ஸ்ரீ பங்குனி உத்திர திரு நாள்–

12 வது ராசி மீன ராசி.
12 வது மாதம் பங்குனி மாதம்.
அது போல் நட்சத்திரங்களில் 12வது நட்சத்திரம் உத்திரம் நட்சத்திரம்.

எனவே, இந்த மூன்றும் ஒன்றாக இணைகின்ற நாள் பங்குனி உத்திர நாள்.

(12வது ராசி, 12வது மாதம், 12 வது நட்சத்திரம்)

மாதங்களில் 12வது மாதம் பங்குனி. நட்சத்திரங்களில் 12வது நட்சத்திரம் உத்திரம். 12-வது மாதமான பங்குனியும் 12-வது நட்சத்திரமான உத்திரமும் இணையும் புனித நாள் பங்குனி உத்திரம் என்று கொண்டாடப்படுகிறது. எனவே பங்குனி மாத உத்திரத்தின் சிறப்புகள் அதிகம்.

ஸ்ரீராமபிரான்- சீதாதேவி, பரதன்- மாண்டவி, லட்சுமணன்- ஊர்மிளை, சத்ருக்னன்- ச்ருத கீர்த்தி ஆகியோருக்கு திருமணம் நடந்த நன்னாள் பங்குனி உத்திரம் என புராணங்கள் விவரிக்கின்றன.

பங்குனி உத்திர நாளில் ஸ்ரீமகாலக்ஷ்மி, மகாவிஷ்ணுவை நோக்கி கடும் தவம் மேற்கொண்டார். இதில் மகிழ்ந்த திருமால், தன் திருமார்பில் மகாலக்ஷ்மிக்கு வீற்றிருக்கும் வரத்தைத் தந்தருளினார் என்கிறது விஷ்ணு புராணம்.

பல்குணன் -வடமொழியில் உத்தர நக்ஷத்ரத்தின் பெயர் -அர்ஜுனனுக்கும் பல்குணன் என்ற பெயரும் உண்டு

ஆண்டாள் – ரங்கமன்னார் திருமணம் நடந்தது இந்த நாளில் தான் .

பங்குனி உத்தரம் திரு நாள் காஞ்சியில் தேவப்பெருமாள்- 7 நாள் -ஸ்ரீ மலையாள நாச்சியார் உடன் சேர்த்தி-உத்சவம் கண்டு அருளுகிறார்

ஸ்ரீ பெரும் தேவித் தாயார் ஸந்நிதியில் ஸ்ரீ தேவி பூ தேவி ஸ்ரீ மலையாள நாச்சியார் ஸ்ரீ ஆண்டாள் மற்றும் ஸ்ரீ பெரும் தேவித் தாயார் ஸஹிதமாக ஸ்ரீ தேவப்பெருமாள் ஸேவை ஸாதித்து அருளுகிறார் –

மேல்கோட்டை என்ற திரு நாராயணபுரத்தில்- பங்குனி மாதத்தில் வைரமுடி சேவை விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

இந்தத் தலம் ‘தென்னக பத்ரிகாஸ்ரமம்’ எனப்படும்.

வடபத்ரிகாஸ்ரமம் செல்ல இயலாதவர்கள் இங்கு வந்து, நாராயண பெருமாளை தரிசித்தால், பத்ரி போய் வந்த புண்ணியம் உண்டு என்பது ஐதீகம்.

நட்சத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு சில பண்டிகைகள் உற்சவங்கள் உண்டு.
வைகாசி விசாகம், ஆடிப் பூரம் ,ஆவணி அவிட்டம், கார்த்திகை தீபம்,மாசி மகம் ,பங்குனி உத்தரம்.
சந்திரன் பவுர்ணமி நாளில் கூட சிறு களங்கத்துடன் தான் ஒளி தருவான்.
ஆனால், பங்குனி மாதத்தில் பூமி மீன ராசியில் இருப்பதால், உத்திர நட்சத்திரத்துடன் சேர்ந்து,
ஏழாம் இடமாகிய கன்னியில் நின்று, முழு கலையையும் பெற்று பூமிக்கு ஒளி வழங்குவான்.
அந்த பூரண பவுர்ணமி நிலாவில் களங்கத்தைக் காண முடியாது.
களங்கமில்லாத சந்திர ஒளி உடலுக்கும் மனதுக்கும் நிம்மதி தரும். பல நற்பலன்களை கொடுக்கும்.
எனவே, இந்த நாள் கூடுதல் பலன்களை தரக்கூடிய நாளாகக் கருதப்படுகிறது.இது ஜோதிடர்கள் கூறும் சிறப்பு .
—————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

 

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading