ஸ்ரீ ஆறாயிரப்படி –10-9-3-
தொழுதனர் உலகர்கள் தூப நல் மலர் மழை
பொழிவனர்பூமி அன்று அளந்தவன் தமர் முன்னே
எழுமின் என்று இருமருங்கு இசைத்தனர் முனிவர்கள்
வழி இது வைகுந்தர்க்கு -என்று வந்து எதிரே–10-9-3-
பூமி அன்று அளந்தவன் தமர் முன்னே தூப நன் மலர் மழை பொழிவனர் –
ஸ்ரீ வைகுண்டத்து ஏறப் போவார்க்கு வழி இது வென்று எதிரே வந்து இங்கனே எழுந்து அருள ஒண்ணாதோ என்று
இரு மருங்கும் முனிவர்கள் நின்று இசைத்தனர் என்கிறார் –
———
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –10-9-3-
ஆதி வாஹிக லோகங்களில் உள்ளார் திரு நாட்டுக்கு நடக்கிற ஸ்ரீ வைஷ்ணவர்கள் எதிரே வந்து புஷ்ப வர்ஷாதிகளைப் பண்ணிக் கொண்டாடுகிற படியை அருளிச் செய்கிறார் –
தொழுதனர் உலகர்கள் தூப நல் மலர் மழை
பொழிவனர்பூமி அன்று அளந்தவன் தமர் முன்னே
எழுமின் என்று இருமருங்கு இசைத்தனர் முனிவர்கள்
வழி இது வைகுந்தர்க்கு -என்று வந்து எதிரே–10-9-3-
பூமி அன்று அளந்தவன் தமர்–திரு உலகு அளந்து அருளினவன் குணத்திலே அகப்பட்டு அடிமை புக்கு திரு நாட்டுக்குப் போகிற ஸ்ரீ வைஷ்ணவர்கள் –
எழுமின் என்று இருமருங்கு இசைந்தனர் முனிவர்கள்-வழி இது வைகுந்தர்க்கு -என்று வந்து எதிரே–ஸ்ரீ வைகுண்டத்துக்கு போவார்க்கு வழி இது வென்று எதிரே வந்து இரண்டு அருகும் நின்று -எழுந்து அருளலாகாதோ -என்றார்கள் –முனிவர்கள்– முனிவர்கள் என்று வாங்நியமம் தவிர்ந்தமைக்கு ஸூ சகம் –
—————
ஸ்ரீ பன்னீராயிரப்படி –10-9-3-
அநந்தரம் -அநந்யார்ஹத ஆபாதகனான த்ரிவிக்ரமனுக்கு சேஷ பூதரானவர்கள் சந்நிதியில்
ஆதி வாஹிக லோகத்தில் உள்ளார் சத்கரித்த பிரகாரத்தை அருளிச் செய்கிறார் –
தொழுதனர் உலகர்கள் தூப நல் மலர் மழை
பொழிவனர்பூமி அன்று அளந்தவன் தமர் முன்னே
எழுமின் என்று இருமருங்கு இசைத்தனர் முனிவர்கள்
வழி இது வைகுந்தர்க்கு -என்று வந்து எதிரே–10-9-3-
பூமி அன்று அளந்தவன் தமர் முன்னே எழுமின் என்று –அன்று மஹா பலி என்னது என்று அபிமானித்த அன்று
பூமியை அநந்யார்ஹமாம் படி அளந்தவனுடைய சேஷ பூதருடைய சந்நிதியில்
தொழுதனர் உலகர்கள் தூப நல் மலர் மழை பொழிவனர்–தூப பூர்வகமாக நன்றான புஷ்ப வர்ஷத்தை பொழிவராய்க் கொண்டு
அவ்வோ லோகங்களில் உள்ளார் தங்கள் சேஷத்வ அனுரூபமாக அஞ்சலி வந்தனம் பண்ணினார்கள் –
முனிவர்கள் வழி இது வைகுந்தர்க்கு -என்று வந்து எதிரே-இருமருங்கு இசைத்தனர் –அந்த லோகங்களில் வாக் நியதி யுடையரான
முனிவரானவர்கள் -அந்த நியதியைத் தவிர்ந்து
ஸ்ரீ வைகுண்டத்துக்குப் போமவர்களுக்கு வழி இது என்று சொல்லி
எழுந்து அருள லாகாதோ என்று இரண்டு பக்கத்திலும் நின்று சாதாரமாகச் சொன்னார்கள் –
——
ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -10-9-3-
ஆதி வாஹிக லோகங்களில் உள்ளார் திரு நாட்டுக்கு நடக்கிற ஸ்ரீ வைஷ்ணவர்கள் எதிரே வந்து புஷ்ப வர்ஷாதிகளைப் பண்ணிக் கொண்டாடுகிற படியை அருளிச் செய்கிறார் –
தொழுதனர் உலகர்கள் தூப நல் மலர் மழை
பொழிவனர்பூமி அன்று அளந்தவன் தமர் முன்னே
எழுமின் என்று இருமருங்கு இசைத்தனர் முனிவர்கள்
வழி இது வைகுந்தர்க்கு -என்று வந்து எதிரே–10-9-3-
தொழுதனர் உலகர்கள்--ஆதி வாஹிக லோகங்களில் உள்ளார் -கை படைத்த பிரயோஜனம் பெற்றோம் என்று தொழுதார்கள் –
தூப நல் மலர் மழை-பொழிவனர்–தூபத்தையும் -நல்ல மலர் மழையையும் பிரயோகித்து தொழா நின்றார்கள் –
பூமி அன்று அளந்தவன் தமர் முன்னே–திரு உலகு அளந்து அருளின ஸ்ரீ வாமனன் செயலுக்குத் தோற்று அடிமை புக்கவர்கள் என்றாய்த்து அவர்கள் ஆதரிக்கிறது –
எழுமின் என்று இருமருங்கு இசைத்தனர் முனிவர்கள்-இங்கே எழுந்து அருள வேணும் என்று இரண்டு அருகும் நின்று சொன்னார்கள் முனிவர்கள் -முனிவர்கள் என்று வாங்நியமம் தவிர்ந்தமைக்கு ஸூ சகம் – மௌனத்துக்கு விஷயம் புறம்பே இ றே என்று இருந்தார்கள் –
வழி இது வைகுந்தர்க்கு -என்று வந்து எதிரே–பரம பதத்துக்கு போவார்க்கு வழி இது வென்று எதிரே வந்து –தம் தம்முடைய எல்லையில் வந்தால் ஆதரிக்கிறோம் என்று இருக்கை அன்றிக்கே எதிரே வந்து ஆதரித்தவர்கள் –
பூமி அன்று அளந்தவன் தமர் முன்னே– தூப நல் மலர் மழை-பொழிவனராய்க்கொண்டு -முனிவர்களான உலகர்கள் தொழுதனர் -வைகுந்தத்துக்கு வழி இது என்று எதிரே வந்து -எழுமின் என்று இருமருங்கு இசைத்தனர் -என்று அந்வயம் –
———
ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –10-9-3-
தொழுதனர் உலகர்கள் தூப நல் மலர் மழை
பொழிவனர்பூமி அன்று அளந்தவன் தமர் முன்னே
எழுமின் என்று இருமருங்கு இசைந்தனர் முனிவர்கள்
வழி இது வைகுந்தர்க்கு -என்று வந்து எதிரே–10-9-3-
அநந்யார்ஹதா ஆபாதகன் த்ரிவிக்ரமன் -எல்லை நடந்து –சேஷ பூதர் -ஆதி வாஹிக லோகத்தில் உள்ளார் ஸத்காரம்
தொழுதனர் உலகர்கள் தூப நல் மலர் மழை-அகில் புகை தூபம் -புஷ்ப்ப வர்ஷம் -மென்மை பரிமளம் -புகை இல்லை மணம் மட்டும்
-சுற்றும் விளக்கு -விளக்கு தெரியாது வெளிச்சம் மட்டும் -புகை இல்லை பரிமளம்க மழும் –
அஞ்சலி -சேஷத்வ அனுரூபம் -அவர்கள் எல்லாம் பக்தாத்மா-தானே முக்தரை பார்த்து தொழுதனர்
பொழிவனர்பூமி அன்று அளந்தவன் தமர் முன்னே-மகாபலி என்னது என்று அபிமானித்த அன்று -ஓங்கி உலகு அளந்த உத்தமன் உடைய சேஷ பூதர்கள்
எழுமின் என்று இருமருங்கு இசைந்தனர் முனிவர்கள்-
மௌன விரதம் கலைத்து -வாக் நியதி உடையவர் –
வழி இது வைகுந்தர்க்கு -என்று வந்து எதிரே-போவார்க்கு வழிஇது என்று சொல்லி -எழுந்து அருளல் ஆகாதோ என்று
இரு பக்கமும் சாதாரமாக கனிவுடன் இசைத்து -பகர்ந்தார் -ஆதரவு உடன் –
ஆதி வாஹிக லோகங்களில் உள்ளார்-எதிரே வந்து மலர் மழையைப் பொழிந்து-கொண்டாடுகிற படியை-அருளிச் செய்கிறார்-
தொழுதனர் உலகர்கள் தூப நல் மலர் மழை பொழிவனர்-
உலகர்கள் தூப நல் மலர் மழை பொழிவனர்–தொழுதனர்-
ஆதி வாஹிக லோகங்களில் உள்ளார் -கை படைத்த பிரயோஜனத்தைப் பெற்றோம் -என்று-
தூபத்தையும் நல்ல மலர் மழையையும்-பொழிந்து-தொழா நின்றார்கள் –
பூமி அன்று அளந்தவன் தமர் முன்னே –
ஸ்ரீ வாமனனாய் திரு உலகு அளந்து அருளின செயலுக்கு தோற்று அடிமை புக்கவர்கள் என்று ஆயிற்று-அவர்கள் ஆதரிக்கிறது –
மூவடி மண் கொண்டு அளந்த மன்னன் சரிதைக்கே மாலாகிப் பொன் பயந்தேன் -பெரிய திரு மொழி -3-4-2-என்னுமவர் போல்வர் உண்டே –
அவன் திரு உலகு அளந்து அருளின நினைவைப் பயன் உடையதாகச் செய்தவர்கள் என்று ஆயிற்று-அவர்கள் ஆதரிக்கிறது –
திருவடியால் தீண்டி சம்பந்தம் கொடுத்து தன்னிடம் சேர்த்துக் கொள்ள பட்ட பலன் அன்றோ இவர்கள் அங்கு செல்வது –
எழுமின் என்று இருமருங்கு இசைந்தனர் முனிவர்கள் –
இங்கே எழுந்து அருள வேண்டும் -என்று இரண்டு அருகும்-நின்று சொன்னார்கள்
முனிவர்கள் -என்றது -பேசலாகாது -என்று இருந்தமை தவிர்ந்தமைக்கு அறிகுறி –மௌனத்துக்கு விஷயம் புறம்பே என்று இருந்தார்கள் –
சம்பாஷணாதி பூஜாந்த்தம் – -ஜெப மத்யே -வைஷ்ணவோ சமாகதா –
வழி இது வைகுந்தர்க்கு -என்று வந்து எதிரே –
பரமபதம் செல்வார்க்கு வழி இது -என்று எதிரே வந்து சொன்னார்கள்-
சுக்ல கிருஷ்ண கதீஹ்யதே ஜகத சாஸ்வதே மத-ஏகயா யாதி அநாவ்ருத்திம் அத்யயாவர்த்ததே புன -ஸ்ரீ கீதை -8-26-
உலகத்திற்கு பழைமையானவை -என்கிறபடியே-குறித்தவர் எல்லாரும் போகக் கூடியதாய் கிடக்கிற வழி-
இன்று இது உண்டாகிறது அன்றோ-பிரசித்தமாக இருந்தாலும் இவர்கள் சொல்வது தங்கள் ஸத்காரம் பெற –
பாகவதர் விஷயத்திலே தொண்டு செய்து நாம் நிலை பெற வேண்டும் என்று-
எதிரே தம் தாமுடைய நிலைகளைக் கடந்து வந்து ஆதரித்தார்கள் –
முதலிகள் தங்கள் சத்தை இழக்க கூடாது என்று அன்றோ பெருமாள் இடம் ஸ்ரீ விபீஷண ஆழ்வான் வரவை சொன்னால் போலே —
வைகுந்தர்க்கு-
வேறு தேசத்திற்கு சென்று இருந்த அரசன் தன் தேசத்திலே புகுமாறு போலே-
அங்கு நின்றும் பிரிகதிர் பட்டு போந்தாராய் இருக்கிறபடி –
ஆஜகாம -ஸ்ரீ விபீஷணன் பெருமாள் இடம் -சேர்ந்தால் போலே -அக்கரை -அநர்த்தம் சம்சாரம் இக்கரை -ஸ்ரீ வைகுந்தம்
எதிர் எதிர் -எழுமின் என்று இருமருங்கு இசைந்தனர்
பூமி அன்று அளந்தவர் தமர் முன்னே-தூப நல் மலர் மழை பொழிவனராய்க் கொண்டு-
முனிவரான உலகர் தொழுதனர் –
வைகுந்தர்க்கு வழி இது என்று எதிரே வந்து-எழுமின் என்று இரு மருங்கும் இருந்தனர் -என்க-
——————————————————————————————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
Leave a Reply