ஸ்ரீ கலியனும் ஸ்ரீ அமுதனும்–ஸ்ரீ திரு ஏழு கூற்று இருக்கை வியாக்யானம் —

ஸ்ரீ சார்ங்க பாணி -மூலவரையும் உத்சவரையும் சொல்வார்கள்
வில்லே அடையாளம் சாப லதா -சபலம் மனஸ் -தோஷம்
கொடி போன்ற வில் -சார்ங்க பாணி உன்னைக்கொண்டாட
தோஷமே உன்னிடம் இருந்தால் குணமாகும்
விஷமே அம்ருதம் ஆனதே
அவன் இடம் சேர நமது தோஷங்களைப் போக்கி அருளுவான்

இயல்வாகவே ஸ்ரீ கலியன் அமுதன் இடம் ஆழ்ந்து -சாரங்கம் அம்சமே இவர்
முதல் மங்களா சாசனம்
திருமணம் கொல்லையில் -வயலாலி மணவாளன் -அரசன் -அரச மரத்தில் மந்த்ர அரசை ஆலி நாட்டு அரசனுக்கு -வாடினேன் வாடி ஆரம்பித்து
ஆவியே -குடந்தையே தொழுது அடுத்த
ஆறு அங்கம் கூட அவதரித்தவர் -ஆறு பிரபந்தங்களிலும்
திரு நெடும் தாண்டகம் -நிகமனத்திலும் -தண் குடந்தை கிடந்த மாலை அடி நாயன் நினைந்திட்டேனே
உபக்ரமம் உபஸம்ஹாரம் -அப்பியாசம் -எங்கும் அமுதன் தானே

பெரிய திருமொழியில் -களைப்பு ஏற்படும் பொழுது -அமுதன் காட்சி கொடுத்து -இதுவே அவருக்கு coffee
பத்ரிகாஸ்ரமம்
சள கிராமம் அடை நெஞ்சே
திரு நீர்மலை
திருவாலி திருநகரி -ஓ மண் அளந்த -என் தனக்கு துணையாளன்
நாச்சியார் கோயில் -குடந்தைக்கிடந்தானை நறையூரில் கண்டேனே
திருச்சேறை
தேர் அழுந்தூர்
திரு நாகை-

நான்காம் பதிகம் மட்டுமே இல்லை

கோயிலே ஐஸ்வர்யம் பிரசித்தம் -குடந்தையில் சவுந்தர்யம் பிரசித்தம் -நஞ்சீயர் நம்பிள்ளை-

ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் -25-பாசுரங்கள் மங்களாசாசனம்

சூழ் புனல் குடந்தையே தொழுது என் நாவினால் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் –1-1-2-

சூழ் புனல் குடந்தையே தொழுமின் நற்பொருள் காண்மின் பாடி நீர் உய்ய்மின் நாராயணா வென்னும் நாமம் –1-1-7-

ஊரான் குடந்தை யுத்தமன் — தாரா வயல் சூழ்ந்த சாளக்கிராமம் அடை நெஞ்சே–1-5-4-

நன்றாய புனல் நறையூர் திருவாலி குடந்தை தடந்திகழ் கோவல் நகர்
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற் கிடம் மா மலையாவது நீர் மலையே–2-4-1-

தண் குடந்தை நகராளா ! வரை எடுத்த தோளாளா ! என் தனக்கு ஓர் துணையா ளானாகாயே !–3-6-5-

குயிலாலும் வளர் பொழில் சூழ் தண் குடந்தைக் குடமாடீ ! துயிலாத கண் இணையேன் நின் நினைந்து துயர்வேனோ ! !–3-6-8-

தண் குடந்தை நகராளன் ஐவர் க்காய் அமரில் தேர் உய்த்த தேராளன் என் மகளைச் செய்தனகள் எங்கனம் நான் செப்புகேனே –5-5-7-

கொங்கேறு சோலைக் குடந்தை கிடந்தானை நங்கோனை நாடி நறையூரில் கண்டேனே-6-8-9-

கிடந்த நம்பி குடந்தை மேவிக் கேழலாய் யுலகை இடந்த நம்பி —நாமம் சொல்லில் நமோ நாராயணமே—6-10-1-

குடந்தைத் தலைக் கோவினைக் குடமாடிய கூத்தனை எந்தையை எந்தை தந்தை தம்மானை எம்பிரானை எத்தால் மறக்கேனே –7-3-3-

பேரானைக் குடந்தை பெருமானை –காரர் கரு முகிலைக் கண்டு கொண்டு களித்தேனே –7-6-9-

கொந்தார் பைம் பொழில் சூழ் குடந்தைக் கிடந்துகந்த மைந்தா வுன்னை என்றும் மறவாமை பெற்றேனே –8-9-5-

தோடவிழ் நீலம் மணம் கொடுக்கும் சூழ் புனல் சூழ் குடந்தைக் கிடந்த சேடர்கோல் என்று தெரிக்க மாட்டேன் –அச்சோ ஒருவர் அழகியவா –9-2-2-

யமரர் தம் கோனை யாம் குடந்தை சென்று காண்டுமே –10-1-6-

கொங்கார் சோலைக் குடந்தை கிடந்த மால் இங்கே போதுங்கொலோ –10-10-8-

குடந்தை மேவிச் சிறியானோர் பிள்ளையாய் மெள்ள நடந்திட்டு உறியார் நறு வெண்ணெய் யுண்டு உகந்தார் தம்மையே –11-3-4-

உம்மை யுய்யக் கொண்ட கொண்டற் கைம் மணி வண்ணன் தண் குடந்தை நகர் பாடி யாடீர்களே–11-6-9-

உலகம் கொண்ட கோவினைக் குடந்தைமேய குருமணித்திரளை–என் சொல்லிப் புகழ்வர் தாமே.-திருக்குறுந்தாண்டகம் – 6-

தூவி சேரன்னம் மன்னும் சூழ் புனல் குடந்தையானை பாவியேன் பாவியாது பாவியேனாயினேனே.–திருக்குறுந்தாண்டகம் – 14-

தண் காலும் தண் குடந்தை நகரும் பாடித் தண் கோவலூர்ப் பாடி யாடக் கேட்டு –நறையூரும் பாடுவாள் நவில்கின்றாளே. திருநெடுந்தாண்டகம் – 17-

பேர்ப் பாடித் தண் குடந்தை நகரும் பாடி பொற்றாமரைக் கயம் நீராடப் போனாள் –திருநெடுந்தாண்டகம் – 19-

தண் குடந்தைக் கிடந்த மாலை நெடியானை அடி நாயேன் நினைந்திட்டேனே. –திருநெடுந்தாண்டகம் – 29-

நின்னடியிணை பணிவன் வருமிடரகல மாற்றோ வினையே–பொன்னித் தடங்கொண்ட தாமரை சூழும் மலர்ந்த
தண் பூங்குடந்தை –பாம்பணைப் பள்ளி கொண்டான் திருப் பாதங்களே.–திருவெழுகூற்றிருக்கை

காரார் குடந்தை கடிகை கடல் மல்லை ஏரார் பொழில் சூழ் இடவெந்தை நீர்மலை –சிறிய திருமடல் – 73

பொன்னி மணி கொழிக்கும் பூங்குடந்தைப் போர் விடையை தென்னன் குறுங்குடியுள் செம்பவளக் குன்றினை –பெரிய திருமடல் – 114

———–

மூன்று முறை திருநெடும் தாண்டகத்தில்
தண் குடந்தை பாடி -வெப்பம் தவிர்க்க தண்மை –
ஆஸ்ரிதர் இடம் முறை அறிய ஸம்ஸ்லேஷித்த இடம்
தனக்கு ஆக்கின திரு அமுதை திருமழிசைப் பிரானுக்கு கொடுத்து -கலத்தது உண்ட -இதுவே தண்மை
மூன்று முறை -தாப த்ரயங்கள் உண்டே – ஆதி ஆத்மீகம் ஆதி பவ்திகம் -ஆதி தெய்விகம் –

ஸ்ரீ பாஷ்யம் -திருவடியிலே சேவை குறையல் பிரான் அடிக்கீழ் விள்ளாத அன்பன்
தாபத் த்ரய அம்ருதத்வாய -ஸஹ ஏவ அறியப்படுபவன் -அவனை அறிய வேண்டும்

24 திவ்ய பிரபந்தங்களிலே ஒரு திவ்ய பிரபந்தம் முழுவதுமே ஆரா மதனுக்கு -பக்கம் நோக்கு அறியாத பரகாலன்
பாட்டுப்பிச்சன் அரங்கன் -மடல் அவனுக்கே மதிள் உனக்கு
அதில் மற்ற திவ்ய தேசங்களையும் பாடி
அக் குறை தீர்க்கவே திரு எழு கூற்று இருக்கை

அமலனாதி பிரான் -திருவேங்கடத்துக்கும் உண்டே
திருமாலை -மதுரையும் உண்டே
திருப்பள்ளி எழுச்சி -திரு அயோத்யா

———–

ஏழு அடுக்குகள் -இருப்பிடம் -தேர்
ஆழ்வார் எழுவர் மங்களா ஸாஸனம்
வேதம் -கிருஷ்ண யஜுர் -ஸூர்ய நாராயணன் -தேவர்கள் பார்த்து பொங்கும் பரிவு -விழாமல் இருக்க தேர் அமைக்க
பா அணி -ஸப்த சந்தஸ்ஸூ க்கள் -சொல்லால் தேர்
காயத்ரி ஜெகதீ -தேர் சக்கரம்
உஷ்ணிக் பிரஷ்டுப் -இரண்டு தேர் கட்டைகள் bambar
அனுஷ்டுப் பந்தி -இரண்டு குதிரைகள்
ப்ருஹத் தேர் மேடை
சாந்தோரஹம் -தேரில் சஞ்சரிக்கிறான்

கல் தேர் -கர்பக்ருஹம் -குதிரையும் யானையும் கட்டப்பட்ட தேர் -சாகா யானை போல் ஸம்ஹிதா குதிரை போல் -வேதத்தில் உண்டே

மரத் தேர் -சித்திரத் தேர்

சொல் தேர் இது
ஆசு கவி மதுர கவி விஸ்தார கவி சித்ர கவி -நாலு கவி

ஸம்ஸார துக்கம் -பாரமாய் பழ வினை பற்று அறுக்க ஆராவமுதன் இடம் சரணாகதி

சார்ங்க அம்சம் -சார்ங்க பாணி
நம்மாழ்வார் -ஆராவமுதே -சரணாகதி பண்ணிக் காட்டி அருளினாரே

தேர் தட்டில் தானே சரம ஸ்லோக உபதேசம் -அதனாலும் -தேரில் உள்ள பெருமாள் திருவடிகளைப் பற்றுகிறார்

சொல் தேரில் அமர்த்தி சரணாகதி -ரத பந்தனம்

46 வரிகள்
36 வரிகள் தேர் போன்று
10 வரிகள் அமுதனைப்பற்றி -தசாவதாரம் அமுதன்
ப்ருஹதீ பா வகையில் -36 உண்டே

3-5-7-9-11-13-13-பெட்டிகள் ஏழிலும்

அமுதனின் 18 குணங்களும் உண்டே இதில் -18- அத்யாயம் –சரண்யத்வம்

18 குணங்கள் விவரணம், அதிலும் ஸர்வ போக்யத்வம் , தன் திருமேனி அழகை தானே பருக விழைந்து உத்தான சயனம் -பின்னழகு ரசித்து பின் முன் அழகை ரசிக்க,ஆராவமுதே

1-காரணந்து த்யேய -ஆதி மூலம் -ஒரு பேர் உந்தி –அயனை ஈன்றனை

2- விரோதி நிரஸனம் -தோட்டம் வைத்தவன் தண்ணீர் விடுவான் -இலங்கை செற்ற பெருமாள்

3-ஆஸ்ரித ரக்ஷணம் -ஒரு மாணாகி –அளந்தாயே

4-ஆபத் ஸஹத்வம் -தொழும் காதல் வேழத்தை –மடுவில் –

5-பல பிரதன் -முத்தீ -கர்ம ஞான பக்தி யோக -உபாயாந்தர பரர்களுக்கும் பலன் தருபவன் நீயே –

6-பரத்வம் -ஆறு பொதி சடையோன் -அறிய முடியாத -ஈஸ்வரோஹம் -அதுவும் அவனது இன்னருளே
சின் முத்திரை -கட்டை விரலை தானாக கீழே இறக்க முடியாதே -மற்ற விரலை கீழே தானாக தள்ளி

7-ஏழு உலகு எயிற்றிலே கொண்டாயே -ஸம்ஸார உத்தாரகத்வம் -ஸுசீல்யம் ஸுலப்யம்

8-இனிமை -போக்யத்வம்-ஹிதம் சொல்லும் பொழுதும் பிரியமாக -ஆறு சுவைப் பயனும் நீயே
பஞ்சாயுதங்களும் அமுதனும் -சுடர் விடும் ஐம்படை

மூலவர் உத்சவர் பின் அழகைப்பார்த்தி மயங்கி படுக்க -கிடந்தவாறு எழுந்து -சாக்கி -முன் அழகை
ஆராவமுத ஆழ்வான் -யாருக்கு சொல்லாமல் -தனக்கும்
9-சர்வ போக்யத்வம் உண்டே

ஆபத்தைப் போக்கும் அழகு -ஐம்படை ஏந்தி ரஷிக்கத் தயாராக உள்ளான் –

வில் இருக்கும் அம்பு இருக்காதே
பாபங்களை நோக்கி புறப்பட்டு திரும்பாமல் இருக்கிறதாம்

10-ஸர்வ பல ப்ரதத்வம் –நான்கு தோள் முந்நீர் வண்ணா -நான்கு புருஷார்த்தங்கள்-maal இதனாலே அவன் பெயர் -திரு மால்

11- ஸ்ரீ யபத்வம் -வருட -யோக நித்திரை -அறி துயில் அமர்ந்தனை

12- ஸூலப ஆராதனை -வர்ணாஸ்ரம கர்ம அனுஷ்டானம் திரு ஆராதனமாகக் கொண்டாயே

13- சர்வ சரீரீ -ஐம் பெரும் பூதமும் நீயே –ஆத்மா சரீரம் -அந்தர்யாமி -உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்

14- தடைகளைத் தகர்த்து -ஏழு விடை செற்றாயே –

15-ஸாஸ்த்ர யோநித்வாத் –சாஸ்திரம் ஆச்சார்ய முகமாகவே கற்க -மறை -ஆறு வகை சமயமும் அறிய முடியாத நிலை

16-வேதாந்த தத்வ சிந்த்தாம் -மஹா லஷ்மி – ஐம்பால் ஓதி திருவை ஆகத்து இருத்தி –

17- சித் அசித் விசிஷ்டா -ஏகமேவ அத்விதீயம்

18- ஸுலப்யம் -சீரார் செந்நெல் கவரி வீசும் -செல்வம் மல்கும் திருக் குடந்தை –ஞானம் பக்தி வைராக்யம்

தென் -அழகான
வைதிக விமானம்
வேத கோஷம் ஒலிக்கும்
ஆடு அரவு -அமுதம் அனுபவித்து ஆடிக்கொண்டே இருக்கும் பரமன்
சிவனும் பல வடிவங்களில் -மதியத்தில் இவனே -ஸ்பஷ்டம் பரத்வமும் ஸுலபயமும்
நின் அடி இணை பணிவேன் வரும் இடர் -வந்து கொண்டே இருக்குமே -அகல -பாற்று –
உன்னையே அனுபவிக்கும் படி அருள வேணும் –

————-

 

எழுவர் -மங்களா சாசனம்
நாலாயிரம் நாத முனிகளுக்கு அளிக்க உதவிய ஆழ்வான்
அகஸ்தியர் -ஏழு கடல் நீரைப்பருகி -ஆசமனம் -சாரமாக அமுதம் –
தாயார் இடம் -குடம் -தானே தாயார் -குட முனிவர் –

பெண் ரஹஸ்யம் வைக்க மாட்டாமல் குட மூக்கு -கும்ப கோணம் -குடந்தை –
அனைத்து மொழிகள் வார்த்தைக்குள் ஆராவமுதமே தானே சாரம் –
தேவர்களும் அறியாத -சமஸ்க்ருதம் கூட அறிய மாட்டாமல்

ஆரா அமுதே -ஆழ்வார் ஈடுபட்டு -ரஹஸ்யம் வெளி வந்ததே –
அருளிச் செயல்களையும் வெளியிட்ட வைபவம் -13-ஆழ்வார் -இவர் தானே –
ஆராவமுத ஆழ்வார் ஆதரித்த பேறுகளை -மா முனிகள் –

பூதம் பேய்
பெருமை
பிணி தீர்க்கம்
அடியார் வசம்
வாத்சல்யம்

திரு மங்கை -சார்ங்கம் அம்சம் -வில் பிடித்த இவன் இடம் அபி நிவேசம் இருக்கச் சொல்ல வேண்டுமோ
ஆவியே –குடந்தையே தொழுது -தொடங்கி –
தண் குடந்தை கிடந்த மாலை நெடியானை அடி நாயன் நினைந்திட்டேனே
ஆறு பிரபந்தங்களிலும் மங்களா சாசனம் –
ஆரா இன்னமுத்தை
குடந்தை -அச்சோ ஒருவர் அழகிய வா

அமுதன் புத்துணர்ச்சி கொடுத்து பெரிய திருமொழி முழுவதும்
திரு எழு கூற்று இருக்கை -ஒரே திவ்ய தேசம் -பக்கம் நோக்கு அறியான் பரகாலன்
46-வரிகள் -ஏழு அடுக்கு
மேல் மூன்று பெட்டிகள் –அப்புறம் -5-7-9-11-13-13-பெட்டிகள்-
36 வரிகள் பெட்டிகளுக்குள்
பின்பு 10 வரிகள் – திவ்ய தேசம் வளப்பம்
கொடி -கும்பகோணம் வெற்றிலை இன்றும் சிறப்பு உண்டே
செல்வம் மல்கும் தென் திருக் குடந்தை –ஆடு அரவு அமளியில் அறி துயில் அமர்ந்த
பரமன் நின் அடி இணை பணிவன்-இடர் அகல -சரணாகதி பண்ணி அருளுகிறார் –

ஏழு அடுக்கு -ஏழு ஆழ்வார்கள் –
வேதம் -ஏழு சந்தஸ் ஸூக்கள் -உண்டே
காயத்ரி அனுஷ்டுப் பிருஹத் ஜகதி -இவையே தேர் -தைத்ரியம்
காயத்ரி ஜகதி இரண்டும் தேர் சக்கரம்
உஷ்னுப் த்ருஷ்டுப் தேர் கட்டைகள்
அனுஷ்டுப் பங்க்தி குதிரை
பிருஹத் தேர் மேடை –

கல் தேர் மர தேர் சொல் தேர் மூன்று தேர்கள் மதனுக்கு
கர்ப்ப க்ருஹம் -குதிரையும் யானையும் உண்டே -அழகும்
வைதிக விமானம் -வேதம் இரண்டு பகுதிகள் -சாகை -யானை -சம்ஹிதை -குதிரை போல் வேகமாக –
இத்தை உணர்த்தவே இரண்டும் இங்கு
சித்திரை தேர் -மர தேர் -பிரசித்தம் –

ஆண்டாள்
ஆராவமுதனின் சூடிக் களைந்த மாலை -குடந்தை கிடந்த குடமாடி –ஆசைப்பட்டாள் –
கோதாஸ்தவம் -ஆசு கவி -அமுதன் இவளுக்கு -சாரங்க பாணிக்கு துல்ய
கமலை -அமுதனாம் அரங்கனுக்கு மேலை இட்டாள் வாழியே –

பெரியாழ்வார் –பிள்ளைத் தமிழ் -ஆண் குழந்தை -பத்து பருவங்கள் -சப்பாணி -நான்காவது —
ஒன்பதாவது மாதம் உட்கார்ந்து கை கொட்டும்
நான்கு நிலா –
வாசப்படி -படித்தால் மேலே ஏறலாம் -ரேழி -நடை பாதை -கூடம் -சத்சங்கம் -மநம் பக்குவம் -பூஜ -முற்றம்
தூணிலா –முற்றத்து –
வா நிலா அம்புலி வா என்று -நிலா -இங்கு நிலவுகின்ற அம்புலி
நீ நிலா -நீ நின்று சப்பாணி

நம்மாழ்வார் -ஆராவமுதே -அளவு மீறினால் அமுதமும் நஞ்சு இல்லையே இங்கு
கும்பேஸ்வரர் -பின் இருந்து -பின் அழகை பார்க்கவே
ச ஏகதா பவதி -பல வடிவங்கள் -சுற்றி பல ஈஸ்வர கோயில்களில் பருகிக் கொண்டு –

யாருக்கு ஆராவமுதே -சொல்லாமல்
இன்னார் இனையார் இல்லாமல் தனக்கும் கூட -ஆராவமுதன் –

கருடனாக தானே இருந்து -உபய நாச்சியாரும் தானாகவே -ஆதி சேஷனாக இருந்து
உத்சவர் கையில் சார்ங்கம் -மூலவர் திரு நாமம் சாரங்க பாணி
த்யான ஸ்லோகம் -வந்தே சயான போகே சார்ங்க பாணி –
ஆராவமுதன் முன் அழகை பார்க்க எழுந்து இருந்து எட்டிப் பார்த்தான் -திரு மழிசை பிரான் வியாஜ்யமாக –
தானே ஆழ்ந்து ஆழ்வான் திரு நாமம் பெற்றான் -இது இரண்டாவது காரணம்
கீழே நாலாயிரம் அருளியதால் ஆழ்வார் பார்த்தோம்
நெல்லும் கவரி வீசும்படி -உடலும் உருகும் படி
ஏரார் -அழகு குடி கொண்டு கிடந்தாய் –
ஐஸ்வர்யம் கோயிலில் பிரசித்தம் இங்கு சவ்ந்தர்யம் மாதுர்யம் அழகு பிரசித்தம்

வேறே ஒருவர் மூலம் மோக்ஷம் காலனைக் கொண்டு மோதிரம் கொள்ளுவது போல்
பேறு தராமல்
உலகம் -உண்ட -தாயார் உடன்
ராஜ கோபாலனாக வந்து அருள –
சூழ் விசும்பில் -குடந்தை எம் கோவலன் குடி அடியாருக்கே
ஸ்ரீ வித்யா ராஜகோபாலனாக –

திரு மழிசை பிரான் -மூன்றாவது காரணம் -இவரால் –
அமுது செய்த போனகம் விரும்பி அமுது செய்தானே
நடந்த கால்கள் –வாழி -கேசனே –
உத்தான சயனம் -பக்த பராதீனன்
ஆழ்வாரின் வார்த்தையில் ஆழ்ந்து -இது நான்காவது காரணம்
கோ நிலாவ -நந்தன் மகிழ கொட்டாய்

பேயாழ்வார்
சேர்ந்த திருமால் –30-கடல் -குடந்தை -வேங்கடம் -நேர்ந்த என் சிந்தை நிறை விசும்பு
வாய்ந்த மறை பாடகம் ஆதி சேஷன் திருத்துழாய் –ஒன்பது இடங்கள்
மனசுக்கு வருவது புருஷார்த்தம் -திவ்ய தேசம் -transit places -அங்குத்தை வாசம் சாதனம் இங்குத்தை வாசம் சாதகம்
வாத்சல்யம் காட்டி அருளி –
அத்தி வரதர் உணர்த்தும் தத்வம் -அந்த களேபர -பாசி பிடித்த அனந்த சிராஸ் –
தூய வைகுண்டம் போல் கர்ப்ப க்ருஹம் -வெளி வந்து-உணர்த்தி விட்டு மறைகிறார்

பூதத்தாழ்வார்
எங்கள் திருமால் -செங்கண் -புண்டரீகாக்ஷத்வம் -மைத்தடம் கண்ணினாய் –
இருவருக்கும் பார்த்து கொண்டே இருப்பதால் விளைந்த விகாரம்
நெடு மால் -திரு மார்பா -திருவடி ரேகைகளாலே பரம் பொருள் ஆகிறான் –
இமையோர் தலைமகன் -எங்கள் பெருமான் -அவற்றை விட்டு
பொங்கு அரவணை மேல் குடமூக்கில் கோயிலாகக் கொண்டு –

பாரம்யம் கலியன் -பெருமையைப் பாடி அருளி
நதார்த்தி சமநம் -அடி பணிந்த அணியார் துயர் ஆர்த்தி போக்கு ஆண்டாள்
தஸ்யா பிதா ஸுசீல்யம் -வடக்கு பிரகாரம் தூணிலா முற்றம் -ஆண்டாள் சந்நிதி
மாதுர்யம் நம்மாழ்வார்
பக்தேஷு விதேயம் -ஆஸ்ரித பரதந்த்ரன்
மஹத் பூதவ் -வாத்சல்யம் -ஸுலப்யம் -accessibility -நாம் பற்றும் படி கோயில் கொண்டு
நீராக கலப்பது ஸுசீல்யம் -பெரியாழ்வார் காட்டி அருளி –
இப்படி பிரதானம் ஏழும்-நதிகள் -சுரங்கள் ஏழு காண்டம் -ஏழு நாட்கள் -ஸப்த பிரகாரம் -ஸப்த கிரி போல்

பெருமை
பக்தர் பிணி தீர்க்கும் கோதை பாட
அருமை எளிமை
ஆராவமுதாய இனிப்பதாய்
அடியார் வசம்
வாத்சல்யம்
திரு உடனே நாம் பற்றும் படி நின்ற வாற்றை இயம்பினாரே -இப்படி ஏழும்

————

வாழி பரகாலன் வாழி கலிகன்றி
வாழி குறையலூர்  வாழ் வேந்தன் -வாழியரோ
மாயோனை வாள் வலியால் மந்திரம் கொள் மங்கையர் கோன்
தூயோன் சுடர் மான வேல் —தனியன் –

எம்பெருமானுக்கு திரு மதிள் போல் அரணாய் இருப்பதான ஆறு பிரபந்தங்கள்
செய்து அருளின ஆழ்வாருடைய திரு நாமங்கள்
பலவற்றையும் சொல்லி அவரை வாழ்த்துகிறது இதில் –

பிரத்யசேஷ குரவஸ் ஸ்துத்யா-என்னக் கடவது இறே –
ஆழ்வார்கள் அர்ச்சாவதாரமாய் எப்போதும் எல்லாருக்கும் பிரத்யஷராய் இறே இருப்பது –
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர்-

வாழி பரகாலன் –
பகவத் த்விட்டுக்களான பிரதிகூலருக்கு காலரானவர் வாழி

வாழி கலிகன்றி-
கலி தோஷ நிவாரகர் வாழி

வாழி குறையலூர் வாழ் வேந்தன் —
திருக் குறையலூரை அவதார ஸ்தலமாக உடையராய் –
அது வாழும் படிக்கு அத்தை நோக்குகிற ராஜா என்னுதல்-
அங்கே வாழுகிறவர் என்னுதல்

வாழியரோ–மாயோனை வாள் வலியால் மந்திரம் கொள் மங்கையர் கோன் தூயோன் சுடர் மான வேல் -என்று
ஆழ்வாரையும்
அவர் திருக் கையிலே வேலையையும் ஒருகாலே ஆசாசித்த படி –

மாயோனை –
அரங்கத்து அரவணைப் பள்ளி கொள்ளும் மாயோனை இறே வாள் வலியால் மந்திரம் கொண்டது –
தென்னரங்கன் தன்னை வழி பறித்த வாளன் இறே –
கைப் பொருள்கள் முன்னமே கைக் கொண்டவர் இடத்திலே இறே மந்திரப் பொருள் கைக் கொண்டது –
மந்திரத்தைப் பற்றி இறே மந்திரம் கொண்டது

மங்கையர் கோன்-
மங்கையர் மன்னன் இறே

தூயோன் –
தூய்மை என்னும் பாஹ்யாப்யந்தர சுத்தியை யுடையவர்

அங்கமலத் தட வயல் சூழ் ஆலி நாடன் அருள் மாரி யரட்டமுக்கி யடையார் சீயம்
கொங்கு மலர்க் குழலியர் வேள் மங்கை வேந்தன் கொற்ற வேல் பரகாலன் கலியன் -என்று
தாமே தம் திரு நாமங்களைக் கூறினார் இறே

சுடர்மான வேல் –
தேஜோ ரூபமான மான வேல் –
பெரிய வேல்
திருமங்கை மன்னன் எடுக்கும்படியான வேல் –

வாழியரோ –
இத்தால் ஆழ்வாரோ பாதி
ஆயுதமும் ஆசாஸ்யம் என்றபடி –
நின் கையில் வேல் போற்றி என்னக் கடவது இறே
இது தான் கொற்ற வேல் ஆகையாலே வெற்றி வேலாய் இருக்கும் –
இதன் விஜயத்தை வேண்டுகிறது —ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர்

————————————————————————–

அவதாரிகை -1-
சம்சார ஸ்வபாவ அனுசந்தானத்தாலே மிக அவசன்னரான ஆழ்வார்
அவற்றின் பரிகாரமாக
அவனைக் கைகளால் தொழுது
மனசாலே நினைத்து
வாயாலே பேசி திருவடிகளிலே விழுந்தார் –

இங்கனே கிடந்தது நோவு பட உமக்கு அபேஷிதம் என் என்ன
பகவத் விரோதியாகிற சம்சாரத்தை வாசனையோடு போக்கித் தர வேணும் -என்றார்

அத்தை நம்மால் செய்யல் ஆவாதே என்ன

உன்னை ஒழிந்த சகல பதார்த்தங்கள் உடைய ஸ்திதி பிரவ்ருத்தி நிவ்ருத்தி எல்லாம் உனது அதீனமே
சர்வ சமாஸ்ரயநீயன் ஆகவும்
ஆபத் சகன் ஆகவும்  இருக்கிற நீயே
என்னுடைய சம்சாரத்தைக் கழித்து அருளா விடில்
என்னால் கழித்துக் கொள்ளப் போகாதே -என்று
திருவடிகளிலே விழுந்து தம் தசையை அறிவிக்கிறவராய் -இருக்கிறது –

அவதாரிகை -2-
முதலிலே கரண களேபர விதுரமாய்
அவிஜ்ஞ்ஞேய ஸ்வரூபமாய்
அசித் கல்பமாய் இருக்கிற இவற்றை -அர்த்தித்வாதி நிரபேஷமாக
உன்னுடைய நிரவதிக தயையாலே உண்டாக்கின நீயே அருளிக் கடாஷியாயகில்
அமூநி புவநாநி பாவித்தும் நாலம்-ஸ்தோத்ர ரத்னம் -10–
முதலிலே இவை யுண்டாகவே மாட்டாது
சத்தையே தொடங்கி உன்னதீனமான பின்பு உன்னை ஒழிய இவற்றுக்கு ஒரு பிரவ்ருத்தி நிவ்ருத்தி கூடாது
என்னும் இடம் சொல்லவும் வேணுமோ

இது இல்லாத வன்று உண்டாக்கின நீயே இதுக்கு ஒரு போக்கடி பார்க்கை ஒழிய
நான் ஓன்று செய்து உன்னைப் பெறுகை என்று ஒரு பொருள் உண்டோ-

சரணா மறை பயந்த -தாமரை யானோடு
மரணாய மன்னுயிர்கட்கெல்லாம் -அரணாய
பேராழி கொண்ட பிரானன்றி மற்று அறியாது
ஓராழி சூழ்ந்த வுலகு –முதல் திரு -60-என்றபடி

ஜ்ஞானாதிகனான சதுர முகனோடே கூட உத்பத்தி விநாசாதிகளுக்கு கர்மீ பவிக்கிற சகல சேதனர்க்கும்
ரஷை என்று பெற்ற பெற்றவை எல்லாம்
நம் மேல் வினை கடிவான் என்றபடி

ஆஸ்ரித விரோதி நிரசனத்துக்காக கையிலே திரு ஆழியைத் தரித்துக் கொண்டு இருக்கிற
உபகாரகனான அவன் பார்க்கில் பார்க்கும் இத்தனை அல்லது
வேறு கடல் சூழ்ந்த பூமியில் உள்ள சேதனர் தங்களுக்கு ரஷை தாங்கள் அன்றியார்கள்

அவனை ஒழிய இவை அறியாது ஒழிய வேண்டுகிறது என் என்னில் –
நைவ கிஞ்சித் -ஜிதந்தே -1-6-இத்யாதி –
உனக்கு-பரோஷமாய் இருப்பது ஓன்று இல்லை
எத்தனை யேனும் ஜ்ஞானாதிகரராய் இருப்பாருக்கும் நீ கண்ணுக்கு விஷயம் ஆகாய்
உனக்கு கை புகராதது ஒன்றும் இல்லை –
எத்தனை யேனும் அதிசய ஜ்ஞானாதிகர்க்கும் நீ கை புகுந்தாய் இராய்-

இத்தால் சொல்லிற்று ஆயிற்று என்ன வென்றால்
ஒருவனுக்கு கண்ணும் தோற்றாதே
காலும் கடை தாராதே இருப்பது

ஒருவனுக்குக் கண்ணும் தோற்றி
காலும் கடை தருவது

இப்படி இருந்தால் யார் வழி காட்டிக் கொடு போவார்கள்
நான் அஜ்ஞனாய் அசக்தனாய் இருந்தேன் -நீ சர்வஜ்ஞனாய் சர்வ சக்தனாய் இருந்தாய்
இங்கனே இருந்த பின்பு நீ என் கார்யம் செய்து தலைக் கட்டும் இத்தனை போக்கி
நான் என் கார்யம் செய்து தலைக் கட்டுகை என்று ஒரு பொருள் உண்டோ என்கிறார்-

நீ தந்த ஜ்ஞானம் கொண்டு அறியப் பார்த்தாலும்
அறிந்த படி செய்து தலைக் கட்டுகைக்கு ஈடான சக்தி எனக்கு யுண்டோ –

ஆழ்வாருக்கு முதலிலே செப்பேட்டைக் கையிலே கொடுத்து நிதியைக் காட்டிக் கொடுப்பாரைப் போலே
திரு மந்த்ரத்தையும்
அதில் அர்த்தத்துக்கு எல்லை நிலமாகக் கோயில்களையும் காட்டிக் கொடுக்கக் கண்டு
க்ருதக்ருத்யராய் –
சம்சாரத்தையும் பரம பதத்தையும் ஒக்க மறந்தார்

ஆழ்வாரைப் பார்த்து எம்பெருமான் -நீர் இருக்கிறது சம்சாரத்தில் கிடீர் -என்று அருளிச் செய்ய –
அதன் கொடுமையை அனுசந்தித்து ஆற்றாமையாலே
மநோ வாக் காயங்களாலே எம்பெருமானை அனுபவித்து ஆற்றப் பார்த்தார்

அது பண்டையிலும் இரட்டையாய் மிகவும் ஆற்றாமையாலே எம்பெருமானுடைய சரண்யதவத்தைப் பேசிக் கொண்டு
அதுக்கு எல்லை நிலமான திருக் குடந்தையில் ஆராவமுத ஆழ்வார் திருவடிகளையே
எத்தசைக்கும் இஷ்ட பிராப்திக்கும் அநிஷ்ட நிவாரணத்துக்கும் உபாயமாக பற்றி முடிக்கிறார் –

சித்திர கவி வகைகள்
சக்ரபந்தம் -பத்ம பந்தம் -நாக பந்தம் -ரதபந்தம்

————————————————————————–

ஒரு பேர் உந்தி இரு மலர்த் தவிசில் ஒரு முறையானை ஈன்றனை –
ஒரு முறை இரு சுடர்  மீதினிலியங்கா மும் மதிளிலங்கை இரு கால் வளைய ஒரு சிலை
ஒன்றிய ஈர் எயிற்று அழல் வாய் வாளியின் அட்டனை
மூவடி நானிலம் வேண்டி முப்புரி நூலோடு  மானுரியிலங்கு மார்வினன் இரு  பிறப் பொரு மாணாகி
ஒரு முறை  ஈரடி மூவுலகு அளந்தனை
நாற்றிசை நடுங்க அஞ்சிறைப் பறவை ஏறி நால் வாய் மும்மதத் திரு செவி ஒரு தனி வேழத் தரந்தையை
ஒரு நாள் இருநீர் மடுவில் தீர்த்தனை
முத்தீ நான்மறை ஐவகை வேள்வி அறு தொழில் அந்தணர் வணங்கும் தன்மையை ஐம்புலன் அகத்தினுள் செறுத்து
நான்குடன் அடக்கி முக்குணத்து இரண்டவை அகற்றி  ஒன்றினில்
ஒன்றி நின்று ஆங்கு இரு பிறப்பு அறுப்போர் அறியும் தன்மையை
முக்கண் நால் தோள் ஐ வாய் அரவொடு ஆறு பொதி சடையோன் அறிவரும் தன்மைப் பெருமையுள் நின்றனை
ஏழு உலகு எயிற்றினில்  கொண்டனை
கூறிய அறுசுவைப் பயனும் ஆயினை
சுடர் விடும் ஐம்படை அங்கையுள் அமர்ந்தனை
சுந்தர நால் தோள் முந்நீர் வண்ண நின்னீரடி யொன்றிய மனத்தால்
ஒரு மதி முகத்து மங்கையர் இருவரும் மலரன அங்கையின் முப்பொழுதும் வருட அறி துயில் அமர்ந்தனை
நெறி முறை நால் வகை வருணமும் ஆயினை
மேதகு மைம் பெரும் பூதமும் நீயே
அறுபத முரலும்   கூந்தல் காரணம் ஏழ் விடை யடங்கச் செற்றனை
அறுவகைச் சமயமும் அறிவரு நிலையினை ஐம்பால் ஓதியை ஆகத்து இருத்தினை
அறமுதல் நான்கவையாய் மூர்த்தி மூன்றாய் இருவகைப் பயனாய் ஒன்றாய் விரிந்து நின்றனை

குன்றாமது மலர்ச்சோலை வண் கொடிப் படப்பை
வரு புனல் பொன்னி மா மணி யலைக்கும்
செந்நெல் ஒண் கழனித் திகழ்வன முடுத்த
கற்போர் புரி செய்கனக மாளிகை
நிமிர் கொடி விசும்பில் இளம் பிறை துவக்கும்
செல்வம் மல்கு தென் திருக் குடந்தை
அந்தணர் மந்திர மொழியுடன் வணங்க
ஆடரவமளியி லறி துயில் அமர்ந்த பரம
நின்னடியிணை பணிவன் வருமிடர் அகல மாற்றோ வினையே –

தனிப்பாடல் –
இடம் கொண்ட நெஞ்சத்து இணங்கிக் கிடப்பன என்றும் பொன்னித்
தடம் கொண்ட தாமரை சூழும் மலர்ந்த தண் பூம் குடந்தை
விடம் கொண்ட வெண் பல் கருத்துந்தி செங்கண் தழல் உமிழ் வாய்
படம் கொண்ட பாம்பணைப் பள்ளி கொண்டான் திருப் பாதங்களே

————————————————————————–

வியாக்யானம் -1-

ஒரு பேர் உந்தி இரு மலர்த் தவிசில்  ஒரு முறையானை ஈன்றனை –

ஒரு பேர் உந்தி
வ்யதிரிக்த சமஸ்த வஸ்துக்களுக்கும்
அத்விதீய காரணமாக
பரப்புடைய திரு நாபியிலே

இரு மலர்த் தவிசில்
அப் பரப்பு அடங்கலும் கண் செறி இட்டால் போலே
பெரிய திகழ்கிற மலராகிய ஆசனத்திலே

ஒரு முறையானை ஈன்றனை
ஒரு கால் விசஜாதிய ஜன்மாவான சதுர் முகனை உண்டாக்கினான்-

ஒரு கால் என்றாலும்
ப்ரவாஹ ரூபேண நித்தியமாய் இருக்கும் இறே-நா வேஷஸே-ஸ்தோத்ர ரத்னம் -10-

ஒரு பேர் உந்தி —
ஜகத்தை பிரளயம் கொண்ட காலத்திலே
நிர்ஹேதுக கிருபையாலே
இவற்றின் உடைய சத்தையை உண்டாக்கினவனே
பிரதான ஆதியாய் திரு நாபி

இரு மலர்த் தவிசில்-   –
பெரிய இதழ்களை உடைய தாமரையிலே

ஒரு முறையானை ஈன்றனை –
இவற்றின் உடைய சத்தாதிகளை உண்டாக்கின உனக்கே
பரம் அன்றோ எல்லாரையும் ரஷிக்கிறது

நீ உண்டாக்கின இவற்றின் பிறப்பை அறுக்க உனக்கு அரிதோ   —

————————————————————————–

வியாக்யானம் -2-

ஒரு பேர் உந்தி இரு மலர்த் தவிசில் ஒரு முறையானை ஈன்றனை –

நாம ரூப விபாஹா அனர்கமாய் இருக்கிற இத்தை
விபதமமாக்கி
சூஷ்ம ரூபேண அவஸ்தைகளைப் பிறப்பித்து
மஹானாக்கி
அஹங்காரமாக்கி-
தன் மாத்ரைகள் ஆக்கி –
பூதங்கள் ஆக்கி –
பௌதிகமான வர்ண சிருஷ்டி யளவும் வரப் பண்ணி

பின்னை அவ்வருகு உண்டான தேவாதி காயங்களை -அடங்கலும் அவன் முகத்தாலே பண்ணுவதாக
முதலிலே சதுர் முகனை யுண்டாக்கினான் ஆயிற்று

முன்பு உள்ளவை எல்லாம் தானே கை தொட்டுச் செய்து
பின்பு சதுர் முகனை அதிஷ்டித்து நின்று செய்வானாகப் பார்த்தான் –

முன்பு அசித்தைக் கொண்டு கார்யம் கொண்டதோடு பாதி
இவனைக் கொண்டு கார்யம் கொள்ளப் பார்த்ததோடு
வாசி அற்று இருக்கிறதாயிற்று இவனுக்கு –

பாரதந்த்ர்யத்தில் வந்தால் இவனுக்கும் அசித் சாம்யம் உண்டு –
சேதனரான வாசியால் பெறுகிற ஏற்றம் கார்யத்துக்கு
கடவான் அவனே என்று அறுதி இட்டு இருக்கை யாயிற்று

————————————————————————–

ஒரு முறை இரு சுடர் மீதினிலியங்கா மும் மதிளிலங்கை இரு கால் வளைய
ஒரு சிலை ஒன்றிய ஈர் எயிற்று அழல் வாய் வாளியில் அட்டனை-

வியாக்யானம் -1–
தான் உண்டாக்கின பயிருக்குக் களை பறிப்பானும் தானே யானால் போலே
ஸ்ருஷ்டமான ஜகத்தை அழிவு செய்யும் ராஷசரை நிரசிப்பானும் தானே —

ஒரு முறை -ஒரு பர்யாயம்

இரு சுடர் -சந்த்ராதித்யர்கள்

மீதினிலியங்கா -மேலே சஞ்சரிக்கப் பயப்படும்படியாய் –

மும் மதிளிலங்கை-கிரி துர்க்க ஜல துர்க்க வன துர்க்க என்கிற
மூன்றையும் உடைத்தான நினைத்தாற்கு அஞ்ச வேண்டும் படியான ராஷசர்
குளவிக் கூடு சேர்ந்தால் போலே சேர்த்து அம்மணக் கூத்தடிக்கும் தேசம் –

இரு கால் வளைய ஒரு சிலை ஒன்றிய ஈர் எயிற்று அழல் வாய் வாளியில் அட்டனை-
இரண்டு கோடியும் வளைந்து நிற்கும் பிரதானமான ஸ்ரீ சார்ங்கத்திலே பொருந்தி –
இரண்டு எயிற்றையும் யுடைத்தாய் -நெருப்பை உமிழா நின்றுள்ள சரத்தாலே கட்டுப் பொகட்டாய்-

வாளியில் அட்டனை -ப்ரஹ்ம சிருஷ்டியைப் போல் அன்றியே –
பத்தும் பத்தாக அம்பால் எதிர்த்துப்-பிராட்டியினுடைய சம்ஸ்லேஷ விரோதியைப் போக்கினால் போலே
என்னுடைய விரோதிகளையும் போக்க வேண்டும் என்று கருத்து-

—————————————

வியாக்யானம் -2-
பிரிவுக்கு ஹேது பூதனான ராவணனை அழியச் செய்தாள் பிராட்டியோ -நீ யன்றோ –

ஒரு கால் சந்த்ர ஸூர்யர்களும் கூட மேலே சஞ்சரிக்கவும் அஞ்சும்படியாய்
காட்டரண் மலை யரண் நீர் அரண் என்கிற மூன்று வகைப்பட்ட அரணை யுடைத்தாய் இருக்கிற இலங்கையை
வில்லினுடைய கோடி த்வயமும் வளையும் படி
அத்விதீயமான ஸ்ரீ சார்ங்கத்திலே பூட்டப்பட்டு -இரண்டு எயிற்றையும் யுடைத்தாய்
தொடுக்கும் போது அம்பாய் எதிரிகள் மேலே தைக்கும் போது நெருப்பாய்த் தைக்கும் அம்பாலே முடித்தாய்-

அடைந்த அரு வினையோடு அல்லல் நோய் பாவம்
மிடைந்தவை மீண்டு ஒழிய வேண்டில் –நுடங்கு இடையை
முன் இலங்கை வைத்தான் முரண் அழிய
முன் ஒரு நாள் தன வில் அங்கை வைத்தான் சரண் -முதல் திரு -59-என்றபடி-

இவ் வாத்மாவுக்கு ஸ்வதஸ் சித்தம் அல்ல –
அய பிண்டத்தையும் அக்னியையும் சேர்த்து வைத்தால் போலே
அன்யோன்ய சம்யோகத்தாலே
அதினுடைய பரமாணுக்கள் ஸூஷ்ம ரூபேண அசித்தில் வந்து சங்க்ரமிக்கை யினாலே யாதல்-அன்றிக்கே –
அதனுடைய குணத்தை பஜிக்கையினாலே யாதல் –
அதினுடைய ஔஜ்வல்யத்தையும் வர்ணத்தையும் உடைத்தாய் இருக்குமா போலே
நித்தியமான ஆத்ம வஸ்து அநாதியாய் உள்ள அசித் சம்யோகத்தாலே
அந்த அசித்திலே அஹம் அபிமானத்தைப் பண்ணும்படி பலிக்கிற-அவித்யா கர்ம வாசனா ருசிகள் –
அவை யடியாக பரிக்ரஹித்த சரீரத்தைப் பற்றி வரக் கடவதான ஆதி வ்யாதி நிஷித்த அனுஷ்டானம்-

இப்படி கார்யமாயும் அடி காண ஒண்ணாதபடி கிடக்கிறவை-
புதுப் புடவையை அழுக்கு கழற்றுமா போலே-க்ரமத்தாலே போகை அன்றிக்கே
ஒரு காலே சவாசநமாகப் போக்க வேண்டில்

நுடங்கிடையை இத்யாதி –
அதுக்கு செய்ய வேண்டுவது என் என்ன –
பிரபல பிரதிபந்தகங்களை வருத்தம் அறப் போக்க வல்லவனைப் பற்ற வடுக்கும் –

நுடங்கிடையை –
கண்டாருக்கு என்னாய் விளையக் கடவதோ -என்று
அஞ்ச வேண்டும் படியான சௌகுமார்யத்தை யுடைத்தான இடையை
யுடையவளைக் கிடீர் பிரித்து வைத்தது -என்கை-

முன்பு இலங்கையிலே கொடு புக்குச் சிறை வைத்த ராவணன் மிடுக்கு அழியும் படியாக –
மேகத்திலே மின்னினால் போலே அழகிய திருக் கையிலே ஸ்ரீ சார்ங்கத்தை வைத்தவன் –
எதிரிகளை அழியச் செய்கைக்கு ஒரு வியாபாரம் வேண்டா –
கையிலே வில்லை வைக்க அமையும் –

அழகிய திருக் கையிலே வில்லைப் பிடித்தவன் உபாயம் என்னுதல் –
அவனை உபாயமாகப் பற்றுங்கோள்-என்று விதியாதல் –

நுடங்கிடையை முன்னிலங்கை வைத்தான் -என்றதுக்கு கருத்து என் என்னில்
ஈஸ்வர சேஷமான ஆத்ம வஸ்துவை என்னது என்று இருக்கை யாவது –
பிராட்டியைப் பிரித்த ராவணனோடு ஒக்கும் என்கை –
தன்னைப் பற்றினார்க்கு அவள் விரோதியைப் போக்கினாப் போலே விரோதியைப் போக்கிக் கொடுக்கும் என்கை –
அவளோடு ஒத்த பிராப்தியும் அவன் பக்கல் இவனுக்கு உண்டு என்கையும்
அவனைப் பற்றுவார் அவள் முன்னாகப் பற்றுவார் என்கையும் –

ஒரு பேருந்தி இரு மலர்த் தவிசில்ஒரு முறையானை ஈன்றனை –
ஒரு முறை இரு சுடர் மீதினிலியங்கா-மும் மதிளிலங்கை இரு கால் வளைய
ஒரு சிலை ஒன்றிய ஈர் எயிற்று அழல் வாய் –

இல்லாததை யுண்டாக்கின உனக்கு உள்ளதுக்கு
ஒரு குண தானம் பண்ணுகை அரிதோ என்கையும்

பிராட்டியோட்டைக் கலவிக்கு விரோதியான ராவணனை அழியச் செய்த உனக்கு
என்னுடைய பிரதிபந்தகம் போக்குகை அரிதோ என்கையும்

வாளியில் அட்டனை-
ப்ரஹ்ம சிருஷ்டி போலே சங்கல்ப்பத்தாலே செய்கை அன்றிக்கே
நேர் கொடு நேரே பூசலில் நின்று அழியச் செய்தாய் –

————————————————————————–

மூவடி நானிலம் வேண்டி முப்புரி நூலோடு மானுரியிலங்கு மார்வினன்
இரு பிறப் பொரு மாணாகி-ஒரு முறை ஈரடி மூவுலகு அளந்தனை-

வியாக்யானம் -1-
அம்பாலே சாதிக்க ஒண்ணாத இடம் அழகாலே சாதித்த படி சொல்கிறது –

மூவடி நானிலம் வேண்டி -நாலுவகைப் பட்ட பூமியிலே -மலை காடு நிலம் கடல் -என்கிற -மூவடியை வேண்டி –

முப்புரி நூலோடு மானுரியிலங்கு மார்வினன் –
ஒரு காளமேகத்தில் மின்னலை ஏறிட்டால் போலே-
திரு யஜ்ஞோபவீதமும் -அத்தோடு கூடின க்ருஷ்ணாஜிநமும் விளங்கா நின்ற திரு மார்பை யுடையையாய் –

இரு பிறப் பொரு மாணாகி-த்வ்ஜனுமாய் -ஒப்பில்லாத ஸ்ரீ வாமனனுமாய்
தானே இன்னும் ஒரு கால் இவ்வடிவு கொள்ள வேணும் என்னிலும் இப்படி வாயாத வடிவுடையையாய்

ஒரு முறை ஈரடி மூவுலகு அளந்தனை-ஒருகால் இரண்டு அடியாலே மூன்று லோகத்தையும் அளந்து கொண்டாய்-

இத்தால்-
இந்தரனுக்கு ராஜ்யத்தை மீட்டுக் கொடுத்தால் போலே
என்னுடைய சேஷத்வத்தையும் மீட்டுத் தந்து அருள வேணும்-என்கிறார் –

தேவர்கள் சென்று இரந்தார்கட்கு இடர் நீக்கிய -கோட்டங்கை வாமனனாய் -திருவாய்மொழி -7-5-6–என்று
உன்னை இரந்தார்கட்கு நீயும் இரந்து அவர்கள் அபேஷிதம் பார்க்கும் அவன் அல்லையோ –

இசையாதார் தலைகளிலே வைத்த திருவடிகளை இசைந்த என் தலையிலே வைக்கல் ஆகாதோ-

பிரயோஜனாந்தர பரனுடைய இழவு தீர்த்த உனக்கு அநந்ய பிரயோஜனான என்னுடைய இழவு தீர்க்கலாகாதோ

இந்த்ரன் கழஞ்சு மண் அன்றோ இழந்தது -நான் என்னையும் உன்னையும் அன்றோ இழந்தது –

————————————————————————–

வியாக்யானம் -2-
அம்பாலே அழிக்க ஒண்ணாத இடத்தை -அழகாலும் இரப்பாலும் அழியச் செய்த படி –

பிரயோஜனாந்தர பரர்களான இந்த்ராதிகளுடைய கார்யம் செய்த நீ
உன்னையே பிரயோஜனமாக நினைத்து இருக்கிற என் கார்யம் செய்யலாகாதோ –

மூவடி நானிலம் வேண்டி-ஈரடியாலே பூமியை அளந்து
ஓரடிக்கு அவனை சிறையிட்டு வைக்க நினைத்து மூன்றடியை இரந்தான் ஆயிற்று –

நெய்தல் மருதம் முல்லை குறிஞ்சி என்றால் போலே சொல்லுகிற
அன்னலும் துன்னலுமான பூமியை அர்த்தித்தது –
இந்நாலிலும் ருஷீஷாம்சமாக கழித்தது பாலை நிலம் என்றும் சொல்லுவார்கள் –
இவருக்கு அபிமதம் நாலு என்னும் இடம் தோற்றி இருந்தது இறே

முப்புரி நூலோடு மானுரியிலங்கு மார்வினன் இரு பிறப் பொரு மாணாகி-
ஒரு முறை ஈரடி மூவுலகு அளந்தனை-
மேகத்திலே-மின்னினால் போலே சாத்தின யஜ்ஞோபவீதமும்
கிருஷ்ணாஜிநமும் விளங்கா நின்றுள்ள திரு மார்பை யுடையையாய்
உப நயனம் பண்ணின புதுமை தோற்றும் படி இருப்பாயுமாய் –

இந்த்ரனுடைய அர்த்தித்வம் தலைக் கட்டுகைக்காக இட்ட போதோடு இடாத போதோடு வாசி அற-
முகம் மலர்ந்து போம்படி இறபபிலே தகண் ஏறின வாமன வேஷத்தைப் பரிக்ரஹித்து-
ஒரு கால் த்ரை லோகத்தையும் ஈரடியால் அளந்து கொண்டாய்

ஆசையில்லாதார் தலை மேலேயும் வைக்கும் திருவடிகளை ஆசையுடைய என் தலை மேலேயும் வைக்கலாகாதோ-

இந்த்ரனைப் போலே கழஞ்சு மண் பெறுதல் –
மகா பலியைப் போலே ஔதார்யம் கொண்டாடுதல் செய்ய இருக்கிறேனோ நான் –
உன்னைப் பெற வேணும் என்று அன்றோ நான் அர்த்தித்திக்கிறது-

உன்னை வைத்து வேறு ஒன்றை இரந்தார்க்கோ நீ இரப்பாளனாகக் கார்யம் செய்வது –
உன்னையே இரந்தார் கார்யம் செய்யலாகாதோ –

மதீய மூர்த்தா நமலங்கரிஷ்யதி கதா –ஸ்தோத்ர ரத்னம் -31-என்று இறே நான் இருக்கிறது-

——————————————————————–

நாற்றிசை நடுங்க–அஞ்சிறைப் பறவை ஏறி நால் வாய் மும்மதத் திரு செவி
ஒரு தனி வேழத் தரந்தையை-ஒரு நாள் இருநீர் மடுவில் தீர்த்தனை-

வியாக்யானம் -1-
பெரு மதிப்பரான இந்த்ராதிகளுக்கயோ அபேஷிதம் செய்தது என்னில்
அன்று
ஆபத்தும் விசுவாசமும் என்கிறது அல்பம் உண்டானால்
தான் தண்ணியரான திர்யக்குகளுக்கும் அபேஷிதம் செய்யும் என்கிறது-

நாற்றிசை நடுங்க-
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுடைய ஆபத்தை நினைத்து கலங்கின கலக்கத்தைக் கண்டு-
ஜகத்துக்கு என்ன மிறுக்குப் புகுகிறதோ -என்று அறியாதே நடுங்க –

அஞ்சிறைப் பறவை ஏறி –
மிக்க அழகையும் வேகத்தையும் உடைத்தான சிறகை யுடைத்தான பெரிய திருவடி மேல் ஏறி-

நால் வாய் மும்மதத் திரு செவி ஒரு தனி வேழத் தரந்தையை-
நாலா நின்ற வாயையும் மூன்று மதத்தையும் இரண்டு செவியையும் யுடைத்தாய்
வேறு துணை இன்றிக்கே தன் மிடுக்கு அற்று நின்ற ஆனையினுடைய மகா துக்கத்தை

அரந்தை -துக்கம் –

ஒரு நாள் இருநீர் மடுவில் தீர்த்தனை-அத்தசையிலே வேற்று நிலமாய்
பெரிய நீர் வெள்ளமான மடுவிலே தீர்த்தாய்
முதலையின் வாயில் நின்றும் ஆனையை மீட்டால் போலே
சம்சாரம் கொண்ட என்னையும் மீட்க வேண்டும் -என்கிறார்-

கஜ ஆகர்ஷதே தீரே க்ராஹ ஆகர்ஷதே ஜலே தயோர்த் வந்தவ சமம் யுத்தம்
திவ்யம் வர்ஷ சஹச்ரகம் -ஸ்ரீ விஷ்ணு தர்மம் -என்று

ஆனைக்கு முதலை ஓன்று
எனக்கு முதலை ஐந்து

அது மிடுக்கான யானை
நான் துர்பலன் -என்கிறார்

——————————————————–

வியாக்யானம் -2-
பெரு மதிப்பரான இந்த்ராதிகளுக்காக உன்னை அழிய மாறிக் கார்யம் செய்த அளவேயோ –
ஜன்ம வ்ருத்தாதிகளால் குறைய நின்ற ஆனை இடர்ப்பட்ட மடுவின் கரையிலே
அரை குலையத் தலை குலைய வந்து விழுந்தவன் அன்றோ –

நாற்றிசை நடுங்க-அஞ்சிறைப் பறவை ஏறி நால் வாய் மும்மதத் திரு செவி ஒரு தனி வேழத் தரந்தையை-
ஜகத் ஸ்ருஷ்டியாதிகளுக்கும் சங்கல்பத்ததுக்கு அவ் வருகு யுண்டு என்று அறியாமையாலே
ஜகத் உபசம்ஹாரத்துக்கும் அவ்வருகாய் இருந்ததீ-

இது ஒரு சீற்றம் இருந்த படி என் -என்று இருந்ததே குடியாக எல்லாரும் அஞ்சும்படியாக
மேருவுக்கு இனிய மேகம் போலே -அழகிய சிறகை யுடைய பெரிய திருவடி திருத் தோளிலே ஏறி-
பெரிய வேகத்தோடு

நாலா நின்றுள்ள வாயை யுடைத்தாய்
மூன்று வகைப் பட்ட மதத்தை யுடைத்தாய் -இரண்டு கன்னங்கள் குறி –
இரண்டு செவியை யுடைத்தாய்-வேறு துணை இன்றிக்கே
அத்விதீயமாய் இருக்கிற யானையுடைய துக்கத்தை

அத் தசையிலே வேற்று நிலமாய் மிக்க வெள்ளத்தை யுடைத்தான மடுவிலே
அரை குலைய தலை குலைய வந்து விழுந்து போக்கினாய்

க்ரஹம் சக்ரேண மாதவ -ஸ்ரீ விஷ்ணு தர்மம் -என்றபடி
மடுவிலே போய்ப் புக்கு ஆனையையும் முதலையுமாக அணைத்துக் கொண்டு போந்து கரையிலே ஏறி
ஆனைக்கு நலிவு வாராத படி திரு ஆழியாலே முதலையைக் கிழித்து பொகட்டான் ஆயிற்று –

ராஜ புத்ரனோடு வினை யுண்ட கைக் கூட்டனுக்கும் பால் திரளை இடக் கடவது காண்-என்று
பட்டர் அருளிச் செய்யும் படி –

நால் வாய் மும்மதத் திரு செவி ஒரு தனி வேழத் தரந்தையை-என்றால் போலே
சொல்லுவதுக்கு கருத்து யாது என்னில்
பிரஜை கிணற்றில் விழுந்தால் –
காதும் கண்ட வாளியும்-காலும் தலையும் -வடிவும் இருக்கும் படி காண் -என்பாரைப் போலே
இடர்ப்பட்ட இதனுடைய அவயவங்கள் அவனுக்கு ஆகர்ஷகம் ஆன படியாலே சொல்லுகிறது –

வேழத் அரந்தையை – –
எளியராய் இருப்பார் நோவு பட்டால் போல் அன்று இறே இதனுடைய நோவுபாடு –

பரமா பதமா பன்ன -ஸ்ரீ விஷ்ணு தர்மம் –

சர்வேஸ்வரன் தன்னைப் பேணாதே வந்து விழ வேண்டும் படி கரை கண்ட ஆபத்து ஆயிற்று –

இவ் வாபத்துக்கு அவதி என் என்னில் –
மநஸா சிந்தயத் வாயால் கூப்பிடுமதோவிற்று-வாயால் கூப்பிடவும் இயலாத படி –

ஒரு நாள் இருநீர் மடுவில் தீர்த்தனை-
அங்கு காலம் அளவிட்டு இருக்கும் -முதலை ஓன்று -தான் ஆனை –
இங்கோ என்றால் -காலம் அநாதி -இந்த்ரியங்கள் ஐந்து -நானோ துர்ப்பலன் –
ஆனால் வாசி பார்த்துத் தர வேண்டாவோ –

காலைக் கதுவிடுகின்ற -கயலொடு வாளை விரவி -நாச் திரு -3-5-
ஆந்தராளர் குடியிலே பிறந்து ஈஸ்வரன் மர்மஜ்ஞையாய் இருப்பாள் ஒருத்தி வார்த்தை
ஒரு நீர்ப் புழு நலியப் பொறுக்க மாட்டாதவன் –
இரண்டு கிடாய் காலைப் பற்றி நலிகிறது என்கிறாள் –

————————————————————————–

முத் தீ நான்மறை ஐவகை வேள்வி அரு தொழில் அந்தணர் வணங்கும் தன்மையை-

வியாக்யானம் -1-
உபாயாந்தர நிஷ்டருக்கும் அவற்றை நடத்திக் கொடுப்புதி இறே –
யோகோ யோக விதாம் நேதா -என்கிறபடியே –

முத் தீ –
மூன்று பிள்ளை பெறுவாரைப் போலே –
கார்ஹாபத்ய ஆஹவ நீய -தஷிண அக்னிகளையும் –

நான்மறை –
ருக் யஜூஸ் சாம அதர்வணங்களையும் யுடையராய் –

ஐ வகை வேள்வி-
தேவ யஜ்ந -பித்ரு யஜ்ஞோ -பூத யஜ்ஞோ-மனுஷ்ய யஜ்ஞோ-ப்ரஹ்ம யஜ்ஞ–என்னும்
பஞ்ச மகா யஜ்ஞங்களையும்

இத்தால் கர்ம யோகம் சொல்லிற்று

அறு தொழில் -யஜனம் -யாஜனம் -அத்யயனம் -அத்யாபனம் -தானம் -ப்ரதிக்ரஹம் -என்கிற
ஷட் கர்மங்களை யுடையரான

அந்தணர் வணங்கும் தன்மையை-
அநந்ய பிரயோஜனரான ப்ராஹ்மணராலே ஆஸ்ரயிக்கப் படும் ஸ்வபாவத்தை யுடையையாய் –

———————————–

வியாக்யானம் -2-
வர்ணங்களில் உத்க்ருஷ்ட வர்ணமாய் நல் வழி போகக் கடவதாய் இருக்கும் ப்ராஹ்மண ஜாதிக்கு அடைய-
ஆஸ்ரயணீயனாய் இருக்கும் படியைச் சொல்கிறது

முத் தீ-
மூன்று பிள்ளையைப் பெற்ற தாயைப் போலே
ஆஹவ நீய கார்ஹ பத்ய தஷிணாக்னி என்கிற அக்னி த்ரயமும்

நான் மறை –
நாலு வகைப் பட்ட வேதங்களும்

ஐ வகை வேள்வி-பஞ்ச மகா யஜ்ஞமும்

அறு தொழில்-
அத்யயனம் பண்ணுகை -பண்ணுவிக்கை-யஜிக்கை -யஜிப்பிக்கை -தானம் பண்ணுகை கொள்ளுகை-என்றால்
போலே சொல்லுகிற இவற்றைத் தொழிலாக யுடையரான

அந்தணர் வணங்கும் தன்மையை-
ப்ராஹ்மாணருக்கு ஆஸ்ரயணீயனாய் இருக்கும் படி சொல்லிற்று

————————————————————————–

ஐம் புலன் அகத்தினுள் செறுத்து நான்குடன் அடக்கி
முக் குணத்து இரண்டவை அகற்றி ஒன்றினில் ஒன்றி நின்று ஆங்கு இரு பிறப்பு அறுப்போர் அறியும் தன்மையை –

வியாக்யானம் -1-
கர்ம யோகத்தை அங்கமாக யுடைத்தான உபாயம் சொல்லப் படுகிறது –

ஐம்புலன் அகத்தினுள் செறுத்து-
சஷூராதி இந்த்ரியங்களை சப்தாதி விஷயங்களிலே போகாமே உள்ளே அடக்கி

நான்குடன் அடக்கி-
மநோ
புத்தி
சித்த
அஹங்காரங்களையும்-செறுத்து

ஆஹார
நித்ரா
பயம்
ஐதுனங்கள் -உடல் உறவு -இவற்றைத் தவிர்த்து என்றுமாம் –

முக் குணத்து இரண்டவை அகற்றி-
குணத் த்ரயங்களில் ரஜஸ் தமஸ் ஸூக்களை த்யஜித்து

ஒன்றினில் ஒன்றி நின்று-சத்வம் ஒன்றினிலே பொருந்தி நின்று –

ஆங்கு-
அந்த யோகத்திலே

இரு பிறப்பு அறுப்போர் அறியும் தன்மையை-
புண்ய பாப ரூபமான கர்மங்களாலே வரும் சம்சாரத்தை அறுக்கும்-
உபாசகராலே அறியப்படும் ஸ்வ பாவத்தை யுடையையாய்

இப்படி இருந்த யோகத்தாலே அனுபவிக்கை யாவது –
ஸ்ரீ கஜேந்த ஆழ்வானுடைய மிடுக்குள்ள தசையோடு ஒக்கும் அத்தனை
ஆன பின்பு அவனையே உபாயமாகப் பற்றிப் பிழைக்க வேணும் –

————————————————————————–

வியாக்யானம் -2-
இனி சம்சார பய பீதராய் முமுஷூக்களாய் இருப்பாருக்கு ஆஸ்ரயணீயனாய் இருக்கும் படி சொல்கிறது-

ஐம்புலன் அகத்தினுள் செறுத்து-
ஸ்ரோத்ராதிகளை விஷயங்களிலே போகாத படி நியமித்து-

நான்குடன் அடக்கி-
நித்ய அநித்திய வஸ்து விவேகம் –
சமதமதாதி சாதனா சம்பத்து –
இஹாமுத்ர பலபோக விராகம்
முமுஷூத்வம் -என்றால் போலே-சொல்லுகிற சாதன சதுஷ்டத்தையும் யுடையராய்

அன்றிக்கே
ஆஹாராதிகளைத் தவிர்த்து என்றுமாம் –

முக் குணத்து இரண்டவை அகற்றி ஒன்றினில்-ஒன்றி நின்று-
சத்வ ரஜஸ் தமஸ் ஸூக்களில் வைத்துக் கொண்டு ரஜஸ் தமஸ் ஸூக்களை கழித்து
நிஷ்க்ருஷ்ட சத்வத்தை யுடையராய்க் கொண்டு நின்று

ஆங்கு-
அந்த யோகத்தாலே –

இரு பிறப்பு அறுப்போர் அறியும் தன்மையை –
புண்ய பாப ரூப கர்மங்கள் அடியான சம்சாரிக துக்கத்தை-அறுத்துக் கொள்ள வேணும் என்று இருப்பார்
அறியும் ஸ்வ பாவத்தை யுடையனாய் இருக்கும் –

சாதநாந்தர பரிக்ரஹம் பண்ணினார் உன்னைப் பெற்றுப் போகா நிற்க –
உன்னையே சாதனமாக பரிக்ரஹித்த நான்
உன்னைப் பெறாதே போவதே –

————————————————————————–

முக்கண் நால் தோள் ஐ வாய் அரவொடு ஆறு பொதி சடையோன் அறிவரும் தன்மைப் பெருமையுள் நின்றனை-

வியாக்யானம் -1-
தம்தாமுடைய கண்களின் மிகுதியாலும்
ஜ்ஞாதிக்யம் என்கிற இதுவே ஏற்றமாகக் கணிசிப்பார்க்கும் –
அவர்களுக்கும் எட்டாத ஸ்வபாவத்தை யுடையவன் என்கிறது –

முக்கண் நால் தோள் –
மூன்று கண்களையும் -நான்கு தோள்களையும் யுடையவன் ஆகையாலே -பஹூ பரிகரனாய்

ஐ வாய் அரவொடு ஆறு பொதி சடையோன் –
ஐந்து வாயை யுடைய பாம்பையும் கங்கையையும்
ஏக தேசத்திலே அடக்கின ஜடையை யுடையவன் ஆகையாலே-அதிக சக்தனாய் இருந்துள்ள ருத்ரனும்

அறிவரும் தன்மைப் பெருமையுள் நின்றனை-
இப்பிடார் கொண்டு அறிய ஒண்ணாத
ஸ்வ பாவமாக இருக்கிற பெருமையை யுடையையாய் நின்றாய்

ஆகையாலே பெரிய கிழாயான ருத்ராதிகள் நிலை இதுவானால்
ஷூத்ரரான எங்களுக்கு பெற விரகு யுண்டோ-
நீயே விஷயீ கரிக்கும் அத்தனை என்று கருத்து-

————————————————————————–

வியாக்யானம் -2-
அபிமாநிகளாய் இருப்பார் எத்தனையேனும் அதிசயித ஜ்ஞானராய் இருந்தார்களே யாகிலும்-
அவர்களுக்கும் அறிய ஒண்ணாத படியான உத்கர்ஷம் சொல்லுகிறது –

முக்கண் நால் தோள் ஐ வாய் அரவொடு ஆறு பொதி சடையோன் அறிவரும் தன்மைப் பெருமையுள் நின்றனை-
லலாட நேத்ரனாய் -சர்வேஸ்வரன் நாலு தோளும் தானுமாய் இருந்தான் என்று –
தானும் நாலு தோளும் யுடையவனாய்
ஐந்து வாயை யுடைய அரவை யுடையவனாய்
கங்கையை அடக்கின ஜடையை யுடையவனான ருத்ரன்
தன் உயர்த்தி எல்லாம் கொண்டு அறியப் பார்த்தாலும் அறிய ஒண்ணாத ஸ்வபாவம் ஆகிற-
பெருமையை யுடையையாய் நின்றாய் –

கிழாயர் படுகிறது -இதுவானால்
நான் உன்னை அறிக்கை என்று ஒரு பொருள் யுண்டோ-

————————————————————————–

ஏழு உலகு எயிற்றினில் கொண்டனை-

வியாக்யானம் -1-
ஆபத்து வந்தால் சக்தனோடு அசக்தனோடு வாசி இன்றிக்கே
சர்வ பிராணிகளுக்கும் உதவி அருளினாய் –

மகா வராஹமாய் பிரளயம் கொண்ட ஏழு உலகத்தையும் திரு எயிற்றினிலே வைத்து அருளினாய் –

இத்தால்
பிரளயம் கொண்ட பூமியை எடுத்தால் போலே
பவார்ணவம் கொண்ட என்னையும் எடுத்து அருள வேணும் -என்கிறார் –

———————————————————–

வியாக்யானம் -2-
ஆபத்து வந்த அன்று -அந்த ருத்ராதிகளோ நீயோ உதவினார்
பிரளயம் கொண்டு அண்ட பித்தியிலே புக்குச் சேர்ந்த லோகங்களை
மகா வராஹமாய் புக்கு இடந்து எடுத்து
திரு எயிற்றினில் ஏக தேசத்தில்
ஒரு நீல மணி அழுத்தினால் போலே கிடக்கும்படி வைத்தாய் –

சம்சார பிரளயம் கொண்ட என்னையா எடுக்கலாகாது –

————————————————————————–

கூறிய அறுசுவைப் பயனும் ஆயினை-

வியாக்யானம் -1-
மனுஷ்யருக்குப் போக்யமான ஷட் ரச ரூபமான பிரயோஜனம் ஆனாய்

என்னுடைய பிரயோஜனத்தையும் எனக்குத் தந்து அருள வேணும் -என்கிறார் –

——————————————————

வியாக்யானம் -2-
சாஸ்த்ரங்களால் ஷட் ரசங்களுடைய பிரயோஜனமாய் இருந்து வைத்து-
என்னுடைய பிரயோஜனத்தையும் எனக்குத் தந்து அருள வேணும் -என்கிறார் –

————————————————————————–

சுடர் விடும் ஐம்படை அங்கையுள் அமர்ந்தனை சுந்தர நால் தோள் முந்நீர் வண்ண-

வியாக்யானம் -1-
தம்முடைய போக்யமாய் இருக்கும் படியை அருளிச் செய்கிறார் –

சுடர் விடும் ஐம்படை அங்கியுள் அமர்ந்தனை-
மிகவும் விளங்கா நின்றுள்ள பஞ்சாயுதங்களையும்
வெறும் புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டும்படியாய் இருந்துள்ள திருக் கைகளினுள்ளே
ஆபரணம் போலே அமரும்படி தரித்தாய்

சுந்தர நால் தோள்-
அழகை வகுத்தால் போலே நாலு தோள்களையும் யுடையையாய்

முந்நீர் வண்ண-
ஸ்ரமஹரமான வடிவை யுடையவனே

——————————————————————-

வியாக்யானம் -2-
சுடர் விடும் ஐம்படை அங்கையுள் அமர்ந்தனை-

மிகவும் பிரகாசத்தை யுடைத்தாய் இருக்கிற திவுய ஆயுதங்களை
வெறும் புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டும் படியான அழகிய திருக் கையிலே தரிப்பாய்

சுந்தர நால் தோள்-
தனக்குத் தானே அழகை விளைப்பதான நாலு திருத் தோள்களை யுடையையாய்

முந்நீர் வண்ண–
கடல் போலே ஸ்ரமஹரமான வடிவை யுடையவனே –

————————————————————————–

நின்னீரடி யொன்றிய மனத்தால் ஒரு மதி முகத்து மங்கையர் இருவரும்
மலரன அங்கையின்-முப்பொழுதும் வருட அறிதுயில் அமர்ந்தனை –

வியாக்யானம் -1-
தம்முடைய அபேஷிதம் பெறுகைக்கு புருஷகாரம் யுண்டு என்கிறார் –

நின்னீரடி யொன்றிய மனத்தால்-
அநந்ய போக ரசராய்

ஒரு மதி முகத்து மங்கையர் இருவரும்-
கல்மஷம் கழற்றின பூர்ண சந்தரனைப் போலே
தாம்தாம் போகத்தை கொட சொல்லா நின்ற திரு முகத்தை யுடையவராய் –

மங்கையர்-
துல்ய சீல வயோ வ்ருத்தாம் -என்றும்
யுவதிச்ச குமாரிணீம் என்றும்-தங்கள் பருவத்தாலே பிச்சேற்ற வல்ல பிராட்டிமார் இருவரும்

மலரன அங்கையின்-
புஷ்பத்தை த்ருஷ்டாந்திக்க ஒண்ணாத மென்மையை யுடையையான திருக் கைகளாலே

முப்பொழுதும் வருட –
சர்வகாலமும் வருட

அறிதுயில்-
ஆஸ்ரீ த சம்ரஷண பிரகாரத்தை அனுசந்திக்கை

அமர்ந்தனை –
வீசு வில்லிட்டு எழுப்பினாலும் எழுப்பப் போகாது –

—————————————————————-

வியாக்யானம் -2-

நின்னீரடி யொன்றிய மனத்தால்-
தேவரீர் திருவடிகளிலே ஒருமைப் பட்ட நெஞ்சை யுடையவராய்

ஒரு மதி முகத்து மங்கையர் இருவரும் –
சந்தரனைப் போலே தர்ச நீயமாய் குளிர்ந்த திரு முகத்தை யுடைத்தாய் இருக்கிற-
ஸ்ரீ பெரிய பிராட்டியாரும்
ஸ்ரீ பூமிப் பிராட்டியாரும் –

மலரன அங்கையின் –
பூ தொட்டால் போலே இருக்கிற மிருதுவான திருக் கைகளாலே

முப்பொழுதும் வருட அறிதுயில் அமர்ந்தனை –
திருவடிகளை வருட –
ஜகத் ரஷண ரூபமான யோக நித்ரையிலே ஒருப்பட்டு இருந்தாய்-

எனக்குப் புருஷகாரம் இல்லாமே இழக்கிறேனோ

————————————————————————–

நெறி முறை நால் வகை வருணமும் ஆயினை மேதகு மைம் பெரும் பூதமும் நீயே-

வியாக்யானம் -1-
முன்பு அனுசந்தித்த படியே ரஷித்த ரஷண பிரகாரம் சொல்லுகிறது —

நெறி முறை-
சாஸ்திர மரியாதை தப்பாத படி

நால் வகை வருணமும் ஆயினை-
சாதுர் வர்ண்யமும் நீ இட்ட வழக்கு –
ஆத்மாக்களுக்கு வர்ணங்களைக் கொடுத்ததும்
அவர்களுடைய அனுஷ்டானத்துக்கு ஆராத்யனாய் இருப்பானும் அவன் இறே

அஹம் ஹி சர்வ யஜ்ஞானாம் போக்தா-ஸ்ரீ கீதை -9-24- என்றும்
வர்ணாஸ்ரம ஆசாரவத புருஷேண பர –புமான் விஷ்ணுர் ஆராத்யே பந்தா
நான்யச் தத் தோஷகாரகா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -என்றும்
சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டும் -ஸ்ரீ கீதை -4-13-என்றும் -சொல்லக் கடவது இறே –

(அஹம் ஹி ஸர்வயஜ்ஞாநாம் போக்தா ச ப்ரபுரேவ ச
ந து மாமபிஜாநந்தி தத்த்வேநாதஸ்ச்யவந்தி தே–ஸ்ரீ கீதை -9-24

ஹி ஸர்வயஜ்ஞாநாம்-ஏனெனில் எல்லா வேள்விகளிலும்,
போக்தா ச ப்ரபு ச அஹம் ஏவ-உணவு உண்பவனும்; தலைவனும் நானே தான்!
து தே மாம்-ஆனால் என்னை அவர்கள்
தத்த்வேந ந அபிஜாநந்தி-உள்ளபடி அறியாதவர்,
அத: ச்யவந்தி-ஆகையால் வீழ்ச்சி அடைகிறார்கள்.

நானே வேள்விகளில் எல்லாம் உணவு உண்பவன்; நானே தலைவன்;
என்னை மனிதர் உள்ளபடி அறியார்;
ஆதலால் நழுவி வீழ்வார்)

(சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குணகர்மவிபாகஸ:
தஸ்ய கர்தாரமபி மாம் வித்த்யகர்தாரமவ்யயம்–ஸ்ரீ கீதை -4-13

குண கர்ம விபாகஸ:-குணத்துக்கும் செய்கைக்கும் தக்கபடி பிரிவுகளாக
சாதுர்வர்ண்யம், மயா ஸ்ருஷ்டம்-நான்கு வர்ணங்கள் என்னால் உருவாக்கப் பட்டது,
தஸ்ய கர்தாரம் அபி-நானே அவற்றை செய்தேன் என்றாலும்,
அவ்யயம் மாம்-அழிவற்றவனாகிய என்னை
அகர்தாரம், வித்தி-கர்த்தா அல்லேன் என்று உணர்.

குணத்துக்கும் செய்கைக்கும் தக்கபடி நான் நான்கு வர்ணங்களைச் சமைத்தேன்.
செயற்கையற்றவனும் அழிவற்றவனுமாகிய யானே அவற்றைச் செய்தோனென்றுணர்.)

மேதகு மைம் பெரும் பூதமும் நீயே-
ஆத்மாக்களுடைய தேக ஆரம்பங்களான மகா பூதங்களும் நீயே

மேதகு-
மேவித்தக்கு இருக்கும்

மேவுகை யாவது
தேவ அஹம் மனுஷ்ய அஹம் என்கிறபடியே பொருந்தி இருக்கை
அதாவது
யாதேனும் ஒரு ஆக்கையிலே புக்கு –திருவிருத்தம் -95-அங்கே தக்கிருக்கை –
அதாவது
கர்மத்துக்கு அனுகூலமாய் இருக்கை

இத்தால்
சத்தாதிகள் நீ இட்ட வழக்கான பின்பு
உன்னை ஒழிய ரஷகர் யுண்டோ என்கை –

————————————————————–

வியாக்யானம் -2-
சாஸ்திர முறை தப்பாத படி முறையிலே நடக்கிற நாலு வகைப் பட்ட வர்ணங்களும்
நீ இட்ட வழக்காய் இருக்கிறது
ஜகத் ஆரம்பகமான பூத பஞ்சகங்களும் நீ இட்ட வழக்கு
சத்தாதிகளும் உன் அதீனமான பின்பு உன்னை ஒழிய ரஷகர் யுண்டோ –

————————————————————————–

அறுபத முரலும் கூந்தல் காரணம் ஏழ் விடை யடங்கச் செற்றனை –

சாமான்ய ரஷணம் சொல்லி விசேஷ ரஷணம் சொல்லுகிறது –

அறுபத முரலும் கூந்தல் காரணம்-
வண்டுகள் தேனைப் பருகி முரலா நின்றுள்ள திருக் குழலை யுடையவள் ஆகையாலே-
போக்ய பூதையான நப்பின்னை பிராட்டியின் பொருட்டு

ஏழ் விடை யடங்கச் செற்றனை –
ஏழு எருத்தையும் ஊனப் படாத படி நெரித்தாய் –

இத்தால்-
நப்பின்னை பிராட்டி யுடைய சம்ஸ்லேஷத்துக்கு விரோதிகளைப் போக்கினால் போலே-
என்னுடைய விரோதிகளையும் போக்கித் தந்து அருள வேணும் -என்று கருத்து –

————————————————————————–

வியாக்யானம் -2-
அறுபத முரலும் கூந்தல் காரணம் ஏழ் விடை யடங்கச் செற்றனை-

ஆறு காலை யுடைத்தாய்-
மது பான அர்த்தமாக படிந்த வண்டுகள் மது பானமத்தாய்க் கொண்டு
ஆளத்தி வையா-மயிர் முடியை யுடைய நப்பின்னை பிராட்டியோட்டை சம்ஸ்லேஷத்துக்கு
பிரதி பந்தகமான ருஷபங்கள் ஏழையும் ஊட்டியாக நெரித்தாய்

என்னுடைய பிரதிபந்தகங்களை நீயே போக்கி அருள வேணும் –

————————————————————————–

அறுவகைச் சமயமும் அறிவரு நிலையினை-

வியாக்யானம் -1-
அநாஸ்ரிதரான பாஹ்யருடைய நினைவுக்கு கோசரமில்லை-

————————————————————————–

வியாக்யானம் -2-
ஆறு வகைப் பட்ட பாஹ்ய சமயங்களால் அறிய ஒண்ணாத ஸ்வ பாவத்தை உடையையே இருந்தாய் –
சார்வாகர் -பௌத்தர்-சமணர் -நையாயிக வைசேஷிகர் -சாஙக்யர் பாசுபதர் –

————————————————————————–

ஐம்பால் ஓதியை ஆகத்து இருத்தினை –

வியாக்யானம் -1-
ஐந்து லஷணம் உடைய திருக் குழல் கற்றையை யுடைய
பெரிய பிராட்டியாரைத் திரு மார்பிலே வைத்தாய் –

மேல் சொல்லப் படுகிற ஐஸ்வர்ய சௌலப்யங்களுக்கு அடியான
ஸ்ரீ யபதித்வம் சொல்லப் படுகிறது –

——————————————————————

வியாக்யானம் -2-
அஞ்சு லஷணத்தை யுடைத்தான மயிர் முடியை யுடையாளாய் –
சுருண்டு பளபளத்து -நறுமணம் அடர்த்தி மென்மை –
ந கச்சித் ந அபராத்யதி என்னும்
பெரிய பிராட்டியாரைத் திரு மார்பினில் வைத்து அருளினாய்-

————————————————————————–

அற முதல் நான்கவையாய் மூர்த்தி மூன்றாய் இருவகைப் பயனாய் ஒன்றாய் விரிந்து நின்றனை-

வியாக்யானம் -1-
தர்மார்த்த சகல புருஷார்த்த பிரதனுமாய் –
ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு நிர்வாஹகனாய் –
ஸூக துக்கங்கள் இரண்டுக்கும் நிர்வாஹகனாய்
சர்வமும் ஸ்வ பிரகாரமாக இருக்கச் செய்தே -அவற்றோடு ஓட்டற்று நின்றாய்

இத்தால் ஐஸ்வர்யம் சொல்லிற்று –

————————————————————————–

வியாக்யானம் -2-
தர்மார்த்த காம மோஷங்கள் ஆகிற புருஷார்த்த சதுஷ்ட்யங்களுமாய்-
ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு நடுவே ஸ்வ ரூபேண நின்று -அவர்களை சரீரமாகக் கொண்டு நின்று

ப்ரஹ்ம விஷ்ணு சிவாத்மிகாம் ஸ சம்ஜஞாம் யாதி பகவான் ஏக ஏவ ஜனார்த்தன -ஸ்ரீ விஷ்ணு புராணம்
என்னலாம் படி நிற்பானாய்

சுக துக்கங்களுக்கு நியாமகனாய்

காரண அவஸ்தையிலே சத் சப்த வச்யனாய்

சிருஷ்டி காலத்தில் வந்தவாறே
பஹூஸ்யாம் என்கிறபடியே –
விஸ்த்ருதனாய் நிற்கிறாயும் நீ

————————————————————————–

குன்றாமது மலர்ச்சோலை வண் கொடிப் படப்பை வரு புனல் பொன்னி மா மணி யலைக்கும்
செந்நெல் ஒண் கழனித் திகழ்வன முடுத்த கற்போர் புரி செய்கனக மாளிகை
நிமிர் கொடி விசும்பில் இளம் பிறை துவக்கும் செல்வம் மல்கு
தென் திருக் குடந்தை அந்தணர் மந்திர மொழியுடன் வணங்க
ஆடரவமளியிலறி துயில் அமர்ந்த பரம–

வியாக்யானம் -1-
குன்றாமது மலர் -என்று மேலுக்கு
நீர்மைக்கு எல்லையான இடத்தில் சரணம் புகுகிறார்

குன்றா மது மலர்ச் சோலை-
குன்றாத மது வெள்ளத்தை யுடைத்தான பூஞ்சோலை –
ஆராவமுத ஆழ்வாருடைய கடாஷம் ஆகிற அமுத வெள்ளத்தாலே வளருகிற
சோலை யாகையாலே நித்ய வசந்தமாகச் செல்லுகிறது –

வண் கொடிப் படப்பை-
அழகிய கொடிக்கால்களையும் நீர் நிலத்தையும் யுடைய

வரு புனல் பொன்னி மா மணி யலைக்கும் செந்நெல் ஒண் கழனித் திகழ் வன முடுத்த –
பெருகி வாரா நின்ற
திருப் பொன்னி மஹார்க்கமான ரத்னங்களைக் கொழித்து ஏற வருகிற

இத்தால்
விளைகிற சென்நெல்லையும் யுடைத்தாயாகையாலே அழகிய கழனியையும் யுடைத்தாய்
விளங்கா நின்ற அழகிய வனங்களாலும் சூழப் பெற்ற

கற்போர் புரிசை –
வித்வான்கள் படுகாடு கிடக்கும் நகரி

கனக மாளிகை-
பொன்னாலே செய்யப் பட்ட மாளிகை

நிமிர் கொடி விசும்பில் இளம் பிறை துவக்கும்-
அதில் நிமிரா நின்றுள்ள கொடிகள் சந்த்ரனைச் சென்று துவக்கும் –

செல்வம் மல்கு தென் திருக் குடந்தை-
நிரதிசயமான சம்பத்தையும் போக்யதையும் யுடைய திருக் குடந்தையிலே

அந்தணர் மந்திர மொழியுடன் வணங்க-
அநந்ய பிரயோஜனரான பிராமணர் ரஹச்யமான ஸூக்த்தங்களைக் கொண்டு ஆஸ்ரயிக்க

ஆடரவமளியி லறி துயில் அமர்ந்த பரம-
தன்னுடைய ஸ்பர்சத்தாலே விரிக்கப் பட்ட
பணங்களை யுடைய திரு வநந்த வாழ்வான் ஆகிற படுக்கையில்
ஜகத் ரஷணத்துக்காக உணர்ந்து கொண்டு கண் வளர்ந்து அருளுகையாலே சர்வேஸ்வரன் ஆனவனே

ஆடரவு-
திரு வநந்த வாழ்வான் உடைய உஸ்வாச நிஸ்வாசங்களாலே
தூங்கு தொட்டிலைப் போலே என்னவுமாம் –

————————————————

வியாக்யானம் -2-
குன்றாத மதுவையும் மலரையும் யுடைத்தான சோலையையும் யுடைத்தாய்
அழகிய கொடிகளை யுடைத்தான தோட்டங்களையும் யுடைத்தாய்
மாறாத ஜல சம்ருத்தியையும் யுடைத்தான பொன்னி பாய்ந்து ரத்னங்களைக் கொழித்து ஏறிடா நிற்பதாய்
அழகிய சென்நெல்லையும் யுடைத்தான கழனிகளை யுடைத்தாய்
திகழா நின்றுள்ள வனத்தை சுற்றிலே யுடைத்தாய் –
தொழில் ஓரப்படா நின்றுள்ள மதிளையும் யுடைத்தாய்
பொன்னாலே செய்யப் பட்ட மாளிகைகளிலே நட்ட கொடிகளானவை ஆகாசத்தில்
சஞ்சரிக்கிற சந்த்ரனை துவக்கினாலும் சுற்றிடா நிற்பதாய்
நிரவதிக சம்பத்தையும் போக்யதையும் யுடைத்தான திருக் குடந்தையிலே
பிராமணர் வேத ஸூக்த்தங்களைக் கொண்டு ஆஸ்ரயிக்க
உன்னோட்டை ஸ்பர்சத்தாலே விகசிதமான பணங்களை யுடைய திரு வநந்த வாழ்வான் ஆகிற
படுக்கையிலே ஜகத் ரஷணத்திலே அவஹிதனாய்க் கொண்டு கண் வளர்ந்து அருளுகிற சர்வாதிகனே —

————————————————————————–

நின்னடியிணை பணிவன் வருமிடர் அகல மாற்றோ வினையே –

வியாக்யானம் -1-
உன்னுடைய திருவடிகளிலே சரணம் புகுந்தேன் –
இத்தை அனுபவிக்கைக்கு விரோதியைப் போக்கி அருள வேணும் –
இத்தால் –
இஷ்டப் பிராப்திக்கும்
அநிஷ்ட நிவாரணத்துக்கும்
சித்தமான உபாயத்தை பற்றிவிடுகிறார் –

————————————————————————–

வியாக்யானம் -2-
என்னுடைய ஸ்வரூப அனுரூபமாக
தேவரீர் திருவடிகளிலே சரணம் புகுந்தேன் –

நீயும் உன்னுடைய ஸ்வரூப அனுரூபமாக
என்னுடைய சம்சாரிக வருத்தத்தைக் கழித்துத் தர வேணும் -என்கிறார்-

————————————————————————–

இடம் கொண்ட நெஞ்சத்து இணங்கிக் கிடப்பது என்றும் பொன்னித்
தடம் கொண்ட தாமரை சூழும் மலர்ந்த தண் பூம் குடந்தை
விடம் கொண்ட வெண் பல் கருந்துத்தி செங்கண் தழல் உமிழ் வாய்
படம் கொண்ட பாம்பணைப் பள்ளி கொண்டான் திருப் பாதங்களே –

ஆராவமுத ஆழ்வார் உடைய திருவடி இணைகள் ஆழ்வார் திரு உள்ளத்தில் பொருந்தி
பெறாமல் இருப்பதை- ஆழ்வார் அனுசந்திப்பதாக
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் அருளிச் செய்கிறார்

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திருக்குடந்தை டாக்டர் ஸ்ரீ உ வே வேங்கடேஷ் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading