மார்கழித் திங்கள்
ஓழிவில் காலம் எல்லாம் -என்றும்
அநாதிர் பகவான் கால -என்றும் சொல்லுகிறபடியே
பகவத் விஷயத்தில் இவனுக்கு ஆபிமுக்யம் பிறந்தால்
பின்னை அவன் தன்னை அல்ல காணும் கொண்டாட அடுத்து –
அக் காலத்தை யாய்த்து-
சைத்ர ஸ்ரீ மான் அயம் மாச -என்று ஒரு ஸம்ருத்தியைப் பார்த்து கொண்டாடிற்று இறே
சைத்ர-
அல்லாரில் காட்டில் பெருமாளுக்கு உள்ள பிராதான்யம் போலே
மாசங்களுக்கு எல்லா வற்றுக்கும் முதலான மாசம்-
ஸ்ரீ மான் —
அவர் எல்லாருக்கும் ராஜாவாக பிராப்தர் ஆனாப் போலே
சைத்ர மாசம் சர்வருக்கும் ஸுகககரம் ஆகையாலே மாசங்களுக்கு எல்லாம் ராஜா என்கிறது
அயம் மாச –
அபிஷேக மனோரத சமயத்திலே சந்நிஹிதமான தன்னேற்றம் அங்கு
சேஷியை சேஷ பூதர் லபிக்கைக்கு கொண்டாடுகிற கொண்டாட்டம் இங்கு-
சேஷி பூதரை சேஷி லபிக்கைக்கு கொண்டாடுகிற கொண்டாட்டம்-
புண்ய புஷ்பிதகாநந-
பாவநஸ்சர்வ லோகாநாம்த்வமேவ -என்றும்
பும்ஸாம் திருஷ்டி சித்தாபஹாரிண்ம் -என்றும்-
அவருக்கு இரண்டு ஆகாரம் உண்டானாப் போலே-
இக்காலமும் பாவனமாயும் போக்யமுமாயும் இருக்கை
புஷ்பித காநந –
படை வீடு போலே நாம் அலங்கரிக்க வேண்டாதே தானே அலங்கரிக்கை-
புஷ்பித காநந —
பெருமாள் பொன் முடி சூட காடு பூ முடி சூடிற்று
மார்கழி திங்கள் –
நாதி சீதா ந கர்மதா-என்கிற ந்யாயத்தாலே
அதி உஷ்ணமாதல் அதி சீதளமாதல் அன்றிக்கே இருக்கும் மாசம்
மார்கழி திங்கள்-
தேவர்களுக்கு விடிகிற காலம் ஆகையால் விரதங்கள் அனுஷிப்பார் தொடங்கும் காலமாய் இருக்கை –
மார்கழி திங்கள்-
இம் மலட்டு மாசங்களில் இதுவும் ஒரு மாசமே -என்கிறார்கள் –
இம் மாசத்துக்கு விசேஷம் என் என்னில்
சர்வேஸ்வரன் இவ் விபூதியில் பருப் பருத்தவற்றை எல்லாம் நான் – என்கிற போது –
மாசா நாம் மார்க்க சீர் ஷோஹம் -என்று
மாசங்களில் வைத்துக் கொண்டு மார்கழி மாசம் ஆகிறேன் என்று அருளிச் செய்தான் –
மார்கழி திங்கள்-
குளிருக்கு அஞ்சி கோப வ்ருத்தர்கள் புறப்படாத காலமும் –
நாளுக்கு ப்ரஹ்ம முகூர்த்தம் போலே சம்வத்சரத்துக்கு இம் மாஸம் ஆகையால் சர்வ உத்தர காலம் இறே
சாத்விக பலம் இறே தாங்களும் கணிசிக்கிறது –
கால க்ருத பரிணாமம் இல்லாமையைக் கொண்டாடும் போலே பரிணாமத்தைக் கொண்டாடுகிறார்கள் இறே
பரிணாமம் உண்டாகவுமாம்-இல்லை யாகவுமாம் –
பகவத் அனுபவத்துக்கு புறம்பானது த்யாஜ்யமாம் அத்தனை இறே
இனித் தான் பர்வத பரிசரத்திலே கிடந்ததொரு பீஜத்தோடு
கடலின் அருகே கிடந்ததொரு பீஜத்தோடு வாசி அற
பருவம் செய்யும் காலமாய்த்து –
கைங்கர்யத்துக்கு ஏகாந்தமான காலம் ஆகையால் ஒழிவில் காலம் என்னுமா போலே கொண்டாடுகிறார்கள்
அசாதாரணமான மாசத்தில் அசாதாரணமான பலத்தைப் பெறுவோம் –
சர்வோத்தரமான காலத்திலே சாத்விக பலம் பெறுவோம் –
எல்லாரும் அபி மதம் பெரும் காலத்திலே நாமும் அபிமதம் பெறுவோம் என்கிறார்கள் –
மதி நிறைந்த –
மாசம் நேர் பட்டால் போலே இருந்ததீ -பக்ஷமும் நேர் பட்ட படி –
ஆபூர்ய மாணே பக்ஷே புண்யே நக்ஷத்ரே —என்று
மங்கள கார்யம் செய்வார்க்கு விதிக்கிற விதியும் இவர்களுக்குக் கோல் விழுக்காட்டாலே சேர விழுந்தது-
பகவத் பிரவணராய் இருப்பார் உடைய தேக யாத்ரையை-விதி தான் பின் செல்லக் கடவதாய் இறே இருப்பது
த்வதீய கம்பீர மநோநுசாரிணா -என்னக் கடவது இறே
முன்பு இருள் தேட்டமானால் போலே இப்பொழுது நிலா தேட்டமாய்த்து –
காமுகர்க்கும் கோபர்க்கும் இருள் திட்டமாய் இருக்கும் இறே
நள் இருள் கண் என்னை உய்த்திடுமின் -என்று இறே முன்பு இருப்பது –
தாய்க்கும் தகப்பனுக்கும் அஞ்ச வேண்டா
இருளிலே புறப்பட்டு அணைக்கலாம் என்கிறாள் –
இருள் அன்ன மா மேனி எம்மிறை –
இருளோடு சேர்ந்து இறே வடிவு தான் இருப்பது
பிஷக்குக்கள் வாசலில் ஆர்த்தர் கட்டணமாகக் கிடைக்குமா போலே
ஸ்ரீ நந்தகோபர் வாசலில் கிருஷ்ணனால் புண் பட்ட பெண்கள்
கட்டணமாய் கிடக்குமாய்க் கொள்ளீர் -என்று பட்டர் –
(வைத்யோ நாராயண ஹரி அன்றோ )
அப்படி நிலாவுக்கு இறாய்க்க வேண்டாதே ஊர் இசைந்து மேல் எழுத்து இட்ட நாள் இறே –
ஒருவரை ஒருவர் எழுப்புகைக்கும் கிருஷ்ண முக அவலோகநத்துக்கும் நிலா உண்டாகப் பெற்றது என்கை
ஷயாதிகள் போய் பூர்ணன் ஆகிறான் இறே அவனும் –
இவர்களும் நாமும் உளோமாய் பூர்ணைகளாக வாரிகோள் என்கிறாள் –
நன்னாள் ஆல்-
மாசத்துக்கும் பஷத்துக்கும் நாயகக் கல் போலே
இருப்பதொரு நாள் நேர்பட்ட படி என்
நன்னாள் ஆல் –
முன்பு கழிந்தவை தீய நாள் போலே- –
நம்மை கிருஷ்ணனோடு கிட்ட ஒட்டாதவர்கள் தாங்களே
கிருஷணனோடு சேருகைக்கு பிரமாணம் பண்ணிக் கொடுத்த நாளாக பெற்றதே
பகவத் விமுகனான போன இவனுக்கு பகவல் லாபம் உண்டான நாள் இறே நல் நாள் ஆகிறது –
அவன் எதிர் சூழல் புக்கு திரிய –
இவன் வைமுக்யம் பண்ணுகை தவிர்ந்து
அவன் கிருஷி பலித்த நாள் என்கை –
தா நஹம் த்விஷத க்ரூரான் சம்ஸாரேஷூ நராதமான் ஷிபாமி (ஸ்ரீ கீதை )-என்று
நானே இவற்றைக் குழியைக் கல்லி மணலை இடுவேன் என்று
என்று ஸர்வேஸ்வரன் தானே
ததாமி புத்தி யோகந்தம்-(ஸ்ரீ கீதை )என்னும் நாள் இறே
அத்யமே ச பலம் ஜென்ம ஸூப்ரபாத சமே நிசா –என்னுமா போலே
கம்சன் சோறுண்டு வளர்ந்த எனக்கு விடியும் நாள் உண்டாவதே என்றான் இறே
ஸூப்ர பாதாத்ய ரஜநீ மதுரா வாஸ யோஷிதாம் -என்று
ஸ்ரீ மதுரையில் உள்ளார்க்கு வெளிச் செறித்தால் -விளங்கினது- போலேயும் –
ஸூ ப்ரபாதாச -திருவாய்ப்பாடியினின்றும் எழுந்து அருளின போது அங்குள்ளார்க்கு அஸ்தமித்து
ஸ்ரீ மதுரையில் உள்ளார்க்கு விடிந்தது இறே
அஸூர்யமிவ ஸூர்யேண நிவாதமிவ வாயு நா -(பாரதம் )
அப் படை வீட்டில் கண் இல்லாதார்க்கு கண் உண்டானால் போலேயும்
பிராணன் இல்லாதார்க்கு பிராணன் உண்டானால் போலேயும் யாய்த்து இவர்களுக்கும் –
நன்னாளால்
திரு அயோத்யையில் உள்ளார் பெருமாளை முடி சூட்டி அனுபவிக்க பாரித்துக் கொண்டு இருக்க
வெறும் தறையான நாள் போல் அன்றிக்கே
மீண்டு வந்து திருமுடி சூடி அருளின நாள் போலே –
நன்னாள்
பகல் கண்டேன் –
உதிப்பது அஸ்தமிப்பதாக நிற்கச் செய்தே இறே –
பகல் கண்டேன் -என்கிறது -அதாகிறது
நாரணனைக் கண்டேன் -(இரண்டாம் திருவந்தாதி -82-)என்கை –
அஸ்தமியாத ஆதித்யனைக் கண்டேன் –
ப்ராதேசிகன் அல்லாத ஆதித்யனைக் கண்டேன் –
ப்ராப்த அப்ராப்த விவேகம் பண்ணினால் ஓர் இரவும் ஓர் பகலுமே உள்ளது –
பகவத் ப்ரத்யாசத்திக்கு முன்பு எல்லாம் பகல் விரவாத இரவாய் –
பின்பு எல்லாம் இரவு விரவாத பகலாய் யாய்த்து இருப்பது –
சென்ற நாள் செல்லாத (மூன்றாம் திருவந்தாதி )இத்யாதி –
கையார் சக்கரத்தின் (5-1)முன்னாள் போலே இறே முன்பு கழிந்த நாள்
(காருணிகத்தவம் அறிந்த பின்பே-கீழே எல்லாம் காரணத்வம் பஜனீயத்வம் வியாகத்வம் நியாமகத்வம்
இவை எல்லாம் கார்யகரம் ஆவது காருணிகத்தவம் இருந்தால் தானே )
(ஆல் –நினைத்து நினைத்து ஈடுபட்டு இப்பதம் )
மாசத்தைக் கொண்டாடுவது –
பக்ஷத்தைக் கொண்டாடுவது
நாளைக் கொண்டாடுவதாய் -இதிலே
இவர்களுக்கு கிடக்கிற த்வரை வெள்ளம் என் தான் -இவர்கள் ப்ராப்ய ருசி இருந்தபடி –
1-காலத்தைக் கொண்டாடி —
2-பலத்தைச் சொல்லி —
3-அதிகாரிகளை சொல்லி–
4-இது கேட்ட பின்பு-அவர்களுக்கு பிறந்த புஷ்கல்யத்தை சொல்லி –
5-கிருஷ்ண சம்ச்லேஷத்துக்கு ஏகாந்தமான ஊரிலே பிறக்கப் பெற்ற நீங்களும் சிலரே என்று-
ஸ்ரீ நந்த கோபர்க்கும் யசோதை பிராட்டிக்கு பவ்யனாகையாலே இழக்க வேண்டா என்று-
அவர்கள் ஒளித்தாலும் விட ஒண்ணாத படியான வடிவு அழகாய்ச் சொல்லி–
6-விரூபனானாலும் விட ஒண்ணாத படியான ப்ராப்தியைச் சொல்லி–
7-உபாய நைரபேஷ்யம் சொல்லி–
8-ஆகிஞ்சன்யத்தில் நைரபேஷ்யம் சொல்லி–
9-உகவாதாரும் உகந்து கொண்டாடும் படி சொல்லித் தலைக் கட்டுகிறார் —
நெடுநாள் சிறையிற் கிடந்தவன், அதினின்றும்; விடுபட்டுச் சுற்றத்தாருடனே கூடப் பெற்ற நாளில்
“கீழ்க் கழிந்த நாள்களைப் போலனறியே இற்றை நாளின் வைலக்ஷண்யமிருந்தவாறு எனக்கொல்!” என்று
அந் நாளை முந்துறக் கொண்டடுவது போல்,
நெடு நாளாக நிலவறைகளில் அடைபட்டுக் கண்ண பிரானோட்டைக் கருவியை இழந்து கிடந்த
இவ்வாயர் சிறுமியரும் தாங்கள் க்ருஷ்ணனோடு ஸம்ச்லேஷிக்குமாறு வாய்த்த நாளென்று
அந் நாளை முதலடியிற் கொண்டாடுகின்றனர்.
“மார்கழித் திங்கள்” என்று – ஸத்துவ குணம் நிறம்பெறும் படியான கால விசேஷத்தைக் கூறியவாறு.
“மதி நிறைந்த நன்னாள்” என்று – ஆசிரினுடைய அருளடியாக ஸ்வருப வுணர்ச்சி பெற்று
எம்பெருமானுடைய விஷயீகாரத்திற்கு இலக்காகப் பெற்ற நாளைக் கூறியவாறு.
“அன்று நான் பிறந்திலேன் பிறந்தபின் மறந்திலேன்” என்றபடி –
பிறந்தநாள் இதுவாதலால் அதனைக் கொண்டாடுகிறபடி.
—————-
காலம் -நல்ல பொழுதாக செலுத்தி
மீண்ட காலம் மீட்க முடியாதே
ஆரோக்யம் பாஸ்கர இத்யாதி
உடல் -இந்திரியம் -மனம் -ஆத்மா –
வாதம் வாயு
பித்தம் தலைச்சுத்து
கபம் சளி
தாதுக்கள் 7
1-ரசம் -த்ரவ்யம் சுரக்கும் -சக்தி கொடுக்க
2-ரத்தம் – பிராணன்
3-மாம்சம் தசை
4-மேதா -கொழுப்பு -மூட்டு தெயாமல் இருக்க வேணுமே
5-அஸ்தி -எலும்பு -தூண் நாட்டி பூச வேண்டுமே
6-மஜ்ஜை -எலும்புக்குள் பசை
7-சுக்லம் -வீர்யம்
ஏழும் அக்னிகள் -வைஸ்வானர அக்னி -காற்று சரியாக இருந்தால் தானே
பஞ்ச பிராணன் -உள்ளே சமையல் பண்ண வேண்டுமே
பிராண ஹ்ருதயத்தில் -ரத்த ஓட்டம் -நடித்த துடிப்பு
அபான -பின்புறம் கழிவு வெளியேற்ற –
சபான நாபி மண்டல -வைச்வானர அக்னி சரியாக
உதான -கண்ட தேசே -மேல் நோக்கி போய் பேச வைக்கும்
வியான -சர்வ சரீரம்-கைகளைத் தூக்க -கால் நடக்க
ரஜஸ்
தமஸ்
ஆக பத்தும் சமமான கட்டுப்பாட்டுக்குள்
ஆகார சுத்தி சத்வ சுத்தி
நோய் நாடி நோய் முதல் நாடி
சரீரே ஜர்ஜரீ பூதே வியாதி க்ரஸ்தே களேபரே ஒளஷதம் ஜாஹ்ன வீதோயம் வைத்தியோ நாராயணோ ஹரி
ஆலோட்ய சர்வ சாஸ்த்ராணி விசார்ய ச புன புன இத மேகம் ஸூ நிஷ்பந்தம் த்யேயா நாராயணோ ஹரி
பஞ்ச பாண்டவர்களை பலவகையிலும் காத்து அருளும் பெருமாள் வந்தார் -வரதர் கண்ணபிரான் காக்கும் இயல்பினன்
‘திரௌபதி ஜீவாத்மா சபா உலக வாழ்க்கை பஞ்ச இந்திரியங்களை காத்து
பீஷ்மர் துரோணர் புத்தி
கட உபநிஷத்
இந்தர்யங்களை விட உலக விஷயங்கள் பலம் -அவற்றை விட மனசுக்கு பலம் -அதுக்கு மேல் புத்தி –
அதுக்கும் மேல் ஜீவாத்மா -அதுக்கும் மேல் சரீரம் தர்ம சாதனம் -அனைத்தும் விட உயர்ந்த பராத்பரன் சா காஷ்டா சா பாராயணம்
சா காஷ்டா சா பரா கதி பாஷ்யத்திலும் காட்டி அருளுகிறார் ஸ்ரீ பாஷ்யகாரர் ஆறும் பேறும் அவனே
சங்க சக்ர கதா பாணே த்வாரகா நிலயாச்யுத
கோவிந்த புண்டரீகாஷா ரஷமாம் சரணா கதாம் –ஸ்ரீ மஹா பாரதம் -சபா பர்வம் -9- அத்யாயம் -43 -த்ரௌபதி சரணாகதி ஸ்லோகம் –
அருள் என்னும் புடவை சுரந்து பல வகையிலும்
உபாய வைபவம் சொல்லும் மஹா பாரதம்
வித்யா ததாதி விநயம் பாத்ரதாம் -விநயம்-தனம் -தர்மம் ஸூ கம் ஸம்பன்னம் -பகவானும் கீதை
அர்த்த பஞ்சக ஞானமே நிரந்தர பேர் இன்பத்துக்கு முதல் சாதனம் –
திட உணவு பாதி வயிறு
நீர் கால் வயிறு
வாயு கால் வயிறு -சஞ்சரிக்க இடம் தர வேண்டுமே –
அலை பாயாத மனம் -திட நிச்சயம் -சாந்தி -சுகம் -ஸ்ரீ கீதை -2-61-
———
ஸர்வோப நிஷதோ காவோ தோக்தா கோபாலநந்தந:!
பார்த்தோ வத்ஸ: சுதீபோர்க்தா தக்தம் கீதாம்ருதம் மஹத்!! (கீதா மங்களா சரணம் – 4)
எல்லா உபநிடதங்களும் பசுக்களாம். அவைகளைக் கறக்கும் இடையன் ஸ்ரீகிருஷ்ண பகவான்.
அப் பசுக்களின் கன்று அர்ஜூனன். அப்பசுக்களின் கறந்த பால் கீதையென்பதாகும். பாலைக் குடிப்பவர்கள் வித்வான்கள்.’
அமுதம் கடைந்த கிருஷ்ணன்
மதி மந்தான -வியாசர் கிருஷ்ண த்வைபாயனர்
மறைப்பாற் கடலை திரு நாவின் மந்திரத்தால் கடைந்து -பாம்பணைப்பள்ளியான் ஈட்டம் -க்ருஷ்ண த்ருஷ்ணா தத்வம் –
ரிஷிகேசன் குடா கேசன் சம்வாதம் கீதை
யதி ராஜர் ரெங்க ராஜர் கத்ய த்ரயம்
கீதா கங்கா கோவிந்த காயத்ரி -நான்குமே புனிதம் ஸ்ரேஷ்டம்
வேதேஷூ புருஷ ஸூக்தம் –
ஸ்ரீ ராமாயணம் -சாரம்-அபய பிரதானம் –
மஹா பாரதத்தில் -ஸ்ரீ கீதை – –
தர்ம சாஸ்திரம் சாரம்-மனு சாஸ்திரம் –
புராணங்களில் சாரம் ஸ்ரீ விஷ்ணு புராணம்-
அருளிச் செயல்கள் சாரம் திருவாய் மொழி
பாரதே பகவத் கீதா தர்ம சாஸ்த்ரேஷூ மாநவம் வேதேஷூ பவ்ருக்ஷம் ஸூ க்தம் புராணேஷூ ச வைஷ்ணவம் —என்றும்
ஐந்தாம் வேதமான மஹா பாரதத்தில் கீதை உள்ள பகுதியே பிரதான்யம் -என்றும் உரைக்கப் பட்டது –
தேகத்துக்கு ஷேம கரம் கீரை
ஆத்மாவுக்கு ஷேம கரம் ஹீதை
அதுவும் வேணுமே தர்ம காரியங்களுக்கு
பத்தாம் நாளுக்கு பின்பே பிறந்தது கீதை
சர கல்பத்தில் பீஷ்மர் விழுந்ததும் பிறந்தது கீதை
———————–
நமது உடலானது கால்சியம், இரும்பு, பொட்டாசியம், துத்தநாகம் மற்றும் மாங்கனீசு போன்ற
பல வகையான தாதுக்களைப் பொறுத்தே இயங்குகிறது.
இவற்றில் பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இல்லையெனில் நம் உடலில் பல்வேறு உபாதைகள் ஏற்படலாம்.
இதனை முறையாக கவனிக்காவிட்டால் நாளடைவில் பெரிய ஆபத்துகளை ஏற்படுத்தும்.
சித்த மருத்துவத்தில் நமது உடலில் ஏழு (சப்த) வகையான தாதுக்கள் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.
அந்த ஏழு (சப்த) தாதுக்கள் என்னும் ஏழு வகைத் தாதுக்கள் நம் உடலில் சரியாக இருந்தால்,
நமது உடலுக்கு எந்த நோய்கள் இல்லை.
அந்த ஏழு தாதுக்களில் ஒன்றோ அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட தாதுக்கள் கூடும்போதோ அல்லது குறையும்போதோதான்
நோய்கள் வருகின்றன்
அந்த சப்த தாதுக்கள் கீழே காணலாம்.
1.நிணநீர் 2. இரத்தம் 3. தசை 4. கொழுப்பு 5. எலும்பு 6. மஜ்ஜை 7. சுக்கிலம் ஆகியனவாகும்.
மனித உடலில் ஏழு வகையான தாதுக்கள் உள்ளன.தாதுக்கள் என்பது நமது உடலை வலுவூட்டுபவைகள் ஆகும்.
1. ரச தாது….உடலின் சாரம்
2. ரக்த தாது….ரத்தம்
3. மாம்ச தாது….சதை
4. மேத தாது….கொழுப்பு திசு
5. அஸ்தி தாது….எலும்பு
6. மஜ்ஜை தாது….எலும்பு மஜ்சை
7. ஷுக்ர தாது…..விந்து (ஆண்களில்),கருமுட்டை ( பெண்களில்)
ஏழு தாதுக்களின் முக்கிய வேலை:
1. ரச தாது…ஊட்டச்சத்து
2. ரக்த தாது….உயிர் ஓட்டம்
3. மாம்ச தாது….பாதுகாப்பு
4. மேத தாது…. மென்மை
5. அஸ்தி தாது….ஆதரவு
6. மஜ்ஜை தாது…அடைத்தல்
7. ஷுக்ர தாது….இனப்பெருக்கம்
தாதுக்கள் உருவாகும் விதம்:
நாம் உண்ணும் உணவானது முதலில், ரச தாது அக்னியால் ரச தாதுவாக மாறுகிறது.
பின் ரக்த தாது அக்னியால் ரக்த தாதுவாகிறது.
பின் மாம்ச தாது அக்னியால் மாம்ச தாதுவாகிறது.
பின் மேத தாது அக்னியால் மேத தாதுவாகிறது.
பின் அஸ்தி தாது அக்னியால் அஸ்தி தாதுவாகிறது.
பின் மஜ்ஜை தாது அக்னியால் மஜ்ஜை தாதுவாகிறது.
பின் ஷுக்ர தாது அக்னியால் ஷுக்ர தாதுவாகிறது.
———-
மதி என்ற சொல்லில் இருந்தே மாதம் என்ற சொல் தோன்றிற்று.
தமிழிலும் நிலவைக் குறிக்கிற திங்கள் என்ற சொல்லைத்தான் மாதத்தைக் குறிப்பதற்கும் பயன்படுத்துகிறார்கள்.
ஆங்கிலத்தில் வழங்குகிற Month (மாதம்) என்ற சொல் Moon என்ற சொல்லில் இருந்தே தோன்றியதாகும்.
எனவே, சித்திரை நட்சத்திரத்தில் முழுமதி திகழ்கிற மாதம் சித்திரை மாதம் ஆகும்.
சிலப்பதிகாரத்தில், இந்திர விழவூரெடுத்த காதையில் (வரி 64) ”சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தென” என்ற
குறிப்பு உள்ளது இதற்குச் சான்றாகும்.
அது போன்றே, விசாக நட்சத்திரத்தில் முழுநிலவு அமைகிற மாதம் வைசாகி அல்லது வைகாசி ஆகும்.
இன்றும் வட இந்தியாவில் வைசாகி என்ற பெயர் வழக்கில் உள்ளது.
விசாக நட்சத்திரத்தின் பெயரை ஆட்பெயராகக் கொண்ட விசாகன் என்ற பெயருடையவர்கள், சங்க காலத்தில் இருந்துள்ளார்கள்.
இப்பெயர் வியாகன், வியகன், வியக்கன் என்ற வடிவங்களில் வழங்கியுள்ளதென குறிப்பிடுகிறார்.
சித்திரை, விசாகம் என்ற நட்சத்திரப் பெயர்களைப் போன்றே
அனுஷம் என்ற நட்சத்திரமும் ஆனுஷி என்ற மாதப் பெயராக வழங்கத் தொடங்கி அதுவே ஆனி எனத் திரிந்திருக்கிறது.
அனுஷம் அல்லது அனுடம் அல்லது அனிழம் என்ற நட்சத்திரம் முடப்பனை என்ற பெயரில் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அனுஷ நட்சத்திரத்தில் முழுநிலா அமைவதாகக் கொள்ளாமல், அனுஷ நட்சத்திரத்திற்கு அடுத்த நட்சத்திரமாகிய
ஜேஷ்டா அல்லது கேட்டை நட்சத்திரத்தில் முழுநிலா அமைவதாகக் கருதுகிற மரபும் உண்டு.
அந்த அடிப்படையில் ஆனி மாதத்தை ஜேஷ்ட மாதம் என்றும் குறிப்பிடுவதுண்டு.
இவ்விரண்டு நட்சத்திரங்களிலும் முழுநிலா அமைவதாகக் கொள்ளாமல், இவற்றை அடுத்து வருகிற
மூல நட்சத்திரத்தில் முழுநிலா அமைவதாகக் கொள்கிற வழக்கமே தற்போது நடைமுறையில் உள்ளது.
மார்கழி மாத மிருகசிரஸ் நட்சத்திரத்தில் முழுநிலா அமைவதாகக் கொள்ளாமல்,
அதற்கு அடுத்த நட்சத்திரமான திருவாதிரை நட்சத்திரத்தில் முழுநிலா நாள் அமைவதாகக் கொள்வதை
இதனையொத்த நிகழ்வாகக் கருதலாம்.
பூர்வ ஆஷாடம் நட்சத்திரம் தற்போது பூராடம் எனத் தமிழில் வழங்குகிறது.
இந்நட்சத்திரத்தில் முழுநிலா அமைகிற மாதம் ஆஷாடி என்று வழங்கத் தொடங்கி ஆடி எனத் திரிந்துள்ளது.
சிராவணம் என்ற நட்சத்திரம் திருவோணம் எனத் தமிழில் வழங்குகிறது. ஓணம் என்று இதனைக் குறிப்பிடுவதுண்டு.
சிராவண நட்சத்திரத்தில் பௌர்ணமி அமைகிற மாதமே சிராவணி ஆகும். இது ஆவணி என வழங்கப்படுகிறது.
சிரமணர் என்பது சமணர் எனத் திரிந்து அமணர் என வழங்குவது போன்றதே இம்மாற்றமும் ஆகும்.
ஆவணி மாத முழுநிலா நாள் ‘ஓண நன்னாள்’ என மதுரைக்காஞ்சியில் சிறப்பிக்கப்பட்டுள்ளது.
பூர பாத்ர பதம் என்கிற நட்சத்திரப் பெயர் பூரட்டாதி எனத் தமிழில் வழங்கும்.
இந்நட்சத்திரத்தில் முழுநிலா அமைகிற மாதம் புரட்டாசி எனத் தமிழில் வழங்குகிறது.
அசுவதி நட்சத்திரத்தில் முழுநிலா அமைகிற மாதம் வட இந்தியாவில் ஆஸ்வின மாதம்,
ஆஸ்விஜ மாதம் என்றும் வழங்கப்படுகிறது.
தமிழிலோ அற்பசி, ஐப்பசி, அற்பிகை என்றெல்லாம் வழங்கியுள்ளது.
இவற்றுள் ஐப்பசி என்பதே வழக்கில் நிலைத்துவிட்டது.
மான் தலை போன்று தோற்றமளிக்கும் நட்சத்திரக் கூட்டம் மிருகசிரஸ் என்று வடமொழியில் வழங்கிற்று.
இந்நட்சத்திரத்தில் முழுநிலா அமைகிற மாதம் மார்கசிருஷி என வடமொழியில் வழங்கத் தொடங்கி,
தமிழில் மார்கழி எனத் திரிந்துள்ளது.
பிராகிருத மொழியில் மிருகசிரஸ் என்பது மகசிர என வழங்கிற்று.
மார்கழி மாதமும் மகசிர என்ற நட்சத்திரப் பெயராலேயே பிராகிருதத்தில் வழங்கியுள்ளது.
இதற்கான ஆதாரம் இலங்கையில் வரலாற்று நூலான மகாவம்சத்தில் உள்ளது.
‘யாப்பருங்கலவிருத்தி’ என்ற பழமையான இலக்கண நூலில் மகயிரம் என இந்நட்சத்திரப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
பூச நட்சத்திரம் வடமொழியில் பூஷ்யம் என்றும், திஷ்யம் என்றும் இரு வகையாக வழங்கும்.
திஷ்ய நட்சத்திரத்தில் முழுநிலா அமைகிற மாதம் என்பதால் தைஷ்யம் என இம்மாதம் வழங்கப்படத் தொடங்கி
தைசம், தைய்யியம், தை எனத் திரிந்துள்ளது.
தை என்பது பூச நட்சத்திரத்தின் பெயர் என்று பழமையான தமிழ் நிகண்டு நூலாகிய சூடாமணி நிகண்டு குறிப்பிடுகிறது.
தைசம் என்பது பூசம் நட்சத்திரத்தைக் குறிக்கும் என்று 1910ஆம் ஆண்டில் கதிரைவேல் பிள்ளை அவர்களால்
தொகுத்து வெளியிடப்பட்ட சங்கத்து அகராதி குறிப்பிடுகிறது.
புஷ்யம் என்ற பெயரை அடிப்படையாகக் கொண்டு பௌஷ்ய மாதம் என்றும், பௌஷ மாதம் என்றும்
தைத் திங்களைக் குறிப்பிடுவதும் உண்டு.
மக நட்சத்திரத்தில் முழுநிலா அமைகிற மாதம் மாகி என வழங்கத் தொடங்கிப் பின்னர் மாசி எனத் திரிந்துள்ளது.
கரம், ஹரமாகத் திரிந்து ஒலிக்கப்படத் தொடங்கிப் பின்னர் சகரமாகத் திரிந்திருக்கலாம்.
ஹிந்து என்ற பாரசீக வழக்கு, சிந்து என இந்திய மொழிகளில் வழங்குவதை நாம் உதாரணமாகக் கொள்ளலாம்.
இறுதியாகப் பங்குனி என்ற கடைசி மாதப் பெயருக்கு வருவோம்.
”பங்குனி உயர் அழுவத்துத் தலைநாள் மீன்” எனப் புறநானூறு குறிப்பிடுகிறது.
அதாவது பங்குனி மாதத்தில் முழுநிலா அமைகிற முழுமையான நட்சத்திரமாகிய உத்தர பால்குண நட்சத்திரமே
அதாவது உத்தரமே இவ்வாறு குறிப்பிடப்படுகிறது.
நாள்மீன் என்பது நட்சத்திரத்தையும், கோள்மீன் என்பது கிரகத்தையும் குறிப்பதற்குச் சங்க இலக்கியத்தில் பயன்படுத்தப்பட்ட சொற்களாகும்.
அதாவது Constellation என்பது நாள்மீன் அல்லது நட்சத்திரம், Planet என்பது கோள்மீன் அல்லது கிரகம் ஆகும்.
கோள் என்ற சொல் கொள்ளுதல் அதாவது ஈர்ப்பு விசையால் ஒன்றையொன்று பற்றிக்கொண்டு இயங்குவது எனப் பொருள்படும்.
வடமொழியில் கிரகித்தல் என்ற கருத்தின் அடிப்படையில்தான் கிரகம் என்ற சொல்லும் பயன்படுத்தப்படுகிறது.
உத்தர பால்குண நட்சத்திரத்தில் முழுநிலா அமைகிற மாதம் பல்குனி என வழங்கத் தொடங்கிப் பங்குனி எனத் திரிந்துள்ளது.
“கணிதம் பன்னிரெண்டாண்டு பயில்வர் பின்
கார்கொள் வானிலோர் மீனிலை தேர்ந்திலார்
அணி செய் காவிய மாயிரம் கற்கினும்
ஆழ்ந்திருக்கும் கவி உளம் காண்கிலார்
வணிகமும் பொருள் நூலும் பிதற்றுவர்
வாழும் நாட்டிற் பொருள் கெடல் கேட்டிலார்
துணியும் ஆயிரம் சாத்திர நாமங்கள்
சொல்லுவார் எத்துனை பயன் கண்டிலார்.”
“கம்பன் என்றொரு மானிடன் வாழ்ந்ததும்
காளிதாசன் கவிதை புனைந்ததும்
உம்பர் வானத்துக் கோளையும் மீனையும்
ஓர்ந்த ளந்ததொர் பாஸ்கரன் மாட்சியும்
நம்பரும் திறலோடொரு பாணினி
ஞால மீதில் இலக்கணம் கண்டதும்
இம்பர் வாழ்வின் இறுதி கண்டு உண்மையின்
இயல்பு உணர்த்திய சங்கரன் ஏற்றமும்
சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும்
தெய்வ வள்ளுவர் வான்மறை செய்ததும்
பாரில் நல்லிசைப் பாண்டிய சோழர்கள்
பாரளித்ததும் தர்மம் வளர்த்ததும்
பேரருட் சுடர் வாள் கொண்டு அசோகனார்
பிழை படாது புவித் தலம் காத்ததும்
வீரர் வாழ்த்த மிலேச்சர் தம் தீய கோல்
வீழ்த்தி வென்ற சிவாஜியின் வெற்றியும்
அன்ன யாவும் அறிந்திலர் …………. (மகாகவி பாரதி)
————————
26-இது ஒரு விசேஷமான எண் . 26ல் , “2” என்பது “த்வயம் ” என்று சொல்லலாம்.
26ல் , “6” என்பது, “விஷ்ணு மந்த்ரம்” என்று சொல்லலாம்
26யைக் கூட்டினால், வருவது, “8” இது அஷ்டாக்ஷரத்தைக் குறிக்கிறது.
26யைப் பெருக்கினால், வருவது , “12” .இது, த்வாதசாக்ஷரத்தைக் குறிக்கிறது.
நாராயண மந்த்ரம் —8 அக்ஷரங்கள்
வாஸுதேவ மந்த்ரம் —-12 அக்ஷரங்கள்
விஷ்ணு மந்த்ரம்—6 அக்ஷரங்கள்
இந்த மூன்றும் விஷ்ணு காயத்ரியில் அடக்கம்.
மொத்தம்–26 அக்ஷரங்கள்
26 என்றாலே, பகவான்
——–
நக்ஷத்ரங்கள் 27 என்பது யாவருக்கும் தெரிந்ததே
இந்த 27 நக்ஷத்ரங்களும் , தேவ நக்ஷத்ரங்கள், யம நக்ஷத்ரங்கள் என்று பிரிக்கப்பட்டுள்ளன
அதாவது கிருத்திகை முதல் விசாகம் வரை 14 நக்ஷத்ரங்கள்—வானத்தில்
ஸ்வர்க்க லோகத்துக்கு அருகில் இருப்பதால், இவை தேவ நக்ஷத்ரங்கள் எனவும்
அனுஷம் முதல் பரணி வரை 13 நக்ஷத்ரங்கள் யமலோகத்துக்கு சமீபத்தில் இருப்பதால்
யம நக்ஷத்ரங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன
தேவ நக்ஷத்ராணி வா அன் யானி |
யம நக்ஷத்ரான் யன்யானி |
கிருத்திகா : ப்ரதமம் | விசாகே உத்தமம் |
தானி தேவ நக்ஷத்ராணி |
அனுராதா : ப்ரதமம் அபபரணீருத்தமம் தானி யம நக்ஷத்ராணி |
யாணி தேவ நக்ஷத்ராணி | தானி தக்ஷிணேந பரியந்தி |
யானி யம நக்ஷத்ராணி |தான்யுத்தரேண |
இதுதான் இதற்கான ஸ்லோகம்
——–
காயத்ரி சந்தஸ் —24 அக்ஷரங்கள் .
உஷ்ணிக் சந்தஸ்—28 அக்ஷரங்கள்.
அனுஷ்டுப் சந்தஸ்–32 அக்ஷரங்கள் .
ப்ருஹதீ சந்தஸ்–36 அக்ஷரங்கள்.
பங்க்தீ சந்தஸ்—40 அக்ஷரங்கள்.
ஜகதீ சந்தஸ்—48 அக்ஷரங்கள்
——–
ஏழு சிரஞ்சீவிகள்
அஸ்வத்தாமா பலிர் வ்யாஸோ ஹநுமான் ச விபீஷண:
க்ருப பரசுராமஸ்ச சப்தை தே சிரஞ்சீவன:—பத்ம புராணம்
அஸ்வத்தாமன், பலி, வியாஸர், ஹநுமான், விபீஷணன், க்ருபர், பரசுராமர் ஆகிய எழுவரும் சிரஞ்சீவிகள்.
(அதிகாலையில் இவர்களின் நாமங்களை உச்சரிப்பது – இந்த ஸ்லோகத்தை சொல்வது – மங்களகரமானது )
——–
ஸ்ரீ ராமபிரானின் ஸ்ரீ ஸூக்திகள் -அயோத்யா காண்டம் –
சர்வே க்ஷயஅந்தா நிசயா: பதன அந்த: சமுக்ச்ரயா:
சம்யோகா விப்ரயோக அந்தா மரண அந்தம் ச ஜீவிதம்
சேர்ந்தன எல்லாம் கரையும்; உயர்ந்தன தாழும்; சேர்ந்தவர் பிரிவர்; பிறப்பவர் இறப்பர்.
யதா பலானாம் பக்வானாம் ந அன்யத்ர பதனாத் பயம்
ஏவம் நரஸ்ய ஜாதஸ்ய ந அன்யத்ர மரணாத் பயம்
பழுத்த பழங்கள் கீழே விழவேண்டும்; அதுபோல இருப்பவர்கள் இறப்பர். அவைகள் பயப்படுவதில்லை.
யதா காரம் த்ருஅ ஸ்தூணம் ஜீர்ணம் பூத்வா அவசீததி
ததா வசீதந்தி நரா ஜரா ம்ருத்ய வசம் கதா:
உறுதியான கட்டிடங்கள் இடிந்து விழும்; அழிந்து போகும் அதைப் போல வயதும் மரணமும் வந்தே தீரும்
அன்யேதி ரஜனீ யா து சா ந ப்ரதிநிவர்தத
யாத்யேவ யமுனா பூர்ணா சமுத்ரமுதகாகுலம்
இரவுப் பொழுது கழிந்துவிட்டால் திரும்பி வாராது; யமுனை நதி அதன் தண்ணீரைக் கடலில் கொட்டிவிட்டால் அது திரும்பிவராது.
அஹோராத்ராணி கச்சந்தி சர்வேஷாம் ப்ராணினாம் இஹ
ஆயும்ஷி க்ஷபயந்த்ய ஆசு க்ரீஷ்மே ஜலம் இவ அம்சவ:
கோடை காலத்தில் தண்ணீரை சூரியன் வற்றச் செய்வது போல, ஒவ்வொரு நாளும் இரவும் பகலும் உயிரினங்களை மாயச் செய்கின்றன.
ஆத்மானம் அனுசோச த்வம் கிம் அன்யம் அனுசோசசி
ஆயு: தே ஹீயதே யஸ்ய ஸ்திதஸ்ய ச கதஸ்ய ச
நீ நின்றாலும் நகர்ந்தாலும் வாழ்நாள் குறைந்து கொண்டே வரும்; ஆகையால் உன்னைப் பற்றி வருதப்படு; மற்றவர்கள் குறித்து வருந்தாதே.
சஹ ஏவ ம்ருத்யுர் வ்ரஜதி சஹ ம்ருத்யுர் நிஷீததி
கத்வா சுதீர்கம் அத்வானம்சஹ ம்ருத்யுர் நிவர்தத
நாம் நடந்தாலும் மரணம் நம்மைப் பின் தொடரும்; உட்கார்ந்தாலும் அதுவும் அருகில் அமர்ந்து ஓய்வெடுக்கும்;
எவ்வளவு தூரம் போனாலும் அதுவும் வரும்; நாம் திரும்பி வந்தால் நம்முடன் திரும்பியும் வரும்.
காத்ரேஷு வலய ப்ராப்தா: ஸ்வேதாள் சைவ சிரோ ரஹா:
ஜரயா புருஷோ ஜீர்ண: கிம் ஹி க்ருத்வா ப்ரபாவயேத்
நம் அங்கங்களின் மீது சுருக்கம் விழுகிறது; முடி நரைத்து விடுகிறது;முதிய வயது காரணமாக போன அழகு திரும்பி வருமா?
நந்தந்த்ய உதித ஆதித்யேநந்தந்த்ய அஸ்தம் இதே ரவௌ
ஆத்மனோ அவபுத்யந்தே மனுஷ்யா ஜீவித க்ஷயம்
காலையில் சூரியன் உதிக்கும்போதும், மாலையில் சூரியன் அஸ்தமிக்கும்போதும் மக்கள் சந்தோஷம் அடைகிறார்கள்;
ஆனால் அவர்களின் ஆயுள் குறைந்து வருவதை அவர்கள் உணர்வதில்லை.
ஹ்ரச்யந்த்ய ருது முகம் த்ருஷ்ட்வா நவம் நவம் இஹ ஆகதம்
ருதூணாம் பரிவர்தேன ப்ராணினாம் ப்ராண சம்க்ஷய:
ஒவ்வொரு பருவம் வரும்போதும் ஏதோ புதிதாக வருவது போல மகிழ்கிறார்கள்;
ஆனால் மாறி மாறி வரும் பருவங்களினால் அவன் ஆயுள் குறைந்துகொண்டே வரும்.
யதா காஷ்டம் ச காஷ்டம் ச சமேயாதாம் மஹா அர்ணவே
சமேத்ய ச வ்யபேயாதாம் காலம் ஆஸாத்ய கஞ்சன
ஏவம் பார்யா: புத்ரா: ச ஜ்நாதய: ச வசூனி ச
சமேத்ய வ்யவதாயந்தி த்ருவோ ஹ்ய ஏஷாம் விநா பவ:
கடலில் மிதக்கும் இரண்டு மரக் கட்டைகள் சிறிது காலத்துக்கு ஒன்றாகப் பயணித்துப் பிரிந்து விடுகின்றன.
அது போலத்தான் மனைவி, மக்கள், உடன் பிறந்தோர், சொத்து, சுகம் ,செல்வம் எல்லாம்
சிறிது காலத்துக்கு உடன் வரும். அவை பிரிவது தவிர்க்கமுடியாதது.
ந அத்ர கஸ்சித் யதா பாவம் ப்ராணீ சமபிவர்ததே
தேன தஸ்மின் ந சாமர்த்யம் ப்ரேதஸ்ய அஸ்த்ய அனுசோசத:
ஒருவனுடைய தலைவிதியிலிருந்து எவரும் தப்பிக்க முடியாது.
மற்றவர் இறக்கும் போது அழுவதால் ஒருவன் தனது மரணத்திலிருந்து தப்பிக்க முடியாது.
யதா ஹி சார்தம் கக்சந்தம் ப்ரூயாத் கஸ்சித் ப்தி ஸ்தித:
அஹம் அப்ய ஆகமிஷ்யாமி ப்ருஷ்டதோ பவதாம் இதி
ஏவம் பூர்வைர் கதோ மார்க: பித்ரு பைதாமஹோ த்ருவ:
தம் ஆபன்ன: கதம் சோசேத் யஸ்ய ந அஸ்தி வ்யதிக்ரம:
வண்டியில் போகும் பயணிகளைப் பார்த்து நானும் பின்னால் வருகிறேன் என்று சொல்லுவதைப் போல
நாமும் நமது முன்னோர் சென்ற வழியில் செல்கிறோம்;
அது திரும்பிவராத பயணம். அதில் சேர்ந்த பின்னர், புகார் செய்வதற்கு என்ன இருக்கிறது?
வயஸ: பதமானஸ்ய ஸ்ரோதசோ வா அநிவர்தின:
ஆத்மா சுகே நியோக்தவ்ய: சுக பாஜ: ப்ரஜா: ஸ்ம்ருதா:
ஓடும் நதியின் நீர் திரும்பி வருவதில்லை; அதுபோலத்தான் நம் வாழ்நாளும்.
ஒவ்வொருவரும் அற வழியில் இன்பம் அடைய முயல வேண்டும்; எல்லோரும் விரும்புவது சந்தோஷத்தைத் தானே.
————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply