்கு இப் பத்தும்
பாடி யிடும் தண்டன் என்று
கீதாச்சர்யனைப் போலே அதிகார
அனுகுணம் நெறி எல்லாம் உரைக்கிறார் ஒன்பதாம் பத்தில் ..

———————————————–

1-எண் திசையும் அகல் ஞாலம் எங்கும் அளிக்கின்ற ஆலின் மேல் என்னும் படி நித்ய போக பாத
லீலா உபகரணத்தின் லயாதிகளை போக்கும் ஆபத் சகன்-
(பாத லீலா உபகரணம் -நித்ய போகமான பரம பதத்தை நோக்காக கால் கூறாக இருக்கும் லீலா விபூதி -என்றவாறு)
அதாவது-
எண் திசையும் கீழும் மேலும் முற்றவும் உண்ட பிரான்-9-1-1- -என்றும் ,
அவனே அகல் ஞாலம் படைத்து இடந்தான்-அவனே அஃது உண்டு உமிழ்ந்தான் அளந்தான்-9-3-2- -என்றும்
அகலிடம் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்து எங்கும் அளிக்கின்ற வாயன்-9-9-2- -என்றும்
ஆலின் மேலால் அமர்ந்தான்-9-10-1- -என்றும்

சகல லோகங்களையும் பிரளயம் கொள்ளாமல் ஏற்கவே -திரு வயிற்றில் வைத்து நோக்கி
அழிந்தவற்றை மீண்டும் உண்டாக்கியும் –
ஹிரண்யாஷனாலே தள்ளுண்டு அண்ட பித்தியிலே சேர்ந்த பூமியை ஒட்டு விடுவித்து எடுத்தும்-
மகா பலி பலாத்கரித்து ஆளுகிற தசையிலே -எல்லை நடந்து மீட்டும் –
இப்படி பிரளயாதி ஆபத்துகளில் உதவி ரஷித்தவன் என்னும் படி —
கீழ் சொன்ன சத்ய காமத்வத்தால் வந்த நைரபேஷ்யம் தோற்ற -இத் தலையில் அபேஷம் அற –
பிரதுபகாரம் நினையாமல் -வரையாதே -தன் பேறாக நோவு படும் அளவுகளிலே உதவி –

பாதோஸ்ய விஸ்வா பூதானி த்ரிபாதாஸ் யாம்ருதம் திவி -புருஷ ஸூக்தம்–என்கிறபடியே
அம்ருத சப்தத்தால் சொல்லும்படி -நித்ய போகமான-த்ரிபாத் விபூதியைப் பற்ற அல்பம்
ஆகையாலே பாத சப்தத்தால் சொல்ல பட்ட லீலா உபகரணமான இவ் விபூதியில்
லயாதிகளை போக்கும் ஆபத் சகனானவன்–

———————————————————-

2-ஆர் உயிர் என்னப் படுத்தின ஆத்ம தர்சன பல அனுபவ பரம்பரையை கூவுதல் வருதல் என்று முடுக விட்டு
அதாவது
இ6ருந்தும் வியந்தில் -8-7–தம்மோடு கலந்த கலவியை ஸ்மரிப்பிக்க
வித்தராய் –பேசுகிற அளவிலே –
அவன் தட்டு மாறி -நின்று பரிமாறின சீலத்தில் ஈடுபட்டு –
ஆர் உயிர் பட்டது எனது உயிர் பட்டது -9-6-9–என்று என் ஆத்மா பட்டது –
நித்ய அனுபவம் பண்ணுகிற நித்ய சூரிகள் ஸ்வரூபம் தான் பட்டதோ என்னும் படியாக –
தாம் மேல் விழுந்து அனுபவித்த -ஆத்ம வைலஷண்யத்தை
கீழில் பத்தில் (கண்கள் சிவந்து-8-8-) யாதாவாகக் காட்டக் கண்டு -அதுக்கு பலம்-ஸ்வரூப அனுரூபமான
பிராப்யத்தை அனுபவிக்கை ஆகையாலே –

சோதி வாய் திறந்து உன் தாமரைக் கண்களால் நோக்காய்-9-2-1–என்றும் –
பாத பங்கயமே தலைக்கு அணியாய்–9-2-2-என்றும் –
உன் தாமரை மங்கையும் நீயும் இடம் கொள் மூ உலகும் தொழ இருந்து அருளாய் -9-2-3–என்றும் –
கனி வாய் சிவப்ப நீ காண வாராய் -9-2-4–என்றும் –
நின் பன்னிலா முத்தம் தவழ கதிர் முறுவல் செய்து நின் திரு கண் தாமரை தயங்க நின்று அருளாய் -9-2-5-என்றும்-

திருப் பவளத்தை திறந்து -ஒரு வார்த்தை அருளிச் செய்ய வேண்டும் –
திரு கண்களால் குளிர நோக்கி அருள வேண்டும் –
திரு அடிகளை என் தலை மேல் வைத்து அருள வேண்டும் –
தேவரீரும் பிராட்டியும் சேர்ந்து கூட எழுந்து அருளி இருக்கிற இருப்பை எனக்கு காட்டி அருள வேண்டும் –
என் முன்னே நாலடி உலாவி அருள வேண்டும்
அனுகூல தர்சனத்திலே பிறக்கும் ஸ்மிதம் காண வேண்டும் -என்று இப்படி
அனுபவ பரம்பரையை ஆசைப் பட்டு -க்ரம பிராப்தி பற்றாமையாலே –

கூவுதல் வருதல் செய்யாய் -9-2-10–என்று7-
நிரதிசய போக்யமான உன் திரு அடிகளில் நான் வந்து அடிமை செய்யும் படி
என்னை அங்கே அழைத்தல்- நீ இங்கே வருதல்-செய்து அருள வேணும் என்று –
இப்படி முடுக விட்டு–

(தனது உயிரை ஆர் உயிர் என்று சொல்ல வைத்தார் -ஆத்ம ஸ்வரூபம் உள்ளபடி அறிந்து –
அதன் பலமாக கைங்கர்யம் விருத்திக்கு பிரார்த்திக்க வேண்டுமே )
————————————————-

3-ஏகம் எண்ணிக் காணக் கருதி எழ நண்ணி நினைதொறும் உருகி அலற்றி கவையில் மனம் இன்றி
அதாவது
(ஓராயிரமாய்-9-3- -திருவாய்மொழியில்)
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணும் இராப் பகல் இன்றியே –9-3-7-
என்று அவன் நித்ய வாசம் பண்ணுகிற பரமபதத்தைக் காண்கையிலே சர்வ காலமும் ஏக ரூபமாய் மனோரதித்து –

(மையார் கருங்கண்ணி-9-4- திருவாய்மொழியில்)காணக் கருதும் என் கண்ணே -9-4-1-– என்று
பெரிய பிராட்டியா1-ரோடும் -திவ்ய ஆயுதங்களோடும் -திவ்ய விக்ரகத்தோடும் –
கூடி இருக்கிறவனைக் காண வேண்டும் என்று ஆசை பட்டு –

(இன்னுயிர்ச் சேவலும்-9-5- திருவாய்மொழியில் )எழ நண்ணி நாமும் நம் வான நாடோடு ஒன்றினோம் -9-5-10–என்று
ஸ்மாரக பதார்த்த தர்சனத்தில் நோவு படுகையாலே -முடிந்து போகையிலே ஒருப் பட்டு –

(உருகுமால் நெஞ்1-சம்-9-6- திருவாய்மொழியில் )
திரு காட்கரை மருவிய மாயன் தன் மாய9-99-ம் நினை தொறு-நெஞ்சம் உருகுமால்-9-6-1- -என்று
அவன் அனுபவ தசையில் பரிமாறின சீலாதிகளை நினைக்கும் தோறும்
அனுபவ உபகரணமான நெஞ்சு சிதிலமாய் கரைந்து –

(எம் கானல் அகம் கழிவாய் திருவாய்மொழியில்-9-7- )தமரோடு அங்கு உறைவார்க்குத் தக்கிலமே கேளீரே -9-7-2-என்று
தூத பிரேஷண முகத்தாலே – கிளி மொழியாள் அலற்றிய சொல் – 9-7-11-என்று
ஆற்றாமையாலே அக்ரமமாகக் கூப்பிட்டு –

(அறுக்கும் வினையாயின -9-8-திருவாய்மொழியில்)கவையில் மனமின்றி கண்ணீர்கள் கலுழ்வன் -9-8-3–என்று
இரு தலைத்த நெஞ்சு இன்றிக்கே -ஏகாக்ர சித்தராய்-
1-1-
பதினாலாண்டு பத்து மாசம் ஒரு பகல் பொறுத்தவர்கள்
ஒரு மாச தின சந்த்யையில் படுமது ஷணத்திலே யாக விரங்குகிற த்வரைக்கு ஈடாக
அதாவது-
(மல்லிகை கமழ் தென்றல்-9-9- திருவாய்மொழியில்)
பெருமாளைப் பிரிந்து பதினாலாண்டு பொறுத்து இருந்த ஸ்ரீ பரதாழ்வான் –
பூர்ணே சதுர்தச வர்ஷே பஞ்சம்யாம் லஷ்மணாக்ரஜ –யுத்த -127-1—என்று அவதி கழிந்த ஒரு நாளில் பட்ட கிலேசமும் —

பத்து மாசம் பொறுத்து இருந்த பிராட்டி -மாஸாத் ஊர்த்தவம் ந ஜீவிஷ்யே –ஸூந்தர –40 -10–
(இன்னம் ஈண்டொரு திங்கள் இருப்பல் யான் நின்னை நோக்கிப் பகர்ந்து நீதியோய்-
பின்னை ஆவி பிடிக்கின்றிலேன் அனந்த மன்னன் ஆணை இதனை மனக்கொள் நீ –ஸ்ரீ கம்பநாட்டாழ்வார் )-என்று
திருவடி இடம் சொல்லி விட்ட அநந்தரம் -அவ்வொரு மாசத்தில் பட்ட கிலேசமும் –

கிருஷ்ணன் பசு மேய்க்கப் போக ஒரு பகல் எல்லாம் பொறுத்து இருந்த ஸ்ரீ கோபிமார்-
அவன் பசுக்களின் பின் குழையிலே வாரா நிற்க – முற் கொழுந்தில் காணாமையால்
ஒரு சந்த்யையில் பட்ட கி2-லேசம் எல்லாம் –

ஒரு ஷணத்திலே யாம் படி –
அவனை விட்டு அகல்வதற்க்கே இரங்கி-9-9-11-என்று ஈடு படுகிற த்வரைக்கு ஈடாக-

——————————————————-

4-இனிப் பத்தில் ஓன்று தசம தசையிலே பேறு என்று
அதாவது-
நயன பிரீதி பிரதமம் சிந்தா போகஸ் ததோனு சங்கல்ப
நித்ராஸ் சேதஸ் தநுதா விஷய விரக்திஸ் த்ரபாநாச
உந்மாதோ மூர்ச்சா ம்ருதி ரித்யேதா ச்மரதசா தசைவ ஸ்யு-என்றும்-( த்ராபா -வெட்கம்)

பி9-ரதமஸ் தவபிலாஷ ஸ்யாத் த்விதீயம் சிந்தனம் பவேத்
அநு ஸ்ம்ருதிஸ் த்ருதீயந்து சதுர்த்தம் குண கீர்த்தனம்
உத்யோக பஞ்சமம் ப்ரோக்த பிரலாப ஷஷ்ட உச்யதே
உ-ன்மாதஸ் சப்தமோ ஞேய அஷ்டமோ வ்யாதிருச்யதே
நவமே ஜடாத சைவ தசமம் மரணம் ததா -என்றும்-

காட்சி முதலாச் சாக்காடு ஈறாக் காட்டிய பத்தும் கை வரும் எனினே
மெய்யுறு புணர்ச்சி எய்துதற்கு உரித்தே –நம்பியகப்பொருள் -என்றும்

வேட்கை ஒருதலை உள்ளுதல் மெலிதல் ஆக்கம் செப்பல் நாணுவரை இறத்தல் நோக்குவம் எல்லாம்
அவையே போறல் மறத்தல் மயக்கம் சாக்காடு என்றச் சிறப்புடை மரபினவை கழவென மொழிப–தொல்காப்பியம்-என்றும்
சொல்லுகிறபடி -9-1

காமுகராய் இருப்பார்க்கு தசம அவஸ்தையிலே மரணமாம் போலே –
நம் பக்கல் பரபக்தி உக்தரான உமக்கும் நம்மை பெறாவிடில் முடியும் படியான பரம பக்தி தசை –
பத்தாம் பத்திலே -பிறக்கத் தேடுகிறது –
ஆகையால் கீழ் சொன்ன விளம்பம் இல்லை –இனி உள்ளது பத்தில் ஓன்று தசம தசையான
மரண அவஸ்9-தையிலே பேறு என்று-

நாட் கடலாக தம்பிக் கிட்டதாகாமல் நாளை வதுவை போலே நாள் இடப் பெற்றவர்
அதாவது
நாட் கடலை கழிமின்-1-6-7- –என்கிறபடியே -விரஹ வ்யசனத்தாலே ஒருநாள் கடல் போலே துச்தரமாம் படி –
பூர்ணே சதுர்தசே வர்ஷே -யுத்த -127-1–என்று தம்பியான ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு நெடுக நாள் இட்டு
கொடுத்தால் போல் ஆகாமே –

நாளை வதுவை மணம் என்று நாள் இட்டு -நாச்சியார்-6-2-– என்று
இன்று எனில் வெள்ளக் கேடாம்-சில நாள் கழித்து எனில் வறட்கேடாம் என்று நினைத்து –
நாளை என்று நாச்சியாருக்கு நாள் இட்டால் போலே –

மரணமானால் -9-10-5–என்று ஆரப்த சரீர அவசானத்திலே -பேறாக -அவன் தானே
நாள் இட்டு கொடுக்கப் பெற்று ஹ்ருஷ்டர் ஆனவர் –

——————————————

5-இம் மட உலகர் கண்ட தோடு பட்ட அபாந்தவ அரஷக அபோக்ய அஸூக அனுபாய பிரதி சம்பத்தியைக் காட்டி
அதாவது-
சரம உபாய உபேய பர்யந்தமாக -தாம் அருளிச் செய்த ஹித வசனம் கேட்டு –(சரம உபேயம் -அர்ச்சாவதாரம்)
திருந்தினவர்களை ஒழிய -அல்லாதாரையும் விட மாட்டாத தம்முடைய கிருபையால் –
இம் மட உலகீர் -9-2-7–என்று சம்சாரத்தில் அறிவு கேடர் ஆனவர்களுக்கு –
கொண்ட பெண்டிர் –9-1-1-என்று தொடங்கி -சந்நிதியிலே ஸ்நேகிக்கும் அது ஒழிய காணாத போது
ஸ்நேகம் ஓன்று இன்றிக்கே இருக்கிற பார்யா புத்ராதிகள் பந்துக்கள் அன்று —
பிரளய ஆபத் சகனானவனே பரம பந்து என்றும் —

துணையும் சார்வும் –9-1-2-
பொருள் கை உண்டாய் –9-1-3-
அரணமாவர்- 9-1-4-என்ற பாட்டுகளாலே –
அவனை ஒழிந்தார் தாங்கள் உபகாரரைப் போலே -பிரயோஜனம் உள்ள போது பந்துக்களாய் கொண்டாடி –
ஆபத்து வந்தவாறே கண்ணற்று உபேஷிப்பார்கள்–ஆகையால் அவர்கள் ரஷகர் அல்லர் –
தன்னுடைய ரஷணத்தில் அதி சங்கை பண்ணினாரையும் விஸ்வசிப்பித்து ரஷிக்கும் அவனே–அவதார முகத்தால்
ஸூலபனாய் -ரஷண அனுரூபமான குணங்களை உடையவனாய் – -அவனை ஒழிய வேறு ரஷகன் இல்லை –

சதிரம் என்று தம்மைத் தாமே சம்மதித்து-9-1-5 –என்று தொடங்கி -தங்களுக்கு போக்யைகளாக சம்பாதித்த
ஸ்திரீகள் ஆபத்து வந்த வாறே உபேஷிப்பர்கள் —
ஏக பிரகாரமாக சந்நிக்தனாய் இருப்பவன் அவனே- ஆன பின்பு -அவர்கள் போக்யர் அல்லர் —
அவனே நிரதிசய போக்யன் என்றும் –

இல்லை கண்டீர் இன்பம்-9-1-6-என்று தொடங்கி
துக்கங்களிலே சில வற்றை ஸூகம் என்று பிரமிக்கும் இத்தனை போக்கி அவனை ஒழிய
ஸூக ரூபமாய் இருப்பது ஓன்று இல்லை என்றும் –

யாதும் இல்லை மிக்கு அதனில்-9-1-9-என்று தொடங்கி
அவனை ஒழிய வேறு ஒன்றை ரஷகம் என்று பற்றினவர்கள் பண்டை நிலையும் கெட்டு
அனர்த்தப் பட்டு போவர்கள் –ஆன பின்பு அவனை ஒழிய உபாயம் இல்லை என்றும் –

இப்படி-அவனை ஒழிந்தாருடைய அபந்துவத்தையும் -அரஷகத்வத்தையும் –அபோக்யத்வத்தையும் —
அஸூகத்வத்தையும் –அனுபாயத்வத்தையும் –

அதுக்கு பிரதி கோடியான -அவனுடைய –
பரம பந்துத்வத்தையும் –நிருபாதிக ரஷகத்வத்தையும் –நிரதிசய போக்யதையும் –
ஸூக ரூபத்தையும் –நிரபேஷ உபாயத்வத்தையும் –தர்சிப்பித்து-
(விசேஷணங்கள் அவனுக்கு ஒவ் ஒன்றிலும் காட்டி அருளி )
இம் மட உலகருடைய அபாந்தவாதிகள் பிரதி சம்பந்தியை அவர்களுக்குக் காட்டி என்று
வாக்ய யோஜன க்ரமம்–

—————————————————-

6-மற்று ஓன்று கண்ணன் அல்லால் என்கிற வைகல் வாழ்தலான சித்தோபாயம்
அதாவது-
மற்று ஓன்று இல்லை சுருங்க சொன்னோம்- மா நிலத்து எவ் உயிர்க்கும்
சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் கண்டீர்கள்-9-1-7-என்று இதுக்கு மேல் சொல்லல் ஆவது ஓன்று இல்லை –
இது தன்னை ஸூக்ரகமாக சொன்னோம் –மகா பிருத்வியில் சகல ஆத்மாக்களுக்கும் இது தனக்கு பரக்க
ஆயாசிக்க வேண்டா – சிந்தா மாத்ரமே அமையும் –கேளி கோள் -என்கையாலே –
தனக்கு மேல் ஓன்று இன்றியே இருப்பதாய்
ஸங்க்ரஹேன உபதேசிக்கலாய் –
சர்வாதிகாரமாய் –
வரண ஸூகரமுமாய் -இருக்குமதாய் –
கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண்–9-1-10–என்று
மாம் ஏகம் சரணம் வ்ரஜ -என்று
கிருஷ்ணனை ஒழிய வேறு உபாயம் இல்லை என்கையால்-
சித்தமாய்
பரம சேதனமாய்
சர்வ சக்தியாய்
நிர் பயமாய்
ப்ரப்தமாய்
சகாயாந்தர நிர பேஷமாய்
இருக்குமதாகவும் சொல்லப் படுமதாய்
வட மதுரை பிறந்தான் குற்றமில் சீர் கற்று வைகல் வாழ்தல்–9-1-7-என்கிற
யாவதாத்மபாவியான -குண அனுபவத்துக்கு உடலான -சித்தோ உபாயத்தை உபதேசித்தும் –

————————————————

7-அதில் துர் பல புத்திகளுக்கு மாலை நண்ணி காலை மாலை விண்டு தேனை
வாடா மலர் இட்டு அன்பராம் சாங்க பக்தி –
அதாவது-
சக்ருதேவ ஹி சாஸ்தார்த்த க்ருதோயம் தார என்னரம்
நராணாம் புத்தி தெவ்பல்யா துபாயாந்தர மிஷ்யதே -என்கிறபடியே
அந்த சித்தோ உபாயத்தில் மகா விசுவாசம் பிறக்கைக்கு அடியான
பாக்கியம் இல்லாமையாலே -இதர உபாய பரித்யாக பூர்வகமாக
அதில் இழிகையில் விசுவாசம் இல்லாமை யாகிற புத்தி துர் பல்யம் உடையவர்களுக்கு –

(குண அனுபவம் சிந்திப்பது -அதுவே சித்த உபாயம் -என்ற நினைவே போதும் -முதல் நிலை
சித்த உபாயம் சுலபமானாலும் மஹா விசுவாசம் வேண்டுமே -எனவே இத்தை உபதேசித்து
அதில் துர்லபரானவர்களுக்கு அங்கங்கள் உடன் கூடிய உபாசனை பக்தி யோகம் -)

மாலை நண்ணி தொழுது எழுமினோ –காலை மாலை கமல மலர் இட்டு நீர் –9-10-1-
விண்டு வாடா மலர் இட்டு நீர் இறைஞ்சுமின் –9-10-3-
தேனை வாடா மலர் இட்டு நீர் இறைஞ்சுமின் –9-10-4-
தனதன்பர்க்கு -9-10-5–என்று
பக்தி யுக்தராய் கொண்டு சர்வ காலமும் புஷ்ப்யாதி உபகரணங்களாலே -அவனை சமாராதனம் பண்ணி
அவன் பக்கலிலே பக்தி நிஷ்டர் ஆகுங்கோள் -என்று
அங்க சகிதையான பக்தியை உபதேசித்தும்

அதில் அசக்தருக்கு தாள் அடையும் பக்தி
அதில் துஷ்கரத்வம் -விளம்ப பயம் -ஆகிய வற்றால் அனுஷ்டிக சக்தர் அல்லாதவருக்கு –
சரணமாகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம் மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் -9-10-5–என்று
நிவ்ருத்தி சாத்தியம் ஆகையாலே
ஸூகரமாய்
சர்வாதிகாரமுமாய்
சரீர அவசானத்திலே பல பிரதமுமான பிரபத்தியை வெளி இட்டும்–

——————————————————–

8-அதில் அசக்தருக்கு உச்சாரண மாத்ரம்-
அதாவது
உபாய பல்குத்வ பல கௌரவ விரோதி பூய ஸ்தவங்களாகிற சங்காத்ரயத்தாலே
அதில் வ்யவசாயதுக்கு உடலான சக்தி இல்லாதார்க்கு –
திரு கண்ண புரம் சொல்ல நாளும் துயர் பாடு சாராவே-9-10-10- -என்று
வசனத்தை பற்றாசாகப் பிடித்து அவன் திருத்திக் கொள்ளும் படியான
உச்சாரண மாத்ரத்தை வெளி இட்டும்

சர்வ உபாய சூன்யருக்கு இப் பத்தும் பாடி யிடும் தண்டன் என்று
அதாவது
உச்சாரணம் தனக்கும் தாமாக ஒரு பாசுரம் இட்டு சொல்ல ஷமர் அன்றிக்கே –
கீழ் சொன்ன உபாயங்கள் எல்லா வற்றிலும் -அயோக்யராய் இருப்பார்க்கு –
இப்பத்தும் பாடி யாடி பணிமின் அவன் தாள்களையே -9-10-11-என்று இத் திரு வாய் மொழியை
பிரீதி பிரேரராய் கொண்டு பாடி அவன் திருவடிகளில் விழுங்கோள் என்று

ஸ்ரீ கீதாச்சர்யனைப் போலே அதிகார அனுகுணம் நெறி எல்லாம் உரைக்கிறார் ஒன்பதாம் பத்தில் ..
அதாவது
ஸ்ரீ கீதோ உபநிஷதாச்சர்யன் தன்னுடைய பரம கிருபையால்-
நெறி எல்லாம் எடுத்து உரைத்த –4-8-6-என்கிறபடியே சேதனருடைய ருசி அனுகுணமான உபாயங்கள்
எல்லாவற்றையும் உபதேசித்தாப் போலே
இவரும்
பிராப்தி அணித்தவாறே சம்சாரிகள் ஒருவரும் இழக்க ஒண்ணாது என்கிற கிருபையால் எல்லாம் எடுத்து உரைத்து –
அவ்வவருடைய அதிகார அனுகுணமாக உபாயங்கள் எல்லாம் உபதேசித்து அருளுகிறார்
ஒன்பதாம் பத்தில் என்கை-

————————————————————————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading