ஸ்ரீ பாஷ்ய ஸார ஸார அம்ருதம் –பூர்வ-விஷய -ஸித்த த்விகம்

ஸ்ரீ பாஷ்யம்-மங்கள ஸ்லோஹம்-

இஷ்ட தேவதா ஸ்தோத்திரம் மங்களம். மங்கள ஆஸி – நமஸ்காரம் .

இதர தேவதா மங்கள ஸ்லோகம் ; சமுசித தேவதா தியானமாகும்.
சங்கீதத்துக்கு ஸரஸ்வதி , ஆயுர் வேதத்துக்கு தன்வந்திரி .
இஷ்ட தேவதையே சமுசித்த தேவதையாகும் போது , சமுசித்திஷ்ட தேவதா தியானமாகும்.

அகில புவந ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே!(1)
விநத விவித பூத விராத ரக்ஷைக தீக்க்ஷே |(2)
ஸ்ருதி சிரஸி விதீப்தே!(3) பிரஹ்மணி! (4) ஸ்ரீநிவாஸே !
பவது மம பரஸ்மிந் சேமுஷி பக்தி ரூபா ||

இஷ்ட தேவதையான ஸ்ரீநிவாஸனுக்குச் செய்யப்பட மங்கள ஸ்லோகம் இது.

———

இரண்டாவது மங்கள ச்லோஹம்-

பாராசர்ய வசஸ் ஸுதாம் (1)
உபநிஷத் துத்தாப்தி மத்யோ திருதாம் (2)
ஸம்சாராக்நி விதீபன வியபகத பிராணாத்ம சஞ்சீவனீம் (3) |
பூர்வாசார்ய ஸுரக்ஷிதாம் (4)
பகுமதிம் வியாஸாத தூரஸ்திதாம் (5)
அநீதாந்து நிஜாக்ஷரைஹி மனஸோ பௌமாஸ்து பிபந்வஹம் ||

பாராசார்யா வசஸ்துதாம்-வியாசர் -அமிருத ரூபமான வாக்கு-மரணம் ஜனனம் இல்லாத -அபாவம் தானே மோஷம்
பிபந்வஹம்-பிபந்து குடிக்க வேண்டும்-விசேஷணங்கள் மேலே சொல்லி

ஸ் பகவத் ராமானுஜர் வேதாந்த ஸங்க்ரஹம் -முதலில் திருவேம்கடமுடையான் சந்நிதியில் அருளி
யஸ் ஸ்ரீ சைல- இஷ்ட தேவதா-அவர் அங்கீகாரம் பெற்று இத்தை அருளி –அதன் அனுவர்த்தி ஸ்ரீ பாஷ்யம் –
பாதாராயண -பராசரர் புத்ரர் – பூமியில் உள்ள எல்லாரும் இந்த அம்ர்தத்தை பானம் செய்யட்டும்
பிபந்து -ஆசீர்வாதம் செய்கிறார்

———–

ப்ரபத்யே ப்ரணாவாகரம் பாஷ்யம் ரங்கமிவாபரம் –
ப்ரஸ்ய ப்ரஹ்மணோ யத்ர சேஷித்வம் ஸ்புடமீக்ஷ்யதே –

இது ஸுதர்ஸன ஸூரியினாலே அருளிச் செய்யப்பட்டது. ஸ்ரீரங்கவிமாநமான ப்ரணவாகார விமானத்தைப் போல்
ஸ்ரீபாஷ்யம் விளங்குகிறது என்கிறார்.

ப்ரஹ்மத்தின் சேஷித்வம் ஸ்பஷ்டமாகக் காணப்படும் -அபர ஸ்ரீ ரெங்க விமானம் போலே –
பிரணவ ஆகாரமாகவே பிரகாசிக்கிற ஸ்ரீ பாஷ்யத்தை சரணமாக வரிக்கிறேன்

ப்ரணவமாகிற ஓங்காரத்திலும்
ஸ்ரீ பாஷ்யத்திலும் பிரகாசிக்கும் பரமாத்மாவுடைய சேஷித்வம்
பிறரால் உண்டு பண்ணப்பட்டு இருக்கிற அதிசயத்தை -மேன்மையைத் தங்கி இருப்பது
ஸ்ரீ ரெங்கத்தில் பிரகாசிக்கும் சேஷித்வம் சேஷசாயித்வம் என்று கண்டு கொள்வது

திருமந்திரத்தில் பத த்ரயத்தாலே
ஜீவாத்மாக்களுடைய
அநந்யார்ஹ சேஷத்வம் -அநந்ய சரணத்வம் -அநந்ய போக்யத்வம் -ஆகிய -ஆகார த்ரயம்
ஸாப்தமாக ப்ரதிபாதிதம்
பரமாத்மாவின்
சேஷித்வ சரண்யத்வ ப்ராப்யத்வங்கள் ஆகிய ஆகார த்ரயம்
ஆர்த்தமாகக் கிடைக்கும்

—————–

ஸ்ரீ ப்ரஹ்மஸூத்ரமும் ஸ்ரீ திருவாய்மொழியும்

“புரா ஸூத்ரைர் வியாஸ: ஶ்ருதிஶதசஶிரோர்த்தம் க்ரதிதவாந்
விவவ்ரே தத் ஶ்ராவ்யம் வகுளதரதாமேத்ய ஸ புந: |
உபாவேதௌ க்ரந்தௌ கடயிதுமலம் யுக்திபிரஸௌ
புநர் ஜஜ்ஞே ராமாவரஜ இதி ஸ ப்ரஹ்மமுகுர: ||”

வேதாபஹாரிணம் தைத்யம் மீனரூபி நிராகரோத் |
ததர்தஹாரிணஸ்ஸர்வாந் வ்யாஸரூபி மஹேஶ்வர: ||

வேதங்களை அபஹரித்த பொழுது மீனாகத் திருவவதாரம் செய்து மீட்டருளின ஸர்வேச்வரனே,
அவ்வேதங்களுக்கு அபார்த்தங்களைச் சொன்ன பொழுது வ்யாஸராகத் திருவவதாரம் செய்து
உண்மையான அர்த்தங்களை நிலைநாட்டியருளினான் . என்பது இந்த ஶ்லோகத்தின் திரண்ட பொருள்.
அப்படி நிலைநாட்டியது சாரீரக மீமாம்ஸையான உத்தர மீமாம்ஸையைக் கொண்டேயாகும்.

அந்த வ்யாஸரே நம்மாழ்வாரகத் திருவவதாரம் பண்ணியருளி
திருவாய்மொழி மூலமாக சாரீரக மீமாம்ஸா ஶாஸ்த்ரத்தை விவரித்து அருளினார்.

பின்பு அவரே எம்பெருமானார் மூலம் இரண்டையும் ஸமன்வயப்படுத்தி அருளினார் – என்பது
கீழ் உதாஹரித்த *புரா ஸூத்ரைர் * என்கிற ஶ்லோகத்தின் அர்த்தமாகும்.
இதனை * பாஷ்யகாரர் இது கொண்டு ஸூத்ரவாக்யங்கள் ஒருங்கவிடுவர் * (65) என்று காட்டியருளினார்
ஆசார்ய ஹ்ருதயத்திலே அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்.

—————

சாரீரக மீமாம்ஸா ஸாஸ்த்ரமான ப்ரஹ்ம ஸூத்ரத்தில்
முதல் இரண்டு அத்தியாயங்களில் பர ப்ரஹ்மம் ஜகத் ஏக காரணமாயும்
சேதன அசேதன விலக்ஷணமாயும் ஸர்வ சேஷியாகவும் –அறுதியிட்டார்-இதுவே பிரணவத்தின் அர்த்தம்
மூன்றாவது அத்தியாயத்தில் ப்ரஹ்மமே உபாயம் என்று அறுதி இட்டார் -இதுவே நமஸ்ஸின் அர்த்தம்
நான்காம் அத்தியாயத்தில் பர ப்ரஹ்மம் ப்ராப்யம் என்று அறுதியிட்டார் -இதுவே த்ருதீய பதார்த்தம்

காரணத்வமும்
அபாத்யத்வமும்
உபாயத்வமும்
உபேயத்வமும்
ஆகிய நான்குமே அத்யாய சதுஷ்ட்யார்த்தம்

காரணந்து த்யேயம் —ஜகத் காரண வஸ்துவே த்யானிக்கப்பட வேண்டியது என்பதே உபநிஷத்
பக்தியாகவும் ப்ரபத்தியாகவும் பர ப்ரஹ்மத்தின் இடமே செய்ய வேண்டியது என்பதே வேதாந்த ஸித்தம்
தன்னோடு ஒத்த மற்ற பத்த ஜீவனைப் பற்றுவது ஓட்டை ஓட்டத்தோடு ஒழுகல் ஓடமாம் அத்தனை அன்றோ

தாபத் த்ரயா துரைஸ் அம்ருதத்வாய ஸ ஏவ ஜிஞ்ஞாஸ்ய

யோ ப்ரஹ்மாணம் விதாதா பூர்வம் முமுஷுர் வை சரணம் அஹம் ப்ரபத்யே –

இப்படி உள்ள வேதாந்த கோஷ சித்தாந்த ஸ்தாபனமே வியாசர் அருளிச் செய்த ப்ரஹ்ம ஸூத்ரம்

ஸுத்ரீ சங்க்யா ஸூபாஸீ அதி க்ருதி கணநா சிந்மயீ ப்ரஹ்ம காண்டே –அதிகரண ஸாரா வளீ -என்கிறபடியே
545 ஸூத்ரங்கள் –156-அதிகரணங்கள் –16 பாதங்கள் –4 அத்யாயங்கள்
ஜைமினி அருளிச் செய்த 12 அத்தியாயங்கள் கொண்ட கர்ம மீமாம்ஸை யில் விசாரித்த கர்மாக் களுக்கு ஆராத்யமாயும்
மேல் 4 அத்தியாயங்கள் கொண்ட தேவதா மீமாம்ஸை யில் விசாரித்த தேவதைகளுக்கு அந்தராத்ம பூதமாயும்
உள்ள ப்ரஹ்மத்தை இந்த 4 அத்யாயங்களால் விசாரித்து நிஷ்கர்ஷிக்கிறார்
ஆக ஸர்வ கர்ம ஸமாராத்யம்
ஸர்வ தேவதாந்த்ர அந்தர் பூதம்
பர ப்ரஹ்ம வேதாந்த வேத்யம் –என்பதே வேத வ்யாஸருடைய ஸித்தாந்தம்

அர்த்தைகத்வாத் ஏகம் வாக்யம் ஸ ஆகாங்க்ஷம் சேத் – என்கிற பூர்வ மீமாம்ஸா சாஸ்த்ர ஸூத்ரத்தின் படி
ஏகார்த்திக ப்ரதிபாத்யம் -ஒரே ஸாஸ்த்ரம்
பூர்வ கண்ட யுக்த கர்மங்கள் ஆராதன கருமங்கள்
ஆராத்ய வஸ்து என்னும் ஆகாங்க்ஷம் வர அதுக்கு சாந்தி உத்தர காண்டமாகிய உபநிஷத் ப்ரதிபாத்யமாகிற பர ப்ரஹ்மம்
கர்ம அங்க கம் ஞானம் உபாயம்
கர்ம ஞானங்களுக்கு அங்க அங்கி பாவம் சமுச்சயம்

வித்யாம் ச அவித்யாம் ச யஸ் தத் வேத உபயம் ஸஹ
அவித்யயா ம்ருத்யம் தீர்த்வா வித்யயா அம்ருதம் அஸ் நுதே –உபநிஷத்

ஆனால் அத்வைதிகள் இந்த வாக்யத்துக்கு வியாக்யானம்
கர்ம ஞானங்கள் பரஸ்பர வ்ருத்தங்கள்
கர்மம் -பேத அவலம்பி
ஞானம் -அபேத அவலம்பி
ஆகவே இவற்றுக்கு அனுஷ்டானத்தில் ஸாஹித்யம் -ஒரு சேர இருக்கை -பொருந்தாது
ஆயினும் ஞாத்வயத்வே ஸாஹித்யம் பொருந்தும்
உபாதேயத்வேந ஞாதவ்யம் -ஞானம்
த்யாஜ்யத்வேந ஞாதவ்யம் -கர்மம்

இந்த வியாக்யானம் அயுக்தம் என்று ஸ்ரீ பாஷ்யகாரர் திரு உள்ளம்
கர்மங்கள் கர்தவ்யங்களாக வேத விகிதங்கள் என்பதால் த்யாஜ்யம் அன்று

மேலும் இவ்வாக்கியத்தில் உள்ள தீர்த்வா -என்ற பதத்துக்கு அடைந்து என்று பொருள் கூறுவது அப்ரஸித்தி தோஷ பராஹதம்
ம்ருத்யும் தீர்த்வா -என்கிற இடத்தில் ஸ்த்தித சேத் என்று இரண்டு பதங்களைச் சேர்த்து
வியாக்யானிக்கிற படியால் அத்யாஹார தோஷ ப்ரசங்கமும் உண்டாம்–ஆகையால் அத்வைதி வியாக்யானம் அஸங்கதம்

மேற் கூறிய வாக்யத்துக்கு யாதவ ப்ரகாசனின் வியாக்யானம்
ஞான கர்மாக்கள் சம பிரதான உபாயங்கள் -உபாயமும் இரண்டு -ஞானமும் கர்மமும்
உபேயமும் இரண்டு -அநிஷ்ட நிவ்ருத்தியும் இஷ்ட பிராப்தியும்
அநிஷ்ட நிவ்ருத்தி ரூப பலத்துக்கு கர்மம் உபாயம்
இஷ்ட பிராப்தி ரூப பலத்துக்கு ஞானம் உபாயம்
சாதன ஸாத்ய த்வித்வ அங்கீ காரேண பூர்வ உத்தர வாக்யங்களுக்கு அர்த்தம் கூறுவது யுக்தம் என்பர்

இந்த வியாக்யானமும் அயுக்தம் என்பதே பாஷ்யகாரர் திரு உள்ளம்
ஞானம் ஒன்றே ஏக உபாயம்
தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி நான்ய பந்தா அயனாய விதயதே -என்பதால் உபாயம் ஞானம் ஒன்றே
அநிஷ்ட நிவ்ருத்தி பலமும் ஞான ஸாத்யமே
சேது பங்க ஸ்ரோத ப்ர ஸ்ருதி நியாயத்தாலே இஷ்ட பிராப்தி தன்னடையே ஏற்படும்

ஆக அங்க அங்கி பாவேந ஸாஹித்யமே -ஆதரணீயம்

பாஸ்கரனும் இத்தை ஆதரித்தாலும்
அவன் கர்மத்தை ஞான உத்பாகத்வேந அங்கம் என்று அங்கீ கரியாமல்
உத்பன்ன ஞானத்துக்கு அனுக்ராஹகம் -என்றான்

கர்மம் ஞான உத்பாதகம் -உத்பன்ன ஞான வர்த்தகம் -என்பதே பாஷ்யகாரர் திரு உள்ளம்
ஆகவே ஏக ஸாஸ்த்ரம்

சாரீரிக மீமாம்ஸ சாஸ்திரத்தில் நான்கு அத்தியாயங்களும்
விஷய த்விகம் -ஸித்த த்விகம் என்றும்
விஷயீ த்விகம் -ஸாத்ய த்விகம் என்றும் உண்டு
மூன்றாம் அத்தியாயத்தில் பக்தி ரூப ஞானம் விஷயி
நான்காம் அத்தியாயத்தில் ப்ரஹ்ம அனுபவ ஸ்வரூப ஞானம் விஷயி ஆகும்

வேதார்த்த விசாரம் -ஒரே ஸாஸ்த்ரம்
4 அத்தியாயங்கள் –
1-சமன்வய -காரணத்வ
2-அவிரோதித்தவ -அபாத்யத்வ
3-உபாயத்வ
4-பலத்தவ –அதிகாரங்கள் நான்கும்

16 பாதங்கள்
1-ஜீவ மிக அஸ்பஷ்ட மாயும்
2-ஜீவ அஸ்பஷ்ட மாயும்
3-ஜீவ ஸ்பஷ்ட மாயும்
4-ஜீவ ஸ்பஷ்ட மாயும்
5-ஸாங்க்யாதி ஸ்ம்ருதி மூலமான தோஷ பரிஹாரம் காட்டுவது
6-ஸாங்க்யாதி பக்ஷங்கள் கண்டனம்
7-ஆகாசாதி த்ரவ்யங்களுக்கு ஸ்வரூப பரிணாம ரூபமான கார்யத்வம் கூறுவது
ஆத்மாக்களுக்கு ஸ்வ பாவ அந்யதா பாவ ரூப கார்யத்வம் கூறுவது
8-ஜீவ உபகரணமான இந்திரியாதிகளின் உத்பத்தி க்ரமம் கூறப்படுவது
9-வைராக்ய நிமித்தமாக புருஷனுக்கு ஏற்படும் தோஷங்கள்
10-ப்ராப்யத்தில் ஆசை தோன்ற ப்ரஹ்மத்துக்கு நிர்த்தோஷமும் கல்யாணைக தானத்வமும்
11-பகவானிடம் செய்யும் பக்தியின் பிரகாரங்கள்
12–பக்திக்கு வர்ணாஸ்ரம தர்மங்களை அங்கங்களாக விதித்தல்
13-உபாஸனா ஸ்வரூபமும் அநுஷ்டான க்ரமமும் விளக்கப்படுத்தல் -வித்யா மகிமையும் கூறுதல்
14-ஜீவன் உடலை விட்டுப் புறப்படுதல் -உத் க்ரமணம்
15-ஜீவனின் மோக்ஷ கதி சிந்தனம்
16-பிராப்தி -பலம் -மோக்ஷம் –

ஸ்ரஷ்டா தேஹீ ஸ்வநிஷ்ட: நிரவதிகமஹிமாபாஸ்தபாத: ஶ்ரிதாப்த:
காத்மாதே: இந்த்ரியாதே: உசிதஜநநக்ருத்ஸம்ஸ்ருதௌ தந்த்ரவாஹீ |
நிர்த்தோஷத்வாதிரம்ய: பஹுபஜநபதம் ஸ்வார்ஹகர்மப்ரஸாத்ய:
பாபச்சித் ப்ரஹ்மநாடீகதிக்ருததிவஹந் ஸாம்யதஶ்ச அத்ரவேத்ய: || (19)

ஸ்ரஷ்டா – உலகைப் படைப்பவன்(1-1),
தேஹீ – தன்னையொழிந்த அனைத்தையும் தனக்குச் சரீரமாகக் கொண்டவன் (1-2);
ஸ்வநிஷ்ட: – -அந்நிய ஆதரேண–தன்னையே ஆச்ரயமாகக் கொண்டவன் (1-3);
நிரவதி மஹிமா – எல்லையற்ற பெருமைகளை உடையவன் (1-4);
அபாதஸப்தபாத: – ஸாங்க்யாதி ஸ்ம்ருதிகளால் கலக்கமுடியாதவன் (2-1);
ச்ரிதாப்த: – பஞ்ச கால பராயணர்க்கு ஆப்தன் –அண்டியவர்களுக்கு நண்பன் (2-2);
காத்மாதே: உசித ஜநந க்ருத் (2-3) –ஆகாசம் ஆத்மா முதலியவற்றினுடையவும் தக்கபடி படைப்பவன் –அசேதன ஸ்வரூப விகார -சேதன ஸ்வரூப ஸ்வ பாவ ஜனன கர்த்தா

இந்திரியாதே: உசித ஜநந க்ருத் (2-4)- இந்த்ரியம் முதலியவற்றினுடையவும் தக்கபடி படைப்பவன்;-

ஸம்ஸ்ருதௌ தந்த்ரவாஹீ – ஜாக்ரத் ஸ்வப்ந ஸுஷூப்தி மூர்ச்சா மரணம் ஆகியவைகளை நிர்வஹிப்பவன் (3-1);

நிர்தோஷத்வாதி ரம்ய: (3-2) – தோஷங்கள் தட்டாதவன் -ரம்யன்;அகில ஹேய ப்ரத்ய நீகன் கல்யாண குணைகநாதன்

பஹுபஜனபதம் (3-3) –பல உபாஸநத்திற்கு இருப்பிடமாக அறியத் தக்கவன்;

ஸ்வார்ஹ கர்ம ப்ரஸாத்ய: (3-4) – ஜீவர்கள் தம் தம் ஆச்ரமங்களுடன் அநுஷ்டிக்கப்படும் கர்மாக்களால் ஸந்தோஷப்படுத்தப்படுபவன்;

வர்ணாஸ்ரம ஸாஸ்வதா புருஷேண பர புமான் விஷ்ணுர் ஆராத்யதே பந்தா நரந்ய தத் தோஷ காரக -ஸ்ரீ விஷ்ணு புராணம்

பாபச்சித் (4-1) – பாபங்களை நீக்குபவன்;-உத்தர பூர்வ பாபங்களில் அஸ்லேஷ விஸ்லேஷ கர்த்தா

ப்ரஹ்மநாடீகதிக்ருத் (4-2)- மோக்ஷத்தை அடைவிப்பவன்;

இதுவரை ஸ்தூல தேஹ விஸிஷ்டனுக்கு பலம்
மேல் ஸூஷ்ம தேஹ விஸிஷ்ட னுக்கு பலம்

அதிவஹந் (4-3) – அழைத்துச் செல்பவன்;

ஸாம்யத: (4-4)- தனக்கு ஸமமான யோகத்தைத் தருபவன்.-நிரஞ்சன பரமம் ஸாம்யம் உபைதி

இங்கு ஸாம்யா பத்தி சொல்லி இருந்தாலும் —பரிபூர்ண ப்ரஹ்ம அனுபவமும்
அனுபவ ஜெனித ப்ரீதியும்
ப்ரீதி காரித ஸர்வ வித ஸர்வ தேச ஸர்வ கால ஸர்வ அவஸ்தா அசேஷ கைங்கர்யமும் -பரம புருஷார்த்தம்

இப்படி மொத்தம் 16 திருக் குணங்கள் சொல்லப்பட்டுள்ளன.

* வேத வேத்ய * ந்யாயத்தால் வேத்யனான எம்பெருமான் பெருமாளாக (ஸ்ரீ ராமபிரானாக) திருவவதாரம் செய்தருளின பொழுது,
வேதமும் ஸ்ரீராமாயணமாக அவதாரம் செய்தது.
ஸ்ரீராமாயணமும் பெருமாளுக்கு * குணவாந் கச்ச வீர்யவாந் * என்று 16 திருக்குணங்களே இருப்பதாகப் ப்ரதிபாதித்தது!

—————

முதல் அத்யாயம் –11–6–10-8-அதிகரணங்கள் —-35–அதிகரணங்கள்
இரண்டாம் அத்யாயம் –10–8–7–8- அதிகரணங்கள் -33—அதிகரணங்கள்
மூன்றாம் அத்யாயம் –6–8–26–15–அதிகரணங்கள் —55–அதிகரணங்கள்
நான்காம் அத்யாயம் –11-11-5-6-அதிகாரணங்கள் -33–அதிகரணங்கள்

முதல் பாதத்தில் முதல் நான்கு அதிகரணங்களும் ஸாஸ்த்ர உபோத்காதம்
முதல் அதிகரணம் மட்டுமே ஸாஸ்த்ர உபோத்காதம் என்றும் சொல்வர்
முதல் அத்தியாயத்தில் உள்ள 35 அதிகரணங்களில்
முதல் அதிகரணத்தால் ப்ரஹ்ம விசார கர்த்தவ்யதா ஸ்தாபன மாத்ர பரம்
இறுதியில் ஸர்வ வியாக்யான அதிகரணம் -பூர்வ யுக்த அந்ய ரயாதிதேச பரம்
இடையே -26 வது அதிகரணம் அப ஸூத்ராதிகரணம்
ஆக இந்த மூன்று ஒழிந்த மீதி 32 அதிகரணங்களில் ஸ்ரீ வேத வியாஸர் பரமாத்மாவை
சேதன அசேதன விலக்ஷணனாயும்
ஸர்வஞ்ஞனாயும்
ஸர்வ ஸக்தனாயும்
ஜகத்தான காரியத்துக்கு அபி பின்ன நிமித்த உபாதாந காரண பூதனாயும்
அறுதியிட்டுள்ளார்

முதல் பாதத்தில் வ்யாஸர் உபோத்காதத்தில்
ப்ரஹ்மம் சேதன அசேதன விலக்ஷணம்–ஜகத் ஏக காரணம் -விலக்ஷண புருஷ விசேஷம் – என்றும்
ஈஷத் அதிகரணத்தில் -அசேதன வைலக்ஷண்யமும்
ஆனந்த மய அதிகரணத்தில் -சேதன வைலக்ஷண்யமும் ஸ்பஷ்டம்

இரண்டாம் பாதத்தில் 6 அதிகரணங்களாலும்
பரமாத்மா ஜகச் சரீரம் என்றும்

மூன்றாம் பாதத்தில்
இவனே ஸர்வாத்மா என்றும் அறுதியிட்டார்
இப்பாதத்தில் அவனுடைய ஸர்வாத்மத்வம் -ஸங்கித தோஷ நிராச முகேந ஸம்யக் ஸ்தாபிதம்

ஸர்வம் ப்ரஹ்ம கார்யம்
ப்ரஹ்ம சரீரம்
ப்ரஹ்மாத்மகம்
என்று மூன்று பாதங்களில் தேறிய பொருள்கள்

அப்படி அந்வய முகேந அறிவித்த அர்த்தத்தை வ்யதிரேக முகேந அறுதியிடுகிறார் நான்காம் பாதத்தால்
அதாவது
அதத் காரியமாய் -அதச் சரீரமாய் –அத தாத்மகமாய் –ஒரு வஸ்துவும் கிடையாது என்பதே நான்காம் பாதத்தில் தேறின பொருள்
மூன்று பாதங்களில் ஞான அனுகுணமாக அறுதியிட்ட அர்த்தத்தை
நான்காம் பாதத்தில் வைராக்ய அனுகுணமாக ஸ்தாபிக்கிறார்

நம்மாழ்வாரும்
நம் கண்ணன் கண் என்றும்
அல்லது இல்லை ஓர் கண்ணே -என்றும் பரத்வத்தை ஸ்தாபித்து அருளினார்
இத்தால் ஞானத்தில் காட்டில் வைராக்யத்துக்கு உண்டான ப்ராதான்யம் சொல்லுகிறது –

திண்ணன் வீடு முதல் முழுதும்ஆய்
எண்ணின் மீதியன் எம்பெருமான்
மண்ணும் விண்ணும் எல்லாம் உடன்உண்டநம்
கண்ணன் கண்அல்லது இல்லைஓர் கண்ணே.–2-2-1-

நம் கண்ணன் கண்’ என்கையாலே விதிமுகத்தால் பரத்துவமும், ‘அல்லது இல்லை’ என்கையாலே மறைமுகத்தாலே பரத்துவமும் அருளிச்செய்தார்.

முதல் பாதம் –அஸ்பஷ்ட தர ஜீவாதி லிங்க பாதம்
இரண்டாம் பாதம் –அஸ்பஷ்ட ஜீவாதி லிங்க பாதம்
மூன்றாம் பாதம்–ஸ்பஷ்ட ஜீவாதி லிங்க பாதம்
நான்காம் பாதம் –ஸ்பஷ்ட தர ஜீவாதி லிங்க பாதம்

முதல் பாதம் -அயோக வ்யவச்சேத பரம் –ப்ரஹ்மதுக்கு ஜகத் காரண ஸம்பந்தம் உள்ளது என்று நிரூபணம் -அர்ஜுனன் வில்லாளி போல்
மற்ற மூன்று பாதங்களும் -பாத த்ரயமும் -அந்ய யோக வ்யவச்சேத பரம் -ப்ரஹ்மம் மட்டுமே ஜகத் காரணம் என்று நிரூபணம் –அர்ஜுனன் வில்லாளி போல்
ப்ரஹ்ம லக்ஷணமான ஜகத் காரணத்வத்துக்கு அஸம்பவ சங்கா பரிஹார பரம்
ப்ரஹ்மம் ஆகிற லஷ்யமே இல்லை -ஆகையால் லக்ஷணம் எப்படிப் பொருந்தும் என்ற
லஷ்ய அஸம்பவ ப்ரயுக்த லக்ஷண அஸம்பவ சங்கை ஏற்பட
அதற்குப் பரிஹாரமாக –சேதன அசேதன விலக்ஷணமான ப்ரஹ்மமான லஷ்யத்தை முதல் பாதத்தில் ஸ்தாபித்து
காரணத்வமாகிற லக்ஷணத்துக்கு ப்ரஹ்மத்தில் ஸத் பாவத்தை ஸ்தாபிக்கிறார் ஸ்ரீ வேத வியாசர்

ப்ரஹ்மமும் காரணம் ஆகட்டும் -மற்ற ஒன்றும் காரணமாக அமையட்டும் என்று
காரணத்வ ரூப லக்ஷணத்திற்கு அந்யத்ர -லஷ்யமான ப்ரஹ்மத்தில் காட்டில் – மற்ற ஒன்றிலே வியாப்தி என்று அதி வியாப்தி சங்கை ஏற்பட
ஸ்ரீ வேத வ்யாஸர் மேலே பாத த்ரயத்தால் ப்ரஹ்ம பின்னம் காரணம் அல்ல -என்று சங்கா பரிஹாரம் செய்கிறார்

மற்றவற்றுக்கு காரணத்வ ஸம்பந்தம் அறுத்தல் -அந்ய யோக வ்யவச்சேதம்
ப்ரஹ்ம பின்னம் ஜகத் காரணம் அல்ல என்று நிரூபணம்
அதி வியாப்தி சங்கா பரிஹார பரம் பாத த்ரயத்திலும் என்றபடி –

———–

ஜிஜ்ஞாச அதிகரணம்
அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாச
அத -அதற்குப் பிறகு -கர்மம் விசாரம் செய்து முடிந்த பிறகு
அத -கர்ம விசாரம் முடிந்த காரணத்தினாலேயே
ப்ரஹ்ம ஜிஜ்ஞாச-இச்சைக்கு இலக்கான ப்ரஹ்ம விசாரம் செய்யத் தக்கது

கர்மங்களின் அல்ப அஸ்த்ர பலன்களில் நசை ஒழிந்து மோஷ புருஷார்த்தம் விரும்புவர்கள் ஆதலால்
அந்த ப்ரஹ்மத்தின் ஸ்வரூபம் இப்படிப் பட்டது-அதனை பெற உபாயம் இன்னது-பெற்று அனுபவிக்கும் பலன் இப்படிப் பட்டது

சாதன சம்பத்தியின் ஆனந்தரயமே அத சப்தார்தம் என்பர் சங்கரர் -இத்தை மறுத்து ஸ்ரீ பாஷ்யம்
ப்ரஹ்மத்தின் ஸ்வரூபம் பற்றியும் கூறுவதை மறுக்க வேண்டுமே

லகு பூர்வ பஷம்
கர்ம மீமாம்சை -அர்த்த வாத அதிகரணம்
ஆம்நா யஸ்ய க்ரியார்த்தத்வாத்
ஆநர்த்தக்யம் அததர்த்தாநாம்
தஸ்மாத் அநித்யமுச்யதே
வாயவ்ய்ம் ஸ்வேத மால பேத பூதிகாம -கருமம் கர்தவ்யமாக சொல்லும் வேத வாக்கியம்

அடுத்த வாக்கியம் வாயுர்வை ஷேபிஷ்டா தேவதா -முன் சொன்ன வேத வாக்ய ஆராத்யமான தேவதை வாயு வின் பெருமையை சொல்லும் வாக்கியம்
சீக்கிரமாக பலன் அளிக்க வல்ல தேவதை–இப்படிப் பட்ட வாக்கியம் அர்த்த வாத வாக்கியம்
விதி வாக்யங்கள் இல்லை
விதி நாது ஏக வாக்யத்வாத் ஸ்துத்யர்த்தேன விதீ நாமஸ்யு -என்ற சூத்ரம் பரிகாரம்
விதி வாக்யதுடன் ஏக வாக்யமாகக் கொண்டு பிராமாண்யம் பெறத் தட்டில்லை

சக்தி கிரஹணம்-சிறுவர்கள் கேட்டு அறிவது
ஆநய
காம் நய
அஸ்வம் ஆநய
எல்லா பதங்களும் யத் கிஞ்சித் கர்த்தவ்யார்த்த பரங்களே
கார்ய பரங்க ளான வாக்யங்களுக்கு பிரமாண்யம் உண்டு

ஏவஞ்ச கார்ய ரூபம் இல்லாத பர ப்ரஹ்மத்தின் இடத்தில் வேதாந்த வாக்யங்களுக்கு தாத்பர்யம் இருக்க முடியாமையாலே
வேதாந்த விசார ரூபமான ப்ரஹ்ம விசார சாஸ்திரம் ஆரம்பிக்கத் தக்கது அன்று -பூர்வ பஷம் ப்ராப்தம்

இனி பூர்வ சித்தாந்தம்
விருத்த வ்யவஹாரத்தினாலேயே சிறுவர் களுக்கு முதல் வியுத்பத்தி உண்டாகிறது என்பது தவறு
இதோ சந்தரன் இதோ கிளி இதோ குதிரை இதோ மாமா காட்டி பூர்வ ஜன்ம வாசனையாலே
பதங்களுக்கும் அர்த்தங்களுக்கும் உள்ள சம்பந்தம்
ஒரு கார்யத்திலும் அன்வயியாத வஸ்துவிலேயே சக்தி கிரஹணம் உண்டாகின்றது என்று மூதலிக்கப் பட்டது

கார்ய பரமான வாக்யத்தில் இருந்து தான் சக்தி கிரஹணம் உண்டாகிறது என்பதும் தவறு
தேவ தத்தா உனக்கு பிள்ளை பிறந்தது
ப்ரபாகரர்கள் சகல பதங்களும் கார்யார்த்த பரங்கள் என்று கூறுவது உக்தி அற்றது
சித்த பரமான வாக்யத்தில் இருந்தும் சக்தி கிரஹணம் உண்டாகும்
கர்ம விசாரம் செய்த அளவிலே கர்ம பலன்கள் அஸ்திரம் என்று உணர்ந்து
கர்ம விசார இச்சை தொலைந்து
கர்ம விசார இச்சையே ப்ரஹ்ம விசார இச்சைக்கு விரோதியாக இருந்ததால்
இந்த பிரதி பந்தம் தொலையவே
ப்ரஹ்ம விசாரத்தில் இச்சையும்
அதில் பிரவ்ருத்தியும் அடுத்த படியாக உண்டாகிறது
எனவே ப்ரஹ்ம விசாரத்தை குறித்து
கர்ம விசாரம் நியமேன அபேஷிதம் என்றது ஆகிறது

————————————————————————————

இரண்டாவது –ஜனமாத்யதிகரணம்
சூத்ரம் ஜன்மாத் யஸ்ய யத
ஜென்மாதி –அஸ்ய -யத மூன்று பதங்கள்
ஜென்மாதி உத்பத்தி ஸ்திதி பிரளயங்கள்
அஸ்ய -கண்ணால் காணப்படும் இந்த சேதன மிஸ்ரமான பிரபஞ்சத்துக்கு
யத -எந்த வஸ்து வின் இடத்தின் இருந்து ஆகின்றனவோ அதுவே பர ப்ரஹ்மம்

தைத்ரியம் பிருகு வல்லி –
யதோ வா இமானி பூதானி ஜாயந்தே -யேன ஜாதானி ஜீவநதி -யத் பிரத்யந்த்யபி சம்விசந்தி தத் விஜிஞ்ஞாச ஸ்வ தத் ப்ரஹ்ம
யதோவா இமானி பூதானி யத் பிரத்யந்த்யபி சம்விசந்தி தத் விஜிஜ்ஞா சஸ்வ தத் ப்ரஹ்மேதி
கார்ணத்வ ரூபமான லஷணம்

பூர்வ பஷம்
வ்யாவர்த்தக லஷணங்கள் மூன்று ப்ரஹ்மம்

சித்தாந்தம்
தேவ தத்தன் கறுத்து பருத்து யுவாவாயும் செந்தாமரைக் கண்ணன் ஆயும்
யுவா நீலோ வாமன பங்குச்ச தேவதத்த –விசேஷணம் உப லஷணம் இவை
விருத்த தர்மங்கள் கால பேதத்தால் ஒரே வ்யக்தி இடம் இருக்கக் குறை இல்லையே

லோ வ்ருஷப
யுவா நீலோ வாமன பங்குச்ச தே
நீல வஸ்த்ர தாரீ ஸ்வேதா வஸ்த்ர தாரீ தேவ தத்த –கால விசேஷத்தால்
உழவன் விதைத்து பயிர் செய்து அறுப்பானே

—————————————————————————————–

மூன்றாவது அதிகரணம்
சாஸ்திர யோநித்வாத்
யோனி காரணம்
பிரத்யஷம் அனுமானம் கொண்டு அறிய முடியாத
அப்பஷோ வாயு பஷ-தீர்த்தம் ஒன்றையே குடிப்பவன்-வாயுவை மாதரம் பஷிப்பவன் போலே
சாஸ்திரம் ஒன்றையே பிரமாணமாக கொண்ட படியாலே சாஸ்திரம் ஏவ யோனி

அப்ராப்தே ஹி சாஸ்திரம் அர்த்தவித்–பர ப்ரஹ்மம் அனுமானத்தால் சித்திக்க கூடியதாக இருப்பதால் அனுமானம் ஈஸ்வர சதானத்தில் சக்தி உடையது அன்று–வேதாந்த சாஸ்திரமே பிரபல பிரமாணம்
இங்கு சித்தாந்தம்
விஸ்வா மித்ரர் -தவ வலிமையால் சிருஷ்டி -அந்யமிந்த்ரம் கரிஷ்யாமி –
ஆகையால் சாஸ்திரமே பிரபல பிரமாணம்-

சாஸ்திர யோநித்வாத்
யஸ்ய தத் -சாஸ்திர யோனி -தஸ்ய பாவ -சாஸ்திர யோநித்வம் -தஸ்மாத் சாஸ்திர யோநித்வாத் -சாஸ்திரம் ஒன்றையே
பிரமாணமாக கொண்டது ஆகையினால் வேதாந்த சாஸ்த்ரத்தினாலே ப்ரஹ்ம விசாரம் செய்ய வேணும் என்றதாயிற்று

இனி மூன்றாவது அதிகரணம் -சாஸ்திர யோநித்வா அதிகரணம்
ஸூத்த்ரம் -சாஸ்திர யோநித்வாத் –
யோநி யாவது -காரணம் -சாஸ்த்ரத்தை பிரமாணமாகக் கொண்ட படி என்கை
அப்பஷோ வாயு பஷோ -தீர்த்தம் ஒன்றையே குடிப்பவன்
வாயுவை மாதரம் பஷிப்பவன் போலே
சாஸ்திரம் ஒன்றையே பிரமாணமாக கொண்டது -என்கை –

இங்கு பூர்வ பஷம் –
அப்ராப்தே ஹி சாஸ்திரம் அர்த்தவத் -வேறு எந்த பிரமானத்தாலும் ஏற்படாத விஷயத்தில் தான்
சாஸ்திரம் பிரவர்த்திப்பது -என்றும்
பர ப்ரஹ்மம் -அனுமான பிரமாணத்தால் சித்திக்க கூடியதாக இருப்பதாலும்
பூம் யங்குராதிகம் ச கர்த்ருகம் கார்யத்வாத் கடவத் –எனபது அனுமான சரீரம்
கர்த்தாவை முன்னிட்டு -வீடு பானை போலே —

சித்தாந்தம்
விஸ்வாமித்ரர் சிருஷ்டி அறிவோம் -விசித்திர ஜகத் சிருஷ்டி ஜீவா கோடியில் ஒருவர் பண்ண -அந்ய மிந்த்ரம் கரிஷ்யாமி –
ஆகவே சாஸ்திரமே பர ப்ரஹ்ம சித்தியில் பல பிரமாணம்
அப்படிப் பட்ட வேதாந்த சாஸ்திரம் ஒன்றாலே பர ப்ரஹ்ம விசாரம் செய்வது நன்றாக பொருந்தும்

————————————————————————————–

நான்காவது சமன்வ்யாதிகரணம்
சூத்ரம்
தத் து ச்ன்வயாத்
தத் கீழ் சூத்ரத்தில் சொல்லப் பட்ட சாஸ்திர பிரமாண கதவம்
சமன்வயாத் நன்றாக புருஷார்த்தமாக அன்வயிக்கிற படியினால்

இங்கு பூர்வ பஷம்
தெரிந்து கொள்ள வேணும் -என்கிற விருப்பம் உண்டாகாத வஸ்துவை சாஸ்திரம் பிரவர்த்தனம் பண்ணாதே
இஷ்ட பிராப்தி -யாகம் போல்வன
அநிஷ்ட பரிஹாரம் -மாம்ச பஷணம் நிவ்ருத்தி
வஸ்துவே கண்ணுக்கு தெரியாமல் -பிரயோஜனத்வம் கூடாதே-

இங்கு சித்தாந்தம்
இதுவே ஸ்வயம் பிரயோஜனம் -பரம புருஷார்த்தம்
பரமானந்த ஹேது பூதம் -பரமானந்த சந்தோஹ ஸ்வரூபம்-
புருஷார்த்தத்வேன சம்பந்தமே சமன்வயமாவது
ஸ்வயம் பிரயோஜனம் பரம புருஷார்த்தம்

தத் து சமன்வயாத் -இதில் ப்ரஹ்மண-என்ற ஒரு பதமும் -சாஸ்தரேண -என்ற ஒரு பதமும் தருவித்துக் கொள்ள வேணும்
வேதாந்த சாஸ்திரங்கள் -மூலம் விசாரித்து அடையும் -ப்ரஹ்ம ஞானம் ஸ்வயம் பிரயோஜனம் -பரம புருஷார்த்தம் -என்றதாயிற்று –

அத்ர ஆஸ்தே நிதி இதி வத் புமர்த்த பூதே
சித்த அர்த்தா அபி குண ரூப வ்ருத்த வாதா
ரெங்கேச த்வயி சகலா சமன்வயந்தே ந
உபாஸா பல விதிபி விசேஷ ஏஷாம்––ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் -2–22-

ஹே ரெங்கேச–சகலா-சமஸ்தமான

குண ரூப வ்ருத்த வாதா–தேவரீருடைய திருக் கல்யாண குணங்கள் -திவ்ய ஆத்ம ஸ்வரூபம் -திவ்ய சேஷ்டிதங்கள்
ஆகிய இவற்றைச் சொல்லும் உபநிஷத் பாகங்கள்

சித்த அர்த்தா அபி -கார்ய பரங்கள் இன்றியே சித்த பரங்கள் ஆனாலும்

புமர்த்த பூதே த்வயி–புருஷார்த்த பூதராய் இருக்கிற தேவரீர் இடத்தில்

அத்ர ஆஸ்தே நிதி இதி வத்–இங்கே நிதி இருக்கிறது என்று சொல்லுகிற சித்த பர வாக்கியம் போலே

சமன்வயந்தே –நன்கு பொருந்துகின்றன

ஏஷாம்–கீழ்ச் சொன்ன குண ரூப வ்ருத்த வாதங்களுக்கு

உபாஸா பல விதிபி-உபாசனத்தையும் பலத்தையும் ப்ரதிபாதிக்கின்ற வாக்யங்களினால்

ந விசேஷ–ஒரு அதிசயமும் இல்லை –

பூர்வ மீமாம்சகர் தான் இவற்றை பிரமாணம் என்று கொள்ளாமல் கார்ய பர ஸ்ருதி வாக்யங்களே பிரமாணம் என்பர் –

இவையும் புருஷார்த்த போதகங்களாய்க் கொண்டு உபாசன விதி வாக்கியங்களைப் போலே ஸ்வத பிரமாணங்களே –

ஜிஜ்ஞாஸ அதிகரணம் சமன்வய அதிகரணம் இரண்டாலும் இவை ஸ்தாபிக்கப் படுகின்றன

உனது கல்யாண குணங்களை விவரிக்கும் வேதங்கள் -இங்கு பெரும் புதையல் உள்ளது போன்று–
சித்த வாக்யங்களாக பன்னி உரைக்கும்

இப்படி ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி பிரயோஜனங்களான விதி வாக்யங்களுக்கு கார்ய ப்ரதயா ப்ரமண்யம் உண்டானாலும்
சித்த வஸ்து போதகங்களான சித்த வாக்யங்களுக்கு –
நிரதிசய புருஷார்த்த பூதரான தேவரீருடைய
ஸ்வரூபம் ரூபம் குணம் சேஷ்டித வியாபாரங்கள் இவற்றை பிரதிபாதித்து சித்த பரங்களானாலும்
இங்கே நிதி உண்டு என்கிறது போலே
உபாசன தத் பல விதாய வாக்யங்களோடே துல்ய சீலங்களாய்
அதுகளுக்கு சேஷம் அன்றிக்கே பிரமாணம் ஆகிறதுகள் என்கிறார் –

இனி -நான்காவது சமன்வயாதிகரணம் –
ஸூத்த்ரம் -தத் து சமன்வயாத்
தத் -கீழ் சொல்லப்பட்ட சாஸ்திர பிரமாணகதவம்
சமன்வயாத் -நன்றாக புருஷார்த்தமாக அன்வயிக்கிற படியில் –

பூர்வபஷம் –
தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற விருப்பம் உண்டாக வேணுமே
பிரயோஜனத்வத்தில் தான் அந்த விருப்பம் உண்டாகும்
இஷ்ட பிராப்தி -பிரவர்த்தியாலும் –யாகம் -ஸ்வர்க்கம் கொடுப்பது போலே –
அநிஷ்ட பரிகாரம் -நிவ்ருத்தி யாலும்
வஸ்துவே கண்ணுக்கு தெரியாமையால் பிரயோஜனத்வம் சொல்ல முடியாதே –

சித்தாந்தம் –
வேதாந்த வாக்யங்கள் பலவும்
அது தான் ஸ்வயம் பிரயோஜனம் -பரம புருஷார்த்தம் -என்று சொல்வதால்
பட்டர் ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் உத்தர சதகம் -21-
அத்ராச்தே நிதிரிதிவத் –ரங்கேச த்வயி சகலாஸ் சமன்வயந்தே –ஸ்லோகம் -அனுசந்தேயம்

—————————————————————————————————————————————–

இந்த நான்கும் சதுஸ் ஸூ த்ரி -சாஸ்த்ர ஆரம்ப சமர்த்தன பரங்கள்
சோமாசி ஆண்டான் -முதல் ஸூத்ரம் சாஸ்த்ர ஆரம்ப சமர்த்தன பரம் என்பர்

இந்த நான்கு அதிகரண்ங்களும் -நான்கு ஸூ த்த்ரங்கள் சதுஸ் ஸூத்ரி -என்று வழங்கப்படும்
சாஸ்திரம் ஆரம்பிக்க அவசியம் இல்லை என்பதை நிரசித்து
இனி மேல் சாஸ்திரம் ஆரம்பிக்கிறது –

—————————————————————————————

அடுத்து ஈஷத்யதிகரணம்

ஈஷதேர் நா சப்தம் –1-1-5-
ஈஷதே ந அசப்தம் -அசப்தம் பிரதானம் -சாஸ்திர பிரமாணமாக உடையது அல்லாமையால் அனுமான கம்யமானது பிரதானம்
ந -சத் வித்யையில் உள்ளதாய் -ஜகத் காரணத்தை சொல்லுமதான சச் சப்தத்தால் வாச்யம் அன்று
சதேவ சோம்ய இதமக்ர ஆஸீத் –ததைஷத பஹூஸ்யாம் பிரஜா யே யே தி –சாந்தோக்யம் -6-2-1-சச் சப்த நிர்திஷ்ட
வஸ்து ப்ரஹ்மமே ஒழிய பிரதானம் இல்லை
வஸ்துவுக்கு ஈஷணம் சங்கல்ப கர்த்ருத்வம்
சந்மூலாஸ் சோம்யே மா பிரஜா –என்று தொடங்கி-ச ஆத்மா -6-8-6- என்று பிரச்துதமான சத்துக்கு சேதனத்வம் சொல்லி இருக்கையாலே
ஈஷணம் சேதனனுக்கு அசாதாரணமாய் முக்கியமான ஈஷணம் என்பதே விவஷிதம்

மேலே -6-14-2- தஸ்ய தாவதேவ சிரம் யாவன் ந விமோஷ்யதே அத சம்பத்ஸ்யே -என்று சச் சப்த வாச்யத்தை உபாசிப்பவனுக்கு
தேகத்தில் நின்று விடும் அளவே தாமதம் -உபாசனத்து லஷ்யம் பிரதானமாய் இருக்க ஒண்ணாதே
தொடக்கத்தில் யேநாஸ்ருதம் ஸ்ருதம் -என்று ஒன்றைத் தெரிந்து கொண்டால் எல்லாம் தெரிந்த படி ஆகுமே என்று சொல்லி
ஸ்தூல சூஷ்ம சேதனங்களை சரீரமாக கொண்ட ப்ரஹ்மமே விவஷிதம்

சதா சோம்யே ததா சம்பன்னோ பவதி -6-8-1-லயம் சொல்லி ஸ்வ மவபீதோ பவதி என்கையாலே சச் சப்த வாக்கியம் பரமாத்மாவாகவே இருக்க வேணும் என்றதாயிற்று
இந்த அதிகரணத்தில் இது தலையான சூத்ரம்

கௌணச்சேத் நாத்தம சப்தாத்
தந் நிஷ்டஸ்ய மோஷோபதேசாத்
ஹேயத் வாவச நாச்ச
பிரதிஜ்ஞ்ஞா விரோதாத்
ஸ்வா ப்யயாத்
கதி சாமான்யாத்
ஸ்ருத்வாச்ச –1-1-12-
என்கிற ஏழு சூத்ரங்களும் உள்ளன
இவற்றின் பொருள் கீழே பார்த்தோம்

ஈஷத் அதிகரணம் -1-1-5–இதில் ஜகத் காரண வஸ்துவுக்கு
சங்கல்ப விசேஷம் ஓதப்பட்டு உள்ளது
அந்த சங்கல்பம் கௌணம் அன்றிக்கே முக்கியமாக நிர்வகிக்க வேண்டி இருப்பதால்
அப்படிப் பட்ட சங்கல்பத்துக்கு ஆஸ்ரய பூதமான ஜகத் காரண வஸ்து
அசேதனமான பிரதானமாய் இருக்க முடியாது என்று நிரூபிக்கப் படுகிறது
அசேதனம் இல்லாமல் ஜீவனே ஜகத் காரணம் என்றால் என்ன -என்பதற்கு
பரிகாரமாக
அடுத்த அதிகரணம் அவதரிக்கின்றது –

——————————-
ஆனந்தமயாதிகரணம் -1-1-6
ஆனந்தமய அப்யாசாத் -1-1-13-அளவு கடந்த ஆனந்தம் ஜீவாத்மாவுக்கு பொருந்தாது பரமாத்மாவுக்கே பொருந்தும்
ஆனந்த மய அப்யாசாத் –1-1-13-
அந்ய பதம் மேலே உள்ள -அந்தரதிகரணம் இரண்டாம் சூத்ரம் -பேத வ்யபதேசாச்ச அந்ய -வருவித்துக் கொள்ள வேண்டும்
ஆனந்த மய -சப்தத்தினால் சொல்லப் படும் புருஷன் ஜீவாத்மாவைக் காட்டிலும் வேறுபட்டவனாக இருக்க வேண்டும்
அளவு கடந்தததாக ஓதப்படுவதால் என்றபடி

ஆனந்த வல்லி-ஆனந்த மயா வித்யா
தைத்ரிய ஆனந்த வல்லி
தஸ்மாத்வா ஏதஸ்மாத் விஜ்ஞானமயாத் அன்யோந்தர ஆத்மா ஆனந்தமய -என்று
ஆத்மாவை பிரஸ்தாபித்து -அதற்கு மேல்

சைஷா ஆனந்தச்ய மீமாம்ஸா பவதி -என்று தொடங்கி
தே யே சதம் பிரஜாபதரா நந்தா ஸ ஏகோ ப்ரஹ்மண ஆனந்த ச்ரோத்ரியச்யச அகா மகாதச்ய -அகா மகாதச்ய மகா விரக்த்ன்
ச்ரோத்ரியன் வேதாந்தம் சரவணம் பண்ணினவன்
உபாசன பிரியனான பகவானால் -நிருபாதிகம் இல்லை சோபாதிகம்
ஸ ஏகோ ப்ரஹ்மண ஆனந்த -இயற்க்கை யாக இவன் ஒருவனே பர ப்ரஹ்மம்

கோ வா அன்யாத்-எந்த ஜந்து தான் பிரக்ருதமான ஆனந்தம் அடைய முடியும்
கோ வா பராண்யாத் -எந்த ஜந்து தான் மோஷ ஆனந்தம் அடைய முடியும்
ஏஷ ஏவ ஹி -இந்த ஆனந்தமயமான ஆத்மா வன்றோ
ஆனந்தயதி- எல்லா வித ஆனந்தத்தையும் விளைவிக்கின்றது

கோஹ்யேவான்யாத் க பராண்யாத் எதேஷ ஆகாச ஆனந்தோ ந ஸ்யாத் ஏஷஹ்யே வா நந்தயாதி
உத்தர நாராயண அனுவாகம் -தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி நான்ய
பந்தா வித்யதே அயநாயா -என்பதாலும்
ஏவம் தம் வித்வான் -இவ்விதமாக மகா புருஷனை உபாசிப்பவன்
அம்ருதோ பவதி -மோஷ ஆனந்தம் பெற்றவன் ஆகிறான்
அயனாய -மோஷ ஆனந்தம் அடையும் பொருட்டு
அந்யா பந்தா ந வித்யதே -அந்த மகா புருஷனைத் தவிர வேறு உபாயம் இல்லை
அன்வய வ்யதிரேக முகேன இரண்டு ஸ்ருதிகளும் சொல்லி

தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி நான்ய பந்தா வித்யதே அயனாய -என்பதாலும் இவ்வர்த்தமே நிலை நாட்டப் படுகிறது
ஏஷ ஹேவ அனந்யாதி-என்கிற சுருதி வாக்யத்தில் அந்வய முகனே தெரிவிக்கப் பட்ட அர்த்தமே நான்ய பந்தா வித்யதே அனயனாய
ஸ்ருதியில் வ்யதிரேக முகேன தெரிவிக்கப் படுகிறது
ச யச்சாயம் புருஷே யச்சாசா வாதித்யே ச ஏக -என்று ஆதித்ய மண்டலத்தில் உள்ள புண்டரீ காஷனே ஆனந்த மயன் என்கிறது

ப்ரஹ்ம விதாப்நோதி பரம் -என்று ஆனந்த வல்லியில் ப்ரஹ்மத்தை பிரஸ்தாபித்து
சத்யம் ஞானம் ஆனந்தம் ப்ரஹ்ம என்று லஷணம் சொல்லி
தஸ்மாத்வா ஏதஸ் மாதாத்மன ஆகாசாஸ் சம்பூத -என்று
அந்த ப்ரஹ்மா ஆத்மா என்றும் அதில் நின்றும் ஆகாசாதி பதார்த்தங்கள் உண்டாவதும்
அந்த ஆனந்தமய ஆத்மாவுக்கு
தச்யைஷ ஏவ சாரீர ஆத்மா -சரீர சம்பந்தம் உண்டாவது சொல்வதால்
இந்த ஆனந்தமயனான ஆத்மா ஜீவாத்மா -இது பூர்வ பஷம்

நிருபாதிகமான ஆனந்தம் அந்த பர பிரமம் ஒருவனுக்கே
சகல சராசரங்களையும் சரீரமாக கொண்டவன் என்பதால்
ஆனந்த மயா -விகாரம் இல்லை ஆனந்தம் மலிந்த பரமாத்மா
யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனசா சஹ
ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் நபிபேதி குதச்சன
வாக்குக்கும் மனசுக்கும் எட்டாத அப்ரமேய ஆனந்த மயன் பரமாத்மாவே

விகார சப்தான் நேதி சேன்ன ப்ராசுர்யாத் -இரண்டாவது சூத்ரம் இந்த அதிகரணம்
யதுக்தம் –ஆனந்த ப்ராசுர்யம் அல்ப துக்க சத்பாவம் அவகமயதீதி -தத் அசத்
தயை குணத்தால் ஆஸ்ரிதர் துக்கம் அனுசந்தித்து தானும் துக்கிப்பது குணப் பிரசுர்யம் தான்
ஆனந்த மயன் என்றால் சிறிது துக்கம் கலசி இருக்குமோ என்னில்
அபஹத பாப்மா-விஜரோ-விம்ருத்யூர் -விசோக-சுருதி அகில ஹேய பிரத்ய நீகத்வம் சொல்லும்

பிரக்ருதியில்
ஜன்ம காரணத்வம்
ஸ்திதி காரணத்வம்
லய காரணத்வம்
கால பேதத்தினால் ஒரே வ்யக்தியினிடம் ஓன்று சேர்ந்து இருக்கக் கூடியவை என்பதால்
அவை வருத்தங்கள் ஆகாதே
இதனால் ப்ரஹ்மத்துக்கு பஹூத்வாபத்தி எனபது இல்லை
உழவன் ஒருவனே விதை விதைப்பதும் பயிர் விளைப்பதும் அறுப்பதும் போலே
லஷ்மி பதித்வம் அசாதாராண சிஹ்னம்

ஆனந்த மய அதிகரணம்

இதில் தலையான ஸூத்த்ரம் -ஆனந்த மயோப்யாசாத் -1-1-13-
இதற்கு மேல் உள்ள அந்தர் அதிகரணத்தில் இரண்டாவது ஸூ த்ரம்-பேத வ்யபதே சாச்சான்ய-என்கிற ஸூத்த்ரத்திலே
இருந்து அத்ய -பதம் எடுத்துஆனந்த மய அத்ய அப்யாசாத் -என்றதாயிற்று
ஆனந்த மய -ஆனந்த மய சப்தத்தால் குறிக்கப் பட்ட புருஷன்
அத்ய -ஜீவாத்மாவில் காட்டிலும் வேறு பட்ட பரமாத்வாகவே ஆகக் கடவன்
ஏன் என்னில்–அப்யாசாத் -அளவு கடந்ததாக ஓதப்பட்ட ஆனந்தம் உடைமை -என்பதாலே
தைத்திர உபநிஷத் ஆனந்த வல்லி-
தஸ்மாத்வா ஏதச்மாத் விஞ்ஞான மயாத்-அந்யோந்தர ஆத்மா ஆனந்தமய -என்கிற வாக்யத்தினால்
ஆனந்தமயமான ஆத்மாவை பிரஸ்தாபித்து –
அதுக்கு மேலே –
சைஷா ஆனந்தச்ய மீமாம்ச பவதி -என்று தொடங்கி
தே யே சதம் பிரஜாபதேர் ஆனந்தா ச ஏகோ ப்ரஹ்மண ஆனந்த ச்ரோத்ரியச்ய சாகா மகாதச்ய -என்னும் அளவாக
ஆனந்த மயமான ஆத்மாவுக்கு உள்ள ஆனந்த அளவு கூறும் அடைவில்
ச்ரோத்ரியன் -வேதாந்த சரவணம் பண்ணினவன் -முக்தன் -அவனுக்கும் அப்படிப் பட்ட 100 மடங்கு நான் முகனை விட -ஆனந்தம்
அகாமஹத –விஷய விரக்தன் -என்றபடி
முக்தானந்தம் சோபாதிகம்-நிருபாதிகம் அன்று
ச ஏகோ ப்ரஹ்மண ஆனந்த -காரணம் ஒன்றும் சொல்லப் பட வில்லை
நிருபாதிகமான ஆனந்தம் பர ப்ரஹ்மத்துக்கு மட்டுமே -என்றதாயிற்று–

ஆனந்த வல்லியை -ஆனந்த மய வித்யா -என்பர் வேதாந்திகள் -அந்த வித்தையில் –
கோஹ்யேவான்யாத் கே ப்ராண்யாத் யதேஷ ஆகாச ஆனந்தோ ந ஸ்யாத் ஏஷஹயேவா நந்தயாதி —
என்று ஒதப்படுகிறது –

இதன் பொருளாவது
கீழே சொல்லப் பட்ட ஆகாச சப்த வாச்யமான வஸ்து
நிருபாதிகமாயும் அபரிச்சின்ன ஆனந்தம் உடையதாய் அல்லாமல் இருக்குமானால்
கோ வா அன்யாத்-எந்த ஜந்து தான் ப்ராக்ருதமான ஆனந்தத்தை அடைய முடியும் –
கோ வான் ப்ராண்யாத் -எந்த ஜந்து தான் மோஷ ஆனந்தத்தை அடைய முடியும் –
ஏஷ ஏவ ஹி -இந்த ஆனந்தமயமான ஆத்மாவே அன்றோ
உத்தர நாராயண அனுவாகத்திலும் –
தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி
நான்ய பந்தா வித்யதே அயனாய -என்பதனாலும்
இவ்வர்த்தமே நிலை நாட்டப் படுகின்றது

ஏவம் தம் வித்வான் -இவ்விதமாக அம மகா புருஷனை உபாசிக்கிறவன்

அம்ருதோ பவதி -மோஷ ஆனந்தத்தைப் பெற்றவன் ஆகிறான்

அயனாய -அந்த மோஷ ஆனந்த பிராப்தியின் பொருட்டு
அந்ய பந்தா ந விந்த்யதே -அந்த மகா புருஷனைத் தவிர்ந்து வேறு ஒரு உபாயம் இல்லை –

ஏஷஹயே வா நந்தயாதி -என்கிற சுருதி வாக்யத்தில் அன்வயன முகேன தெரிவிக்கப் பட்ட அர்த்தமே
நான்ய பந்தா வித்யதே அயனாய -என்று வ்யதிரேக முகத்தாலே தெரிவிக்கப் பட்டது
உபய ஸ்ருதிகளும் ஏக அர்த்தம்
லஷ்மி பதியே விஷய பூதன் –

இன்னமும் ஆனந்த மய வித்யையில்-
ச யச்சாயம் புருஷே யச்சாசா வாதித்யே ச ஏக -என்கிற வாக்யத்தினாலே
ஆனந்த மயனையும் ஆதித்ய மண்டலத்தின் உள்ளே உள்ள
புண்டரீ காஷனையும் ஒன்றாக சொல்லி இருப்பதால்
ஆனந்த மய வித்யாவேத்யனும் புண்டரீ காஷனும் ஆனவன்
பரம புருஷனே -என்ற அர்த்தம் தேறிய படி-

பூர்வ பஷம்
ஆனந்த வல்லியில் –ப்ரஹ்ம விதாப் நோதி பரம் -என்று ப்ரஹ்மத்தை பிரஸ்தாபித்து
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் -என்று அந்த ப்ரஹ்மம் லஷணம் கூறி
தஸ்மாத் வா ஏதஸ்மாதாத்மன ஆகாசஸ் சம்பூத -இத்யாதி
வாக்யத்தினால் அந்த ப்ரஹ்மம் ஆத்மா என்னும் இடத்தையும்
அதில் நின்றும் ஆகாசாதி பதார்த்தங்களின் உத்பத்தியும் சொல்லி
தஸ்மாத் வா ஏதஸ்மாத் விஞ்ஞான மயாத் –அந்யோந்தர ஆத்மா ஆனந்தமய -என்ற அளவால்
உபாக்ராந்தமான ஆத்மா உபதேச பரம்பரை யானது ஆனந்தமயனில் சமாப்தி செய்யப் பட்டு இருக்கிறது –
ஆகையால் உபக்ரமித்த ப்ரஹ்மம் ஆனந்தமயமான ஆத்மாவே என்று நிச்சயிக்கப் படுகிறது –
அந்த ஆனந்தமய ஆத்மாவுக்கு -தச்யைஷ ஏவ சாரீர ஆத்மா -என்ற உத்தர வாக்யத்தில்
சரீர சம்பந்தித்வம் ஆகிற சாரீரத்வம் சொல்லப் பட்டு இருக்கிறது
கர்ம பரவசனான ஜீவாத்மாவுக்க்கே கர்மபல அனுவர்த்தமாக சரீர சம்பந்தம் சம்பவிக்கும்
அகரமா வச்யனான பரம புருஷனுக்கு சம்பவிக்க நியாயம் இல்லை
ஆகவே ஆனந்தமயனான ஆத்மா ஜீவாத்மா தான் என்னும் இடம் சித்தம் –

சித்தாந்தம்
நிருபாதிக ஆனந்தம் உடைமை பரமாத்வுக்கு மட்டுமே –
சகல சராசரங்களையும் சரீரமாக கொண்டவன் அவன் என்று ஒதப் படுவதாலும்
ஆனந்தமயம் -மய பிரத்யகம் விகாரம் அர்த்தம் ஆகையாலே
விகாரம் அற்றவன் -பரமாத்வாவுக்கே
அன்ன மய யஞ்ஞா -இங்கே மயம்-ப்ராசுர்யம் -மலிவு என்றே பொருள்
அன்னம் மலிந்த வேள்வி
இங்கும் ஆனந்தம் மலிந்த பரமாத்மா -என்பதால் விகார வாதம் அப்ரசித்தம் –
அடுத்த படியாக
யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மநஸா சஹ-ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் நிபிபேதி குதச்சன-என்று
வாக்குக்கும் நெஞ்சுக்கும் எட்டாதபடி அப்ரமேயமான ஆனந்தம்
உடையவனாக ஓதப்பட்ட பரமாத்மாவின் இடத்தில் அன்றோ
மலிந்த ஆனந்தம் உடைமை தேறக் கடவது –

மேலும் ஒரு வாதம்
ஆனந்த பிராசுர்யம் -என்றால் துக்கம் சிறிது உண்டு என்றும் தோற்றும் இல்லையா
எத்தைக் காட்டிலும் ஆதிக்யம் என்னும் பொழுது
ஏவஞ்ச அகில ஹேய ப்ரத்ய நீக கல்யாணை கதானம் -என்னப் படுகிற
பர ப்ரஹ்மம் இடத்தில் ப்ரசுர்ய ஆனந்த சாலித்வம் என்று
பரிஷ்கரிக்கப் பட்ட ஆனந்த மயத்வம் சொல்லுவதற்கு இல்லை என்பதாக –

இதுவும் பிசகு –

அந்த ஆனந்த ப்ரசுர்யத்தை விவரிக்கப் புகுந்த
சைஷா ஆனந்தச்ய மீமாம்சா பவதி -இத்யாதி ஆனந்த மீமாம்சையில்
தே ஏ சதம் பிரஜாபதிர் ஆனந்தா -என்னும் அளவாக பிரஸ்தாபிக்கப் பட்ட
சதுர்முக பரிந்த சகல ஜீவர்கள் ஆனந்தத்தைக் காட்டிலும்
நூறு மடங்கு அதிகமாய் இருக்கை யாகிற ஆனந்தமய பிரசுர்யமே
விவஷிதமாக விவரித்து இருக்கையாலே
துக்க சம்பந்தம் பிரசங்கிக்க விரகு இல்லை-

தயாளு
அடியார் துக்கம் கண்டு தானும் துக்கிப்பது தயாளுத்வம்
இப்படி துக்கம் உண்டு என்றால் ஆனந்த மயத்வம் கொள்ள இடம் இல்லையே என்ற சங்கை தோன்ற
இந்த அதிகரணத்தில் இரண்டாவது ஸூ த்த்ரத்தில்
விகார சப்தான் நேதி சேனன ப்ராசுர்யாத் –
இதற்க்கு
ஸ்ரீ பாஷ்யத்தில்
அபஹதபாப்மா -விஜரோ விம்ருத்யுர் விசோக– ஸ்ருதி வாக்யத்தை எடுத்துக் காட்டி
பாபம் செய்தாலும் கூட அதன் பலனாக ஹேய ஸ்பர்சம் உண்டாக பெறாதவன்
அதே போலே சோகம் உண்டானாலும் அதன் பலனான ஹேய ஸ்பர்சம் உண்டாகப் பெறாதவன்
குணங்களில் சிறந்ததான சோகம் என்பதே ஆகும்

—-

7-அந்தரதிகரணம் –

அந்தஸ் தத்தர்மோ பதேசாத் –1-1-21-
இதில் மேல் உள்ள -பேத வ்யபேதேசாச்ச அந்ய-என்கிற சூத்ரத்தில் இருந்து அந்ய பதம் தருவித்திக் கொண்டு
அந்த -ஆதித்ய மண்டலத்தின் உள்ளே உறையும் புருஷன்
அந்ய -ஜீவனைக் காட்டிலும் வேறுபட்ட பரம புருஷன்
தத்தர்மோ பதேசாத் -அந்த பரம புருஷனுக்கு உள்ள அசாதாராணமான தர்மங்களை ஓதி இருப்பதனாலே –

சாந்தோக்யம் –அத யா ஏஷோந்தர் ஆதித்யே ஹிரண்மய புருஷோ த்ருச்யதே –என்று தொடங்கும் அந்தராதித்ய வித்தை-
அதில் –ஹிரண்யமஸ்ரூர் ஹிரண்யகேச ஆப்ரணகாத் சர்வ ஏவ ஸூ வர்ண தஸ்ய யதா கப்யாசம் புண்டரீக மேவ அஷீணீ
தஸ்ய உதிதி நாம ச ஏஷ சர்வேப்ய பாப்மப்ய உதித உதேதி ஹ வை வர்வேப்ய பாப்மப்யோ யா ஏவம் வேத
ஸூ பால உபநிஷத் –ஏஷ சர்வ பூத அந்தராத்மா அபஹதபாப்மா திவ்யோ தேவ எகோ நாராயண –
புருஷ சூக்தம் -தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி –
இவற்றால் ஆதித்ய மண்டலத்தின் உள்ளுறையும் புருஷன் பரம புருஷன் என்று நிர்ணயிக்கப் படுகிறது –

சாரீர சப்தம் பரம புருஷனுக்கு சம்பவிக்காதே பூர்வ பஷம்

சித்தாந்தம் -தஹர வித்யா பிரகரணம் –ந ஸூ கருத்தும் ந துஷ்க்ருதம் சர்வே பாபமா நோ நோ நிவர்த்தந்தே அபஹதபாப்மா
ஹ்யேஷ ப்ரஹ்ம லோக –என்று சொன்னதையே இங்கு -ச ஏஷ சர்வேப்ய பாப்மப்ய உதித -என்பதால் கர்மம் சம்பந்தம் இல்லாத
வியக்தியே ஆதித்ய மண்டலத்தின் உள்ளே உள்ளதாக ஸ்பஷ்டம்
ஆதித்ய வர்ணம் தம்ஸ பரஸ்தாத் -என்கிற படி ஸ்வ இச்சியினால் பரிக்ரஹிக்கப் பட்ட அப்ராக்ருதமான சரீஎரம் உடையவன் என்றதாயிற்று

சாது பரித்ரானம் ஏவ உத்தேச்யம் -ஆநு ஷங்கி கஸ்து துஷ்க்ருதாம் வி நாச -சங்கல்ப மாத்ரேணாபி ததுபபத்தே –
மழுங்காத வை நுதிய –தொழும் காதல் களிறு அளிப்பான் —-இத்யாதி கொண்டே ஸ்ரீ பாஷ்யகாரர் உடைய இந்த ஸ்ரீ ஸூக்திகள்-
அந்தர்யாமி ப்ராஹ்மணம் -ய ஆதித்யே திஷ்டன் யஸ்ய ஆதித்யச் சரீரம் யா –ஆதித்ய மாந்தரோ யமயதி -என்றும்
யஸ் சர்வேஷூ தேஷு திஷ்டன் -என்றும் அனைவரையும் நியமிப்பவனாக சொல்லி இருப்பதால்
இது ஆத்மாவைக் குறிக்காது பரம புருஷனை தான் குறிக்கும் என்றதாயிற்று

————————-

ஜ்யோதிர் அதிகரண சித்தாந்தம்
சாந்தோக்யம் -அத யத்த பரோதிவா ஜ்யோதிர் தீப்யதே -என்ற இடத்துக்கு முன்னர் -பாதோச்ய சர்வா பூதானி த்ரிபாதஸ் யாம்ருதம் திவி
என்பதால் பர ப்ரஹ்மமே இந்த ஜ்யோதிஸ் ஆகும் –
சாந்தோக்யத்தில் காயத்ரீ வா இதம் சர்வம் —என்று பிரஸ்தாபித்து -ததேதத் ருசாப் யுக்தம் -என்றதால் -பூதம் பிருத்வி சரீரம் ஹிருதயம்
நான்கையும் நான்கு பாதங்களாக உடையவாக சொல்லிருப்பதால் காயத்ரீக்கு சமானமான பர ப்ரஹ்மமே சொல்லப் பட்டது –
நான்கு பாதங்கள் என்பதாலே சாம்யம்
இதே போலே -தேவா ஏதே பஞ்சான்யே பஞ்சான்யே -என்று தொடங்கி சைஷா விராட் -என்று –
அக்னி சூர்ய ஜல சந்திர வாயு வாக் சஷூஸ் ச்ரோத்ர மனஸ் பிராணன்கள் ஆகிற பத்து வஸ்துக்களின் –
பத்து அஷரங்கள் கொண்ட சந்தஸ்க்கு வாசகமான விராட் சப்த பிரயோகம் போலே –
திவா பரோ ஜ்யோதி -தயு லோகத்துக்கு அப்பால் பட்டது த்யுலோக சம்பந்தியும் ஒன்றாக இருக்கக் கூடுமோ -என்னில்
-மரத்தின் நுனியில் பறவை -நுனிக்கு அப்பால் பறவை இரண்டும் சொல்வது போலே

————

8-ஆகாசாதி கரணம்

ஆகாசஸ் தல் லிங்காத்–1-1-23-
இதிலும் பேத வ்யபதேச்ச அந்ய -இருந்து அந்ய சப்தம் தருவித்துக் கொள்ள வேண்டும்
சர்வாணி ஹ வா இமானி பூதாதி ஆகாசா தேவ சமுத் பத்யந்தே -என்கிற இடத்தில் ஆகாச சப்தத்தினால் சொல்லப் படுபவன்
அந்ய -பூத ஆகாசத்தில் காட்டிலும் வேறு பட்டவன் -ஏன் என்னில்
தல் லிங்காத் -அசாதாரணமான லிங்கம் ஸ்ருதமாய் இருப்பதினால் என்றவாறு
சர்வாணி ஹ வா இமானி பூதாதி ஆகாசா தேவ சமுத் பத்யந்தே ஆகாசம் பிரத்யச்தம் யந்தி ஆகாசோ ஹ்யேவ ஏப்யோ ஜ்யாயாத் ஆகாச பராயணம் -என்று
ஆகாசம் சர்வ பூத உத்பத்தி லய காரனத்வமும் சர்வ ஸ்மாத் ஜ்யேஷ்டத்வமும் பராயணத்வம் சொல்லப் படுகின்றன
நாரயணாத் ப்ரஹ்மா ஜாயதே –விஸ்வத பரமம் நித்யம் விச்வம் நாராயணம் ஹரிம் -நாராயணம் மஹாஜ் ஞேயம்
விச்வாத்மானம் பராயணம் –என்பதால் பரம புருஷனையே குறிக்கும்

————————————-

இந்திர பிராண அதிகரணம்
பிராணஸ் தத் அநு கமாத் -1-1-29-
பிராண சப்தம் இந்த்ரனுக்கும் உப லஷணம்
கௌஷீ தகி உபநிஷத் – பிராணோச்மி பிரஜ்ஞாத்மா தம் மாம் ஆயுரம்ருதம் இதி உபாஸ்வ -என்று
தன்னையே உபாசிக்க ப்ரதர்னனுக்கு உபதேசித்து
ச ஏஷ பிரஜ்ஞாத்மா ஆனந்தோ ஜரோம்ருத -ச ன் சாதுநா கர்மணா பூயான்னோ எவாசாதுனா கர்மணா கநீயான் -என்றவை
பர ப்ரஹ்மம் இடமே சம்பவிக்கும்
தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி நான்ய பந்தா அயநாய வித்யதே -என்றும் ஏஷ ஹ்யேவ சாது கர்ம காரயதி தம் -என்றும்
யமாத்மா நமந்தரோ யமயதி -என்றும் அந்தர்யாமி ப்ராஹ்மண ஸ்ருதியின் படி இந்திர பிராண சாரீரகனான பரமாத்மாகவே இருக்கத் தக்கது

———————————————————-

முதல் அத்யாயம் -இரண்டாம் பாதம்
முதல் அதிகரணம் –சர்வத்ர பிரசித்தி அதிகரணம்
பரம புருஷன் உபாசகர் சரீரத்தின் உள்ளே இருந்தாலும் கரும பலன்களை அனுபவிக்காது –
இரண்டாம் அதிகரணம் –அத்த்ரதிகரணம் —
அத்தா சராசரக் ரஹணாத்–1-2-9-
அத்தா -போக்தா என்று ஓதப்பட்டவன் -ச -அந்த பரம புருஷனே யாவன் –
சராசரக் ரஹணாத்-சகல பிரபஞ்சமும் போஜ்ய வஸ்துவாக ஸ்ருதியில் க்ரஹிக்கப் படுவதால்
யஸ்ய ப்ரஹ்ம ச ஷத்ரஞ்ச உபே பவத ஓதன ம்ருத்யுர் யச்யோவ பசே சனம் க இத்தா வேத யத்ர ச
உபாசகன் ரதி -சரீரம் முதலானவற்றை தேர் -சோத்வன பாரமாப் நோதி தத் விஷ்ணோ பரமம் பரம் –

————————————–

அந்தர உபபத்தே –1-2-13-
அந்தர -கண்களின் உள்ளே இருப்பவன்
ச -அந்த பரம புருஷன்
உபபத்தே -அங்குச் சொல்லப்படும் அபயத்வம் அம்ருதத்வம் -முதலானவை அப் பரம புருஷன் இடத்திலேயே பொருந்தக் கூடியவை யாதலால்
ய ஏஷோஷிணி புருஷோ த்ருச்யதே ஏஷ ஆத்மேதி ஹோவாச ஏத தம்ருதம் ஏததபயம் ஏதத் ப்ரஹ்ம – என்பதில்
அஷிணி புருஷோ த்ருச்யதே -கண்ணில் உள்ளவனாக ஒரு புருஷன் எற்படுகிறான்
யச் சஷூஷி திஷ்டன் சஷூ ஷோந்தர-கண்ணில் உள்ளவனாகவும் நியாமகனாகவும் ஓதப்பட்ட பரம புருஷன் அந்த
ய ஏஷ –இத்யாதி வாக்யத்தினால் நினைப்பூட்டப் படுகிறான் ஆகவே அஷி புருஷன் பரம புருஷனாகவே இருக்கத் தக்கவன் –

தேவதாதிகரணம்
பரம புருஷன் உபாசனத்தில் தேவர்களுக்கும் மனுஷ்யர் போலே அதிகாரம் தடை அற்றது என்கிறது
தத் உபர்யபி பாதராயணஸ் சம்பவத் –1-3-25
அர்த்தித்வ சாமர்த்தியங்கள் -வேணும் என்னும் அபேஷையும் அதற்கு உண்ட ஆற்றலும்
இதில் ஸூத்ரனுக்கு அதிகாரம் உண்டோ என்னும் சங்கை தீர்க்க
அபசூத்ராதிகரணம் -பிறந்தது
சு கஸ்ய தத நாதர ச்ரவணாத் ததாத்ரவணாத் ஸூ ச்யதே ஹி –1-3-33-
தஸ்மாத் சூத்ரோ யஜ்ஞ்ஞே அனவகல்ப்த-என்று யஜ்ஞ்ஞாத்தில் ஸூத்ரனுக்கு அதிகாரம் இல்லை என்றது வேதம் –
ஆனால் கர்ம அனுஷ்டானங்கள் ஸ்ரவண மானச உபாசனங்கள் உண்டே -அது இல்லை என்று மறுக்கப் படுகிறது இந்த அதிகரணத்தில் –
அபேஷை இருந்தாலும் சாமர்த்தியம் இல்லாததால் -என்கிறது
சு கஸ்ய ஸூ ச்யதே ஹி-
இந்த ஜ்ஞானஸ்ருதி என்னும் சத்ரியனுக்கு சோகம் உள்ளமை ஸூ சிதமாகிறது -எதனால் என்னில்
தத நாதர ச்ரவணாத் -தத் அநாதர ச்ரவணாத் -அந்த ஹம்ச பஷியின் இழிவுரையைக் கேட்டதனால்
ததாத்ரவணாத்-அப்பொழுதே ரைக்ருவர் இடம் விரைந்தோடி வருகையால்
ஆக ஸூ த்ரனுக்கு ப்ரஹ்ம விதியை அதிகாரம் இல்லை என்று முடிந்தது
வாக்ய அந்வயாதிகரணம்
ப்ருஹதாரனண்யத்தில் மைத்ரேயி ப்ராஹ்மணம் -யாஜ்ஞ வல்க்யர் மைத்ரேயி இடம் ஆத்மா வா ஆர் த்ரஷ்டவ்ய
ஆத்மா சப்தம் பரமாத்மாவே -கார்ய காரண பாவம் உண்டு என்பதாலும் முக்தி தசையில் சாம்யாபத்தி என்பதாலும்
சரீராத்மா -அந்தராத்மா பாவத்தாலும் என்று காட்ட மேலே மூன்று சூத்ரங்கள்

—————————————————-

முதல் அத்யாயம் நான்காம் பாதம் –வாக்யான்வயதிகரணம்-நான்கு ஸூத்ரங்கள்
வாக்ய அந்வயாத் –முதல் ஸூ த்ரம்-இத்தால் ஆத்மா வா அரே த்ரஷ்டவ்ய ச்ரோதவ்யோ மந்தவ்யோ நிதித்யாசி தவய -என்ற இடத்தில்
ஆத்மா பரமாத்மாவைக் குறிக்கும் என்கிறது
மேலே மூன்று ஸூத்ரங்களாலே ஆச்மரதத்ய மதம் -ஔடுலோமி மதம் காசக்ருத்சன மதங்கள் காட்டப்படுகின்றன
இதில் முதல் ஸூத்ரத்தாலே –பிரதிஜ்ஞா சித்தேர் லிங்க மாச்மரத்த்ய -ஆச்மரத்த்ய மதம் -கார்ய காரண பாவம் ஸ்ருதியில் சொல்லப் பட்டு
இருக்கையாலே அவற்றுக்குள் பேதம் உண்டு என்றவாறு -இவ்வபேதத்தை தெரிவிக்க பரமாத்மா ஜீவாத்மாக்களுக்கு ஐகய உக்தி உள்ளது என்கிறார் –
உத்க்ரமிஷ்யத ஏவம் பாவாதித் யௌடுலொமி –முக்தி தசையில் ஜீவாத்மா பரமாத்மா அபெதித்து அவலம்பித்து ஔடுலொமி நிர்வஹித்தார்
அவஸ்திதே ரிதி காசக்ருத்சன -அந்தராத்மாவாக இருப்பதாலும் சரீர பரிந்த வாசகத்வம் சித்தம் ஆகையாலும் ஆத்மா சப்தத்தை
பரமாத்மா பர்யந்த வாசாகமாக நிர்வஹிப்பது உசிதம் என்கிறார் -காசக்ருத்ச்னர்

——————

இரண்டாம் அத்யாயம் –அவிரோதாத்யாயம்
ப்ரஹ்மத்துக்கு உண்டான காரணத்தவத்தாலும் ஜகத்தினுடைய கார்யத்வத்திலும்சங்கதமான
விரோதங்களை பரிக்ரஹித்து -ஜகத் ப்ரஹ்மங்களுக்கு உள்ள கார்ய காரண பாவத்தை ஸ்த்திரம் ஆக்குவது -என்றபடி

2–1-ஸ்ம்ருதி பாதம் -இதில் முதல் இரண்டு அதிகரணங்களால் சாங்க்ய யோக ஸ்ம்ருதி யோக விசாரம் செய்து
மற்ற அதிகரணங்களில் யுக்தி விசாரம் செய்தாலும் ஸ்ம்ருதி விசார பிரதானம் என்பதால் இந்த பாதம் ஸ்ம்ருதி பாதம் –

ஸ்ரீ கபில மகரிஷியே சாங்க்ய தந்த்ர பிரவர்த்தகர் ஆயினும் மன்வாதி ஸ்ம்ருதி விருத்தம் -என்று அநாதரணீயை-என்றவாறு –
நியாய வ்ருத்த சம்ருத்ய நுக்ருஹீத சுருதியில் காட்டிலும் நியாய அவ்ருத்த சம்ருத்ய நுக்ருஹீத சுருதி பிரபலை என்றும்
ருஷி -கபில -மாத்ர பிரணீத சம்ருத்ய நுக்ருஹீத சுருதியில் காட்டிலும் ஆப்த தம -மனு பிரணீத சம்ருத்ய நுக்ருஹீத சுருதி பிரபலை என்றும்
ஏக ஸ்ம்ருதி அநுக்ருஹீத சுருதியில் காட்டிலும் அநேக ஸ்ம்ருதி அநுக்ருஹீத சுருதி பிரபலை என்றும் கருத்து

ஆக கபில தந்த்ர ஸித்தமான பிரகிருதி தத்வம் ஜகத் காரணம் அல்ல -மன்வாதி ஸ்ம்ருதிகளில் சொல்லுகிறபடி
சேதன அசேதன விலக்ஷண ப்ரஹ்மமே ஜகத் காரணம் என்பது வேதாந்த விழுப் பொருள் என்கிறார் இதில் –

2–2-தர்க்க பாதம் -யுக்தி விசார பிரதானம் -முதல் அதிகரணத்தில் பிரதான காரணத்வ வாத நிரஸனம் –
மேல் அதிகரணங்களில் பரமாணு காரணத்வ வாத நிரஸனம் செய்து ப்ரஹ்ம காரண வாத ஸ்தாபனம் –

2–1-ஸ்வ பக்ஷ ஸ்தாபனம்  -2-2-பர பக்ஷ ப்ரதிஷேப பரம்
ஸ்வ பக்ஷத்தில் பிறர் ஏறிடும் தோஷங்களை பரிஹரித்து ஸ்வ பஷ ஸ்தாபனம் செய்தார் ஸ்ம்ருதி பாதத்தில்
பிற மதங்களுக்கு தோஷங்களைக் காட்டி அவற்றைக் கண்டிக்கிறார் தர்க்க பாதத்தில் –
சாங்க்ய வைசேஷிக புத்த ஜைன சைவ மதங்களை தூஷிக்கிறார் தர்க்க பாதத்தில் -7-அதிகரணங்களாலே
மேலே இறுதி -8-அதிகரணத்தில் பாஞ்ச ராத்ர பிராமண்ய ஸ்தாபனம் –

ஈஷத் யதிகரணாதிகளில் சாங்க்ய மத பிரஸ்தாபம் உள்ளதாயினும் சாஷாத்தாக தன் மத கண்டனம் உள்ளது இந்த தர்க்க பாத்ததிலே என்பர் ஸ்ரீ பாஷ்யகாரர்
பிரதானம் என்றும் மூல பிரகிருதி என்றும் சப்தம் என்றும் சொல்லுகிற அசித்தத்வம்-ஆனுமாநிகம்-அப்ரஹ்மாத்மகம்
குணத்ரயாத்மகம் -ஜகத் காரணம் என்பதே சாங்க்ய பக்ஷம்
அவன் அனுமானத்தை நிரசித்து- சாங்க்ய யுக்த பக்ஷம் நிரஸனம் -செய்யும் பொழுது -தத் யுக்த பிராமண த்ரய தூஷணமும் கர்தவ்யம் ஆகிறது
ப்ரத்யக்ஷ சித்த பதார்த்தங்களில் சாணக்யனோடு அதிக விவாதம் கிடையாது -தர்மி தர்மங்களுக்கு அபேதமே
காரியங்களுக்கு அபி வ்யக்தி மாத்திரமே உள்ளது -அவஸ்தாந்த்ராபத்தி இல்லை -இத்யாதி விஷயங்களில் விவாதம் உண்டு —
ஆயினும் ப்ரத்யக்ஷ சித்த பதார்த்தங்களில் நாதீவ விவாத -என்பது ஸ்ரீ பாஷ்யகாரர் திரு உள்ளம் –ஆகையால் பிரத்யக்ஷ நிராஸத்தை உபேக்ஷித்தார் ஸ்ரீ வியாசர்

சாங்க்ய ஆகமம் பூர்வ காண்டத்தில் -முதல் அத்யாயம் -பிராமண அத்தியாயத்தில் -பெரும்பாலும் நிரஸ்தம் —
ஆகையால் ஆகம நிராசம் உபேக்ஷிதம் -பரிசேஷாத் சாங்க்ய யோக யுக்தி அனுமானத்தை இங்கே தூஷிக்கிறார்
அப்ரஹ்மாத்மகம் பிரதானம் ஜகத் காரணம் எனும் தத் யுக்த அனுமானத்தை தூஷித்து சத் அனுமானத்தாலே ப்ராஞ்ஞ அதிஷ்டிதமே பிரதானம் என்று
ஸ்தாபிக்கிறார் வியாசர் –

இங்கே சங்கை எழுமே -இந்த அதிகரணத்தில் அனுமானத்தாலே ஈஸ்வரனை ஸ்தாபிக்கும் வியாசர்
சாஸ்திர யோனித்வ அதிகரணத்தில் முன்னமே அனுமானத்தால் ஈஸ்வரனை சாதிக்க இயலாது என்பான் என் என்னில் -இந்த சங்கைக்கு பரிஹாரம்
சர்வ ஸ்ரஷ்டாவான பரமாத்வை அனுமானத்தால் சாதிக்க இயலாது என்றார் அங்கு -இங்கு பரமாத்வாய் அனுமானத்தாலும் பாதிக்க இயலாது என்கிறார்
அனுமான அவிஷயமான பர ப்ரஹ்மத்தை அனுமானத்தால் சாதிக்கவும் பாதிக்கவும் இயலாது என்பதே திரண்ட பொருள்

தர்க்க பாதத்தில் -கபில ப்ரோக்தமான சாங்க்ய தந்த்ரத்தையும் -ஹிரண்ய கர்ப்ப ப்ரணீதரமான யோக தந்த்ரத்தையும் -சிவ ப்ரோக்தமான
சைவ தந்த்ரத்தையும் வியாசர் தூஷிக்கிற படியால் தேறிய பொருளாவது –
மும்மூர்த்திகள் ஆனதும் வேத விருத்தமாக அவர்கள் பேசினால் த்யாஜ்யம் -வேத அனுகுணமே உத்தேச்யம் –
இறுதியில் பாஞ்சராத்ர பூஷணம் செய்வது சங்கதமே– சங்கதி யாவது தூஷணமோ பூஷணமோ பதார்த்தம் அல்ல

சாங்க்யாதிகள் வேதத்துக்கு எதிரியாக மாட்டாதே என்ற நிரூபணம் பாதார்த்தம்–ஆகும்
சாங்க்யாதி மதங்கள் குத்ஸிதி யுக்தி மூலகங்கள் ஆகையால் துர்பலங்கள்-ஆகையால் வேதங்களுக்கு எதிராக நிற்க இயலாது
பாஞ்ச ராத்ரம் வேத அனுகுணம் ஆகையால் வேத விருத்தம் இல்லை —
சாங்யாதிகளுக்கு வேத ப்ரத்யர்த்த நிராஸமே பாதார்த்தம் -என்றபடி -ஆகையால் பாஞ்சராத்ர ப்ரமண்ய ஸ்தாபனம் பாத சங்கதமே யாகும் என்றபடி –

பாஞ்ச ராத்ர சந்நிதியில் -சாங்க்யாதிகளான பஞ்ச மதங்களும் இராத்திரியாகுமே
சாங்க்ய வைசேஷிக புத்த ஜைன சைவ தூஷணத்தையும் -பாஞ்ச ராத்ர பூஷணத்தையும் சேர்த்து கண்டவர்கள் உணர்வார்கள்
மோக்ஷ தர்மத்திலும் -சாங்க்ய யோக யுக்தமான -25-தத்துவங்களையும் -யோக யுக்தமான யோகத்தையும் -வேத யுக்தமான கர்மங்களையும் -அங்கீ கரித்து
தத்வங்கள் ப்ரஹ்மாத்மகங்கள் என்றும் -யோகம் ப்ரஹ்ம உபாசனம் என்றும் – கர்மங்கள் ப்ரஹ்ம ஆராதனங்கள் என்றும் ஆரண்யகத்தில் அருளிச் செய்தார்
இவ்விஷயத்தையே பாஞ்ச ராத்ரஸ்ய க்ருத்ஸ நஸ்ய வக்தா நாராயண ஸ்வயம் -என்று
நாராயணன் பாஞ்ச ராத்ர தந்திரத்தில் விஸதீ கரித்தான் என்றபடி -என்பதே ஸ்ரீ பாஷ்ய சாரம்

மேலே வேத வாக்கியங்களில் பரஸ்பர விரோதா சங்கா பரிக்ரஹம் செய்யப் போகிறவராய் முதல் முன்னமே வேத சாத்வதங்களுக்கு விரோதி சங்கா பரிக்ரஹம் செய்கிறார் இங்கு
ஆகாசாத் யுத்பத்தி விஷயத்திலும் ஜீவ அனுத்பத்தி விஷயத்திலும் ஸ்ருதி வாக்கியங்களில் காணப்படும் பரஸ்பர விரோதி சங்கா பரிக்ரஹம்
வியதிகரணம் தொடக்கமாக செய்யப் போகிறார் வியாசர்
அதற்கு முன்னமே ஜீவ அனுத்பத்தி விஷயத்தில் பாஞ்ச ராத்ர விரோத சங்கை ஏற்பட அதற்கு பரிஹாரம் உரைத்து
பாஞ்ச ராத்ரம் பரமதம் என்ற பிரமத்தை நிரசிக்கிறார் இங்கே -ஆகையால் இந்த அதிகரணம் பாதத்தின் இறுதியில் அமைத்தார்

இந்த பாதத்தில் ரஸநாநுபத்திகரணம் தொடங்கி சாங்க்யாத் யாகம விசாரம் செய்யப் படுகிறது –
ஆகம சாம்யத்தைப் பற்ற பாஞ்சராத்ர ஆகமும் அப்ரமாணம் என்ற சங்கை உதிக்க அத்தை நிரசித்து பாஞ்சராத்ர ப்ராமாண்யத்தை ஸ்தாபிக்கிறார் –

சாக்த மத நிராச பரம் என்பர் மத்வர் -அது பின்ன விஷயம் -பாஞ்ச ராத்ர யுக்த நாராயண பரத்வமும் நாராயண ஆராதன வைபவமும் சங்கர பாஷ்ய சம்மதமே
தத் யுக்த ஜீவ உத்பத்தி விஷயம் ஒன்றிலே மட்டும் விசம்வாதம் காட்டினார்கள் -பாஷ்யபா மதீகாரர்களான-சங்கர வாசஸ்பதி மிஸ்ரர் –
பாஞ்சராத்ரத்துக்கு ஜீவ உத்பத்தி விஷயத்தில் தாத்பர்யம் இல்லை என்று அந்த விசம்வாதத்தையும் களைந்து எறிந்தார் கல்ப தருகாரரான அமலா நந்தர்
பாஞ்ச ராத்ரத்துக்கு -ஜீவ உத்பத்தி -வசனத்துக்கு கௌணார்த்தவம் கொண்டு பாஞ்ச ராத்ர பிரமாணத்தையே கல்பதருகாரரே ஸ்தாபிக்கிறார்
மாதாந்தர்களுக்கும் பாஞ்சராத்ர ஆகமம் சம்மதம் என்றதாயிற்று

இப்படி ஆறு பாதங்களால் ப்ராஹ்மண நிஷ்டமான காரணத்தை சோதித்து

மேல் இரண்டு பாதங்களால் -வியத் பாதம் -பிராண பாதம் –ஜெகன் நிஷ்டமான கார்யத்வத்தை சோதிக்கிறார் வியாசர்
ஆகாச ஆத்ம இந்திரியாதிகளுக்கு தத் தத் வஸ்து ஸ்வரூப அனுகுணமாய் ஸ்வரூப விகார ஸ்வபாவ விகாரங்களை நிரூபித்து
அவற்றுக்கும் ப்ரஹ்ம கார்யத்துவமே உள்ளது என்று ஸ்தாபிக்கிறார் –
வியததிகரணத்தில்-ஆகாச நித்யத்வத்தை சங்கித்து ஆகாச கார்யத்வம் சித்தாந்தம் –
ஆத்மாதிகரணத்தில் ஆத்ம கார்யத்வத்தை சங்கித்து ஆத்ம ஸ்வரூப நித்யத்வம் சித்தாந்தம் –
ஆகையால் சேதன அசேதனங்களில் துல்ய கார்யதா நிரூபணம் இப்பத்துக்கு பிரமேயம் என்ன ஒண்ணாது
ஆகையால் இ றே ஸ்ரீ பாஷ்யகாரர் கார்யதா பிரகார விசோதனம் பாதார்த்தம் என்று அருளிச் செய்கிறார் –

2–1-பாதத்தில் -ப்ரஹ்மம் ஜகத் காரணம் -என்கிற விஷயத்தில் பர சமயிகளால் உத்பாவிதங்களான தோஷங்களை பரிஹரித்து
ப்ரஹ்ம காரணத்தை ஸ்தாபித்தார் –2–3-பாதத்தில் ஜகத்து காரியம் விஷயத்தில் பர யுக்த தோஷங்களை பரிஹரிக்கிறார்
இவ்விரண்டும் ஸ்வ பக்ஷ ஸ்தாபன பரம் -என்று சங்கதம்
நடுவில் -2–2-அமைய காரணம் என் என்னில் –
காரண விஷயத்தில் பர யுக்த தோஷ பரிக்ரஹ பரம் முதலில் அருளி -காரண விஷயத்தில் பர பக்ஷ பிரதி ஷேப பரமான
காரண விசார பரம் -என்று இரண்டையும் பூர்வாபரமாக நிர்த்தேசித்து மேலே கார்ய விசார பரமான வியத்பாத பிராண பாதங்களை பின்னே அமைத்தார் என்றபடி –

ஆகாசாதிகளுக்கு ஸ்வரூப விகார ரூப கார்யத்வமும் -ஜீவாத்மாக்களுக்கு ஸ்வ பாவ ரூப கார்யத்வமே என்று நிரூபிப்பார் -ஆர் என்னில் -உபநிஷத்தே நியாமகம்
போக்தா போக்யம் ப்ரேரிதாரம் ச மத்வா–என்று தத்வ த்ரய ஸ்வரூப கதனம் –
போக்கிய பூதமான பிரகிருதி மஹத் அஹங்கார பூத பஞ்சக இந்திரியாதி ரூபேண ஸ்வரூப பரிணாமம் பெற்றால் ஒழிய ஜீவாத்மாக்களுக்கு போக்யம் ஆக்கமாட்டாது
ஜீவாத்மா ஸ்வரூப கத விகாரம் அற்றவனாய் தன் ஸ் வபாவமான தர்ம பூத ஞானத்தினுடைய விகாசத்தாலே
அனுபவிக்கும் போக்தா ஆகையால் ஞான விகாசம் அவசியம் ஆகிறது
ஆகையால் பகவான் ஆத்மாக்களுக்கு ஸ்வ பாவ விகாசத்தை பிறப்பிக்க
ப்ரக்ருதியை ப்ராக்ருதமாக ஸ்வரூபத்தாலே பரிணமிப்பிக்கிறான் -என்றபடி -ஆக சர்வம் ப்ரஹ்ம கார்யம் என்றதாயிற்று –

வியததிகரணம் தொடக்கமாக அசித் உத்பத்தி பிரகாரம் -ஆத்மாதிகரணம் தொடக்கமாக சித் உத்பத்தி பிரகாரம் -என்று கண்டு கொள்வது –
பூர்வ யுக்த வியததிகரண நியாயத்தாலே ஜீவ உத்பத்தி சங்கை ஸ்வத ப்ராப்த்தை யாகிறது -ஆகையால் ஜீவ உத்பத்தி வாதம் ஆகிற
பூர்வ பஷத்தை ஸூ த்ரகாரர் ஸூத்ரத்தால் நிர்தேசியாமல் ஜீவ அநுத்பத்தி பரமான சித்தாந்த ஸூ த்ரத்தை மட்டும் அருளிச் செய்கிறார்

பிராண உத்பத்தி அதிகரணத்தில் -வியததிகரண நியாயத்தாலே-ஸ்வத ப்ராப்தமான பிராண உத்பத்தி விஷயமான -சித்தாந்தத்தை ஸூத்ரகாரர்
ஸூத்ரத்தால் நிர்தேசியாமல் பிராண அநுத்பத்தி சங்கா பூர்வ பக்ஷ ஸூத்ரத்தை மட்டும் அருளிச் செய்கிறார்
இவ்வதிகரணத்தில் ஸூத்ரகாரர் திரு உள்ளம் பற்றிய சித்தாந்தம் இன்னது என்பதை ஸ்ரீ பாஷ்யகாரர் நிர்த்தேசித்து அருளுகிறார்
அப ஸூத்ராதிகரணத்தில் போலே -என்று கொள்வது

ஆத்மாதிகரணத்தில் ஜீவாத்மா நித்யத்வத்வ ஸ்தாபனம் -இங்கே சங்கை -சாஸ்திர யோநித்வாதி கரணத்தில் ப்ரஹ்மத்தின் ஜகத் காரணத்வம்
வேதாந்த பிரமாணகம் என்று சொல்லி -இதில் ஆத்மா நித்யன் என்று அறுதியிட்டால் பரஸ்பர விரோதம் வாராதோ என்னில்
ப்ரஹ்மம் சாஸ்திர பிரமாணகம் என்ற விஷயமே அங்கு -ஜகத் காரணத்வம் சாஸ்திர பிரமாணகம் என்ற விஷயம் விஷயம் அன்று அங்கு
இங்கு ஆத்ம நித்யத்வ பரமாக உதாகரிக்கப் பட்ட ஸ்ருதிகளுக்கு நோக்கு -அசித்தை போலே ஸ்வரூப அந்யதா பாவ ரூபமான விகாரம் இல்லை என்பதிலே நோக்கு என்றும்
பரமாத்மா நித்யத்வ பரமாக உதாஹரிக்கப் பட்ட வசனங்களுக்கு ஜீவாத்மாக்களில் பிரசித்தமான ஸ்வ பாவ அந்யதா பாவ -ஞான சங்கோச விகாச -ரூப விகாரம் பரமாத்மாவுக்கு இல்லை -என்ற விஷயத்திலே நோக்கு

அசித்துக்கு உண்டான ஸ்வரூப விகாரங்களும் சித்துக்கு உண்டான ஸ் வ பாவ விகாரங்களும் அநிஷ்டங்கள்
இவை பரமாத்வாவுக்கு இல்லை யாயினும் பர ப்ரஹ்மத்துக்கு உண்டான காரணத்வத்தை நிர்வஹிக்க மூன்றாவது விகாரம் ஓன்று
அந்த பரனுக்கே கூடும் -உபய விகார விசிஷ்ட சேதன அசேதன விசிஷ்டத்துவமே இ றே அவ்விகாரம் என்றபடி
ஆகையால் பர ப்ரஹ்மம் ஜகத் காரணம் என்பது அக்ஷதம் –

ஆக இரண்டு அத்யாயங்களால் ப்ரமேயத்வ வியாபக கார்யதா நிரூபித காரணத்வம் ப்ரஹ்ம லக்ஷணம் என்றதாயிற்று –

பூர்வ த்வகத்தில் ஸூத்ரகாரர் -ப்ரக்ருதி ஆத்ம பேதத்தையும் -ஆத்ம பரமாத்மா பேதத்தையும் -ப்ரஹ்ம நிஷ்ட ஞான ஆனந்தாதி கல்யாண குணங்களையும் –
தர்மி ஞான தர்ம பூத ஞான பேதத்தையும் சாப்தமாக அருளிச் செய்தார்
ஈஷத் யதிகரணத்தில் -பிரகிருதி ரூப அசித் விலக்ஷணன் பரமாத்மா என்றும்
ஆனந்த மயாதிகாரணத்தில் ஜீவ விலக்ஷணன் பரமாத்மா என்றும்
அந்தரதிகரணத்தில் ஜீவ விசேஷ விலக்ஷணன் பரமாத்மா என்றும் வியாசர் ஸ்தாபித்தார் –
ஈஷத்யதிகரண பூர்வ பஷியினுடைய அநு யாயியை காரணத்வாதி கரணத்திலும்
ஆனந்த மயாதி கரண பூர்வ பஷியினுடைய அநு யாயியை ஜகத்வாசித்வாதி கரணத்திலும் நிரசித்து
சேதன அசேதன விலக்ஷணன் பரமாத்மா என்று அறுதியிட்டார் –
நேதர அநுபபத்தே–1–1–17-
பேத வ்யபதேசாச்ச –1–1–18-
பேத வியபதேசாச்ச அந்நிய –1–1–22-
கர்ம கர்த்ரு வ்யபதேசாச்ச–1- -2–4-
உபயேபி ஹி பேதேந ஏநமதீயதே -1–2–21-
பேத வ்யபதேசாத–1- -3–4-
ஸ்தித்யத நாப்யாஞ்ச –1- -3–6-
ஸூ ஷூப்த் யுத்க்ரந்த்யோர் பேதேந –1–3–43-
பத்யாதி சப்தேப்ய —1–3–44-
அதிகம் து பேத நிர்தேசாத் –2–1–22—இத்யாதி ஸூத்ரங்களாலே ஜீவ பரர்களுக்கு உண்டான பாரமார்த்திக ஸ்வரூப பேதத்தை வியாசர் அருளிச் செய்கிறார்
ஈஷத் யதிகரணம் தொடக்கமாக ஞான ஆனந்தாதி குண யோகத்தை ஹேதுவாகக் காட்டி சேதன அசேதன விலக்ஷணம் ப்ரஹ்மம் என்கிற வியாச ஸூ த்ரங்கள்
ப்ரஹ்மம் ச விசேஷம் என்கிற பக்ஷத்துக்கு பொருந்தும் அல்லது
ப்ரஹ்மம் நிர் விசேஷம் அத்விதீயம் குணதோ அபி சத்விதீயதாம் ந ஸஹதே –என்கிற மாயாவதி பக்ஷத்துக்குப் பொருந்தாது
ஜீவ பர பேதமே சித்தாந்தம் என்று கொண்ட ஸ்ரீ வேத வியாசர் ஜீவ பர அபேதத்தை அப்ரசித்தமும் விசாராநாஹமும் ஆகையால் விசார விஷயமாகக் கொள்ளாமல்
உபநிஷத் வாக்கியங்களில் எங்கேனும் ஜீவ பர அபேத சங்கை அங்குரிக்குமே யானால் அவ்விடத்தில் மட்டுமே
ஜீவ பர பேதத்தை குண ஸூத்ரங்களால் ஸ்தாபிக்கிறார் என்று கண்டு கொள்வது –
தர்மியும் தர்மமும் ஞானம் என்பது ஜீவ பர விஷயத்தில் அந கீ க்ருதம் –அதாவது ஜீவனும் பரனும் இருவருமே ஞான ஸ்வரூபர்கள் ஞான குணகர்கள்-என்றபடி –
ஞாத்ருத்வம் ஞானதா ச ஸ்ருதி பிரபிததே நாத்ர பக்ஷே பதாம -தேசிகன் –
யாவதாத்ம பா வித்வாச்ச ந தோஷ தத் தர்சநாத் –2–3–30-என்கிறார் வியாசர்
நிதயனான ஆத்மா நியாமான தர்ம பூத ஞானம் யுடையவன் –தர்ம பூத ஞானத்தையும் அதனுடைய நித்யத்தையும் ஸ்தாபிக்கிறார் வியாசர்
தர்ம பூத ஞானம் அத்ரவ்யம் அநித்தியம் ஆசந்துகம் -என்பர் நையாயிகர்
அது த்ரவ்யம் நித்யம் என்பது ஸ்ரீ ராமானுஜர் மதம்
ஜீவ தர்ம பூத ஞானத்துக்கு சங்கோச விகாசங்கள் உள்ளன -ஆனாலும் நித்யனான ஜீவாத்மாவைப் பற்றிக் கிடக்கிற தர்ம பூத ஞானம் நித்யமே என்பர் நம் பெரியோர் –
ஆகையால் சங்கோச விகாச ப்ரயுக்த ஞான விநாச சங்கைக்கு அவகாசம் இல்லை என்றபடி –
தர்மம் ஸ்வாபாவிகம் ஆனாலும் தர்மி அநித்யமானால் தர்மமும் அநித்யமாகும் –
தர்மி நித்யமானாலும் தர்மம் சோபாதிகம் ஆனால் உபாதை நிவ்ருத்தமாகும் போது ஓவ்பாதிகமும் நிவ்ருத்தம் ஆகையால் தர்மம் அநித்யமாகும்
இங்கு தர்மியான ஆத்மாவும் -தர்மமான ஞானமும் ஓவ்பாதிகம் அல்ல -ஆகையால் தர்ம பூத ஞானம் நித்யமே -என்று
திரு உள்ளம் பற்றி ஸ்ரீ பாஷ்யகாரர் -நித்யஸ்ய ஸ்வாபாவிக தர்மத்வேந -என்று அருளிச் செய்கிறார்
ஆகையால் சாரீரக மீமாம்சை விசிஷ்டாத்வைத சித்தாந்த்தையே நிலை நாட்டுகிறது -என்பதே ஸ்ரீ பாஷ்ய சாரமாகும் –

ஆக இவ்வளவால் பிராணவார்த்தம் -நிரூபிதம்-அசேஷ சித்அசித் வஸ்து சேஷித்வம் –
அகில புவன ஜென்ம -என்று அகாரத்தில் உபக்ரமித்தும்
ஆனுமாநிகாதிகரணத்தில் -உக்தம் -என்று உகாரத்தையும்
இறுதியில் சர்வம் சமஞ்ஜசம் -மகாரத்தையும் கொண்டு பிராணவாகாரமாகவே தோற்றுமே –
முதல் இரண்டு அத்யாயங்களால் ப்ரணவார்த்த நிரூபணம் -மேல் இரண்டு அத்தியாயங்கள் மந்த்ர சேஷார்த்தம்

———-

மூன்றாம் அத்யாயம்–சாதன அத்யாயம் – நமஸ் சப்தார்த்த நிரூபண பரம்
நான்காம் அத்யாய-பலாத்யாயம் – த்ருதீய பதார்த்த நிரூபண பரம்
நமஸ் சப்தார்த்தம் உபாயம் இறே -சர்வ சேஷியான நாராயணனே பரம உபாயம் என்று இறே சம்பிரதாய நிஷ்கர்ஷம்

ஆக இவ்வளவால் பிராணவார்த்தம் -நிரூபிதம்-அசேஷ சித்அசித் வஸ்து சேஷித்வம் –
அகில புவன ஜென்ம -என்று அகாரத்தில் உபக்ரமித்தும்
ஆனுமாநிகாதிகரணத்தில் -உக்தம் -என்று உகாரத்தையும்
இறுதியில் சர்வம் சமஞ்ஜசம் -மகாரத்தையும் கொண்டு பிராணவாகாரமாகவே தோற்றுமே –
முதல் இரண்டு அத்யாயங்களால் ப்ரணவார்த்த நிரூபணம் -மேல் இரண்டு அத்தியாயங்கள் மந்த்ர சேஷார்த்தம்
மூன்றாம் அத்யாயம்–சாதன அத்யாயம் – நமஸ் சப்தார்த்த நிரூபண பரம்
நான்காம் அத்யாய-பலாத்யாயம் – த்ருதீய பதார்த்த நிரூபண பரம்
நமஸ் சப்தார்த்தம் உபாயம் இறே -சர்வ சேஷியான நாராயணனே பரம உபாயம் என்று இறே சம்பிரதாய நிஷ்கர்ஷம்

—————-

சம்ருத்யதிகரணம் –2-1-1-
கீழ் முதல் அத்யாயத்தில் வேதாந்த பிரதிபாதிதமான
ஜகத் காரண வஸ்து
சேதன அசேதன விலஷணமான பர ப்ரஹ்மம் என்று அறுதி இடப்பட்டது
ஜகத் காரணத்வம் நன்கு திருடி கரிக்கப் படுகிறது
கம்பம் நட்டு ஆட்டிப் பார்ப்பது போலே
முதல் பாதத்தில் சாங்க்யர் தோஷங்கள் பரிஹரிக்கப் படுகின்றன
முன் அத்யாயத்தில் நிரீச்வர சாங்க்யர்களும் சேஸ்வர சாங்க்யர்களும் நிரசிக்கப் பட்டனர்
அதில் நிரீச்வர சாங்க்யன்-கபில ஸ்ம்ருதி விரோதத்தைக் காட்டி
ப்ரஹ்மம் ஜகத் காரணம் அன்று என்று வாதிப்பது ஓன்று உண்டு
அத்தை நிராகரிக்க இந்த அதிகரணம் –
சம்ருத்ய நவகாச தோஷ பிரசங்க இதி சேத்-
சேதன அசேதன விலஷணமான ப்ரஹ்மம் ஜகத் காரணம் என்று கொண்டால்
பிரதானம் காரணம் என்று சொல்கிற கபில ஸ்ம்ருதி அப்ரதானமாய் விடுமே என்னில்
ந-அப்படி சொல்லக் கூடாது
அந்ய ஸ்ம்ருத்ய நவகாச தோஷ பிரசங்காத்- ப்ரஹ்ம காரணத்வத்தை சொல்லுகிற
மற்ற ஸ்ம்ருதிகள் அப்ரமாணமாய் விடும் ஆதலால் -எனபது சூத்ரத்தின் பொருள்
பரசராதி மகரிஷிகள் ஸ்ம்ருதிகள் எல்லாம் அப்ரமாணமாய் விடுவது விட
கபிலர் ஒருவர் ஸ்ம்ருதி ஒன்றை அப்படி ஆக்குவதே யுக்தம் –

இங்கே பூர்வ பஷம் –
சதேவ சோமய இதமக்ர ஆஸீத் -ஸ்வ தந்திர பிரதான காரணத்வத்தில் தாத்பர்யமா
ப்ரஹ்ம காரணத்வத்தில் தாத்பர்யமா
கபில காண்டம் ஞான மார்கத்தில் தத்தவங்களை விசதீகரிக்க தோன்றது

மனு பரசாராதி உக்திகளுக்கு பிரதானம் -இவை பலிஷ்டம் ஆகையாலே –
ப்ருஹஸ்பதியையும் ஸ்ருதிகள் கொண்டாடி இருக்கையாலே
அவர் இயற்றிய லோகாயுதத்தை கொண்டு ஸ்ருதியின் பொருளை நிர்ணயிப்பார் உண்டோ-இல்லையே

——————————————————————————————–

இனி
க்ருத்ஸ் ந ப்ரசக்தி அதிகரணத்தின் பிரமேயம் -விளக்கப் படுகிறது
பூர்வ பஷம்-
ப்ரஹ்மமே ஜகத் காரணம் -ஜகத்தாக பரிணமித்தால்
நிரவயவம் சுருதி விரோதிக்குமே
ஆகையாலே ப்ரஹ்மம் ஜகத் காரணம் என்ன ஒண்ணாது –

மேல் சித்தாந்தம்
ஸூத்திரம் – ஸ்ருதேஸ் து சப்த மூலத்வாத் –
து -சப்தம் பூர்வ பஷததை வ்யாவர்த்திக்கிறது –
ப்ரஹ்மம் நிரவவயம் என்றும்
கார்யப் பொருளாக பரிணமிக்கிறது-பஹூ பவனத்வம் – என்றும் இரண்டு சுருதி சித்தமான அர்த்தங்கள்
பிரமத்தின் அநிர்வசநீயமான சக்தி விசேஷம்
கண்ணில்லாதவன் காண்கிறான்
செவி இல்லாதான் கேட்கிறான்
என்றும் ஓதப்படுகிறது
இத்தால் லௌகிக நியாயம் கொண்டு ப்ரஹ்மத்தின் இடத்தில் சோத்யம் செய்வது கூடாது
ப்ரஹ்ம வ்யாப்தி பரிஷ்க்ரியா -அத்புத சக்தி -உண்டே-

அடுத்த அதிகரணம்
பிரயோஜனவத்த்வாதிகரணம்
பரம புருஷன் சர்வ சக்தி யுக்தன் ஆகையாலும்
சத்ய சங்கல்பன் ஆகையாலும்
அவன் சங்கல்ப மாத்ரத்திலே ஜகத்தை சிருஷ்டிக்கும் விஷயம் சம்பாவிதம் அன்று
அவன் ஜகத்தை சிருஷ்டிக்கும் போதே ஏதேனும் ஒரு பிரயோஜனம் இருந்தாக வேணும்
அவாப்த சமஸ்த காமனுக்கு சிருஷ்டியினால் பிரயோஜனம் உண்டாக விரகு இல்லை
நம் போன்றவர்களுக்கும் பிரயோஜனம் என்று சொல்லப் போகாது
ஆத்யாத்மிக துக்காதிகளுக்கே ஹேது
பகவானுக்கு பஷபாதித்வம் நிர்தயத்வம் தோஷங்களை சங்கிக்கப் பண்ணுவதையும் இருக்கும்
ஆகவே பகவான் சிருஷ்டி கர்த்தாவாக இருக்க முடியாது -எனபது பூர்வ பஷம்
இந்த பூர்வ பஷ ஸூத்த்ரம் -ந பிரயோஜனவத்வாத் –
இங்கே ஸ்ருஷ்டே-பதம் தருவித்துக் கொள்ள வேண்டும்

இந்தன் மேல் சித்தாந்த ஸூத்த்ரம் –லோகவத் து லீலா கைவல்யம்

இத்தால் அவாப்த சமஸ்த காமத்வத்துக்கு கொத்தை இல்லை
மன் பல் உயிர்களுமாகிப் பல பல மாய மயக்குகளால்
இன்புறும் இவ்விளையாட்டு யுடையவன் –நம் ஆழ்வார்
நாட்டைப் படை என்று அயன் முதலாத் தந்த நளிர் மா மலர் உந்தி
வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன் -ஆண்டாள்
விஷம சிருஷ்டி கான்பதாலே பகவானுக்கு பஷபாதத்வமும் நிர்தயத்வமும் சங்கிக்க நேர்கின்றதே என்னில்
அந்த சங்கை –
வைஷம்ய நைர்குண்யே ந சாபேஷ்வாத் ததா ஹி தர்சயதி
என்கிற அடுத்த ஸூத்த்ரத்தால் பரிஹரிக்கப் படுகிறது
கருமங்களுக்குத் தக்கபடி நீச்ச உச்ச சிருஷ்டிகள்

இதன் மேலும் தோன்றுகிற சங்கைக்கு
அடுத்த ஸூத்த்ரம் பரிஹாரம் உணர்த்துகின்றமை
கண்டு கொள்வது –

——————————————————————————————-

2-2-சர்வதா அனுபபத்தி அதிகரணம்
இதில் சர்வ சூன்யவாதிகளான பௌத்த ஏக தேசிகள் பஷம் நிரசிக்கப் படுகிறது
பர பிரமமே ஜகத் காரனத்வம் என்று நன்று நிலை நாட்டிய பின்
இதில் இத்தை ஸ்ருளிச் செய்ய என்ன பிரசங்கம் எனில்
ஜகத் காரண வஸ்து பிரதானமா -பரம அணுவா -பர ப்ரஹ்மமா-எப்போது
பொருந்தும் என்னில்
ஜகத் உத்பத்தி என்று ஓன்று நிரூபிக்க முடியுமானால் அப்போது பொருந்தும்
ஜகத் உத்பத்தியே நிரூபிக்க முடியாததாய் இருக்க எது ஜகத் காரணம் என்கிற சர்ச்சை எதற்கு
உத்பத்தி பாவத்தில் இருந்து அங்கீ கரிக்கப் படுகிறதா
அபாவத்தில் இருந்து அங்கீ கரிக்கப் படுகிறதா

பாவத்தில் இருந்து எனபது சேராது
மண் பிண்டத்தில் இருந்து குடம் –மண் பிண்டம் உபமர்த்தித்துக் கொண்டு தானே உண்டாகின்றன –
காரண ஆகாரத்தின் விநாசமே தானே உபமர்த்தம் -அது தான் அபாவம்
ஆக பாவத்தில் இருந்து உத்பத்தி இல்லை
அபாவத்தில் இருந்து பாவ உத்பத்தி சம்பவிக்க மாட்டாது அன்றோ
ஆக உத்பத்தியே நிரூபிக்க முடியாததால்
உத்பத்திக்கு பிற்பட்டனவான விகாரங்கள் எதுவுமே கிடையாது எனபது சித்தம்
ஆக லோக விவகாரம் எல்லாம் பிரமை
ஆக சூன்யமே தான் தத்வம்

நிரசிக்கும் ஸூத்த்ரம் –சர்வத அநு பபத்தேச்ச -2-2-30-
பிரமேயங்களோ பிரமாணங்களோ எதுவும் உண்டாகிலுமாம் இல்லையாகிலுமாம்
பூர்வ பஷிக்கு அபிமதமான சூன்யத்வம் தேறாது ஆகையாலே
மாத்யமிக தர்சனம் அசமஞ்சசம் என்றபடி –
சர்வம் சூன்யம் என்று சொல்பவர்கள்
தங்களுக்கு அபிமதமான இவ்வர்த்தத்தை சாதித்துத் தருபடியான
பிரமாணம் உண்டு என்று இசையும் பஷத்தில்
பரமான சத் பாவத்தை இசைந்த போதே சர்வ சூன்ய வாதம் தொலைந்தது
பிரமாணம் இல்லை என்னும் பஷத்தில் -பிரமாணம் இல்லாமையினாலே
தங்களுக்கு அபிமதமான அர்த்தம் அசித்தம் என்று முடிந்தது

மேலும் -சர்வ சூன்ய -வாதத்தாலே நாஸ்தித்வம் தானே விவஷிதமாக வேணும்
ஒரு ரூபத்தை விட்டு மற்று ஒரு ரூபத்தை அடைவதே நாஸ்தித்வம்
ரூபாந்தரத்திலே அஸ்தித்வம் சொல்லப் பட்டதாக முடிகிறது
மண் உண்டை ஓன்று இருந்தது
அது நசித்த அளவில் ம்ருத் பிண்டோ நாஸ்தி -என்று சொல்லுகிறான்
இந்த விவகாரத்தில் பானை என்கிற அவஸ்தை தானே விஷயம் ஆகிறது –

அஸ்தி நாஸ்தித்வங்கள்
இப்போது மண் உண்டை இருந்தது இப்போது மண் உண்டை இல்லை
இங்கு இருக்கிறது இங்கு இல்லை
கால இடம் உட்படுத்தியே வ்யவஹாரம்
பிண்டத்வ அவஸ்தை மாறி கடத்தவ அவஸ்தை பிறந்தால்
நாஸ்தித்வ வ்யவஹாரம் பண்ணினாலும்
வேறு ஒரு ஆகாரத்திலே அஸ்தித்வம் தேறி இருக்கும்
ஆக ஒரு படியாலும் சூன்ய வாதம் சித்தியாது
ஆக –
சூத்ரத்தின் மேல் பொருள்
சர்வதா –
சர்வ பிரகாரத்தாலும்
அநு பபத்தே –
ஸ்வ அபிமதமான சர்வ சூன்ய வாதம் உப பன்னம் ஆகைமையினாலே -என்றபடி
ஸ்ரீ பாஷ்யகாரம் அருளிய பொருள் சமஞ்சசம்  ஆன பொருள்
இவர் –
உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகள்
உளன் அலன் எனில் அவன் அருவும் இவ்வருவுகள்
உளன் என இலன் என இவை குணம் உடைமையின்
உளன் இரு தகைமையினோடு ஒழிவிலன் பறந்தே -திருவாய் மொழி –1-1-9-
ஆறாயிரப்படியில் இதுக்கு ஸாதித்த பொருளைக் கொண்டு சூத்ரத்தின் பொருளை ஒருங்க விட்டு அருளிச் செய்கிறார்-

ஸூந்யவாதியான உன்னைக் கேட்ப்போம்-ஈஸ்வரனுடைய இல்லாமையை சாதிக்கிற நீ ஈஸ்வரன் உளன் என்றோ இலன் என்றோ ப்ரதிஞ்ஜை பண்ணுவது இவை இரண்டு பிரகாரத்தாலும் நீ நினைக்கிற இல்லாமை சம்பவியாது -எத்தாலே என்னில்-லோகத்தில் பாவ அபாவ சப்தங்களும் பாவ அபாவ ப்ரதீதிகளும் வித்யமாந வஸ்துவினுடைய அவஸ்தா விசேஷ கோசாரமாகக் காண்கையாலே-ஆதலால்
ஈஸ்வரன் உளன் என்னில் அஸ்தித்வ தர்ம விசிஷ்டனாய் இருக்கும் என்று சொல்லிற்றாய் வரும் –
ஈஸ்வரன் உளன் அலன் என்னில் நாஸ்தித்வ தர்ம விசிஷ்டனாய் இருக்கும் என்று சொல்லிற்றாய் வரும் –
இப்படி ஈஸ்வர வ்யதிரிக்த பதார்த்தங்களையும் உளவென்னில் இவையும் அஸ்தித்வ தர்ம விசிஷ்டங்களாய்க் கொண்டு உளவென்று சொல்லிற்றாய் வரும்
தத் வ்யதிரிக்த பதார்த்தங்களை இல்லை என்னிலும் அவை நாஸ்தித்வ தர்ம விசிஷ்டங்கள் என்று சொல்லிற்றாய் வரும்
அந்த அஸ்தித்வ நாஸ்தித்வ ரூப பதார்த்தங்களும் அவனுக்கு ரூபமாய் இருக்கும் -கீழ்ச் சொன்ன பிரமாணங்களாலே –
இப்படி அஸ்தித்வ நாஸ்தித்வங்கள் ஆகிற குணங்களை யுடையவன் என்று சொல்லுகையாலே அஸ்தி என்னிலும் உளன் -நாஸ்தி என்னிலும் உளன்
உளனாம் இடத்து சர்வாந்தராத்மாவாய்க் கொண்டு உளன் என்கிறார் -இப்படி ஸூந்ய வாதியை நிரசித்தது –

இரண்டாம் அத்யாயம் செய்தது என் என்னில்
முதல் அத்யாயத்தினால் நிரூபிக்கப் பட்ட அர்த்தம்
சர்வாத்மனா அசைக்க முடியாதது என்று
பிரதி பஷ பிரதி ஷேப பூர்வகமாக சாதிதததுடன்
ஸ்ரீ பாஞ்ச ராத்ரம் என்கிற பகவத் பரணீத சாஸ்திர விசேஷத்தினாலே தேறிய பொருள் என்றும் நிரூபித்து
சகல சேதன அசேதன பொருள்கள் பரம புருஷ கார்ய பூதங்களே என்பதை
நன்கு சோதிக்கும் முகத்தாலே
கார்ய சாமான்யமும் பர ப்ரஹ்ம கார்யமே என்பதும் ஸ்தாபிக்கப் பட்டது –

ஆக –
இரண்டு அத்யாயங்களால் –
புருஷார்த்த ஸ்வ ரூபம் நிச்சயிக்கப் பட்டதாக தேறிற்று
இப்படி புருஷார்த்த ஸ்வரூபம் நிச்சயிக்கப் பட்டாலும்
அநாதி வாசனா பலத்தாலே
சூத்திர புருஷார்த்தங்களையே நச்சிக் கிடக்கும் சம்சாரிகளுக்கு
பரம புருஷ பிராப்தியில் பதற்றம் உண்டாகாமைக்கு காரணம்
தாங்கள் விரும்பிய புருஷார்த்தங்கள் அல்பம் அஸ்தரம்
என்பதை ஆராய்ந்து உணராமையே என்று கருதிய சாஸ்திர காரர்
அந்த சம்சாரிகளுக்கு ‘இதர விஷயங்களில் வைராக்யத்தையும்
பரம புருஷார்த்தத்தில் மிக்க ருசியையும் உண்டாக்குவதற்காக
கர்ம பலன்கள் எல்லாம் ஷயிஷ்ணுக்கள் என்றும்
பரம புருஷ உபாசன பலமான அப வர்க்கம் ஒன்றே நித்ய புருஷார்த்தம் என்றும் -தெரிவித்து
இவ் வழியாலே –
பரம புருஷ பிராப்தியில் த்வர அதிசயத்தை உண்டாக்கவே
பின்னிரண்டு அத்யாயங்களை அவதரிப்பிகின்றார்-

—————————-—————————————————————————————————————————-—————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading