ஸ்ரீ ஆறாயிரப்படி –1-3-6-
உணர்ந்து உணர்ந்து இழிந்து அகன்று உயர்ந்து உருவியந்த இந்நிலைமை
உணர்ந்து உணர்ந்து உணரிலும் இறை நிலை உணர்வு வரிது உயிர்காள்
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து அரி அயன் அரன் என்னும் இவரை
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து இறைஞ்சுமின் மனப்பட்ட தொன்றே –1-3-6-
ஞாத்ருத்வைக ஸ்வரூபமாய்– ஞானதஸ் சர்வகதமாய் -பிரகிருதி விநிர்முக்தமாய் இருந்த பரி ஸூத்த ஆத்ம ஸ்வரூபத்தை உள்ளபடியே விசத்தமாய் உணரிலும்
ஆஸ்ரித ஸமாச்ரயணீயத்வ அர்த்தமாக தேவ மனுஷ்யாதி ரூபேண அவத்தீர்ணனான இந்த சர்வேஸ்வரன் ஆகிறான்
ப்ரஹ்மாவோ ருத்ரனோ நாராயணனோ என்று அறிகை அரிது –ஆகில் எங்கனே அறியும்படி என்னில்
அரி அயன் அரன் என்னும் இவர் நிறமாக பஹு சாஸ்த்ர ஸ்ரவண மனனங்களை பண்ணுவது -இப்படி
பஹு சாஸ்த்ர ஸ்ரவண மனனங்களைப் பண்ணவே அவர்களில் ஒருவன் ஈஸ்வரன் என்று தோற்றும் -அவனை ஆஸ்ரயிங்கோள் என்கிறார் –
————
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி -1-3-6-
சர்வேஸ்வரன் ஸூ லபன் ஆகைக்காக ப்ரஹ்ம ருத்ராதிகளோடு சஜாதீயனாக திருவவதாரம் பண்ணுகையாலே
சமாஸ்ரயணீயன் இன்னான் என்று நிர்ணயிக்க ஒண்ணாமே பழைய துர்லப்த்வ சங்கை மீளவும் பிரசங்கிக்க
மூர்த்தி த்ரய நிர்ணய உபாயத்தைச் சொல்லிக் கொண்டு அந்த தௌர்லப்யத்தை பரிஹரிக்கிறார்
உணர்ந்து உணர்ந்து இழிந்து அகன்று உயர்ந்து உருவியந்த வின்நிலைமை
உணர்ந்து உணர்ந்து உணரிலும் இறை நிலை யுணர்வரிது உயிர்காள்
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து அரி அயன் அரன் என்னும் இவரை
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து இறைஞ்சுமின் மனப்பட்ட தொன்றே –1-3-6-
உணர்ந்து உணர்ந்து
வீப்சையாலே ஆத்மாவுக்கு ஜ்ஞாத்ருத்வம் ஆகந்துகம் அன்று
ஸ்வா பாவிக நித்ய தர்மம் -என்கிறது –
இழிந்து அகன்று உயர்ந்து உருவியந்த வின்நிலைமை
ஸ்வ ஞான பிரபையாலே -பத்து திக்கும் வியாபித்து பிரகிருதி வியுக்தமாய்க் கொண்டு இப்படி இருக்கிற ஆத்மாவின் நிலைமையை –
உணர்ந்து உணர்ந்து உணரிலும் இறை நிலை யுணர்வரிது உயிர்காள்-உணர்ந்து உணர்ந்து உரைத்து அரி அயன் அரன் என்னும் இவரை
ஸ்ரவண மன நாதி களாலே சாஷாத் கரிக்கக் கூடிலும் சர்வேஸ்வரன் ப்ரஹ்ம ருத்ராதிகளோடு ஒக்கத் தன்னை
சங்கோ சித்து கொண்டு நிற்கையாலே இவர்களில் ஈஸ்வரன் இன்னான் என்று அறிகை அரிது –
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து இறைஞ்சுமின் மனப்பட்ட தொன்றே —
குண ரூப நாமாதிகளாலும் -தத் பிரதிபாதகமான பிரமாணங்களாலும் இவர்கள் மூவரிலும் எவன் ஈஸ்வரன் என்று மிகவும் ஆராய்ந்து
ஈஸ்வரதயா நிர்ணீதன் ஆனவனை மன நாதிகளாலே ஹிருதயத்திலே பிரதிஷ்டிதனாம் படி அனுசந்தித்து ஆஸ்ரயியுங்கோள் –
————
ஸ்ரீ பன்னீராயிரப்படி -1-3-6-
அநந்தரம் -ப்ருஹ்ம ருத்ர மத்யகதமான பிரதம அவதாரம் –தத் சஜாதீய புத்தி விஷயமாகையாலே விவேகிக்க அரிது –
அத்தை விவேகித்து ஆஸ்ரயிங்கோள் என்கிறார் –
உணர்ந்து உணர்ந்து இழிந்து அகன்று உயர்ந்து உருவியந்த இந்நிலைமை
உணர்ந்து உணர்ந்து உணரிலும் இறை நிலை உணர்வு வரிது உயிர்காள்
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து அரி அயன் அரன் என்னும் இவரை
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து இறைஞ்சுமின் மனப்பட்ட தொன்றே –1-3-6-
உணர்ந்து உணர்ந்து -ஞாத்ருத்வ ஸ்வபாவனாகையாலே என்றும் ஓக்க உணருகையே ஸ்வபாவமாக உடையனாய்
இழிந்து அகன்று உயர்ந்து -அந்த ஞானம் நிஷ்க்ருஷ்ட வேஷத்தில் அபரிச்சின்னமாகையாலே தத் த்வாரா பத்து திக்கிலும் வியாபித்து
உருவியந்த -உரு வியந்த -ரூப யோக்கியமான அசித்தில் காட்டில் வேறு பட்டு இருந்த -இயத்தால்-வேறுபாட்டால் விலக்ஷணமாய் இருத்தல்
இந்நிலைமை-இந்த ஆத்மாவின் நிலைமையை -இந்நிலைமை என்று யுக்த பிரகார வைலக்ஷண்யம் ஆத்மாவுக்கு ஒழிய இல்லை என்கிற ஸம்ப்ரதிபத்தியைச் சொல்லுகிறது –
உணர்ந்து உணர்ந்து உணரிலும் -ஸ்ரவணத்தாலே உணர்ந்து -அதுக்கு மேலே மனனத்தாலே உணர்ந்து -யோகத்தால் சாஷாத் கரித்து உணர்ந்தாலும்
இறை நிலை உணர்வு வரிது -சர்வேஸ்வரன் ப்ரஹ்ம ருத்ரர்கள் நடுவே தன்னை மறைத்து நிற்கிற நிலை விவேகித்து அறிய அரிது
உயிர்காள்-சேதனர் ஆனபடியால் விவேகித்து அறியும் ஸ்வ பாவரானவர்களே
அரி அயன் அரன் என்னும் இவரை-அரி அயன் அரன் என்று பிரசித்த ரானவர்களை
உணர்ந்து உணர்ந்து –அவர்கள் குண விபூதியாதிகளை இட்டுப் பலகாலும் ஆராய்ந்து
உரைத்து உரைத்து –தத் ப்ரதிபாதகமான ப்ரமாணங்களையும் பலகாலும் வ்யவஹரித்துப் பார்த்துப் பார்த்து
மனப்பட்ட தொன்றே-நெஞ்சிலே ஈஸ்வரனாகப் பட்ட ஒரு வஸ்துவை –
வ்யாஹரன் மாம் அநு ஸ்மரந்–என்கிறபடியே
உணர்ந்து உணர்ந்து -தத் குண விக்ரஹாதிகளைப் பலகாலும் அநு சந்தித்து
உரைத்து உரைத்து இறைஞ்சுமின் –தத் வாசகமான மந்த்ர நாமாதிகளைப் பலகாலும் வ்யவஹரித்து உபாசியுங்கோள் –
———
ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -1-3-6-
மத்யே விரிஞ்சகிரிசம் பிரதம அவதார –என்று பிரதம அவதாரம் ப்ரஹ்ம ருத்ராதி சஜாதீயமாய் இருக்கையாலே
பிரித்து பிரதிபத்தி பண்ண அரிதாகையாலே
பழைய துர்லபத்வமே சம்பவத்திருந்ததீ -என்ன த்ரிமூர்த்தி சாம்யத்தைப் பரிஹரிக்கிறார்
உணர்ந்து உணர்ந்து இழிந்து அகன்று உயர்ந்து உருவியந்த வின்நிலைமை
உணர்ந்து உணர்ந்து உணரிலும் இறை நிலை யுணர்வரிது உயிர்காள்
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து அரி அயன் அரன் என்னும் இவரை
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து இறைஞ்சுமின் மனப்பட்ட தொன்றே –1-3-6-
உணர்ந்து உணர்ந்து
உணர்வு என்னாதே-உணர்ந்து -என்கையாலே -ஜ்ஞப்தி மாத்ரம் வஸ்து -என்கிறவனை நிரசிக்கிறது
வீப்சையாலே ஆகந்துக சைதன்யவாதியை நிரசிக்கிறது
ஜ்ஞாத்ருத்வம் நித்ய தர்மம் ஆகையாலே -ஜ்ஞானக்ரியா கர்த்ருத்வம் ஜ்ஞாத்ருத்வம் –அது தான் அநித்தியம் -என்கிற க்ரியாவாதியையும் நிரசிக்கிறது
இழிந்து அகன்று உயர்ந்து-
தான் அணு பரிமாணனாய் இருக்க -ஸ்வ ஜ்ஞானத்தாலே பத்துத் திக்கையும் வியாபித்து இருக்கும்
வாலாக்ர சதபா கஸ்ய -இத்யாதி –
உருவியந்த
ஆகையாலே ஜடமான அசித்தில் காட்டில் வியந்து -வேறுபட்டு இருக்கும்
உருவு -என்று பத பேதமான போது -இயத்தல் -கடத்தலாய்-கடந்து இருக்கும் என்னவுமாம்
வேறுபாடு தான் பிரகாரித்வ பிரமாத்ருத்வ நியந்த்ருத்வங்களாலே
வின்நிலைமை
சந்நிஹிதனான ஆத்மாவினுடைய ஸ்த்திதி
உணர்ந்து உணர்ந்து உணரிலும்
ஸ்ரவண மன நாதிகளாலே சாஷாத் கரித்தாலும்
இறை நிலை யுணர்வரிது
ஈஸ்வரன் ப்ரஹ்ம ருத்ரர்களோடு ஒக்க தன்னை சங்கோ சித்து நிற்கையாலே ஈஸ்வரன் இன்னான் என்று அறிகை அரிது
உயிர்காள்
சேதனராய் யுள்ளீர்காள் -ஜட வஸ்துவாய் அறியாது ஒழியப் பெற்றது இல்லை –
உங்கள் நிலை இருந்த படி என் –நீர் அறிவிக்க அறியப் பார்த்த எங்களுக்கு அவ்வருமை உண்டோ என்ன -ஆகில் கேளுங்கோள் என்கிறார்
உணர்ந்து உணர்ந்து உரைத்து அரி அயன் அரன் என்னும் இவரை
அரி அயன் அரன் என்னும் இவரை உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து
இவர்களுடைய குண ரூப விபூதி நாமாதிகளையும் தத் பிரதிபாதகமான பிரமாணங்களையும் மிகவும் ஆராய்ந்து
மனப் பட்டதொன்றை –உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து இறைஞ்சுமின்
உங்களுக்கு ஏற ஈஸ்வரதயா நிர்ணீதமான வஸ்துவை மன நாதிகளாலே அனுசந்தித்தும்
தத் வாசகமான நாமங்களை உச்சரித்தும் ஆஸ்ரயிங்கோள் –
வ்யாஹரன் மாம் அனுச்மரன் –
———
ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி -1-3-6-
அவதாரத்தில் ஆஸ்ரயியுங்கோள் ‘அவதாரங்களை வணங்குங்கோள் என்று கூறுகின்றீர்;
மத்யே விரிஞ்ச கிரிசம் பிரதம அவதார ( ‘‘பிரமனுக்கும் சிவனுக்கும் மத்தியில் முதல் அவதாரம்’ )என்கிறபடியே,
பிரமனுக்கும் சிவனுக்கும் நடுவே தோன்றி நிற்கும் நிலையாய் இருந்தது முதல் அவதாரம்;
அவர்கள் மூவரும் ஒத்த காரியத்தில் அதிகரித்து நின்றார்கள்;
இப்படி நிற்கையாலே, மூவரும் முதல்வரோ? மூவரில் ஒருவன் முதல்வனோ? மூவர்க்கும் அப்பால் ஒருவன் முதல்வனோ?’ என்று
எங்களால் பகுத்து அறியப் போகாமையால் பற்றுவதற்கு அருமையாக இருக்கின்றது;
ஆதலால், நாங்கள் பற்றுவதற்குப் பற்றக் கூடிய பொருளை நிரூபித்துத் தரலாகாதோ?’ என்ன,
‘காண்கிற சரீரமே ஆத்துமா என்னும் நிலை தவிர்ந்து,
சரீரத்திற்கு -வ்யதிரிக்த -வேறுபட்ட ஆன்மா ஒன்று உண்டு என்று அறிதல்தானே அரிது?
வருந்தி அதனை அறிந்தானேயாகிலும், பிரமன் சிவன் முதலியோரைச் சரீரமாகக்கொண்டு
தான் ஆத்துமாவாய் நிற்கிற சர்வேஸ்வரன் நிலையினை அறிதல் முடியாது;
ஆன பின்னர், இவ்வழியே இழிந்து பற்றப் பாருங்கள்,’ என்று,
ஆஸ்ரயணீய வஸ்து இன்னது என்றும்-ஆஸ்ரயிக்கும் பிரகாரம் – பற்றுமுறை இன்னது என்றும் அருளிச் செய்கிறார்.
—————
ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –
அரி அயன் அரன் என்னும் இவரை உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து -என்கிற பதங்களைக்
கடாக்ஷித்து -சங்கா பூர்வகமாக சங்கதி –
மனப்பட்டதொன்றை உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து இறைஞ்சுமின் -இத்யாதியைப் பற்ற
ஆஸ்ரயணீய வஸ்து இத்யாதி –
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து -என்றதை பற்ற ஆஸ்ரயிக்கும் பிரகாரம் இன்னது என்றது
———————–
உணர்ந்து உணர்ந்து இழிந்து அகன்று உயர்ந்து உரு வியந்த இந் நிலைமை
உணர்ந்து உணர்ந்து உணரிலும் இறை நிலை உணர்வு அரிது உயிர்காள்!
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து அரி அயன் அரன் என்னும் இவரை
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து இறைஞ்சுமின் மனப்பட்டது ஒன்றே–1-3-6-
உணர்ந்து உணர்ந்து-
உணர்வு என்னாமல் ‘உணர்ந்து’ என்கையாலே.
ஞப்தி – ‘அறிவு மாத்திரமே உள்ளது; -ஞாத்ர அம்சம் -அறிகின்றவன் இலன்’ என்கிற யோகாசாரனை மறுக்கிறார்.
‘உணர்ந்து உணர்ந்து’ என்ற-வீப்சைக்கு – அடுக்குத் தொடரால்,-
சைதன்யம் ஆகந்துகம் – ‘அறிவு இடையிலே வந்தது; –
முக்த அவஸ்தையிலும்- மோக்ஷ நிலையிலும்-பாஷாண கல்பமாய் – கல்லைப் போன்று இருக்கும்’ என்று கூறும்
நையாயிக வைசேடியர்களை மறுத்து,-சைதன்யம் – ஞானம் நித்தியம் என்பதனைத் தெரிவிக்கிறார்.
மேலும், ஞாத்ருத்வம் -அறியுந்தன்மை நித்தியமாகையாலே, ‘ஞான கிரியா கர்த்ருத்வம்-ஞாத்ருத்வம்;
அதுதான் அநித்தியம்,’ என்கிற கிரியாவாதியையும் மறுக்கிறார்.
இழிந்து அகன்று உயர்ந்து-
இச் சேதனன் தான் அணு பரிமாணமாய் அளவினதாய் இருந்தும், ஈஸ்வரன் ஸ்வரூபத்தாலே
எங்கும் வியாபித்து -நிறைந்திருப்பது போன்று, ஞானத்தாலே எங்கும் நிறைந்திருக்கும் என்கிறார்.
இனி,பாதே மே வேதநா சிரஸி மே வேத நா ( ‘எனக்குக் காலில் நோவு; எனக்குத் தலையில் நோவு,’ ) என்று கூறும்படி
இருக்கிற நிலையினைக் கூறுகிறார் எனலுமாம்.
உருவு இயந்த இந்நிலைமை –
உருவிற்காட்டில் வேறு பட்டிருக்கிற இந்நிலைமை. உண்டு – இந்த ஆத்துமாவினுடைய ஸ்வரூபம்.
இனி,உருவு இயந்த என்று பிரிக்கப்படும்போது, இயத்தல் – கடத்தலாய், உருவிற்காட்டில் கடந்திருக்கும் – வேறுபட்டிருக்கும் என்னுதல்.
ஆக, இரண்டாலும் அறிவு இல்லாத சரீரத்தைக் காட்டிலும் வேறுபட்டிருக்கிற ஆத்துமாவினுடைய ஸ்வரூபம் என்பது பொருளாம்.
உணர்ந்து உணர்ந்து உணரிலும்-
அவ்வாத்துமாவின் ஸ்வரூபத்தைக் கேவலம்-ஸ்ரவண மனனாதிகளால் -கேள்வி மனனம் முதலியவைகளால் -சாஷாத் கரிக்கக் கூடிலும்
இறை நிலை உணர்வு அரிது –
சர்வேஸ்வரன் பிரமனுக்கும் சிவனுக்கும் அந்தராத்துமாவாய் அவர்களைச் சரீரமாகக் கொண்டு தான் சரீரியாய் நிற்கிற நிலை அறியப் போகாது.
உயிர்காள் – ‘
சைதன்ய யோக்யம் இன்றிக்கே -அறிவற்ற பிறவிகளில் பிறந்ததனால் இழந்து விட்டீர்களோ?
அறிவுடைய பிறவியில் பிறந்தும் அதன் காரியம் பிறக்கவில்லையே?
அறிவு கேடராய் நீங்கள் இருக்கும் நிலைதான் என்னே!’ என்பார், ‘உயிர்காள்’ என விளிக்கிறார்.
‘எங்கள் அறிவும் அறியாமையும் நிற்க; நாங்கள் பற்றுவதற்கு, அறிந்த நீர் அருளிச் செய்யீர்,’ என்ன, அருளிச் செய்கிறார் மேல்:
அரி அயன் அரன் என்னும் இவரை உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து-
ஒரு உணர்த்தி, ஸ்வரூபத்தைப் பற்றியது; ஒரு உணர்த்தி, ஸ்வபாவத்தைப் பற்றியது
உரைத்து உரைத்து –
ஸ்வரூப பரமான பிரமாணங்களையும்-ஸ்வபாவ பரமான பிரமாணங்களையும்
விரோதி நிரசன சீலனாய் -தீயாரை அழித்து -ரக்ஷகனாய் -நல்லாரைக் காக்கின்றவனாதலின்,
அரி என்னும் பெயரையுடையனாய் இருக்கிறான் ஒருவன்;
ஓருவன் திருநாபிக் கமலத்தில்-அவ்யவதாநேந – நேராகத் தோன்றியவனாதலின்,
அயன் என்னும் பெயரை யுடையனாய் இருக்கிறான்;
ஒருவன் -சம்ஹாரம் அழித்தல் ஒன்றுக்கே உரியவனாய் அரன் என்னும் பெயரை யுடையவனாய் இருக்கிறான்;
இவர்களைப் பற்றிக் கூறுகிற பிரமாணங்களை ஆராய்ந்து பார்த்து, அவை தம்மைப் பல காலும் சொல்லிப் பார்த்து,
மனப்பட்டது ஒன்று-‘இலிங்கத்துக்கே-உத்கர்ஷம் – உயர்வு தோற்றும்படியாய் இருப்பது
ஒரு பிரபந்தம் செய்து தரவேண்டும்’ என்பாரைப் போன்று,-ஒரு வியக்தியிலே பக்ஷபாதிக்கப் பாராதே –
ஓர் உருவத்திலே ஒரு சார்பாகச் சாயாது, இவர்கள் ஸ்வரூபங்களையும் ஸ்வபாவங்களையும் பல காலும் ஆராய்ந்து பார்த்தால்,
கோல் விழுக்காட்டால் ஒருவனே உயர்ந்தவன் என்பது உங்கள் மனத்திலே தோன்றும்.
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து இறைஞ்சுமின்-
தோன்றுகிற அவனைக் கேள்வி மனனம் முதலியவைகளால்-ஸ்ரவண மனனாதிகளால் உணர்ந்து,
அவன் திருப் பெயர்களைப் பலகாலும் உச்சரித்து –
கை புகுந்தது என்று விஸ்வசிக்கலாம் அளவும் -ஆஸ்ரயிக்கப் பாருங்கோள் வணங்குங்கோள் என்பதாம்.
—————————
ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –
உணர்ந்து -என்கிற பதத்தால் ஞப்த்தி மாத்திரமே உள்ளது-என்கிற யோகாசார மதம் நிரஸ்தம்
சைதன்யம் ஆகந்துகம் என்கிறவர்கள் நையாயிக வைசேஷிகர்கள்
கிரியாஸ்ரயத்வமான ஞாத்ருத்வமும் அநித்தியம் என்பர் மாயி -இவர்கள் அனைவரையும் நிரசித்து அருளுகிறார் –
இழிந்து அகன்று உயர்ந்து -என்றதுக்கு இரண்டு அர்த்தம் அருளிச் செய்கிறார் –
முந்தின அர்த்தத்தில் நிஷ்க்ருஷ்ட ஸ்வரூபத்தைப் பற்ற சார்வத்ரிகமான வியாப்தியைச் சொல்லுகிறது –
த்விதீய அர்த்தத்தில் சரீர வ்யாப்தியைச் சொல்லுகிறது –
உணர்ந்து உணர்ந்து -த்யான ரஹித ஸ்ரவண மனனங்கள் -என்றும் அஷ்டாங்க யோக க்ரமத்தாலே உணரிலும் -என்றுமாம்
இறை நிலை உணர்வு அரிது -அறிந்தால் பரத்வ சங்கை உதியாது என்றபடி –
பரத்வத்தை நிர்ணயிக்கிற இடத்திலே சைதன்ய விசிஷ்டத்தையைச் சொல்லி சம்போதிக்கிறவர் ஹார்த்த பாவத்தை அருளிச் செய்கிறார் –
தத்வ நிஷ்கர்ஷம் பண்ணும் கிரமத்தை சொல்லுகிறது –
வீப்சைகளுக்கு விஷய பேதத்தாலே பேதம் அருளிச் செய்கிறார் -மூன்று வாக்யங்களாலே –
ஸ்வரூப ஸ்வபாவமான பிரமாணங்களை ஆராய்ந்து பலகாலும் சொல்லி –
கோல் விழுக்காட்டாலே என்றது ஸ்வதா ப்ராப்தியாலே -யத்ருச்சையாலே என்னவுமாம் –
ஸ்ரவண மனனாதிகளாலே அனுசந்தித்து வஸ்துக்கு வாசகமான திரு நாமங்களை பல காலும் உச்சரித்து ஆஸ்ரயிக்கப் பாருங்கோள் -என்றபடி
கைப்புகுருகை-பல உன்முகமாகை–கைப் புகுந்தது என்று விஸ்வசிக்கலாம் அளவும் இது வீபிஸா தாத்பர்யம்-
முதலில் உணர்ந்து உணர்ந்து என்றதுக்கு ஞாத்ருத்வ ஸ்வ பாவனாகையாலே என்றும் ஓக்க உணருகையே ஸ்வ பாவமாக உடையனாய் இத்யர்த்த –
—————————————————————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
Leave a Reply