மூலவர் – கள்ளழகர் -ஸூந்தர ராஜப் பெருமாள் -பரம ஸ்வாமி -நின்ற திருக் கோலம் -கிழக்கே திரு முக மண்டலம்
தாயார் -ஸூந்தர வல்லி
விமானம் -சோம ஸூந்தர விமானம்
தீர்த்தம் -நூபுர கங்கை -சிலம்பாறு –
ஸ்தல வ்ருக்ஷம் -சந்தன வ்ருக்ஷம்
மங்களா சாசனம் -பூதத்தாழ்வார் -பேயாழ்வார் -நம்மாழ்வார் -பெரியாழ்வார் -ஆண்டாள் -திரு மங்கையாழ்வார்
மூலவரும் உத்சவரும் பஞ்ச திவ்ய ஆயுதங்கள் உடன் சேவை -எம தர்ம ராஜன் இங்கு த்வம் இயற்றிய படியால்
-வ்ருஷபாத்ரி -என்ற பெயரும் உண்டு -யமனுக்கு பெருமாள் ஸூந்தர ராஜனாகக் காட்சி அளித்தார் –
உத்சவர் திரு மேனி சொக்கத்த தங்கத்தினால் ஆக்கப்பட்டது -பாராஞ்சி -அபராஞ்சி –
-கண்ணை சுமட்டி விசில் அழைத்து கூப்பிடும் உத்சவர் என்பர் கூரத் ஆழ்வான்
நூபுர கங்கை தீர்த்தம் கொண்டே திரு மஞ்சனம் –
த்ரி விக்ரமனாக உலகு அளந்த பொழுது பிரமனின் கமண்டல தீர்த்த துளி பெருமாள் -தண்டை நூபுரம் மேல் விழ
-அதுவே நூபுர கங்கை -சிலம்பாறு -வனகிரி பரிபாடல் சொல்லும் –
18 படி கருப்பண்ண ஸ்வாமி காவல் தெய்வம் -மலையாளி தந்த்ரிகள் மயக்க –
ஐப்பசி சுக்ல பக்ஷம் துவாதசி தொட்டி திரு மஞ்சனம் பிரசித்தம் –
சித்ரா பவ்ரணமி வைகை ஆற்றில் இறங்கும் உத்சவம் பிரசித்தம் -மீனாட்சி கல்யாணம் -மாசி மாதம் முன்பு
-இப்பொழுது ஒன்றாக நடக்கிறது சைவ வைஷ்ணவ ஒற்றுமைக்கு
பிரயோக சக்கரம் மூலவர் –உத்சவர் தான ஹஸ்தம் –சுந்தர தோளுடையான்-
தற்போது உள்ள பெயர் ஸ்ரீ அழகர் கோயில்
மூலவர் ஸ்ரீ கள்ளழகர், ஸ்ரீ அழகர், ஸ்ரீ திரு மாலலங்காரர்,ஸ்ரீ திரு மாலிருஞ்சோலைநம்பி
கோலம் நின்ற
திருமுக மண்டலம் கிழக்கு
உற்சவர் ஸ்ரீ ஸூந்தரராஜன், ஸ்ரீ கள்ளழகர்
தாயார் ஸ்ரீ ஸூந்தரவல்லி, ஸ்ரீதேவி
தீர்த்தம் ஸ்ரீ நூபுர கங்கை,ஸ்ரீ சிலம்பு ஆறு
விமானம் ஸ்ரீ சோம ஸூந்தர விமானம்
மண்டலம் ஸ்ரீ பாண்டியநாட்டுத் திருப்பதிகள்
மாநிலம் தமிழ் நாடு
அடிப்படை இடம் ஸ்ரீ மதுரை
நாமாவளி ஸ்ரீ ஸூந்தர வல்லீ ஸமேத ஸ்ரீ ஸூந்தர ராஜாய நமஹ
————————–
ஸ்ரீ பெரியாழ்வார் -34-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ ஆண்டாள் -11-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -22-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ நம்மாழ்வார் -46- பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ பூதத்தாழ்வா -3- பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ பேயாழ்வார் -1- பாசுரம் மங்களாசாசனம்
மொத்தம் –128-பாசுரங்கள் மங்களாசாசனம்
———-
ஸ்ரீ பெரியாழ்வார் -34-பாசுரங்கள் மங்களாசாசனம்
உன்னையும் ஒக்கலையில் கொண்டு தமில் மருவி
உன்னொடு தங்கள் கருத்தாயின செய்து வரும்
கன்னியரும் மகிழக் கண்டவர் கண் குளிரக்
கற்றவர் தெற்றி வரப் பெற்ற வெனக்கு அருளி
மன்னு குறுங்குடியாய் வெள்ளறையாய் மதிள் சூழ்
சோலை மலைக்கு அரசே கண்ண புரத்தமுதே
என்ன வலம் களைவாய் ஆடுக செங்கீரை
யேழ் உலகும் உடையாய் ஆடுக ஆடுகவே -1 5-8 –
சுற்றி நின்று ஆயர் தழைகள் இட சுருள் பங்கி நேத்ரத்தால் அணிந்து
பற்றி நின்று ஆயர் கடைத்தலையே பாடவும் ஆடவும் கண்டேன் அன்றிப்பின்
மற்று ஒருவர்க்கு என்னைப் பேசல் ஒட்டேன் மாலிரும் சோலை எம் மாயற்கு அல்லால்
கொற்றவனுக்கு இவள் ஆம் என்று எண்ணிக் கொடுமின்கள் கொடீராகில் கோழம்பமே – 3-4 5-
அலம்பா வெருட்டா கொன்று திரியும் அரக்கரை
குலம் பாழ் படுத்து குல விளக்காய் நின்ற கோன் மலை
சிலம்பு ஆர்க்க வந்து தெய்வ மகளிர் ஆடும் சீர்
சிலம்பாறு பாயும் தென் திரு மால் இரும் சோலையே -4 2-1 –
வல்லாளன் தோளும் வாளரக்கன் முடியும் தங்கை
பொல்லாத மூக்கும் போக்குவித்தான் பொருந்து மலை
எல்லாவிடத்திலும் எங்கும் பரந்து பல்லாண்டு ஒலி
செல்லா நிற்கும் சீர் தென் திரு மால் இரும் சோலை மலையே -4 2-2 –
தக்கார் மிக்கார்களை சஞ்சலம் செய்யும் சலவரை
தெக்கா நெறியே போக்குவிக்கும் செல்வன் பொன் மலை
எக்காலமும் சென்று சேவித்து இருக்கும் அடியரை
அக் கான் நெறியை மாற்றும் தண் மால் இரும் சோலையே – 4-2 3-
ஆனாயர் கூடி அமைத்த விழவை அமரர்தம்
கோனார்க்கு ஒழிய கோவர்த்தனத்துச் செய்தான் மலை
வான் நாட்டில் நின்று மா மலர் கற்பகத்து ஒத்து இழி
தேனாறு பாயம் தென் திரு மால் இரும் சோலையே – 4 2-4 –
ஒரு வாரணம் பணி கொண்டவன் பொய்கையில் அஞ்ச அன்று
ஒரு வாரணம் உயிர் உண்டவன் சென்று உறையும் மலை
கரு வாரணம் தன் பிடி துறந்து ஓடக் கடல் வண்ணன்
திரு ஆணை கூறத் திரியும் தண் மால் இரும் சோலையே – 4-2 5-
ஏவிற்றுச் செய்வான் ஏன்று எதிர்ந்து வந்த மல்லரைச்
சாவத் தகர்த்த சாந்து அணி தோள் சதுரன் மலை
ஆவத்து தனம் என்று அமரர்களும் நன் முனிவரும்
சேவித்து இருக்கும் தென் திரு மால் இரும் சோலையே -4 2-6 –
மன்னர் மறுக மைத்துனன் மார்க்கு ஒரு தேரின் மேல்
முன்னங்கு நின்று மோழை எழுவித்தவன் மலை
கொல் நவில் கூர் வேல் கோன் நெடு மாறன் தென் கூடல் கோன்
தென்னன் கொண்டாடும் தென் திரு மால் இரும் சோலையே -4 2-7 –
குறுகாத மன்னரை கூடு கலக்கி வெம் கானிடை
சிறு கால் நெறியே போக்குவிக்கும் செல்வன் பொன் மலை
அறுகால் வரி வண்டுகள் ஆயிர நாமம் சொல்லி
சிறுகாலை பாடும் தென் திரு மால் இரும் சோலையே – 4-2 8-
சிந்தப் புடைத்து செங்குருதி கொண்டு பூதங்கள்
அந்திப் பலி கொடுத்து ஆவத் தனம் செய் அப்பன் மலை
இந்திர கோபங்கள் எம்பெருமான் கனி வாய் ஒப்பான்
சிந்தும் புறவின் தென் திரு மால் இரும் சோலையே – 4-2 9-
எட்டுத் திசையும் எண் நிறந்த பெரும் தேவிமார்
விட்டு விளங்க வீற்று இருந்த விமலன் மலை
பட்டிப் பிடிகள் பகடு உறிஞ்சி சென்று மாலை வாய்த்
தெட்டித் திளைக்கும் தென் திரு மால் இரும் சோலையே – 4-2 10-
மருதப் பொழில் அணி மால் இரும் சோலை மலை தன்னை
கருதி உறைகின்ற கார்க்கடல் வண்ணன் அம்மான் தன்னை
விரதம் கொண்டு ஏத்தும் வில்லிபுத்தூர் விட்டு சித்தன் சொல்
கருதி உரைப்பவர் கண்ணன் கழலினை காண்பரே – 4-2 11-
உருப்பிணி நங்கை தன்னை மீட்பான் துடர்ந்து ஓடிச் சென்ற
உருப்பனை ஒட்டிக் கொண்டு இட்டு இறைத்திட்ட வுறைப்பன் மலை
பொருப்பிடைக் கொன்றை நின்று முறி ஆழியும் காசும் கொண்டு
விருப்போடு பொன் வழங்கும் வியன் மால் இரும் சோலை யதே -4 3-1 –
கஞ்சனும் காளியனும் களிறும் மருதும் எருதும்
வஞ்சனையில் மடிய வளர்ந்த மணி வண்ணன் மலை
நஞ்சு உமிழ் நாகம் எழுந்து அணவி நளிர் மா மதியை
செஞ்சுடர் நா அளைக்கும் திரு மால் இரும் சோலை யதே -4 3-2 –
மன்னு நாகம் தன்னை சூழ் போகி வளைத்து எறிந்து
கன்னி மகளிர் தம்மை கவர்ந்த கடல் வண்ணன் மலை
புன்னை செருந்தியொடு புன வேங்கையும் கோங்கும் நின்று
பொன்னரி மாலைகள் சூழ் போலி மால் இரும் சோலை அதுவே – 4-3 3-
மாவலி தன்னுடைய மகன் வாணன் மகள் இருந்த
காவலைக் கட்டழித்த தனிக் காளை கருதும் மலை
கோவலர் கோவிந்தனை குற மாதர்கள் பண் குறிஞ்சி
பா வொலி பாடி நடம் பயில் மால் இரும் சோலை அதுவே – 4-3- 4-
பல பல நாழம் சொல்லி பழித்த சிசுபாலன் தன்னை
அலை வலைமை தவிர்த்த அழகன் அலங்காரன் மலை
குலமலை கோலமலை குளிர் மா மலை கொற்ற மலை
நீலமலை நீண்டமலை திரு மால் இரும் சோலை யதே – 4-3 5-
பாண்டவர் தம்முடைய பாஞ்சாலி மறுக்கம் எல்லாம்
ஆண்டு அங்கு நூற்றுவர் தம் பெண்டிர் மேல் வைத்த அப்பன் மலை
பாண் தகு வண்டு இனங்கள் பண்கள் பாடி மது பருகத்
தோண்டல் உடைய மலை தொல்லை மால் இரும் சோலை அதுவே -4 3-6 –
கனம் குழையாள் பொருட்டாகக் கணை பாரித்து அரக்கர் தங்கள்
இனம் கழு ஏற்றுவித்த எழில் தோள் எம் இராமன் மலை
கனம் கொழி தெள்ளருவி வந்து சூழ்ந்து அகல் ஞாலம் எல்லாம்
இனம் குழு ஆடும் மலை எழில் மால் இரும் சோலை யதே – 4-3 7-
எரி சிதறும் சரத்தால் இலங்கையினை தன்னுடைய
வரி சிலை வாயில் பெய்து வாய்கோட்டம் தவிர்த்து உகந்த
அரையன் அமரும் மலை யமரரோடு கோனும் சென்று
திரி சுடர் சூழு மலை திருமால் இரும் சோலை யதே – 4-3 8-
கோட்டு மண் கொண்டு இடந்து குடம் கையில் மண் கொண்டு அளந்து
மீட்டும் அது உண்டு உமிழ்ந்து விளையாடும் விமலன் மலை
ஈட்டிய பல் பொருள்கள் எம்பிரானுக்கு அடி இறை என்று
ஒட்டரும் தண் சிலம்பாறுடை மால் இரும் சோலை யதே -4 3-9 –
ஆயிரம் தோள் பரப்பி முடி ஆயிரம் மின்னிலக
ஆயிரம் பைம்தலைய அநந்த சயனன் ஆளும் மலை
ஆயிரம் ஆறுகளும் சுனைகள் பல ஆயிரமும்
ஆயிரம் பூம் பொழிலும் உடை மால் இரும் சோலை யதுவே -4-3 10-
மால் இரும் சோலை என்னும் மலையை உடைய மலையை
நாலிரு மூர்த்தி தன்னை நால் வேத கடல் அமுதை
மேலிரும் கற்பகத்தை வேதாந்த விழுப் பொருளின்
மேலிருந்த விளக்கை விட்டு சித்தன் விரித்தனவே -4 3-11 –
துக்கச் சுழலையை சூழ்ந்து கிடந்த வலையை அறப் பறித்து
புக்கினில் புக்கு உன்னை கண்டு கொண்டேன் இனிப் போக விடுவது உண்டே
மக்கள் அறுவரைக் கல்லிடை மோத விழுந்தவடன் வயிற்றில்
சிக்கனே வந்து பிறந்து நின்றாய் திரு மால் இரும் சோலை எந்தாய் – 5-3 1-
வளைத்து வைத்தேன் இனி போகல் ஒட்டேன் உன் தன் இந்திர ஞாலங்களால்
ஒளித்திடில் நின் திருவாணை கண்டாய் நீ ஒருவருக்கும் மெய்யன் அல்லை
அளித்து எங்கும் நாடும் நகரமும் தம்முடை தீவினை தீர்க்கலுற்றுத்
தெளித்து வலம் செய்யும் தீர்த்தமுடை திரு மால் இரும் சோலை எந்தாய் – 5-3 2-
உனக்கு பணி செய்து இருக்கும் தவம் உடையேன் இனிப் போய் ஒருவன்
தனக்கு பணிந்து கடைத்தலை நிற்கை நின் சாயை அழிவு கண்டாய்
புனத் தினைக் கிள்ளி புது வவிக் காட்டின் பொன்னடி வாழ்க வென்
றினக் குறவர் புதியது உண்ணும் எழில் மால் இரும் சோலை எந்தாய் – 5-3-3- –
காதம் பலவும் திரிந்து உழன்றேற்க்கு அங்கோர் நிழலில்லை நீரும் இல்லை உன்
பாத நிழல் அல்லால் மற்றோர் உயிர்பிடம் நான் எங்கும் காண்கின்றிலேன்
தூது சென்றாய் குரு பாண்டவர்க்காய் அங்கோர் பொய் சுற்றம் பேசிச் சென்று
பேதம் செய்து எங்கும் பிணம் படுத்தாய் திருமால் இரும் சோலை எந்தாய் – 5-3 4- –
காலும் எழா கண்ண நீரும் நில்லா உடல் சோர்ந்து நடுங்கி குரல்
மேலும் எழா மயிர்க் கூச்சமறா வென தோள்களும் வீழ் ஒழியா
மாலுகளா நிற்கும் என் மனமே உன்னை வாழத் தலைப் பெய்திட்டேன்
சேலுகளா நிற்கும் நீள் சுனை சூழ் திரு மால் இரும் சோலை எந்தாய் – 5-3 5-
எருத்துக் கொடி உடையானும் பிரமனும் இந்திரனும் மற்றும்
ஒருத்தரும் இப்பிறவி என்னும் நோய்க்கு மருந்து அறிவாரும் இல்லை
மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணா மறு பிறவி தவிரத்
திருத்தி உன் கோயில் கடை புக பெய் திருமால் இரும் சோலை எந்தாய் 5-3 6-
அக்கரை என்னும் அநர்த்தக் கடலுள் அழுந்தி உன் பேர் அருளால்
இக்கரை ஏறி இளைத்து இருந்தேனை அஞ்சேல் என்று கை கவியாய்
சக்கரமும் தடக் கைகளும் கண்களும் பீதக வாடையோடும்
செக்கர் நிறத்து சிவப்புடையாய் திரு மால் இரும் சோலை எந்தாய் – 5-3 7-
எத்தனை காலமும் எத்தனை ஊழியும் இன்றோடு நாளை என்றே
யித்தனை காலமும் போய்க் கிறி பட்டேன் இனி உன்னைப் போகல் ஒட்டேன்
மைத்துனன் மார்களை வாழ்வித்து மாற்றலர் நூற்றுவரைக் கெடுத்தாய்
சித்த நின் பாலது அறிதி அன்றே திரு மால் இரும் சோலை எந்தாய் -5- 3-8 –
அன்று வயிற்றில் கிடந்தது இருந்தே அடிமை செய்யல் உற்று இருப்பன்
இன்று வந்து இங்கு உன்னைக் கண்டு கொண்டேன் இனிப் போக விடுவது உண்டே
சென்று அங்கு வாணனை ஆயிரம் தோளும் திரு சக்கரம் அதனால்
சென்றித் திசை திசை வீழச் செற்றாய் திரு மால் இரும் சோலை எந்தாய் -5 3-9 –
சென்று உலகம் குடைந்தாடும் சுனை திரு மால் இரும் சோலை தன்னுள்
நின்ற பிரான் அடி மேல் அடிமைத் திறம் நேர்பட விண்ணப்பம் செய்
பொன் திகழ் மாடம் பொலிந்து தோன்றும் புதுவைக் கோன் விட்டு சித்தன்
ஒன்றினோடு ஒன்பதும் பாட வல்லார் உலகம் அளந்தான் தமரே– 5-3 10- –
—————–
ஸ்ரீ ஆண்டாள் -11-பாசுரங்கள் மங்களாசாசனம்
பழகு நான் மறையின் பொருளாய் மத
மொழுகு வாரணம் உய்ய வளித்த எம்
அழகனார் அணி ஆய்ச்சியர் சிந்தையுள்
குழகனார் வரில் கூடிடு கூடலே –4-10-
சிந்துரச் செம்பொடிப் போல் திரு மால் இருஞ்சோலை எங்கும்
இந்திர கோபங்களே எழுந்தும் பரந்திட்டனவால்
மந்திரம் நாட்டி யன்று மதுரக் கொழுஞ்சாறு கொண்ட
சுந்தரத் தோளுடையான் சுழலையில் நின்றுய்தும் கொலோ–9-1-
போர்க் களிறு பொரும் மாலிரும் சோலை யம்பூம் புறவில்
தார்க் கொடி முல்லைகளும் தவள நகை காட்டுகின்ற
கார்க்கொள் படாக்கள் நின்று கழறிச் சிரிக்கத் தரியேன்
ஆர்க்கிடுகோ தோழீ அவன் தார் செய்த பூசலையே–9-2-
கருவிளை யொண் மலர்காள் காயா மலர்காள் திருமால்
உரு வொளி காட்டுகின்றீர் யெனக்குய் வழக்கொன்று உரையீர்
திரு விளையாடு திண் தோள் திருமால் இரும் சோலை நம்பி
வரி வளையில் புகுந்து வந்தி பற்றும் வழக்குளதே –9-3-
பைம் பொழில் வாழ் குயில்காள் மயில்காள் ஒண் கரு விளைகாள்
வம்பக் களங்கனிகாள் வண்ணப்பூவை நறும் மலர்காள்
ஐம் பெரும் பாதகர்காள் அணி மால் இரும் சோலை நின்ற
எம்பெருமான் உடைய நிறம் உங்களுக்கு என் செய்வதே —9-4-
துங்க மலர்ப் பொழில் சூழ் திருமால் இருஞ்சோலை நின்ற
செங்கட் கருமுகிலின் திருவுருப் போல் மலர் மேல்
தொங்கிய வண்டினங்காள் தொகு பூஞ்சுனைகாள் சுனையில்
தங்கு செந்தாமரைகாள் எனக்கோர் சரண் சாற்றுமினே–9-5-
நாறு நறும் பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான்
நூறு தடாவில் வெண்ணெய் வாய் நேர்ந்து பராவி வைத்தேன்
நூறு தடா நிறைந்த அக்கார வடிசில் சொன்னேன்
ஏறு திருவுடையான் இன்று வந்து இவை கொள்ளும் கொலோ–9-6-
இன்று வந்து இத்தனையும் அமுது செய்திடப் பெறில் நான்
ஓன்று நூராயிரமாகக் கொடுத்து பின்னும் ஆளும் செய்வன்
தென்றல் மணம் கமழும் திரு மால் இருஞ்சோலை தன்னுள்
நின்ற பிரான் அடியேன் மனத்தே வந்து நேர் படிலே –9-7-
காலை எழுந்து கரிய குருவிக் கணங்கள்
மாலின் வரவு சொல்லிக் மருள் பாடுதல் மெய்ம்மை கொலோ
சோலை மலைப் பெருமான் துவராபதி எம்பெருமான்
ஆலினிலைப் பெருமான் அவன் வார்த்தை வுரைக்கின்றவே –9-8-
கோங்கலரும் பொழில் மாலிரும் சோலையில் கொன்றைகள் மேல்
தூங்கு பொன் மலைகளோடு உடனே நின்று தூங்குகின்றேன்
பூங்கொள் திரு முகத்து மடுத்தூதிய சங்கொலியும்
சாரங்க வில் நாண் ஒலியும் தலைப் பெய்வது எஞ்ஞான்று கொலோ –9-9-
சந்தொடு கார் அகிலும் சுமந்து தடங்கள் பொருது
வந்திழியும் சிலம்பாறுடை மாலிருஞ்சோலை நின்ற
சுந்தரனை சுரும்பார் குழல் கோதை தொகுத்து உரைத்த
செந்தமிழ் பத்தும் வல்லார் திருமாலடி சேர்வர்களே –9-10-
————————-
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -22-பாசுரங்கள் மங்களாசாசனம்
வண்கையான் அவுணர்க்கு நாயகன் வேள்வியில் சென்று, மாணியாய்
மண்கையால் இரந்தான் மராமரமேழும் எய்த வலத்தினான்
எண்கையான் இமயத்துள்ளான் இருஞ்சோலை மேவிய எம்பிரான்
திண் கைம் மா துயர் தீர்த்தவன் திருவேங்கடம் அடைநெஞ்சமே!—பெரிய திருமொழி -1-8-5-
உளங்கனிந் திருக்கும் உன்னையே பிதற்றும் உனக்கன்றி எனக்கு அன்பொன்றிலளால்
வளங்கனி பொழில் சூழ் மாலிருஞ்சோலை மாயனே! என்று வாய் வெருவும்
களங்கனி முறுவல் காரிகை பெரிது கவலையோடு அவலம் சேர்ந்திருந்த
இளங்கனி யிவளுக்கு என் நினைந்திருந்தாய்? இடவெந்தை எந்தை பிரானே! –2-7-7-
சிந்தை தன்னுள் நீங்கா திருந்த திருவே மருவினிய
மைந்தா! அந்தணாலி மாலே! சோலை மழகளிறே!
நந்தா விளக்கின் சுடரே! நறையூர் நின்ற நம்பீ! என்
எந்தாய்! இந்தளூராய்! அடியேற்கு இறையும் இரங்காயே.–4-9-2-
எட்டனைப் பொழுதாகிலும் என்றும் என் மனத்தகலா திருக்கும் புகழ்
தட்டலர்த்த பொன்னே யலர் கோங்கின் தாழ் பொழில் திருமாலிருஞ் சோலை யங்
கட்டியை கரும்பீன்ற இன் சாற்றைக் காதலால் மறை நான்கு முன்னோதிய
பட்டனை பரவைத் துயிலேற்றை என் பண்பனை யன்றிப் பாடல் செய்யேனே. –7-3-6-
சேயோங்கு தண் திருமாலிருஞ்சோலை மலை உறையும்
மாயா! எனக்குரையாய் இது மறை நான்கினுளாயோ?
தீயோம் புகை மறையோர் சிறு புலியூர்ச் சல சயனத்
தாயோ? உனதடியார் மனத்தாயோ? அறியேனே. –7-9-7-
வேயிருஞ்சோலை விலங்கல் சூழ்ந்த மெய்ய மணாளர், இவ் வையமெல்லாம்
தாயின நாயகராவர் தோழீ! தாமரைக் கண்களிருந்தவாறு
சேயிருங்குன்றம் திகழ்ந்த தொப்பச் செவ்வியவாகி மலர்ந்த சோதி
ஆயிரம் தோளொடு இலங்கு பூணும் அச்சோ ஒருவ ரழகியவா!—9-2-3-
மஞ்சுயர் மா மதி தீண்ட நீண்ட மாலிருஞ்சோலை மணாளர் வந்து என்
நெஞ்சுள்ளும் கண்ணுள்ளும் நின்று நீங்கார் நீர்மலையார் கொல்? நினைக்க மாட்டேன்
மஞ்சுயர் பொன் மலை மேலெழுந்த மா முகில் போன்றுளர் வந்து காணீர்
அஞ்சிறைப் புள்ளுமொன்று ஏறி வந்தார் அச்சோ ஒருவரழகியவா! –9-2-8-
முந்துற வுரைக்கேன் விரைக் குழல் மடவார் கலவியை விடுதடுமாறல்
அந்தரம் ஏழு மலை கடல் ஏழுமாய எம்மடிகள் தம் கோயில்
சந்தொடு மணியும் அணி மயில் தழையும் தழுவி வந்தருவிகள் நிரந்து
வந்திழி சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே –9-8-1-
இண்டையும் புனலும் கொண்டிடையின்றி எழுமினோ தொழுதும் என்று இமையோர்
அண்டரும் பரவ வரவணைத் துயின்ற சுடர் முடிக் கடவுள் தம் கோயில்
விண்டலர் தூளி வேய் வளர் புறவில் விரை மலர்க் குறிஞ்சியின் நறுந்தேன்
வண்டமர் சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே –9-8-2-
பிணி வளராக்கை நீங்க நின்று ஏத்தப் பெரு நிலம் அருளில் முன்னருளி
அணி வளர் குறளாய் அகலிடம் முழுதும் அளந்த வெம்மடிகள் தம் கோயில்
கணி வளர் வேங்கை நெடு நிலமதனில் குறவர் தம் கவணிடைத் துரந்த
மணி வளர் சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே -9-8-3-
சூர்மையிலாய பேய் முலை சுவைத்துச் சுடு சரமடு சிலைத் துரந்து
நீர்மையிலாத தாடகை மாள நினைந்தவர் மனம் கொண்ட கோயில்
கார்மலி வேங்கை கொங்கலர் புறவில் கடி மலர்க் குறிஞ்சியின் நறுந்தேன்
வார் புனல் சூழ் தண் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே–9-8-4-
வணங்க லிலரக்கன் செருக்களத் தவிய மணி முடி யொருபதும் புரள
அணங்கு எழுந்தவன் தன் கவந்தம் நின்றாட அமர் செய்த வடிகள் தம் கோயில்
பிணங்கலில் நெடு வேய் நுதி முகம் கிழிப்பப் பிரசம் வந்து இழிதரப் பெருந்தேன்
மணம் கமழ் சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே —9-8-5-
விடங்கலந்தமர்ந்த வரவணைத் துயின்று விளங்கனிக்கு இளங்கன்று விசிறி
குடங்கலந்தாடிக் குரவை முன் கோத்த கூத்த வெம்மடிகள் தம் கோயில்
தடங்கடல் முகந்து விசும்பிடைப் பிளிறத் தடவரைக் களிறு என்று முனிந்து
மடங்கல் நின்ற திரு மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே -9-8-6-
தேனுகனாவி போயுக வங்கோர் செழும் திரள் பனம் கனி யுதிர
தானுகந்து எறிந்த தடங்கடல் வண்ணர் எண்ணி முன் இடம் கொண்ட கோயில்
வானகச் சோலை மரகதச் சாயல் மா மணிக்கல்லதர் நிறைந்து
மானுகர் சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே–9-8-7-
புதமிகு விசும்பில் புணரி சென்று அணவ பொரு கடல ரவணைத் துயின்று
பதமிகு பரியின் மிகுசினம் தவிர்த்த பனி முகில் வண்ணர் தம் கோயில்
கதமிகு சினத்த கடதடக் களிற்றின் கவுள் வழிக் களி வண்டு பருக
மத மிகு சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே –9-8-8-
புந்தியில் சமணர் புத்தர் என்று இவர்கள் ஒத்தன பேசவும் உகந்திட்டு
எந்தை பெம்மனார் இமையவர் தலைவர் எண்ணி முன் இடம் கொண்ட கோயில்
சந்தனப் பொழிலின் தாழ் சினை நீழல் தாழ் வரை மகளிர்கள் நாளும்
மந்திரத்திறைஞ்சும் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே –9-8-9-
வண்டமர் சாரல் மாலிருஞ்சோலை மா மணி வண்ணரை வணங்கும்
தொண்டரைப் பரவும் சுடரொளி நெடு வேல் சூழ் வயலாலி நன்னாடன்
கண்டல் நல வேலி மங்கையர் தலைவன் கலியன் வாயொலி செய்த பனுவல்
கொண்டிவை பாடும் தவம் உடையார்கள் ஆழ்வார் இக்குரை கடலுலகே -9-8-10-
மூவரில் முன் முதல்வன் முழங்கார் கடலுள் கிடந்து
பூவள ருந்தி தன்னுள் புவனம் படைத்து உண்டு உமிழ்ந்த
தேவர்கள் நாயகனைத் திரு மால் இருஞ்சோலை நின்ற
கோவலர் கோவிந்தனைக் கொடியேரிடை கூடுங்கொலோ–9-9-1-
புனை வளர் பூம் பொழிலார் பொன்னி சூழ் அரங்க நகருள்
முனைவனை மூவுலகும் படைத்த முதல் மூர்த்திதன்னைச்
சினை வளர் பூம் பொழில் சூழ் திருமால் இருஞ்சோலை நின்றான்
கனை கழல் காணும் கொலோ கயற்கண்ணி எம் காரிகையே -9-9-2-
உண்டு உலகு ஏழினையும் ஒரு பாலகனாய் ஆலிலை மேல்
கண் துயில் கொண்டுகந்த கரு மாணிக்க மா மலையை
திண்டிறல் மா கரி சேர் திரு மாலிருஞ்சோலை நின்ற
அண்டர் தங்கோவினை இன்று அணுகும் கொலோ என்னாயிழையே —9-9-3-
சிங்கமதாய் அவுணன் திறலாகம் முன் கீண்டுகந்த
பங்கய மா மலர்க்கண் பரனை யெம் பரஞ்சுடரை
திங்கள் நன் மா முகில் சேர் திரு மாலிருஞ்சோலை நின்ற
நங்கள் பிரானை யின்று நணுகும் கொலோ என் நன்னுதலே –9-9-4-
தானவன் வேள்வி தன்னில் தனியே குறளாய் நிமிர்ந்து
வானகமும் மண்ணகமும் அளந்த திரி விக்கிரமன்
தேனமர் பூம் பொழில் சூழ் திரு மாலிருஞ்சோலை நின்ற
வானவர் கோனை இன்று வணங்கித் தொழ வல்லள் கொலோ –9-9-5-
நேசமிலாதவர்க்கும் நினையாதவர்க்கும் அரியான்
வாச மலர்ப் பொழில் சூழ் வட மா மதுரைப் பிறந்தான்
தேசமெல்லாம் வணங்கும் திரு மாலிருஞ்சோலை நின்ற
கேசவ நம்பி தன்னைக் கெண்டை யொண் கண்ணி காணும் கொலோ –9-9-6-
புள்ளினை வாய் பிளந்து பொரு மா கரி கொம்பொசித்து
கள்ளச் சகடுதைத்த கரு மாணிக்க மா மலையை
தெள்ளருவி கொழிக்கும் திரு மாலிருஞ்சோலை நின்ற
வள்ளலை வாணுதலாள் வணங்கித் தொழ வல்லள் கொலோ–9-9-7-
பார்த்தனுக்கு அன்று அருளிப் பாரதத்தொரு தேர் முன்னின்று
காத்தவன் தன்னை விண்ணோர் கரு மாணிக்க மா மலையை
தீர்த்தனைப் பூம் பொழில் சூழ் திரு மாலிருஞ்சோலை நின்ற
மூர்த்தியைக் கை தொழவும் முடியும் கொலோ என் மொய் குழற்கே –9-9-8-
வலம்புரி யாழியானை வரையார் திரடோளன் தன்னைப்
புலம் புரி நூலவனைப் பொழில் வேங்கட வேதியனைச்
சிலம்பிய லாறுடைய திரு மாலிருஞ்சோலை நின்ற
நலந்திகழ் நாரணனை நணுகும் கொல் என் நன்னுதலே –9-9-9-
தேடற்கு அரியவனைத் திரு மாலிருஞ்சோலை நின்ற
ஆடற்பரவையனை அணியா யிழை காணும் என்று
மாடக் கொடி மதிள் சூழ் மங்கையார் கலிகன்றி சொன்ன
பாடல் பனுவல் பத்தும் பயில்வார்க்கு இல்லை பாவங்களே -9-9-10-
பத்தராவியைப் பான் மதியை அணித்
தொத்தை மாலிருஞ்சோலைத் தொழுது போய்
முத்தினை மணியை மணி மாணிக்க
வித்தினை சென்று விண்ணகர்க் காண்டுமே.–10-1-8-
மஞ்சுறு மாலிருஞ்சோலை நின்ற மணாளனார்
நெஞ்சம் நிறை கொண்டு போயினார் நினைகின்றிலர்
வெஞ்சுடர் போய் விடியாமல் எவ்விடம் புக்கதோ!
நஞ்சு உடலம் துயின்றால் நமக்கு இனி நல்லதே.–11-2-8-
தேனோடு வண்டாலும் திருமாலிருஞ்சோலை
தானிடமாக் கொண்டான் தடமலர்க் கண்ணிக்காய்
ஆன்விடை யேழன்ற டர்த்தாற்கு ஆளானா ரல்லாதார்
மானிடவரல்ல ரென்று என் மனத்தே வைத்தேனே. –11-7-9-
பாயிரும் பரவை தன்னுள் பரு வரை திரித்து வானோர்க்
காயிருந்து அமுதம் கொண்ட அப்பனை எம்பிரானை
வேயிருஞ்சோலை சூழ்ந்து விரி கதி ரிரிய நின்ற
மாயிருஞ்சோலை மேய மைந்தனை வணங்கினேனே. –திருக்குறுந்தாண்டகம் – 3
சீராரும் மாலிருஞ்சோலை திரு மோகூர் பாரோர் புகழும் வதரி வட மதுரை –சிறிய திருமடல் – 74
மன்னனை மாலிருஞ்சோலை மணாளனை கொல் நவிலும் ஆழிப் படையானை – கோட்டியூர் –பெரிய திருமடல் – 125
————–
ஸ்ரீ நம்மாழ்வார் -46- பாசுரங்கள் மங்களாசாசனம் –
கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம்
வளர் ஒளி மாயோன் மருவிய கோயில்
வளர் இளம் பொழில் சூழ் மாலிருஞ் சோலை
தளர் விலர் ஆகில் சார்வது சதிரே–2-10-1-
சதிர் இள மடவார் தாழ்ச்சியை மதியாது,
அதிர் குரல் சங்கத்து அழகர் தம் கோயில்
மதி தவழ் குடுமி மாலிருஞ் சோலைப்
பதியது ஏத்தி எழுவது பயனே–2-10-2-
பயன் அல்ல செய்து பயன் இல்லை நெஞ்சே!
புயல் மழை வண்ணர் புரிந்து உறை கோயில்,
மயல் மிகு பொழில் சூழ் மாலிருஞ் சோலை
அயன் மலை அடைவது அது கருமமே–2-10-3-
கரும வன்பாசம் கழித்து உழன்று உய்யவே
பெருமலை எடுத்தான் பீடுறை கோயில்
வருமழை தவழும் மாலிரும் சோலை
திருமலை யதுவே யடைவது திறமே –2-10-4-
திறமுடை வலத்தால் தீவினை பெருக்காது,
அறம் முயல் ஆழிப் படையவன் கோயில்
மறுவில் வண் சுனை சூழ் மாலிருஞ் சோலைப்
புற மலை சாரப் போவது கிறியே–2-10-5-
கிறி என நினைமின் கீழ்மை செய்யாதே
உறி அமர் வெண்ணெய் உண்டவன் கோயில்
மறி யொடு பிணை சேர் மாலிருஞ் சோலை
நெறி பட அதுவே நினைவது நலமே–2-10-6-
நலம் என நினைமின் நரகு அழுந்தாதே
நிலம் முனம் இடந்தான் நீடு உறை கோயில்
மலம் அறு மதி சேர் மாலிருஞ் சோலை
வலம் முறை எய்தி மருவுதல் வலமே–2-10-7-
வலஞ்செய்து வைகல் வலம் கழியாதே
வலஞ்செயும் ஆய மாயவன் கோயில்
வலஞ்செயும் வானோர் மாலிருஞ் சோலை
வலஞ்செய்து நாளும் மருவுதல் வழக்கே–2-10-8-
வழக்கு என நினைமின் வல் வினை மூழ்காது
அழக்கொடி அட்டான் அமர் பெருங் கோயில்
மழக் களிற்று இனம் சேர் மாலிருஞ் சோலை
தொழக் கருதுவதே துணிவது சூதே–2-10-9-
சூது என்று களவும் சூதும் செய்யாதே
வேதம் முன் விரித்தான் விரும்பிய கோயில்
மாதுறு மயில்சேர் மாலிருஞ் சோலை
போது அவிழ் மலையே புகுவது பொருளே–2-10-10-
பொருள் என்று இவ் உலகம் படைத்தவன் புகழ் மேல்
மருள் இல் வண் குருகூர் வண் சடகோபன்
தெருள் கொள்ளச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப் பத்து
அருளுடையவன் தாள் அணைவிக்கும் முடித்தே–2-10-11-
முடிச் சோதியாய் உனது முகச் சோதி மலர்ந்ததுவோ !
அடிச் சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ !
படிச் சோதி ஆடை யொடும் பல் கலனாய் நின் பைம்பொன்
கடிச் சோதி கலந்ததுவோ ! திருமாலே ! கட்டுரையே–3-1-1-
கட்டுரைக்கில் தாமரை நின் கண் பாதம் கை ஒவ்வா;
சுட்டுரைத்த நன் பொன் உன் திரு மேனி ஒளி ஒவ்வாது;
ஒட்டுரைத்து இவ் உலகுன்னைப் புகழ்வு எல்லாம் பெரும்பாலும்
பட்டுரையாய்ப் புற்கு என்றே காட்டுமால் பரஞ்சோதீ!–3-1-2-
பரஞ்சோதி நீ பரமாய் நின் இகழ்ந்து பின் மற்று ஓர்
பரஞ்சோதி இன்மையின் படி ஓவி நிகழ்கின்ற
பரஞ்சோதி நின்னுள்ளே படர் உலகம் படைத்த எம்
பரஞ்சோதி! கோவிந்தா! பண்பு உரைக்க மாட்டேனே–3-1-3-
மாட்டாதே ஆகிலும் இம் மலர் தலை மா ஞாலம் நின்
மாட்டு ஆய மலர் புரையும் திரு வுருவம் மனம் வைக்க
மாட்டாத பல சமய மதி கொடுத்தாய்; மலர்த் துழாய்
மாட்டே நீ மனம் வைத்தாய்; மா ஞாலம் வருந்தாதே?–3-1-4-
வருந்தாத அருந் தவத்த மலர்கதிரின் சுடர் உடம்பாய்
வருந்தாத ஞானமாய் வரம்பு இன்றி முழுது இயன்றாய்;
வருங்காலம் நிகழ் காலம் கழி காலமாய் உலகை
ஒருங்காக அளிப்பாய் சீர் எங்கு உலக்க ஓதுவனே?–3-1-5-
ஓதுவார் ஓத்து எல்லாம் எவ் வுலகத்து எவ் வெவையும்
சாதுவாய் நின் புகழின் தகை யல்லால் பிறிது இல்லை;
போது வாழ் புனந்துழாய் முடியினாய்! பூவின் மேல்
மாது வாழ் மார்பினாய்! என் சொலி யான் வாழ்த்துவனே!–3-1-6-
வாழ்த்துவார் பலராக; நின்னுள்ளே நான் முகனை
‘மூழ்த்த நீர் உலகு எல்லாம் படை’என்று முதல் படைத்தாய்;
கேழ்த்த சீர் அரன் முதலாக் கிளர் தெய்வமாய்க் கிளர்ந்து
சூழ்த்து அமரர் துதித்தால் உன் தொல் புகழ் மாசூணாதே?–3-1-7-
மாசூணாச் சுடர் உடம்பாய் மலராது குவியாது
மாசூணா ஞானமாய் முழுதுமாய் முழுது இயன்றாய்
மாசூணா வான் கோலத்து அமர ர்கோன் வழிப்பட்டால்
மாசூணா உன பாத மலர்ச் சோதி மழுங்காதே?–3-1-8-
மழுங்காத வைந்நுதிய சக்கர நல் வலத்தையாய்த்
தொழுங்காதல் களிறு அளிப்பான் புள் ஊர்ந்து தோன்றினையே!
மழுங்காத ஞானமே படையாக மலர் உலகில்
தொழும்பாயார்க்கு அளித்தால் உன் சுடர்ச்சோதி மறையாதே?–3-1-9-
மறையாய நால் வேதத்துள் நின்ற மலர்ச் சுடரே!
முறையால் இவ் வுலகு எல்லாம் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்தளந்தாய்;
பிறை ஏறு சடையானும் நான்முகனும் இந்திரனும்
இறை யாதல் அறிந்து ஏத்த வீற்றிருத்தல் இது வியப்பே!–3-1-10-
வியப்பு ஆய வியப்பு இல்லா மெய்ஞ்ஞான வேதியனைச்
சயப் புகழார் பலர் வாழும் தடங்குருகூர்ச் சடகோபன்
துயக்கு இன்றித் தொழுது உரைத்த ஆயிரத்துள் இப் பத்தும்
உயக் கொண்டு பிறப்பு அறுக்கும் ஒலி முந்நீர் ஞாலத்தே–3-1-11–
முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணனே!
அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன்;
வெம்நாள் நோய் வீய வினைகளை வேர் அறப் பாய்ந்து
எந்நாள் யான் உன்னை இனி வந்து கூடுவனே?–3-2-1-
வன் மா வையம் அளந்த எம் வாமனா!நின்
பன் மா மாயப் பல் பிறவியில் படிகின்ற யான்,
தொன் மா வல்வினைத் தொடர்களை முதல் அரிந்து,
நின் மா தாள் சேர்ந்து நிற்பது எஞ்ஞான்று கொலோ?–3-2-2-
கொல்லா மாக்கோல் கொலை செய்து பாரதப் போர்
எல்லாச் சேனையும் இரு நிலத்து அவித்த எந்தாய்!
பொல்லா ஆக்கையின் புணர்வினை அறுக்கல் அறா;
சொல்லாய், யான் உன்னைச் சார்வது ஓர் சூழ்ச்சியே–3-2-3-
சூழ்ச்சி ஞானச் சுடர் ஒளி யாகி என்றும்
ஏழ்ச்சி கேடு இன்றி, எங்கணும் நிறைந்த எந்தாய்!
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து,நின் தாள் இணைக் கீழ்
வாழ்ச்சி யான் சேரும் வகை அருளாய் வந்தே–3-2-4-
வந்தாய் போலே வந்தும்,என் மனத்தினை நீ
சிந்தாமல் செய்யாய்; இதுவே இது வாகில்,
கொந்தார் காயாவின் கொழு மலர்த் திரு நிறத்த
எந்தாய்! யான் உனை எங்கு வந்து அணுகிற்பனே?–3-2-5-
கிற்பன், கில்லேன் என்றிலன் முனம் நாளால்;
அற்ப சாரங்கள் அவை சுவைத்து அகன்றொழிந்தேன்;
பற்பல் ஆயிரம் உயிர் செய்த பரமா! நின்
நற்பொன் சோதித் தாள் நணுகுவது எஞ்ஞான்றே?–3-2-6-
எஞ்ஞான்றும் நாம் இருந்திருந்து இரங்கி, நெஞ்சே!
மெய்ஞ் ஞானம் இன்றி வினை இயல் பிறப்பு அழுந்தி
எஞ்ஞான்றும் எங்கும் ஒழிவு அற நிறைந்து நின்ற
மெய்ஞ்ஞானச் சோதிக் கண்ணனை மேவுதுமே–3-2-7-
மேவு துன்ப வினைகளை விடுத்துமிலேன்;
ஒவுதல் இன்றி உன் கழல் வணங்கிற்றிலேன்;
பாவு தொல் சீர்க் கண்ணா!என் பரஞ்சுடரே!
கூவுகின்றேன் காண்பான்;எங்கு எய்தக் கூவுவனே?–3-2-8-
கூவிக் கூவிக் கொடு வினைத் தூற்றுள் நின்று
பாவியேன் பல காலம் வழி திகைத்து, அலமருகின்றேன்;
மேவி அன்று ஆநிரை காத்தவன், உலகம் எல்லாம்
தாவிய அம்மானை எங்கு இனித் தலைப் பெய்வனே?–3-2-9-
தலைப் பெய் காலம் நமன் தமர் பாசம் விட்டால்
அலைப் பூண் உண்ணும் அவ் வல்லல் எல்லாம் அகலக்
கலைப் பல் ஞானத்து என் கண்ணனைக் கண்டு கொண்டு
நிலைப் பெற்று என்னெஞ்சம் பெற்றது நீடு உயிரே–3-2-10-
உயிர்கள் எல்லா உலகமும் உடையவனைக்
குயில் கொள் சோலைத் தென் குருகூர்ச் சடகோபன்
செயிர் இல் சொல் இசை மாலை ஆயிரத்துள் இப்பத்தும்
உயிரின் மேல் ஆக்கை ஊனிடை ஒழிவிக்குமே–3-2-11-
செஞ்சொற் கவிகாள் உயிர் காத்து ஆட் செய்மின் திருமால் இரும் சோலை
வஞ்சக் கள்வன் மா மாயன் மாயக் கவியாய் வந்து என்
நெஞ்சும் உயிரும் உள் கலந்து நின்றார் அறியா வண்ணம் என்
நெஞ்சும் உயிரும் அவை உண்டு தானே யாகி நிறைந்தானே–10-7-1-
தானே ஆகி நிறைந்து எல்லா உலகும் உயிரும் தானே யாய்
தானே யான் என்பான் ஆகி தன்னைத் தானே துதித்து எனக்குத்
தேனே பாலே கன்னலே அமுதே திருமால் இரும் சோலைக்
கோனே யாகி நின்று ஒழிந்தான் என்னை முற்றும் உயிர் உண்டே–10-7-2-
என்னை முற்றும் உயிர் உண்டு என் மாய ஆக்கை இதனுள் புக்கு
என்னை முற்றும் தானேயாய் நின்ற மாய அம்மான் சேர்
தென்னன் திருமால் இரும் சோலைத் திசை கூப்பிச் சேர்ந்த யான்
இன்னம் போவேனே கொலோ என் கொல் அம்மான் திருவருளே–10-7-3-
என் கொல் அம்மான் திருவருள்கள் உலகும் உயிரும் தானேயாய்
நன்கு என் உடலம் கை விடான் ஞாலத்தூடே நடந்து உழக்கி
தென்கொள் திசைக்குத் திலதமாய் நின்ற திருமால் இரும் சோலை
நங்கள் குன்றம் கை விடான் நண்ணா அசுரர் நலியவே–10-7-4-
நண்ணா அசுரர் நலிவு எய்த நல்ல அமரர் பொலிவு எய்த
எண்ணா தனகள் என்னும் நன் முனிவர் இன்பம் தலை சிறப்ப
பண்ணார் பாடல் இன் கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி
தென்னா என்னும் என் அம்மான் திரு மால் இரும் சோலையானே–10-7-5-
திருமால் இரும் சோலையானே யாகி செழு மூஉலகும் தன்
ஒரு மா வயிற்றின் உள்ளே வைத்து ஊழி ஊழி தலை அளிக்கும்
திருமால் என்னை ஆளுமால் சிவனும் பிரமனும் காணாது
அருமால் எய்தி அடி பரவ அருளை ஈந்த அம்மானே–10-7-6-
அருளை ஈ என் அம்மானே என்னும் முக்கண் அம்மானும்
தெருள் கொள் பிரமன் அம்மானும் தேவர்கோனும் தேவரும்
இருள்கள் கடியும் முனிவரும் ஏத்தும் அம்மான் திருமலை
மருள்கள் கடியும் மணி மலை திருமால் இரும் சோலை மலையே–10-7-7-
திருமால் இரும் சோலை மலையே திருப் பாற் கடலே என் தலையே
திருமால் வைகுந்தமே தண் திரு வேங்கடமே எனது உடலே
அருமா மாயத்து எனது உயிரே மனமே வாக்கே கருமமே
ஒருமா நொடியும் பிரியான் என் ஊழி முதல்வன் ஒருவனே–10-7-8-
ஊழி முதல்வன் ஒருவனே என்னும் ஒருவன் உலகு எல்லாம்
ஊழி தோறும் தன்னுள்ளே படைத்துக் காத்துக் கெடுத்து உழலும்
ஆழி வண்ணன் என் அம்மான் அம் தண் திரு மால் இரும் சோலை
வாழி மனமே கை விடேல் உடலும் உயிரும் மங்க ஓட்டே–10-7-9-
மங்க ஒட்டு உன் மா மாயை திரு மால் இரும் சோலை மேய
நங்கள் கோனே யானே நீ ஆகி என்னை அளித்தானே
பொங்கு ஐம் புலனும் பொறி ஐந்தும் கருமேந்த்ரியம் ஐம் பூதம்
இங்கு இவ் வுயிர் ஏய் பிரகிருதி மான் ஆங்காரம் மனங்களே–10-7-10-
மான் ஆங்கார மனம் கெட ஐவர் வன்கையர் மங்க
தான் ஆங்கார மாயப் புக்கு தானேதானே ஆனானைத்
தேன் ஆங்காரப் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல் ஆயிரத்துள்
மான் ஆங்காரத் திவை பத்தும் திருமால் இரும் சோலை மலைக்கே–10-7-11-
————————
ஸ்ரீ பூதத்தாழ்வா -3- பாசுரங்கள் மங்களாசாசனம் –
பயின்றது அரங்கம் திருக் கோட்டி பன்னாள்
பயின்றதுவும் வேங்கடமே பன்னாள் -பயின்றது
அணி திகழுஞ் சோலை அணி நீர் மலையே
மணி திகழும் வண் தடக்கை மால். –இரண்டாம் திருவந்தாதி – 46
உணர்ந்தாய் மறை நான்கும் ஓதினாய் நீதி
மணந்தாய் மலர் மகள் தோள் மாலே! – மணந்தாய் போய்
வேயிருஞ்சாரல் வியலிரு ஞாலம் சூழ்
மாயிருஞ்சோலை மலை. –இரண்டாம் திருவந்தாதி – 48
வெற்பென்றிருஞ் சோலை வேங்கடமென் றிவ்விரண்டும்
நிற்பென்று நீ மதிக்கும் நீர்மை போல் – நிற்பென்
உளங்கோயில் உள்ளம் வைத்துள்ளினேன் வெள்ளத்
திளங்கோயில் கை விடேலென்று.–இரண்டாம் திருவந்தாதி – 54
———————-
ஸ்ரீ பேயாழ்வார் -1- பாசுரம் மங்களாசாசனம்-
பண்டெல்லாம் வேங்கடம் பாற் கடல் வைகுந்தம்
கொண்டங்குறைவார்க்குக் கோயில் போல் – வண்டு
வளங்கிளரும் நீள் சோலை வண் பூங்கடிகை
இளங்குமரன் தன் விண்ணகர். –மூன்றாம் திருவந்தாதி – 61-
திருமாலிருஞ்சோலையென்னும் அழகர் மலை
இத்தலத்தைப் பற்றி வராக புராணம், பிரம்மாண்ட புராணம் ஆக்னேய புராணம் போன்றன விவரித்துக் கூறுகின்றது. வராக புராணத்தில் ரிஷபாத்திரி
மகாத்மியும் என்னும் தலைப்பில் இத்தலம் பற்றி பரக்கப் பேசப்பட்டுள்ளது.
ரிஷபம் என்றால் காளை. இந்தமலையினைச் சுற்றியுள்ள மலைகள் யாவும் பசுவினைப் போலவும் இந்த மலை மட்டுமே காளை போன்றும் தோன்றுவதால்
இதற்கு ரிஷபாத்திரி என்ற பெயர் ஏற்பட்டதென்பர்.
மலய பர்வதம் எனப்படும் பொதியமலைக்கு வடக்கே 10 யோஜனை தூரத்திலும், காவிரி நதிக்குத் தெற்கே 6 யோஜனைத் தூரத்திலும், வராக
பர்வதம் எனப்படும் பழனிக்கு கிழக்கே 6 யோஜனை தூரத்திலும், அமைந்துள்ளதாக எல்லைகள் குறிப்பிட்ட இப்பகுதியை கூடலூர் நாடு என்றும்,
மாலிருங் குன்றம் என்றும், திருமால் சோலை யென்றும் வனகிரி யென்றும் தமிழ்மொழி பல பெயர்களைச் சூட்டுகின்றது. அதேபோல் இங்குள்ள உற்சவப்
பெருமாளுக்கும் அழகர் என்னும் வெகு அழகான சொல் வாய்த்துவிட்டது.
மகாவிஷ்ணுவிற்கும், அவரது இராம கிருஷ்ண அவதாரங்களுக்கும் அழகர் என்னும் சொல் சமஸ்கிருதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இம்முறை
தமிழிலும் பின்பற்றப் பட்டுள்ளது. மதுரையிலிருக்கும் எம்பெருமானுக்கு கூடலழகர் என்பதும் ஒரு திருநாமம். இவருக்கும் அழகர் கள்ளழகர் என்று திருநாமங்கள், குழலழகர், வாயழகர், கொப்பூழில் எழுகமலப் பூவழகர் என்பது ஆண்டாளின் மங்களாசாசனம். அச்சோ ஓரழகியவா என்பது திருமங்கை மன்னனின் மங்களாசாசனம். இக்கள்ளழகர் என்னும் சொல்லே வடமொழியில் சுந்தரராஜர் என்றாயிற்று. இந்த மாலிருங்குன்றத்தைப் பற்றி பரிபாடல் என்னும் சங்ககால நூல் பின்வருமாறு கூறுகிறது.
தாங்கு நீணிலை யோங்கிருங் குன்றம்
நாறிணாராத் தூழாயோ னல்கி னள்லதை
ஏறுதலெளிதோ வீறுபெற துறக்கம்
அரிதிற் பெறு துறக்க மாலிருங்குன்றம் என்றும்
மாயோ னெத்தலின் னிலைத்தே
சென்று தொழுகல் சீர் கண்டு பணிமனமே
இருங் குன்றென்றும் பெயர் பரந்ததுவே
பெருங்கலி ஞாலத்து தொன்றியல் புகழது -பரி பாடல்
“தடம்பல கடந்து காடுடன் கழிந்து திருமால் குன்றம் செல்குவீராயின்”— என்று சிலப்பதிகாரமும் திருமாலிருஞ்சோலையைக் குறிக்கிறது.
எமதர்மராஜன் விருஷபம் என்ற தரும ரூபத்தோடு தபசு செய்து இம்மலைக்கு விருஷபாத்ரி எனப் பெயரிடுமாறு பகவானை வேண்ட அவ்வண்ணமேயாயிற்றென்பர். தர்மத்திற்கு அதிபதியான தர்மதேவன் இங்கு ஸ்ரீமந் நாராயணனைக் குறித்து தவமிருந்து சுந்தரராஜனைத் தரிசித்து அதே திருக்கோலத்தை யாவருக்கும் காண்பிக்க இங்கேயே எழுந்தருளுமாறு வேண்டி நிற்க, அவ்வண்ணமே எழுந்தருளியதாகவும், உடனே தர்ம தேவன் விஷ்வகர்மாவை அழைத்து விமானம், கோபுரம், கோட்டை கொத்தளத்துடன் எம்பெருமானுக்கு கோவில் எழுப்புமாறு கேட்க, சந்திரனைப் போன்ற அழகு வாய்ந்த சோமச்சந்த விமானத்துடன் விஸ்வகர்மா இக்கோவிலை உருவாக்கினான் என்பது வரலாறு.
எம்பெருமான் திரிவிக்ரம அவதாரம் எடுத்தபோது ஒரு பாதத்தால் உலகளந்துவிட்டு மறு பாதத்தால் விண்ணளக்க அது பிரம்மனின் சத்திய லோகம் வரை செல்ல பிரம்மன் தனது கமண்டல நீரால் பாத கமலங்கட்கு அபிஷேகம் செய்ய அந்த கமண்டல நீர்
பெருமாளின் காலிலுள்ள பொன்சிலம்பில் பட்டுத் தெறித்து இவ்விடத்தே சிலம்பாறாகப் பெருகி இது எங்கே உற்பத்தியாகிறது என்று
சொல்லமுடியாதவாறு வற்றாத ஜீவநதியாய் ஓடிக்கொண்டு தேனைவிட இனிமையாக இனிக்கும் தன்மை பெற்று எம்பெருமானின் திருமஞ்சனத்திற்கு
இலக்காகி நிற்கிறது.
இந்தச் சிலம்பாறுதான் நூபுர கங்கையாகும். இந்த தீர்த்தம் தவிர்த்து வேறு தீர்த்தங்களில் இங்குள்ள உற்சவருக்கு திருமஞ்சனம் செய்தால்
பெருமாள் கறுத்துவிடுவதால் இரண்டு மைல் தொலைவில் உள்ள இந்த தீர்த்தமே எப்போதும் திருமஞ்சனத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது.
எம்பெருமானின் திருமேனிக்கு தீர்த்தமாகி வயல்வெளிகளில் நெளியும் இந்த நூபுர கங்கையின் மகத்துவம் எழுத்தில் அடங்குந் தன்மையதன்று.
இதில் நீராடி விஷ்ணு சாமீப்யம் பெற்றவர் பலருண்டு. இந்த நதி இகபர சுகத்தைத் தருவதால் இந்த நதிக்கு “இஷ்டசித்தி” என்ற ஒரு பெயரும்
உண்டு. பகவானுடைய பாதார விந்தங்களிலிருந்து தோன்றி ஸம்ஸார பந்தத்தினால் உண்டான அழுக்கைப் போக்கடிக்கும் இந்நதிக்குப் “புண்யச்ருதி’.
என்றும், சகல ஜனங்களின் ஜனன மரண துக்கத்தைப் போக்கடிப்பதால் “பவஹாரி” என்றும் பல பெயர் உண்டு.
மூலவர்– ஸ்ரீபரமஸ்வாமி, பஞ்சாயுதங்களுடன் ஸ்ரீதேவி பூதேவி சூழ பிரயோகச் சக்கரத்துடன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
தாயார்– சுந்தரவல்லி, ஸ்ரீதேவி என்ற பெயரும் உண்டு.
உற்சவர்- சுந்தரராஜன், கள்ளழகர் என்னும் திருநாமம். இங்கு உற்சவர் மிகவும். பேரழகு வாய்ந்தவர். இந்த உற்சவர் அபரஞ்சியால் செய்யப்பட்டவர்.
இந்தியாவிலேயே இங்கும் திருவனந்தபுரத்திலும் மட்டுமே அபரஞ்சியால் செய்யப்பட்ட உற்சவர்கள் உள்ளனர். சோலைமலைக்கரசர் என்றே திவ்ய
பிரபந்தம் இந்த உற்சவமூர்த்தியை வர்ணிக்கிறது. புராணம். “ரிஷபாதிஷர்” என்று அழைக்கிறது. மூலவரை விட உற்சவர் பெரும் புகழ் பெற்ற ஸ்தலங்களுள் இதுவும் ஒன்று. இங்கு உற்சவரும் பஞ்சாயுதங்களுடன் திகழ்கிறார்.
தீர்த்தம்- நூபுரகங்கை என்னும் சிலம்பாறு
ஸ்தலவிருட்சம்- வ்ருஷபகிரி. சந்தன விருட்சம்
விமானம்- ஸோம ஸந்த விமானம்
காட்சி கண்டவர்கள்– மலயத்வஜ பாண்டியன், எமன், தர்மதேவதை.
கிழக்கு மேற்காக 10 மைல் தூரமும், 1000 அடி உயரமும் உள்ள இம்மலை எண்ணற்ற பூம்பொழில்களையும், பல சுனைகளையும், அரிய
மூலிகைகளையும் நிறைந்த குளிர்ச்சியினையும் கொண்டு திகழ்கிறது. இந்த மலையில் ஆயிரம் தலைகள் உடைய ஆதிசேடன் வாழ்ந்து வருவதாக ஐதீகம்.
ஆயிரம் தலைகள் இருப்பதால் ஆயிரம் தடாகங்களும் ஆயிரம் பொழில்களும் அவன் வாழ்வதற்கு வேண்டுமல்லவா?
இம்மலையைத் திருமாலின் இருப்பிடமென்றும், இம்மலை நோக்கித் தொழுவதை திருமாலைத் தொழுவதற்குச் சமம் எனக் கருதி மக்கள் இம்மலை
நோக்கித் தொழுதனர் என்று பரிபாடல் என்னும் தமிழிலக்கியம் கூறுகிறது.
இங்கு பாயும் சிலம்பாறு என்னும் நூபுர கங்கையினை மிகவும் புண்ணியமான நதியென்று புராணங்கள் வர்ணிக்கிறது. சிலப்பதிகாரமும் இந்தச்
சிலம்பாற்றைப் பற்றிச் சிலாகித்துப் பேசுகிறது. சிலம்பு செப்புகிறது.
திருமாலைத் தரிசித்துவிட்டு திருவரங்கம் செல்லும் மாடலன் என்பான் இந்த மலையில் அமைந்துள்ள மூன்று தீர்த்தங்களைப் பற்றி வழியில் சந்தித்த கோவலன், கண்ணகி கவுந்தி அடிகள் ஆகியவரிடம் கூறுகிறான். இங்கிருந்து நீங்கள் இடப்பக்கமாக உள்ள காட்டுவழியிற் சென்றால் திருமால் குன்றத்தை அடைவீர்கள். அங்கே ஒரு சுரங்கவழி இருக்கிறது. அவ்வழியிற் சென்றால் மூன்று தீர்த்தங்களைக் காணலாம். அவை புண்ணிய சிரவணம், பவகாரிணி, இட்டசித்தி என்பன. புண்ய சிரவணத்தில் நீராடினால் இந்திரனால் எழுதப்பட்ட “ஐந்திர வியாகரணம்” என்னும் நூலறிவை நீங்கள் பெறுவீர்கள். பவகாரிணியில் மூழ்கினால் பழம் பிறப்பைப் பற்றிய அறிவுண்டாகும். இட்டசித்தியில் நீராடினால் நினைத்ததெல்லாம் கைகூடும்.
துவாதசி தினத்தில் இந்த நூபுர கங்கையில் நீராடுபவர்கள் சகலவிதமான பாபங்களிலிருந்தும் விடுபட்டு விடுகிறார்கள். அதிலும் குறிப்பாக
ஐப்பசி மாதத்தின் வளர் பிறையில் வரக்கூடிய துவாதசியன்று நீராடக் கூடியவர்கள் விஷ்ணு ஸாயுஜ்யம் எனச் சொல்லப்படும் மோட்சத்தை
அடைந்து விஷ்ணுவுக்குச் சமீபத்தில் இருக்கும் நிலையினைப் பெறுகின்றார்கள்.
அலங்கும் மருவியார்த்து திமிழ் பிழியச் சிலம்பாரணிந்த சீர்கெழு திருவிற் சோலையொடு தொடர்மலி மாலிருங் குன்றம்”-என்று சிலம்பாற்றைப் பற்றி பரிபாடல் கூறுகிறது.
சிலம்பாறுடை மாலிருஞ்சோலை என்கிறார் திருமங்கை யாழ்வார்,
கந்த புராணத்தில் “முக்திதரு பேரழகு திருமலை” என்று போற்றப்படுகிறது. பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் என்னும் அழகிய மணவாளதாசர் இந்த
அழகரைப்பற்றி அழகர் அந்தாதி பாடியுள்ளார். சுமார் 300 ஆண்டுகட்கு முன்பு வாழ்ந்த கவிகாலருந்திரர் என்னும் புலவர் ஒருதனிப் பிள்ளைத் தமிழ்
பாடியுள்ளார். வேம்பத்தூரைச் சேர்ந்த கவிகுஞ்சரம் அய்யர் என்பவர் அழகர் கலம்பகம் என்னும் நூலை இயற்றியுள்ளார். 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த
பல பட்டடை சொக்க நாதப் புலவர் “அழகர் கிள்ளை விடு தூது என்னும் இலக்கிய மணி மாலையை அழகருக்குச் சமர்ப்பித்துள்ளார். “கவிக் குஞ்ச
பாரதி” சோலைமலைக் குறவஞ்சி என்னும் நூலில் மலையழகையும், அங்குள்ள கோவில்களையும், இயற்கை காட்சிகளையும் வர்ணிக்கிறார். மற்றும் திவ்ய சூரி சரிதம், ஸ்ரீகம்ச சந்தேகம், போன்ற நூல்களும் இத்தலம் பற்றிப் பேசுகின்றன.
கோவில் ஒழுகு என்னும் நூலும் இத்தலம் பற்றிய குறிப்புகளைக் கொடுக்கின்றது.
சந்திர வம்சத்தில் உதித்த புருரவசு என்னும் மன்னன் தென்தேசத்தில் மணலூரை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தான். அவனுக்கு நான்கு
புத்திரர்கள். மூத்தவனான இந்திரத்யுமனன் இத்தலத்தில் மகா விஷ்ணுவைக் குறித்து தவமிருந்து பராக்கிரமசாலியான ஒரு புத்திரனை பெற்றெடுத்தான்.
அவனுக்கு மலயத்வஜன் என்று பெயரிட்டான். இந்த மலயத்வஜ பாண்டியன் பாண்டிய நாட்டை ஆண்டு வரும் போது தனது புஷ்ப விமானத்தில் இம்மலை
மீது பறந்துவர விமானம் பறக்க முடியாது தரையிறங்கியது. அங்கிருந்த முனிவர்கள் மூலம் இப்பெருமானின் கோபுரத்தை தாண்டி எந்த விமானமும்
பறக்க முடியாதென்ற உண்மையைக் கேள்விப்பட்டு, இப்பெருமான் பக்கலில் ஈடற்ற பக்தி கொண்டு இக்கோவிலுக்கு எண்ணற்ற கைங்கரியங்களை செய்து மிகச் சிறந்த வைணவ மன்னனாகத் திகழ்ந்தான்.
திருவரங்கமும், திருமாலிருஞ் சோலையும், அநேக விஷயங்களில் ஒன்று படுகின்றன. இரண்டு கோவில்களும் கோட்டைகளும், உயர்ந்த
மதிற்சுவர்களும் வாய்க்கப் பெற்றவை. நெல் மணிகளைச் சேர்த்து வைக்கும் குதிர்கள் இரண்டு தலங்களிலுமுண்டு, இரண்டு கோவில்களிலும் உள்ள
பிரதான வாயில்கள் “ஆர்யன் வாசல்” என்றும் ஆர்ய படர் வாசல் என்றும் அழைக்கப்படுகின்றன. இரண்டு ஸ்தலங்களிலும்
பிரசாதங்கள் தயாரிப்பதும், விளக்கிடுவதும். தனி நெய்யிலேயே நடைபெறுகின்றன. திருவிழாக்களின் நடைமுறையும் இரண்டு கோவில்களில்
ஒத்துக் காணப்படுகின்றன. திருவரங்கத்தின் மதில்களை திருமங்கையாழ்வார் பாடியுள்ளார் திருமாலிருஞ் சோலை மதில்களை பெரியாழ்வார் பாடியுள்ளார். திருவரங்கன் இராமாணுஜருக்கு அருள் பாலித்தான். மாலிருஞ் சோலையான் கூரத்தாழ்வானுக்கு அருள் பாலித்தான். இருவரும் அழகில் விஞ்சியவர்கள். திருவரங்கன் சயன திருக்கோலத்தில் தனது பேரழகைக் காட்டினான். இவன் நின்ற திருக்கோலத்திலும், அமர்ந்த திருக்கோலத்திலும் காட்டினான். பெரியாழ்வாருடன் ஆண்டாளும் இப்பெருமானைக் குறித்துப் பாசுரம் பாடி இறுதியில் இவ்வழகரையே ஆண்டாள் திருமணம் செய்து கொண்டாள். அதாவது ஸ்ரீரெங்கநாதன் அழகராகவே வந்து ஆண்டாளை ஏற்றுக் கொண்டதாக ஐதீகம். இதிலும் இவ்விரண்டு ஸ்தலங்களும் ஒன்று படுகின்றன. அமர்ந்த திருக் கோலத்தில் ஆண்டாள் இருப்பது இங்கு மட்டும்தான்.
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பாக “இடைக்காடர்” என்பவரால் இந்த அழகர் மலையில் மருத்துவ மன்றம் ஏற்படுத்தப்பட்டு சித்த
வைத்திய சாஸ்திரங்கள் வளர்க்கப்பட்டுள்ளது. இங்குள்ள மரங்கள், உயர்ந்த மூலிகைகள், பற்றி சித்த வைத்திய நூல்கள் அரிய குறிப்புக்களைத் தருகிறது.
இங்குள்ள அர்த்த மண்டபத்தில் கல்லால் செய்யப்பட்ட மிக நுணுக்கம் வாய்ந்த இரண்டு ஜன்னல்கள் காண்போரை வியப்புறச் செய்யும்
தன்மை கொண்டதாகும். இங்குள்ள குலசேகராழ்வார், ஆண்டாள் ஆகிய இருவரின் செப்புத் திருமேனிகளும் நமது சிந்தை கவர்வதாகும். திரு
மந்திரத்தின் மூன்று பதம் போல் திகழும் மூன்றடுக்குகள் கொண்ட விமானம், அதில் அமைந்துள்ள சிற்பங்களும், மற்றும் பிரதான கோபுரத்தின் மேல்
அமைந்துள்ள இராமாயண, மகாபாரத கதை சிற்பங்களும் மிக்க கலையழகு வாய்ந்தவை. இத்தலத்தின் சோமஸந்த விமானத்தின் நிழல் அந்த
விமானத்திற்குள்ளேயே விழுமாறு அமைக்கப்பட்டிருப்பதும் ஒரு தனிச் சிறப்பாகும்.
பாண்டிய மன்னர்கள் பலர் இக்கோவிலுக்குப் பல திருப்பணிகள் செய்துள்ளனர். பாண்டியர்கட்கு இராமாயண காலத்தில் கபாடபுரம் தலைநகர்,
மகாபாரதம் காலத்தில் மணலூர் தலைநகர். சங்கம் மருவிய காலம் முதல் சமீப காலம் வரை மதுரை தலைநகரமாகவும் விளங்கியது. இப்பாண்டியர்களும்
பாரம்பர்யம் பாரம்பர்யமாய் பல்லவ மன்னர்களைப் போன்று விஷ்ணுவுக்குத் தொண்டு செய்தவர்கள் ஆவர். திருமாலின் அவதாரங்களுள் முதன்மையும்
முக்கியத்துவமும் பெற்றதான மச்சாவதாரத்தின் ஞாபகமாகவே பாண்டியர்கள் மீன் கொடியை தமது சின்னமாகத் தமது கொடியிலும் பொறித்தனர். பாண்டிய மன்னன் வல்லப தேவன் காலத்தில்தான் மதுரையில் பல்லாண்டு விளைந்தது.
பாண்டிய குல மன்னர்களுள் வாணர், அல்லது வானாதிராயர் என்ற பெயருடையோர் சுமார் 500 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி பீடத்தை
அலங்கரித்தனர். அவர்களுள் மிகவும் முக்கியமானவர்கள் “திருமாலிருஞ் சோலை நின்றான்” மகாபலி, வானாதிராயன், உறங்கா வில்லிதாசன்
ஆகியோராவர். இவர்களின் பெயர்களே இவர்கள் வைணவ ஈடுபாட்டில் எத்துணையளவிற்கு சிறந்து விளங்கினர் என்பதைப் புலப்படுத்தும், இவர்களில்
சில வானதிராயர்கள் திருமாலிருஞ்சோலையைத் தலைநகரமாகக் கொண்டு ஆண்டனர்.
ஸ்ரீ கள்ளழகருக்குரிய திருவிழாக்களில் மிகவும் முக்கியமானது சித்திரை மாதப் பௌர்ணமி அன்று வர கூடிய சித்திரைத் திருவிழாவாகும்.
மதுரை மீனாட்சி கோவிலில் தொடங்கும் சித்திரைத் திருவிழாவும், இவ்விழாவும் ஒரே சமயத்தில் நடக்கின்றன. திருமலை நாயக்கர் மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி பொறுப்பு ஏற்கும் முன்னர் இவ்விருவிழாக்களும் வெவ்வேறு மாதங்களில் நடைபெற்றுவந்தன.
அப்போது அழகரின் சைத்ரோத்ஸவம் சித்திரை மாதத்திலும் மீனாட்சி கோவில் உற்சவம் மாசி மாதத்திலும் நடைபெற்றது. இதனால் தான் மாசி
மாதம் நடக்கும் திருவிழாவில் மீனாட்சிரதம் செல்லும் சாலைகள் (வீதிகள்) மாசி வீதிகள் என்றே அழைக்கப்பட்டன. திருமலை நாயக்க மன்னரின்
ஆட்சிக்கு முன்பு ஸ்ரீ அழகர் சித்திரை மாதத்தில் அலங்காநல்லூர், தேனூர் வழியாக மதுரை வந்து வைகையில் இறங்கி வண்டியூரில் தங்கி மீண்டும்
அழகர் மலையடைவது வழக்கம். திருமலை மன்னர் இந்த இரண்டு விழாக்களையும் ஒன்று சேர்த்தால் அது சிறப்பாக இருக்கும் என்று கருதியே
இரண்டையும் ஒன்று சேர்த்தார்.
இதற்கு கூறப்படும் கதை தன் தங்கையான மீனாட்சியின் திருக்கல்யாணம் (திருமணம்) காண எம்பெருமான் மதுரைக்கு எழுந்துவரும்
சமயம் எதிரில் பல மண்டபங்களில் தங்கி இளைப்பாறிவர (12 மைல் தொலைவல்லவா) இவர் வருவதையறிந்த மதுரை மக்கள் எதிர்கொண்டு
வரவேற்க (சேவிக்க) செல்லும் வழக்கமே எதிர் சேவையாயிற்று.
இந்நிகழ்ச்சிக்குப் புராதன ஆதாரமில்லை. சைவ வைணவ பேதம் நீங்கி ஒற்றுமை உண்டாகவே இப்படியொரு விழாவை உண்டாக்கினாரோ என்று
கருத வேண்டியுள்ளது.
அழகர் குதிரை வாகனத்தில் வைகையை நோக்கிச் செல்லும் போதுவைகையில் இறங்கும் முன் ஸ்ரீவில்லி புத்தூரிலிருந்து வரும் சூடிக் கொடுத்த
ஆண்டாளின் மாலையைச் சூட்டிக் கொள்கிறார். இது ஆண்டு தோறும் தவறாது நடக்கும் நிகழ்ச்சி. ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ஆண்டுதோறும்
மாலையும் இங்கு வந்து சேர்கிறது.
வைகையிறங்கியதும் ஸ்ரீவீரராகவப்பெருமாள் இவரை எதிர்கொண்டழைப்பார். இந்த திருவிழாவிற்கு தமிழகமெங்குமிருந்து
லட்சோபலட்சம் பேர் குமுழுவதும், வேறெங்கும் இல்லாத நிகழ்ச்சியாகும்.
இந்நிகழ்ச்சியின் போது ராமராயர் மண்டபத்திற்கு அழகர் வந்துற்றதும் நடைபெறும் வான வேடிக்கை நிகழ்ச்சிகளும் பக்தர்கள் திரிஎடுத்துக்கொண்டு
வண்ண உடைகளில் தம்மை அலங்காரம் செய்துகொண்டு ஆடுவதும், கோவிந்தா, கோவிந்தாவென
விண்ணதிர கூவுவதும், செவிக்கும் கண்களுக்கும் பக்தி பூர்வமான ஞானத்திற்கும் ஒரு அரிய விருந்தாகும்.
அழகர் ஆற்றில் இறங்கும் போது என்னவிதமான பட்டாடை உடுத்தி கொண்டு வந்துள்ளார் என்று அறிய மக்கள் அதிக ஆர்வம் காட்டுவர்.
அழகர் அணிந்துவரும் பட்டாடைக்கும், அடுத்த ஆண்டு விளையப்போகும் விளைச்சலுக்கும் தொடர்புண்டு என்பதும் இங்கு உள்ள மக்களின் அசைக்க
முடியாத நம்பிக்கையாகும்.
9 நாட்கள் நடைபெறும் இத்திருவிழா மதுரைத் திருவிழா எனவும், சித்திரைத் திருவிழாவெனவும் சிறப்புடன் அழைக்கப்படுகிறது. இதுதான்
மதுரையில் நடக்கும் பெரிய திருவிழாவாகும்.
இந்த அழகர் மலையில் உள்ள அழகிய மணவாளன் கிணற்றில்தான் முகம்மதியர் படையெடுப்பின் போது ரெங்கநாதனை இருமுறை கொணர்ந்து
பத்திரப்படுத்தி வைத்தனர் என்று கோயில் வரலாறு கூறுகிறது.
இங்கு இராமானுஜர் மடம் இருந்தது. ஒரு ஜீயர் சுவாமிகள் இம்மடத்திற்கு தலைமைப்பொறுப்பேற்று நடத்திவரும் வண்ணம் செயல்பட்டு
வந்தது. இராமானுஜருக்குப் பின்னர் பிரசித்தி பெற்ற மணவாள மாமுனிகள் இப்பீடத்தை அலங்கரித்தார். இதேபோன்று குலசேகரன் மடம்.
திருநாடுடையான் மடம், வானாதிராயன் மடம் என்ற மடங்கள் இருந்தமை பற்றியும் சாசனங்களால் அறிய முடிகிறது.
இம்மலையில் வேறுபல தெய்வங்களும் இருப்பதாக காலப்போக்கில் கூறப்படும் பழக்கம் உண்டாயினும் பௌத்தமும், ஜைனமும் அழகரே
முக்கியமான தெய்வமென்று ஒப்புக்கொண்டதாக திருமங்கையாழ்வார் தமது பாசுரங்களில் பாசுரிக்கிறார்.
இங்குள்ள 18ஆம்படி கருப்பண சுவாமி மிகவும் பிரசித்தி. மலையாளத்தரசன் ஒருவன் இவ்வழகரை அங்கு கொண்டு செல்ல
வேண்டுமென்று திருடிச் செல்ல முயன்றான் அது முடியாமல் போகவே 18 பேர்களை (மந்திர தந்திரங்களில் தேர்ச்சிபெற்ற பணிக்கர்கள்) இங்கு அனுப்பி எப்படியாவது அழகரை கொண்டு செல்ல வேண்டுமென்று திட்டமிட்டான்.
இவர்கள் வந்து அழகரை திருடிச் செல்ல எத்தனிக்கையில் இதையறிந்த இங்கிருந்த ஒரு சாஸ்திரி தமக்கு வேண்டியவர்களை அழைத்துக் கொண்டு
வந்து பதினெட்டுப்பேரையும் பிடித்துப் படிக்கொருவராக புதைத்து வைத்தனர்.
மலையாள மாந்த்ரீகர் அழகர் சன்னிதானத்தில் இருந்து மலையாளம் கொண்டு செல்ல மறைந்து இருந்து மந்த்ர பிரயோகம் செய்து கொண்டு
பலி பீடத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சுத்த அன்னத்தை உண்டு வர
கண்ணுக்கு இனியான் என்னும் வைஷ்ணவர் ஒரு பலி பீட அன்னம் உடனே மறைந்து வருவதைக் கண்டு மிளகு சேர்த்தி படைக்க இவர் உண்டு கண்ண நீரை வழிய-அத்தைத்துடைக்க -கண்ணில் பூசின அஞ்சனம் கரைந்து இவர் இருப்பதைக் காட்டிக்கொடுக்க அவரைத் திருத்திப் பணி கொண்டருளினார்
இந்த அந்தணர் திரு மாலை ஆண்டான் முன்னோர் -20 பரம்பரைக்கு மேல் –
அழகரே திருமாலை ஆண்டானுக்கு சரம கைங்கர்யம் செய்ததால் இன்றும் அந்த நாளில் தொட்டித் திருமஞ்சனம் கண்டு அருளுகிறார்
இந்த பதினெட்டுப்பேரின் மந்திர சக்திக்கு கட்டுப்பட்டு அவர்களுக்கு துணையாக வந்த காவல் தெய்வம் ஒன்று இப்பெருமானின் பேரழகில் மயங்கி
இவரைக் கொண்டுபோக முடியாவிட்டாலும் பரவாயில்லை, இவருக்கு காவலாவது இருப்போம் என்றெண்ணி, அங்கிருந்த அர்ச்சகரையும், பிறரையும்
நோக்கி தான் இந்தப் பெருமாளின் வாசலையும், இந்தப் பதினெட்டுப் படிகளையும் காப்பதாக உறுதி கூறி அதற்கு அர்த்தஜாம பூஜாப் பிரசாதத்தைத்
தமக்கு அளிக்க வேண்டுமென்று கேட்க அவர்களும் அதற்கு ஒப்புக்கொண்டனர். அந்தக் காவல் தெய்வமே பதினெட்டாம்படி
கருப்பணசுவாமியாவான். இவ்விதம் கருப்பணசுவாமி கள்ளழகருக்கு காவற்கடன் பூண்டான்.
இன்றும் பொய், சூது, குற்றம், களவு போன்றனபற்றி நடக்கும் பஞ்சாயத்துக்கள் இவன் முன்னிலையில் பேசப்படுகிறது. நிதர்சனமின்றி
தண்டிப்பவன் கருப்பணசுவாமி என்பது மக்கள் நம்பிக்கை.
இந்தப் பதினெட்டுப் படிகளைப் பற்றி ஆண்டாள் கூட வியந்ததாய்க் கூறுவர்.
இங்கு மேற்குப் பிரகாரத்தில் யோக நரசிம்மர் எழுந்தருளியுள்ளார். இவர் கடுகடுப்பான முகத்துடன் மிகவும் கோபக் கனலுடன் உள்ளார்.
இவருடைய சிரசிலிருந்து கோபக்கினி மேலே கிளம்பிச் செல்வதாக ஐதீகம்.
இவரின் தலைக்கு மேலாக ஒரு சிறு தூவரம் உள்ளது. இந்தக் கோபக்கினியைத் தணிப்பதற்கு தினமும் எண்ணெய், பால், தயிர் இவற்றாலும் நூபுரகங்கையாலும் திருமஞ்சனம் உண்டு. இதற்காக 100 ஆண்டுகட்கு முன்பு பச்சையப்ப முதலியார் ஏற்படுத்திய அறக்கட்டளை இன்றும் தவறாமல் நடந்துவருகிறது.இங்குள்ள சாளக்கிராம தரிசனமும், அதன் அபிஷேக தீர்த்தமும் பக்தர்கட்குத் தீர்த்தமாக்கப்படுவதுண்டு.
வைணவ மறுமலர்ச்சிக்கு தந்தையாக விளங்கிய கிருஷ்ண தேவராயர்தென்னாட்டு ஸ்தலங்களில் 90 ஸ்தலங்களில் கோபுரங்களை கட்டினார். இதில்
பெரும்பான்மையான கோபுரங்கள் கட்டி முடிக்காமலேயே நின்று விட்டன.
இவைகள் யாவும் ராயகோபுரம் என்றும், மொட்டைக் கோபுரம் என்றும் அழைக்கப்பட்டன. திருமாலிருஞ் சோலையில் ராயர் கோபுரம் உண்டு.
திருவரங்கத்தில் கட்டி முடிக்கப்படாமல் இருந்த ராயகோபுரத்தைத்தான் ஸ்ரீ அஹோபில மடம் ஜீயர் ஸ்வாமிகள் கட்டி முடித்தார்.
கிருஷ்ணதேவராயர்தான் முதன்முதலில் இத்தலத்திற்கு சமயநல்லூர். சாந்த மங்கலம் ஆகிய கிராமங்களைத் தானமாக வழங்கினார்.
கி.1757இல் ஹைதர் அலி இங்குள்ள கல்யாண மண்டபத்தை கொள்ளையிட்டு சுற்றியிருந்த மதில்களை சின்னாபின்னப் படுத்தினான்.
யூசுப்கான் என்னும் முகம்மதிய வீரன் ஹைதர் அலியை தோற்கடித்து திண்டுக்கல்லுக்கு விரட்டியபோது 1758இல் அவன் கள்ளழகர் கோவில்
சொத்துக்களைத் திருப்பிக் கொடுத்து. பரிகாரமும் செய்து கொண்டான். 1801இல் இக்கோவில் ஆங்கில கலெக்டர்களின் பராமரிப்பின் கீழ் வந்தது.
கலெக்டர் புஹார்ஸ் என்பவர் இக்கோவிலின் சொத்துக்களைத் தொகுத்து நிர்வாகத்தை வரைமுறைப்படுத்தி பரிபாலித்தார்.
சுதபா என்னும் முனிவர் திருமாலிருஞ்சோலையில் தவமியற்றினார்.ஒரு நாள் அவர் நீராடிக் கொண்டிருக்கும்போது துர்வாசரும் அவரது
சீடர்களும் அங்கு வர இவர்களைக் கவனியாது சுதபா முனிவர் வெகுநேரம்நீரில் மூழ்கியிருந்ததால் துர்வாசருக்கு சினம் வந்துவிட்டது. என்னை மதியாது
தண்ணீருக்குள்ளேயே கிடந்ததால் நீ தண்ணீரில் வாழும் தவளையாகக் கடவது (மண்டுகமாகக் கடவது) என்று துர்வாசர் சபித்தார். தனது நிலையுணர்ந்த
சுதபன் முனிவர் துர்வாசரிடம் மன்னிப்பு வேண்டினார். மனங்கனிந்ததுர்வாசர் நீநாராயணன் நித்ய வாசம் செய்யும் வராக பர்வதம் சென்று அங்குள்ள
தர்மாத்திரி என்று அழைக்கப்படும் பர்வதத்தில் சென்று தவம் புரிக, எம்பெருமான் காட்சிகொடுத்ததும் உனக்கிட்ட சாபம் அகலும்
என்றார். அதற்கு சுதப முனிவர் நான் திருமாலிருஞ்சோலை நின்ற சுந்தரராஜனையே நித்ய தரிசனம் செய்பவன். இப்பெருமானையே நான்
அங்கும் சென்று வழிபட வேண்டுமென நினைக்க, அவ்விதமே ஆகும் என்றார்
துர்வாசர். இவ்வாறு திருமாலிருஞ்சோலை சுந்தரராஜப் பெருமாள் வராஹபர்வதத்தில் உள்ள தர்மாத்ரி என்னும் அழகிய பர்வதத்திற்கு
எழுந்தருளினார். இந்த அழகர் தான் இன்றைய காட்டழகர் திருக்கோவிலாகும்
(இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்தல வரலாற்றில் விரிவாகக் காணலாம்)
காணப்பா வழுகணிச் சித்தருண்டு கமண்டல நீர் தொட்டியிலே வந்து பாயும்
தோனப்பா பிள்ளைக ளொன்பது பேருண்டு துலங்கிடவே கன்னியொன்று அவர் பாலுண்டு
பூணப்பா வதனடியிற் றெப்பமுண்டு புகழான திரவியங்கள் அநேக முண்டு
மாணப்பா வழகர்மலை யென்று பேருமாச்சர்யம் நீலகிரிக் கதிகம் பாரே
பாரே னென்றேனம் மலையினுயரஞ் சென்றால் பதிவான கருப்பானுட கோவி லொன்று
நிரென்றேன் கோவிலுக்குத் தெற்கே சென்றால் நெடிய தொருபாறையொன்று சுனையொன்றுண்டு
பேரென்றேன் வனம் வொன்று பெருத்துக் காணு பெரிதாக குகையொன்று கதவுந் தோன்றும்
சேரென்றே குகையுள்ளே சென்றே யானால்ச் செயமான வையப்பா இத்திருப்பத்தானே”
என்று போகமுனிவர் தான் இயற்றிய ஜெனன சாகரம் என்னும் நூலில் எடுத்தாண்டுள்ளார். இதில் சிலம்பு குறிக்கும் சிலம்பாற்றுடன் திரவியங்கள் கிடைப்பதையும், 18ம் படிக் கருப்பண்ணணையும் குறிக்கப்பட்டுள்ளது.
மற்றுமொருபாடலில், “தானென்ற சப்தரிஷி ஷப்த கன்னி தற்பரமாம் திருமாலும் மதனினுதுண்டாம். -என்றும் குறிப்பிடுகின்றார்.
(போகரின் மருத்துவ, வானசாஸ்திர ஆன்மீக நூல்கள் யாவும் பெரும் ஆய்வு செய்ய வேண்டிய களஞ்சியங்களாகும்)
பணிந்தேன் திருமாலை பாமாலை தாளில்
அணிந்தேன் அருள் தஞ்சமாகத் துணிந்தேன்
திருமால் இருஞ்சோலை சேர்ந்தேன் எனக்கு
வருமால் இருஞ்சோதி வான் –41–
திருமால் இருஞ்சோலை சேர்ந்தேன்
பணிந்தேன் திருமாலை
பாமாலை தாளில் அணிந்தேன்
அருள் தஞ்ச மாகத் துணிந்தேன்
எனக்கு
வருமால் இருஞ்சோதி வான் -ஜோதிமயமான பரம பதம் கிட்டும் -இது திண்ணம் –
பணிந்தேன் திருமேனி பைங்கமலக் கையால் அணிந்தேன் உன் சேவடி மேல் அன்பாய்த் துணிந்தேன்
புரிந்து ஏத்தி உன்னை புகலிடம் பார்த்து ஆங்கே இருந்து ஏத்தி வாழும் இது-
ஸ்ரீ திருமால் இருஞ்சோலை மலைக் கள்ளன் (மாயோன் – கள்ளழகர் )
அழகர்மலையில் கோயில் கொண்டுள்ள கள்ளழகர், கள்ளர் இன ஆண்மகனைபோல வேடமணிந்து வருகிறார்.
கைகளில் சங்கு, சக்கரம், தலையில் கீரிடம், என காட்சியளிக்கும் அழகர்,
கள்ளர் மரபினரின் ஆசாரங்களுக்கு கேற்றவாறு கைகொன்றாக வளத்தடி எனப்படும் வளரித்தடி,
(கள்ளரின் பழைய போர்க்கருவிகளான வளைதடியும் குறுந்தடியும்)
கள்ளர் இன ஆண்மகன் அக்காலத்தில் இடுகிற கொண்டை, தலையில் உருமால்,
காதுகளில் வண்டிகடுக்கன் (தொங்கும் காது மடல்களை உடையவராக) என அணிந்து மதுரை நோக்கி வருகிறார்.
அழகர் அணியும் கடுக்கண் மேலநாட்டுக் கள்ளர் அணியும் வகையில் அமைந்துள்ளது. இதன் பெயர் வண்டிக்கடுக்கண் ஆகும்்
கள்ளர் திருக்கோலத்தில் வரும்போது அழகர் கையில் இருக்கும் வளரிக்கும், மேலநாட்டு கள்ளருக்கும் உள்ள தொடர்பு நெடிய தொடர்புள்ளது.
மேல நாடு எனும் நாட்டமைப்பு, வடக்குத்தெரு, தெற்குத்தெரு, மேலத்தெரு, பாளையப்பட்டு , பத்துக்கட்டு, பறப்புநாடு ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது.
மேல நாட்டு கள்ளர்கள் அழகர் கோயில் கள்ளழகரை வழிப்படுகின்றவர்கள்.
கள்ளழகர் கோயில் தேர்திருவிழாக்களில் பட்டுப் பரிவட்டம் முதல் மரியாதைகள் இவர்களுக்குண்டு
நரசிங்கன் பட்டி அம்பலக்காரர்கள் பரம்பரையாகக் கள்ளழகர் தேவஸ்தானம் தர்மகர்த்தர்களாக இருந்து வருகின்றார்கள்.
மதுரை, தல்லாகுளத்தில் கள்ளழகர்க்குச் சிறந்த மண்டகப்படி இவர்களால் நடைபெற்று வருகிறது.
கள்ளழகர் கோயில் தேர்த்திருவிழாவின் போது தேரினை இழுக்கும் உரிமை பெற்றவர்கள்.
கள்ளர் வேடம் தரித்து அழகர் கோவிலிலிருந்து மதுரை வரும் கள்ளழகர் முதலில்
நரசிங்கம்பட்டி மேல்நாட்டு கள்ளர் அல்லது அழகர்மலை கள்ளர் அம்பலகாரரான நரசிங்கம்பட்டி
திரு. இராமசாமி அம்பலகாரர் குடும்பத்தினருக்கு பாத்தியப்பட்ட மண்டபத்திற்குதான் முதலில் வருகிறார்
கள்ளர் அழகர் கோவிலில் உள்ள ஓர் கோபுரத்தின் பெயர் தொண்டைமான் கோபுரம்.
கள்ளழகர் கோவிலின் உள்ளே உள்ள ஒரே மண்டபம் மாங்குளம் கிராமத்தாருக்கு பாத்தியப்பட்டது.
மாங்குளம் கிராமத்தார்கள் என்பவர்கள் மேல்நாட்டு கள்ளர் அம்பலக்காரர்கள்.
இவர்களுக்கே கோவிலும் பாத்தியப்பட்டது, முதல் மரியாதை, வடம் இழுப்பது அனைத்தும்.
அழகருக்கு அலங்காநல்லூரில்தான் அலங்காரம் நடைபெற்றது.
அதன் காரணமாகவே அந்த ஊருக்கு அலங்காரநல்லூர் என்ற பெயர் ஏற்பட்டு,
தற்போது அலங்காநல்லூர் என்று மருவிவிட்டது’.
அழகர் கோயில் பிற்காலத்தில் கள்ளழகர் கோயில் என மக்களால் அழைக்கப்பட்டது.
திருமாலிருஞ் சோலைமலை அழகர்மாலை எனும் ஒலைச்சுவடித் தொகுப்பில்
” கள்ளர் குலத்தார் திருப்பணி வேண்டிய கள்ளழகா” , “
கள்ளர்குரிய அழகுப்பிரான்” என பல இடங்களில்
அழகர் கள்ளர்களுக்கு உரியவர் எனும் விதத்தில் பாடப்பட்டுள்ளது.
கள்ளர் வழிமறிப்பு சடங்கு
” அழகர் வர்ணிப்பு ” எனும் ஒலைச்சுவடியில் , சித்திரைத் திருவிழாவின் போது, அழகர் மதுரை வரும்போது,
தல்லாக்குளம் தாண்டி, கள்ளந்திரி எனும் பகுதியில் கள்ளர்கள் அழகரை மறித்ததாக கூறப்பட்டுள்ளது.
அழகர் வர்ணிப்பு கூறும் இந்த நிகழ்ச்சி இன்றளவும் சித்திரை திருவிழாவின் போது சடங்காக நடந்து வருகிறது.
சித்திரை திருவிழாவின் முடிவில் அழகர், தனது கோயிலை நோக்கி திரும்பி வரும்போது, தல்லாக்குளம் அருகில்,
கள்ளர்கள் பெருஞ்சத்தத்தோடு, பல்லக்கை நோக்கி வந்து, பல்லக்கின் கொம்புகளை ” வாழக்கலை” எனும் ஈட்டி
போன்ற கருவியால் குத்தி, மூன்று தடவை பல்லக்கை சுற்றி வருகின்றனர்.
அழகரை வழிமறிக்கும் உரிமை மேலநாட்டை சேர்ந்த மாங்குளம் கிராமத்து கள்ளர்களுக்கே உண்டு
சித்திரைத் திருவிழாவில் மாங்குளம் கிராமத்தாருக்கு தோசை உரிமை உண்டு.
நாட்டுக்கள்ளரில் மாங்குளம் கள்ளர்களுக்கு மட்டும் இரணியன் வாசல் அருகில் ஒரு பழைய மண்டபம் உரிமையாய் உள்ளது.
சித்திரை திருவிழாவின் போது அழகரின் ஆடை மற்றும் அணிகலன் பெட்டியை மதுரைக்கு கொண்டு வரும் உரிமை மாங்குளம் கிராமத்தாருக்கே உரியது.
மதுரை செல்லும் வழியில் அழகர் இறங்கும் மண்டபங்கள் தோறும் நான்கனா வசூலிக்கும் உரிமையும் மாங்குளம் கிராமத்தாருக்கே உண்டு.
ஆடி மாதத்தில் நடைபெறும் அழகர்கோயில் தேரோட்டத்தில் வடம் இழுக்கும் உரிமை நாட்டுக்கள்ளர்களுக்கு உண்டு.
முதல் வடம் வெள்ளியங்குன்றம் ஜமீன் கிராமங்களும், மற்ற மூன்று வடங்கள் இழுக்கும் உரிமை
முறையே தெற்குத்தெரு, வடக்குத்தெரு, மேலத்தெரு கள்ளர்களுக்குரியதாகும்.
தேர் இழுக்கும் முன் , வடம் இழுக்கும் உரிமை பெற்ற கள்ளர்கள், தேருக்கு முன் நாட்டுக்கூட்டம் நடத்துகின்றனர்.
அங்கு தங்களுக்குள் உள்ள பிரச்சனைகளை விவாதிக்கப்படுகிறது.
ஜமீன்தாருக்கும், ஏனைய மூன்று தெரு கள்ளர் தலைவர்களுக்கும் 8 முழம் அளவுள்ள ” நாகமடிப்பட்டு” கோயில் மரியாதையாக தரப்படுகிறது.
கள்ளர்கள் இழுக்கும் ஒவ்வொரு வடத்திற்கும், 2 தோசை மற்றும் 2 படி அரிசிப்பொங்கல் பிரசாதமாக அளிக்கப்படுகிறது.
சித்திரை திருவிழாவின் போது கள்ளர் வேடம் தரித்து அழகர் கோவிலிலிருந்து மதுரை வரும் கள்ளழகர்
முதலில் நரசிங்கம்பட்டி மேல்நாட்டு கள்ளர் அம்பலக்காரர் மண்டபத்தில் தங்கி அருள் தருகிறார்.
அம்பலக்காரர் மண்டபத்தில் கள்ளர்களுக்கு மரியாதை செய்யப்படுகிறது.
திருமங்கை ஆழ்வாரின் வேடுபறி நிகழ்வு அழகர் கோயிலில் மார்கழி மாதத்தில் நடைபெறுகிறது.
இந்த நிகழ்வை நடத்தும் பொறுப்பு வெள்ளியங்குன்றம் பாளையக்காரருடையதாகும்.
இந்த நிகழ்வின்போது கள்ளர் வேடம் பூண்டு கோயில் மரியாதைகளை மாங்குளம் கள்ளர்களே பெறுகின்றனர்.
மாங்குளம் கள்ளரில் பொன்னம்பல புலியன், ஆனைவெட்டி தேவன், ஒஞ்சியர், வப்பியர் ஆகிய பிரிவினரும்,
வடக்குத் தெரு கள்ளரில் அஞ்சாங்கரை அம்பலம் ஆகிய ஐந்து பிரிவினரும் தங்களுக்குள்
திருமங்கை ஆழ்வார் வேடுபறி நிகழ்வில் பங்கு கொள்வதற்கான பட்டு பரிவட்ட மரியாதையை மாறி மாறி பெற்றுக் கொள்கின்றனர்.
மாயோன்
இவனை மாயோன் என்றுதான் ‘தொல்’காப்பியம் அழைக்கிறது. மாயோன் என்றால் கள்வன்தானே!
கண்ணன் கள்வன் என்று எல்லோரும் மாய்ந்து, மாய்ந்து பாட்டு எழுதிவிட்டனர்.
அவன் சித்சோரன் (நெஞ்சக் கள்வன்) அதனால் கள்ளழகர்.
பின்னால் கள்ளர் ஜாதிக்கு குலபதியானதினாலும் கள்ளழகர். ஆண்டாள் மனதைக் கவர்ந்ததினாலும் கள்ளழகர்.
சங்க இலக்கியமான பரிபாடலில் இரணியம் கிராமத்தைச் சேர்ந்த புலவர் இளம்பெரு வழுதியார் இதைத் திருமால் குன்றம் என்கிறார்
சிலப்பதிகாரம் இதை திருமால் மலை என்கிறது.
பூதத்தாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் அழகரைத் தொழுது 108 பாக்களை பாடிப் பரவியுள்ளனர்.
இவர்களுக்குப் பிறகு, ஏராளமான சிற்றிலக்கியங்கள் கள்ளழகரை கவிதையில் ஏற்றியுள்ளன.
சங்ககாலப் பகுதியின் பிற்பகுதியில் தோன்றிய நூல் என்று கருதப்படும் பரிபாடல் 15ஆம் பாடலில் இந்த மலையின் பெருமை விரிவாகப் பேசப்படுகிறது.
இதனைப் பாடியவர் இளம்பெரு வழுதி. இரண்டாம் நூற்றாண்டிலேயே கள்ளழகர் என்று பரிபாடலில் அழைக்கப்படுகிறார்.
கள்ளழகர் மலையைக் குறிக்கும்பெயர்களில் குறிப்பிடத்தக்கவை சில.
திருமாலிருஞ்சோலை
இருங்குன்று
பெரும்பெயர் இருவரை
கேழ் இருங்குன்று
இக் குன்றில் குடிகொண்டுள்ள திருமலால் “கள்” ( கள்ளணி பசுந்துளவு என்பது துளசிப் பூவோடு கூடிய துளசியிலை மாலை)
அணிந்த பசுந்துளசியை மாலையாக அணிந்து கொண்டுள்ளதால் கள்ளழகர் எனப்பட்டார்.
சோலைமலை பழங்காலத்தில் பாண்டியர்க்கு உரிய கோட்டையாகவும் விளங்கிற்று.
பாண்டியர் அரசு வீற்றிருந்த தலைநகராகிய மதுரையின் வட கிழக்கே காதவழி தூரத்தில் உள்ளதாய்,
பத்து மைல் நீளமும், நாற்பது மைல் சுற்றளவும் உடையதாய்த் திகழ
அம் மலையைப் பாண்டியர் தம் காவற் கோட்டையாக்கிக் கொண்டனர்.
மலையத்துவசன் என்ற பாண்டியன் அக் கோட்டையைக் கட்டினான் என்பர்.
அந் நாளிலே கட்டிய உட்கோட்டை, வெளிக் கோட்டை ஆகிய இரண்டும் இன்றும் காணப்படுகின்றன.
திண்ணிய மதில் அமைந்த சோலைமலையைக் கண்டு, கண்ணும் மனமும் குளிர்ந்தார் பெரியாழ்வார்;
“மதில் சூழ் சோலைமலைக்கு அரசே” என்று பாடினார்.
இத்தகைய படை வீட்டையும் கோட்டையையும் காத்து நின்றான் ஒரு வீரன்.
முறுக்கிய மீசையும், தருக்கிய விழியும் உடைய அவ் வீரன் இப்பொழுது காவல் தெய்வமாய்.
பதினெட்டாம்படிக் கறுப்பன் என்ற பெயரோடு சோலைமலையிலே காட்சியளிக்கின்றான்.
அவனை நினைத்தாலே குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்; படிறுடையார் உள்ளம் பறையடிக்கும்.
நீதி மன்றத்தில் தீராத வழக்குகளும் கறுப்பையன் படிக்கட்டில் தீர்ந்துவிடும்.
கறுப்பன் கள்ளர்களுக்கு உரிய தெய்வம். அதிலும் மேலூரைச் சார்ந்த கள்ளர்களுக்கு அவர் மிகச் சிறப்பான உரிமை உடையவர்.
அப்பகுதியில் கறுப்பணசாமி கோயிலே கள்ளர்கள் பஞ்சாயத்து அவை கூடும் சாவடியாகும்.
கள்ளர் அல்லது குயவர் சாதியைச் சேர்ந்தவர்களே அவருக்குப் பூசாரியாக இருப்பர்.
கள்ளனும் அவனே; காப்பானும் அவனே! ஆதியும் அந்தமும் அவனே! ஆதியும் அவனே;
சோதியும் அவனே! சோலைமலை அரசனும் அவனே!
அம் மாயக் கள்வனைக் கண்டு கொண்டார் ஞானக் கவிஞராகிய நம்மாழ்வார்.
“வஞ்சக் கள்வன் மாமாயன்
மாயக் கவியாய் வந்துஎன்
நெஞ்சம் உயிரும் அவையுண்டு
தானே யாகி நிறைந்தானே”–என்று பாடினார்; பரவினார்; பரவசமாயினார்;
உள்ளம் கவர்ந்த கள்வனை நினைந்து உருகினார்; அவன் அழகைக் கண்ணாற் பருகினார்; இன்ப வாரியில் மூழ்கினார்.
இங்ஙனம் ஆழ்வாரது நெஞ்சிலே புகுந்து திருவாய்மொழி பாடுவித்த வஞ்சக் கள்வனே சோலை மலையில் நின்று அருளும் திருமால்.
அவர் பெருமையால் சோலைமலை, ‘திருமால் இருஞ்சோலை’ என்னும் பெயர் பெற்றது.
“அருகரோடு புத்தரும் அமர்ந்தருளும் சோலை
மருகனோடு மாமனும் மகிழ்ந்துறையும் சோலை
கருமையோடு* வெள்ளையும் கலந்திலங்கும் சோலை
அருமையான சோலைஎங்கள் அழகர்பெருஞ் சோலை“–என்று ஆடிப் பாடினாள் சோலைமலைக் குறவஞ்சி.
அச்சோலையிலே கள்ள அழகரைக் காண்பது ஓர் ஆனந்தம்! —
* வெள்ளை – வெள்ளை நிறமுடைய பலதேவன். அவரும் கண்ணனோடு அம் மலையில் காட்சியளித்தார் என்பது பரிபாடலால் விளங்கும்.
அழகர்கோவிலில் ஆடி மாதம் நடைபெறும் திருவிழாவில் ஒன்பதாம் நாளான பௌர்ணமியன்றுநடைபெறும்
“கள்ளழகர்“ தேரோட்டம் முடிகின்ற வரையில் திருவிழா நாட்களில் காலையிலும் மாலையிலும் இறைவனின் போர்கருவியான
திருவாழியாழ்வார் (சக்கரத்தாழ்வார்) தேரோடும் வீதியில் வலம்வந்து திக்குத்தெய்வங்களுக்கு படையல் இடுகின்றார்.
கோவிலுக்கு வெளியே வரும் சக்கரத்தாழ்வார் ஆண்டுமுழுவதும் அடைக்கப்பெற்றுள்ள
பதினெட்டாம்படிக்கோபுர வாசலைத் திறந்து அதன் வழியே வெளிவருவதும் அதே வழியில் திரும்பிச்செல்வதும் இத்திருவிழாவின் சிறப்பம்சமாகும்.
இத்தேரோட்ட திருவிழாவில் தேரினை இழுக்கும் பொறுப்பு மத்தம் மேலநாடு கிராமத்தவர்களின் பொறுப்பாக உள்ளது .
தேர் இழுப்பதனை மரியாதைக்குரிய உரிமையாகவே இவர்கள் கருதுகிறார்கள்.
தேரின் நான்குவடங்கள் முதல் வடம் வெள்ளியங்குன்றம் ஜமீனுக்கு உட்பட்ட கிராமத்தில் வாழும் கள்ளரினத்தவர்களும்
அடுத்த இரண்டாவது வடத்தை “மேலத்தெரு” நரசிங்கம்பட்டி, வெள்ளரிப்பட்டி ஆகிய கிராம கள்ளரினத்தவர்களும்
தேரின் மூன்றாவது வடத்தை “வடக்குத்தெரு” வல்லாளபட்டி, கல்லம்பட்டி, மாங்குளம், அரிட்டாபட்டி,
கிடாரிப்பட்டி, கள்ளந்திரி, ஆகிய கிராமத்தின் கள்ளரினத்தவர்களும்,
தேரின் நான்காவது வடத்தினை தெற்குத்தெரு கிராமத்தின் கள்ளரினத்தவர்களுக்கும் இழுக்கும் உரிமை பெற்றவர்கள்…
தேரோட்டம் துவங்குவதற்கு முன்னர் இம்மூன்று நாட்டவர்கள் அம்பலகாரர்கள் தலைமையில்
தேருக்கு முன்பாக ஒன்றுகூடி மேளதாளங்களுடன் தாரை, கொம்பு முழக்கத்துடன் குலவையிட்டு ஆர்ப்பரிப்பர்
பின்னர் நாட்டு அம்பலகார்களுக்கு 8 முழமுள்ள “நாகமடிப்பட்டு” கோயில் மரியாதை தரப்படுகிறது.
அப்போது 5 சீரகசம்பா தோசையும் 5 படி அரிசி பொங்கலும் பிரசாதமாக நாட்டார்களுக்கு வழங்கப்படுகிறது.
பின்னர் தேய்காய் உடைக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டவுடன் தேரின் மீது ஏறிய
மத்தம் மேலநாட்டு அம்பலகாரர்கள் “வல்லம்” வீசியவுடன் கள்ளழகர் தேரோட்டம் தொடங்கும் .
அழகர் மலைக்கு 3 கி.மீ. தூரத்தில் உள்ள கள்ளந்திரி கிராமம், கள்ளர்கள் வாழ்ந்த இடம் என்பதால் அப்பெயர் பெற்றது.
இப்போதும், கள்ளழகர் இவ்வூரிலிருந்து கள்ளன் வேடம் தரித்து மதுரை நோக்கிப் புறப்படுகிறார்.
இது ஆண்டு தோறும் நடக்கிற சித்திரைத் திருவிழாவின் ஒரு சடங்காகவே நடத்தப்படுகிறது.
சித்திரைத் திருவிழாவிலே இன்னும் பழைய மரபுகள் நிறைய இருக்கிறது.
அன்று முதல் இன்றுவரை கள்ளந்திரி கிராமத்தினர்தான், கையில் தீப்பந்தங்களை வைத்துக்கொண்டு அழகர்கூடவே பாதுகாப்பாக வந்து செல்கின்றனர்.
இதுபோன்ற பல மரபுகள் இந்தத் திருவிழாவில் இன்னும் கடைபிடிக்கப்படுது
அப்பன்திருப்பதி, கள்ளந்திரி பகுதிகளில் கள்ளழகர் மலைக்கு திரும்பும் விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.
அதன்படி கள்ளழகர் வருகையையொட்டி அப்பன்திருப்பதி, கள்ளந்திரி பகுதிகளிலுள்ள கிராமங்கள் விழாக்கோலம் பூண்டு
அந்த பகுதிகளில் உள்ள திருக்கண், மண்டபங்களில் நாடகம், கரகாட்டம், இன்னிசை கச்சேரி என பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
கள்ளழகர் மலைக்கு திரும்பும் விழா, இந்த பகுதிகளில் முக்கிய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
அழகருக்கு தொண்டு செய்து அடியார்களை பெருக்குவதற்காக ‘திருமாலை ஆண்டார் ‘என்ற பணிப்பிரிவை
ஏற்படுத்தி, அதன் தலைமைப் பொறுப்பில் சுந்தரத் தோளுடையார் என்ற அந்தணரை நியமித்திருக்கிறார் ராமானுஜர்!
தேவகுரு என்று அழைக்கப்பட்ட அந்தத் திருமலை ஆண்டார் தனது தளபதிகளாக கள்ளர் பள்ளர் பறையர் நாயுடு கோனார் வலையர் கவுண்டர்
உள்ளிட்ட பல சாதியாரை நியமித்து பதினெட்டுச் சமயத்தார் என்ற பெயரை அக் குழுவிற்குச் சூட்டியுள்ளார்!
திருமாலை ஆண்டார் பரம்பரை 23 தலைமுறைகள் தொடர்ந்திருக்கிறது! 24 ஆவது தேவகுரு 1977இல் காலமானார். அவருக்கு வாரிசில்லை. அவரோடு அந்தப் பணியும் பல்லக்கும் மரியாதையும், பதினெண் சமயத்தார் குழுவும் நின்றுபோயின
——————————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply