ஸ்ரீ ஆறாயிரப்படி —
இந்த அபிராப்தி கர்ப்பமான குண அனுசந்தான ஜெனித ப்ரீதியானது மாறி
அப்ராப்த்யம்சமே தலை எடுத்து அந்யாபதேசத்தாலே
தூத ப்ரேஷணம் பண்ணுகிறார்-
——
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி —
இப்படி அப்ராப்தி கர்ப்ப ஸ்மரணத்தாலே மிகவும் ப்ரீதரான வர்க்கு இப்போது பகவத் சாஷாத்காரம் இல்லாமையால்
ஸ்மரணத்தால் வந்த ப்ரீதியும் மாறி அப்ராப்தியே தலை எடுத்து அத்யந்தம் அவசன்னரான ஆழ்வார் தம்முடைய தசையை
ஒரு பிராட்டியுடைய தூத வாக்யத்தாலே எம்பெருமானுக்கு அறிவிக்கிறார் -எம்பெருமானுடைய அழகிலே ஈடுபட்டு அவனோடே
சம்ச்லேஷித்தாள் ஒரு பிராட்டி அவன் வரவு காணாதே அவனால் அல்லது செல்லாதே ப்ரக்ருதி யாகையாலே தன் ஆற்றாமையாலே
க்ருஹத்தில் நின்றும் உத்யான பிரதேசத்தில் சென்று -அங்கே இருந்தன சில பக்ஷிகளைக் குறித்து நிரதிசய போக்யமான
வடிவை யுடையனாய் க்ருபாம்புதியானவன் தான் தனக்கு ஸ்நேஹிகளானாரோட்டை பரிமாற்றத்தாலே என் தசையை யுணராதே மறந்து இருந்தான் அத்தனை –
ஆதலால் தன் அழகைக் கண்டு பிரிந்தார் தரிப்பாரோ என்று அவனுக்கு அறிவிக்க வேணும் என்று அவற்றை சவிநயமாக இரக்கிறாள் –
———
ஸ்ரீ பன்னீராயிரப்படி —
ஏழாம் திருவாய் மொழியில் -கீழ் -குண ஸ்மரணத்தாலே சிதிலரானவர் அந்த ஸைதில்யம்
பாஹ்ய அனுபவ பர்யந்தமான அபி நிவேசத்தைப் பிறப்பிக்க –
அனுபவ யோக்யமாம் படி திரு மூழிக் காலத்திலே எழுந்து அருளி இருக்கிற சர்வேஸ்வரனுடைய
அதிசயித போக்யதாகாரத்தையும்
அசாதாரண ஜன அனுபாவ்யத்தையும்
சேஷித்வ பிரகாச ரூப வைலக்ஷண்யத்தையும்
நித்ய அனுபாவ்ய சேஷித்வத்தையும்
நிரதிசய விபூதிமத்வத்தையும்
நித்ய அநபாயினீ சம்பந்தத்தையும்
அத்யுஜ்ஜ்வல திவ்ய அவயவத்தையும்
ஆபி ரூப்ய அதிசயத்தையும்
அசாதாரண சேஷித்வ சிஹ்னத்தையும்
அநுபஹித கிருபா யோகத்தையும்
அனுசந்தித்து ஏவம் விசிஷ்டனான சர்வேஸ்வரனைக் கிட்டி அனுபவிக்கப் பெறாத ஆர்த்தியாலே
கடக முகத்தால் லபிக்கப் பாரித்த பிரகாரத்தை
நாயகனான சர்வேஸ்வரனைப் பிரிந்த நாயகியானவள் வ்யதிரேகத்தில் தரிக்க அரிதான அவனுடைய அழகை
அனுபவிக்கைக்காகச் சில பஷிகளை இரந்து தூது போக விடுகிற பாசுரத்தாலே அருளிச் செய்கிறார்
அஞ்சிறைய மட நாரையிலே அபராத சஹத்வம் பற்றாசாகவும்
வைகல் பூம் கழிவாயில் சேஷித்வ சம்பந்தம் பற்றாசாகவும்
பொன்னுலுகு ஆளீரிலே ஏக ரஸத்வம் பற்றாசாகவும்
இத்திருவாய் மொழியிலே ஸுந்தர்யம் பற்றாசாகவும் தூது விடுகிறாள் –
————
ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி –
அப்ரீதி கர்ப்ப குண ஸ்மரணத்தாலே மிகவும் ப்ரீதர் ஆனவர் -பாக்ய ஹானியாலே அப்ரீதி வம்சமே தலையெடுத்து அவனைப் பெறில்
ஜீவித்தல் -பெறா விடில் முடிதலாம் படியான தம்முடைய தசையை அந்யாபதேசத்தாலே அருளிச் செய்கிறார் –
இயற்கையிலே புணர்ந்து பிரிந்தாள் ஒரு பிராட்டி அவன் அழகிலே ஈடுபட்டு அவசன்னையாய் தன் ஆற்றாமை கை கொடுக்க
உத்யானத்திலே சென்று அங்கு இருக்கிற பக்ஷிகளைக் குறித்து -பின்னானார் வணங்கும் சோதி -திரு மூழிக் களம்-என்கிறபடியே தூது போவார்க்கு
அருமைப் பட்டு அறிவிக்க வேண்டாத படி திரு மூழிக் களத்திலே வந்து நின்று அருளினான் -தனக்கு நல்லாரை விட மாட்டாதவன் ஆகையால்
நம் தசையை அறியாது இருந்தான் அத்தனை -க்ருபாம்புதி யாகையாலே நம் தசையை அறிவிக்க வரும்
-தன் அழகைக் கண்டு பிரிந்தார் தரிப்பாரோ என்று அறிவிக்க வேணும் என்று
அவற்றை சவிநயமாக இரக்கிறாள் ஒரு பிராட்டி பேச்சாலே தம் தசையை அருளிச் செய்கிறார் –
அஞ்சிறைய மட நாரையில்-இத்தலையில் அபராதத்தாலே வாராது ஒழிந்தான் அத்தனை -என்று அவனுடைய அபராத சஹத்வம் பற்றாசாக தூது விட்டார் –
வைகல் பூங்கழி வாயில்-நல்லது கண்டால் கால் தாழுமவன் ஆகையால் மறந்து இருந்தான் அத்தனை
-நம் ஆர்த்தியை அறிவித்தால் தன்னிமையிலே நெஞ்சு வைப்பான் ஒருவன் அல்லன் என்று அது பற்றாசாகத் தூது விட்டார்
பொன்னுலகாளியில்-ஐஸ்வர்ய பரப்பாலே மறந்து இருந்தான் அத்தனை -ஆஸ்ரிதரோடு ஏகரசன் என்று அறிவிக்கவே வரும்
-என்று ஐக ரஸ்யம் பற்றாசாக தூது விட்டார்
இதில் தனக்கு நல்லாரை விட மாட்டாமையாலே வாராது இருந்தானாம் அத்தனை –
தன் வடிவு அழகு அது -குணங்கள் அவை -ஆனபின்பு பிரிந்தார்க்கு ஜீவித்து இருக்கப் போமோ என்று
அவ் வடிவு அழகும் குணங்களும் பற்றாசாகத் தூது விடுகிறது –
—————
ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி —
எங்கானல் -பிரவேசம் –
மேல் திருவாய் மொழியிலே அப்ரீதியை உட்கொண்ட குணங்களின் நினைவாலே-மிகவும் ப்ரீதியை அடைந்தவர்-
நல்வினைக் குறையாலே-அப்ரீதி இன்மையே தலையெடுத்து-அவனைப் பெற்றால் பிழைத்தல் -பெறா விடில் முடிதல்
ஆம்படி தனக்கு உண்டான தம்முடைய நிலையினை-அன்யாபதேசத்தால் அருளிச் செய்கிறார் –
இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து பிரிந்தாள் ஒரு பிராட்டி-அவன் வடிவு அழகில் ஈடுபட்டு-துயரம் உற்றவளாய் –
தன் ஆற்றாமை கை கொடுக்க -தன் உபவனத்திலே சென்று-அங்கு இருக்கிற பறவைகளைக் குறித்து
பின்னானார் வணங்கும் சோதி திரு மூழிக் களம் -திரு நெடும் தாண்டகம் -10-என்கிறபடியே
தூது போவார்க்கு வருந்தி அறிவிக்க வேண்டாத படி-திரு மூழிக் களத்திலே வந்து நின்று அருளினான்
தனக்கு நல்லாரை விட மாட்டாதவன் ஆகையாலே நம் நிலை அறியாது இருந்தான் அத்தனை –
அருள் உடையவன் ஆகையாலே-நம் நிலையை அறிவிக்க வரும்-என்று அவற்றை வினயத்தோடு
இரக்கிறாள்-ஒரு பிராட்டி பேச்சாலே தம் நிலையை-அருளிச் செய்கிறார் –
தம் பிழையும் -சிறந்த செல்வமும் -படைத்த பரப்பும் – தமரோட்டை வாசமும்
மறப்பித்த
ஷமா – தீஷா – சாரஸ்ய – ஸுந்தர்யங்களை
உணர்த்தும்
வ்யூஹ விபவ பரத்வ த்வய அர்ச்சைகள் தூது நாலுக்கும் விஷயம் –சூர்ணிகை -156-
அஞ்சிறைய மட நாராய் -என்ற திருவாய் மொழியிலே
நம் பக்கல் உள்ள குற்றத்தால் வராது ஒழிந்தான் இத்தனை –என் பிழையே நினைந்து அருளி –
குற்றங்களைப் பொறுக்கும் அவனுடைய பொறை உடைமையை அறிவிக்க வருவான் –என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கே -என்று
பொறை உடைமையை பற்றாசாகக் கொண்டு தூது விட்டாள்-
வைகல் பூம் கழிவாய் -என்ற திரு வாய் மொழியிலே
நல்லது கண்டால்-சிறந்த செல்வம் – கால் தாழுமவன் ஆகையாலே-திரு வண் வண்டூரில் நிறைவினைக் கண்டு கால் தாழ்ந்தான் இத்தனை-
தம் துயரை அறிவித்தால் -என்னையும் உளள் என்மின்கள் –
தன் இனிமையில் நெஞ்சு வைப்பான் ஒருவன் அல்லன் –என்று அது பற்றாசாக தூது விட்டாள் –
பொன்னுலகு ஆளீரோ-என்ற திரு வாய் மொழியிலே
திருக் கோளூர் ஏறப் போக -என்று
தன்னுடைய உபவனத்து அளவும் சென்று மேலும் செல்லுவதற்கு வலி இல்லாமையாலே போக மாட்டாதே
இருக்கிற பிராட்டி -பின்னையும் வரக் காணாமையாலே –
யாவையும் யாவருமாய் – முன் உலகங்கள் எல்லாம் படைத்த –செல்வப் பரப்பாலே வாராது ஒழிந்தான் –
தண் துழாய் நமக்கு அல்லது நல்கான் -அடியார்களோடு-ஓன்று பட்ட இன்பத்தை உடையவன் ஆகையால் வரும் –
என்று ஓன்று பட்ட இன்பத்தை உடையவனாய் இருத்தலையே-பற்றாசாக தூது விட்டாள் –
இதில் தனக்கு நல்லராய் இருப்பாரை விட மாட்டாமையாலே-வாராது இருந்தான் அத்தனை
தன் வடிவு அழகு அது -அக்கமலத்து இலை போலும் திரு மேனி அடிகளுக்கு –குணங்கள் அவை -தமரோடு அங்கு உறைவார்க்கு –
ஆன பின்பு பிரிந்தார்க்குப் பிழைத்து இருக்கப் போமோ -என்று-அவன் வடிவு அழகையும் குணங்களையும்
பற்றாசாக தூது விடுகிறாள் –
அங்க மாலி அருகில் -திரு மூழிக் களம் –எர்ணா குளம் -திருக் காட்கரைக்கு -கிழக்கே உள்ள திவ்ய தேசம் –
மகாத்மாக்கள் விரஹம் சஹியாத மார்த்த்வம் வளத்தின் களத்தே கூடு பூரிக்கும் -சூர்ணிகை -179
திரு மூழிக் களத்து விளக்கு -பின்னானார் வணங்கும் சோதி –
கல்லும் கனை கடலும் -திரு வேங்கடம் அர்ச்சா ஸ்தலங்களுக்கு பிரதி நிதி போலே
திரு மூழிக்களம் -அர்ச்சைக்கு தூது இதில் -பிரதி நிதி தானே இந்த திவ்ய தேசம்
அப்பன் -ஸ்ரீ ஸூக்தி நாதன்-ஸ்ரீ மதுரை வேணி நாச்சியார்– பாரத புழா நதி அருகில்
ஹரிதா மகா ரிஷி தவம் -பக்தி ஸூ த்ரங்களை பிரார்த்தித்து -ஸ்ரீ ஸூக்தி -திரு மொழி –
களத்து மேடு -பயிர் செழிக்கும் -மொழி மருவி மூழிக் களம்
லஷ்மணன் தபம் -பரத அபசாரம் போக்கிக் கொள்ள -இங்கே வந்து –லஷ்மண ஸ்வாமி என்றே இந்த பெருமாள் இன்றும் –
——————————————————————————————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
Leave a Reply