कृपानिधेः रमानिधेः कटाक्षबोधवारिजं
कृपानिधेस्तु मानिधेश्च भागधेयमण्डनम्।
कृपानिधिं सुमङ्गलाद्भुतैर्गुणैस्सुभूषितं
कृपाकरार्यदेशिकं नमामि तं महागुरुम्॥–1-
க்ருபா நிதே ரமா நிதே கடாக்ஷ போத வாரிஜம்
க்ருபா நிதேஸ்து மாநிதேச் ச பாகதேய மண்டனம்
க்ருபா நிதிம் ஸூ மங்கலாத் புதைர் குணைஸ் ஸூ பூஷிதம்
க்ருபா காரார்ய ஸூ ரிணம் நமாமி தம் மஹா குரும்
கருணைக் கடலான திருமகள் கேள்வனின் அருளாகிய சூர்ய ஒளியால் மலர்ந்த தாமரை போன்றவரும்,
கருணைக் கடலான வில்லூர் ஸ்ரீநிதி ஸ்வாமியின் வாரிசு ரத்னமாகத் திகழ்பவரும்,
கருணைக் கடலும், அற்புதக் கல்யாண குணங்களைத் தனக்கு அணிகலனாய்க் கொண்டவருமான
ஸ்ரீமதுபயவே. கருணாகரார்ய மஹாதேசிகன் என்னும் சிறந்த ஆசார்யனை வணங்குகிறேன்.
सहस्रनामसागरे नु मग्ननैजमानसं
सहस्रनेत्रनायकाङ्घ्रिचिन्तकं सदैव तम्।
सहस्रगीतिसारदं रहस्यमन्त्रबोधकं
सहस्रशाखपाठकस्त्वहं भजे कृपाकरम्॥ २–2-
ஸஹஸ்ர நாம ஸாகரே நு மக்னநை ஜமாநஸம்
ஸஹஸ்ர நேத்ரநாய காங்க்ரி சிந்தகம் ஸ தைவ தம்
ஸஹஸ்ர கீதி ஸாரதம் ரஹஸ்ய மந்த்ர போதகம்
ஸஹஸ்ர ஸாக பாடக்ஸ் த்வஹம் பஜே க்ருபாகரம் –2-
விஷ்ணு ஸஹஸ்ரநாமம், லக்ஷ்மீ ஸஹஸ்ரநாமம், வேங்கடேச ஸஹஸ்ரநாமம் போன்ற ஸஹஸ்ரநாமக் கடல்களில்
மூழ்கித் திளைத்த மனம் கொண்டவரும்,
ஆயிரம் கண் கொண்ட இந்த்ரனுக்கும் தலைவனான எம்பெருமானின் திருவடிகளை அநவரதம் த்யானிப்பவரும்,
ஆயிரம் பாசுரங்கள் கொண்ட திருவாய்மொழியின் ஸாரத்தை உபதேசிப்பவரும்,
ரஹஸ்யத்ரய மந்த்ரங்களின் ஸாரத்தை உபதேசிப்பவருமான
ஸ்ரீமதுபயவே. கருணாகரார்ய மஹாதேசிகனை,
ஆயிரம் சாகைகள் கொண்ட ஸாம வேதத்தை அத்யயனம் செய்யும் அடியேன் வணங்குகிறேன்.
यतीन्द्रपादपूजकं ह्यतीन्द्रियस्ववैभवं
यतीन्द्रभाष्यशिक्षकं सुचक्रचिह्नदायकम्।
यतीश्वरैश्च मानितं नतानुशोकभञ्जकं
यतीन्द्रवीक्षभाजनं सदा भजे कृपाकरम्॥ ३–3-
யதீந்த்ர பாத பூஜகம் ஹ்யதீந்த்ரிய ஸ்வ வைபவம்
யதீந்த்ர பாஷ்ய சிந்தகம் ஸூ சக்ர சிஹ்ன தாயகம்
யதீஸ்வரைஸ் ஸ மா நிதிம் நதாநு சோக பஞ்சகம்
யதீந்த்ர வீக்ஷ பாஜநம் ஸதா பஜே க்ருபா கரம் –3-
எம்பெருமானாரின் திருவடிகளைத் தொழுபவரும்,
புலன்களுக்கு எட்டாத மேன்மைகள் பல கொண்டவரும்,
ஸ்ரீபாஷ்யத்தை நன்கு உபதேசிப்பவரும்,
சிஷ்யர்களுக்கு சங்கசக்ர முத்ரைகளை அருள்பவரும்,
பற்பல ஸந்யாஸிகள் மற்றும் மடாதிபதிகளால் கௌரவிக்கப்பட்டவரும்,
அடிபணியும் அடியார்களின் துன்பங்களைப் போக்குபவரும்,
எம்பெருமானாரின் கருணைப் பார்வைக்குப் பாத்ரமானவருமான
ஸ்ரீமதுபயவே. கருணாகரார்ய மஹாதேசிகனை வணங்குகிறேன்.
श्रुतेरपार्थमर्दकं श्रुतेः रसार्द्रमानसं
श्रुतेश्च नस्सुरक्षकं दृशा सुसंशदायकम्।
श्रुतिस्वरूपमुत्तमश्रुतिस्वराप्तजिह्वकं
श्रुतेश्शिरोगुरोः पदप्रियं भजे कृपाकरम्॥ ४–4-
ஸ்ருத இதர அபார்த்தம் அர்த்தகம் ஸ்ருதேஸ் ரஸார்ர்த்ர மா நஸம்
ஸ்ருதேஸ் ச நஸ் ஸூர ரேசகம் த்ருஸா ஸூ ஸம் ஸதா யகம்
ஸ்ருதி ஸ்வரூபம் உத்தம ஸ்ருதி ஸ்வராப்த ஜிஹ்வகம்
ஸ்ருதேஸ் ஸிரோ குரோ பத ப்ரியம் பஜே க்ருபா கரம் –4-
வேதங்களுக்குச் சொல்லப்பட்ட தவறான அர்த்தங்களை முறையான வாதங்களின் மூலம் நீக்குபவரும்,
வேதச் சுவை தோய்ந்த திருவுள்ளம் படைத்தவரும்,
தம் உபந்யாஸங்களால் நம் காதுகளை ரக்ஷிப்பவரும்,
திருக்கண் பார்வையால் மங்களங்களை அருள்பவரும்,
வேத ஸ்வரூபியாகத் திகழ்பவரும்,
உத்தமமான வேத ஸ்வரங்கள் பொலியும் திருநாவை உடையவரும்,
வேத சிரஸ்ஸின் குருவான நிகமாந்த மஹாதேசிகனின் திருவடிகளுக்கு ப்ரியமானவருமான
ஸ்ரீமதுபயவே. கருணாகரார்ய மஹாதேசிகனை வணங்குகிறேன்.
प्रभाषणे विशारदं प्रवाहकाव्यकारकं
सुभाषिते प्रतिष्ठितं सुगन्धशैलसेवकम्।
शुभानि नः प्रदायकं च कुम्भघोणसंभवं
प्रभाकरप्रकाशकं नमामि तं कृपाकरम्॥ ५–5-
ப்ரபாஷணே விசாரதம் ப்ரவாஹ காவ்ய காரகம்
ஸூ பாஷிதே ப்ரதிஷ்டிதம் ஸூ கந்த சைல ஸேவகம்
ஸூபாநி ந ப்ரதாயகம் ச கும்ப கோண ஸம்பவம்
ப்ரபாகர ப்ரகாசகம் நமாமி தம் க்ருபா கரம் –5-
பேச்சில் வல்லவரும்,
ப்ரவாஹமாகக் கவி பாடுபவரும்,
நல்மொழிகளில் நிலைபெற்றவரும்,
திருநறையூரில் பற்பல கைங்கர்யங்கள் செய்தவரும்,
நமக்கு சுபங்களை அருள்பவரும்,
கும்பகோணத்தில் அவதரித்தவரும்,
ஸூர்யன் போல் தேஜஸ் மிக்கவருமான
ஸ்ரீமதுபயவே. கருணாகரார்ய மஹாதேசிகனை வணங்குகிறேன்.
श्रुतप्रकाशिकाप्रदस्वपूर्ववंश्यपादयोः
कृतज्ञतासमायुतं च वैभवप्रकाशकम्।
अतुल्यधीसमन्वितं सकर्मभक्तिसागरं
स्वधर्मयोगतत्परं नमामि तं कृपाकरम्॥ ६–6-
ஸ்ருத ப்ரகாசிகா பிரத ஸ்வ பூர்வ வம்ஸ்ய பாதயோ
க்ருதஜ்ஞதா ஸமா யுதம் ச வைபவ ப்ரகாசகம்
அதுல்ய தீசமன்விதம் ஸ கர்ம பக்தி சாகரம்
ஸ்வ தர்ம யோக தத் பரம் நமாமி தம் க்ருபாகரம் –6-
ச்ருதப்ரகாசிகையை உருவாக்கிய தம் குலமுன்னோரான நடாதூர் அம்மாளின் திருவடிகளிலே க்ருதஜ்ஞதை கொண்டவரும்,
அவர் திருவடிகளின் வைபவத்தை உலகுக்கு நன்கு எடுத்துக் காட்டுபவரும்,
ஒப்பற்ற ஞானம் கொண்டவரும்,
கர்மாநுஷ்டானத்தோடு கூடிய பக்தியின் கடலாய்த் திகழ்பவரும்,
ஸ்வ தர்மத்தை எப்போதும் விடாது செய்வதில் ஈடுபட்டிருப்பவருமான
ஸ்ரீமதுபயவே. கருணாகரார்ய மஹாதேசிகனை வணங்குகிறேன்.
अहं पुरा तु बालिशश्च पण्डितैरुपेक्षितः
लघुत्वपात्रकं तथा च पाठनाद्बहिष्कृतः।
खलु प्रबोधमेलने हि येन वादकस्त्वहं
दिने दिने च तं भजे कृपाकरार्यदेशिकम्॥ ७–7-
அஹம் புரா து பாலி சச்ச பண்டிதைர் உபேக்ஷித
லகுத்வ பாத்ரகம் ததா ச பாடநாத் பஹிஷ் க்ருத
கலு ப்ரபோத மேலனே ஹி யேன வாதகஸ்த்வஹம்
தினே தினே ச தம் பஜே க்ருபா காரார்ய தேசிகம் –7-
ஆசார்ய வைபவத்தின் மத்தியில், அவரது மேன்மைக்குச் சான்றாக
அடியேனைப் பற்றிய விஷயத்தையும் விண்ணப்பிக்கிறேன்.
முன்னொரு காலத்தில் மூடனாகவும்,
பண்டிதர்கள் எனப்பட்டவர்களால் இகழப்பட்டவனாகவும்,
பல அவமானங்களைச் சந்தித்து வித்வத் ஸபைகளில் இருந்து வெளியே தள்ளப்பட்டவனாகவும் இருந்த அடியேன்,
இன்று ஞானிகள் நிறைந்த வித்வத் ஸம்மேளனத்தில் அமர்ந்து வாக்யார்த்தம் சொல்பவனாக
ஆகி இருப்பதற்கு எந்த ஒருவர் காரணமோ, அந்த
ஸ்ரீமதுபயவே. கருணாகரார்ய மஹாதேசிகனைத் தினந்தோறும் வணங்குகிறேன்.
विकसितगुरुभक्तेरुत्थितां वेङ्कटेशात्
गुरुवरपदसूक्तिं तत्कृपादर्शिनीं च।
इह यदि पठति स्यात् सप्तपद्यान्वितां तां
स भवति करुणापूर्णार्यकामैकपात्रम्॥–8-
விகசித குரு பக்தேருத்தி தாம் வேங்கடேசாத்
குரு வர பத ஸூ க்திம் தத் க்ருபா தர்சினீம் ச
இஹ யதி படதி ஸ்யாத் ஸப்த பத்யான்விதாம் தாம்
ச பவதி கருணா பூர்ணார்ய காம ஏக பாத்ரம் –8
அவர் அருளால் மலர்ந்த ஆசார்ய பக்தியினால்,
அவரது கருணையை வெளிப்படுத்தும் விதமாக வேங்கடேசன் சொன்ன ஏழு ச்லோகங்கள் கொண்ட
இந்த ஆசார்ய திருவடி ஸ்துதியை இங்கே யார் ஒருவர் படிக்கிறாரோ, அவர்
ஸ்ரீமதுபயவே. கருணாகரார்ய மஹாதேசிகனின் அருளுக்குப் பாத்ரமாவார்
————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே வெங்கடேஷ் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே கருணாகர ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply