ஸ்ரீ பிரதிவாதி பயங்கர அண்ணண் ஸ்வாமிகள் அருளிச் செய்த செய்ய தாமரைத் தாளிணை வாழியே – பாசுர வியாக்யானம் -ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த வியாக்யானம்

ஸ்ரீ உ வே வேங்கட கிருஷ்ணன் ஸ்வாமிகள் இந்த வியாக்யானத்தை ஓலைச் சுவடியில் இருந்து பதிப்பித்து உபகரித்து அருளினார்

வாழி திருவாய் மொழிப் பிள்ளை மா தகவால்
வாழும் மணவாள மா முனிவன்-வாழி யவன்
மாறன் திருவாய் மொழிப் பொருளை மா நிலத்தோர்
தேறும்படி உரைக்கும் சீர்-

செய்ய தாமரை தாளிணை வாழியே
சேலை வாழி திரு நாபி வாழி
துய்ய மார்பும் புரி நூலும் வாழியே
சுந்தரத் திருத் தோளிணை வாழியே
கையும் ஏந்திய முக்கோலும் வாழியே
கருணை பொங்கிய கண்ணினை வாழியே
பொய்யிலாத மணவாள மா முனி
புந்தி வாழி புகழ் வாழி வாழியே

அடியார்கள் வாழ அரங்க நகர் வாழ
சடகோபன் தண் தமிழ் நூல் வாழ -கடல் சூழ்ந்த
மன்னுலகம் வாழ மணவாள மா முனியே
இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும் –

—————

இதில் ஸ்ரீ கூரத்தாழ்வானைப் பற்றிய ஐதிக்யமும்
ஸ்ரீ அண்ணராய சக்ரவர்தியைப் பற்றிய இதிஹாசமும் உண்டு

செய்ய தாமரை பாடிய சீர் அண்ணன் -என்றே ஸ்ரீ பிரதிவாதி பயங்கர அண்ணண் ஸ்வாமிகளுக்கு நிரூபகம் –

அவர் அருளிச் செய்த மா முனிகள் பாதகாதி கேசாந்த மாலையில் இருந்து பாலா மேற்கோள்களும் இதில் உண்டு

சாடூக்திகள் -நயவுரைகள் பலவும் இதில் இடம் பெற்றுள்ளன
கால்வாசியிலே நில்லாமல் அரை வாசி தேடுமவர் இறே
இக்கை கண்ட இவரைக் கை விட்டு இருக்க மாட்டாரே
கண் காணக் கை விட்டார்
இவர் கண் இறே எல்லாருக்கும் களை கண் -போன்ற சாடூக்திகள் இதிலே உண்டே –

சீர் ஆரும் செங்கமலத் திருவடிகள் வாழியே
வந்தருளி என்னை எடுத்த மலர்த்தாள்கள் வாழியே
முந்தை மறைத் தமிழ் விளக்கும் முத்திரைக் கை வாழியே
கார் போலும் செங்கை யுரை முக்கோலும் வாழியே
கருணை குடி கொண்டு அருளும் கண்ணினை வாழியே
வார் காதும் திருநாம மணி நுதலும் வாழியே
நீள் புவியில் தன் புகழை நிறுத்துமவன் வாழியே
—-
கலி கண்டித்த திறல் வாழியே –வாழித் திரு நாமாந்தர பாசுரத்தில் பல அடிகள் மேற்கோளாகக் காட்டப் பட்டுள்ளன –

—————-

இதில் ஆச்சார்யன் அருளே விளை நீராக ஜீவனமாய் வாழுமவர்க்கும்
அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழின் (கண்ணி நுண் சிறுத்தாம்பு -9அர்த்தத்தை
இப் படியில் யுண்டான அடியார்க்கு அருள் செய்யும் ஓவ்தார்ய குணத்துக்கு மங்களா ஸாஸனம் பண்ணுகிறது –

வாழி திருவாய் மொழிப் பிள்ளை மா தகவால்
வாழும் மணவாள மா முனிவன்-வாழி யவன்
மாறன் திருவாய் மொழிப் பொருளை மா நிலத்தோர்
தேறும்படி உரைக்கும் சீர்-

திருவாய் மொழிப் பிள்ளை மா தகவால் வாழும் மணவாள மா முனிவன்-வாழி
அதாவது
எந்தை திருவாய் மொழிப் பிள்ளை இன்னருளால் -உபதேச -1- என்றும்
திருமலை ஆழ்வார் திருவாய் மொழிப்பிள்ளை சீர் அருளால் -ஆர்த்தி பிரபந்தம் -21-என்றும்
ஸ்ரீ சைல நாத கருணா பரிணா மதத்தாம் –யதிராஜ விம்சதி -19- என்றும்
இவர் ஸ்ரீ சைல தயா பாத்ரராய் இருக்கும் படி என்கை
ஸூ குமாரராய் இருப்பார் பிடி தோறும் நெய் ஒழியச் செல்லாதாப் போலே
இவரும் ஆமூல சூடம் அருளால் மன்னி இருக்கும் படி

மா தகவு –
பெரிய தகவு
பெரும் கருணை
திருவாய் மொழிப்பிள்ளை தீ வினையேன் தன்னை குருவாகி வந்து உய்யக் கொண்டு -ஆர்த்தி பிரபந்தம் -46- என்று
குருவானவருடைய குருவான நிர்ஹேதுக கிருபையாலே வாழுமவராய்த்து இவர் தாம்
ஸ்வ யத் நத்தாலே பெரு பெறுமவர் அல்லரே இறே

தகவு -உபாயம்
வாழ்வு -உபேயம்
ஆச்சார்யன் அருளாக இறே ப்ராப்ய லாபம் உண்டாவது

இரக்கம் உபாயம் இனிமை உபேயம்-நஞ்சீயர் -என்னக் கடவது இறே

இப்படியே தேசிக தயையாலே வாழுமவர் இன்னார் என்கிறது -மணவாள மா முனிவன் -என்று
இவர்
மா தகவுக்கு இலக்கு ஆகையாலே மா முனி யானார்
பெரிய ஜீயர் என்று இறே ப்ரஸித்தி

மணவாள மா முனிவன்
அழகிய மணவாள ஜீயர்

வாழி திருவாய் மொழிப்பிள்ளை மா தகவால் வாழும் மணவாள மா முனிவன் என்கையாலே
அழகிய மணவாளன் சீர் அருளுக்கு இலக்கான வாதி கேஸரி அழகிய மணவாள ஜீயரில் வ்யாவ்ருத்தி

தெருள் தரு மா தேசிகரான திருமலை யாழ்வார் அருள் அதிகமாய்
ஆதிக்யத்தையும் உண்டாக்கும் –
ஏவம் வித நிரவதிக தயா பாத்ரரானவர்
நித்தியமாக வாழ்ந்து அருள வேணும் என்கிறது –

தாமும் தம்முடைய இரங்கும் கருணையாலே எல்லாருக்கும் திருவாய் மொழியின் ஈட்டை ப்ரஸாதித்துக் கொண்டு இங்கே வாழ்ந்து அருள வேணும் என்கிறது –

அவரோபாதி அவர் குணங்களும் ஆஸாஸ்யம் -விரும்பத் தக்கவை – என்கிறது -அவன் மாறன் மறைப் பொருளை மா நிலத்தோர் தேறும்படி உரைக்கும் படி சீர் என்று
அதாவது
ஆச்சார்ய ப்ரஸாதத்தாலே பெரு மதிப்பை யுடையவராக ஆனார் இந்நல்லார்

அவருடைய திராவிட வேதார்த்தத்தை மஹா ப்ருத்வீயில் உண்டானவர்கள் எல்லாருக்கும் வியாக்யானம் செய்து அருளும் ஸம்பத்தும் ஒவ்தார்யாதி குணங்களும் வாழ வேணும்

சீர்
ஸம்பத்து -என்னுதல்
குணம் -என்னுதல்

ஸ்ரீ மதி ஸ்ரீ பதி ஸ்வாமின் –என்றும்
பெரிய திரு மண்டபத்துப் பேர் அழகு -என்றும்
அத ஸ்ரீ சைல நாதாய நாம்நி ஸ்ரீ மதி மண்டபே -பூர்வ தினசர்யா -என்றும்
சொல்லுகிற வைபவத்தை யுடைய திரு மண்டபங்களிலே ஸ பரிவாரான வர வர நாமாவான ஸ்வ ஸ்வாமிக்கும்
வர வர ப்ருத்யரான ஸ்வ ஸிஷ்யர்களுக்கும்
அர்த்த பஞ்சக ப்ரதிபாதகமான திருவாய் மொழிக்கு ஈட்டோடே ஐந்து வியாக்யானங்களைக் கேட்பித்தும்-ப்ரஸாதித்தும் போருகிற வைபவமும்
அத்தை அவர்களுக்கு உடன் உரைத்து ப்ரஸாதித்து அருளும் ஒவ் தார்ய கிருபா வாத்சல்யாதி குணங்களும்
உண்டாய் இறே இருப்பது
அத்தை இங்கே சீர் என்கிறது –

ஸோயம் பூய: ஸ்வயமுபகதோ தேஷிகைஸ் ஸம்ஸதம் தே|
ஷ்ருத்வா கூடம் ஷடரிபு கிராமர்த்த தத்வம் த்வ துக்தம் ||
ஆகோபாலம் ப்ரதயதி தராமத்விதீயம் த்விதீயம்|
வாசாம் தூரம் வரவரமுநே வைபவம் ஷேஷஷாயீ || -ஸ்ரீ எறும்பி அப்பா அருளிச் செய்த ஸ்ரீ வர வர முனி சதகம் –14||

(அப்படிப்பட்ட இந்த அரவணைப் பள்ளியான் மறுபடி உம்மை ஆசார்யராக அடைந்து உம்மால் கூறப்பட்ட
ஆழ்வார் ஸ்ரீ ஸூக்திகளின் உண்மைப் பொருளை ரஹஸ்யத்தில் கேட்டு நிகரில்லாத
வாக்குக்கு எட்டாத உமது வைபவத்தை மூடரும் அறியப் பரவச் செய்கிறார்.)

என்று இறே ஜீயருடைய வாசா மகோசர வைபவம் இருப்பது

ஊரும்-பேரும் -செல்வமான திருவாய் மொழி அடியாக வந்த செல்வமும் வாழ வேணும் என்று மங்களா ஸாஸனம் பண்ணுகிறது

திருவாய் மொழிப் பொருளை மா நிலத்தோர் தேறும்படி உரைக்கும் சீர் என்ற இத்தால்
இத்தனியன் தான் திருவாய் மொழியின் ஈடு நித்யம் அநு சந்தித்துச் சாற்றும் போது அநு சந்திக்க வேணும் என்று ஸூ வ்யக்தமாய் இருக்கிறது

அத ஏவ
அருளிச் செயல்கள் எல்லாத்தினுடையவும் அநு ஸந்தான அநந்தரம் அநு சந்திக்குமதாய் இருக்கும் இறே-

—————-

ஸ்ரீ மதே ரம்ய ஜாமாத்ரு முநயே விததே நம
யத் ஸ்ம்ருதிஸ் ஸர்வ ஸித்தீ நாம் அந்தராய நிவாரிணீ –

யாவர் ஒருவரைப் பற்றிய நினைவு எல்லா வெற்றிகளுக்கும் இடையூறுகளை நீக்கி விடுமோ அந்த ஸ்ரீ மன் மணவாள மா முனிகளை வணங்குகிறேன்

ஸ்ரீ சைல தயா பாத்ரம் -( தீ பக்த்யாதி குணார்ணவம் யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்ய ஜா மாதரம் முநிம் )
என்று தொடங்கி அருளிச் செய்த
சேனை முதலியார் நாயனார் (சேனை முதலியாருக்கு நாயனார் ஸ்வாமி -நம்பெருமாள் )
ஜீயருடைய கல்யாண குணங்களிலே தோற்று அடிமை புக்க படியைப் பிரகாசிப்பிக்கிறராய் நின்றார்

அவர் தம் அடியரான இவரும் அக்குணங்களுக்கும் ஸுந்தர்யாதி களுக்கும் ஆஸ்ரயமான திவ்ய மங்கள விக்ரஹத்திலே ஈடுபட்டு
பாதாதி கேஸ அந்தமாக அனுபவித்துத்
தம்முடைய பிரிவின் மிகுதியாலே மங்களா ஸாஸனம் பண்ணின படியை அடைவே அருளிச் செய்கிறார் இதில்

செய்ய தாமரை பாடின சீர் அண்ணன் -என்று இறே இவர்க்கு நிரூபகம்
இப்படி மங்களா சாசனம் பண்ணுகிறவர்-தம்முடைய சேஷத்வ அனுகுணமாக
உன் பொன்னடி வாழ்க -என்னுமாப்போலே(பாத இலச்சினை வைத்தார் பண்டு அன்று பட்டினம் காப்பே -பெரியாழ்வார் -5-2-8-)
பொன்னடியாம் செங்கமலப் போதுகளுக்கு முந்துற மங்களா சாசனம் பண்ணுகையிலே ப்ரவ்ருத்தராகிறார் –

செய்ய தாமரை தாளிணை வாழியே
சேலை வாழி திரு நாபி வாழி
துய்ய மார்பும் புரி நூலும் வாழியே
சுந்தரத் திருத் தோளிணை வாழியே
கையும் ஏந்திய முக்கோலும் வாழியே
கருணை பொங்கிய கண்ணினை வாழியே
பொய்யிலாத மணவாள மா முனி
புந்தி வாழி புகழ் வாழி வாழியே

செய்ய தாமரை தாளிணை வாழியே
பிரஜை முலையில் வாய் வைக்கும்
நாண் மலராம் அடித்தாமரை -திருவாய் -3-3-9-

இவை யாய்த்து -உன் இணைத் தாமரைகட்கு அன்புருகி நிற்குமது -திருவாய் -7-1-10- என்கிறபடியே
இதுவும் ஸ்வரூபமாய் இருக்கும்

இன்புறும் தொண்டர் சேவடி ஏத்தி -பெருமாள் திருமொழி -2-4-5-என்கிறபடியே வாழ்த்துகை இறே நிலை நின்ற ஸ்வரூபம்

செய்ய தாமரை தாளிணை வாழியே
இவர் அடியைத் தொடரும்படி (ராமானுஜ நூற்றந்தாதி -63)
ராக ஸுவ் மனஸ்ய பத ஸுப் ராத்ரங்கள் உண்டாயிற்று
(ராகம் – சிவப்பு -அன்பு –பதம் -அடி -சொற்கள் -ஸுப்ராத்ரம் -சேர்த்தி )
அதாவது
அழகியதாய்ச் சிவந்த செவ்வித் தாமாரைப் பூப் போலே தர்ச நீயமுமாய் போக்யமுமாய்த் தாமரைப் பூவை நிறைத்து வைத்தால் போலே சேர்த்தி அழகையும் யுடைத்தாய்
உபாய பூர்த்தியையும் யுடைத்தாய்த்துத் திருவடிகள் இருப்பத

உன் மீலத் பத்ம கர்பேத்யாதி -உத்தர தினசர்யா –5-என்றும்

போதச் சிவந்து பரிமளம் வீசிப் புதுக்கணித்த சீதக் கமலத்தை நீரற வோட்டி -பாதாதி கேச மாலை -1-என்றும்

சீராரும் செங்கமலத் திருவடிகள் வாழியே -என்றும் இறே அடி அறிவார் வார்த்தை

இப்படி
இதனுடைய ஸுந்தர்யத்தையும் போக்யதா ப்ரகர்ஷத்தையும் அனுபவித்த இவர்
மங்களா ஸாஸனம் பண்ணி யல்லது நிற்க மாட்டாரே

உன் சேவடி செவ்வித் திருக்காப்பு -திருப் பல்லாண்டு -1- என்னுமா போலே

அன்றியே
செய்ய -என்கிற இத்தால்
(சிவந்த என்ற பொருள் கொள்ளாமல் – செம்மை என்றும் பொருள் கொண்டு )
திருவடிகளுடைய செவ்வியைச் சொல்லிற்றாய்
ஆஸ்ரிதர் அளவும் வந்து செல்லுகிற வாத்சல்யத்தை யுடைத்து என்கை
இது அண்ணராய சக்ரவர்த்திக்குப் ப்ரத்யக்ஷம்
( மா முனிகள் சரம தசையில் எழுந்து அருளி இருந்த போது அண்ணராய சக்ரவர்த்தி என்பவர் ஸேவித்து நிற்க
மடங்கிக் கிடந்த மா முனிகளின் திருவடிகள் தாமே நீண்டு அவர் தலையிலே வைத்து அருள் புரிந்தமை இங்கு நினைக்கத் தக்கது )

வந்தருளி என்னை எடுத்த மலர்த்தாள்கள் வாழியே -என்கிறபடியே
தம்மையும் முந்துற வந்து விஷயீ கரித்தது திருவடிகளாயிற்று

திருக்கமல பாதம் வந்து -அமலனாதி பிரான் -1-என்றும்
அடியேனை அங்கே வந்து தாங்கு தாமரை யன்ன பொன்னாரடி -பெரிய திருமொழி -7-3-5-என்றும் சொல்லக் கடவது இறே

இவர் இப்படித் தம்மை விஷயீ கரித்த செய்ய தாமரைத் தாள்களைக் கொண்டு சென்னித் தரிக்குமது -அளவாய் இருக்கிற
பொற் காலானது தன் சென்னித் திடரிலே ஏறும்படி அருளாலே வைத்து அருளுவதே என்று அவற்றினுடைய
பாவனத்வ போக்யத்வங்களை அனுபவித்து அவற்றுக்குத் தம்மோட்டை ஸம்பந்தத்தாலே ஓர் அவத்யமும் வாராது ஒழிய வேணும் என்று மங்களா ஸாஸனம் பண்ணுறார் ஆகவுமாம்

ஆகையால் இவருக்குப் ப்ராப்ய ப்ராபகங்கள் இரண்டும் அடி தானே யாய் இருக்கை

இனித் திருவடிகளுக்கு இவ்வருகு கந்தவ்ய பூமி இல்லாமையாலே
மேலே –
திருவரையோடே சேர்ந்து சிவந்து நிற்பதான திருப்பரி யட்டத்தில் அழகிலே சென்று
அச்சேர்த்திக்கு மங்களத்தை ஆசாசிக்கிறார் -சேலை வாழி -என்று

கால் வாசியிலே நில்லாமல் அரை வாசி தேடுமவர் இறே

திருவரையில் சாத்திய செந்துவராடை வாழி -என்று
திருவரையில் உடை அழகும் பரபாகமாய் இறே இருப்பது –

சந்த்ரனைச் சூழ்ந்த பரி வேஷம் (ஒளி வெள்ளம் )போலே யாயிற்றுத் திருவரைக்குத் திருப் பரியட்டத்தோடே சேர்த்தி

ஸூதா நிதி மிவ ஸ்வைர ஸ்வீ க்ருதோ தக்ர விக்ரஹம் ப்ரஸன்னார்க்க ப்ரதீகாஸ பரி வேஷ்டிதம் -பூர்வ தினசர்யா -3-
(தேவரீருடைய இச்சையால் எடுத்துக் கொள்ளப் பட்ட அழகான தேவரீருடைய திருமேனி அமுதக்கடல் போல் குளிர்ந்த பிரகாசத்தை யுடைய ஸூர்யனுடைய ஒளியுடன் கொடியது போல் உள்ளது -) என்னக் கடவது இறே

ஈனமிலாத இள நாயிறாகும் எழிலும் செக்கர் வானமும் ஒத்த துவராடையும் -பாதாதி கேச மாலை –3-என்றும்

ஆதாம்ர விமலாம் பரம் -பூர்வ தினசர்யா -5- ( சிவந்துள்ள ஆடையுடன் கூடியவர் ) என்றும்
அத்யாச்சர்யமாய் இறே இருப்பது –

இத்தால்
பீதக வாடைப்பிரானார் பிரம குருவாகி -பெரியாழ்வார் -5-2-8-வந்தமை தோற்றுகிறது

அதுக்கு மேலே
கண்டவர்களைக் கால் தாழப் பண்ண வற்றான திரு நாபி அழகிலே போந்து
அவ்வழகுக்குப் போற்றி என்கிறார் –
திரு நாபி வாழி -என்று

திருப்பரி யட்டத்துடனே சேர்ந்து இறே திரு நாபி இருப்பது

அந்தி போல் நிறத்தாடை -என்ற அநந்தரம்
உந்தி மேலது அன்றோ (அமலனாதி -5 )-என்று அருளிச் செய்கிறார்

அது தான் அல்லாத அவயவங்கள் காட்டில் அழகியதாய்
அழகு ஆற்றில் திகழ் சுழி போலே இறே உந்தித் சுழி இருப்பது
ஸுந்தர்ய சாகரம் இட்டளப் பட்டு சுழித்தால் போலே இருக்கிற இதினுடைய வை லக்ஷண்யம் கண்ட இவருக்கு
வாழ்த்தி அல்லது நிற்கப் போகாதே
இது தான் மடவார் உந்தித் சுழியிலே சுழலுகிற மனஸ்ஸை மீட்டுத் தன்னிடத்திலே ஆழங்கால் படுத்த வற்றாயும் இருக்கும் –

அநந்தரம்
திரு நாபிக்கு மேலாய் விசாலமாய் விமலமாய் ஸூ ந்தரமாய் இருக்கிற திரு மார்பையும்
அத்தோடே சேர்ந்த திரு யஜ்ஜோ பவீதத்தையும் கண்டு காப்பிடுகிறார் –
துய்ய மார்வும் புரி நூலும் -என்று

மார்வுக்குத் தூய்மை யாவது
ஹ்ருதயேந உத்வஹன் ஹரிம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-19-12-( மார்வில் ஹரியைத் தாங்கிக் கொண்டு ) என்று
நெஞ்சத்துப் பேராது நிற்கும் பெருமானை -மூன்றாம் திருவந்தாதி -81-உடைத்தாகை

அத்தாலே
அவர்கள் ஹ்ருதயம் சவும்ய ரூபமாய் இருக்கும்

அவ்வளவும் அன்றியிலே
மார்வம் என்பதோர் கோயிலிலே மாதவன் என்னும் தெய்வம் -பெரியாழ்வார் -4-5-3-என்கிறபடியே
இவர் திரு உள்ளத்தைக் கோயிலாகக் கொண்டு
அரவிந்தப் பாவையும் தானுமான -பெரியாழ்வார் -5-2-10- சேர்த்தி யுடனே யாய்த்து அவன் எழுந்து அருளி இருப்பது –

விசேஷித்து -வக்ஷஸ்தலம் மாதவ ஸ்தானம் ஆகையாலே (பன்னிரு திருமண் காம்புகளில் மார்வில் அணியும் திரு மண் காப்புக்குத் திரு நாமம் மாதவன் ஆகையால் )
உள்ளொடு புறம்போடே வாசியற மாதவன் உறையும் இடமாய்த்து

மங்களம் மாதவா ராம மனஸ் பத்மாய மங்களம் -என்றும்
ஸ்ரீ மத் ஸூந்தர ஜாமாத்ரு முனி மானஸ வாஸிநே ஸ்ரீ நிவாஸாய -ஸ்ரீ வெங்கடேச மங்கள ஸ்தோத்ரம் -என்றும் சொல்லக் கடவது இறே

அவன் தான் அநந்ய ப்ரயோஜனருடைய ஹ்ருதயங்களிலும் ஆசார்ய பரதந்திரருடைய ஹ்ருதயங்களிமாய்த்து அத்யாதரத்துடனே எழுந்து அருளி இருப்பது –

விண்ணாட்டில் சால விரும்புமே வேறே ஒன்றை எண்ணாதார் நெஞ்சத்து இருப்பு -ஞான ஸாரம் -9-என்றும்

தன்னாரியன் பொருட்டாச் ஸங்கல்பம் செய்பவர் நெஞ்சு எந்நாளும் மாலுக்கு இடம் -ஞான ஸாரம் -37-என்றும் சொல்லக் கடவது இறே

அந்த
1- அநந்ய ப்ரயோஜ நதையையும்
2- ஆச்சார்ய பரதந்த்ரதையையும் ஆய்த்து இன்னிக்குத் தூய்மையாகச் சொல்லுகிறது –

அதுக்கும் மேலே
அழகாரும் எதிராசர்க்கு அன்பு உடையான் -என்னும்படி
இவர் திரு உள்ளம் யதீந்த்ர ப்ராவண்யத்தை யுடைத்தாய் இருக்கையாலே
இன்று இவன் வந்து இருப்பிடம் என் தன் இதயத்துள்ளே தனக்கு இன்புறவே -ராமானுஜ நூற்றந்தாதி -106-என்கிறபடியே
பரம ஹம்ஸரான எம்பெருமானார் எழுந்து அருளி இருக்கிற மானஸ பத்ம ஆஸனத்தை உடையதாயும் இருக்கும் –

ராகாதி தூஷிதமான சித்தத்தில் அவன் அநாஸ் பதியாய் இருக்குமா போலே
அங்க ராக ரஞ்சிதமான இவருடைய ஹ்ருதயத்திலும் ஆஸ்பதியாய் அன்றி இரானாய்த்து
இப்படி இவன் எழுந்து அருளி இருக்கையாலே சவும்ய ஜாமாத்ரு முனியுடைய ஹ்ருதயம் அத்யந்த சவும்ய ரூபமாய் இருக்கும் என்கை

ஆகையால்
நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு -திருப்பல்லாண்டு -2- என்கிறபடியே
இவரும் இருவருமாக சேர்த்திக்கு இருப்பிடமான திரு மார்வைத்
துய்ய மாறவும் புரி நூலும் வாழி -என்று மங்களா ஸாஸனம் பண்ணுகிறார் ஆகவுமாம்

இவர் மானஸ வாஸியாய் இருக்கிறவனும்
புலம் புரி நூலவன் -பெரிய திருமொழி -9-9-9-இறே

அலர் மேல் மங்கை யுறை மார்பன் -திருவாய் -6-10-10- என்கையாலே
அம் மா ஒருத்திக்கு இடமுடையாய்த்து அம்மார்வு
இம்மார்வு இருவருக்கும் இடமுடைத்தாய் இருக்கும்

சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம் நின்றாள் மரவடியாம் நீள் கடலுள் என்றும்
புணையா மணி விளக்காம் பூம் பட்டாம் புல்கும் அணையாம் திரு மாற்கு அரவு -முதல் திருவந்தாதி -53-

மங்களம் பன்ன கேந்த்ராய என்றும்
அநந்தனாம் அவரே மணவாள மா முனி -என்றும் சொல்லக் கடவது இறே

அதவா
துய்ய மார்வும்
ஸூபேந மனஸா த்யாதம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-6-28-நல்ல மனத்தினால் நினைக்கப்பட்டு -என்கிறபடியே
ஆஸ்ரிதருடைய அபராதங்களைப் பொறுத்து அவர்களுக்கு எப்போதும் ஓக்க நன்மையைச் சிந்திக்கிற ஸுஹார்தத்தை யுடைத்தாகை

உரஸா தாராயாமாஸ-பாரதம் -அர்ஜுனன் மீது விடப்பட்ட பாணங்களைத் தன் மார்வில் கண்ணன் ஏற்றான் -என்றும்
நன் நெஞ்ச வன்னம் -பெரிய திருமொழி -7-2-7-என்றும் சொல்லுகிறபடியே
தீமையைத் தவிப்பதற்கும் நன்மையை உண்டாக்குவதற்கும் -இவை இரண்டுக்கும் – தானேயாய் இருக்கை-

துய்ய மார்பும்
ஏராரும் செய்ய வடிவு -ஆர்த்தி பிரபந்தம் -30-என்னுமா போலே
இங்கும் யாவத் போகத்தைப் பற்றிச் சொல்லவுமாம்

மந்தர கிரி மதித மஹார்ணவ உத்கீர்ண பேந பிண்ட பாண்டர ஸூ ந்தர ஸூ குமார திவ்ய விக்ரஹ
மந்தர மலையாலே கடையப்பட்ட கடலில் இருந்து யுண்டான நுரையினுடைய வெண்மையின் அழகுடன் கூடிய மென்மையான திரு மேனி
என்று இறே இருப்பது

ஆக
இவற்றால் சொல்லிற்றாய்த்து
பாஹ்ய அப் யந்த்ர ஸூசி என்கை

இனித் திரு மார்வோடே சேர்ந்து இறே திரு யஜ்ஜோ பவீதம் இருப்பது

தாமரைத் தார் இடம் கொண்ட மார்வும் வண் புரி நூலும் -பாதாதி கேச மாலை -5-

துஷார கரகர நிகர விஸத தர விமலோ பவீத பரி ஸோபித விசால வக்ஷஸ்தல
சந்திரனுடைய கிரணங்களைப் போலே வெண்மையான பரி ஸூத்தமான முப்புரி நூலினால் ப்ரகாசிக்கின்ற விசாலமான மார்பு -என்கிறபடியே
சந்திரனுக்கு கிரணங்கள் தேஜஸ் கரம் ஆனால் போலே யாய்த்து திரு மார்வுக்குத் திரு யஜ்ஜோ பவீதம் இருப்பது –

ஸோபிதம் யஜ்ஞ ஸூத்ரேண -பூர்வ தினசர்யா -வெண் புரி நூலினால் அழகு பெற்று விளங்குகின்றவர் -என்னக் கடவது இறே

அன்றிக்கே
இம் முந்நூலான மெய்ந்நூலாலே இறே பொய்ந்நூல்களையும் கள்ள நூல்களையும் கருமம்-உண்மை – அன்று என்று கழிப்பது

வகுள தர தவள மாலா வக்ஷஸ்தலம் வேத பாஹ்ய ப்ரவர ஸமய வாதச் சேத நம் —
வெண்மையான மகிழ் மாலையை அணிந்த திரு மார்வை உடையவர் -வேதத்துக்குப் புறம்பான சமயத்தைச் சேர்ந்தவர்களை அழிப்பவர் -என்னக் கடவது இறே

தம்முடைய ப்ரஹ்ம ஸூத்ரத்தாலே இறே இவனுடைய காம ஸூத்ரங்களைக் கழிப்பது

ராஜேந்திர சோழனிலே பாஹ்யருடைய சங்கத்தாலே ஸிகா யஜ்ஜோ பவீதங்களைக் கழித்த ப்ராஹ்மண புத்ரன்
ஆழ்வானைக் கண்டு மீண்டும் அவற்றைத் தரித்து வர அவன் பிதாவானவன் ஆழ்வானைக் கண்டாய் யாகாதே -என்றான் இறே
பெரிய திருமொழி -8-1-வியாக்யானத்தில் பெரியவாச்சான் பிள்ளை காட்டி அருகிலும் ஐதிக்யம் இது
இது போல் அன்றோ மா முனிகளும் தம்மை சேவித்தவர்களைப் பவித்ரர்களாக்கி அருளுகிறார் என்றவாறு –

இனித் திரு மார்வோடு சேர்ந்த திருத்தோள்களுக்கு அரண் செய்கிறார் –
திருத் தோளிணை வாழியே
மல்லாண்ட திண் தோளுக்குப் பல்லாண்டு -திருப்பல்லாண்டு -1-என்னுமா போலே

ஸூந்தரத் திருத் தோளிணை
புஜ த்வய வித்ருத விசததர சங்க சக்ர -சங்கு சக்ர சிஹனங்கள் விளங்கும் திருத்தோள்கள் என்றபடி
லாஞ்சனங்களை உடைத்தாய்த்துத் திருத்தோள்கள் இருப்பது

தோளார் சுடர்த் திகிரி சங்குடைய சுந்தரன் -ஞான சாரம் -7-இறே அவன் தான்

சிங்கார மாலைத் திருத் தோள்களும் அதிலே திகழும் சங்கு ஆழியும் –பாதாதி கேச மாலை -7- என்று அனுபாவ்யமாய் இறே இருப்பது-

தோளிணை
எப்போதும் கை கழலா நேமியான் -பெரிய திருவந்தாதி -87-என்கிறபடியே
இவருக்குத் திருத் தோள்களானவை எப்பொழுதும் சங்கு ஆழி இலங்கு புயமாய் இருக்கையாலே
வலத்துறையும் சுடர் ஆழியும் பாஞ்ச சன்னியமும் -திருப்பல்லாண்டு -2- இங்கும் உண்டாய் இருக்கை

அன்றிக்கே
திருத்தோள்கள் தான் பகவ லாஞ்சனத்திலே ப்ரமாணமுமாய் அபவித்ரரை ஸூபவித்ரராக்கியும்
துர் வ்ருத்தரை வ்ருத்த வான்கள் ஆக்கியும் போருமதாய் இருக்கும் –

அநந்தரம்
திருத்தோள்களில் ஏக தேசமான திருக்கையையும்
அதிலே தரித்த த்ரி தண்டத்தையும் கண்டு
அதுக்குத் தாம் கடகாக நிற்கிறார் –
கையும் ஏந்திய முக்கோலும் வாழியே

வெறும் கை தானே போருமாய்த்து ஆகர்ஷிக்கைக்கு
அதிலே த்ரி தண்டமுமானால் அழகு இரட்டிக்கச் சொல்ல வேண்டா விறே –

அங்கைத் தலத்திடை ஆழி கொண்டான் -நாச்சியார் -12-4- என்னுமா போலே
காரும் சுரபியும் போலே விளங்கு கைத்தாமரையிலே சேர்ந்து இருந்த தாண்டும் -பாதாதி கேச மாலை -5-என்று இறே சேர்த்தி இருப்பது

இக் கை கண்ட இவரைக் கை விட்டு இருக்க மாட்டாரே –

அன்றிக்கே
முந்தை மறைத் தமிழ் விளக்கும் முத்திரைக் கை வாழியே -என்கிறபடியே
தனது தொண்டக் குலம் சூழ இருக்க அவர்களுக்குத் தமிழ் வேதமான திரு வாய் மொழியினுடைய அர்த்தத்தை
ஹஸ்த முத்ரையால் உபதேசிப்பது அருளுவதும் அநுபாவ்யமாய் இறே இருக்கும் இவருக்கு

உந் நித்ர பத்ம ஸூ பகாம் உபதேஸ முத்ராம் -யதிராஜ சப்தாதி -25-அப்பொழுது அலர்ந்த தாமரையின் அழகுடைய ஞான முத்ரை என்றும்
எழில் ஞான முத்திரை வாழியே -ஆர்த்தி பிரபந்தம் -20- என்றும் சொல்லக் கடவது இறே –

ஏந்திய
பூ ஏந்தினால் போல் இருக்கை

கையும் ஏந்திய முக் கோலும் வாழியே
நின் கையில் வேல் போற்றி என்று நாச்சியார் கையில் ஏந்திய வேலுக்கு மங்களா ஸாஸனம் -செய்தால் போலே
இவரும் மா முனிகள் கையில் ஏந்திய முக்கோலுக்கு மங்களா ஸாஸனம் செய்கிறார்

அன்றிக்கே
கமல கர தல வித்ருத த்ரி தாண்ட தர்சன த்ருத ஸமஸ்த பாஷண்ட ஸூ தூர பரிஹ்ருத நிஜா வசத-
தாமரை போன்ற திருக்கையில் தரித்த த்ரி தண்டத்தைக் கண்ட பாஷண்டிகள் அனைவரும் வெகு தூரம் ஓடும்படியான இருப்பிடத்தை யுடையவர்
என்று ஒருக்கோலார் தொடக்கமானவரை எல்லாம் ஓட்டுமதாய் இருக்கும்-

கருணை பொங்கிய கண்ணினை வாழியே
கண் காணக் கை விட்டார்
கண்ணால் கண்டு கொண்டு இருக்கும் போதே கை விட்டார் என்றும்
கண்ணைக் கண்டவுடன் கையை விட்டு விட்டார் என்று சாடூக்தி -நயவுரை

கார் போலும் செங்கை யுறை முக்கோலும் வாழியே
கருணை குடி கொண்டு அருளும் கண்ணினை வாழியே –என்று
திருக்கைக்கு அனந்தர பாவியாய்ப் பேசுவது திருக்கண்களை இறே

திருக்கைகளினாலே ஸ்பர்சித்து அருளினை பின்பு இறே திருக்கண்களால் கடாக்ஷித்து ரக்ஷித்து அருளுவது

கருணை பொங்கிய கண்ணினை
கருணைக் கடலான இவருடைய கிருபை பெருகும் ஆனைத் தாள்கள் இருக்கிற படி

நிரந்தர கருணாம்ருத தரங்கிணீ பிரார்த்தரிதா பாங்கைர் அநுகூலம் அபி ஷிஞ்ச —
எப்பொழுதும் அமுதம் அன்ன கருணையானது பெருகுகின்ற உமது கடைக்கண் பார்வையாலே அனுகூலனான என்னை நனைக்க வேண்டும்
என்றார் இறே
இவரைப் போல் கண்ணுடையார் ஒருவரும் இல்லையே –
இவர் கண் இறே எல்லாருக்கும் களை கண்
கண் அருளாலே இறே எல்லாரையும் ரக்ஷித்து அருளுவது –

கண்ணினை
அலர்ந்த செவ்வித் தாமாரைப் பூவிலே இரண்டு வண்டுகள் படிந்து இருக்குமா போலே யாய்த்து
திருக்கண்களானவை திரு முக மண்டலத்துக்கும் கண் காட்டிகளாய் இருக்கிற படி

ஸ்மயமாந முகாம்போஜம் தயமாந த்ருகஞ்சலம்–பூர்வ தினசர்யா -10-புன் முறுவலுடன் விளங்கும் தாமரை போன்ற திரு முகமும் –
திரு உள்ளத்தில் பொங்கும் கருணையை வெளிப்படுத்துகின்ற திருக் கண்களும்-என்று அன்றோ இவற்றின் சேர்த்தி இருப்பது –

திருக் கண்களை அருளிச் செய்தது உத்தம அங்கத்தில் அழகுக்கு எல்லாம் உப லக்ஷணம்

வாழி செவ்வாய் –பாதாதி கேசவ மாலை -10-என்றும்
வார் காதும் திருநாமம் அணி நுதலும் வாழியே -என்றும்
அவற்றையும் திருநாமாந்தரங்களிலே காணலாய் இருக்கும்

அத்தாலே அவை இரண்டையும் -கண்ணினை -மங்களா சாசனம் பண்ணி அருளினார்
இவர் ஜீயர் திருக்கண் மலரிலே யாய்த்து ஜிதம் என்று தம்மை எழுதிக் கொடுத்தது –

இவ்வளவும் ஸூ ரூப வை லக்ஷண்யத்தை அனுபவித்து

மங்களா ஸாஸனம் பண்ணின இவர்
இனி ஸ்வரூப குணமான ஞான வை லக்ஷண்யத்தையும் அனுபவித்து மங்களா ஸாஸனம் பண்ணுவாராக அதிலே இழிகிறார்

கட் கண் என்றும் உட் கண் என்றும் -பெரிய திருவந்தாதி -28-
நேத்ரேண ஞாநேந -என்றும்
ஞான சஷுஸ்ஸூ க்கள் இரண்டுக்கும் தர்ச நத்வம் ஒத்து இருக்கையாலே ஒரு சேர்த்தி யுண்டு இறே
அத்தாலே –பொய்யிலாத மணவாள மா முனி புந்தி -என்று
ஞானத்தைப் பேசுகிறார் –

புந்தி -புலன் -புத்தி -ஞானம் –

பொய்யிலாத
இவர் விஷயத்தில் சொன்ன ஏற்றம் எல்லாம் யதார்த்தமாக யுண்டு என்கை
இனிச் சொல்ல மாட்டாதார் குறையே யுள்ளது

அன்றிக்கே
ஆஸ்ரிதரானவர்களுக்கு அஸத்வாதி தோஷங்கள் வராமல் நோக்கிப் போரு கிறவர் என்னவுமாம்

காமாதி தோஷ தரம் ஆத்ம பதாஸ்ரிதாநாம் -யதிராஜ விம்சதி -1-என்கிறபடியே
செறிந்தவர் தமேதத்தை மாற்றுபவராய் இருப்பர் -பாதாதி கேச மாலை

மணவாள மா முனி
ரக்ஷகர் அன்றிக்கே ஒழிந்தாலும் வடிவில் போக்யதையாலும் திரு நாம வைலக்ஷண்யத்தாலும் விட ஒண்ணாது இருக்கை

பொய்யிலாமை புந்திக்கு விசேஷணம் ஆகவுமாம்
அப்போது
இராமானுசன் மெய்ம்மதிக் கடலே -இராமானுச நூற்றந்தாதி -58 என்கிறபடியே
உண்மை நன் ஞானமான யதார்த்த ஞானத்தை யுடையவர் என்கை
அதாவது
மெய் ஞானம் இன்றி வினையியல் பிறப்பு அழுந்தி -திருவாய் -3-2-7-என்கிறபடியே
ஸம்ஸார ஆர்ணவ மக்நரானவர்களை
ஞானக்கையாலே -திருவாய் -2-9-2-உத்தரித்துப் போருமவர் என்கை –
சேதனர் படும் ஆபத்தைக் கண்டால்
கையாளும்
காலாலும் இறே
இவர் எடுத்து ரக்ஷித்து அருளுவது –

ஞானக்கை தந்து வந்தருளி எடுத்த புந்தி வாழியே

ஞானப் ப்ரதானர்களாய் இறே இவர்கள் இருப்பது –

தீ பக்த்யாதி குணார்ணவம் -தனியன் -என்றும்
புந்தி வாழி -என்றும் அருளிச் செய்து போருகையாலே
ஞானம் சார பூத குணமாகையாலே அத்தைப் ப்ரதானமாகச் சொல்லக் கடவது –

தத்ர ஸத்வம் நிர்மலத்வாத் ப்ரகாசகம் -என்கிறபடியே
ஸூத்த ஸத்வ மயமான விக்ரஹமாகையாலே
உள்ளில் பிரகாசித்வம் என்ன -உள்ளுள் உள்ள வற்றை பிரகாசிப்பிக்க -என்னக் கடவது இறே

புந்தி என்று
ஞான மாத்ரத்தையும் சொன்னது பக்த்யாதிகளுக்கும் உப லக்ஷணம்
மங்களம் நிர்மலா ஞான பக்தி வைராக்ய ராஸயே -என்னக் கடவது இறே

வாழி
மங்களா ஸாஸனம் பண்ணி அருளினார்
ஞான பக்த்யாதிகள் இறே ஆத்ம அலங்காரம் என்பது
ஞான பக்த்யாதி பூஷிதம் -என்னுமா போலே

அன்றிக்கே
ஆச்சார்யனுக்கு அடையாளம் அறிவும் அனுஷ்டானமும் என்றும்
ஞானம் அனுஷ்டானம் இவை நன்றாகவே யுடையனான குரு -உபதேச -61-என்றும் இறே
ஆச்சார்ய லக்ஷணம் அருளிச் செய்தது
ஆகையால் ஆஸ்ரிதருடைய அஞ்ஞானத்தைப் போக்கி
ஸம்பந்த ஞானத்தை விளைவித்து
கைங்கர்ய பர்யந்தமாக நடத்திக் கொண்டு போருவது எல்லாம்
தம்முடைய ஞான அனுஷ்டானங்களாலே என்கை

மணவாள மா முனி புந்தி -என்கையாலே
இவருடைய ஞானம் அல்லாதாருடைய ஞானத்தில் காட்டில் அத்யந்த விலக்ஷணமாய்
தத்வ த்ரயங்களையும் அலகலகாகக் காண வல்லதாய்
தாமாரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு -முதல் திருவந்தாதி -67-என்கிறபடியே
ஸ்ரீ யபதியை விஷயமாக யுடைத்தாய்
அது தான்
ததீய சேஷத்வம் ஆகிற சரம அவதியான எல்லை நிலத்திலே நிலை நின்று போருமதாய் இருக்கும்
தத்வ த்ரயங்களோடு ஸ்ரீ வசன பூஷணம் கண்ட ஸகல ஸாஸ்த்ர ஆச்சார்யர் என்னக் கடவது இறே

ஆக
இவை எல்லா வற்றாலும்
கீதையை அருளிய கண்ணன் என்கோ -திருவாய் -3-4-6- என்னும்படி
நிறை ஞானத்து ஒரு மூர்த்தியான -திருவாய் -6-8-6-
கீதா உபநிஷத் ஆச்சார்யனோடே விகல்பிக்கலாம் படி ஞான நீதியாய் இருக்கிற இவருடைய ஞானமானது
கலி தோஷம் தட்டாமல் நித்ய மங்களமாய்ச் செல்ல வேணும் என்று வாழ்த்தி அருளினார் என்கை
கலி தோஷத்தாலே இறே சேதனருடைய ஞானம் அல்பீ பவித்துப் போருவது

இவர் பல்லவ

ராயருக்கே கலி கண்டித்த திறல் வாழியே -என்னக் கடவது இறே
கலி கன்றியான் -திருமங்கை ஆழ்வார் என்றும் நம்பிள்ளை என்றும் கொள்ளலாம் -அருளாலே உயர்ந்தவர் இறே இவர் தான்

இனி
இவர் இப்படித் தம்முடைய ஞான அனுஷ்டானங்களாலே ஞான விபாகமற

ஸகல சேதனரையும்
ரஷித்துக் கொண்டு போருகையாலே வந்த புகழைச் சொல்லுகிறது –
ஞாலம் யுண்ட புகழ் போல் இருபத்தொரு புகழாய்த்து இது
தன் புகழ் நயவாருடைய புகழ் போற்றி இருக்கிற படி
அதாவது
ஞான வைபவத்தாலே வந்த புகழானது
தொல் புகழ் சுடர் மிக்கு எழுந்தது -இராமானுச நூற்று அந்தாதி -61-என்கிறபடியே
நிரவதிக தேஜோ ரூபமாய்
அப்ரதிஹதமாய்
வாழ வேணும் என்கை

புகழ் வாழி -என்ற
அநந்தரம்
வாழி என்று
இரட்டிப்பாய் இருக்கிறதுக்கு பிரயோஜனம் பல்லாண்டு பல்லாண்டு என்கிறார் ஆகவுமாம்

அன்றிக்கே
நீள் புவியில் தன் புகழை நிறுத்துமவன் வாழியே -பாதாதி கேச மாலை -10–என்கிறபடியே
கீழ்ச் சொன்ன யஸஸூக்கு ஆதாரமாய்
அனுக்தமான ஆத்ம ஸ்வரூப வை லக்ஷண்யமும் அனவரத பாவியாய்ச் செல்ல வேணும் என்று ஆசாசிக்கிறார் ஆகவுமாம்
அடியே தொடங்கி இதுவே இறே இவருக்கு யாத்திரை –

இத்தால்
சரம பர்வமான ஜீயர் விஷயத்தில் மங்களா சாஸனமே அனுகூலரானவர்க்கு அனவரத கர்த்தவ்யம் என்று

அருளிச் செய்து தலைக்கட்டி அருளினார் ஆயிற்று

வாழி செந்தாமரைத் தாள் துவராடை மருங்கு கொப்பூழ்
வாழி முன்னூலுறை மார்பு முக்கோல் அங்கை வாழி திண் தோள்
வாழி செவ்வாய் விழி வாழ் பொன் நாமம் மருவு நுதல்
வாழி பொற் கோயில் மணவாள மா முனி வாழ் முடியே –பாதாதி கேச மாலை நிகமன பாசுரம் –

—————–

அடியார்கள் வாழ அரங்க நகர் வாழ
சடகோபன் தண் தமிழ் நூல் வாழ -கடல் சூழ்ந்த
மன்னுலகம் வாழ மணவாள மா முனியே
இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும் –

அடியார்கள் வாழ
அணி யரங்கன் திரு முற்றத்து அடியார் -பெருமாள் திருமொழி -1-10-என்றும்
அரங்கன் மெய்யடியார் -பெருமாள் திருமொழி -2-1- என்றும்
திருமால் அடியார் -திருவாய் -5-6-11- என்றும் சொல்லப்படுகிற
ஸ்ரீ வைஷ்ணவர்கள் நாள் தோறும் அபி வ்ருத்தமாய் வாழும்படிக்கு இவர் தான்
பொலிக பொலிக பொலிக -திருவாய் -5-2-1- என்றாய்த்து ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு மங்களா ஸாஸனம் பண்ணுவது –

அரங்க நகர் வாழ
அடியாருக்கு ஆவாஸ -இருப்பிடமான -அரங்க நகர் –

அடியார் நிலாகின்ற வைகுந்தம் -திரு விருத்தம் -75- என்னும்படி இருக்கை

நல்லோர்கள் வாழும் நளிர் அரங்கம் -நாச்சியார் -11-5-இறே

அந்த ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யுடனே கோயில் வாழும்படிக்கும் கோயில் மணவாள மா முனியான இவர் தாம்
ஸ்ரீ மத் ஸ்ரீ ரெங்க ஸ்ரீயம் அநு பத்ரவாம் அநு தினம் ஸம் வர்த்தய –ஸ்ரீ ரெங்கச் செல்வமானது தடை ஏதும் இல்லாமல் நாளும் வளரட்டும் -என்றும்

ஸ்ரீமத் ரங்கம் ஜயது பரமம் தாம தேஜோ நிதாநம் |
பூமா தஸ்மிந் பவது குசலீ கோபி பூமா ஸஹாய: ||
திவ்யம் தஸ்மை திசது பகவந் தேசிகோ தேசிகாநாம் |
காலே காலே வரவரமுநி: கல்பயந் மங்களானி || -ஸ்ரீ எறும்பி அப்பா அருளிச் செய்த ஸ்ரீ வர வர முனி சதகம் –8-

(மங்களா ஸாஸன ஸ்லோகம் இது
பூமா – உபநிஷத் சொல்லும் – அதிசய ஆனந்த குணக் கடல்
பூமா ஸஹாயா -ஸ்ரீ தேவி ஸ்ரீ பூமா தேவிமார்கள் உடன் –
அடியார்கள் வாழ அருளிச் செயல் வாழ குரவர் வாழ
வியாக்யானம் வாழ -அரங்க நகர் வாழ -மணவாள மா முனியே -நீர் நூற்று ஆண்டு இரும்

ஒளிக்கு நிதி போன்ற சிறந்த தலமான செல்வமுள்ள ஸ்ரீரங்க நகரம் விளங்க வேண்டும்.
அதில் ஒளிகளுக்கெல்லாம் ஒளி(யான எம்பெருமான்) க்ஷேமமாக வாழ வேண்டும்.
ஆசார்யர்களுக்கு ஆசார்யரான மணவாள மாமுனிகள் காலந்தோறும் மங்களங்களைச் செய்து கொண்டு
அவருக்கு ஓர் ஒளியை அளிக்க வேண்டும்.-என்று இறே மங்களா ஸாஸனம் பண்ணி அருளிற்று )

செல்வம் சிறக்கப் பெற்றதாய் பரம பதத்தில் உள்ள ஒளி போன்ற ஒளிக்கு இருப்பிடமானதாய் இதற்கு மேல் இல்லை என்னும்படி உயர்ந்த முதல் திவ்ய தேசமான ஸ்ரீ ரெங்க க்ஷேத்ரமானது தீது ஏதும் இன்றிச் சிறந்து விளங்கிடுக
அந்த ஸ்ரீ ரெங்கத்தில் மண் மகளுக்கும் மலர் மக்களுக்கும் மணவாளனாய் -அளவிடற்கு அரிய ஆனந்தத்தை உடையவனாக மனம் மொழிக்கு எட்டாத ஒரு பரம புருஷன் க்ஷேமம் யுடையவனாக எழுந்து அருளுக
அழகிய மணவாளனை உள்ளிட்ட பல ஆச்சார்யர்கட்க்கு ஆச்சார்யரான மணவாள மா முனிகள் எல்லாக் காலத்திலும் மங்களங்களை வேண்டுகின்ற வராய் அப் பரம புருஷனுக்கு பரம பதத்தில் உள்ளது போன்ற ஐஸ்வர்யத்தைத் தந்து அருள்க என்றும் கூறியுள்ள படி மணவாள மா முனிகள் மங்களா சாசனம் செய்து அருளினார் –

பெரியோர்களோடும் பெரிய பெருமாளோடும் பெரிய கோயில் ஆழ்வார் வேணும் என்றாய்த்து பெரிய ஜீயர் மங்களா ஸாஸனம் பண்ணும் படி –
அத்தாலே இறே அபி விருத்தமாய்ச் செல்லுகிறது
அது தான் திருமால் கோயிலான திருவாளன் திருப்பதி -பெரியாழ்வார் -4-8-10-இறே

சடகோபன் தண் தமிழ் நூல் வாழ –
தொண்டர்க்கு அமுதாய் -திருவாய் -9-4-9-
திருமாளவன் கவியான -திரு விருத்தம் -48-திருவாய் மொழியை
அஞ்சு வியாக்யானத்துடனே வளர்த்துப் போருமவராகையாலே திருவாய் மொழி வாழும்படிக்கும்

முகில் வண்ணன் அடி மேல் சொன்ன சொல் மாலை ஆயிரமும் -திருவாய் -7-2-11-என்னும்படி
பெரிய பெருமாள் விஷயமான திருவாய் மொழிப் பெருக்கத்தோடே வாழ வேணும் என்று

சடகோபன் இட்டத் தமிழ் பா இசை வாழியே-இயல் சாற்று – -என்றாய்த்து திருவாய் மொழியை வாழ்த்துவது –

கவிப்பா அமுதின் கறியின் சுவையொடு கண்ணன் உண்ணக் குவிப்பான் சடகோபன் -சதா கோபர் அந்தாதி -7-
பண் இசைகளாகிய கறியுடன் -மிகுதியாகப் பரிமாறி -என்றும்

வகுள பூஷண வாக் அம்ருத அஸநம் -என்றும் சொல்லுகையாலே
இருவருக்கும்-எம்பெருமானுக்கு அவன் அடியார்களுக்கும் – ஜீவனமாய் இருக்கும் -தொண்டர்க்கு அமுது அன்றோ

இப்படி
ஸ்வ -பர -ஜீவன மானத்தை வர்த்திப்பிக்க வேணும் இறே இவருக்கு

திருமால் அடியார்களைத் திருவாய் மொழியை முன்னிட்டு இறே பூசிப்பது
இப்படி பூசிக்கப் பட்ட மாதவன் பூதங்களான ஸ்ரீ வைஷ்ணவர்கள் மண் மேல் பண் தான் பாடி நின்று ஆடப் பரந்து திரிகையாலே -திருவாய் -5-2-2-
பாத தூளி படுதலால் இவ்வுலகம் பாக்யம் செய்ததே -பெரியாழ்வார் -4-1-6-என்று
பாத ஸஞ்சார பூதமாய் யாய்த்து அவர்களை யுஜ்ஜீவிப்பது –

மணவாள மா முனியே
லோகத்துக்கு எல்லாம் மா லோகம் போலே இருக்கிற அழகிய மணவாள ஜீயரே
அடியார் குல விளக்காய்
அரங்க மங்கள தீபமாய்
இராமானுச முனி செய்ய குன்றில் ஏற்றிய தீபமாய்
அத்தாலே தமிழ் வேதம் துலங்கப் பண்ணினவராகையாலே

இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்
பல்லாண்டு பல்லாண்டு -என்றபடி
நூற்றாண்டு என்று மனுஷ்ய ஆயஸ்ஸை இட்டு உப லஷித்து
ஜீவேம சரதஸ் சதம் -நூற்று ஆண்டுகள் வாழ்வேனாக – என்றும்
பர சதம் சமா -பல நூற்று ஆண்டுகள் -என்றும்
கால தத்வம் உள்ளதனையும் வாழ்ந்து அருள வேணும் என்று மங்களா சாசனம் பண்ணுகிறது

அகல்பதத் பவது –அஸ்மத் குருர் வர வர ப்ரவரோ முனீ நாம் அந்தஸ் தமஸ் சமய தந்தத்வஸாம் யதீய த்யான பங்கஜ தளாரிண பாத யுக்மம் -என்னக் கடவது இறே

அடியார்கள் வாழ
செய்ய தாமரைத் தாளிணை வாழியே -என்று தேவரீரை சூழ்ந்து இருந்து ஏத்துமவர்களாய்
பரி ஜநைஸ் ஸஹ வாஸிநம் -அடியார்களுடன் கூடி இருக்க வேணும் -என்று
தேவர் விரும்பிப் போரும் வர வர முனி ப்ருத்யர்கள் வாழ்வாராக

அரங்க நகர் வாழ
திருவரங்கம் திருப்பதியை இருப்பாகப் பெற்றோம் -ஆர்த்தி பிரபந்தம் -55-என்றார் அன்றோ
ரங்கே தாமநி ஸூகா ஸீநம் -பூர்வ தினசரி 1-என்னும்படியாக
தேவர் இனிதாக எழுந்து அருளி இருக்கும் அரங்க நகரானதும் வாழ்வதாக

சடகோபன் தண் தமிழ் வாழ்க
மாறன் கலை உணவாகப் பெற்றோம் -ஆர்த்தி பிரபந்தம் -55-என்றபடி
தேவரீருக்குப் போக்யமாய்
வேத நூல் என்னும்படியான திருவாய் மொழி வைதிக பரிக்ரஹத்தோடே வாழ்வதாக

கடல் சூழ்ந்த மண்ணுலகம் வாழ
மண்ணுலகில் மனிசர் உய்ய -பெருமாள் திரு மொழி -1-10-
பார் உழகைப் பொன் உலகு ஆக்க வல்லோம் என்று
பூதலம் எங்கும் பொன்னுலகு ஆக்கின படி வாழ்வதாக

அடியார்கள் நடுவும்
ஆழ்வார்கள் நடுவும்
திருவாய் மொழியின் இன்னிசை மன்னும் இடம் தொறும் எழுந்து அருளி இருக்கிற மணவாள மா முனியே

இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்
எனையோர்-என்னைப் போன்றவர்கள் – உஜ்ஜீவிக்கவுமாம்

ஜயது யஸஸா துங்கம் ரங்கம் ஜக த்ரய மங்களம்
ஜயது ஸூ சிரம் தஸ்மிந் பூமா ரமா மணி பூஷணம்
வரத குருணா சார்த்தம் தஸ்மை ஸூபாந் யபி வர்த்தயன்
வர வர முநி ஸ்ரீ மான் ராமானுஜோ ஜயது ஷிதவ் –ஸ்ரீ எறும்பி அப்பா அருளிச் செய்த ஸ்ரீ வர வர முனி சதகம் –104-

உயர்ந்த கீர்த்தியை யுடைய மூவுலகங்களுக்கு மங்களகரமான ஸ்ரீரங்க திவ்ய தேசம் ஜய சீலமாக இருக்கட்டும்.
வெகு காலமாக அங்கே பூ தேவி ஸ்ரீ தேவிகளுக்கு ஆபரணம் போன்ற பெருமாளும் ஜய சீலமாக இருக்கட்டும்.
வரத குருவுடன் அங்கே சுபங்களை வ்ருத்தி செய்து கொண்டு ஸ்ரீமானான ராமாநுஜ முநியும் மணவாள மாமுநியும் வாழட்டும்.

கீர்த்தியினால் உயர்ந்து உலகம் மூன்றுக்கும் மங்களம் தரும் அணியான ஸ்ரீ ரெங்க நகரம் குறை ஏதும் இன்றி விளங்கிடுக
அந்த திவ்ய நகரத்தில் ஸ்ரீ மஹா லஷ்மிக்கு ரத்ன ஆபரணமாய் மிகப் பெருமை படைத்த ஸ்ரீ ரெங்க நாதப்பெருமாள் வெகுகாலம் குறை ஒன்றும் இல்லாமல் விளங்கிடுக
அத்தகைய பெருமாளுக்கு அநேக மங்களங்களை கோயில் அண்ணனோடே கூடி ஆசா சனம் செய்து வளர்த்துக் கொண்டு
மங்களா ஸாஸனம் என்கிற செல்வத்தை மிகப் படைத்த ராமானுஜரோடே அபின்னரான -வேறு படாத -மணவாள மா முனிகள் பூமியில் இறையும் குறையின்றி வாழ்ந்திடுக–என்றாய்த்து தேசமும் தேசிகர்களும் வாழ்த்திப் போருவைத்து —

——————–———————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ உ வே வேங்கட கிருஷ்ணன் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பிரதிவாதி பயங்கர அண்ணண் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading