ஸ்ரீமான் வேங்கடநாதார்ய: கவிதார்க்கிக கேசரீ |
வேதாந்தாசார்யவர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி ||
எதிர்த்து வாதாடும் பண்டிதர்களுக்குச் சிங்கம் போலவும், சிறந்த செல்வத்தைப் பெற்றவரும் (ஞானம், பக்தி, வைராக்கியம் மற்றும் பல), வேங்கடநாதன் என்ற திரு நாமம் உடையவரும் ஆகிய ஸ்ரீ வேதாந்தாசார்யர் என்னுடைய மனதில் எப்பொழுதும் உறைவாராக.
ராமாநுஜ தயாபாத்ரம் க்ஞான வைராக்ய பூஷணம்
ஸ்ரீமத் வேங்கடநாதார்யம் வந்தே வேதாந்த தேசிகம்
சீரொன்று தூப்புற் றிருவேங் கடமுடையான்
பாரொன்றச் சொன்ன பழமொழியுள் – ஓரொன்று
தானே யமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வானேறப் போமளவும் வாழ்வு
சீர் ஒன்று – சிறப்புப் பொருந்திய; தூப்புல் – தூப்புல் குடியில் அவதரித்த; திருவேங்கடம் உடையான் – வேதாந்த தேசிகர்; பார் ஒன்ற – பூமியில் நிலைத்திருக்கும்படி; சொன்ன – செய்தருளிய; பழமொழியுள்—பழமையான வேத ஸாரமாகிய நூல்களுள்; ஓரொன்றுதானே – ஒவ்வொரு கிரந்தமே; தாரணியில் வாழ்வார்க்கு – இப்பூமியில் வாழும் மனிதர்களுக்கு; வான் – வைகுந்த்த்தை; ஏறப்போம் அளவும் – ஏறியடையும் வரைக்கும்; வாழ்வு – வாழ்வாக; அமையாதோ? – பொருந்தாதோ? (பொருந்தும் என்றபடி)
ஸ்ரீ மல் லஷ்மண யோகீந்த்ர சித்தாந்த விஜய த்வஜம்
விஸ்வாமித்ர குலோத்பூதம் வரதார்யம் அஹம் பஜே –
——————-
சங்கல்ப ஸுர்யோதயத்தில் சொல்கிறார் ;–
யதி , சிஷ்யனுக்கு ஆசீர்வாதம் செய்கிறார்
ப்ரதிஷ்டாபித வேதாந்த : ப்ரதிக்ஷிப்த பஹிர்மத : |
பூயாஸ் த்ரைவித்யமாந்யஸ்த்வம் பூரி கல்யாண பாஜநம் ||
நடாதூர் அம்மாள், ஸ்வாமி தேசிகனைப் பால்ய வயதில் அனுக்ரஹித்த ச்லோகம் .
ஸ்வாமி தேசிகன் , சிறு ுழந்தையாகத் தன்னுடைய மாதுலர் ( மாமா) அப்புள்ளார் ( ஆத்ரேய ராமாநுஜர் )
கூடவே, நடாதூரம்மாளின் காலக்ஷேபத்துக்கு, கச்சிவாய்த்தான் மண்டபத்துக்குப் போனபோது,
நடாதூரம்மாள், குழந்தையான ஸ்வாமி தேசிகனின் திருமுக காந்தியை–முக விலக்ஷணத்தைக் கடாக்ஷித்து ,அநுக்ரஹித்து,-நீ பிற மதங்களைக் கண்டித்து விஸிஷ்டாத்வைத ஸித்தாந்தத்தை நிலை நிறுத்தி மூவுலகிலும் போற்றப்பட்டு ஸகல ஷேமங்களையும் அடைவாயாக -என்று வாழ்த்தி ஆசீர்வாதமாக அருளிய ஸ்லோகம் –
தான் இயற்றிய சங்கல்ப ஸுர்யோதய நாடகத்தில்,
ஸ்வாமி தேசிகன் , யதி (ராஜன் ) தனக்கு ( சிஷ்யன் ) ஆசீர்வாதமாகச் சொன்னதாக, ஒரு காக்ஷியை ஏற்படுத்துகிறார்.இது, ஸ்வாமி தேசிகனுக்கு, யதிராஜரிடம் உள்ள ஆழ்ந்த பக்தியை வெளிப்படுத்துகிறது.
ந்யாஸ திலகத்தில், யதிராஜருடைய ஸம்பந்தத்தால் ,செருக்கு வந்ததாகச் சொல்கிறார்.
உக்த்யா தனஞ்ஜய விபீஷண லக்ஷ்யயாதே
ப்ரத்யாய்ய லக்ஷ்மண முநேர் பவதா விதீர்ணம் |
ச்ருத்வா வரம் ததநுபந்த மதாவலிப்தே
நித்யம் ப்ரஸீத பகவந் மயி ரங்கநாத ||
பெருமைமிகு திருவரங்கச்செல்வனே ! அர்ஜுனனுக்குச் சொன்ன சரம ஸ்லோகத்தையும் ,
விபீஷணணுக்குச் சொன்ன சரம ஸ்லோகத்தையும் சொல்லி, நம்பச் செய்து,
ஸ்ரீ பாஷ்யகாரருக்கு உன்னால் அளிக்கப்பட்ட வரத்தைக் கேட்டு அறிந்து, அவரது ஸம்பந்தத்தால்
செருக்கு நிறைந்த எனக்கு, எப்போதும் வரம் தந்து அருள்வாயாக ! ( வரம் யாதெனில் )
ஸ்ரீ பாஷ்யகாரரின் திருவடிகளிலோ அவரது சிஷ்ய பரம்பரை ஆசார்யர்களிடமோ ,
ப்ரபத்தியாகிய பரண்யாஸத்தைச் செய்தவர்கள் எல்லாருக்கும், பரமபதம் அளிப்பதே ( இன்னும் பல )
———–
தத்வமுக்தா கலாபத்தில் , ஸ்வாமி தேசிகன் சொல்கிறார் ;–
காதா தாதாகதாநாம் களதி கமநிகா காபிலீ க்வாபி லீநா
க்ஷீணா காணாத வாணீ த்ருஹின ஹரதிர: ஸௌரபம் நாரபந்தே |
க்ஷாமா கௌமாரிலோக்திர் ஜகதி குருமதம் கௌரவாத் தூரவாந்தம்
காஸங்கா ஸங்கராதோர் பஜதி யதிபதௌ பத்ரவேதீம் த்ரிவேதீம் ||
யதிராஜர், வேதங்களாகிற பத்ரவேதியை அடைந்தபோது,
புத்த மதம் நழுவுகிறது ; கபில மதம் ஓடி ஒளிகிறது ;கணாமதம் அழிகிறது;
ப்ரஹ்மாவால் தோற்றுவிக்கப்பட்ட யோக மதமும், பசுபதி மதமும் மணம் அற்றதாகிறது;
குமாரில மதம் நசிக்கிறது;குருமதம் , பெருமைக்கு வெகு தொலைவில் எறியப்படுகிறது.
இப்படியிருக்க, சங்கரர் முதலானவர்களின் மதங்களின் நிலையைப் பற்றிச் சந்தேகம் தேவையா ?
—————–
ந்யாய பரிசுத்தியில் , ஸ்வாமி தேசிகன் யதிராஜரை நமஸ்கரிக்கிறார்
பத்யு ஸம்யமிநாம் ப்ரணம்ய சரணௌ தத்பாத கோடிரயோ
ஸம்பந்தேன ஸமித்யமாந விபவாந் தந்யாம்ஸ் ததாந்யாந்குருந் |
ஸுத்தம் ஸம்ஸ்ரித பாதராய ணதநோர் நாராயணஸ்யோக்திபி :
ஸ்ரீமாந் வேங்கடநாயக : ஸ்திதிபதம் நிர்மாதி நீதே :ஸுபம் ||
ஸ்ரீ யதிராஜரை நமஸ்கரித்து, அவருடைய திருமுடி சம்பந்தத்தாலும் திருவடி சம்பந்தத்தாலும் ,
பெருமைகளையும் பாக்யங்களையும் பெற்ற ஆசார்யர்களை நமஸ்கரித்து , பாதராயணராகிய
ஸ்ரீ வேத வ்யாஸரை சரீரமாகக் கொண்ட ஸ்ரீமந்நாராயணனுடைய ஸ்ரீஸுக்திகளைக் கொண்டு,
ஸ்ரீவேங்கடநாதன் ( ஸ்வாமி தேசிகன் ), ந்யாயபரிஸுத்தியை எழுதுகிறார் என்கிறார்.
————–
கத்ய பாஷ்யத்தில், ஸ்வாமி தேசிகன் அருள்கிறார்—-
லக்ஷ்மீ பதேர் யதி பதேஸ்ச தயைக தாம்நோ :
யோஸௌ புரா ஸமஜநிஷ்ட ஜகத்திதார்த்தம் |
ப்ராச்யம் ப்ரகாஸியது வ :பரமம் ரஹஸ்யம்
ஸம்வாத ஏஷ சரணாகதி மந்த்ர ஸார : ||
வாத்ஸல்ய குண பரனான லக்ஷ்மிபதிக்கும், யதிபதிக்கும்
( யதிராஜர் ) உலகத்தாருக்கு நன்மையை அளிக்கும் பொருட்டு,
எந்த ஸம்வாதம் முன்பு நடந்ததோ, த்வய மந்த்ரமான அந்த
ஸம்வாதம் , முன்னோர்கள் உபதேசித்த அந்தப் பரம ரஹஸ்யத்தை நமக்கு வெளிப்படுத்துவதாக———என்கிறார்.
( பங்குனி உத்ர நந்நாளில் யதிராஜர், திருவரங்கத்தில், திவ்ய தம்பதிகளிடம் சரணாகதிசெய்ததையும்,
அப்போது நடந்த ஸம்வாதத்தையும் குறிப்பிடுகிறார் )
—————
வித்ராஸிநீ விபூதவைரி வரூதிநீநாம் பத்மாஸநேந பரிசார விதவ் ப்ரயுக்த
உத் ப்ரேஷ்யதே புத ஜநை உபபத்தி பூம் நா கண்டா ஹரே ஸமஜ நிஷ்ட யதாத்ம நேதி –ஸங்கல்ப ஸூர்யோதய ஸ்லோகம்
நான்முகன் நாராயணனை ஆராதிக்க எந்த மணியை உபயோகித்தாரோ
எந்த மணியின் நாதமே அசுரர்களைப் பயந்து ஓடச்செய்ததோ அந்த மணியின் அவதாரமே இந்த நாடக ஆசிரியர் -தேசிகர்என்று ஞாநிகள் தகுந்த காரணங்களால் ஊகிக்கிறார்கள்
———-
ஸ்வாமி தேசிகன், எம்பெருமானாரின், அவதாரம் என்பதை, ஸ்வாமியின் திருக்குமாரரான ஸ்ரீ நயினாராசார்யர் —
ஸ்ரீமத் வேதாந்த தேசிக மங்களத்தில் புகழ்கிறார்
வேங்கடசாவதாரோயம் தத்கண்டாம் ஸோதவா பவேத் |
யதீந்த்ராம் ஸோதவேத்யேவம் விதர்க்யா யாஸ்து மங்களம் ||
ஸ்வாமி தேசிகன், திருவேங்கடமுடையானுடைய அவதாரமோ? அவரது
திருமணி ஆழ்வாரின் ( கண்டை–கண்டாமணி )அவதாரமோ?
அல்லது, எம்பெருமானார், இப்படி அவதரித்தாரா ? என்று, ஸ்வாமி தேசிகனைத் தரிசிப்போர்
பலபடியாக யூகித்துப் புகழும் ஸ்வாமி தேசிகனுக்கு மங்களம் —–என்கிறார்
———–
அடுத்த ச்லோகத்தில்,
ஸ்ரீ பாஷ்யகார : பந்தாந மாத்மநா தர்ஸிதம் புந : |
உத்தர்த்து மாகமதோ நூந மித்யுக்தாயாஸ்து மங்களம் ||
உலகுக்கு முன்பு வெளிப்படுத்திய விசிஷ்டாத்வைத
சித்தாந்தத்தை, மீண்டும் உலகில் தழைக்கச் செய்ய அவதரித்த
யதிராஜரோ இவர் என்று, வித்வான்களெல்லாம் வியந்து பாராட்டும் வேதாந்தாசார்யருக்கு மங்களம் —————-என்கிறார்
இப்படி, யதிராஜரே , கவிராஜராக –கவி ச்ரேஷ்டராக–ஸ்வாமி
தேசிகனாக அவதரித்தார் என்பது, பூர்வாசார்யர்கள் துணிபு. இந்த கவிராஜருக்கு, யதிராஜரிடம் , அளவில்லாத பக்தி.
———–
ப்ரதிவாதி பயங்கரம் அண்ணன் அருளிய “ஸப்ததி ரத்ன மாலிகா’வில் ஸ்ரீ லக்ஷ்மிஹயக்ரீவன் கிருபையால், ஒரு ச்லோகம் ஸ்புரித்தது.
ஸ்ரீபாஷ்யம் விரசய்ய ஸம்ய மிவரோ ஜித்வா ஸ்வயம் வாதிந :
பாஹ்யாம்ஸ்சாபி குத்ருஷ்டிகாந் புவிபுந : பாஷ்ய ப்ரதிஷ்டாஸயா |
ஸ்ரீமத் வேங்கடநாத தேஸிகசிரோ ரத்நாத்மநா வீர்பபௌ
இத்யேவம் ச வதந்தி ஹந்த !க்ருதிந :த்ரைகாலிக ஜ்ஞாநி ந : ||-12-
ஸ்ரீ உடையவர், ஸ்ரீபாஷ்யத்தை அருளி அவைதிக மதங்களையும் , பிற மதங்களையும் வாதிட்டு வென்றார்.
இவ்வுலகில், ஸ்ரீபாஷ்யம் நிலைபெறவேண்டும் என்கிற க்ருபையால்,அந்த ஸ்ரீ எம்பெருமானாரே
மறுபடியும், ஸ்ரீ வேதாந்த தேசிகனாக அவதரித்தார் என்று, முக்காலத்தையும் உணர்ந்த ஞாநிகள் கூறுகிறார்கள்.
ப்ரதிவாதி பயங்கரம் அண்ணன் , ஸப்ததிரத்ன மாலிகாவில்,
வேதே ஸஜ்ஜாதகேதே முநிஜனவசனே ப்ராப்த நித்யாவ மானே |
ஸங்கீர்ணே ஸர்வ வர்ணே ஸதி ததனுகுணே நிஷ்ப்ரமாணே புராணே ||
மாயாவாதே ஸமோதே கலிகலுஷ வசாச் சூன்ய வாதே அவிவாதே |
தர்மத்ராணாய யோதி பூத்ஸஜயதி பகவான் விஷ்ணு கண்டாவதார : ||
ஸ்வாமி தேசிகன் அவதரித்ததால், அழிந்த வேதங்கள் வளர்ந்தன;
புறக்கணிக்கப்பட்ட புராணங்கள் புத்துயிர் பெற்றன;
வர்ணாஸ்ரம தர்மங்கள் பழைய நிலைக்கு வந்தன;
பௌத்தம் போன்ற அவைதிக மதங்கள் ஒதுக்கப்பட்டன;
—————-
ஓம் கண்டவதாராய நம
ஓம் அநந்தார்ய தநயாய நம
ஓம் வேங்கடாதிபாய நம
ஸ்ரீ மல் லஷ்மண யோக்ய அம்ஸாய நம
ஓம் வரதாச்சார்ய வீஷிதாய நம
ஓம் ராமாநுஜார்ய ஸந் த்ருஷ்டாய நம
ஓம் ஸுபர்ண மநுசிந்தகாய நம
ஓம் தார்ஷ்ய தத்த வராய நம
ஓம் ஸூத்தாய நம
ஓம் ப்ரஸாதித ஹயாநநாய நம-10-
ஓம் அதீத சாங்க ஸகல ஸ்ருதயே நம
ஓம் ஸ்ம்ருதி விதே நம
ஓம் அக்ரண்யே நம
ஓம் இதிஹாஸ புராண ஜ்ஞாய நம
ஓம் ஸூ கவயே நம
ஓம் தர்க்க தத்விதே நம
ஓம் பாஷ்ய காராய நம
ஓம் பய ஹராய நம
ஓம் ஸூதாஸிநே நம
ஓம் துக்க ராஸி க்ருதே நம–20-
ஓம் ப்ரதாந பிரதிதந்தர ஜ்ஞாய நம
ஓம் தேவதா பாரமர்த்யவிதே நம
ஓம் ஸ்ருத வித்யாய நம
ஓம் ஸ்ரா வயித்ரே நம
ஓம் ஸ்ருத பாலாய நம
ஓம் ஸ்ருத ப்ரதாய நம
ஓம் ஸ்ரிதாய நம
ஓம் பாண்டித்ய தாத்ரே நம
ஓம் க்ருத க்ருத்யாய நம
ஓம் க்ருதிநே நம–30
ஓம் ஸூதியே நம
ஓம் நிரஸ்த சாங்க்யாய நம
ஓம் ப்ரத்யுக்த யோகாய நம
ஓம் காணாத பஞ்ஜநாய நம
ஓம் அசிச்சை தந்ய வாதாக்நாய நம
ஓம் க்ஷணி காணு மதார்த்த நாய நம
ஓம் ஸாகாரதீ நிராகர்த்ரே நம
ஓம் ஸூந்ய வாத தமோ நுதாய நம
ஓம் குத்ருஷ்ட் யுரக பஷீ ஸாய நம
ஓம் ஸப்த பங்கீ விலோப நாய நம-40
ஓம் பேத அபேத மதச்சேத்ரே நம
ஓம் தூத யாதவ கல்ப நாய நம
ஓம் அநீஸ வாதி தம் போளயே நம
ஓம் பாஷண்ட மத கண்டனாய நம
ஓம் ஸம் ரக்ஷிதாகமாய நம
ஓம் சங்க சக்ர தாரண ரஷித்ரே நம
ஓம் ஊர்த்வ புண்ட்ர அங்கநத்ராத்ரே நம
ஓம் ஸூத்த ஸத்வ மயாக்ருதே நம
ஓம் யத்யாசார ப்ரதிஷ்டாத்ரே நம
ஓம் ஸர்வ தந்த்ர ஸ்வ தந்த்ரதியே நம–50
ஓம் அவதார ரஹஸ்ய ஜ்ஞாய நம
ஓம் அர்ச்சா சவுந்தர்ய சக்ததியே நம
ஓம் அர்த்த பஞ்சக தத்வஜ் ஞாய நம
ஓம் தத்வ த்ரய விஸேஷ வித நம
ஓம் பக்தி யோக விரோதிக்நாய நம
ஓம் பக்தி மதே நம
ஓம் பகவத் ப்ரியாய நம
ஓம் ஞாந ஏக சாராய நம
ஓம் த்வய விதே நம
ஓம் விபக்தாதி க்ருதி த்ரயாய நம-60-
ஓம் சதுஸ்லோகி அர்த்த ஸாரஜ்ஞாய நம
ஓம் ஸம்யக் ஞாத அங்க பஞ்சகாய நம
ஓம் க்ஷட் அங்க யோக நிர்ணேத்ரே நம
ஓம் ஸப்த தந்து க்ருத உத்தமாய நம
ஓம் அஷ்டாக்ஷர ஏக நிராதாய நம
ஓம் நவமைக ரஸ ஆஸ்ரயாய நம
ஓம் தஸ தாத்பர்ய விஞ்ஞாத்ரே நம
ஓம் ஸத க்ருதே நம
ஓம் ஸஹஸ்ர விதே நம
ஓம் ஸ்தூல லக்ஷயா நம–70-
ஓம் அநேக நாநா கோடி அஜ்ஞாத நிவர்த்தகாய நம
ஓம் தர்ம சங்கவே நம
ஓம் ஸாது பிருந்த வந்தித அங்க்ரி ஸரோருஹாய நம
ஓம் பத்மாஷ அநந்த ஜநகாய நம
ஓம் அநந்த குணாகராய நம
ஓம் த்யாக ஸப்தார்த்த விதே நம
ஓம் தர்ம வேதிந நம
ஓம் விதி விசேஷ விதே நம
ஓம் உத்தம ஸ்லோக பாவஜ் ஞாய நம
ஓம் பஞ்ச கால பராயணாய நம–80-
ஓம் ஸூர ஸேவ்யாய நம
ஓம் பூர்ண மநஸே நம
ஓம் ஸூரீந்த்ர ப்ரதி ரூபகாய நம
ஓம் கவி தார்க்கிக பஞ்சாஸ்யாய நம
ஓம் நிகமாஞ்சல தேஸிகாய நம
ஓம் வைத்யாய நம
ஓம் முநீந்த்ராய நம
ஓம் ஸர்வ ஜ்ஞாய நம
ஓம் உப கர்த்ரே நம
ஓம் குரூத்தமாய நம –90-
ஓம் ஸத் ஸம்ப்ரதாய ஸ்திரதேய நம
ஓம் அநகாய நம
ஓம் ஸத்ய வாஸே நம
ஓம் ஸாது வ்ருத்தயே நம
ஓம் முக்த டம்பாய நம
ஓம் ஜிதாஷாய நம
ஓம் தீர்க்க பந்துமதே நம
ஓம் தயாளவே நம
ஓம் ஸாஸித்ரே நம
ஓம் ஸர்வ ஹிதா சரண தத் பராய நம –100-
ஓம் மஹா குரவே நம
ஓம் ஸ்வர்ண வர்ணாய நம
ஓம் ஸூ பாஹவே நம
ஓம் புண்டரீக த்ருஸே நம
ஓம் பவித்ர பாணயே நம
ஓம் வ்யாக்யாந முத்ராங்கித கராம்புஜாய நம
ஓம் ஸவ்ய பாணி தல ந்யஸ்த திவ்ய புஸ்தக பூஷணாய நம
ஓம் பர ஸீர்க்ஷ ந்யஸ்த வாம பாதாப்ஜ கடக உஜ்ஜ்வலாய நம -108-
—————–
ஸ்ரீ நயினாராச்சார்யர் அருளிச் செய்த ஸ்ரீ வேதாந்த தேசிக பிரபத்தி –
சீரார் தூப்புல் பிள்ளை யந்தாதி என்று செல்லும் தமிழால்
நேராக வேதாந்த தேசிகர் தாளிணைக் கீழ் மொழிந்தேன்
மறைப் பொருள் எல்லாம் எடுத்து இவ்வுலகு உயவே
சீராகிய வரதாரியன் பாதம் துணை நமக்கே –தனியன் –
ஸ்ரீ வரதாச்சார்யர் என்ற திருநாமம் பூண்ட ஸ்ரீ நயினாராச்சார்யர் திருவடிகளே நமக்கு துணை –
ஸ்ரீ மல் லஷ்மண யோகீந்த்ர சித்தாந்த விஜய த்வஜம்
விஸ்வாமித்ர குலோத்பூதம் வரதார்யம் அஹம் பஜே –
———————————————-
பத்து ஸ்லோகங்கள் கொண்ட -ஸ்வாமியின் திருவடிகளின் பெருமையை சொல்லும் பிரபந்தம் –
வித்வந் மதங்க ஜஸிகா பரணாய மானவ் விஸ்வாதி சாயி மஹி மாம்பு நிதான பூமவ்
வித்வேஷி வாதி மகுடீக்ருத குட்டநவ் தவ் வேதாந்த ஸூரி சரணவ் சரணம் பிரபத்யே -1-
வித்வான்களுக்கு சிரோபூஷணம் -ஓத்தார் மிக்கார் இலையாய பெருமைக்கடல் –
பரமதவாதிகள் தலைகளை குட்டும்-ஸ்வாமி திருவடிகளை சரணம் அடைகிறேன் –
விஸ்வம்பராம் அதிதராம் அபி பாசயந்தவ் வின்யாசதோ விவித ஸஜ்ஜன தானுபாவ்யவ்
விஸ்தார ஸம்ஸ்ருதி மஹார்ணவ கர்ண தாரவ் வேதாந்த ஸூரி சரணவ் சரணம் ப்ரபத்யே -2-
திருவடி ஸ்பர்சத்தாலே பூமிப்பரப்பு அனைத்தையும் புனிதமாயும் -நல்லோர்க்கு அனைத்து சுற்றமாயும் –
பிறவிக்கடல் கடத்தும் ஓடகாரன் போன்ற ஸ்வாமி திருவடிகளை சரணம் புகுகிறேன் –
விஸ்வ அந்தராந்த தமஸ ஷபண ப்ரவீணவ் வித்யோதமான நகரேந்து மயூகா ஜாலை
விக்யாத தாமரச சங்க ரதாங்க சின்கவ் வேதாந்த ஸூரி சரணவ் சரணம் ப்ரபத்யே –3-
திரு நகங்களில் தேஜஸ் அந்தகாரங்களைப் போக்குமதாய்-புருஷோத்தம லக்ஷணங்களான –
தாமரை சங்கு சக்கர லஞ்சனைகள் பொருந்திய திருவடிகளை சரணம் அடைகிறேன் –
வித்வேஷமான மத மத்சர வித்விஷவ் யவ் விஷ்ண்வாலயா அநுக மனோத்தம நித்ய க்ருத்யவ்
வேதாந்த வ்ருத்த விஹித அஞ்சலி கோசரவ் தவ் வேதாந்த ஸூரி சரணவ் சரணம் ப்ரபத்யே -4-
த்வேஷம் அஹங்காரம் குலப்பிறப்பால் வரும் கர்வம் அசூயை அனைத்தையும் போக்குமதாய் –
உகந்து அருளினை திவ்ய தேசங்களுக்கு போவதே கர்தவ்யமாக கொண்ட திருவடிகளை –
ஞானிகள் அனைவரும் வணங்கும் திருவடிகளை -அடியேன் சரணம் புகுகிறேன் –
விஷ்ண்வர் பிதாத் மஜன பாக்ய விபாக பூதவ் விப்ராஜமான நவகோக நாதனுகல்பவ்
வேஷாந்தரோ பகத பல்லவ தல்லஜவ் தவ் வேதாந்த ஸூரி சரணவ் சரணம் பிரபத்யே –5-
பர ந்யாஸம் பண்ணின பாக்யவான்களின் புண்யபலமாயும் -விளங்கும் செவ்விய ஆம்பலைப் போன்றதும் –
சிறந்த தளிர் வேற்று உருவம் கொண்டதாயும் உள்ள ஸ்வாமி திருவடிகளைத் தஞ்சம் என்று அடைகின்றேன் –
வேதோ முகைரபி ஸூரைஸ் விஹித பிராணாமவ் வேலாதி லங்கி ஸூஷூமா ஸூ குமார பாவவ்
விஸ்மேரே கேஸரே ல சந்ம்ருது ளாங்குலீ வேதாந்த ஸூரி சரணவ் சரணம் பிரபத்யே –6-
பிரம்மாதி தேவர்களும் தொழுமவையாய் -ஒப்பற்ற அழகு மார்த்வம் யுடையவையாய் –
அழகிய கேசரங்கள் போன்ற மெல்லிய விரல்களை யுடையவையாய் யுள்ள ஸ்வாமி திருவடிகளை சரணம் புகுகிறேன்
வித்ரா விதோத்பட விகார ரஜோ குணவ் தவ் விக்யாத பூரி விபவேன ரஜஸ் கணேன
விஸ்வோபகார கரணாய க்ருதாவதாரவ் வேதாந்த ஸூரி சரணவ் சரணம் பிரபத்யே –7-
திருவடித்த துகளாலே ரஜஸ் போக்கி ஜகாத் அனைத்தும் உய்யும்படி தோன்றிய
ஸ்வாமி திருவடிகளில் அடைக்கலம் புகுகிறேன் –
விஷ்ண்வங்க்ரி நிர்கத சரித் ப்ரவரானுபாவ்யவ் வித்யா வினீத ஜனிதைர் விமலைர் ஸ்வ தீர்த்தைர்
வ்யா நம்ர சிஷ்ய ஜன ரக்ஷண ஜாக ரூகவ் வேதாந்த ஸூரி சரணவ் சரணம் பிரபத்யே –8-
முக்குணம் அற்ற சிஷ்யர்களாலே சேர்க்கப்பட்ட ஸ்ரீ பாத தீர்த்தத்தால் -கங்கையில் புனிதமானவையும்
சிஷ்ய ரக்ஷணத்தில் கண்ணும் கருத்தமாயும் உள்ள ஸ்வாமி திருவடிகளே சரணம் –
வீதீ ஷு ரங்க நகரே க்ருத சங்க்ர மவ் தவ் விஷ்ணு உத்ஸவேஷூ விதி வாசவ ஸேவிதேஷூ
வித்யா வினீத ஜனதா விஹித அநு சாரவ் வேதாந்த ஸூரி சரணவ் சரணம் பிரபத்யே-9-
பிரம்மாதி தொழும் ஸ்ரீ ரெங்க நாதன் திரு வீதிகளில் எழுந்து அருளும் பொழுது அநு யாத்திரையாக எழுந்து அருளுவனவாயும்
முக்குறும்பு அறுத்த பாகவதர்களால் பின் தொடரப்படுமவையாயும் உள்ள ஸ்வாமி திருவடிகளை சரண் அடைகிறேன் –
விஸ்வாச விஷ்ணு பத பக்தி விரக்தி சூன்யம் விப்ரஷ்ட க்ருத்யமபி மாம் விஷயேஷு சக்தம்
வித்வத் சபா அநு கதி யோக்ய மிஹா ததானவ் வேதாந்த ஸூரி சரணவ் சரணம் பிரபத்யே -10-
மஹா விஸ்வாசம் பூர்வகமாக பக்தி வைராக்யம் இல்லாமல் -ஸாஸ்த்ர விஹத கர்மாக்களை செய்யாமல்
சப்தாதி விஷயங்களில் ஈடுபட்ட அடியேனையும் வித்வத் சபைக்கு யோக்யனாக ஆக்கி அருளும்
ஸ்வாமி திருவடிகளைச் சரணம் அடைகிறேன் –
——————————–
சர்வ தந்த்ர ஸ்வ தந்த்ராய ஸிம்ஹாய கவி வாதினாம் வேதாந்தாசார்ய வர்யாய வேங்கடேசாய மங்களம் –1-
நபஸ்ய மாசி ஸ்ரோணாயாம் அவதீர்ணாய ஸூரயே விச்வாமித்ர அந்வயா யாஸ்து வேங்கடேசாய மங்களம் –2-
புரட்டாசி திருவோணம் -விச்வாமித்ர கோத்ரம் –
பிதா யஸ்ய அநந்த ஸூரி புண்டரீகாக்ஷ யஜ்வன பவ்த்ரோ ய தநயா தோதாரம்பாயா தஸ்ய மங்களம் –3-
அநந்த சூரி -தோதாரம்பை தம்பதிகளின் திருப் புத்திரர் -புண்டரீகாக்ஷ சோமயாஜியின் பவ்த்ரர்-இவருக்கு மங்களம் –
வேங்கடேச அவதாரோயம் தத் கண்டாம் சோதவா பவேத் யதீந்த்ராம் சோத வேத்யேவம் விதர்க்யா யாஸ்து மங்களம் -4-
சாஷாத் திருவேங்கடமுடையான் அவதாரம்-திருமணியின் அம்சம் -யதிராஜர் அம்சம் -என்று
கொண்டாடப்படும் ஸ்வாமிக்கு மங்களம்
ஸ்ரீ பாஷ்யகார பந்தானம் ஆத்மனா தர்சிதம் புன உத்தர்தும் ஆகதோ நூனம் இத் யுக்தா யாஸ்து மங்களம் –5-
இராமானுஜ தர்சனத்தை புனர் உத்தாரணம் பண்ண வந்த ஸ்ரீ பாஷ்யக்காரரே இவர்
யோ பால்யே வரதார் யஸ்ய பிராசார்யஸ்ய பராம் தயாம் அவாப்ய வ்ருத்திம் கமித தஸ்மை யோக்யாய மங்களம் –6-
பிராசார்யரான ஸ்ரீ நடாதூர் அம்மாள் எனப்படும் ஸ்ரீ வாத்சல்ய வரதாசார்யர் திரு அருளுக்கு பால்யத்திலே இலக்காகி
ஸ்ரீ அப்புள்ளாராலே பின்பு அருளப்பட்ட ஸ்வாமிக்கு மங்களம் –
ராமாநுஜார்யா தாத்ரேயாத் மாதுலாத் சகலா கலா அவாப விம்சத்யப்தே ய தஸ்மை ப்ராஞ்ஞாயா மங்களம் –7-
அம்மானாகிய ஸ்ரீ கிடாம்பி அப்புள்ளார் இடம் -20-வயசுக்குள் அனைத்தையும் கற்ற ஸ்வாமி
ஸ்ருத பிரகாசிகா பூமவ் யே நாதவ் பரி ரக்ஷிதா ப்ரவர்த்திதா ச பாத்ரேஷு தஸ்மை ஷ்ரேஷ்டாய மங்களம் — 8-
ஸ்ருத பிரகாசிகை ரஷித்து-தக்கவர்கள் மூலம் பரவச செய்த ஸ்வாமி –
சாம்ஸ்க்ருதீபிர் த்ராமி டீபி பஹ்வீபி க்ருதபி ஜனான் ய சமுஜ் ஜீவயா மாச தஸ்மை சேவ்யாய மங்களம் -9-
வடமொழி தென்மொழி ஸ்ரீ ஸூக்திகளால் லோகத்தை உஜ்ஜீவித்தவர் –
யா க்யாதி லாப பூஜா ஸூ விமுகோ வைஷ்ணவே ஜனே க்ரயணீய தஸாம் ப்ராப்த தஸ்மை பவ்யாய மங்களம் –10-
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு -கேசவா புருஷோத்தமா கிளர் சோதியாய் குறளா என்று பேசுவார் அடியார்கள்
எம்தம்மை விற்கவும் பெறுவார்களே-என்றபடி கைங்கர்யம் செய்யும் ஸ்வாமிக்கு மங்களம் –
யஸ்மா தேவ மயா சர்வம் சாஸ்திரம் அக்ராஹி நாந்யத-தஸ்மை வேங்கட நாதாய மம நாதாய மங்களம் –11-
சகல சாஸ்திரங்களையும் ஸ்வாமி இடமே கற்றேன் –
பித்ரே ப்ரஹ்ம உபதேஷ்ட்ரே மே குரவே தைவதாய ச ப்ராப்யாய ப்ராபகா யாஸ்து வேங்கடாயாஸ்து மங்களம் –12-
ய க்ருதம் வரதார்யேண வேதாந்தாசார்ய மங்களம் ஆசாஸ்தே அனுதினம் ஸோபி பவேத் மங்கள பாஜனம்–13-
—————————————————-
இந்த குரு பரம்பரை
ஸ்ரீ ராமானுஜர்
கிடாம்பி ஆச்சான் -ப்ரணதார்த்தி ஹரர்
அவர் குமாரர் -ராமானுஜாச்சார்யார்
அவர் குமாரர் ரங்க ராமானுஜாச்சார்யார்
அவர் குமாரர் ராமானுஜாச்சார்யார் என்னும் அப்புள்ளார்
இவரே வாதி ஹம்ஸ அம்பு வாஹர் என்றும் காஞ்சி கடாம்பூ என்றும் சொல்லப்படுபவர்
இவர் ஸகோதரி -தோதாரம்பை -என்பவளை
அநந்த ஸூரி -என்பவரை திருமணம் செய்தவர்
அநந்த ஸூரி -காஞ்சியில் உள்ள புண்டரீகாக்ஷ ஸூரி யுடைய திருக்குமாரர் –
இந்த தம்பதிக்கே -வேதாந்தச்சார்யார் -திருக்கண்ட அம்சமாக அவதாரம்
அநந்த ஸூரி -74 சிம்ஹாசனாதிபதிகளில் ஒருவராக இருந்தும் தமது மாதுலரான அப்புள்ளார் இடம் ஆஸ்ரயிக்கச் செய்தார்
அப்புள்ளார் ஆச்சார்யரான நடாதூர் அம்மாளும் சிறிய வயதிலேயே அவரைக் கடாக்ஷித்து அருளினார்
தேசிகருக்குப் பின்
ப்ரஹ்ம தந்த்ர ஸ்வ தந்த்ர ஜீயர் -பரகால ஸ்வாமி மடத்துக்கு முதல் ப்ரவர்த்தகர்
தேசிகர் திருக்குமாரர் நாயனாச்சார்யர்
அவர்க்குப் பின்பு
கடிகாசலம் அம்மாள் -இவர் இடம் தான் அஹோபில மட ஸ்தாபகர் ஆதி வண் சடகோப ஸ்வாமி கால ஷேபாதிகள் பெற்றார்
கடிகாசல அம்மாள் திருக்குமாரர் வரத விஷ்ணு வாச்சாரியார்
பரத்வாதி பஞ்சகத்தில் நடாதூர் அம்மாள்
ஸ்ரீ ரெங்கஸ்தல வேங்கடாத்ரி கரிகிர் தயாதவ் சஷ்டோத்தரே
ஸ்தாநே க்ராம நிகேதனேஷு ச ஸதா ஸாந்நித்யமாஸே துஷே
அர்ச்சா ரூபிணாம் அர்ச்சக அபிமதிதஸ் ஸ்வீ குர்வதே விக்ரஹம்
பூஜாம் சாகில வாஞ்சிதான் விதரதே ஸ்ரீ ஸாய தஸ்மை நம
என்று அர்ச்சா மூர்த்திக்கு மங்களா ஸாஸனம் செய்துள்ளார்
—
வடக்கு திரு வீதிப்பிள்ளை சிஷ்யர் கிடாம்பி ஸ்ரீ ரெங்காச்சார்யார்
அவர் குமாரரும் சிஷ்யரும் கேசவாச்சார்யர்
அவர் குமாரரும் சிஷ்யரும் ஸ்ரீ நிவாஸாச்சார்யார்
அவர் குமாரரும் சிஷ்யரும் கேசவாச்சார்யர்
அவர் குமாரரும் சிஷ்யரும் ஸ்ரீநிவாஸாச்சார்யார்
இவர் திரு நாராயண புரத்தில் அவதாரம் -இவரே ஆதி வண் சடகோப யதீந்த்ர மஹா தேசிகன்
அஹோபில மட மூலஸ்தர் –
இவர் நடாதூர் அம்மாளின் திருப்பேரனான ஸ்ரீ வரத விஷ்ணு வாசர் இடம் கிரந்த காலஷேபம் பண்ணினார்
இவர் காலம் -கிபி 1379-1458-
—————-
கவி தார்க்கிக சிம்ஹாய கல்யாண குண சாலினே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –
——————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நயினாராச்சார்யர் சுவாமி திருவடிகளே சரணம்-
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply