ஸ்ரீ அருளிச் செயல்களில் –விதி -பத பிரயோகங்கள் —

விதி –
1-கோட்ப்பாடு –
2-முறைமை –
3-பாபங்கள் –
4-பாக்யம் –
5-இறை அருள் –
6-புண்யம் -ஸூஹ்ருதம்
7-கட்டளை –
8-கைங்கர்யம் –
9-திண்ணம் உறுதிப்பாடு –
10-ஆக்குதல் –
இப்படி பத்து அர்த்தங்கள் உண்டே

விதி -இன்னத்தைச் செய் இன்னதைச் செய்யாதே -வினைச்சொல்
ஊழ் வினை -தலை விதி -பெயர்ச்சொல்
சட்டம் –தீர்ப்பு -ஆணை -கட்டளை –
ஒன்றை அமைக்கும் முறை –
நீதி
வழி
வினை முறை
நடை முறை
ஊழ்
தைவம் திஷ்டம் பாகதேயம் பாக்யம் ஸ்த்ரீ நியதிர் விதி -அமர கோசம்

——————–

    விதி (15)
1-விதி இன்மையால் அது மாட்டோம் வித்தக பிள்ளாய் விரையேல் - 
2-மீனாய் பிறக்கும் விதி உடையேன் ஆவேனே - 
3-வெறுப்பொடு சமணர் முண்டர் விதி இல் சாக்கியர்கள் நின்-பால் - 
4-மெய்யர்க்கே மெய்யன் ஆகும் விதி இலா என்னை போல - 
5-விரும்பி நின்று ஏத்த மாட்டேன் விதி இலேன் மதி ஒன்று இல்லை - 
6-தாழ்த்து இரு கை கூப்பு என்றால் கூப்பாத பாழ்த்த விதி
-எங்கு உற்றாய் என்று அவனை ஏத்தாது என் நெஞ்சமே - 
7-கூட்டும் விதி என்று கூடும்-கொலோ தென் குருகை_பிரான் -
8-அவரவர் விதி வழி அடைய நின்றனரே - 
9-விதி சூழ்ந்ததால் எனக்கேல் அம்மான் திரிவிக்கிரமனையே -
10-நன்று சூட்டும் விதி எய்தினம் என்ன குறை நமக்கே - 
11-மெய்யே பெற்று ஒழிந்தேன் விதி வாய்க்கின்று காப்பார் ஆர் - 
12-எம் மா பாவியர்க்கும் விதி வாய்க்கின்று வாய்க்கும் கண்டீர் - 
13-அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே - 
14-விண் உலகம் தருவானாய் விரைகின்றான் விதி வகையே -
15-விதி வகை புகுந்தனர் என்று நல் வேதியர் - 
--------------
விதியே (2) 
16-இணை மருது இற்று வீழ நடைகற்ற தெற்றல் வினை பற்று அறுக்கும் விதியே -
17-வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே - 
---------
விதி-கொலோ (1)
18-முன்னம் நோற்ற விதி-கொலோ முகில்_வண்ணன் மாயம்-கொலோ அவன் -
---------------
    விதிக்கிற்றியே (3)
19-வெய்யது ஓர் தழல் உமிழ் சக்கர கை வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே -
20-வித்தகன் வேங்கட_வாணன் என்னும் விளக்கினில் புக என்னை விதிக்கிற்றியே -
21-துவரை பிரானுக்கே சங்கற்பித்து தொழுது வைத்தேன் ஒல்லை விதிக்கிற்றியே - 
---------------

விதியில்
22-மந்திர விதியில் பூசனை பெறாது மழை பொழிந்திடத் தளர்ந்து ஆயர் - 
-------------
    விதியின் (1)
23-விளக்கினை விதியின் காண்பார் மெய்ம்மையை காண்கிற்பாரே -
----------
விதியினமே (1)
24-முன் செய்ய முயலாதேன் அகல்வதுவோ விதியினமே - 
-----------
விதியினால் (1)
25-விதியினால் பெடை மணக்கும் மென் நடைய அன்னங்காள் -
--------
விதியினை (1)
26-விதியினை கண்டு கொண்ட தொண்டனேன் விடுகிலேனே - 
--------------

இது என் புகுந்தது இங்கு அந்தோ இப் பொய்கைக்கு எவ்வாறு வந்தாய்
மதுவின் துழாய் முடி மாலே மாயனே எங்கள் அமுதே
விதி இன்மையால் அது மாட்டோம் வித்தகப் பிள்ளாய் விரையேல்
குதி கொண்டு அரவில் நடித்தாய் குருந்திடைக் கூறை பணியாய்—நாச்சியார் திருமொழி -3-2-பாக்யம் என்ற பொருளில்

விதியின்மையால் அது மாட்டோம் –
அது பொல்லாதோ -அழகியது ஓன்று அன்றோ –
ஆகிலும் எங்கள் பாக்ய ஹானியாலே அது மாட்டு கிறிலோம் -என்கிறார்கள் –

விதி இன்மையால் அது மாட்டோம்-என்று –
அது -என்றார்கள் இறே-அவன் நினைவைத் தாங்கள் அறிந்தமை தோற்ற

———-

ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற் சூழ
வானாளும் செல்வமும் மண் அரசும் யான் வேண்டேன்
தேனார் பூம் சோலை திரு வேங்கட சுனையில்
மீனாய் பிறக்கும் விதி வுடையேன் ஆவேனே— பெருமாள் திருமொழி –4-2-பாக்யம் என்ற பொருளில்

மீனாய் பிறக்கும் விதி வுடையேன் ஆவேனே—
கீழ்ச் சொன்ன குருகாய் பிறக்கில் அதுக்கு சிறகு உண்டாகையாலே ஸ்ரீ திருமலையில் அல்லனாய்
கழியப் பறக்கைக்கு யோக்யதை யுண்டு இறே
அப்படியும் ஓன்று அன்றியே
உத்பத்தி ஸ்திதி லயங்களுக்கு ஸ்ரீ திருமலையிலேயாய் மீனாய்ப் பிறப்பேன் -என்கிறார் –

பிறக்கும் விதியுடையேன் ஆவேனே –
இப்போது மீனாய் பிறக்கவும் வேண்டா
ஒரு ஸூஹ்ருதத்தாலே அந்த ஜன்மம் மேல் வரும் என்று திண்மை பெறவும் அமையும் என்கிறார் —

—————

வெறுப்போடு சமணர் முண்டர் விதியில் சாக்கியர்கள் நின்பால்
பொறுப்பரியனகள் பேசில் போவதே நோயதாகிக்
குறிப்பெனக் கடையுமாகில் கூடுமேல் தலையை யாங்கே
அறுப்பதே கருமம் கண்டாய் யரங்க மா நகர் உளானே-—திருமாலை —8—-

விதியில் சாக்கியர்கள் –
பகவத் உத்கர்ஷத்தை அறிந்து
தத் சமாஸ்ரயணத்தைப் பண்ணி
அனுபவிக்கைக்கு ஈடான பாக்கியம் இல்லாதவர் -பௌத்தர்

————-

மெய்யர்க்கே மெய்யன் ஆகும் விதியிலா வென்னைப் போலே
பொய்யர்க்கே பொய்யனாகும் புட்கொடி உடைய கோமான்
உய்யப்போம் உணர்வினார்கட்கு ஒருவன் என்று உணர்ந்த பின்னர்
ஐயப்பாடு அறுத்துத் தோன்றும் அழகனூர் அரங்கம் அன்றே–15-

நான் நெடுநாள் தன பக்கல் வைமுக்யம் பண்ணிப் போந்த இடத்தில்
என்னைக் கிட்ட மாட்டாதே நின்றான்

எனக்கு அத்வேஷம் பிறந்த அளவிலே
மேல் விழுந்து விஷயீ கரித்தான்-

இவை இரண்டும் என் பக்கலிலே கண்டேன் –

விதியிலா வென்னை –
அவனுடைய சீலம் இதுவாய் இருக்க –
விஷயாந்தர பிரவணனாய்
பகவத் விஷய விமூகனாய்ப் போந்த பாக்ய ஹீனன் என்று
முன்பு இழந்த இழவுக்கு வெறுக்கிறார் –

பழுதே பல பகலும் போயின -என்று
பெற்ற பேற்றில் காட்டில் இழந்த இழவே மேல் படி இறே
இவ்விஷயத்தில் கை வந்தார் படி இருப்பது
நிந்திதஸ் ஸ்வ ஸேல்லோகே ஸ்வாத்மாப்யேனம் விகர்ஹதே -என்னக் கடவது இறே –

——————-

விரும்பி நின்று ஏத்த மாட்டேன் விதியிலேன் மதி யொன்று இல்லை
இரும்பு போல் வலிய நெஞ்சம் இறை இறை உருகும் வண்ணம்
சுரும்பமர் சோலை சூழ்ந்த வரங்க மா கோயில் கொண்ட
கரும்பினைக் கண்டு கொண்டேன் கண்ணினை களிக்குமாறே –17-

வாக் வியாபாரம் புறம்பே யானாலும் -காயிக வியாபாரங்களில்
நம் பக்கல் பண்ணிற்றது ஏதும் உண்டோ என்ன –
விதியிலேன்-
விதிர்வித் -என்கிறபடியே
காயிக வியாபாரத்தைச் சொல்லுகிறது –

உன்னை உத்தேசித்து உன் பக்கல் அனுகூலமாக இதுக்கு முன்பு கையால் ஒன்றும் செய்திலேன் –
சாஜிஹ்வா யாஹரிம் ஸ் தௌ தி -என்கிறவதுவும்
யௌதத் பூஜா கரௌ கரௌ -என்கிறவதுவும் –

புறம்பே தப்பிற்றாகிலும் -நெஞ்சாலே தான் நினைத்தாரோ -வென்ன –
மதி யொன்று இல்லை –
உன் வாசி அறியாது ஒழிந்தால்
நீ ஒருவன் உண்டு என்ற அறிவும் கூட இல்லை –

——————–

வாழ்த்தி யவனடியைப் பூ புனைந்து நின் தலையைத்
தாழ்த்தி இரு கை கூப்பு என்றால் கூப்பாத -பாழ்த்த விதி
எங்குற்றான் என்றவனை ஏத்தாத என்னெஞ்சமே
தங்க தான் ஆம் ஏலும் தங்கு–ஸ்ரீ பெரிய திருவந்தாதி –84-

பாழ்த்த விதி என்று
தம்முடைய அகலுகையைச் சொல்லி வெறுக்கவுமாம்
பிராப்தி பிரதிபந்தகமான கர்ம வைகல்யத்தைச் சொல்லவுமாம்

—————-

கூட்டும் விதி என்று கூடும் கொலோ தென் குருகைப்பிரான்
பாட்டு என்னும் வேதப் பசும் தமிழ் தன்னை தன் பத்தி என்னும்
வீட்டின் கண் வைத்த இராமானுசன் புகழ் மெய் உணர்ந்தோர்
ஈட்டங்கள் தன்னை என்னாட்டங்கள் கண்டு இன்பம் எய்திடவே —ஸ்ரீ ராமாநுச நூற்றந்தாதி –29 –

ஸ்ரீ எம்பெருமானார் திவ்ய குணங்களை உள்ளபடி அறிந்து இருக்கும் அவர்கள் திரள்களை
என் கண்கள் களிக்கும்படி கூட்டக் கடவ -ஸூஹ்ருதம் இன்று கூடுமோ-என்கிறார் –

விதி-ஸூஹ்ருதம்-இவர் தமக்கு பேற்றுக்கு அடியான -ஸூஹ்ருதமாக நினைத்து இருப்பது அத்தலையில் கிருபையை இறே-
தம்மாலும் ஸ்ரீ எம்பெருமானாராலுமே விலக்க இயலாமையின் கிருபையை விதி என்றார் –
கூட்டும் விதி -என்பதனால்-அதன் விளைவு தவிர்க்க ஒண்ணாதது என்பது புலனாகிறது
ஸ்ரீ நம் ஆழ்வாரும் -விதி வாய்க்கின்று காப்பார் யார் -திருவாய் மொழி -5 1-1 – -என்று தவிர்க்க-இயலாமையை –
ஐயோ கண்ண பிரான் அறையோ இனிப் போனாலே -என்று விளக்கி காட்டி-இருப்பது இங்கு உணரத் தக்கது –

——————

அவரவர் தமதமது அறிவறி வகைவகை
அவரவர் இறையவர் எனவடி யடைவார்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதி வழி யடைய நின்றனரே –ஸ்ரீ திருவாய் மொழி –1-1-5-

அவரவர் விதி வழி யடைய நின்றனரே-விதித்த மார்க்கத்தில் பலம் பெற அந்தர்யாமியாக நின்று அருளி –
அவ்வவ ஆஸ்ரயணீயர் தந்தாமுடைய ஆகமாதிகளிலே விதித்து வைத்த பிரகாரங்களிலே அடையும்படியாக நம் இறையவர் அந்தராத்மாவாக நின்றார்
அன்றிக்கே
சர்வேஸ்வரன் காம நாதிகாரத்தில்–ஸ்ரீ கீதை 7 அதிகாரம்- அருளிச் செய்தபடியே -அவர்கள் அடையும்படியாக -என்னுதல் –
காமத்தால் இழுக்கப் பட்ட ஞானம் -சரீரமாக பல தேவதைகள் -அவர்கள் மேல் உறுதியான நம்பிக்கை நான் தான் பண்ணிக் கொடுக்கிறேன் என்கிறான்
திரிபுரா தேவியார் ராமானுஜர் காட்டிய –ஐதிகம் -உய்ய ஒரே வழி உடையவர் திருவடி
சர்வேஸ்வரன் இரா மடம் ஊட்டுவாரைப் போலே முகம் தோற்றாதே அந்தராத்மாவாய் நின்று நடத்துகையாலே
அவர்களும் ஆஸ்ரயித்தார்களாய்-
இவர்களும் பல பிரதான சக்தர் ஆகிறார்கள் இத்தனை –
அவனை ஒழிந்த அன்று இவர்கள் ஆஸ்ரயிக்கவும் மாட்டார்கள் -அவர்கள் பல பிரதானம் பண்ணவும் மாட்டார்கள் -என்கிறார்
ஐயன் பாழியில் ஆனை போருக்கு உரித்ததாம் அன்று ஆயிற்று -அவ்வோ தேவதா மாத்ரங்களுக்கு பல பிரதான சக்தி உள்ளது –
சாஸ்தா ஸ்தானம் ஐயனார் கோயிலில் உள்ள யானை போலே –

————-

மதுசூ தனைஅன்றி மற்றுஇலேன்என்று
எத்தாலும் கருமம் இன்றித்
துதிசூழ்ந்த பாடல்கள் பாடி ஆடநின்று
ஊழிஊழி தொறும்
எதிர்சூழல் புக்கு,எனைத் தோர்பிறப்பும்
எனக்கே அருள்கள் செய்ய
விதிசூழ்ந்த தால்எனக்கேல் அம்மான்
திரிவிக் கிரமனையே.–2-7-6-

‘‘எனைத்தோர் பிறப்பும் எதிர்சூழல் புக்கு எனக்கே அருள்கள் செய்ய விதி சூழ்ந்ததால்’ அதாவது,
‘எதிர் சூழல் புக்கு ஒருவனைப் பிடிக்க நினைத்தவன் அவன் போம் வரம்புக்கு எதிர் வரம்பே வருமாறு போன்று,
இவர் பிறந்த பிறவிதோறும் தானும் எதிரே பிறந்து வந்தான்’ என்கிறார் என்றபடி.
இவர் கர்மமடியாகப் பிறக்க, அவன் அநுக்கிரகத்தாலே பிறந்து வந்தான் இத்தனை.
‘சூழல்’ என்று அவதாரத்தைச் சொல்லக் கடவது.
‘விதி’ என்றது, பகவானுடைய கிருபையை.

‘பகவானுடைய கிருபையை விதி என்பான் என்?’ என்னில்,
இறைவனுக்குத் தப்ப ஒண்ணாதது ஆகையாலே. அதாவது,
நாம் நினைத்தவற்றைத் தலைகட்ட ஒட்டாத கர்மம் போன்று, ஈஸ்வரன் நினைத்த காரியங்களையும் கிருபைக்குப் பரதந்திரனாய்த் தலைக்கட்டமாட்டானாகையாலே என்றபடி.
‘தங்களிலும் திருவருளே மிகுந்து இரட்சித்துக்கொண்டு போரும் குடியிலே பிறந்தவர்;
கொலை செய்தற்குத் தக்கதான காகத்துக்கு விட்ட அம்புக்கு உட்படக் கண்ணழிவு செய்யுமவர்’ என்பர் ஸ்ரீவால்மீகி பகவான்.
எனக்கேல் அம்மான் திரிவிக்கிரமனையே – சர்வேஸ்வரனாய் இருந்தும், ஸ்ரீவாமனனாய் வந்து அவதரித்து,
மூன்று அடியாலே மூன்று உலகங்களையும் திருவடிகளின்கீழே இட்டுக்கொண்டு,
எல்லாரோடும் பொருந்தின சௌலப்யந்தான் பரத்துவம் என்னும்படி என்னை அங்கீகரிப்பதற்கு ஒரு விதி சூழ்ந்தது.
‘அம்மான் திரிவிக்கிரமனை எனக்கே அருள்கள் செய்ய எனக்கு என்னவே ஒரு விதி சூழ்ந்தது’ என்க.

பகவத் கிருபையையே விதி -தப்ப ஒண்ணாதது அன்றோ
வாதார் ஹமான் காகத்துக்கு விட்ட அம்புக்கு உட்படக் கண்ணழிவு பண்ணுமவர் இறே –ஈடு
இது தானே அவனை எதிர் சூழல் புக்கு திரியும்படி செய்தது
இவன் நடுவே அடியான் என்று ஓலைப்படா ப்ரமாணம் -பக்ஷபாதி -சாக்ஷி -வன் களவில் அனுபவமாக இந்த்ர ஞாலங்கள் காட்டிக்கொள்ளாக் காப்பார் அற்று விதி சூழ்ந்தது –ஆச்சார்ய ஹ்ருதய ஸ்ரீ ஸூக்திகள்
———–

என்றும் ஒன்று ஆகி ஒத்தாரும் மிக்கார்களும் தன் தனக்கு
இன்றி நின்றானை எல்லா உலகும் உடையான் தனைக்
குன்றம் ஒன்றால் மழை காத்த பிரானைச் சொன் மாலைகள்
நன்று சூட்டும் விதி எய்தினம் என்ன குறை நமக்கே?–4-5-7-

சொன்மாலைகள் நன்று சூட்டும் விதி எய்தினம் –
சொன்மாலைகள் நன்று சூட்டும் படியான பாக்கியத்தை பிராபிக்க (அடையப் )பெற்றோம்.
பரத்துவத்தில் குணங்கள் உளவாம் தன்மை-ஸத்பாவம் – மாத்திரமே உள்ளது,
அவதரித்த இடத்தே அன்றோ அவை பிரகாசிப்பன?
‘இப்படி விஷயம் பூர்ணமானால் (நிறைவுற்றிருந்தால் )‘பேச ஒண்ணாது’ என்று மீளுகை அன்றிக்கே,
இந்நிலையிலே விளாக்குலை கொண்டு பேசும்படியானேன்,’ என்பார், ‘நன்று சூட்டும்’ என்கிறார்.

இவர் இப்போது ‘விதி’ என்கிறது,
பகவானுடைய கிருபையை.
தமக்குப் பலிக்கையாலும்,
அவனுக்குத் தவிர ஒண்ணாதாகையாலும், ‘விதி’ என்கிறார்.
‘விதி சூழ்ந்ததால்’-திருவாய்.-2. 7 : 6. என்றாரே யன்றோ முன்னரும்?

—————-

கையார் சக்கரத்து என் கருமா ணிக்கமே! என்றென்று
பொய்யே கைம்மை சொல்லிப் புறமேபுற மேஆடி
மெய்யே பெற்றொழிந்தேன் விதிவாய்க் கின்று காப்பார்ஆர்?
ஐயோ! கண்ண பிராஅன்! அறையோ! இனிப் போனாலே.–5-1-1-

விதிவாய்க்கின்று – பகவானுடைய கிருபை கரை புரளப் பெருகா நின்றால் நம்மாற் செய்யலாவது உண்டோ?
‘விதி’ என்கிறது, பகவானுடைய கிருபையை.
“கேசவன் தமர்” என்னும் திருவாய்மொழிக்கு இப்பால் எல்லாம் இவர், ‘விதி’ என்கிறது, பகவானுடைய கிருபையை.
கிருபையை ‘விதி’ என்பதற்கு அடி, அவனால் தப்ப ஒண்ணாதபடி இருக்கையாலே.
வாய்க்கின்று – பகவானுடைய கிருபை ஈஸ்வரனுடைய ஸ்வாதந்திரியமாகிய கரை புரளப் பெருகி வந்து கிட்டுமிடத்தில்.
காப்பார் ஆர் – இதனைத் தடை செய்வார் ஆவார் உளரோ?
இரண்டு சேதநராலும் தடை செய்யப்போகாது என்பார் ‘காப்பது எது?’ என்னாமல், ‘காப்பார் ஆர்?’ என்கிறார்.
பரதந்திரனான இவனாலும் தகைய ஒண்ணாது, ஸ்வதந்திரனான அவனாலும் தகைய ஒண்ணாது;
பலத்தை அநுபவிக்கிற இவனாலும் தகைய ஒண்ணாது, பலத்தைக் கொடுக்கிற அவனாலும் தகைய ஒண்ணாது என்றபடி.
அன்றிக்கே, காப்பார் ஆர் என்பதற்கு, கிருபை உண்டாவதற்குக் காரணமான பிராட்டி காக்கவோ?
கிருபைக்குப் பரதந்திரப்பட்டவனான நீ காக்கவோ?
கிருபைக்குப் பாத்திரமான நான் காக்கவோ? என்று பொருள் கோடலுமாம்.
“மித்ர பாவேந” என்கிற ஸ்லோகத்திலே எம்பார்,
‘சர்வஜ்ஞனுக்கு ஒரு அஜ்ஞானமும் மறதியும், சர்வ சக்திக்கு ஒரு அசத்தியும் உண்டு’ என்று அருளிச் செய்வர்.
ஒருவன், தன்னை அடைந்தால், முன்பு புத்தி பூர்வம் பண்ணிப் போந்த குற்றங்களிலே மறதி,
ஞானம் பிறந்த பின்பு தன்னை அறியாமலே வரும் குற்றங்களில் அஜ்ஞானம் அவனை விட வேண்டி வருமளவிலே அசக்தி.
இப்படி இருக்கைக்குக் காரணம், இயல்பிலே அமைந்த குடல் தொடக்கு.-
‘இயல்பிலே அமைந்த குடல் தொடக்கு’ என்றது நாராயண பதத்தால் கூறப் படுகின்ற சம்பந்தத்தைத் திருவுள்ளம் பற்றி.

———

அம்மான் ஆழிப்பிரான் அவன் எவ்விடத்தான்? யான் ஆர்?
எம் மா பாவியர்க்கும் விதிவாய்க்கின்று வாய்க்குங் கண்டீர்
கைம் மா துன்பொழித்தாய்! என்று கைதலை பூசலிட்டே
மெய்ம் மாலாய் ஒழிந்தேன் எம்பிரானும்என் மேலானே.–5-1-7-

எம் மா பாவியார்க்கும் விதி வாய்க்கின்று வாய்க்கும் கண்டீர் – எல்லா வழியாலும் மஹா பாவத்தைப் பண்ணினவர்கள் பக்கலிலும்
பகவானுடைய கிருபை பெருகப் புக்கால் தடை இல்லை கண்டீர்.
பகவானுடைய கிருபை பெருகப் புக்கால் ‘கரையிலே நின்றோம்’ என்னத் தப்ப விரகு இல்லை.

————-

அருள் பெறுவார் அடியார் தன் அடியனேற்கு ஆழியான்
அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே
இருள் தரும் மா ஞாலத்துள் இனிப் பிறவி யான் வேண்டேன்
மருள் ஒழி மட நெஞ்சே வாட்டாற்றான் அடி வணங்கே–10-6-1-

அது செய்யும் இடத்தில் நான் சொன்னபடி செய்தானாக வேண்டி இரா நின்றான் –
அது நமது விதி வகையே -என்பதற்கு
அது நமது புண்ணியத்திற்கு தகுதியாக அன்றோ -என்று முன்னைய பெரியோர்கள் நிர்வஹிப்பர்கள் –
இதனை எம்பெருமானார் கேட்டருளி
இத் திருவாய் மொழியிலே மேல் ஓடுகிற அர்த்தத்தோடு சேராது
நாம் விதித்த படியே செய்வானாக இருந்தான் -என்கிறார் -என்று அருளிச் செய்வர் –
பவாம்ஸ்து சஹ வைதேஹ்யா கிரிஸா நுஷூ ரம்ச்யதே
அஹம் சர்வம் கரிஷ்யாமி ஜாக்ரத ச்வபதச்த தே-அயோத்யா -31-25
பரவாநச்மி காகுத்ச த்வயி வர்ஷசதம் ஸ்திதே
ஸ்வயந்து ருசிரே தேசே க்ரியதாம் இதி மாம் வத -அயோத்யா -15-7-
என்கிறபடியே-இவன் சொன்னபடியே செய்யா நின்றான் –
நமது சொல் வகையே -என்னாமல்-நமது விதி வகையே -என்பான் என் என்னில்
விதியை மீறுவதில் பாபத்துக்கு அஞ்சுவாரைப் போலே அஞ்சா நின்றான்
தான் ஸ்வதந்த்ரனாய் நினைத்த படி செய்கைக்கு
தன் பக்கல் குறைவற்றாலும் -புருஷார்த்தமாக பிராட்டியும் இருக்க –
இத் தலையில் இச்சை ஒழிய கொடு போகானே அவன் –
புருடோத்தமன் ஆண்மையில் குறை வரும்படி செய்யானே –
நமது விதி வகையே –
த்வதீய புக்தோஜ்ஜித சேஷ போஜிதா
த்வயா நிஸ்ருஷ்டாத்மா பிரேன யத் யதா
ப்ரீயேன சேனாபதீனா ந்யயேதி தத்
ததா அனுஜாநத்தம் உதார வீஷணை-ஸ்தோத்ர ரத்னம் -42
சேனாபதி முதலியாராலே எந்தக் காரியம் எந்தப்படி
விண்ணப்பம் செய்யப் பட்டதோ
அந்த கார்யத்தை அந்தப் படியே நிறைந்த அருளாலே அனுமதி செய்கின்றவனான உன்னை -என்கிறபடியே
இது பட்டர் தாமே அருளிச் செய்ய நான் கேட்டேன் என்று நஞ்சீயர் அருளிச் செய்வர்-

————-

நண்ணினம் நாராயணனை நாமங்கள் பல சொல்லி
மண்ணுலகில் வளம் மிக்க வாட்டாற்றான் வந்து இன்று
விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் விதிவகையே
எண்ணினவாறாகா இக்கருமங்கள் என்நெஞ்சே –10-6-3-

சர்வ சக்தன் கூட்டிச் செல்வது தானே என்றால் -தன் இஷ்ட்டப்படி செய்பவன் அல்லையே
இப்படி செய் அப்படி செய் என்று ஆழ்வார் விதிக்க செய்வதிலே ஆசை கொண்டவன் அன்றோ திருவாட்டாற்று எம்பெருமான்
அதனால் -விதி வகையே -என்கிறார் இங்கும் முதல் பாட்டில் போலே
சேதன லாபம் ஈஸ்வரனுக்கே ஆதலால் அவன் விரைவது தானே பிராப்தம் -சபலமாகக் கூடியதும் அது தானே -சாஸ்த்ரார்த்தம்

————-

வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர்
வைகுந்தன் தமர் எமர் எமது இடம் புகுது என்று
வைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர்
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே–10-9-9-

வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே –
கடலிலே உள்ள நீர் மலையிலே ஏறக் கோத்தால் போன்று
இப்பிறவியிலே உழன்று திரிகின்றவர்கள்
பரம பதத்தில் புகுரும்படிக்கு ஈடாக
புண்ணியத்தை பண்ணுவதே -என்று ஆழம் கால் பட்டார்கள் –

திருவாசல் முதலிகளால்
பரமபதம் புகுவது தங்கள் பாக்கியம்
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே
தலை விதியே சாமான்ய அர்த்தம்
விதி பாக்கியம்
அதுக்கும்
அது நமது விதி வகையே
பாக்ய அனுகுணமாக
விதி வகை புகுந்தனர்
மண்ணவர் ஆகி வைத்து விண்ணவர் ஆவதே

————-

விதி வகை புகுந்தனர் என்று நல் வேதியர்
பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்
நிதியும் நல் சுண்ணமும் நிறை குட விளக்கமும்
மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே–10-9-10-

விதி வகை புகுந்தனர் என்று —
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே -என்று இவர்கள் சொல்லுகிற வார்த்தை அன்று என்று
வேறு சிலர் –இவர்கள் இங்கே வந்து புகுரப் பெற்றது-நாம் செய்த புண்ணியத்தின் பலம் அன்றோ -என்பர் -என்றது
விஷயங்கள் நடை யாடுகிற இவ் உலகத்தில் இருந்து வைத்து வேறு பயனைக் கருதாதவராய் –
பகவானுடைய குணங்களை அனுபவிக்கிற மகா புருஷர்களாய்
விண்ணுளாரிலும் சீரியர் எனப்படுகிற இவர்கள் வந்து புகுரப் பெற்றது நாம் செய்த புண்ணியத்தின் பலம் என்றோ என்பார்கள் என்றபடி –
கீழே -வைகுந்தம்புகுவது -என்றார் –
இங்கு புகுந்தனர் -என்கையாலே தங்கள் புன்யத்தைக் காட்டுகிறது –

————–

இந்திரனுக்கென்று ஆயர்கள் எடுத்த எழில் விழவில் பழ நடை செய்
மந்திர விதியில் பூசனை பெறாது மழை பொழிந்திடத் தளர்ந்து ஆயர்
எந்தமோடின்வானிரை தளராமல் எம்பெருமான் அருள் என்ன
அந்தமில் வரையால் மழை தடுத்தானைத் திருவல்லிக் கேணிக் கண்டேனே —2-3-4-

மந்திர விதி -இடையர்களுக்கு மந்திர விதி உண்டோ -ஆலோசனை -சங்கேதம் என்றபடி –

முறை -வேதம் விதித்தபடி -மேலையார் செய்வனகள் படி -மந்த்ர யுக்தமான படியே பண்ணுகிற அனுஷ்டான ரூபமான பூஜை –பெரியவாச்சான் பிள்ளை

——–

துணை நிலை மற்று எமக்கோர் உளது என்று இராது தொழுமின்கள் தொண்டர் தொலைப்
உண முலை முன் கொடுத்த வுரவோளதாவி உகவுண்டு வெண்ணெய் மருவி
பணை முலை யாயர் மாதர்  உரலோடு கட்ட அதனோடும் ஓடி அடல் சேர்
இணை மருது இற்று வீழ நடை கற்ற தெற்றல் வினை பற்று அறுக்கும் விதியே—பெரிய திருமொழி -11-4-9-

அறுக்கும் விதியே –ஓன்று என்னலாம் படி நின்ற மருதுகள் முறிந்து விழும்படியாக
நடை கற்ற தெள்ளியவன்-நம்முடைய பாபத்தை ச வாசனமாக போக்கும்-இது நிச்சிதம் –

————

அன்னைமீர்! அணி மா மயில் சிறு மானிவள் நம்மைக் கை வலிந்து
என்ன வார்த்தையும் கேட்குறாள் தொலை வில்லி மங்கலம் என்றலால்
முன்னம் நோற்ற விதி கொலோ? முகில் வண்ணன் மாயம் கொலோ?
அவன் சின்னமும் திரு நாமமும் இவள் வாயனகள் திருந்தவே.–6-5-7-

முன்னம் நோற்ற விதி கொலோ –
ஒக்கப் பிறந்து வளர்ந்தோம், பின்பு இது சாதிக்கக் கண்டிலோம்.
ஆதலால், முன்னரே செய்துவைத்த புண்ணியத்தின் பலமோ இது!
“புண்ணியமானது, விதி என்றும் விதானம் என்றும் சொல்லப்படுமன்றோ” என்னக் கடவதன்றோ.
இவளாலே செய்யப்பட்ட தர்மத்துக்கு இத்தனை பலம் கனக்க உண்டாகமாட்டாது;
இது சித்த தர்ம பலமாக வேணும்;
ஆகையால், முகில் வண்ணன் மாயம் கொலோ –
பிடாத்தை விழவிட்டு வடிவினைக் காட்டினானோ? —
பிடாம் -பச்சை வடம் -வஸ்த்ரம் -முகில் நகர்ந்து சந்தரன் காண்பது போலே –
இத் தலையாலே சாதித்தது ஓர் அசேதனமான கிரியைக்கு இத்தனை கனத்த பலம் உண்டாக மாட்டாமையாலே
‘முன்னம் நோற்ற விதி கொலோ?’ என்று ஐயப்பட்டாள்.
இப்படி முன்பு ஒருவடிவில் பலிக்கக் காணாமையாலே ‘முகில் வண்ணன் மாயம் கொலோ?’ என்று இங்கே ஐயப்படுகிறாள்.

————

தையொரு திங்களும் தரை விளக்கித்
தண் மண்டலமிட்டு மாசி முன்னாள்
ஐய நுண் மணல் கொண்டு தெருவணிந்து
அழகினுக்கு அலங்கரித்த அனங்க தேவா
உய்யுமாம் கொலோ வென்று சொல்லி
உன்னையும் உம்பியையும் தொழுதேன்
வெய்யதோர் தழல் உமிழ் சக்கரக் கை
வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே –நாச்சியார் திருமொழி –1-1-நியமனம் அர்த்தத்தில்

அக்கையும் திரு வாழியுமான சேர்த்தி அழகை காண வேணும் என்று ஆசைப் படுகிற என்னை
அவனுடனே சேர்த்து விட வல்லையே-
அவனோ அண்ணியனாய் வந்து நின்றான்-
எனக்கு அவனை ஒழியச் செல்லாமை உண்டாய் இருந்தது -இனி சேர்த்து விட வல்லையே-

மத்த நன்னறு மலர் முருக்க மலர் கொண்டு
முப்போது முன்னடி வணங்கி
தத்துவமிலி என்று நெஞ்செரிந்து
வாசகத்தழித்து உன்னை வைதிடாமே
கொத்தலர் பூங்கணை தொடுத்துக் கொண்டு
கோவிந்தன் என்பதோர் பேரெழுதி
வித்தகன் வேங்கட வாணன் என்னும்
விளக்கினில் புக வென்னை விதிக்கிற்றியே–1-3-

திருமலையிலே பொருந்தின பின்பு உஜ்ஜ்வலனாய்த்து
அந்த விளக்கில் புகும்படி என்னை நியமிக்க வேணும் என்கிறாள் –

சுவரில் புராண நின் பேர் எழுதிச்
சுறவ நற் கொடிக்களும் துரங்கங்களும்
கவரிப் பிணாக்ககளும் கருப்பு வில்லும்
காட்டித் தந்தேன் கண்டாய் காம தேவா
அவரைப் பிராயம் தொடங்கி என்றும்
ஆதரித்து எழுந்த என் தட முலைகள்
துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத்
தொழுது வைத்தேன் ஒல்லை விதிக்கிற்றயே–1-4-

என் ஆற்றாமை இருந்தபடி கண்டாயே
இனி இம் முலைகளிலே செவ்வி அழிவதற்கு முன்பே சேர்க்க வல்லையே –

——————–

பாக்யம் என்ற பொருளில்


இது என் புகுந்தது இங்கு அந்தோ இப் பொய்கைக்கு எவ்வாறு வந்தாய்
மதுவின் துழாய் முடி மாலே மாயனே எங்கள் அமுதே
விதி இன்மையால் அது மாட்டோம் வித்தகப் பிள்ளாய் விரையேல்
குதி கொண்டு அரவில் நடித்தாய் குருந்திடைக் கூறை பணியாய்-3-2-

இந்திரனுக்கென்று ஆயர்கள் எடுத்த எழில் விழவில் பழ நடை செய்
மந்திர விதியில் பூசனை பெறாது மழை பொழிந்திடத் தளர்ந்து ஆயர்
எந்தமோடு இனவானிரை தளராமல் எம்பெருமான் அருள் என்ன
அந்தமில் வரையால் மழை தடுத்தானைத் திருவல்லிக் கேணிக் கண்டேனே –2-3-4-

இந்தரனுக்கு என்று இடையர் எடுத்த எழில் உடைத்தான விழவிலே
முன்பு செய்து போரும் படியிலே மந்த்ரோக்தமான படியே பண்ணுகிற
அநுஷ்டான ரூபமான பூஜையை பெறாமையாலே

—————

நிதியினைப் பவளத் தூணை நெறிமையால் நினைய வல்லார்
கதியினைக் கஞ்சன் மாளக் கண்டு முன் அண்டம் ஆளும்
மதியினை மாலை வாழ்த்தி வணங்கி என் மனத்து வந்த
விதியினைக் கண்டு கொண்ட தொண்டனேன் விடுகிலேனே-திருக்குறும் தாண்டகம் -1–

விதியினை
அவன் ஸ்வாதந்த்ர்யத்தாலும்
என் கருமத்தாலும்
தவிர்க்க ஒண்ணாத கிருபை –

விதி வாய்க்கின்று காப்பார் யார்
விதி சூழ்ந்ததால்
இவ்வளவான பேற்றுக்கு அடியான தம்முடைய ஸூஹ்ருதத்தைச் சொல்லுகிறார் –

————————–

இளைப்பினை இயக்கம் நீக்கி இருந்து முன் இமையைக் கூட்டி
அளப்பில் ஐம்புலன் அடக்கி அன்பு அவர் கண்ணே வைத்து
துளக்கமில் சிந்தை செய்து தோன்றலும் சுடர் விட்டு ஆங்கே
விளக்கினை விதியில் காண்பர் மெய்ம்மையே காண்கிற் பாரே–திருக்குறும் தாண்டகம் -18-

விதியில் காண்பர்-
சாஸ்த்ரங்களில் விதித்தபடியே உபாசித்து அவனைக் காண்பார் –
மெய்ம்மையே காண்கிற்பாரே –
என்றும் உளனாய் இருக்கிற சர்வேஸ்வரனை காண வல்லரே -காண -மாட்டார் -என்றபடி –
அதவா –
இப்படி யோக சாஸ்த்ரத்தில் சொல்லுகிறபடியே உபாசித்துக் காண்பாருக்கு காணலாம் -என்றுமாம் –
அங்க பிரபத்தி இல்லாமல் காண மாட்டார் என்றபடி

————

என் செய்ய தாமரைக் கண் பெருமானார்க்கு என் தூதாய்
என் செய்யும் உரைத்தக்கால் இனக் குயில்காள் நீரலீரே
முன் செய்த முழு வினையால் திருவடிக் கீழ் குற்றேவல்
முன் செய்ய முயலாதேன் அகல்வதுவோ விதியினமே –1-4-2-

விதியினால் பெடை மணக்கும் மென்னடைய அன்னங்காள்
மதியினால் குறள் மாணாய் உலகு இரந்த கள்வர்க்கு
மதியிலேன் வல்வினையே மாளாதோ என்று ஒருத்தி
மதியெலாம் உள்கலங்கி மயங்குமால் என்னீரே–1-4-3-

அனுபவித்தாலும் மாளாத பாபம் –
விதி பாக்கியம் -பிரிந்து வருந்தாதே கூடி இருந்து களித்து
விதி -சாஸ்திர விதி -சாஸ்திர விதி படி மணந்து பிரியாமல் இருக்கிறீர்கள்
கந்தர்வ விவாஹம் போல் கூடி பிரிவாற்றாமை எய்தி தவிக்கின்றேன்
பெருமாள் பிராட்டியை பிரிந்து கடலும் மழையும் அரித்துக் கொண்டு வாரா நிற்கச் செய்தே
ராஜ்ய தாரங்களை இழந்து கிடந்த மகா ராஜரைக் கண்டு அவர் குறையை தீர்த்த பின்பு இ றே
தம் இழவில் நெஞ்சு சென்றது
அங்கன் இன்றிக்கே இப்போது இவை குறைவற்று இருக்கிற இது தான் இவள் பாக்யமாய் இருக்கும் இ றே –
பாக்கியம் அர்த்தத்தில்

விதியினால் பெடை மணக்கும் மென்னடைய அன்னங்காள்
சாஸ்திர முறைப்படி க்ருஹஸ் ஆஸ்ரமம் விவஷிதம்
இடர் இல்லாதபோகம் இடரில்போகம் மூழ்கி இணைந்தாடும் மட அன்னங்காள் -திருவாய் மொழி -6-1-4-
சம்சார பந்த தாபம் தட்டாத பகவத் அனுபவம் விவஷிதம்
அந்தரம் ஒன்றும் இன்றி அலர்மேல் அசையும் அன்னங்காள் -திருவாய் மொழி -6-8-10
பாதாரவிந்தத்தில் பொருந்தியது விவஷிதம்
தடம் புனல்வாய் இரை தேர்ந்து மிக வின்பம் பட மேவும் மென்னடைய அன்னங்காள் -திருவாய் மொழி -9-5-10-
சதாச்சார்யர் இடம் அர்த்தங்களை பெற்று ஆனந்தம்
நல் குடிச் சீர்மையில் அன்னங்காள் -திரு விருத்தம் ஆபிஜாத்யம் விவஷிதம்

—————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading