ஸ்ரீ திருப்பாவை ஸாரம்

தேறா ஒருவன் தெங்கின நீர் செவ்வே நிறைந்த தீங்காயை
செங்கை வருந்த வசைத்து அசைத்துச் சிறிதும் தளும்பா வகை ஓர்ந்து
மாறாம இது நீரிலை என்று மருண்டு மாந்த முயலாது
வெறிதே யிகத்து விட்டாங்கு வையம் முழுதும் நிறைந்து எவர்க்கும்
பேறாய் யருளுக் குருவான பெருமானூனப் பேய் விழிக்குப் பிறங்கா
வகை யாலிலை என்று பேணாது இருந்த பெரும் பிழையால்
நீறாய் நிலத்து விவிவினை நெடுமாற்கு நீ யடிமை என்று
நினைவித் தெடுத்தாண்டது ஞான நிதி போல் கோதை நெறித் தமிழே

தேங்காயுக்குள் இளநீர் போல் எம்பெருமான் அனைத்துக்கும் கரந்து எங்கும் பரந்துளன் என்பதை அறியாமல்
வீணாகப் பாழாய்ப் போகும் ஸம்ஸார சேதனக்குழு உஜ்ஜீவனம் கோதை தமிழே
ஸர்வேஸ்வரன் உளன் -நாம் அனைவருக்கும் அவனுடைய சொத்து –
அடிமை செய்து அவனுக்கு அதிசயம் விகைக்கவே உள்ளோம் என்று நம்மை எடுத்து ஆண்ட
ஞான நிதியே கோதை தமிழ் என்றவாறு
தோண்டத் தோண்ட சுரக்கும் -பாதகங்கள் தீர்க்கும் -பரமன் அடி காட்டும் வேதம் அனைத்துக்கும் வித்து

ஸ்ரீ பெரும்பூதூதிரிலே திருப்பாவையை திருப்பல்லாண்டுக்கும் முன்பே சாதிப்பார்களாம் –
திருப்பாவை ஜீயர் உகப்பார் என்பதற்காகவே –

——————-

ஸ்ரீ திருப்பாவை ஸாரம்

1-மார்கழித் திங்கள்
ப்ராப்ய ப்ராபக ஸங்க்ரஹம் (அதிகாரி ஸ்வரூபம்)
(பகவத் ஸம்ஶ்லேஷமே ப்ராப்யம்; அநந்ய ஸாத்யமான இதுக்கு ஸாதநமும் அவனே.
அந்த ஸாதநத்திலே அந்வயிக்கைக்கு அதிகாரிகளும் அந்த ப்ராப்யத்தில் இச்சையுடை யவர்களே.)
பரத்வம் – உபய விபூதி யோகம்.

——–

2-வையத்து வாழ்வீர்காள்
க்ருத்யாக்ருத்ய விவேகம் (அதிகாரி நிஷ்டாக்ரமம்)
(குர்வத் ரூபமான [ப்ரவ்ருத்தி ஶீலங்களான] கரணங்களுக்கு வகுத்த வ்யாபார விஷயங்களைக்
காட்டிக் கொடுக்க வேண்டுகையாலும்,
கால க்ஷேபத்துக்காகவும்,
ராக ப்ரேரிதமாக அநுஷ்டேயமான கர்த்தவ்யம்)
வ்யூஹம் – பாற் கடலுள் பையத்துயின்ற பரமன்

——–

3-ஓங்கி உலகளந்த
அபிமத ஸித்தி – (ஆசார்யர்களின் ஸம்பத்து பரிபூர்ணம்.)
[பகவதநுபவ ஸஹகாரிகள் பக்கல் உபகார ஸ்ம்ருத்யதிஶயத்தாலே அவர்களுக்கு அபேக்ஷிதங்கள் யாவை,
அந்த ஸம்ருத்திகளடைய அபேக்ஷிக்கக் கடவது.]
விபவம் – ஸ்ரீவாமனன் (க்ருத யுகம்)
ஓங்கி -வளர்ந்து எழுந்து மகிழ்ந்து வேகமாக -நான்கு அர்த்தங்களும் உண்டே

———–

4-ஆழி மழைக் கண்‍ணா
அதிகாரி உத்கர்ஷம் – பாகவத ப்ரபாவம்
[தேவதாந்தர ஸ்பர்ஶ ரஹிதராய், இப்படி அநந்ய ப்ரயோஜநராய், பகவதேக ப்ரவணராய்,
பகவதநுபவோபகரணமானவற்றிலே இழிந்தவர்களுக்கு அந்த தேவதாந்தரங்களும் ஏவல் செய்யும்.]
(பகவத் பாகவத இஷ்டத்வேந நித்ய நைமித்திகாதி தர்மங்களை யதாவாக அநுஷ்டிக்கை, ப்ரபந்நாதிகாரிகளுக்கு ஆவஶ்யகம்.)
விபவம் – சக்ரவர்த்தித் திருமகன் (த்ரேதா யுகம்)

———–

5 -மாயனை மன்னு
வித்யா ப்ரபாவம்
(பகவதநுபவத்திலிழிந்தவர்களுக்கு வரும் அநுபவ விரோதிகளை அவ்வநுபவம் தானே நிரோதிக்குமென்னுமிடம்)
விபவம் – ஸ்ரீக்ருஷ்ணன் (த்வாபர யுகம்)

இப்படி கீழ் அஞ்சுபாட்டாலே
ப்ராப்யமான க்ருஷ்ணாநுபவத்துக்கு ஏகாந்தமான உபகரணங்களைச் சொல்லி,
அநந்தரம் மேல் பத்துப் பாட்டாலே அந்த உபகரணங்களைக் கொண்டு அநுபவிக்குமவர்களை எழுப்புகிறது.

———–

6-புள்‍ளும் சிலம்பின
அர்ச்சாவதாரம். பிள்ளாயெழுந்திராய் – பொய்கையாழ்வார்
(க்ருஷ்ண ஸம்ஶ்லேஷத்தில் புதியாளொருத்தியை [தத் விஷயத்திலும் ததீய விஷயம் நன்றென்றறியாதவளை] எழுப்புகிறார்கள்.)
பகவதேகபோகரான ஸ்ரீவைஷ்ணவர்கள் அநந்ய ப்ரயோஜநராய் இவ் விஷயத்தில் தேஶிகரன்றிக்கே இருக்கிறவர்களை,
அவர்களிடத்தில் பரிவாலே தேஶிகராக்குகை தங்களுக்கு க்ருத்யம் என்றிருக்கையாகிற ஸ்ரீவைஷ்ணவத்வ ஸ்வபாவம்.

———–

7-கீசுகீசென்றெங்கும்
ஶேஷத்வம். பேய்ப்பெண்-பேயாழ்வார்
(பகவத் விஷயத்திலும், பாகவதவிஷயம் நன்று என்று தெரிந்தும் மறந்திருப்பாளொருத்தியை எழுப்புகிறார்கள்.)
பகவத் விஷயத்திலே ஜ்ஞாதமான அர்த்தம் ஒருவனுக்கு விஸ்ம்ருதமானால் தங்கள் படியாலே
‘போதயந்த: பரஸ்பரம்’ பண்ணி ஸ்ம்ருதி விஷயமாம்படி அறிவிக்கை ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ஸ்வபாவம்.

———–

8-கீழ்வானம் வெள்‍ளென்று
பாகவத பாரதந்த்ர்யம். கோதுகலமுடையாய்-பூதத்தாழ்வார்
(பாகவத ஶேஷத்வ பர்யந்தமான பகவச் சேஷத்வமுடையளாகையாலே பகவதபிமதரானவரை
(க்ருஷ்ணனுக்கு வேண்டற்பாடுடை [வால்லப்யம்] யளாயிருப்பாளொருத்தியை) எழுப்புகிறார்கள்.)
பகவத் விஷயத்தில் ப்ரத்யாஸந்நராயிருப்பார் திறத்தில் ஸாபேக்ஷரா யிருக்கையும்,
அவர்களை முன்னிட்டு ஈஶ்வரனைக் கிட்டுகையும் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ஸ்வரூபம்.

————–

9-தூ மணி மாடத்து
பகவத் பாரதந்த்ர்யம். மாமான் மகள்-திருமழிசையாழ்வார்.
(க்ருஷ்ணன் வந்த போது வருகிறான் என்றிருக்குமவளை யெழுப்புகிறார்கள்.)
“தத் தஸ்ய ஸத்ருஶம் பவேத்” என்று பூர்வர்த்தா நிஷ்டராயிருப்பாரை,
பகவத் ப்ரேமாதிஶயத்தாலே தாஸ பூதரா யிருக்குமவர்கள் பரார்த்தமாக ப்ரேரிக்கை.
ஸ்வார்த்த ப்ரவ்ருத்தி ஸாமாந்யமும் உபாய விரோதி;
பரார்த்த ப்ரவ்ருத்தி ஸாமாந்யமும் உபாய பலமாயும், உபாயாநுகூலமாயுமிருக்குமென்று அறிவித்து,
உபாய அத்யவஸாய நிஷ்டரை எழுப்பீரோ!

ஐம் புலன்களையும் தோழிகளாக எழுப்பி –11-15 வரை –
கண்ணுக்கு உறக்கம் -காதுக்கு அவனை கேட்பதே -மூக்கு -திருத் துழாய் வாசனை நுகர்வதே –
நாமங்களைப் பாட -சரீரம் கைங்கர்யத்துக்காகவே –

————–

10-நோற்‍றுச் சுவர்க்கம்
ஸித்த தர்மம். அம்மனாய்-குலஶேகராழ்வார்.
(க்ருஷ்ண ஸம்ஶ்லேஷத்தில் வித்தையாய் -விதேயயாய் யிருப்பாளை எழுப்புகிறார்கள்.)
உபாய நிஷ்டரை எழுப்புதல். “தேற்றமாய் வந்து திற” –
லோகார்ஹை வாராமல் லௌகிகாநுவர்த்தநம் கார்யமென்றதாய்த்து.
“ஜ்ஞாநீ த்வாத்மைவ மே மதம்” என்றும்,
“அஹம் ஸ ச மம ப்ரிய:” என்றும்
அவன் பக்ஷபதித்திருப்பார் திறத்தில் நித்ய ஸாபேக்ஷராயிருக்கை ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ஸ்வரூபம்.

நம்மால் போற்ற -நம் மால் -நமக்கும் பூவின் மிசை மங்கைக்கும் இன்பன்

———–

11-கற்‍றுக் கறவை
அனுஷ்டானம் – ஸாமாந்ய தர்மம். கோவலர் தம் பொற் கொடியே-பெரியாழ்வார்.
(எல்லாவற்றாலும் க்ருஷ்ணனுக்கு ஒப்பான ஆபிஜாதையாயிருப்பா ளொருத்தியை எழுப்புகிறார்கள்.)
கற்‍றுக் கறவை கணங்கள் பல கறந்து குற்றமொன்றில்லாத –
ஜாத்யுசிதமான தர்மத்தை சாதனமாக வன்றிக்கே கைங்கர்யமாக வநுஷ்டித்தால் குற்றமில்லை.
[பகவத்ஸம்பந்தம் விச்சேதியாதே போந்த ஆசார்ய ஸந்தாந ப்ரஸூதர் நமக்குப் பூஜ்யர்.
அவர்களடியாக பகவத் ஸமாஶ்ரயணம் பண்ணுகை ஸ்வரூபம்.]

———

12
கனைத்திளம்
அநனுஷ்டானம் – விஶேஷ தர்மம். நற் செல்வன் தங்காய் – தொண்டரடிப் பொடி யாழ்வார்.
(க்ருஷ்ணனைப் பிரியாதே இளைய பெருமாளைப் போலே யிருப்பானொருவன் தங்கையாகையாலே
ஶ்லாக்யையாயிருப்பா ளொருத்தியை யெழுப்புகிறார்கள்.)
அநுஜ்ஞாகைங்கர்ய நிஷ்டனுக்கு ஆஜ்ஞா கைங்கர்ய ஹாநி ஸ்வரூப விரோத மன்றென்கிறது.
பகவத் விஶ்லேஷம் அஸஹ்யமாம்படி அவகாஹித்தவர்கள் தங்களுக்கு
ஸ்ரீவைஷ்ணவர்கள் உத்தேஶ்யராமளவன்றிக்கே
தத் ஸம்பந்தி ஸம்பந்திகளும் உத்தேஶ்யரென்றிருக்கை ஸ்வரூபம்.

———

13
புள்‍ளின் வாய்
அஹங்கார மமகாரங்கள் ஒழிதல். போதரிக் கண்ணினாய்-திருப்பாணாழ்வார்.
(நம் கண்[ணழகு] உண்டாகில் தானே வருகிறானென்று கிடக்கிறாளொருத்தியை யெழுப்புகிறார்கள்.
நமக்கு ஸ்வரூப ஜ்ஞாநமுண்டாகில், அவன் தானே வருகிறானென்று நிர்ப்பரரா யிருக்குமவரை எழுப்புகிறார்கள்.
ஈஶ்வரனும் ஈஶ்வர விபூதியும் ஸ்வாபிமாந விஷயமாய்த் தோன்றுகை – அஹங்காரத்துக்கு நன்மையாவது.
பகவதநுபவ பரிகரமான ஜ்ஞான வைராக்ய பக்திகளாலே பரிபூர்ணராயிருக்கு மவர்கள் திறத்தில்
ததர்த்தமாக ஸ்ரீவைஷ்ணவர்கள் ஸாபேக்ஷராயிருக்கை ஸ்வரூபம்.

———–

14
உங்கள் புழைக்கடை
எங்களை முன்னமெழுப்புவான் வாய் பேசும் நங்காய்-நம்மாழ்வார்.
(இவையெல்லாவற்றுக்கும் தானே கடவளாய், எல்லாரையும் தானே எழுப்பக் கடவதாகச் சொல்லி வைத்து,
அது செய்யாதே உறங்குகிறாளொருத்தியை எழுப்புகிறார்கள்.)
பாகவத ஸமுதாயத்துக்கெல்லாம் தாமே கடவராய், இவர்களுக்கெல்லாம் பகவத் ஸம்பந்த கடகர் தாமேயாம்படி
ஜ்ஞாந பக்தி வைராக்யங்களாலே பூர்ணரான பாகவதரை யெழுப்புகிறார்கள்.
பகவத் விஷயத்திலே மூட்டுகையிலே அதிகரித்த நிர்வாஹகர் முன்பாக பகவதநுபவம் பண்ணுகை ஸ்வரூபம்.

———-

15
எல்லே இளங்கிளியே
உத்தம பாகவத லக்ஷணம். எல்லேயிளங்கிளியே-திருமங்கையாழ்வார்.
(எல்லாருடைய திரட்சியும் காண வேண்டி யிருப்பாளொருத்தியை எழுப்புகிறார்கள்.)
பாகவத சேஷத்வம் ஸ்வரூபமானால் அவர்களிடும்பழியும் தம்மேலேறிட்டுக் கொள்ளுகை ஸ்வரூபம்.
ஸ்வ யத்நத்தால் கடக்க அரிதாய், ப்ராயஶ்சித்த விநாஶ்யமுமின்றிக்கே யிருக்கிற அஹங்கார நிவர்த்தகனாய்
மற்றுமுள்ள காம க்ரோதாதிகளுக்கும் நிவாரகன் எம்பெருமான்.
திருப்பாவையாகிறது இப்பாட்டிறே.
பகவத் விஷயத்திலிருக்கும்படி யெல்லாம் சிற்றஞ்சிறு காலையிலே சொல்லுகிறது;
பாகவத விஷயத்திலிருக்கும்படி யெல்லாம் இப் பாட்டிலே சொல்லுகிறது.
ஸ்ரீவைஷ்ணவர்கள் ஸமவாய தர்ஶநம் அபிமதமாயிருக்குமவர்களைக் கண்டக்கால் அந்த ஸமூஹமாக அவர்களை உகக்கை ஸ்வரூபம்.

————-

16
நாயகனாய் நின்ற
ஆசார்ய வைபவம்
அவனைப்பெறுமிடத்தில் ததீயர் முன்னாகப் பெறவேணும்.
ஆசார்ய ஸம்பந்த கடகரை முன்னிட்டு ஆசார்யனைத் தொழுகையும் பெரியோர் செயலிறே.
இவனுக்குப் பிறக்கும் அத்யவஸாயமும் போட்கனாகையாலே,
மெய்யான வ்யவஸாயமுடை யாரை முன்னிட்டாலல்லது கார்யகரமாகாதென்று முன்னிடுகிறது.

கோயில், திருமலை, பெருமாள் கோயில், திருநாராயண புரம் என்று நான்கு கோயில்கள் பிரசித்தம்.
அது போல ஆண்டாள் திருப்பாவையில் நான்கு கோயில்கள் இருக்கிறது –
புள்ளரையன் கோயில், தங்கள் திருக்கோயில், நந்தகோபன் உடைய கோயில், உன் கோயில்.
அது மட்டும் அல்லாது நின்ற, இருந்த, கிடந்த, நடந்த என்ற நான்கு திருக்கோலங்களையும் திருப்பாவையில் நாம் அனுபவிக்கலாம்!
– திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல் உலகினில் தோற்றமாய் நின்ற திருக்கோலம்
– நப்பினை கொங்கைமேல் வைத்துக் கிடந்த திருக்கோலம்.
– மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு இங்ஙனே போந்தருளிய போது நடந்த திருக்கோலம்.
– கோப்பு உடைய சீரிய சிங்காசனத்து இருந்த திருக்கோலத்தில் எங்களுக்கு ஆராய்ந்து அருள் புரிய வேண்டும் என்கிறாள்.

திருப்பாவையில் ஆண்டாளும் ’கோயில் காப்பானே! வாசல் காப்பானே’ என்று அவர்கள் செய்யும்
கைங்கரியப் பெயர்களைக் கொண்டு தான் அழைக்கிறாள்.
தன்னையும் ஒரு கைங்கரியம் செய்பவளாகவே எல்லோரும் அழைக்க வேண்டும் என்று விரும்புகிறாள்.
தெருவில் நடந்து சென்றால் அதோ ‘கேசவ நம்பியை கால் பிடிக்கிற பெண்’ போகிறாள் என்று இவளை அழைக்க வேண்டுமாம்.
இந்த ‘திருத்தக்க செல்வம் கிடைக்க ’அருத்தித்து வந்தோம்’ என்கிறாள்

பட்டர் பிரான் கோதை சொன்ன சங்கத் தமிழ்மாலை முப்பதும் படித்தால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர்”

———–

17
அம்பரமே தண்‍ணீரே
பரகத ஸ்வீகாரம் (ஏவகாரச் சீமாட்டி)
பகவத் விஷயத்தைக் கிட்டுவார் தத் ப்ரத்யாஸந்நரை புருஷகாரமாகக் கொண்டு புகுருகை ஸ்வரூபம்.

ஆண்டாள்
”நீலமேனியில் பீதா’அம்பரம்’ ஒளிவீச,
கார்க் கடல் நீர்(தண்ணீர்) வண்ணன்,
சோற்றினை வாங்கி நெய்யிடை நல்லதோர் சோறாக உண்டு மூன்று அடி நிலத்தை தானம் கேட்ட
கரு மலை குட்டனை(அம்பரம் ஊடு அறுத்து ஓங்கி உளகு அளந்த) எங்களுக்கு தானமாக கொடுக்க வேண்டும்!” என்றாள்.

ஆச்சார்யன் -திரு மந்த்ரம் -பொருள் -சாரம் -நான்கையும் நந்தகோபன் -யசோதை -உம்பர் கோமான் -பலராமன்
அம்பரம் -வைகுண்டம் –தண்ணீர் சாமகானம் -திருவாய் மொழி -சோறு -கண்ணன் கல்யாண குணங்கள்

————–

18
உந்து மதகளிற்‍றன்
புருஷகாரம்
பகவத் விஷயீகாரம் பிராட்டி புருஷகார ஸாபேக்ஷம்.

‘உ’ என்பது திருமகளான பிராட்டியைக் குறிக்கும். திருப்பாவையில் திருவிற்குப் பஞ்சம் இல்லை.
திருக்கோயில் திருவே, திருத்தக்கச் செல்வமும், திங்கள் திருமுகத்து, செங்கண் திருமுகத்து,
செல்வத் திருமாலால் என்று எங்கும் திருவருள் பெற்று இன்பம் பெறலாம்.
இந்தப் பாசுரம் திருவிற்கு ஆண்டாள் சிறப்பாகச் செய்த மங்ளாசனம் இந்தப் பாசுர ஆரம்பமும் ‘உ’ !

ஸ்ரீ ஸூ க்தம் -அர்த்தமே உந்து -ஸ்ரீ ஆறு அர்த்தங்களும் இதில் உண்டே –
நாலாயிரத்திலும் ஒரே பாசுரம் பிராட்டிக்கு இதுக்கு –

———–

19
குத்து விளக்கெரிய
புருஷகாரம்
பிராட்டியைப் புருஷகாரமாக வரித்தால், அவனும் இவளும் இசலி இசலிப் பரியும் பரிவைச் சொல்லுகிறது.

திருப்பாவையில் ‘அணிவிளக்கு’, ’தூமணி மாடத்து விளக்கு’, ‘குல விளக்கு’, ‘கோல விளக்கே’ மற்றும் ’குத்து விளக்கு’
மற்ற ஆழ்வார்கள் ‘ஞான சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு’ ‘ஞான வெள்ள சுடர் விளக்காய்’
’மிக்க ஞானமூர்த்தி ஆய வேத விளக்கினை’ ‘நந்தா விளக்கே அளத்தற்கு அரியாய் நர நாரணனே’

‘வந்து திறவாய்’ என்று கூறும் போது அவள் நடை அழகைக் கண்டார்கள்.
’கையால் சீரார் வளை ஒலிப்ப’ அதைக் கேட்டார்கள்
’உன் மைத்துனன் பேர்பாட’ அதைச் சுவைத்தார்கள்.
’கந்தம் கமழும் குழலி’ அதை முகர்ந்தும் பார்த்தார்கள்.
‘செந்தாமரைக் கையால்’ கையை பிடித்த போது இந்த ஐந்து புலன்களின் பயனை அறிந்து,
உள்ளத்தில் ஞான விளக்கு ஏற்றப்பட்டு ‘குத்து விளக்கு எரிய ‘
’கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா!’ என்ற
பெருமாளும், பிராட்டியுடன் கூடிய சேர்த்தி சேவை கிடைத்தது!

———–

20
முப்பத்து மூவர்
ப்ராப்யம்-பிராட்டிக்கும் அடிமை
அடிமை செய்யுமிடத்தில் இருவரும் சேர்ந்த சேர்த்தியிலே அடிமை செய்வதே முறை.

————

21-ஏற்‍ற கலங்கள்- ஸ்வரூபக்ருத தாஸ்யம் – அபிமான ஶூன்யம்.
ப்ரபுத்தனாய் தங்கள் கார்யம் செய்கைக்கு “ஏத்த வேழுலகம் கொண்ட” என்கிறபடியே,
ஆஶ்ரிதரானவர்களுக்கு நிர்மமராய்க் கொண்டு அவன் குண கீர்த்தனம் பண்ணுகை கர்த்தவ்யமென்கிறது.

அலைமகள் + மண்மகள் + ஆய்மகள் = “ஸ்ரீ”
* லக்ஷ்மி + பூமிதேவி + நீளாதேவி = “ஸ்ரீ”

* அறம் + பொருள் + இன்பம் = வீடு!
* அலைமகள் + மண்மகள் + ஆய்மகள் = “ஸ்ரீ”-மன்-நாராயணன்!

ஊற்றம் உடையாய் = பரம் => வைகுந்தப் பரம்பொருள், பரப் பிரம்மம்! கட+உள்
* பெரியாய் = வியூகம் => திருப்பாற்கடலில் குறை கேட்டு அருளும் இறைவன்!
* உலகினில் தோற்றமாய் = விபவம் => நரசிம்ம, வாமன, ராம, கிருஷ்ணாதி அவதாரங்கள்!
* நின்ற = அர்ச்சை => அனைத்து ஆலயங்களில் இருக்கும் அர்ச்சா விக்ரக இறைவன்!
* சுடரே = அந்தர்யாமி => எல்லாரின் அந்தராத்மா, அடி மனசில், சுடராய் ஒளிரும் இறைவன்!

ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே!
பெருமாளின் ஐந்து நிலைகளையும் ஒன்னே முக்கால் அடிகளில் காட்டி விடுகிறாள்

———

22-அங்கண் மா ஞாலம்-அநந்யார்ஹ ஶேஷத்வம்
தேஹாத்மாபிமானத்தை நீக்கி, அதுக்கு இசைந்தவாறே
ஸ்வ ஸ்வாதந்த்ரியாபிமானத்தை நீக்கி, அதுக்கு இசைந்தவாறே
ஶேஷத்வத்தை யறிவித்து, அதுக்கு இசைந்தவாறே
அந்ய ஶேஷத்வநிவ்ருத்தியை யுண்டாம்படி பண்ணி, அதுக்கு இசைந்தவாறே
ஜ்ஞாத்ருத்வ ப்ரயுக்தமான ஸ்வஸ்மிந்ஸ்வஶேஷத்வ நிவ்ருத்தியை யுண்டாக்கி, அதுக்கு இசைந்தவாறே
ஸ்வரக்ஷணே ஸ்வாந்வயத்தை நிவர்த்திப்பித்து, அதுக்கு இசைந்தவாறே
உபாயாந்தரங்களை விடுவித்து, அதுக்கு இசைந்தவாறே
ததேகோபாயனாம்படி பண்ணி, அதுக்கு இசைந்தவாறே
ஸ்வவ்யாபாரத்தில் ஸ்வாதீந கர்த்ருத்வ நிவ்ருத்தியைப் பண்ணுவித்து, அதுக்கு இசைந்தவாறே
பாரதந்த்ரிய ப்ரதிபத்தியைப் பிறப்பித்து, அதுக்கு இசைந்தவாறே
ஸமஸ்த கல்யாண பரிபூர்ணனான தன்னை அநுபவிப்பித்து,
அநுபவ ஜநித ப்ரீதி காரித கைங்கர்யத்தை யுண்டாக்கி,
அக் கைங்கர்யத்தில் ஸ்வ போக்த்ருத்வ புத்தியைத் தவிர்ப்பிக்கை.

எம்பெருமானுடைய ஒவ்வோர் அவயவமும் ஒவ்வொருத்தருடைய சாபம் தீர்த்தது.
திருவடி தூள் அஹல்யாவின் சாபம் தீர்த்தது.
திருமுழந்தாள் குபேர புத்ரர்களான நள குபர மணி க்ரீவர்களின் சாபம் தீர்த்தது.
(யமளார்ஜுன பங்க கதையை நினைப்பது ).
திருத்துடைகள் மது கைடபர்களின் சாபம் தீர்த்தன.
(பிஷ்ட துஷ்ட மது கைடப கீடௌ ) இத்யாதி சுந்தர பாஹுத்வ சூக்தியை நினைப்பது )
ருத்ர சாபம் மார்பில் ச்வேதத்தாலே தீர்ந்தது,
துர்வாச சாபம் மார்பில் இருப்பாளாலே தீர்ந்தது.
இப்போது திருக்கண்களால் ஒரு சாபம் தீர்கிறது. நித்ய சம்ச்லேஷம் கிடைப்பதே இவர்களுக்கு சாபம் தீர்வதாம்.

எம்பெருமானுடைய திருமேனியில் மூன்று திவ்ய அவயவங்கள் பக்தர்களுக்கு முக்கியமானவை .
அவற்றுள் முதலிலே திருக்கண்.
” ஜாயமானம் ஹி புருஷம் யம் பச்யேத் மதுசூதனஹ , சாத்விக ஸ து விக்நேய ஸ வை மோக்ஷார்த்த சிந்தக ”
என்ற படியே ஜாயமான காலத்திலேயே கடாக்ஷித்து சாத்விகத்தை உண்டாக்க வல்லதன்றோ இது.
அப்படி கடாக்ஷிக்க பெற்றவர்களுக்கு
திருவடியே தஞ்சம் ஆகிற படியால் அது இரண்டாவதான அவயவம்.
அப்படி திருவடிகளிலே விழுந்தவர்கள் “அஞ்சேல் என்று கை கவியாய் “என்று
அபய பிரதானத்தையே விரும்பி கொண்டிருபவர்கள் ஆதலால்
அபயமுத்ராஞ்சிதமான ஹஸ்தம் மூன்றாவதான அவயவம்.
இவை எல்லாவற்றிலும் முக்கியமான அவயவம் திருக்கண்களே ஆகும்.
அவற்றால் கடாக்ஷிக்க பெற்றால் சாபம் என்று பேர் பெற்ற எல்லாம் தொலைந்து போம்.
உள்ளுறை பொருள் ஆக ஆச்சார்ய கடாக்ஷ பிரதானம் விளக்கப் படுகிறது.

————

23-மாரி மழை முழைஞ்சில்-இச்சா, க்ருபா ப்ரபாவம்.
பெண்களை ஸாந்த்வநம் பண்ணியருளினான்;
அவ்வளவிலே, ‘நாங்கள் வந்த காரியத்தைக் கேட்டருள வேணும்’ என்கிறார்கள்.

பிராட்டி இல்லாமல் சீறிய சிங்காசனம் ஆகும் நப்பின்னை உடன் இருந்தால் தானே சீரிய சிங்காசனம் ஆகும் –

மாரி மலைமுழஞ்சில்- பகவந் நியமன மாலை

நடுவிலாச்சிக் கீத்த படுக்கை அறை வார்த்தை
காடேற வாயித்தால் கண்ணா! — அடிசியோம்
காண நடந்து அரி ஆசனத்தே வீற்றிருந்து
வேணுமவை ஆய்ந்து அருள்.

ஸவ்யம் பாதம் பிரசரித துரித ஹரம் தக்ஷிணம் குஞ்சையித்வா
ஜாநூன் ஆதாய ஸ்வே இதர புஜம் நாக போகே நிதாய
பஸ்சாத் பாகுத்துவயேன பிரதிபட ஸமநே தாரயந் சங்கசக்ரே
தேவி பூஷாது ஜூஷ்டோ விதரது ஜகதாம் சர்ம வைகுண்ட நாத -என்று பரமபதத்திலான அமரிகை காண அங்குற்றோம் அல்லோம்

வைதேஹி ஸகிதம் ஸுரத்ரு முதலே ஹைமே மஹா மன்டபே
அரியணை அனுமன் தாங்க அங்கதன் உடைவாள் ஏந்த
பரதன் வெண்குடை கவிக்க இருவரும் கவரி பற்ற
விரைசெறி குழலி ஓங்க வெண்ணையூர் சடையன் தங்கள்
மரபுளோர் கொடுக்க வாங்கி வசிட்டனே புனைந்தான் மௌலி–என்று பட்டாபி ராமனாய் இருந்தமை அப்போதுற்றோம் அல்லோம்

எனவே இப்போது எமக்காக நாலெட்டு நடை நடந்து வந்து உன் நடை அழகையும்
சீரிய சிங்காசனத்தில் வீற்றிருக்கும் அழகையும்
நம்பெருமாள் நமக்கு திருமாமணி மண்டபத்தில் சேர-பாண்டியன் ஒலகத்தில்
அமர்ந்தமை காட்டி, யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருள் என்கிறார்கள்.

———————————-

24-அன்றிவ்வுலக மளந்தாய் -மங்களாஶாஸனம்
திருப் பள்ளி யறையில் நின்றும் திவ்ய ஸிம்ஹாஸநத்தளவும் நடக்கிற போதை
நடை யழகுக்குத் திருப் பல்லாண்டு பாடுகிறார்கள்.

அசோக வனத்தில் அலற்ற நின்ற பிராட்டி
“தன்யா பச்யந்தி மே நாதம் சிம்ஹ விக்ராந்த்த காமினம்” என்று பெருமாளுடைய நடை அழகை நினைந்து புலம்பினாள்.
“அக்ரதச்தெ கமிஷ்யாமி ம்ருதுனந்தி குச கண்டகான்” என்று சொன்னவள் முன்னே போகாமல்
“அக்ரத ப்ரய்யௌ ராமஹ சீதா மத்யமே சுமத்யமா” என்னும்படி பெருமாளை முன்னே போக விட்டுத்
தான் பின்னே போனது அவருடைய நடையழகைக் காணவேண்டி அன்றோ?

அந்த நடையின் சிறப்பு விளங்கவே முனிவனும் யயௌ என்னதே ப்ரயயௌ என்றான்.
சுமித்திரை இளையபெருமாளுக்கு வனப்ரயாண அனுமதி தரும் இடத்து
“ராமே ப்ரமதம் மஹர்ஷி புத்ர ப்ராத்ரி கச்சதி” என்று கோரினவள்
பெருமாளுடைய நடையழகிலே துவக்குன்னதே கொள்ளை என்றன்றோ சிக்ஷித்தது?
கச்ச மாதுல குலம் என்ற இடத்தில் உள்ள கச்சது போலன்றே இந்த கச்சது?

இப்படி
1-உலகம் அளந்தது,
2-தென்னிலங்கை செற்றது,
3-சகடம் உதைத்தது,
4-கன்று குணிலா எறிந்தது,
5-குன்று குடையா எடுத்தது,
6-கையில் வேலால் வென்று பகை கெடுத்தது முதலான
ஆறு அபதானங்கள் ஆச்சார்ய சார்வ பௌமரும் செய்த விஷயங்களை பற்றி உள்ளுறை பொருளாக விளக்கபடுகிறது.

———–

25-ஒருத்தி மகனாய்-பகவல் லாப ப்ரார்த்தனை
“உங்களுக்கு வேண்டுவதென்?” என்ன, “ஏதேனும் ப்ரதிபந்தகம் உண்டேயாகிலும்,
நீயே போக்கி எங்கள் து:க்கமெல்லாம் கெட விஷயீகரிக்கவேணும்” என்கிறார்கள்.

திருத்தக்க செல்வம் என்பது திருத்தத்தக்க செல்வம் என்ற படியுமாகும்.
“ஒண் சங்கதை வாளாழியான் போலே”.
“பயனன்றாகிலும் பாங்கல்லாராகிலும் செயல் நன்றாக திருத்தி பணி கொள்வான்” என்றும்
“இராமானுச! நீ இந்த மண்ணகத்தே திருத்தி திருமகள் கேள்வனக்கு ஆக்கியபின் ” என்றும் சொல்லுகிறபடியே
“உலகில் திருந்தாதார் தம்மை திருத்துகை ஆகிற செல்வம்” அன்றோ ஆச்சார்யர்களுடையது.

“பணிமானம் பிழையாமே அடியேனை பணி கொண்ட” என்றவிடத்து ஈட்டில் ஐதிஹ்யம் கண்டு அனுசந்திப்பது.
“ச்க்காலித்யெ சாசிதாரம்” என்பதன்றோ ஆச்சார்ய லக்ஷணங்களில் தலையானது.

(சேவகமும்) கண்ணனிடத்திலே பரதவ சௌலபியங்கள் மாறி மாறி விளங்கினாபோலே
ஆச்சார்யர்களும், தங்களது ஞான விளக்கத்தை நோக்கும் போது பரத்வம் தோன்றும்.
அவர்கள் சம்சாரிகளோடு புரையற கலந்து பழகும் போது சௌலப்யம் தோன்றும்.
ஆக இவற்றையெல்லாம் சிந்தை செய்வார்க்கு வருத்தங்கள் தீர்ந்து மகிழ்ச்சியே யாகும் என்ன தட்டுண்டோ?

———–

26-மாலே! மணிவண்‍ணா!-முக்தாத்மாவின் பகவத் ஸாம்யம்
பகவத் ஸம்ஶ்லேஷத்துக்கு வேண்டும் உபகரணங்களை வேண்டிக் கொள்ளுகிறார்கள்.
ஸத் ஸஹ வாஸமும், பகவத் பாகவத பாரதந்த்ர்ய ஜ்ஞாநமும், கைங்கர்யமும்,
அக் கைங்கர்யத்தில் போக்த்ருத்வ நிவ்ருத்தியும் வேணும்.

1. பால் அன்ன வண்ணத்து சங்கு = அனு கூல்யஸ்ய சங்கல்பம் = அனுகூலமாய் இருக்க உறுதி பூண்டு கொள்வது!
2. சாலப் பெரும் பறை = ப்ரதி கூல்யஸ்ய வர்ஜனம் = உதவாதவற்றை விலக்கி வைப்பது!
3. பல்லாண்டு இசைப்பார் = பலத் தியாகம்! “தான், தான், தான்” என்பதைத் துறக்கும் தியாகம்!
4. கோல விளக்கு = பூரண விஸ்வாஸம் = திட நம்பிக்கை!
அந்தத் திட நம்பிக்கை = “கோல” விளக்கு! ஆலயங்களில் நின்றான்-இருந்தான்-கிடந்தான்-நடந்தான் என்ற நாற்-“கோல” விளக்கு!
5. கொடி = கார்பண்யம் = நம்மால் முடியாது, எல்லாம் அவனே என்ற உணர்தல்!
கொடி தானாகப் பறக்காது! காற்று அடித்தால் மட்டுமே பறக்கும்!
அதே போல் நாம் பட்டொளி வீசிப் பறப்பதாக, நாம் நினைத்துக் கொண்டிருக்கோம்!
6. விதானம் = கோப் த்ருவே வரணம் = விடா முயற்சியுடன் பிடித்துக் கொள்வது!
அவன் அடியார்கள் ஒன்று கூடும் விதானம்! குணானுபவப் பந்தலின் கீழ், பந்தலின் நிழலில் ஒதுங்கிக் கொள்வது!
அந்த நிழலே நீழலாகி, ஈசன் எந்தை இணையடி நீழலே!

* இவையே நோன்பின் அங்கங்கள்! அங்க நியாசம் என்று சொல்லுவார்கள்!
* இதனால் வருவது சரணாகதி! சரணாகதியே உய்யும் “ஆறு”!

சங்கு: மந்த்ராசனம்.
பேரிகைகள் = ஸ்னானாசனம் (திருமஞ்சனம்)
வேதகோஷம் பல்லாண்டு
அலங்காராசனம்.: விளக்கு: நைவேத்ய சமர்ப்பணம்.
கொடி: விஞ்ஞாபனம்,
பந்தல்: பர்யங்காசனம்.
ஆண்டாள் கேட்ட 6 அயிட்டங்களும் பகவத் ஆராதனத்தில் உபசார ஆசனங்கள்

————

27-கூடாரை வெல்லும்-அநந்ய போக்யத்வம்
நோற்றால் பெறக் கடவ பேறு – விஶ்லேஷ வ்யஸநம் பிறவாத கூட்டரவாக வேணும்.
தோடே, செவிப் பூவே, பாடகமே;
திருமந்த்ரம் – ஆத்ம ஸ்வரூப யாதாத்ம்ய ஜ்ஞாந பரமாகையாலும்,
த்வயம் – உத்தரகண்டத்திற் சொல்லுகிற கைங்கர்யத்துக்குப் பூர்வ பாவியான பக்தி ப்ரதாநமாகையாலும்,
சரம ஶ்லோகம் – த்யாஜ்யாம்ஶத்தில் வைராக்ய ப்ரதாநமாகையாலும்,
ஜ்ஞாந பக்தி வைராக்யங்களைச் சொல்லுகிறது.

* கோ = பசு, உலகம், உயிர், அரசன், தலைவன், துறவி!
கோ-விந்த = இந்தக் கோவினை எல்லாம் காப்பவன்! சகலத்தையும் காப்பவன்!
உந்தன்னோடு+உறவேல்+நமக்கு = நீ+உறவு+நாங்கள் = அ+உ+ம = ஓம்!அகரம்=அவன்;
மகரம்=நாம்;
உகரம்=(அவன்-நாம்)உறவு!

கூடி இருந்து குளிர் மாலை –
கூடாரை வெல்லும் சீர் பாசுரத்தின் ஈற்றடியில் கூடி இருந்து குளிர்ந்தென்றதை நோக்கியது இம்மாலை குறிப்பு.

இன்னாரோடு கூடி இருந்தென்று சொல்லிற்றில்லை ஆகிலும்
கூட தகாதவர்களை விலக்கி கூடியே இருக்க வேண்டியவர்களோடு கூடுகைதான் இங்கு விவக்ஷிதம்.
குலசேகர ஆழ்வார் ஒரு திருமொழியிலே,
“மெய்யில் வாழ்க்கையை மெய்யெனகொள்ளும் இவ்வையம் தன்னோடும் கூடுவதில்லை யான்”,
“நூலின் நேர் இடையார் திறத்தே நிற்கும் ஞாலம்தன்னோடு கூடுவதில்லை யான்”,
“மாரனார் வரி வெஞ்சிலைக்கு ஆட்செய்யும் பாரிநாரோடும் கூடுவதில்லை யான்”,
“உண்டியே உடையே உகந்தோடும் இம்மண்டலத்தோடும் கூடுவதில்லை யான்”,
“தீதில் நன்னெறி நிற்க அல்லாது நீதியாரோடும் கூடுவதில்லை யான்”–என்று பன்முறையும் கூறினார்

கூடத் தகாதவர்களை.
“வரம் ஹுதவஹ ஜ்வாலா பஞ்சரந்தஹ வ்யவஸ்திதிஹி, ந சௌரி சிந்தா விமுக ஜன சம்சாச வைசசம் ” என்னும்
ச்லோகத்தையே அப்பாசுரங்கள் விவரித்தன ஆயின.
அன்னவர்களோடு கூடுவதை விலக்கிக்கொள்கைதானே சிறந்த குளிர்ச்சி ஆகும்.
அதற்கு மேல் கூடத்தக்கவர்களோடு கூடவும் பெற்றால் குளிர்ச்சியைப்பற்றி கூறவும் வேண்டுமோ?

கூடதக்கவர்கள் யாவர் என்னில்? குறிக்கொண்டு கேண்மின்:
“மறம் திகழு மனமொழித்து வஞ்சமாற்றி வன்புலன்களடக்கி இடற்பாரத்துன்பம்
துறந்து இரு முப்போழுதேத்தி எல்லை இல்லா தொல் நெறிக்கண் நிலை நின்ற தொண்டர்”,

“தூராத மனக்காதல் தொண்டர் தங்கள் குழாங்குழுமி திருபுகழ்கள் பலவும் பாடி
ஆறாத மனக்களிப்போடு அழுத கண்ணீர் மழை சோர நினைந்து உருகியேத்தும் அவர்கள்”,

“அன்போடு தென் திசை நோக்கி பள்ளி கொள்ளும் அணி அரங்கன் திரு முற்றத்து அடியார்கள்”,

“தென்னரங்கனை வாழ்த்தி மால் கொள் சிந்தையராய் ஆட்ட மேவி அலர்ந்தழைத்து அயர்வெய்தும் மெய்யடியார்கள்”,

“பேராளன் பேரோதும் பெரியோரை ஒருகாலும் பிரிகிலேன் என்றிருக்கும் அவர்கள்”,

“பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி அழுது கொண்டிருக்கும் அவர்கள்”,

“த்ருணீக்ருத விரிஞ்சாதி நிரந்குச விபூதிகர்களாய் ராமானுஜ பாதாம்போஜ சமாஸ்ர்யணசாலிகளாய் இருக்குமவர்கள்”,

மேலும்,
“அபகத மதானைரந்திமோபாய நிஷ்டைரதிகத பரமார்த்தை அர்த்தகாமநாபேக்ஷை நிகில ஜன சுஹ்ருத்பிஹி
நிர்மித க்ரோத லொபைஹி வர வர முநிப்ருத்யை அஸ்து மே நித்ய யோகஹ” என்று நித்ய குதூஹலசாலிகளாய்,

“மனவாளமாமுனிவன் பொன்னடியாம் செங்கமல போதுகளை உன்னிச் சிரத்தாலே தீண்டில்
அமானவனும் நம்மை கரத்தாலே தீண்டல் கடன்” என்கிற அத்யவசாயத்தில் தலை நின்றிருக்குமவர்கள்

உகந்தருளின நிலங்களில் மங்களாசாசன ப்ராவண்யமும்
ஆஹார நியதியும்
அனுகூல சஹவாசமும்
பிரதிகூல சஹவாச நிவ்ருதியும் உடையராயிருக்குமவர்கள், பின்னும்,

“தம் நெஞ்சில் தோற்றியதே சொல்லி” உலகத்தை வஞ்சியாதே, முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டு
பின்னோர்ந்து தாமதனை பேசுமவர்கள், நித்ய சஹவாச யோக்யர்கள்,

ஆசார்யர்கள் அனைவரும் முன்னாசரித்த ஆசாரம் தன்னை அறியாதார் பேசுகின்ற வார்த்தைகளை கேட்டு மருளாதே
பூருவர்கள் சீர்த்த நிலை தன்னிலே நிலை நின்றிருக்குமவர்கள், நித்யானுபவ யோக்யர்கள்.

கூடி இருப்போம் என்றாலே போதுமே, அதற்கு அதற்கு மேல் குளிர்வோம் என்று ஒன்று கூற வேணுமோ என்னில்,
கூடி இருந்தே கண் வளர்ந்து போதை போக்குவதுண்டே; அங்கனின்றி
“அவிரலித கபோலம் ஜல்பதோர க்ரமேண, அவிதித கதயாமா ராத்ரிரேவ வ்யரம்சீத் ” என்று
சக்கரவர்த்தி திருமகனார் சொன்னபடியே ஆக வேணுமென்கை.

—————

28-கறவைகள் பின் சென்று
உபாயம் தங்களுடைய ஆகிஞ்சந்யத்தையும், அயோக்யதையையும் ஆவிஷ்கரித்து,
உபாயபூர்த்தியையும் தங்கள் ப்ராப்தியையும் முன்னிட்டு,
கீழ்ச் சொன்னவற்றுக்கெல்லாம் அநுதபித்து க்ஷமை கொண்டு,
எங்கள் ப்ராப்ய ஸித்திக்கு நீயே உபாயமாக வேணும் என்று அபேக்ஷிக்கிறார்கள்.

——–

29-சிற்‍றஞ்சிறுகாலே
உபேயம்-ப்ராப்ய ருசியையும், ப்ராப்யந்தான் இன்னதென்னுமிடத்தையும்,
அத்தை அவனே தர வேணுமென்னு மிடத்தையும் தங்கள் ப்ராப்ய த்வரையையும் அறிவிக்கிறார்கள்.

கைங்கர்யந்தானும் மங்களாஶாஸந ரூபமான படியாலே
மங்களாஶாஸநத்துக்குப் பலமாக அவன் கொடுக்க வேண்டியதும்
இவர்கள் கொள்ள வேண்டியதும்
மங்களாஶாஸநமே யென்றதாய்த்து.

ரஜஸ் தமஸ்ஸுக்களாலே கலங்கி தேஹாநுபந்திகளான த்ருஷ்ட பலங்களை அடியோங்கள் அபேக்ஷித்தாலும்
ஹித பரனான நீ கேள்வி கொள்ளவும் கடவை யல்லை,
கொடுக்கக் கடவையுமல்லை என்றதாய்த்து.

ஏழு பிறவி- = தாவரம், நீர் வாழ்வன, ஊர்வன, விலங்கு, நரகர், தேவர், மக்கள்..

ஏழு ஏழு-14-49-மட்டும் அல்ல -நீ -எழுகின்ற பிறவிகள் தோறும்
உடைமைக்கு ஒரு முழுக்கு உடையனுக்கு பல முழுக்கு -எதிர் சூழல் புக்கு கிடைப்பானா நப்பாசை உண்டே அவனுக்கு
பல பல வடிவங்களால் கைங்கர்யம் ச ஏகதா பவதி இத்யாதி உண்டே அங்கும்

———–

30-வங்கக் கடல் கடைந்த
பலன்-இப் ரபந்தம் கற்றார், பிராட்டியாலும், எம்பெருமானாலும் ஸர்வ காலமும்
விஷயீகரிக்கப் படுவர்கள் என்கிறார்கள்;

ஸ்ரீய:பதியாலே த்ருஷ்டாத்ருஷ்டங்களிரண்டிலும் பிறந்த ஜ்ஞாநத்துக்கு விச்சேதம் வாராதபடி
க்ருபையை லபித்து ஆநந்த நிர்ப்பரராயிருப்பர்கள்.

———-

சம்ஸ்க்ருதத்தில் தெய்வத் தமிழ் திருப்பாவை…
ர.பரதன் என்பார் இம்மொழிபெயர்ப்பை செய்துள்ளார்.
உதாரணமாக சில பாடல்கள்:

மார்கழித் திங்கள்…

மார்க³ஶீர்ஷாக்²யமாஸோ(அ)யம்ʼ பௌர்ணமாஸீதி³னம்ʼ ஶுப⁴ம்ʼ |
ஆயாத ஸ்னாதுமிச்ச²ந்த்யோ! ஹே விலக்ஷணபூ⁴ஷணா: ! ||
ருத்³த⁴ஶ்ரீகோ³குலவாஸா:! ஶ்ரிமத்யோ! கோ³பபா³லிகா:! |
தீக்ஷணம்ʼ ஶக்த்யாயுத⁴ம்ʼ த்⁴ருʼத்வா து³ஷ்டனாஶோக்³ரகர்மணாம் ||
விதா⁴துர்னந்த³கோ³பஸ்ய குமாரோ வினயான்வித: |
நந்த³பத்னீ யஶோதா³ யா ஸௌந்த³ர்யப⁴ரிதேக்ஷணா ||
தஸ்யாஸ்து ஸிம்ʼஹபோதோ வ க்ருʼஷ்ணோ க³ம்பீ⁴ரசேஷ்டித: ||
ஶ்யாமலாங்க³: ஸ ரக்தாக்ஷ: ஸூர்யேந்து³ஸத்³ருʼஶானன: |
நாராயணோ ஹி பே⁴ரீம்ʼ ந ஆஶ்ரிதாப்⁴யோ ஹி தா³ஸ்யதி |
அதோ லக்³னா வ்ரதே ஸ்னாம ஶ்லாகே⁴ரன் யேன பூ⁴ப⁴வா: ||

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர்! போதுமினோ நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்தகண்ணி யசோதையிளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாராயணனே நமக்கே பறைதருவான்
பாரோர்புகழப் படிந்தேலோரெம்பாவாய்!

அன்றிவ்வுலகம் அளந்தாய்…

பூர்வமேதஜ்ஜக³த்க்ராந்த! பாதா³ப்⁴யாம்ʼ தவ மங்க³லம் |
க³த்வா த³க்ஷிணலங்காம்ʼ, தாம்ʼ ஹந்த:! ஸௌ²ர்யாய மங்க³லம் ||
ஸ²கடம்ʼ பத்ப்ரஹாரேண ப⁴ங்க்த:! கீர்த்யை ஸுமங்க³லம் |
வத்ஸம்ʼ த³ண்ட³வதா³தா³ய க்ஷேப்த:! பத்³ப்⁴யாம்ʼ ஸுமங்க³லம் ||
ச²த்ரவச்சை²லமுத்³த⁴ர்தர்கு³ணப்³ருʼந்தா³ய மங்க³லம் |
ஸ²த்ருன் விஜித்ய ஹந்த்ரே தே ஹஸ்தே ஸ²க்த்யை ஸுமங்க³லம் ||
இத்த²ம்ʼ தவ சரித்ராணி ஸ்துத்வா படஹலப்³த⁴யே |
வயமத்³ய ஸமாயாதா அஸ்மாஸு த்வம்ʼ த³யஸ்வ போ⁴: ||

அன்றிவ்வுலகமளந்தாய்! அடிபோற்றி
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய்! திறல் போற்றி
பொன்றச்சகடமுடைத்தாய்! புகழ் போற்றி
கன்று குணிலாவெறிந்தாய்! கழல் போற்றி
குன்று குடையாவெடுத்தாய்! குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி
என்றென்று உன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்றுயாம் வந்தோம்; இரங்கேலோர் எம்பாவாய்.

சிற்றம் சிறு காலே…

ப்ரத்யூஷஸ்யுபக³ம்ய த்வாம்ʼ ஸேவித்வா, ஸ்வர்ணபா⁴ஸ்வதீ |
தவ பாதா³ம்பு⁴ஜே ஸ்துத்வா ப்ரார்த்²யமானம்ʼ ப²லம்ʼ ஸ்²ருʼணு ||
த்வம்ʼ நனு வினியுஜ்யாஸ்மான் அந்தரங்கீ³யவ்ருʼத்திஷு |
கைங்கர்யப்ரதிஸம்ப³ந்தி⁴ ப⁴வ கோ³பகுலோத்³ப⁴வ! ||
வயம்ʼ பே⁴ரீமிமாம்ʼ லப்³து⁴ம்ʼ கோ³விந்தா³த்³யாத்ர நாக³தா: |
அவதாரேஷ்வஜஸ்ரம்ʼ த்வத்ஸம்ப³ந்தி⁴ன்யோ ப⁴வாம ஹி ||
தவைகஸே²ஷபூ⁴தாஸ்²ச த்வத்ப்ரீத்யேகப்ரயோஜனா: |
ப⁴வேமைதத்³விருத்³தா⁴ன்ன: காமானன்யான் நிவர்தய ||

சிற்றம் சிறு காலே வந்து உன்னை சேவித்து* உன்-
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்*
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து *நீ-
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது*
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா*
எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் *உன் தன்னோடு-
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்*
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்

பாவைப் பாசுரங்களின் சிறப்பு அதன் பொருள்பொதிந்த வலிமையான வார்த்தைகள்
சம்ஸ்க்ருதத்திலும் அருமையாக மொழிபெயர்க்கப் பட்டுள்ளன.

உதாரணமாக:

நாராயணோ ஹி பே⁴ரீம்ʼ ந ஆஶ்ரிதாப்⁴யோ ஹி தா³ஸ்யதி
நாராயணனே நமக்கே பறை தருவான்

வாசா தன்னாம ஸங்கீர்த்ய மனஸா சிந்தயேம தம்
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க…

மந்தி³ராஹ்வானஶங்க²ஸ்ய ஶ்வேதஸ்ய துமுலத்⁴வனிம் கிம்ʼ ந ஶ்ரௌஷீ…
வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ

கீசுகீச்சிதி ஸர்வத்ர பா⁴ரத்³வாஜாக்²யபக்ஷிபி⁴:
கீசுகீசென்று ஆனைச் சாத்தன் கலந்து…

இவ்வாறு பல பாசுரங்கள் எளிமையான சம்ஸ்க்ருதத்தில் மொழி பெயர்க்கப் பட்டுள்ளன.

—————-

‘‘ஆ” வை திருப்பிய திருப்பாவை- பசு பிராயர் -திருப்பு ஆவை

இறைவன் ஸ்ரீமன் நாராயணன் தமிழின் மீது தீராத ஆர்வம் கொண்டவன்.
தமிழ் எங்கெல்லாம் ஓதப்படுகிறதோ, அங்கே சென்று அதைக் கேட்பவன்.
ஆண்டாள் திருப் பாவை பாசுரங் களால்- “ஆ”வை -அதாவது ஆன்மாவை
இறைவனாகிய கண்ணன் பக்கம் திரும்பியதால்,”ஆவை திருப்பிய பாசுரங்கள்” –
திருப்பாவை என்று போற்றப்படுகின்றது.
நாம் பாடினாலும் நம் ஆன்மா இறைவன் பக்கம் திரும்பும் என்பதால்
மார்கழி மாதத்திலே தினம் தினம் திருப்பாவையைப்பாடி அவனை வழிபடுகிறோம்.

——-

ஆழ்வார் என்கிற சொல்லின் உயிரான பொருள் இறைவனின் குணக்கடலில் ஆழ்ந்தவர்கள் பக்தி நிஷ்டர்கள்.

இப் பதம் முதலில் திருமழிசை ஆழ்வார் பயன்படுத்துகின்றார்.
ஒரு தத்துவத்தின் ஆழ் பொருளைச் சொல்பவர்கள் ஆழ்வார்கள் என்ற பொருளில்…
அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ் பொருளை சிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து – என்று
நான்முகன் திருவந்தாதி முதல் பாசுரத்தில் பாடுகின்றார்.

தத்துவத்தின் ஆழ் பொருள்களை கடலில் மூழ்கி முத்துக்களை எடுத்துக் கொடுப்பது போல்
தமிழில் கொடுத்தவர்கள் ஆழ்வார்கள் என்கிற பொருள் படும்படியாக அவர் பாடி இருக்கிறார்.

ஆழ்வார் -ஆழப் போகிறவர்கள் -எதிர்கால பத பிரயோகம்
ஆண்டாள் –ஆழ்ந்து போனவள் –இறந்த கால பத பிரயோகம்
பிஞ்சாய்ப் பழுத்தவள் -ஆழ்வார்களை விஞ்சி நிற்கும் தன்மை அன்றோ இவளது

காதலிலால் தடுமாறுபவர் பலர் –
அத்தையே தடுமாறச் செய்யபவள்- பாட வல்ல சூடிக் கொடுத்த சுடர்க் கொடி
அனைத்தையும் ஆண்டாள்-
தமிழை ஆண்டாள்-
நம்மை ஆண்டாள்-
அரங்கனையும் ஆண்டாள் –
ஸ்வ இதர ஸமஸ்தங்களையும் ஆண்டாள்

நாராயணனே நமக்கே பறை தருவான் –
வேதாந்த சாரம் முதலிலே அருளிச் செய்த ஏற்றம் உண்டு கோத உபநிஷத்தில்
கண்ணின் கறு விழியும் பாவை என்னலாமே -திருப்பாவை -அழகிய ஞானம்

நாராயணனே நமக்கே பறை தருவான் -என்று சங்க்ரஹேண சொன்ன
ஸ்வரூப
உபாய
பலன்களை
ஓன்று பத்தாக சொன்ன அத்தனை இறே-நாயனார் ஸ்ரீ ஸூக்திகள் –

———

சங்கத் தமிழ் மாலை

திருப்பாவையை “சங்கத் தமிழ்” என்று சொல்கிறார்கள்.
திருப்பாவை பாசுரத்திலேயே இந்த சொல்லாட்சி வருகின்றது.
30 வது பாசுரத்தில்,‘‘பட்டர்பிரான் கோதை சொன்ன சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே” என்ற வரியால்,
இது சங்கத் தமிழ் மாலை முப்பது என்று சொல்லலாம்.

தமிழுக்கு, தண்டமிழ், வண்டமிழ், நற்றமிழ், செந்தமிழ் என எத்தனையோ அடைமொழிகள் இருந்தாலும் ‘
‘சங்கத்தமிழ்” என்பது இங்கே பொருத்தமாக இருக்கிறது.

சங்க காலத்தில் உள்ள புலவர்கள், திருமாலை எப்படிப் பாடினரோ,
அதே அமைப்பில், அதில் சொல்லப்பட்ட சாரமான கருத்துக்களை, பொதிந்து கொடுத்ததால்
திருப்பாவை சங்கப் பாடலுக்கு இணையான தமிழ்.

சங்கம் என்பது ஒலிப்பது. வேத கோஷம் ஒலிப்பது போல, திருப்பாவை தினம் ஆலயங்களில் ஒலிக்கின்றது.
அதனால் திருப்பாவையை வேதம் அனைத்துக்கும் வித்து என்று சொல்வார்கள்.
சங்கம் ஒலிப்பது போல ஒவ்வொரு ஆலயங்களிலும், வீடுகளிலும் ஒலிக்கக் கூடிய
தமிழ்மாலை என்பதனால் சங்கத் தமிழ் மாலை.

மூன்றாவதாக திருப்பாவையை ஆண்டாளின் தனித்துவமான அனுபவமாக ஆண்டாள் வெளியிடாமல்,
‘‘நீராடப் போதுமின் போதுமினோ நேரிழையீர்” என்று எல்லா அடியார்களையும் இணைத்துக் கொள்கிறாள்.
அதற்காக தன் தமிழை பயன்படுத்துகிறாள். அடியார்களை ஒன்றாக இறை அனுபவத்தில்
சங்கமிக்க வைத்த தமிழ் என்பதினால்,“சங்கத் தமிழ் மாலை” என்று சொல்லலாம்.

இறைவனோடு ஜீவாத்மா கலந்து இன்புறுவதை வடமொழியில் “சம்ஸ் லேஷம்” என்று சொல்வார்கள்.
தமிழில் சங்கம் என்று சொல்லலாம்.
திருப்பாவையின் ஈரத் தமிழ், இறைவனோடு இறை அடியார்களை சங்கமிக்க வைப்பதால்
சங்கத் தமிழ் என்று சொல்லலாம்.

தமிழால் சங்கம்,
அடியார்களோடு சங்கம்,
இறைவனோடு சங்கம் – என்று
மூன்று நிலைகளில் இந்த பாசுரங்கள் செயல்படுவதால்
இதற்கு சங்கத் தமிழ் மாலை என்ற அடைமொழி முற்றிலும் பொருந்தும்.

———————-

ஏலோர் எம் பாவாய்
28 பாசுரங்கள்;
ஓர் எம்பாவாய் ஒன்று;அம்பரமே
எம்பாவாய்- இன்புறுவர் ஒன்று.-வங்கக்கடல்
வினை யெச்சம் 13 பாசுரங்கள்
வினை முற்று 14 பாசுரங்கள்

———

26-பரமாத்ம ஸ்வரூபம்
27-கூடி இருந்து குளிர் ஜீவாத்ம ஸ்வரூபம்
28- இறைவா நீ தாராய் உபாய ஸ்வரூபம்
29- நம் காமங்கள் மாற்று விரோதி ஸ்வரூபம்
30- திருமாலால் திருவருள் பெற்று இன்புற்று -புருஷார்த்தம் ஸ்வரூபம்

———

திருப்பாவை முப்பது பாசுரங்கள் பாடினாள் ஆண்டாள்.
அவற்றில் முதல் பத்து, “அவன் திருநாமத்தைச் சொல்லு” என்று உணர்த்துகின்றன.
இரண்டாவது பத்து, “உயர்ந்ததான அவன் திருவடியை அர்ச்சனை பண்ணிப்பாரு” என்கிற பாசுரங்கள்.
மூன்றாவது பத்தோ “அவன் திருவடியிலே ஆத்ம சமர்ப்பணம் பண்ணு” என்று சொல்கின்றன

திருப்பாவை என்பது ஒரு நூல் மட்டுமல்ல. அது ஒரு யாகம். ஆண்டாள் பண்ணிய வேள்வி அது.
வராஹ மூர்த்தியினிடத்த்திலே பெற்ற உபதேசத்தைக் கொண்டு தனுர் (மார்கழி) மாசத்திலே ஒரு வேள்வி வளர்க்கிறாள்.
திருப்பாவையின் மூன்று பத்தும் மூன்று கபால சாதனங்கள் என்றே சொல்லலாம்.
ஆசாரிய அனுக்கிரஹம் என்கிற நெய்யினால் தடவி அதைச் சமர்ப்பிக்கிறாள்.
வேள்வி பண்ணும்போது ஒவ்வொரு கபாலத்தைச் சமர்ப்பிக்கும் போதும் திரிவிக்கிரமாவதாரனான
எம்பெருமானை ஸ்தோத்திரம் பண்ணிச் சமர்ப்பிப்பது மரபு.
திருப்பாவையின் மூன்று பத்தும் மூன்று கபாலங்கள் என்றேன், இல்லையா?
ஒவ்வொரு கபாலத்தின் தொடக்கத்திலும் திரிவிக்கிரமனைத் துதிக்கிறாள்

ஓங்கி உலகளந்த உத்தமன்” என்று முதல் பத்திலே திரிவிக்கிரமனை நினைக்கிறாள்.
“அம்பர மூடறுத்து ஓங்கி உலகளந்த” என்றும்
“அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி” என்று மறுபடியும்

ஆண்டாள் நமக்கு கீதையின் வழியைக் காட்டி, “நாமம் ஆயிரம் ஏத்த நின்ற நாராயணா” என்று ஆச்ரயித்து,
அவனையே திருக்கல்யாணமும் பண்ணிக் கொண்டாள்.

————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading