பேரும் ஓர் ஆயிரம் பீடுடையான் —

ஸ்ரீ ஸ்ருதிகளில் ஸ்ரீ பகவத் ஸ்தோத்ர மஹிமை

1-யஸ் பூர் வ்யாய நவீயஸே -ருக் வேதம் -1-156-2-முன்னோர்களில் முன்னவனாய் உள்ளவனும் -ஸ்ருஷ்டியாதிகளைச் செய்பவனும் -ஸ்தோத்ரம் செய்யப்படுபவனுமான ஸ்ரீ விஷ்ணுவுக்கு

2-தமு ஸ்தோதாரஸ் பூர்வ்யம் யதாவித -ருக் வேதம் -1-156-3-அந்த மஹா விஷ்ணுவை ஸ்தோத்ரம் செய்பவரே அவனை உள்ளது உள்ளபடி அறிந்தவராவார்

3-காதும் யஜ்ஞாய காதும் யஜ்ஞ பதயே –சாந்தி பாட மந்த்ரம் -யஜ்ஞ ஸ்வரூபியான விஷ்ணுவை யாகத்துக்குத் தலைவனான ஸ்ரீ மன் நாராயணனை
ஸ்துதித்துப் பாடுவதற்கு மங்களகரமான வாக்கு எங்களுக்கு ஏற்படட்டும் –

4- த்ரேதோருகாய –ஸ்ரீ விஷ்ணு ஸூக்தம் -எல்லாராலும் அதிகமாக்க கானம் செய்யப்படுபவராகிய ஸ்ரீ மஹா விஷ்ணுவானவர் மூன்று அடி வைத்தார்

5- விஷ்ணுஸ் தவதே வீர்யாய –ஸ்ரீ விஷ்ணு ஸூக்தம் -நமக்கு வீர்யம் அளிக்கும் பொருட்டு ஸ்ரீ விஷ்ணுவானவர் ஸ்துதிக்கப் படுகிறார்

6-த்ருவாஸோ அஸ்ய கீரயோ ஜநாஸ –ஸ்ரீ விஷ்ணு ஸூக்தம் -இந்த விஷ்ணுவை ஸ்தோத்ரம் செய்யும் மக்கள் நிலையான பரமபதத்தை இருப்பிடமாகக் கொள்வர்-

7- த்வேஷம் ஹ்யஸ்ய ஸ்தவிரஸ்ய நாம –ஸ்ரீ விஷ்ணு ஸூ க்தம் –இம்மாதிரிப் ப்ரகாஸமான அந்த முதியோனாகிய விஷ்ணுவின் திரு நாமங்கள்

8-விபன்யவோ ஜாக்ருவாம்ச -ஸ்ரீ விஷ்ணு ஸூக்தம் –ஸூரிகள் என்றும் விழிப்புடன் எப்போதும் ஸ்துதித்க்கொண்டே பரமபதத்தில் ஸ்ரீ விஷ்ணுவின் அருளி உள்ளனர் –

ஸ்ரீ மஹாபாரதத்தில் நிர்வசன அத்தியாயத்தில் திரு நாராயணீயம் என்கிறபெயரில் ஸ்ரீ வேத வ்யாஸரே ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாமங்களுக்கு பாஷ்யம் அருளி உள்ளார்
இதே போல் ஸ்ரீ வாமன புராணம் ஸ்ரீ வராஹ புராணம் முதலியவற்றிலும் பகவத் நாமங்களுக்கு விளக்கம் கூறும் ஸ்லோகங்கள் உள்ளன
இவற்றை முன்னோர் பல இடங்களில் ப்ரமாணமாகக் காட்டி உள்ளனர் –
சாமவேதத்தில் விஷ்ணு நமக பாகத்திலும் பல நாமங்கள் விளக்கம் உள்ளன –

————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ லஷ்மீ ஹயக்ரீவர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading