பல்லவம் – இலை : கிளை : கொப்பு : கையணி : சாயம் : தளிர் : தேயம்..
பங்குனி உத்திரத்தில் முடியுமாறு ஐந்து நாட்கள் பல்லவ உத்சவம் நடக்கிறது.
இந்த பல்லவ உத்சவம் என்பது பல்லவர்கள் சம்பந்தபட்டதல்ல ! பல்லவம் என்பது காலம்.
பூந்தளிர்கள் துளிர் விடும் பருவம். ஸ்ரீ ரங்கநாதர் திருவாய்மொழி மண்டபத்தில் எழுந்தருளி
அவர் முன் ப்ருந்தாரண்ய தல மகிமை சேவிக்கப்படுகிறது🙏
பெருமாள் புறப்பாடு கண்டு அருளுமுன் ஏழு மெல்லிய திரைகள் விலக்கி கற்பூர ஆர்த்தி கண்டு அருள்வார்
தினமும் ஸ்ரீரங்கநாதர் பெரியவீதி புறப்பாடு கண்டு அருள்கிறார்.
பங்குனி உத்திரத்தன்று அழகான கண்ணாடி கருடசேவையும் பிறகு
ஸ்ரீரங்கநாதர் ஸ்ரீவேதவல்லித்தாயார் திருக்கல்யாணம் சிறப்பாக நடக்கிறது 🙏🙏🙏🙏
ஏழ் பிறப்பும் யான் அறுத்தேன் என்கிறபடியே
ஒரு ஜீவாத்மா ஏழ் பிறப்பையும் கடந்து /அறுத்து அந்த பரமாத்மாவிடம் செல்கிறான்… 🙏
ஏழு திரை விலகி ஸ்ரீ ரெங்கநாதர் சேவை
அவஸ்தா ஸப்தகங்கள் நீங்கி….எம்பெருமானுடன் கூடி…
வேதத்தை வேதத்தின் *சுவைப்பயனை விழுமிய முனிவரர் விழுங்கும்*
கோது இல் இன் கனியை நந்தனார் களிற்றை* குவலயத்தோர் தொழுதுஏத்தும்*
ஆதியை அமுதை என்னை ஆள் உடை அப்பனை ஒப்பவர் இல்லா மாதர்கள் வாழும்*
மாட மா மயிலைத்* திருவல்லிக்கேணிக் கண்டேனே.
எம்பெருமானை ஸாக்ஷாத் வேதமாகச் சொன்னது வேத ப்ரதிபாத்யனா யிருக்குந் தன்மைபற்றியாதல்,
வேதங்களை வெளியிட்டருளினமை பற்றியாதல்,
உலகத்தில் ஒவ்வொருவருடைய விருப்பம் ஒவ்வொருவகையாக இருக்குமாதலால்
அவரவர்களுடைய விருப்பத்திற்கிணங்க உபாயங்களையும் பலன்களையும் வேத மூலமாகக்
காட்டிக் கொடுத்திருக்கின்றமை பற்றி வேதத்தின் சுவைப்பயனை எனப்பட்டது.
என்னையாளுடையப்பன் தமது தேவியருடன்* திருத்தேரில் புறப்பாடு கண்டருளுகிறார் 🙏
எம்பெருமான் சந்நதிக்கு நேராகக் கருடன் சந்நிதி இருப்பதைக் காணலாம்.
அலங்காரப் பிரியரான திருமால் அலங்காரம் செய்துகொண்டால் அழகு பார்க்க
ஒரு கண்ணாடியாய் எம்பெருமானைக் காட்டும் கண்ணாடியே வேதம்!
வேதாத்மா விஹகேஸ்வர:
கருடன் வேத சொரூபியாகவே இருப்பதால், கருடனையே கண்ணாடியாகக் கொண்டு திருமால் அழகு பார்க்கிறார்.
அதனால் தான் பெருமாள் சந்நதிக்கு நேரே, கண்ணாடி போல் கருடன் சந்நதி இருக்கிறது…..
எம்பெருமானை நமக்குக் காட்டித் தரும் கருவியாக வேதம் உள்ளது.
ஆனால் நம் போன்ற சாமானியர்களுக்கு, வேதத்தைக் கற்று, அதன் பொருளை அறிந்து,
அதைப் பின்பற்றி அவனை அறிவது என்பது மிகவும் கடினமான காரியம்.
எனவே நம்மேல் கருணைகொண்ட வேதமே, எம்பெருமானை நமக்கு எளிதில் காட்டிக்கொடுக்கிறான்.. கருடாழ்வாராக🙏
பட்சிராஜன், வைனதேயன், கருத்மான், சுபர்ணன்,
தார்க்ஷ்யன், காச்யபி, சுதாஹரன், ககேச்வரன்,
நாகாந்தகன், விஷ்ணுரதன், புள்ளரசன், புள்ளரையன், மங்களாலயன், பெரிய திருவடி, கலுழன் எனப்
பல்வேறு பெயர்களால் இவர் அழைக்கப்படுகிறார்.
*ஆளவந்தார் என்னும் மஹாசார்யரும்…
“தாஸ: ஸகா வாஹநம் ஆஸநம் த்வஜோ யஸ்தே விதாநம் வ்யஜநம் த்ரயீமய: என்ற ஸ்லோகத்தில்
கருடன் திருமாலுக்குத் தொண்டராகவும் நண்பராகவும் வாகனமாகவும் இருக்கையாகவும்
கொடியாகவும் மேல்கட்டாகவும் விசிறியாகவும் இருப்பதாகக் காட்டுகிறார். 🙏
நம்மாழ்வாரும் தமது முதல் ப்ரபந்தத்தில்
அப்புள்ளின்பின் போன என் தனி நெஞ்சமே என்கிறார் 🙏
திருவடியை வாஹனமாகக்கொண்டு நடத்தியருளும்போது
என்னுடைய நெஞ்சு என்னையும் விட்டு விட்டு அத்திருவடியின் பின்னே தனியாய்ப் போய்விட்டது… என்கிறார் 🙏
ஸ்ரீ மந்நாதன் கண்ணாடி கருடனில் ஆரோஹித்துத் திருவீதிகளில் எழுந்தருளுகிறார். 🙏
————–
ஸ்ரீரங்கசந்த்ரமஸம் இந்திரயா விஹர்தும்
விந்யஸ்ய விஸ்வசித சிந்நயநாதிகாரம்
யோ நிர்வஹத்ய நிஸமங்குளி முத்ரயைவ
ஸேநாந்யம் அந்ய விமுகாஸ்தமஶிஶ்ரியாம🙏
நம் குருபரம்பரையில் பெரிய பிராட்டியாரை ஆசார்யராய்க் கொண்டவரும் ,
ஆழ்வார்கள் அனைவரையும் சிஷ்யராய்க்கொண்டவரும்
நித்ய சூரிகளில் ஒருவராக, ஸேநாதிபதியாக, எம்பெருமானின் அதீநத்திற்குட்பட்ட
நித்யவிபூதியையும், லீலாவிபூதியையும் தன் மேற்பார்வையில் பார்த்துக்கொள்ளும்
ஸேனை முதல்வர்..
ஸேநாதிபதி
வேத்ரதரர்
வேத்ரஹஸ்தர்
என்று பல திருநாமங்களைக் கொண்ட இவருடைய திவ்யமஹிஷி சூத்ரவதி என்பவர்.
ஸ்ரீ ஆளவந்தார் தமது ஸ்தோத்ர ரத்னத்தில்
த்வதீய புக்த உஜ்ஜித ஶேஷ போஜிநா
த்வயா நிஸ்ருஷ்ட ஆத்ம பரேண யத்யதாப்ரியேண ஸேநாபதிநா ந்யவேதி
தத் ததாநுஜாநந்தம் உதார வீக்ஷணை:
எம்பெருமானுடைய ஸேஷப்ரசாதத்தை முதலில் உட்கொள்பவரும்,
உபயவிபூதியை நிர்வஹிக்கும் அனுமதி பெற்று அவன் கடாஷத்தாலேயே அவன் திருவுள்ளமறிந்து
கார்யம் செய்பவரும் எல்லாராலும் விரும்பப்படுமவர்–என்று கொண்டாடுகிறார்🙏
எம்பெருமானின் ஶேஷ ப்ரசாதத்தை முதலில் கொள்பவராதலால்,
இவருக்கு ஶேஷாஶநர் என்ற திருநாமமும் உண்டு.
நாம் அநுபவித்து வரும் குருபரம்பரையின் மூன்றாவது ஆசார்யனாக விஷ்வக்ஸேனர் கொண்டாடப்படுகிறார்.
பெரிய பிராட்டியாரே இவருக்கு ஆசார்யனாக இருக்கிறாள்.
ஆழ்வார்கள் அனைவரும் இவருடைய ஶிஷ்யர்களாக இருக்கிறார்கள்.
ஸேனை முதலியாரிடம் உலக விஷயங்களை நடத்தும் பொறுப்பை விட்டு, எம்பெருமான் உகந்தருளின நிலங்களிலே ப்ரவணராய்,
பரமபதமான நித்ய விபூதி மற்றும் ஸம்ஸாரமாகிற லீலா விபூதியையும் ஆனந்தமாக அனுபவிக்கிறார் என்று பூர்வாசார்யர்கள்… 🙏
மேலும், எம்பெருமான் ராஜகுமாரனைப் போலேயும், ஸேனை முதலியார் மூத்த அமைச்சராகவும் பேசப் படுகிறார்🙏
ஓங்கு துலாப் பூராடத்துதித்த செல்வன் வாழியே
ஒண்டொடியாள் சூத்ரவதி உறை மார்பன் வாழியே
ஈங்குலகில் சடகோபற்கிதமுரைத்தான் வாழியே
எழிற் பிரம்பின் செங்கோலை ஏந்துமவன் வாழியே
பாங்குடன் முப்பத்துமூவர் பணியுமவன் வாழியே
பங்கயத்தாள் திருவடியைப் பற்றினான் வாழியே
தேங்குபுகழ் அரங்கரையே சிந்தை செய்வோன் வாழியே
சேனையர்கோன் செங்கமலத் திருவடிகள் வாழியே
ஸ்ரீ அழகிய சிங்கர்
ப்ரஹ்மோத்ஸவ அவசரத்தில்
ஸ்ரீ சேனை முதலியார் திருவீதி புறப்பாடு 🙏
———
கோப்புடைய சீரிய சிம்மாசனம் பரமபதத்தில் உன் இருக்கைக்கு ஒப்பானது
பரமபத சிம்மாசனம் எட்டு கால்கள் கொண்டதாக விவரிக்கப்படுகிறது
தர்மம்
அதர்மம்
ஞானம்
அஞ்ஞானம்
வைராக்கியம்
வைராக்கியமின்மை
பொருள்,
பொருளின்மை என்ற எட்டு கால்களைக் கொண்ட தர்மாதிபீடம்🙏
ஏழுலகம் தனிக்கோல் செய்ய வீற்றிருந்து என்கிற படியே
ஸ்ரீ நரசிம்மர்…
தர்மாதிபீடத்தை அலங்கரித்து…
திருவீதி எழுந்தருளிய ஸந்நிவேசம். 🙏
———
நாவலம் பெரிய தீவினில் வாழும்
நங்கை மீர்களி தோரற்புதங்கேளீர்!
தூவலம் புரியுடைய திருமால்
தூய வாயிற் குழலோசை வழியே
கோவலர் சிறுமியரிளங் கொங்கை குதூகலிப்ப
உடலுள விழ்ந்து எங்குங்
காவலுங் கடந்து கயிறு மாலையாகி
வந்து கவிழ்ந்து நின்றனரே 🙏
ஜம்பூத்வீபம் என்கிற மிகப் பெரிய தீவில் வசிக்கும்
பெண்களே!
ஓர் ஆச்சர்யமான செய்தியைக் கேளுங்கள்! சுத்தமான வலம்புரி சங்கை திருக்கையில்
வைத்திருக்கும் ஸ்ரீமன் நாராயணனுடைய *பவள வாயினால் ஊதப்பெற்று வரும் குழலோசையானது*
திருவாய்ப்பாடியிலிருக்கும் இடைப்பெண்களின் காதில் ஒலித்தவுடன், அவர்கள், தங்களின் உடலும்
உள்ளமும் கண்ணனிடம் இழந்தவர்களாக, காவல்களை மீறி அவனிடம் ஓடி
வந்து, கயிறில் கோத்த மாலை போல் அவனைச் சூழ்ந்து வெட்கத்துடன் தலையை கீழ் நோக்கி
தொங்கவிட்டு நின்றார்கள்!!!! 🙏
புன்னை மர வாகனத்தில்
திருக்குழல் ஊதிக்கொண்டு கோபியர்களை
மெய்ம்மறப்பித்துக் கொண்டு எழுந்தருளும் ஸ்ரீ அழகியசிங்கர்🙏
திரண்டெழு தழை மழை முகில் வண்ணன்
செங்கமல மலர் சூழ் வண்டினம் போலே
சுருண்டிருண்ட குழல் தாழ்ந்த முகத்தான்
ஊதுகின்ற குழலோசை வழியே
மருண்டு மான் கணங்கள் மேய்கை மறந்து
மேய்ந்த புல்லுங் கடை வாய் வழி சோர
இரண்டு பாடுந் துலங்காப் புடை பெயரா
எழுது சித்திரங்கள் போல நின்றனவே
🙏
———-
அனந்தம் ப்ரதமம் ரூபம்…..
என்கிற படியே
எம்பெருமானுக்கு
நிரந்தர கைங்கர்யம் பண்ணும்
ப்ரதம சேஷன்….. 🙏
சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம்
நின்றால் மரவடியாம் நீள் கடலுள் என்றும்
புணையாம் அணி விளக்காம்
பூம் பட்டாம் புல்கும் அணையாம் திருமாற்கு அரவு
போலே ஸர்வதேச ஸர்வகால ஸர்வ அவஸ்தைகளிலும்
எல்லா கைங்கர்யங்களையும் எல்லா காலங்களிலும் செய்ய
திரு உள்ளம் கொண்ட ஆழ்வார்
அவன் செய்யும் அடிமைகளை எடுத்து காட்டுகிறார்….. 🙏
சென்றால் குடையாம்
அவன் உலாவி அருளும் போது
மழை வெய்யில் படாதபடி
குடையாக வடிவு எடுப்பான்.
இருந்தால் சிங்காசனமாம்
எழுந்து அருளி இருந்த காலத்தில்
திவ்ய சிம்ஹாசன ஸ்வரூபியாய் இருப்பான்
நின்றால் மரவடியாம்
நின்று கொண்டு இருந்தால் பாதுகையாய் இருப்பான்
நீள் கடலுள் என்றும் புணையாம்
திருப் பாற் கடலில் திருக் கண் வளர்ந்து அருளும் போது
மெத்தையாய் இருப்பான்
புணையாம் திருப் பாற்கடலில் அழுந்தாதபடி தெப்பமாவான்
அணி விளக்காம்–
ஏதேனும் ஒன்றை விளக்கு கொண்டு காண அவன் விரும்பும் பொழுது விளக்கும் ஆவான்
மணி விளக்காம் என்றுமாம்
பூம் பட்டாம்
சாத்திக் கொள்ளும்படி திரு பரியட்டத்தை அவன் விரும்பும் பொழுது அதுவும் ஆவான்
புல்கும் அணையாம்
சாய்ந்து அருளும் போது தழுவிக் கொள்ளுவதற்கு
உரிய உபாதாநமும் ஆவான்
பிரணய கலஹத்தினில் விரஹ துக்கம் தோன்றாதபடி அணைத்துக் கொள்வானாம் என்றுமாம்…
ஆளவந்தாரும்
பணிபதி:ஸய்யாஸனம் வாகனம் என்று
ஆதிசேஷனின் நிரந்தர நிரவதிக கைங்கர்யத்தைக்கொண்டாடுகிறார்🙏
ஸ்ரீ அழகியசிங்கர்
நித்யசூரிகளில் ப்ரதம சேஷனான ஆதிசேஷன் ஸிம்மாஸனமாகக் கொண்டு திருவீதிகளில் புறப்பாடு கண்டருளுகிறார்🙏
———-
முடிச்சோதி யானது முகச்சோதியாய் மலர்ந்ததுவோ என்று கோவிந்த அபிஷேகத்தால்
திரு முடியில் நல் தரித்த ஸ்வாமித்வ பிரகாசமாய் கதிர் ஆயிரம் இரவி கலந்து எறிந்தால் ஒத்த நீண் முடியும்
ச விலாச ஸ்மித அதரம் பிப்ராணம் முக பங்கஜம் -என்கிறபடியே
முறுவல் எடுத்த கலம் என்றலாய் -ஸ்வாமித்வ பல உபாதான ஸுசீல்ய ப்ரகாசகமான ஸ்மயமான முகாரவிந்தமும் –
அலர்ந்து குளிர்ந்து இருக்கிற இரண்டு தாமரைப் பூக்களை மதத்தாலே அமுக்கு ஆடுகிற
இரண்டு வண்டு ஒழுங்கு போல் இருக்கிற தன் கைச் சார்ங்கம் அதுவே போல் அழகிய திருப் புருவ வட்டங்களும்
பதிம் விஸ்வஸ்ய-என்கிற பிரமாணம் வேண்டாதே அனைத்து உலகும் உடைய அரவிந்த லோசனன் என்று
ஸர்வேஸ்வரத்வ சிஹ்னமாய் ஸ்மிதோபத்தஸ் பர்த்த ஸ்ப்புரித ச பரதவ த்வந்த்வ லலிதங்களான திருக் கண்களும்
கஸ்தூரீ கலிதோர்த்வ புண்டர திலகம் -என்று திரு நெற்றியில் சாத்தின கஸ்தூரி திலகமும்
மாட்டுயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ -என்று நித்ய சந்தேக ஜனகமான கோல நீள் கொடி மூக்கின் அழகும்”
அதினுடைய பல்லவ உல்லாசம் போல் இருக்கிற திருக் கபோலங்களும்
அதினுடைய நவ குஸூமம் போலேயாய்-
பன்னிலா முத்தம் தவழ் கதிர் முறுவல் செய்து -என்கிறபடியே
பூர்ண சந்திரன் முழு நிலாவைச் சொரிந்தால் போலே திரு முகத்தின் ஒளியை ப்ரவஹிக்கிற ஸ்மித விலாசமும்
என்கிற படியே
திருமுகத்தின் அழகு
இருந்தபடி,…. 🙏
———
திருவோணத் திருவிழவில்
அந்தியம் போதில் அரியுருவாகி அரியை அழித்தவனை
பந்தனை தீரப்பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்று பாடுதுமே! 🙏
எம்பெருமான் எடுத்த அவதாரங்களிலேயே மிகவும் குறுகிய காலத்திற்கு ஏற்பட்ட அவதாரம் நரசிம்ம அவதாரம்தான்.
எந்த தூணை பிரகலாதன் கை காட்டுவான் அங்கிருந்து ஆவிர்பவித்துத் தோன்றி எழுந்து
பிரகலாதன் வார்த்தையை மெய்ப்பிப்போம் என்று பெருமாள் ஆவலுடன் அண்டமெங்கும் வியாபித்துக்
காத்துக் கிடந்ததில்தான் அவருக்கு களைப்பு ஏற்பட்டதாம், இரணியனை கொன்றதால் அல்ல.
அந்த களைப்பைத்தான் பந்தனை என்று பெரியாழ்வார் பாடுகின்றார்..
பாலும் சர்க்கரையும் சேர்ந்தது போலவாம் நரசிம்ஹ அவதாரம்.
நரனும் சிங்கமும் கலந்த அழகனாம்.
ஆகையால் தான்
திருமழிசை ஆழ்வாரும் அழகியான் தானே அரியுருவம் தானே
என்று கொண்டாடுகிறார்🙏
முன் நரசிங்கமதாகி அவுணன் முக்கியத்தை முடிப்பான்*.. 🙏
அதிருங்கழற் பொருதோள் இரணியனாகம் பிளந்து அரியாய்
உதிரமளைந்தகையோடிருந்தானை *உள்ளவா கண்டார் உளர்*🙏
இடந்திட்டிரணியன் நெஞ்சை இருபிளவாக முன் கீண்டாய்! என்று ஆழ்வார்கள்.. 🙏
ஆண்டாளும் திருப்பாவையில்….
மாரிமலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
சீரியசிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரிமயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரிநிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலேநீ பூவைப்பூவண்ணா! உன் கோயில் நின்றும் இங்ஙனே போந்தருளி…..
மழைக் காலத்தில் மலைக்குகையில் படுத்துத் தூங்கும் வீரமுள்ள சிங்கம், தூக்கம் தெளிந்து எழும்பொழுது
நெருப்புப் போல சிவந்த கண்களைத் திறந்து, பிடரி மயிர் சிலிர்த்து
உடம்பை நாலு பக்கமும் அசைத்துச் சோம்பல் முறித்துக் கர்ஜனை செய்து வெளியில் வருவது போல
காயம்பூ போன்ற நீல நிறமுடையவனே, நீ உன் கோயிலிலிருந்து புறப்பட்டு வந்து ….
என்று அவன் சிம்ஹ நடையைக் கொண்டாடுகிறாள்🙏
ஸ்ரீ அழகியசிங்கர்
ஸிம்ஹ வாகனத்தில்
திருவீதி புறப்பாடு கண்டருளுகிறார் 🙏
———-
எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து
இங்கு இல்லையால் என்று இரணியன் தூண் புடைப்ப,
அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய, *என்
சிங்கப் பிரான் பெருமை ஆராயும் சீர்மைத்தே?*🙏
எம்பெருமானுடைய வ்யாபகத்வத்திலே விப்ரதிபத்தியுடையார் இரணியன்பட்ட பாடுபடுவார்கள்;
ஆகையாலே கெடுவிகாள்! அவன் பட்டபாடு படாதே கிடிகோள்-என்கிறார்.
வேறேயொரு தூணிலிருந்து நரசிங்கமூர்த்தி தோன்றினால், முன்னமே ஒரு நரசிங்கத்தை உள்ளே வைத்து நாட்டிய தூண்
அது என்று சொல்லிவிடக் கூடுமாகையாலே, அந்த வார்த்தைக்கு இடமில்லாதபடி,
அந்த இரணியன் தானே தனது உயரம் பருமனுக்குப் பொருந்தப் பார்த்து அளந்து நாட்டிய அவன் வாசல் தூணிலிருந்தே
திருமால் நரசிங்கமாய்த் தோன்றினானென்பதும்,
வேறு யாரேனும் கையால் தட்ட அத் தட்டியவிடத்திலிருந்து தோன்றினால் அவர் தம் கையில் நரசிங்கத்தை அடக்கிக் கொண்டு
வந்து தூணிலே பாய்ச்சினார் என்று சொல்லிவிடக் கூடுமாகையாலே,
அந்த வார்த்தைக்கு அவகாசமில்லாதபடி அவ்விரணியன் தானே தன் கையால் தட்டினவளவில் திருமால் தோன்றினானென்பதும்,
அவன் ஓரிடத்தில் தட்ட மற்றோரிடத்திலிருந்து நரசிங்கம் தோன்றினால் எங்குமுளன்’ என்று ப்ரஹ்லாதன் செய்த
பிரதிஜ்ஞை தவறி நீ சொல்லுகிறவன் இங்கில்லை என்று இரணியன் செய்த பிரதிஜ்ஞை நிலை நிற்குமாகையாலே,
அதற்கு இடமில்லாதபடி அவன், தட்டின இடத்திலிருந்தே திருமால் தோன்றினானென்பதும்,
அவன் தட்டினபிறகு சிறிதுபோது கழித்து நரசிங்கம் தோன்றினால் ‘நான் தட்டினபொழுது திருமால் அங்கில்லை’ என்று
அவன் சொல்லி, திருமால் எங்கும் எப்பொழுதும் உள்ளும் புறமும் வியாபித்திருக்கிற உண்மை. 🙏
————-
அன்னத்தை ஆசார்யனோடு ஸாம்யம் சொல்லும் பூர்வாசார்யர்…. 🙏🙏
செல்வ நம்பி பெரியாழ்வார் நாதமுனிகள் ஆளவந்தார் போல்வாரை அன்னம் என்று கொள்ளலாம்…
நீரையும் பாலையும் கலந்து வைத்தால் அவற்றை பிரிக்க வல்லது அன்னம் -அது போலே ஆச்சார்யர்கள் சார அசார விவேக குசலர்கள்-
வேத சாஸ்திரங்களை வெளியிட்டது பகவத் அவதாரமான ஹம்சம் -அது போல் சிஷ்யர்களைக் குறித்து சாஸ்திர உபதேசம் பண்ணுவார்கள்…
ஹம்சம் சேற்றில் பொருந்தாது -அது போலே மாய வன் சேற்று அள்ளல் பொய்ந்நிலத்து அழுந்தார்கள்-
அன்னம் மாதர் நடை அழகைக் கண்டு அப்படியே தானும் நடை பயிலும் -அது போலே அன்ன நடைய அணங்கான
பிராட்டியின் புருஷகாரத்வம் ஆகிற நடத்தையை அநுசரிப்பர்கள் –
அன்னமானது மேலே எழுந்த தாமரை இலையைக் குடையாகவும் பக்குவமான செந்நெல் பயிர் அசைந்து ஆடுவதை சாமரம் வீசுதலாகவும்
சங்குகளின் முழக்கத்தை விஜய கோஷமாகவும் வண்டுகளின் மிடற்று ஓசையைப் பாட்டாகவும் கொண்டு
மானஸ சரஸ் சிலே உள்ள தாமரையை ஆசனமாகக் கொண்டு வீற்று இருக்குமே
அப்படியே தாமரை இலை போலே சாமளமான பகவானது திரு மேனியை தமக்கு சம்சார தாப ஹரமாகவும்
செந்நெல் பயிர் போலே
அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் என்னும்படி பரிபக்குவ ஞானம் உடையவர்கள் ஸ்தோத்ரம் செய்யவும் ….
விதியினால் பெடை மணக்கும் மென்னடைய அன்னங்காள் என்கையால் சாஸ்திர முறைப்படி க்ருஹஸ்த ஆஸ்ரமத்தில் இருப்பவர்கள் ஆகவுமாம் …
அந்தரம் ஓன்றும் இன்றி அலர் மேல் அசையும் அன்னங்காள் என்கையாலே சம்சார பற்று அற்ற யுத்திகள் ஆகவுமாம்🙏
ஸ்ரீ ஹம்ஸாவதாரம் 🙏
அங்கமாறும் சங்க வண்ண மன்ன மேனி சார்ங்க பாணி
புள்ளதாகி வேத நான்கும் ஓதினாய்!! 🙏
துன்னிய பேரிருள் சூழ்ந்து உலகை மூட மன்னிய நான்மறை முற்றும் மறைந்திட பின் இவ்வுலகினில்
பேரிருள் நீங்க அன்று அன்னமது ஆனானே அரு மறை தந்தானே! 🙏
அன்னமாய் முனிவரோடு அமரர் ஏத்த அருமறையை வெளிப்படுத்த அம்மான் தன்னை!! 🙏
அன்னமாய் நிகழ்ந்த அமரர் பெருமானை! 🙏
துன்னி மண்ணும் விண்ணாடும் தோன்றாது இருளாய் மூடிய நாள் அன்னமாகி அருமறைகள் அருளிச் செய்த அமலன்!!!! 🙏
முன் இவ்வேழ் உலகு உணர்வு இன்றி இருள் மிக உம்பர்கள் தொழுது ஏத்த அன்னமாகி அன்று அருமறை பயந்தவனே!! 🙏
ஒருநாள் அன்னமாய் அன்று அருமறை பயந்தான்!! 🙏
புள்ளாய் ஏனமுமாய்ப் புகுந்து என்னை யுள்ளம் கொண்ட….! 🙏
அன்னமாய் நூல் பயந்தாற்கு……!! 🙏
முன் இவ்வுலகங்கள் ஏழும் இருள் மண்டி யுண்ண முதலோடு வீடும் அறியாது என்னிது வந்தது என்ன விமையோர் திசைப்ப
எழில் வேதம் இன்றி மறைய பின்னையும் வானவர்க்கும் முனிவருக்கும் நல்கி இருள் தீர்ந்து இவ்வையம் மகிழ
அன்னமதாய் இருந்து அங்கு அற நூல் உரைத்தவைத்து நம்மை யாளும் அரசே !!🙏
புள்ளாய் என்றும்
ஆழ்வார்கள்…!! 🙏
————
*ஆதித்யானாம் அஹம் விஷ்ணு:
ஆதி³த்யாநாம் விஷ்ணு:…..
ஜ்யோதிஷாம் அம்ஸு²மாந் ரவி:
ஆண்டாளும்
திங்களும் ஆதித்யனும் எழுந்தாற்போல் அங்கண் இரண்டும் கொண்டு… என்கிறாள்🙏
காரார் புரவி ஏழ் பூண்ட தனி ஆழி
ஸப்த யுஞ்ஜந்தி ரதம் ஏக சக்ரம்
முக்தி மார்க்கத் தலைவாசல்
ஜகத் ஏக சக்ஷுஷே
ஸவித்ருமண்டல மத்யவர்த்தி நாராயண: ஸரஸிஜாஸந ஸந்நிவிஷ்ட:
செய்யதோர் ஞாயிற்றைக்காட்டி சிரீதரன் மூர்த்தி ஈதென்னும்🙏……..
புரவியேழ் ஒருகாலுடைய தேரிலே….🙏
ஏழு குதிரைகளும்
(ஏழு சந்தஸ்ஸுக்களும்) ஒரு சக்கரத்தையும் உடைத்தாகையாலே விலக்ஷணமான பெருமை வாய்ந்த தேரிலே
தேஜோ விசேஷத்தாலே
திருவாழி உடன் ஒத்து கால சக்ர நிர்வாஹகனான எம்பெருமான் ஆஞ்ஜையை நடத்தி
நக்ஷத்ரம் முதலிய சோதி மண்டலம் தேஜஸை குறைத்து அக்னியினுடைய தேஜஸ் ஸூக்கும் சந்திரன் உடைய அம்ருதத்துக்கும் பிறப்பிடமாயும்
மந்தேஹர் என்னும் ராக்ஷஸர்களுக்கு சிவந்த நெருப்பாயும் அர்ச்சிராதி கதிக்கு முதல் வாசலாயும்
ஜகத் சக்ஷுஷே-என்கிற படியே அனைவருக்கும் கண் போன்ற
ஸர்வேஸ்வரன் கண்ணிலே பிறந்த கண் மணியாயும் -வேதமயமுமாய் இருக்கும் ஸூர்ய மண்டலத்தில்
சீர் பூத்த செழும் கமலத் திருத் தவிசில் வீற்று இருப்பவனாய் -தோள் வளையும் மகரக் குண்டலங்களும் கிரீடமும் ஹாரமும்-
திரு வாழி திருச் சங்கும் பொன்னிறமான திரு மேனியும் -செந்தாமரைக் கண்களும் உடையனாய் -பகவத் விக்ரஹத்தையும்
ஆதித்ய மண்டலத்தையும் தன்நிறம் ஆக்குகின்ற சிவந்த திரு நிறத்தை உடையளான பிராட்டியோடே கூட ஆதித்யன் உள்ளே இருப்பவனாய்
எப்போதும் சிந்திக்க யுரிய தேஜோ ரூபியாய் இருக்கிற விலக்ஷண பரம புருஷனை ப்ரதிபாதிக்கின்ற
சூர்யப்ரபை.. யில்
ஸ்ரீ அழகியசிங்கர் திருவீதி புறப்பாடு கண்டருளுகிறார் 🙏
—————-
சந்த்ரமா மநசோ ஜாத -புருஷ ஸூக்தம் படி
பரம் பொருளின் மனத்தில் இருந்து சந்தரன் உண்டானான் என்கை…
ஆண்டாளும்…
திங்களும் ஆதித்யனும் எழுந்தாற்போல்–என்கிறாள்..
விஷ்ணோ கடாட்சம் !! குளிர்ச்சியான கண் ஞானத்தை பெருக்க வல்லது,
வெப்பம் தரும் கண் அஞ்ஞான இருளை விலக்க வல்லது–திங்களும் ஆதித்யனும் எழுந்தாற்போல் …
ஆண்டாள் பரமனின் கண்களில் ஒரு சேரக் காணப்படும் குளிர்ச்சியையும், வெப்பத்தையும் பற்றிச் சொல்வது,
அடியவரைக் காப்பவனாகவும், அதே நேரம் பகைவர்க்கு நெருப்பாகவும் விளங்கும் பரமனின் தன்மையைச் சொல்வதாம்….
ஏககாலத்தில் ஞாயிறும் திங்களும் உதித்தால் தாமரைமலர் பாதி முகுளிதமாயும், பாதி விகஸிதமாயுமிருக்கு மென்று கொண்டு,
கண்ணபிரானுடைய திருக்கண்களுக்கு அந்த நிலைமையை வேண்டுகின்றனர்.
இஃது, இல்பொருளுவமை’ வடநூலார், அபூதோபமை’ என்பர்.
கண்ணனுடைய திருக்கண்கள் சேதனருடைய குற்றங்குறைகளை நினைத்துப் பாதி மூடியும்,
அவர்களுடைய கூக்குரலைக் கேட்டுப் பாதிதிறந்து மிருக்கு மாதலால், அதற்கு இந்த உவமை கூறியது மிகப் பொருந்தும்.
மகாவிஷ்ணுவின் இரண்டு கண்களும் சூரியன் மற்றும் சந்திரனாகப் பிரகாசிக்கிறது.
இரண்டுமே உதய காலத்தில் குளிர்ந்த கிரணங்களைப் பெற்றிருக்கும்.
எனவே, எழுந்தாற்போல் உதயமான சூரிய சந்திரனைப் போன்று, இரண்டு கண்களால் எங்களை நோக்கினால்,
நாங்கள் சாபம் நீங்கியவர்களாக ஆவோம் என அழைக்கிறாள் ஆண்டாள் . 🙏
சந்த்ரப்ரபை வாஹனத்தில் ஸ்ரீ அழகியசிங்கர் 🙏🙏
————
தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து திருப்பாற்கடலில் அமிர்தம் கடைகின்றனர்.
அப்போது அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டது. அசுரர்கள் தேவர்களுக்கு தொல்லை தருகின்றனர்.
அசுரர்களின் தொல்லை தாங்கமுடியாமல் தேவர்கள் பெருமாளிடம் சென்று முறையிடவே,
பெருமாளும் மோகினி (நாச்சியார் திருக்கோலம்) அவதாரம் எடுத்து தேவர்களை காத்தருளினார். 🙏
ஸ்ரீ அழகியசிங்கர்
நாச்சியார் திருக்கோலத்தில்
திருவீதி புறப்பாடு கண்டருளுகிறார் 🙏
———
யோக நரசிம்மர் திருக்கோலம்
—
அனுமந்த வாகனம்
——-
சூர்ணாபிஷேகம்
——–
வாரணம் பைய நின்று ஊர்வது போல்.. பெரியாழ்வார் 🙏
யானைக்கு எப்போ மதம் பிடிக்கும் ன்னு யார்க்கும் தெரியாது.
ஆனா, எந்த யானைக்கு மதம் பிடிச்சாலும் என்ன நடக்கும்னு எல்லார்க்கும் தெரியும்.
அதனால் முன்னெச்செரிக்கையா யானையை இரும்புச் சங்கிலியால் கட்டிப் போட்டிருப்பார்கள்..
கிளர்ச்சியுற்ற அந்த யானையின் மதநீர், அதன் இரு கன்னங்களிலும் வழிந்தோட, கால்கள் பிணைக்கப்பட்டுள்ளதால்
அகலமாக வைக்க இயலாது, அருகருகே அடி வைத்து மெல்ல மெல்ல நடப்பதை போல
தூங்கு பொன்மணியொலிப்ப உடன்கூடிக் கிண்கிணி ஆரவாரிப்ப உடைமணி பறை கறங்க
கண்ணன் அணிந்துள்ள பொன் ஆபரணங்களின் மணிகள் ஒலி எழுப்ப,
அவ்விசைக்கேற்றவாறு காலில் அணிந்துள்ள கிண்கிணி சதங்கைகள் ஆர்ப்பரிக்க,
இடையில் கட்டிய அரைஞாண் கயிற்றிலுள்ள மணிகளும் இவற்றோடு சேர்ந்து பறை ஓசையினைப் போல்
பெருமளவு சத்தம் உண்டாக்க தன்னுடைய பெரிய பாதங்களை மெல்ல மெல்ல தன் கால் எட்டுகின்ற அளவு அடி வைத்து,
சாரங்கம் என்ற வில்லினை ஆயுதமாகக் கொண்டவன் தளர்நடை நடக்கிறான்…!!!🙏
அநுபவரசிகர்களான ஆழ்வார்கள் எம்பெருமானை யானையாகவே பல இடங்களில் பேசுவார்கள்.
யானைக்கும் எம்பெருமானுக்கும் பல விதங்களில் ஒத்த கருத்து நிலவும்.
1.யானையை எத்தனை தடவை பார்த்தாலும் பார்க்கும் போதெல்லாம் அபூர்வ வஸ்து போலவே இருந்து பரமாநந்தம் பயக்கும்.
எம்பெருமானும் எப்பொழுதும் நாள், திங்கள், ஆண்டு ஊழி யூழி தோறும் அப்பொழுதைக்கு அப்பொழுது
என்னாராவமுதம் என்னும்படி யிருப்பான்.
2.யானையின் மீது ஏற வேண்டியவன் யானையின் காலைப் பற்றியே ஏறவேண்டும்.
எம்பெருமானிடம் சென்று சேர வேண்டியவுர்களும் அவனது திருவடியைப் பற்றியே சேர வேண்டும்.
3.யானை தன்னை கட்ட தானே கயிற்றை எடுத்துக் கொடுக்கும். எட்டினோடு இரண்டு எனும் கயிற்றினால் (திருச்சந்த விருத்தம்) என்கிறபடியே,
எம்பெருமானை கட்டுப் படுத்தும் பக்தியாகிற கயிற்றை அவன் தந்தருள்வான்.
4. யானையை நீராட்டினாலும் அடுத்த க்ஷணத்திலேயே அழுக்கோடு சேரும். எம்பெருமான் சுத்த ஸத்வ மயனாய் பரம பவித்ரனாய்
இருக்கச் செய்வதாயும் பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்குமுடைய நம் போல்வாரோடு
சேர திருவுள்ள மாயிருப்பான் வாத்ஸல்யத்தாலே.
5.யானையைப் பிடிக்க வேண்டில் பெண் யானையைக் கொண்டே பிடிக்க வேண்டும்
அதன் போன்றே பிராட்டியின் புருஷாகாரமின்றி எம்பிரான் வசப்படான் .
6.யானை பாகனுடைய அனுமதியின்றி தன்னிடம் வருபவர்களை தள்ளி விடும்.
எம்பெருமானும் வேதம் வல்லார் துணைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப் பாதம் பணிந்து என்கிறபடியே
பாகவதர்களை முன்னிட்டு புகாதாரை அங்கீகரித்தருளான்.
7. யானையின் மொழி யானைப் பாகனுக்குத் தெரியும், எம்பெருமானின் மொழி திருக்கச்சி நம்பிகள் போல்வார்க்கே தெரியும்
(பேரருளானப் பெருமானோடே பேசுபவர் நம்பிகள்).
8. யானை உண்ணும் போது இறைக்கும் அரிசி பல கோடி நூறாயிரம் எறும்புகளுக்கு உணவாகும்
எம்பெருமான் அமுது செய்து சேஷித்த பிரசாதத்தாலே பல கோடி பக்த வர்கங்கள் உஜ்ஜீவிக்கக் காண்கிறோம்.
9.யானைக்கு கை நீளம் எம்பெருமானும் அலம் புரிந்த நெடுந்தடக்கையன் இறே
“நீண்ட அந்தக் கருமுகிலை யெம்மான் தன்னை.”(பெரிய திருமொழி 205-2)
10.யானை இறந்த பின்பும் உதவும் எம்பெருமானும் தீர்த்தம் பிரசாதித்துத் தன்னுடைய சோதிக்கு எழுந்தருளின பின்பும்
இதிகாச புராணங்கள் உணர்த்தி உதவுகின்றன.
11. யானை ஒரு கையே உள்ளது எம்பெருமானுக்கும் கொடுக்கும் கையொழிய கொள்ளும் கையில்லை
12. யானை பாகனுக்கு ஜீவனங்கள் சம்பாதித்துக் கொடுக்கும். எம்பெருமானும் அர்ச்சக பரிசாரகம் ப்ரக்ருதிகளுக்கு சம்பாத்யத்திற்கு வழி செய்கிறார்.
13. யானை மெல்ல அசைந்து அசைந்து செல்லும். எம்பெருமானும் உலா வரும் பொழுது அசைந்து அசைந்து வருவார்.
14. யானை சாதுவானது எம்பெருமானும் சாதுவானவரே…!!!! 🙏🙏
(காஞ்சி ஸ்வாமி 🙏)
————-
அர்ச்சுனனை
(பார்த்தன்) வில் எடுக்கும்படி பண்ணி அவனுடைய
திண்தேர்மேல் முன் நின்ற–வண்மையான- தேரில்… எம்பெருமான் தானே சாரதியாக முன்னின்று
அர்ஜூனன்… மேல் விழவேண்டிய அம்புகளை தன்மேல் தாங்கி!!
செங்கண் செம்மையான அருள் நோக்கு நோக்கும் திருமால்
வாத்ஸல்யம் மிக்க கண்களால் பரிவுடனே பாண்டவர்களை ரக்ஷித்த கண்ணழகு
செங்கண்மாலின் செந்தாமரைக் கண்ணழகு
அலவலை தன்னால் வந்த வெற்றி என்று இல்லாமல்
அப்படி ஆகிவிடாதவாறு அர்ஜூனன் வெற்றி பெற்றான் என்பது போல அவனைப் புகழ்ந்த கண்ணன்.
!! பக்தர்களுக்கு தன்னை நம்பி சரணடைந்தவர்களின் பால் பகவான் அருளும் பாங்கு அப்படிப்பட்டது!!
அலவலை என்றால் தான் சொன்ன உபதேசத்தின் அர்த்தமும் கேட்பவர்கள் தகுதியும் பார்க்காது…….
அலை!! அலையாக!!! உபதேசம் பண்ணின சீர்மை!…. எளிமை! 🙏!
மங்கல நன் வனமாலை மார்வில் இலங்க
மயில் தழைப்பீலி சூடி பொங்கிள வாடை அரையில் சாத்திப்
பூங்கொத்து காதில் புணரப் பெய்து- ….
தேரில் எழுந்தருளி உலா வரும் எம்பெருமான் … 🙏
ஸ்ரீ அழகியசிங்கர்
———
தெள்ளியசிங்கமாகிய தேவை திருவல்லிக் கேணி கண்டேனே என்பது திருமங்கையாழ்வார் பாசுரம்.
பெருமாள் ரொம்பவும் தெளிவாய் இருக்கிறாராம்.
மிக்கானை மறையாய்த் தெரிந்த விளக்கை என்னுள்
புக்கானைப் புகழ் சேர் பொலிகின்ன பொன்மலையைத்
தக்கானைக் கடிகைத் தடம் குன்னின் மிசை இருந்த
அக்காரக்கனியை அடைந்துய்ந்து போனேனே🙏
அக்காரம் என்றால் சர்க்கரை. அந்த சர்க்கரையில் கனி செய்தால் எப்படி இருக்கும்?
இரணிய வதம் முடிந்தும், ஆவேசம் தணியாமல் இருந்தார் நரசிம்மர்.
இரணியனின் ரத்தம் பூமியில் சிந்தாதபடி வாயில்வைத்து உறிஞ்சியதால், உக்கிரத்துடன் இருந்தார் நரசிம்மர்.
இதனால் கிழக்குத்தொடர்ச்சி மலை வழியாக மேற்குத்தொடர்ச்சி மலைக்கு வந்த நரசிம்மர்,
அங்கிருந்த வனத்தில் சிங்கமாகவே திரிந்தார். அதேசமயம், தம்முடைய அவதார நோக்கம் பூரணமாகிவிட்டதை மறந்திருந்தார்.
இதனால் உலக இயக்கம் தடைப்பட்டது. தேவலோகம் களை இழந்தது. பூமியிலுள்ள உயிரினங்கள் அஞ்சி நடுங்கின.
நரசிம்மரின் உக்கிர சொரூபத்தையும், ஆவேசத்தையும் பார்த்து அங்கிருந்த வனவிலங்குகள் அபயக்குரல் எழுப்பின.
அதேசமயம் மகாவிஷ்ணு வைகுண்டத்தில் இல்லாததால் மகாலட்சுமி சோகத்தில் ஆழ்ந்தார்.
அவ்வேளையில் மகாலட்சுமியின் நிழல், வனத்தில் இருந்த நரசிம்மரின் மீது படர்ந்தது.
அக்கணமே நரசிம்மர் சாந்த சொரூபியாக மாறினார். தம்முடைய அவதார நோக்கம் முழுமையாக நிறைவேறிவிட்டதை உணர்ந்தார்.
தம்மீது படர்ந்த அந்நிழலுக்கு உயிர் கொடுத்து, மகாலட்சுமியை ஆலிங்கனம் செய்து மனநிறைவு கொண்டார்.
பின்னர் தம் இடது மடியில் லட்சுமியை அமர்த்தி அரவணைத்தபடி சிவன், பிரம்மாவுக்குத் தரிசனம் தந்தார்.
அப்போது பிரம்மா, சிவன், தேவாதி தேவர்கள் அனைவரும் பூமாரி பொழிந்து லட்சுமி நரசிம்மரை வாழ்த்தி வணங்கினர்.
எங்குமுளன் கண்ணனென்ன மகனைக்
காய்ந்திங்கில்லையாலென்று இரணியன் தூணுடைப்ப
அங்கப்போதே அவன் வீயத் தோன்றிய
என் சிங்கப்பிரான் பெருமை ஆராயும் சீர்மைத்தே
ஒவ்வொரு ஆழ்வாரும் இந்தப் பெருமானை ஒவ்வொரு கோணத்திலிருந்து அனுபவித்திருக்கிறார்கள்.
அவருடைய பெருமை யாருக்குத் தெரியும்? ஒருத்தருக்கும் தெரியாது.
சிங்கப் பெருமான் பெருமை சொல்லி முடியாது என்றே நம்மாழ்வார்… ஆனந்தப்படுகிறார். 🙏
நரசிம்மாவதாரத்துக்குத் தனிச்சிறப்பு உண்டு. யாதெனில்,
நரசிம்மப் பெருமானுக்கு முன்னே இருந்தவர்களெல்லாம் மிருகமாக மட்டும் அவதரித்தவர்கள்.
நரசிம்மருக்குப் பின்னே இருந்தவர்கள் எல்லாம் மனுஷ்யர்களாகவோ தேவர்களாகவோ அவதரித்தவர்கள்.
ஆனால் நரசிம்மாவதாரம்தான் மிருகத்வம் நரத்வம் மிருகமான தன்மை, மனிதனான தன்மை
இந்த இரண்டும் சேர்ந்திருக்கிற அவதாரம். இதை சிதாக்ஷீரநியாயம் என்று சொல்வர்கள்.. 🙏
————
குதிரை–புராணங்களிலும், சங்க இலக்கியங்களிலும், மன்னர் காலத்திலும், சிறப்பாக கருதப்பட்டு வந்து உள்ளது.
இளவரசர்கள் யானை ஏற்றம், குதிரை ஏற்றம் ரதம் ஓட்டுதல் இவற்றில் தேர்ச்சி அடைந்தனர்.
பண்டையஅரசுகளின் படைகளில் குதிரைப்படை இன்றியமையாத ஒன்றாக இருந்துள்ளது.
குதிரைகள் மிக வேகமாக ஓட வல்லவை. அவற்றின் சக்தி ப்ரமிப்பூட்ட வல்லது.
நமது வைணவ திருக்கோவில்களில் பிரஹ்மோத்சவத்தில் குதிரைவாஹனம் சிறப்பானது.
குதிரை,
புரவி தவிர ~ மா பரி மான், இவுளி, *கலிமா – குதிரையின் வேறு பெயர்கள்.
குதிரை வாகன புறப்பாட்டில், திருமங்கை மன்னனின் திருவவதார மகிமையை விளக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
கலியன், நீலன் திருவாலிநாடன் என பலவாறு பெயர்பெற்ற திருமங்கை ஆழ்வார், ஒரு மன்னர்.
தினமும் 1008 பாகவத அடியார்களுக்கு நித்யம் ததீயாராதனை செய்து உபசரிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
ஒரு கட்டத்தில் அவரிடமிருந்த செல்வம் குறைந்து, அப்பணியைச் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
ஆனாலும் கலங்காத அவர் ஒருகட்டத்தில் களவு செய்தாவது அடியார்களுக்கு அன்னமிடும் சேவையைத் தொடர்ந்தார்.
அவரது பக்தியை வெளிப்படுத்துவதற்காக எம்பெருமான் திருமணக்கோலத்தில் சென்று எட்டெழுத்து மந்திரத்தை உபதேசித்தார்
அதன்பின் அவர் ஆழ்வார்களில் ஒருவராகி, திருமங்கையாழ்வார்’ என்று பெயர்பெற்றார்.
இந்த உன்னத நிகழ்வை நினவு கூறும் விதமாக இன்று தெள்ளியசிங்கர் தங்க குதிரையின் மீது எழுந்து அருளுகிறார் 🙏
திருமங்கை மன்னன் தன்னுடைய ஆடல்மா என்கிற குதிரை மேல் ஏறிக்கொண்டு புறப்பாடு காண்கிறார்.
பெருமாளுடன் வரும் கொத்து பரிசாரங்களையும் மிரட்டி அவர்களிடம் உள்ள எல்லா பொருட்களையும் கவர்கிறார்.
ஸ்ரீமன் நாராயணன், ஆலி நாடனை கலியனாக ஆட்கொண்டு-நம் கலியனோ?!!?
ஓம் நமோ நாராயணா என்னும் அஷ்டாக்ஷர மந்திரத்தை உபதேசிக்கிறார்;🙏
சிந்தை தெளிந்து அருள் பெற்ற ஆழ்வாரும், திருமொழி பாசுரங்களை வாடினேன் வாடி வருந்தினேன்” என தொடங்குகிறார். 🙏🙏
சிங்கராச்சாரி தெருவும் தேரடி வீதியும் சேரும் இடத்தில் உள்ள குதிரை வாகன மண்டபதிற்கருகே,
ஏசல் முடிந்து ஆழ்வார் மங்களாசாசனம் நடந்து பட்டோலை வாசித்தல் நடைபெறுகிறது.
இன்று பெருமாள் திருப்பரிவட்டத்துடன் திருவல்லிக்கேணி தல புராணத்தில் உள்ள
இந்தப் பட்டோலை வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது🙏
ஸ்ரீ அழகியசிங்கர்
*குதிரை வாகனத்தில்..
திருமங்கையாழ்வாரைக் கடாக்ஷிக்கும்…
திருவீதி புறப்பாடு கண்டருளுகிறார் 🙏🙏
————
ஆளும் பல்லக்கு – இந்த பல்லக்கு நான்கு ஆட்கள் தங்கள் தோள்கள் மீது பல்லக்கை சுமப்பது போன்றே
அமைந்து இருப்பதால் ஆள் மேல் பல்லக்கு..
இந்த பல்லக்கில் ஸ்ரீ அழகியசிங்கர் நிறைய (9) போர்வைகளை போற்றிக்கொண்டு எழுந்து அருளுகிறார்.
புறப்பாடுக்கு பிறகு மட்டையடி சேவை,
திருமங்கை மன்னனை ஆட்கொண்ட படலத்தில்,
பெருமாள் ஒரு கணையாழியை [மோதிரத்தை] தொலைப்பதாகவும்,
அதிகாலை பெருமாள் நாச்சிமாருக்கு கூட தெரியாமல் தனது மோதிரத்தை தேடி போர்வையுடன் வந்து,
முன்தினம் கலியன் வைபவம் நடந்த அதே இடத்தில் நகையை தேடும் வைபவம் 🙏
நடந்த அதே இடத்தில் நகையை தேடும் வைபவம் போர்வை களைதல் என கொண்டாடப்படுகிறது.
கலியன் வைபவம் நடந்து, திருத்தி பணி கொண்டாடப்பட்டு, பட்டோலை வாசிக்கப்பட்ட அதே இடத்தில்
பெருமாள் பல்லக்கு ஒன்பது சுற்றுக்கள் சுற்றி ஏளப்பண்ணப்படும்.
ஒவ்வொரு சுற்றின் போதும், ஒவ்வொரு போர்வையாக களையப்பட்டு,
பெருமாள் பிறகு அழகான மலர் மாலைகள் அணிந்து எழுந்து அருள்வார்.
அழகான பட்டாடைகள் உடுத்தி வருவார்;
அழகான பல வண்ணத் திருமாலைகள் சாற்றப்படுகிறது…🙏
ஸ்ரீபாதம்தாங்கிகள் அழகு மிளிர சுற்றி வரும்போது ஒவ்வொரு சுற்றுக்கும் ஓரோர் போர்வை நீக்கி,
கற்பூர ஆரத்தி கண்டருளி அனைத்து போர்வைகளும் களையப்பட்ட கணத்தில், சில நிமிடங்கள்
எம்பெருமான் சௌந்தர்யம் திகழும் திருமேனியை –
சங்கு சக்ர கதாபாணியை அணிகலன்களுடன் சேவிக்கும் ஒரு அற்புத வாய்ப்பு🙏
உடன் சில நிமிடங்களில் மணம்கமழும் மாலை அணிந்து வேறொரு சேவை அளிக்கிறார்
ஸ்ரீ அழகியசிங்கர்
🙏🙏
————-
திருக்கோவிலை சென்றடைந்ததும் மட்டையடி எனப்படும் ப்ரணய கலஹம்’ –
பிணக்கு – ஊடலில் பெருமாள் எழுந்து அருளும் போது, உபய நாச்சிமார் திருக்கதவை சாற்றி விட,
பெருமாள் மறுபடி திரும்ப திரும்ப ஏளும் வைபவமும்,
சுவாமி நம்மாழ்வார் வந்து பிணக்கை தீர்த்து வைப்பதும் நடைபெறுகிறது.
ப்ரணய கலஹ ஊடலை திருக்கோவில் கைங்கர்யபர பட்டர் சுலோகம் (பட்டோலை)அதன்
அர்த்தத்துடன் படிக்கும் வைபவம் கோவில் வாசலில் நடக்கிறது.
கணையாழி மோதிரம் காணாமல் போனதே மெய்யானால், விடியப் பத்து நாழிகைக்குப் புறப்பட்டருளி,
மின்னிடை மடவார் சேரியெலாம் புகுந்து யதா மனோரதம் அனுபவித்து அவ்வனுபவத்தாலே உண்டாயிருக்கிற
அடையாளங்கள் எல்லாம் திருமேனியிலே தோற்றா நிற்கச் செய்தேயும் …என நாச்சியார் வினவ,
பெருமாள் அலங்கார வார்த்தைகளால் மறுமொழி அருளிச் செய்யும் பிரபாவம் விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
பிறகு, பெருமாளும் நாச்சிமாரும் பூப்பந்து எறிந்து விளையாடுகின்றனர்
இதோ இங்கே ஸ்வாமி நம்மாழ்வாரின் அற்புத பாசுரம் – நாயிகா பாவத்தில் :
மின்னிடை மடவார்கள் நின்னருள் சூடுவார் முன்பு நானதஞ்சுவன்
மன்னுடை இலங்கை அரண்காய்ந்த மாயவனே!
உன்னுடைய சுண்டாயம் நானறிவன் இனியது கொண்டு செய்வதென்
என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பீ!
சங்கப் பாடல்களில் தலைவன், தலைவி ஊடலும், விளையாட்டும் பிரசித்தம்.
கிருஷ்ணாவதாரத்தில் கண்ணபிரானோடு பரிமாறிய கோபியர் இங்ஙனே ப்ரணய ரோஷத்தாலே ஊடல் செய்ததுண்டு.
அவர்களுடைய பாவனை உறவே ஆழ்வாருக்கும் ஆகி முற்றியிருக்கின்றது.
கோபியர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஜீவன்கள். இறைவன் என்னை ஆட்கொள்ள மாட்டானா?
என் துக்கம் எல்லாம் போகும் வண்ணம் என்னுடன் புணர மாட்டானா?
மாயவனே, உனது சுண்டாயம் (விளையாட்டு) நான் அறிவேன்.
நீ கிளம்ப ஆயத்தப் படுமுன் என் விளையாட்டுச் சாமான்களை (கழல்- அம்மானை ஆடும் காய்) மறக்காமல் வைத்து விட்டுப் போ,
நம்பீ! என்கிறார். 🙏
———–
பகவதேகபரமாய்
போக்யமுமாய்
தொண்டர்க்கமுதன்ன சொல்மாலைகள்
கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கினிய செஞ்சொல்லே
ஜ்ஞாதவ்ய ஸகலார்த்த ப்ரதிபாதகமுமாய்
ஈச்வர ப்ரீதிஹேதுவுமாய்
ஸம்ஸார விச்சேதமுமாய்
*பகவதேகபரமாய்
போக்யமுமாய்
தொண்டர்க்கமுதன்ன சொல்மாலைகள்
கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கினிய செஞ்சொல்லே
ஜ்ஞாதவ்ய ஸகலார்த்த ப்ரதிபாதகமுமாய்
ஈச்வர ப்ரீதிஹேதுவுமாய்
ஸம்ஸார விச்சேதமுமாய்
சீக்ர பலப்ரதமுமாய்
பகவத் விஷயம்
திருவாய்மொழி யில் உள்ள பகவதேகபரத்வம்
இத்தால்
பகவத் விஷயம்
என்றே அழைக்கப்படும் திருவாய்மொழி
எம்பெருமான் தானும் திருவாய்மொழியில் மகிழ்ந்து உறைகிறான் என்பதனை
ஸ்ரீபராசரபட்டர் தம்முடைய ஸ்ரீரங்கராஜஸ்தவத்திலே
வடதலதேவகீ ஜடரவேதஶிர: கமலாஸ்தந ஶடகோபவாக்வபுஷி ரங்கக்ருஹே சயிதம்
வரதமுதாரதீர்க்கபுஜலோசநஸம்ஹநநம் புருஷமுபாஸிஷீய பரமம் ப்ரணதார்த்திஹரம்| ( பூர்வ சதகம் – 78)
என்ற ஸ்லோகத்தினால் அருளிச்செய்தார்.
எம்பெருமான் மகிழ்ந்து உறையும் இடங்களைக் குறிப்பிட்டு வருகையிலே
ஆலிலை,
தேவகீ பிராட்டியின் திருவயிறு முதலானவற்றோடு ஆழ்வார் அருளிச்செயலான திருவாய்மொழியிலும்
எம்பெருமான் ஆதரத்தோடு உறைகிறான் என்பது இதனால் கிடைக்கப்பெற்ற அர்த்தமாகும்.! 🙏
இத்தகைய திருவாய்மொழியை செவிசாய்த்துக் கொண்டு
ஆனந்திக்கும் ஸர்வேஸ்வரனும்
ஸுக்ருதின: ஜனா: என்கிறபடியே
ஸர்வஜன ஸுக்ருத்துக்களும்…. 🙏🙏🙏
—–
வெட்டிவேர் சப்பரத்தில்
ஸ்ரீ அழகியசிங்கர்
இது வெட்டிவேர் சப்பரம் என்று பிரபலமாக அறியப்படும் சின்ன திருத்தேர்..
இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டது.
வெட்டிவேர் என்று அழைக்கப்படும் இவை 1.5 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது
மற்றும் அகலமான கொத்துக்களை உருவாக்குகிறது.
இந்த தேர் வெட்டிவேர்சப்பரம் என்று அழைக்கப்படுகிறது –
இந்த புல்லால் செய்யப்பட்ட பல தாள்கள் கோயில் தேரின் மீது வைக்கப்பட்டுள்ளன.
தூரத்திலிருந்தே தெய்வீக வாசனையை ஒருவர் உணர முடியும்.
புல் வெட்டிவேரின் தண்டு வெட்டப்பட்டு, மிருதுவாகி பாய் போடப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
இந்த பாய்கள் முன்பு கூட வீடுகளில் பயன்படுத்தப்பட்டன,
மேலும் காற்று அதன் வழியாக செல்லும்போது, காற்றின் நறுமணமும் இயற்கையான குளிர்ச்சியும் இருக்கும்.
புறப்பாடில் கோஷ்டியாரால் திருவரங்கத்து அமுதனாரின் இராமானுஜ நூற்றந்தாதி
சேவிக்கப்பட்டது🙏
—————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply