ஸ்ரீ நஞ்சீயர் அருளிச் செய்த ரஹஸ்யங்கள் –ஆத்ம விவாஹம்-முமுஷு க்ருத்யம்-ஸாமக்ரீ பரம்பராநாதம்-அவஸ்தா த்ரயம்–

நமோ வேதாந்த வேத்யாய ஜகந் மங்கள ஹேதவே
யஸ்ய வாகம்ருத ஸார பூரிதம் புவந த்ரயம்நஞ்சீயருடைய தனியன்:

மூவுலகுக்கும் மங்களம் சேர வேதாந்த சாரமான தம் அமுத வாக்குகளைப் பொழியும் வேதாந்தி நஞ்சீயரை வணங்குகிறேன்.

திருநக்ஷத்ரம்: பங்குனி, உத்திரம்

அவதார ஸ்தலம்: திருநாராயண புரம்

ஆசார்யன்: பராசர பட்டர்

ஶிஷ்யர்கள்: நம்பிள்ளை, ஸ்ரீ ஸேனாதிபதி ஜீயர் மற்றும் பலர்

பரமபதித்த இடம்: ஸ்ரீரங்கம்

அருளிச் செய்தவை: திருவாய்மொழி 9000 படி வ்யாக்யானம், கண்ணி நுண் சிறுத் தாம்பு வ்யாக்யானம், திருப்பாவை வ்யாக்யானம்,  திருவந்தாதிகளுக்கு வ்யாக்யானம், சரணாகதி கத்ய வ்யாக்யானம், திருப் பல்லாண்டு வ்யாக்யானம், நூற்றெட்டு (108) என்ற ரஹஸ்ய த்ரய விவரண க்ரந்தம் – இவற்றுள் பல தற்பொழுது இல்லை.

இவருடைய பெற்றோர்கள் ஸ்ரீமாதவர் என்ற திரு நாமத்தை இவருக்குச்  சூட்டினார்கள். சிறிய வயதில் மிகப் பிரபலமான அத்வைத பண்டிதராக ஆனார். இறுதியில் பட்டர் இவருக்கு நஞ்சீயர் என்ற திரு நாமத்தைச் சூட்டினார். இவருக்கு நிகமாந்த யோகி மற்றும் வேதாந்தி என்ற திருநாமங்களும் உண்டு.

தெண்டிரை சூழ் திருவரங்கம் செழிக்க வந்தோன் வாழியே
சீ மாதவனென்னும் செல்வனார் வாழியே
பண்டை மறைத் தமிழ்ப் பொருளைப் பகர வந்தோன் வாழியே
பங்குனியில் உத்தர நாள் பாருதித்தான் வாழியே
ஒண்டொடியாள் கலவி தன்னை யொழித்திட்டான் வாழியே
ஒன்பதினாயிரப் பொருளை யோதுமவன் வாழியே
எண்டிசையும் சீர் பட்டர் இணை யடியோன் வாழியே
எழில் பெருகும் நஞ்சீயர் இனிதூழி வாழியேநஞ்சீயருடைய வாழி திருநாமம்:

————-

ஆத்ம விவாஹம்

ஸ்ரீ யபதி யாகிற
காள மேகத்தில் இருந்து ஸுஹார்த்தம் என்கிற தொரு பாட்டம் மழை பொழிந்து
கிருபையாகிற நிலத்திலே
ஜீவனாகிற ஒவ்ஷதி முளைத்து(
இது சரீர ஜென்மம்)

ஆசார்யனாகிற பிதா
விரஹம் என்கிற ஸங்கமத்தாலே
ஞானமாகிற மாதாவின் பக்கலிலே சேர்ந்து
ஜீவாத்மா என்கிற பெண் பிள்ளை பிறக்க
(இது ஞான ஜென்மம்-அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின்பு மறந்திலேன்)

(ஈஸ்வரஸ்ய ஸுஹார்த்தம் —
யாதிருச்சா ஸூஹ்ருதம்
விஷ்ணோ கடாக்ஷம்
அத்வேஷம்
ஆபி முக்யம்
சாத்விக சம்பாஷணம்
ஆச்சார்ய பிராப்தி )

(கிருபை -ஸ்வார்த்த நிரபேஷ பர துக்க அஸஹிஷ்ணுத்வம்)

(வித்யைத் தாயாகப் பெற்று ,
பாலும் அமுதமுமான திரு நாமத்தாலே
திரு மகள் போல் வளர்த்த
தஞ்சமாகிய தந்தை
மற்று ஒருவருக்கு பேச்சு உட் படாமல்
விஸ்வபதி லோக பர்த்தா என்னும் மணவாளரை
நாலு இரண்டு இழை கொண்டு
முப்பிரியான
ப்ரஹ்ம ஸூத்ர பந்ததோடே வரிப்பிக்க ,
பரம் புருடன் கைக் கொண்ட பின்
சதுர்த்தியுள் புக்கு
இடை ஈடு நடுக் கிடக்கும் நாள் கழித்து
ஜன்ம பூமியை விட்டகன்று
சூழ் விசும்பிற் படியே உடன் சென்று
குடைந்து நீராடி
வியன் துழாய் அஞ்சனத்தின் நீறு
நானப் பொடி பீதக ஆடை பல் கலன் கொண்டு
நோக்கியர் அலங்கரித்துப்
பல்லாண்டு இசைத்துக்
கவரி செய்ய
நிறை குடம் விளக்கம் ஏந்தி
இள மங்கையர் எதிர் கொள்ள
வைகுந்தம் புக்கிருந்து
வாய் மடுத்து பெரும் களிச்சியாக
வானவர் போகமுண்டு
கோப்புடைய கோட்டுக் கால் கட்டில் மிதித்து
ஆரோஹித்து
பரத அக்ரூர மாருதிகளைப் பரிஷ்வங்கித்த மணி மிகு மார்பிலே
குருமா மணியாய் அணையும் வஸ்துவுக்கு
மணி வல்லி பேச்சு வந்தேறி அன்று —ஆச்சார்ய ஹிருதயம்–சூரணை -121-)

ருசி யாகிற ஜீவனத்தை யிட்டு வளர்த்துக் கொண்டு போந்து
விவேகமாகிற பக்வம் பிறந்தவாறே
பரம சேஷிகளாகிற ஸ்ரீ வைஷ்ணவர்கள் திரளைச் சேர்த்து
எம்பெருமானாகிற வரன் கையில்
ஸ்வரூப ஞானம் என்கிற தாரை வார்த்துக் கொடுக்க

அவனும் சேஷத்வமாகிற மந்த்ர வாஸஸ்ஸை யுடுத்தி(எட்டு இழையாய் மூன்று சரடாய் -திருமந்திரம்)
சேஷ வ்ருத்தி யாகிற மங்கள ஸூத்ரத்தையும் கட்டி
ரூப (
ராமானுஜ தாஸ்ய)நாமங்களாகிற ஆபரணங்களையும் பூட்டிக்
கையைப் பிடித்துக் கொண்டு போந்து
அத்யவசாயம் என்கிறதொரு ஆஸனத்திலே கொண்டிருந்து

வ்யாபக ஞானம் என்கிற ஸமிதைகளை இட்டு
ஸித்த உபாய ஸ்வீ காரம் என்கிற ப்ரதாந ஹுதியைப் பண்ணி
ஸாஸ்த்ரங்கள் ஆகிற பொரியைச் சிதறி
ஸம்பந்த ஞானம் என்கிற பூர்ணாஹுதியாலே பிராப்தி பிரதிபந்தங்களை நிஸ் ஸேஷமாக்கி

நிர்ப் பரத்வ அநுஸந்தானம் பண்ணுவிக்கிற பூர்வாச்சார்களாகிற பந்துக்கள் முன்னிலையாக
மாதா பிதாக்கள் (
ஞானமும் ஆச்சார்யரும் )சேர இருந்து காட்டிக் கொடுக்க

ஆழ்வார்கள் ஈரச் சொல்லாகிற மூப்போடே சேர விட்டு(பொழுது போக்கு அருளிச் செயல்களே அன்றோ)
வாத்சல்யாதி குண யுக்தனானவன் தான் பர்த்தாவான ஆகாரம் குலையாதபடி அணைத்துக் கொண்டு போந்து
தானும் தன் ப்ரதான மஹிஷிகளும் கூட அந்தப்புரக் கட்டிலிலே கொண்டு போய்

அந்தமில் பேரின்பத்து அடியாராகிற பந்துக்களோடே கொண்டு சேர்த்து
ஹர்ஷ ப்ரகர்ஷத்தோடே அங்கீ கரித்து
ப்ரீதி வெள்ளமாகிற படுக்கையிலே கொண்டு போய்
விஷய வைலக்ஷண்யங்களாலே போக யோக்யங்களோடே ஸகல வித கைங்கர்யங்களாகிற அனுபவத்திலே மூட்டி

ஆனந்தமாகிற பெருக் காற்றூடே ஆழங்கால் பட்டு
நமஸ் என்பது
போற்றி என்பது
ஜிதம் என்பது
பல்லாண்டு என்பதாகா நிற்கும்

விவாஹம் -இரண்டு வியக்திகள் -ஸஹ தர்ம ஸாரிணீ –ஐக்யம் இல்லை
தர்ம ப்ரஜாப்யாம் விரீஹீ மம–தர்மத்துக்கவும் நல்ல பிரஜைகளை பெறவும் உனது கையைப் பிடிக்கிறேன்

பக்தி -ப்ராப்ய ருசி -கைங்கர்யத்துக்குப் பூர்வ பாவி -சாதனமாக இல்லை-

மிலேச்சனும் பக்தனானால் ஆகலாம்–துர்லபம் -அபி சேத் துசாச்சார-

பக்தன் வர்ணம் -பிறந்தவுடன் கிட்டும் -ஆஸ்ரமம் -கைங்கர்ய நிஷ்டை -வர்ணாஸ்ரம தர்மம்
சம்சாரத்தில் விவாஹம்
அங்கு புகுந்து போக அனுபவம்

—————

முமுஷு க்ருத்யம்(ஞானமும் அனுஷ்டானமும் க்ருத்யங்கள்)

நான்கு நிலைகள் —
முதல் படிக்கட்டு -58–யத்னம் முயலுவது முதல் நிலை
வ்யதிரேக
ஏகேந்த்ர
வசீகரா சமஞ்ஞா –
இந்திரியங்களை அடக்கி –68-வரை -சொல்லி -பலாத்காரமாக -முயன்றாலும் -ஆசை திருப்ப வேன்டும் –
வ்யதிரேகம் அடுத்து மனஸ் அப்புறம் ஏகேந்த்ரியம்
வசீகரம் அனைத்தையும் அடக்குவது

அஞ்ஞர்
ஞானி
ஞான விசேஷஞ்ஞர்
ஸர்வஞ்ஞன்–இவ்வாறு நான்கு வகை ஆழ்வார் உபதேசம்-

அஞ்ஞான சமயத்திலும்
ஞான சமயத்திலும்
ஞானம் பக்குவமான சமயத்திலும்
ஞான பலமான ப்ராப்தி சமயத்திலும்

1-மாதா பிதாக்களோடு
2-ரூப நாமங்களோடு
3-போஜநாதிகளோடு
4-ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளோடு
5-விதி நிஷேதங்களோடு
6-தேச வாஸங்களோடு
7-பந்து வர்க்கத்தோடு
8-ஐஸ்வர்யாதிகளோடு
9-ப்ரார்த்தனைகளோடு
வாசியற பேதித்து இருக்கும்

முதல் அடியான அஞ்ஞான ஸமயத்தில்
விவேகம் சஞ்சரியாமையாலே -சரீரமேவ மாதா பிதரவ் ஜனயத -என்று கேவலம் (
மட்டுமே -ஞான ஜென்மத்தை அறியாமல்)சரீரத்தைப் பெற்றவர்களையே மாதா பிதாக்களாக அபிமானித்து
அவர்களிட்ட பேரும்
அவர்கள் நியமித்த ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளும்
அவர்களை அனுவர்த்தித்து
அத்தாலே வந்தேறியான (
ஸ்வா பாவிகம் அன்றே)ரூப நாமங்களும்
அவர்கள் விரும்பின பந்து வர்க்கமும்
அவர்கள் வம்ஸ அபிமானமும் ஐஸ்வர்யமும்
அவர்கள் கற்பித்த ஸம்ஸார வர்த்தகமாய் இருப்பன சில பிரார்த்தனைகளுமாய்
ஸம்ஸாரத்தில் என்னை விஞ்சினார் இல்லை என்று தன்னை சமாதிக தரித்ரனாய் அபிமானித்து மேனாணித்து இறுமாந்து இருக்கும்

ஞானம் பிறந்த சமயத்தில்
அஞ்சு சேர் ஆக்கையான கேவல சரீரமே அன்று
ப்ரக்ருதே பரனாய்
பஞ்ச விம்சகனாய்
ஸ்வஸ்மை ஸ்வயம் ப்ரகாசனாய்(
அஜடமாய்-தர்ம பூத ஞானமும்- தர்மி ஞானமும் உண்டே ஜீவாத்மாவுக்கு-தானே பிரகாசிக்கும் -தனக்கு பிரகாசிக்கும்)
ஏக ரூபனாய்
ஞான ஆனந்த ஸ்வரூபனாய்
அச்சேத்யனாய்
அதாஹ்யனாய்
அக்லேத்யனாய்
அசோஸ்யனாய்

(நைநம் சிந்தந்தி ஸஸ்த்ராணி நைநம் தஹதி பாவக–
ந சைநம் க்லேத யந்த்யாபோ ந ஸோஷயதி மாருத—৷৷2.23৷৷

இவ் வாத்மாவை
ஆயுதங்கள் வெட்டுவது இல்லை –
நெருப்பு எரித்து அழிப்பது இல்லை –
நீர் கரைத்து அழிப்பது இல்லை –
காற்று உலர்த்தி அழிப்பது இல்லை-
வெட்ட முடியாதே -கொழுத்த முடியாதே -நனைக்க முடியாதே -உலர்த்த முடியாதே – -இங்கு சோகம் இல்லாதவனாய்)


ஜனன மரணாதிகள் இன்றிக்கே இருப்பவனாய்
நித்யனாய் இருப்பானொரு ஆத்மா உண்டு
வேத ஸாஸ்த்ரங்களும் உண்டு
புண்ய பாபங்களும் உண்டு
வர்ணாஸ்ரமங்களும் உண்டு
கீழ் நின்ற நிலைகள் பாப விகாரத்தால் ப்ரமித்த இத்தனை என்று உணர்ந்து நெகிழ்ந்து

ஸ ஹி வித்யாதஸ் தம் ஜநயதி -(போதாயன தர்ம ஸாஸ்த்ரம்)-என்கிறபடியே வேத ஸாஸ்த்ரங்களை மாதாவாகவும்
தத் ப்ரதாநம் பண்ணினவனை பிதாவாகவும் அபிமானித்து
அந்த ஸாஸ்த்ரம் விதித்தபடியே போஜனாதிகளும் ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளும் விதி நிஷேதங்களும்
வேத ஸாஸ்த்ரம் சொன்னவர்களையே பந்துக்களாகவும்(
இவர்களே ஆத்ம பந்துக்கள்) அந்த ஸாஸ்த்ர அபிமானத்தாலே வந்தேறின ரூப நாமங்களும்-ஸாஸ்த்ர அப்யாஸம் பண்ணுவதான தேஸம் தேஸமாயும்
ஸாஸ்த்ரத்தையே ஐஸ்வர்யமாகவும் (
அந்தணர் மாடு)பிரார்த்தனைகளாகவும் அபிமானிகளாகவும்
ஆத்ம அபிமானிகளில் (
ஆத்ம அபிமானிகளாய் -சேஷன் பரதந்த்ரன் புரியாமல்)என்னை விஞ்சினார் இல்லை என்று தன்னை சமாதிக தரித்ரனாய் அபிமானித்து மேனாணித்து இறுமாந்து இருக்கும்-

ஞானம் பக்குவமான ஸமயத்தில்
ஸகல வேத ஸாஸ்த்ரங்களையும் ஆராய்ந்து பார்த்தால் ஆத்மாவினுடைய ஸ்வா தந்தர்யம் விநாஸகம் என்றும்
ஈஸ்வரனுடைய ஸ்வா தந்தர்யம் இவனைக் கரை ஏற்றும் என்னும் இடமும்
பரவா-நஸ்மி -(
உனக்கு உரியவனாக இருக்கிறேன்)என்றும்
தாஸ பூதாஸ் ஸ்வதஸ் ஸர்வே ஹ்யாத்மநஸ் பரமாத்மநஸ் நான்யதா லக்ஷணம் தேஷாமே –என்றும்
ஆத்ம தாஸ்யம் ஹரே ஸ்வாம்யம் ஸதா ஸ்மர –என்றும்
இத்யாதி ப்ரமாணங்களாலும்
ஆலோக்ய ஸர்வ சாஸ்த்ராணி -என்று பிரமாணங்கள் சொல்லுகையாலும்

(அறிந்து அறிந்து தேறி தேறி)கீழ் நின்ற நிலைகள் அடைய நெகிழ்ந்து
தத்வ த்ரய ஞான விஷயத்தையும்
தத்வ த்வய விஷய வைராக்யத்தையும்(
அளவில்லா சிற்றின்பமும் -கைவல்யமும் ஒழித்து)
தத்வ ஏக விஷய பக்தியையும் யுடையனாய்

(மந் மநா பவ மத் பக்தோ மத் யாஜீ மாம் நமஸ் குரு–மாமே வைஷ்யஸி ஸத்யம் தே ப்ரதிஜாநே ப்ரியோஸி மே–৷৷18.65৷৷)
தத்வ ஹிதங்களை அறியும் போது கைப் பறி பறித்துக் கிடந்தானை கண்டு ஏறி அறியுமது அல்லாமையாலே
லோகத்தில் அர்த்த காம உபஹதன் அன்றியிலே
வேத ஸாஸ்த்ர நிதான ஞானனாய் -லோக பரிக்ரஹமும் யுடையனாய் இருந்துள்ள ஆச்சார்யன் ஸ்ரீ பாதத்தில் சென்று கண்ணும் கண்ணீருமாய்
கீழ் தேஹாத்ம அபிமானியுமுமாய்
கேவல அபிமானியுமாய்
தான் பட்ட அநர்த்தம் எல்லாம் நேராக விண்ணப்பம் செய்ய

ஆச்சார்யன்
தன் நிரவதிக கிருபையாலே இவன் கண்ணீரைத் துடைத்து இரண்டு பங்குக்கு ஒரு கை யோலை போலே
ஈஸ்வர ஸ்வா தந்தர்யத்துக்கும் ஆத்ம பாரதந்தர்யத்துக்கும் வாசகமாய்
அகாரோ விஷ்ணுர் இத் யுக்தோ -மகாரோ ஜீவ வாசக -தாயோஸ் து நித்ய ஸம்பந்த -உகாரேண ப்ரகீர்த்தித -என்று
இவ் வாத்மாவுக்கும் எம்பெருமானுக்கும் ஒழிக்க ஒழியாத ஸம்பந்தத்துக்கு(
விதி வாய்க்கின்றது காப்பார் யார் -நிர்ஹேதுக நிரவதிக கிருபா வர்ஷம்)
எட்டு இழையாய் மூன்று சரடாய் இருப்பது (
எட்டு அக்ஷரங்கள் மூன்று பதங்கள்-லோகத்தில் இரண்டும் பதினாறுமாய் இருக்குமே)ஒரு மங்கள ஸூத்ரம் உண்டு என்று திரு மந்த்ரத்தை ஆச்சார்யன் தன்னிரக்கத்தாலே அருளிச் செய்து
ஸ்வரூபத்தில் உணர்த்தியோடும்
ஸ்வ ரக்ஷணத்தில் அசக்தியோடும்
ஈஸ்வரனையே பேணிக் கொண்டு அர்த்தி என்று அருளிச் செய்து அருளினால்

தான் நின்ற நிலைகளை அடைய உணர்ந்து நெகிழ்ந்து
பெற்றார் பெற்று ஒழிந்தார் என்றும்
பெற்ற தாய் நீயே பிறப்பித்த தந்தை நீ -என்றும்
பெற்றாரும் சுற்றமும் என்ற இவை பேணேன்-நான் என்றும்
தாயே தந்தை என்று தொடங்கி -நோயே பட்டு ஒழிந்தேன் -என்னும் அளவும் சொல்லுகிறபடியே

(பெற்றார் பெற்று ஒழிந்தார் பின்னும் நின்று அடியேனுக்கு உற்றான் ஆய் வளர்த்து என் உயிர் ஆகி நின்றானை-முற்றா மா மதி கோள் விடுத்தானை எம்மானை-எத்தால் யான் மறக்கேன்? இது சொல் என் ஏழை நெஞ்சே)

(பெற்ற தாய் நீயே பிறப்பித்த தந்தை நீ–மற்றையார் ஆவாரும் நீ பேசில் எற்றேயோமாய -மா மாயவளை மாய முலை வாய் வைத்த நீ அம்மா காட்டும் நெறி?-பெரிய திருவந்தாதி -5)

(பெற்றாரும் சுற்றமும்* என்று இவை பேணேன்நான்*மற்றுஆரும் பற்றுஇலேன்* ஆதலால் நின்அடைந்தேன்*உற்றான்என்று உள்ளத்து வைத்து* அருள் செய்கண்டாய்,*கற்றார்சேர்* கண்ணபுரத்து உறை அம்மானே!)

(நைமிசாரண்யத்தில் முதல் சரணாகதி திருவேங்கடத்தில் இரண்டாவது சரணாகதி –தாயே தாரமே நோயே ஏவகாரங்கள் மிக்கு அருளிச் செய்கிறார்)

அல் வழக்கு ஒன்றும் இல்லா தேஹாத்ம பிரமம் முதல் அல் வழக்கு -அஷ்ட ஸ்லோஹீ அனைத்தையும் விளக்கும்

தேஹா ஸக்தாத்ம புத்திர் யதிபவதி பதம் ஸாது வித்யாத்ருதீயம்
ஸ்வாதந்த்ர்யாந்தோ யதிஸ்யாத் ப்ரதமம் இதர சேஷத்வதீஸ்சேத் த்விதீயம் |
ஆத்ம த்ராணோந் முகச்சேத் நம இதி ச பதம் பாந்தவாபாஸ லோல:
சப்தம் நாராயணாக்யம் விஷய சபல தீஸ்சேத் சதுர்த்தீம் ப்ரபன்ன: ||
-அஷ்ட ஸ்லோஹீ-4-

பிரபத்தி என்னும் சரணாகதி உபாயத்தை ஏற்றுக்கொண்டவனுக்கு இவ்வுலக வாழ்க்கையில் அவ்வப்போது ஏற்படும் சந்தேஹங்களுக்கு இந்த ஸ்லோகத்தில் விளக்கம் கூறப்படுகிறது. உடலைவிட வேறு ஜீவன் இல்லை என்கிற ஸந்தேஹம் எழும்போது மூன்றாம் பதமான மகாரத்தைக் கூர்ந்து கவனித்துத் தெளிவு பெறுக. மகாரப் பொருள் ஞாநம், அறிவில்லாத தூக்கம், மரணம் முதலிய நிலைகளிலும் உடல் இருப்பதால் அறிவுக்கு ஆதாரமாக இவ்வுடலைக் கூறுவதற்கில்லை என்று அறியலாம். அறிவாதாரமாக ஆத்மாவை அறிந்தபின் அவன் சுதந்திரனா என்கிற சந்தேஹத்தை ப்ரதம பதமான அகாரத்தின் பொருளாகவே தெளிய வேண்டும். ஆத்மா நாராயணனுக்கு உரியவன் என்று தெரிந்ததும் இரண்டாவது பதமான உகாரம் நாராயணனுக்கே உரியவன் மற்றவர்களுக்கு உரியவனல்லன் என்பதைத் தெரிவிக்கிறது. ​தன் ரக்ஷணத்தில் முயற்சி உண்டாகும்போது ​’நம:’பதத்தின் பொருள் உணரத்தக்கது. எனக்குரியனல்லன் என்பது அதன் பொருள். ஆபாஸ பந்துக்களான தேஹ ஸம்பந்தமுள்ளவர்களிடத்தில் நசை உண்டாகும் போது நாராயண என்னும் பதப் பொருள் நோக்கத் தக்கது. அதனால் அவனோடு உண்டான நித்ய ஸம்பந்தம் அறியலாம். சப்தாதி விஷயங்களில் பற்றுண்டாம் போது சதுர்த்தியின் பொருள் உணரத் தக்கது. அவனிடத்தில் கைங்கர்யமே சேதனனுக்கு ஸ்வரூபம் என்பது புலப்படும். இவ் விதம் உலக வாழ்க்கையில் ஏற்படும் அல்ப ஆசைகளைக் கழித்துக் கொள்ள வேண்டியது.

தேக ஆசக்த -ஆத்மபுத்தி -பவதி யதி-
தேஹத்திலே ஊன்றின ஆத்மபுத்தி -தேகாத்ம ப்ரமம் யுடையவனாகில் –
த்ருதீயம் பதம் சாது வித்யாத் –
பிரணவத்தில் மூன்றாவது பதமான மகாரார்த்தை நன்கு நோக்கக் கடவன்-
ஸ்வாதந்த்ர்ய அந்தோ யதி ஸ்யாத் ப்ரதம மிதர சேஷத்வதீச் சேத த்வதீயம்
ஸ்வா தந்த்ர்ய அந்த ச்யாத்யாதி-
ஸ்வ தந்திர ஆத்ம ப்ரமம் யுடையவனாகில்
பிரதம பதம் வித்யாத் –
முதல் பதமான லுப்த சதுர்த்தியோடு கூடின அகாரார்த்தை நோக்கக் கடவன்
இதர சேஷத்வதீ சேத்-
அந்ய சேஷத்வ ஜ்ஞானம் யுடையவன் ஆகில்
த்வதீயம் பதம் வித்யாத்
இரண்டாவது பதமாக உகாரத்தை நோக்கக் கடவன் –
ஆத்மத்ராண உந்முகச் சேத நம இதி ச பதம் பாந்தவா பாசலோலா-சப்தம் நாரயணாக்க்யம்-
ஆத்மத்ராண உந்முக சேத் –
ஸ்வ ரஷணத்தில் ஊக்கம்  யுடையவன் ஆகில்
நம இதி பதம் வித்யாத் –
நம என்ற நடுப்பதத்தை நோக்கக் கடவன் –
பாந்த ஆபாஸ லோல –
ஆபாஸ பந்துக்களின் இடத்தில் ஆசக்தி யுடையவன்
நாராயணாக்யம் சப்தம் வித்யாத்
நாராயண பதத்தை நோக்கக் கடவன் –

விஷய சபலதீச் சேத சதுர்தீம்
சப்தாதி விஷயங்களில் ஊன்றின புத்தியை யுடையவனாகில்
நாராயண பதத்தின் மேல் யுள்ள
வ்யக்த சதுர்த்தியை நோக்கக் கடவன்

ப்ரபன்ன
இப்படி எல்லாம் நோக்கக் கடவனான அதிகாரி யார் என்னில்
பிரபன்ன அதிகாரி –

திருமந்தரம் சப்த சக்தியாலும் அர்த்த சக்தியாலும் ரஷணம் செய்து அருளும் –
உபாசனர் ஜபம் -செய்து சப்த சக்தியால் பெறுவார்
பிரபன்னர் எம்பெருமானே உபாயம் உபேயம் – என்
முமுஷூப்படி -எம்பிரான் எந்தை என்கையாலே –
நான் பிறர்க்கான அன்றும் அவன் நமக்காக இருக்கும் –
இரா மடமூட்டுவாரைப் போலே உள்ளே பதி கிடந்தது சத்தையே பிடித்து நோக்கிக் கொண்டு போரும் –
நாராயண -கரேன வ்யுத்பத்தியும் கர்மணி வ்யுத்பத்தியும் சாஸ்திர சித்தம்
ஈயதே அசௌ இதி அயநம்-என்கிற இது கர்மணி வ்யுத்பத்தி  -உபேயத்வம் பலிக்கும்
தாயாய் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய் -சர்வபிரகார விசிஷ்டமாய்
எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம் –என்னுடை வாணாள் -திருமங்கை ஆழ்வார் –

மேல் ஏழாவதாக உற்றதும் உனது அடியார்க்கு அடிமை-
ஏழு நாழிகையுடன் -தொண்டமான் சக்கரவர்த்திக்கு -ஏழு அல் வழக்குகள்
அடுத்து ஸ்வார்த்த கைங்கர்யம் இல்லாமல் அவனுக்கே என்று இருந்து -படியாய்க் கிடந்தது பவள வாய் காண்பது எட்டாவது –

—–

திருமந்திரத்தை மாதாவாகவும்
ஆச்சார்யனைப் பிதாவாகவும் -அபிமானித்து
ஆச்சார்யன் திரு உள்ளமான ரூப நாமங்களும் -போஜ நாதிகளும் -ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளும் விதி நிஷேதங்களும்
ஆச்சார்யன் விரும்பி வர்த்திக்கும் தேஸம் நித்ய தேஸ வாஸமாகவும்
ஆச்சார்யன் திரு உள்ளத்தாலே ஸஹ வாஸ யோக்யராய் கற்பித்த பரம ஸத்வ நிஷ்டரான-ஸ்ரீ வைஷ்ணவர்களையே தனக்குப் பந்துக்களாகவும்
அவர்கள் தங்களுக்கு ஐஸ்வர்யமாக அபிமானித்து இருக்கும் ஆச்சார்ய கைங்கர்யமே தனக்கு ஐஸ்வர்யமாகவும்
அந்தக் கைங்கர்யத்தின் மேலுண்டான ப்ரார்த்தனையையே தனக்கு தேஹ யாத்ரையாகவும் நினைத்து

குலங்களாய ஈரிரண்டில் ஒன்றிலும் பிறந்திலேன் –நின்னிலங்கு பாதம் இன்றி மற்றோர் பற்றிலேன் -(குலங்களாய ஈரிரண்டில்* ஒன்றிலும் பிறந்திலேன்,* நலங்களாய நற்கலைகள்* நாலிலும் நவின்றிலேன்,* புலன்கள் ஐந்தும் வென்றிலேன்* பொறியிலேன் புனித,* நின்-இலங்கு பாதம் அன்றி* மற்றுஒர் பற்றுஇலேன் எம் ஈசனே!)என்றும்
கற்றிலேன் கலைகள் –நற்றுணையாகப் பற்றினேன் அடியேன் -(
கற்றிலேன் கலைகள் ஐம்புலன் கருதும்*  கருத்துளே திருத்தினேன் மனத்தை* -பெற்றிலேன் அதனால் பேதையேன் நன்மை*  பெரு நிலத்து ஆர் உயிர்க்கு எல்லாம்*-செற்றமே வேண்டித் திரிதர்வேன் தவிர்ந்தேன்*  செல் கதிக்கு உய்யும் ஆறு எண்ணி*  நல் துணை ஆகப் பற்றினேன் அடியேன்*  நாராயணா என்னும் நாமம்.)என்றும்
போது எல்லாம் போது கொண்டு உன் பொன்னடி புணைய மாட்டேன் -ஏதிலேன் அரங்கர்க்கு (
போது எல்லாம் போது கொண்டு உன் பொன்னடி புனைய மாட்டேன்தீதிலா மொழிகள் கொண்டு உன் திருக் குணம் செப்ப மாட்டேன்காதலால் நெஞ்சம் அன்பு கலந்திலேன் அது தன்னாலேஏதிலேன் அரங்கற்கு எல்லே என் செய்வான் தோன்றினேனே)என்றும்
நாட்டோரோடு இயல் ஒழிந்து -என்றும்
நாட்டு மானிடத்தோடு எனக்கு அரிது -என்றும் சொல்லுகிறபடியே
தன் வேறுபாடு தோற்ற இந் நிலத்தில் பொருந்தாமையும்
பொருந்தின நிலத்தில் புகப் பெறாமையும் ஆகிய
பேகணிப்பு அடியிலே தோன்றும்படி
நிர் மமனாய்
மோக்ஷ ப்ரதானனான எம்பெருமானைக் கிட்டி வாழும் அளவும் ஞான ப்ரதானனான ஆச்சார்யன் நிழலிலே ஒதுங்கி
அவன் ப்ரீதிக்கு வர்த்தகனாய் இருந்தவிடம் அறியாமல் இருக்கும்

(கொக்கு போலே -கோழி போலே -உப்பு போலே உம்மைப் போலே
ஸ்வார்த்ததை இல்லாமல் இருக்க வேண்டுமே)

——————

ஞானப் பலமான பகவத் ப்ராப்தி ஸமயத்தில்
தான் கீழ் நின்ற நிலைகளை நெகிழ்ந்து
ஆச்சார்யன் கட்டின ஸ்வரூப அநு பந்தியான மங்கள ஸூத்ரத்தில் அர்த்த அநு ஸந்தானத்துடனே வர்த்தியா நிற்கச் செய்தேயும்

பகவத் ஸ்வரூப திரோதாந கரமாய் -விபரீத ஞான ஜனகமுமான சரீர ஸம்பந்தத்தை ருசி வாசனைகளோடே விட்டு

ஆற்றிலே குளித்து
அக்கரை ஏறி
புக்ககத்தில் உள்ளோர் அலங்கரிக்கப் போய்
வகுத்த தேசத்திலே முகம் பழகின திரளிலே சென்று புக்கு இருந்து

(இந்த உடல் விட்டு இரவி மண்டலத்தூடு ஏகி இவ் வண்டம் கழித்து இடையில் ஆவரணம் ஏழ் போய் அந்தமில் பாழ் கடந்து அழகார் விரசை தனில் குளித்து அங்கு அமானவனால் ஒளிக் கொண்ட சோதியும் பெற்று அமரர் வந்து எதிர் கொண்டு அலங்கரித்து வாழ்த்தி வழி நடத்த வைகுந்தம் புக்கு மணி மா மண்டபத்துச் சென்று நம் திருமால் அடியார்கள் குழாங்களுடன் கூடும் நாள் எனக்குக் குறுகும் வகை நல்கு என் எதிராசா!–24-)

தனக்கு என்ன ஒரு மாதா பிதாக்களாதல் -ரூப நாமங்களாதல் -போஜநாதிகள் ஆதல் -ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளாதல் –
விதி நிஷேதங்களாதல் -பந்துக்களாதல் -ஐஸ்வர்யமாதல் -ப்ரார்தனைகளாதல் இன்றிக்கே

அஹம் அன்னம் அஹம் அன்னம் –என்னுதல்
சூட்டு நன் மாலைகள் தூயன வேந்தி ஏற்றி நிற்றல்
ஸதா பஸ்யந்தி என்று வைத்த கண் வைக்காதே பார்த்து இருத்தல்
சாயா வாசஸ்த்வம் அநு கச்சேத் –என்கிறபடியே சாயாவத் பர தந்த்ரனாய் வர்த்தித்தல் எப்போதோ என்று த்வரை நடந்து செல்லுகை

இவ் வர்த்தம் ஒரு ஆச்சார்யன் அங்கீ கரித்த முமுஷுவுக்கு நாடோறும் ஆராய வேண்டுவது ஓன்று
எங்கனே என்னில்

ஒருவன் ஒரு கன்னிகையை ஒரு மந்த்ர ஸம்பந்தத்தாலே கையைப் பிடித்தல் பூர்வ அவஸ்தைகளில் நிலைகளை அடைய நெகிழ்ந்து பார்த்தாவினுடைய அபிமானத்தில் ஒதுங்குகிறாப் போலேயும்

அநுப நீதனானவன் ஒரு மந்த்ர ஸம்பந்தத்தாலே ஸதா யஜ்ஜோபவீதத்தைத் தரித்தால் பூர்வ அவஸ்தைகளில் நிலையை அடைய நெகிழ்ந்து த்விஜன் என்று பேர் ஆகிறாப் போலேயும்

யஞ்ஞத்தில் ஒருவன் தீஷித்தால் பூர்வ அவஸ்தைகளில் நிலையை யடைய நெகிழ்ந்து அவப்ருத ஸ்நானத்து அளவும் யஜமான வேஷத்துக்குத் தக்க அநுஷ்டானம் ஆகிறாப் போலேயும்

ஸந்யாஸி கீழ் நின்ற நிலைகளை அடைய நெகிழ்ந்து ஆஸ்ரமத்துக்கு உசிதமான வ்ருத்தியோடு வர்த்திக்கிறாப் போலேயும்

இந்த ஜீவன் முக்தனான முமுஷுவும் கீழ் நின்ற நிலைகளை யடைய நெகிழ்ந்து -பகவத் கைங்கர்யம் ஒன்றிலுமே நிரதனாய் வர்த்திப்பது எப்போதோ என்று
தன் நெஞ்சை இறுக்கித் தன் வேறுபாடு தோற்ற வர்த்திக்கையே முமுஷுவுக்கு க்ருத்யம் என்று நஞ்சீயர் அருளிச் செய்வர்

முமுஷு க்ருத்யம் ஸம்பூர்ணம்

—————–

ஸாமக்ரீ பரம்பரா நாதம்

(ஸாமக்ரீ -காரணம்
பரம்பரா-தொடர்ச்சி
நாதம்-ஒலி)

காரண கார்ய பாவங்கள் தொடர்ந்து -ஆரோஹணம் -அவரோஹணம் -இரண்டையும் அருளிச் செய்கிறார் இதில்

பொய் நின்ற ஞானம் -ஞானம் பொய்யல்லவே -அசித் தத்வம் பற்றிய ஞானம் -ஸகல பரிமாணங்கள் -ஷட் பாவ சதத பரிணாமம் -நிலை நில்லாமை -இல்லாமை அல்லவே -இதுவே அவித்யா இங்கு
பொல்லா ஒழுக்கும்
அழுக்கு உடம்பும்

ஜீவாத்மா தன்மையை மாற்றி -பரதந்த்ரன் என்பதை ஸ்வ தந்த்ரன் என்று நினைப்பது அந்யதா ஞானம்
தேஹமே ஆத்மா என்று நினைப்பது விபரீத ஞானம்

அநாதி அவித்யா அடியாக அந்யதா ஞாந விபரீத ஞானங்கள் உண்டாம்
அவ் வன்யதா ஞானங்கள் யுண்டாக அப்ராப்த விஷயங்களிலே ராக த்வேஷம் யுண்டாகும்
அந்த ராக த்வேஷம் அடியாக ஸத் அஸத் ப்ராப்தி யுண்டாகும்
ஸத் அஸத் ப்ராப்தி அடியாக புண்ய பாப ரூப கர்மங்கள் யுண்டாம்
அக் கர்மங்கள் அடியாக சதுர்வித தேஹ ஸம்பந்தங்கள் யுண்டாம்
தேஹ ஸம்பந்தங்கள் அடியாக தேஹ அநு பந்தியான ஸூக துக்கங்களை ஆர்ஜிப்பது அனுபவிப்பதாகா நிற்கும்

(ஆத்மாவுக்கு கர்மங்களை ஆர்ஜிப்பதும் அவற்றின் பலன்களான ஸூக துக்கங்களை அனுபவிக்கவும் தேஹம் வேண்டுமே—–பிரயாணம் செய்யவும் ஆத்மாவுக்கு சரீரம் வேண்டுமே–முக்தனுக்கும் ஸூஷ்ம ஸரீரம் பெற்று பிரயாணம்)

(ஓடினேன் ஓடி –வாடினேன் வாடி –போதரே என்று சொல்லி புந்தியில் புகுந்து –நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதனை-பிறவிகளின் நடுவிலே -ஸம்ஸார சுழற்சிகளின் நடுவில் -என்றும் அந்த ஒரு பிறவியின் நடுவிலே என்றுமாம்
உஜ்ஜீவனத்துக்காக வந்ததால் -பிறவியின் இறுதியில் சொல்லாமல் -அவன் வந்ததால் பிறவி முடியும்)

நன்மை என்று பேரிடலாவது தீமையைக் கொண்டு -நாமும் அறியாமல்-சாஸ்திரமும் அறியாமல் -தானே கற்பித்து(ஈஸ்வரஸ்ய ஸுஹார்த்தம் —யாதிருச்சா ஸூஹ்ருதம் -விஷ்ணோர் கடாக்ஷம்-அத்வேஷம்-ஆபி முக்யம்-சாத்விக சம்பாஷணம்-ஆச்சார்ய பிராப்தி-ஆச்சர்ய சம்பந்தம் அடியாகவே விஷ்ணோர் கடாக்ஷம் பெற்றதை உணர்கிறோம்-ஸாஸ்த்ர ஜன்ய ஞானம் -த்யான யோக லப்த ஞாநம் -பஹு கிலேசம் – )

இந்த ஸூகம் செல்லா நிற்கவே -நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதனை -என்கிறபடியே
யாதிருச்சிக ஸூஹ்ருத நிமித்த பகவத் கடாக்ஷ விசேஷத்தாலே ஸதாசார்ய ஸமாஸ்ரயணம் யுண்டாகும்
அந்த ஸதா சார்ய ஸமாஸ்ரயணத்தாலே ஸ்ரவண ஞானம் பிறக்கும்
அந்த ஸ்ரவண ஞானத்தாலே -(
அது பரிணமித்து )யதா ஞானம் பிறக்கும்-அது பரிணமித்து ஸம்யக் ஞானம் பிறக்கும்-
அந்த ஸம்யக் ஞானத்தாலே அந்யதா ஞாந விபரீத ஞானங்கள் நிவ்ருத்தமாம்
அத்தாலே ராக த்வேஷங்கள் நிவ்ருத்தமாம்
அத்தாலே துஷ் ப்ரவ்ருத்தி நிவ்ருத்தமாம்
அத்தாலே பந்த கர்மம் நிவ்ருத்தமாம்
அத்தாலே சரீர விமோசநம் பிறக்கும்
அத்தாலே துக்க நிவ்ருத்தி பிறக்கும்
பின்பு ஈஸ்வரன் நயாமி க்ரமத்தாலே ஆனந்தயாதி என்னும்படி யாக்குவிக்கும்
ஸம்ஸாரத்தில் இருக்கும் நாள் திருமந்த்ரத்திலே அநுஸந்தானமே யாத்ரையாய் இருக்கும்

(தூ மணி மாடம் ஆனந்த ப்ரஹ்மணோ வித்வான்–ஸ்வ கத ஸ்வீ காரம்
நோற்றுச் ஸ்வர்க்கம் ப்ரஹ்மமே ஆனந்தமூட்டும் பர கத ஸ்வீகாரம்)

(அநந்த க்லேச நிரதிசய ஆனந்த ஹேது
மறந்தேன் அறியகிலாத உணர்விலேன் ஏணிலேன் அயர்த்து என்றும்
உய்யும் வகை நின்ற ஒன்றை நன்கு அறிந்தனன்
உணர்வினுள்ளே ஆம் பரிசு என்றும்
சொல்லுகிற ஞாதவ்ய பஞ்சக ஞான -அஞ்ஞானங்கள் –சூரணை-5-

ஏதம் நிமித்தம் முன்னமே முதல் முன்னமே யான
அசித் அயன அநாதி சம்பந்தங்கள்-சூர்ணிகை -10-

அநாதி அசித் சம்பந்தம் அடியாக அவித்யையாய்
அதன் அடியாக புண்ய பாப ரூப கர்மமாய்
அது அடியாக அஜ்ஞான ஹேதுவான ஜென்மமாய்
அது அடியாக ரஜோ தமஸ் அவிருத்தயாய்
அது அடியாக அர்த்த பஞ்சக ஞான அபாவமாய்
அது அடியாக அஜ்ஞாநாத் சம்சார என்கிற படியே சம்சார துக்கம் வரும்-

அநாதி அயன சம்பந்தம் அடியாக
பகவத் சௌஹார்த்தம் உண்டாய்
அது அடியாக கிருபை உண்டாய்
அது அடியாக விசேஷ கடாஷம் உண்டாய்
அது அடியாக சத்வ விருத்தி உண்டாய்
அது அடியாக அர்த்த பஞ்சக ஞானம் உண்டாய்
அது அடியாக ஞானான் மோஷம் -என்கிறபடியே
மோஷ ஸுகம் உண்டாம் என்று ஆய்த்து-)

ஸம்ஸாரத்தில் இருக்கும் நாள் திருமந்த்ரத்திலே அநுஸந்தானமே யாத்ரையாய் இருக்கும்-அர்த்த அனுசந்தானம் பண்ணும் ப்ரகாரம்
பகவத் ஏக ரஷ்யன்
ஈஸ்வர சேஷ பூதன்
அநந்யார்ஹ சேஷன்
ததீய பரதந்த்ரன்
ஸம்பந்த யுக்தன்
கைங்கர்ய ஸ்வபாவன் -என்று இத்தாலே சொல்லிற்று ஆயிற்று

ரக்ஷகத்வ ப்ரதி சம்பந்தி பூர்வகமான ரஷ்யத்வமும்
சேஷித்வ ப்ரதி சம்பந்தி பூர்வகமான சேஷத்வமும்
அந்நிய சேஷத்வ நிவ்ருத்தி பூர்வகமான அநந்யார்ஹ சேஷத்வமும்
அசேதன நிவ்ருத்தி பூர்வகமான சேதன வை லஷ்யமும்
ஸ்வா தந்தர்ய நிவ்ருத்தி பூர்வகமான அத்யந்த பாரதந்த்ரயத்தினுடைய மேல் எல்லையும்
ஸோ பாதிக பந்து நிவ்ருத்தி பூர்வகமான நிருபாதிக சம்பந்தமும்
அபுருஷார்த்த நிவ்ருத்தி பூர்வகமான புருஷார்த்த வை லக்ஷண்யமும் இறே ஸகல ஸாஸ்த்ரங்களிலும் ப்ரவ்ருத்தமாயிற்று

சொல்லினால் சொல்லப்படாத -என்றும்
யதோ வாஸோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ -என்றும்
அரும் பொருளாதல் என்றும் –சொல்லுகிற பிரமாணங்களால்
காண வரிய தனக்கு அன்று
அந்நிய பரரான ஸம்ஸாரிகளைக் குறித்து அன்று
அநந்ய பரரான நித்ய முக்தரைக் குறித்தன்று

முமுஷுவுக்கு

(சொல்லினால் தொடர்ச்சி நீ சொலப்படும் பொருளும் நீ
சொல்லினால் சொலப்படாது தோன்றுகின்ற சோதி நீ
சொல்லினால் படைக்க நீ படைக்க வந்து தோன்றினார்
சொல்லினால் சுருங்க நின் குணங்கள் சொல்ல வல்லரே –11-)

(அறிந்தன வேத அரும் பொருள் நூல்கள்
அறிந்தன கொள்க அரும் பொருள் ஆதல்
அறிந்தனர் எல்லாம் அரியை வணங்கி
அறிந்தனர் நோய்கள் அறுக்கும் மருந்தே–9-3-3-)
அசித்திலும்
அசித் ப்ராயரான ஸம்ஸாரிகளிலும்
நித்ய முக்தரிலும்
எம்பெருமானிலும் –வ்யாவ்ருத்தமாயும்
இந்நிலத்தில் பொருந்தாமையும்
பொருந்தின நிலத்தில் புகப் பெறாமையும் யுடையனாய்
ஆக்கை விழும் பொழுது எண்ணே -என்பது
பணி கண்டாய் சாமாறே -என்பது
அடைய அருளாய் என்பது
கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ –என்பதாய்
ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி வேறுபட்டு இருந்துள்ள முமுஷுவுக்கே பிரமாண அபேக்ஷை உள்ளது

(இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை

ஒடுங்க அவன் கண் ஒடுங்கலும் எல்லாம்
விடும் பின்னை யாக்கை விடும் பொழுது எண்ணே–1-2-9-

நண்ணாதார் முறுவலிப்ப, நல்லுற்றார் கரைந்து ஏங்க,
எண்ணாராத் துயர் விளைக்கும் இவை என்ன உலகியற்கை?
கண்ணாளா! கடல்கடைந்தாய்! உனகழற்கே வரும்பரிசு,
தண்ணாவாது அடியேனைப் பணிகண்டாய் சாமாறே.–4-9-1-

படைநின்ற* பைந்தாமரையோடு* அணிநீலம்-
மடைநின்று அலரும்* வயல்ஆலி மணாளா,*
இடையன் எறிந்த மரமே* ஒத்துஇராமே,*
அடைய அருளாய்* எனக்கு உன்தன் அருளே.

ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம்
பாவி யேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ?
தாவி வையம் கொண்ட தடந்தா மரைகட்கே
கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ.–6-9-9-

அங்கு போய் பெறும் பேறு இதனிலும் தண்ணியதோ -திருக் குருகைப் பிள்ளான் நஞ்ஜீயருக்கு சாதித்த ஸ்ரீ ஸூக்தி)

ஸகல ஸாஸ்த்ரங்களுக்கும் தாத்பர்யம்
ஈஸ்வர ஸ்வாதந்தர்யத்தையும்
ஆத்ம பாரதந்தர்யத்தையும்
இசைவிக்கையாய் இறே இருப்பது

ஸாமக்ரீ பரம்பரா நாதம் ஸம் பூர்ணம்

————–

அவஸ்தா த்ரயம்

கீழ் முமுஷு கிருத்யத்தில் இவ் வுலகில் உள்ள மூன்றையும் -அதாவது
அஞ்ஞான நிலை
ஞாந உதய நிலை
ஞான பரிபக்குவம் முடிந்த நிலை
இவற்றையே விளக்கி அருளுகிறார் இதில்

(ப்ரஞ்ஞா த்ரயங்கள்
திருத் தாயார் -சம்பந்த உணர்த்தி
தோழி -உபாயத்தில் துணிவு
தலை மகள் பேற்றில் த்வரை)

அநாதி மாயயா ஸூப்த யதா ஜீவ ப்ரவ்ருத்தே -என்கிற அநாதி அவித்யையாலே
ஞான அநுதயமாய்
அத்தாலே அந்யதா ஞான விபரீத ஞானமாய்
அத்தாலே அஹங்கார மமகாரங்களாய்
அத்தாலே ராக த்வேஷங்களாய்
அத்தாலே புண்ய பாப ரூப கர்மங்களாய்
அத்தாலே சதுர் வித ஸரீரமாய்

அத்தாலே -பெரும் துயர் இடும்பையில் பிறந்து -1-1-1-)-என்றும்
சதிரம் என்று தம்மைத் தாமே ஸம்மதித்து-9-1-5-
உளனாக எண்ணி-3-9-5
தந்தம் ஊனிடைக் குரம்பை வாழ்க்கைக்கு உறுதியே வேண்டி-8-
கண்டவா தொண்டரைப் பாடி-1-1-
விலைக்கு ஆட்பட்டு
வள்ளல் புகழ்ந்து
காசுக்கும் கறையுடைக் கூரைக்கும் அங்கோர் கற்றைக்கும் ஆசையினால் அங்கு அவத்தப் பேர் இட்டு
விசாதி ஏற்றுண்டு
தலைக்காட் பலி திரிந்து
ஒருவன் தனக்குப் பணிந்து கடைத்தலை நின்று
சூதினைப் பெருக்கிக் களவினைத் துணிந்து-1-6-3
பெரு நிலத்து ஆருயிர்க்கு எல்லாம் செற்றமே வேண்டி-1-1-8-
ஓடியும் உழன்றும் உயிர்களே கொன்று-1-6-6-
வென்றியே வேண்டி வீழ் பொருட்க்கு இரங்கி வேற் கணார் கலவியே கருதி-1-1-4-
சிலம்படி யுருவில் கரு நெடும் கண்ணார் திறத்தனாய் அறத்தையே மறந்து -1-6-2–அவர் தரும் கலவியே கருதி ஓடி-1-1-1-
பண்டு காமர் ஆனவாறும் பாவையர் வாயமுது யுண்டவாறும் வாழ்ந்தவாறும் ஓக்க உரைத்து இருமி
-1-3-

அந்திம சமயத்திலும்
அன்னை யத்தன் என் புத்திரர் பூமி வாஸவார் குழலாள் என்று மயங்கி
–4-5-

அதுக்கும் மேலே
நமன் தமர் பாஸம் விட்டால் அலைப் பூண் உண்ணும் அவ் வல்லல் -3-2-10-என்கிற உத் க்ராந்தி தசையிலே வேதந அநுபவம் பண்ணி

அதுக்கும் மேல்
துஞ்சினார் செல்லும் தொன்னெறி –1-6-7-என்று வழியில் படும் வேதந அனுபவம் பண்ணி

அதுக்கும் மேலே
நமன் தமர் செய்யும் வேதனை —என்கிற நரக வேதனை அனுபவம் பண்ணி

அதுக்கும் மேலே
வயிற்றுக் குழியில் உழைக்கும் -6-2–என்கிற வேதனை அநுபவம் பண்ணி

அதுக்கும் மேலே
மக்கள் தோற்றக் குழி -11-8-1–என்னும் வயிற்றில் நின்றும் புறப்படுகிற போதையில் வேதனை அநுபவம் பண்ணி

இப்படி ஒரு ஜென்மத்திலே உத் க்ராந்தி மார்க்கம் -நரக யோநி -கர்ப்ப ஸங்கடம் -என்று சொல்லுகிற
நாலு ஐந்து நரகத்தை அனுபவித்துப் போரக் கடவனான சேதனன் துஷ் கர்மத்தில் மூளக்
கர்மம் ஜென்மத்திலே மூட்ட
அந்தாதியாக
தேவனாவது மநுஷ்யனாவது திர்யக் யாவது ஸ்தாவரமாவதாய்
யாதானும் ஒரு ஆக்கையிலே புக்கு -அங்கு ஆப்புண்டு -ஆப்பவிழுந்து –மூதாவியில் தடுமாறும் உயிர் முன்னமே -95-என்கிறபடியே
ஸரீரங்கள் தோறும் அதி ப்ராவண்யம் பண்ணக் கடவனாய்

அலை வாயில்-அலை வாயில் அலை மாறுமாப் போலே
அம்மை வயிற்றோடும்
எமன் கழுவோடும் போவது வருவதாய்
இயக்கறாத பல் பிறப்பு -120-என்கிறபடியே
ஒழுக்கறாமல் பட்டது மறந்தான் என்று விடு தூதாய் அநாதி காலம் தேஹாத்ம அபிமானம் தலை மண்டையிட்டு பிறந்தே இறந்து எய்த்து ஒழிந்தேன் -என்கிறபடியே ஒன்றும் மறவாமல் பிறந்து போருகிற நாட்டாரோபாதி பிறந்த ஜன்மத்தை
அன்று நான் பிறந்திலேன்-என்கிறார்

(இது வரை அஞ்ஞான தசை -ஞான ஜென்மம் கிடைக்காத தசை)

(நின்றது எந்தை ஊரகத்து*  இருந்தது எந்தை பாடகத்து,* அன்று வெஃகணைக் கிடந்தது*  என்னிலாத முன்னெலாம்,*அன்று நான் பிறந்திலேன்*  பிறந்த பின் மறந்திலேன்,* நின்றதும் இருந்ததும்*  கிடந்ததும் என் நெஞ்சுளே.)

இனிப் பிறக்கை யாவது
ஸதாசார்ய உபதேஸ முகத்தாலே
வாகாதி கரணங்கள் அன்று ஆத்மா -இந்திரியங்கள் அன்று ஆத்மா-மனஸ் அன்று ஆத்மா-ப்ராணன் அன்று ஆத்மா-அவித்யம் அன்று ஆத்மா
அக்னி இந்த்ராதி சேஷம் அன்று –பிரம்மா ருத்ராதி தேவதாந்தர சேஷம் அன்று ஆத்மா-ஏகாயன எம்பெருமானுக்கு சேஷம் அன்று ஆத்மா-மிதுன சேஷத்து அளவு அன்று ஆத்மா-
ததீய சேஷத்வ பர்யந்தமாகப் பிறக்கப் பிறந்த இஜ் ஜன்மத்தை-நான் பிறந்த பின் மறந்திலேன் -என்றார்

இந்த ஞானத்தை அவன் மயர்வற மதி நலம் அருளிப் போன பின்பு
பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி–அடிமை கொண்டாய்–5-7-3- -என்றும்
இன்று என்னைப் பொருளாக்கி –10-8–என்றும்
அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே –10-10-11-(
அறிந்தே பிறந்தார் -உயர்ந்தே பிறந்தார்)என்றும்

பெருமாள்
உடல் பிறவி வேண்டேன் உயிர் பிறவி வேண்டுவேன் -என்றும்

திருமங்கை யாழ்வார்
மற்றுமோர் தெய்வம் உளது என்று இருப்பாரோடு உற்றிலேன் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை –என்றும் இறே
இவர்கள் தங்களை நினைத்து இருப்பது

ஆழ்வார்கள் வசனங்களாக இவற்றையே ப்ரமாணமாகக் கொண்டு முமுஷுக்களும் இந்த ஞானம் பிறப்பதற்கு முன்பு ஒரு ஜந்மமும் -பின்பு ஒரு ஜென்மமுமாக அநு சந்திப்பார்கள்-

முன்பு சரீர உத்பாதகன் பிதாவாயும் -சுமந்து பெற்றவள் மாதாவாயும் -அவர்கள் பெற்றவர்கள் ப்ராதாக்களாயும் -இவர்களுடன் அந்வயமுடையவர்கள் பந்துக்களாயும்-
பிறந்த தேஸம் ஜன்ம தேஸமாயும்-
குலம் பிறந்த வர்ணமாயும்-
க்ஷேத்ரம் பூமியாயும்-
தானாகிறான் -மாம்ஸாஸ்ருகாதி மல ரூபமாய் -துருப்புக் கூடான சரீரமாயும்
மாதா பிதாக்கள் சொன்னதுவே நாம மாத்ரமாயும் -அன்ன பாநாதிகளே தாரகமாயும் -ஸ்நேஹ த்ரவ்யங்கள் போஷக மாயும்-
அதற்குப் பரிகாரம் அர்த்த பவ்ருஷங்களாயும் -வாத பித்தாதிகள் (
ஆதி -கபம்)வ்யாதி களாயும் -அதுக்குப் பரிஹாரம் வைத்யன் சொன்னது மருந்தாயும்-
த்ருஷ்ட ஐஸ்வர்யம் பேறாயும் -அது இல்லாமை மிடியாயும்-ப்ரக்ருதி ப்ராக்ருத லாபம் சுகமாயும் -அலாபம் துக்கமாயும்-
வர்ணாந்தர ஸ்பர்ஸம் தீட்ட மாயும் –ஜல ஸ்பர்ஸம் சுத்தமாயும் -புத்ர பசு அன்னாதிகள் ப்ராப்யமாயும்-
பர ஹிம்ஸை பர த்ரவ்ய அபஹாரம் -பர அநு வர்த்தனங்கள் ப்ராபகமாயும்-
மிண்டரும் தொழும்பரும் தூர்த்தரும் ஸஹ காரிகளாயும்-
மாரனார் வரி வெஞ்சிலைக்கு ஆட் செய்கை தொழிலாயும்-3–
புலன் படிந்து உண்ணும் போகமே பெருக்கிப் போக்கினேன் பொழுதினை -1-6-என்கிற பொழுது போக்காயும்-
சரீர வியோகம் முடிவாயும் இருக்கும்

பின்பு ப்ரஹ்மதஸ் பிதா என்று-சொல்லுகிற ஆசார்யன் பிதாவாகவும்-
திருமந்திரம் மாதாவாகவும்-
ஆச்சார்யன் ஸ்ரீ பாதத்திலே அந்வயம் யுடையவர்கள் ப்ராதாக்களாயும்-
திரு மந்திரத்தோடும் ஆச்சார்யனோடும் அந்வயம் யுடையவர்கள் பந்துக்களாயும்-
திரு மந்திர அர்த்தம் பெற்ற இடம் ஜன்ம தேஸமாயும்-
குலம் தாஸ்யமான தொண்டக் குலமாயும்-
க்ஷேத்ரம் உகந்து அருளின திவ்ய தேசங்க ளாயும்-
தானாகிறான் -24 தத்வம் கழிந்த ஆத்மாவாகவும்-
நாமம் தாஸ்ய நாமமாகவும்-
பகவத் ஸம்பந்த ஞானம் தாரகமாயும்–
ஆச்சார்ய அநு வர்த்தநம் போஷகமாயும்-
அடியார்கள் இன்ப மிகு பெரும் குழுவு போக்யமாயும்-
வியாதி தாய் தாரகங்க ளாயும்-
அதுக்குப் பரிஹாரம் செடியார் வினைகள் தீர் மருந்தான உபாய பூதன் அருளிச் செய்த சரம ஸ்லோக அர்த்தமாயும்-
ஆபத்து அந்நிய சேஷத்வ -ஸ்வ ஸ்வாதந்தர்ய -தேஹாத்ம அபிமானமாயும்-
அதுக்குப் பரிஹாரம் திருமந்த்ரார்த்த ஞானமாயும்-
ஐஸ்வர்யம் வ்யவசாயமாயும்-
அது இல்லாமை மிடியாயும்-
பகவத பாகவத ஸம்ஸ்லேஷம் ஸூகமாயும்-
அது இல்லாமை துக்கமாயும்-
அஹங்கார ஸ்பர்சம் தீட்டமாயும்-
ஞான ஸ்பர்சம் ஸூத்தமாயும்-
ப்ராப்யம் அடிமையாயும்-
ப்ராபகம் அருளாயும்-
உஸாத் துணை பேராளன் பேரோதும் பெரியோருமாயும் உயர்ந்தோருமாயும்-
தொல்லை மால் தன் நாமம் ஏத்துகை தொழிலாயும்-
வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும் பூசித்தும் போக்கினேன் போது என்கிற பொழுது போக்காயும்-
ஞான வியோகம் முடிவாயும் இருக்கும்

இந்தப் பிரதிபத்தி இறே பிரதம ஆச்சார்யரான நம்மாழ்வார் –
நாட்டாரோடு இயல் ஒழிந்து நாரணனை நண்ணினமே -என்றும்
நகரமும் நாடுகளும் ஞானமும் மூடமுமாய் -என்றும்
அருளிச் செய்து அருளிற்று

நாட்டாருக்குப் பெயர் ஸம்ஸாரிகள்
நாகரிகருக்குப் பெயர் ஸ்ரீ வைஷ்ணவர்கள்

இதில் ஸம்ஸாரிகள் அஞ்ஞருமாய் -அஸக்தருமாய் -அபூர்ணருமாய் -அயோக்யருமாய் -துர்மானிகளுமாய் -துர் வ்ருத்தருமாய் -தோஷ துஷ்டருமாய்-
எம்பெருமானையும் தங்களையும் மறந்து -மறந்தோம் என்கிற பரிபாவ நிவர்த்தருமாய்-
பூமி பாரங்களுமாய்-
பரிக்ரஹ நியதி இல்லாமல் உண்டியே உடையே உகந்து ஓடுகையாலே ஸம்ஸாரிகள் என்று பெயர் ஆயிற்று

இனி ஸ்ரீ வைஷ்ணத்வமாவது
விசேஷ ஞானம் -அதாவது வாசி அறிகை-
குருக்களுக்கும் ஸத் குருக்களுக்கும் வாசி அறிகையும்-
மந்த்ராந்தரத்துக்கும் மந்த்ர ரத்னத்துக்கும் உள்ள வாசி அறிகையும்-
தேவதாந்தரங்களுக்கும் ஈஸ்வரனுக்கும் உள்ள வாசி அறிகையும்-
உபாஸகனுக்கும் ப்ரபன்னனுக்கும் உள்ள வாசி அறிகையும்-
ஸம்ஸாரிகளுக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கும் உள்ள வாசி அறிகையும்-
பரத்வத்துக்கும் அர்ச்சாவதாரத்துக்கும் உள்ள வாசி அறிகையும்-
புருஷார்த்தத்துக்கும் அபுருஷார்த்தத்துக்கும் உள்ள வாசி அறிகையும்

இதில் குருக்கள் ஆகிறார் -ஸம்ஸார ஸம்பந்தகருமாய் -அஞ்ஞான ப்ரதருமாய் இருப்பார்கள் என்றும்
ஸத் குருக்கள் ஸம்ஸார நிவர்த்தகருமாய் -ஞானப் ப்ரதருமாய் இருப்பார்கள் என்று அறிகை

தேவதாந்தரங்கள் -அஞ்ஞருமாய் -அஸக்தருமாய் -அப்ராப்தருமாய் இருப்பார்கள் என்றும்
ஈஸ்வரன் ஸர்வஞ்ஞனுமாய் -ஸர்வ ஸக்தனுமாய் -ப்ராப்தனுமாய் இருக்கும் என்று அறிகை

தேஹம் ஜடமாய்- துக்க ரூபமாய் இருக்கும் என்றும்
ஆத்மா அஜடமுமாய் -ஆனந்த ரூபமாயும் இருக்கும் என்று அறிகை

ஆத்மா வ்யாப்தமுமாய் -சேஷமாய் இருக்கும் என்றும்
ஈஸ்வரன் வ்யாபகனாய் -சேஷியாய் இருக்கும் என்று அறிகை

உபாஸகனுக்கு ஆனுகூலஸ்ய ஸங்கல்பமும் -பிரதிகூல்ய
வர்ஜனமும் வேண்டும்
ப்ரபன்னனுக்கு அஹம் அஸ்ய அபராதனாம் ஆலய அகிஞ்சன -என்று இருக்கும் என்று அறிகை

ஸம்ஸாரிகள் அநாசார ப்ரவர்த்தகருமாய் -துர்மான ப்ரவர்த்தகருமாய் இருப்பார்கள் என்றும்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஆசார ப்ரவர்த்தகருமாய்-துர்மான நிவர்த்தகருமாய் இருப்பார்கள் என்றும் அறிகை

பரத்வம் துர்லபமுமாய் -ஸ்வ தந்திரமாயும் இருக்கும் என்றும்
அர்ச்சாவதாரம் ஸூலபமுமாய்- பரதந்த்ர ப்ரகாசகமுமாய் இருக்கும் என்றும் அறிகை

(மேல் ஞானம் பக்குவமான மூன்றாம் அவஸ்தை-உய்ய ஒரே வழி உடையவர் திருவடிகள்-என்று இருக்கை-மனமுடையீர் என்ற படி ஸ்ரத்தையே அமையும்)

இந்த ஞானம் நிலை நின்றதாவது -அநுஷ்டான சேஷமானால் -அனுஷ்டானமாவது வர்ணாஸ்ரம தர்மம் (மட்டுமே) அன்று -அதாவது வந்தேறியான தோல் புரையிலது அன்று –ஸ்வரூப அநுரூபமான வ்ருத்தம்

அவையாவன
ஸ்வரூப அநு கூலமான ரக்ஷகத்வம்
ஸ்வரூப அநு கூலமான சேஷத்வம்
ஸ்வரூப அநு கூலமான ஸேவை
ஸ்வரூப அநு கூலமான ஸஹ வாஸம்
ஸ்வரூப அநு கூலமான கால க்ஷேபம்
ஸ்வரூப அநு கூலமான இருப்பு
ஸ்வரூப அநு கூலமான பரிக்ரஹம்
ஸ்வரூப அநு கூலமான போஜனம்
ஸ்வரூப அநு கூலமான அத்யவசாயம்
ஸ்வரூப அநு கூலமான அபேக்ஷை

இவற்றில்
ஸ்வரூப அநு கூலமான ரக்ஷகத்வம் ஆவது
தேச ரக்ஷகன் என்றும்
தேஹ ரக்ஷகன் என்றும்
பதார்த்த ரக்ஷகன் என்றும்
பவ்ருக்ஷ ரக்ஷகன் என்றும் –சொல்லுகிற ரக்ஷகத்வங்களைத் தவிர்த்து
தேச நிவர்த்தகன் என்றும்
தேஹ நிவர்த்தகன் என்றும்
விஷய நிவர்த்தகன் என்றும் பற்றுகை

அதாவது
கொடு உலகம் என்று அஞ்சினவாறே(4-9-7)
கலியுகம் ஒன்றும் இன்றிக்கே தன்னடியார்க்கு அருள் செய்யும்(5-2-11)
பொல்லா வாக்கை 3-2-என்று அஞ்சினவாறே செடியார் ஆக்கை அடியாரைச் சேர்த்தல் தீர்க்கும்
ஐவர் அறுத்துத் தின்றிட அஞ்சி நின்று அடைந்தேன் என்று அஞ்சினவாறே 7-7-7அடியாரைத் துப்பாம் புலன் ஐந்தும் துஞ்சக் கொடான்1-7-2
நமன் தமர் செய்யும் வேதனைக்கு ஒடுங்கியவாறே -1-6-3 –நமன் தமர் என் தமரை வினவப் பெறுவாரலர் என்னும்-10-6-5-
அடியார் படு துயராயின எல்லாம் நிலந்தரம் செய்யும் -1-1-9-என்னக் கடவது–இறே

ஆயே இவ் உலகத்து நிற்பனவும் திரிவனவும்
நீயே மற்று ஒரு பொருளும் இன்றி நீ நின்றமையால்
நோயே மூப்பு இறப்பிறப்புப் பிணியே என்றிவை ஒழியக்
கூயே கொள் அடியேனைக் கொடு உலகம் காட்டேலே.–4-9-7-

கலியுகம் ஒன்றும் இன்றிக்கே தன்னடியார்க்கு அருள் செய்யும்
மலியும் சுடரொளி மூர்த்தி மாயப் பிரான்கண்ணன் தன்னைக்
கலிவயல் தென்னன் குருகூர்க் காரிமாறன் சடகோபன்
ஒலிபுகழ் ஆயிரத்து இப்பத்து உள்ளத்தை மாசறுக் கும்மே.–5-2-11-

கொல்லா மாக்கோல் கொலை செய்து பாரதப் போர்
யெல்லாச் சேனையும் இரு நிலத்து அவித்த எந்தாய்
பொல்லா வாக்கையின் புணர்வினை யறுக்கலறா
சொல்லாய் யான் உன்னைச் சார்வதோர் சூழ்ச்சியே –3-2-3-

அடியேன் சிறிய ஞானத்தன் அறிதலார்க்கும் அரியானை
கடி சேர் தண்ணம் துழாய்க் கண்ணி புனைந்தான் தன்னைக் கண்ணனை
செடியார் ராக்கை யடியாரைச் சேர்த்தல் தீர்க்கும் திருமாலை
அடியேன் காண்பான் அலற்றுவன் இதனின் மிக்கதோர் அயர்வுண்டே –1-5-7-

ஸ்வரூப அநு கூலமான சேக்ஷத்வம் ஆவது
இதர சேஷத்வம் என்றும்
கிருஹ சேஷத்வம் என்றும்
பித்ரு சேஷத்வம் என்றும்
தேவதாந்த்ர சேஷத்வம் என்றும் –சொல்லுகிற ஆபாஸ சேஷத்வங்களைத் தவிர்த்து
ஸர்வேஸ்வரனே
தாரகன் என்றும்
வ்யாபகன் என்றும்
ஸரீரீ என்றும் பற்றுகை

அதாவது
ஆவிக்கோர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன்-10-10-3-
உன்னை விட்டு எங்கனே தரிக்கேன் -7-2-1–என்றும்-என்னுடை வாழ் நாள் -என்றும்
அடியார்க்கு அகலலாமே என்றும் இருக்கை

கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ என் பொல்லாக் கருமாணிக்கமே
ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் யான்
மேவித் தொழும் பிரமன் சிவன் இந்த்ரன் ஆதிக்கெல்லாம்
நாவிக் கமல முதல் கிழங்கே உம்பரந்ததுவே–10-10-3-

கங்குலும் பகலும் கண் துயில் அறியாள்
கண்ண நீர் கைகளால் இறைக்கும்;
‘சங்கு சக்கரங்கள்’ என்று கை கூப்பும்;
‘தாமரைக் கண்’ என்றே தளரும்;
‘எங்ஙனே தரிக்கேன் உன்னை விட்டு!’ என்னும்;
இரு நிலம் கை துழா இருக்கும்;
செங்கயல்பாய் நீர்த் திருவரங்கத்தாய்!
இவள் திறந்து என் செய்கின்றாயே?–7-2-1-

ஸ்வரூப அநு கூலமான ஸேவை யாவது
சேதனாந்தர ஸேவையையும்
தேவதாந்தர ஸேவையையும்
பகவத் ஸேவையைத் த்ருஷ்ட-துஷ்டப் ப்ரயோஜனத்துக்காக ஸேவிக்கையும் -அத்ருஷ்டத்துக்கு ஹேது என்கிற ஸேவைகளையும் தவிர்த்து
ஸ்வரூப ப்ரயுக்தம் என்று சேவிக்கை

(ஈஸ்வரன் முக விலாசத்துக்காக ஸேவைகொடுத்துக் கொள்ளாதேகொண்டத்துக்குக் கைக்கூலி கொடுக்க வேண்டுமே)

அதாவது
ஸேவியேன் உன்னை அல்லால் என்றும்
உன்னைச் சேவித்தேன் என்றும்
சீதனையே தொழுவார் -(திருவிருத்தம் -79)என்றும்
விழிக்கும் கண்ணிலேன் நின் கண் மற்று அல்லால் -(பெரியாழ்வார்-5-1-2)என்றும் இருக்கை

ஸ்வரூப அநு கூலமான ஸஹ வாஸம் ஆவது
விஷயாந்தரத்துக்காகச் சேருதல்
த்ரவ்யாந்தரத்தக்காகச் சேருதல்
கால ஷேபத்துக்காகச் சேருதல் தவிர்ந்து
ஸம்ஸாரத்தில் அருசி பிறக்கைக்கும்
பகவத் விஷயத்தில் ருசி பிறக்கைக்கும்
ஸ்வரூபத்தில் தெளிவு பிறக்கைக்கும்
ஆசார ப்ரவர்த்தகரோடு சேருகை

அதாவது
பேராளன் பேரோதும் பெரியாரை ஒருகாலும் பிரிகிலேன்- என்றும்
உயர்வேன் உயர்ந்தவரோடு அல்லால் -(முதல் திருவந்தாதி-64)என்றும் இருக்கை –

ஸ்வரூப அநு கூலமான கால க்ஷேபம் ஆவது
சூது சதுரங்கம் பொருதும் -பாட்டுக் கூத்துக் கேட்டு வாயிட ஆட் பார்த்துச் செல்லுகையும் -பகவத் குண அனுபவத்தை பிறரில் வ்யாவிருத்தமாக சொல்லுகிற போது போக்கைத் தவிர்ந்து
தெறிந்து எழுதி வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும் பூசித்தும் போக்கினேன் -நான்முகன்-63-என்கிறபடியே போது போக்குகை அதாவது
ஸ்வரூபம் என்றும்
தாரகம் என்றும்
போஷகம் என்றும்
போக்யம் என்றும்
மறக்க மாட்டாமையாலும் சொல்லுகை

அதாவது
தாள்கள் தலையிலே வணங்கி –நாட் கடலைக் கழிமின் -1-6-7–என்றும்
கோவிந்தன் குணம் பாடி ஆவி காத்து இருப்பேனே -8-3-என்றும்
கணை நாணில் ஓவாத் தொழில் சார்ங்கன் தொல் சீரை நன் நெஞ்சே ஓவாத ஊணாக உண் -(பெரிய திருவந்தாதி-78)-என்றும்
ஏது செய்தால் மறக்கேன் மனமே -(9-3-திருப்புல்லாணி)என்றும்
பொழுது போக்குகை –

ஸ்வரூப அநு கூலமான இருப்பு ஆவது
த்ரவ்யார்ஜனத்துக்கு ஏகாந்தம் என்றும்
இவ் வருகு யுண்டான பய நிவ்ருத்திக்கு உறுப்பு என்றும்
ஸஜாதீய விஸ்லேஷம் பொறாமைக்கு என்றும்
க்ஷேத்ர வாஸம் யோக்யதைக்கு உறுப்பு (மோக்ஷம் பெற என்ற எண்ணம் இல்லாமல்)என்றும்
இருக்கிற விருப்பைத் தவிர்ந்து
தேசத்திலே ப்ரேமம் விளைவிக்கைக்கு உறுப்பு என்றும்
தேசிகரை நித்ய ஸேவை பண்ணலாம் என்றும்
தேச வர்த்திகளான ஸாத்விகர்களைக் கலந்து பரிமாறுகைக்கு என்றும்
விபரீதங்கள் புகுராத இடம் என்றும் இருக்கை

அதாவது
தஞ்சை மா மணிக் கோயிலே வணங்கி 1-1-6-என்றும்
அதனுட் கண்ணா -(9-6-திருக் காட்க்கரை)என்றும்
கற்றார் சேர் கண்ணபுரம்( 8-10-5)-என்றும்
விளைந்த தானியமும் இராக்கதர் மீது கொள்ள கிலார்களே (பெரியாழ்வார் திருக்கோட்டியூர்)-என்றும்
இருக்கை

ஸ்வரூப அநு கூலமான பரிக்ரஹம் ஆவது
அநுகூலரை நெருக்கியும்
பிரதிகூலர் பக்கல் ஸா பேஷனாய் ஸ்வீ கரிக்கையும்
ஸ்வரூப ப்ரயுக்தமானவற்றை பதார்த்தங்ளுக்கு உறுப்பாக்கி ஸ்வீ கரிக்கையும்
அமுதுபடி சாத்துப்படிக்கு ஆகாரமானவற்றை பரிக்ரஹிக்கையும் தவிர்ந்து
கிருஷி பண்ணுதல்
முஷ்டி புகுதல்
சிஷ்யன் பிரியத்தால் தருமதாதல்-ஸாத்விகர் திரு உள்ளப் ப்ரஸாதத்தாலே தருமதாதல்
பரிக்ரஹிக்கை

அதாவது
மெய் வருத்திக் கை செய்தும்மினே -(3-9-6)-என்றும்
பிச்சை புக்காகிலும் -(பெரியாழ்வார் -4-6-3)என்றும்
ஸரீரம் அர்த்தம் பிராணன் ச ஸத் குருப்யோ நிவேதிய-என்றும்
வருவிருந்தை அளித்து இருப்பார் -(பெரியாழ்வார் -4-8-2-)என்றும்
சொல்லுகிறவர்களுடைய பதார்த்தங்களை ஸ்வீ கரிக்கை-

ஸ்வரூப அநு கூலமான போஜநம் ஆவது
க்யாதியைப் பற்றாதல்
லாபத்தைப் பற்றாதல்
பூஜையைப் பற்றாதல் என்னது நான் இடுகிறேன் என்கிற போஜநத்தைத் தவிர்ந்து
நெய்யமர் இன்னடிசில்-(6-8-) என்றும்
நல்லதோர் சோறு என்றும்
உண்ணும் சோறு (6-7-1)என்றும் சொல்லுகிறவற்றைப் புஜிக்கை-

ஸ்வரூப அநு கூலமான அத்யவஸாயம் ஆவது
தனக்கு உண்டான ரஷ்யத்வ ஸ்வீ காரங்கள் இன்றியிலே ஒழிந்தாலும் ஸ்வரூப விரோத்யாதி நிவ்ருத்தி பூர்வகமாக பரம புருஷார்த்தத்தைத் தரும் என்கிற மஹா அத்யவசாயம்

அதாவது
யானே நீ என்னுடைமையும் நீயே -2-9-9
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்றிலேன் -5-8-8-என்றும்
உன்னால் அல்லால் யாவராலும் குறை வேண்டேன் –5-8-3-என்றும்
நின்னருளே புரிந்திருந்தேன் -(5-4-1)என்றும்
இறைவா நீ தாராய் பறை என்றும்
மற்றை நம் காமங்கள் மாற்று -என்று இருக்கை –

ஸ்வரூப அநு கூலமான அபேக்ஷை யாவது
புத்ர பசு அன்னாதி புருஷார்த்தங்களையும்
ஸ்வர்க்காத் ஐஸ்வர்யாதி புருஷார்த்தங்களையும்
பகவத் அனுபவ கைங்கர்யங்கள் என்னது என்கிற புருஷார்த்தம் தவிர்ந்து
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணும் –இராப்பகல் இன்றியே (9-3-7)என்றும்
அடியார்கள் குழாங்களை யுடன் கூடுவது என்று கொலோ (8-3-10)-என்றும்
மலர்த் தாமாரை பாதங்களைக் காண்பது எஞ்ஞான்று கொலோ (5-9)-என்றும்
வழு விலா யடிமை செய்ய வேண்டும் நாம் (3-3-1)-என்றும் அபேக்ஷித்து

இந்த அனுஷ்டானம் நிலை நின்றதாவது
ஷாம ஷோப வியாதி மிடிகளில் தொலையாத அத்யவசாயம் உண்டானால் யாயிற்று –

இந்த அத்யவசாயம் தான்
தத்வ த்ரய ஞான அத்யவசாயம் என்றும்
தத்வ த்வய விஷய ஞான அத்யவசாயம் என்றும்
தத்வ ஏக விஷய ஞான அத்யவசாயம் என்றும்
த்ரிவிதமாய் இருக்கும்

தத்வ த்ரய ஞான அத்யவசாய விஷயம் யாவது
அசித்துக்கும் ஆத்மாவுக்கும் வேறுபாட்டையும்
ஆத்மாவுக்கும் ஈஸ்வரனுக்கும் வேறுபாட்டையும் ஸம்பந்தத்தையும் அறிகை

அசித்துக்கும் ஆத்மாவுக்கும் வேறுபாட்டை அறிகை யாவது
அசித்து ஜடமாகையாலும் -ஆத்மா அஜடமாகையாலும்
அசித்து துக்க ரூபமாகையாலும் -ஆத்மா ஸூக ரூபமாகையாலும்
அசித்து அசுத்த மாகையாலும் -ஆத்மா சுத்தனாகையாலும்
அசித்து பகவத் ப்ராப்திக்கு பிரதிபந்தகமாகையாலும் -ஆத்மா பகவத் ப்ராப்திக்கு பிரதி சம்பந்தி யாகையாலும்
வேறுபாடு யுண்டு என்று அறிகை –

ஆத்மாவுக்கும் ஈஸ்வரனுக்கும் உள்ள ஸம்பந்தம் அறிகை யாவது
ஆத்மா ரஷ்யனாகையாலும் -ஈஸ்வரன் ரக்ஷகனாகையாலும்
ஆத்மா சேஷனாகையாலும்- ஈஸ்வரன் சேஷியாகையாலும்
ஆத்மா ஸ்வம் மாகையாலும் -ஈஸ்வரன் ஸ்வாமி யாகையாலும்
ஆத்மா கார்யமாகையாலும் -ஈஸ்வரன் காரணமாகையாலும்
ஆத்மா வ்யாப்யமாகையாலும் –ஈஸ்வரன் வ்யாபகமாகையாலும்
ஆத்மா விசேஷண மாகையாலும் ஈஸ்வரன் விசேஷ்யமாகையாலும்
ஆத்மா சரீரமாகையாலும் -ஈஸ்வரன் சரீரீ யாகையாலும்
ஆத்மா சரணாகதனாகையாலும் -ஈஸ்வரன் சரண்யனாகையாலும்
ஆத்மா ஸேவகனாகையாலும் –ஈஸ்வரன் சேவ்யனாகையாலும்
ஆத்மா கைங்கர்ய நிஷ்டனாகையாலும் ஈஸ்வரன் கைங்கர்ய பிரதிசம்பந்தியாகையாலும்
இப்படி இவனுடைய ஸம்பந்தமே ஸம்பந்தம் என்று அறிகை-

இந்தத் த்ரய ஞான அத்யவசாயம் அறிந்தானாவது எப்போது என்றால்
உடம்புடன் பொருந்தாமை பிறந்த வன்று -அசித்தை அறிந்தானாம்
தான் பரதந்த்ரனான வன்று -சித்தை அறிந்தானாம்
ஈஸ்வரனை ஒழியச் செல்லாமை பிறந்த வன்று -ஈஸ்வரனை அறிந்தானாம்

இத்தை ஆழ்வார்களும்
மேம்பொருள் போக விட்டு என்று –யுடம்புடன் பொருந்தாமையையும்
எம் தம்மை விற்கவும் பெறு வார்கள் என்று -ததீய பாரதந்த்யத்தையும்
உன்னை விட்டு எங்கனே தரிக்கேன் -(7-2-1)என்று -எம்பெருமானை விட்டுச் செல்லாமை பிறந்த படியையும்
அருளிச் செய்தார்கள் –

இனி தத்வ த்வய ஞான அத்யவசாயமாவது
தனக்கு தானும் பிறரும் தஞ்சம் அன்று என்று இருக்கை

அதாவது
தானாகிறான்
ரஷ்யனாகையாலும்
சேஷனாகையாலும்
அநந்ய பரதந்த்ரனாகையாலும்
அஞ்ஞனாகையாலும்
அசக்தனாகையாலும்
அபூர்ணன் ஆகையாலும்
அப்ராப்தன் ஆகையாலும்
அயோக்கியன் ஆகையாலும்
தஞ்சம் அன்று

பிறராகிறார்
சேதனாந்தர தேவதாந்த்ரங்கள்
இவர்கள் தானும்
தேஹாத்ம அபிமானிகளுமாய்
துர்மான வர்த்தகருமாய்
துர் விருத்தருமாய்
தோஷ துஷ்டருமாய்
எம்பெருமானுக்கு பரதந்த்ரருமாய்
அஞ்ஞருமாய்
அசக்தருமாய்
அபூர்ணருமாய்
அப்ராப்தருமாய்
அயோக்யருமாய்
தம் தாமுக்கு ஒரு ஆபத்து வந்தால் ஈஸ்வரனை சரண் புக்கு போக்கிக் கொள்ள வேண்டுகையாலும்
தஞ்சம் அன்று

ஆகையாலே
அவ் வருள் அல்லன அருளுமல்ல -(9-9-6)நல்லான் அருள் அல்லால் நாம நீர் வையகத்துப் பல்லார் அருளும் பழுது -(முதல் திருவந்தாதி)என்றும்
நின்னருளே புரிந்திருந்தேன் -என்றும் இருக்கை

தத்வ ஏக சக்த அத்யவசாய ஞானாகையாவது
தேஹ போகமும்
ஸ்த்ரீ புத்ராதி போகமும்
இந்த்ரியாதி போகமும்
கைவல்ய போகமும் தனக்கு என்னப் பண்ணும் பகவத் அனுபவமும் கட்டடங்க விட்டு
உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்-(10-10-6)
முற்றக் கரந்து ஒளித்தாய்(10-10-8)
பத்திமைக்கு அன்புடை யேன் ஆவதே பணியாய் (திருக்குறும் தாண்டகம்-10)என்று இருக்கை

இப்படி அத்யவசாயம் வுடைய அதிகாரிக்கு
க்ருதஜ்ஜையும்
செய்ய வேண்டுவதுக்கு அபேக்ஷையும்
ஸதா அனுசந்தேயம்

நமோ வேதாந்த வேத்யாய ஜகன் மங்கள ஹேதுவே
யஸ்ய வாக் அம்ருத சார பூரிதம் புவன த்ரயம்

———————–

வார்த்தா மாலை வார்த்தை -421-
1-ஸ்வரூப அனுகூலமான ரஷகத்வம் –
2-ஸ்வரூப அனுகூலமான சேஷத்வம் –
3-ஸ்வரூப அனுகூலமான சேவை –
4-ஸ்வரூப அனுகூலமான சஹ வாஸம் –
5-ஸ்வரூப அனுகூலமான கால ஷேபம் –
6-ஸ்வரூப அனுகூலமான இருப்பு –
7-ஸ்வரூப அனுகூலமான பரிக்ரஹம் –
8-ஸ்வரூப அனுகூலமான போஜனம் –
9-ஸ்வரூப அனுகூலமான அத்யவசாயம் –
10-ஸ்வரூப அனுகூலமான அபேஷை -என்கிற இவை பத்தும் ஒருவனுக்கு அவஸ்யம்   ஜ்ஞாதவ்யமாகக் கடவது –

1-ஸ்வரூப அனுகூலமான ரஷகத்வம் ஆவது –
தேச ரஷகன் என்றும்-
தேக ரஷகன் என்றும் –
பதார்த்த ரஷகன் என்றும் –
பௌருஷ ரஷகன் என்றும் -சொல்லுகிற ரஷகத்வங்களைத் தவிர்ந்து –

தேச நிவர்தகன் என்றும் –
தேக நிவர்தகன் என்றும் –
விஷய நிவர்தகன் என்றும் –
பாப நிவர்தகன் என்றும் -பற்றுகை –

அதாவது -கொடு உலகம் -திருவாய்மொழி -4-9-7- என்று அஞ்சினவாறே –
கலி யுகம் ஒன்றும் இன்றிக்கே -திருவாய்மொழி -5-2-11-தன்னடி யார்களுக்கு அருள் செய்யும்

பொல்லா ஆக்கை -திருவாய்மொழி -3-2-3- என்று அஞ்சினவாறே –
செடியார் ஆக்கை அடியாரைச் சேர்த்தல் -திருவாய்மொழி -1-5-7-தீர்க்கும்

ஐவர் அறுத்துத் தின்றிட அஞ்சி நின்னடைந்தேன் -பெரிய திருமொழி -7-7-7-என்றவாறே
அடியரைத் துப்பாம் புலன் ஐந்தும் துஞ்சக் கொடான் -திருவாய்மொழி -1-7-2-

நமன் தமர் செய்யும் வேதனைக்கு ஒடுங்கி நடுங்கினேன் -பெரிய திரு மொழி -1-6-3- என்றவாறே –
நமன் தமர் என் தமரை வினவப் பெறுவர் அலர் -பெரிய திருமொழி -10-6-5–என்னும்
அடியார் படு துயர் ஆயின எல்லாம் நிலம் தரம் செய்யும் -பெரிய திருமொழி -1-1-9-என்னக் கடவது இறே

2–ஸ்வரூப அனுகூலமான சேஷத்வம் ஆவது –
இதர சேஷம் என்றும் –
க்ருஹ சேஷம் என்றும் –
பித்ரு சேஷம் என்றும் –
தேவதாந்தர சேஷம் என்றும் -சொல்லுகிற ஆபாஸ சேஷங்களைத் தவிர்ந்து

சர்வேஸ்வரனே தாரகன் என்றும் –
வியாபகன் என்றும் –
சரீரி என்றும் –
சேஷி என்றும் பற்றுகை -அதாவது –

ஆவிக்கோர் பற்றுக்கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் -திருவாய் மொழி -10-10-3- என்றும்-
உன்னை விட்டு எங்கனே தரிக்கேன் -திருவாய்மொழி -7-2-1- என்றும் —
என்னுடை வாழ் நாள் -பெரிய திருமொழி -1-1-6- என்றும் —
அடியோர்க்கு அகலலாமே -திருமாலை -20 என்றும் -இருக்கை –

3-ஸ்வரூப அநுகூலமான சேவை யாவது –
சேதனாந்தர சேவையையும் –
தேவதாந்தர சேவையையும் –
பகவத் சேவையையும் –
த்ருஷ்ட பிரயோஜனதுக்காக சேவிக்கையும் –
அத்ருஷ்டதுக்கு ஹேது என்று சேவிக்கிற சேவையையும் தவிர்ந்து –
ஸ்வரூப பிரயுக்தம் என்று சேவிக்கை -அதாவது

4-ஸ்வரூப அனுகூலமான சஹ வாஸம் –
சேவியேன் உன்னை அல்லால் -திருமாலை -35 -என்றும் –
உன்னை சேவித்து -புண்ய ஷேத்ர வாசமும் யோக்யதைக்கு உறுப்பு என்றும் இருக்கிற இருப்பைத் தவிர்ந்து

5-ஸ்வரூப அனுகூலமான கால ஷேபம் –
தேசத்திலே பிரேமம் பிறக்கைக்கு என்றும் –
தேசிகனை நித்ய சேவை பண்ணவாம் என்றும் –
தேச வர்த்தகரான சாத்விகரோடே கலந்து பரிமாறுகைக்கு என்றும் விபரீதங்கள் புகுராத இடம் என்று இருக்கை –

6-ஸ்வரூப அனுகூலமான இருப்பு -அதாவது –
தஞ்சை மா மணிக்-திருவாய்மொழி -9-6-7-என்றும் –
கற்றார் சேர் கண்ணபுரம் -பெரிய திருமொழி -8-10-5-என்றும் –
விளைந்த தானியமும் இராக்கதர் மீது கொள்ள கிலார்கள் -பெரியாழ்வார் திருமொழி -4-4-8-என்றும் இருக்கை

7-ஸ்வரூப அநுகூலமான பரிக்ரஹம் ஆவது –
அனுகூலரை நெருக்கி ஸ்வீகரிக்கையும்
பிரதிகூலர் பக்கல் சாபேஷனாய் ஸ்வீகரிக்கையும்-
ஸ்வரூப பிரயுக்தமானவற்றை பதார்த்தங்களுக்கு உறுப்பாக்கி ஸ்வீகரிக்கையும் –
அமுதுபடி சாத்துப்படிக்கு அர்ஹமானவற்றையும் பரிக்ரஹிக்கை தவிர்ந்து –

க்ருஷி பண்ணுதல் -அதாவது
மெய் வருத்திக்  கை செய்தும்மினோ -திருவாய்மொழி -3-9-6-
முஷ்டி புகுதல் -அதாவது -பிச்சை புக்காகிலும் எம்பிரான் திருநாமமே நச்சுமின் -பெரியாழ்வார் திருமொழி -4-6-3-
சிஷ்யன் ப்ரீதியாலே தர்மத்தை யாதல் -அதாவது -சரீரம் அர்த்தம் பிராணஞ்ச சத்குருப்யோ நிவேதயத் -என்றும் –
சாத்விகர் திரு உள்ள பிரசன்னத்தாலே தருமத்தை யாதல் -அதாவது –
வரு விருந்தை அளித்திருப்பார் -பெரியாழ்வார் திருமொழி -4-8-2 பரிகிரஹிக்கை -என்கிறவர்களுடைய பதார்த்தங்களை ஸ்வீகரிக்கை

8-ஸ்வரூப அனுகூலமான போஜனமாவது –
க்யாதியைப் பற்றவாதல் –
பூஜையைப் பற்றவாதல் –
என்னது நானிடுகிறேன் -என்றாதல் -இடுகிற போஜனத்தை தவிர்ந்து –

நெய்யமர் இன் அடிசில் -திருவாய்மொழி -6-8-2- என்றும்
நல்லதோர் சோறு -திருவாய்மொழி -6-7-1-என்றும் சொல்லுகிறவற்றை புஜிக்கை

0-ஸ்வரூப அனுகூலமான அத்யவசாயமாவது –
இவ்வருகு உண்டான ரசாக ஸ்வீகாரங்கள் அன்றியே ஸ்வரூப விரோதி நிவ்ருத்த பூர்வகமான
புருஷார்த்தத்தை தரும் என்கிற விஸ்வாசம் -அதாவது –
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்றிலேன் -திருவாய்மொழி -5-8-8- என்றும் –
நீ தாராய் பறை -திருப்பாவை -28-என்றும் –
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் -திருவாய்மொழி -5-8-3- என்றும் –
நின்னருளே புரிந்து இருந்தேன் -பெரியாழ்வார் திருமொழி -5-4-1- என்றும் இருக்கை

10-ஸ்வரூப அனுகூலமான அபேஷை யாவது –
புத்ர பச்வன்னாதி பதார்த்தத்தையும்
ஸ்வர்க ஐஸ்வர்ய புருஷார்த்தத்தையும் –
கைவல்ய புருஷார்த்தத்தையும் –
பகவத் அனுபவத்தை தனக்கு இனிது என்று புஜிக்கிற பதார்த்தங்களையும் தவிர்ந்து
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணும் -திருவாய்மொழி -9-3-7- என்றும்-
அடியார்கள் குழாம் -களை உடன் கூடுவது என்று கொலோ -திருவாய்மொழி -2-3-10-என்றும் –
காண்பது எஞ்ஞான்று கொலோ -திருவாய்மொழி -5-9-5-என்றும்
வழு விலா அடிமை செய்ய வேண்டும் -திருவாய்மொழி -3-3-1- என்று ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வார்த்தை –

———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நஞ்சீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading