99 வகையான தமிழ் பூக்களின் பெயர்கள்-பூவின் ஏழு நிலைகள்-பெண்களுக்கும் ஆண்களுக்கும் ஏழு பருவங்கள் —

99 வகையான தமிழ் பூக்களின் பெயர்கள்

1. காந்தள் மலர்
2. ஆம்பல் மலர்
3. அனிச்சம் பூ
4. குவளை மலர்
5. குறிஞ்சிப் பூ
6. வெட்சிப் பூ
7. செங்கோடுவேரி மலர்
8. தேமாம் பூ
9. மணிச்சிகை(செம்மணிப்பூ)
10. உந்தூழ்(மூங்கில் பூ)
11. கூவிளம் பூ
12. எறுழம்பூ
13. சுள்ளி(மராமரப்பூ)
14. கூவிரம் பூ
15. வடவனம் பூ
16. வாகைப் பூ
17. குடசம்(வெட்பாலை)
18. எருவை(கோரைப்பூ)
19. செருவிளை(வெண்காக்கணம்)
20. கருவிளம் பூ
21. பயினிப் பூ
22. வானிப் பூ
23. குரவம் பூ
24. பசும்பிடி(பச்சிலைப்பூ)
25. வகுளம்(மகிழம்பூ)
26. காயா மலர்
27. ஆவிரைப் பூ
28. வேரல்(சிறுமூங்கில்பூ)
29. சூரல் மலர்
30. சிறுபூளைப் பூ
31. குறுநறுங்கண்ணி மலர்
32. குருகிலை(முருக்கிலை)
33. மருதம் பூ
34. கோங்கம் பூ
35. போங்கம் பூ
36. திலகம் பூ
37. பாதிரி மலர்
38. செருந்தி மலர்
39. அதிரல் பூ
40. சண்பகம் மலர்
41. கரந்தை மலர்
42. குளவி(காட்டு மல்லி)
43. மாம்பூ
44. தில்லைப்பூ
45. பாலைப்பூ
46. முல்லைப்பூ
47. கஞ்சங்குல்லை
48. பிடவம் பூ
49. செங்கருங்காலி மலர்
50. வாழைப் பூ
51. வள்ளிப் பூ
52. நெய்தல் மலர்
53. தாழைப் பூ
54. தளவம்(செம்முல்லைப் பூ)
55. தாமரை மலர்
56. ஞாழல் மலர்
57. மௌவல் பூ
58. கொகுடிப் பூ
59. சேடல்(பவளமல்லி பூ)
60. செம்மல்(சாதிப் பூ)
61. சிறுகெங்குரலி(கருந்தாமரைக் கொடிப்பூ)
62. கோடல்(வெண்காந்தள் மலர்)
63. கைதை(தாழம் பூ)
64. வழைப் பூ(சுரபுன்னை)
65. காஞ்சிப் பூ
66. கருங்குவளைப் பூ(மணிக்குலை)
67. பாங்கர் பூ
68. மரவம் பூ
69. தணக்கம் பூ
70. ஈங்கைப் பூ
71. இலவம் பூ
72. கொன்றைப் பூ
73. அடுப்பம் பூ
74. ஆத்திப் பூ
75. அவரைப் பூ
76. பகன்றைப் பூ
77. பலாசம் பூ
78. பிண்டி(அசோகம்பூ)
79. வஞ்சிப் பூ
80. பித்திகம்(பிச்சிப் பூ)
81. சிந்துவாரம்(கருநொச்சிப்பூ)
82. தும்பைப் பூ
83. துழாய்ப் பூ
84. தோன்றிப் பூ
85. நந்திப் பூ
86. நறவம்(நறைக் கொடிப்பூ)
87. புன்னாகம் பூ
88. பாரம்(பருத்திப்பூ)
89. பீரம்(பீர்கம்பூ)
90. குருக்கத்திப் பூ
91. ஆரம்(சந்தனப்பூ)
92. காழ்வைப் பூ
93. புன்னைப் பூ
94. நரந்தம்(நாரத்தம்பூ)
95. நாகப்பூ
96. நள்ளிருநாறி(இருள்வாசிப்பூ)
97. குருந்தம் பூ
98. வேங்கைப் பூ
99. புழகுப் பூ

———

அரும்பு ,
நனை ,
முகை ,
மொக்குள் ,
முகிழ் ,
மொட்டு. ,
போது, மலர் ,
வீ. ,
பொதும்பர் ,
பொம்மல் ,
செம்மல் .
என மலர் தன் மாற்றங்களுக்கு ஏற்ப கொடுத்து வைத்திருக்கும் பெயர்கள் தான் எத்தனை !எத்தனை!

இந்த அரும்பிலும் மூன்று உட்பிரிவுகள் உண்டாம்.
நனை ,
முகை ,
மொக்குள்
என்பன அரும்பின் மூன்று நிலைகளாம்.

அவற்றை எப்படி கண்டறிவது என்ற கேள்வி எழலாம்.

நனை என்பது
உள்ளும் புறமும் ஒருவித ஈர நைப்புள்ள தேன்
நனைப்புடன் காணப்படம் நிலை நனை எனப்படும்.

முகை என்பது முகிழ்த்தல்
அதாவது
சற்று புடைத்தல்.

மொக்குள் என்பது
மணம் பெறும் நிலை.

அரும்புக்கு
துளிர்த்தல்,
முளைத்தல்,
தோன்றுதல் என்ற மூன்று பொருள் உண்டு.
.
இப்போது பூவின் ஏழு நிலைகள் மற்றும் அவற்றின் பெயர்களைப் பற்றி அறிந்து கொள்வோம்.

பூவின் ஏழு நிலைகள்
1-பூக்கும் பருவத்தின் முதல் நிலை _அரும்பு
2-மொக்குவிடும் நிலை -மொட்டு
3-முகிழ்க்கும் நிலை- முகை
4-பூவாகும் நிலை – மலர்
5-மலர்ந்த இதழ் விரிந்த நிலை –அலர்
6–வாடும் நிலை 00 வீ
7–வதங்கிக் கிடக்கும் நிலை –செம்மல்

இவை பூவின் ஏழு நிலைகளுக்குமான ஏழு பெயர்களாகும்.

அரும்பு _ அரும்பும் நிலை
நனை _ அரும்பு வெளியில் தலை காட்டும் நிலை
முகை _ தலைகாட்டிய நனை முத்தாக மாறும் நில
மொக்குள் _ பூவுக்குள் பருவமாற்றமான நாற்றம் அதாவது மணம் பெறும் நிலை.

மொக்குள் பருவத்தில் தான் பூவில் மணத்தைக் கொடுக்கும் மாற்றங்கள் நடைபெறும்.

முகிழ் -மணம் கொண்டு முகிழ்தல்
அதாவது விரிந்தும் விரியாமலும் இருக்கும் நிலை முகிழ்.

போது -மொட்டு மலரும் போது ஏற்படும் புடைப்பு நிலை

மலர் –மலரும் பூ அதாவது மலர்ந்த நிலை

பூ –முழு இதழ்களும் விரிந்த நிலையில் பூத்திருக்கும் மலர்

வீ– உதிரும் நிலையில் இருக்கும் பூ

பொதும்பர் –பூக்கள் பூத்துக் குலுங்கி நிற்கும் நிலை

பொம்மல் –உதிர்ந்து கிடக்கும் பூ

செம்மல் –உதிர்ந்த பழம் பூ–செந்நிற மாற்றம் பெற்று அழுகும் நிலைதான் செம்மல்.

அரும்பு ,நனை ,முகை, மொக்குள், முகில், மொட்டு, போது, மலர் , பூ , வீ ,
பொதும்பர் , பொம்மல் ,செம்மல் என்று பதின்மூன்று பெயர்கள் .

அரும்பு , போது , மலர் என்ற பூவின் மூன்று நிலைகளையும் ஒரே பாடலில் கூறி
அவற்றின் சிறுசிறு வேறுபாடுகளைக் காதலோடு கவினாக பிணைத்து
அறிய வைத்துள்ள பாங்கு திருவள்ளுவரைத் தவிர வேறு யாரால் கூடும்?
திருவள்ளுவர் இயற்கை ஆர்வலராக
இருப்பாரோ?

” முகைமொக்குள் உள்ள நாற்றம்போல் பேதை
நகைமொக்குள் உள்ளதொன்று உண்டு “–திருக்குறள் _1274
பூ பருவ மாற்றம் அடைந்து சற்று புடைத்துக் கொண்டு வரும் போது அதற்குள்
மணம் உருவாதல் போல காதலியின் புன்முறுவல் தோற்றத்தில் காதல் மிகும் என்ற ஒரு குறிப்பு உண்டு என்கிறார் வள்ளுவர்.
இங்கே காதலியின் புன்முறுவலுக்கு முகை மொக்குள் பருவத்தை உவமையாகக் கூறியுள்ளது நோக்கத் தக்கது.

முகை, மொக்குள் என்ற பூவின் பருவநிலைகள் மணத்திற்கானது
என்பதை இந்தக் குறள் மூலம் திருவள்ளுவரும் உறுதி செய்துள்ளார்.

இதனை ஒட்டியே ஏழு பருவங்களாக அமைத்தனர் எனக் கொள்ளலாம்.

பெண்களுக்கு
பேதை
பெதும்பை,
மங்கை,
மடந்தை ,
அரிவை ,
தெரிவை ,
பேரிளம் பெண் என்ற ஏழு பருவப் பெயர்கள் உள்ளன.

ஆண்களுக்கு அதற்கு இணையாக
பாலன் ,
மீளி.,
மறலோன் ,
திறலோன்,
காளை ,
விடலை ,
முதுமகன் என்று வயதின் அடிப்படையில்
ஏழு பருவப்பெயர்கள் கொடுக்கப் பட்டுள்ளன.

————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading