ஸ்ரீ யாதவாப்யுதயம்–22- சர்க்கம் -ஸ்ரீ ஸாத்விகி திக் விஜயம் –ஸ்லோகார்த்தங்கள்–

ஸ்ரீ க்ருஷ்ணாய பரப்ரம்ஹணே நமஹ

ப்ரமாணம் லக்ஷ்மண முநி: ப்ரதிக்ருஹ்யாத மாமகம்
ப்ரஸாதயதி யத்ஸூக்தி: ஸ்வாதீந பதிகாம் ஸ்ருதிம்

ஸ்ரீமாந் வேங்கடநாதார்ய: கவிதார்க்கிக கேஸரி
வேதாந்தாசார்ய வர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹரி:

ஸ்ரீ கவிதார்க்கிக ஸிம்ஹஸ்ய ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரஸ்ய
ஸ்ரீமத் வேங்கடநாயகஸ்ய வேதாந்தாசார்யஸ்ய யாதவாப்யுதய காவ்ய க்ருதிஷு

———–

காவ்ய ரத்னம் -என்று தேசிகனே -கவி தார்க்கிக்க ஸிம்ஹம்
கிருஷ்ணனுக்கு ப்ரீதி ஏற்படும் -ஷேம பலன் அளிக்கும் இந்த காவ்யத்தின் இறுதி ஸ்லோகம்

————

1. அத2 தே3வா நிவாSSஹூதா நரேத3வாந் அபா4ஷத
தே3வதா3 நவ ஸாமாந்ய தை3வதம் தே3வகீ ஸுத:

தேவர்க்கும் அசுரர்க்கும் நடுநிலையாம் தெய்வமான
தேவகி மகன் திருக் கண்ணன் தான் அழைக்க வந்த அரசர்
யாவரையும் தேவர்கள் போல்மதித்துக் கூறிட்டானே

தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் கூட பொதுத் தெய்வமான தேவகி புத்ரன்
தன்னால் அழைக்கப் பெற்று வந்த அரசர்களை தேவர்களை போல் மதித்து பின் வருமாறு பேசினான்

2-ஏஷ வஷ்மாபதி :சாஸ்தி விதா4தேவ பிரஜாபதீந்
மஹேந்3த்ர இவ தர்மேண ஸுதர்மாம் ஆஸ்தித :ஸ்வயம் —

அற நெறியால் தேவேந்திரன் அன்னவாறு சுதர்மை எனும்
அரசவையில் வீற்று இருக்கும் உக்ரசேனர் பிரமன் தஷா பிரஜாபதி போல் உம்மை நியமிக்கிறார்
அறநெறியால் தாமே தேவேந்திரன் போல் ஸூ தர்மை என்னும் சபையிலே வீற்று இருக்கும் இம்மஹா ராஜர் -உக்ரசேனர்
பிரமன் தஷா பிரஜாபதி முதலானாரைப் போலே இவ்வாறு நியமித்து அருளினார் –

3-சேகரீ க்ருத பூ பார சேஷத்வேந விபோ ஸ்தித
வேத யத்யய மார் யோபி மித்ர பூதான் அமித்ரஜித்

எதிரிகளை வென்றிட்டு அரசர்க்கு சேஷனாக இத்தரணியின் சுமையாக என் தமையனார்
அவர்களுமே வந்திருக்கும் உங்களுக்கு விண்ணப்பம் செய்கின்றார்
பகைவர்களை வென்று பிரபுவுக்கு சேஷராய் இருக்கும் பூமியின் பாரத்தைத் தன் தலையிலே கொண்டு
சேஷராகவே இருக்கும் நம் அண்ணாவும் நண்ணி இருக்கும் உங்களுக்கு இவ்வாறு தெரிவிக்கின்றார்

4-வயம் பவந்தோ யே சாந்யே மஹாந்தஸ் ஸர்வ ஏவ தே
விஸ்வ குப்தவ் ஜகத் கர்த்ரா விநி யுக்தா விபூதய

இருவருக்கும் கீழ் தன்னையும் வைத்திட்டு அவன் கூறியது இது
நான் நீங்களும் மற்ற பெரியோரும் எல்லாம் பகவானால் இவ்வுலகைக் காத்திடவே இடப்பட்ட பணியாட்கள்
இருவருக்கும் -உக்ர சேனருக்கும் பலராமனுக்கும் கீழே தன்னை வைத்துப் பேசுகிறான் கண்ணன்
நாமும் நீங்களும் மற்ற மகான்கள் எல்லாருமே உலகம் படைப்பவனால் உலகம் காக்கவே
நியமிக்கப்பட்டு அவன் விபூதிகள் ஆவோம் –

5–தத் அஸ்மா பிர் அவஸ்தேயம் தர்ம வர்தமநி ஸாஸ்வதே
பிப் யதி பிர் அநகா தேஸாத் வஜ்ராதி வ ஸமுத்யதாத்

எனவே நாம் மேல் தூக்கிய வஜ்ராயுதம் போன்றதான புன்மை அற்ற -இழிவில்லாத -ஆணைக்குப்
பயந்தவராய் தவறில்லாத சாதனமாம் அற நெறியிலே நீடூர நிலைக்க வேண்டும்
ஆகவே நாம் உயரத் தூக்கிய வஜ்ராயுதத்துக்கு அடி பணிந்தது போல்
கோதற்ற ஆஜ்ஜைக்கு அஞ்சி ஸநாதனமான அற நெறியிலே நிலைக்க வேண்டும்

6–த்வி ஷந்த க்யாத நாமா நோ நாம சேஷாஸ் தாதப்யசவ்
ஸமுத்ர வசநா விஷ்வக் தாமஸைர் அவ குண்டிதா

பெயர் பெற்ற நம் பகைவர் மாயந்திட்டு ஒழிந்தனரே
பெயர் மட்டுமே எஞ்சி யுள்ளது பெரும் கடலை ஆடையாயுடை
வையம் எங்கும் நற் குணம் இலாதவர்களாலே சூழ்ந்து உளதே
பேர் பெற்று நம் பகைவராய் இருந்தவர்கள் பேர் மட்டும் நிற்க மாய்ந்து ஒழிந்தனர்
ஆயினும் கடலை ஆடையாகக் கொண்ட இம் முழுப் பூமி எங்கும் தாமஸ ஜனங்களால் சூழப்பட்டு இருக்கிறது –

7-அம்ச கஸ்தூரிகா பூமிர் பவதாம் பஹு சாலி நாம்
அஜூ குப்ஸா பதம் ந ஸ்யாத் அஸத் வ்ருத்தி மலீமஸா 

மெத்த சீருடை புயங்களுற்று விளங்கும் உங்கள் தோளில் லுள
கஸ்தூரி நல் மணம் மறைவது போலாகி இப் பூமியும்
தக்கோர் இலார் உற்றதனால் தீங்குறாது போகாதோ
சிறந்த புஜங்கள் பெற்று விளங்கும் உங்கள் தோளில் அணிந்த கஸ்தூரி போன்ற இப்பூமி
அல் வழக்கு உற்றவர்களால் அழுக்கு ஆனால் வெறுப்புக்கு இடமாகாதோ –

8- சங்கித பிரசய சேஷ ஸத்ரூணாம் கஷ்மணாம் இவ
ஆயதவ் ஸூக மிச்சத் பிர் ந யுக்த ஷந்தும் ஈஸ்வரை

எதிர்கால நன்மை தனிலே ஈடுபாடு உள்ளவர்களால்
எதிரிகளின் துளி பாகமே இருந்தாலும் பொறுக்கலாகா
எத்தனை சிறு பொறியாக இருந்தாலும் பெரிதாகுமே
அனலின் பொறி போலே அதிகம் வளம் பெரும் என்ற ஐயத்திற்கு இடமான பகைவரின் சிறிது பாகமும்
எதிர் காலத்திய நன்மையில் நோக்கு உள்ளவர்களால் பொறுக்க முடியாது –

9-அதஸ் த்ராணாய ஸாது நாம் துஷ் க்ருதாம் தம நம் ஷமம்
கடங்கரீய ரோதோ ஹி கலமோத் ஸேத காரணம்

கயவர்களைத் தண்டிப்பது சாதுக்களைக் காத்திடற்கு நியாயமாகும்
மேய்கின்ற நாலு காலுடை ஆடு மாட்டினை பயிர்களுடைய வளர்ச்சிக்காய் புகாமல் தடுப்பது நியாயமே
ஆகையால் சாதுக்களைக் காப்பதற்கு துஷ்டர்களை சிஷிப்பது நியாயமே யாகும்
மேயும் ஆடுமாடுகளைத் தவிர்ப்பது பயிர்களின் வளர்ச்சிக்குக் காரணம் அல்லவா –

10-புஷ்யதாம் பாண்டரம் சத்ரம் புண்டரீகம் இவ ஸ்ரிய
தர்மோ தர்மச்ச நாந் யோஸ்தி ரக்ஷண அபேஷணே புவ

வெண் கொற்றக் குடைக் கீழே வளர்பவர்க்கு பூமி தன்னை நன்றாகக் காப்பதற்கு மேலான தர்மமும்
அந்தச் செயலை உபேஷிப்பதற்கு அதிக தீய அறமும் இல்லையே
ராஜ லஷ்மியின் தாமரை போன்ற வெண் கொற்றக் குடையின் கீழ் வளரும் அரசர்களுக்கு
பூமியைக் காப்பதற்கு மேலான தர்மமும் அதனை உபேக்ஷிப்பதற்கு மேலான அதர்மமும் இல்லை –

11–பூர்வ பூர்வ நரேந்த்ராணாம் உச்சிஷ்டம் அபி மேதி நீ
ஸோம பீதி நயாத் க்ராஹ்யா ஸ்வ தர்மாத் வரம் ஆஸ்திதை

முன்னாலே பேர் அரசர் பலர் ஆள் இப்பூமி யானது
முன் ஆட்சி செய்திட்டதால் இவ்வுலகம் அவ்வரசர்
உண்டு துமிந்த எச்சிலாயினும் யாகத்தில் சோமா ரசம்
முன் உண்டதை குடிப்பது போல் புவி காத்தல் பெரும் யாகமே
முன்னால் தோன்றிய மஹா ராஜர்களால் ஆளப்பட்டு இருந்ததால் பூமி அவர்கள் உண்டு முடித்த எச்சில் என்று எண்ணப் பட்டாலும்
ஸோம யாகத்தில் ஸஹாயர்களான அத்வர்யு முதலானவர்கள் ஒருவர் குடித்து முடித்த மிகுந்த
ஸோம ரஸத்தை மற்றவர் குடிப்பது போல் குற்றம் இலை எனக் கொண்டு பூமியைக் காப்பதே நமக்குத் பெரிய யாகம் ஆகும் –

12–அவிவேக விபா வர்யாம் தர்ம மார்க்கம் அபங்கிலம்
த்ரஷ்டும் தீப இவ ந்யஸ்தோ நாயகேந நயா கம

அறியாமை எனும் இரவில் அதர்ம சேற்றில் விழுந்திடாத
அற நெறியைக் காண்பதற்கு ஆதி தேவனால் நீதி மறையாம்
அற விளக்கு என்பது ஓன்று ஏற்றி வைக்கப் பட்டுள்ளதே
அவிவேகம் -இரவு -அதர்மம் -சேறு நீதி ஸாஸ்த்ரம் -பெருமான் வைத்த விளக்கு
அவிவேகம் என்னும் இரவில் அதர்மம் என்ற சேற்றுக்கு இடமாகாத அற நெறி காண்பதற்கு
ஸர்வேஸ்வரனால் நீதி ஸாஸ்த்ரம் என்ற விளக்கு வைக்கப் பட்டு இருக்கிறது –

13–அவ லம்ப்ய ஜகத் தாது ஹஸ்தம் ஆகம விக்ரஹம்
ஸ்வயம் உத்தர தாத்மாநம் ஸ்வைரம் பாதாள பாதிநம்

உதவியின்றி கீழ் உலகிலே விழ விருப்போர் தம்மையே தாம்
உதவியின்றி தூக்கிட்டு நிறுத்துக என் செய்வது என்னில்
இத் தரணியைப் படைப்பவனின் கைத்தலத்தைக் கெட்டியாக
பற்றுவதே நீதி நெறியே பகவானின் கரமாகும் -இத் தரணி இந்த பூமி
ஸ்வதந்த்ரமாய் பாதாளம் புகுந்திடும் போன்ற தம்மைத் தாம் மேலுக்குத் தூக்கி நிறுத்துக
என்ன செய்வது எனில் உலகம் படைப்பவனின் கையை கெட்டியாகப் பிடித்து நிறுத்த வேண்டும் நீதி ஸாஸ்திரமே அவன் கையாகும் –

14–வ்யஸநா ஸார வேகா நாம் வாரணம் ந பிரகல்பதே
உப தே ஷைர் அநார் யாணாம் உத்தா நச் சத்ர சந்நிபை

துட்டர்கள் உரைத்திடும் தீய யுரைகள் தமைக் கொண்டு
தட்டவியலா துன்பங்களை தாறு மாறாய் குடைகளினால்
அடாத மழையின் வேகத்தினை அகற்றவியலா தது போலவே
கீழ் மேலாக மாறிடும் குடைகள் போன்ற துஷ்டர்களின் துர் உபதேசங்களைக் கொண்டு
மஹா விபத்துக்களான மழைகளின் வேகத்தை விலக்க முடியாது –

15-பண்டித ப்ரஹதேநைவ ஸத் பதேந ஸ தோதிதா
விஷமேஷு ஸ்கலந்தோபி துர்கதிம் அவாப்ஸ்யத

நல் வழியில் நடக்கின்ற நல் அறிஞ்சரைப் பின் பற்றினார்
பள்ளங்கள் மேடுகளில் போனாலும் கலங்க மாட்டார்
அறிஞ்சர்கள் நடந்த நல் வழியில் எப்பொழுதும் நடந்து எழுகின்றேர் ஆகில்
மேடு பள்ளங்களில் சிறிது தடுமாறினாலும் துர்கதி இன்றி இருப்பீர்

நீதி சாஸ்திரத்தின் படி கண்ணன் உபதேசித்தல் -16-50-

16–பூ பரிக்ரமணா தன்யா பவதாம் அதி பாஸ்வதாம்
தமஸாம் இவ சத்ரூணாம் நிராஸே கீதருஷீ க்ரியா

கதிரவன் போல் தேசுடைய தங்களுக்கு இருள் போன்ற எதிரிகளை அழிப்பதற்கு இப்புவியைச்
சுற்றி வருவதைத் தவிர வேறே என்ன வேலையுண்டு இப்போது
சூரியனுக்கு மேலான சிறந்த சூர்யன் போன்ற தேசுடைய உங்களுக்கு இருளை போலே
பகைவரை விலக்க பூமியைச் சுற்றி வருவதை விட வேறே என்ன செயல் உண்டு –

17–ஜிகீ ஷூணாம் ஸ யுஷ்மாகம் ந ஜேத வ்யபதே ஸ்திதம்
கௌரவர் அநு கூலாநாம் விபாகைர் இவ கர்மணாம்

திக்குகளில் வெற்றி யுறச் செல்லும் நீர் பல இடங்களில் தக்கவாறு அநு கூலமாம் செயல்களினைச் செய்வது போலே
அக் கௌரவர் பாண்டவர்களை வெல்லாமல் விட்டிடுவீர் -நமக்கு அவர்கள் வேண்டியவர்களாய் நடப்பதில் காரணத்தால்
திக் விஜயம் செய்ய விரும்பும் நீங்கள் அநு கூலமான செயல்களின் பல வகைகள் போல் துணையான
கௌரவ பாண்டவ வம்சத்தினரோடு போர் இடாமல் விட்டு விடுங்கள் –

18–அவ ரோத்யா ஸ்வயம் தஷைர் அஷிபத்பிர் அநேஹஸம்
கரீணாம் கர்ண டோலாபி கம்பிதா இவ ஸம்பத

விரைவாக செல்வங்களில் உறுதியானதை பற்றிடுங்கள்
கறையடிகளின் ஊஞ்சல் ஆடும் காதுகள் போல் நிலையில்லா
அரை குறையாம் பொருள்களுக்கு ஆர்வத்தைக் காட்டாதீர்
ஐஸ்வர்யத்தில் சேர்ந்த யானைகளின் காதுகளில் ஊஞ்சல் ஆடுவன போல் செல்வங்கள் வீணே காலப்போக்கின்றி
முயன்று வல்லவர்களாக உங்களால் விரைவில் நிறுத்தப்பட வேண்டியவைகளாம் –

19- நீதி பத்ததிர் அஷோப்யா பவத் பிர் அதி கம்யதாம்
நியதா ஸ்வர்க்க ஸவ்தஸ்ய நிஸ் ரேணிர் இவ ஸாஸ்வதீ

ஸ்வர்க்கத்தின் ஏணியான நல் நெறியை மற்றவர்களால் தவிர்க்கப்பட ஆகாத படி
(படி அழிக்கப் படா )நீங்கள் எல்லாம் பெற வேண்டும்
ஸ்வர்க்கமாம் உப்பரிகை ஏற்றியே வைக்கும் நிலையான ஏணி போன்ற நீதி நெறியானது
பிறரால் அழிக்கப்பட யாகாத படி உங்களால் பெறப்பட வேண்டும் –

20- கல த்யாக ஸூஹ் ருத் ப்ராப்திர் இதீதம் கவச த்வயம்
வஹத்வம் மந்த்ர தேஹஸ்ய பேதம் பரிஜி ஹீர் ஷவ

விசாரித்து எடுத்த முடிவு ஒரு தேகம் அத்தேகம் நசித்திடப்பட கூடிடலாம்
தடுக்க வதனை இரு கவசம் நிச்சயமாகக் கொள்ள வேண்டும்
நஞ்சர்களை விலக்கிடனும்-சுத்த மனம் உள்ளோரைச் சேர்த்துக் கொள்ள வேண்டிடனும்
மந்த்ர ஆலோசனை முடிவே ஒரு தேஹம் -அந்த தேஹம் பிளக்கப் படலாம்
அதனைப் பரிஹரிக்க விரும்பியும் நீங்கள் அந்த தேஹத்துக்கு இரண்டு கவசங்களைக் கொள்ள வேண்டும்
அவையாவன-விஷமிகளை விலக்குகையும் நல்ல மனமுடையாரைச் சேர்த்துக் கொள்ளுதலும் ஆகும் –

21–தாது நாம் இவ கோபேஷு ப்ரக்ருதீ நாம் அசேதஸாம்
பாதும் அர்ஹத பர்யாப்தம் ப்ரஸாதந ரஸாய நம்

வாத பித்தம் உள்ளவரை மருந்தினால் சரி செய்வது போல் ஏதும் அறிவு இலா மக்கள் சினம் கொண்டால்
நல் வாரத்தை யால் சாந்தமூட்டி அவர்கள் தமைக் காத்திட்டால் நல்லதாகுமே
வாத பித்தம் பொங்கினால் ரஸாயனம் உட் கொள்வது போல் பிரஜைகள் கோபம் கொண்டால்
நல் வார்த்தை கூறி சமாதானப் படுத்துவீராக –

22-அநீதி மதிராம் த்யக்த்வா லோபாதி விஷ தூஷிதாம்
அக தங்காரம் ஆதத்வம் ப்ராஞ்ஞ அம்ருதம் அநு த்தமம்

அமுதத்தை விடமுள்ள கள்ளை விட்டு நன்மை தரும் உட் கொள்வது போல் லோபம் சினங்களினால் வருகின்ற கெட்டதான
அநீதியினைக் களைந்திட்டு நல்ல வறிவை கிட்டிட்டு நல் வாழ்வை பெற்றிடற்கு முயலுங்கள்
விஷமான கள்ளை விலக்கி அம்ருதம் உட் கொள்வது போலே அநீதியை அப்புறப்படுத்தி சிறந்த ஞானத்தை சீராகக் கொள்க –

23–லுளிதா சேஷ சந் மார்கம் லோக வேத விரோதி நம்
பரித்யஜத துர்மாநம் பாஷண்ட மத ஜீவிதம்

மறைகளுக்கும் நன்னெறிக்கும் முரண் பட்ட பாசாண்ட முறைகளுக்கு அடிப்படையாம் மதங்களினை தள்ளிடுவீர்
எல்லா நன்னெறிகளையும் அழிப்பதும் -லோகம் ஸாஸ்த்ரம் இரண்டுக்கும் முரணாவதுமான பவ்த்த ஜைனாதி பாஷண்ட மதங்களைத் தூரத் தள்ளுக –

24–குண சைலாக்ரம் ஆரோப்ய சநைர் ஆத்மாநம் ஆத்மநா
நித்ய சங்கித விப்ரம்சம் நித்யாயத சுபம் யவ

நல் வாழ்வை நாடும் நீர் நல் சிந்தனை பெற்றிட்டீர் -தற் பெருமையை எப்போதும் நீக்கிடுவீர்
உயர்ந்ததாக வெற்பு முனையில் நிற்பவர்கள் அடி வைப்பதில் கவண் போலே –
சுபம் சேர இருக்கும் நீர் மலை உச்சியில் இருப்போர் எப்போதும் தாம் விழும்படி நேருமோ என்ற அச்சத்தோடு
அடி வைப்பதில் கவனம் வேண்டும் -அன்புக்காக ஸத் குணங்களில் ஆத்மாவை வைத்து இருப்பது போலே
ஜனங்களின் குணங்களினால் ஏற்றியவர்கள் எங்கே விழுவோமோ என்று அஹங்காராதி குணங்களில் வரும் ஆபத்தை நினைத்து இருக்க வேணும் –

25–த்ரிவிதாநி விதேயாநி ஸம்பத் ஸூச விபத் ஸூச
கரணா நீவ மித்ராணி கோபாயத குண க்ரஹாத்

மனம் வாக்கு உடல் என்னும் முக் கருவிகள் போல் முவ்வித ஸ்நேஹிதர்களை ஆபத்திலும் ஸம்பத்திலும்
நம்முடனே இணைந்து இருக்கத் தக்கதான உபாயத்தைக் கடைப்பிடிமினோ
மநோ வாக்கு காயம் என்கிற கருவிகள் போல் மூன்று விதமான ஸ்நேஹிதர்களையும் ஆபத்திலும் ஸம்பத்திலும்
நம்மிடையே இணைந்து இருக்கத் தக்கதான உபாயத்தைக் கையாண்டு காத்து வாருங்கோள்
ஸ்நேஹிதர்கள் மூவகை யாவர் -பலன் பெற்றதால் ஸ்நேஹிதன் ஆகிறவன் -பந்துவானதால் ஸ்நேஹிதன் ஆகிறவன்
காரணம் இன்றி பலனை எதிர்பார்க்காமல் ஸ்நேஹிதன் ஆகிறவன் –
ஸ்நேஹிதனை வழிப்படுத்த வழி மூன்று -வெகு தூரத்திலே இருந்து எதிர் கொண்டு வரவேற்றல் -மனம் உவந்து பேசுதல் -வெகுமதி அளித்தல் –

26-அப்ரசாந்தேஷு விஸ் ரம்பம் அதி சங்காம் ஸூ ஹ்ருத் ஸூ ச
நீதி ஸந்தம் சிநா ருத்தே சமுத்தரத கண்டகவ்

நல்ல ஒழுக்கம் இலாதாரை நம்புவதும் -அன்புளாரை அல்லாதார் (பொல்லாதவர் )போல் கருதலும் என இரண்டும் நலத்திற்கு
முள் போன்ற தடையாகும் -பிடுங்கிடுக அவ்விரண்டையும் நல்ல நெறி என்பதான நீதி என்னும் இடுக்கியினால்
அடக்கம் இல்லாதார் இடம் நம்பிக்கை அன்புள்ளார் இடம் அவ நம்பிக்கை என்ற இரண்டும் செல்வ வளத்திற்குத் தடைகளாகும்
தடைகளை நீதி என்னும் இடுக்கியினால் பிடித்து எறிக –

27-ஸ பஞ்ச அங்கேந மந்த்ரேண நீதி மஹாத்ம்ய நிர் விஷாம்
நியச்சத நிஜாங்கேஷு புஜங்கீம் இவ ஸம் பதம்

செல்வம் என்பது ஓர் பாம்பு -சர்ப்பத்தின் நஞ்சு தன்னை எல்லாமாய் அகற்றிட்டல் உடம்பினில் அணிந்திடலாம்
வல்ல நஞ்சினை ஐ அங்கமுடை மந்திரத்தால் அகற்றிடிலாம்
கரு ஊலத்தைக் காத்திடற்கு இவ்வைந்து அங்கங்கள் இருக்க வேண்டும் -கால தேசம் செய் கருவிகள் துணையாளர் வரும் இடுங்கண்
செல்வம் என்பது பாம்பு -அதன் விஷத்தை நீக்கி விட்டால் உடம்பில் விஷம் எடுக்க ஐந்து அங்கங்களோடே சேர்ந்த மந்த்ரம் போட்டுக் கொள்ளலாம்
தேச கால நிலை -செய்யக்கருவி அதே போல் துணை கார்ய பூர்த்தி ஆகிய ஐந்து அங்கங்களோடே ஆராய்ந்து செல்வம்
அரசர் -ராஜ அங்கங்கள் -ஸ்நேஹிதன் -சேனை -பொக்கிஷம் -அரண்மனை- தேசம் -மந்திரி –

28–அவதீரய தாதர்ம்யாம் அர்த்த காமைக ஸாதிகாம்
ந்ருஸம்ஸ ப்ரேய ஸீம் நீதிம் நாரீ ஹ்ருதய தாரு ணாம்

தீயவருக்குப் பிடித்ததான நெறியும் உண்டு பெண்களுடை இதயத்தினும் பயங்கரமாய் இருப்பதாகும் அற நெறியை
உதறிட்டு பொருள் தனிலும் காமத்திலும் நோக்குடைய தீதுடைய நெறிகளை எலாம் தகர்த்திட்டு எறிந்திடுவீர்
ஹிம்சிக்கிறவனுக்கு இஷ்டமான நீதி யுண்டு -அது ஸ்த்ரீகள் பொருள் தர்மத்தின் நின்று விலகி பயங்கரமாய் இருக்கும்
ஹ்ருதயத்துக்கு மேல் காதல் என்ற அர்த்த காமங்களுக்கேயான அந்த நீதியை அப்புறப் படுத்துக –

29–ப்ரமாத ஸப்தகம் த்யக்த்வா ப்ரபுத்ய உபாய ஸப்தகம்
அங்க ஸப்தக ஸம் பத்யா ஜயத த்வீப ஸப்தகம்

ஏழான கேடுகளை உதறிவிட்டு -ஏழான உபாயங்களில் தெளிவுற்று
ஏழான அங்கங்களைப் பெற்றிட்டு ஏழான தீவுகளை வசப்படுத்துக
கேடுகள் ஏழை விட்டு உபாயங்கள் ஏழைத் தெளிந்து அங்கங்கள் ஏழைப் பெற்று த்வீபம் ஏழையும் வசப்படுத்துக
ஏழு கேடுகள் -வேட்டை சூதாட்டம் பாலுறவு மது அருந்துதல் கடுமையாகப் பேசுதல் பிறரை தூஷித்தல் கடும் தண்டனை
ஏழு உபாயங்கள் -விட்டுக் கொடுத்தல் -லஞ்சம் சூழ்ச்சி தண்டித்தல் ஏமாற்றுதல் புறக்கணித்தல் மாய வித்தை
ஏழு அங்கங்கள் -அரசன் தலைவன் மந்த்ரிகள் நலம் நாடுவோர் ராஜ்ஜியம் கோட்டை சேனை
ஏழு தீவுகள் -ஜம்பு -பிலட்ச்ச சால் மலி குச் கிரௌஞ்சம் சாக புஷ்கரங்கள்

30-அரதிகண கூடஸ்தாந் ஆதவ் ஜயத துர் ஐயான்
அபத க்ரோத லோபா தீன் அசேஷார்த்த விரோதி ந

ஆறு வகையாம் விரோதிகளை முதன் முதலிலே வெல்ல வேண்டும் -ஆறு வகைகள் காமம் சினம் ஆசை பற்று கர்வம் பகை
ஆறு இவைகள் தர்மம் செல்வம் ஆசை முக்தி நான்கிற்கு விரோதிகளாம் இவை அனைத்துமே வெல்லப்பட வேண்டியவே
விரோதிகளை வெல்லப் புறப்படும் முன் நீங்கள் காம க்ரோத மோஹ லோப மத மாத்சர்யம் என்ற ஆறு விரோதிகளை வெல்ல வேண்டும்
பல கிளைகளாகப் பிரிந்து இருக்கும் விரோதிகள் முதலில் ஏற்படுவதற்கு மூல காரணமே இந்த ஆறு விரோதிகளே காரணம்
ஆகவே இவை அழிக்கப் பட வேண்டும் –

31–ஆந்த ரேண பலே நைவ த்வி விதாம் வஹத ஷமாம்
யஸ்ய ஸத்த்வே அப்ய சத்த்வேபி கதார்தம் ஷட்விதம் பலம்

பொறை தனை ஆள்வதற்கு பலம் ஆறும் வேணும் என்பர் -பிரதானமாய் மனத் தெளிவைப் பெற்றிட்டால் ஆறு வேண்டாம்
பொறுமையை யுடையனாகில் பொறை தனையும் பெற்றிடலாம்
பூமியை ஆள ஆறு விதமான பலம் வேணும் என்பர் -அதில் முக்கியமான பலம் ஓன்று உண்டு
அது இருந்தால் அந்த ஆறும் இல்லை என்றாலும் குற்றம் இல்லை -அது இல்லையாகில் இது ஆறுமே வீணாமே
அது உள் பலம் தெளிவு என்பதாம் -அதனால் ஒரு க்ஷமை பெற்றால் -அதாவது
பொறுமை யுடையவன் ஆகில் பூமியே -ஷமா -அதீனமாகும்
பொறை -பூமி
ஆறு பலங்கள் -பரம்பரை ஆட்கள் கூலி ஆட்கள் படைத் தலைவர்கள் நண்பனின் ஆதரவு
விரோதியின் விரோதியின் படை -காடுகள் போன்ற பாதுகாப்பு –

32- ந சாபோ ந அபி சரணம் ந வஹ்னிர் ந விஷம் ததா
ந அஸ்த்ராணி ந ச சஸ்த்ராணி யதா தீஷ்ணதமா (ந அஸ்த்ராணி) ஷமா

பொறுமைக்குள் கூர்மையானது பெரும் சாபம் தீங்கு யாகம் நெருப்பு நஞ்சு பலவாயுதம் தீய மந்த்ரம் இவற்றுக்கு இலை
பொறுமைக்குள்ள கூர்மை சாபம் அபிசார யாகம் நெருப்பு விஷம் அஸ்த்ரம் சஸ்த்ரம் எவற்றுக்கும் இல்லை

33-விபக்ஷ ஜாதிபா ஜோபி ஷூத்ரான் அநப குர்வத
ஸூ பர்ண இவ பூ நாகாந் உபேஷத்வம் தரஸ்விந

வலிமையோரே எதிரிகளிடை ஈனரையும் தவறு இல்லாதவரையும் வலிகருடுன் புழுக்களைப் போலே வல்லராம் நீர் விட்டிடுங்கள்
விரோதிகளின் வகுப்பில் சேர்ந்து இருந்தாலும் அற்பர்களாய் அபசாரம் செய்யாதவர்களாய்
கருடன் மண்ணுணி என்ற பாம்புகளை ஒன்றும் செய்யாமல் விடுவது போல் நீங்களும் ஒன்றும் செய்யாமல் விட்டுவிட வேண்டும்

34–க்ருபணாந் ஷம மாணோபி மஹா சத்தவ் ந தைந்யபாக்
ம்ருகேந்த்ர இவ பிந்நேப ஸ்வ தம்ஷ்ட்ரா லேஹிந ககாந்

சிறு தீமையைச் செய்தாலும் சக்தி இலாரைப் பொறுத்திட்டால் பெரும் பலம் யுடையரின் மதிப்பு பாதகம் உறா
யானை தன்னை மறித்து உண்ணும் ஸிம்ஹம் தன் பற்களில் உள்ள மாம்ஸத்தைப் பறித்திடும் சிறு
பட்சிகளைப் பீடிக்காதது போலவே
சிறிது அபகாரம் செய்திடினும் சக்தி அற்றவர்கள் இடம் பொறுமை கொள்ளுவதால் பலம் உள்ளவனுக்கு மதிப்பு குறைவது இல்லை
யானையைப் பிளந்து உண்ணும் ஸிம்ஹம் தன் பற்களின் இடுக்கில் பதிந்துள்ள மாம்ஸத்தைப் பறிக்கும்
குலிங்கம் போன்ற பக்ஷிகளைப் பீடிப்பது இல்லை

35–தேவான் அதிசயா நாநாம் தைத்ய தானவ ரக்ஷஸாம்
விநிபாத நிதாநாநி ஸ்வயம் அந் வீஷ்ய ஸூக்யத

தேவர்களை விஞ்சினோர்கள் தைத்ரியரையும் தானவர்களையும் வேறு அரக்கர் தம்மை எல்லாம்
ஒழித்திடற்கு வழிகளை எல்லாம் ஆராய்ந்து நீர் கடைப்பிடித்து ஆனந்தம் அடைந்திடுங்கள்
தேவர்களையும் விஞ்சினவர்கள் திதி வம்சத்திலும் தநு வம்சத்திலும் பிறந்தவர்களை அழிக்கும் வகைகள்
எல்லாம் ஆராய்ந்து கடைப்பிடித்து ஆனந்தம் அடைந்திடுங்கள்

36- யச ப்ராண ஹரான் கோரான் வ்யாமோஹா விஷ பாத பான்
ஸமீஷா சாண க்ருஷ்டே ந த்யத சாஸ்த்ரேண ஸஸ்த்ரிண

சஸ்திரமுடைய வீரர்களே நற் புகழே உயிராகும் -அதை அழித்திடும் நஞ்சு மரம் அன்னதான அறிவின்மையே
அதனாலே அம்மரங்களை கூர் அறிவாம் சாணை தீட்டிய ஸாஸ்த்ரம் என்னும் கத்தியினால் சுத்தமாக வெட்டி விடுங்கள்

புகழ் -பிராணன் -அஞ்ஞானம் விஷ மரம் -விவேகம் -சாணம் -ஸாஸ்த்ரம் -சஸ்திரம்

37–ஸ்ருத சீலி பிர் உக்தாநி துருத்சேக ஜ்வரா துரா
அப்ரியாண் யபி பத்யாநி மா ஜிஹா ஸத ஜாது சித்

இதன் இடையில் தகா ஆணவம் எனும் காய்ச்சல் தன்னாலே வதை ஏற்படில் சாஸ்திரத்தில் வல்லமை யுடைய பண்டிதரின்
பத்தியமான முறைகள் தமை பிடிக்காமல் இருந்தாலும் ஓத்திட்டு செயல் படுங்கள் ஒரு போதும் விடலாகா
துருத்சேக -ஆணவம்

38- கலி சந்தி சமாக்ராதாம் த்யஜந்த கர்ம கர் புரம்
ஸதஸத் ப்ரேஷணே ஸ்யாத் ஸர்வதோ தத் தத் ருஷ்டய

சண்டையிடலும் சமாதானமும் மீண்டு மீண்டும் வந்து போவதை அண்டாமல் விடுவதற்கு எது நல்லது எது கெட்டது
என்பதிலே தெளிவான அறிவுதனை உற வேண்டும்
த்வாபர யுகம் முடிந்து இது கலியின் சந்தி காலம் ஆகையாலே நன்மை தீமைகளை ஆராய்ந்து
தெளிவான நோக்கு வைத்து இருக்க வேண்டும் –

39–பல்ல வோபம கௌமாரே ப்ரஸூநோபம யவ்வனே
ஸ்திரம் பலம் உபா தத்த்வம் ஜங்கமே ஜீவி தத்ருமே

வாழ்வு என்பது ஒரு மரமாம் -நகரலாவது அதன் சிறப்பு -பால்ய நிலை தளிர் பிறத்தல் யவ்வன நிலை பூ மலர்தலாம்
மேல் வருகிற கனிகளிலே நிலை யுள்ளதைக் கொள்ள வேண்டும்
பாழாக கனி போன்றதாம் சநாதந மாம் தர்மம் ஆகுமே
வாழ்க்கை என்பது ஒரு மரம் -இது ஜங்கமம் -மரம் ஸ்தாவரமாகும் -யவ்வனம்
இதற்கு பால்ய தசை தளிர்களாம் என்பதே விசேஷமாகும்
இனி வரும் கனிகளிலே நிலையானவற்றைக் கொள்ள வேண்டும் -பூ வாகும்-பிஞ்சிலே அழுகும் காய்களைக் கொள்ளலாகாது
ஸநாதன தர்மமே நற் கனியாகும் –

40-மிஷதாம் மீலி தாம் வாபி த்ருதம் தாவதி ஜீவிதே
அநகம் தநுத ஷேம்யம் ஆந்தரம் தநம் அக்ஷயம்

வாழ்வானது ஓடுகின்றது -விழித்து இருப்பினும் உறங்கினாலும்
பாழ் இலாத நிலையான பலனுக்காய் ஆத்மாவின்
ஆழ்ந்ததான அழிவற்ற தாம் உயர் அறிவைப் பெருக்கிடுவீர்
விழித்து இருந்தாலும் உறங்கினாலும் ஆயுள் விரைவாக ஓடுகின்றது
அதனால் குற்றம் அற்ற ஸ்திரமான பலனுக்கான ஆத்ம விஷயமான அழிவற்ற தனத்தைப் பெருக்குங்கள் –

41– அகால நியதோச் சாயம் அதி ஸூர்யேந்து பாவகம்
ஷாத்தரம் ஷபித ஜாட்யம் வ ஷமம் தேஜஸ் சமே திதும்

ஷத்ரியரின் ஒளி வடிவம் ஸூர்யன் நிலா நெருப்பாகிய
அத்தனைக்கும் மேலானதாம் அவை கால மாற்று அடையும்
மதி நமக்கும் சாட்டியம் உள மதிக்குக் குளிர் நமக்கு எனிலோ
அறிவின்மை குறைவிலாத அறிவாற்றல் சீர்மை தருமே
சாட்டியம் -குளிர்ச்சி -அவிவேகம் -மதி சந்த்ரன்
ஸூர்யன் சந்த்ரன் அக்னி ஆகியவற்றுக்கும் மேலான தேஜஸ் ஷத்ரியர்களின் தேஜஸ்
அவற்றின் உயர்ச்சிக்கு கால விவஸ்தை யுண்டு
சந்திரனுக்கு குளிர்ச்சி நமக்கு அவிவேகம் -அவிவேகம் அற்ற தேஜஸ் அபி விருத்திக்கு உரியது

42- அஸம்ப்லாவித ஸப் தாப்திர் அத்ரி லோகீ தமோப ஹா
அதிக ஸூத ஸூதா லிப்தி யஸ்ய கீர்த்தி ஸ கிம் ப்ரபு

பிரபுவானவன் எவன் என்றால் ஏழ் கடலைக் கடப்பதாயும் இருள் தன்னை மூ வுலகிலும் அகற்றுவதும்
திக்கு அனைத்திலும் பரவியுள்ள புகழ் யுடையவனே -பிரபு ஆகான் இப் புகழ் இலான்
ஏழ் கடலும் கடந்ததும் மூ உலகின் இருளை நீக்குவதும் எல்லா திக்குகளிலும் தனது புகழைப் பரவச் செய்யும்
கீர்த்தி யுடையவன் பிரபு ஆவான் -இத்தகைய புகழ் எவனுக்கு இல்லையோ அவன் சரியான பிரபு ஆகான் –

43–ஸூதாம் ஸூமநஸோ யஸ்ய ஸ்வா தயந்தி யஸோ மயீம்
ஸ ராஜா வ்ருத்திம் ஆப்ரோதி ஷீயதே ந ச காலத

அரசனாவான் பண்டிதர்கள் அவன் புகழை அமுதம் என்பார்
பரவிடுமே திக்கு எல்லாம் மறைந்திடாது காலடைவிலே
அரசனின் புகழ் என்பது அம்ருதமாகும் -ஸூ மனஸ்ஸூ க்களான தேவர்கள் அம்ருதம் உண்ணுவதால் வளம் பெறாமல்
அந்த அந்த காலத்தே குறைந்து வரும் சந்திரனை ராஜா என்கிறார்கள்
ஆனால் பண்டிதர்கள் அவன் புகழ் அமுதம் சுவைக்கச் சுவைக்க குறையாமல் அதில் வளம் பெறுபவனே உண்மையான ராஜாவாவான் –

44- த்யக்த ஸாந்த்வேந கடிநாந் வித்ரா வயத தேஜஸா
அயஸஸ் தாபஸே காப்யாம் அவஸ்தா கீத்ருசீ பவேத்

இரும்பைப் போல் கடினமாக இருப்பவர்களை இரங்காமல் உருக்கி ஓட்டுக அணுக இயலா உங்களுடை தீர்த்தியால்
இரும்பைப் போல் கடினமாக இருப்பவர்களை சமாதானப் படுத்தாமல் உங்கள் தீரம் என்னும் தீயாலே
அவர்களை உருக்கி த்ரவிக்கும் படி செய்வீராக –

45-ப்ரஸாதித திசோ யுஷ்மான் விமுக்தாந்ய மஹீ ப்ருத
ஸம் பத ப்ரதிபத்ஸ் யந்தே ஸரித சாகரான் இவ

திக்கு எல்லாம் வசம் கொண்ட பின் செல்வமெலாம் மற்ற அரசரை விட்டுவிட்டு திக்கு நாலையும் அலங்கரிக்கும் கடல்கள் தமை
தம் பிறவிக்கு இடமாம் மலைகளை நதிகள் விட்டு அடைதலை ஓத்திட்டு உங்கள் இடமே உடனேயே வந்து சேருமே
திக்குகளை ஸ்வா தீனமாக்கிக் கொண்ட உங்கள் இடம் செல்வம் எல்லாம் வேறு அரசர்களை விட்டு
நாலு திக்குகளையும் அலங்கரிக்கும் கடல்களை நதிகள் தங்கள் பிறப்பிடமான மலைகளை விட்டு வருவது போல் வந்து சேரும் –

46- ஸ ஏஷ புரதோ யாதா ப்ரஞ்ஞா பரிம் ருஷன் பத
ஸங்கல்ப இவ யுஷ் மாகம் ஸாத்யகி ஸத்ய விக்ரம

உங்களது மன முடிவு போலே உறுதியான தீரமுடைய எங்கும் புகழ் உள்ளவரும் இச் ஸாத்யகி அறிஞர் ஆவார்
நன்றாக மார்க்கங்களை நன்கு அறிந்து உங்களுடைய ஸங்கல்பம் போலவே தான் முன்னதாக சென்றிடுவார்
உங்கள் சங்கல்பம் போலே வீணாகாத பராக்ரமம் யுடையவரும் பிரஸித்தருமான
அறிஞரான நம் ஸாத்யகீ உங்கள் சங்கல்பம் போலவே முன் செல்வார் –

47-பரிவாரேண ஸம் பந்தஸ் த்யக்த கோஷச்ச கார்யத
நந்த கோயம் அனிஸ் த்ரிம்ச ஸம் பதோ மம சத்ரு ஜித்

இச் சாத்யகி என் தனக்கு ஆனந்தம் விளைப்பவராம்
இச் சாத்யகி பணம் தருபவர் இவருக்கு உதவுவோர் பலர்
இச் சாத்யகி எதிரிகளை அடக்குபவர் என் தனக்கு
இச் சாத்யகி நம்பிக்கைக்கு உரியவர் சாந்தமானவர்
எனக்கு ஆனந்தம் விளைப்பவர் -நாந்தகம் போன்றவர் –
நாந்தகம் போல் பரிவாரத்தினால் சூழப்பட்டு காரியம் வந்த போது கோசத்தை விடுபவர்
நாந்தகம் நிஸ் த்ரிம்சம் கத்தி -இவரிடம் உக்ரம் -உங்களோடும் சரஸமாய் இருப்பவர்
நாந்தகம் உரை என்ற பரிவாரம் சூழ்ந்து இருக்கும் போரின் பொது வெளி வரும்
ஸாத்யகி வேலைக்காரர்களால் சூழப்பட்டு இருப்பவர் பணத்தை தானம் செய்பவர்

48-ஜைத்ரம் த்வஜம் இவோத் அக்ரம் ஏநம் ஆஹீத லக்ஷணம்
அநு யாத திசோ ஜேதும் அஸ்த்ர வேதும் இவா பரம்

வெற்றி சீலர் புகழுக்கு உள குணங்கள் தமை யுடையராய்
வெற்றிக் கொடி போன்ற இவர் தநுர் மறையைப் போன்றவராம்
சுற்றிலும் நீர் வெற்றி கொள்ள சாத்யகிரைப் பின் பற்றுக
ஜய சீலராய் பேர் பெற்றதற்கு ஏற்ப பல அடையாளங்களும் யுடையராய் உயர்ந்த த்வஜம் போலே இருக்கும் இவர்
மற்ற ஒரு தநுர் வேதம் போன்றவர் -திக் விஜயத்திற்கு சாத்யகியைப் பின் பற்றி செல்வீராக –

49- வந ஸிம்ஹ நயாத் குப்தி மாந தர்க க்ரமாத் அபி
பரஸ்பர புரஸ் காராத் பவித்ரீ பவதாம் இஹ

சிங்கத்தினையும் காட்டினையும் போலாயும் அத்தாட்சி யூகம் போலே நீர் இருவரும் ஒவ்வொருவரைக் காத்திடலாம்
சிங்கமும் காடும் போலே பிரமாணமும் ஊகமும் போலே நீங்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் காப்பாகலாம்

50–அபி யுஷ்மாபிர் ஏதாவத் அஹங்கார க்ரஹோஜ்ஜிதை
அங்கீ க்ருதம் அமுஹ்யத்பிர் ஆதுரைர் இவ பேஷஜம்

இறுமாப்பு என்னும் பிசாசுக்கு அகப்படாத நீங்கள் மோகம் சிறிதும் இன்றி நோயாளி மருந்து தனைக் கொள்ளுவது போல்
அறிவுரைகள் இவற்றை எலாம் இசைந்திட்டு ஏற்றீரோ
அஹங்காரம் என்கிற பிசாசிற்கு அகப்படாத நீங்கள் மோகம் சிறிதும் இன்றி வியாதி யுள்ளவன் ஓவ்ஷதத்தை
ஏற்றாற் போலே சொன்ன விஷயம் எல்லாம் இசைந்து பெற்றீரா என கண்ணன் வினவினான் –

51–இதி ஸூக்தி ஸூதாம் பீத்வா சவுரி வக்த்ரேந்து நிஸ் ஸ்ருதாம்
ஸஹஸா நரதே வாஸ்தே ஸுமநஸ் யம் ப்ரபேதிரே

சந்திரனின் அமுது போன்ற சவுரி ராஜனின் அறிவுரைகளை
இன்னமுதை தேவர் போலே அருந்திட்ட அவ்வரசர்
சிந்தையிலே ஒன்றி யராய் தெளிவுற்றராய் மகிழ்ந்திட்டரே
சவுரி ராஜன் திருவாய் மலர்ந்து அருளிய சந்திரனின் அமுது போன்ற ஸூக்திகளைக் கேட்டு அரசர்கள் மனம் தெளிந்து உவந்தனர் –

52-தத் யுக்தம் சுகவத் ஸர்வே ஸஹல்ல பந்த பரஸ்பரம்
ப்ரகர்ஷமத துஸ் தஸ்ய ப்ரவிஷ்டா நீதி பஞ்ஜரம்

கண்ணனுடைய சொற்களினை கிளிகள் போலே தங்களிடையே
மீண்டு மீண்டும் சொல்லியராய் மாதவன் அமைத்த நெறியாம்
கூண்டுக்குள் தங்கியராய் களிப்புற்றனர் அரசர்களே
கண்ணனுடைய சொற்களைக் கிளிகளைப் போலே ஒருவருக்கு ஒருவர் சொல்லிக் கொண்டு
அவன் நியமித்த நீதிக் கூட்டினுள்ளே தங்கி களிப்புற்றனர் –

53–த்ருஷிதைர் இவ தே ஸ்ரோத்ரை ஸம்பூத ஸ்ருதி ஸுரபாம்
பபுஸ் ப்ரிய ஹிதாம் தஸ்ய பரி ஸூத்தாம் ஸரஸ்வதீம்

இனிமையாயும் நன்மை யுள்ளதும் வேத மணம் வீசுகின்றதும்
புன்மை யற்றதுமான கண்ணன் பேச்சுக்களை தாகம் உள்ளன
அன்ன காதுகளால் பருகினர் அங்கு இருந்த அரசர்களே
இஷ்டமானதும் ஹிதமானதும் கண்ணனின் வேத மணம் வீசும் வாக்கை தாகம் உள்ளன போன்ற காதுகளைக் கொண்டு பருகினர்
காதினால் இதைக் கேட்டதே எல்லா இந்திரியங்களுக்கும் இஷ்டம் அளித்தது போல் இருந்தது என அறிவிக்க
மணம் குடி இரண்டையும் சேர்ந்ததாம் –

54– அசந்தேஹ விபர் யாஸாம் அசங்கீர்ண ஹித ஹிதாம்
த்ரயீம் இவ கிரம் தஸ்ய மாந யந்தி ஸ்ம தே ந்ருபா

ஐயத்திற்கும் குழப்பத்திற்கும் இடம் இன்றியும் நலம் தீமையை
ஐயம் இன்றிக் காட்டுவதும் ஆணவவன் வாக்குகளை
வைய வேந்தர் வேதத்தைப் போல் மதிப்பாய்க் கொண்டாடினர்
சந்தேகத்திற்கும் புத்தி மாறாட்டத்திற்கும் இடமாகாததும் நன்மை தாமைகளைக் கலக்கம்
இன்றிக் காண்பிப்பதுமான கண்ணனின் வாக்கை அரசர்கள் வேதத்தைப் போலவே மதிப்பாகக் கொண்டாடினார்கள் –

55-அத யாதவ யூதேந ஸஹித ஸம் யுக ப்ரிய
ஸாத்யகி பிரஸி தோத் தம்ச பிரதஸ்தே பர்த்துர் ஆஞ்ஞாய

தலைவருடை உத்தரவை தலையில் ஏற்ற ஸாத்யகியும்
தலைவருடை யாதவருடைத் திரளுடனே புறப்பட்டனே
பிறகு போரில் ப்ரீதியுடைய ஸாத்யகியும் பார்த்தாவின் ஆஞ்ஜையை சிரம் மேல் கொண்டு யாதவர்கள் திரளுடனே புறப்பட்டான்

56–தர்ம குப்தி க்ருதா தேச ஸ மேநே மது வைரிணா
அப்ருக்த்வம் இவா பன்னம் அந்யத் ஆயுத பஞ்சகம்

அறம் தன்னைக் காப்பதற்கு இட்ட வந்த ஆணை தனைப்
பெற்றிட்ட அச் ஸாத்யகி பிரான் தன ஐம் கருவிகளே
மற்ற ஒரு வடிவுற்றது போல் மாறினவனாய்ப் புகழ் உற்றனே
தானே தன் கொடியான கருடனை நிறுவிய அரியால்
தர்மத்தைக் காப்பதற்கு செய்த ஆஜ்ஜையைப் பெற்ற அந்த ஸாத்யகி கண்ணனாலே ஒன்றாக தனது
பஞ்சாயுதங்களே வேறு வடிவு எடுத்து சேர்ந்து இருப்பதாக கௌரவிக்கப் பட்டான் –

57-ஸ்வ கேது கல்பநா பூர்வம் நியுக்தம் ஹரிணா ஸ்வயம்
தமேவ தாத்ருஸா காரம் தம் அமந் யந்த யாதவா

ஆணை இடப்பெற்றுள்ள ஸாத்யகியை அவன் உருவில் தோன்றி யுள்ள கண்ணன் என்றே நினைத்தனரே யாதவரே
ஹரியினால் ஆஞ்ஞாபிக்கப் பட்ட சாத்யகியை அவன் உருவில் தோன்றி யுள்ள கண்ணன் என்றே நினைத்தனரே யாதவரே

58-ஸ வீரஸ் ஸாஸனம் பர்துஸ் சிரஸ் த்ராணம் இவோத் வஹந்
அமன்யத ஜித ப்ராயா ஸஹ திக்பதி பிர் திச

தானே யோர் வீரனான ஸாத்விகியோ கண்ணனுடைய ஆணையைத் தன் தலைப்பா போல் அணிந்ததுமே
திக்கை எல்லாம் தானே அவற்றின் இந்திராதி தேவர்கள் உடன் சேர்ந்தே தானே வென்றிட்டதாக மனத்தால் முடிவு செய்தனனே

59-பயோதிம் தர்ணக பதம் பர்வதம் ஸிக தா மயம்
பாதாளம் ச ஸ்தலீ ப்ருஷ்டம் ப்ரஷை தாமித

அளவற்ற அடலுற்ற அச் சாத்யகி கடல் தன்னை இளம் கன்றின் குளம் படியைப் போலாகவும்
மண் திட்டுப் போலே மலை யதனையும் கீழ் உலகினைத் தரையாகவும் கண்டனன் –

60-ப்ரயாண படஹஸ் தஸ்ய பிரளயாம்பு தடம் பர
நூநம் ஆநர் தயாமாச புவம் ஸஹ பயோதிபி

பிரளயத்து முகில் முழக்கம் போல் போர்க்கு அவனுடைய பறை ஒலிகள் நானிலத்தை பரவைகளாம் -கடல்களாம்
நான்குடனே பரபரப்பாய் ஆட்டி வைத்தது -ஆனந்தமாகத் தோன்றிற்று

61-ப்ரயாந்தி ப்ருத நா ஸத்ய ப்ராணா தைர் த்யாம் அபூரயத்
வைரி வாஸக ஸஜ்ஜாநாம் கணைர் அப் ஸரஸாம் அபி

புறப்பட்ட படை வானம் முழுவதையும் தன் ஒலிகளால் நிறைத்திட்ட அக்கணமே அவனுடைய எதிரிகளான
அரசர்களை பதிகளாக-பர்த்தாவாக -ஏற்றிடற்கு ஏற்பாடுகள் புரிந்து வரும் வானுலகப் பெண்டிராலும் விண் நிறைந்ததே

62-அதி ருஹ்ய ரதம் ஜைத்ரம் ஸ பபவ் தார்ஷ்ய ஸந்நிபம்
ஜிகீ ஷித திசா சக்ர சக்ர பாணிர் இவா பர

திக்கை எல்லாம் வென்றிடற்கு ஸாத்யகியும் புள் அரசை
ஓக்க ஒரு தேரில் ஏறி ஆழியான் போல் விளங்கினானே

63-திவ்ய துந்துபி கோஷேண புஷ்ப வர்ஷேண பூயஸா
அசரீரி ஜய யுக்த்யா ச தேந ஜஜ்ஜே ஜிதம் ஜகத்

அமர் உலகில் துந்துபியின் அதிர் ஒலியும் மலர்ச் சொரிவும் உமக்கே செயம் என்று என்று வான் ஒலியும்
கிளர்ந்திடவே நமக்கே தான் வெற்றி என்று நிச்சயித்தான் ஸாத்யகியுமே –

64–ஸ விஷ்ணுர் இவ விக்ராந்த்யா பலி த்வம்ஸோத் யதா பலீ
ஸூஷுவே த்ரி ஷு லோகே ஷு கீர்த்திம் த்ரி பதகாம் இவ

பலவானாய் ஸாத்யகியாய் பல பலிகளை-பலசாலிகளை – அழிக்க யுளனாய் பலவானாய் பலியை வென்ற பரமன் தனைப்
போன்றவனாய் உலகம் மூன்றிலும் கங்கை போன்ற உயர் புகழைப் பரப்பலானான்

65- ததோ புத்புதபேநாபை பிரசிதாம் சத்ர சாமரை
நிநாய ப்ருத நாம் ப்ராசீம் காங்காம் இவ பகீரத

கங்கையினை பகீரதனே கொண்டு சென்றது போல் முதலில் தன் சேனையைக் கீழ் திசையில் செல்வித்தனன்
சேனையிலே எங்கும் குடை சாமரங்களும் நீர்க்குமிழி போல் நிறைந்தனவே –

66- ப்ருதநா சாகரவ்கேந பாலயன் சாகராம்பாராம்
வீரோ வேதஸ வ்ருத்தீ நாம் ந பங்கம் அபி சந்ததே

கடல் சூழ்ந்த புவி காக்கும் ஸாத்யகி தன் சேனை யாகிற கடல் வெள்ளத்தின் வேகம் தெரிந்து அஞ்சி நாணல் போல்
அடங்கிட்டு வணங்கியராம் அரசர்களை அழிக்க வில்லை –

67-மஹத் பிர் அபி தத் ஸைந்யே ஸம் பதத்பிஸ் ஸூ ஹ்ருத் பலைஸ்
ந வ்ருத்திர் அபவத் த்ருச்யா வர்ஷ தோயைர் இவாம்புதவ்

நண்பர்களின் சேனைகளும் சேர்ந்தவையாய்ப் பெருகிட்டு மண்டியதால் மழை பெய்கையில்
முந்நீரின் அளவு போலே கண்டிட இயலாதது போல் முன் சேனை அளவு தெரிய வில்லையே
முன் சேனையே கடல் போலே அபரிமிதமாய் இருந்ததே

68-அசோபத பாதகாக்ரைர் அக்ரஹஸ்தைர் அநீ கிநீ
நிரதிஸ்ய கண யந்தீவ ஜே தவ்ய விஷயான் நிஜை

முனைகளில் துணி கட்டிய கொடி மரங்களைக் காணும் போது சேனை தான் வெல உள நாடுகள்
தமை கை நீட்டிக் குறித்து எண்ணி கணக்கிடுதல் போல் இருந்தது

69- தமீதி வஸயோஸ் தத்ர ப்ருதிவ் யாகாசயோர் அபி
சம பத்யதே தாதாத்ம்யம் ஸைன்ய ரேணு ஸமுத்திதம்

விரைகின்ற சேனைகளால் கிளப்பிய தூள் எங்கிலுமாய் பரவியதாய் இரவுக்கும் பகலுக்கும்
வானுக்கும் தரையினுக்கும் வித்தியாசம் தெரியாமல் போயிற்றே –

70- அஸூசி முக பேத்யம் தத் அசந்த்ரார்க ப்ரீதி க்ரியம்
ருரோத த்விஷதாம் த்ருஷ்டிம் ரஜஸா ஜனிதம்

தூளிகளினால் ஏற்பட்ட நிரைந்த இருள் தொகுப்பானது ஊசி முனையும் புகா படியும் அவனாலும் பரிதியாலும்
சந்த்ர ஸூர்யராலும் நீக்கலாகா படியுமாகி எதிர் பார்வையைத் தடுத்திட்டதே –

71-அப்ரதீப மருத் ஷிப்த பராக ப்ரசரன் புர ஸ்
ஆ சந்த விநி பாதாநாம் வைவர்ணயம் அதிசத் த்விஷாம்

எதிர்பின்று அநு கூலமாம் காற்றாலே கிளப்பிட்ட அத்தூள் முன் பரவி அழியும் எதிரி நிறத்தை மாற்றியதே

72- தூம கம்பல சாந்த்ரேண ரேணுநா ககந ஸ்தலீ
நமந்தீம் ஸைன்ய பாரேண சநைர் அநுஜ காம காம்

வானமானது புகைத்திரள் போல் அடர் தூள்களால் கம்பளம் போல் ஆனதுவாய் படை பாரம் அதிகமானதால்
தாங்க இயலா தான் புவிக்கு அருகில் தாழ்ந்திடுவது போல் ஆனதுவே

73-பிருதிவீம் வர்த்தயந்தீவ ப்ருதநா கண்ட யந்த்யபி
பராகைஸ் பூர யாமாஸ காதம் சகர ஜன்ம நாம்

நடமாட்டம் செயும் சேனை யால் சகம் பிளவு படுவதனால் படையானது தன் தூள்களால் சகர புத்ரர்
தோண்டியதாம் இடத்தினிலே நிரப்பி இப் புவி வித்தரித்தல் போல் ஆனதே

74–த்வஜ பல்லவித ஸேநா ஸஸ்த்ர புஷ்பா பராகி ணீ
பபவ் சஞ்சூரிய மாணேவ ம்ருத்யோர் உப வநஸ் தலீ

பிற படைகளை அழித்து வரும் பெரிய படை யமனுடைய பெரும் தோட்டமே நகர்கின்றது போல் ஆனதே
படைகளின் நெடும் கொடிகள் எல்லாம் தளிர் போலவும் அம்புகள் பூக்கள் போலவும் படைத்தூள்கள் மகரந்தப் பொடி போலவும் தோன்றினவே –

75- ஸா நூ நம் அநு குர் வாணா ஸிந்து பத்ன்யவ் ஸிதா ஸிதே
குடில பிரதிகூலர்த்தி கூலங்கஷ கதிர் யயவ்

தடுக்கின்ற பலமுடைய சேனைகளாம் கரைகளையும் உடைத்திட்டு இந்தப்படை வளைந்திட்டுச் செல்வதனால்
கடல் தன்னின் வெளுப்பாயும் கருப்புமான மனைவிகளான வட கங்கை யமுனையையும் ஒத்து விரைவாய் சென்றதுமே
கறுப்பு -யமுனை -கங்கை -வெளுப்பு

76–விஸ்வத ப்ர ஸ்ருதிஸ் தஸ்யா பபூவ பஹு பத்ததே
வாஹ பந்தன கீலா நாம் அபர்யாப்த வந த்ருமா

பல் வழிகளில் போகின்ற அப்படை பரப்பு மிகுந்ததான நிலைகளினால் குதிரைகளையும் யானைகளையும் கட்டுதற்கு
முளைகளுக்கு முழுக்காடும் மரங்களும் போகாதபடி யாயிற்று –

77-அவிச்சின்ன குணாம்ஸ் சக்ரே நிஸ்த்ரா ஸாந் நிஜ ஸேநயா
ஹாராந் இவ புவ கத்தாந் அக்ர ஹாராந் பரார்ப்பிதாந்

பிராமணருக்கு அளித்திட்ட பரி சுத்தமாம் மனைகளுள்ள தெருக்களினை அவர்களுக்கே திருப்பிட்டு பூ தேவியை
பெரிதாக அலங்கரிக்கும் இரத்தினங்கள் மாலை போன்று சிறக்கும்படி தன்னுடைய சேனையினால் செய்வித்தனே –

78–அநாஸ்ரம பதா ஸந்நாம் அபீஷித க்ருஷீ வலாம்
அநை ஷீத் மஹதீம் ஸேநாம் அவிருந்தா நா

தன் சேனையை ஆஸ்ரமங்களுக்கு அருகில் செலா படியும் மண் பயிரிடும் குடிகளுக்கு
பயமூட்டா படியாகவும்-தன் மீதிலே பகை இலாரைக் காக்கும்படியாகவும் செய்தனனே

79-ஸ்வ தேஸாத் அவி சேஷேண ஸ்வீ க்ருதே சத்ரு மண்டலே
ந யோதா ஜக்ரு ஹு தத்ர கிஞ்சித் அஸ்வாமி ஸம் பதம்

வசமான எதிரி நாட்டிலே தன் நாடு போல் சொத்துக்களின் வசம் உளோரின் இசைவின்றி வீரர்கள் கைக் கொள்ள வில்லை –

80–விஹாராஸ் தஸ்ய ஜன்யேஷு விமதா நேவ நிக் நத
சமம் தத்ரு சிரே தேவைஸ் தத் தத் ஜாந பதைர் அபி

சண்டைகளில் பகைவர்களை மட்டும் வதை செய்வதனை விண் தேவரும் அந்த அந்த தேச
மக்களும் அச்சம் இன்றி கண்டு கொண்டு இருந்தார்கள் சிறிதும் அச்சம் இல்லாமலே –

81–அதீன சத்த்வ ஸத் ரூணாம் தீந ஸம் ரக்ஷண வ்ரதீ
அந்வ கம்பத தாத் ரீபிர் உப நீதாந் ஸ்த நந்த யாந்

குறைவிலாத வலியுடையவனும் ஏழைகளைக் காப்பதற்கு விரதமுடைய ஸாத்யகி தான் அழித்திட்ட
எதிரிகளின் சிறு குழந் கருணை புரிந்தான் –

82-அத்ருஷ்ட ஸைன்ய ரஜசாம் அபாண ஸ்பர்ச வேதி நாம்
பஸ்யன் க்வசித் அமித்ராணாம் ஸ ஜிஹ்நாய பலாய நம்

இது வரையில் சேனை இந்தூள் என்பதையே காணாதரும் எதிர்த்து வரும் அம்பினது அடி அறியாதாருமான

83- ஸ மித ஸுர்ய சங்கர் ஷாத் அராதீந் அபி நிக் நத
புநர் உத்தீப் யாமாஸ ஸத் காரேண கரீயஸா

பராக்ரமம் காண்பித்து பகைவர்களைக் கொன்ற தனது வீரர்கள் பலருக்கு வெகுமதி மிக அளித்திட்டு
திரும்பவுமே உத்ஸாகம் தனை வளர்த்தான் ஸாத்யகியே

84–க்ரோத பாவக தீப்தா நாம் ஹேதி நாம் யது புங்கவ
விததுஸ் தத்ர வைரி ஸ்த்ரீ பாஷ்ப தோயேந ஸேசநம்

கோபம் என்ற நெருப்பினில் காய்ச்சிட்ட தம் ஆயுதங்களை யாதவகுல வீரர்கள் எதிர்த்திட்ட
விரோதிகளின் மாதர்களின் கண்ணீர்களின் வெள்ளத்தில் தோய்ந்தனரே

85–நிஹத ப்ரதி மாதங்க தந்தத் சரு பரிஷ் க்ருதான்
த்விஷதாம் மௌலி சாணேஷு கட் கான் முஹுர் அசாதயன்

எதிரிகளின் யானைகளை அழித்திட்டு பெற்றிட்ட தந்தங்களின் பிடிகளை யுடைய கத்திகளினை
எதிரிகளின் தங்க தலை அணிகளாம் சாணல் கற்களிலே தீட்டினார்கள் –

86– ஸஸ்த்ர தாரா தரைஸ் தத்ர விக்ர மாரண்ய பர்ஹி ணீம்
விபுலே புஜ சைலாக்ரே வீர ஸ்ரியம் அநர்த்த யந்

திக் விஜய வெற்றி எனும் காட்டில் உள மயில் போன்ற வீர லஷ்மி தனை பரந்த தோள்களின் மேல்
கணைக் குவியலாம் கார் மேகங்களைக் கண்டு கூத்தாடச் செய்தனரே

87–நியதம் ஹேதயஸ் தேஷாம் நிபீ தே வஹ்நி வாரிணீ
நித து சத்ரு நாரீ ணாம் சித்தேஷு நயநே ஷு ச

அவர்களுடைய கணைகள் தாம் உண்டான போது உண்ட ஜ்வாலையும் நீர் தனையும் செறு நர்களின்
மனைவியரின் கவலை யுடை மனங்களிலும் கண்களிலும் சேர்ந்தனவே
ஆயுதங்களை செய்ய நெருப்பிலே காய்ச்சி நீரிலே தோய்ப்பார்கள் அன்றோ

88-அல பந்த க்ஷணாத் தேஷாம் புரத பரி பந்தின
தநுஷா நமதா ஸ்வர்கம் வபுஷா து வஸூ ந்தராம்

எதிர்த்திட்ட பகைவர்கள் அப்போது வளைத்திட்ட யதுக்களுடைய வில்லாலே ஸ்வர்க்கத்தையும்
வணங்கிட்டவர் தலையாலே இவ்வுலகில் சுக வாழ்வையும் பெற்றனரே
வணங்காதவர்கள் வீர ஸ்வர்க்கத்தையும் -வணங்கினவர்கள் இங்கேயே நல் வாழ்வையும் பெற்றனரே

89–கூர் ஜரான் பாரசீகாம்ஸஸ் ப்ராகேவ ப்ருத கீத்ருதான்
அபஸ் சாத் பத வின்யாஸாந் அகரோத் அக்ர யாயி ந

முன்னமேயே வசப்படுத்திய மஹா வீரரான கூர்ஜரரையும் -குஜராத் தேசத்தவர் -அன்னவரராம் பார்சியரையும்
அணியில் முன் செல வைத்தானே

90–மத்ய தேசம் வசீ க்ருத்ய யோ கீவ பிரதமம் மந
ப்ரத்யந்த பஹி ரஷாணி த்யாஜிதார்த்தாந் யதா கரோத்

நிஷ்டை செய்வோர் முதலில் தம் மனம் தன்னை வசமாக்கி விட்ட பின்னர் வெளி இந்திரியங்களுக்கு பொருள் தொடர்பை
வெட்டிடுதல் போல் ஸாத்யகி நடு நாட்டை முதலில் கவர்ந்திட பின்னர் பிற நாடுகள் தமை தன்னுடை வசம் கொண்டனனே

91–க்ருஹீத சரமாம் போதீ ந் கருத்மாந் இவ ஜக்ரஸே
தன் விநஸ் துரகோ பேதான் விமுகான் புஜகாந் இவ

புள்ளரசன் கருடனாவான் பாம்புகளை விழுங்குவது போல் மேல் கடலைச் சார்ந்தவராம் வில்லாளரை விழுங்கிட்டானே
பாம்புகளுக்கு பல தலைகள் இருந்தாலும் தலை தொலைந்த நிலை பெற்றனவே

92-யதவஸ் தத்ர நிஸ் த்ராஸா யவநைர் ஸ்தனயித் நுபி
சைலா இவ தநுர் பீமாம் சர வ்ருஷ்டிம் உதீரிதாம்

இயமன்கள் போன்றவராம் இயவனவர்கள்-(இயவன நாட்டு வீரர்கள் ) பெய்திட்ட பயங்கரமாம் அம்பு மழையை யாதவர்கள் ஏற்றனரே
பயம் சிறிதும் இல்லாமல் பெரும் மலைகள் அசைவின்றி புயல் முகில்கள் பெய்திட்ட பெரும் மழையை ஏற்பது போல்

93– ரக்த சந்தன திக்தாஸ் தே யசோபி ஸ்ரக் விணஸ் ததா
ஜய ஸ்ரீ பரி ரம்பார்தம் நை பத்யம் இவ பேஜிரே

உடல் எங்கும் காயங்கள் உண்டாகி புகழ் மாலைகள் உடன் தோன்ற யது வீரர் ஜய லஷ்மியை அணைவதற்காய்
உடல்களிலே சந்தனமும் வெற்றி மாலையும் அலங்காரமாய் இட்டனராய் வெற்றி தனின் அறிகுறியுடன் பொலிந்தனரே –

94–கபி ஸூஷித தாலாபை க்ருத்தைர் யவந மூர்தபி
தத்ருசே கால ப்ருத்யா நாம் தத்த பிண்டேவ மேதி நீ

சண்டை பூமியில் குரங்குகளால் குடித்திட்டு போட்டவான பனங்கனிகள் போன்றதாயும்
யமபடற்கு அளித்திட்ட பிண்டங்கள் போன்றதாயும் யவனர் தலைகள் இருந்தனவே

95-பீதே யவன சைன்யாப்தவ் தத் கோப பட வாக்நி நா
ஸாகாத்யா சரணம் ஜக்மு சங்க்யா காதங்கே ந ஸாத்ய கீம்

இயவனரின் படை என்னும் கடல் சீற்றம் எனும் வடவாக்னியால் விழுங்கப்பட்டு சகா மன்னர் வரும்
தீங்கை எண்ணிட்டுப் பயந்தவராய் ஸாத்யகியின் பாதங்களில் சரண் அடைந்தனரே –

96–ப்ரவாள பல்லவாஸ் தீர் ணாம் ரத்ன புஷ்பவ்க கர்ப்புராம்
விஹார பதவீம் மேநே வேலாம் அபர வாரிதே

மன்னர்கள் செலும் இடங்களில் முளை இலைகளும் புஷ் பங்களும் நன்றாக இரைத்து வர வேற்றிட மேல் கடல் கரையிலே
இன்பம் தரும் பவளங்களை இலை போலவும் ரத்தினங்களை நன் மலர் போல் இட்டதும் தனக்கென ஸாத்யகி எண்ணினானே –

97-ப்ரசேத ஸாபி துஷ் ப்ராபை ப்ரவாள மணி மவ்க்திகைஸ்
தம் போத வணி ஐஸ் தத்ர ப்ரபூதை பர்ய தோஷயந்

வருணனும் பெற மாட்டாத முத்துக்களும் பவளங்களும் ரத்னங்களும் கப்பல்களில் வணிகர்கள்
ஸாத்யகிக்குப் பெரும் மதிப்பாய் அளித்திட்டுப் பாராட்டி மகிழ்வித்தனர் –

98-நிர் தூத நிக மாம்ஸ் தத்ர நைகமாந் அபராந்த ஜாந்
ஸ வைத்ய இவ துர் வ்யாதீன் துர் ஐயான் அஜயத் விபுஸ்

மேலை தேச வணிகர்கள் வெல்ல இயலாதவரான நிலையினில் இருந்தாலும் சேனைகளின் உதவியால் குலைத்திட்டு
வைத்யனானவன் கொடியதான நோய்களை வெல்வது போல் அவர்களை எல்லாம் வென்றனனே ஸாத்யகியே

99–விஹரன் வாருணீ பாஜா ஸ வீரோ விஜய ஸ்ரீ யா
பபூவ பர் பர ஸ்த்ரீணாம் பரிதே வந தேசிக

வீரனான ஸாத்யகியும் வாருணியைக் கொண்டிட்ட தீர வெற்றி எனும் திருவுடன் விளையாடுகின்றவனாய்
பர் பரம் என்னும் தேச பெண்களின் அழுகைக்கு ஆசான் ஆனான்
வாருணி -மேற்குத்திக்கும் கள்ளும்
கள் குடித்த பெண்கள் உடன் விளையாடும் புருஷனைக் கண்டா ஸ்த்ரீகள் கண்ணீர் விட்டு அழுவது போல்
ஸாத்யகி மேற்குத்திக்கை வென்றதைக் கண்ட பர்பர தேச ஸ்த்ரீகள் கண்ணீர் விட்டனர் –

100–உதந ஹ்யந்த வார்ஷ்ணேயா குந்தாளாந் சமரஸ் லதான்
ப்ரவாலைர் அபாரம் போதேர் ஆந்த்ரைர் இவ ஸமுத்த்ருதை

விருட்டிணிகள் குந்தளர்களின் குடல்களினை கிழித்திட்டு இறந்தவர்களை வீர ஸ்வர்க்கம் அனுப்பி விட்டுக்
கடலில் இருந்து பெற்ற பவழக் கொடிகளால் தம் கூந்தல்களைக் கட்டினரே

101-ததோ விலுலித ம்லேச்ச பஸ்சிமோததி வேலயா
அநில ப்ரேய ஸீம் ஆசாம் அமனுஷ்ய பதம் யயவ்

அதன் பின்னர் ஸாத்யகியும் அத்திரியரை -மலை வாசிகளை -அழித்திட்டு அதன் பின்னர் மேற் கடற்கரை
அதன் வழியாய் மனிதர்கள் வதியாத-வசிக்காத -இடமான வாயு வுக்குப் பிரியமான -வட மேற்குப் புறம் சென்றனனே –

102–ஹாரீத ஹரிதைஸ் தத்ர மஹார் கைர் மணி ராசிபி
க்ருஹீ தைர் அன்வ க்ருஹ் யந்த தேந போத உப ஜீவிந

அவ்விடத்தில் ஆரீத பறவை போல் நிறமான விலை மிக்க கரும் பச்சை வண்ணத்தில் ரத்னங்களின்
குவியல்களைப் பெற்றிட்டு கப்பலோட்டி வாழ்வாருக்கு அள்ளி அள்ளிக் கொடுத்திட்டு அருள் புரிந்தான் ஸாத்யகீயே

103-பஸ்சிமாம் திசம் ஆக்ரம்ய பிராங்முகம் ரதம் ஆஸ்திதம்
விபரீத கதிம் ஸூர்யம் உதீஸ் யாஸ்தம

மேற்கில் இருந்து கிழக்காக தேரில் செல்லும் ஸாத்யகீயைப் பார்த்திட்டு வடக்கில் உள்ளோர்
பகலவனே -ஸூர்யனே -திசை மாறி மேற்கின் நின்றும் கீழ் திசைக்குப் போகிறானோ என்றனரே

104-ஸ கிருஷ்ண வர்த்ம விஹ்ருதிர் யுகாந்த இவ ஸம் யுகே
அமித்ர லோகம் அதஹத் தீப்த ஹேதி கணோல்பண

கிருஷ்ணனே காட்டிட்டே வழியிலேயே போகின்றானாய் பிரகாஸமாம் ஆயுதங்கள் பலவுடைய ஸாத்யகீயே
பிரளயத்தின் பெரும் அக்னி பரவுவது போல் பகைவர்களின் திரள்களினை பெரும் அளவில் நன்றாக அழித்திட்டானே

105-அநப்ப்ர வித்யுத் ப்ரதிமா சாயகாஸ் தஸ்ய தன்வின
அபவன் ஹுண நாரீ ணாம் அஸ்ரு வர்ஷ புரஸ் ஸரா

அவ்வீரன் எய்திட்ட அம்புகள் எல்லாம் மேகம் இல்லாத மின்னல் போல் முரடிகளின் -முரட்டுப் பெண்களின்
கண்ணீர் மழைக்குக் காரணமாயின -மூலமாயின –

106-த்விஷதோ தேவ த்ருஷ்யே ஷு ரண ரங்கே ஷு திவ்யதே
தாண்டவம் க்ராஹ யாமாஸ நிபாதித சிரோ தரான்

சண்டையிடும் அரங்கத்திலே தேவர்களும் நேரடியாகக் கண்டு வர விரோதிகளின்
தலைகளை வெட்டித் தள்ளி ஆட்டம் கற்பித்தான்

107-அபரஸ்பர ஸா பேஷான் அதூ ணீர் ப்ரகாசகான்
அசம்சத் ப்ரதி யோதா அபி அவ தீரித ஜீவிதான்

அம்புறைகள் இல்லாமல் ஒருவருடைத் துணையும் இன்றி தம் உயிர்களைப் பாராமல் சண்டையிடும்
பகைவர்களின் தன்மையினை ஸாத்யகீயே தாராளமாகப் புகழ்ந்தானே

108–மஹாந்தோ மண்டலம் சேரு மத்யே ப்ரதிபலம் த்விபா
ப்ரளயோ தந்வத் ஆவர்தே பிரமந்த இவ பர்வதா

எதிர்த்து வரும் படை நடுவில் யது படையின் பெரிய யானைகள் அதன் வேகத்தினை சுழன்று தடுத்திட்டன
பிரளய கால உததி தன்னின் சுழல்களிலே உயர் மலைகள் சுழல்வது போல்

109-தத்ர ஸைன்ய ரஜஸ் சக்ரே ப்ரதீ சீர் அபி வாஹி நீ
அஸமாஹித புத்தீ நாம் சித்த வ்ருத்தீர் இவாஸ் அவிலா

படை கிளப்பிய தூளானது மேற்கே செலும் ஆறுகளைக் குடைந்திட்டு கலக்கியதே மனத்தை ஒருமித்தற்கு முடியாதவர்
இடம் ராஜஸ குணம் உட்புற சிந்தனையை இடம் ஒன்றில் நிறுத்திடற்கு இயலாமல் கலக்குதல் போல்

110–த்ராச முக்தம் புனஸ் தத்ர ஸிந்து காம்போஜ யோஷிதாம்
அஸ்ரு பிந்து பிர் ஆ பந்தி மௌத்திக ஸ்தந மண்டநம்

முத்தணிகள் அலங்கரித்த மார்பகங்களை யுடையவராம் சிந்து காம்போஜ நாடுகளின் நங்கைமார்கள்
அச்சத்தினால் சிந்திய பெரும் கண்ணீர் நகைகளுக்கு அணியானவே

111-அக்ருஷ்ட பஸ்ய குஸ் ருணாம் அச்சின்னவ்க மஹா பாகாம்
அகர்ம க்லாபி தாராண்யாம் அநகாம் புவம் அன்வ பூத்

இயல்பாக வளர்ந்திட்ட குங்குமப் பூ கொடிகளையும் -இயல்பாகப் பெருகிட்ட பெரியதான நதிகளையும்
இயல்பாக அனல் கோடைக்கு இடமாகாக் காடுகளையும் வயமா உடை எழில் மிகு காஸ்மீர நாட்டை அனுபவித்தானே

112- அஸ் வீய குர நிஷ் பிஷ்ட பூதர ஷோத பூயஸா
ராஜ வீதி சமாம் சக்ரே ரஜஸா வாலுகாம் நதீம்

குதிரைகளின் குளம்புகளால் கிளர்ந்திட்ட மலைப் பொடிகளின் அதிகமான தூள்களினால் வாலுகை என்ற நதி தன்னை
மதிப்புள்ள அரச வீதி போல் மேடு குழி அற்றது ஆக்கிட்டானே –

113–கிராமணேர் இவ தைஸ் தஸ்ய ஸைநிகைர் அவரோதிதா
ஸ்த்ரியஸ் புருஷ தர்மாண ஸ்த்ரீத்வம் ஏவோ பலம்பிதா

அவ்விடத்தில் ஆண்கள் செய்யும் யுத்த பணிகளை தமைச் செய்திட்டு வருகின்ற பெண் மணிகளை ஸாத்யகீயின்
படை சேர்ந்த சேவகர்கள் தடை செய்து அவரவர்களின் மனைகளுக்குப் போவராக்கி தங்களுடைய பெண் தன்மையைப் பெற ஆக்கினரே

114-பலேந மஹதாஸ் அஸ் கந்த்ய மைநாக பிதரம் கிரிம்
ப்ரளயோ தந்வத் ஆரோஹம் ஆகாலிகம் அலம்பயத்

மைனாகத்தின் தந்தையான இமய மலையை பெரும் சேனையால் சூழ்ந்து அகாலத்தில் பிரளய கால எழுச்சியைப் பெறுவித்தான்

115-ஸமாஜம் இவ சைலா நாம் விஸ்வ ரூபம் இவ ப்ரபும்
உத்தம்பநம் இவ வ்யோம்ந ஸ நிதத்யவ் ஸ கௌதுகம்

பெருமாளின் விஸ்வ ரூபம் போல் அனைத்து மலைகளுடைய திரட்சி போலேயும்
வானை விழுந்திடாது வைக்கும் நாட்டினுடைய ஒரு தூண் போலேயும் அவனே தான் சிந்தித்தனனே

116-ஸ்வ கரம் பூத நாதஸ்ய ஸ்கந்த மாதா மஹம் கிரிம்
ப்ர ஸூதிம் ஸர்வ ரத்நா நாம் ப்ருதிவீ தேனு தர்ணகம்

பசுபதியின் மாமனாரைப் போலாகவும் ஸ்கந்தனுடைய அன்னையுடைய தந்தையாகவும் ரத்னங்களின் திரளாகவும்
பசுவாம் புவி தனைக் கறக்க ஊட்டவிட்ட கன்டராகவும் அச்சமயம் பல கதைகளும் அவன் நினைவில் வந்தனவே

117-க்ருஹீ தாஸ் த்யாஜி தத் ராஸா மேநாபதி வநவ் கசஸ்
மார்கம் ஆதிதி சுஸ் தஸ்ய வஹ்நேர் இவ ஸமீரணா

மேனைகை யினுடைய கணவனான இமய காட்டில் குடி மக்கள் அனைவரையும் பிடிக்கப்பட்ட அவர்கள்
அச்சம் தீர விட்டதும் அனலுக்குக் காற்று வகைகள் போல் அவர்க்கு வழி காட்டினர்

118-தம் ஆருஹ்ய நிரை ஷந்த ஜிக்ரு ஷந்த இவாந்தகா
விகல்பித ரவீந்த் வக்நீந் மேரு கைலாஸ மந்தரான்

அந்த மலையில் ஏறிய அந்தகர் என்கிற யாதவர்கள் செங்கதிரோன் சந்திரன் அக்னி எனும்
மண்டலங்கள் போன்ற மந்திர மலை கைலாஸ மேரு மலைகளை பிடிப்பவர் போன்றனர்

119–தத்ருசே ககநம் தத்ர திவாபி வ்யக்த தாரகம்
கௌரீ ஹார மணி ப்ரக்யைர் கங்கா நிர்ஜர சீகரை

கங்கை தனின் வீழ்ச்சியினால் கிளர்ந்திட்ட திவலைகளோ -அங்கு கௌரியின் முத்து மாலையின் எழில் மணிகளைப் போலவாகி
நன் பகலிலும் விண்மீன்கள் நல் ஒளியால் திகழ்வது போல் வின் முழுதும் காண்பதற்கு வியப்பாக இருந்ததுவே

120-ஸூப காம் கின்னரீணாம் ச ஸ்வ குணா மோத மேதுராம்
கீதிம் நிசா மயாமா ஸூ கஜ சார்தூல கர்ஷ ணீம்

மனத்திற்கு இன்பமாய்த்தும் பராக்ரமம் பண்புகளின் மணம் வீசும் கின்னரராம் பெண்களுடைய
கீதங்கள் வனயானை புலிகளையும் கவர்ந்து அதனை அனுபவித்தனரே

121–குஹா ஸூ யமி நாம் மேநே ஸைன்ய கோஷம் அஸ்ருணுவதாம்
ஸ்ருணுவதாம் அபி ஸிம்ஹா நாம் சமம் ஸாமிநி மீலநம்

குகைகளில் ஸைன்ய ஒலியை சிறிதும் உணராமல் த்யானித்துக் கொண்டு இருக்கும் யோகிகளதும்
இதனாலேயே கவலையற்ற ஸிம்ஹங்களின் கண் மூடலும் பாதியாகவே அரை பாகமாய் இருந்ததனால் அவர்களுக்கு
அபாயம் இல்லை சிறிதும் என ஸிம்ஹங்கள் நிம்மதியாக உறங்கினவே

122-அபஸ்யத் தத்ர தூரஸ்தம் அந்திகஸ்தம் இவோன்முக
கைலாஸம் கின்ன ரேந்த்ரஸ்ய கீர்த்தி கந்தம் இவோத்திதம்

அங்கு இருந்து தொலைவில் உள்ள அக் கைலாஸம் குபேரனது பொங்கி எழும் புகழின் உடை பலம் போலேத்
தோன்றியதைத் தங்களுடைய முகம் நிமிர்ந்து நெருக்கத்து உளது போல் கண்டனர்

123-சமரான் ஸிம்ஹ சாபாம்ஸ் ச கந்த நாபி ம்ருகான் அபி
ஜக்ருஹுஸ் தத்ர வார்ஷ்ணேயா ப்ரியா ஸம் ப்ரீண நார்த்தி ந

அங்குள்ள கவரிமான்கள் அரி-சிங்கக் குட்டிகள் -கொப்பூழில் கந்தமுள்ள கஸ்தூரி மான்களை எல்லாம்
யாதவர்கள் தங்களுடைய மனைவிகளின் திருப்திக்காக பிடித்தனரே –

124–குஞ்ஜா ஹார ப்ருதா ஸ்யாமா பர் ஹோல் லாஸித குந்தளா
ப்ரவால வசநா ப்ரேஷ்ய ஜஹ ஸூ சபராங்க நா

குந்து மணி மாலை அணிந்து கேகேயங்களின் -மயில்களின் -தோகைகளால் -கூந்தல்களை அலங்கரித்து
தளிர்களை ஆடையாகக் கொண்டு இருந்த கரு நிறைத்து குரவை மாதரைக் கண்டு சிரித்தனர் –

125–சிகராம்ச பரிஷ் காரை ஸைன்யத் விப மதைர் பபவ்
கல்கித ஷ்மாப்ருதாம் நாத கஸ்தூரி ஸ்தாஸகைர் இவ

மலைகளுக்குள் சிறந்ததான மலையானது தோள் போன்ற மலை முடிகளில் யானைகளின் மதம் தங்க
கஸ்தூரியின் துளிகளினால் பொட்டிட்டு தலை அரசனாய் விளங்கிற்றதே

126–ஸ்ருத்வா கிரி குஹா நூக்தம் தத் ஸைன்ய கஜ கர்ஜிதம்
அபி ஸிம்ஹா பலா யந்த வன்யத் விரத பேதிந

முழைஞ்சுகளில் எதிர் ஒலித்த படைகளுடை யானைகளின் முழக்கங்களை செவியுற்று காட்டில் உள்ள
யானைகளை அழித்து எறியும் வலி மிக்க ஆளிகளும் ஸிம்ஹங்களும் பரந்து ஓடின –

127–ப்ரதீப்த ரத்ன சிரசம் ப்ராலேய பரி பாண்டரம்
ப்ரதக்ஷிணம் வ்யதீயாய சேஷ யித்வா மஹீ தரம்

ரத்னங்களின் ஒளி வீசும் முடிகளுடனும் வெண்ணிறப் பனி நிறைந்ததுமாம் இமய மலை
தனை முழுதும் கடந்திடற்குத் திறன் இலாமல் அதைச் சுற்றி வேறிடமே சென்றிட்டனே
வெண்மையானதும் முடிகளில் மணி உள்ளதுமான ஆதி சேஷன் போலே பாவித்து என்று பொருள் கொள்ள வேண்டும் –

128–அத கஸ்தூரி காமோதைர் அதி வாசித பூதரான்
யஸசாஸ் அவாஸ்ய நேபாளான் யது வீர ஸ்வ தேசயத்

யது வீரன் ஸாத்யகீயும் கஸ்தூரியின் மணம் வீசும் பதலைகள் -மலைகள் -பலவற்றை யுடைய
நேபாள தேசத்தை வசமாக்கி தன் புகழின் மணத்திற்கு இடம் ஆக்கினான் –

129–பர்வ தேந்த்ர ப்ரதி நிதீன் ப்ரா குத்தர மஹீ தரான்
ஸூ ப்ரதீக விஷா ணாக்ரைர் அவைஷத கவாஷி தான்

ஸூ ப்ரதீகம் என்கிற திக் கயத்தின் இரு இரண்டின் -நான்கின் -தந்தங்களின் முனைகளினால் சந்து சந்தாய்
ஆக்கிட்ட சன்னல்கள் யுடையவனாய் இமய மலைக்கு ஒப்பான வட கிழக்கு மலைகளினைக் கண்ணுற்றான் ஸாத்யகீயே

130–த்வீப பர்வத துர் கேஷு த்வீப ஸிம்ஹ நிபான் த்விஷ
ஸங்க்ராம ம்ருக யாஸ்தாயீ ஜக்ராஹ ச ஜகாந ச

போர் வேட்டை ஆடுதலில் பிரியமுடைய ஸாத்யகீயும் தூர்கமான -கஷ்டமான -த்வீப மலையின் இடங்களிலே யானை ஸிம்ஹம்
போன்றிட்ட பகைவர்களைக் கண்டித்து யானைகளைப் போன்றவரை பிடித்திட்டு ஸிம்ஹம் ஒத்தாரை அழித்திட்டானே –

131–ப்ரபஞ்சந இவாம் போதான் பஷீந்த்ர இவ பன்னகான்
ப்ராஸ்யான் பிரஸ்யாவ யாமாஸ பஞ்ச வக்த்ர இவ த்வீபான்

சுழல் காற்று மேகங்களைச் சிதறடிப்பது போலேயும் கலுழனானவன் -கருடனானவன் -பாம்புகளைக் கடித்து உண்பது போலேயும்
வலி ஸிம்ஹம் யானைகளை விரட்டுவது போலேயும் கிழக்கில் உள்ள பகவர்களைக் கொன்று ஒழித்தான் ஸாத்யகீயும்

132–சோஷித ப்ராஸ்ய ஜலதி ஸுர்ய பாடப வஹ்னிநா
ஸ ஸர்ஐ தத் வதூ சித்தேஷு அசோஷ்யம் சோக வாரிதிம்

கிழக்கில் உள்ள அரசர்களாம் கடலினைத் தன் வீர்யம் என்னும் ஊழித் தீயால் வற்றடித்து அவர்களுடைய
மனைவிகளின் சுழல்கின்ற மனங்களிலே சோக நேமியை -கடலை -படைத்திட்டானே

133–யதூ நாம் ஹேதயஸ் தத்ர சத்ரு சோணித பாடலா
ப்ரதாப ஜ்வலந ஜ்வாலா ஸம் பதம் ப்ரதி பேதிரே

எதிரிகளின் குருதியினால் முழுமையாக சிவந்ததான யதுக்களுடைய ஆயுதங்கள் அவர்களுடைய பராக்ரமாம்
தகனத்தின் -நெருப்பின் -கொழுந்து விடும் ஜ்வாலைகள் போல் ஆயினவே

134–க்ருபாணி காபி குகுரா கம்பி தாபிர் அகம்பயன்
த்விஷதாம் தத் வதூ நாம் ச சித்த தக்ஷிண லோசநே

குரர்கள் -யாதவர்கள் -வீசிட்ட கத்திகளால் எதிரிகளின் இதயங்களும் அவர்களுடை இல்லாள்களின்
வலக் கண்களும் அதே சமயம் நடுங்கினவாய் இடுக்கண் வருவதைக் காட்டின

135-விஜஹ் நுர் யாதவாஸ் தத்ர விபுத ஸ்த்ரீ வர ப்ரதா
சரணாம் லக்ஷ தாதார சத்ரு ஸம்மத விக்ரமா

பகைவர்களும் பாராட்டும் பராக்ரமம் யுடைய யாதவர் படை தம் அம்புகளுக்கு குறிகளைக் கொடுப்பவராய்
அப்சரஸ் பெண்களுக்கு வரன்களை அளிப்பவராய் போர் விளையாட்டு நடத்தினர் –

136-விக்ரம ப்ரபவே தேஷாம் விஜய ஸ்ரீ ஸ்வயம் வரே
வந்தி க்ருத்யம் த்விஷஸ் ஸக்ருர் அப்சரோ அபி ஸ்வயம் வ்ருதா

யாதவர்களுடைய பராக்ரமம் மூலமாக அவர்களுக்கு விஜய லஷ்மியின் ஸ்வயம் வரம் நடந்த போது அவர்களுடைய சத்ருக்களே
ஸ்வர்க்க லோகத்தில் அப்சரஸ் ஸூக்களால் ஸ்வயம் வரமாக வரிக்கப்பட்டு அவர்களுக்கு வந்திகள் ஆனார்கள்

137–ரமா பதி பாதோத் பன்னாம் ரத்நாகர பதிம் வராம்
புண்யாம் ஸரிதாம் ஆஸீ தத் புரபின் மௌலி மாலிகாம்

திருமாலின் திருவடியில் தோன்றியதும் சமுத்ரத்தைப் புருடனாக வரித்ததுவும் திரிபுரத்தை எரித்திட்ட உருத்தினனின் முடி தனக்கு
ஒரு மாலையாய் எப்போதும் இருப்பதுமாம் புனித கங்கையை அணுகிட்டனன் ஸாத்யகீயே

138–ஸ மேநே ஜாஹ் நவீம் யாந்தீம் அர்த்தம் ஏகம் இவார்ணவம்
ப்ரவா ஹைர் பஹுதா பின்னைஸ் பாஷா பிர் இவ பாரதீம்

பல நதிகளாய்ப் பிரிந்திட்டு கடல் ஒன்றையே நோக்கிட்டுச் செலும் கங்கையை பல மொழிகளாய்ப் பிரிந்திட்டு
பொருள் ஒன்றையே இலக்காகச் செல்கின்ற ஸரஸ்வதியைப் போல் நினைத்தான் அவன் –

139–க்ருபாண தாரா தீர்த்தேநே சோத யித்வா க்ருதா கஸ
த்ரி திவம் பிராப யாமாஸ வங்காம்ஸ் த்ரி பத காந்தரே

கங்கை நடுவில் இருந்தாலும் குற்றங்கள் செய்திட்டதால் வங்க நாட்டாரை கத்தி தாரையால்
கூர்மையாகிற தீர்த்த தாரையினாலே ஸ்வர்க்கத்தை அடைவித்தனனே

140–விஷி பன் புவி நிஸ் த்ரிம்ச வக்த்ர புஷ்பாணி வைரிணாம்
ரண ரங்க நடஸ் யாஸ்ய ஸூத்ர தார இவா பவத்

நாட்டிய தளம் போல் இருக்கிற போர்க்களத்தின் நடனாகிய -நாடகம் நடத்தும் கூத்தனாகிய -ஸாத்யகீயின்
கத்தியானது விரோதிகளின் முகங்கள் ஆகிற பூக்களினைப் பறித்து பூமியில் பரப்பும் ஸூத்ரன் ஆயிற்று

141–ஸைன்ய தந்தி மதோ பேதை சத்ரு ஸ்த்ரீ பாஷ்பக ஜ்ஜலை
கங்காம் ரவி ஸூதாம் சக்ரே யஸசா தாம் ச தன் மயீம்

தன் சேனை கரிகளின் மத நீருடன் சேர் பகைவர்களின் மனைவியரின் கண் மை நீரால் கங்கை நதியை யமுனை யாகவும்
தன் வெண்மைப் புகழாலே கருத்த யமுனை தன்னை வெளுத்த கங்கை ஆக்கினானே

142–ஆத்த சாரா த்விஷஸ் தத்ர முக்தாஸ் தேந மஹீ யஸா
அத்ருஸ் யந்த யதா பூர்வம் தந்தி புக்த்த கபித் தவத்

வலிமை மிகு ஸாத்யகீ யினால் விரோதிகளின் சாரம் எல்லாம் பறிக்கப்பட கரிகள் -யானைகள் –
உண்டு உமிழ்ந்த -கழித்த -விளங்கனிகள் போன்று உள்ளே சாரம் ஒன்றும் இல்லாதவராய் ஆயினரே

143-ப்ருது வீசி கணாம் தீர்த்வா ப்ருத்வீ ஸஹ ஜாம் நதீம்
பாதிதா சேஷ கௌடேந பலே நார்ணவம் ஆத்ரவத்

திரண்டு வருகின்றதுவும் –தரணியுடன் பூமியுடன் -பிறப்புமான சுர -கங்கை நதியினைக் கடந்திட்டு
கௌட நாட்டுப் படையினர் அனைவரையும் வதை செய்திட்டு கடல் அருகில் சென்றனனே –

144- அல பந்த மஹீ பாலா புரஸ் தஸ்ய நிர் பயா
நதேந தநுஷா நாகம் வபுஷா ச வ ஸூந்தராம்

அல பந்த க்ஷணாத் தேஷாம் புரத பரி பந்தின
தநுஷா நமதா ஸ்வர்கம் வபுஷா து வஸூ ந்தராம்( கீழ் 88 ஸ்லோகம் )

எதிர்த்திட்ட பகைவர்கள் அப்போது வளைத்திட்ட யதுக்களுடைய வில்லாலே ஸ்வர்க்கத்தையும்
வணங்கிட்டவர் தலையாலே இவ்வுலகில் சுக வாழ்வையும் பெற்றனரே
வணங்காதவர்கள் வீர ஸ்வர்க்கத்தையும் -வணங்கினவர்கள் இங்கேயே நல் வாழ்வையும் பெற்றனரே

145-விசந்தோ வாஹி நீம் தஸ்ய த்ரிஸ் ரோதசம் இவா பராம்
த்ரி திவம் ப்ரயபத் யந்தே ப்ரதி யோதா நிரா கஸ

மற்று ஒன்றாம் கங்கை போன்ற அவன் படையை எதிர்த்திட்ட செற்றலர்கள் -எதிரிகள்
குற்றம் அகல ஸ்வர்க்கத்தை அடைந்தனரே –

146-குடிலான் ப்ரகுணீ க்ருத்ய ஸ்வ நாம அக்ஷர பூஷிதான்
ஜங்க மான் தர்ச யாமாஸா ஜய ஸ்தம்பாந் மஹீ தலே

குடிலர்களை ஒழுங்காக்கி தன் பெயரால் -பெயர் சொல்லால் -அலங்கரித்து நடைத்தூண்கள் ஆக்கி
நடக்கும் ஜெய ஸ்தம்பங்களாக்கி ஜெயம் தன்னை புவி எல்லாம் பரப்பும் படி வைத்தான் ஸாத்யகீயே

147-சாலீ நிவ ஸதஸ் த்ராதும் தத்ர தத்ர ப்ரரோஹத
யவ சவ்க நிபான் யாப் யான் உஜ்ஜ ஹார யதூ த்வஹ

யாதவ குலப் பெரும் தலைவன் ஸாத்யகீயே நல்லோர்களைப் பாதுகாக்க கேடர்களைப் –
மிலேச்சர்களைப் பறித்திட்டான் -நெற் பயிர்களைப் பாதுகாக்க களைகளைப் போக்கிடுமா போலே

148–ப்ரதாப அக்னிம் புரஸ் க்ருத்ய புவஸ் சாகர வாஸஸ
வேலா வலய ஸம் பன்னம் கரம் ஜக்ராஹ தத்ர ஸ

பராக்ரமாம் அக்னி தன்னை முன் வைத்து கடற்கரையின் ஓரமான வளை களுடன் கடலாடை உடை
பூமியின் கரம் என்னும் கப்பங்களைக் கைக்கொண்டான் ஸாத்யகீயே
எதிரிகளைத் தகைத்துக் கப்பங்களைப் பெற்றதை அக்னி முன்னிட்டு அழகிய ஆடை வளைகள் அணிந்த பெண்ணைக்
கைப்பிடித்து பாணி கிரஹணம் செய்து கொண்டதாக கவி நயம் உடன் விவரிக்கிறார் –

149–புரந்தர சம பூர்வம் ஜித்வா பவ்ந்தரீம் திஸம்
தீஷித ஸத் பரித்ராணே தஷிண அபி முகோத் பவத்

இந்திரனை ஒக்குமவன் இந்த்ர-கிழக்கு – திக்காம் தனை வென்றிட்டு நல்லோரைக் காப்பதற்கு
தீக்ஷையைப் பெற்றவனாய் தஷிணையில் தெற்குத் திக்கில் முகம் வகுத்தான் ஸாத்யகீயே –

150–உபதீ க்ருத்ய ஸர்வ ஸ்வம் உப சன்ன யதூத் வஹா
ப்ரா ஸீம் அவி கலாம் ருத்திம் உத் கலா ப்ரதி பேதிரே

உத் கலமாம் நாட்டத்தவர் உடைமைகளை ஸமர்ப்பித்து ஸாத்யகியை அண்டினராய் செல்வங்களை மீட்டிட்டனர்

151-ப்ரஹித நாத காலிங்கை பந்தா நம் உப ருந்தத
ருரோத ஸிம்ஹ நாதேந யது ஸிம்ஹ ஸ ஸிந்துரான்

யாதவர்களுள் சிம்மமான ஸாத்யகி பின் கலிங்க நாட்டுப் பாதுகாவலர் பாதை மறிக்க ஏவிய
கரிகளை ஸிம்ஹ நாதத்தை எழுப்பியவனாய் தடித்திட்டுக் களைத்தினனே

152- ஸ தான் கைரிக ரக்தாங்காந் ஸப்த தா ஸ்ருத நிர் ஜரான்
ஜங்க மான் இவ விந்த்யாதீன் ஜக்ருஹ கந்த ஹஸ்திந

மலையில் உள்ள பல நிறமாம் மண்களால் பூசப்பட்டு ஏழு அங்கங்களில் இருந்து விந்திய மலை போன்ற மத நீரை
பெருக்கும் மணமுள்ள அக்களிறுகளை ஸாத்யகீயே தனக்கு ஆக்கிக் கொண்டானே

ஏழு அங்கங்கள் -கண் இரண்டு கும்பம் இரண்டு கைசந்து இரண்டு குறி ஓன்று

153-ப்ரதி யுத்ய பரிச்சரான் தான் க்ருஹீத்வா கஜ யோதிந
சக்ர லிங்க தரான் சக்ரே காலிங்கான் கிங்கரீ க்ருதான்

எதிர்த்திட்டு போர் செய்து அயர்வுற்ற பாகர்களாம் எதிரி நாட்டு ஊழியர்கள் அனைவரையும்
பிடித்து தன் உதவியாளர் ஆக்கிட்டு சக்கரத்தினால் அடையாளமும் இட்டனனே

154- ஸ தேஷாம் அபி சாமந்தான் ஆஹு தான் விந்த்ய துர் கத
தஷான் த்விரத சிஷாயாம் சக்ரே நிஜ நிஷாதி ஸாத்

விந்திய மலையில் அருகில் இருந்த யானைகளை பழக்குவாரையும் வென்றிட்டு
தன் யானைப் பாகர்கள் வசம் ஆக்கினான் –

155- வைரி வாரண மூர்த்தன்யை மவ்திகைர் லாஜதாம் கதை
ரண அக்னி தர்சயாமாஸ வ்யூடாம் தேந ஜய ஸ்ரீயம்

போர்த்திறம் என்னும் யாக அக்னி எதிரிகள் யானை மத்தகத்தில் இருந்து உண்டான முத்துக்களை
பொரிகளாகக் காட்டியதனால் வெற்றி திருவினை -ஜய ஸ்ரீ யை மணப்பதாக அறிவித்ததே –

156-தாரித த்விர தாம்ஸ் தத்ர ஸிம்ஹாந் இவ மஹா ஜவான்
ந நந்த ஸ்வ படான் த்ருஷ்ட்வா நகர ஸ்ரீரித மவ்திகான்

மிக விரைவுடன் யானைகளை பிளந்து அவற்றின் முத்துக்களை நகங்களில் யுடைய
தன்னுடைய தீரர்களைக் கண்டு களித்தான்

157–வி பஷான் பூப்ருதஸ் தத்ர குர்வதா நிர் விசேஷ்டிதான்
தேவோ ஹரி ஹயஸ் தேந த்வி ரூபத்வம் இவான் வபூத்

இந்த்ரனே ஸாத்யகியாய் இரண்டாம் உருக் கொண்டனனோ
இந்த்ரனனோ சிறகை வெட்டி மலைகளை நகராது செய்தான்
இந்த ஸாத்யகி எதிரிகளை -வி பக்ஷர்களான விரோதிகளை -ஒன்றும் செய்ய ஒட்டாமல் -அகலாமல் செய்திட்டானே
பூ ப்ருத் -மலைகளும் அரசர்களும்

158-அபர் யுஷித பாநீ யாம் அநக ஸ்ரோ தசம் சுபாம்
கங்காம் இவ விபக் தாங்கீம் பிராப கோதாவரீம் தத

எடுத்து வைத்து காலமாயினும் கெடாத நீரை யுடையதுமாம் -கடும் பாபம் போக்குவதுமாம்
நற் பலன்களை அளிப்பதுமாம் கோதாவரி எனும் இரண்டாம் கங்கை தனை அடைந்தனனே

159-அசாலீந மனஸ் தவேபி ஸ்வ ஆஸ்ரித த்ராணம் இச்சதாம்
ஆந்த்ராணாம் ஆத்ம தாத் ரூணாம் ததவ் அபய தக்ஷிணாம்

அதைரியம் இல்லாத மனம் யுடையராய் இருந்து தம்மை அண்டினாரைக் காக்க

160-பதி ரக்ஷண துஷ்டா நாம் ஸ்வ குண க்ரதி தாஷரை
ஆந்த்ரேஸ்வர புரந்த்ரீணாம் சங்கீதை ப்ரத்ய நந்தத

கணவர்களைக் காத்ததற்கு களித்தவராய் தன்னுடைய குணங்களைப் புகழ்ந்து பாடின
ஆந்திர நாட்டு அரசருடைய இணை பிரியாத மாதர்களின் இசை கேட்டு இன்புற்றானே

161-ஆத்யம் த்ரமிட தேசா நாம் துண்டீ ரம் அத மண்டலம்
விவேச பூஷிதம் யூபைர் வேத ஸோ வாஜி மேதிகை

திராவிடத்தின் முதல் இடமாம் ப்ரம்மாவின் அஸ்வ மேத யாகத்துக்கு கம்பங்கள் யூக ஸ்தம்பங்களால்
அலங்கரிக்கப்பட்டதுமான காஞ்சி நகரை அடைந்தான்

162–ஷிப்த தோஷஸ் ஸ தம் தேசம் ஷீர ஸிந்து குணாதிகம்
சுத்த தர்ம பரிஷ் காரம் ஸ்வேத த்வீபம் அமன்யத

தர்ம நாட்டில் புகுந்ததாலே தீ வினை இல்லா அச் ஸாத்யகீ சீர சிந்துவால்-பாற் கடலால் – குணம் மிக்கதாய்
சுத்தமான தர்மங்களின் உறைவிடமாம் அந்நாட்டை ஸ்வேத தீவாய் எண்ணினனே

163–பரித்யக்த பதாம்ஸ் தத்ர ஸ காஞ்சீ கடகத்யஜ
ஆஹுய ஸ்தாபயாமாஸ தர்ம்யான் தர்ம துரந்தர

அறம் தன்னைக் காப்பதிலேயே ஆர்வமுடைய ஸாத்யகீயும் அறம் இலாது நடந்ததனால் அவ்விடத்தை விட்டுட்ட

164–ப்ரலோப யந்தீம் லலிதைஸ் தத ப்ரதம லஷிதை
தர்ச நீயேஷு சோழேஷு தித்ரு ஷாம் அன்வ வர்த்தத

முதன் முதலில் காணலுற்ற பல அழகிய பொருள்களாலே இதயத்தினைக் கவர்கின்ற இடமான
சோழ நாட்டினில் குதூகலத்துடன் அவாவுற்று காண்பதற்குச் சென்றனனே

165– அத கந்யாம் கவே ரஸ்ய ததர்ச க நக ஆஸ்ரிதாம்
அப திஷ்ட நதீ ரூபாம் அம்ருதஸ் யேவ தேவதாம்

பின்னர் அவன் கவேர மலைப் பெண்ணான பொன் நிறைந்த பொன்னி எனும் காவேரியை
ஆற்றின் உரு கொண்டிட்ட இன்னமுதின் தேவதையைப் போன்றதாகக் கண்டிட்டானே

166- உதார லஹரீ லாஸ்யாம் லலிதா வர்த்த ராஸி காம்
ரஸிக ப்ரஷைத நதீம் ரங்க பர்யந்த நர்த்தகீம்

உயர எழும் அலைகளையும் அழகான சுழல்களையும் -பயந்ததாயும் -பெற்றதாயும்
திருவரங்கம் அருகில் பாய்ந்து ஓடும் நதியை நயமாக அரங்கத்தில் ராஸ க்ரீடை செய்யும்
ஓர் தையலாக ரசிகனாம் சாத்யகியும் கண்டனனே

167- ரத சேது நிருத்தா ஸா ரத்நாகர மநோ ரதாத்
அவருஹ்ய ஜகாம் ஏவ ஸஹ் யஸ்ய பிதுர் அந்திகம்

சாத்யகியின் தேர் வரிசையாக அணையாக நின்றதால்காவேரி கடலை நோக்கிப் போகும் தன் ஆசையை விட்டு
தன் தகப்பனாக ஸஹ்ய மலையின் சமீபம் போவது போல் பொன்னி பொலிந்தது

168-தக்ஷிண பத கங்காயா ஸ தஸ்யா திவ்ய சம்பத
ததவ் ரவி ஸூதா ஸ்லேஷம் தாந வர்ஷேண தந்தி நாம்

தென்னாட்டின் கங்கையான திவ்யமான செல்வமாகும்
எண்ணற்ற மரங்கள் தமை இரு கரையிலும் யுடையதான
பொன்னி எனும் காவேரிக்கு யானைகளின் மத நீரால்
அஞ்சன நிறம் யமுனையின் சேர்க்கையை அளித்திட்டனனே

169–ஐநநீம் இவ தாம் லஷ்ம்யா பாதோ நிதி பதி வ்ரதாம்
நியமைர் உசிதைர் பேஜே நிகம க்யாத வைபவாம்

கடல் தன்னின் பதி விரதையாய் திருவிற்குத் தாய் போன்ற மறைகளில் ஓதிட்ட பெருமைகளை யுடையதான
மருத் வ்ரதா -என்ற வைபவத்தை யுடையதான  -திருக்காவேரி தன்னை நியமமுடன் பூசித்தனனே

170–யசோ பிஸ் ஸஹ சோழாநாம் இஷு நிஷ் யந்த ஸம்மிதம்-சந்நிபம்
பயஸ் ஸஹ்ய பயஸ் வின்யா பபுர் யாதவ யூதபா

கருப்பஞ்சாறு போன்றதான காவேரியின் தீர்த்தத்தை சீருடையை யாதவர்கள்
சோழ நாட்டு அரசர்களின் கீர்த்தியுடன் சேர்த்தவாறு குடுத்திட்டு சிறப்பளித்தனர் –

171-ஜஹ ஸூர் ஜாக ரூகாஸ் தே ஐங்கால குண சாலி நாம்
த்ருஷ்ட்வா த்ரமிட யோதா நாம் அவஸ் கந்த மநோ ரதம்

விரை நடையில் திறம் பெற்ற திராவிடத்தின் சேவகர்கள் இரவுக்குள் தெரிந்திடாமல்
உறக்கத்தில் தம்மை வதை புரிந்திடற்கு விரும்புதலைப் பார்த்து யாதவர் சிரித்தனர்

172-த்ரவிஷ்டப நிபாம்ஸ் தத்ர த்ருஷ்ட்வா ஜன பதான் பஹுன்
அசமத்காரம் அன்யேஷு பூமி பா கேஷ் வதத்த ஸ

ஸாத்யகி சோழ நாட்டில் ஸ்வர்க்கம் போல் இருந்துள்ள பல மாத் தலங்களை பார்த்திட்டு
பூமியில் பல இடங்களில் தான் போற்றிட்ட மதிப்பு எல்லாம் புறக்கணித்து விட்டிட்டனனே

173- தத்ர தர்பம் அமித்ராணாம் மித்ராணாம் அபி ஸாத்வசம்
அகண்டயத் அபர் யாயாத் அத்யா கண்டல விக்ரம

புரந்திரனை விட மிக பராக்ரமம் யுடைய ஸாத்யகீ தன் விரோதிகளின் கர்வத்தையும்
நண்பர்களின் அச்சத்தையும் ஒரே அடியாகப் போக்கிட்டு அரிய செயல்களைச் செய்திட்டானே –

174- ரங்கம் ஆத்ம புவஸ் தத்ர ரம்ய நிர்மாண மாத்ருகம்
அநந்த பீடி காரூடம் அப்யர்ச்ய முதிதோ யயவ்

நான்முகன் படைப்பிற்கு நல் மாதிரியாய் அமைந்திட்ட அநந்தன் எனும் பீடத்துள்ளே
அரங்கனையும் விமானத்தையும் நன்கு தொழுது மகிச்சியுடன் சென்றானே ஸாத்யகீயும் –

175–திவாபி தீபாஸா பேஷம் கஹநம் ஸம் ஸ்ரிதான் கஜை
ஸ சோராம்ஸ் சூர்ண யாமாஸ சோழ பாண்ட்ய உபகா திந

பகல் பொழுதும் ஒளி வேண்டிய மிக இருண்ட காடுகளில் மிகுந்தவராய் சோழ பாண்டிய நாட்டினர்க்குத்
துன்பத்தை மிக விளைக்கும் கள்ளர்களை களிறுகளால் நொறுக்கினனே

176-ரம்ய பத்தந ஸம் பாதாம் ரத்ந ஸை கத ஸோபி நீம்
வ்ய லோகயத ஸம் ப்ரீதோ வேலா விபி ந பத்ததிம்

எழில் நகர்கள் நிறைந்ததான இடங்களையும் ரத்தினங்கள் அழகுடனே ஒளி விட்டிடும் மணல் திட்டுகள்
விளங்கவும் உள எழில் கடற்கரை ஓரம் உள்ள வனத்தைக் கண்டு களித்தனனே –

177-மை நாக மஹஸா தீப்தம் ஸேது ஸீ மந்தி தோதகம்
தமிதம் ரகு வீரேண ததர் சாப்திம் ஸ தக்ஷிணம்

மை நாக மலையின் மணி ஒளிகள் வீசப்ப பெற்றதும் வகிடு போன்ற அணை யுடையதும் ரகு குலத்தின்
அதி வீரனாம் ராமனாலே திணவு அடக்கப் பட்டதுமான தென் கடலை தர்சித்தனனே –

178–பரிகாம் ப்ரேஷ்ய லங்காயா பயோதிம் ப்ரஜ ஹர்ஷ ஸ
தாரா பூஷித தேஹஸ்ய த்ரிதி வஸ்யேவ தர்பணம்

இலங்கைக்கு அகழி போன்ற அக்கடலில் விண் மீன்கள் அலங்கரித்த விண் அதனுள்
தோன்றும் படி கண்ணாடி போல் இருக்கக் கண்டு களித்தனனே –

179–ஸஹ சோத் பததாம் தத்ர தன்விநோ லகு விக்ரமா
உததிம் தந்திந க்ராணாம் கும்ப ரத்நைர் அபூரயன்

விரைவாக கவர வல்ல வில்லாளிகள் கடல் தன்னை விரைவாக வெளிக் கிளம்பும்
முதலைகளைப் போன்றவான நீர் யானை தலையின் நின்றும் விழும் மணிகளால் நிரப்பினரே –

180–ககநம் ச நிராலம்பம் அகாதம் ச மஹோ ததிம்
வீஷ்ய தே பஹ்வ மன் யந்த ஹநூ மந்தம் கதா கதம்

ஆதாரம் இல்லா வானத்தையும் ஆழமான பெரும் கடலை

181-ஸ பேஜே ஸரிதாம் பத்யு புலிநம் வ்ருஷ்ணி புங்கவ
ஆஸீத் அவிதவா கங்கா ப்ரசன்னே யத்ர ராகவே

கடல் அரசன் இராமானுடை கருணைக்குப் பாத்திரமாய் சடக்கென்று அவன் இடத்தே சரண் புகுந்ததால்
கங்கை யம்மாள் விதவையாகாது இருந்தனளோ –
அவ்விடத்தில் இருந்த மணல் திட்டு ஒன்றை யது வேந்தன் ஸாத்யகீயே அடைந்திட்டனனே –

182-வ்யலோகத ச விஸ் மேரோ லங்கா கோபுரம் உத்தரம்
ரகு வீர சர வ்ராத பரி கல்பித ஜாலகம்

இராகவனுடைய அம்புகளால் அடிக்கப்பட்டு துளைகள் பல இருக்கும் சிகிரியை – கோபுரத்தை –
வட இலங்கையில் கண்டு வியப்புற்றனனே

183-பரி பூதரவஸ் தஸ்ய ஸைன்ய கோஷேண சாகர
அதிகம் ஷோபமா பன்ன த்ராஸ பின்ன இவா பவத்

சாத்யகியின் சேனையுடைய ஸப்தத்தால் தன் ஓசை பாதிக்கப்பட கடல் மிக பயந்து நடுங்குவது போன்றதே

184–தமாலான் ப்ரதி மாதங்க த்ராஸாத் ஆலாந மண்டலான்
மம்ருது நூனம் ஆ வார்ய மதாந்தா கந்த ஸிந்து ரா

மதம் பிடித்த மணம் மிக்க யானைகள் தம்மைக் கட்ட வாகும் பச்சிலை மரங்களை எதிரி யானைகளாக
ப்ரமித்து அஞ்சிட்டு அம்மரங்களை சூழ்ந்திட்டு முறித்தனவே –

185-நள சேதும் ததோ நீத்வா த்ருஷ்ட முக்தா நதீ முக
வீரோ விஸ்ரம யாமாஸ துர் நிவாராம் வரூதி நீம்

முத்தாறு என்னும் தாமிர பரணி கடல் சேரும் இடத்து நலன் கட்டின அணையில் தன் சேனை தனைக் களைப்பாற்றினான்

186–க்ருத வ்யாவர்த்தநாஸ் தத்ர கேதகீ ரேணு ரூஷிதா
த்விஷ ஸ்கந்தாம்ஸ் ச துதுவு ஹ்யாஸ் துமுல ஹேஷிதா

உத்தரிகள் குதிரைகள் தரையில் தம் உடல்களினைப் புரட்டிட்டு -கேதகி -தாமரை -மலர்த் தூள்கள் எல்லாம்
படிந்திடவே கனைத்தவையாய் ஆக்கைகளை உதறிட்டும் எதிரிகளையும் பயமுறுத்தின –

187–தநு ஷா சார்ங்க பமேந ஸாமி விஷ்பாரி தேந ஸ
லஜ்ஜி தோத் அதி கோஷேந லங்கா த்வீபம் அகம் பயத்

கண்ணனுடைய சார்ங்கம் போல் கலங்கச் செய்யும் தன் வில்லின் நாண் இழுத்து கடல் ஓசையும்
நாணும்படி டங்காரமாம் கன ஓசையை எழுப்பியதனால் இலங்கை தனை அசைத்திட்டனனே –

188–ப்ரதாப தூத வசகா ப்ராஜ்ய ரத்ன உப ஹாரிணா
அஜீ வந் யது ஸிம்ஹஸ்ய பாதம் ஆஸ்ரித்ய ஸிம்ஹலா

யது ஸிம்ஹம் ஸாத்யகியின் வீர தூதனை சிங்களத்தின் அரசர்கள் அடி பணிந்து அதி மதிப்புடை
ரத்னங்களை நிரம்பலமாக அளித்தவனுடை திருவடியில் விழுந்து உய்ந்தனர்

189–மஹதீம் உபதாம் தேஷாம் த்வீப ரத்நாதி சாலி நீம்
ஸ ஸம் க்ருஹ்ய புநஸ் சக்ரே ந மந சேது பந்தந

களிறுகளையும் மணிகளையும் காணிக்கையாய் அவர்களினால் அளிக்கப்பட அவன் மீண்டும் அணை கட்டுவதை எண்ண வில்லை –

190–த்விரதாந் ஸிம்ஹ லேந்த்ரஸ்ய த்வி சதுர் தந்த ஸோபி ந
போத பூதாம்ஸ் த்ரி கூடஸ்ய போதா நீ தான் அமன்யத

சிங்களத்தின் அரசனாவான் கப்பலிலே கொண்டு வந்த தந்தங்கள் நாலுடைய திரிகூட
குன்று போன்ற சிந்துரங்கள் -யானைகள் -பலவற்றைப் பெற்றுக் கொண்டான் சாத்யகீயுமே

191-யசோரத் நாகரஸ் தஸ்ய பபவ் பாண்ட்ய சமர்ப்பிதை
ஸைன்ய கஞ்சுக பர்யாப் தைர் முக்தா புலிந மண்டலை

சேனை வீரர் அனைவருக்கும் கவசங்கள் அணிவதற்கு பாண்டிய நாட்டு அரசர்கள்
வழங்கிட்ட முத்துக்கள் சாத்யகியின் புகழ்க் கடலில் மணல் திட்டுக்கள் போல் விளங்கின –

192–ஸோம வம்ஸ புவாம் தத்ர பூ ப்ருதாம் யது புங்கவ
ஸ யூத்ய பாவம் உத் பாவ்ய சங்கா ஜ்வரம் அபா நு தத்

யது தலைவன் ஸாத்யகீ அச் சந்த்ர குல அரசருக்குத் தன் வம்சமும் சந்த்ர குளம் தான் என்று பயம் போக்கினான்

193-ஸ மாருதி பத ந்யாஸாத் அஞ்சி தாக்ராம் அதித்ய காம்
ப்ரபு ப்ர தக்ஷிணீ சக்ரே மஹேந்த்ரஸ்ய மஹீ ப்ருத

மாருதியின் கால் வைப்பால் புனிதமான உச்சியை யுடைய மகேந்திரம் எனும் மலையினுடைய மேல் பகுதியை வலம் வந்தனனே –

194–உப புக்தா பபவ் தேன மலயஸ்ய வனஸ் தலீ
ஸைன்ய ஸம் மர்த்த ஸம் பூதைர் ஏலா சந்தன ஸுரபை

தன் சேனையால் மிதிக்கப்பட்ட மணம் மிக்கவாம் ஏலக்காய் சந்தனப்பொடி இவற்றினுடைய
நறு மணமுடன் மலயமலையின் காட்டை ஸாத்யகீ நன்கு அனுபவித்தான்

195-பத கேந்த்ர த்வஜ த்ராஸாத் ப்ருஷ்ட குண்டலி தாத்ம நாம்
ஜக்ரு ஹுர் யாதவாஸ் தத்ர பணா ரத்நாதி போகி நாம்

யாதவர்களின் கருடக்கொடி தனைக் கண்டு பயமுற்றதால் நாகங்கள் சுருள் உருவை
விட்டு விட்டுச் செல்லும் பறித்தனரே

196–ப்ருத நாம் தஸ்ய ஸம் ப்ரேஷ்ய ப்ருஷத் பாவித ஸாகராம்
மாநம் ஆத்மநி தத்யாஜ மலய ஆஸ்ரம தாபஸ

கடலைச் சிறு திவலையாகக் காண்பிக்கும் ஸாத்யகீயின் படை தன்னைக் கண்டிட்ட மா முனிவர்
அகஸ்தியர் தாம் கடலைச் சிறு திவலை யாக்கின கர்வத்தை விட்டு ஒழித்தாரே –

197– மருதஸ் தத்ர நாகா நாம் ம்ருதி தைலா ஸூ கந்தய
சந்தன த்ரும ஸக்தா நாம் ப்ரீதி கோப க்ருதோ அபவன்

படைகளினால் மிதித்திட்டுக் கசக்கிட்ட ஏலக் கொடியின் படு மணம் நிறை காற்றுக்கள் சந்தனம்
வளர் மரங்களிலே பற்றுடைய நாகங்களுக்கு -யானைகளுக்கும் பாம்புகளுக்கும் -ப்ரீதி சினம் உண்டாக்கின –

198–படீ ரஸ் கந்த விஷயாஸ் தத்ர தேஷாம் புஜங்க மா
அப ஜந்த பணா ரத்நைர் அவாத ஷோப

அங்கு சந்தன மரங்களுடைய அடி பாகம் தனில் இருந்த அங்கதங்கள் -பாம்புகள் -தம் படங்களின்
மணிகளினால் கற்றுக்களால் மங்கிடாத தீபங்களால் யாதவர்க்கு உதவினரே –

199–முக்தா பரண பூயிஷ்டா ரத்ன -ரக்த -சந்தன ரஞ்ஜிதா
சகாஸே யாதவீ ஸேநா சாதரேவ பித்ரு ப்ரஸூ

முத்தணிகள் நிறைந்ததாலும் மணிகளுடன் பூசப்பட்ட சந்தனமும் சேர்ந்திட்ட யாதவ சேனையானது
தாரகையுடன் அந்தி வேளை போன்றதாக அவ்வானம் விளங்கியதே

200–நிதா கம் இவ பர்ஜன்யோ நிரா ஸே ஸாத்யகி பரம்
ப்ரயுக்தைர் அக்ரதோ நாகை ப்ரா வ்ருஷேண் யைர் இவாம் புதை

மேக தேவன் தேவேந்திரன் மழை கால முகில் கொண்டு கோடை தனைப் போக்குதல் போல்
களிறுகளின் துணை கொண்டு போரிட்டாரை ஸாத்யகீயே புறம் காட்டி ஓட்டிட்டானே –

201–யுக பத் ப்ரத்ய வித் யந்த யுத்தே தஸ்ய சரைர் த்விஷ
அபாங்கைச் ச ஸூர ஸ்த்ரீணாம் அஸி தோத் பல மேசகை

போரிட்ட பகைவர்களை ஸாத்யகீயின் அம்புகளும் தேவ மாதரின் கரும் கண் நாக்குகளும் ஒரே சமயத்தில் அடித்தனவே –

202-ஸஸ்த்ர கேலிம் பரித்யஜ்ய ஸ்வ காந்தா கேச பங்குராம்
ஜக்ரு ஹு கேரளாஸ் தத்ர ஜைத்ரம் அஸ்த்ரம் இவ அஞ்ஜலிம்

கேரளத்து அரசர்கள் சுருளான தம் மனைவிகளின் கேசங்கள் போன்றவான அம்புக்களை
விட்டுட்டு கேடிலாத அஞ்ஜலியைக் கொண்டவராய் வென்றனரே

203–அதூரா வஸ்திதோ ராமஸ் தத்ர வ்ருஷ்ணி வரூதி நீம்
ச சங்கே விஸ்மயா வித்த ஸப்தார்ணவ ஸமா ஹ்ருதிம்

அருகில் இருந்த பரசுராமர் அச்சேனையை ஏழ் கடலின் ஒரு சேர்க்கை போல் கொண்டு வியந்தாரே பெரிதாகவே

204-புக்ந பாகஸ் தத ஸஹ் யஸ் ததா க்ரமண யந்த்ரித
ப்ரணிநம் ஸூரி வா போதி பர் யஸ்த சகடோபம

ஸக்ய மலை ஆக்ரமித்த சேனையுடைய பளுவினாலே சகிக்காமல் ஒரு பகுதி
கவிழ்ந்த வண்டி போல் ஆகி நமஸ்காரம் செய்வதை போல் காணப்பட்டது

205-அக்ரஸ் கந்தேந கோ கர்ணம் மஹேந்த்ரம் அபி மூலத
அவஸ் கந்த்ய யது ஸ்ரேஷ்ட ஸ்கந்தா வாரம் ந்யவீ விசத்

யாதவர்களின் தலைவனான ஸாத்யகீ தன் சேனையின் முன் பாகத்தால் கோ கர்ண மலை யதனையும்
அதனுடைய கடை பாகத்தால் மஹேந்திர மலை யதனையும் ஆக்ரமித்து தங்குவதற்கு கூடாரத்தை அமர்த்தினான் –

206–ஜித்வா ஸஹ்யா ஸ்ரிதம் வீரஸ் ஜாம தக்ன்ய இவா பர
தூரம் உத்ஸார யாமாஸ த்விஷத் பல மஹார்ணவம்

ஸக்ய மலையை இடம் கொண்ட கடல் போன்ற எதிரி சேனையை ஜெயித்திட்டு வெகு தூரம் தள்ளிட்டு தவம் புரிய
ஸக்ய மலையின் அருகிருந்த கடல் தன்னை தவம் புரிந்திட அகற்றிட்ட பரசுராமரைப் போலே விளங்கினான் ஸாத்யகீயே –

207- சாரு சந்தன ஸம் பன்ன சைல மநோ ஹராம்
புபுஜே தக்ஷிணாம் ஆசாம் மௌக்தி காகர மேகலாம்

சந்தனத்தால் அழகான ஸக்ய மலய மலைகள் எனும் கொங்கைகளால் மனம் கவர்ந்து முத்துக்கள் உடை இடை
அணி நன்கு அணிந்த தென் திக்காம் நங்கையைக் கண்டு உகந்தனனே
ஸஹ்ய மலை -சந்தனம் –கடல் ஒட்டியாணம் –தென் திக்கு -ஸ்த்ரீ –

208–தத்ர வேலா நிலோத் தூத ராஜ தாலரவான் விதம்
ஸ்வர் கீதம் ஸ்வாது சுஸ்ராவ புஜங்க ஸ்த்ரீ முகோ திதம்

கடற்கரையில் காற்றினாலே அசைவுற்ற பனை மரங்கள் விடுத்திட்ட ஓசையோடு நாக கன்னிகைகள்
யுண்டாக்கிய இனிதான கானத்தினால் இன்புற்றான் ஸாத்யகீயே

209–சோழ கேரள பாண்ட்யாணாம் பஸ்யன் அநு கதிம் ப்ரபு
சகார புனர் ஆராதநம் தர்ம்யம் ஹுத புஜாம் இவ

சிறந்தவான ஸாத்யகீயே சோழ கேரள பாண்ட்யமாம் மூன்று நாடுகள் தமர் அரசுகளை மீண்டும் அங்கு நிறுவினனே
அறம் தவறாமல் மூன்று அக்னியை திரும்பவுமே மீட்டனனே -அறம் உய்யவே ஸ்தாபனம் செய்தான்

210-கால த்ருஷ்டி கராலாபிர் உல்காபிர் இவ ஹேதிபி
துர்மத த்விரதோ தக்ரான் த்ராச யாமாஸ தவ்லுகாந்

அதன் பிறகு ஸாத்யகீயும் மதம் பிடித்த யானைகள் போல் வதைத்திட்ட துளுவ தேசப்படைகளை யமனுடைய
கண்கள் போல் பயங்கரமாய் கொள்ளிக் கட்டைகள் போல் அதிகமாக ஒளி பறக்கும் -ஜ்வலிக்கும் -ஆயுதங்களால் விரட்டினானே –

211-கேட கர்பர கூடாங்காந் கீலயித்வா சரைர் த்விஜஸ்
ஸ்தல கூர்மைர் இவா கீர்ணம் சகார ரண பூதலம்

ஆமை ஓடு போல் தடித்த கேடயங்களைத் தாங்கள் தெரியாமைக்காகப் பிடித்து இருந்த துளுவர்களை
அம்புகளால் தாமதம் செய்திடாது அழித்து சண்டை இடும் களம் எல்லாம் தடுமாறும் ஆமைகளால் நிறைந்தது போல் ஆக்கிட்டான் ஸாத்யகீயே –

212–சரைர் அப்யர்ச்சி தாஸ் தேந கோங்கணா ஸமராங்கணே
புஷ்ப வ்ருஷடி பிர் ஆ நர்ச்சு தமேவ த்ரித சீக்ருதா

போர்க்களத்தில் அம்புகளால் அர்ச்சிக்கப் பட்டரான கொங்கண தேசத்து அரசர்கள்
மேல் உலகு அடைந்தவராய் அங்கிருந்து சாத்யகீயை ஆர்வமுடன் மலர்களால் அர்ச்சித்தனர் –

213–குபிதா கோங்கண ஸ்த்ரீணாம் கண்டூஷ மது கர்பிதான்
பபஞ்ஜூர் அமிதா மோதான் வகுளான் வ்ருஷ்ணி குஞ்ஜரா

யாதவர்கள் சேனையுடைய யானைகள் எல்லாம் கொங்கண தேசத்து ஸ்த்ரீகளுடைய உமிழ்ந்த நீர் நிறைந்திட்டு
மணம் வீசும் வாகுள்ள-அழகுள்ள – மகிழ மரங்களை முனிந்திட்டு முறித்தனவே

214-ப்ரமாதான் இவ தான் ஸப்த தேசான் அதி பதன் ப்ரபு
ஸ மமர்த மஹா ராஷ்ட்ரம் ஸைன்ய தக்ஷிண பாகத

தலைவனான ஸாத்யகீயே கெடு குணங்கள் -வேட்டை சூதாட்டம் பர ஸ்த்ரீ சேர்க்கை குடி கொடூரமான வாக்கு வஸ்துக்களைக் கொடுப்பது
உக்ர தண்டனை செய்வது -இந்த ஏழைப் போலே கீழ் சொன்ன ஏழு தேசங்களையும் வென்று கடந்து
சேனையின் வலப்பாகத்தால் மஹாராஷ்ட்ர தேசத்தையும் அடக்கினனே –

215–அபஸ்யத் ருஷ்ய மூகாந்தே சேஷ மௌலி மணி ப்ரபாம்
ராம ஸாய கரந்த்ரேண நிஸ் சரந்தீம் நபஸ் ஸ்ப்ருசம்

உருஸ்ய முக மலை அருகில் இராமனுடைய கணை ஒன்றால் உருவாக்கிய சந்து வழியால் ஆகாசம் வரைச் செல்லும்
தரணிக்கும் பாதாளத்தில் உள்ள ஆதி சேஷனுடைய சிரஸ்ஸில் உள்ள மணிகளுடைய சீர் ஒளியைக் கண்டனனே –

216–காம க்ரோதவ் இவாஸ் கந்த்ய ஸஹ்ய விந்த்யவ் ஸமா ஹித
விஜிக்யே விஷமாம்ஸ் தத்ர விஷயான் சத்த்வம் ஆஸ்தித

ஸக்ய விந்த்ய மலைப் பிரதேசங்களை வென்று பின் கீழ் மேல் தக்கியவாம் இடங்களையும் தனதாக்கினான்
கடும் துறவி ஓக்க காமம் சினம் அடக்கி உள்ளத்தைப் பின் அடக்குவான் போல் –

217-சாப கோஷேண நிர் பின்ன சக்ர வாலாத்ரி சந்தி நா
குஞ்ஐலீநான் த்விஷஸ் தத்ர திவாபீ தான் அபேக்ஷயத்

சக்ர வாள மலை என்னும் லோகாலோக மலையின் இணைப்பைப் பிரிக்கின்ற குகைகளில் -கோட்டங்கள் போல்
மறைந்து பதுங்கிட்ட எதிரிகளை வில் வலியால் பயமுறுத்தினார்
திவாபீத -பகலில் பயந்தவன் என்றும் கோட்டான் என்றும் பொருள் –

218–அவந்த்ய தபஸா விந்த்ய ஸ்தம்பித கும்ப ஜன்மநா
யது புங்கவ மாதங்கைர் வர்த்தமாந இவா பவத்

அகஸ்தியரால் அடைக்கப்பட்டு குட்டையான விந்த்ய மலையானது யாதவர்களின்
யானைக்கூட்டங்கள் சேர்ந்ததால் வளர்ந்தது போல் ஆயிற்றே

219–ஸூர்ய ரோதித ருச் சந்நாம் அஸூர்யம் பஸ்ய வீசிகாம்
ஸோம வம்ஸ்யா ஸூதாம் தத்ர பபுஸ் ஸோம ஸ உத்பவாம்

அந்த விந்த்ய மலையில் பெருகுகின்றதும் கதிரவனை மறைக்கின்ற மரங்களினால் மூடப்பட்டதும்
ஸூர்யனைக் காணாத அலைகள் கொண்டதும் சந்த்ர வம்ச புரூருவனாலே கொண்டு வரப்பட்ட
ஸோம ஸமுத்பவா என்னும் ரேவா நதி அமுதத்தை -வேகமாக ஓடுவதால் வந்த பெயர் –
சந்த்ர வம்ஸ யாதவர்கள் அருந்தினர் –

220–தேஷாம் விஹரதாம் தத்ர சிஞ்ஜிநீ பத்த ராவணாம்
கார்த்த வீர்ய ஜலக்ரீடாம் கதயந்தி ஸ்ம தாபஸா

சன்னதியில் விளையாடும் யாதவருக்கு முனிவர்கள் நாண் கயிற்றால் ராவணனைக் காட்டி வைத்து கார்த்த வீர்யன்
அந்த நதிக் கரையில் செய்த ஜலக்ரீடை வ்ருத்தாந்தத்தைச் சொன்னார்கள்

221–நகரீம் ஹேஹ யேந்த்ரஸ்ய காரார்ப்பித தசா ந நாம்
நளா தீநாம் ச சிதிலாம் ஸ நிர்வேதம் அதர்சயன்

இராவணனை சிறையில் அடைத்திட்ட கார்த்த வீர்யனின் மஹிஷ் மதி ராஜ்யத்தையும் நள மன்னனின் நிஷத நாடும்
சிதைவுற்ற நிலையில் இருப்பதை வருத்தத்துடன் காட்டினார்கள்

222–ரத வாஜி பத ஷுண்ண விந்த்ய மஸ்தக ரேணுபி
ரேவாம் ஆசாமயா மாஸ ரிபுஸ்த்ரீ பாஷ்ப வர்திதாம்

சத்ருக்களின் மனைவிகளுடைய கண்ணீர் பெருக்கால் விருத்தி செய்யப்பட ரேவா என்னும் நதியை
தேர்களாலும் பரிகளாலும் விந்த்ய மலையில் பெருகிட்ட தூள்களாலே நிரப்பிட்டானே
அச்சேனையின் தலைவன் ஸாத்யகீயே –

223–வவ்ருதே சமரஸ் தத்ர ஸூபக ஸ்வர்க்க ஸங்க்ரம
ஸித்த கந்தர்வ யூதா நாம் ஸித்த தாண்டவ தேசிக

எதிரிகளை சுவர்க்கத்தை அடையச் செய்தும்-கந்தர்வ சித்தர் திரளுக்கு மன மகிழ்ச்சி அளிப்பதுமான
அச்சண்டை விந்த்ய மலையில் அதிகமாக வளர்ந்து ஆனந்தக் கூத்தை அளித்ததே

224–ஸ்புலிங்கை கட்க நிஷ் பிஷ்ட தந்த தம் போலி சம்பவை
ஆஸீத் த்வி ரத மேகா நாம் அசிரத்யுதி கல்ப நா

கத்திகளால் துண்டு பட்ட தந்தங்களாகிற வஜ்ராயுதங்களில் இருந்து கிளர்ந்திட்ட தீ பொறிகளால்
யானைகளாகிற மேகங்களுக்கு மின்னல் உடன் சேர்க்கை நேர்ந்ததே –

225–சவ்யால ம்ருக ஸங்கீர்ணா ரம்ய துங்க ரத த்ருமா
விச ஸர்ப்ப சமூஸ் தத்ர விந்த்ய வந்யேவ ஜங்கமா

முரட்டு யானைகளுடன் சேர் மிருகங்களும் இங்கும் அங்கும் இருந்திடவும் -உயர்ந்த தேர்கள் மரங்கள் போல் விளங்கிடவும்
அந்தப்பெரும் சேனை விந்த்யமலையில் பெரும் காடு போல் விளங்கிற்றே

226–தாலத் வயச ஜங்கா க்ர்ய கும்பைர் உத்தம்பி தாம்பரா
கர்ஜிதைர் த்ராச யாமாஸூ கஜா வந மதங்க ஜான்

பனை மரங்கள் அளவிலான பெரும் முழங்கால்களை யுடையனவும் கும்பங்களால் தலைகளால் வானத்தை சூழ்ந்ததுவுமான
ஸாத்யகீயின் யானைப் படைகள் தங்கள் கர்ஜனையாலே அங்கு இருந்த காட்டு யானைகளை நடுங்கச் செய்தன –

227–பல யந்த்ரணயா தத்ர க்ருஹீ தைர் விபி நத் விபைர்
வ்யவர்த்த யத தாம் சேனா விந்த்ய பாதைர் இவோன் நதை

அங்கு தனது சக்தியால் பொறிகளினால் யந்த்ரங்களைக் கொண்டு பீடிக்கப் பட்ட விந்த்ய மலையின்
தாழ்வரைகள் போல் உயர்ந்து இருந்த காட்டு யானைகளைக் கொண்டு தனது சேனையைப் பெருக்கினான் –

228–யூதைர் த்விரத சைலா நாம் கநத் கதலிகா வநை
அந்தரம் பூர யாமாஸ விந்த்ய நீ ஹார பூ ப்ருதோ

தென்னையைப் போல் கொடிகளுடன் விளங்குகின்ற நெடு மலைகள் போன்ற யானைக் கூட்டங்களால்
விந்த்ய இமய மலைகளின் இடைப்பகுதியை நிறைத்திட்டான்

229–அராதி வநிதா நேத்ரைர் அஸ்ருதா ராத ரைர் இமாம்
வீரோ வஸூ மதீம் இத்தம் விததே தேவ மாத்ருகாம்

இப்படி விரோதிகளின் ஸ்த்ரீகளுடைய கண்ணீர் நிறைந்த கண்களாகிய மேகங்களால் அந்த
பூமியை தேவ மாத்ருகை -மழை நீரால் -வளம் பெறுவது போல் -ஆக்கினான் –

230–தர்ம யூப நிபைஸ் தஸ்ய ஜய ஸ்தம்பை சமந்தத
ப்ர ரூடாத்புத ரோமாஞ்சா ப்ரத்யபா சத மேதி நீ

தர்மம் என்னும் யூப வேள்வி ஸ்தம்பம் போல் அவனது ஜய ஸ்தம்பங்களால் பூமி பாரம் தோலையும்
மகிச்சியைப் பெற்று மயிர்க்கூச்சு எறிந்து பொலிந்ததுவே –

231-ஜிதா சேஷ வி பக்ஷஸ்ய பத்த முக்தா வபாஸி நீ
அபவத் ககு பாம் தஸ்ய கீர்த்தி ஸ்ரவண பூஷணம்

பகைவர்கள் அனைத்தரையும் வென்றிட்ட ஸாத்யகீயின் புகழானது அனைத்து பக்கங்களும் பரவியதாய்
சிறை யுற்றோர் சிறை விடுத்தோர் பெருமை யுற்ற -மிக்குற்ற முத்துக்களால் மிகச் சிறப்புடைய காதணி போல் மேலாக விளங்கியதே –

232–இதி க்ராஹ்ய க்ராஸ் சக்ரே ஹரிதோ ஹரி தோஷ க்ருத்
வீர ஸூரபி ணா ஸ்வேந யஸசா அவாசி தாம்பரா

எங்கும் பரவுகின்ற தன் புகழால் கந்தமுற்ற அம்பரம் உடை திக்குகள் எனும் அரிவைகளைக் கைப்பிடிக்கும்
அங்கமாக்கி கண்ணனுக்கு ஆனந்தம் அளித்தானே
எல்லா அரசர்கள் இடம் இவன் கப்பம் கொண்டதை புகழ் என்ற பட்டாடை அணிந்த
திக்குகளாம் ஸ்திரீகளை பாணி கிரஹணம் செய்தது போல் என்று வர்ணிக்கிறார் –

233–ஹ்ருத ஸர்வஸ்வ தீநா நாம் வ்ரீடாம் அப நுதன் நிவ
அதி சத் ஷவ்மம் ஆசா நாம் யஸோபி ஹம்ஸ லக்ஷணை

ஆனவுடைமை எல்லாம் பறிபோக ஏழ்மையினால் வருந்திட்ட வான திக்குகள் நாணத்தை விலக்குகிறான் போல்
ஹம்ஸ லக்ஷணம் அன்னம் போன்ற புகழாம் வெண் பட்டைப் பணித்தனனே ஸாத்யகீயும் –

234–ஸ சக்ர வத் பரிக்ரம்ய ஷமா சக்ரம் அரிந்தம
ஷபயித்வா ரீபூன் ஸர்வான் சவுரி பார்ஸ்வம் புனர் யயவ்

எம்பெருமான் திரு வாழி போல் உலகெல்லாம் சுற்றுச் சென்று அங்கிருந்த பகைவர்கள்
அனைவரையும் அழித்திட்டு கண்ணனுடைய பக்கத்தில் ஸாத்யகீயே மீண்டும் வந்தனனே –

235–ஸைன்ய ஸிந்து பதஸ் தஸ்ய ஸ்தலீ சேஷித கண்டக
விததே விஸ்மயோந் நித்ர ப்ரீதி கண்டக நாம்

அவனுடைய சேனை என்ற ஆறு சென்ற வழி எல்லாம் குவிந்திருந்த முட்ச்செடிகள் களைந்து போய் இல்லங்கள் தவிர
மற்ற இடம் எல்லாம் தரையானதால் அப்பொழுதே புவி எல்லாம் மகிழ்ச்சியினால் மயிர்க்கூச்சு ஆகியதே
கண்டகம் -விரோதிகள் முள் செடிகள் முதலில் -அதே பதம் பின்பு மயிர்க்கூச்சு
கண்டகத்தைப் போக்கி கந்தகத்தை உருவாக்கியதே -என்ன ஆச்சார்யம் –

236–தம் ஏவம் அகிலாம் ஆசாம் பரிக்ரமய உதய ஸ்திதம்
ப்ரத்யோதன சமம் பவ்ரா ப்ரஹ்ருஷ்டா ப்ரத்யுபாசத

உலகத்தை முற்றிலுமாய் உலாவி வந்து வெற்றிகரமாய்த் தலை நகருக்குத் திரும்பி வந்த ஸாத்யகியை
உதயமாகும் அலரி -ஸூர்யனைப் போலவே கண்டு மக்கள் இன்பமுற்று பூஜித்தனர்

237–ஸைன்ய கோஷ ஸமா ஹு தவ் ததோ ஹரி ஹலாயுதவ்
தம் அப்யாஜக் மது தூராத் உக்ர சேன புராகமவ்

படையினரின் இரைச்சலால் பரவசமுற்று அழைப்புற்றாராய் உடன் கண்ணனும் பலராமனும்
உக்ரசேனர் தம்மைப் பின் தொடர்ந்து வெகு தொலைவில் இருந்து ஸாத்யகியை எதிர் கொண்டனர் –

238–தத்ருசே ஸாத்யகிஸ் தத்ர ராம முக்யை ஸ ராஜகஸ்
அந்யைஸ் ஸஹ திசா பாலைர் ஆ கண்டல இவா பர

அச்சேனையின் நடுவிலே அரசனுடன்-உக்ரசேனருடன் – சேர்ந்தவனாய் அச் ஸாத்யகீ பலராமன் ஆகியரோடும்
வருணன் உட்பட திசை பாலகர் அனைவர்களும் சேர்ந்து இந்த்ரன் போல் ஆனான்

239–அபி வந்த்ய ஸ தான் வந்த்யான் அபி வ்யக்த பராக்ரம
தத் அநுப் லவபா வேந ப்ராவிசத் த்வாரகாம் புரீம்

உறுதி நிலையுடன் கூடிய கீர்த்தியுடன் ஸாத்யகீயும் தலை வணங்கி துவாரகையில் பெரியோர்கள் சூழ்ந்திடவே உட் புகுந்தனனே –

240–பிரஸ்தி ததவ் பரிமே யாநி பஸ் ஸாத் உபசி தாநி ஸா
ஜக் ரசே யது சைன் யானி ஜகந்தீவ ஹரேஸ் தநு

அந்த த்வாரகையானது புறப்படும் போது சொற்பமாயும் பிறகு பெருகினதுமான யாதவ சைன்யத்தை
எம்பெருமான் திருமேனி உலகங்களை உட்க்கொள்வது போல் உட்க்கொண்டது

241-அஷ்டா ஸூ தி ஷு விபவைர் உப சங்க்ருஹீதை யஷாஸ் பத ப்ரகசநீ யது ராஜ தாநீ
ஸத்ய அநுபாவ வா ஸூ தேவ ஸூ தா ப்ரசத்த்யை ஸம் பூத திக் பதி விபூதிர் இவாம்ப பாஸே

எட்டுத் திக்குகளிலும் இருந்து சேகரிக்கப்பட்ட செல்வங்களால் யக்ஷராஜன் பிங்கலன் குபேரன் நாடான அளகா புரியைப் பரிஹஸிக்கும்
த்வாரகையே மங்கிடாத செல்வமுடை கண்ணனுடைய அருள் பெற்று எங்கும் உள்ள தேவர்களின் திக் பாலர்களின் வைபவம் போல் விளங்கிற்றே –

242–அப் யர்ச்ச பூர்வ விபவாத் அதிகை ப்ரதிஷ்டை நாகாதி பான் இவ நவோபஹ்ருதான் நரேந்த்ரான்
தர்ம அநு பாலந நியோக நிரூட சித்தான் ப்ராஸ்தா பயத் ப்ரதி திசம் ப்ரதமோ யதூ நாம்

யாதவர்களின் முதல்வரான கிருஷ்ணன் புதிதாகக் கொண்டு வரப்பட்ட அரசர்களை பழைய ஐஸ்வர்யத்துக்கு மேலாக்கப்பட்ட
வைபவத்தைக் கொண்டு தேவ லோக அரசர்களை போல் பூஜித்து தர்மத்தைக் காக்க ஆஜ்ஜை செய்து அவரவர் திக்குக்குப் புறப்படச் செய்தார் –

243– மணி மகுட ஸஹஸ்ரைர் வாஸூ தேவஸ்ய பூ பா
பத ஸவித நிஷண்ணாம் பாதுகாம் அர்ச்சயித்வா
ப்ரதி யயுர் உப லப்தை பாரிஜாத ப்ரஸூநை
ஸூர பயிதும் உபேத்ய ஸ்வா வரோதான் ப்ரஸாத் யான்

அந்த அரசர்கள் ஆயிரக் கணக்கான க்ரீடங்களால் கண்ணபிரானின் பாதுகையை பூஜித்து
தங்கள் பெற்ற பாரிஜாத மலருடன் தங்களால் சென்று சந்தோஷப்படுத்தப் பட வேண்டிய
அந்தப்புர ஸ்திரீகளை மணம் பெறுவிக்கத் திரும்பிச் சென்றனர்

————

ஸ்ரீ கவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குணசாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்தகுரவே நம:

—————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading