பிதாமஹஸ்யாபி பிதாமஹாய ப்ராசேதஸாதேசபலப்ரதாய
ஸ்ரீபாஷ்யகாரோத்தம தேசிகாய ஸ்ரீசைலபூர்ணாய நமோ நம: ஸ்தாத்–ஸ்ரீ பெரிய திருமலை நம்பியின் தனியன்
ஸ்ரீ மத் கிருஷ்ண ஸமாஹ்வாய நமோ யாமுன ஸூநவே
யத் கடாக்ஷைக லஷ்யணாம் ஸூலபஸ் ஸ்ரீ தரஸ் ஸதா
ஸ்ரீ வைதேஹீ ஸஹிதம் ஸூரத்ரும -தலே ஹைமே மஹா மாண்டபே
மத்யே புஷ்ப்பக மாசநே மணி மயே வீராசநே ஸம்ஸ்திதம்
அக்ரே வாசயதி பிரபஞ்சன ஸூதே தத்வம் முனிப்ய பரம்
வ்யாக்யாந்தம் பராதிபி பரிவ்ருதம் ராமம் பஜே ஸ்யாமளம்
வீர ஆசனத்தில் ஸ்ரீ பெருமாள் -ஸ்ரீ வாயு குமாரர் ஸ்ரீ ராமாயணம் சாதித்து அருள –
ஸ்ரீ பெருமாள் வியாக்யானம் சாதித்து அருளி -இதுவே நம் பூர்வர்கள் ஸ்ரீ குரு பரம்பரை மூலம் பெற்ற நிதி
——–
நாடிய பொருள் கை கூடும் ஞானமும் புகழும் உண்டாம்
வீடியல் வழியாதாக்கும் வேரி யங் கமலை நோக்கும்
நீடிய அரக்கர் சேதன நீறு பட்டுழிய வாகை
சூடிய சிலை இராமன் தோள் வலி கூறுவோர்க்கு
நன்மையையும் செல்வமும் நாளும் நல்குமே
திண்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ராம வென்ற இரண்டு எழுத்தினால்
ஆபதாம் அபஹர்தாரம் தாதாரம் ஸர்வ ஸம்பதாம்
லோகாபிராமம் ஸ்ரீ ராமம் பூயோ பூயோ நமாம்யஹம்
————-
ஸ்ரீ கூஜந்தம் ராம ராமேதி மதுரம் மதுராக்ஷரம்
ஆருஹ்ய கவிதா சாகாம் வந்தே வால்மீகி கோகிலம்
ஸ்ரீ வால்மீகேர் முனிஸிம்ஹஸ்ய கவிதா வனசாரிண:
ச்ருண்வன் ராமகதா நாதம் கோ ந யாதி பராங்கதிம்
ய: பிபன் ஸததம் ராம சரிதாம்ருத ஸாகரம்
அத்ருப்தஸ்தம் முனிம் வந்தே ப்ராசேதஸ மகல்மஷம்
கோஷ்பதீக்ருத வாராசிம் மசகீக்ருத ராக்ஷஸம்
ஸ்ரீ ராமாயண மஹாமாலா ரத்னம் வந்தே(அ) நிலாத்மஜம்
அஞ்ஜனா நந்தனம் வீரம் ஜானகீசோக நாசனம்
கபீச மக்ஷஹந்தாரம் வந்தே லங்கா பயங்கரம்
உல்லங்க்ய ஸிந்தோ: ஸலிலம் ய: சோகவஹ்னிம் ஜனகாத்மஜாயா:
ஆதாய தேனைவ ததாஹ லங்காம் நமாமி தம் ப்ராஞ்ஜலி ராஞ்சனேயம்8
ஆஞ்ஜனேய மதிபாடலாலனம் காஞ்சனாத்ரி கமனீய விக்ரஹம்
பாரிஜாத தருமூல வாஸினம் பாவயாமி பவமான நந்தனம்
யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம் தத்ர தத்ர க்ருத மஸ்தகாஞ்ஜலிம்
பாஷ்பவாரி பரிபூர்ணலோசனம் மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம்
மனோஜவம் மாருத துல்ய வேகம் ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம்
வாதாத்மஜம் வாநரயூத முக்யம் ஸ்ரீராமதூதம் சிரஸா நமாமி
புத்திர்பலம் யசோ தைர்யம் நிர்ப்பயத்வ மரோகதா
அஜாட்யம் வாக்படுத்வஞ்ச ஹனூமத் ஸ்மரணாத் பவேத்
க்யாத: ஸ்ரீராமதூத: பவனதனுபவ: பிங்கலாக்ஷ: சிகாவான்
ஸீதா சோகாபஹாரீ தசமுக விஜயீ லக்ஷ்மண: ப்ராணதாதா
ஆநேதா பேஷஜாத்ரேர் லவணஜலநிதேர் லங்கனே தீக்ஷிதோ ய:
வீர: ஸ்ரீமான் ஹனூமான் மம மனஸி வஸன் கார்யஸித்திம் தநோது
தூவரிக்ருத ஸீதார்த்தி: ப்ரகடீக்ருத ராம வைபவ ஸ்பூர்த்தி:
தாரித தசமுக கீர்த்தி: புரதோ மம பாது ஹனுமதோ மூர்த்தி:
ஸ்ரீ வால்மீகி கிரிஸம்பூதா ராமஸாகர காமினீ
புனாது புவனம் புண்யா ராமாயண மஹாநதீ
ஸ்ரீ வேதவேத்யே பரே பும்ஸி ஜாதே தசரதாத்மஜே
வேத: ப்ரசேதஸா தாஸீத் ஸாக்ஷாத் ராமாயணாத்மனா
வைதேஹீ ஸஹிதம் ஸுரத்ருமதலே ஹைமே மஹாமண்டபே
மத்த்யே புஷ்பகமாஸனே மணிமயே வீராஸனே ஸுஸ்திதம்
அக்ரே வாசயதி ப்ரபஞ்ஜன ஸுதே தத்வம் முனிப்ப்ய: பரம்
வ்யாக்க்யாந்தம் பரதாதிபி: பரிவ்ருதம் ராமம் பஜே ச்யாமளம்
நமோ(அ)ஸ்து ராமாய ஸலக்ஷ்மணாய
தேவ்யை ச தஸ்யை ஜனகாத்மஜாயை
நமோ(அ)ஸ்து ருத்ரேந்த்ர யமாநிலேப்ப்யோ
நமோ(அ)ஸ்து சந்த்ரார்க்க மருத்கணேப்ப்ய:
ஸுமுகஸ்ச ஏகதந்தஸ்ச கபிலோ கஜகர்ணக: |
லம்போதரஸ்ச விகட: விக்னராஜோ விநாயக: ||
தூம்ரகேது: கணாத்யக்ஷ: பாலசந்த்ரோ கஜானன: |
வக்ரதுண்ட: சூர்ப்பகர்ண: ஹேரம்ப: ஸ்கந்தபூர்வஜ: ||
————
வேத3 வேத்3யே பரே பும்ஸி ஜாதே த3ஸரதாத்மஜே |
வேத3 : ப்ராசேதஸா தா3ஸீத்3 ஸாக்ஷாத்3 ராமயணாத்மநா ||
வேதத்தினால் சூட்டப்படும் பரம்பொருள் பூமியிலே ஸ்ரீ ராமனாக அவதாரம் பண்ண உடனே,
வேதம், ஸ்ரீ வால்மீகி முனிவர் வழியாக ஸ்ரீ ராமாயணமாக வெளிவந்துவிட்டது
———
ஸ்ரீ ராமம் ரகு குல திலகம்
சிவ தனு சாக்ரிஹத ஸீதா ஹஸ்த கரம்
அங்குல்யா பரண ஸோபிதம்
சூடாமணி தர்சன கரம்
ஆஞ்சநேய ஆஸ்ரயம்
வைதேஹி மநோ ஹரம்
வானர ஸைன்ய ஸேவிதம்
சர்வ மங்கள கார்ய அநுகூலம்
ஸததம் ஸ்ரீ ராமசந்த்ர பாலயமாம்
—————-
தபஸ்வாத்யாய நிரதம் தபஸ்வி வாக் விதாம் வரம்
நாரதம் பரி பப்ரச்ச வால்மீகி முனி புங்கவம் –1-இஷ்டா தேவதா நமஸ்கார மங்கள ஸ்லோகம்
தாத்பர்யம்
உயர்ந்த தவமுடைய வால்மீகி பகவான் –
கர்ம யோகாதி அனுஷ்டானம் -வேத அத்யயன ஜபாதி நிஷ்டை -முதலியவைகளை யுடையவராய்
வேதார்த்த வித்துக்களில் உயர்ந்தவராய் -ஸகல வித்யைகளை அறிந்தவர்களும் சிறந்தவராய்
ஸரஸ்வதி புத்திரர்கள் ஆகிய அத்ரி மரீசி முதலியவர்களின் மேன்மை யுடையவராய்
முனி ஸ்ரேஷ்டராய் இருக்கிற நாரத மஹரிஷியைக் குறித்து பிரஸ்னம் பண்ணினார்-
தபோ நிரதம்’, ‘ஸ்வாத்யாய நிரதம்’, ‘வாக் விதாம்வரம்’ ‘முனிபுங்கவம்’, என்று
ஸ்ரீ நாரத மகரிஷிக்கு நாலு அடைமொழி கொடுத்து, இந்த ஸ்ரீ நாரத மகரிஷியிடம்,
ஸ்ரீ வால்மீகி பகவான் ஒரு விஷயத்தை கேட்கிறார் என்று ஆரம்பிக்கிறது.
தபோ நிரதம்’ – தபஸில் ஈடுபட்டவராய் இருக்க வேண்டும்.
‘ஸ்வாத்யாய நிரதம்’ – தனது படிப்பில் திரும்பத் திரும்ப மனசை செலுத்துவதில் விருப்பம் உள்ளவரை இருக்க வேண்டும்.
‘வாக் விதாம் வரம்’ – வாக்கிற்கு என்ன பிரயோஜனம்? பகவானை பற்றி பேசிக் கொண்டிருப்பது. அதைச் செய்து கொண்டிருப்பவர்.
‘முனி புங்கவம்’ – மௌனமாய் இருக்ககூடிய முனி புங்கவருக்குள் ஸ்ரேஷ்ட்டர்.
“தபசு, வேதவேதாந்தங்கள் இவைகளைப் பூரணமாக அடைந்தவரும், உபதேசிப்பவர்களுக்குள் மேலானவரும்,
முனி ஶ்ரேஷ்டருமான நாரத மஹரிஷியை, தவத்தோடுகூடிய வான்மீகி முனிவர் தெண்டம் சமர்ப்பித்து வினாவினார்.”
1) தபோநிரதம் :– தவத்தைப் பூரணமாக அடைந்தவர் என்றதினால் அவர் சர்வசக்தி வாய்ந்தவர் என்பது ஸூசகம்.
“யத்துஸ்தரம் யத்துராபம் யத்துர்கம் யச்சதுஷ்கரம்|
தத் ஸர்வம் தபஸாஸாத்யம் தபோஹி துரதிக்ரமம் ||”
“எது கடக்கமுடியாததோ, எது பெற முடியாததோ, எது செய்யமுடியாததோ அதெல்லாம் தவத்தால் சாதிக்கமுடியும்.
ஆகையால் தவத்தை வெல்வதரிது.”
“வேண்டிய வேண்டியாங் கெய்தலாற்செய்தவ மீண்டு முயலப் படும்.
கூற்றங் குதித்தலும் கைகூடு நோற்றலி னாற்ற றலைப்பட் டவர்க்கு” (திருக்குறள்) என்ற ஆதாரங்கள் நோக்கத்தக்கன.
2) ஸ்வாத்யாய நிரதம்:– வேதவேதாந்தங்களைப் பூர்ணமாக அடைந்தவர், என்றதினால்
நாரதர் சொல்வதெல்லாம் தருமத்தோடு பொருந்திய வசனம் என்பது ஸூசகம்.
3) வாக்விதாம்வரம் :– உபதேசிப்பவர்களுக்குள் மேலானவர், என்றதினால் சிறந்த போதனாசக்தி வாய்ந்தவரெனவும்,
வ்யாகரணம் முதலான சகல சாஸ்திரங்களையும் நன்றாக அறிந்தவரெனவும் பொருள்படும்.
4) முனி புங்கவம்:– முனிஶ்ரேஷ்டர் என்றதினால் இந்திரிய நிக்கிரகமுள்ளவர் என்பதும்,
பகவத்யானத்தோடு கூடியவரென்பதும், திரிகால வர்த்தமானங்களை அறியக்கூடியவரென்பதும் , ஸதா ஜபபரரென்பதும் ஸூசகம்.
5)நாரதம்:– நாரத மஹரிஷியை, என்றதினால், நாரம் – ஜ்ஞானம், அதைக் கொடுக்கக் கூடியவர் என்பதும்,
நாரம் – அஜ்ஞானம், அதை நிவர்த்தி செய்யக்கூடியவ ரென்பதும், த்ரிலோக ஸஞ்சாரியானபடியால்,
மூன்று லோகத்திலுள்ள வர்த்தமானங்களை அறிபவரென்பதும், பிரம்ம புத்திரரானபடியால் உத்தம குலத்தைச் சேர்ந்தவரென்பதும் ஸூசகம்.
ஆகவே, இந்த ஐந்து பதங்களினால், ஆசார்யன் பூர்ணமான தபஸை யுடையவராகவும்,
வேதவேதாந்தங்களையும் வ்யாகரணம் முதலான ஸகல ஶாஸ்திரங்களையும் உணர்ந்தவராகவும்,
பகவத் பக்தியுடன் அநவரத ஜபபரராகவும் சிஷ்யனுடைய அஜ்ஞானத்தைப் போக்கி, ஜ்ஞானத்தைக் கொடுத்துப்
பரமாத்ம ஸ்வரூபத்தை உபதேசிக்கவல்லவராகவும், ஜிதேந்திரியராகவும், உத்தம குலத்தவராகவுமிருக்கவேணும்
எனறு ஆசார்ய லக்ஷணம் சொல்லப்பட்டதாயிற்று.
“குஶப்தஸ் த்வந்தகாரஸ்யாத் ருகாரஸ்தந் நிவர்தக:|
அந்தகார நிரோதித்வாத் குருரித்யபி தீயதே||”
“கு என்பது அஜ்ஞானத்தையும், ரு என்பது அதன் நிவர்த்தியையும் சொல்லுகிற படியால்
மனதின் கண்ணுள்ள அஜ்ஞானமாகிற இருளை நீக்கி மெய்ஞ்ஞானமாகிற பிரகாசத்தைத் தருவதால் குரு வெனச் சாற்றப்படுகின்றனர்.
குலனருள் தெய்வங்கொள்கை மேன்மை
கலைபயில் தெளிவு கட்டுரை வண்மை
நிலமலை நிறைகோல் மலர் நிகர் மாட்சியும்
உலகியலறிவோ டுயர்குண மினையவும்
அமைபவன் நூலுரையாசிரியன்னே.” என்ற நன்னூல் இங்கு நோக்கத் தக்கது.
தப -என்று
பாபத்தைப் போக்கி ஊணை வாட்டி இந்திரியங்களை வசமாக்கிக் கொடுக்க வல்ல க்ருச்ரம் சந்த்ராயணம் முதலிய கர்மத்துக்கும்
யம நியம ஆஸன பிராணாயாம ப்ரத்யாஹார தாரண தியானங்களை அங்கங்களாக யுடைய ஸமாதி என்கிற யோகத்திற்கும்
வேதத்துக்கும்
பர ப்ரஹ்மத்திற்கும்
தபோ விசேஷமான ந்யாஸத்திற்கும் பெயர்
ஸ்வாத்யாயம் -என்று
வேதத்திற்கும் ஜெபத்திற்கும் பெயர்
வாக் என்று
வியாகரணம் சிஷை சந்தஸ் நிருத்தம் ஜ்யோதிஷம் கல்பம் என்ற ஆறு அங்கங்களும்
வித்யா சாமான்யத்திற்கும்
அந்த வந்த சமயத்துக்கு வேண்டும் அர்த்தங்களை போதிக்க வல்ல சப்தத்துக்கும்
ஸரஸ்வதிக்கும் பெயர்
முனி என்று
மனனம்-அதாவது த்யானம் பண்ணுகிறவர்களுக்குப் பெயர்
நார என்று
ப்ரஹ்மத்தையும்
அஞ்ஞானத்தையும் சொல்லும்
ஆக
தபஸ்வாத்யாய நிரதம் தபஸ்வி வாக் விதாம் வரம் நாரதம் — முனி புங்கவம்-என்கிற பதங்களினால்
ஆச்சார்யன்
கர்மயோக ஞானயோக பக்தி யோகங்களிலும் ப்ரபத்தியிலும் ஊற்றம் யுடையவனாய்
வேத வேதாங்களையும் அங்கங்களையும் நியாய மீமாம்ஸாதி ஸகல ஸாஸ்த்ரங்களையும் சம்ஸயம் விபர்யயம் அற உணர்ந்தவனாய்
அனவ்ரத ஜெப பரனாய்
ஸிஷ்யனுடைய சம்சயம் அறும் படி உபதேசிக்க வல்லனாய்
ப்ரஹ்ம வித் அக்ரேரராய்
அஞ்ஞானத்தைப் போக்கி ஞானத்தைக் கொடுத்து பரமாத்ம ஸ்வரூபத்தை உபதேசிக்க வல்லனாய்
ஜிதேந்த்ரியனாய்
ஸத் குல ப்ரஸூதனாய்
ஸ்ரவண மனன நிதித்யாஸன தத் பரனாய் இருக்க வேண்டும் என்று சொல்கிறது –
நாரதோ அஹம் மந ப்ராப்த -த்வத் தர்சன குதூஹலாத் பிரபவோ பகவத் பக்தா மாத்ருஸாம் ஸததம் த்விஜ
நாரதர் என்று சொல்லப்படும் அடியேன் உம்மைக் காணும் ஆசையினால் வந்தடைந்தேன்
ப்ராஹ்மண உத்தம -என்னைப்போல் உள்ளவர்களுக்கு பகவத் பக்தர்கள் எப்பொழுதும் பிரபுக்கள்
தும்புரு நாரதர் புகுந்தனர்
பகவத் பாகவத ஸந்தர்சன ப்ரணாம ஸல்லாபமே தபஸ்
தத் வித்தி ப்ரணிபாதேந பரி ப்ரஸ்நேந ஸேவயா
தபஸ்வாத்யாய நிரதம் –என்று காயிக ஸூத்தியையும்
வாக்விதாம் வரம் என்று வாக் ஸூத்தியையும்
முனி புங்கவம் என்று மனஸ் ஸூத்தியையும் சொல்லிற்று
——–
சிஷ்ய லக்ஷணம்
1) தபஸ்வீ: – என்றதினால் பகவத் ஸ்வரூபத்தை அறிய ஆவல்கொண்டவரென்பதும்,
பல விரதங்களை அனுஷ்டித்தவரென்பதும், ஶமதமாதி ஸம்பந்தங்களை அடைந்தவரென்பதும்,
ஜீவகாருண்யமுடையவரென்பதும், களங்கமற்ற இருதயமுடையவரென்பதும் ஸூசகம்.
“உற்றநோய் நோன்றலுயிர்க்குறுகண் செய்யாமை
யற்றே தவத்திற்குரு” (திருக்குறள்)
2) பரிபப்ரச்ச – என்றதினால் விதிவதுபஸந்ந: என்பது பொருள். அதாவது,
உபதேசம் பெற்றுக் கொள்ள, குருவைத் தேடிப்போய், தண்டம் ஸமர்ப்பித்து, விதி ப்ரகாரம் கேட்கவேண்டுமென்பது
தத்வித்தி ப்ரணிபாதேந பரிப்ரஶ்நேந ஸேவயா|
உபதேக்ஷ்யந்தி தே ஜ்ஞானம் ஜ்ஞாநிநஸ் தத்வதர்ஶிந: ||
“அந்த ஆத்ம ஜ்ஞானத்தை, குருவைத் தேடிப்போய், தண்டம் ஸமர்ப்பித்து, விதிப்ரகாரமான கேள்வியினாலும்,
ஶுஶ்ருக்ஷையினாலும் அறிந்துகொள்ளக் கடவாய். தத்வமறிந்த பண்டிதர்கள் உனக்கு ஜ்ஞானத்தை போதிப்பார்கள்.”
என்று அர்ஜுனனை நோக்கி அருளிச் செய்த ஸ்ரீகிருஷ்ண பகவானுடைய வசனம் இங்கு கவனிக்கத் தக்கது.
ஆகவே, தபஸ்வீ, பரிப்ரச்ச என்ற பதங்களினால் சிஷ்ய லக்ஷணம் சொல்லப்பட்டதாயிற்று.
ஸத்புத்திஸ் ஸாது ஸேவீ ஸமுசித சரிதஸ் தத்வ போதாபிலாஷீ|
ஶுஶ்ருஷுஸ் த்யக்தமாந: ப்ரணி பதந பர: ப்ரஶ்ந கால ப்ரதீக்ஷ:||
ஶாந்தோ தாந்தோ நஸூயுஸ் ஸரணமுபகதஸ் ஶாஸ்த்ர விஶ்வாஸஶாலி|
ஶிஷ்ய:ப்ராப்த: பரீக்ஷாங் க்ருதவி தபிமதம் தத்வதஸ் ஸிக்ஷணீய:
“நற்புத்தியுடன் ஸாது ஸேவை உடையவனாகி, நன்னடத்தை உடையவனும், உண்மை ஞானத்தை அறிவதில்
அபிலாஷை உடையவனும், பணிவிடைக்காரனும், மானாவமான மென்பதற்றவனும், ப்ரஶ்ந காலத்தை எதிர்பார்ப்பவனும்,
சாந்தனும், அஸூயை இல்லாதவனும், சரணாகதி யடைந்தவனும், சாஸ்திர விஶ்வாசமுடையவனுமே
சிஷ்யனாக அங்கீகரிக்கத் தகுந்தவன்” என்பது நோக்கத் தக்கது.
தபஸ்வீ-என்று சிஷ்ய லக்ஷணம் சொல்கிறது
அதாவது
பரமாத்ம ஞான சாதனமான உயர்ந்த தபஸ்ஸையும்
வேதத்தில் கர்ம காண்டங்களை பரிசீலித்து ஸ்வர்க்காதி ஷூத்ர பலன்களில் வைராக்யம் யுடையவனாய்
மோக்ஷத்தில் அபிருசி யுடையவனாய்
ஜிதேந்த்ரியனாய்
சாந்தனாய் –இருக்க வேண்டும் என்று சொல்கிறது
இதனால் ஆச்சார்யாத் தைவ வித்யா விதி தாஸாதிஷ்டம் ப்ரபாத் –என்று
சதாச்சார்யன் இடத்தில் நின்றும் நியம பூர்வகமாகக் கற்ற வித்யையே மோக்ஷ உபயோகியாம் என்னுமது வெளியிடப்பட்டது-
ஆச்சார்யன் உபதேசம் அவரது ஆச்சார்யருக்கு ப்ரீதிக்கு உறுப்பாக என்று மேல் மேல் ஸ்ரீ லஷ்மீ நாதன் பர்யந்தம் போகுமே
வால்மீகி பகவான் ப்ருகு வம்சத்தில் அவதரித்தவர். இவர் (வல்மீகம் = புற்று) புற்றிலிருந்து வெளி வந்ததினால்
வால்மீகி என்று பெயர். இவர்க்கு “ப்ராசேதஸர்” (அதாவது வருணனுடைய புத்திரர்) என்னும் பெயருண்டு.
இவர் ஓர் இடத்தில் சரியாமல் உடகார்ந்து மெய் மறந்து தபஸ்ஸு பண்ணிக் கொண்டு இருக்கையில் இவர் மேல் புற்று மூடிப் போய் விட்டது
வருண தேவன் மழை பொழிந்து அப் புற்றைக் கரைத்து விட அங்கு நின்றும் புறப்பட்டார்
ஆகவே வால்மீகி புற்றில் நின்றும் வெளிப்பட வருணன் காரணமானதால் ப்ராசேதனர் -வருண புத்ரன் என்றும் செல்லப்படுகிறார்
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply