ஸ்ரீ திருப்பாவை -2022-உபன்யாசங்களில் இருந்து பெற்ற அமுதம் –

ஸ்ரீவிஷ்ணு சித்த‌ குல‌நந்த‌ன‌ க‌ல்ப‌ வ‌ல்லீம்
ஸ்ரீர‌ங்க‌ராஜ‌ ஹ‌ரி ச‌ந்த‌ன‌ யோக‌ த்ருஸ்யாம்|
ஸாக்ஷாத் க்ஷ‌மாம் க‌ருண‌யா க‌ம‌லா மிவாந்யாம்
கோதா ம‌நந்ய‌ ச‌ர‌ண‌: ச‌ர‌ண‌ம் ப்ர‌ப‌த்யே || –ஸ்ரீ கோதா ஸ்துதி(1)

மாதஸ் ஸமுத்திதவதீமதி விஷ்ணுசித்தம்
விஸ்வோபஜீவ்ய மம்ருதம் வசஸா துஹாநாம் |
தாபச்சிதம் ஹிமருசேரிவ மூர்த்திமந்யாம்
ஸந்த: பயோதிதுஹிதுஸ் ஸஹஜாம் விதுஸ்த்வாம் || (9)

அம்மா சொல்லித் தரும் வேதம் திருப்பாவை -விஸ்வ அம்ருதம் -உஜ்ஜீவனம் அளிக்கும்

தூ மணி மாடத்து சுற்றும் விளக்கு எரிய தூபம் கமழ கண் வளருவதையும் –
மெள்ள எழுந்து ஹரி பேர் அரவம் செய்வதையும்
கூடி இருந்து குளிர்வதையும்-உத்தவர் வழி வாழ்ந்து –

சங்க நூல்களில் முதல் பாசுரம் ஸூர்ய சந்த்ரர்களைச் சொல்லுவது மரபு —

பாவை-பெண்கள் விக்ரஹ வடிவில் -மதிள் -அரண் போல் -கண் மணி pupil போல் கண்ணன் காப்பான் –
பாவை -இஞ்சி அர்த்தத்தில் சேர்த்த பொங்கல்
திருப்பு ஆவை -புத்தியைத் திருப்பும்

தருவான் -தருவதற்காகவே நாராயணன் இங்கு கண்ணனாக அவதாரம்

நாராயணனே நமக்கே பாரோர் புகழ படிந்து பறை தருவான் -என்றுமாம்
அருள் தருவான் அது நம் விதி வகையே

மூப்பு திருமாலை சிந்திப்பார்க்கு இல்லையே -நந்தகோபன் குமரன் ஆச்சார்யர் –

கதிர் மதியம் சொல்லி ஒப்பு இல்லாமல் அம் முகத்தான்

உறங்குமவன் போல் இல்லாமல் உலாவும் -பெருமாள் -கைப் பொம்மையாக இருப்பதே நம் கர்தவ்யம்

ஊண்வினைகள் என்பது உணவைச் சாப்பிடும் வகைகள் ஆகும். உண்ணும் செயல் ஒவ்வொரு முறைக்கும் தனித் தனி சொல்லாடல் தமிழில் உள்ளது. அந்த ஊண் வினைகள் பின்வருமாறு தமிழில் உள்ளன.

  • உறிதல், உறிஞ்சுதல்–நீர்ப்பொருளையும் நெகிழ்ச்சிப் பொருளையும் காற்றால் வாய்க்குள் இழுத்தல்.
  • குடித்தல் –நீர்ப் பொருளை இயல்பாக உட்கொள்ளுதல்.
  • பருகுதல்–நீர் ஏனத்தில் பல் படக் குடித்தல்.
  • அருந்துதல்–கொஞ்ச கொஞ்சமாகக் குடித்தல்.
  • மண்டுதல்–மண்டியுட்படக் குடித்தல்.
  • மாந்துதல் —பெரிய அளவில் குடித்தல்.
  • சப்புதல்–உணவை மெல்லாமல் நாவிற்கும் அண்ணத்திற்கும் இடையில் வைத்து அதன் சாற்றை உறிஞ்சுதல்.
  • சுவைத்தல்–ஒன்றை மென்று அதன் சுவையை நுகர்தல்.
  • சவைத்தல்–குழந்தை தாய்ப் பாலைச் சப்புதல்.
  • சூம்புதல் சூப்புதல்–விரலை வாயில் வைத்துச் சப்புதல்.
  • தின்னுதல்–பழம் பண்ணியம் போன்ற சிற்றுண்டியை மென்று உட்கொள்ளுதல்.
  • உண்ணுதல்–கவளமாகச் சோற்றை உட்கொள்ளல்
  • சாப்பிடுதல்–சோற்றைக் கறி வகைகளுடன் குழம்பு சாறு மோர் இட்டுக் கலந்து உட்கொள்ளல்.
  • மடுத்தல், வாய்மடுத்தல்–கவளம் கவளமாகப் பிறர் ஊட்டுதல்.
  • அசைத்தல் –விலங்கு அசை போடுவதுபோல் அலகை அசைத்து மென்று உட்கொள்ளல்.
  • அயிலுதல் –குழந்தை அளைந்து சோற்றை உண்ணுதல்.
  • கப்புதல் — வாய் நிறைய வைத்து மெல்லுதல்.
  • மிசைதல்–விருந்தினரைச் சாப்பிடவைத்து மிஞ்சியதை உண்ணுதல்.
  • மொசித்தல்–பலர் ஒன்று கூடி உண்ணுதல்.
  • ஆர்தல்–வயிறு நிரம்ப உண்ணுதல்.
  • விழுங்குதல்–மெல்லாமல் சுவைக்காமல் வாய் வழியாக வயிற்றுக்குள் இடுதல்.

————

  • பகவான் கிருஷ்ணரை சந்திக்க குசேலர் அவலை எடுத்துச் சென்றது ஒரு மார்கழி மாத முதல் புதன்கிழமை. அதனால், மார்கழி மாத முதல் புதன்கிழமை “குசேலர் தினம்” என்று கொண்டாடப்படுகிறது. குருவாயூர் கோவிலில் பக்தர்கள் அன்றைய தினம் குருவாயூரப்பனான உன்னிக்கண்ணனுக்கு அவல் ஸமர்ப்பித்து வழிபடுவர். மார்கழி மாத முதல் புதன்கிழமையன்று  கண்ணனுக்கு அவல் நிவேதனம் செய்து வழிபட்டால் வீட்டில் செல்வம் செழிக்கும் என்பது நம்பிக்கை. வீடுகளில் அன்றைய தினம் “குசேலோபாக்யானம்” (குசேலரின் கதை) பாராயணம் செய்வார்கள். கையகலத்திற்கு ஒரு சிறிய சிவப்பு வஸ்திரம் (கண்ணனின் கௌபீனம் என்று ஐதீகம்) மடித்து வைத்து , அவல், வெல்லம் வைத்து வழிபடுவார்கள். பிறகு அந்த அவலை சிறு சிறு  கிழியாகக் (சிறிய மூட்டையைப் போல்) கட்டி அனைவருக்கும் விநியோகம் செய்வார்கள்.

———–

முதலில் இலக்கைச் சொல்லி -மேல் கர்தவ்யங்கள் -செயய வேண்டிய ஆறும் செய்யக் கூடாத ஆறும் சொல்கிறாள்

ஆயர்பாடியே பாற் கடல் -அல்லது ஷீராப்தி என்றுமாம்

பரமன் code word க்ராம ஸிம்ஹம் -நாய் சமஸ்க்ருதத்தில் அறியாதவன் தன்னை க்ராம ஸிம்ஹமாகவே கொண்டது போல்

உய்யும் பேறு எண்ணாமல் ஆறு என்றது ஆறும் பேறும் அவனே என்று உணர்ந்தவர்கள் பேச்சு

நெய் ஆத்ம அனுபவம் கைவல்யம் -பால் சிற்றின்பம் -இவை உண்ணோம்

———-

பேசுதல்-வெவ்வேறே பத பிரயோகங்கள்
அரைத்தல் – அடித்து பேசுவது
இசைத்தல் -இசை உடன் பேசுதல்
இயம்புதல்
உரைத்தல் -உரையில் உள்ள பொருள் உரலில் –
ஓதுதல் காதில் சொல்லி –
கத்துதல்
குழறுதல்
கூறுதல் வகைப்படுத்தி
புலம்புதல்
பனுவல் செய்யுளாக பேசுவது
பொதிதல் சொற் பொழிவு
ஏத்துதல் ஸ்துதி –
வாழ்த்துதல் –
விளம்புதல் அறிவிப்பதில்

பலமுறை சொல்லுதல்

செயலைப் பேசி முடிவுசெய்தல்

சாத்துதல் -அனைவரும் அறியும் படி உரத்த குரலில் சொல்வது -சாற்று முறை

ஓங்கி -வளர்ந்து எழுந்து உவந்து விரைந்து -பல அர்த்தங்கள்

பாற்கடல் பரமன் உத்தரன் -தேவர்களும் ஆச்ரயிக்க -உத்தரை -பகவத் பாகவத கர்ப்பம்
மேல் உத்தமன் -நம் போல்வாருக்கும்

ஓங்கி -உயரத்தைக் குறிப்பிடும்போது) உயரமாக; நெடிதாக
மேல்நிலைக்கு வருதல்; முன்னேறுதல்; சிறத்தல்
வளர்ச்சி, முன்னேற்றம் போன்ற நிலைகளை உணர்த்தும் முதன்மை வினைகளின் செயல் மேலும் உயர்வான நிலை அடைதல் என்ற பொருள் தரும் ஒரு துணை வினை

ஓங்கி உலகு -ஸாஸ்த்ரம் அளந்த உத்தமன் -கீதாச்சார்யன் -கீதா ஸாஸ்த்ரம்-சரம ஸ்லோகம் அளித்து -ஆச்சார்ய பாரமாக இப்பாசுரம்
விக்ரம வேத மந்த்ரம் -தடைகளைப் போக்கும் மந்த்ரம் –
பயோ வ்ரத நோம்பு ஒருத்தி அதிதி இருக்க வாமனன் அவதாரமும் -மற்ற அனைவரும் உகக்க அளந்தவன் –
மழைக்கு தடைகளை போக்குபவன் -துரும்பால் கிளறிய சக்கரக்கையன்
dolphin ஓங்கி -மத்ஸ்யம் வேதம் காத்த
திருவாயமொழி சாஸ்திரம் அளந்து காத்த திராவிட ஸ்ருதி தர்சகாய நம

மும்மாரி -மூன்று வளங்கள் -நீர் நிலம் பால் வளங்கள் -மூ வுலகு இந்திரனுக்கு

நீங்காத செல்வம் -அவன் கர்மம் அடியாக அவளோ கிருபை அடியாக தருவாள்

ஸாஸ்த்ரம் அளந்த ஆச்சார்ய பாரமாக இப்பாசுரம் தத்வ த்ரயம் ரஹஸ்ய த்ரய ஞானம் அளித்து -பசு போல் ஆச்சார்யர் பஞ்ச கவ்யம் பஞ்ச ஸம்ஸ்காரம்

பக்தி உழவன் மகிழ் சரணாகதர்களை உருவாக்கி -அவன் கண்கலங்கிய கயல் உகளுமே
ஹ்ருதய தாமரைக்குள் தெய்வ வண்டு வந்து துயில் கொள்வானே –

வித்யா தானம் ஸர்வ தன ப்ரதானம் -நீங்காத செல்வம்-சேமுஷீ பக்தி ரூபம்

நீராழி வண்ணனைப் பாலாழி நாதனை நின்மலனைச்
சீராழி யங்கைத் திருமகள் கேள்வனைத் தெய்வப்புள்ளூர்
கூராழி மாயனை மாலலங் காரனைக் கொற்றவெய்யோன்
ஓராழித் தேர் மறைத் தானை யெஞ் ஞான்று முரைநெஞ்சமே.  -திருமாலிருஞ்சோலைமலை அழகரந்தாதி-  1–

கொடுப்பவன் கையை விட வேண்டாம் என்று மறுப்பவன் கை மேல் இருக்கும்
கொள்பவன் கையை விட கையில் வைத்து கரந்து ஈயேன் என்பவன் கை தாழ்ந்து இருக்குமே -புற நானூறு

ஈ’ என இரத்தல் இழிந்தன்று; அதன் எதிர்,-‘ஈயேன்’ என்றல் அதனினும் இழிந்தன்று; ‘கொள்’ எனக் கொடுத்தல் உயர்ந்தன்று; அதன் எதிர்,’கொள்ளேன்’ என்றல் அதனினும் உயர்ந்தன்று;

நெற்கதிர்கள் ஓங்கி வளர்வது போல் நம் உள்ளத்தில் சரணாகதி நிஷ்டை ஓங்கி வளர வேண்டும்

கறும் கண்ணி பார்வையாலும் – உந்தித் தாமரை வண்டுகள் பிரதிபலிப்பாலும் – துளசி சூடுவதாலும் – சரணாகதரை நினைத்து மகிழ்ந்தும் கறுத்து –
காளிமா கறுமை நம்மைக் காக்கட்டும் -ஸங்கல்ப ஸூர்யோதயம்

வெய்யோனொளி தன்மேனியி(ன்) விரிசோதியி(ன்) மறையப்
பொய்யோவெனு மிடையாளடு மிளையாளடு போனான்
மையோமர கதமோமறி கடலோ மழை முகிலோ
ஐயோ விவ(ன்) வடிவென்பதொ ரழியாவழ குடையான்-உருவம் போல் தான் பர்ஜன்யன் இருக்க முடியும்

கோடி — 107
சங்கம் — 1014
விந்தம் – 1021
குமுதம் – 1028
பதுமம் – 1036
நாடு – 1042
சமுத்திரம் – 1049
வெள்ளம் – 1058

இந்தக் கணித எண்ணை மனத்தால் அறிந்து பார்ப்பது எளிதன்று. கணித உண்மை நம் சிந்தையை எட்ட முடியவில்லை. ஆனால் இந்தச் சேனையின் அளவைக் ‘கவிதை உண்மை’யால் காண்போம். மூலபலம் முழுவதும் ஏழரை நாழிகைக்குள் இராமன் கணையால் அழிந்துபடுகின்றது. இதனைக் கம்பநாடன்,

ஆனை ஆயிரம் தேர்பதி னாயிரம் அடல்பரி ஒருகோடி,
சேனை காவலர் ஆயிரம் பேர்படின் கவந்தம்ஒன் றெழுந்தாடும்;
தானம் ஆயிரம் கவந்தம்நின்று ஆடிடின் கவின்மணி கணில்என்னும்;
ஏனை அம்மணி ஏழரை நாழிகை ஆடியது இதனன்றே—–88. மூலபலம் -218=-என்று கூறுவான்.

ஆயிரம் யானைகள், பதினாயிரம் தேர்கள் ஒரு கோடி குதிரைகள், ஆயிரம் சேனைக் காவலர்கள் இறந்து பட்டால், தலை இல்லாத பேய் (கவந்தம்) ஒன்று எழுந்து ஆடுமாம். ஆயிரம் கவந்தங்கள் ஆடினால் இராமனது கோதண்டத்தில் கட்டிய அழகிய மணி ஒருமுறை ‘கணீல்’ என்று ஒலிக்குமாம். ஆனால் இராமனது மூலபலவதைப் போரில் அம்மணி தொடர்ந்து, தீயணைக்கும்படையினர் செல்லும் மோட்டார் வண்டியில் ஒலிக்கும் மணியோசை போல, ஏழரை நாழிகை விடாது ஒலித்ததாம். கவிஞன் கூறும் இந்த உண்மையைக் கொண்டு அழிந்துபட்ட மூலபலச் சேனையின் அளவை ஓரளவு நம் மனத்திரையில் அமைத்துக் கொள்ளமுடிகின்றது. மூல பலத்தின் அளவை நாம் நன்கு உணர்ந்து கொள்ளுகின்றோம்.

உபய வேதாந்தக் கடல்-ஆச்சார்யர்கள் மகம் – -சஞ்சாரம் பண்ணி -ஏற்றத் தாழ்வு இல்லாமல் -த்ரயார்த்த- உபதேசம்-சிப்பியில் விழுந்து முத்து -ஆழ்வார்கள் அருளிச் செயல்கள் –

ஹ்ருதயத்தில் நின்று இருந்து சாயனகித்து -சுருதி சொல்லுமே -சரணாகதனாக்கிய பின்பு க்ருதக்ருத்யனானான் -கண் வளர்கிறான்
வள்ளல் -காருண்யம் உதாரம் – பெரும் ஞான அனுஷ்டானங்கள் பூர்த்தி -பசுக்கள் ஆச்சார்யர்

ஆழி மழை -இத்தால் பல ஸ்வரூபம் -ஆச்சார்ய சமாஸ்ரயணம் -அந்தர்யாமித்வ நிஷ்டையைச் சொன்னபடி

கண்ணன் பிறந்ததால் தேவகி வாசுதேவன் உடைய சங்கிலி கட்டு உடைந்தது . ஆச்சாரியனிடம் அடி பணிந்தால் பிறவி கட்டிலிருந்து விடுதலை கிடைக்கும்.

உதங்கர் மேகம் -பாலைவனத்தில் வரும் மேகத்துக்கு பெயர் -விஸ்வரூபம் காட்டி அமிர்தம் கொடுக்காமல் –
ஆராவமுதம் காட்ட தண்ணீரைக் கேட்டு இழந்தார் அன்றோ

ரிஷி சாபம் -மைத்ரேயர் -துரியோதனன் -தொடையில் கதை அடித்து கொல் வேன் -பீமன் சபதம் மெய்யாக்கிய மாயன்-

துருவன் மதுவனத்தில் தபஸ் -இதுவே வடமதுரை ஆனது பின்-

யமுனையின் வடக்கரையில் ஆயர்பாடி தென் கரையில் மதுரை -வட -ஆல மரம் -வட பத்ர சாயி -ஆல மரம் வேர் போல் மன்னி இருக்கும் தேசம்

உன் மைந்தன் ராமன் மேல் ஆணை -ஈன்றனள் ஏவினாள் -ராமரும் சொல்கிறான் -செல்லப்பிள்ளை -ஆகவே ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கு

தூயோமாய் வந்து -சென்று இல்லையே -மனஸ் உயிர் எல்லாம் அங்கு உடல் மட்டும் இங்கே அதுவும் வர வேண்டுமே –
தன் உயிர் செல்வதைத் தானே கண்டான் சக்ரவர்த்தி பெருமாள் விசுவாமித்திரர் பின் போனதும்

வந்து-ஆஜகாம -இக்கரை

தீயினில் தூசாக செப்ப வேண்டாம் -தானாகவே நீங்கும் -செப்புவதே ஸ்வயம் பிரயோஜனம்

ஆயர் குலம் ஆரியர் குலம் குரு பரம்பரா ஆச்சார்யர் -திருமந்திரம் தாய் -விளக்கி அருளும் ஆச்சார்யர் -தாம் ஓதும் அதரன் –

மாயனை -முதல் ஒன்பது ஸ்கந்த சுருக்கம்-

மாயன் -நம்மாழ்வார் -மைந்தன் -நாதமுனிகள் -பாஞ்ச ராத்ரம் பிரவர்தனம் யோக நிஷ்டை -யமுனைத்துறைவன் ஆளவந்தார் -அணி விளக்கு ராமானுஜர் -தாம் ஓதும் அதரன் -நம் ஆச்சார்யர்
ஆயர் -ஆராய்ந்து உரைப்பவர்கள் – -ஆயர் பேராயர் சப்தங்கள் -அவர்கள் கொண்டார்கள் –

தினம் உறங்கும் முன் பாற்கடலில் உள்ள தாயார் பெருமாளை தியானித்து உறங்க வேண்டும். தினம் எழுந்திருக்கும் பொழுது 7 முறை ஹரி ஹரி என்று உறக்க சொல்லி, கஜேந்திர மோக்ஷத்தை நினைக்க வேண்டும். பர, வியூக, விபவ,அந்தர்யாமி, அர்சஸ் தாயார் பெருமாளையும் நினைக்க வேண்டும்

கஜேந்திர ஆபத்தை ஹரிபரியாகப் போக்குவித்த ஹரி-பரத்வாதிகள் பஞ்ச-கஜேந்திர மோக்ஷம் ஆகிய -ஆறு விஷயங்களையும் ஆறாம் பாட்டில் –

ஜகத் த்ராணம் மறந்து கஜத் த்ராணம் பண்ண வந்த ஜகன் நாதன் -ஹரி திரு நாமம் கொண்டவன் -ஹரி நாமம் சொல்லவே ஜெயம் கிட்டும்

க்ஷீரஸாகர தரங்க ஶீகர ஆஸாரதாரகித சாருமூர்தயே | போகிபோக ஶயனீயஶாயினே மாதவாய மதுவித்விஷே நம꞉-முகுந்த மாலை -பாற் கடல் பெருமாளை த்யானித்துக் கொண்டே உறங்கவும் எழவும் வேண்டுமே 
பிரம்ம முகூர்த்தம் 96 mins before sunrise
பரிணவித்த பிரணவத்தின் ஒலி எழுந்து பமபமக்கும் பாஞ்சஜன்யம்
மணி மாடம் -படி மாடம் என்று சொல்லாமல் – -பளிங்கு மாடம் -உள்ளே இருக்கும் மிதுனம் வெளியிலேயே தர்சனம் அருளுவதால்
துயில் அணை -துயிலை வரவழைக்கும் அணை
தன் விந்தை தந்தவன் தந்தை – தாங்குபவள் தாய் – ஆக்குபவள் அக்கா – ஆள்பவன் அண்ணன்
பேரை யுடையவன் பேரன் -தம் கை போல் தங்கை -தன் பின் பிறந்தவன் தம்பி -மாமன் மக்கள் இட்டீடு கொள்ளும் உறவு-நடாதூர் ஆழ்வான் முதலி ஆண்டான்-ராமானுஜருக்கு உறவு போல்
கோதற்ற ஞான திருப்பாவை பாடின பாவை தங்கை
வாதுக்கு வல்லான் ஆண்டான் மருமகன் தம்பி எம்பார்
சீறுற்ற செல்வப் பிள்ளையோ மைந்தன் வடுக நம்பி ஞானபுத்ரன்
ஏதுக்கு ராமானுஜனை எதி என்பர்
மணி மாடம் -வெளியில் சப்தம் உள்ளே கேட்க்காதே
மாமீர் -பஹு வசனம் -தாராகா -ஒவ்வொரு பெண்ணும் ஆறு பேருக்கு சமம்
கார்யேஷு தாஸீ காரணே ஷு மந்த்ரி ரூபேஷு லஷ்மி ஷாமயா சயனேஷு
பொறுமையிலே பூ மகளாய் — பணிப்பெண்ணாய் வாழ்கின்ற பெண் குணவதி
ஸ்ரீ தேவிகள் பூ தேவிகள் -அவனுக்கு ஸ்வாமி ஒருமை
ஏமம் சிறை -இரவு -அதிரடி இன்பம் பைத்தியம் கலக்கம் மயக்கம் –
பெரும் துயில் -ஒரே வார்த்தையில் பல கேள்வி
விஞ்சை வினை செய்தான் -மந்த்ரம் போட்டு அரக்கிகளைத் தூங்க வைத்த -கம்பர் -இப்பாசுரமே பிரமாணம்
மஹா மாயன் -172-
மாதவன் -73
வைகுண்ட 406
பகவத் நாம ஸங்கீர்த்தனம் -vibration மணி மாதத்துக்கும் உள்ளே சென்று -மாமீர் எழுப்பாமல் -அவளே எழுந்து வந்தாள்
முதல் ஆறு வரிகள் -எல்லாம் இவளைப் பற்றியே -மா மாயன் மாதவன் வைகுந்தன் -இத்யாதி பலத்தாலே பலம் கிட்டிற்று
பக்தி முதிர்ச்சி தேசமுடையாய் சத் சங்கம்
கண்ணன் பிரேமத்தால் கோதுகலமுடையாய்
இவள் திருநாம பலத்தால்
ஸூ கந்த கிரி வாஸ -நறையூர் -மேதாவி ரிஷி மா மாயன் மகள் வஞ்சுள வல்லித்தாயார் -சக்கரத்தாழ்வார் ஸந்நிதி இவர் ஆஸ்ரமம்
விசாக -வேறே சாகை இல்லாமல் ஒரே தாயார் -ஏக பத்னி விரதம் -விசாகம் நக்ஷத்ரம் திருக்கல்யாணம்
பொன்னியலும் மாடம் கவாடம் கடந்து புக்கு -கதவுக்கும் மங்களா ஸாஸனம்
தாயார் திருமேனி வஞ்சிக்கொடி அழகிய வர்ணனை -ஒரே தாயார் இப்பேறு பெற்றார்
பொன்னி அம்மன் கோயில் தனியாகவும் உண்டு -மேலும் விஷ்ணு துர்க்கை கல் கருடன் எதிரிலும் உண்டே -மாமீர் -இவளையே –
என்று என்று நவின்று -கிடந்த நம்பி -பதிகம் -நாமம் சொல்லில் நமோ நாரணமே
நம்பிக்கை நாச்சியார் நம்பியையைக் கையில் வைத்து அருளுவாள்
நோற்று -நோற்காமலேயே விபரீத லக்ஷணை-இடைச்சுவர் -தாய்ச்சுவர் -பள்ளி அறைகளுக்கும் -நோற்காமலேயே கிருஷ்ண அனுபவம் –கச்ச விஷம் புஞ்ச -பாவார்த்தம்-மஹா வ்ருக்ஷம் கள்ளிச்சடி -நல்ல பாம்பு போல் –அஸ்ய ராமஸ்ய ராம பஸ்யதே -ராவணன் இடம் -அடியார் அபசாரம் செய்தால் ராமன் கோப வசம் ஆனான் -அந்த ராமனைப் பார் 

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஒண்ணான வான மா மலை ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

One Response to “ஸ்ரீ திருப்பாவை -2022-உபன்யாசங்களில் இருந்து பெற்ற அமுதம் –”

  1. Dr Venkatesh N Says:

    taken from my 2022 thiruppavai upanyasam

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading